- தமிழை ஒருவராலும் அழித்திட முடியாது.
- மேலும் இன்னும் நடுவு நிலைமையோடு பேச வேண்டுமானால்....
- தமிழ்நாடு நிலப்பகுதியில் தமிழோடு பிற மொழிகளும் பேசப்படுகின்றன. மலையாளம், தெலுகு, கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமே இங்கு இருப்பதாக திராவிட ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னும் பல அறிய மொழிகளும் இருக்கின்றன.
- இந்நிலப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் பல மொழிகள் இந்நிலப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. அந்த மொழிகள் என்ன என்ன? அவற்றில் உள்ள சொற்கள், எழுத்துக்கள் போன்றவையும் போற்றப் பட வேண்டியவைகளுள் ஒன்றாகும்.
- இதுவரை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் இந்த வகையான மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கவில்லை; மேலும் தமிழ்நாட்டு அரசு இந்த மொழிகளின் பட்டியலையும் தயார் செய்து, அந்த மொழிகளையும் செவ்வனே பராமரிப்பது தேவைகளும் ஒன்றெனக் கருதுகிறேன்.
- எப்படி ஆங்கிலம் கட்டாயம் என்ற உடன் பல உலக மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளனவோ! எப்படி இந்தி கட்டாயம் எனக் கூறி பட்டியலிடப்பட்ட மொழிகளை அழிவின் விழிம்புக்குக் கொண்டு செல்ல முனைகிறார்களோ; அது போன்றே தமிழ் மொழி மட்டுமே கட்டாயம் என்னும் கொள்கையும்; இங்கே இந்த நிலப்பகுதியில் இருக்கும் மொழிகளையும் அழிவிற்கே கொண்டு செல்லக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தமிழ் ஆட்சி மொழியாக இருக்கட்டும், மேலும் பிற இந்நிலத்து- தமிழ்நாடு- மொழிகளையும் பாதுகாத்திட வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை என எண்ணுகிறேன். இந்த மொழிகளையும் கண்டறிந்து, அவற்றையும் தமிழ் நட்டு அரசின் பட்டியலிடப்பட்ட மொழிகளாக அறிவிக்க வேண்டும்.