தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன . அந்த வகையில் தமிழ்ப்பொழில் : Vol.12_1936-1937_10; பக்கம்: 347-354 வெளிவந்த கல்லாட நூலாராய்ச்சி கட்டுரையின் மூன்றாம் பாகம் இன்று வெளியிடப்படுகின்றது. இதனை தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்தி ருமதி மைதிலி ( நியூ ஜெர்சி) அவர்களுக்கு நமது நன்றி.
-சுபா
கல்லாட நூலாராய்ச்சி - 3
திருவளர். R. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்.
(முற்றொடர்ச்சி துணர் 12. மலர் 10. பக்கம் 354.)
திருஞானசம்பந்தர் கூறிய 14 அடியார்கள், திருஞான சம்பர்கருக்கு முற்பட்டவராவர். கல்லாடத்தில் இவ்வடியார்களில், கண்ணப்பர், காரைக்காலம்மை, மூர்த்திநாயனார், சாக்கியர் ஆகிய நால்வரை கூறப்பட்டிருப்பதால் இவ்வடியார்கள் கல்லாடருக்கு முற்பட்டவர் என்றும் இவர்களில் பின் கூறப்பட்ட மூவரும் மணிவாசகனார் கூறாததால் கல்லாடருக்கு முற்பட்டவரென்றும், மணிவாசகனார் கண்ணப்பரையும், சண்டீசரையும் கூறுவதால் இவ்விருவடியானார்களும் மணிவாசனார்க்கு முற் பட்டவரென்றும் திருமறைமலையடிகள் கூறுவர்.
கல்லாடரும், மணிவாசகனாரும் தமக்கு முற்பட்ட அடியார்களின் தொகையை கூறும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தரராயின் அடிகள் கூறிய காரணம் பொருத்தமானதாகும். திருஞானசம்பதர் நலக்தொகை கூறியது போலவும் சுந்தரமூர்த்திகள் அடியார்தொகை கூறியதுபோலவும் இவ்விருவரும் கூறினாரல்லர்.அடிகள் கூறிய துண்மையாயின் மணிவாசகனாருக்கும் முன்னிருந்த கோச்செங்கண் சோழனாரை மணிவாசகனார் கூறாத காரணமென்ன? காரணம் கூறவியலாதாகலின் அடிகள்கொண்ட கருத்து, வழுவுடையதாகும்.
கல்லாடர் திருஞானசம்பர்கருக்கு முற்பட்டவராயின் கல்லாடர் கூறியுள்ள திருவிளையாடல்கள் அறுபத்து நான்கெனும் தொகை எங்ஙனம் பெறப்படும்? திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில், பாண்டியன் வெப்புத் தீர்த்ததும், சமணரைக் கழு வேற்றியதும், சான்றழைக்த்தும் ஆகி
ய மூன்றும் நீக்கப்பட வேண்டும். கல்லாடர் காலத்துக்கு முன்நிகழ்ந்த திருவிளையாடல்கள் 61 என்றே தொகை பெறப்படும். கல்லாடர் 64 என்று கூறியிருப்பதொடு முரண்படும். இவ்வகையானும் திரு. மறைமலையடிகள் கருத்து வழுவுடையதாகும்.
இவ்வாராய்ச்சியாளர் மணிவாசனார் காலத்திற்கு முன்பு 54 கோயில்களே இருந்தனவென்றும், பிற்காலத்தில் கோயில்கள் பல்கியிருந்தனவென்றும் அதனால் தேவாரங்களில் 274 கோயில்கள் கூறப்பட்டிருக்கின்றனவென்றும் ஒர் காரணம் கூறுவர். மணிவாசகனார் மற்றை நாயனாரைப் போல தலத் தொகைகள் கூறவில்லையென்பதை யறிக. போற்றித் திருவகவலில் சிலதலங்களில் எழுந்தருளியுள்ள பெருமானின் புகழ்களையே கூறியுள்ளார். எனவே மணிவாசகனார் கோயிலின் தொகை கூறினாரென்னும் கருத்து வலியுறாதென்பதையறிக.
இனி மணிவாசகனார் காலத்திற்கு முன்பு பலகோயில்கள் இருந்தன வென்பதையும் அவைகளில் சிலவற்றில் செங்கண் சோழனார் செய்வித்த பணிகளையும் இங்குக் கூறுவாம்.
திருமங்கை மன்னன் தாம் பாடியருளிய திருநறையூர் பதி கத்தில்,
"இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ னீசற்கு
எழில்மாட மெழுபதுசெய் துலகாண்ட
திருக்குளத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்"
என்று சோழன் செங்கணான் பணிவித்த கோயில்கள் எழுப தென்றுத் கொகை கூறியதுள்ளது காண்க. இப்பதிகத்தில் மற்றைப் பாசுரங்களில் சோழன் செங்கணானையே புகழ்ந்து பாடியுள்ளராதலால் இங்கும் அச்சோழனையே குறிந்தாரென்க, இச்சோழனார் பலதளிகள் பணிவித்தாரென்று நாயனார்களாலும் புகழப்பட்டுள்ளார். திருமருகல் மாடக்கோயில் பதிகத்தில்,
"வையம் மகிழ்தர வைகல் மேற்றிசை
செய்யவ ளவன்முன் செய்த கோயிலே”
என்றும், திருவம்பர்ப் பெருங்கோயிற் பதிகத்தில்,
”அருசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குருசில் செங்கண்ண வன்கோயில் சேர்வீரே"
என்றும் திருஞானசம்பந்தராலும், நன்னிலத்துப் பெருங்கோயிற் பதிகத்தில்
"திரைபொரு பொன்னிநன்னீர்த் துறைவன்றிகழ் செம்பியர்
தரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தனனே” [கோன்
“கோடுயர் வெங்களிற்றுத் திகழ்கோச் செங்கணான்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தனனே"
என்றும் சுந்தரமூர்த்தி நாயனாராலும் செங்கணான் பணியைப் பாராட்டப் பட்டுள்ளது காண்க.
இக் கோச்செங்கணான் செய்வித்த கோயில்கள் மாடம் கோயில் என்றும், பெருங்கோயில்கள் என்றும் பெயர் பெற்ற விளங்கினபோலும். முன்பாசுரங்களிலும் இப்பெயர்வத்துள்ளது நோக்கியோர்க.
l
திருநாவுக்கரையரும், பொதுத்தாண்டகத்தில், “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்பெருங் கோயில் எழுபதினே டேட்டும்” என்று அருளியுள்ளதும் செங் கண் சோழனார் செய்வித்த கோயில்களை யேகுறிக்குமென்னலாம். நாவுக்கரையர் 78 கூறியுள்ளதைக் குறிக்க.
இவ்வகை ஆழ்வார் வாக்கு நாயனார் பதிகங்களால் சான்றுறுவதையறிக. இதனால் சோழனார்காலத்து 70, 78 கோயில்களேயன்றிப் பலகோயில் இருந்தனவெனப் பெறப்படும். பதிகங்கள் பெற்ற தலங்கள் சிலவேயென்க. இதனை போராது திருமறைமலையடிகள் மணிவாசகனார்காலத்து 54 ஆலயங்களே இருந்தனவென்பது பொருந்தாது. அன்றியும் ஆலயமில்லா ஊர்பாழ் என்னும் பழமொழியை இங்குஞாபகமூட்டுவேன். எண்ணிறந்த தலங்களில் மணிவாசகனார் வழிபாடு கொண்ட தலங்கள் சிலவேயென்பது பொருந்துமாறறிக,.
திரு. மறைமலையடிகள் திருப்பெருந்துறையில் மணிவாசகனார் காலத்தில் கோயில் இல்லையென்னும் கூற்றை யாராய்வாம். இவ்வாராய்ச்சியாளர் நூல்களின் காலத்தையாராய முயலாது நம்பிகள் புராணம் சேக்கிழாருக்கும் முற்பட்டதென்றார். நம்பிகள் ஆலயம் ஒன்று திருப்பெருந்துறையில் இருப்பதாகக் கூறியுள்ளார். பரஞ்சோதியார் கோயிற்றிருப்பணிக்கும் அடிகள் தாம் எடுத்துக் கொண்டுபோன பொருளை செலவழித்தாரென்று கூறுவர். திருவிளையாடற் புராணத்தார் காலத்தும் திருப்பெருந்துறையில் கோயிலிருக்கவில்லையென்று கூறுவதற்கு அக்கோயிலில் இப்போது விஜயநகரவாசகர்கள் சாசனமே கிடைப்பதைக் கூறி 15, 16ம் நூற்றண்டின் முன்னர் அமைக்கப்பட்ட கோயிலென்றும் பொருள்படும்படிக் கூறிச்செல்வர். கோயில்களைப் புதுக்குவார் பலரும் பழைய சாசனச் சான்றுகளை மீண்டும் பொறித்து வைக்கும் வழக்கை ஆளவில்லை யென்பதற்கு பல திருட்டாந்தங்கள் உளவென்பதை இவ்வாராய்ச்சியாளர் கருதவில்லை. இவ்வகையில் பெருந்துறைப் பழங்கோயில் விஜயநகரச் சக்கரவர்த்திகள் காலத்திற்குமுன்பு புதுக்கப்பட்ட தென்னலாம். கடவுண்மாமுனிவர் புராணம் மிகப் பிற்காலத்ததென்று இவ்வடிகளே பலவிடத்தும் ஒதுக்கித் தள்ளுபவர். இந்நூலில் தமது கருத்துக்கிசைந்ததோர்வழுவானகூற்றைத்தழவி,பழைய நூல்களைப் புறக்கணித்ததன் பயனாக, ஆதரவுபெறாது வழுக்குண்டாராவர். இவற்றான் இவ்வாராய்ச்சியாளர் தமதுமதத்தை நாட்டப் புகுந்தாரேயன்றி உண்மை யறிய முயன்றாரில்லை யென்பது தெளிவாம். மணிவாசகனார்க்கு இறைவன் காட்சி கொடுத்தது ஒர் சோலையிலென்று கடவுண் மாமுனிவர் கூறியதைக் கடைப்பிடித்து இவ்வாராய்ச்சியாளர் அவர் கருத்தே உண்மை யென்றும் சாதிப் புகுந்தபோது,
“செந்த ழல்புரை திருகோரியங்காட்டி
திருப்பெருந்துறை யுறை கோயிலுங்காட்டி"
என்னும் திருப்பள்ளி யெழுச்சி அடிகள் திரு. மறைமலையடிகள் நினைவிற்கு வரவில்லை போலும்.
அன்றியும் ஆகமங்கள் கோயில் வழிபாட்டிற்கே யெழுச் தன் வென்று கூறுவாருளர். அடிபார்கள் ஆகமங்களேயே சிறக் தனவாகக் கருதுகின் தவசாய், கோயில்கொண்டருளியுள்ள பெரு மானின் சிலையுருவங்களே வணங்கிப் பதிகங்கள்பாடி வந்தன ரென்பது நன்கறிக்க தொன்மும், கோயிலில்லாத் தலங்களுக்கு அடியார்கள் பதிகம் பாடினரென்று யாண்டும் கண்டது மிலம்
கேட்டதுமிலம், கிரு மறைமலையடிகள் கூற்றுப் புதுமை யாத் ஒதான் றும் இவ்வாறு இவ்வடிகள் கூறும் புதுமைக்ளில் கட்டளைக் வித்துறை பாவினங்களில் ஆதித் தோற்றத்தையுடையதென்
தும் மற்று ஒன்ரும்.
தொல்காப்பியர் நாலசையை அடிப்படையாகக் கொண்டு செய்யுளியல் யாத்தனர். நால்வகையசை கொள்ளின் சீர்களின் வாய்பாடு பல்குமாதலின் மாணவரறிவதற்கு கடினமாயிருக்குந் தன்மையைநோக்கி தொல்காப்பியரோடு ஒத்த காலத்துப் புலவர்கள் செய்யுளியலைச் சுருக்கமாகக் கூறமுயன்று பலவகை யாப்புநூல்கள் யாத்தனர், யாப்புநூல்கள் பல்கியதுபோல மற்ற வியல்களுக்கு தனிநூல் இயற்றப்படவில்லை யென்று கூறலாம். பல்காயனார், பல்காப்பியனார், பரிமாணனார் காச்சைபாடினியார்
போன்றோர் பதின்மருக்குமேல் யாப்பு நூல்கள் இயற்றினரென்பது
"தொல்காப் பியப்புலவேர் தோன்றவிரித் துரைத்தார்
பல்காய னார்பகுத்துப் பளனினார் -நல்யாப்புக்
கற்குர் மதிக்குங் கலைகாக்கை பாடினியார்
சொற்ருர்தந் நூலுட் டொகுத்து'
என்னும் யாப்பருங்கல மேற்கோள்வெண்பாவாய் அறியலாகும். இப்புலவோர் அசை இரண்டாகவே கொண்டு யாப்பியலை யாவரும் எளிதிலுணருமாறு ஒவ்வோர் நூலை யாத்தனர். இவ்வாசிரியர்கள் பாவினமுங் கொண்டார். தொல்காப்பியர் அடிகளுக்கு எழுத்து அளவை கொண்டார். இவ்வாசிரியரிற் பெரும்பாலார் எழுத்துக் கணக்களவு வேண்டினாரலர். இந்நூல்கள் தோன்றிய பின்னர் தொல்கப்பியர் செய்யுளியல் கரந்துறையுந் தன்மை பெற்றதாகும். பாவினங்களே நிலைபெற்றன. பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தமென்னும் பாகுபாடு தொன்மை வாய்ந்தது.
“நாலசைச் சீரும் ஓரோவிடத் தியலும்
பாவொடு பாவினம் பயிற லின்றி" என்பது
நற்றத்தனார் சூத்திரமென்ப. இதில் பாவினம் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. இப்புலவர் சங்ககாலப் புலவராவர். இவரோடொத்த காலத்தவரென்று கருதப்படும் தாக்கைபாடினியார்,
"விருத்தந் துறையொடு தாழிசை யென்றா
வினச்செய்யு ளெல்லா வடியினு நடக்கும்"
என்று தாழிசை, துறை, விருத்தம் என்றும் பாவினங்களின் வகை கூறியுள்ளதுமறிக. இப்பாவினங்களின் வகையில் எது முன் தோன்றியதென இதுபோது கூறுவதற்கு சான்றகப்படாதாயினும் கலித்துறையின்பாற்படும் கட்டளைக் கவித்துறையே முதன் முதல் 2ம் நூற்றண்டில் தோன்றிற்றென்று திரு. மறைமலையடிகள் கூறுவர். கமது கூற்றுக்குச் சான்றில்லையாதலின் பாவினங்களின் வரலாற்றைத் தமக்கு ஆதரவாகக் கூறத் தொடங்கினர். இவ்வாராய்ச்சியாளர் கூறும் வரலாறு தலை தடுமாற்றத்தையுடைய தென்பதைக் காட்டுவாம்.
முன் காட்டிய காக்கைபாடினியார் சூத்திரத்தால் கலிப் பாவினங்களில் கலித்துறை ஒன்றாகும். இப்பெயர் ஐந்து சீரான் ஆக்கப்பட்ட அடியைக் குறிக்கும். இவ்வடிக்கு,
"ஐஞ்சீர் முடிவி னடித்தொகை நான்மையொடு
எஞ்சா மொழிந்தன வெல்லாங் கலித்துறை"
என்னும் காக்கைபாடினியார் சூத்திரத்தில் எழுத்துக் கணக்கு கூறப்படாமையறிக. 10ம் நூற்றாண்டில் தோன்றின யாப்பரு கலத்தினும்
“கெடில நான்காய் திகழ்வது கவித்துறை"
என்று ஐஞ்சீருடை படியே கலித்துறையென்று கூறியிருக்கல் காண்க.
இந்நூல் 10ம் நூற்றாண்டின் முதலில் தோன்றியதாகும். இக்காலத்தில் ஒருவகை கலித்துறைக்குக் காரிகையென்னும் பெயர் நிலவிற்றுபோலும். இந்நூலைப் பின்பற்றி செய்யப்பட்ட யாப்பருங்கலக் காரிகை என்னும் நூல் எழுத்தளவையுடைய கலித்துறையடியால் யாக்கப்பட்டுளது. இவ்வெழுத்தளவை யுடைய கலித்துறை 11ம் நூற்றாண்டில் கட்டளைக் கலித்துறை யென்றும் விருத்தமென்றும் கூறப்பட்டது. இதனைக் குறித்து
யாப்பருங்கல விருத்திகாரரும் இக்காலத்தார் சில கலித்துறைகளை விருத்தமென்றும் கட்டளைக் கலித்துறையென்றுங்கூறுவர் என்றார். இக்காலத்தில் தொகுக்கப்பட்ட திருமுறைகளில் சில பதிகங்களுக்கு திருவிருத்தமென்றும், வைணவப் பிரபந்தமான நம்மாழ்வார் பதிகங்களில் சிலவற்றுக்கு திருவிருத்தமென்றும் பெயர் கொடுத்துக் கூறியுள்ளதை யறிக. நம்பியாண்டார் நம்பிகள் தாமியற்றிய நூலுக்கும் கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் என்னும் நாமம் சூட்டியுள்ளதையுங் காண்க. கட்டளைக் கலித்துறையென்னும் பெயர் பெருவழக்காக இக்காலத்தில் வழங்காததறிக. யாப்பருங்கல விருத்திகாரரும் உரைச் சூத்திரங்கள் பலவிடத்தும் கூறிச் செல்லும் திறம் வாய்ந்தவர் கட்டளைக் கலித்துறைக்குச் சூத்திர முரையாத தாலும் இப்பெயர் பெருவழக்குப் பெறவில்லையென்பது பெறு *, இவ்வாசிரியர் 11ம் நூற்றாண்டினிடைக் காலத்திலிருந்தவராவர். 12ம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதப்படும் யாப்பருங் கலக் காரிகை ஆசிரியர் தமது உரையிலே கட்டளைக் கலித் துறைக்குச் சூத்திரம் உரைத்தார்போலும், இதுகாறும் கூறிய வாற்றால் கட்டளைக் கலித்துறை என்னும் நாமம் நிலவியது 12ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகாது. இது 10ம் நூற்றண் டில் காரிகையென்னும் பெயராலும், 11ம் நூற்முண்டில் விருக்கம் என்னும் பெயராலும் விளங்கியது. எழுக்தெண்னும் அளவை புடைய கவித்துறை 10ம் நூற்றுண்டிற்கு முற்பட்டதாகாது. எழுத்தெண்னும் வழக்கு கொல்காப்பியர் காலத்தே விழ்க்க வழக்கயிற்று. பின்னர் 10ம் நூற்றுண்டு முதல் ஒருசார் கலித்துறைக்கு எழுத்துக் கணக்கு சில ஆசிரியர் வேண்டினுர், இவ்வழக்கு கிலைபெறுவதற்கு இருநற்குண்டு சென்றது. இதன் பின்னர் ஒருசார் எண்சீர் ஆசிரிய விருத்தமும் எழுத்தளவை பெற்று கட்டளைக் கலிப்பா என்னும் காமம் பெற்றது. கட் டளேக் கலித்துறை பிற்காலித்ததென்று சிலவாராய்ச்சியாளர் கூறி மணிவாசகனுர் நூலும் பிற்காலத்திகென்று கூறுவதை மறுப்பதற்கு மறைமலையடிகள் அச்சத்தில் தோன்றியதை ஆகியில் தோன்றினதென்று கூறப்புகுந்த்து ஒர் வியப்பைக் தருகின்றது.
இவ்வாராய்ச்சியாளர் திருமுறை தொகுக்கப்பட்ட வரலாற் தையும் கவனிக்கவில்லை போலும். திருமுறை கண்ட புராணகாரர் ஆராய்ச்சியறிவு வாய்ந்தவரன்றென்று இவ்வடிகள் கூறியிருப்பது பொருத்தமாகும். இவ்வுரைக்குக் கார்மண்டலசதகம் துணை புரிவதைக் கூறுவாம்.
“தலைச்சங்கணிந்த தடக்கைப் பெரும்புயல், தண்டமிழ்சூர்த் தொலைச்சிக்குடுமிப் படைகொள் பரமன் சுருதிமறை
மிலைச்சிப் புகழ்பெற்ற நாதமுனிநம்பி வேந்திருவர்
மலைச்சிக்க பூபதிவாழ்க்கையர் காராளர் மண்டலமே”
என்று கார்மண்டலசதகத்தார், திருமுறைநம்பியாண்டாராலும், திவ்விய பிரபந்தம் நாதமுனிகளாலும் சிக்கபூபதி வேண்டுகோளுக்கிணங்கித் தொகுக்கப்பட்டதென்னும் பொருள்படும்படி கூறியுள்ளார். இச்சதகத்தர் 11ம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தவராவர். திருப்பதிகங்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றின் உண்மை இதுவேயாகும். திருமுறைகண்ட புராணத்தார் 13, 14-ம் நூற்றாண்டில் இருந்தவராவர். அவர் கூறிய வரலாறு கற்பனையேயாகும்.
நம்பியாண்டார் நம்பிகள் திருமுறையில் மூவரின் பதிகங்களையே தொகுத்தாராவர். எட்டாந் திருமுறையில் கண்ட கங்கைகொண்ட சோளேச்சுரம் ராஜேந்திரன் வடதேசம்வென்ற வெற்றிக் கறிகுறியாக 11ம் நூற்றாண்டினிடையில் கட்டப்பட்டதாகும். அக்காலத்திற்கு முன்பே நம்பியானாடார் இறைவனடி
கீழலடைந்தாராவர். எனவே 8 முதல் 12 திருமுறைகள் 12ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டனவாகும் என்பது தெளிவாம். எழுத்தெண்ணும் அளவைப்பெற்ற கலித்துறைக்கு இக்காலத்தில் கட்டளைக் கலித்துறையென்ற பெயரே நிலைபெற்றதால் அப்பெயரை திருவாசகத்தின் சில பதிகங்களுக்குச் சூட்டினாரென் றல்வேண்டும் . கட்டளைக் கலித்துறை என்னும் பெயர் திருவாசகத்தில் காணப்படுவது திருவாசகம் தொகுக்கப்பட்ட் காலத்தை குறிக்குமேயன்றி மணிவாசகனார் காலத்தைச்சுட்டிக் காட்டாதெனத் தெளிக.
இனித் திருவாசகத்திலும் திருக்கோவையாரிலும் பயிலப்பட்டுள்ள சொற்களின் தன்மையறிய முயலுவாம்.