ஐயப்பாடு - ’சங்க இலக்கியம்’

628 views
Skip to first unread message

Dev Raj

unread,
Nov 26, 2016, 11:47:39 AM11/26/16
to மின்தமிழ்
’சங்க இலக்கியம்’ 

இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?

ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?

எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?

இது தூய தமிழ்ச் சொல்லா ?



தேவ்

Banukumar Rajendran

unread,
Nov 27, 2016, 10:19:21 PM11/27/16
to மின்தமிழ்
சங்க இலக்கியம் என்று பெயர் சூட்டியவர், எனக்கு தெரிந்து, திருவாளர்.வையாபுரியார். மிந்தமிழில்
எழுதியிருக்கிறேன்.

சங்கம் என்று தேர்ந்தெடுத்தற்கு காரணம், பழம்பெரும் பாடல்களை முதன்முதலில் தொகுத்தவர்கள் சமண சமயத்தவர்கள் (ஜைன, புத்த) ஆகையால்! இரண்டாம் தொகுப்பு, கி.பி.ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில், சைவ சமயத்தவர்கள் செய்தது.

இதை பற்றியக் குறிப்பும் இங்கு கொடுத்திருக்கிறேன். 


இரா.பா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Durai Dhanabalan

unread,
Nov 28, 2016, 4:03:17 AM11/28/16
to mint...@googlegroups.com

நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர். பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூற வேண்டும்.

மாயோன்

unread,
Nov 28, 2016, 5:31:33 AM11/28/16
to mintamil
சங்கம் தமிழ் தான்;பாவாணர் மணிமேகலையில் இருந்து மேற்கோள் கொடுத்து, சங்கம் என்பதில் சொல்லாய்வில் விளக்கியிருக்கிறார்.
புலவர்களின் இருக்கை வளைந்து இருந்ததால் சங்கம் என புலவர் சபைக்கு பெயர் வந்தது.

28 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:33 அன்று, Durai Dhanabalan <anbu...@gmail.com> எழுதியது:
ldpam031037.jpg
ldpam031036.jpg

Suba

unread,
Nov 28, 2016, 7:24:53 AM11/28/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-28 10:03 GMT+01:00 Durai Dhanabalan <anbu...@gmail.com>:

நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர்.

​பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்பித்தல் முறை சிறப்பானது. ​இன்றும் அச்சுப்பதிப்பு முயற்சியில் ஈடுபடுவோருக்கு நல்ல வழிகாட்டியாக அமைவது இந்த முறை.
 

பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூற வேண்டும்.

​சங்கம் என்ற சொல்.. சங்க இலக்கியம் என்ற சொல் எந்த சொல்லினின்று உருபெற்றது என அறியும் முயற்சி செய்ய வேண்டும். உடனே நாம் கழக இலக்கியம் என்று மாற்றி வழக்கில் கொண்டு வருவது  ​தேவையற்றது என்பதே என் கருத்து.

சுபா

Banukumar Rajendran

unread,
Nov 28, 2016, 10:50:03 PM11/28/16
to மின்தமிழ்
2016-11-28 14:33 GMT+05:30 Durai Dhanabalan <anbu...@gmail.com>:

நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர்.


தமிழ் வரலாற்றாராய்ச்சியில், வையாபுரியாரின் பங்கு மகத்தானது. அவரின் முடிபுகள் தற்போது
தகவில என்று கொள்ளலாம். ஆயின், அக்காலக்கட்டத்தில், அப்போது தனக்கு கிடைத்த குறிப்புகளை
கொண்டு தன் கருத்தை அமைத்துக் கொண்டார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். 

தற்போது, கிடைக்கும் தரவுகள் அப்போது அவருக்கு கிடைத்திருந்தால், தன் கருத்தை உறுதியாக மாற்றியிருப்பார். அதற்காக அவரையும், அவர் வகுத்துக்கொண்ட வரலாற்றுப் பாதையையும்
தவறென்றுக் கூறுதல் ந்ன்றன்று.


 

பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.


முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 


இரா.பா

N. Ganesan

unread,
Nov 29, 2016, 9:41:33 PM11/29/16
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர் முதல், இடை, கடைச் சங்கங்களைப் பற்றிப் பேசும்போது, முதல், இடைச் சங்க கால இலக்கியங்கள் இறந்தன என்கிறார். ஏராளமான இடங்களில் சங்கம், அங்கே ஆராய்ந்த நூல்கள் பேசப்படுகின்றன. சங்க நூல்கள், சங்க யாப்பு, சங்கச் செய்யுள், ... காலப் பகுப்பில் விரிவாக சங்க இலக்கியங்களை ஆராய்ந்தவர் ச. வையாபுரிப்பிள்ளை. பின்னாளில், மர்ரே எஸ். ராஜம் வெளியீடுகளாக சொற்பிரிப்பு, நிறுத்தற்குறியிடல் எனப் பல நூல்கள் வந்தன. அதற்கு ஆதாரமான பதிப்பு வையாபுரியாருடையது. 1939-ல் சைவ சித்தாந்த மகா சமாஜ வெளியீடு: சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும்.
இது இரண்டாம் பதிப்பாய் 1967-ல் பாரி நிலையத்தால் வெளியிடப்பட்டது. திரமிள சங்கம் என்று சங்கம் வைத்தவர்கள் ஜைநர்கள் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டும். கல்வெட்டுச் சான்றுகள் இப்போது நிறைய வந்துவிட்டன (உ-ம்: ஐராவதத்தின் நூல், 2003). சங்க இலக்கியம் என்பதை Sangam Literature என தெ.பொ.மீ, தனிநாயகம், ஏ. கே. ராமாநுஜன், ஜான் மார், குரோ,  சுவலெபில், ஹார்ட், ... போன்றோர் மொழிபெயர்த்தனர்.

வெ. சா., வையாபுரிப்பிள்ளை: (தில்லி தமிழ்ச் சங்கம், 1993)

நா. கணேசன்
 
 

தேவ்

N. Ganesan

unread,
Nov 29, 2016, 10:22:15 PM11/29/16
to மின்தமிழ்


On Saturday, November 26, 2016 at 8:47:39 AM UTC-8, Dev Raj wrote:
சங்கம் = saṅgham எனும் வடசொல். இரண்டாயிரம் ஆண்டுகளாய்த் தமிழர் பயன்படுத்தும் சொல்.

N. Ganesan

unread,
Nov 29, 2016, 10:56:49 PM11/29/16
to மின்தமிழ்


On Monday, November 28, 2016 at 1:03:17 AM UTC-8, anbulaham wrote:

நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர். பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூற வேண்டும்.


சங்கம், சங்கமம் - இரண்டும் வெவ்வேறான பொருளுடைய ஸம்ஸ்கிருத வார்த்தைகள்.

”பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள்.” இந்த அறிஞர்கள் யார்? 
தலைக்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் என்று பழைய நூல்களில் இல்லை.  மிக அண்மைக் கால பெயர்கள் இவை.

நா. கணேசன்
 

On Nov 28, 2016 8:49 AM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
சங்க இலக்கியம் என்று பெயர் சூட்டியவர், எனக்கு தெரிந்து, திருவாளர்.வையாபுரியார். மிந்தமிழில்
எழுதியிருக்கிறேன்.

சங்கம் என்று தேர்ந்தெடுத்தற்கு காரணம், பழம்பெரும் பாடல்களை முதன்முதலில் தொகுத்தவர்கள் சமண சமயத்தவர்கள் (ஜைன, புத்த) ஆகையால்! இரண்டாம் தொகுப்பு, கி.பி.ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில், சைவ சமயத்தவர்கள் செய்தது.

இதை பற்றியக் குறிப்பும் இங்கு கொடுத்திருக்கிறேன். 


இரா.பா
On Sat, Nov 26, 2016 at 10:17 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
’சங்க இலக்கியம்’ 

இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?

ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?

எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?

இது தூய தமிழ்ச் சொல்லா ?



தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Nov 30, 2016, 5:45:44 AM11/30/16
to மின்தமிழ்
அன்பர்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி


On Wednesday, 30 November 2016 09:26:49 UTC+5:30, N. Ganesan wrote:
சங்கம், சங்கமம் - இரண்டும் வெவ்வேறான பொருளுடைய ஸம்ஸ்கிருத வார்த்தைகள்.

ஆம்,
saṅgha, saṅga  - இருவிதமாகக் காட்டப்பட்டுள்ளது; கீழ்க்காணும் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

On Monday, 28 November 2016 14:33:17 UTC+5:30, anbulaham wrote:

............ பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார்.


வள்ளுவர் காலத்தில் ‘கழகம்’ என்ன பொருளில் பயன்பாட்டில் இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். 



On Wednesday, 30 November 2016 08:11:33 UTC+5:30, N. Ganesan wrote:
... திரமிள சங்கம் என்று சங்கம் வைத்தவர்கள் ஜைநர்கள் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டும்.  


அது தமிழ் மன்னர் போருக்காக அமைத்த கூட்டணி, காரவேலர்  கல்வெட்டின்படி.
மொழிக்கான சங்கம் என்றால் ஆதாரத்தையும் இணைப்பது நன்று.
தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர்கள் ஆதரிப்பது சங்கத்தையா, கழகத்தையா ?

சங்க [அ] கழகப் புலவர்கள்  எத்தனை பேர் ?
யார் தலைவர் ?
சங்க [அ] கழகப் புலவர்களில் எத்தனை பேர் சமணர் ?


தேவ்

N. Ganesan

unread,
Nov 30, 2016, 10:03:35 AM11/30/16
to மின்தமிழ், vallamai


On Monday, 28 November 2016 14:33:17 UTC+5:30, anbulaham wrote:

............ பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார்.


வள்ளுவர் காலத்தில் ‘கழகம்’ என்ன பொருளில் பயன்பாட்டில் இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். 


வள்ளுவர் காலத்தில் கழகம் = சூதாடும் இடம் எனப் பொருள். வையாபுரிப்பிள்ளை “கழகம்” என்ற சொல்லுக்கு
ஒரு கட்டுரை எழுதியுள்ளார். களம் என்ற சொல்லில் இருந்து கப்பிரத்தியம் பெற்றுக் கழகம் எனவிரிவது பற்றி.

உலூகல- என்ற ரிக்வேத வார்த்தை பற்றி எழுதியுள்ளேன். உரல்-களம். நீலம் (Indigo plant - இப்போது ஜீன்ஸ் பேண்ட்ஸ்
செய்ய வங்காளத்தில் பயிரானது பிரிடீஷ் காலங்களில்) இடிக்க வட்டமான மர உரல்கள் கொண்ட களங்களை
நிறைய சிந்து சமவெளியில் பார்க்கலாம். எனவே, நீர்- > நீலம்; வார்- > வால்-, ... போல உரல்-களம் உர-களம்,
உலூகல என்று ரிக்வேதத்தில்.

2011-ல் எனது மடல்: (கழகம் என்ற சொல்லுக்கு வாழ்வு கொடுத்தது கம்பன் என்பது பற்றி.
தமிழ் தேசியர்கள் கழகம் என்றுள்ள கக்ஷிகட்கு என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதும் பார்க்கணும்.)

On Mar 30, 7:27 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> அகராதியில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கும்
>
> ஆனால் எந்த காலத்துக்கு எந்த பொரூள் என்று கவனிக்க வேண்டும்
>
> கழகம் என்றால் சூதாடும் இடம் ஒரு காலத்தில்
>
> இன்று கல்வி வழங்கும் நிலையங்கள்
>

பேர் பொருத்தம்தான் :)

கழகம் - எனக்கு முதலில் விளக்கியவர் கம்பராமன் ஐயா
(எஸ். கே. ராமராஜ ரெட்டியார், கோபாலையரும் இவரும்
கல்லூரி தோழர்கள். புருஷோத்தம நாயுடு மாணவர்கள். )

கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.
’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.


நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Nov 30, 2016, 10:38:27 AM11/30/16
to மின்தமிழ், vallamai


On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:

பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.


முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 

இரா.பா


சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

தாவிட சங்கொ ( < த்ராவிட சங்கம்) என்னும் ஜைநர்களின் ப்ராகிருதச்சொல் தான் தமிழை ஆராய்ந்த சங்கத்துக்கு முதலில் வரும் சான்று, முழு வாசகமும் தருகிறேன்.
 

On Wednesday, 30 November 2016 08:11:33 UTC+5:30, N. Ganesan wrote:
... திரமிள சங்கம் என்று சங்கம் வைத்தவர்கள் ஜைநர்கள் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டும்.  

Dev Raj wrote:
>அது தமிழ் மன்னர் போருக்காக அமைத்த கூட்டணி, காரவேலர்  கல்வெட்டின்படி.
> மொழிக்கான சங்கம் என்றால் ஆதாரத்தையும் இணைப்பது நன்று.

It is not the coalition of forces for war. "dAviDa sangho" of 470 CE headed by Vajranandi, a Jaina monk,
is the Tamil sangham to study and analyze Tamil literature and grammar.

> தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர்கள் ஆதரிப்பது சங்கத்தையா, கழகத்தையா ?

தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் யாரும் கழகம் என்று எழுதியதில்லை. இது அண்மைக்காலத்தில்
தனித்தமிழாக்கம். வரலாற்றுச் சான்றில்லாதது.

> சங்க [அ] கழகப் புலவர்கள்  எத்தனை பேர் ?
> யார் தலைவர் ?
> சங்க [அ] கழகப் புலவர்களில் எத்தனை பேர் சமணர் ?

விரிவாக எழுதியுள்ளேனே. சமணர்களின் தமிழ்க்கொடையை மடைமாற்ற சைவப் புலவர்கள்
செய்தது இறையனார் களவியல். அதில் உள்ள மூன்று சங்கங்கள், கடல்கோள், ... என்னும் கதைகள்.
பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டு, இப்பொழுது இணையம் குமரிக்கண்டம் (லெமூரியா)
என வளர்ச்சி பெற்றுவருகிறது. ஆனால், ஒன்றுக்கும் எந்த தொல்லியல், கல்வெட்டு, வரலாற்று சான்றுகள்
இல்லை. எனவே, கற்பனையில் உருவான கதைகள்.

நா. கணேசன்

>தேவ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 30, 2016, 10:45:53 AM11/30/16
to mintamil

வணக்கம்.


On 30-Nov-2016 9:08 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
>
>
> On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:
>>
>>
>>> பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
>>
>>
>> முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 
>>
>> இரா.பா
>>
>
> சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

வச்ரணத்தி தமிழ்ச்சங்க நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தார்  (librarian) என்றுதான் நான் படித்த நினைவு.

அவர் தலைமையில் தமிழ்ச்சங்கம் இருக்கவில்லை. 

அன்பன்
கி. காளைராசன்

>
> தாவிட சங்கொ ( < த்ராவிட சங்கம்) என்னும் ஜைநர்களின் ப்ராகிருதச்சொல் தான் தமிழை ஆராய்ந்த சங்கத்துக்கு முதலில் வரும் சான்று, முழு வாசகமும் தருகிறேன்.
>  
>
> On Wednesday, 30 November 2016 08:11:33 UTC+5:30, N. Ganesan wrote:
> ... திரமிள சங்கம் என்று சங்கம் வைத்தவர்கள் ஜைநர்கள் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டும்.  
>
> Dev Raj wrote:
> >அது தமிழ் மன்னர் போருக்காக அமைத்த கூட்டணி, காரவேலர்  கல்வெட்டின்படி.
> > மொழிக்கான சங்கம் என்றால் ஆதாரத்தையும் இணைப்பது நன்று.
>
> It is not the coalition of forces for war. "dAviDa sangho" of 470 CE headed by Vajranandi, a Jaina monk,
> is the Tamil sangham to study and analyze Tamil literature and grammar.
>
> > தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர்கள் ஆதரிப்பது சங்கத்தையா, கழகத்தையா ?
>
> தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் யாரும் கழகம் என்று எழுதியதில்லை. இது அண்மைக்காலத்தில்
> தனித்தமிழாக்கம். வரலாற்றுச் சான்றில்லாதது.
>
> > சங்க [அ] கழகப் புலவர்கள்  எத்தனை பேர் ?
> > யார் தலைவர் ?
> > சங்க [அ] கழகப் புலவர்களில் எத்தனை பேர் சமணர் ?
>
> விரிவாக எழுதியுள்ளேனே. சமணர்களின் தமிழ்க்கொடையை மடைமாற்ற சைவப் புலவர்கள்
> செய்தது இறையனார் களவியல். அதில் உள்ள மூன்று சங்கங்கள், கடல்கோள், ... என்னும் கதைகள்.
> பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டு, இப்பொழுது இணையம் குமரிக்கண்டம் (லெமூரியா)
> என வளர்ச்சி பெற்றுவருகிறது. ஆனால், ஒன்றுக்கும் எந்த தொல்லியல், கல்வெட்டு, வரலாற்று சான்றுகள்
> இல்லை. எனவே, கற்பனையில் உருவான கதைகள்.
>
> நா. கணேசன்
>
> >தேவ்
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 30, 2016, 10:49:26 AM11/30/16
to மின்தமிழ்
2016-11-30 7:45 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


வச்ரணத்தி தமிழ்ச்சங்க நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தார்  (librarian) என்றுதான் நான் படித்த நினைவு.


வச்ரணத்தி பற்றி எங்கே படித்தீர்கள்? 

நா. கணேசன்

செல்வன்

unread,
Nov 30, 2016, 12:55:11 PM11/30/16
to mintamil


குறள் 935:

கவறும் கழகமும் கையும் தருக்கி 
இவறியார் இல்லாகி யார்.

கழகம் எனும் சொல் குறளில் சூதாடும் இடம் எனும் பொருளில் கையாளப்படுகிறது


Dev Raj

unread,
Nov 30, 2016, 1:21:01 PM11/30/16
to மின்தமிழ்
ஆம், வள்ளுவர் காலத்திய தமிழ்ச் சங்கம் ‘தமிழ்க் கழகம்’ எனப் பெயர்
பெற்றிருக்க வாய்ப்புள்ளதா ?


தேவ்
 

 

Dev Raj

unread,
Nov 30, 2016, 1:32:47 PM11/30/16
to மின்தமிழ்
மாபுராணம், பூத புராணம், பஞ்ச மரபு, சிகண்டியம், தகடூர் யாத்திரை,
பஞ்ச பாரதீயம், குணநூல், பரத சேனாபதீயம்

கடைச் சங்க நூல்களின் பெயர் தூய தமிழில் அமைந்திருக்க 
முந்தைய சங்க நூல்களில் சங்கதக் கலப்பிருக்கக் காரணம்
என்ன எனும் வினாவும் எழுகிறது 



தேவ்

N. Ganesan

unread,
Nov 30, 2016, 1:43:35 PM11/30/16
to மின்தமிழ், vallamai

Valluvar also tells what happens to people when they enter Kazhakam-s.:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்-
கழகத்துக் காலை புகின்.

NG

Dev Raj

unread,
Dec 1, 2016, 6:23:22 AM12/1/16
to மின்தமிழ்
சங்க இலக்கியத்தில்  ’சங்கம்’

பரிபாடலில் ’சங்கம்’ கால அளவைக் குறியீடாக இடம் பெறுகிறது.
’கழகம்’ இருப்பதாகத் தெரியவில்லை. ’கூட்டம்’ உள்ளது.
மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன


தேவ்

N. Ganesan

unread,
Dec 1, 2016, 10:08:58 AM12/1/16
to மின்தமிழ், vallamai
 கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.

Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowry
உருவாக்கம் காணமுடியும்.

மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw

வள்ளுவர் காலத்தில் கழகம் = சூதாடும் இடம் எனப் பொருள். வையாபுரிப்பிள்ளை “கழகம்” என்ற சொல்லுக்கு
ஒரு கட்டுரை எழுதியுள்ளார். களம் என்ற சொல்லில் இருந்து கப்பிரத்தியம் பெற்றுக் கழகம் எனவிரிவது பற்றி.
உலூகல- என்ற ரிக்வேத வார்த்தை பற்றி எழுதியுள்ளேன். உரல்-களம். நீலம் (Indigo plant - இப்போது ஜீன்ஸ் பேண்ட்ஸ்
செய்ய வங்காளத்தில் பயிரானது பிரிடீஷ் காலங்களில்) இடிக்க வட்டமான மர உரல்கள் கொண்ட களங்களை
நிறைய சிந்து சமவெளியில் பார்க்கலாம். எனவே, நீர்- > நீலம்; வார்- > வால்-, ... போல உரல்-களம் உர-களம்,
உலூகல என்று ரிக்வேதத்தில்.

வையாபுரியார் களம் > கழகம் என்பதை விட, கழ-/காழ் ‘கருமை’ என்ற பொருளிலே கழகம் என்ற சொல்லுக்குப்
பொருள் காணலாம் எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Dec 1, 2016, 10:20:06 AM12/1/16
to மின்தமிழ்
On Wednesday, 30 November 2016 20:33:35 UTC+5:30, N. Ganesan wrote:
2011-ல் எனது மடல்: (கழகம் என்ற சொல்லுக்கு வாழ்வு கொடுத்தது கம்பன் என்பது பற்றி.
தமிழ் தேசியர்கள் கழகம் என்றுள்ள கக்ஷிகட்கு என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதும் பார்க்கணும்.)

கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.


’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.



சடகோபரந்தாதி பாடிய கம்பருக்கும் முன் சடகோபர் நற்பெயரளித்துத்
தம் பனுவல் வாயிலாக நல்வாழ்வு கொடுத்துள்ளாரே !

குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே !

[எம் குழாம்தனுள் புக வேண்டா, நம்பீ,பேரழகு படைத்த பெண்டிர் பலர் உளர்,
அவர்பால் புகுவீர் ]



தேவ்
 

N. Ganesan

unread,
Dec 1, 2016, 10:31:55 AM12/1/16
to மின்தமிழ், vallamai
கழகத்தில் சூது ஆடுதல், சூது செய்தல் உண்டு. அப்படிச் சூது செய்யாதே என்கின்றனர் கோபிமார்கள்.
வாழ்த்திலே இருவகை உண்டு. இங்கே “உள்ளூறச் சொல்லுகின்ற வார்த்தை அல்ல” என்பர் உரைகாரர்.

அழகாக, பழைய உரை:
இவர்கள் ‘கழகமேறேல்நம்பீ“ என்றால் அதுகேட்டு அப்படியே வர்த்திப்பானோ  அவன்? இவர்கள்தாம் உள்ளூறச் சொல்லுகிறவார்த்தையுமன்றே இது, அவன் மேன்மேலும் உட்புகவேணும், தீம்புசெய்யவேணும் என்றன்றோ இவர்களும் உள்ளே எண்ணிருப்பது. அவன் இஃதறிவானாகையாலே பிடிவாதமாகச் சில செய்யப்புகுந்தான், அதுநோக்கி “உனக்குமிளைதே கன்மமே“ என்கிறார்கள். அப்பா! நீ செய்கிற இவ்வநீதியான செயல் நீசத்தனமானது என்று நாங்கள் சொல்லுகிறவளவேயோ? நீயே ஆலோசித்துப் பார்த்தல் இது மிகவும் நீசத்தனமென்னுமிடம் உன் மனத்துக்கும் தெரியுமே என்றபடி.

Here Nammazvar uses Kazakam in the old, Sangam sense. 

NG


தேவ்
 

Dev Raj

unread,
Dec 1, 2016, 11:39:25 AM12/1/16
to மின்தமிழ்
கழகமேறுதல் - தீம்பு செய்தல் 
இப்பொருளில் வேறு எங்காவது இலக்கியம் சொல்கிறதா ?
இங்கு தம் குழாத்தை அழகற்ற மகளிர் எனச் சொல்லிகொள்கின்றனர்.
இரு குழாங்களாகச் சொல்லும் முறையை மங்கை மன்னரும்
கையாள்வார்.
 
கழகம் – கோஷ்டி

எங்களால் பொறுக்கப்போமோ? என்றவாறே 

‘பின்னே யாரால் பொறுக்கப்போகும்‘ என்றான் கண்ணபிரான். 

அதற்கு உத்தரமாக “அழகியாரிவ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்“ என்கிறார்கள். 

த்ரிலோக ஸுந்தரிகளென்று பேர்பெற்று உனக்கேற்கும் தேவிமார்கள் பலருண்டுகாண், 

உனக்கு ஏற்காத குரூபிகளான நாங்கள் எதற்கு? என்றபடி.

 “தக்கார் பலர் தேவிமார்சாலவுடையீர்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.


“உனக்கேற்ற அழகிய தேவிமார்கள் பலருண்டு” என்றவாறே கண்ணபிரான் 

“எனக்கு ஏற்ற தேவிகள் அழகிகள் நீங்கள் தவிர வேறில்லை, உங்கள்கையில் ஆணையிட்டுத் தருகிறேன் காண்மின்“ என்று சொல்லிக்கொண்டே உள்ளே புகத்தொடங்கினான், அதுகண்டு “கழகமேறேல் நம்பீ“ என்கிறார்கள். 

நீ எத்தனைபேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது, மேல் விழுந்து தீண்டாதேகொள் என்றவாறு. 


கழகம் – கோஷ்டி


http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4053&Itemid=54



தேவ்

N. Kannan

unread,
Dec 2, 2016, 7:51:17 AM12/2/16
to மின்தமிழ்
//​கழகம் – கோஷ்டி//

சரிதான்! அதனால்தான் முத்தமிழ் வேந்தர் பராசக்தியில் “பஜனை செய்வோம் கண்ணன் நாமம்” என்று எழுதினார் போலும். இப்போது கலைஞர் கைவண்ணத்தில் தமிழகம் கண்ட மாபெரும் சமயப்புரட்சியாளர் இராமானுஜர் பற்றி காவியமே எழுந்துள்ளது (600 எபிசோடுக்கும் மேல்).

கோஷ்டி பலமானதுதான் ;-)

நா.கண்ணன்

2016-12-01 22:09 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
கழகமேறுதல் - தீம்பு செய்தல் 
இப்பொருளில் வேறு எங்காவது இலக்கியம் சொல்கிறதா ?
இங்கு தம் குழாத்தை அழகற்ற மகளிர் எனச் சொல்லிகொள்கின்றனர்.
இரு குழாங்களாகச் சொல்லும் முறையை மங்கை மன்னரும்
கையாள்வார்.
 
கழகம் – கோஷ்டி

எங்களால் பொறுக்கப்போமோ? என்றவாறே 

‘பின்னே யாரால் பொறுக்கப்போகும்‘ என்றான் கண்ணபிரான். 

அதற்கு உத்தரமாக “அழகியாரிவ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்“ என்கிறார்கள். 

த்ரிலோக ஸுந்தரிகளென்று பேர்பெற்று உனக்கேற்கும் தேவிமார்கள் பலருண்டுகாண், 

உனக்கு ஏற்காத குரூபிகளான நாங்கள் எதற்கு? என்றபடி.

 “தக்கார் பலர் தேவிமார்சாலவுடையீர்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.


“உனக்கேற்ற அழகிய தேவிமார்கள் பலருண்டு” என்றவாறே கண்ணபிரான் 

“எனக்கு ஏற்ற தேவிகள் அழகிகள் நீங்கள் தவிர வேறில்லை, உங்கள்கையில் ஆணையிட்டுத் தருகிறேன் காண்மின்“ என்று சொல்லிக்கொண்டே உள்ளே புகத்தொடங்கினான், அதுகண்டு “கழகமேறேல் நம்பீ“ என்கிறார்கள். 

நீ எத்தனைபேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது, மேல் விழுந்து தீண்டாதேகொள் என்றவாறு. 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Dev Raj

unread,
Dec 3, 2016, 8:06:06 AM12/3/16
to மின்தமிழ்
On Thursday, 1 December 2016 20:38:58 UTC+5:30, N. Ganesan wrote:
 கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.

அவ்வாறாயின் முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் எனும் பெயர்களுக்கு வாய்ப்பில்லை
எனத் தெரிகிறது.

 
Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowry
உருவாக்கம் காணமுடியும்.
மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw
 

 kapardin -  कपर्दिन्  சரியான உச்சரிப்பு.
கபர்திநி - அம்பிகை
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி, ரம்ய கபர்திநி, சைலஸுதே !

சோழி ஹிந்தியில் கௌடி ஆகி Cowry என ஆங்கில வடிவு பெறுகிறது என நினைக்கிறேன்.
எப்படி Cowrieyயைக் கபர்தியோடு பொருத்துகின்றனர் புரியவில்லை


தேவ் 

N. Ganesan

unread,
Dec 3, 2016, 8:54:00 AM12/3/16
to மின்தமிழ், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Saturday, December 3, 2016 at 5:06:06 AM UTC-8, Dev Raj wrote:
On Thursday, 1 December 2016 20:38:58 UTC+5:30, N. Ganesan wrote:
 கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.

அவ்வாறாயின் முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் எனும் பெயர்களுக்கு வாய்ப்பில்லை
எனத் தெரிகிறது.


ஆமாம்.
 
 
Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowry
உருவாக்கம் காணமுடியும்.
மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw
 

 kapardin -  कपर्दिन्  சரியான உச்சரிப்பு.
கபர்திநி - அம்பிகை
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி, ரம்ய கபர்திநி, சைலஸுதே !

சோழி ஹிந்தியில் கௌடி ஆகி Cowry என ஆங்கில வடிவு பெறுகிறது என நினைக்கிறேன்.
எப்படி Cowrieyயைக் கபர்தியோடு பொருத்துகின்றனர் புரியவில்லை


-ட்-, -ற்-, -ழ்- இரண்டாம் எழுத்தாக தொடர்புடைய சொற்களில் வரும்.
கோடு-, கோறு, கோழ்-. குப்பை மண்ணைக் கோறிக் கொண்டிருப்பது கோழி. தெலுங்கில் கோடி.
தொறு-/தொழு-  தொடு- 

கோடு- குவடு/கவடு. இதுபோல், கோறு கவறு- முதலில் கழல் (அ) கழற்சிக்காய் எனக் கறுப்பாய் 
உள்ள காய்களால் ஆடிய ஆட்டம், பின்னர் கவறு என்னும் பலகறைப்பாசி (சோழி < கோற்- )யால்
ஆடப்படுகிறது, கவறு (கவர்/கவல்) : இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் சோழி. ஈசுவரன் ஜடாபாரத்தை
இரண்டாகப் பிளந்து கட்டியிருப்பதால் கபர்தின் < கவறு- இந்தத் தலையலங்காரத்தை சிந்துவெளிக்
கலைகளிலே காணலாம்.

கவறு ஆடல் = சூதாடல். முதலில், கழல் (கறுப்புக் காய்) கொண்டு ஆடியதால் அவ்விடம் கழகம் என்று
க-ப்ரத்யம் பெற்று விரிந்தது.  ... தமிழின் கவறு > Cowrie  https://en.wikipedia.org/wiki/Cowry



பின்னர், விரிவாகச் சொல்கிறேன்.

நா. கணேசன்
 

தேவ் 

N. Ganesan

unread,
Dec 3, 2016, 1:23:09 PM12/3/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Banukumar Rajendran


On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:

பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.


முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள். 

இரா.பா


சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

முதலில், திரு. தேவ ராஜனின் கேள்விக்கு விடை: ” சங்க இலக்கியம் “ என முதல்பிரயோகம் யார் செய்தது: எனக்குத் தெரிந்தவரையில், வையாபுரியாருக்கு முன்னமே, உவேசா
சங்க இலக்கியங்கள் என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

உவேசா மாணவர் பேரா. கு. அருணாசலக் கவுண்டர் அளித்த புஸ்தகம் பார்த்து எழுதுகிறேன். 1928-ல் அச்சானது. அதன் முதற்பதிப்பு, உவேசா கு.அ. அவர்கட்கு அளித்த பொக்கிஷம் இந்நூல்.
சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும். இந்நூல் சென்னை சருவகலாசாலையில் உவேசா சங்கத்தமிழ் பற்றிச் செய்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும். அதில் முதல் பக்கத்திலேயே
சங்க இலக்கியம் என்று இருக்கிறது. தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர், நச்சர் வாக்குகளைக் கொண்டு இதனை உவேசா அவர்கள் அமைத்திருக்கிறார் என்று கருதலாம். அப் பழைய
உரைகளும் பார்ப்போம்.

சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும், 1928, உவேசா (பின்னரும் பல பதிப்புகள் வந்துள்ளன. பிடிஎப் ஆகவேண்டிய நூல். பின்னர் தட்டடெழுதிவிடலாம்.)
காவதம் என்னும் கன்னட நாட்டுச் சொல்லும், அதன் பொருளும், காதம்/காவதத்தின் அளவுகொண்டு பார்த்தால் காவுந்தி அடிகள் கர்நாடகப்
பொழில்மண்டிலத்தில் இருப்பதும், நாடுகாண் காதையின் ஊர்கள் தெய்வக் காவிரி பாயும் முழு நாடும் பேசுவதும் ஆராய்ந்தேன். அப்பொழுது
தழைக்காட்டுக் கங்கர்களின் ஊர் கொங்குநாடு என்று உவேசா குறிப்பிட்ட அரிய செய்தியும் தந்துள்ளேன். சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு. இரண்டையும்
தெளிவாக சிலம்பின் பழைய உரைகாரர்கள் குறித்துள்ளனர். உவேசா தலக்காடு போன்ற இடங்கள் கொங்குநாடு எனக் குறிப்பிட்டமை:

சென்னை சருவகலாசாலையில் தாக்ஷிணாத்யகலாநிதி செய்த பிரசங்கங்கள்:
I தமிழ்ச்சங்கம். இதன் முன்னுரையில் தான் ”சங்க இலக்கியம்” என பெயரிட்டுள்ளார்.
II முத்தமிழ்
III சங்கநூல்களிற் கூறப்படும் தெய்வங்கள்
IV சங்க காலத்துப் புலவர்கள்
V சங்ககாலத்துப் புலமைவாய்ந்த பெண்பாலார்
VI புலவர்களை ஆதரித்த பிரபுக்கள்
VII கலைகள்
VIII பண்டை உரையாசிரியர்கள்
IX தமிழை ஆதரித்த பிரபுக்களும் புலவர்களும்
X ஆராய்ச்சி

10 ஆண்டுகள் சென்றபின்னர் அவர் மாணவர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் தம் பதிப்பிற்கு இப்பெயரை இட்டார்.
தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். 

N. Ganesan

R. Banukumar wrote:
********************************
சங்க இலக்கியம் என்று பெயர் சூட்டியவர், எனக்கு தெரிந்து, திருவாளர்.வையாபுரியார். மிந்தமிழில்
எழுதியிருக்கிறேன்.

சங்கம் என்று தேர்ந்தெடுத்தற்கு காரணம், பழம்பெரும் பாடல்களை முதன்முதலில் தொகுத்தவர்கள் சமண சமயத்தவர்கள் (ஜைன, புத்த) ஆகையால்! இரண்டாம் தொகுப்பு, கி.பி.ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில், சைவ சமயத்தவர்கள் செய்தது.

இதை பற்றியக் குறிப்பும் இங்கு கொடுத்திருக்கிறேன். 


இரா.பா
*****************************************************

N. Kannan

unread,
Dec 4, 2016, 5:06:04 AM12/4/16
to மின்தமிழ்
அன்பின் கணேசன்:

//சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.
​//

இது சற்று விளங்கவில்லை.

சீரங்கம் எங்குள்ளது? 

10 நூற்றாண்டுக்கு முன் எழுத இலக்கியங்கள் எதைப் பேசுகின்றன?

தெரிந்து கொள்ளவே இக்கேள்வி.

நா.கண்ணன்​

Dev Raj

unread,
Dec 4, 2016, 7:12:14 AM12/4/16
to மின்தமிழ்

On Saturday, 3 December 2016 23:53:09 UTC+5:30, N. Ganesan wrote:
உவேசா மாணவர் பேரா. கு. அருணாசலக் கவுண்டர் அளித்த புஸ்தகம் பார்த்து எழுதுகிறேன். 1928-ல் அச்சானது. அதன் முதற்பதிப்பு, உவேசா கு.அ. அவர்கட்கு அளித்த பொக்கிஷம் இந்நூல்.
சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும். இந்நூல் சென்னை சருவகலாசாலையில் உவேசா சங்கத்தமிழ் பற்றிச் செய்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும். அதில் முதல் பக்கத்திலேயே
சங்க இலக்கியம் என்று இருக்கிறது. தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர், நச்சர் வாக்குகளைக் கொண்டு இதனை உவேசா அவர்கள் அமைத்திருக்கிறார் என்று கருதலாம். 


மிக அரிய தகவல், நன்றி. அப்பக்கத்தின் படத்தையும் வெளியிட்டால் நல்லது.
நெல்லைத் தமிழறிஞர் கா . சுப்பிரமணிய பிள்ளையவர்கள் முதன்முதலில்
‘தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதினார் என வாசித்த நினைவு. அவரது கருத்து யாது ? 
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது ?


தேவ்

Dev Raj

unread,
Dec 4, 2016, 9:27:52 AM12/4/16
to மின்தமிழ்
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது  ?


தனி மடல் தகவல் ஒன்று .

திராவிடப் பிரகாசிகை -
”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினு 
 நன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,
’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.

இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது. 

சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்
ஐம்பெருங்காப்பியங்களில் அல்லது பிற பவுத்த - சமண நூல்களில் கட்டாயம் குறிப்பு
இருக்கும் . அவற்றில் இதற்கான ஆதாரம்  உள்ளதா எனவும் ஆராய வேண்டும்.

தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் இருப்பதாகத் தெரியவில்லை


தேவ்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 10:56:58 AM12/4/16
to மின்தமிழ், vallamai


On Sunday, December 4, 2016 at 6:27:52 AM UTC-8, Dev Raj wrote:
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது  ?


தனி மடல் தகவல் ஒன்று .

திராவிடப் பிரகாசிகை -
”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினு 
 நன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,
’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.

இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது. 


சங்கத்தைக் கழகம் என்றது சேலத்தில். இது சபாபதி நாவலர் காலத்திற்கு மிகப் பிற்காலம். சபாபதி
நாவலர் இறந்து 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கம் கழகம் எனலாம் என்ற கருத்து பாவாணருக்கு
ஏற்பட்டது.

திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).
யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் பயன்படுத்தியிருப்பார்கள்.
தேடவேண்டும்.

நா. கணேசன்
 
சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 11:59:41 AM12/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Sunday, December 4, 2016 at 6:27:52 AM UTC-8, Dev Raj wrote:
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது  ?


தனி மடல் தகவல் ஒன்று .

திராவிடப் பிரகாசிகை -
”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினு 
 நன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,
’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.

இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது. 


சங்கத்தைக் கழகம் என்றது சேலத்தில். இது சபாபதி நாவலர் காலத்திற்கு மிகப் பிற்காலம். சபாபதி
நாவலர் இறந்து 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கம் கழகம் எனலாம் என்ற கருத்து பாவாணருக்கு
ஏற்பட்டது.

திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).
யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் பயன்படுத்தியிருப்பார்கள்.
தேடவேண்டும்.

தமிழ் தேசியம் வளர்க்கும் ஸ்ரீ சேசாத்திரி இரண்டு உயிரெழுத்தின் நடுவே உள்ள -க்- மெய்யின் ஒலிப்பு ஒருவிதமான -h-
என்பதுபற்றிக் கேட்டிருந்தார். இதனை மொழியியல் அறிஞர்கள் intrevocalical fricative sound என்பர். அதனைக் குறிப்பிட
ரோமன்/ஆங்கில எழுத்தில் ஒருமுறை உண்டு: h-ன் மீழே ஒரு breve (அரைவட்டம்). இவ்வொலி அறபி பாஷையிலும் இருக்கிறது.
அதே போல, சொல் முதலில் வரும் ச் மற்றும் இரு உயிரிடை -ச்- இதற்கும் s- ன் மீழே ஒரு breve (அரைவட்டம்) இடம்பெறல் வேண்டும்.
இந்த விதிகளை இ. அண்ணாமலை, ந. தெய்வசுந்தரம், ... போன்றோர் எழுதியுள்ளனர் தொகுத்து கணிஞரைக் கொண்டு
ஒலிப்புக்கு வசதியாக ஒரு வலைப்பக்கம் தயாரிக்கலாம். அப்போது யூனிகோட் தமிழோ, ஐஎஸ்ஓ ரோமன்லிபி தமிழோ
உள்ளிட்டால் ஒலிப்பது எவ்வாறு என்று காட்டலாம். அப்போதுதான் இளைஞர்களுக்கு இந்த தொன்மையான தமிழ் ஒலிப்பு
விளங்கிக்கொள்ள வசதி. இவ்வொலிப்பு மதுரையில், கோவையில், ஈழத்தில் உள்ளது. நல்ல தளம்: http://noolaham.org
noolaham.org எப்படி நூலகம் எழுதப்பட்டுள்ளது எனப் பார்க்கவும். 

Noolaham.org தளத்தில் திராவிடப் பிரகாசிகை:
சங்க இலக்கியம் என்று வருமிடங்களைத் தொகுக்கலாம். யாராவது செய்யலாம். இல்லையெனில், நான் செயக்கூடும்.

திராவிடப் பிரகாசிகை 14, 15 இடங்களில் சங்க இலக்கியம் பற்றிப் பேசுகிறது. சைவ பரமான நூல் இஃது. எனவே, சபாபதி நாவலரோ
அல்லது அவரது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரோ முதன்முறையாக “சங்க இலக்கியம்” என்று பயன்படுத்துகிறார்கள்.
பின்னர் உவேசா. பின்னர், 1938-ல் சங்க இலக்கியம் எல்லாவற்றையும் தொகுத்து “சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும்” என்று
ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க நூல்களை ஒரே புத்தகமாக வெளியிட்டார்.


On Saturday, December 3, 2016 at 12:37:29 AM UTC-8, ஆரோதன் wrote:
Satura-aharadi,   எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. தமிழில் ஹகரம் இல்லை இருந்தும் ஏன் இப்படி ககரத்தை ஹகரமாக பலுக்கி தமிழைக் கொல்லுகிறார்கள். ஏன் தமிழர்கள் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள்?  அகநானுறும் இப்படி ahanaanuru என்று தவறாக பேராசிரியர்களால் எழுதவும் பலுக்கவும் படுகிறது.

ஆரோதன் 


தெலுங்கு, கன்னடம் போன்ற த்ராவிட மொழிகள் இழந்துவிட்ட ஒலிப்பு intervocalical -k- ஒலிப்பு. முகம், அழகு, பிறகு, முருகன், .... இவற்றில் எல்லாம் இந்த -h- ஓசை உண்டு. ஹிண்டு போன்ற பத்திரிகைகளில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழி கொண்ட பலர் எழுதுவதால் mugam, azhagu, piragu, murugan, .... என்ற தவறான எழுத்துப்பெயர்ப்பு நடக்கிறது. 

நல்ல பாடகர்கள் தாய்மொழி வேறாயினும் அழகாக இந்த voiceless fricative sounds from intervocalical -k- & -c- ஒலிப்பதைக் கேட்கலாம். பி. சுசீலா, டிஎம்எஸ், பாலமுரளி, யேசுதாஸ் ... இப்பொழுது தமிழர்களின் குழந்தைகள் பலர் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதத் தொடங்கியுள்ளனர். எனவே  intervocalical -k-  அவ்வாறே எழுதப்படுதல் கற்பிக்கப்பட வேண்டும். இன்றேல், தெலுங்கு, கன்னடம் போல் இந்த மிகப் பழைய உச்சரிப்பை தமிழ் இழந்துவிடும்.

பல மொழியியல் அறிஞர்கள் 150 ஆண்டுகளாய் எழுதுவதுதான் இந்த முக்கியமான ஒலிப்பியல். 1831-ல் பிரெஞ்சுக்காரர் கைப்பட எழுதிய பிரெஞ்சு-தமிழ் அகராதி உண்டு. சில காலமாக, இணையத்தில் இருக்கிறது. அதில் பார்த்தால், இந்த intervocalical -k- அப்படியே -k- என எழுதியுள்ளார். அம்முறை தான் தமிழின் இரண்டு உயிர்களுக்கு இடையே -க்- வரும்போது எழுதச் சிறந்தது.

நா. கணேசன்

Dev Raj

unread,
Dec 4, 2016, 12:17:36 PM12/4/16
to மின்தமிழ்

 intervocalical -k-

On Sunday, 4 December 2016 22:29:41 UTC+5:30, N. Ganesan wrote:
தெலுங்கு, கன்னடம் போன்ற த்ராவிட மொழிகள் இழந்துவிட்ட ஒலிப்பு intervocalical -k- ஒலிப்பு. முகம், அழகு, பிறகு, முருகன், .... இவற்றில் எல்லாம் இந்த -h- ஓசை உண்டு. ஹிண்டு போன்ற பத்திரிகைகளில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழி கொண்ட பலர் எழுதுவதால் mugam, azhagu, piragu, murugan, .... என்ற தவறான எழுத்துப்பெயர்ப்பு நடக்கிறது. 

நல்ல பாடகர்கள் தாய்மொழி வேறாயினும் அழகாக இந்த voiceless fricative sounds from intervocalical -k- & -c- ஒலிப்பதைக் கேட்கலாம். பி. சுசீலா, டிஎம்எஸ், பாலமுரளி, யேசுதாஸ் ... இப்பொழுது தமிழர்களின் குழந்தைகள் பலர் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதத் தொடங்கியுள்ளனர். எனவே  intervocalical -k-  அவ்வாறே எழுதப்படுதல் கற்பிக்கப்பட வேண்டும். இன்றேல், தெலுங்கு, கன்னடம் போல் இந்த மிகப் பழைய உச்சரிப்பை தமிழ் இழந்துவிடும்.


ஏழாண்டுகளுக்குமுன் இதே ஒரு தலைப்பாக ஓடியது நினைவுக்கு வந்தது; திருப்புகழ் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை...’ [டி எம் எஸ்]
பாடலை விமர்சித்து எழுதினர் -


தேவ்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 1:34:13 PM12/4/16
to மின்தமிழ், vallamai


On Sunday, December 4, 2016 at 2:06:04 AM UTC-8, N. Kannan wrote:
அன்பின் கணேசன்:

//சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.
​//

இது சற்று விளங்கவில்லை.

சீரங்கம் எங்குள்ளது? 

திருவரங்கம் சோழநாட்டில் உள்ளது. திருச்சியில். இது செய்யப்பட்ட அரங்கம் ஆகலாம். 10-11 நூற்றாண்டுவரை ஸ்ரீரங்கம் என்று திருவரங்கம் அழைக்கப்பட்டதில்லை.
பார்க்க: திவ்விய பிரபந்தம்.

ஆனால், இயற்கையாகவே அமைந்த அரங்கம் காவிரியில் பழைய கொங்குநாட்டில் (acc. to scholars like உவேசா, ...) உள்ளது. காவிரியில் உள்ள பெரிய அரங்கம் இதுதான்.
இதனை, கங்கர்கள் என்னும் சமண சமயத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் மணிப்பிரவாள இலக்கியத்தை தமிழிலும், கன்னடம் போன்ற மொழிகளிலும்
வளர்த்தனர். ஸ்ரீபுராணம். ஆழ்வார் என்ற சொல் தியானத்தில், யோகத்தில் மூழ்கி இருப்பவரைக் குறிப்பது. தீர்த்தங்கரர்களுக்கான கல்வெட்டுகளில் முதலில் உள்ளது.
பின்னர், ஆழ்வார்கள் என்ற பெயரையும், வைஷ்ணவத்தின் முன்னர் உள்ள ஸ்ரீ, மணிப்ரவாலமாக உரைகள் எழுதும் வழிமுறை இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் சமண சமயிகளிடம்
இருந்து பெறலாயினர்.

Cascade of mountains - பன்மலை அடுக்கம் என்பது பழைய தமிழ் இலக்கியங்கள். பன்மலை அடுக்கம் கொண்டது ஸ்ரீரங்கம். கங்க ராஜ்ஜியம். அங்கே தான் மதுரைக்கு
30 காதம் (= ~ 360 மைல்கள்) வடக்கே பொழில்மண்டிலம் என்னும் ஸஹ்யாத்ரியில் கவுந்தி அடிகளைச் சந்தித்து, கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும்
தெற்கே மதுரை நோக்கி வருகின்றனர். கங்க ராஜ்ஜியமாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தான் கவுந்தி அடிகள் அந்த(ர)சாரணர் என்னும் ஜைந தெய்வங்களைச் சந்தித்து
மூவரும் தொழுகின்றனர். பின்னர் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்புறம் பெருமாள் துயில்கொள்ளும் திருவரங்கம் வருகின்றனர். நாடுகாண் காதையை
கண்டவியூக சூத்திரம் (பௌத்தம்) நூல் போல இளங்கோ அடிகள் அமைத்துள்ளார் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதிய புதினத்தில். காதம் எவ்வளவு தூரம்? என்னும்
இழையில் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் இருக்கிறது. நீங்கள் படிக்கலாம்.

பன்மலை அடுக்கம் உள்ள ஸ்ரீரங்கம் -சிலம்பில் பாடப்பட்டுள்ளது:  (இது திருவரங்கம் அல்ல).
அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

cascade of water falls = நீரருவி அடுக்கம்.  
There are several waterfalls in the area = அங்கே அருவிகளின் கூட்டம்/திரள் இருக்கின்றன.

Cascade of Mountains = நெடுமலை அடுக்கம்.

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல் (அகநானூறு)

Famous lines of CilappatikAram:
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள


cascade of mountains near Kumaricode. This cascade can be seen in Kotricode near Kanyakumari.

----------------

மஞ்சு உலா வரு சிகரியும் சூளிகை வரைப்பும் 
விஞ்சு மேல் நில அடுக்கமும் சோலையும் வெற்பும் 
சஞ்சரீக மார் ஓடையும் வாவியும் தடமும் 
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணும் உளவே. - kampan

---------------------------------


நாடுகாண் காதை:

ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் 
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்

சீரங்க பட்டினத்தில் - காவேரி ஆற்று வீ அரங்கத்தில்
அருகேயுள்ள அடுக்கத்து மலைகளைக் குறிப்பிடுகிறார்.
அடுக்கம் - cascade of hills.

சீரங்கத்தில் அடுக்கம்: (Cascade of Hills)






இந்த அரங்கத்தின் அருகே ”குரங்கு அமை மரம் பயில் அடுக்கம்” பல உள்ளன.
வடபெரும்கோட்டின் (சையமலைத் தொடர்கள்) மலைநாட்டு சீரங்கம் இது.



சீரங்க பட்டினத்து அடுக்கத்தில் இருந்த கோட்டையில் போர்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 4:40:14 PM12/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, December 4, 2016 at 2:06:04 AM UTC-8, N. Kannan wrote:
அன்பின் கணேசன்:

//சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.
​//

இது சற்று விளங்கவில்லை.

சீரங்கம் எங்குள்ளது? 


இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் சிலம்பிற்கு உரை எழுதினோர் சிலம்பு நாடுகாண் காதையில் உள்ள இடங்களையும், ஊர்களையும்
விட்டுவிட்டார்கள். ஆனால், இளங்கோ அடிகள் காலத்தில் வடகொங்காக இருந்த பகுதிகள் இன்று கன்னட தேசம்/மாநிலம் ஆகிவிட்டதால் 
இக் குழப்பம் நேர்ந்துவிட்டது. 
 
திருவரங்கம் சோழநாட்டில் உள்ளது. திருச்சியில். இது செய்யப்பட்ட அரங்கம் ஆகலாம். 10-11 நூற்றாண்டுவரை ஸ்ரீரங்கம் என்று திருவரங்கம் அழைக்கப்பட்டதில்லை.
பார்க்க: திவ்விய பிரபந்தம்.

ஆனால், இயற்கையாகவே அமைந்த அரங்கம் காவிரியில் பழைய கொங்குநாட்டில் (acc. to scholars like உவேசா, ...) உள்ளது. காவிரியில் உள்ள பெரிய அரங்கம் இதுதான்.
இதனை, கங்கர்கள் என்னும் சமண சமயத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் மணிப்பிரவாள இலக்கியத்தை தமிழிலும், கன்னடம் போன்ற மொழிகளிலும்
வளர்த்தனர். ஸ்ரீபுராணம். ஆழ்வார் என்ற சொல் தியானத்தில், யோகத்தில் மூழ்கி இருப்பவரைக் குறிப்பது. தீர்த்தங்கரர்களுக்கான கல்வெட்டுகளில் முதலில் உள்ளது.
பின்னர், ஆழ்வார்கள் என்ற பெயரையும், வைஷ்ணவத்தின் முன்னர் உள்ள ஸ்ரீ, மணிப்ரவாலமாக உரைகள் எழுதும் வழிமுறை இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் சமண சமயிகளிடம்
இருந்து பெறலாயினர்.

Cascade of mountains - பன்மலை அடுக்கம் என்பது பழைய தமிழ் இலக்கியங்கள். பன்மலை அடுக்கம் கொண்டது ஸ்ரீரங்கம். கங்க ராஜ்ஜியம். அங்கே தான் மதுரைக்கு
30 காதம் (= ~ 360 மைல்கள்) வடக்கே பொழில்மண்டிலம் என்னும் ஸஹ்யாத்ரியில் கவுந்தி அடிகளைச் சந்தித்து, கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும்
தெற்கே மதுரை நோக்கி வருகின்றனர். கங்க ராஜ்ஜியமாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தான் கவுந்தி அடிகள் அந்த(ர)சாரணர் என்னும் ஜைந தெய்வங்களைச் சந்தித்து
மூவரும் தொழுகின்றனர். பின்னர் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்புறம் பெருமாள் துயில்கொள்ளும் திருவரங்கம் வருகின்றனர். நாடுகாண் காதையை
கண்டவியூக சூத்திரம் (பௌத்தம்) நூல் போல இளங்கோ அடிகள் அமைத்துள்ளார் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதிய புதினத்தில். காதம் எவ்வளவு தூரம்? என்னும்
இழையில் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் இருக்கிறது. நீங்கள் படிக்கலாம்.

பன்மலை அடுக்கம் உள்ள ஸ்ரீரங்கம் -சிலம்பில் பாடப்பட்டுள்ளது:  (இது திருவரங்கம் அல்ல).
அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

காதம்/காவதம்:
’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர் சைவத்திரு. சு. கோதண்டராமன் அவர்கள் மின்தமிழ் குழுவில்
12/10/2010 அன்று குறிப்பிட்டுள்ளார்:
நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம் என்று
ஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன்.
சொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்
ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது.”

கொங்குநாட்டார்களிடையே நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உள்ளது. கொங்குப் புலவோர் அ.மு.குழந்தை, பெ.தூரன் போன்றோர் எழுதியும் உள்ளனர். மலைகளால் சூழப்படுவது அகல்விளக்கின் விளிம்பு போலவும் (Edges of the earthen lamp),முவ்விழைகள் கொண்ட திரி அந்த அகல்விளக்கில்! நொய்யல், ஆன்பொருனை, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் திரியின் முகம்/மூக்கு பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு அத்திரி (காவிரி) அளிக்கிறது.

சங்ககாலச் சேரர்களின் தலைநகர் காவிரிக் கரையில் உள்ள வஞ்சி. விளக்கி நூலெழுதியவர் மகாவித்துவான் ரா. ராகவையங்கார். பின்னர், தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டெழுதின நாணயங்கள், ரா. நாகசாமியின் ரோமன் கரூர், ... எல்லாம் நிரூபித்துவிட்டன. காதம், காவதம் என்ற கன்னடச் சொற்களை அறிமுகம் செய்த இளங்கோ அடிகள் கொண்டது 10 - 14 மைல் எனலாம். சமணக் குரத்தி கவுந்தி அடிகளின் கதாபாத்திரத்தை தன் சமண சமயத்தை விவரிக்கத் தன் நாவலில் படைத்துக்கொள்கிறார். சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில் Tale of the Genji போல, செம்மொழி தமிழில் உள்ள முதல் நாவல் சிலப்பதிகாரம். காவிரி பாயும் கங்கர்களின் நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும் விரும்பினர். அணைகள் போன்றவை கட்டிவிட்டால் நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு குறையுமே. அதுபோல், சோழன் ஒருவனின் ஆட்சிக்குள் காவிரிநதி பாயும் எல்லா இடங்களும் இருந்தன என்று நாடுகாண் காதையில் கூறி, மதுரைக்கு வடக்கே 30 காதம் (= ~360 மைல்) தொலைவில் கோவலன் கண்ணகி கௌந்தி அடிகள் இருப்பிடத்தில் சந்தித்து, பின்னர் சீரங்கபட்டினம் வந்து, அந்தசரணரைத் தொழுது, பின் உறையூர் வந்துசேர்வதாகப் பாடியுள்ளார். பலரைச் சந்திப்பது எல்லாம் கண்டவியூக சூத்திரத்தை மாதிரியாக வைத்துச் செய்தது. வஞ்சியில் இருந்து கன்னட நாடு சென்று சமண சமய குரவர்களிடம் இளங்கோ அடிகள் அதன் தத்துவங்களைக் கற்றிருக்கலாம்.

ஜனத்தொகை மிகுந்துவரும் மாநிலங்களில் நீர் என்பது ஒரு நேஷனல் ரிஸோர்ஸ். சரியான முறையில் பங்கீடு செய்தல் வேண்டும். வரலாற்றையும் கணக்கில் எடுத்து. இதனையெல்லாம் தெளிவாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் நாடுகாண்காதையில் காவிரி பாயும் நாடு, அதன் உரிமைகள் எல்லாம் சொல்லிவிட்டார். சோழன் மேலாளுமையில் இருந்த சீரங்கம் (இப்பொழுது சீரங்க பட்டினம்), அங்கே இருந்த சமண சமயம் எல்லாம் விளக்குகிறார். அந்தச் சோழன் யார் என்றால் கரிகால் சோழன்காலத்திலிருந்து என அடியார்க்குநல்லார் குறிப்பிடுகிறார். காதம் ~12 மைல் என்பது கன்னட, தமிழ் நாடுகளில் உள்ள சான்றுகளால் தெளிகிறோம். முப்பது காதம் ~360 மைல் மதுரைக்கு வடக்கே கவுந்தி அடிகளின் தவப்பள்ளியைச் சொல்லி, குடநாட்டில் (வடபெருங்கோடு) பொழில்மண்டிலமும் குறிப்பிடுகிறார். ஐம்பொழில் (ஐஹொளெ), பொழில்நரசபுரம் (ஹொளெநர்ஸிபுர), என பொழில்மண்டிலம் என சையமலைப் பகுதிகளைக் குறிப்பிடுகிறார். அந்த மலைகளில் கரும்பாலைப் புகை மேகங்கள் போலச் சூழும் வேளாண் வளமும் குறிப்பிடுகிறார். அங்கிருந்துதான் கரும்பு அதியமான் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிடச் செய்கிறான் என்பது சங்க இலக்கியம். சமண சமயத்தின் தெய்வங்களை சீரங்க பட்னத்தில் சந்தித்து, அங்கே மொழிந்த மந்திரங்களை பின்னர் தமிழ்நாட்டு திருச்சி (திருவரங்கம்) வந்தும் சொல்கின்றனர். சீரங்கத்தில் நிகழ்ந்தது திருவரங்கத்திலும் நினைவுக்கு வருதல் இயற்கை. சீரங்கம், திருவரங்கம் இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்ச்சிகளை நாடுகாண்காதையில் பேசுகிறார். இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள் தமிழகம் தான். ஆனால் ஏனோ, இருபதாம் நூற்றாண்டு உரைகள் நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு, ... என்ற குறிப்பிட்ட பொருளுடைய சொற்கள் காவிரி உற்பவிக்கும் பகுதியைச் சார்ந்தனவாகும். சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்கம் கங்கர் ராஜ்யம்; ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி எனவும் கணக்கில் எடுத்தால் நாடுகாண்காதையின் பொருள் தெளிவாக விளங்கும்.  ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. இரண்டு இடங்களும் வெவ்வேறு. சோழனின் இறையாண்மைக்குக் கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் நாடுகாண்காதையில் காவிரிநாடு முழுக்கப் பாடியுள்ளார். மேல்கொங்கிலே காவிரி தடைபடாமல் இருந்தால்தான் தங்கள் நாட்டு வேளாண்மை செழிப்பாக இருக்கும் என்பதில் சோழர்கள் மிகக்கவனம் செலுத்தினர். இப்போதைய மாகாண எல்லைகள் இல்லாத காலம் சிலம்பின் காலம். இப்போது காவிரிநாட்டின் பகுதிகள் கர்நாடகா என்றாலும், பழங்காலத்தில் அதன் வரலாறும், மன்னர்களையும் உ. வே. சாமிநாதையர் விளக்குவதைப் பார்ப்போம்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு).

அன்புடன்,
நா. கணேசன்

Dev Raj

unread,
Dec 5, 2016, 12:00:53 PM12/5/16
to மின்தமிழ்
On Monday, 5 December 2016 03:10:14 UTC+5:30, N. Ganesan wrote:
.... ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. 


உங்கள் முன்வைப்புகள் யாதாயினும் இதை ஒரு சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. 
திருவரங்கம் மட்டும் என இல்லாமல் ஆழ்வார் பிற திவ்ய தேசங்களையும்
‘திரு’ முன்னோட்டோடு சொல்வதே வழக்கம். அதரங்களைச் சொல்லும்போது
திருப்பவளச் செவ்வாய் எனச் சொல்வதைக் காண்கிறொம்.

சீரங்க நாயகர் ஊசல் சீரங்க நாயகியார் ஊசல்  இரண்டும் கருநாடக சீரங்கபட்னம் தொடர்புள்ளவையா ?


ஓர் அழகான தாலாட்டு -
கங்கர் காலத்துக் கன்னடத்தாய் பாடியதோ, 
தற்காலத் தமிழ்த்தாய் பாடியதோ தெரியவில்லை .

ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே சீரங்கம் 
சாமி ரெண்டு கையாலே தந்த எந்தன் திரவியமோ ! 

கங்கைபுனை சீநாதன் கருணையினால் என்வயிற்றில் 
மங்களமாய் வந்துதித்த மணியே நீ கண்வளராய் ! 

சரியாய்த் தவந்தானம் தருமங்கள் செய்தேனெங்கள் 
கலிதீர்க்க வந்துதித்த காதலனே கண்வளராய் !


தேவ்

N. Ganesan

unread,
Dec 5, 2016, 12:05:15 PM12/5/16
to மின்தமிழ்


On Monday, December 5, 2016 at 9:00:53 AM UTC-8, Dev Raj wrote:
On Monday, 5 December 2016 03:10:14 UTC+5:30, N. Ganesan wrote:
.... ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. 


உங்கள் முன்வைப்புகள் யாதாயினும் இதை ஒரு சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. 
திருவரங்கம் மட்டும் என இல்லாமல் ஆழ்வார் பிற திவ்ய தேசங்களையும்
‘திரு’ முன்னோட்டோடு சொல்வதே வழக்கம். அதரங்களைச் சொல்லும்போது
திருப்பவளச் செவ்வாய் எனச் சொல்வதைக் காண்கிறொம்.

சீரங்க நாயகர் ஊசல் சீரங்க நாயகியார் ஊசல்  இரண்டும் கருநாடக சீரங்கபட்னம் தொடர்புள்ளவையா ?


சீரங்கம் என்று ஏராளமான பாடல்களில் 17-ஆம் நூற்றாண்டிலே பார்க்கலாம். அதுபோன்றவை
பிள்ளைப்பெருமாளையங்கார் பாடல்கள். என் முன்னோர்களில் ஒருவர் பெயர்: சீரங்கசாமி.

இவையெல்லாம் மிகப் பிற்காலம். In the First Millennium (< 1000 CE), in south India in Dravidian language texts, Srirangam refers
to the largest arangam, Sriranga patam under the Jaina kings (Ganga dynasty). Tiruvarangam is, of course, Trichy where Aranganatha sleeps
on Adisesha snake.

நா. கணேசன்

Dev Raj

unread,
Dec 5, 2016, 12:31:35 PM12/5/16
to மின்தமிழ்
On Saturday, 3 December 2016 23:53:09 UTC+5:30, N. Ganesan wrote:
.............. சமணர்களின் தமிழ்க்கொடையை மடைமாற்ற சைவப் புலவர்கள்
செய்தது இறையனார் களவியல். அதில் உள்ள மூன்று சங்கங்கள், கடல்கோள், ... என்னும் கதைகள்.
பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டு, இப்பொழுது இணையம் குமரிக்கண்டம் (லெமூரியா)
என வளர்ச்சி பெற்றுவருகிறது. ஆனால், ஒன்றுக்கும் எந்த தொல்லியல், கல்வெட்டு, வரலாற்று சான்றுகள்
இல்லை. எனவே, கற்பனையில் உருவான கதைகள்.


"மகாபாரதம் தமிழ் படுத்தியும் , மதுராபுரி சங்கம் வைத்தும் "
பாண்டியர் தமிழ் புறந்த செய்தியைச்  சின்னமனூர்ச்  செப்பேடு கூறுவதும்
சமணரின் தமிழ்க்கொடையை மடைமாற்றுவதற்காகச் சைவப் புலவர்
செய்யும் முயற்சியா ?

சைவர்களின் முயற்சி ஒருபுறம் இருக்கட்டும் .
எண்ணற்ற சமணக் கல்வெட்டுகள் தமிழகத்தில்.
சமணர் தமிழ்ச் சங்கம் நடத்திய குறிப்புகளை
அவற்றிலிருந்து தொகுத்தளிக்க முடியுமா ?  

சமணத்தின் தாக்கம் மிகத் தொன்மையானது எனக்
கூறுவர்.

கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து,கிபி 3ம் நூற்றாண்டுவரை
ஏதாவது ஒரு சமண மன்னர் தமிழகத்தை ஆண்டதாக
வரலாறு அமைந்துள்ளதா ?


தேவ்
 

Dev Raj

unread,
Dec 5, 2016, 1:04:25 PM12/5/16
to மின்தமிழ்
*பாண்டியர் தமிழ் புரந்த செய்தியை*

தேவ்

mukunthan

unread,
Dec 6, 2016, 3:59:05 AM12/6/16
to மின்தமிழ்
வணக்கம்...

ஏட்டுச்சுவடிகளில் எவ்வாறு இருந்ததெனத் தெரியவில்லை.
இறையனார் அகப்பொருள் உரை , சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரை என்பவற்றில் சங்கம் என்ற சொல் காணப்படுகின்றது.



இறையனார் அகப்பொருள் உரை (கி.பி. 7 -8 -ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது)


தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம்
இரீஇயினார் பாண்டியர்.

அவருள் தலைச்சங்கம் இருந்தார்

அகத்தியனாரும்,

திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும்,

குன்றெறிந்த முருகவேளும்,
முரிஞ்சியூர் முடிநாகராயரும்,

நிதியின் கிழவனும்

என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர்

நாலாயிரத்து நானூற்றுநாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார்

காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப.

அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப.





இனி, இடைச்சங்கமிருந்தார்

அகத்தியனாரும்
தொல்காப்பியனாரும்,

இருந்தையூர்க் கருங்கோழி மோசியும்,
வெள்ளூர்க்காப்பியனும்,

சிறுபாண்டரங்கனும்,

திரையன் மாறனும்,
துவரைக் கோமானும்,

கீரந்தையும்

என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன

கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும்


என இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும்,
தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும்
என இவை.

அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப.
அவரைச் சங்கம் இரீஇயினார்

வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்
கவியரங்கேறினார் ஐவர் என்ப.

அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது
கபாடபுரத்து என்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக்
கடல்கொண்டது.



இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும்,
சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங் குன்றூர் கிழாரும்,
இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை
மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என
இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று
நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன
நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும்,
புற நானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும்,
எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும்,
என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும்
என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணூற்று
ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார்
கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்
பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினார்
மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை

என்ப.


----------------------
சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரை (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது)

நெடியோன் குன்றமும் தொடியோள் நதியு மென்னாது பௌவ மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர் ; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின் "வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும், பிறவாற்றானும், பெறுதும்.





On Saturday, November 26, 2016 at 10:17:39 PM UTC+5:30, Dev Raj wrote:
’சங்க இலக்கியம்’ 

இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?

ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?

எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?

இது தூய தமிழ்ச் சொல்லா ?



தேவ்

Dev Raj

unread,
Dec 6, 2016, 5:12:31 AM12/6/16
to மின்தமிழ்
திரு முகுந்தன் அவர்களின் விளக்கத்துக்கு நன்றி.

சங்கம் அமைத்ததில், சங்க இலக்கியங்களை இயற்றியதில், சங்க இலக்கியங்களைத்
தொகுத்ததில் சமணரின் பங்கு யாது ? நூல்களில். கல்வெட்டுக்களில் ஆதாரம் உள்ளதா
என்பதையும் அருள்கூர்ந்து தெரிவிக்க வேண்டும்


தேவ்

Mukunthan Pathmanesan

unread,
Dec 6, 2016, 2:49:31 PM12/6/16
to mint...@googlegroups.com
அன்பின் தேவ் ஐயா,

எனக்கு இதுபற்றி அதிகம் தெரியாது..

சில இங்கே .


மணிமேகலை -துயில் எழுப்பிய காதை
http://tamilvu.org/slet/l3200/l3200son.jsp?subid=3649

 காவ லாளர் கண்துயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதுஎழுந்து ஆர்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப்
பணைநிலைப் புரவி பலஎழுந்து ஆலப்
பணைநிலைப் புள்ளும் பலஎழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்பக்
கடவுள் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ
ஊர்துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்,
ஏஉறு மஞ்ஞையின் இனைந்ததுஅடி வருந்த
மாநகர் வீதி மருங்கில் போகிப்
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழுஇன்று உரைத்தலும்



இங்கே புலம்புரிச் சங்கம் என்பது - புலவர் அவையா அல்லது பௌத்தப் பள்ளியில் விடியலில் பாடும் ஒலியா எனத் தெரியவில்லை.
------------
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருப்புத்தூர் - திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகம்
http://shaivam.org/thirumurai/sixth-thirumurai/758/thirunavukkarasar-thevaram-thirupputhur-thiruthandagam-purinthamaar-thozhutheththum

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.



நல்வழி
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா


 மூன்றாம் திருமுறை - திருத்தேவூர்
http://thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=30740&limitPerPage=1&padhi=074&sortBy=&sortOrder=DESC&startLimit=11&thiru=3
துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே




இதையும் பாருங்கள். ஆனால் எனக்கு இதுபற்றித் தெரியாது
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/jain-caves-of-madurai/article2234625.ece
The Dravida Sanga was said to have been established by a monk called Vajrananthi in Madurai during the reign of the early Pandyas. A Kannada inscription at Samanarmalai refers to influx of Jain monks to this place from Sravanabelagola during this period.

 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ggXW-yx29C8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Dec 6, 2016, 5:09:51 PM12/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com


On Monday, November 28, 2016 at 4:24:53 AM UTC-8, Suba.T. wrote:

​சங்கம் என்ற சொல்.. சங்க இலக்கியம் என்ற சொல் எந்த சொல்லினின்று உருபெற்றது என அறியும் முயற்சி செய்ய வேண்டும். உடனே நாம் கழக இலக்கியம் என்று மாற்றி வழக்கில் கொண்டு வருவது  ​தேவையற்றது என்பதே என் கருத்து.


சரியே...   

சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய  உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.

சங்கம் என்ற சொல்லிற்கு  ஒரு எண்ணல் அளவை என்ற பொருளும் உள்ளது.

இந்த இழையின் கலந்துரையாடலுக்குப் பிறகு மேலும் தேடியதில் பரிபாடல் ஒன்றில் உள்ள "சங்கம்" என்ற சொல்லும் அதற்குரிய விளக்கமும் தெரிய வந்தது.

------


பார்க்க: மர இனப் பெயர்வைப்புக் கலை (பக்கம்  86-87), சுந்தர சண்முகனார்


இக்காலத்தில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் (இலட்சம்), கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் தமிழில் வழக்காற்றில் உள்ளன. கோடி என்பதனினும் சங்கம் என்பது பெரியது எனச் சிறு பிள்ளைகளும் கூறுங் துண்டு. சங்காதி சங்கம் என்னும் வழக்காற்றைச் சிறு பருவத்திலே கூறியதும் உண்டு-கேட்டதும் உண்டு. ஆனால்; தமிழ் நூல்களில், பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் பெயர்கள் உள்ளன என்பதைச் சிறார் அறியார். வெள்ளமோ வெள்ளம் என்னும் எண்ணளவை வழக்காறு பெரியவர்களிடையே உண்டு. 

இனிப் பரிபாடவில் உள்ள பெரிய எண்ணளவைப் பெயர்களைக் காண்பாம்:- 


" நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் 

மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய  

செய்குறி பீட்டங் கழிப்பிய வழிமுறை...” (2.13,14:15) 


பரிமேலழகர் உரை: "என்றிவ் ஊழிகளானே நெய்தலும், குவளையும், ஆம்பலும்,  சங்கமும், கமலமும், வெள்ளமும் என எண் குறித்திட்ட பெயர்களது அளவிற்றாகிய காலவீட்டம் கழிந்தபின்...."


நெய்தல், குவளை முதலியன பெரிய எண் அளவைகள் என்பது பரிபாடல் பகுதியால் அறிய வருகிறது. இவற்றுள் சில - பல பெயர்கள், வேறு சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலுங்கூட இடம் பெற்றுள்ளன.


தொல்காப்பியரும் இவற்றைச் சுட்டிச் காட்டியுள் ளார், 

" ஐ அம் பல் என வரூஉம் இறுதி 

அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்" (394) 


என்பது தொல்காப்பிய நூற்பா.  ஐ, அம். பல் என முடியும்  எண்ணுப் பெயர்களைப் பற்றியது இந்நூற்பா. தாமரை (ஐ), வெள்ளம் (அம்). ஆம்பல் (பல்) என்னும் எண்ணுப் பெயர்களை எடுத்துக் காட்டுகளாக, இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரையில் தந்துள்ளனர். 'ஐ' என முடியும் குவளை என்னும் - எண்ணுப் பெயரையும் தாமரையோடு  சேர்த்துக் கொள்ளலாம். பரிபாடலை அறிந்த உரையாசிரியர்கள்  குவளையை விட்டது ஏனோ?


முதலில் நான் இந்தப் பாடலில் பலமலர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றுதான் மேலோட்டமாகப் பார்த்து எண்ணினேன்.  

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்  என்ற  மலர்கள் வரிசையில் ...

சங்கம் = சங்குப்பூ எனக் குறிக்கப்படுகிறது என்று (தவறாகப்) புரிந்து கொண்டேன். 

                   சங்குப்பூ 



பிறகு உரை தந்த விளக்கம் படி சங்கம் என்றால்  எண்ணுப் பெயர்களில் ஒன்று என்பது தெரிய வந்தது.


இதே கோணத்தில் சிந்தித்தேன் என்றால் ...

சங்கம் என்றக் குறிப்பினை பிறர் எவ்வாறு புரிந்து கொண்டனர் என்ற ஐயமும்  தோன்றுகிறது. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் என்ற பழமைக் காலத்தைக்  குறிக்கிறதா, அல்லது பற்பல நூல்கள் என்று  எண்ணைக் குறிக்கிறதா?

..... தேமொழி 

தேமொழி

unread,
Dec 6, 2016, 5:36:12 PM12/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
ஒளவையார்: நல்வழி
சங்கத் தமிழ்மூன்றும் தா
சங்கத் தமிழ் = ??? 

பன்னிரு திருமுறை:
சங்கமலி செந்தமிழ்கள் பத்து - அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய. 

சிலப்பதிகாரத்தின் சங்கம் = நீர் வாழ் உயிரி சங்கையே குறிக்கிறது. 
சிலப்பதிகாரம்:
(தேடல் உதவி:  http://tamilconcordance.in/)

சங்கம் (2)
முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப - புகார் 4/78
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம்
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய - புகார் 7/41,42

சங்கமும் (2)
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
   தகை பெறு தாமரை கையின் ஏந்தி - மது 11/47,48
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி - மது 12/107



மணிமேகலை: 
சங்கம் (3)
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப - மணி 7/113 
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க - மணி 7/114
புத்த தன்ம சங்கம் என்னும் - மணி 30/3


முதலிரண்டும் இசைக்கருவி.

மூன்றாவது...
புத்த தன்ம சங்கம் என்னும் - மணி 30/3
பொருள்:
பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.
(பௌத்தமும் தமிழும், மயிலை, சீனி. வேங்கடசாமி, பக்கம் எண் :3)

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி ... திருநாவுக்கரசு கூறும் சங்கம் எது?
சங்கத் தமிழ்மூன்றும் தா ...  ஒளவை கூறும் இந்த சங்கம்  எதனைக் குறிக்கிறது?

..... தேமொழி

தேமொழி

unread,
Dec 6, 2016, 5:43:32 PM12/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் =  அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய). 
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி 

இந்த இரண்டும்  .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டு 
பக்தி இலக்கியக் காலத்தில்,  சைவ சமயத்தினராலும்   "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை  புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.



..... தேமொழி
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 6, 2016, 7:34:35 PM12/6/16
to mintamil

வணக்கம்.

திருப்புத்தூர் பதிகத்தை நினைவு கூர்ந்தமைக்கு எனது நன்றி ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ggXW-yx29C8/unsubscribe.

>> To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.


>>
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Dec 7, 2016, 1:55:26 PM12/7/16
to மின்தமிழ்
On Wednesday, 7 December 2016 04:13:32 UTC+5:30, தேமொழி wrote:
சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் =  அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய). 
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி 

இந்த இரண்டும்  .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டு 
பக்தி இலக்கியக் காலத்தில்,  சைவ சமயத்தினராலும்   "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை  புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.


ஆகத் தேமொழி அவர்களின் கருத்துப்படி ’சங்கம்’ என்பதே பவுத்த வழிவந்த சமயம் சார்ந்த சொல்; மொழிக்கும் சங்கத்துக்கும் யாதொரு
தொடர்புமில்லை எனச் சிரமில்லாமல் முடிவு செய்துவிடலாம்; ஏனெனில் திவ்வியப் பிரபந்தத்திலும் ‘சங்கம்’ பயன்பாடு
உள்ளது. தொல்லை விட்டது :))


தேவ்

Dev Raj

unread,
Dec 7, 2016, 2:37:49 PM12/7/16
to மின்தமிழ்
On Wednesday, 7 December 2016 01:19:31 UTC+5:30, mukunthan wrote:
The Dravida Sanga was said to have been established by a monk called Vajrananthi in Madurai during the reign of the early Pandyas. A Kannada inscription at Samanarmalai refers to influx of Jain monks to this place from Sravanabelagola during this period.


சங்கம் என்றால் உடனே சமணரான வஜ்ரநந்தியைச் சொல்வது வழக்கம்.
வஜ்ரநந்தி ஆசார்ய பூஜ்யபாதரின் சீடர். சமணநூல் ’தர்சநஸாரம்’, வஜ்ரநந்தி கிபி 470ல் மதுரையில் 
த்ராவிட ஸங்கத்தை நிறுவியதாகச் சொல்கிறது. இது சமண சமய குரவரின் சமயப் பங்களிப்பை விவரிக்கும்
நூல். மொழி ஆய்வுகளை இந்நூல் சொல்வதில்லை.

இந்நூல் தரும் குறிப்புகளின்படி வஜ்ரநந்தியின் இந்த ஸங்கம் சமயம் சார்ந்ததேயன்றி, தமிழ்மொழி சார்ந்ததன்று. 

ஆசார்ய பத்ரபாஹுவின் ஸங்கம் பற்றிய குறிப்புகளும் சமண நூல்களில் உண்டு. 
ஸங்கம் பவுத்தம் சார்ந்த சொல் என்பதற்கும் ஆதாரம் இல்லை.


கிபி 470ல் பாண்டியர் ஆட்சியா ? களப்பிரர் ஆட்சியா ?
இது மற்றுமொரு வினா.


தேவ் 

Dev Raj

unread,
Dec 8, 2016, 8:09:28 AM12/8/16
to மின்தமிழ்
On Wednesday, 7 December 2016 01:19:31 UTC+5:30, mukunthan wrote:
The Dravida Sanga was said to have been established by a monk called Vajrananthi in Madurai during the reign of the early Pandyas. A Kannada inscription at Samanarmalai refers to influx of Jain monks to this place from Sravanabelagola during this period.
  

                                                 'வஜ்ரநந்தி’

தர்சநஸாரம் சொல்லும் சமண குரவர் வரிசை -
பத்ரபாஹு -> அர்ஹத்பலி-> மாகநந்தி -> பூஜ்யபாத தேவநந்தி -> வஜ்ரநந்தி

இவர்கள் தென்னகத்தில் சமயப்பணி செய்ததாகத் தெரிகிறது;
பத்ரபாஹு கருநாடகத்தில் ஜைந ஸங்கம் நிறுவியவர்;
வஜ்ரநந்தி தமிழகத்தில்.

காண்க - பட்டாரக ஸம்ப்ரதாயம்


தேவ் 

Dev Raj

unread,
Dec 8, 2016, 9:40:28 AM12/8/16
to மின்தமிழ்
On Sunday, 4 December 2016 19:57:52 UTC+5:30, Dev Raj wrote:
தனி மடல் தகவல் ஒன்று .

திராவிடப் பிரகாசிகை -
”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினு 
 நன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,
’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.

இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது. 



சந்தக்கவி திரு ராமசாமி அவர்கள் தெரிவிப்பது -

சங்கம் தமிழ்ச்சொல்லே அன்று என்பர் சிலர். உவேசா ’சங்கம் என்பதற்குப் பொருள் புலவர்கூட்டம் என்பதாம்’ என்பர். 
இறையனார் அகப்பொருள் உரையாலும்,சிலம்பு உரையாலும் மூன்று சங்கங்கள் பற்றி அறிகிறோம். 

கா சு பிள்ளை 1930ல் தமிழிலக்கிய வரலாறு எழுதினார். அதில் சங்க இலக்கியம் கூறப்பட்டது. இவருக்கும் முன்னால் 1929ல் 
தமிழ் இலக்கியம் என்ற ஆங்கில நூலை எம்.எஸ். பூரணலிங்கனார் என்பவர் வெளியிட்டார். பிற்காலம் அனைவரும் குறிப்பிடுவர். 

இவர்களுக்கு எல்லாம் முன்னால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,புலவர்புராணத்தில் 
அகத்தியரைக்குறிப்பிடுவார் -

பேர கத்தியம் சிற்ற கத்திய மெனப்பி றங்கும் 
சீர நூலிரண் டகத்திய மாமுனி செப்பல் 
ஆர மூவகைச் சங்கம்ஈண் டவிர்ந்தன 
அவைமுற் றீர நீபமா லிகைக்குகன் 
ஆடலிட் டனவே. 
என்று சங்கம் பற்றிக் குறிப்பிட்டார். 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) 
சபாபதி நாவலர் (1845/1846 - 1903) 

1859ல் ஈழத்தில் சைமன் காசி என்பவர் தமிழ்ப்புலவர் வரலாறெழுதினார்.

Dev Raj

unread,
Dec 11, 2016, 12:16:17 AM12/11/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
On Wednesday, 7 December 2016 03:39:51 UTC+5:30, தேமொழி wrote:
சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய  உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.

On Wednesday, 7 December 2016 04:13:32 UTC+5:30, தேமொழி wrote:
சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் =  அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய). 
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி.....
இந்த இரண்டும்  .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டு 
பக்தி இலக்கியக் காலத்தில்,  சைவ சமயத்தினராலும்   "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை  புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.
 

சங்கம் என ஓர் அமைப்பு இருந்ததா ? - வினா ஒருபுறம் இருந்தாலும் தமிழுக்கெனப்
புலவர் நிரம்பிய குழு இருந்துவந்துள்ளதற்கு அகச்சான்றுகள் உள்ளன. இந்த அகச்சான்றுகளின்
அடிப்படையில்தான் உரையாசிரியர் எழுதினர்.

ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர்....... 
                      - புறநானூறு 72

தமிழ்கெழுகூடல் தண்கோல் வேந்தே"
                    -புறம். 58


நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து...."
                  - தொல். பாயிரம்

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்...."
                 - மதுரைக். 761-763


தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை...."
               - சிறுபாண். 66-67

அவை [சபை], புணர் கூட்டு, தமிழ்நிலை பெறுதல், புலவர் - போன்றவை தமிழுக்கான ஓர் அமைப்பு
விளங்கிவந்த உண்மையை உணர்த்தும் குறிப்புகள். 

இதன் ஆதாரத்தில் பாடப்பெற்றதுதான் நாவுக்கரசர் தேவாரம் -

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன் காண்"
             - திருநாவுக்கரசர் தேவாரம், 6ஆம் திருமுறை, 76.3

"சங்க முத்தமிழ்"
       - திருமங்கை. பெரியதிரு. 3

"ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்
பாடுதமிழ் வளர்த்த கூடல்...."
                - ஆசிரிய மாலை, புறத்திரட்டு

"தலைச்சங்கப் புலவர் தம்முன்...."
                       - பெரிய புராணம்

"அத்திருத்தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்குமென் றாலுரை ஒக்குமோ
எத்தி றத்திலு மேழுல கும்புகழ்
முத்து முத்தமிழுந் தந்து முற் றலால்...."
                           - கம்ப ராமாயணம்

"மதுராபுரிச் சங்கம் வைத்தும்...."
               - சின்னமனூர்ச் செப்பேடு

புலவனாகத்தான் சங்கமேறியதையே தேவாரம் சொல்கிறது; அடியவனாக அல்ல.
பக்தி இலக்கியமும் மொழிக்கான அமைப்பாகவே காட்டியுள்ளது.
சரியான பொருளில்தான் தேவாரம் / பிரபந்தம் அமைந்துள்ளன. 

இச்சான்றுகளின் அடிப்படையில் உரையாசியர்கள் புலவர் குழாம் என எழுதினர். 
எதற்காக அவர்கள் கதைக்க வேண்டும் ?


தேவ்

தேமொழி

unread,
Dec 11, 2016, 12:46:01 AM12/11/16
to மின்தமிழ்
புலவர் குழு இருந்தது சரி.  அதைப் பற்றியக் கேள்வி இல்லையே.

அந்தப் புலவர் குழுவிற்குச் சங்கம் என்று எப்பொழுது பெயரிடப்பட்டது என்பதல்லவா நாம் அறியத் தேவை.

உங்கள் கேள்வி மீண்டும் கீழே:
On Saturday, November 26, 2016 at 8:47:39 AM UTC-8, Dev Raj wrote:
’சங்க இலக்கியம்’ 
இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?
ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?
எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?
இது தூய தமிழ்ச் சொல்லா ?


மாங்குடி மருதன் தலைவனாக... என்று கூறியவர், அவர் தலைவராக இருந்த அமைப்பின் பெயரைக் கூறினாரா.

புலவர் குழுவிற்கு  சங்கம் என எப்பொழுது பெயரிடப்பட்டது என்றும், 
அக்குழுமம் தொகுத்த பழம்பாடல்களான ”பாட்டும், தொகையும்” எவ்வாறு சங்க நூல்கள் என அறியப்பட்டன என்பதுதானே கேள்வி.

..... தேமொழி

தேமொழி

unread,
Dec 11, 2016, 1:12:07 AM12/11/16
to மின்தமிழ்


On Saturday, December 10, 2016 at 9:16:17 PM UTC-8, Dev Raj wrote:


On Wednesday, 7 December 2016 04:13:32 UTC+5:30, தேமொழி wrote:
சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் =  அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய). 
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி.....
இந்த இரண்டும்  .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டு 
பக்தி இலக்கியக் காலத்தில்,  சைவ சமயத்தினராலும்   "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை  புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.
 
புலவனாகத்தான் சங்கமேறியதையே தேவாரம் சொல்கிறது; அடியவனாக அல்ல.

 "புலவனாகத்தான் சங்கமேறியதையே "

மீண்டும் விளக்கமாக .... 
தானொரு புலவனாக அடியார் குழாமில் இணைந்ததாக அவர் கூறியிருக்கலாம் என்பது எனது கோணம்.  
சங்கம்  =  அடியார் கூட்டம் 

..... தேமொழி 

தேமொழி

unread,
Dec 11, 2016, 1:21:50 AM12/11/16
to மின்தமிழ்


On Saturday, December 10, 2016 at 9:46:01 PM UTC-8, தேமொழி wrote:
புலவர் குழு இருந்தது சரி.  அதைப் பற்றியக் கேள்வி இல்லையே.

அந்தப் புலவர் குழுவிற்குச் சங்கம் என்று எப்பொழுது பெயரிடப்பட்டது என்பதல்லவா நாம் அறியத் தேவை.

மாங்குடி மருதன் தலைவனாக... என்று கூறியவர், அவர் தலைவராக இருந்த அமைப்பின் பெயரைக் கூறினாரா.

புலவர் குழுவிற்கு  சங்கம் என எப்பொழுது பெயரிடப்பட்டது என்றும், 
அக்குழுமம் தொகுத்த பழம்பாடல்களான ”பாட்டும், தொகையும்” எவ்வாறு சங்க நூல்கள் என அறியப்பட்டன என்பதுதானே கேள்வி.

மாங்குடி மருதனார்: இவர் மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மாங்குடிகிழாரென்னும் நல்லிசைப் புலவரொருவர் இயற்றிய செய்யுட்கள் கருத்திலும் சொல்லமைதியிலும் இவருடையனவற்றை ஒத்து இருப்பதால் அவரும் இவரும் ஒருவரெனக் கருதப்படுகிறார். கிழாரென்னும் மரபுப் பெயரால் இவர் வேளாண்மரபினரென்பது பெறப்படும். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது அவைக்களத்து நல்லிசைப் புலவர்களின் தலைவராக வீற்றிருந்தவர். அவனுக்குப் பல்வேறு நிலையாமையை அறிவுறுத்தி இவர் பாடிய மதுரைக் காஞ்சியின் பெருஞ்சிறப்பை யறிந்த யாவரும் இவரைக் காஞ்சிப் புலவன், மதுரைக் காஞ்சிப் புலவன் என்னும் பெயர்களால் வழங்கி வந்தனரென்று தெரிகிறது. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இவர்பாலுள்ள நன்மதிப்பு, "ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் றலைவ னாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற், புலவர் பாடாது வரைகவென் னிலவரை" (புறநா. 72) என்று அவன் கூறிய வஞ்சினத்தால் விளங்கும்.

பத்துப்பாட்டு மூலமும் - நச்சினார்க்கினியருரையும்
டாக்டர் வே. சாமிநாதையர்
தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர்,  1986

..... தேமொழி 

Dev Raj

unread,
Dec 11, 2016, 6:31:42 AM12/11/16
to மின்தமிழ்
On Sunday, 11 December 2016 11:16:01 UTC+5:30, தேமொழி wrote:
புலவர் குழு இருந்தது சரி.  அதைப் பற்றியக் கேள்வி இல்லையே.

அந்தப் புலவர் குழுவிற்குச் சங்கம் என்று எப்பொழுது பெயரிடப்பட்டது என்பதல்லவா நாம் அறியத் தேவை.

உங்கள் கேள்வி மீண்டும் கீழே:
On Saturday, November 26, 2016 at 8:47:39 AM UTC-8, Dev Raj wrote:
’சங்க இலக்கியம்’ 
இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?
ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?
எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?
இது தூய தமிழ்ச் சொல்லா ?


மாங்குடி மருதன் தலைவனாக... என்று கூறியவர், அவர் தலைவராக இருந்த அமைப்பின் பெயரைக் கூறினாரா.
புலவர் குழுவிற்கு  சங்கம் என எப்பொழுது பெயரிடப்பட்டது என்றும், 
அக்குழுமம் தொகுத்த பழம்பாடல்களான ”பாட்டும், தொகையும்” எவ்வாறு சங்க நூல்கள் என அறியப்பட்டன என்பதுதானே கேள்வி.


இதைக் கவனத்தில்கொண்டுதான் இழையைத் தொடர்கிறேன்; நான் எழுதியதைக் கவனிக்கவும் 

On Sunday, 11 December 2016 10:46:17 UTC+5:30, Dev Raj wrote:
சங்கம் என ஓர் அமைப்பு இருந்ததா ? - வினா ஒருபுறம் இருந்தாலும் தமிழுக்கெனப்
புலவர் நிரம்பிய குழு இருந்துவந்துள்ளதற்கு அகச்சான்றுகள் உள்ளன. இந்த அகச்சான்றுகளின்
அடிப்படையில்தான் உரையாசிரியர் எழுதினர்.


தேவ் 

 

Dev Raj

unread,
Dec 11, 2016, 6:42:00 AM12/11/16
to மின்தமிழ்
 "புலவனாகத்தான் சங்கமேறியதையே "

On Sunday, 11 December 2016 11:42:07 UTC+5:30, தேமொழி wrote:

மீண்டும் விளக்கமாக .... 
தானொரு புலவனாக அடியார் குழாமில் இணைந்ததாக அவர் கூறியிருக்கலாம் என்பது எனது கோணம்.  
சங்கம்  =  அடியார் கூட்டம் 


அப்பகுதியில் அப்பரடிகளார் சுட்டுவது புலவர்க்கான போட்டியையும், அதில் தருமி எனும்
புலவர்க்காக இறையனார் உதவியதையும். 

முழுப்பாடலும் பொருளும் :

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண் 
                                                        பொருப்புவலிச்சிலைக்கை யோன்காண் 
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண் 
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு 
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில் திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே
                                                                                                                                   [ ஆறாந்திருமுறை]

பொருள் -

மின்னலும் கொடியும் போன்ற இடையினை யுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும் , 
மலையாகிய வலிமை மிக்க வில்லை வளைத்த கையினனும் , 
நல்ல பாட்டுக்களை யாக்கவல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்ல பொற்கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி 
மணமிக்க கொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட , 
அருகே நின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக் காட்ட , 
இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க 
திருப்புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் 
நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .

அடியார்களுக்கான போட்டி இல்லை.
போட்டி புலவர்க்கானது; அதற்கான பரிசு நற்கனகக் கிழி;.
புலவர் கோலத்தில் இறைவன் தாமே போந்து அதைப்பெற்றது பாபுலரான கதை.

அடியாரெல்லாம் புலவராக [அ] புலவரெல்லாம் அடியாராக இருக்க வேண்டும்
எனும் கட்டாயம் இல்லை
 

தேவ்

Dev Raj

unread,
Dec 11, 2016, 9:32:00 AM12/11/16
to மின்தமிழ்
ஸங்கம்
saṃgha, 

संघ  

close contact or combination , any collection or assemblage , heap , multitude , quantity , crowd , host , number,  " a multitude of sages " Lit. BhP. ;  a host of enemies’, any number of people living together for a certain purpose , 

a society , association , company , community, a clerical community , congregation

the whole community or collective body or brotherhood of monks ( with Buddhists ; also applied to a monkish fraternity or sect among Jainas)  


சங்கம் - குழாத்தைச் சுட்டும் ஒரு சங்கதச் சொல்;
நாச்சியார், குழாம் -திரள் எனும் பொருளில் கையாண்டுள்ளார் -
நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல்'
நின் பள்ளிக் கட்டில் கீழே - உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல் - திரள்திரளாக இருப்பது போலே.


' திராவிடம்’ 9ம் நூற்0க்குப்பின் சமய இலக்கியம் வாயிலாகத் தமிழகம் புகுகிறது; 
அதுபோல் ‘சங்கம்’ 5 - 6ம் நூற்0க்குப்பின் சமயக் கலைச்சொல்லாகத் தமிழில்
 புகுந்திருக்கலாம். பவுத்த - சமண சமயங்கள் வாயிலாகத் தமிழிலும் இச்சொற் புழக்கம் 
ஏற்பட்டிருக்கும்.

சமயம் சார்ந்த இச்சொல்லை பக்தி இலக்கியம், மொழி சார்ந்த புலவர் குழாத்தைச் 
சொல்லப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.[ நாவுக்கரசரும், மங்கை மன்னரும்]
உரையாசிரியர்களும்  அதையே பின்பற்றியிருக்கலாம்.

சில அறிஞர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்கவே வாய்ப்பில்லை என்கின்றனர்.

கல்வெட்டறிஞர்கள் திரு இராமசந்திரன் அவர்களும், திரு டாக்டர் 
சங்கரநாராயணன் அவர்களும் சமணர் தமிழ்ச்சங்கம் அமைத்ததற்கான
கல்வெட்டுச் சான்றுகள் சிறிதும் இல்லையெனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்;
சமண நூல்களிலும் ஆதாரம் இல்லை


தேவ்

தேமொழி

unread,
Dec 11, 2016, 10:56:59 AM12/11/16
to மின்தமிழ்


On Sunday, December 11, 2016 at 6:32:00 AM UTC-8, Dev Raj wrote:
ஸங்கம்
saṃgha, 

संघ  

close contact or combination , any collection or assemblage , heap , multitude , quantity , crowd , host , number,  " a multitude of sages " Lit. BhP. ;  a host of enemies’, any number of people living together for a certain purpose , 

a society , association , company , community, a clerical community , congregation

the whole community or collective body or brotherhood of monks ( with Buddhists ; also applied to a monkish fraternity or sect among Jainas 



Dravida Sangha was established in 470 AD by a Jain monk named Vajranandi in the city of Madurai in present-day Tamil Nadu. It is considered to be the forerunner of the legendary Tamil Sangams of the Tamil lore. 
 

சங்கம் - குழாத்தைச் சுட்டும் ஒரு சங்கதச் சொல்;
நாச்சியார், குழாம் -திரள் எனும் பொருளில் கையாண்டுள்ளார் -
நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல்'
நின் பள்ளிக் கட்டில் கீழே - உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல் - திரள்திரளாக இருப்பது போலே.


' திராவிடம்’ 9ம் நூற்0க்குப்பின் சமய இலக்கியம் வாயிலாகத் தமிழகம் புகுகிறது; 
அதுபோல் ‘சங்கம்’ 5 - 6ம் நூற்0க்குப்பின் சமயக் கலைச்சொல்லாகத் தமிழில்
 புகுந்திருக்கலாம். பவுத்த - சமண சமயங்கள் வாயிலாகத் தமிழிலும் இச்சொற் புழக்கம் 
ஏற்பட்டிருக்கும்.

புகுத்தியவர் சமணத் தாக்கம் கொண்ட தருமசேனராகவும் இருக்கலாம்.

அதாவது அப்பரின் சமணத் தொடர்பினால்  'சங்கம்' என்ற வஜ்ரநந்தியின் ஐந்தாம் நூற்றாண்டு  திராவிட சங்க முயற்சியை தமிழ்ப் புலவர் குழுவாக குறிப்பிட்டிருக்கலாம்.

அப்பருக்கு முன்னர் யார் சங்கம் எனத் தமிழில் புலவர் குழு குறித்து எழுதியவர்?

யாரும் கிடைக்கவில்லை என்றால் கிடைத்த தகவல் வரை, தனது சமணத் தொடர்பு அடிப்படையில் திருநாவுக்கரசர் புலவற்குழுவைக் குறிக்க சங்கம் என்ற சொல்லை தமிழுக்கு கொண்டு வந்தார் எனக் கொள்ளலாம். 


 

சமயம் சார்ந்த இச்சொல்லை பக்தி இலக்கியம், மொழி சார்ந்த புலவர் குழாத்தைச் 
சொல்லப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.[ நாவுக்கரசரும், மங்கை மன்னரும்]
உரையாசிரியர்களும்  அதையே பின்பற்றியிருக்கலாம்.

கற்பனையின் எல்லையை  விரிவாக்கியவர்  இறையனாருரைகாரர் 

தேமொழி

unread,
Dec 11, 2016, 11:01:03 AM12/11/16
to மின்தமிழ்


On Sunday, December 11, 2016 at 3:42:00 AM UTC-8, Dev Raj wrote:
 "புலவனாகத்தான் சங்கமேறியதையே "

On Sunday, 11 December 2016 11:42:07 UTC+5:30, தேமொழி wrote:

மீண்டும் விளக்கமாக .... 
தானொரு புலவனாக அடியார் குழாமில் இணைந்ததாக அவர் கூறியிருக்கலாம் என்பது எனது கோணம்.  
சங்கம்  =  அடியார் கூட்டம் 


அப்பகுதியில் அப்பரடிகளார் சுட்டுவது புலவர்க்கான போட்டியையும், அதில் தருமி எனும்
புலவர்க்காக இறையனார் உதவியதையும். 


 
"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி" என்ற பாடல்  வரிக்கு 

புலவனாகத்தான் சங்கமேறியதையே தேவாரம் சொல்கிறது; அடியவனாக அல்ல.

என்று பொருள் கொண்டது நீங்கள்தானே திரு. தேவ் 

பார்க்க : https://groups.google.com/d/msg/mintamil/ggXW-yx29C8/tpd0627DDQAJ  இறுதிப்பகுதி 

அப்பருக்கு முன்னர் தருமி  கதையைக் கூறியவர் யார்?

சமணத்தில் ஏதேனும் இது தொடர்பான கதையுண்டா என அறிந்தோர் கூறவும்.

..... தேமொழி 

 

தேமொழி

unread,
Dec 11, 2016, 11:06:57 AM12/11/16
to மின்தமிழ்


On Sunday, December 11, 2016 at 3:42:00 AM UTC-8, Dev Raj wrote:

இந்த பாப்புலரான கதை குறித்து கல்லாட நூலாராய்ச்சி ஆய்வாளர் கூறுவது.....



கல்லாட நூலாராய்ச்சி
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்,
(முற்றொடர்ச்சி துணர் 12, மலர் 9, பக்கம் 323)

இறையனாருரை, சங்ககாலத்திற்குப்பின் 8-ம் நூண்றுண்டில் இயற்றப்பட்டதாகும்; கிளை முறையாக 35 பெயர்களால் ஓதப்பட்டு வந்ததாக உரைகாரர் கூறியிருப்பின் இவ்வுரை நக்கீரர் உரையாகுமெனக் கொள்ளத்தகும். 13 பெயர்களே உரைகாரர் கூறியுள்ளார். இக்கூற்றை ஆராய்ச்சியாளர் கொள்ளார். எனவே நக்கீரர் உரையென்பது கற்பனையாகும். இக்கற்பனையை உரைகாரர் கூற்றெனக்கொள்க. இந்நூலாசிரியர் இறையனார் என்பவர். இப்புலவர் "கொங்குதேர் வாழ்க்கை" என்னும் குறுக்கொகைச் செய்யுளை இயற்றியவர். இப்புலவர் ஊனுடம்பொடு பிறந்தவரேயன்றி பிறவாயாக்கைப்பெரியோனல்லர், இப்புலவர் பெயர் ஈசன் பெயரொடு ஒரொற்றுமைப் படுவதைக் கருதி இந்நூல் ஈசனே இயற்றியதென்றும் களவியலுரைகாரர் கற்பித்துவிட்டார். இதனைப் பின்னோரும் பின்பற்றி வேறு கதைகளும் புணர்த்தார்.

இறையனாருரைகாரர் கருத்தையறிந்த மற்றோர் புலவர் ஈசனார் பாடிக் கொடுத்த செய்யுளில் நக்கீரர் குற்றங் காட்டினாரென்று ஒர் கதையைப் புணர்த்து நக்கீரர் பெயரால் சில நூலகளைப்பாடி இறையனாருரைகாரர் கூறிய கதையை வளம்பெறச் செய்தார். இக்கதைக்கரு "நன்பாட்டுப் புலானாகிச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்' என்று நாவுக்கரையர் பாடியுள்ள பழைய வரலாறொன்றை ஆதரவாகக்கொண்டு, நக்கீரர் குற்றங்காட்ட, ஈசனார் நக்கீரன்மாட்டு சினமுடையவராய் நெற்றிக் கண்ணால் நோக்க, நக்கீரன் விழிக்கனலின் வெப்புக் காற்றானாகி, ஒர் வாவி நீருட்புக் கிருந்தவாறே ஈசனைப்பாடி அருள்பெற்றுய்ந்தான் என்று இப்புலவர் கற்பித்தார்.  இக்கதை புணர்த்தவர் ஈசனார் பாடிய செய்யுளைக் கூறாது விடுத்தது குறிக்கத்தக்கது.

இக்கதையைப் புணர்த்த புலவர் தாம் பாடிய பாட்டுக்களுக்கு நக்கீரர் பெயரைச் சூட்டியது போலவே வேறு சில செய்யுட்கள் பாடி அவற்றிற்கு மற்றை சங்கப்புலவரான கபிலர், பரணர், கல்லாடர் முகலியோர் பெயரையும் சூட்டினார்போலும். இப்பாட்டுக்களனைத்தும் பதினொன்றாம் கிருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் நடையானும் இலக்கணக் குறிப்புக்களானும் தேவாரப் பதிகங்களுக்கும் முந்தியவை யாகவெனச் கூறலாகும். இறையனாருரையை இப்புலவர் பின்பற்றினாரெனவுங் கூறலாமாகலான் இப்புலவர் 8-ம் நூற்றண்டிற்கும் முற்பட்டவராகார். "நுணலுந் தன் வாயாற்கெடும்" என்பதற்கு இப்புலவர் பாடிய திருவெழுக் கூற்றிருக்கையில் "நால்வகை, இலக்கணம் நலந்தக மொழிந்தனை” என்னும் கூற்றே  இலக்காகும் என்பதனைக் காட்டுவாம்.

சொல்காப்பியருக்கு முன்னர் இலக்கணம் எழுத்தும்பொருளும் என்னும் இருவகைப்பாகுபாடே இருத்ததென்பர். தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்றும் மூவகைப் பகுபாட்டைக் கொண்டனர். பல்காயனார்,, பல்காப்பியனார் முதலியோர் செய்யுளியலைத் தனியே பிரித்து யாப்பு என்னும் ஒர் அதிகாரம் ஆக்கினாரெனக் கூறலாம். இவர்களில் பதின்மருக்கு மேல் யாப்பு நூல்கள் யாத்தனர் என்பது யாப்பருங்கல விருத்தியால் உணரலாகும். இறையனாருரைகாரர் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நால்வகைப் பாகுபாட்டைக் கூறியுள்ளார். நால்வகைப் பாகுபாடு இறையனார் உரைகாரர் காலத்திற்கு முற்பட்டதாகும். திருவெழுகூற்றிருக்கையின் ஆசிரியர் இறையனாருரைகாரருக்கும் பிற்பட்டவரென்று முன்னர் கூறினாமாகலின் இறையனாருரை காலத்திற்குப் பின்னும் நால்வகைப் பாடே வழங்கியதாகும். பிங்கலங்தையாசிரியர் இலக்கணக்கின் ஐவகைப் பாகுபாட்டை, கவியரங்கேற்றிய பாட்டுடைத் தலவன் செய்யும் வழிபாடு கூறுமிடத்து
“உருவக முவமை வழிநிலை மடக்கே
…. …. …. …. ….
…. …. …. …. ….
ஐய முயர்வே விரவியல் வாழ்த்தென
வெய்து மிருபதெட் டலங்காரத் தாலு
மெழுத்துச் சொற்பொரு ளியாப்பு நெறியாலும்
நவையறச் செய்யுள் செய்யும் பாவலன்”
என்பதில் அலங்காரம், எழுத்து, சொல், பொருள் யாப்பு எனக் குறித்துள்ளது காண்க. இந்நிகண்டுகாரர் யாப்பருங்கலகாரருக்குப்  பிற்பட்டவராகுமெனலாம். இக்கருத்து வலியுறுவதைக் காட்டுவாம். யாப்பருங்கலச் சூத்திரமாகிய சித்திர கவிச்சூத்திரம் பிங்கலந்தையில் காணப்படும் பிங்கலஙதையார் தொல்காப்பியச் சூத்திரங்களையும்,

"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் 
கூனுங் குறளு மூமுஞ் செவிடு
மாரு மருளு முளப்பட வாழ்நாக்
கெண்பே ரெச்சம்” என்னும் புறநானூற்றுச் செய்யுளையும் ஆண்டுள்ளாராதலின் நிகண்டுகாரர் யாப்பருங்கலச் சூக்திரத்தையும் ஆண்டாரெனலாம். யாப்பருங்கலம் பிங்கலயந்தையாருக்கு முற்பட்டதென்பது நன்குவிளங்கும். யாப்பருங்கலம் 40ம் நூற்றண்டின் முதற்பகுதியிலும் பிங்கலங்தை 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இயற்றப்பட்டதெனலாம். யாப்பருங்கலம் 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனத் தமிழ்ப்பொழில் 10ம்தொகுதியில் கூறியுள்ளாம். யாப்பருங்கலத்தில் சித்திரக் கவி சூத்திரத்திலும் "உருவக முதலாக வாழ்த்து ஈறாக" அணி வகையின் முறையைக் கூறியுள்ளாராதலின் அணியியல் நூல் யாப்பெருங்கலகாரருக்கு முற்பட்ட காலத்தில் யாக்கப்பட்டடிருந்ததாகல் வேண்டும். அணியியல் என்ற ஓர் நூலின் பெயரையும் அணிவகை இருபத்தெட்டின் பெயர்களையும் யாப்பருங்கல விருத்திகாரர் கூறியுள்ளதால் அணியியல் நூலிருந்ததென்பது தெளிவாம். இந்நூல் 9ம் நூற்றாண்டில் தோன்றியதெனக் கூறலாகும். இந்நூல் தோன்றியபின்னர் இலக்கணம் ஐந்து பாகுபாடுடையதாயிற்று. நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை பாடிய புலவர் அணியியலுக்கு முற்பட்டராவர். நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை பாடிய புலவர் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அணியியல் நூலார் பிற்பகுதியிலும் இருந்தவராவர். இப்புலவர் 5ம் நூற்றாண்டிலிருந்தவரென்று திரு.மறைமலையடிகள் கூறியிருப்பது சிறிதும் பொருந்தாதெனத் தெளிக.

நக்கீரர் என்னும் பெயர் பூண்ட புலவர் ஈசன் அருளிய செய்யுள் இன்னதெனச் சுட்டிக் கூறாது விடுத்ததை பின்னுள்ளோர் இறையனார் என்னும் புலவர் பாடியுள்ள
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி யெறிற் றரிவை கூந்தலின்
ஈறியவு முளவோநீ யறிவும் பூவே”
என்னும் செய்யுளைப் புணர்த்துக் கூறிய பின்னர் கதைஒருவாறு பூர்த்தியாயிற்று. இறையனாருரைகாரர் ஒரு பெருமையைக் காட்டத் தொடங்கிய கதை முடிவுறுவதற்கு ஒரு நூறாண்டுக்கும்மேல் சென்றது. புலவர்களும் இக்கதையை நிறுவ புனபெயர்களையும் பூண்டனர். இக்கதை முறிவுற்றது 10ம் நூற்றாண்டிலெயனக் கூறலாகும்; இக்கதையனைத்தும் திருவிளையாடல்களிலும் கல்லாடத்தும் காணப்படும். இந்நூல்கள் 11ம் நூற்றாண்டில் தோன்றினவென்பது  இங்குக் கூறிய வரலாற்றாலும் உறுதி பெறுகிறது காண்க. இவ்வரலாறுகள் பழைய வரலாறுகளாகா; புதியனவேயாகுமென்க.

உத்திரப்பெருவழுதியைக் குறித்த திருவிளையாடலும் புதிய வரலாற்றிலடங்குமென்பதைக் காட்டுவோம். இப்பாண்டியன் சங்கமேறிய புலவர்களில் ஒருவனாகக் கூறப்படினும் சங்கத் தொகைகளில் இப்பாண்டியன் பாடிய செய்யுள் காணப்படாது. இறையனாருரை சங்கம் இவன் காலத்தோடு முடிந்ததென்று கூறும். இப்பாண்டியன் காலத்துச் சங்கம் தழைத்தோங்கிய நிலையில் இருந்ததென்றுணரலாகும். நக்கீரரைச் சிறப்பிக்கவெழுந்த கதைபோல இப்பாண்டியனையும் சிறப்பிக்க சிலகதைகள் தோன்றின. இப்பாண்டியன் அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் அதற்கு ஈசன் முதற்கவி பாடிக்கொடுத்தாரென்றும், உக்கிரப்பெருவழுதியும் ஓர் கவி பாடினாரென்றும்  பிற்காலத்தாரொருவர் கற்பித்தார். இதன் பின்னர், உக்கிரப் பெருவழுதி தெய்வத்தன்மை வாய்ந்தவனென்றும் நெடுஞ்சடையோடு பிறந்தானென்றும், வளை, வேல், செண்டு பெற்று அரிய செயல்களைப் புரிந்தானென்றும் பலவித கற்பனைகள் எழுந்தன. இக்கதையனைத்தும் திருவிளையாடலில் காணலாம்.


மேலே உள்ள பகுதியில் "தருமி கதை" அப்பரின் வரிகளையொட்டி, சங்கம் பற்றிய கதையாக, எவ்வாறு படிப்படியாக  வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர் காட்டுகிறார்.

..... தேமொழி





Dev Raj

unread,
Dec 11, 2016, 11:19:02 AM12/11/16
to மின்தமிழ்
On Sunday, December 11, 2016 at 3:42:00 AM UTC-8, Dev Raj wrote:
 "புலவனாகத்தான் சங்கமேறியதையே "
 

On Sunday, 11 December 2016 21:31:03 UTC+5:30, தேமொழி wrote:
 
"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி" என்ற பாடல்  வரிக்கு 
புலவனாகத்தான் சங்கமேறியதையே தேவாரம் சொல்கிறது; அடியவனாக அல்ல.
என்று பொருள் கொண்டது நீங்கள்தானே திரு. தேவ் 

பார்க்க : https://groups.google.com/d/msg/mintamil/ggXW-yx29C8/tpd0627DDQAJ  இறுதிப்பகுதி 

புலவனாகத்தான் -  புலவனாகவே, என்று பொருள்.
நான்தான் செய்தேன் - நானே செய்தேன்
 

அப்பருக்கு முன்னர் தருமி  கதையைக் கூறியவர் யார்?

கல்லாட ஆய்வில் இதுகுறித்துச் சொல்லப்பட்டுள்ளதா ?


தேவ் 

Dev Raj

unread,
Dec 11, 2016, 11:25:02 AM12/11/16
to மின்தமிழ்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண் 
                                                                                                                           [ ஆறாந்திருமுறை]

கல்லாட ஆய்வு இருக்கட்டும்.

திருமுறை சொல்லும் ‘தருமி’ யார் ?

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறியது யார் ?

அச்சங்கம் எதற்கான சங்கம் ?

எதன் பொருட்டு நற்கனகக் கிழி ?


தேவ்


Dev Raj

unread,
Dec 11, 2016, 11:48:28 AM12/11/16
to மின்தமிழ்
On Sunday, 11 December 2016 21:26:59 UTC+5:30, தேமொழி wrote:
Dravida Sangha was established in 470 AD by a Jain monk named Vajranandi in the city of Madurai in present-day Tamil Nadu. It is considered to be the forerunner of the legendary Tamil Sangams of the Tamil lore. 
 

பலர் பலமுறை சொல்லிவருகிறனரே தவிர ஆதாரம் தருவதில்லை;
சமண நூல்கள், கல்வெட்டுகளில் ஆதாரம் இல்லை.
வஜ்ரநந்தியாருக்கு முற்பட்ட பத்ரபாஹு நிறுவிய சங்கம் எது ?
அது எந்த மொழிக்கான சங்கம் ?

 
புகுத்தியவர் சமணத் தாக்கம் கொண்ட தருமசேனராகவும் இருக்கலாம்.

இருக்கலாம்.
 

அதாவது அப்பரின் சமணத் தொடர்பினால்  'சங்கம்' என்ற வஜ்ரநந்தியின் ஐந்தாம் நூற்றாண்டு  திராவிட சங்க முயற்சியை தமிழ்ப் புலவர் குழுவாக குறிப்பிட்டிருக்கலாம்.
அப்பருக்கு முன்னர் யார் சங்கம் எனத் தமிழில் புலவர் குழு குறித்து எழுதியவர்?

தெரியவில்லை 

 
யாரும் கிடைக்கவில்லை என்றால் கிடைத்த தகவல் வரை, தனது சமணத் தொடர்பு அடிப்படையில் திருநாவுக்கரசர் புலவற்குழுவைக் குறிக்க சங்கம் என்ற சொல்லை தமிழுக்கு கொண்டு வந்தார் எனக் கொள்ளலாம். 


அதையேதான் நானும் சொன்னேன் -

On Sunday, 11 December 2016 20:02:00 UTC+5:30, Dev Raj wrote:
சமயம் சார்ந்த இச்சொல்லை பக்தி இலக்கியம், மொழி சார்ந்த புலவர் குழாத்தைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.[ நாவுக்கரசரும், மங்கை மன்னரும்] 
 
 

கற்பனையின் எல்லையை  விரிவாக்கியவர்  இறையனாருரைகாரர் 

மூலக்கற்பனை யாது ?  யார் செய்தருளியது ?


தேவ்

தேமொழி

unread,
Dec 11, 2016, 1:07:20 PM12/11/16
to மின்தமிழ்
இக்கதைக்கரு "நன்பாட்டுப் புலானாகிச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்' என்று நாவுக்கரையர் பாடியுள்ள பழைய வரலாறொன்றை ஆதரவாகக்கொண்டு, 


மேற்கூறிய அப்பரின் வரிகளை அடியொட்டி பின்னாளில் பெயர்களையும் பாடல்களையும் புகுத்தி   கதையை  விரிவாக்கி  முழுமை செய்துள்ளனர் என்று மட்டுமே திருவிளையாடல் புராண கதைகளை ஆராய்ந்த கல்லாட   ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.   
கட்டுரைக்கான சுட்டி கொடுத்திருந்தேன். 

அதனாலேயே நானும் மேலும் தெரிந்து கொள்ள விரும்பி அப்பருக்கு முன்னர் தருமி கதை சொன்னவர் யார், அக்கதைக்கு  சமணத்தில் ஏதேனும்  அடிப்படை கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினேன்.

..... தேமொழி
 


தேவ் 

தேமொழி

unread,
Dec 11, 2016, 1:11:04 PM12/11/16
to மின்தமிழ்
எனது கேள்விகளும் இவையே. 
ஏழாம் நூற்றாண்டு பாடலுக்கு  உரை எழுதியோர் பிற்காலத்தில் எழுந்த கதைகளை ஒட்டி எழுதியுள்ளனர் என்பது மட்டுமே தெரிகிறது.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2016, 10:44:25 PM12/11/16
to mintamil

சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய  உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.

சங்கம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கவே வாய்ப்புள்ளது.

அக்காலத்தில் புலவர்கள் அவை கூடும் முன்னர் சங்கொலி எழுப்பி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது துவக்கப்பட்டிருக்கலாம்.

ஏனை ஒலிகளைக் காட்டிலும் சங்கொலிக்கென்று சிறப்புண்டு என்பதால், சங்கொலியின் அடிப்படையில் கூடும் அவைக்கு சங்கம் என்று பெயர் வைத்திருக்கலாம்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Dec 11, 2016, 10:47:35 PM12/11/16
to மின்தமிழ்
"திருத்தமாக" இக்கருத்தைக் குறித்த கட்டுரை எழுதியுள்ளீர்களா சரவணன்? சுட்டி கொடுக்கவும். 

..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2016, 11:03:05 PM12/11/16
to mintamil

2016-12-12 9:17 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
"திருத்தமாக" இக்கருத்தைக் குறித்த கட்டுரை எழுதியுள்ளீர்களா சரவணன்? சுட்டி கொடுக்கவும். 

இல்லை அக்கா. :)))

அக்க்காலத்தில் ஒவ்வொரு குழாத்துக்கும் ஒவ்வொருவிதமான ஒலி எழுப்பப் பட்டிருக்கலாம். சான்றாக,

பறை கொட்டப்பட்டால் மக்கள் அனைவரையும் அழைப்பதாகவும்
முரசு கொட்டப்பட்டால் போர் துவங்க இருப்பதாகவும்
சங்கு ஒலிக்கப்பட்டால் புலவர்களும் சான்றோர்களும் அழைக்கப்படுவதாகவும்
ஊதுகொம்பு ஒலிக்கப்பட்டால் வீரர்கள் அழைக்கப்படுவதாகவும்

கொள்ளலாம். இது ஒரு ஊகமே. இதுபோல வேறுசில முறைகளையும் அவர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. இதுகுறித்து மேலதிக தரவுகள் தேவைப்படுகிறது. முடிந்தவுடன் எழுதுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 2:31:48 AM12/12/16
to mintamil
2016-12-12 9:14 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய  உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.

சங்கம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கவே வாய்ப்புள்ளது.

அக்காலத்தில் புலவர்கள் அவை கூடும் முன்னர் சங்கொலி எழுப்பி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது துவக்கப்பட்டிருக்கலாம்.

ஏனை ஒலிகளைக் காட்டிலும் சங்கொலிக்கென்று சிறப்புண்டு என்பதால், சங்கொலியின் அடிப்படையில் கூடும் அவைக்கு சங்கம் என்று பெயர் வைத்திருக்கலாம்.
நண்பர் சரவணன் குறிப்பிடுவதுபோல்தான் விக்கிப்பீடியாவும் குறிப்பிடுகிறது.

"சங்கம்" என்பது ஊதும் சங்கையும் குறிக்கும்; தலைச் "சங்க" நாண் மதியம் என்ற தொன்மையான ஊரே உண்டு

"விளக்கு" என்னும் சொல்லில் இருந்து, எப்படி "விளக்கம்" (தெளிவு) பிறந்ததோ, அப்படியே,
"சங்கு" என்பதனின் இருந்து, "சங்கம்" பிறந்தது; சங்கு ஒலித்து ஒழுங்குறும் அவை சங்கம் எனவும் கொள்ளலாம்.

அன்பன்
கி.காளைராசன்

Dev Raj

unread,
Dec 30, 2016, 5:04:44 AM12/30/16
to மின்தமிழ்
சங்கம் முழங்கும் திரு மதுரை நகர்வளரும் .......... எழில் பெறும் மீனாட்சி சங்கம்.....




தேவ்     
Reply all
Reply to author
Forward
0 new messages