ஊமையின் வார்த்தைகள் - கவிதை

34 views
Skip to first unread message

thaayumaanavan venkat

unread,
Mar 25, 2009, 2:11:44 PM3/25/09
to palsuvai, minTamil, piravakam, illam, N Suresh
வெகு நாட்களாய்
மிக குறுகலானதும்
இருள் நிறைந்ததும்
காற்று வந்துபோக
ஏதுவாய் ஜன்னலுமற்ற
அந்த
ஒற்றை வார்த்தைக்குள்
அடைந்து கிடக்கிறாய் நீ..,

தட்டி தட்டி..
அடைந்த அக்கதவெங்கும்
என் கைரேகைகள் ,
உதிரப்படரல்க்ள்,
மௌனமான
அவ்வார்த்தைக்குள்ளிருந்து
நாராசமாய் உன் அலறல்..,

இன்னொரு வார்த்தைக்கொண்டு
உடை அந்த வார்த்தையை.

வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்ட
வாழ்கையின் விரிவு
வானமெங்கும்..,

ஒற்றை வார்த்தையிலிருந்து
உன்னை
விடுவிக்க..
என் மொழியின்
அத்தனை
வார்த்தைகளையும்
பயன்படுத்திய பின் ..
எனக்கு புரிவதெல்லாம்..

நீ நம் மொழி
மறந்திருக்க வேண்டும்..
அல்லது
செவிடாகி இருக்க வேண்டும்..!
--
என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்

செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamil
transliterator.(அழகிய தமிழ்மகள்)

என் தமிழோடு கைகுலுக்க
(www.kvthaayumaanavan.blogspot.com)
பல்சுவை குழுமத்தில் உறுப்பினராக
http://groups.google.com/group/palsuvai
படைப்புகள் அனுப்ப
pals...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Mar 25, 2009, 8:37:53 PM3/25/09
to minT...@googlegroups.com
ம்ம்ம்..
எப்படி இவ்வளவு அடர்த்தி? ஆச்சர்யம். வார்த்தைகளில், உணர்ச்சியில்!!
ஒற்றை வார்த்தையால் உடை! மௌனக்கோட்டையை! சபாஷ்!

க.>

2009/3/26 thaayumaanavan venkat <thaayum...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages