சிங்கங்களைத் தேடிக் காட்டிற்குச் சென்றோம்!

88 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Jan 26, 2009, 5:25:16 AM1/26/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கத்தைப் பார்க்கணும்னு ரொம்ப நாட்களாய் முயன்று கொண்டிருந்தோம். என்னமோ, தள்ளிப் போயிட்டே இருந்தது. அக்டோபரில் தேதி முடிவு செய்து போக நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி கீழே விழுந்ததில், எங்கேயும் போக முடியாமல் கான்ஸல் பண்ணணுமோனு நினைச்சப்போ, ஜனவரியிலே வாங்கனு சொன்னாங்க. நல்லதாப் போச்சுனு இப்போ வெள்ளியன்று கிளம்பிப் போய் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தேடித் தேடி அலைந்து, திரிந்து சிங்கங்களைப் பார்த்துட்டு இன்று காலை வந்தோம். ஒரு சிங்கம் இல்லை, இரண்டு இல்லை. ஒன்பது சிங்கங்கள். கூடுதலாய் ஒரு சிங்கம். ஆக மொத்தம் பத்து சிங்கம். அவை பற்றிய ஒரு தொகுப்பு விரைவில் வரும். , எப்போ வரும்னு தெரியாது. அலுப்பு இன்னும் தீரலை. மேலும் குழந்தைக் கண்ணன் விளையாடிட்டு இருக்கிறதாலே குழந்தை பயந்துக்கும். ஆகவே அறிவிப்புக் கொடுக்கிறேன். அதுவரையில் எந்த சிங்கம்னு யோசிச்சுட்டு இருங்க. புரிஞ்சவங்க பொறுமையா இருக்கவும்.

Geetha Sambasivam

unread,
Feb 4, 2009, 12:57:32 AM2/4/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)
ஹிஹிஹி, இப்போத் தான் பார்க்கிறேன் இதை, குழும ஆட்கள் இல்லை சுவாதி! :)))))

2009/1/26 Swathi Swamy <mswat...@gmail.com>
நம்ம குழுமத்துல் இருக்கிற யாராவது 9 பேராக இருக்கும்....  :)

2009 ஜனவரி 26 04:25 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:


சிங்கத்தைப் பார்க்கணும்னு ரொம்ப நாட்களாய் முயன்று கொண்டிருந்தோம். என்னமோ, தள்ளிப் போயிட்டே இருந்தது. அக்டோபரில் தேதி முடிவு செய்து போக நிச்சயம் பண்ணியாச்சு. ஆனால் அக்டோபர் 3-ம் தேதி கீழே விழுந்ததில், எங்கேயும் போக முடியாமல் கான்ஸல் பண்ணணுமோனு நினைச்சப்போ, ஜனவரியிலே வாங்கனு சொன்னாங்க. நல்லதாப் போச்சுனு இப்போ வெள்ளியன்று கிளம்பிப் போய் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தேடித் தேடி அலைந்து, திரிந்து சிங்கங்களைப் பார்த்துட்டு இன்று காலை வந்தோம். ஒரு சிங்கம் இல்லை, இரண்டு இல்லை. ஒன்பது சிங்கங்கள். கூடுதலாய் ஒரு சிங்கம். ஆக மொத்தம் பத்து சிங்கம். அவை பற்றிய ஒரு தொகுப்பு விரைவில் வரும். , எப்போ வரும்னு தெரியாது. அலுப்பு இன்னும் தீரலை. மேலும் குழந்தைக் கண்ணன் விளையாடிட்டு இருக்கிறதாலே குழந்தை பயந்துக்கும். ஆகவே அறிவிப்புக் கொடுக்கிறேன். அதுவரையில் எந்த சிங்கம்னு யோசிச்சுட்டு இருங்க. புரிஞ்சவங்க பொறுமையா இருக்கவும்.




--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/



Geetha Sambasivam

unread,
Feb 4, 2009, 1:00:39 AM2/4/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

ஆரம்பம் இங்கேஆந்திரப் பிரதேசத்தில் அஹோபிலம் உள்ளது. கர்னல் மாவட்டம், நந்தியால் தாலுகாவைச் சேர்ந்த இந்த அஹோபிலத்திற்குச் செல்ல நேரடி ரெயில் வழி இல்லை. அருகே இருக்கின்றது என்று சொல்லப் படும் இரு ரயில் நிலையங்கள், மும்பை-சென்னை வழியில் உள்ள கடப்பாவும், பங்களூர்-விசாகப் பட்டினம் வழியில் வரும் நந்தியால் நிலையமும் ஆகும். சென்னையில் இருந்து செல்வதென்றால் கடப்பா வரையில் ரெயிலில் சென்று அங்கிருந்து கிட்டத் தட்ட 110 கி.மீ. உள்ள அஹோபிலத்துக்குப் பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கிருந்து சென்றாலும் அல்லகட்டா என்னும் ஊரைக் கடந்து அங்கிருந்தே 24 கி.மீ. தூரத்தில் உள்ள அஹோபிலத்தை அடைய வேண்டும். அல்லகட்டாவில் இருந்து அஹோபிலம் செல்ல பேருந்துகள், வேன்கள் கிடைக்கின்றன.

நாங்கள் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். ஓம் ட்ராவல்ஸ் என்ற பயண அமைப்பாளர்கள் ஏற்பாடுகள் செய்யும் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். இவர்கள் இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முதன்முதலாய் அஹோபிலத்துக்குச் செல்லவே இவர்களை அணுகினோம். தன்னந்தனியாகவோ, அல்லது இருவராகவோ சென்றால் கொஞ்சம் கஷ்டம் தான். முழுக்க முழுக்கக் காட்டுப் பயணம். காட்டில் சிங்கங்கள் இல்லை என்கின்றனர். ஆனாலும், சிறுத்தைகளும், கரடிகளும் மிகுதியாக இருப்பதாய்க் கூறுகின்றனர். ஆகவே குழுவாகப் பயணம் செல்வதே சிறந்தது. 23 அக்டோபர் 2008 ஏற்பாடு செய்யப் பட்ட பயணத்திட்டத்தில் செல்ல நினைத்து முன்பணம் கட்டி இருந்தோம். ஆனால் அதற்குச் சரியாகப் பத்து நாட்கள் முன்னதாய் எனக்குக் கையில் அடிபட்டுக் கைக்கட்டுப் போட்டு 21 நாட்கள் எடுக்கக் கூடாது என்று சொல்லி இருந்ததால் போக முடியவில்லை. பயண அமைப்பாளர்கள் முன்பணம் எவ்வளவு கட்டினாலும் திரும்பத் தரமாட்டோம் என்று எழுதியே கொடுத்துவிடுகின்றனர். ஆகவே பணம் கிடைக்காது என்று தெரிந்தாலும், வேறே யாராவது உறவினர்கள் செல்லட்டும் எனக் கேட்டுப் பார்த்தோம். யாரும் தயாராக இல்லை. ஆகவே பயண அமைப்பாளரிடமே யோசனை கேட்டதில் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் ஒரு குழு செல்ல இருப்பதாயும், எங்கள் பணத்தை அதற்கு முன்பதிவு செய்து கொள்ளுவதாயும் கூறினார். கொஞ்சம் ஆறுதல் அடைந்தோம்.

மெல்ல மெல்ல ஜனவரியும் வந்தது. கிளம்பும் நாளும் வந்தது. என்னோட அண்ணா(பெரியப்பா பையர்) வுக்கு ஜனவரி 23 அன்று தான் சஷ்டி அப்தபூர்த்தி திருக்கடையூரில். அங்கே சென்றால் திரும்பி வந்து கிளம்பமுடியாது என்று முன்னரே தெரிந்து கொண்டு அவர்களிடம் மன்னிப்பு மிக வேண்டிக் கேட்டுக் கொண்டு, அன்று கிளம்பினோம். அசோக் நகரில் வந்து பேருந்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி இருந்தார். ஆகவே அசோக் நகர் சென்றோம். பேருந்தைக் கண்டு பிடித்தோம். நாங்க தான் முதல் ஆட்களாய் போயிருக்கின்றோம் எனப் புரிந்தது. பேருந்து கும்பகோணம் "ரதிமீனா" நிர்வாகத்தைச் சேர்ந்தது. சரி, கொஞ்சம் வசதியாய் இருக்கும் என ஆறுதல் அடைந்தோம். எவ்வளவு தப்புனு போகும்போது தான் புரிந்தது. ஒவ்வொருவராய் வந்ததும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். பயண அமைப்பாளர் இப்போத் தான் உட்காருமிடம் ஒவ்வொருத்தருக்காகச் சொல்ல ஆரம்பித்தார். அநேகமாய் அனைவருமே முன்னம் பக்கம் கேட்க அவரோ எதுவுமே பேசாமல் அவர் இஷ்டத்துக்கு உட்கார வைத்தார். இதிலே ரொம்ப வயசானவங்க எல்லாம் பின்னால் போய் உட்காரும்படியும் சின்னவங்க எல்லாம் முன்னாலே உட்காரும்படியும் ஆகியும் அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு பக்கத்து இடம் பூராவும் சைதாப்பேட்டையில் ஏறுகிறவங்களுக்கு என்று ஒதுக்கி விட்டார்.

என்னோட கையைக் காரணம் ஏற்கெனவே காட்டி இருந்தாலும் கடைசி சீட்டே கொடுத்தார். நான் பிடிவாதமாய்ப் போக மறுத்து முன்னால் இருந்த மூவர் அமரும் சீட் ஒன்றில் அமர்ந்துவிட்டேன். கொஞ்சம் சொல்லிப் பார்த்துவிட்டு பேருந்தில் அனைவரும் ஆட்சேபிக்கவே பேசாமல் இருந்துவிட்டார். ஆனாலும் பேருந்தில் இடநெருக்கடி அதிகம். யாருக்குமே முன்னாலோ, பின்னாலோ உட்கார வசதியாகவே இல்லை. கைப்பிடிகள் கிடையாது. உடைந்து கிடந்தன. அவற்றைச் சரிசெய்யவே இல்லை. பேருந்து திரும்பும்போதெல்லாம் ஓரத்தில் உட்கார்ந்திருந்த நானும், என்னைப் போன்ற மற்றவர்களும் பிடிக்க ஆதாரமில்லாமல் ரொம்பவே கஷ்டப் பட்டோம். என்றாலும் ஓட்டுநர் மிகத் திறமைசாலி. கிட்டத் தட்டப் பத்துமணி நேரம் ஆகும் பிரயாணத்தை அவர் எட்டு மணி நேரத்துக்குள் கொண்டு வரப் பார்த்து ஓரளவு வெற்றியும் பெற்றார். காலை 6-30 மணி அளவில் அஹோபிலம் ஊர் போய்ச் சேர்ந்தோம். அங்கே போய் இறங்கிக் கொண்டு எங்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் அறைகளுக்குக் காத்திருந்தோம்.

Geetha Sambasivam

unread,
Feb 5, 2009, 3:13:51 AM2/5/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
நாங்க எப்போவும்போல் தனி அறைக்கு முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தோம். அஹோபிலம் மடத்திலும் அறைகள் கிடைக்கும். திருப்பதி தேவஸ்தானமும் அறைகள் வாடகைக்குக் கொடுக்கின்றன. எதிலே தங்குவதாய் இருந்தாலும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். இல்லை எனில் ரொம்பக் கஷ்டம் அறைகள் கிடைப்பது. அறையை ஜன்னல் கதவில் இருந்து எல்லாவற்றையும் திறக்காமல் இருத்தல் நலம். முன்னோர்கள் சர்வ சகஜமாய் வருவார்கள். அஹோபிலம் ஊர்க்காரர்கள், "எங்க வானரங்கள் ரொம்பவே சாதுவாக்கும்! உங்க ஷோலிங்கர் வானரங்களைப் போல கிடையாது!" என்று பெருமை அடித்துக் கொண்டாலும், நமக்குப் பயமாகவே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது ISCON அமைப்பாளர்கள் கட்டியுள்ள தங்கும் விடுதியில். அறை வாடகை 250 யில் இருந்து 300 -க்குள் இருக்கலாம். அஹோபிலம் மடம் அவ்வளவுதான் வாங்குகின்றனர். என்றாலும் இங்கே கொஞ்சம் அதிகம். 400ரூ. கொடுத்தோம். அறைகள் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இது தவிர சாப்பிடும் உணவு விடுதிகள் எதுவும் இல்லை. ஆகவே தனியாய்ப் போனால் சாப்பாடு ஒரு பிரச்னை தான். மடத்தில் அன்னதானம் இரு வேளை நடக்கின்றது. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு போகலாம்.

எங்களுக்கு நாங்கள் கொடுத்த பணத்திலேயே காலை காபி, காலை உணவு, மதியம் சாப்பாடு, சாயங்காலம் காபி அல்லது டீ, இரவு உணவு அடங்கியது. மடத்தில் இருந்து சமைத்து எடுத்து வந்தார்கள். ஆகவே செல்லும்போது உங்களுக்கு ஏற்ற பயணத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போ காலை ஆகாரம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பியாச்சு நரசிம்மர் தரிசனத்துக்கு. அங்கேயும் மின் தடை ஆற்காட்டாருக்குத் தம்பி தான் அங்கே மின்சார அமைச்சர் போல. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் மின்சாரம் வராது. குளிக்க வெந்நீர் முதல் நாள் கொடுக்க முடியலை. மறுநாள் காலை சீக்கிரமே எழுப்பிக் கொடுத்துவிட்டார்கள். இனி முதலில் அஹோபிலம் கோயில் வரலாற்றைப் பார்ப்போம். பின்னர் பயண அனுபவமும் நடு நடுவே வரும்.
************************************************************************************

நம் நாட்டில் ஒவ்வொரு மலைக்கும், ஒவ்வொரு நதிக்கும் புனிதம் உண்டு. வடக்கே இமயத்தில் ஆரம்பித்தால் தெற்கே கன்னியாகுமரி வரையிலும் ஒரே மாதிரியான கதைகள், காவியங்கள், புராணங்கள். அதிலும் தென்னாடு இதில் தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்ளும் திருமணம் ஆகப் போகும் இளம்பெண்ணைப் போல் அழகு கொஞ்சினால், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பக்குவமடைந்த, மனமுதிர்ச்சி அடைந்த பெண்ணைப் போல் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஆன்மீகத்துடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டது. இயற்கையின் சுந்தரம் மட்டுமின்றி, ஆன்மீகத்தின் புனிதமும் சேர்ந்தது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர். இந்தக் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களையே மஹா சர்ப்பம் ஆன ஆதிசேஷன் சுருண்டு படுத்திருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அவரின் தலைப்பகுதி திருப்பதியும், மத்திய உடல் பகுதி அஹோபிலம் என்றும், நீண்டு சுருட்டி வைக்கப் பட்ட வால்பகுதி ஸ்ரீசைலம் எனவும் சொல்லுவார்கள்.

திருப்பதிக்கு மலை எறித் தரிசிக்க குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.மலை ஏறி விடலாம். ஸ்ரீசைலம் சென்று தரிசிக்கும்படியாகவே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஆனால் அஹோபிலம் அப்படி இல்லை. மிகுந்த மன உறுதியும், உடல் உறுதியும், உள்ளார்ந்த பக்தியும் இருந்தாலே செல்லமுடியும் எனச் சொல்கின்றனர். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களில் இருந்தும் மாறுபட்டது நரசிம்ம அவதாரம். கண நேரத்தில் பக்தனின் வேண்டுகோளுக்காகத் தோன்றி, குறைவான நேரமே இருந்து தான் எதற்காக வந்தோமோ அதை முடித்துக் கொண்டது இந்த அவதாரம் மட்டுமே. மற்ற அவதாரங்களில் உலகத்து மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவுமே எடுக்கப் பட்டு வந்தது. ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு சிறு பையனின் உண்மையான பக்திக்காகவும், வேண்டுகோளுக்காகவும், உண்மையை நிலை நாட்டுவதற்கு எடுக்கப் பட்டது. உக்கிர ஸ்வரூபமாய் எடுக்கப் பட்ட நரசிம்மரைப் பார்க்கும்போதே ஹிரண்யகசிபு அச்சம் கொண்டான். ஆனால் பிரஹலாதனுக்கோ பெருங்கருணையே நரசிம்ம வடிவெடுத்து வந்திருப்பதாய்த் தோற்றம் அளித்தது. சற்றும் அஞ்சாமல் வணங்கி நின்றான். இப்பேர்ப்பட்ட அவதார புருஷனைத் தரிசிக்கும் எண்ணத்துடன் கருட பகவான் முன்னொரு காலத்தில் இம்மலைப் பிராந்தியத்தில் தவம் இருந்தார். கருடனின் தவத்துக்குப் பரிசாக நரசிம்மர் இங்கே காட்சி அளித்தார் ஒரு மலைக்குகையில். இனி ஒவ்வொரு மலைக் குகையாகச் சென்று பார்க்கலாமா??

Geetha Sambasivam

unread,
Feb 5, 2009, 5:59:39 AM2/5/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
பதிவுகள் பதினைந்து நாட்கள் வராது. தாமதம் ஆவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி.

Geetha Sambasivam

unread,
Feb 25, 2009, 8:33:48 PM2/25/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
திருமங்கை ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.

அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன்
பொங்க வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல் சாத்தறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.


இப்போதும் கரடி, சிறுத்தைகள், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் காட்டினுள் மறைந்து இருப்பதாகவே சொல்கின்றனர். காட்டினுள் செல்ல வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாது. நாம் செல்லும் பயண அமைப்பாளர்களே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். தனியாகச் செல்லுவது அவ்வளவு உசிதம் அன்று. அஹோபிலம் மடமே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றது. அதற்கு முந்நூறு ரூபாயில் இருந்து செலவு ஆகும். அஹோபிலம் மடத்தின் தொலை பேசி எண்கள்: 08519- 252025, 252045. குமரன் சாப்பிட்டுட்டாக் குளிச்சீங்கனு கேட்டிருக்கார். ஹிஹிஹி, தட்டச்சுப் பிழை அது. குளிச்சுட்டுத் தான் சாப்பிட்டோம். :))))))) எழுதினதைத் திருப்பி ஒருமுறை சரி பார்க்கும் வழக்கமே இல்லை பள்ளி நாட்களில் இருந்து. அப்படி எல்லாம் செஞ்சிருந்தா எங்கேயோ போயிருக்க மாட்டோமா? :)))))))))). இங்கேயும் எழுதிட்டு preview பண்ணறதே இல்லை, கலர் அடித்தால் ஒழிய! :))))))))) இனிமேல் எல்லாப் பதிவுகளிலேயும் கடைசியா E&OE போட்டுடலாமானு யோசிக்கிறேன். :P

ஒன்பது நரசிம்மர்களில் முதலாவது ஜ்வாலா நரசிம்மர் எனச் சொல்கின்றனர். ஆனால் பயண வசதிக்காக நாங்கள் முதல் நாள் பயணத்தில் ஜீப் என்று பெயரளவில் சொல்லப் படும் வாகனம் செல்லுமிடத்தில் உள்ள நரசிம்மர்களையே தரிசித்தோம். டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடு, முரடான மலைப்பாதை. பாதைனு சும்மாச் சொல்றேன். உண்மையில் அந்த வண்டிகள் சென்று, சென்று ஏற்பட்டதொரு அடையாளமே அவை. அவற்றில் தான் செல்லவேண்டும். என்றாலும் இந்தப் பாதை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இதுக்கு அப்புறம் வரும் பாருங்க ஒரு பாதை. உடம்பையே உலுக்கி எடுக்கும். தூசி பறக்கும். வட மாநிலங்களில் வரும் புழுதிய்புயல் தான் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் வரும். இத்தகையதொரு கடினமான பயணங்களிலே முதலில் நாம் தரிசிப்பது சத்ரவடநரசிம்மர் ஆகும். இந்த ஒன்பது நரசிம்மர்களிலேயே மிக மிக அழகானவர் இவரே. குடையைப் போலக் கவிந்த ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால் இவர் சத்ரவட நரசிம்மர் எனப்படுகின்றார். சுந்தர புருஷனாக, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் நம்மைப் பார்த்து "எங்கே வந்தே?" என்று கேட்கும் நம் தாத்தாவைப் போல் சிரித்துக் கொண்டு காட்சி அளிக்கின்றார். தேவ சபையில் உள்ள ஆஹா, ஊஹூ என்னும் இரு கந்தர்வர்களும் கோபத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மத்தின் கோபத்தைத் தம் இசையால் போக்கியதாகவும், அவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இவர் காட்சி அளிப்பதாகவும் ஐதீகம். சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் தொடையில் பதிந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கும் வண்ணமாகவும் காட்சி அளிக்கின்றது. ஆலயத்தின் நுழைவாயிலில் ஆஹா, ஊஹூ இருவரின் உருவங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.

பட்டாசாரியார் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி போன்றவை சாதிக்கின்றார். இந்தச் சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர். பத்மாசனக் கோலத்துடனேயே பேரழகுக் கோலத்தோடு, இதழ்களில் சிரிப்போடு காட்சி தருகின்றார். அடுத்ததாய்த் தான் மிக, மிகக் கஷ்டமான பயணம் என்னதான் ஜீப்பிலே சென்றாலும் பயணம் மிகக் கடினம்.

ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம். அவை எப்படி அந்தத் தடங்களில் ஓடுகின்றன என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஒரு இடத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தில் குதிக்கும் ஜீப் மற்றொரு இடத்தில் முன் பக்கத்துச் சக்கரங்கள் இரண்டின் உதவியோடு மட்டுமே செல்லுகின்றது. அனைவரும் முன்னால் வளைகின்றோம். பின்னர் செங்குத்தான மேடு வருகின்றது. ஜீப் இப்போது மேட்டில் ஏறுகின்றது. அனைவரும் பின்னால் சரிகின்றோம். இன்னும் ஒரு இடத்தில் இடது பக்கச் சக்கரங்கள் உதவியோடு மட்டுமே செல்லவேண்டி உள்ளது. இந்த அழகில் இரு பக்கமும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள், இலைகள் போன்றவை உரசி ஜன்னல் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகின்றது. ஜீப்பில் ஏறும்போது டிரைவர் பக்கத்து சீட்டோ, அல்லது நடுவிலோ இடம் கிடைக்கவில்லை எங்களுக்கு. பின்னால் நாலு பேர் அமரும் சீட்டில் தான் கிடைத்தது. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. ஆனால் அது எவ்வளவு வசதியாப் போச்சு என்று பிரயாணத்தின் போதே புரிந்தது.

ஜீப் துள்ளித் துள்ளிக் குதிக்கும்போதெல்லாம் நல்லவேளை நான் உட்பக்கமாய் உட்கார்ந்து கொண்டேன் என நினைத்துக் கொண்டேன். என் பக்கத்தில் அமர்ந்த ம.பா.வுக்கும் சரி, எதிரே அமர்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கும் சரி, சமாளிக்கவே முடியலை. பக்கத்தில் இருந்த அவங்க பையர் இடம் மாறி உட்கார முயற்சித்தாலும் நடக்கவில்லை. எப்படியோ இருவரும் சமாளித்தார்கள். கீழே விழுந்துவிடுவோமோ என்ற எண்ணம் பலமுறை தோன்றியது. கொஞ்ச தூரம் போனதும் ஜீப் நின்றது. டிரைவர் அனைவரையும் இறங்கச் சொன்னார். கூட வந்த ஜீப்களும் நின்று அனைவரும் இறங்கினார்கள். ஆனால் கோயில் என்னமோ வரலை.

டிஸ்கி: பொருத்தமான பாசுரங்கள்னு பார்த்துப் போடலை. திருமங்கை ஆழ்வார் சிங்கவேள் குன்றத்தைப் பற்றிப் பாடியது என்ற கோணத்தில் மட்டுமே போடுகின்றேன். நன்றி.


Geetha Sambasivam

unread,
Mar 1, 2009, 9:53:58 PM3/1/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
இதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா? அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.
வண்டியை விட்டுக் கீழே இறங்கச் சொன்னாங்கனு சொல்லி இருந்தேன் அல்லவா? இது வரை வந்த பாதைகளில் நம்ம எலும்புகள் கழன்று போச்சு என்றால், இங்கே அதை விடக் கொடுமை. வண்டி தன் நாலு சக்கரங்களிலும் செல்லாது. ஒன்று முன் சக்கரத்தில் ஒன்றாலோ அல்லது பின் சக்கரத்தில் ஒன்றாலோ மேலே ஏறிக் கீழேயும் இறங்கணும். பாதையோ என்றால் கேட்கவே வேண்டாம். நடந்தால் முட்டிகள் அன்றே தேய்ந்து போயிடும். அதுவும் முட்டி வலி என்றால் என்னனு தெரியாத என் கணவருக்கு இதுக்கு அப்புறம் முட்டியே தேய்ந்து போய் இன்னமும் வலி இருக்கு முட்டியில். அவ்வளவு கடினமான கரடு, முரடான பாதைகள்.
ஆனாலும் நாங்க ஐந்து வண்டியில் இருந்த மொத்தம் 45 பேரும் இறங்கி நடந்தோம். பக்கத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப்கள் தொடர்ந்தன சில அடி தூரத்தில். கிட்டத் தட்ட ஒரு ஃப்ர்லாங்காவது இப்படிப் போகவேண்டி இருக்கு. நமக்குத் தான் கஷ்டம், ஆனால் அக்கம்பக்கம் உள்ள மக்கள் முதல் நாளே புறப்பட்டு இந்தக் கடினமான பாதையில் கிட்டத் தட்ட ஏழு கிலோமீட்டர்கள், போகவரப் பதினான்கு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, அங்கேயே மரத்தடியில் இரவைக் கழித்து நரசிம்மரை வழிபடுகின்றனர். நாமோ? என்னிக்கோ ஒருநாள் பயணமே முடியலை. கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனால் என்ன அதிசயம்??? அங்கே மாமிச வாடை வருகின்றதே? ஏதேனும் நாட்டார் கோயில் இருக்கோ?? ம்ஹும் இல்லையே? அப்போ இந்த மாமிசம்?? அங்கே ஏறிச் சென்று பார்த்தால் தெரிகிறது.
இதோ ஏறிக் கொஞ்சம் சுமாரான பாதைக்கு வந்துட்டோமே. இனிக்கொஞ்ச தூரத்தில் கோயில் தான். கோயிலில் பட்டாசாரியார் இருப்பாரோ? இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன?? ஆஹா! ஏற்பார், ஏற்பார், தாராளமாய் ஏற்பார். அதுவும் தன் அன்பு மனைவிக்காக ஏற்கின்றார். நரசிம்மர் இங்கே மாப்பிள்ளை ஆச்சே?
இந்த மேடு ஏறி மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.
தேவர்களும் கண்டு அஞ்சும் தன் நரசிம்மத் திருவுருவைக் கண்டு அஞ்சாத இவளே, தன் தக்க துணை எனத் தெளிந்த நரசிம்மமும், அவளை மணக்க இசைய, அந்த மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்தும், கெளரவமும் ஏற்பட்டது. தன் பிரியமான மனைவிக்காகவே மாமிச உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து அவளைச் சாப்பிடச் செய்தாராம் இந்த நரசிம்மர். தங்களில் ஒருத்தியான செஞ்சுலட்சுமி, நரசிம்மரின் கரம் பற்றியதைக் குறித்துக் கர்வம் மிகக் கொண்ட அந்த செஞ்சு இன மக்கள் தங்கள் செஞ்சு லட்சுமிக்குப் பிரியமான உணவு என்ற காரணத்தாலே இன்றும் அவளுக்கு இதைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சனிக்கிழமைகளில் இங்கே அதிகம் பலி இருக்கும் என்று சொல்கின்றனர். நாங்கள் சென்றதும் சனியன்றே. ஆகவே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அநேகமாய் டிராக்டர்களிலேயே வருகின்றனர்.

பவன நதிக்கரையில் கை, கால்கள் சுத்தம் செய்து கொண்டு மேலே ஏறினோம். நரசிம்மர் ஆதிசேஷன் குடையின் கீழ், தன் மனைவியான செஞ்சு லட்சுமியை இடது தொடையில் இருத்திய வண்ணம் காட்சி அளிக்கின்றார். சங்கு, சக்ர,தாரியாய், சாந்த சொரூபத்தில் சுக ஆசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடக்காலை மடித்துக் காட்சி அளிக்கின்றார். வலக்கீழ்க்கரம் நாடி வந்த நமக்கு அபயம் அளிக்க, இடக் கீழ்க் கையால் மனைவியைக் கட்டி அணைத்திருக்கின்றார். இந்தப் பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்டஎண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து நாம் தரிசிக்கப் போவது மாலோல நரசிம்மர்.

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.

வழக்கம்போலப் பாசுரங்கள் கிடைத்த வண்ணம் போட்டிருக்கேன். நன்றி.

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் இங்கே பார்க்கவும். சோம்நாத் பற்றிய கட்டுரை கொஞ்சம், கொஞ்சமாய்த் தயார் ஆகின்றது. போட ஆரம்பித்ததும் அறிவிப்பு வரும். நன்றி.





Geetha Sambasivam

unread,
Mar 5, 2009, 3:27:45 AM3/5/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4

திரு கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா? இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்.

நவ நரசிம்மர்களில் இவருக்குள்ள மற்றொரு சிறப்பு, மடியில் திருமகளை இருத்திக் கொண்ட இவரின் இந்த மூர்த்தத்தையே அடிப்படையாக வைத்து உற்சவரை அஹோபிலம் மடம் ஜீயர்கள் அமைத்துள்ளனர். முதலாம் ஜீயரின் கனவில் சாட்சாத் அந்த ஸ்ரீமந்நாராயணனே, மாலோல நரசிம்மராய்க் காட்சி அளித்து இவ்விதம் உத்திரவிட்டதாயும் சொல்கின்றனர். இன்றைக்கும் அஹோபில மடத்தின் ஜீயர்கள் தாங்கள் ஆன்மீக யாத்திரைகள் செல்லும்போதெல்லாம் மாலோல நரசிம்மரின் இந்த உருவத்தை அடிப்படையாய்க் கொண்ட உற்சவ மூர்த்தத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். தினசரி உற்சவருக்குப் பூஜை, வழிபாடுகளும் உண்டு.

இன்னும் சிலர் மா= என்றால் பிரானையே குறிப்பதாகவும் லோலா என்பதே ஸ்ரீ என்னும் மஹா லக்ஷ்மியைக் குறிக்கும் எனவும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் ஸ்ரீயை அணைத்த கோலத்தில் சங்கு, சக்ரதாரியாய், அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இங்கும் சடாரி, தீர்த்தப் பிரசாதம் வழங்கப் பட்டது. இவ்வளவு கடினமான இடங்களுக்குக் கூட வந்து வழிபாடுகள் நடத்தும் பட்டாசாரியார்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இந்த மாலோல நரசிம்மர் ஆனவர் செவ்வாயினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்கி அருள்கின்றார். மனதில் ஏற்படும், சஞ்சலம், பயம் அனைத்தையும் போக்கி மனோ தைரியத்தை உண்டு பண்ணுகின்றார்.

ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
13தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. 1.7.3
1011
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.4


அடுத்து யோக நரசிம்மர். அதற்கு முன்னர் இந்த மலையைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத் தொடரும்.







Geetha Sambasivam

unread,
Mar 7, 2009, 4:02:15 AM3/7/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

ஹோபிலம் 5

இந்த மலைப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்றாலும், இரு மலைகளாய் இருக்கின்றன. இவ்விரண்டு மலைப்பகுதிகளிலுமே நவ நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம் எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது.

ஹிரண்யனுக்காக நரசிம்ம அவதாரம் எடுக்கத் தன்னிடத்தை விட்டு ஸ்ரீமந்நாராயணன் வந்ததால் அவர் பிரிவைத் தாங்க முடியாமலும், அவருக்குச் சேவை சாதிக்க முடியாமலும் தவித்த கருடாழ்வார் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். நரசிம்மமோ? ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம்.ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடுநாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து "அஹோபிலம், மஹாபலம்" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, "அஹோ!! பலம்!!!, அஹோ!!! பலம்!!!!" என வியந்து பாராட்டியதாலும் அஹோபலம் என்பது நாளடைவில் திரிந்து அஹோபிலம் எனப்பட்டதாகவும் அறிகின்றோம். பிலம் என்றாலேயே குகை எனப் பொருள். குகைகளுக்குள்ளேயே இங்கே நரசிம்மரைக் காணமுடியும்.

இறைவன் தன் பக்தனுக்காக விரும்பி எடுத்த வடிவம் நரசிம்ம வடிவம். அதனாலேயே சிங்கவேள் எனத் தமிழில் சொல்லுகின்றனர். சிங்கமாய் விரும்பி வேட்கையுடன் வந்த குன்றம் இது என்பதாலும் சிங்கவேள் குன்றம் எனப் பெயர் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது. மேலும் ருத்ர ரூபமாய் மட்டுமே அறிந்த நரசிம்மரின் வேறு பல தோற்றங்களையும் கொண்டது இந்த நவநரசிம்மர்களின் சந்நிதிகள். கீழ் அஹோபிலத்தில் பிரஹலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் (இதற்குப் பேருந்து, கார், வேன்கள் செல்லும்) மலைச்சாரலில் ஆலயம் அஹோபில நரசிம்ம ஆலயமாகப் பிரதான ஆலயமாய் இருக்கின்றது. மலைச்சாரலில் அதன் மடிப்புகளில் ஒளிந்துள்ள மறைவான குகைப் பகுதிகளிலேயே மற்ற நரசிம்மர்களின் ஆட்சி நடந்து வருகின்றது. மேல் அஹோபிலம் வரையிலும் தனியார் வாகனங்கள் அல்லது பேருந்துகளில் செல்லமுடியும். அதன் பின்னர் நம்மை அந்த நரசிம்மரே அழைத்துச் செல்லவேண்டும்.









Geetha Sambasivam

unread,
Mar 8, 2009, 8:07:07 AM3/8/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 6


அஹோபிலம் மடம் பற்றியும், ஜீயர் பற்றியும் மெளலி எழுதச் சொல்லி இருக்கின்றார். இது பற்றி இன்னும் தகவல்கள் திரட்டணும். இன்றைய தினசரி நாள் காட்டியில் அஹோபிலம் மடத்தின் 37வது பட்டம் அழகிய சிங்கரின் திரு நட்சத்திரம் எனச் சொல்லி இருக்கின்றது. அஹோபிலம் மடம் ஜீயர்களை வணங்கிவிட்டு, இப்போது நாம் யோக நரசிம்மரைக் காணப் போகலாம்.

எத்தனையோ யுகங்கள் மாறியும் பிரஹலாதன் இங்கே இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாயும், அவை மாறவில்லை எனவும் கூறுகின்றனர். வேதாத்திரி மலைத் தொடரின் மேற்கே தொலைவாய் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ளது யோக நரசிம்மரின் ஆலயம். ஹிரண்ய வதம் முடிந்ததும், நரசிம்மரால் பிரஹலாதனுக்குச் சில யோக முத்திரைகள் கற்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளி இருக்கும் கோலம். தென் திசை நோக்கி நரசிம்மர் வீற்றிருக்கின்றார். மேற்கரங்கள் இரண்டும் சங்கு, சக்கரங்களோடும், கீழ்க்கரங்கள் இரண்டிலும், இரு கால்களிலும் யோக முத்திரைகள் காட்டியும் அமர்ந்திருக்கும் திருக்கோலம்.

புதன் கிரஹத்தால் ஏற்படும் சகல பாவங்களையும் தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர். பக்தப்பிரஹலாதனுக்கு யோக குரு. இங்கே காசி ரெட்டி என்பவர் இவ்வாலயத்தின் அருகேயே இன்னொரு யோக நரசிம்மரை நிர்மாணித்திருக்கின்றார் எனச் சொல்கின்றனர். அவ்வாலயத்துக்கு நாங்கள் செல்லவில்லை. பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வரும் மாபெரும் அன்னதானத்தை இன்றளவும் இவரின் சந்ததிகள் தொடர்ந்து நடத்தி வருவதாயும் சொன்னார்கள். அஹோபிலத்துக்குப் பசியுடன் வரும் யாத்ரீகர்கள் இரவு, பகல் எந்நேரமாயினும் நள்ளிரவானாலும் முகம் சுளிக்காமல் இங்கே அன்னதானம் வழங்கப் படுகின்றது என்பது மிக மிக வியப்பான ஒரு செய்தி. அனைவருமாய்ச் சேர்ந்து பணம் திரட்டி ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையை நாங்கள் நாற்பத்தி ஐந்து பேர் சார்பிலும் அளித்தோம். அடுத்து வராஹ நரசிம்மர்.

அஹோபிலம் பற்றிய தொலைக்காட்சித் தொகுப்பு பொதிகைத் தொலைக்காட்சியில் போன வாரம் முதல் மாலை 6-30 மணி அளவில் காட்டப் படுகின்றது. வாராஹ நரசிம்மர் அடுத்து நாம் காணப் போவது. வைகுந்தத்தின் துவாரபாலகர்கள் ஆன ஜயன், விஜயன் இருவருக்கும் கிடைத்த சாபத்தால் இருவரும் ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபுவாய்ப் பிறப்பதும் ஹிரண்யாட்சன் பூமி தேவியைத் தூக்கிச் சென்று பாதாளத்தில் கொண்டு வைக்கின்றான். மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்துச் சென்று தன் கொம்புகளால் பூமியைத் துளைத்துக் கீழே போய் பாதாளத்தில் இருந்து பூமா தேவியைத் தன் கூரிய மூக்கின் முனையில் வைத்துத் தூக்கி வருகின்றார். அதற்குப் பின்னரே ஹிரண்யாட்சனின் தம்பியான ஹிரண்ய கசிபுவைக் கொல்ல எடுத்த இந்த நரசிம்ம அவதாரம். இங்கே இரு அவதாரங்களும் பக்கத்தில் பக்கத்தில் காணக் கிடைக்காத தரிசனமாய் உள்ளது. சற்றே பெரிய வராஹ உருவத்தின் மேல் அமர்ந்திருக்கும் பூமாதேவியையும், அருகே நரசிம்மர் அவதாரத்தையும் ஒரு சேரக் காண முடியும்.

பிரஹலாதனின் குருகுலம் இங்கே தான் அமைந்திருந்ததாய்ச் சொல்கின்றனர். வேதாத்திரி மலையின் வழுக்கும் செங்குத்துப் பாறைகளில் கவனமாய் மெள்ள ஏறி, இறங்கினோமானால், திடீரென ஒரு பெரிய பாறை காணப்படுகின்றது. இதை பிரஹலாத மெட்டு அல்லது பிரஹலாத மேடு என்கின்றனர். பாறைகள் ஒன்றோடொன்று புரட்டிப் போடப் பட்டாற்போல் காட்சி அளிக்கின்றது. இயற்கையாகவே ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்தாற்போல் காட்சி அளிக்கின்றது. அவற்றில் காணப்படும் சிறு சிறு வட்டங்கள், கோடுகள், கோட்டுடன் கூடிய அமைப்புகள் ஒருவேளை பிரஹலாதன் எழுதிப் பார்த்த லிபியாய் இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.

படங்கள் அப்லோட் ஆகவில்லை, மன்னிக்கவும். நாளை மீண்டும் முயல்கின்றேன்.











Geetha Sambasivam

unread,
Mar 10, 2009, 11:53:29 AM3/10/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் -7

அஹோபிலம் மடம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மடங்களிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இது கிட்டத் தட்ட 600 வருடங்கள் முன்பு அஹோபிலத்தில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோபன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவருடைய பூர்வாசிரமப் பெயர் கிடாம்பி ஸ்ரீநிவாஸாச்சார் என்பதாகும். காஞ்சியில் உள்ள கடிகாசதம் அம்மாளின் மாணாக்கர் ஆவார். ஒரு நாள் ஸ்ரீநிவாஸாச்சார் அவர்கள் கனவில், லக்ஷ்மி நரசிம்மர் தோன்றினார். அஹோபிலம் இருக்குமிடம் சொல்லி, அங்கே இருக்கும் திருமேனி வடிவிலேயே தோன்றி, ஸ்ரீநிவாஸாச்சாரை அங்கே வரச் சொல்கின்றார். தன்னுடைய ஆசாரியரைக் கேட்டுக் கொண்டு அவர் சம்மதத்துடன் ஸ்ரீநிவாஸாச்சார் அஹோபிலம் சென்றார்.

அஹோபிலத்தில் நரசிம்மரே ஸ்ரீநிவாஸாச்சாருக்கு சந்நியாசம் கொடுத்து, அவருக்கு "சடகோப ஜீயர்" என்ற பட்டப் பெயரும் சூட்டினார். ஆழ்வார் திருநகரி ஆதிபிரானால் வண் என்ற அடைமொழியும், நம்மாழ்வாரால் ஆதி என்ற அடைமொழியும் பின்னாட்களில் சேர்க்கப் பட்டது. அதற்குப் பின்னர் ஜீயர் அவர்கள் ஆதி வண் சடகோபஜீயர் என அழைக்கப் பட்டு வந்தார்.

ஒரு முறை நவநரசிம்மர்களில் ஒருவரான மாலோல நரசிம்மர் ஆதிவண் சடகோபர் கைகளில் வந்து குதித்தார். தன்னை எடுத்துக் கொண்டு நாடு பூராவும் பயணம் புரிந்து பிரசாரம் செய்யச் சொல்கின்றார். இதன் பின்னரே அஹோபிலம் மடம் உருவானது. மாலோல நரசிம்மர் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்துக்கும் சென்றார், ஆதிவண் சடகோபருடன். செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து பாரா ந்யாசமும் நிறைவேற்றினார்.

அறுநூறு வருடங்கள் முன்னால் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று வரையில் அடுத்தடுத்து வரும் ஜீயர்களால் தொடரப் படுகின்றது. அஹோபிலம் வந்த ஸ்ரீநிவாஸாச்சாரை மலைக்குகையில் ஒரு வயதான யோகி சந்தித்து அவருக்கு வேதாந்தங்களைக் கற்பித்து, நரசிம்ம மந்திரத்தைக் கற்பித்து, த்ரிதண்டத்தை வழங்கி, சங்கு சக்கரங்களையும் வழங்கியதாகவும் சொல்கின்றனர். அந்த யோகி நரசிம்மரே அன்றி வேறு யாரும் இல்லை எனச் சொல்லப் படுகின்றது.

தமிழில் அழகிய சிங்கர் என அழைக்கப் படும் இந்த முதல் ஜீயரால் நம்மாழ்வாரின் மறைக்கப் பட்ட கோயில் ஆழ்வார் திருநகரியில் மறு ஸ்தாபிதம் செய்யப் பட்டது. இன்றைக்கும் மடத்தில் முதல் பொறுப்பேற்றுக் கொள்ளும் புதிய ஜீயர்கள் முதலில் ஆழ்வார் திருநகரி சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்து வருவது வழக்கமாய் இருந்து வருகின்றது. ஏழாவது ஜீயரின் காலத்தில் கீழ் அஹோபிலம் கோயில் மாற்று மதத்தினரால் முற்றுகைக்கு உட்பட, விஜயநகர அரசன் ஆன ரங்க தேவ ராயர் போரிட்டு ஆலயத்தை மீட்டுக் கொடுத்தார். அதன் வெற்றிச் சின்னமாய் ஜயஸ்தம்பம் கீழ் அஹோபிலம் கோயில் முகப்பில் இன்றும் விளங்கி வருகின்றது.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நான்கு நூற்றாண்டுகளாய்க் முழுமையடையாமல் இருந்த ராஜ கோபுரம் 1979-ல் அப்போதைய 44-வது ஜீயர் அவர்களால் கட்டி முடிக்கப் பட்டது. மாலோல நரசிம்மரின் விக்ரஹத்தைத் தினசரி வழிபாடு செய்வதுண்டு. தாங்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணங்களிலும் மாலோல நரசிம்மரின் விக்கிரஹத்தை எடுத்துச் சென்று பூஜைகள் செய்கின்றனர்.
Posted by கீதா சாம்பசிவம் at 8:44 AM












Geetha Sambasivam

unread,
Mar 13, 2009, 9:20:33 AM3/13/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 8

நான்காவதாய்த் தரிசித்த யோக நரசிம்மர் புதனால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவராய் வேதாத்திரி மலையின் மேற்குப் பக்கத்தில் எழுந்தருளி இருக்கின்றார். அடுத்துத் தரிசித்த ஐந்தாவது நரசிம்மர் வாராஹ நரசிம்மர். இரு அவதாரங்களையும் ஒருசேரக் கண்டோம். வாராஹ அவதார மூர்த்தம் அருகேயே நரசிம்ஹரையும் காணமுடியும். படங்கள் என்ன காரணத்தாலோ அப்லோடே ஆக மாட்டேனென்கிறது. கூகிளாண்டவர் கொடுத்தால் அவர் தயவில் இன்னிக்குப் போட முயல்கின்றேன். வாராஹ நரசிம்மர் குருவால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்குபவர். இயல், இசை, நாடகம் போன்ற சகல கலைகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை பெற்றவர். நீதித்துறை, வேதங்கள் ஆகியவற்றில் உயர்ந்திருக்கும் நிலையை அருளுவார். அடுத்தவர் கீழ் அஹோபிலம் பிரஹலாத வரதர்.கோயில் வளாகத்தினுள் நுழையும் முன்னேயே முன் குறிப்பிட்ட ஜயஸ்தம்பத்தைக் காண முடிகின்றது. ஆலயத்தின் தென்பகுதியில் புஷ்கரணி சதுரவடிவில் அமைந்துள்ளது. பாறைப் படிகள். திருக்குளம் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் எனவும், நீராட வேண்டாம் எனவும் யாத்ரீகர்கள் எச்சரிக்கப் படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கிறவங்க தக்க துணையுடன் நீராடுவதே பாதுகாப்பானது எனவும் எச்சரிக்கப் படுகின்றனர். உயரமான ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே போனால் மூன்று பிரஹாரங்களோடு அமைந்த கோயில். முகப்பில் உள்ள மண்டபம் ரங்க மண்டபம் என அழைக்கப் படுகின்றது. கோயிலின் சிற்ப அமைப்புகள் மிகச் சமீப காலத்தியதாய்த் தென் படவே அங்கே உள்ளவர்களை விசாரித்தோம். சரியாய்ச் சொல்லத் தெரியலை. மொழிப் பிரச்னை அவ்வளவு இல்லை. தமிழ் நன்றாகவே புரிந்து கொள்கின்றனர். என்றாலும் விடாமல் தேடி விசாரித்ததில் ஒருவேளை 15, 16-ம் நூற்றாண்டாய் இருக்கலாம் எனத் தெரிய வந்தது.

ட்ராவல்ஸ் காரர் கொடுத்த கையேடும் அப்படியே குறிப்பிடுகின்றது. தூண்களில் சிற்ப, அற்புதங்களே நிறைந்துள்ளன. நரசிம்மரின் பல்வேறு விதத் தோற்றங்களோடு இசைக்கலைஞர்களும், நாட்டிய மங்கைகளும் வெவ்வேறுவிதமான நாட்டியக் கோலங்களில் காட்சி அளிக்கின்றனர். உடல் அசதியாலும், நேரக் குறைவாலும் சரிவரக் கவனிக்க முடியலை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் சிறு மண்டபத்தைத் தாண்டினால் உள்ளே மூலவர் சந்நிதி. மஹா சாந்தம். பக்கத்தில் மஹாலட்சுமித் தாயார். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கின்றார். சங்கு, சக்ரதாரியாய், வலக் கீழ்க்கரம் எப்போவும் போல் அபயம், நானிருக்கின்றேன், அஞ்சாதே, எனச் சொல்லுகின்றது. இடக் கீழ்க்கரம், அன்போடும், ஆசையோடும் தாயாரை அணைத்துக் கொண்டிருக்கின்றது.

திருப்பதியில் இருந்து வெங்கடாஜலபதி இங்கே வந்து நரசிம்மரைத் தரிசித்துத் தன் கல்யாணத்துக்கு ஆசிகள் பெற்றுச் சென்றாராம். வெங்கடாஜலபதிக்குத் தனி சந்நிதி இருக்கின்றது. மூலவர் சந்நிதியில் உற்சவர்கள் பிரஹலாத வரதர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்க் காட்சி அளிக்கின்றார். வெங்கடாசலபதிக்கு அருகே இருக்கும் மண்டபம் கல்யாண மண்டபம் எனவும், திருக்கல்யாண கோலத்தில் இறைவன் அங்கே எழுந்தருளுவார் எனவும் சொன்னார்கள். தனியாத் தாயார் சந்நிதியும் உள்ளது. ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. ஆண்டாளும் தனியே சந்நிதியில் குடி கொண்டிருக்கின்றாள். சந்நிதிக்கு நேர் வெளியே துவஜஸ்தம்பம். கீழ் அஹோபிலரைத் தரிசித்துக் கொண்டு ஓய்வெடுக்கச் செல்கின்றோம். இனி நாளைக்கு மேல் அஹோபிலம், ஜ்வாலா நரசிம்மர்,உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர், மேல் அஹோபிலம் தவிர மற்றவை நடைப்பயணமே. ஆகவே ஓய்வு தேவை.












Geetha Sambasivam

unread,
Mar 16, 2009, 5:37:13 AM3/16/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 9


மறுநாள் காலை எழுந்து இன்று சீக்கிரமே எழுந்து மலை ஏறவேண்டும் என முன்னேற்பாடு செய்து கொண்டதால் விடிகாலை 4 மணிக்கே எழுப்பி வெந்நீர் கொடுத்துக் குளித்துத் தயாராகச் சொல்லி இருந்தனர். ஆகவே நாங்களும் சீக்கிரமே தயார் ஆனோம். எனினும் இன்று மேல் அஹோபிலம் வரையில் பேருந்திலேயே செல்ல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் பின்னரே ஜ்வாலா நரசிம்மர், உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர் போன்றவர்களைத் தரிசனம் செய்து கொண்டு திரும்ப வேண்டும். மாலை கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு சரியாக எட்டு மணிக்குச் சென்னை திரும்பவேண்டும் எனப் பயணத் திட்டம் அறிவிக்கப் பட்டது. காலை ஆகாரம் சற்றே தாமதம் ஆனதால் கிளம்பும்போதே கொஞ்சம் தாமதமும் ஆனது. என்றாலும் அனைவரும் கிளம்பி சென்னையில் இருந்து வரும்போது எந்த இருக்கையில் அமர்ந்தோமே அதே இருக்கைகளில் அமர்ந்து வருமாறு அறிவுறுத்தப் பட்டோம். அவ்வாறே அனைவரும் அமர்ந்ததும், வழிகாட்டியான சுப்பராயுடு, ஒருங்கிணைப்பாளரும், அமைப்பாளரும் ஆன திரு சுரேஷ் ஆகியோரும் ஏறிக் கொண்டனர். வண்டி கிளம்பியது.

கருடாத்ரி, வேதாத்ரி இரு மலைகளுக்கிடையே அமைந்துள்ள பவநாசினிக் கரையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் கீழ் அஹோபிலத்தில் இருந்து எட்டு முதல் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மேல் அஹோபிலம் கோயில். மலைப்பயணம் தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடிக்கு மேல் உயரத்தில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கீழ் அஹோபிலம் கோயிலையும், இந்த மேல் அஹோபிலம் கோயிலையும் தான் நவ நரசிம்மர்களிலேயே அதிகச் சிரமம் இல்லாமல் தரிசிக்க முடியும். ஆலயம் சம தளத்தில் அமையவில்லை. மலையில் இருப்பதால் குன்றுகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்றவகையிலேயே பரந்து அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி குகையின் அமைப்பில் உள்ளது. உக்ர நரசிம்மர். ஆனால் மூர்த்தி சிறியவர். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி மட்டுமின்றி உக்ரமும் பெரியதாகவே உள்ளது. மூலவருக்கு அருகே உற்சவர் மஹாலட்சுமி சமேதராய் உள்ளார். மூலவரின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாய் அருமைச் சீடன் பிரஹலாதன் நேரெதிரே கூப்பிய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றான். இந்த உக்ர நரசிம்மரைச் சுயம்பு மூர்த்தி எனச் சொல்கின்றனர். ஹிரண்ய வதம் முடிந்ததும், இந்தக் குகையில் வந்து ஆக்ரோஷம் தணியாமல் இருக்கும்போதே அமர்ந்ததாயும், தேவாதி தேவர்களும், கருடனும் இங்கே வந்து தரிசித்ததாயும் சொல்கின்றனர். ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்த போது இந்தச் சிங்கவேள் குன்றத்துக்கும் வந்ததாயும், நரசிம்மரை வழிபட்டதாயும் சொல்கின்றனர். மூலவர் இருக்கும் குகையிலேயே நாம் நுழையும் முன்னரே இடது பக்கமாய் ஒரு புறத்தில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு சிவலிங்கம். பக்கத்திலேயே ஸ்ரீராமர்.

ஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்து கராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றிய இடம் இதுவே எனப் படுகின்றது. தன் இழந்த கரத்தை அவர் மீட்டுக் கொண்டதும் இவரின் அருளாலேயே எனச் சொல்கின்றனர். ஆதிசங்கரர் தான் இங்கே வந்ததின் அடையாளமாய் சிவலிங்கத்தையும், நரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளதாயும் சொல்கின்றார்கள். தாயார் ஆன செஞ்சுலக்ஷ்மியின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதிக்கு வெளியே, உள்ளது ஒரு தடுப்புப் பகுதி. உள்ளே நுழையும் முன்னரே இந்தத் தடுப்புப் பகுதியைத் தாண்டிக் கொண்டே செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் யாரும் தங்கள் பாதங்களை வைக்க வேண்டாம் என்பதற்காகவே வட்டமான ஒரு தடுப்பு. முன்னர் குகை போன்ற அமைப்பில் இருந்திருக்க வேண்டும்.உள்ளே பாதாளத்தில் இதே போன்ற ஒரு கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் அஹோபிலம் மடத்தைச் சேர்ந்த ஆறாம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் வழிபாடு நடத்த இந்தக் குகைக்குள்ளே இறங்கிச் சென்றதாயும், அங்கே வைகுந்தனைத் தரிசித்துவிட்டுப் பின்னர் அவர் வெளியே வரவே இல்லை எனவும், குகை பின்னர் மூடப்பட்டு இப்போது அவரின் அதிஷ்டானம் போல் சந்நிதிக்கே நேர் எதிரே இருப்பதாயும், அனைவராலும் வழிபாடுகள் நடத்தப் படுவதாயும் சொல்கின்றார்கள்.ஆலயத்தின் உள்ளே மிகக் குளுமையாகவே இருக்கின்றது. அங்கே அமைந்துள்ள ஒரு மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பதினாறு கால் மண்டபம். அந்த மண்டபத்தில் இருந்து சுற்றுப் புறக் காட்சிகளையும் மலைக்குன்றங்களையும் காண முடிகின்றது. கோபுர தரிசனமும் கிடைக்கின்றது. மனிதன் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தாலும் இயற்கையை இன்னும் இங்கே அழிக்கத் துணியவில்லை. இன்னமும் தனக்குள்ளே சில அதிசயங்களையும், ரகசியங்களையும் பொத்தி வைத்துள்ளது இந்த மலை. இதைப் பற்றி எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் நடந்தது.

மலை ஏறவும், நடந்து ஏறிச் செல்லவும் நல்ல பாதை போடவேண்டும் என ஒரு கட்சியினரும், கூடாது என எங்களில் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தோம். நாங்க என்ன சொல்லி இருப்போம் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன். அதுக்குள்ளே ஒருங்கிணைப்பாளர் வந்து மலை ஏற வேண்டும் எனவும், நடைப்பயணம் தான் எனவும் கிட்டத் தட்ட 10 முதல் 15 கிமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் எனவும், கடினமான, செங்குத்தான மலைப்பாதை ஆகவே முடியாதவ்ர்கள் இங்கேயே தங்கி விடலாம் எனவும் அறிவுறுத்தினார். திரும்பிச் செல்லவோ, அங்கேயே தங்கவோ யாருக்கும் இஷ்டமில்லை. அனைவரும் மலை ஏறவே விரும்பினோம். குடி நீர் பாட்டில்கள் தவிர, கைப்பைகள், சாப்பிட ஏதானும் என்று எடை குறைவாய் வைத்துக் கொள்ளும்படியும், பெண்கள் கூடியவரையில் புடவையை மேலே தூக்கிச் செருகிக் கொண்டு நடக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மலை ஏற்றத்தின் போது புடவை தடுக்கிக் கீழே விழுந்தால் பாறைகளில் காயம் படுவதோடு அல்லாமல், உயிரிழப்பும் ஏற்படலாம் என்பதால் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகின்றனர். அங்கேயே தடிக் கம்புகள் கொடுக்கின்றனர். அவற்றை வாங்கி அனைவருக்கும் கொடுக்கின்றார் வழிகாட்டி. தடிக் கம்புகளை மலையில் இருந்து கீழே இறங்கியதும் திரும்பிக் கொடுக்க வேண்டும். மலை ஏற்றத்தின் போது அந்தத் தடிக்கம்பு எவ்வளவு வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். அடுத்து ஜ்வாலா நரசிம்மர்.












Geetha Sambasivam

unread,
Mar 18, 2009, 5:22:06 AM3/18/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Wednesday, March 18, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! - அஹோபிலம் 10

நடந்து போகிறவங்க பெரும்பாலும் ஜ்வாலா நரசிம்மரிடம் இருந்தே ஆரம்பிக்கிறாங்க. அது தான் முதலில் தரிசனம் செய்யவேண்டியது என்றும் சொல்கின்றனர். ஆனால் நாம செளகரியத்துக்காக முதல்நாள்ஜீப்பில்/ ஜீப்பா அது? சும்ம்ம்ம்மா! போக வேண்டியவற்றுக்குப் போயிட்டு வந்துட்டோம். அங்கேயும் நடந்தே தான் போகிறவங்க இருக்காங்க என்றாலும் தூரம் அதிகம். நம்மளை மாதிரி சொகுசாப் பழகினவங்களுக்குக் கஷ்டம். இப்போ ஜ்வாலா நரசிம்மரைப் பார்ப்போம். கையில் கைத்தடியோடு அனைவருக்கும் பயணம் ஆரம்பிக்கிறது. கொஞ்ச தூரம் போகும் முன்னரே கூட வந்தவர்களில் ஒரு பெண்மணியின் கணவருக்கு மூச்சுத் தொந்தரவு அதிகம் ஆக அவங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு வரோம்னு சொல்ல, மற்றவர்கள் நடக்க ஆரம்பித்தோம். வழிகாட்டியான சுப்பராயுடு முன்னேயும்,பின்னேயும் கவனித்து ஆட்களை ஒழுங்காய் வரச் செய்யப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள். செங்குத்தான மேடுகள். வழுக்கும் இடங்கள். எனப் பல்வேறு கடினமான இடங்களையும் கடந்து முழுக்க முழுக்க மலை ஏற்றம். செருப்பு வழுக்குகின்றது. நடு, நடுவே பவநாசினி நதி மலை மேலிருந்து கீழே இறங்கும் இடங்கள்.

மழைக்காலம் என்றால் நீரில் இறங்கியே செல்லவேண்டும். இப்போது நீரின் ஓட்டம் கணுக்காலுக்கும் கீழே இருக்கிறது. ஆகையால் செல்லலாம், என்றாலும் வழுக்கும் பாறைகள். நதியைக் கடந்து மேலே ஏற வேண்டுமே! நதி பள்ள்ள்ள்ள்ளம், மேஏஏஏஏஏஏலே ஏறணும். ஒரு பக்கம் சுப்பராயுடு, இன்னொரு பக்கம் சுரேஷ், வேறொரு இடத்தில் கூட வந்தவர்களில் ஒரு இளைஞர் நின்று கொண்டு ஏற முடியாதவங்களை ஏற வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓம் நமோ நாராயணாய! என்ற நாம ஜபத்தை இடைவிடாமல் அனைவரும் உரத்து ஒலித்து, ஜபிக்க ஒவ்வொருவராய் ஒரு வழியாய் மேலே ஏறுகின்றோம். சுப்பராயுடு, "யாரும் அவரவர் வலப்பக்கம் திரும்பவேண்டாம். நேரே பாதையைப் பாருங்க!" என எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றார். ஆவல் மீதூற வலப்பக்கம் பார்த்தேன் நான். கடவுளே! கிடு கிடு பாதாளம். நல்லவேளையாய்த் தலை சுற்றவில்லை. மலைகள் ஏறி, ஏறி ஒரு மாதிரியாய்ப் பழக்கம் ஆகி விட்டிருக்கு போல! என்றாலும் சுப்பராயுடுவும், என் கணவரும் கொஞ்சம் பயப்பட, நான் சமாளித்துக் கொண்டு அடுத்த பாறையின் மேலே ஏறிக் கொஞ்சம் ஒத்தையடிப் பாதை எனப்படும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அப்போது தான் கைத்தடியின் உதவியும் புரிய வருகின்றது. என்றாலும் செங்குத்துப் பாறைகளில் ஏறும்போதெல்லாம் கைத்தடி உதவவில்லைதான். மேலே ஒருத்தர் நின்று கொண்டு நம்மை ஏற்றியே விடவேண்டி இருந்தது. பாறைகளின் உயரமும் அதிகம் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. ஆனால் "பொதிகை" தொலைக்காட்சியின் வேளுக்குடி கடந்த ஒரு வாரமாய் தினமும் இப்போ ரொம்ப செளகரியம் பண்ணி இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போ நம் முன்னோர்கள் போகும்போது எவ்வளவு கஷ்டமாய் இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியலை. மேலும் "நவ அஹோபிலம்" என்னும் ஊரும் ஒன்று புதியதாய் நிர்மாணிக்கப் படுவதாயும், ஸ்ரீமந்நாராயணனின் பனிரண்டு திருநாமங்களின் பெயரால் குடி இருப்புகள் கட்டப் படுவதாயும், குறைந்த பட்சமாய் 2,000/- நபர்களுக்குக் குறையாமல் அதில் தங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார். அது முடிய அடுத்த வருஷம் ஆகலாம் என்றும் சொல்கின்றார். இது அவர் சொல்லியே ஒரு வருஷம் ஆயாச்சு. நிகழ்ச்சி மறு ஒளிப்பதிவு. ஆகையால் இன்னமும் நிறைவேறவில்லை என்றே நினைக்கின்றேன்.
இந்த ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே பாதி தூரத்தில் தென்படுகின்றது உக்ர ஸ்தம்பம். நாங்கள் நின்று பார்த்த இடத்தில் இருந்து குறைந்தது ஐந்து கிமீட்டராவது மேலே ஏறவேண்டும். மிக மிகச் செங்குத்தான பாறைகள். ஒரு அடி எடுத்து வைப்பதே கஷ்டம். முட்புதர்கள். பாதம் படும்போதே பாறைக் கற்கள் உருளுகின்றன. கவனமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும். கொஞ்சம் தப்பினாலும் அதோ கதிதான். வந்தவர்களில் பலரும் அங்கே போவதின் கஷ்டத்தை அறிந்து கொண்டு வேண்டாம், இங்கே இருந்தே பார்க்கின்றோம் என முடிவெடுக்க, மிகச் சிலருக்காகக் கூட்டிச் செல்ல பயண ஏற்பாட்டாளரும் யோசிக்கக் கொஞ்சம் கிட்டே போய் உக்ர ஸ்தம்பம் தரிசிக்கலாம் எனப் பயணம் மேலே தொடர்ந்தது.















Geetha Sambasivam

unread,
Mar 20, 2009, 4:56:19 AM3/20/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 11

உக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய்வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம் எனவும், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து இன்னும் மூன்று மணி நேரம் நடைப்பயணம் இருக்கின்றது எனவும் வழிகாட்டி சொன்னார். மேலும் இப்போதே மணி மதியம் பனிரண்டு ஆகி விட்டதால் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு மேலே ஏறிக் கீழே இறங்க குறைந்தது ஆறு மணி நேரத்தில் இருந்து ஆகும் எனவும் கூறினார். மேலும் பாதை மிகவும் செங்குத்தாக அமைந்திருப்பதோடல்லாமல் , காட்டு மிருகங்களும் நடமாடும் என்றும் சொல்லவே பெரும்பாலோருக்கு அங்கே செல்லத் தயக்கமாகவே இருந்தது. கிட்டத் தட்ட 5 கிமீ தூரம் இருந்தது. என்பதால் உக்ரஸ்தம்பம் ஓரளவுக்கு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அங்கே ஆடி அசைந்த காவிக் கொடியைப் பார்த்தால் நம்மை வா, வா, என அழைப்பது போலவே இருக்கின்றது. ஆனால் ஒரு சிலரை மட்டும் அழைத்துச் செல்லமுடியாது எனத் திட்டவட்டமாய்க் கூறவே. அங்கிருந்தே பகுதி, பகுதியாக உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்தோம். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அவ்வளவு பேரும் எனக்கு முன்னாலேயே சென்று கொண்டிருந்தனர். எங்கள் குழுவிலேயே மிகவும் மெதுவாய்ச் சென்றது நான் மட்டுமே. அதனாலேயே எனக்குக் களைப்பும் ஏற்படவில்லை என நினைத்தேன். ஆனால் என் கணவரோ என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து கொண்டே வந்தார். இமயமலையில் கயிலை யாத்திரையில் திணறிய அவர் இப்போது வேகமாய் நடக்க, அங்கே சமாளித்த நான் இங்கே திணறினேன் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

சுயபுராணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நம் பிரயாணம் தொடர்கின்றது. மலைப்பாறை இரண்டாய்ப் பிளந்து இரு வேறு பகுதிகளாய்க் காட்சி அளிக்கின்றது நன்றாய்க் கண்ணுக்குத் தெரிகிறது. பாறையில் நடுவில் பிளவும் தெரிகின்றது. உற்றுப் பார்த்தால் பிளவின் அமைப்பு சிங்க முகமாயும் தெரிய வருகின்றது. இந்தத் தூணைத் தான் இரண்டாய்ப் பிளந்து நரசிம்மர் வெளியே வந்தார் எனவும், அந்தச் சமயம் இந்தப் பிரதேசமே பூகம்பம் ஏற்பட்டாற்போல் குலுங்கி, நடுங்கி இருக்கும் எனவும் தோன்றுகின்றது. எங்களில் சிலரின் ஏமாற்றத்தைக் கவனித்த வழிகாட்டி, மிகச் சிலரால் மட்டுமே உக்ரஸ்தம்பம் வரை போக முடிந்திருக்கின்றது எனவும், காலை சீக்கிரமாய் மலை ஏற ஆரம்பித்தால் ஒழிய அங்கே சென்று திரும்ப முடியாது எனவும் எங்களைச் சமாதானப் படுத்தினார்.

எப்படியோ எங்கே போனாலும் நமக்கு ஒரு குறை மனதில் இருக்கணும் போல என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பெரும்பாலும் எல்லாருமே உக்ரஸ்தம்பம் பார்க்க ஏறாமல் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டே இருந்தனர். அதையும் காண முடிந்தது. மனதை வேறு வழியில்லாமல் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டி இருந்தது. அடுத்து இப்போது நாம் போய்க் கொண்டிருப்பது ஜ்வாலா நரசிம்மரின் சந்நிதி. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர் எங்கே வைத்தி இரண்யனை சம்ஹாரம் செய்தாரோ அந்தக் குகைக்கு இப்போது நாம் போகின்றோம். பயணம் கடினமானதே. இந்தப் பாதையிலே தொடர்கின்றோம். நாம் நம்முடைய பயணத்தை. கருடாத்திரி, வேங்கடாத்திரி இரு மலைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் அசல சாயா மேரு என அழைக்கப் படும் மலைக்குன்றத்தில் அமைந்துள்ளது ஜ்வாலா நரசிம்மர் சந்நிதி. பாறைகளைத் தாண்டிக் கொண்டும், மலையின் மீதிருந்து பொழியும் நீர்வீழ்ச்சியான பவநாசினி ஆற்றின் நீரிலும் நனைந்து கொண்டே செல்லவேண்டும். இப்போது மழைக்காலம் இல்லை என்பதால் நீரின் வேகம் குறைந்தே உள்ளது. மழைக்காலத்தில் அருவி மேலிருந்து பொழியும் பவநாசினி ஆறு வேகம் தாங்காமல் செல்லுவது கஷ்டம் என்பதால் பாறையில் ஆங்காங்கே பெரிய பெரிய சங்கிலிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பிடித்துக் கொண்டே செல்வதே பாதுகாப்பு. பவநாசினி ஆறு மேலிருந்து கீழே விழ, அனைவரும் கொண்டு வந்து தண்ணீர்க் குடுவைகளில் அவற்றைப் பிடித்துக் கொள்கின்றோம். சீக்கிரமாய் தரிசனம் செய்து கொண்டு வரும்படி வழிகாட்டி அவசரப் படுத்துகின்றார். அடுத்து இன்னும் இரு கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதோடு இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் பட்டாசாரியாரும் சீக்கிரமாய் வீடு திரும்பவேண்டும் என்பதாலும். தண்ணீரின் சுவை திரும்பத் திரும்பக் குடிக்கச் சொல்லுகின்றது. அரை மனதோடு நீரை விட்டுப் பிரிந்தோம் நரசிம்மரைத் தரிசிக்க. கீழே கிடு கிடு பள்ளம். அதில் விழாமல் செல்லவேண்டும் அவற்றில் முன்னால் தள்ளி அமைந்திருக்கும் ஒரு பாறையில் இயற்கையாய் ஏற்பட்டிருக்கும் ஒரு குகையில் கோயில். சந்நிதியில் முக்கியமாய் மூன்று விக்கிரஹங்கள். நடுவில் உக்ர நரசிம்மர். மஹா கோபத்துடன் இரண்ய கசிபுவை மடியில் கிடத்தித் தன் இரு கை நகங்களாலே கிழித்துக் கொண்டு இருக்கும் கோலம். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டு மடியில் இரண்ய கசிபு. இடக்கைகளில் ஒரு கை இரண்ய கசிபுவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, மற்ற இரு கரங்கள் குடலை வெளியே எடுக்கின்றன. குடல் மாலையாகச் சூட்டப் பட்டிருக்கின்றது. மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம்.

இரு கை கூப்பித் தொழுதவண்ணம் அருகே சற்றும் பயமின்றி பிரஹலாதன் காட்சி அளிக்கின்றான். குகை அந்த ஜனவரி மாசமும் நரசிம்மரின் உக்கிரத்தாலேயோ என்னமோ சூடாய் இருப்பதாய்த் தோன்றியது. உண்மையில் இந்த உக்கிரம் தாங்காமல் குகை வெகுகாலம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்ததாயும் பச்சைப் புல்லே பற்றிக் கொள்ளும் என்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சிற்பங்களின் வலப்பக்கம் நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வரும் அவதாரத் தருணம் மிக அருமையாய்ச் செதுக்கப் பட்டிருக்கின்றது. ஒரே இருட்டு. கவனித்துப் பார்க்கவேண்டும். இடப்பக்கம் இருவரும் சண்டைஇடும் கோலம்.

திரும்பும்போது படிகள் இருந்தாலும் அவற்றின் கீழேயும் கிடுகிடு பள்ளம் இருப்பதால் படிகளில் கவனமாய்க் கால்வைத்து இறங்கவேண்டும். குகைக் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நாம் வந்த வழியிலேயே நதி அருவியாய்ப் பொழியும் இடத்துக்கு அருகே ரக்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கே நரசிம்மர் ஹிரண்யனைக் கிழித்தபோது பெருகிய ரத்தம் ஆறாய் ஓடி அங்கே தேங்கியதாம். அங்கே தண்ணீர் இப்போது சிவந்த நிறத்திலேயே குண்டத்தில் காணப் படுகின்றது. கையில் எடுத்தால் தெளிவாய் உள்ளது. நரசிம்மர் குருதி தோய்ந்த தம் கரங்களை இங்கேதான் கழுவிக் கொண்டதாயும் ஐதீகம்.

மேல் அஹோபிலம் ஸ்வயம்பு நரசிம்மர் சுக்கிரதோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றனர். ஜ்வாலா நரசிம்மர் சனியினால் வரும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றார்கள். ஸ்ரீமாதா ம்ருத்யுஞ்சயர் எனவும் இவரை அழைக்கின்றனர். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகளில் இருந்து காத்தருளும் இவர் தொழிலதிபர்களையும் உருவாக்குவதாய்ச் சொல்கின்றனர்.

















Geetha Sambasivam

unread,
Mar 21, 2009, 5:18:19 AM3/21/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் - 12

அடுத்து நாம் காணப் போவது பார்கவ நரசிம்மர். படிகள் ஏறவேண்டும். படிகள் என்றாலும் சாமானியமாய் இல்லை. மலை ஏற்றம் கூடப் பரவாயில்லை எனும்படிக்குப் படிகள். படிகள் என்னமோ 150க்குள் தான் சொல்கின்றனர். ஆனாலும் நமக்கு அவை 15,000 போல் தெரிகின்றன. வேதாத்திரி பர்வதத்திலே அமைந்துள்ளது இந்தக் கோயில். கீழ் அஹோபிலம் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகளில் நுழைந்தே செல்லவேண்டும். நடு நடுவில் சீர் செய்யப் படாத காட்டுப் பாதைகளும் குறுக்கிடும். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. பல்வேறு விதமான பட்சிகளின் குரல்களில் இருந்து எழும்பும் இனிய இன்னிசைக் கீதங்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது கோயில். இன்னும் சிலபடிகள் மேலே ஏறினால் கோயில் சொல்லிக் கொண்டே நம்மை அழைத்துச் செல்கின்றனர். கடைசியில் வரும் எனக்காகச் சற்று நின்று கவனித்துக் கூட்டி வரும் அமைப்பாளர் சுரேஷ். நான் நிற்கும்போதெல்லாம் அவரும் எனக்குப் பின்னாலேயே நின்று விடுகின்றார். ஆசுவாசம் செய்து கொண்டு கிளம்பினால் பின்னாலேயே பாதுகாப்பாய் வருகின்றார். மற்ற அனைவரும் முன்னால் சென்றிருக்க, நாங்கள் இருவர் மட்டும் மெல்ல மெல்ல மேலே ஏறுகின்றோம். இந்தப் படிகளுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து யார் காவிப்பட்டையும், வெண்மைச் சுண்ணமும் அடிச்சாங்களோ தெரியலை. மனதில் ஈசன் குடி கொண்டால் எல்லாத்துக்கும் வேகம் வரும்போல.

அப்பாடி, இதோ நிஜமாவே வந்துட்டோமே! ஆனால் இது என்ன இங்கே ஒரு குளம் போல இருக்கே? ஆம், நிஜமாவே குளம் தான் இது. பார்கவ தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே எங்கே வந்தார்? வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி மகிழ்வித்திருக்கின்றான். என்ன? அவதாரத்துக்கே அவதாரம் பூஜித்ததா? எனத் தோன்றுகின்றதா? என்றால் ஆம். என்ன இருந்தாலும் பரசுராமர் ஒரு மானிடனாய்த் தானே தோன்றினார். விஷ்ணுவின் அவதாரம் என எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவே இல்லை அல்லவா? ஆகவே அவர் இறை சக்தியாகவே தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தியை வழிபட்டு இருக்கின்றார். இப்போ பார்கவ நரசிம்மரைப் பார்ப்போமா??

நரசிம்மர் இங்கே ஹிரண்யனை வதைக்கும் தோற்றத்தில்ல் தான் காட்சி அளிக்கின்றார். மடியில் ஹிரண்யன். இரு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். சங்கு, சக்ர தாரியாய்க் காட்சி அளிக்கின்றார். ஆஹா, இது என்ன? ஹிரண்யன் வாளை உயர்த்திய வண்ணம் காட்சி அளிக்கின்றானே? ஆம், ஹிரண்யன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன்! நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு! இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு! இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு! அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா? சிற்பத்தின் தோரணத்தில் சுற்றிலும் தசாவதாரங்களும் செதுக்கப் பட்டிருப்பதை பட்டாசாரியார் ஹாரத்தி காட்டி விளக்குகின்றார்.

இந்தக் காட்டில் தரிசனம் செய்யவே இவ்வளவு கஷ்டம் என நாம் நினைத்துக் கொண்டு அதையே ஒரு பெருமையாகவும் எண்ணிக்கிறோமே? இந்தச் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தக் குகைகளுக்குள்ளே வந்து சாப்பாடு, தண்ணீர் எது இருக்கோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இத்தகைய தெய்வீகச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றார்களே. அந்தக் காலத்தில் என்ன வசதி இருந்தது? சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் கண்ணார, மனமாரக் கண்டு, கேட்டு, பேசி, அனுபவித்தே செய்திருக்க முடியும். அத்தனை அழகு ஒவ்வொன்றும். பரிபூரணமாய் உணராமல் இத்தகைய தெய்வீகம் வராது. சந்நிதிக்கு வெளியே மஹாவிஷ்ணுவின் விக்கிரஹம் ஒன்றையும் செதுக்கி இருக்கின்றனர்.

பார்கவ நரசிம்மரைத் தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும் என்று சொல்கின்றார்கள். பாவங்கள் தொலைந்து மனதில் நிம்மதி உண்டாகும். கற்பனைத் திறன், கதைகள் எழுதும் ஆற்றல், கவிதை எழுதும் ஆற்றல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கவலை இல்லா மனம், நோயற்ற வாழ்க்கை, வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் போன்றவை கிட்டும் எனச் சொல்கின்றனர். அடுத்து நாம் காணப் போவது கடைசியான கராஞ்ச நரசிம்மர்.
Posted by கீதா சாம்பசிவம் at 1:45 AM















Geetha Sambasivam

unread,
Mar 23, 2009, 4:53:48 AM3/23/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 13

கராஞ்ச நரசிம்மரைத் தரிசிப்பது மிகவும் எளிது. மேல் அஹோபிலம் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வண்டிப் பாதையிலேயே சற்றே தள்ளி அமைந்துள்ளது. என்றாலும் செளகரியத்தை உத்தேசித்துக் கடைசியில் இங்கே தரிசனம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது. கருடாத்ரி மலையின் மேற்கே அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். வாகனங்கள் வரும் சாலையில் அடர்ந்த மரங்களின் நிழலில் பார்த்தாலே ஒரு அருமையான சோலை போன்ற இடத்தில் அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். ஆலயம் புதுசாய்த் தெரிகின்றது. விசாரித்ததில் அண்மையில் புதுப்பித்திருப்பதாய்ச் சொல்கின்றன. நுழைந்ததும் ஒரு மண்டபம் முகப்பிலேயே, சிற்ப வேலைப்பாடுகளுடன். மண்டபத்தைத் தாண்டினால் இடப்பக்கம் ஆஞ்சநேயர், கராஞ்ச நரசிம்மரைப் பார்த்தபடிக்குக் காட்சி அளிக்கின்றார். இரு கைகளையும் கூப்பியபடி காட்சி அளிக்கும் அஞ்சனை புத்திரன் சந்நிதிக்குச் சற்றுத் தள்ளி கராஞ்ச நரசிம்மர் சந்நிதி. நரசிம்மரை ஒரு கணம் பார்த்துவிட்டுத் திகைப்புடன் மீண்டும் பார்க்கின்றோம். என்ன இது? வில்லா? ஆம் வில்லே தான். கையில் வில் ஆயுதத்துடன் நரசிம்மரா? வியப்பிலும் வியப்பாய் உள்ளதே?

ஆம், வில் ஆயுதத்துடனேயே நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். யாருக்காக?தன் அருமைத் தோழனும், தொண்டனும் ஆன ஆஞ்சநேயனுக்காக. ஆஞ்சநேயருக்காக நரசிம்மர் ஏன் வில் தரிக்க வேண்டும்? ஆஞ்சநேயர் இந்த மலைக்கு வந்து கருங்காலி மரத்தின் கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். கருங்காலி மரம் தான் கராஞ்ச விருக்ஷம் எனப் படுகின்றது. ஸ்ரீமந்நாராயணன் தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தான். நரசிம்மன் அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன்?” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “இது என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே! என்னில் ராமனைக் காண்பாயாக!” என்று சொல்கின்றார். ஆஞ்சநேயர் நம்மளைப் போல பிடிவாதக் காரர். (பிள்ளையார் தான் வரணும்னு நான் சொல்லி இருப்பேன்) ஒத்துக்கவே இல்லை.

“ஆஹா, நீ என்ன சிங்க முகத்தோடும், மனித உடலோடும் வந்து நீயும், ஸ்ரீராமனும் ஒன்றே என்கின்றாய்? யாரை ஏமாத்தப் பார்க்கிறாய்? என் ஸ்ரீராமன் எத்தனை அழகு? எவ்வளவு செளந்தரியம்? ,முகத்தில் என்ன சாந்தம்? கண்களின் கருணையைச் சொல்லவும் முடியுமோ? இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள்? இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே? மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான்? வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ? என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக! என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ!” என்று சொல்லவும், உடனேயே ஆஞ்சநேயர் கண்களில் வில்லும், அம்பும் ஏந்திய ஸ்ரீராமன் தென்பட்டான். ஆஞ்சநேயர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே ஒரு கணம் ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடிக்க ஸ்ரீமந்நாராயணன், தோன்ற, உடனேயே அதே ஆதிசேஷன் படமெடுத்த குடைக்கீழேயே நரசிம்மர் வலக்கையில் சக்ரத்தோடும், இடக்கையில் வில்லோடும் காட்சி அளிக்கின்றார். ஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது.இந்த வித்தியாசத் திருக்கோலத்தோடேயே கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். கராஞ்ச நரசிம்மர் சந்நிதியிலும் ஆரத்தி முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் சடாரி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வழங்கப் படுகின்றது. மணியும் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அனைவரும் காலை ஆகாரம் என்று பெயரளவில் சாப்பிட்டதே. இப்போது தான் எல்லாருக்கும் பசி, சாப்பாடு என்ற உணர்வே ஏற்பட்டது. கராஞ்ச நரசிம்மர் கோயில் இருந்து வரும் வழியில் தென்படும் நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமை வாய்ந்ததாய்த் தென்படுகின்றது. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே இங்கே முதலாம் ஜீயர் ஸ்ரீமத் சடகோப யதீந்திர மஹாதேசிகர் பல்வேறு விதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.

கராஞ்ச நரசிம்மர் கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். இவர் ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருளுவார். ஞானிகள், மருத்துவ மாமேதைகள் உருவாவதற்கும் இவரின் கடாட்சம் தேவை என்று சொல்லப் படுகின்றது. கருடாத்திரி மலையின் மேற்குப் பகுதியில் கருங்காலி மரத்தினடியில் எழுந்தருளி இருக்கும் இவரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் விடுதிக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டு, இரவு எட்டு மணிக்குப் பேருந்து அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைகின்றது. இத்துடன் அஹோபிலப் பயணம் முடிவடைந்தது.

















Reply all
Reply to author
Forward
0 new messages