வள்ளுவநாடு

1,405 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 19, 2019, 11:42:14 PM11/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கோவைக்கு வடக்கே உள்ள ஊர் துடியலூர். அவ்வூர்க் கிழார் சிதம்பரனார். திருமந்திரமணி எனப் பெயர் அவருக்குண்டு. காவல்துறை அதிகாரி. துடியலூர் துடிசை என வழங்குவது. சுந்தரர் வந்து இருந்து விருந்துண்ட பதி இது. அ. சிதம்பரனார் துடிசைகிழார் என்று அறியப்பட்டவர். அவர் மொழியியல் ஆராய்ச்சியால் மரைக்காடு என்ற பெயர் மறைக்காடு என்றானது என அறிவித்த சைவசிகாமணிகளில் ஒருவர்.

வள்ளுவநாடு என்ற பெயர் கொண்ட வட்டம் (தாலூக்கா) இன்றும் பாலக்காடு மாவட்டத்திகண் உள்ளது. இதன் அரசர்களுக்கு “வள்ளுவ கோனாதிரி’ என்ற பெயர். http://devarbook.blogspot.com/2009/08/blog-post_3621.html
வள்ளுவநாடு பற்றிக் கல்வெட்டுகள் உள்ளதாகப் புலவர் செ. இராசு (கல்வெட்டறிஞர், தமிழ்ப் பல்கலை) குறிப்பிடுகிறார். 
நாஞ்சிலாறு என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சிமலை, உடுமலைப்பேட்டை, அருகேயும் உள்ளது.
இந்த வள்ளுவநாடா? குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவ நாடா? - புறநானூற்று நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி என அறுதியாகக் கூற இயலவில்லை.மேலும் ஒன்று: வள்ளுவநாட்டுக் கோனாதிரிக்கு வல்லபன் என்ற விருதுப்பெயரும் உண்டு. தமிழிலே உள்ள வள்ளுவன் என்ற பெயர் இருவழிப் பிறப்புடையது. (1) வல்லபன் என்ற வடமொழிப்பெயர் வல்லுவன் >> வள்ளுவன் என வரும். ஸ்ரீவல்லபன் கல்வெட்டில் சிரீவல்லுவன் எனக் குறிக்கப்படுகிறான். (2) வள் வார் முரசம். முரசுப் பறை அறையும் வள்ளுவன் பற்றிக் கொங்குவேளிர் தாமியற்றிய பெருங்கதையில் குறிப்பிடுகிறார். இது தமிழ்ச்சொல் ஆகும். ‘வள் வார் முரசம்’ (சங்க இலக்கியம்) முரசில் வாரை விசித்துக்கட்டும் தொழிலால் ஏற்படும் பெயர் இது. இந்த இருவழிப் பெயராக உள்ள வள்ளுவன் என்ற பெயரால் நேர்ந்த குழப்பங்கள் பல. 19-ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மிஷநரிகள் 
வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர். ஆனால், புலைமகள், பிராமணன் ஒருவனுக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற பிற்காலக் கதைகளுக்கும், குறள் செய்த வள்ளுவப் பேராசானுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ்ப் பேராசிரியன்மார் நூலெழுதி அவர் வேளிர் குலத்தவர் என நிறுவினர். இதற்கெல்லாம், இன்றும் சேரநாட்டில் உள்ள வல்லப கோனாதிரி மரபினர் வாழும் சாட்சிகளாக இருக்கின்றனர். இப்பகுதி வளமனைகள் தரவாடுகள் பெரியவை. கொங்கன்படை, கேரளாவில் உள்ளவை. புலவர் செ. இராசுவின் “செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர்” நூலில் காண்க.

வள்ளுவன் என்ற பெயரொப்புமை கருதி, திருவள்ளுவர் நாஞ்சில் நாட்டார், பாலக்காட்டார் என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், நமக்கிருக்கும் பழைய நூற் சான்று: திருவள்ளுவமாலை தான். அதில் கீதை சொன்ன கண்ணன் ஊர் வட மதுரை (உத்தர மதுரை), அது போல, உலக மக்களுக்கு குறள் சொன்ன வள்ளுவர் ஊர் தட்சிண மதுரை என்றுள்ளது. இதில் கண்ணன் பிறந்த ஊர் போல, பாண்டிநாட்டு மதுரை வள்ளுவருக்கு என்றாவதால், அவரது சொந்த ஊர் மதுரை என 12-ம் நூற்றாண்டில் கருதிஉள்ளனர் என அறியலாம். அநுபங்கி என்று ஜைந சமயத்தின் முக்கியக் கோட்பாடு. சப்தபங்கி என்ற பெயர் இதற்குண்டு. ஜைந சமயத்தின் மாதா, தாய் போன்றவர் என்பதை இவ்வெண்பாவில் காணமுடிகிறது. மேலும் நப்பின்னை என்ற கண்ணனின் காதலி, நீளாதேவிக்கு அநுபங்கி போல, வடமொழிக்கு நப்பின்னை என்ற பேரை மொழிபெயர்க்கிறது: உபகேசி. பிராமணன், புலைச்சி மகன் திருவள்ளுவர். எப்போதும் போல, அருணகிரிநாதர் அப்போது வழங்கிய கதையை, வேடுவச்சி வள்ளிக்கு திருவள்ளுவர் சகோதரி என்று பாடுகிறார். திருமுருகாற்றுப்படை ஏரகம் (திருச்செங்கோடு - மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், புலவர் செ. இராசுவின் ஆசிரியர்) சுவாமிமலைக்கு மாற்றுபவர் அருணகிரிநாத சுவாமிகள். அதே போல, ஆத்தி புஷ்பம் தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) சிவனுக்கு என முதலில் பாடுபவர் அருணகிரியார். அதே போல, வள்ளியின் சோதரர் வள்ளுவர் என பெயரொப்புமையை அழகாகப் பாடியுள்ளார். வள்ளி:வள்ளுவன் வள்- ‘வள் வார் முரசு’ ... 

மேலும், வள்ளுவர் ஊர் மதுரை என்னும் பழைய நூற் செய்தியை, தமிழர்களிடை வழங்கிய
சமய மாற்றங்களைக் கூறும் பாடலை ஆராய்வோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 19, 2019, 11:53:56 PM11/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
துடிசைகிழார் வள்ளுவநாடு - வல்லப க்ஷிதி பற்றிக் குறிப்பிடும் பகுதியைத் தந்துள்ளார்.
புறநானூற்று வள்ளுவநாடு இந்தச் சேரநாட்டு (வஞ்சி (கரூர்) தலைநகர்) உள்நாடா?
அன்றேல், தென்பாண்டி நாட்டு வள்ளுவநாடா?. உறுதியாகத் தெரியவில்லை.




valluvanaadu.jpg


சிதம்பரனார் நூலில் உள்ள படம்.

வள்ளுவ என்பது சேரநாட்டுடன் தொடர்பு இருக்கும் இடம் - அங்குதான் இன்றும் வள்ளுவருக்குப் பல கோயில்களும் இருக்கிறது என்பதும் ஒத்துப் போகிறது 


குமரி அருகில் ஒன்று வயநாடு அருகில் ஒன்று இரு வள்ளுவ நாடுகள் 


The ruler of the kingdom was called ValluvakkonathiriValluvakkonathiri was also known by the names like Vellaattiri, Vallabhan, Rayiran Chathan, Chathan Kotha and Arangottu Udayavar.

Valluvanad Dynasty is considered to be of very ancient lineage. It's believed that Valluvanad was the land of the Valluvar people. But, Unnu Neeli Sandesam and Unni Yadi Charithram contain a mention of Vallabha Kshiti ("home of Vallabha") or Vallabhakshoni, the land of Prince Vallabha, which, by all indications, is likely to be Valluvanad. So, some say that Valluvanad Kings are descendants of a Pallava prince "Sreevallabha". It's said that he moved the entire family from Srivilliputhur in north Tamil Nadu to the area around the Nila River about 4th century CE.


வள்ளுவர் - வள்ளுவ நாடு நிறைய ஒற்றுமைகள்.


ஆதி பகவனுக்கும்  பிறந்தவர் என்ற புனைவுகளை ஒதுக்கிவிட்டு வள்ளுவர் குறளில் இருந்து அகச்சான்றும், கேரள வரலாற்றுச் செய்திகளில் இருந்து புறச் சான்றுகளும் கொண்டு நாயனார், வல்லபர் இவற்றுக்கான தொடர்னுகழி மீண்டும் ஆய்வு செய்யத் தேவை. 


On Tuesday, November 19, 2019 at 12:16:37 PM UTC-8, S Roy wrote:
A couple of valluvanad (Malappuram) websites



Best,
Sujata

N. Ganesan

unread,
Nov 20, 2019, 2:00:07 AM11/20/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Nov 19, 2019 at 9:34 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

வள்ளுவ  +  நாஞ்சில் + அதங்கோடு  என்ற  மூன்றும் 
குமரி முனை பகுதியிலும் இருக்கிறது
கொங்கு பகுதியிலும் இருக்கிறது.  

அதங்கோடு போலவே ஒலிக்கும் பகுதி பாலக்காட்டுக்கு அருகில் ...அறங்கோடு
பாலக்காட்டு பகுதி வள்ளுவநாடு அறங்கோடு  என்றும் அறியப்படுகிறது.

ஆம். ற என்பதை ஆங்கிலத்தில் மொழியியல் அறிஞர் (உ-ம்: பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி)
alveolar  ṯa என்பர்.  ற (= ṯa) ட என்றோ, த என்றோ மாறும் இயல்பினது.
அறங்கோடு உச்சரிப்பில் அதங்கோடு என்றும் ஆக சாத்தியமுண்டு. 

 (1) எற்- 
பதறு- பதற்றம், பதட்டம், பதத்தம் என்றாவதை இ. அண்ணாமலை குறிப்பிட்டார்கள்.

எற்று- பந்தை எற்றி உதைத்தான் (alveolar t)
எத்து- பந்தை எத்தி உதைத்தான் (dental stop t)
எட்டு - பந்தை எட்டி உதைத்தான் (retroflex t)

(2) செற்-
செறி-  (alveolar t)
செதி- (செதில் - scales of fish) (dental stop t)
செடி  (retroflex t)


எண்ணுப்பெயர்கள் 1-5 பற்றிக்கூறியுள்ளேன். ஆறு என்னும்
பெயர் பற்றிப் பின்னர் பார்ப்போம். அதில் alveolar  ṯa (ற)
எப்படி இயங்குகிறது என ஆய்வோம்.
தமிழில் எண்ணுப் பெயர்கள்
 

The ruler of the kingdom was called .....  Arangottu Udayavar.


அதங்கோட்டாசான் ஒரு பழம் பெரும் தமிழ்ப் புலவர். இவர் வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.


 வள்ளுவன் என்பதும், விளவம் என்பதும் வெவ்வேறு தமிழ்ச்சொற்கள். வள்ளுவரைக் குமரி மாவட்டம் என்று காட்ட
இப்படி மாற்றம் என எழுதப்பட்டுள்ளது. கருவிளம், கூவிளம் விளவத்தின் இரு பிரிவான தாவரங்கள். விளவங்கோடு, விளாங்கோடு, கோவை அருகே விளவக்குறிச்சி/விளாக்குறிச்சி உண்டு. அங்கே மருதாசலனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தனர். மதுரை அருகே விளாச்சேரி. பரிதிமாற்கலைஞர் ஊர். பல குயவர்கள் வாழு ஊர் என ப. பாண்டியராஜா எழுதினார். விளாங்கோடு/விளவங்கோடு பெயர்க்காரணம் வேறு. அதில் வள்ளுவன் இல்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 21, 2019, 1:00:04 AM11/21/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
  On Mon, Nov 18, 2019 at 10:10 PM S.P.SENTHIL KUMAR <senth...@gmail.com> wrote:
>
> திருவள்ளுவர் பிறந்த ஊருக்கு சென்றிருக்கிறேன். அவரைப் பற்றி ஏரளமான ஆய்வுகள் செய்த முனைவர் எஸ்.பத்மநாபன் அதற்கான ஆதாரங்களையும் இங்கு சொல்லியிருக்கிறார். 2013-ம் ஆண்டு பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையை இங்கு அப்படியே தருகிறேன். இவர் சொல்வதும் நம்பக்கூடியதாகவே இருக்கிறது.
>
>

நன்றி, திரு. செந்தில் குமார்.
உங்கள் 2015 வலைப்பதிவைப் பார்த்தேன். https://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_27.html

எஸ். பத்மநாபன் நல்ல நண்பர். அவரது கட்டுரைகள் ஓம்சக்தி பத்திரிகையில் (கோவை) வெளிவந்துள்ளன.
பல ஆண்டுகளாக அவர் பதிப்பிக்கும் பத்திரிகைக்கு நிதியுதவி அருட்செல்வர் நா, மகாலிங்கம்
அனுப்பி வருகிறார். இன்றும் அத்தொகை வந்துகொண்டுள்ளது என்றார்.

நான் நாகர்கோவில் சென்றபொழுது 2 நாள்கள் அப் பகுதிக் கோவில்களுக்கு அழைத்துச் சென்று
விளக்கினார். முக்கியமாக, நாகராஜா கோவில் எப்படி பார்சுவநாதர் கோவிலாக இருந்து அனந்தகிருஷ்ணன் கோவில் என திருவிதாங்கோடு ராஜ்யத்தில் மாறியது எனக் காட்டினார். பல தூண்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன. மூலவரும் பார்சுவநாதர் சிற்பம் தான். பத்மாவதி யக்‌ஷி, பார்சுவநாதர் ஆலயங்களின் நடுவே சிவனுக்கு சன்னதி இடையிலே சேர்க்கப்பட்டுள்ளது. நானும், கல்வெட்டு ஆய்வர் துரை. சுந்தரமும் சென்று பார்த்தோம். பின்னர் அடுத்த நாள் பல தலங்கள் பயணம்.
சுசீந்தரம். கவிமணி தேவி நினைவகம், அதன் அருகே உள்ள அவலோகிதர்-தாரா தேவி : அரிய சோழர்காலச் சிற்பங்கள் உள்ள தேரூர் சென்றோம். தேரூர் < தேரரூர். தேரர்கள் இலங்கை பௌத்தர்கள்.

அவர் கூறும் கருத்துகள் பலவும் பொதுவானவை. வெள்ளம் தண்ணீர் என்பது மலையாளத்தின் தாக்கம். நம்பூதிரி மரபை வள்ளுவர் பாடினார் என்பது சற்று அதிகம். மேலும், சேரநாட்டு வள்ளுவநாடு குறித்த
ஆவணங்கள் தொகுக்கப்படல் வேண்டும். உணக்குதல் கொங்குநாட்டிலும் பயனில் உள்ள சொல்தான்.
வாட்டுதல் என்று நெருப்பில் இட்டு சமைத்தலுக்குப் பயன்படும் சொல். 

நயினார் என்பது தலைவர் என்ற சொல். ந. தெய்வசுந்தரம் என்ற மொழியியல் பேராசிரியர் திருநெல்வேலி. நயினார் என்பது அவர் தந்தையார் பெயர். வட ஆர்க்காடு மாவட்டத்தில் சமணர்களை நயினார் என்று அழைப்பது வழக்கம். அ. சக்கரவர்த்தி நயினார் பெரும்பேராசிரியராகப் பணியாற்றியவர். திருமூர்த்தி, திருநயினார் என்பதெல்லாம் தீர்த்தங்கரருக்கு ஆன பெயர்கள். திருநயினார் குறிச்சி என்னும் இடமும் அவ்வாறே பெயர்பெற்றது. இந்தப் பொதுப்பெயரை, கடவுள் பெயரை வைத்து திருவள்ளுவர் இங்கே பிறந்தார் என்பது வரலாற்றாய்வில் நிற்காது. வள்ளுவர் என்ற பெயரைக் கொண்ட இடங்களும், நாடுகளும் மிகுதி. வேளிர் குலங்களில் ஒரு பெயர் அது. குறளின் ஆசிரியர் பெயர் நமக்குத் தெரிவதே ஒரு நூலினால்தான். அந்த நூலில் வள்ளுவர் பிறந்த ஊர் மதுரை என்று உள்ளது. அவர் சமணர் என்ற குறிப்பும் உள்ளது. அவரை ஹிந்து ஆக்கும் முயற்சியும் உள்ளது.

சுஜாதாவுக்கு எழுதிய மடல் இணைக்கிறேன்:
On Tue, Nov 19, 2019 at 7:55 AM S Roy <suji...@gmail.com> wrote:
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள் எல்லாம் பழந்தமிழ் சொற்கள் தானே? இவை இன்றும் மலையாளத்தில் காணப்படுகின்றன.பழந்தமிழ் மருவியது தானே மலையாளம். ஆதலால் பழந்தமிழை ஆராய்ச்சி செய்ய மலையாளமும்  உதவும். இந்த சொற்களை வைத்து வள்ளுவர் கன்னியாகுமரியில் பிறந்தார் என்று சொல்லமுடியுமா?

வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு இந்த பெயர் எப்பொழுது கிடைத்தது? வள்ளுவரும் அவரது மனைவியும் அங்கு சென்றார்கள் என்பபதற்கு என்ன தெளிவு உள்ளது?

If you look at the words, and arguments, they so common in old Tamil, we cannot say anything about
TiruvaLLuvar belonging to VaLLuvanADu. vaLLuvan word is derived from two linguistic heritages
(1) Indo-Aryan (2) Dravidian. Like KaNNan, VaLLuvan in Sangam literature comes from Indo-Aryan heritage.
VaLLuvan from Dravidian heritage is attested centuries after Sangam texts.

Thanks for pointing out the VaLLuvanADu in Chera country (Palghat). That is the area renowned
for Nambutiri traditions.

The only source in old Tamil texts on the native place is TiruvaLLuvamaalai, his name is
attested first in this work only, and according to this book (may be from 12th century),
TiruvaLLuvar was born in Madurai just like Krishna (of Bhagavad Gita fame) was 
born in Mathura in North India. That evidence from an important text on TiruvaLLuvar
cannot be easily thrown out. That's all the evidence we have got on TirukkuRaL's author.
Linking TiruvaLLuvar to VaLLuvanATu either in Chera country or in Pandya country
lacks evidences.

Best,
N. Ganesan

பத்மநாபனின் சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். அவை ஆசை பற்றி அறையல் உற்றவை.
இருக்கிற வள்ளுவநாடுகளைப் பற்றி முழுமையாக அவர் ஆராய்ந்து சொல்லவேண்டும்.

கருணாநிதி வள்ளுவர் சிலையை இந்தியாவின் கோடியில் அமைக்க காரணங்கள் உண்டு.
அது பற்றி அவருக்கு முன்பே கூட்டங்களில் பேசினவர்கள் உண்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 21, 2019, 7:33:37 AM11/21/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Theodore Baskaran
///( என் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் ஒருவர்). 10 பாக்களையும் 'சிறு' திருத்தம் செய்வார்
1) ஆதி பகவன் --- ஆதி பகலன் (sun is the prime for existence of life, ---- later he says water,  farmers etc)
2) வாலறிவன் -- நாலறிவன், (going with an experienced guy is important after reading tomes)/// nkantan wrote 1day ago

தமிழர்களின் பெருஞ்சமயமாக 20-ஆம் நூற்றாண்டில் விளங்குவது சைவம். அதில் எல்லீஸ், கால்ட்வெல், ...
போன்றோர் தந்த புரட்சிகரமான கண்டுபிடிப்புகளால் தனித்தமிழ் பக்கம் நகர ஆரம்பித்தது.
தமிழ் இலக்கியங்களில் வரும் நான்மறை தமிழில்தான் இருந்தது. இப்போது அழிந்துவிட்டது.
வேதம் என்றால் தமிழில் இருந்த பழைய நூல்கள். ஆகமங்கள் இங்கேதான் உருவாகின ...
ஆதாரமற்ற இவற்றுக்கு புஸ்தகங்களை சைவவேளாளர் செய்யலாயினர். உங்கள்
விஞ்ஞான ஆசிரியர் திருத்தங்களின் பின்புலம் இதுதான்.

அப்போது, தமிழ்ச் சமூகத்தில் மிகச்சிறுபான்மையராக விளங்கும் தமிழ்ச் சமணர்கள்
தங்கள் மரபுகளை, வழிவழி இலக்கியங்களில் உள்ள கருத்துகளை எப்படி
திருவள்ளுவ தேவர் பாடியுள்ளார் என விளக்க முன்வந்தனர். முதல் நான்கு அதிகாரங்களும்
சமண சமயத்தில் என்னென்ன என விரிவாக அறிவுறுத்தினர். இது சைவர்களுக்கு
சிக்கலைத் தோற்றுவித்தது. இதனால் தான் முதல் அதிகாரம் இடைச்செருகல்
என்பது போன்ற செய்திகளை சைவம் பரப்பலாயிற்று. பின்னர் தொல்லியல்
கண்டுபிடிப்புகள் சமணத்தின் மேன்மையான நிலையைக் காட்டியது.
கடைசியாக எல்லீஸ் வெளியிட்ட நாணயத்தை ஐராவதம் ஆய்வுக்கட்டுரையில்
தந்தார்கள்.

தமிழ்ச்சமணர்கள் பற்றி, காந்திஜி, ராஜாஜி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, ஐஏஎஸ்
கட்டுரை. உமாமகேசுவரியின் நூலுக்கான அறிமுகம்.
https://frontline.thehindu.com/books/article29499338.ece  

நா. கணேசன்
நாகர்கோவில் பத்மநாபன் பாலக்காட்டு வள்ளுவநாட்டின் பழைய சரிதத்தையும் சொல்லவேண்டும்.
நண்பர் எஸ். பத்மநாபனை சந்திக்கும் வாய்ப்பு இந்தத் திருக்குறள் மாநாட்டிலே.
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html  

>அது தான் அறிவியல் கண்ணோ?!
இலக்கியத்தைப் பார்ப்பதில் ஆபத்தான கண்!!
சக
....  
https://frontline.thehindu.com/books/article29499338.ece  
JAINAS IN TAMIL NADU

The story of Tamil Jainas

GOPALKRISHNA GANDHI
Print edition : October 11, 2019T+ T-

The book brings into sharp clarity not just the fact of Tamil Jainas but the meaning of identity and the loss by its blurring in a self-preoccupied and myopic society.

JAINAS in Tamil Nadu, yes. But as northern India’s distinctive gift to the south. Mainstream Jainas, they are called. Marwaris doing business in the State, pawn-broking from behind grilled doors, speaking a confident if quaint Tamil; their womenfolk in distinctive attire, heads and even faces covered, are a familiar feature of Tamil Nadu’s urban and suburban life. Their philanthropy is prodigal, if their business practices are shrewd. Sensing a growing market for different foods, they run a thriving Jaina food chain in Chennai, with restaurants and home deliveries of their own distinct vegetarian, non-tuber victuals.

A Gujarati Jain lady in south Chennai who has been supplying quality food to many in her neighbourhood has only recently and reluctantly included the potato in her range—“Everyone we served urged …please, add potato.” An educational society set up by them runs a college in Chennai and aids several schools.

For a reason I cannot fathom, they have shown a lively interest in assisting people, invariably poor people, suffering from ophthalmic conditions. Eye camps have been organised by them with zeal and generosity. This has saved eyes, won hearts.

But the concept of a Tamil Jaina, in the sense of a Tamil who is Jaina, or a Jaina who is Tamil, is intriguing, and fascinating. A Tamil Christian or a Tamil Muslim would, to use a Tamil-English expression, be “normal only”, but a Tamil Jaina? That person would come as a surprise as much as, say, a Tamil Sikh would. But this impression is wholly ahistorical, the result of our—us Indians’—typical ignorance of and indifference to our surroundings, especially human surroundings.

The Tamil Jaina is and has been for centuries a fact. Yet most of us, the non-Jaina majority, have not noticed her or him. It is of course all too easy to assume the Tamil Jaina to be a Tamil Hindu. He or she does not look, speak or dress any differently from a Tamil Hindu.

I mentioned ophthalmic conditions in a preceding paragraph. Opticians have in their stock an array of trial lenses which they slide into an empty test-frame for their visitor to read the chart on the wall in front. The enlarged A being read easily, the less enlarged X and O in the line below is also easy enough, but trouble starts with the smaller T V H in the third line and becomes big-time trouble in the fourth line with the hazy U…or is it O…A…M…no…X. Then off goes the trial lens and in comes another to either make the hazy three letters hazier or spring into the sharpest view, which is when you say: “Right! Very clear—U A X !”

R. Umamaheshwari’s Reading History with the Tamil Jainas (Springer, 2017), which has an important subtitle, A Study on Identity, Memory and Marginalisation, is like the perfect new lens. It gives us a major corrective to our intellectual understanding, bringing into the sharpest clarity not just the fact of the Tamil Jainas but the meaning of identity and the loss by its blurring in a self-preoccupied and myopic society. Based on her PhD thesis, this book is a pair of lenses that tests our knowledge of our knowledge, our ignorance of our ignorance. It gives us clarity. And the reader then wants to say: “Right, I can see that. Very clear.”

Jainas of Thanjavur

Going through its pages made me recall the time when I first became aware of Tamil Jainas. This was in Thanjavur, in the year 1969. I had just joined duty in the district as an Assistant Collector under training. The District Collector was T. V. Antony, an exemplary and esteemed officer who told me on my first call on him that after “taking over” in the collectorate, I should meet the “HS” to learn all there is to be learnt about the working of that office. Too nervous to ask him what “HS” meant, I later asked Appavoo, the kindly clerk who had been assigned to me—a genius of his own type—what those initials meant. “Huzur Sheristadar”, he said, pronouncing the two words of Persian ancestry with as much respect as their aural scope permitted, and went on to explain that the HS was generally the prop and pillar of the collectorate. On my asking what the HS’ name was, he said, again with a respect bordering on awe: “Parsvanathan.”

“Pars…?”

“Aaamaanga Sir, Parsvanathan… Jaina.”

“Jaina? From up north, settled here?”

“Illinga Sir, native. Native Tamil Jaina. Tanjore Jaina.”

The handsome Thanjavur Collectorate (now a museum), built in 1896, had the Collector’s chambers on its first floor. Going from there down the spiral stairway to the HS’ chambers located for petitioners’ convenience, on the ground floor, I entered the second or third biggest room in the building. This only befitted the HS’ station and rank. Meeting the HS was an experience of its own kind. He was big in every sense. Portly, beaming, he rapidly explained to me in a mix of Tamil and English all that the collectorate was about, the kind of petitions it received, how they were registered and distributed to various sections for “action”, what my work as a magistrate would entail. Tuition over, he paused to answer questions. I had almost none for the HS but did, for Parsvanathan Sir.

Answering my questions about his name, he said it derived from one of the 24 Jaina Tirthankaras (I did not know then they numbered 24). And when I queried him further about Tamil Jainas, he said with becoming modesty that he was not a scholar of the subject but could say that they numbered a few thousand thinly spread all over the State and that Thanjavur district itself had a small but old Jaina population in the countryside as also “many Jaina shrines”. I noted his using the word “shrines” in preference to “temples”.

I came away from that first meeting with Huzur Sheristadar Parsvanathan pondering the significance of a Tamil Jaina holding a Persian-origin office in the highly Saivite district of Thanjavur of which the immensely popular Collector was a Syrian Christian.

Another thought occurred fleetingly to me. If there are Jainas “in the countryside” of Thanjavur, they must be into agriculture. How does that square with what I have read in Romila Thapar’s Ancient India about Jainas regarding cultivation as inherently violent on account of what the plough does to creatures living on and beneath the soil? But what with a tight schedule of training under the vigilant eye of Collector Antony taking over my days, I soon forgot all about Jainas, Tamil or otherwise.

Posted next as Assistant Collector in Tindivanam, I got to know a mainstream Jaina in the town. He was a popular figure in the town’s civic life and went on to become a Member of the Legislative Assembly. Although I had gathered that some Jainas lived in and around the town of Gingee, with its big boulders and stunning fort, neither chance nor design made me visit the Jainas there, a singular lapse and regret on my part.

Sittannavasal

I would have remained disconnected with the subject but for my visits, over 1974 and 1975, to Tamil Nadu’s Pudukkottai district while editing the District Gazetteer. I had read about the Sittannavasal rock and caves in Romila Thapar’s work and in K.M. Panikkar’s Survey of Indian History. But now the rock itself loomed into view, large as life, overshadowing by its sheer physicality anything one may have read or heard about it. The imposing massif of magnificent height and width rose from the plains in an audacious surge. An eagle gyrated above us as my colleagues and I approached the famous cave in which reposed bas-reliefs of Tirthankaras (including Parsvanatha) and others. It was dark inside and I took a minute or two to be able to even make out the faint frescoes on its walls. The Samava-sarana, or “Heavenly Pavilion”, motif made sense slowly but clearly, with its elephants and buffaloes, geese and lotuses and damsels.

Two visitors came over the next few months to see and write about it for the Gazetteer—M. Krishnan, the photo-naturalist, and Salim Ali, the great birdman. Krishnan, to photograph and write about the animal themes in the painting, and Salim sahib to comment on the bird motifs. I accompanied them. There is no such thing as seeing too much of Sittannavasal. Krishnan took some remarkable photographs of the cave and frescoes in natural light but was unimpressed by the depiction of the elephants. They look neither Asian nor African, he declared. And as to the geese, he muttered something to the effect that they were neither fish nor fowl.

Salim sahib took a long and close look at the frescoes and did some identifications, but he too felt the bird portrayals reflected poor observation skills. But both of them—like I had been—were quite taken up by the site itself. The dark and long and jagged-stone covered karadi guhai (bear cave or tunnel), through which we crawled, made arrival at the exit a matter of relief as well as rapture.

The cave tunnel opens to what is about the most precipitous surface that can be imagined. Sloping on to a sheer drop of several hundred feet, its granite surface has some 17 “beds” carved on it with “pillow arrangements” at one end. Jaina ascetics rested on those after their severe penances, or perhaps did their penances on them. If any of them slept too soundly and unwittingly turned, he would have rolled straight down to a nirvana other than the one he was striving for. The rigour and perseverance of the carvers and the meditators is something to behold, contemplate on. Most of the beds have inscriptions.

Sittannavasal represents a peak of attainments—aesthetic, spiritual, physical. Said to have been “active” for a full millennium from the first century BCE to 900 C.E., with Tamil Brahmi Jaina inscriptions having been discovered in rock-cut caves or natural caverns across Tamil Nadu, the iconic Tamil anthologies Purananuru and Cilappatikaram replete with Jaina references, one cannot but ask when did that Tamil Jaina culture commence, when did it peak, and when did it begin to retreat, where to and why?

In her book, Umamaheshwari seeks to ask these and more questions of herself and answers them with what can only be called academic stoicism. She does not spare herself any exertion, any exploration, whether from work on texts or work in the field. Going by epigraphs, literature and available research on the subject and then enriching textual knowledge by conversations with Tamil Jaina communities in her real time, she excavates the story of Tamil Jainas.

And what a story it is, from Sittannavasal to now!

Minuscule minority

She tells us that in 2003, according to the Jaina Youth Forum, Tamil Jainas numbered 32,700, which makes them a minuscule minority. But then Jainas as such, at an aggregated population of about seven million today, are exactly that the world over. She quotes A.P. Aravazhi, president of the Samanar Peroli Iyakkam, as saying on the Jainas’ avocations, “Most of us are agriculturists. Some of us are self-employed, a few employed in small positions in shops and some other vocations…”

As one goes through the heavily researched, closely annotated and cross-referenced work what emerges, like the Sittannavasal outcrop, is an imposing swell of happenings and achievements that encompass a range of human endeavour.

The one fact that emerges emphatically from the book is that Tamil Jainas are saturated in Tamil. That is the language of their roots and all their branches. It is for them not just a major identity marker; it is for them a source of sustenance and pride. They believe without a trace of doubt in their minds that Tirukkural is the work of a Jaina master—Kundakundacharya. They accept with a sense of quiet corroboration that when the Telugu and Tamil scholar and Madras civilian F.W. Ellis translated the Arattuppaal (Book of Virtue) of the Kural, he did so in the understanding that it was the work of a Jaina. They note that when he, as Collector of Madras, had a gold coin minted of the author of the Kural he showed him to be in the unmistakable likeness of a Jaina muni—sans beard, sans beads and with a head shield.

Of compelling interest to me is the book’s brief treatment of the Ajivika or Ajivaka, the school that some believe, controversially, to be indistinguishable from Digambar Jainas. Be that as it may, the Ajivaka were around before the time of Asoka (reign 262 to 232 BCE) and spread themselves widely if thinly over the whole of what is now India. Asoka’s Banyan Tree Cave edict at Nyagrodha and the Khalatika Hill dedicate those cave dwellings to the Ajivakas who, with the Sramana, he has elsewhere declared to be rightfully deserving of his protection.

The Ajivaka are in Asoka’s edicts the symbol of a minority, a minuscule “minority of minorities”, to use the Jaina scholar Aravazhi’s telling phrase. And to that minority, to its vulnerability of numbers and of lifestyle, he, the Emperor who says famously “All men are my children”, extends protection. Protection from what? From both the cruelty and coarseness of his officers and the disdain of the majority.

Umamaheshwari’s masterful work is about the Tamil Jaina, a minority within a minority, but is more. It is a reminder today of the duty of a state and of a society that is majority-minded towards its marginal people, those that Asoka described as the anta-s, the “end-people”, people at physical and metaphorical borders. And it gives us the story of the Tamil Jaina per se but also as a metaphor for those that hover with insecure feet between being forgotten and being steam-pressed into sameness.

And to that extent the Tamil Jaina cave-carver of a thousand years ago is on the same page as the framers of the Constitution of India who saw the Democracy they were creating as an order where the majority rules but the Republic they were sculpting as the equal home of its biggest majority and its minutest minority.

N. Ganesan

unread,
Nov 22, 2019, 6:03:16 AM11/22/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நாஞ்சில்வேள், நாஞ்சில்வள்ளுவன் வேளிர் குடியினன் ஆவான். வேளிர் நாகரீகம் வடக்கே இருந்து
தென்னகம் வந்திருக்கிறது. இதனை நெல் வேளாண்மை, இரும்பு, குதிரை, பிராமி எழுத்து போன்றவை
தெற்கே வருதலைக் கொண்டு அறியலாம். அவ்வாறு வந்த வேளிர் குடிகளில் வல்லபன் என்ற
பெயர் தமிழில் வள்ளுவன் என்றாகி இருப்பதைக் காண்கிறோம். இப்படி ஆன நாஞ்சில் வள்ளுவனிடம்
அவ்வை நெல்லரிசியை வேண்டி யானை பரிசுபெற்றதாகச் சங்கப்பாடலைப் பாடியுள்ளார்.
இது வள்ளுவன் (< வல்லப) என்பதற்கு அரிய சங்க இலக்கியச் சான்று. ஸ்ரீவல்லப என்னும் வடசொல்
அரசர்களின் பெயர்களாக வழங்கியிருப்பதும் பார்க்கிறோம்: சிரீவல்லுவன் என்று கல்வெட்டில்
எழுதியுள்ளனர். வல்லுவன் >> வள்ளுவன். இவ்வாறாக, வல்லப வேளிர் குடியினரால் அமைந்த
வள்ளுவநாடுகள் இரண்டு உள்ளன. பாலைக்காட்டுக் கணவாய் பகுதியில் உள்ள வள்ளுவநாடு ஒன்று.
மிக நெல் வேளாண்மைக்குப் பெயர்பெற்றது. இன்னொன்று குமரி மாவட்டத்தின் வள்ளுவநாடு.

சேரர், பாண்டிய வள்ளுவநாடு இரண்டுக்குமே கல்வெட்டு ஆதாரங்கள் மிகுதி.
பாலக்காட்டின் வள்ளுவநாடு கி.பி. 954-ஆம் ஆண்டு, திருவொற்றியூர் கல்வெட்டின் படி,
“வல்லப ராஷ்ட்ரம்” என்று கூறப்பட்டுள்ளது. பாலக்காட்டு வள்ளுவநாட்டின் கல்வெட்டுச்
சான்றுகளை அறிய கிரீஷ்மலதா என்னும் வரலாறு ஆய்வரின் பிஎச்டி ஆய்வேடு
கொண்டு தொடங்கலாம். இது பற்றியும் எஸ். பத்மநாபன் போன்ற ஆய்வர்க:
ஆராய்தல் அவசியம். உ-ம்: வெள்ளத்தை இங்கே தண்ணீர் என்கிறார்களா?
”அம்மா வரும், அப்பத்தா நாளைக்கு ஊருக்கு திரும்பிடும், அப்பச்சி மிட்டாய் கொடுக்கும்”
... என்றெல்லாம் இங்கே பேசப்படுகிறதா என்று பார்த்தால் தெரிந்துவிடும்.

வள்ளுவநாடு - மத்திய கேரளம் - கல்வெட்டுகளும் வரலாறும்.
முனைவர் க்ரீஷ்மலதா, கள்ளிக்கோட்டை (கழிகோறு என கிபி. 4-ம் நூற்றாண்டு.)

Title: Historical geography of Valluvanad
Researcher: Greeshmalatha A P
Guide(s): Raghava Varier, M R
Upload Date: 25-Nov-2013
University: University of Calicut
Completed Date: n.d.
Abstract: 
Pagination: 
URI: http://hdl.handle.net/10603/13207
Appears in Departments:Department of History

Files in This Item:
FileDescriptionSizeFormat 
01_title.pdfAttached File70.33 kBAdobe PDFView/Open
02_declaration.pdf70.72 kBAdobe PDFView/Open
03_certificate.pdf70.71 kBAdobe PDFView/Open
04_acknowledgements.pdf80.43 kBAdobe PDFView/Open
05_contents.pdf72.93 kBAdobe PDFView/Open
06_list of abbreviations.pdf70.62 kBAdobe PDFView/Open
07_introduction.pdf103.79 kBAdobe PDFView/Open
08_chapter 1.pdf257.22 kBAdobe PDFView/Open
09_chapter 2.pdf328.24 kBAdobe PDFView/Open
10_chapter 3.pdf296.42 kBAdobe PDFView/Open
11_chapter 4.pdf216.88 kBAdobe PDFView/Open
12_chapter 5.pdf61.14 kBAdobe PDFView/Open
13_chart.pdf341.7 kBAdobe PDFView/Open
14_appendices.pdf769.09 kBAdobe PDFView/Open
15_map.pdf6.98 MBAdobe PDFView/Open
16_glossary.pdf34.88 kBAdobe PDFView/Open
17_bibliography.pdf151.23 kBAdobe PDFView/Open
18_synopsis.pdf86.38 kBAdobe PDFView/Open

On inscrpiptions of this VaLLuvanAD,
தீஸிஸ் படித்துப் பார்க்கவும். 

நா. கணேசன்


N. Ganesan

unread,
Nov 23, 2019, 9:42:45 AM11/23/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
>> If Velir themselves are from the North, what is left of southern origin?

Good question. There are a lot to be proud of in the South. For example, introducing Chandanam tree from South East Asia.
This is acknowledged in linking Candana with Malaya (Potiyil) mountains all the time. Tolkappiyar's
PoruL ilakkaNam, PuLLi concept widely applied to break the conjunct letters, Chola bronzes,
Bhakti as a Mass Movement in Hinduism (started by Nayanars and Alvars),, Not the least
efforts of Tamils under Annadurai to retain English in India. As a window to outside worlds
of research, Science & Technology - otherwise India would have been submerged under Devanagari script
and backward Hindi language etc.,

But, in early phases of Tamil history, impact from North is unmistakable.
Indus Valley Civilization predates by at least 2000+ years. For 150 years
or so, in Tamil Nadu, various Archaeological pits have been dug (e.g., Adichanallur, ..)
all are Iron Age sites, suddenly coming to bloom. See Keezhadi (earliest is 560 BCE,
probably Brahmi finds are a century later there.) No CHALCOLITHIC or BRONZE
Age in Tamizhakam. Hence, vallabha rAshtra (vaLLuvanaaDu) these chieftains
arriving from North. See what Mahabhaashya of Patanjali Muni says
about the word, Pandya (kings of Madura). Mahabhashyam is 150 BCE commentary
on Panini.

Very interesting to read prof. Greeshmalata's thesis on VaLLuvanad of Chera territory.
It generates questions about some assumptions about Naanjil VEL, aka Naanjil VaLLuvan.

N. Ganesan

On Sat, Nov 23, 2019 at 3:00 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Fri, Nov 22, 2019 at 6:44 AM S Roy <suji...@gmail.com> wrote:
If Velir themselves are from the North, what is left of southern origin?Were there no Tamil people in the south? Is there any warm weather region in the world that does not have its own local culture and people?

Languages have organically developed around the world, how could the origin of a language be tied to one man even if he was a sage? Religious beliefs should be separated from all research, should it not?

Agastya in later Tamil texts (say, Cilampu) is a mythical character. Sangam texts do not speak of him as writer of Tamil grammar or him having anything to do with Tamil.

N. Ganesan
 

Best,
Sujata
Files in This Item:
<a class="gmail-btn gmail-btn-primary" target="_blank" href="https://shodhganga.inflibnet.ac.in/jspui

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e21b36c7-49fe-480f-a5aa-143313ca8e92%40googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 23, 2019, 9:47:36 PM11/23/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, George Hart, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu
பேரா. கிரீஷ்மலதாவின் ஆய்வேடு - சேரநாட்டில் (மலை நாட்டில்; மலை - சையமலை) வள்ளுவநாடு மீதானது - படிக்கையில்
சங்க இலக்கியத்தில் இரு வள்ளுவ நாட்டு அரசர்களைப் பற்றிய பாடல்களும் இருக்கின்றன. அவற்றைப் பகுக்காமல்
ஒரே வள்ளுவநாடு என்று அண்மையில் புரிந்துகொண்டனரோ என்ற ஐயம் எழுகிறது, எனக்கு இரு புறப்பாடல்கள்
பாலைக்காட்டுப் பிரதேச வள்ளுவநாடு எனக் கொள்ள ஏதுக்கள் கிடைக்கின்றன. பின்னர் பார்ப்போம்.

முதலில், பாண்டி நாட்டு வள்ளுவநாடு பற்றிய பாடல் ஒன்று: இவன் ஸ்கந்தன் என்ற முருகனின் பெயர் கொண்டவன்.
நாஞ்சில் வேளிர் மரபினன். நாஞ்சில் வேள்களுக்கு வள்ளுவன் (வல்லபர்) என்ற விருதுப்பெயர் இருந்திருக்கிறது.  ~NG

புறநானூறு 380

இந்தப் பாடலின் தலைவன் வள்ளுவன்
ஒரு போர்-மறவன்

நாஞ்சில் நாட்டில் இருந்துகொண்டு நாடாண்ட கந்தன் என்பவன் தென்னவனாகிய பாண்டியனின் படைத்தலைவன். அவனது படையினர் தென்கடலில் பிறந்த முத்தாரம் அணிந்திருப்பர். வடமலையில் பிறந்த சந்தனத்தை அரைத்துப் பூசிக்கொண்டிருப்பர்.
இந்தக் கந்தன் மீது பெய்து ஓடிய நீர்தான் கடலில் பாய்ந்து முத்தாக மாறும். (புலவர் புகழாரம்) இவன் குளவி, கூதளம் ஆகிய பூக்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்திருப்பான். வேலேந்திப் போரிடுவான். இவனது நாஞ்சில்நாடு பலாமரங்களை மிகுதியாக உடையது. வலிமையுடன் எதிர்ப்பவர்களும் இவன் பகைமையை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். இவன் நட்பினை எதிர்கொண்டோர் உள்ளங்கையில் நட்பின் அடையாளமாக இவன் தந்த பொருள்கள் இருக்கும். இவன் பிள்ளை உள்ளம் கொண்டவன். நிலத்துக்கே வறுமை வந்துவிட்டாலும் இவனோடு சேர்ந்து பூத்துக்கிடக்கும் என் (புலவரின்) சுற்றத்தார் புலம்பல் (தனிமை – தொல்காப்பியம், உரியியல்) மறந்து மகிழ்வுடன் வாழ்வர்.

செங்கைப் பொதுவன் விளக்கம்
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,
........................................ங் கடல் தானை,
இன் இசைய விறல் வென்றி,
தென்னவர் வய மறவன்;                                7
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,
வேறுபெ.....................................................................த்துந்து,
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;           10
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்
இலம்படு காலை ஆயினும்,        15
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது

N. Ganesan

unread,
Nov 24, 2019, 6:27:07 AM11/24/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sat, Nov 23, 2019 at 9:50 PM S Roy <suji...@gmail.com> wrote:
What is the proof that Valluvan is North Indian vallaban? Are there any stone inscriptions or writings that show this change?

Valluvan is also a caste in Kerala and they say they were priests and astrologers. There may be multiple ValluvaNadus and Thiruvalluvar could have been from any one of them or may be he was just a Valluvar caste man from Madurai.

Just because a Panini interpreter writes one sentence that Pandyas moved south from the North, how can we come to the conclusion that Pandyas and Velir are from the North?  I read somewhere that this interpretation also says Pandya land was somewhere near the Punjab area.     

Would the idea that a sage brought 12 people to the south (and they become Pandya kings and Velir) not make the people of the South a people with neither language nor ruler. Aryan invasion of the South seems to be threading through everything. References to any supernatural language creation or divinely brought kings  are highly suspect since man's need to associate himself to something supernatural exists throughout ancient world history and can't be taken as history as such I think.


In Sangam literature or later, there is no idea that a sage brought 12 people to the South. 
 
>Valluvan is also a caste in Kerala and they say they were priests and astrologers. There may be multiple ValluvaNadus and 
> Thiruvalluvar could have been from any one of them or may be he was just a Valluvar caste man from Madurai.

In Sangam literature, the caste of VaLLuvars is NOT spoken. What we have in Sangam texts is Naanjil VeLir, chieftains under Pandyas (in Kanyakumari district)
and in Palghat gap area. They are clearly not from VaLLuvar caste, their royal households, and hence their country is named VaLLuvanADu
comes from Northern language word, Vallabha. You asked is there evidence that Vallabha changing to Valluva/vaLLuvar. Yesm there is.

When compared to VaLLuvan (< Vallabha) vEL-s, the caste of VaLLuvan is attested in Tamil literature very late, about 1000 years later
than Vallabha > VaLLuvan (in two VaLLuvanADus) that is continuously known for 2000 years. If the two separate Linguistic origins
of the word, vaLLuvan, one from Vallabha (Skt.) and another from tamil, vaL vaar muracu, then a better understanding of Sangam texts will happen.
The differences between the two vaLLuvan are also mentioned in a scholarky article published in Centamil, the Jl. of the Madurai Tamil Sangam (1950).
by CKN, Tamil scholar from Coimbatore.

In the same journal, Navalar Somasundara Bharati, wrote his thesis that TiruvaLLuvar is of this VeLir heritage,
not the cenuturies-later caste of VaLLuvan. We know now more evidences of vaLLuvar (vallabha) veLir chieftains
moving from North to South direction. For example, ancient vaLLuva nADU in Palghat gap and then onto
Kanyakumari district. Also, look at Brahmi moving from in the same way: the script first appears in Porunthal (490 BC)
and then now in Keezhadi, few decades later. Keezhadi (MaNaluur) holds the key, so far we know 560 BC
the city starting. It may go back one or two centuries for the start of settled Agriculture and Trade based
civilization.

best wishes,
N. Ganesan

 

Best,
Sujata





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xSK6xsodtT0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUejqkGbHOwgq0AEosm-v64QHAUY1PyU4xojzP%3D4vhA5Rg%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 26, 2019, 8:41:54 AM11/26/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai


On Tue, Nov 26, 2019 at 5:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் 
" உழா நாஞ்சில் " என்று அகநானூறு சொல்கிறது. (பூவா வஞ்சி மாதிரி) இந்த நாஞ்சில் மலை எது? எங்கே இருக்கிறது? 
ஒன்றா? இரண்டா? 
சக 

தெரியலை. அகநானூற்றைப் படிக்கணும்.

வள்ளுவநாடு இரண்டு சங்க இலக்கியத்தில் உள்ளது. நாஞ்சில் வள்ளுவர்கள் ஆங்கே ஆண்டுள்ளனர்.

நாஞ்சில் ஆறு பாயும் மலையை உழா நாஞ்சில் என்கிறதா அகநானூறு? பாண்டியர்க்கு அடங்கிய
வள்ளுவ நாட்டு மலையா?  பார்க்கணும்.

வடக்கே இருந்து தெற்கே நாஞ்சில்வேளிர் சென்றதன் அடையாளமாக
முதலில் மலைமணிடிலத்து வள்ளுவவேளிர் பாடல்களைப் புறநானூற்றில் தொகுத்து,
அதன் பின் கடைசியாக, குமரிநாட்டு வள்ளுவன் பாடலைச் சேர்த்துள்ளனர்
சங்க இலக்கியம் தொகுத்தோர். இது தாபதவாகைப் பாடல்களைத் தொகுத்த முறையால்
அறியலாம். இந்தியாவில், இருவகைத் துறவுகள் உண்டு. ஒன்று, பிராமணர் காட்டுக்குப்
போய் வேள்வித் தீ வளர்ப்பது. இரணடு சிரமண சமயத்தார் (சமணம், ஆஜீவகம், பௌத்தம், மாவிரதியர், ...)
செய்யும் துறவு. இரண்டு வகைகளுக்கும் ஏராளமான பாடல்கள் இருந்திருக்கணும்.
ஆனால், வகைக்கொன்றாக தாபதவாகை என்று புறப்பாட்டில் தெரிவு செய்து
தொகுத்துள்ளனர். அதுபோல், இரண்டு வள்ளுவ நாட்டு நாஞ்சில் வேளிர்
பாடல்களும் தனித்தனியாய் உள்ளன.

நா. கணேசன்

 

On Tue, 26 Nov 2019 6:43 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:


On Tue, Nov 26, 2019 at 4:59 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வஞ்சி தொடர்பான உங்கள் கற்பனையைத் தான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனே. இப்பவும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன். 

வஞ்சி என்று எந்த மாநகரமும் மேலைக் கட்ற்கரையில் சங்க காலத்தில் இருந்ததில்லை.
இதை தமிழறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் எழுதிய நூல்களால் அறியலாகும்.
 

இப்ப விக்ஷயத்துக்கு நேரடியாக வாங்க. 
நாஞ்சில் நாடு ஒன்றா? இரண்டா என்பதற்கு பதில் இல்லையே ஏன்?    

நாஞ்சில் வள்ளுவன் என்னும் வேளிர் குடியினர் ஆண்ட வள்ளுவ நாடுகள் இரண்டு 
சங்க காலத்தில் உள்ளன. தென்பாண்டி நாட்டில் இருந்த நாஞ்சில் வள்ளுவன்
பாண்டியன் கீழ் படைத்தலைவன் (புறம் 380).

அதில் இருந்தும் பிரித்து, மலைமண்டலத்து வள்ளுவநாட்டை ஆண்ட நாஞ்சில்வேள்
என்னும் வள்ளுவன் (< வல்லப) புறம் 137-140 பாடல்களில் பாடப்பெற்றுள்ளான்.
இந்த வல்லபவேள் வஞ்சி மாநகர் (கரூர்) சேரனின் சேனாபதி. 

வடக்கே இருந்து தெற்கே நாஞ்சில்வேளிர் சென்றதன் அடையாளமாக
முதலில் மலைமணிடிலத்து வள்ளுவவேளிர் பாடல்களைப் புறநானூற்றில் தொகுத்து,
அதன் பின் கடைசியாக, குமரிநாட்டு வள்ளுவன் பாடலைச் சேர்த்துள்ளனர்
சங்க இலக்கியம் தொகுத்தோர். இது தாபதவாகைப் பாடல்களைத் தொகுத்த முறையால்
அறியலாம். இந்தியாவில், இருவகைத் துறவுகள் உண்டு. ஒன்று, பிராமணர் காட்டுக்குப்
போய் வேள்வித் தீ வளர்ப்பது. இரணடு சிரமண சமயத்தார் (சமணம், ஆஜீவகம், பௌத்தம், மாவிரதியர், ...)
செய்யும் துறவு. இரண்டு வகைகளுக்கும் ஏராளமான பாடல்கள் இருந்திருக்கணும்.
ஆனால், வகைக்கொன்றாக தாபதவாகை என்று புறப்பாட்டில் தெரிவு செய்து
தொகுத்துள்ளனர். அதுபோல், இரண்டு வள்ளுவ நாட்டு நாஞ்சில் வேளிர்
பாடல்களும் தனித்தனியாய் உள்ளன.
 
சக 

On Tue, 26 Nov 2019 5:51 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
ஒருசிறைப் பெயரினார் பாடிய புறம் 137 பற்றிக் கேட்கிறீர்கள். அதுமுதல் புறம் 140 வரை உள்ளது எல்லாம்
பிற்காலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மலைமண்டிலத்து வள்ளுவநாடு என்னும் பாலைக்காட்டுக் கணவாய் வள்ளுவநாடு ஆகும்.
வள்ளுவநாடு என்ற பெயர் வேளிர் வருகையால் பிராகிருத வழி அமைந்த பெயராகும். பிற்காலத்தில் சம்ஸ்கிருதப் பெயர்கள்
கல்வெட்டுக்களில் வல்லப ராஷ்ட்ரம் என வள்ளுவநாட்டின் ப்ராகிருதப் பெயரை சமஸ்கிருதப் பெயரைக் கூறுகின்றன.
வள்ளுவர் என்ற குறள் ஆசிரியர் பெயரின் பொருள் விளங்குவது இதனால்.

கழ்- என்னும் தாதுவேரில் தோன்றுவது கழுத்து, கணு, கணை போன்ற சொற்கள். கழைக்கரும்பு (கணுக்கள் கொண்ட கரும்பு) என்னும் பயிர் விளைவது 
பாலக்காட்டு வள்ளுவநாட்டில் தான். செவ்வரை என்று பாட்டில் பாடியிருப்பது அப்பகுதிக்கு நாஞ்சில் ஆறு போன்ற காட்டாறுகள்
உற்பத்தியாகும் மேற்குத் தொடர்ச்சி மலையாகும். கேரளாவின் ஒரே சர்க்கரை ஆலை இன்றும் இப்பகுதியில் சித்தூரில் தான் இருக்கிறது.
இப்பகுதிக்கு வஞ்சி மாநகரில் அரசாண்ட சேரர்கள் கரும்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். பதிற்றுப்பத்தில் கரும்பு வேளாண்மை பற்றிப் பாருங்கள்.
குமரி மாவட்டத்தில் நாஞ்சில் வள்ளுவநாட்டில் கரும்பு இல்லை.

புறம் 137 போலவே,
“அகல் வயல் நீடு கழைக்கரும்பின் “ (அகநானூறு 217)
“அகல் வயல்  கிளை விரி கரும்பின் கணைக்கால் வான்பூ “ (அகநானூறு 235)   

இந்த வள்ளுவநாட்டில் விளையும் நெல்லையும், கரும்பையும் பாடியுள்ளார் புறம் 137-ல். இங்கே நடக்கும் வெள்ளாமை பற்றிய பாடல் இப்பாடல்.
இரண்டு பயிர்களையும் சொல்கிறார். தென்மேற்குப் பருவமழை (Southwest Monsoon) பற்றி வரும் பாடல். கோடை மழை என்று நாங்கள் சொல்வோம்.
கோடை காலத்தில் ஊற்றும் பருவமழை இது. மலைநாட்டு நாஞ்சில் வள்ளுவனின் நாட்டுவளம் பேசுகிற பாடல். செவ்வரை என்னும் சிவந்த
கற்களை உடைய பெரிய மலைகளில் இருந்து ஆறுகள் தோன்றி கடலுக்கு விரையும் நாட்டவனே. உன் நாட்டில், வறண்டு கிடக்கும்
நிலத்திலே, நெல்லம் வித்தை கோடையில் விதைக்கிறார்கள். அது கோடை மழை பெய்து ஊற்ற ஆரம்பித்தவுடன் முளைத்து,
நாற்றங்க்காலில் இருந்து வயலில் நடுகிறார்கள். ஈதென்ன அதிசயம்! வேறு நாட்டில் இப்படி கோடையில் விதைத்தால் வறண்டுபோகும்
நெல்லானது, உனது நாட்டில் உன் ஊரில் விளையும் கணுக்கள் கொண்ட கரும்பைப் போலத் தழைக்கிறதே என்கிறார் ஒருசிறைப் பெரியனார்.
நெல்லே கரும்பு போல் என்றால், இந்த வள்ளுவநாட்டின் வளரும் கரும்பு எவ்வளவு வளர்த்தி என்ற வியப்பு  இறைச்சிப்பொருளாக உள்ளது.

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.


இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,
5
கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,
10
மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!
15


சுள்ளியம் பேரியாறு இன்று கேராளாவின் பெரியாறு. இதன் கரையிலே முசிறிப் பட்டினம் யவனர்களை வரவேற்றது. சங்க காலத்தில் 
வஞ்சி முசிறியின் அருகே சுள்ளிப் பெரியாற்றில் இல்லை.
கிழக்குக் கடற்கடையில், குணதிசையில் இருந்து (கொண்டல் காற்று) வரும் மழை வேறு: அது கொங்கமழை.
கொங்கமழை < கொண்கமழை (கொண்- < குணக்கு). அவ்வளவு அதிகமாய் இதன் தாக்கம் மேற்கொங்கிலும், அதனருகே வள்ளுவநாட்டிலும் 
இல்லை. Bamboo என்ற சொல் சங்க இலக்கியத்தில் வம்பு < வண்பு. அதுபோல், கொங்கமழை < கொண்க மழை.

நா. கணேசன்
வஞ்சி என்று இரு மாபெரும் நகரங்கள் சங்க காலத்தில் இல்லை. மேலைக்கடற்கரையில் வஞ்சி என்ற மாநகர் சங்க காலத்தில் கிடையாது.
இதுபற்றி நல்ல கட்டுரை தொல்லியல் அறிஞர் எழுதியுள்ளார். கொடுமுடி சண்முகனும், புலவர் செ. இராசுவும் பத்திப்பித்துள்ளனர்.
அதனை பின்னர் தருகிறேன். இது 100 ஆண்டு காலமாக தமிழறிஞர்கள் நூல்கள் எழுதியும், பின்னர் தொல்லியல் அறிஞர்கள்
- ஐராவதம், நாகசாமி, இரா. கிருஷ்ணமூர்த்தி ... போன்றோர் - காட்டிய முடிபு. மேலைக்கடற்கரையில் கற்பனாநகரம் உற்பத்தி ஆவது
எப்படி எனப் பார்க்க ஆவல்.


On Tue, Nov 26, 2019 at 3:12 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
புறநானூறு பதிப்பிலேயே பொன்னானி வட்டத்தில் கிடைத்த கல்வெட்டு பற்றிய செய்தி உள்ளது (ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் உரையில் பார்த்தேன்; இதில் உ.வே.சா.பதிப்புச் செய்திகளும் இருக்கும்.) 
இப்போது எனக்கிருப்பது இரண்டு ஐயங்கள் ; அதாவது 

1)இடைக்காலத்தில் இரண்டு வள்ளுவநாடுகள் இருந்தன என்பதற்குக் கல்வெட்டுக்கள் ஆதாரமாகின்றன. 
'உழா நாஞ்சில்' என்று அகநானூறு குறிப்பிடும் நாஞ்சில் நாடு (சங்க காலத்தது) எத்தனை இருந்தது? ஒன்றா? இரண்டா? (ஏனென்றால் சங்க காலத்தில் இரண்டு வஞ்சிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளனவே.)

2) கயத்தில் போட்ட வித்து வறட்சிக் காலத்தில் கழை என்று சொல்லக்கூடிய கரும்பு போல வளர்ந்திருக்கும் என்ற செய்தியில் இடம்பெறும் வித்து எது? நெல்லா?/ கரும்பா? அதை கயத்தில் போடுவது ஏதாவது வேளாண்மைசார் சம்பிரதாயமா?

நிதானமாக ஓய்வெடுக்கும் போது பதில் கூறுங்கள்; பணிச்சுமைக்கு இடையில் அவசர பதில் வேண்டாம். (வஞ்சி பற்றி எதுவும் பேசவேண்டாம்; வாசிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டும். டிசம்பர் 15ம் தேதி கருத்தரங்கு முடிந்தவுடன் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.) எனக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
சக  


On Tue, Nov 26, 2019 at 8:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Nov 25, 2019 at 6:16 PM S Roy <suji...@gmail.com> wrote:
Valluvanad in Palakkad as far as I can find out was formed only in the 9th or 10th centuries, so its history starts much after Valluvar.
 
குமரி மாவட்ட வள்ளுவநாடும், பாலக்காட்டு வள்ளுவநாடும் ஒரே பழமை கொண்டவை.
இரண்டுமே கல்வெட்டுக்களில் ஒரே காலத்தில் குறிப்பிடப்படுகின்றன.

புறம் 137-140 அதில் வரும் குறிப்புகளால் பாலக்காட்டு வள்ளுவநாட்டு தலைவனைப் பாடியது
என தெரிகிறது. இவன் வஞ்சி மாநகரில் இருந்து அரசாண்ட சேரனின் படைத்தலைவன்.

நா. கணேசன்

 
Best,
Sujata

On Monday, 25 November 2019 15:57:14 UTC-8, N. Ganesan wrote:
ஒரு குறிப்பு:

புறநானூற்றில் பாடல் 380 பார்த்தோம். இந்த நாஞ்சில் நாட்டு வேள் ஆகிய வள்ளுவன் பாண்டியனுக்குக் கீழ் இருந்தவன் என்பது தெளிவு.

ஆனால்,
புறநானூறு 137-140 பாடல்களில் பாடப்பெற்ற நாஞ்சில் வள்ளுவன் வேறு ஒரு நாட்டை ஆண்டவன்.
அது சேரநாட்டின்கண் உள்ள வள்ளுவநாடு. இதனை இப்பாடல்களில் உள்ள குறிப்புகள் கொண்டே
அறியலாம். வேளிர் குலச் சின்னமான நெல் அரிசி, மற்ற முக்கிய பயிர் பற்றிப்பாடியுள்ளனர் புலவர்.
இவை குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டில் இல்லை. சேரனின் சேனாபதி இந்த நாஞ்சில் வேள்.

மத்திய கேரளம், பாலைக்காட்டுக் கணவாய் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு என்பர்.
சங்கச் சேரர் தலைநகர் (ஆன்பொருநைக் கரையில்) உள்ளது பற்றி இலக்கியங்களாலும்,
பின்னர் தொல்லியல் ஆய்வுகளாலும் தெளிவு கிடைத்தது. கிரீஷ்மலதா போன்றோர்
ஆய்வுகள் வள்ளுவநாட்டின் அரசர்களாகிய நாஞ்சில் வள்ளுவரைப் பற்றி மேலும் அறியச் செய்யும்.

புறப்பாட்டுகளைத் தொகுத்தோர் வெகுகவனமாக, இரு நாஞ்சில் வேள்களின் பாடல்களைப்
பிரித்து வைத்துள்ளனர். அந்த அருமையை உணராமல், எல்லாம் ஒரே வள்ளுவநாடு என்று
எழுதுகின்றனர். வரலாற்று நோக்கில் இது சரி யல்ல. 

பிற பின்,
நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdLRfHmkZ%3D0tPsf-8mdkXChKFpT4DrkL0Dhhg3Vfr-xsg%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfF78GAyfcx9MXo9Uf4K_t5LwyO2DhTb8fYer-bRaTYuQ%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 26, 2019, 8:52:20 AM11/26/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, kanmani tamil
அன்பின் கண்மணி அவர்கட்கு,

இப்பொழுது அண்ணாமலைப் பல்கலையில் இருந்து மடல். மொழியியல் முதுபேரா. செ. வை. சண்முகம் ஐயா
எழுதியுள்ளார்:

On Tue, Nov 26, 2019 at 5:42 AM Shanmugam SeVai < > wrote:
புலமைக்கு தலை  தாழ்ந்த வணக்கம்
சண்முகம்

கி. நாச்சிமுத்து எழுதிய மடல் பின்னர் அனுப்புகிறேன். அரசாங்க அதிகாரிகள் வருகிறார்கள். புது விமானம் பற்றிய மீட்டிங்.
ஓடணும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Nov 27, 2019, 6:27:52 AM11/27/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
https://shodhganga.inflibnet.ac.in/handle/10603/173783 
Title: Kerala s contribution to Tamil form the Sangam Age to Independence
Researcher: Thiru S Saravanakumar
Guide(s): Meeran Pillai M M
Keywords: Tamil
University: University of Kerala
Completed Date: 25/02/2011
Abstract: newline
Pagination: 
URI: http://hdl.handle.net/10603/173783
Appears in Departments:Department of Tamil

Files in This Item:
FileDescriptionSizeFormat 
01_title.pdfAttached File36.21 kBAdobe PDFView/Open
02_certificate & declaration.pdf40.97 kBAdobe PDFView/Open
03_acknowledgement.pdf48.91 kBAdobe PDFView/Open
04_abbreviations.pdf56.33 kBAdobe PDFView/Open
05_contents.pdf18.74 kBAdobe PDFView/Open
06_chapter 1.pdf256.25 kBAdobe PDFView/Open
07_chapter 2.pdf1.32 MBAdobe PDFView/Open
08_chapter 3.pdf1.54 MBAdobe PDFView/Open
09_chapter 4.pdf545.19 kBAdobe PDFView/Open
10_chapter 5.pdf5.24 MBAdobe PDFView/Open
11_chapter 6.pdf589.93 kBAdobe PDFView/Open
12_chapter 7.pdf1.56 MBAdobe PDFView/Open
13_chapter 8.pdf436.65 kBAdobe PDFView/Open
14_chapter 9.pdf900.85 kBAdobe PDFView/Open
 

N. Ganesan

unread,
Nov 27, 2019, 6:47:25 AM11/27/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வள்ளுவநாடு என்று கல்வெட்டுக்களில் அறியப்படுபவை இரண்டு. (1) சேரநாட்டில் ஒத்தப்பாலம் போன்ற ஊர்களை உள்ளடக்கிய
பாலைக்காட்டுக் கண்வாயின்கண் உள்ள வள்ளுவநாடு. இங்கே விரியூர் என்ற ஊர் உண்டு. அங்கே வாழ்ந்த நக்கனார்
சங்கப் பாடல் தந்துள்ளார். கண்ணன், வள்ளுவன் (< வல்லப-), ... போல நக்கன் என்ற சொல்லும் அமைந்திஉள்ளது. 
புறப்பாட்டு 137- 140 இந்த வள்ளுவநாட்டைக் குறிப்பது. நெல்லும், கரும்பும் முக்கியப் பயிர்கள் இங்கே.

(2) தென்பாண்டி நாட்டில் பாண்டியர்க்கு அடங்கின வள்ளுவநாடு ஒன்று உள்ளது. இதனை புறம் 380-ல் பாடியுள்ளனர்.
இந்நாட்டின் பயிர்கள் நெல்லும், தென்னையுமாம். இந்த நாடு தற்காலத்தில் நாஞ்சில் நாடு என வழங்குகிறது.
அதுபற்றியும், அதன் பயிர்களையும் விளக்குகிறார் மா. அரங்கநாதன்.
ஊரைச் சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப் புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில் மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை அடையலாம். ”

எனது ஊர்

மா. அரங்கநாதன்

சென்னைப் பட்டிணத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட போதிலும்,18 வயது வரை வாழ்ந்த ஊரால்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லலாம்.

அது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிற பிரதேசத்தில் உள்ளது. இந்தியா எவ்வாறு ஆங்கிலேயரால் ஆளப்பட்டதோ, அதுபோல இந்த இடமும் திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாக்களால் ஆளப்பட்டது என்று சொல்லலாம்.

வந்து சேர்ந்த இடம் சென்னைப் பட்டிணம். அதுவும் அப்போது மதறாஸ் மாகாணமாகத்தான் இருந்தது. அரசு அலுவலகங்களில் தெலுங்கு, கன்னடம் பேசுவோர் நிறைய இருந்தனர்.

எனது ஊர் திருவண்பரிசாரம். திருப்பதிசாரம் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு பத்து மைல் கிழக்காக சென்றுவிட்டால் நெல்லை ஜில்லா வந்துவிடும். இருந்தாலும் அக்காலக்கட்டத்தில் திருநெல்வேலி ஓர் அந்நியப் பிரதேசமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கே கிடைக்கும் மலை வாழைப்பழம் கூட எங்கள் ஊருக்கு வருவது கிடையாது.

சங்கம் மருவிய காலத்திற்கு முன்பேயே இந்த நாஞ்சில் நாடு, தமிழ் அறிஞர்களால் போற்றுவிக்கப் பட்டது மட்டுமல்ல, பலர் தொன்றியதும், இங்கேதான். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட இடம் என்று நாம் அறியும் அதங்கோடு பக்கத்து ஊர்தான். நாஞ்சில் வள்ளுவன் யார் என்ற ஐயப்பாடு இருக்கிறது எனினும் திருக்குறளில் கையாளப் பெற்றிருக்கிற பிரயோகங்கள் பல இன்றும் வழக்கத்தில் இங்கே உள்ளது. இது தவிர ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த இடம் இந்த ஊர்தான். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அல்லவா என்று கேட்கலாம். அது அவர் தகப்பனார் ஊர். அவர் தாயார் உடையநங்கையம்மாள் திருவண்பரிசாரத்தைச் சார்ந்தவர். குல வழக்கப்படி முதல் குழந்தை தாய் ஊரில்தான் பிறக்க வேண்டும்.

‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’ என்று நம்மாழ்வாரும் பாடியுள்ளார். ஊர் கோயிலிலும் நம்மாழ்வார்க்கென தனி சன்னதி உண்டு. திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாகவும் நம்மாழ்வார் வலம் வருவார்.

108 திருப்பதிகளில் ஒன்றான இந்த ஊர் கோயிலின் மூர்த்தி திருவாழ்மார்பார். கிட்டத்தட்ட அந்த ஊர் அளவிற்குப் பெரியது. எதிரே ஊர் தெப்பக்குளமும் அதன் துறைகளும் விஷேடம். அவற்றிற்குப் பெயர்களும் உண்டு. ஆண்கள் துறை, பெண்கள் துறை, குருக்களய்யாத் துறை, அரசு மூட்டுத் துறை, மாமூட்டுத் துறை என்பதோடு பிராமணாள் துறை, என்றும் ஒரு துறையைச் சொல்வார்கள். தண்ணீர் மற்ற ஊர் குளங்களைப் போல் அல்லாது ஓரளவு சத்தமாகவே இருப்பதற்கு அதிலுள்ள மீன்களைச் சொல்ல வேண்டும்.

நல்லவர்களும் படித்தவர்கள் என்று பெயரெடுத்தவர்களும் கூட ஜாதி நெறியைப் பின்பற்றவே செய்தார்கள். அதில் பிராமணர்களைவிட மற்றவர்கள் அதிக கண்டிப்புடன் இருந்தார்கள்.

கோயிலின் பூஜை புனஸ்காரங்கள் ‘போற்றி’ என்று அழைக்கப்படும் ‘துளு’ மொழி பேசும் நபர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கும். ‘இன்னிக்குப் பையன் “எக்ஸாம் பீஸ் கட்டறநாள் – பகவானாப் பார்த்து ஒங்கள அனுப்பிச்சிருக்கார்” என்று பிரசாதத் தட்டை நீட்டும் அர்ச்சகர்களை நாற்பதுகளில் பார்த்திருக்கிறேன் – அவர்கள் சிறிது ஆங்கிலமும் பேசுவார்கள். கோயிலின் பக்கமாக அமைந்த பிராமணக்குடி என்று அறியப்படும் தெருவில் ஏழெட்டு பேரே இருந்தார்கள். கோயில் மதில்களும் பிரகாரங்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். கோபுரம் இல்லாவிட்டாலும் முன்பக்கம் இருக்கும் சிலை மிகவும் அழகு.

ஊரின் வடக்கே பழையாறு என்னும் பறளியாறு என்னும் பஃறுளியாறு ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக ஊரில் எல்லாருமே விவசாயிகள்தாம். பயிரை பற்றி அதாவது உழவு, மரடித்தல், விதைப்பு, தண்ணீர்ப் பாய்ச்சுதல், நாற்றுநடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு, சூடு அடித்தல், நெல் அளவு என்பன் பற்றியெல்லாம் குழந்தைகளும் அறியும். வைகாசி 15ஆம் நாள் என்றாலே அங்கு மழை தொடங்கிவிடும்.

ஊரைச் சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப் புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில் மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை அடையலாம். கலைவாணர் என். எஸ்.கே., டி.கே. சண்முகம் இல்லங்கள் வழியாகவும் கடந்து செல்ல வேண்டும்.

கவிமணியைத் தவிர மனோன்மணியம் சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் பேரப்பிள்ளைகளும், உறவினர்களும் இங்கே உண்டு. பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் பிறந்ததும் பக்கத்து பூதப்பாண்டியில்தான்.

“தென்னம் பிள்ளையிலே ஏறி ஒரு காய் பறிக்க முடியுமா, முன் ஏர் கட்டி உழத் தெரியுமாலே உனக்கு’ என்று கேட்கும் அளவிற்கு தென்னையும் நெற்பயிரும்தான் அங்கே செல்வம். தேங்காய் கேரளாவில் இருப்பது போலல்லாமல், ஒரு தனிச்சுவையுடன் இருக்கும். வாழையும் அப்படித்தான். விதவிதமாக உண்டு. மலையாளத்திலும் மற்ரத் தமிழகப் பகுதிகளிலும் நேந்திரங்காய் என்று சொல்லப்படும் அந்த ரகத்தை ஏற்றங்காய் என்றுதான் ஊரிலே குறிப்பிடுவார்கள். அறுவடையில் கிடைக்கும் நெல்லைக் கொண்டுதான் அனேகமாக எல்லாப் பலசரக்குச் சாமான்களும் வாங்கப்படும். நெல்லைப் பணமாக ஏற்றுக் கொள்கிற வியாபாரிகள் கடைக்காரர்கள் உண்டு.

அறுவடை நடக்கும்போதும், கதிர் முற்றி தயாராக இருக்கும்போதும் யராவது சென்று வரப்பில் உட்கார்ந்து இரவு முழுவதும் காவல் காப்பது அவசியம்.

சில காலக்கட்டங்களில் நெல்வயல்களிலேயே காய்கறிகள் பயிர் செய்வதுண்டு. அப்போது அதை கத்திரி வயல் என்று சொல்வார்கள். கத்தரி மட்டுந்தான் பயிர் என்றில்லை அதுதான் அதிகமாக இருக்கும். அதிகமாக அதுதான் செலவுமாகும். எனவே, கத்திரி என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம். வீட்டில் கிழங்கள் காலமாகிவிட்டால்,

‘கத்திரிக்காய்

எங்களுக்கு

கைலாயம் உங்களுக்கு’

என்று ஒப்பாரி வைத்து அழுவதுண்டு. அப்படிப்பட்ட வரிகளில் கவிதையம்சம் உண்டு. அதனுடைய விஷேடம் அவர்களுக்குத் தெரியாது.

துக்கம் கேட்பது என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தின்போது போகாமல் இருந்துவிடலாம். ஆனால், துட்டி கேட்காவிட்டால் அது பெரும் தவறு.

ஆனாலும், இம்மாதிரிப்பட்ட பெருந்தன்மையான போக்கு ஊருக்கு வெளியே இருக்கும் ஆதிதிராவிடர், வண்ணார் போன்ற சமூகத்தினர்பால் கிராமத்துவாசிகளுக்குக் கிடையாது.

ஊர் மேலூர் – கீழூர் என்று அறியப்பட்டது. இரண்டிற்கும் நடுவே பழையாற்றின் ஒரு வெட்டாறு. கீழூரில் இடையர், தச்சர், முடிதிருத்துவோர் போன்றோரின் இருப்பிடங்கள். இவர்களெல்லாம் கோயிலிலும் குளத்திலும் அனுமதிக்கப்பட்டாலும் ஆதிதிராவிடர் வேண்டிய மட்டும் ஒதுக்கப்பட்டனர். ஊர் சிறுவர்கள் மனதில் இம்மாதிரிப்பட்ட நச்சு எண்னம் நியாயமாக தொற்றுவிக்கப்பட்டது. அப்படி நீங்காமலே இருந்த எண்ணம் கொண்ட பல பிரபலங்களை நான் பிற்காலத்தில் அறிந்திருக்கிறேன்.

மலை – அது மாபெரும் அனுபவம். திருவண்பரிசாரத்தில் இருந்து பார்த்தால் மூன்று பக்கமும் மலை தெரியும். கிழக்கே மருந்துவாழ் மலை அநுமான் லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்த கதையோடு இந்த மலையின் இருப்புச் சொல்லப்படுகிறது. வடக்கே தாடகை மலை – ஊரோடு செர்ந்து ஜடாயுபுரம். குமரி செல்லும் வழியிலே அகத்தீஸ்வரம் எல்லாமே கம்பனது காவியம் பரவிய பின்னரே நம் முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். சங்கக காலத்தில் இராமன் என்று ஒரு பெயர் வருகிறது அவ்வளவுதான்.

ஊர்த் திருவிழாக் காலங்களில் தேரோட்டம் முடிந்த பின்னரும் கம்ப ராமாயண உரை நடத்தப் பெறும். படிப்பற்ற முதியவர்கள்கூட கம்பன் கவிதையை ரசிக்க முடியும். ஒரு காவியம் ரசிக்க பெற்றால் எப்படி அந்த ரசனையை கிராம மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு கம்ப ராமாயணம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், ஜடாயுபுரம் போன்ற பெயர்களைப் பெற்றதே நல்ல எடுத்துக்காட்டு. நம் சிவனும் நாராயணனுமே நம்முடைய கவிஞர்களின் ரசனையில் உருவானவர்கள் தானே. முருகன், வேலன் என்பன வேறு எடுத்துக்காட்டுகள்.

திருவண்பரிசாரம் 108 திருப்பதிகளில் ஒன்ராக இருந்த போதிலும் நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதலானவர் என்று இருந்தபோதிலும், ஊர் மக்கள் எல்லாருமே சைவ சமய சார்புடையவர்கள்தாம். மாமிச உணவை உண்பவராக இருந்த போதிலும், சிவ சம்பந்தமே அதிகம். திருவாழ்மார்பர் சன்னதியில் பெறும் சந்தனத்தைக் கூட நெற்றியில் திருநீறு போலவே பூசிக்கொள்வார்கள். ஐந்து, ஏழு திருவிழாக் காலங்களில் முக்கியத்துவம் சிவனுக்குத்தான். எட்டாவது நாளில் நடராஜர் பவனி வருகையில் அது ஊர் மக்களின் நாளாக இருக்கும். தில்லையம்பலோம் சிவசிதம்பரோம் போன்ற கோஷங்கள் தலைத்தூக்கும். பத்துநாள் திருவிழாக் காலங்களில் அந்த நடராஜர் பவனிவரும் எட்டவது நாள் மக்த்தானது. சாதாரண மக்களும் சிறுவர்களும் கலந்துகொள்ளும்படியான திருவிழா நளாக இருக்கும். ஊரின் சிவசம்பந்தத்திற்கு அதுவும் ஓர் எடுத்துக்காட்டு. மகாதேவன், சிதம்பரம், பேச்சி, பகவதி, இயக்கி (இசக்கி – ஏக்கி) போன்ற பெயர்கள் சாதாரணமாக சூட்டப் பெறுபவை என்றாலும், சைவ வைணவ பேதம் கிடையாது.

திருமணங்கள் மணமகளின் இல்லத்திலேயே நடைபெறும். சத்திரங்களில் நடந்து நான் பார்த்தது கிடையாது. மணமகனுக்குத் தரப்படுகிற சீர்வரிசை அதிகம்தான். நிறை நாழி நெல் வைத்து, அரசாணி கிளை நட்டு பெரும்பாலும் சைவப் பெரியார் ஒருவர் தாம் நடத்திவைப்பார்.

திருமணத்தில் திருநீறு பூசுதல் ஒரு முக்கியமான அம்சம். தாலி கட்டல் முடிந்ததும் மணமக்களுக்கு பெற்றோர்கள் திருநீறு பூசுவார்கள். தொடர்ந்து பெற்றோர்களுக்குச் சமமான பெரியவர்கள். திருநீறு பூச பெரியவர்களை அந்த சமயத்தில் அழைக்க வேண்டும். ‘என்ன எவன் கூப்பிட்டான் கொஞ்சங்கூட மதிக்கல’ என்று சில கிழங்கள் கோபத்தை வெளிப்படுத்தும். மாலையில் மணமக்கள் கோயிலுக்குச் சென்று வருவார்கள். பின்னர் மேடைக்கு வந்து ‘சுருள்’ பெற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். உறவினர்கள் தங்களுக்கான தொகையை வெற்றிலையில் சுருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சடங்கு ‘நாலாம்நீர்’ என்று அழைக்கப்பட்டது. மறுநாள் காலையில் மணமக்கள் குளித்து மேடைக்கு வந்ததும் (மணமேடையானது இரண்டு நாள் அந்த வீட்டிலேயே இருக்கும்) ‘பிள்ளை மாற்றுச் சுருள்’ என்று பெண்கள் தர, மணமகன் ஒரு பொம்மையை – குழந்தை பொம்மையை – மணமகள் கையில் கொடுக்க, குழந்தைகள் சிரிக்கும். மஞ்சள் பொடிக் கலந்த நீரை சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மேலே ஊற்றி ஒரு விளையாட்டுப் போல அதி நடத்துவார்கள். இளைஞர்களு, பெரியவர்களும்கூட கலந்து கொண்டாலும், அது ஒரு குழந்தைகள் தினம் போலத் தோன்றும்.

பின்னர் மறுவீட்டிற்காக மணமக்கள் வழியனுப்பப் படும் போது, அங்கே பெற்றோறும் – உறவினரும் – குழந்தைகளும் நின்று அனுப்புவார்கள்.

நம்முடைய பாட்டன் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘இயல்புடைய மூவர்’ என்று மூவரைக் குறிப்பிடுகிறார். அந்த மூவர் யார் என்ற விவரம் தர்கத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனோ தர்க்கத்துக்குள்ளாகியிருக்கிறது.

முதல் பிரசவம் பெண்ணின் வீட்டில்தான் நடைபெறும். ஒரே ஊரில் திருமணம் புரிந்துகொண்டவர்கள் கூட மேலத்தெரு பெண் வீட்டிற்குக் கீழத்தெருவிலிருந்து அனுப்ப வேண்டும். குழந்தை உண்டான உடனேயே பெண் வீட்டிலிருந்து பலகாரங்கள் வந்த ஊராருக்கு வழங்கப்படும்.

பிறக்கும் குழந்தை ஆண் என்றால் பாட்டனார் பெயரையும், பெண்ணானால் பாட்டி பெயரையும் சூட்டுவார்கள். ‘பேரை உடையவன் பேரன்’ என்ற சொலவடை அங்கே உண்டு.

அழகிய பாண்டிபுரம் சோழபுரம் என்றெல்லாம் பக்கத்தில் ஊர்களைக் கொண்ட இந்தப் பகுதி பலகாலம் கேரளா என்னும் சேர மண்ணில் இருந்தது அதிசயந்தான்.

முதன் முதலாக எங்கள் ஊரில் மின்சார விள்க்கு எரிந்தது – ரேடியோ ஒலித்தது – கல்யாண வீட்டில் ஒலிபெருக்கி முழங்கியது எல்லாம் ஞாபகத்தில் உள்ளன.

பூதப்பாண்டியனும், நாஞ்சில் வள்ளுவனும் பெருமை பேசப்பட்டு, தலை நிமிர்வதில் குறையில்லை. வேறு என்ன குறை – முதலில் கேள்விகளை எழுப்புவோம் – பதில் கிடைக்கும்.

N. Ganesan

unread,
Nov 27, 2019, 7:56:54 AM11/27/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

> On Wed, Nov 27, 2019 at 4:30 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>>
>> மீண்டும் மீண்டும் இரண்டு வள்ளுவநாடு பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.
>> நாஞ்சில் நாடு ஒன்றா இரண்டா?  எஎன்று கேட்டதற்கு பதில் இல்லை.
>> ஒருவேளை இன்னொரு இழை தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ!
>> உங்கள் கல்வெட்டு கூறும் இரண்டு வள்ளுவநாட்டைப் பற்றி நான் ஐயப்படவே இல்லை.
>> வள்ளுவக்கோனாத்திரி பற்றியும் கேள்வி கேட்கவில்லை.
>> எனக்குத் தேவைப்படும் தெளிவு நாஞ்சில் நாடு ஒன்றா இரண்டா?
>
>
> நாஞ்சில் நாடு என்ற ஒன்று சங்க காலத்தில் இல்லை.
> வள்ளுவ நாடுகள் தாம் இருந்திருக்கின்றன. இதனைத்தான் கல்வெட்டுகளில் முதலில் காண்கிறோம்.
>
> பிற்காலத்தில், நாஞ்சில்நாடு என்ற பெயர் குமரிமாவட்ட வள்ளுவநாட்டிற்கு வந்திருக்கிறது.

சங்ககாலத்தில் குறிக்கப்படும் வள்ளுவன் வேளிர் குலத்தவன். நாஞ்சில்வேள் என வள்ளுவநாடுகளின்
தலைவன் குறிக்கப்படுகிறான். இது வல்லப எனும் இந்தோ-ஆர்யச் சொல்லின் தமிழ்த் தற்பவம்.
இவர்கள் மலை நாஞ்சில், ஆறு நாஞ்சில். ஆனால், நாஞ்சில்நாடு என்பது சங்க இலக்கியத்திலோ,
முதற் கல்வெட்டுகளிலோ இல்லை. இவ் வேளிர்களின் குலப்பெயரான வள்ளுவ நாடு எனத் தான் 
கல்வெட்டுக்களில் காண்கிறோம்.

பிற்காலத்தில் வள்ளுவன் என்ற ஜாதி உருவாகியுள்ளது. அது ‘வள் வார் முரசு’ போன்றவற்றில் உள்ள
வள்- என்னும் தாதுமூலம் கொண்டது. இரண்டையும் ஒன்று எனக் கொள்ளல் வேண்டா.

வஞ்சி என்ற ஊர் சங்க காலத்தில் மலைமண்டில வள்ளுவநாட்டின் வேளுக்கு அரசன் ஆண்ட ஊரான
கரூர். பிற்காலத்தில் வஞ்சி என்ற பெயர் சில ஊர்களுக்கு மாறுகிறது. முதலில் (பெரு)வஞ்சி
என்னும் இன்றைய தாராபுரம். இங்கே திருத்தக்க தேவர் வாழ்ந்து சீவக சிந்தாமணியை இயற்றினார்.
பின்னர் இன்றைய கேரளாவில் இப்பெயர் போகிறது. வித்துவக்கோடு என்று கரூர் அரண்மனையில்
இருந்த தனிக்கோயிலை குலசேகர ஆழ்வார் பாடினார். அவருக்குப் பின் சில நூற்றாண்டு கழிந்தபின்
வித்துவக்கோடு கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர் என்பது வரலாறு.

பிற்காலத்தில் உருவான வள்ளுவன் என்ற பெயரைப்போல, நாஞ்சில் என்ற சொல்லைப்
பார்த்ததும் இது தற்கால நாஞ்சில் நாடு என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
புறநானூற்றில் அழகாக, இரு வள்ளுவ நாடுகளையும் தனித்தனியாகப் பாடியுள்ளனர்.

நா. கணேசன்

>> சக
>> கைபேசியிலிருந்து  

>>
>> On Wed, 27 Nov 2019 5:17 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
>>>
>>> வள்ளுவநாடு என்று கல்வெட்டுக்களில் அறியப்படுபவை இரண்டு. (1) சேரநாட்டில் ஒத்தப்பாலம் போன்ற ஊர்களை உள்ளடக்கிய
>>> பாலைக்காட்டுக் கண்வாயின்கண் உள்ள வள்ளுவநாடு. இங்கே விரியூர் என்ற ஊர் உண்டு. அங்கே வாழ்ந்த நக்கனார்
>>> சங்கப் பாடல் தந்துள்ளார். கண்ணன், வள்ளுவன் (< வல்லப-), ... போல நக்கன் என்ற சொல்லும் அமைந்திஉள்ளது.
>>> புறப்பாட்டு 137- 140 இந்த வள்ளுவநாட்டைக் குறிப்பது. நெல்லும், கரும்பும் முக்கியப் பயிர்கள் இங்கே.
>>>
>>> (2) தென்பாண்டி நாட்டில் பாண்டியர்க்கு அடங்கின வள்ளுவநாடு ஒன்று உள்ளது. இதனை புறம் 380-ல் பாடியுள்ளனர்.
>>> இந்நாட்டின் பயிர்கள் நெல்லும், தென்னையுமாம். இந்த நாடு தற்காலத்தில் நாஞ்சில் நாடு என வழங்குகிறது.
>>> அதுபற்றியும், அதன் பயிர்களையும் விளக்குகிறார் மா. அரங்கநாதன்.
>>> http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=202:ennathu-oor&catid=24:2012-03-26-10-28-27&Itemid=52  
>>> ”ஊரைச் சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப் புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில் மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை அடையலாம். ”
>>>
>>> எனது ஊர்
>>>
>>> மா. அரங்கநாதன்
>>>
>>> சென்னைப் பட்டிணத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட போதிலும்,18 வயது வரை வாழ்ந்த ஊரால்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லலாம்.
>>>
>>> அது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிற பிரதேசத்தில் உள்ளது. இந்தியா எவ்வாறு ஆங்கிலேயரால் ஆளப்பட்டதோ, அதுபோல இந்த இடமும் திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாக்களால் ஆளப்பட்டது என்று சொல்லலாம்.
>>>
>>> வந்து சேர்ந்த இடம் சென்னைப் பட்டிணம். அதுவும் அப்போது மதறாஸ் மாகாணமாகத்தான் இருந்தது. அரசு அலுவலகங்களில் தெலுங்கு, கன்னடம் பேசுவோர் நிறைய இருந்தனர்.
>>>
>>> எனது ஊர் திருவண்பரிசாரம். திருப்பதிசாரம் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு பத்து மைல் கிழக்காக சென்றுவிட்டால் நெல்லை ஜில்லா வந்துவிடும். இருந்தாலும் அக்காலக்கட்டத்தில் திருநெல்வேலி ஓர் அந்நியப் பிரதேசமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கே கிடைக்கும் மலை வாழைப்பழம் கூட எங்கள் ஊருக்கு வருவது கிடையாது.
>>>
>>> சங்கம் மருவிய காலத்திற்கு முன்பேயே இந்த நாஞ்சில் நாடு, தமிழ் அறிஞர்களால் போற்றுவிக்கப் பட்டது மட்டுமல்ல, பலர் தொன்றியதும், இங்கேதான். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட இடம் என்று நாம் அறியும் அதங்கோடு பக்கத்து ஊர்தான். நாஞ்சில் வள்ளுவன் யார் என்ற ஐயப்பாடு இருக்கிறது எனினும் திருக்குறளில் கையாளப் பெற்றிருக்கிற பிரயோகங்கள் பல இன்றும் வழக்கத்தில் இங்கே உள்ளது. இது தவிர ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த இடம் இந்த ஊர்தான். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அல்லவா என்று கேட்கலாம். அது அவர் தகப்பனார் ஊர். அவர் தாயார் உடையநங்கையம்மாள் திருவண்பரிசாரத்தைச் சார்ந்தவர். குல வழக்கப்படி முதல் குழந்தை தாய் ஊரில்தான் பிறக்க வேண்டும்.
>>>
>>> ‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’ என்று நம்மாழ்வாரும் பாடியுள்ளார். ஊர் கோயிலிலும் நம்மாழ்வார்க்கென தனி சன்னதி உண்டு. திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாகவும் நம்மாழ்வார் வலம் வருவார்.
>>>
>>> 108 திருப்பதிகளில் ஒன்றான இந்த ஊர் கோயிலின் மூர்த்தி திருவாழ்மார்பார். கிட்டத்தட்ட அந்த ஊர் அளவிற்குப் பெரியது. எதிரே ஊர் தெப்பக்குளமும் அதன் துறைகளும் விஷேடம். அவற்றிற்குப் பெயர்களும் உண்டு. ஆண்கள் துறை, பெண்கள் துறை, குருக்களய்யாத் துறை, அரசு மூட்டுத் துறை, மாமூட்டுத் துறை என்பதோடு பிராமணாள் துறை, என்றும் ஒரு துறையைச் சொல்வார்கள். தண்ணீர் மற்ற ஊர் குளங்களைப் போல் அல்லாது ஓரளவு சத்தமாகவே இருப்பதற்கு அதிலுள்ள மீன்களைச் சொல்ல வேண்டும்.
>>>
>>> நல்லவர்களும் படித்தவர்கள் என்று பெயரெடுத்தவர்களும் கூட ஜாதி நெறியைப் பின்பற்றவே செய்தார்கள். அதில் பிராமணர்களைவிட மற்றவர்கள் அதிக கண்டிப்புடன் இருந்தார்கள்.
>>>
>>> கோயிலின் பூஜை புனஸ்காரங்கள் ‘போற்றி’ என்று அழைக்கப்படும் ‘துளு’ மொழி பேசும் நபர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கும். ‘இன்னிக்குப் பையன் “எக்ஸாம் பீஸ் கட்டறநாள் – பகவானாப் பார்த்து ஒங்கள அனுப்பிச்சிருக்கார்” என்று பிரசாதத் தட்டை நீட்டும் அர்ச்சகர்களை நாற்பதுகளில் பார்த்திருக்கிறேன் – அவர்கள் சிறிது ஆங்கிலமும் பேசுவார்கள். கோயிலின் பக்கமாக அமைந்த பிராமணக்குடி என்று அறியப்படும் தெருவில் ஏழெட்டு பேரே இருந்தார்கள். கோயில் மதில்களும் பிரகாரங்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். கோபுரம் இல்லாவிட்டாலும் முன்பக்கம் இருக்கும் சிலை மிகவும் அழகு.
>>>
>>> ஊரின் வடக்கே பழையாறு என்னும் பறளியாறு என்னும் பஃறுளியாறு ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக ஊரில் எல்லாருமே விவசாயிகள்தாம். பயிரை பற்றி அதாவது உழவு, மரடித்தல், விதைப்பு, தண்ணீர்ப் பாய்ச்சுதல், நாற்றுநடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு, சூடு அடித்தல், நெல் அளவு என்பன் பற்றியெல்லாம் குழந்தைகளும் அறியும். வைகாசி 15ஆம் நாள் என்றாலே அங்கு மழை தொடங்கிவிடும்.
>>>
>>> ஊரைச் சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப் புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில் மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை அடையலாம். கலைவாணர் என். எஸ்.கே., டி.கே. சண்முகம் இல்லங்கள் வழியாகவும் கடந்து செல்ல வேண்டும்.
>>>
>>> கவிமணியைத் தவிர மனோன்மணியம் சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் பேரப்பிள்ளைகளும், உறவினர்களும் இங்கே உண்டு. பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் பிறந்ததும் பக்கத்து பூதப்பாண்டியில்தான்.
>>>
>>> “தென்னம் பிள்ளையிலே ஏறி ஒரு காய் பறிக்க முடியுமா, முன் ஏர் கட்டி உழத் தெரியுமாலே உனக்கு’ என்று கேட்கும் அளவிற்கு தென்னையும் நெற்பயிரும்தான் அங்கே செல்வம். தேங்காய் கேரளாவில் இருப்பது போலல்லாமல், ஒரு தனிச்சுவையுடன் இருக்கும். வாழையும் அப்படித்தான். விதவிதமாக உண்டு. மலையாளத்திலும் மற்ரத் தமிழகப் பகுதிகளிலும் நேந்திரங்காய் என்று சொல்லப்படும் அந்த ரகத்தை ஏற்றங்காய் என்றுதான் ஊரிலே குறிப்பிடுவார்கள். அறுவடையில் கிடைக்கும் நெல்லைக் கொண்டுதான் அனேகமாக எல்லாப் பலசரக்குச் சாமான்களும் வாங்கப்படும். நெல்லைப் பணமாக ஏற்றுக் கொள்கிற வியாபாரிகள் கடைக்காரர்கள் உண்டு.
>>>
>>> அறுவடை நடக்கும்போதும், கதிர் முற்றி தயாராக இருக்கும்போதும் யராவது சென்று வரப்பில் உட்கார்ந்து இரவு முழுவதும் காவல் காப்பது அவசியம்.
>>>
>>> சில காலக்கட்டங்களில் நெல்வயல்களிலேயே காய்கறிகள் பயிர் செய்வதுண்டு. அப்போது அதை கத்திரி வயல் என்று சொல்வார்கள். கத்தரி மட்டுந்தான் பயிர் என்றில்லை அதுதான் அதிகமாக இருக்கும். அதிகமாக அதுதான் செலவுமாகும். எனவே, கத்திரி என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம். வீட்டில் கிழங்கள் காலமாகிவிட்டால்,
>>>
>>> ‘கத்திரிக்காய்
>>>
>>> எங்களுக்கு
>>>
>>> கைலாயம் உங்களுக்கு’
>>>
>>> என்று ஒப்பாரி வைத்து அழுவதுண்டு. அப்படிப்பட்ட வரிகளில் கவிதையம்சம் உண்டு. அதனுடைய விஷேடம் அவர்களுக்குத் தெரியாது.
>>>
>>> துக்கம் கேட்பது என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தின்போது போகாமல் இருந்துவிடலாம். ஆனால், துட்டி கேட்காவிட்டால் அது பெரும் தவறு.
>>>
>>> ஆனாலும், இம்மாதிரிப்பட்ட பெருந்தன்மையான போக்கு ஊருக்கு வெளியே இருக்கும் ஆதிதிராவிடர், வண்ணார் போன்ற சமூகத்தினர்பால் கிராமத்துவாசிகளுக்குக் கிடையாது.
>>>
>>> ஊர் மேலூர் – கீழூர் என்று அறியப்பட்டது. இரண்டிற்கும் நடுவே பழையாற்றின் ஒரு வெட்டாறு. கீழூரில் இடையர், தச்சர், முடிதிருத்துவோர் போன்றோரின் இருப்பிடங்கள். இவர்களெல்லாம் கோயிலிலும் குளத்திலும் அனுமதிக்கப்பட்டாலும் ஆதிதிராவிடர் வேண்டிய மட்டும் ஒதுக்கப்பட்டனர். ஊர் சிறுவர்கள் மனதில் இம்மாதிரிப்பட்ட நச்சு எண்னம் நியாயமாக தொற்றுவிக்கப்பட்டது. அப்படி நீங்காமலே இருந்த எண்ணம் கொண்ட பல பிரபலங்களை நான் பிற்காலத்தில் அறிந்திருக்கிறேன்.
>>>
>>> மலை – அது மாபெரும் அனுபவம். திருவண்பரிசாரத்தில் இருந்து பார்த்தால் மூன்று பக்கமும் மலை தெரியும். கிழக்கே மருந்துவாழ் மலை அநுமான் லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்த கதையோடு இந்த மலையின் இருப்புச் சொல்லப்படுகிறது. வடக்கே தாடகை மலை – ஊரோடு செர்ந்து ஜடாயுபுரம். குமரி செல்லும் வழியிலே அகத்தீஸ்வரம் எல்லாமே கம்பனது காவியம் பரவிய பின்னரே நம் முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். சங்கக காலத்தில் இராமன் என்று ஒரு பெயர் வருகிறது அவ்வளவுதான்.
>>>
>>> ஊர்த் திருவிழாக் காலங்களில் தேரோட்டம் முடிந்த பின்னரும் கம்ப ராமாயண உரை நடத்தப் பெறும். படிப்பற்ற முதியவர்கள்கூட கம்பன் கவிதையை ரசிக்க முடியும். ஒரு காவியம் ரசிக்க பெற்றால் எப்படி அந்த ரசனையை கிராம மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு கம்ப ராமாயணம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், ஜடாயுபுரம் போன்ற பெயர்களைப் பெற்றதே நல்ல எடுத்துக்காட்டு. நம் சிவனும் நாராயணனுமே நம்முடைய கவிஞர்களின் ரசனையில் உருவானவர்கள் தானே. முருகன், வேலன் என்பன வேறு எடுத்துக்காட்டுகள்.
>>>
>>> திருவண்பரிசாரம் 108 திருப்பதிகளில் ஒன்ராக இருந்த போதிலும் நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதலானவர் என்று இருந்தபோதிலும், ஊர் மக்கள் எல்லாருமே சைவ சமய சார்புடையவர்கள்தாம். மாமிச உணவை உண்பவராக இருந்த போதிலும், சிவ சம்பந்தமே அதிகம். திருவாழ்மார்பர் சன்னதியில் பெறும் சந்தனத்தைக் கூட நெற்றியில் திருநீறு போலவே பூசிக்கொள்வார்கள். ஐந்து, ஏழு திருவிழாக் காலங்களில் முக்கியத்துவம் சிவனுக்குத்தான். எட்டாவது நாளில் நடராஜர் பவனி வருகையில் அது ஊர் மக்களின் நாளாக இருக்கும். தில்லையம்பலோம் சிவசிதம்பரோம் போன்ற கோஷங்கள் தலைத்தூக்கும். பத்துநாள் திருவிழாக் காலங்களில் அந்த நடராஜர் பவனிவரும் எட்டவது நாள் மக்த்தானது. சாதாரண மக்களும் சிறுவர்களும் கலந்துகொள்ளும்படியான திருவிழா நளாக இருக்கும். ஊரின் சிவசம்பந்தத்திற்கு அதுவும் ஓர் எடுத்துக்காட்டு. மகாதேவன், சிதம்பரம், பேச்சி, பகவதி, இயக்கி (இசக்கி – ஏக்கி) போன்ற பெயர்கள் சாதாரணமாக சூட்டப் பெறுபவை என்றாலும், சைவ வைணவ பேதம் கிடையாது.
>>>
>>> திருமணங்கள் மணமகளின் இல்லத்திலேயே நடைபெறும். சத்திரங்களில் நடந்து நான் பார்த்தது கிடையாது. மணமகனுக்குத் தரப்படுகிற சீர்வரிசை அதிகம்தான். நிறை நாழி நெல் வைத்து, அரசாணி கிளை நட்டு பெரும்பாலும் சைவப் பெரியார் ஒருவர் தாம் நடத்திவைப்பார்.
>>>
>>> திருமணத்தில் திருநீறு பூசுதல் ஒரு முக்கியமான அம்சம். தாலி கட்டல் முடிந்ததும் மணமக்களுக்கு பெற்றோர்கள் திருநீறு பூசுவார்கள். தொடர்ந்து பெற்றோர்களுக்குச் சமமான பெரியவர்கள். திருநீறு பூச பெரியவர்களை அந்த சமயத்தில் அழைக்க வேண்டும். ‘என்ன எவன் கூப்பிட்டான் கொஞ்சங்கூட மதிக்கல’ என்று சில கிழங்கள் கோபத்தை வெளிப்படுத்தும். மாலையில் மணமக்கள் கோயிலுக்குச் சென்று வருவார்கள். பின்னர் மேடைக்கு வந்து ‘சுருள்’ பெற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். உறவினர்கள் தங்களுக்கான தொகையை வெற்றிலையில் சுருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சடங்கு ‘நாலாம்நீர்’ என்று அழைக்கப்பட்டது. மறுநாள் காலையில் மணமக்கள் குளித்து மேடைக்கு வந்ததும் (மணமேடையானது இரண்டு நாள் அந்த வீட்டிலேயே இருக்கும்) ‘பிள்ளை மாற்றுச் சுருள்’ என்று பெண்கள் தர, மணமகன் ஒரு பொம்மையை – குழந்தை பொம்மையை – மணமகள் கையில் கொடுக்க, குழந்தைகள் சிரிக்கும். மஞ்சள் பொடிக் கலந்த நீரை சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மேலே ஊற்றி ஒரு விளையாட்டுப் போல அதி நடத்துவார்கள். இளைஞர்களு, பெரியவர்களும்கூட கலந்து கொண்டாலும், அது ஒரு குழந்தைகள் தினம் போலத் தோன்றும்.
>>>
>>> பின்னர் மறுவீட்டிற்காக மணமக்கள் வழியனுப்பப் படும் போது, அங்கே பெற்றோறும் – உறவினரும் – குழந்தைகளும் நின்று அனுப்புவார்கள்.
>>>
>>> நம்முடைய பாட்டன் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘இயல்புடைய மூவர்’ என்று மூவரைக் குறிப்பிடுகிறார். அந்த மூவர் யார் என்ற விவரம் தர்கத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனோ தர்க்கத்துக்குள்ளாகியிருக்கிறது.
>>>
>>> முதல் பிரசவம் பெண்ணின் வீட்டில்தான் நடைபெறும். ஒரே ஊரில் திருமணம் புரிந்துகொண்டவர்கள் கூட மேலத்தெரு பெண் வீட்டிற்குக் கீழத்தெருவிலிருந்து அனுப்ப வேண்டும். குழந்தை உண்டான உடனேயே பெண் வீட்டிலிருந்து பலகாரங்கள் வந்த ஊராருக்கு வழங்கப்படும்.
>>>
>>> பிறக்கும் குழந்தை ஆண் என்றால் பாட்டனார் பெயரையும், பெண்ணானால் பாட்டி பெயரையும் சூட்டுவார்கள். ‘பேரை உடையவன் பேரன்’ என்ற சொலவடை அங்கே உண்டு.
>>>
>>> அழகிய பாண்டிபுரம் சோழபுரம் என்றெல்லாம் பக்கத்தில் ஊர்களைக் கொண்ட இந்தப் பகுதி பலகாலம் கேரளா என்னும் சேர மண்ணில் இருந்தது அதிசயந்தான்.
>>>
>>> முதன் முதலாக எங்கள் ஊரில் மின்சார விள்க்கு எரிந்தது – ரேடியோ ஒலித்தது – கல்யாண வீட்டில் ஒலிபெருக்கி முழங்கியது எல்லாம் ஞாபகத்தில் உள்ளன.
>>>
>>> பூதப்பாண்டியனும், நாஞ்சில் வள்ளுவனும் பெருமை பேசப்பட்டு, தலை நிமிர்வதில் குறையில்லை. வேறு என்ன குறை – முதலில் கேள்விகளை எழுப்புவோம் – பதில் கிடைக்கும்.
>>>
>>> --

N. Ganesan

unread,
Dec 2, 2019, 9:07:14 AM12/2/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
சங்க காலத்தில் வள்ளுவன் என்ற சொல் பிராகிருதம் வாயிலாக அமைந்த ஆர்யபாஷைச் சொல். வல்லப- என்ற வடசொல் தமிழில் வள்ளுவன் என்று வரும். இந்த அரசர்கள் ஆண்ட நாடுகள் சங்க காலம் மருவிய பின் வள்ளுவநாடு என்று கல்வெட்டுக்களில் அழைகக்ப்படுகிறது. புறம் 380 என்னும் பாடலில் தென்குமரி பகுதியில் வாழ்ந்த வள்ளுவன் பேசப்படுகிறான். இவன் பாண்டிய மன்னனின் படைத்தலைவன். வள்ளுவன் என்னும் ஆரியபாஷைச் சொல்லைத் தவிர்த்து,
பொருநன் (போர்வீரன்) என்று நாஞ்சில் வள்ளுவன்மார் பாடப்பெற்றுள்ளனர். புறம் 380, மற்றும் புறம் 137-140ல். 

பாலக்காட்டுப் பகுதியில் நாஞ்சில் வள்ளுவன் என்னும் படைத்தலைவர்கள் சங்க காலத்தில் இருண்டனர். இவர்கள் வள்ளுவ நாட்டு வேளாண்மையையும்,
சிறப்புகளையும் பாடல்கள் புறநானூறு 137-140 ஆகும். கேரளாவிலே உள்ள மிகப்ப்ழைய அரச வமிசத்தினர் எனப்படுவோர் வள்ளுவக் கோனாதிரி மரபினர். பாலைக்காட்டுக் கணவாயில் இவர்கள் வள்ளுவநாடு என்னும் வல்லப ராஷ்ட்ரம் இருக்கிறது. கல்வெட்டுக்களில், வள்ளுவநாடு = வல்லபராஷ்ட்ரம். கோன் + ஸ்ரீ ==> ப்ரகிருத வாயிலாக கோனதிரி என்று ஆகியுள்ளது. நம்பூதிரிகள் முழுதுமாக ஆட்சி தொடங்குமுன்னர் இந்த வள்ளுவர் என்னும் அரசர்களுக்கு ஏற்பட்ட பெயர் கோனாதிரி. பாண்டியர்க்குக் கொற்கை, சோழருக்கு புகார் போல, வஞ்சி (கரூர்) தலைநகராக இருந்த சங்கச் சேரருக்கு முசிறி துறைமுகம். வஞ்சி மாநகருக்கும், முசிறிப் பட்டினத்துக்கும் இடையில் வணிகம் சிறப்புற்றிருந்தது, இன்றும் ரோமானிய நாணயங்கள்மிகுதியும் கிடைக்கும் பகுதி இதுவே. உறை மாணவர் உறைவிடம் என்ற பொருளில், சமணர்கள் இடையே உண்டுறைப்பள்ளி பயனாகிறது, அதனால்தானோ என்னவோ, பிராமணர்கள் உண்டும் உறைந்தும் வாழ்ந்த இடங்கள், சேரநாட்டுத் தமிழில் “ஊட்டுப்புரை” என்று வழங்கியது. இப்போது, ஊட்டுப்புரை என்றால் பிராமணர்கள் உணவு பெறுமிடம் என்ற அளவில் சுருங்கிவிட்டது  ஊட்டுவான் என்றால் சமையல்காரன் (cook) எனப் பொருள். பெரும்பாலும் தஞ்சை பகுதியில் இருந்து வந்த சுமார்த்தர்கள் - கேரளாவில் பட்டர் என்பர் - இத்தொழிலில் இருந்தார்கள். டி. என். சேஷன் போன்றோர் இதுபற்றிப் பேசியுள்ளனர். ஊட்டுப்புரையின் பழைய பொருள் ஆகிய உணவும், உறையுளும் தரும் இடம். புரை என்பதால் விளக்கமுடியும். 
புரை⁶ purai , n. < pura. [M. pura.] 1. House, dwelling; வீடு. புரைபுரை யாலிவை செய்ய வல்ல (திவ். பெரியாழ். 2, 9, 1). மண்புரைபெருகிய மரமுள் கானம் (ஐங்குறு. 319). 2. Hermitage; ஆச் சிரமம். புரையுட் புக்கனர் (கம்பரா. திருவல. 42). 3. Temple; தேவாலயம். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற்றுப். 15, 37). 4. Small room; அறை. 5. Compartment, as of a box; பெட்டியின் அறை. பெட்டிப்புரைக்குள் வை. 6. Cowstall; மாட்டுத் தொழுவம். (மாட்டுவா. 23.) 7. Place; இடம். இரு மற்றிரைவிரிபுரையை (ஞானா. 43, 21). 8. Corner, side; ஏகதேசம். பொகுட்டதோர் புரையின் வைகுமால் (கம்பரா. இரணிய. 71). 9. Earth; பூமி. (பிங்.)  
ஆங்கிலத்தில் dormitory with food என்பதன் நேராக ஊட்டுப்புரை, உண்டுறை என்ற சொற்கள் தமிழில் இருந்துள்ளன. வள்ளுவ கோனாதிரிமார் இந்த ஊட்டுப்புரை அமைப்பைப் பெரிதும் வளர்த்து ஆதரித்தவர்கள். இந்த அமைப்பால், நம்பூதிரிமார் (<< நம்பி + ஸ்ரீ)  தங்கள் இருக்குவேத மரபுகளை முற்றிலும் காப்பாற்ற முடிந்திருக்கிறது. இந்த வள்ளுவநாட்டுப் பகுதிகளில் (=வல்லப ராஷ்ட்ரத்தில்)  ஆதிசங்கரர் போன்றோர் நம்பூதிரிமனைகளில் பிறந்திருக்கின்றனர். பழைய நூல்களில் சங்கரர் பிரந்த ஊர் இன்று ‘கம்யூனல் ஹார்மனி’க்காக வேறு ஒரு இடத்தில் அமைந்துள்ளது. இதுபற்றிய குறிப்பை முன்னர் தந்துள்ளேன். 

ஆனைமலைச் சிகரங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக பேரரசர்களுக்கு யானை பிடித்துப் பழக்கும் மலைகள் ஆக இருந்துள்ளன. பார்க்க: களந்தை கோப்பண மன்றாடி கைபீது, காலின் மெக்கென்சி சுவடிகள் (கி.பி. ~1800). இந்தச் சிகரங்களில் ஒன்று நாஞ்சில். இதிலே தோன்றுவது நாஞ்சிலாறு. இம்மலையை “உழாஅ நாஞ்சில்” என்கிறார் மருதன் இளநாகனார். வள்ளுவநாட்டின் வளம் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையால் ஏற்படுவது. நெல்லும், கரும்பும் முக்கியப் பயிகள்.
இவற்றை ஒருசிறைப்பெரியனார் ஒப்பிட்டுப் பாடிய புறப்பாட்டு137 இருக்கிறது. புன்செய் போல இருக்கும் குளத்தின் அருகே உள்ள பள்ளமான நிலத்தில் (கயத்தில்) விதைக்கிற நெல்லம் வித்து ஆனது மழை ஊற்றத் தொடங்கியதும் வளமாக வளர்ந்து உன் நாட்டின் கரும்பு போல செழிக்கும் திறம் என்னே என வியக்கிறார் புலவர். கை- (கைதை. கேதகி என வடமொழியில் மாறுவது. கையம் கயம் நீர் கசியும் நிலம். கய்யம்(கையம்) >> கச்சம் (வடமொழியில் வழங்கும்
தமிழ்ச்சொல். கச்சபம் = யாமை ... யானையைக் கசம் என்பது இதனால்தான், மதம் கசிவது. கயம்: இளமை, மென்மை என்பதும் குழைந்த நிலமாக கயம் (இயற்கையான பள்ளம்) பண்பாகுபெயர்.)

வேளிர்கள் தமிழ்நாட்டில் நெல் வேளாண்மையைப் புகுத்தினர். அதற்கு முன்னர் வேட்டுவர் சமுதாயம் - ஹண்ட்டர்-கேதரர் ஸொசைட்டியாக தமிழகம் இருந்தது. வேளிர் வருகை ~கி.மு. 900 எனலாம். மலைமண்டிலத்து வள்ளுவநாட்டு வேளாண்மையில் முக்கியப் பயிர்களாக நெல்லும், கரும்பும் இருந்தது பற்றித்
தொடங்கும் ஒருசிறைப் பெரியனார் பாடல் (புறம் 137). இங்கே முதல் வரியே, ஆனைமலைச் சிகரஙளில் பிடிபடும் யானைகள் பற்றிப் பேசுகிறது (இரங்கு முரசின் இனம் சால் யானை). வேழமுடைத்து சேரநாடு. மலைனாட்டு வள்ளுவ ராஷ்ட்ரத்தின் கடைசிப் பாட்டிலும் (புறம் 140, மருதன் இளநாகனார் இயற்றியது)
விறலி என்னும் கதாபாத்திரம் வேளிரின் குலச்சின்னம் ஆகிய நெல்லின் அரிசி ஒருகை கேட்டேன். யானையே ஈந்தான் என்று புகழ்வதாக அமைத்துள்ளார் சங்கப் புலவர்.

”கரும்பு மேம்பாட்டுத் திட்டம் :


தமிழ்நாட்டிலுள்ள துாத்துக்குடிராமநாதபுரம்நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும்கரும்புப்பயிரின் பரப்புஉற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனைப் பெருகுவதற்காக கரும்பு வளர்ச்சிக்கான மாநிலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ”


நஞ்சை நிலங்களில் நெல் மட்டும் விளையும் குமரி மாவட்டப் பகுதியல்ல புறப்பாடல் 137-140 என்பது தெளிவு.
அங்கே கரும்போ, சர்க்கரை ஆலையோ இல்லை.

இல்லை. Bamboo என்ற சொல் சங்க இலக்கியத்தில் வம்பு < வண்பு. அதுபோல், கொங்கமழை < கொண்க மழை.

நா. கணேசன்
வஞ்சி என்று இரு மாபெரும் நகரங்கள் சங்க காலத்தில் இல்லை. மேலைக்கடற்கரையில் வஞ்சி என்ற மாநகர் சங்க காலத்தில் கிடையாது.
இதுபற்றி நல்ல கட்டுரை தொல்லியல் அறிஞர் எழுதியுள்ளார். கொடுமுடி சண்முகனும், புலவர் செ. இராசுவும் பத்திப்பித்துள்ளனர்.
அதனை பின்னர் தருகிறேன். இது 100 ஆண்டு காலமாக தமிழறிஞர்கள் நூல்கள் எழுதியும், பின்னர் தொல்லியல் அறிஞர்கள்
- ஐராவதம், நாகசாமி, இரா. கிருஷ்ணமூர்த்தி ... போன்றோர் - காட்டிய முடிபு. மேலைக்கடற்கரையில் கற்பனாநகரம் உற்பத்தி ஆவது
எப்படி எனப் பார்க்க ஆவல்.

ப. சரவணன், சங்க காலம்.
https://www.134804.activeboard.com/t59999596/topic-59999596/?page=1&w_r=1475990016
’குறுநில மன்னர்களைப் போல இவர்கள் வாரி வழங்கவில்லை. இவ்வேந்தருக்குப் போர்த்தொழிலில் அடியாட்களாகச் சீறூர் மன்னர்களும் முதுகுடிமன்னர்களும் குறுநில மன்னர்களும் செயல்பட்டனர். இதனை இலக்கியங்கள் “வேந்துவிடுதொழில்“ என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளன. இந்த அடியாட்கள் சிறப்புற பணியாற்றினால் அவர்களுக்கு வேந்தர் ஊதியம் வழங்கியுள்ளார். அவ் ஊதியத்தினை இலக்கியங்கள் “வேந்து தரு விழுக்கூழ்“ என்று சிறப்பித்துள்ளன. தன்னால் வேந்தர் வெற்றி பெற்றால், அதனைத் தன்னுடை வெற்றியாக நினைத்து, மகிழ்ந்து கொண்டாடியுள்ளனர். இதனை இலக்கியங்கள் “வேந்நாட்டு அரவம்“ என்று குறிப்பிட்டுள்ளன.

பாண்டியருக்கு அதியன், தந்துமாறன், நம்பிநெடுஞ்செழியன், பண்ணி, பாண்டியன் கீரஞ்சாத்தன், நாலைகிழவன் நாகன் ஆகிய குறுநில மன்னர்கள் போர்க்கால அடியாட்களாக இருந்தனர். சோழர்க்கு மலையமான், ஈர்ந்தூர் கிழான் தோயன்மாறன், சிறுகுடிகிழான் பண்ணன், மத்தி, மலையமான் சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோரும் சேரருக்கு நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன் ஆகியோரும் உதவினர். மலையமான் திருமுடிக்காரி என்ற வள்ளல் மூவேந்தரில் யார் படைஉதவி கோரினாலும் உடனே முன்வந்து உதவுபவராக இருந்துள்ளார். மூவேந்தரை “வம்பவேந்தர்“ என்று இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

இத்தகவல்களைப் புறநானூற்றின் 3, 31, 35, 38, 39, 45, 75, 84, 115, 119, 122, 127, 126, 139, 171, 172 – 174, 179, 197, 205, 239, 265, 284, 281, 285, 287, 307, 316, 319, 320, 324, 333, 339, 345, 350, 351, 360, 369, 378, 380, 388, 390, 396, கலித்தொகையின் முல்லைக்கலி 8, அகநானூற்றின் 13, 162, 226 ஆகிய பாடல்களின் வழியாகவும் பெரும்பாணாற்றுப்டையின் 405, 411, மலைபடுகடாமின் 479 ஆகிய அடிகளின் வழியாகவும் பெறமுடிகின்றது.க் கேட்டறிந்தான். “முடிசூடுதல்“என்ற சடங்கு வேந்தர்க்கு மட்டுமே உரியது. ஆதலால்தான் “முடியுடை மூவேந்தர்“என்ற சொற்றொடர் ஏற்பட்டிருக்க வேண்டும். “வேந்தர்“ என்பவர் மன்னருக்கு மேலானவர். “மன்னர்“ எப்போதும் வேந்தரின் படைசார்ந்த பணியாள்தான்.’ (ப. சரவணன், சங்க காலம், காலச்சுவடு).
 
 
On Tue, Nov 26, 2019 at 3:12 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
புறநானூறு பதிப்பிலேயே பொன்னானி வட்டத்தில் கிடைத்த கல்வெட்டு பற்றிய செய்தி உள்ளது (ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் உரையில் பார்த்தேன்; இதில் உ.வே.சா.பதிப்புச் செய்திகளும் இருக்கும்.) 
இப்போது எனக்கிருப்பது இரண்டு ஐயங்கள் ; அதாவது 

1)இடைக்காலத்தில் இரண்டு வள்ளுவநாடுகள் இருந்தன என்பதற்குக் கல்வெட்டுக்கள் ஆதாரமாகின்றன. 
'உழா நாஞ்சில்' என்று அகநானூறு குறிப்பிடும் நாஞ்சில் நாடு (சங்க காலத்தது) எத்தனை இருந்தது? ஒன்றா? இரண்டா? (ஏனென்றால் சங்க காலத்தில் இரண்டு வஞ்சிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளனவே.)

2) கயத்தில் போட்ட வித்து வறட்சிக் காலத்தில் கழை என்று சொல்லக்கூடிய கரும்பு போல வளர்ந்திருக்கும் என்ற செய்தியில் இடம்பெறும் வித்து எது? நெல்லா?/ கரும்பா? அதை கயத்தில் போடுவது ஏதாவது வேளாண்மைசார் சம்பிரதாயமா?

நிதானமாக ஓய்வெடுக்கும் போது பதில் கூறுங்கள்; பணிச்சுமைக்கு இடையில் அவசர பதில் வேண்டாம். (வஞ்சி பற்றி எதுவும் பேசவேண்டாம்; வாசிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டும். டிசம்பர் 15ம் தேதி கருத்தரங்கு முடிந்தவுடன் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.) எனக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
சக  


On Tue, Nov 26, 2019 at 8:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Nov 25, 2019 at 6:16 PM S Roy <suji...@gmail.com> wrote:
Valluvanad in Palakkad as far as I can find out was formed only in the 9th or 10th centuries, so its history starts much after Valluvar.
 
குமரி மாவட்ட வள்ளுவநாடும், பாலக்காட்டு வள்ளுவநாடும் ஒரே பழமை கொண்டவை.
இரண்டுமே கல்வெட்டுக்களில் ஒரே காலத்தில் குறிப்பிடப்படுகின்றன.

புறம் 137-140 அதில் வரும் குறிப்புகளால் பாலக்காட்டு வள்ளுவநாட்டு தலைவனைப் பாடியது
என தெரிகிறது. இவன் வஞ்சி மாநகரில் இருந்து அரசாண்ட சேரனின் படைத்தலைவன்.

நா. கணேசன்

 
Best,
Sujata

On Monday, 25 November 2019 15:57:14 UTC-8, N. Ganesan wrote:
ஒரு குறிப்பு:

புறநானூற்றில் பாடல் 380 பார்த்தோம். இந்த நாஞ்சில் நாட்டு வேள் ஆகிய வள்ளுவன் பாண்டியனுக்குக் கீழ் இருந்தவன் என்பது தெளிவு.

ஆனால்,
புறநானூறு 137-140 பாடல்களில் பாடப்பெற்ற நாஞ்சில் வள்ளுவன் வேறு ஒரு நாட்டை ஆண்டவன்.
அது சேரநாட்டின்கண் உள்ள வள்ளுவநாடு. இதனை இப்பாடல்களில் உள்ள குறிப்புகள் கொண்டே
அறியலாம். வேளிர் குலச் சின்னமான நெல் அரிசி, மற்ற முக்கிய பயிர் பற்றிப்பாடியுள்ளனர் புலவர்.
இவை குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டில் இல்லை. சேரனின் சேனாபதி இந்த நாஞ்சில் வேள்.

மத்திய கேரளம், பாலைக்காட்டுக் கணவாய் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு என்பர்.
சங்கச் சேரர் தலைநகர் (ஆன்பொருநைக் கரையில்) உள்ளது பற்றி இலக்கியங்களாலும்,
பின்னர் தொல்லியல் ஆய்வுகளாலும் தெளிவு கிடைத்தது. கிரீஷ்மலதா போன்றோர்
ஆய்வுகள் வள்ளுவநாட்டின் அரசர்களாகிய நாஞ்சில் வள்ளுவரைப் பற்றி மேலும் அறியச் செய்யும்.

புறப்பாட்டுகளைத் தொகுத்தோர் வெகுகவனமாக, இரு நாஞ்சில் வேள்களின் பாடல்களைப்
பிரித்து வைத்துள்ளனர். அந்த அருமையை உணராமல், எல்லாம் ஒரே வள்ளுவநாடு என்று
எழுதுகின்றனர். வரலாற்று நோக்கில் இது சரி யல்ல. 

பிற பின்,
நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdLRfHmkZ%3D0tPsf-8mdkXChKFpT4DrkL0Dhhg3Vfr-xsg%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 2, 2019, 7:46:50 PM12/2/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
(1) இன்னொரு உருபன்: கை. தெலுங்கில் செய், செயி, செய்யி என்றாகும்.
DEDR 2023 Ta. kai hand, arm; elephant's trunk; handle; (-pp-, -tt-) to feed with the hand. Ma. kai, kayyi hand, arm; trunk of elephant; handle; kayyu the hand; kayyāḷ an assistant, helper. Ko. kay hand, arm. To. koy id. Ka. kay, kayi, kayyi, key hand, fore-arm; elephant's trunk; handle. Koḍ. kay hand, arm. Tu. kai hand; handle. Te. cēyi (obl. cēti; pl. cētulu), ceyi, ceyyi hand, arm; elephant's trunk; kēlu, kai the hand; kēkisalu clapping of the hands. Kol. ki· (pl. -l), (Kin. SR.) key, (Haig) kīy, (Hislop) kiyu hand, arm. Nk. kī (pl. kīḷ) id. Nk. (Ch.) kī (pl. kīlku, kīkul) hand. Pa. key id. Ga. (Oll.) ki (pl. kil), (S.) kiyyū (pl. kiyyūl, kiykīl), (S.3kiy id. Go. (Y. Ch. G. Mu. S. Ko.) kay, (Tr. W. SR.) kai id. (Voc. 519). Konḍa kiyu (pl. kiku), (Sova dial.) kivu id. Pe. key (pl. -ku) id. Manḍ. kiy id. Kui kaju, kagu (pl. kaka) hand, arm; elephant's trunk; (K.) kaju (pl. kaska) hand. Kuwi (F.) kēyū (pl. keska), (S.) kēyu, (Su.) keyyu, (Isr.) keyu (pl. keska), (P.) kayyu hand, arm, (Su. also) handle. Kur. xekkhā hand, arm. Malt. qeqe hand. ? Cf. 1957 Ta. cey. DED(S) 1683.

இதேபோல், பொருள்வேறுபட்ட  கை (கையம் >> கயம்) செய் என்றாகி, நன்செய், புன்செய் எனப் பிரிபடுகிறது. புன்செய் போல் இருக்கிற
பள்ள நிலத்தில் நெல்லம் வித்தை விதைத்தால், வறத்தில் வறண்டு சாகாது, வளமான நெல்பயிர் ஆகிறதே உன் நாட்டில் என வியக்கிறார்
ஒருசிறைப் பெரியனார் மலைநாட்டு நாஞ்சில் வள்ளுவனை/வல்லபனைக் கண்டு.   கை- (கைதை. கேதகி என வடமொழியில் மாறுவது. 
கையம் கயம் நீர் கசியும் நிலம். கய்யம்(கையம்) >> கச்சம் (வடமொழியில் வழங்கும் தமிழ்ச்சொல். கச்சபம் = யாமை ... யானையைக் கசம் (gaja)
என்பது இதனால்தான், மதம் கசிவது. கயம்: இளமை, மென்மை என்பதும் குழைந்த நிலமாக கயம் (இயற்கையான பள்ளம்) பண்பாகுபெயர்.)

(2) தமிழுக்கு பிராமி எழுத்து வந்து சேர்வதில் இப்பகுதிகள் ஆற்றிய பங்கு மிகுதி. யவனரும், தமிழரும், வடநாட்டாரும் கலந்து
மிகுந்த வாணிகம் முசிறிப் பட்டினத்திற்கும், வஞ்சி மாநகருக்கும் இடையிலே நிகழ்ந்தபோது, தமிழுக்கு என ஒரு
இலிபி அமைக்கலாம் என எண்ணம் தோன்றிப் பல பரிசோதனைகள் நிகழ்ந்தது வள்ளுவநாட்டருகே உள்ள கொங்கில் தான்.
இங்கிருந்து மதுரைப் பகுதிக்கு பிராமி சென்றிருக்கிறது. பார்க்க: டி. எஸ். சுப்பிரமணியன் கட்டுரை, முன்னர் கொடுத்த மடல்களில்.

(3) செவ்வரை. இந்த வ்ள்ளுவநாடு எங்கே என்று குறித்துள்ளது புறம் 137.
இங்கே ஆனைமலை செவ்வரை என்று சுட்டப்படுகிறது.
  
” செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந! 
 சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!  ”
பெருங்கல் = பெரிய மலைகள் கொண்ட நாட்டை உடைய நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் பாலக்காட்டுக்கணவாய் மலை. நாஞ்சில் ஆறு தோன்றுமிடம்.
சிறப்புடைய குடி மரபில் தோன்றியவன் ஆதலின், இவ் வள்ளுவன்/வல்லபனின் முன்னோர்கள் வாழ்த்தப்பெறுகின்றனர்.

செவ்வரை: ஆனைமலை
-----------------------------------------
Dense monsoon forests including rosewood, sandalwood, teak, and sago palms cover most of the region. The soils are mottled red and brown containing oxides of aluminum and iron and are used as building material mixed with mortar and in road construction. The Kadar, Maravar, and Pooliyar peoples inhabit the sparsely populated hills; their economy is based on hunting and gathering and on shifting cultivation.” 

Their geological formation is metamorphic gneiss, veined with feldspar and quartz, and interspersed with reddish porphyrite.[6]  

N. Ganesan

unread,
Dec 3, 2019, 3:39:53 AM12/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Dec 3, 2019 at 1:23 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நாஞ்சில்  நாடு, பலாமரம் உள்ள இடமாகவும், கடலும் மலையும் சேர்ந்துள்ள இடமாகவும் இருக்கலாம். ஆக அது ஆனைமலையாக இருக்கவாய்ப்பில்லை.

"தீஞ் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்"

பலா மரத்துக்குப் புகழ் பெற்றது ஆனைமலைத் தொடர்களும்,
அது சார்ந்த நிலங்களும். முசிறு, முசிறி இழையில் காண்க.
 

"பொன்னன்ன வீ சுமந்து  10
மணியன்ன நீர் கடல் படரும்,
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை"


ஆனைமலைத் தொடரில் உற்பத்தியாகும் ஆறுகள் விரைந்து
பாய்ந்து கடலை அடைகின்றன (அடர்கின்றன) என்பது பொருள்.

நா. கணேசன்
 


செவ்., 3 டிச., 2019, முற்பகல் 6:16 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 3, 2019, 4:17:46 AM12/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Tue, Dec 3, 2019 at 2:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Tue, Dec 3, 2019 at 1:23 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நாஞ்சில்  நாடு, பலாமரம் உள்ள இடமாகவும், கடலும் மலையும் சேர்ந்துள்ள இடமாகவும் இருக்கலாம். ஆக அது ஆனைமலையாக இருக்கவாய்ப்பில்லை.

"தீஞ் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்"

பலா மரத்துக்குப் புகழ் பெற்றது ஆனைமலைத் தொடர்களும்,
அது சார்ந்த நிலங்களும். முசிறு, முசிறி இழையில் காண்க.
 

முசு, கொண்டை முசு போன்றவை நாங்கூழை/லாங்கூரம் (langurs).
முசிறு என்பது ஆங்கிலத்தில் Lion-tailed macaque எனலாம். முசிறிப்பட்டினப் பெயர்.
சிங்கவால் குரங்கு என்பது ஆங்கிலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு.
கோபுச்சம் போல் வால் உள்ளது என் ஆழ்வார் பாசுரங்களில் வியாக்கியானங்களில்
மாட்டு வால் போலுள்ள குரங்கு என்பர். ஆங்கிலேயர் வைத்த பெயரால்
தமிழில் இப்போது மொழிபெயர்ப்பு. வாட்டர்ஃபால் ==> நீர்வீழச்சி ஆதற்போல.

முசுறுகளின் (< முசு- மொசுமொசு என்ற முடியை முகமெங்கும் சுற்றிவரக் கொண்டது முசு(langurs), முசிறு (macaques))
ஆனைமலைத் தொடரில் முக்கிய உணவு பலாப் பழங்கள்.

------------

என் தோட்டத்தில் பெரிய பலாப்பழங்கள் பழுத்திருப்பது தினமலர், மாலைமரசு பத்திரிகைகளில்
வந்தது - 2 ஆண்டு முன். போட்டோவுடன். அச் செய்தி கிடைத்தால் அனுப்புகிறேன்.
வல்லப ராஷ்ட்ரம் என்று வள்ளுவநாட்டில் பலா மரங்கள் மிகுதி. அத்துடன் கடலுக்குப்
படரும் (செல்லும்) ஆறுகளும் உண்டு. இதனை ஒருசிறைப் பெரியனார் பாடுகிறார். 
 

"பொன்னன்ன வீ சுமந்து  10
மணியன்ன நீர் கடல் படரும்,
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை"


ஆனைமலைத் தொடரில் உற்பத்தியாகும் ஆறுகள் விரைந்து
பாய்ந்து கடலை அடைகின்றன (படர்கின்றன) என்பது பொருள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 3, 2019, 7:56:20 AM12/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Dec 3, 2019 at 5:46 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> சுட்டியில் இருப்பது மிகவும் தொடக்ககாலக்  கட்டுரை; அவ்வளவே. ஆய்வுக் கட்டுரை அன்று.
> சக 

வித்துவான் சி. கு. நாராயணசாமி முதலியாரவர்கள் முறையாகத் தமிழ் ப்யின்ற புலவர்.
அவரைப்போல, தமிழுக்கு உழைத்தவர்கள் மிகச் சிலரே. மிக ஆழமான ஆய்வுக்கட்டுரையை
சி.கு.நா. எழுதியுள்ளார். எனவே தான் அக்கட்டுரையை அளித்துள்ளேன்.

வள்ளுவர் என்றால் வேளிர் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் நூலே இயற்றியுள்ளார்.
வி. கனகசபைப் பிள்ளையவர்களும் வேள் ஆய் மரபினன் நாஞ்சில் வள்ளுவன் என்று
எழுதியுள்ளார். வேணாடு என்று அழைக்கப்பட்ட நாடு வள்ளுவநாடு.

நாஞ்சில் வல்ளுவன் < வல்லப என்னும் சொல்லின் தமிழாக்கம் என்பதைக்
கல்வெட்டுக்கள் காட்டிநிற்கின்றன. 

வள்ளுவன் என்ற ஜாதி - கண்மணி குறிப்பிடுவது - சங்க காலத்தில் இல்லை.
சிகு.நா. என்னும் முறையாகத் தமிழ்பயின்ற புலவர்கள் பலரும் விளக்கியுள்ளனர்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Dec 3, 2019, 8:54:11 PM12/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த போராட்டக் களத்தில் இயங்கியவர் கவிமணி தேவி.
அவர் இளம்வயதில் இயற்றிய நாஞ்சில்நாட்டு மருமக்கள்தாய மான்மியம் “நாஞ்சில்நாடு”
என்ற சொல்லைப் பயன்படுத்தும் 20-ஆம் நூற்றாண்டு நூல்களில் முக்கியமானது.
குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் சேர்வதற்கான போராட்டத்தில்
கவிமணி ஆற்றிய உரை. சுசீந்திரத்தில் உள்ள தெலுங்கு, வடமொழி (கிரந்தம்) கல்வெட்டுகள்
பதிக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ~ நா, கணேசன்

ஆதாரங்களைக் காட்டுகிறேன் பாருங்கள்

கவிமணி நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையின் சுருக்கம்...


"பபண்டைக் காலத்தில் தென் திருவிதாங்கூர் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஆய் நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவ நாடு, குறுநாடு, நாஞ்சில் நாடு, புறந்தா நாடு என்பவை அவற்றுள் முக்கியமானவை. யாவும் செந்தமிழ் நாடுகளே என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். ஆதலால், இப்பொழுது அதனைப் பற்றி விரிவாக ஒன்றும் கூறத் தேவையில்லை யென்று விட்டொழித்து, தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒருங்கு கூடியிருக்கும் இத் தென்குமரியைப் பற்றிய சில விவரங்களை மட்டும் தெரிவிக்கத் துணிகிறேன். இது பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊர் என்பதில் ஐயமில்லை.

பண்டைக் காலத்தில் தென் திருவிதாங்கூர் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஆய் நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவ நாடு, குறுநாடு, நாஞ்சில் நாடு, புறந்தா நாடு என்பவை அவற்றுள் முக்கியமானவை. யாவும் செந்தமிழ் நாடுகளே என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். ஆதலால், இப்பொழுது அதனைப் பற்றி விரிவாக ஒன்றும் கூறத் தேவையில்லை யென்று விட்டொழித்து, தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒருங்கு கூடியிருக்கும் இத் தென்குமரியைப் பற்றிய சில விவரங்களை மட்டும் தெரிவிக்கத் துணிகிறேன். இது பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊர் என்பதில் ஐயமில்லை. கல்லெழுத்துக்களில் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் தேவி, அடியில் வருமாறு குறிப்பிடப்பட்டிருக் கிறாள்: ‘ராஜராஜப் பாண்டி நாட்டு உத்தமசோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் குமரி கன்னியா பகவதியார்!’


புறத்தாய நாடு என்பதற்கு, முறத்தாய நாடு என்பது வேறொரு பெயர். வாரணவாசி நாடு என்ற பெயரும் இதற்கு உண்டு. பாண்டிய நாட்டு புறத்தாய நாடான தென் வாரணவாசி நன்னாட்டுக் குமரி கன்னியா பகவதியார் என வரும் கல்வெட்டுத் தொடரால் இவற்றை அறியலாம். வாரணவாசி நாடு என்பது இரண்டாவது குலோத்துங்க சோழனுடைய பாட்டன் பெயரால் ஏற்பட்டது. இக்குமரிக்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்ற வேறொரு பெயரும் இருக்கிறது. கங்கை கொண்ட சோழன் என்பது முதல் ராஜேந்திரனுக்கு ஒரு சிறப்புப் பெயர். அதன் காரணமாகவே இப்பெயர் இதற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தேவி கோயிலும், சற்று வடபாலிருக்கும் குகநாதசுவரர் கோவிலும் இங்கு முக்கியமான கோயில்கள். இரண்டிடங்களிலும் ஏறக்குறைய நூறு கல்வெட்டுகளுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டொன்றைத் தவிர மற்றவை யாவும் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளவையே.


குமரிக் கோயிலில் கொடி மரத்தின் பீடத்தைச் சுற்றிப் பொறிக்கப் பட்டிருப்பது விஜயநகர வேந்தருடைய கல்லெழுத்து. அது கிரந்த லிபியில் பொறிக்கப்பட்ட வடமொழி சாசனம். இன்னொன்று, அதற்கு அடுத்த மேல்பக்கம் உள்ள மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள் ளது. அது தெலுங்கு சாசனம். இந்த இரு கல்வெட்டுக்களைப் பற்றிய விபரம் எதுவும் இதுகாறும் வெளிவரவில்லை. முதல் ராஜ ராஜ சோழனுடையதுதான் இங்குள்ள கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது. ராஜேந்திர சோழன், ராஜாதி ராஜன் முதலியோருடைய கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. வீர ராஜேந்திரனுடைய நீண்ட சாசனம் ஒன்று மணி மண்டபத்தில் உள்ள கல் தூண்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
மேல் குறித்த பராந்தக பாண்டியனுடைய கல்வெட்டு, இந்த கன்னியாகுமரி ஆலயத்தைக் தவிர வேறு எந்த இடத்திலும் இருப்பதாக இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. இதன் காலம் ஏறக்குறைய எண்ணுபற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னராம். இதில் தேவியை, ‘தென்னவர் தம் குலதெய்வம்‘ என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. பாண்டிய மன்னனுக்கு, ‘குமரிச் சேர்ப்பன்’ என்று பெயர். ‘பொதிய பொருப்பன், புனல் வையைத்துறைவன், குமரிச் சேர்ப்பன் கோப்பாண்டியனே’ என்பது, சேந்தன் திவாகர சூத்திரம். இந்திவாகரம் தமிழ் நிகண்டுகளுள் மிகப் பழமையானது. இதன் காலம் கி.பி., எட்டாவது நூற்றாண்டின் நடுப்பகுதி என்பது அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு.


மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களாலும், தென் திருவிதாங்கோட்டில் வேறு பல பாகங்களில் காணப்படும் கல்வெட்டுக் களாலும், விளவங்கோட்டுத் தாலுகாவிலுள்ள முன்சிறை, பார்த்திப சேகரபுரம் செப்பேடுகளாலும், தென் திருவதாங்கூர் ஓர் செந்தமிழ் நாடே என்பதும் ஆயிரம் ஆண்டுகளாலும் முன் இருந்தே, ஏன் .  சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பதும், பிறவும் தெள்ளத்தெளிய அறியக்கூடியவை யாம். உண்மை இவ்வாறு இருந்தும், ஒரு மேதாவி, ‘திருவிதாங் கோட்டிலுள்ள தமிழர்கள் இடைக்காலத்தில் தோட்ட வேலைக்காக வந்த கூலி ஆட்கள்’ என்று, பிதற்றி இருக்கிறார். உண்மையைச் சொல்கிறேன் கேளப்பா, கேளப்பா என்றால் கேட்பதுமில்லை. இந்நாடு முழுமையும் தம்முடையது என்பதற்கு மலையாள நண்பர் களும் சில ஆதாரங்களைக் காட்டுகின்றனர். அவர்கள் காட்டும் ஓர் ஆதாரம் - கேரளோற்பத்தி, கேரளா மகாத்தியம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பாட்டி கதை.


கோகர்ணத்திலிருந்து மழுவை பரசுராமர் எறிந்து, கன்னியாகுமரியில் வீழ்த்தி, நுபற்று அறுபது யோசனை தூரம் கடலை விலக்கி, பிராமணர் களுக்குத் தானம் செய்த கதை இது. திரேதாயுகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை, கலியுகத்தில், அதுவும் அணுகுண்டு சகாப்தத்தில் சரித்திரப் பிரமாணமாக முன் நிறுத்தப்படுகிறது. இந்தப் பிரமாண நுபல்களைப் படித்துவிட்டு, ‘மலபார் அண்ட் அஞ்சங்கோ’ என்ற நுபல் எழுதிய திருலோகன் என்பார், ‘அவை பொருளற்ற புராணப் புளுகுகள்’ என்றார். இப்படியிருக்க இந்த நுபல்களின் புனிதத்தன்மையை எடுத்து விளம்பரப்படுத்தும் பெரியார் களின் நேர்மையை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.


முடியாட்சி நீங்கி குடியாட்சி ஓங்கும் இக்காலத்தில், ஜாதி சமய வேறுபாடுகள் ஒழிந்து, மொழியால் ஒன்றுபட்டு மக்கள் வாழ்வதற்கு வகை ஏற்படுவது இன்றியமையாதது. அதற்காகவே தெலுங்கர்கள் ஆந்திர மாகா ணம் கேட்கின்றனர். கன்னடர் கள் பிரிந்து போக விரும்பு கின்றனர். கேரளர்களும் தனி மாகாணத்திற்கு அரும்பாடு படுகின்றனர். இவ்வேளையில் தென் திருவிதாங்கோட்டி லும், செங்கோட்டையிலும், தேவி குளத்திலும், பீர்மேட்டிலும் வாழும் தமிழர்கள், தங்கள் இடங்களையும் தாய்த் தமிழ் நாட்டோடு சேர்க்க வேண்டு மென்று கேட்பதில் குற்றம் என்ன இருக்கிறது?


எந்தெந்த மொழியாளர்கள், அண்டையிலுள்ள தம் தாய்மொழிப் பகுதியோடு சேர விரும்பினாலும், அவர்களைப் பிரித்தும், சேர்த்தும் ஒற்றுமையாய் வாழத் துணை செய்வதுதான் பொது நோக்கம் கொண்ட சிறந்த அரசியல் தலைவர் களின் கடமையாகும். இதற்காகச் சரித்திரமும், புராணமும், சாசனமும், இலக்கியமும் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையேயில்லை. கண்முன்னே காணும் உண்மையை நிரூபிக்க ஆதாரம் தேட வேண்டிய அவசியம் உண்டோ? இமயமலை யில் சேர, சோழ பாண்டியர்களின் வில்லும், புலியும், கயலும் பொறிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ் நுவல்கள் சொன்னால் சிரிக்க மாட்டார்களா இந்தக் காலத்தில்?


திருவிதாங்கோட்டுத் தமிழர்கள் அண்டையில் இருக்கும் தாய்த் தமிழகத்தோடு இணைய விரும்புகின்றனர். தமிழ் நாட்டவரும் இவர்களைச் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் இவ்விருசாராரையும் இணைத்துவைப்பது ஒன்றே ஆளும் அதிகாரி களின் கடமை. கேரளியர் இதில் தலையிட்டுக் கலைக்க முயல்வது ஒரு சிறிதும் நியாயமாகாது. ‘தமிழர்கள் ஏன் பிரிந்து போக வேண்டும்? வேற்றுமை உணர்ச்சியின்றி இன்று போல் என்றும் இருந்தால் என்ன?’ என்று சிலர் கேட்கின்றனர். தமிழன் என்றும் மலையாளி என்றும் வேற்றுமை பாராத ஒரு பொது மன்னர் - ஒரு பொது அரசாங்கம் இருந்த காலம் வரை யாருக்கும் இந்தப்பிரிவினை உணர்ச்சி உண்டானதில்லை. ‘நாம் மலையாளிகள்; மலையாளப் பகுதிகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி ஒரு மலையாள மாகாணம் அமைக்க வேண்டும்’ என, என்று மலையாளிகள் கருதி விட்டார்களோ அன்றே வேற்றுமை உணர்ச்சி வேரூன்றிவிட்டதல்லவா? அதற்கு மேல் சிறுபான்மை சமூகத்தாரான தமிழர்கள் ஆட்சியாளர்களின் தயவை எதிர்பார்த்து வாழ்வதைத் தவிர நியாயமான உரிமையைப் பெற்று வாழ முடியுமா?


இச்சந்தேகம் தமிழர்கள் உள்ளத்தில் எழுவது இயல்புதானே? இதற்குள் தமிழர் இகழப்பட்டுவிட்டனர்; புறக்கணிக்கப்பட்டு விட்ட னர். இதை நிரூபிக்க எத்தனையோ சான்றுகள் தர முடியும். இன்று திருவிதாங்கோடு முழுமையும், ‘ஒரேநாடு . . . ஒரேநாடு’ என்று சொல்வதெல்லாம், குப்பிகளில், தண்ணீரும், எண்ணெயும் நிறைத்து, கார்க்கினால் இறுக மூடி ஒன்றெனக் காட்டுவதற்கு ஒப்பேயன்றி வேறல்ல, உண்மை யாவரும் அறிந்ததே. செந்தமிழ்ச் செல்வர்களே . . . நீங்கள் தமிழ்நாட்டின் எல்லையை வாதித்து, வழக்காடி நிலைநாட்டி விட்டீர்கள். ‘மதராஸ்  மனதே’ என்ற தெலுங்கர்களின் பேச்சு அடங்கிவிட்டது. இப்போழுது தென் எல்லைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கும், ‘நாஞ்சி நாடு ஞங்ஙளிடேது’ என்ற பேச்சையும் அடக்கி வெற்றிக் கொடியேற்றி வீரத் தமிழர் முரசை முழக்குவீர் என்பதில் யாதும் ஐயமில்லை. அதற்கு

    தேவி குமரி திருவருள் புரிவாராக!


தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் - மன்னுபுகழ்
செந்தமிழ்நா டொன்றாகித் தேவர் நா டொத்துலகில்
சந்ததமும் வாழவரம் தா.


-என்ற பிரார்த்தனையோடு இந்த மாநாட்டைத் திறந்து வைக்கிறேன். வாழ்க தமிழ் மொழி; வாழ்க தமிழ்நாடு; வாழ்க தமிழ் மக்கள் மகிழ்ந்து.

(கவிமணி, ஜன., 6, ’50ல், புத்தேரியிலிருந்து வெளியிட்ட சிறு பிரசுரத்தில் இருந்து.) 

N. Ganesan

unread,
Dec 4, 2019, 6:13:48 AM12/4/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
SK> கயத்திட்ட வித்து, பலாப்பழம், செவ்வரை, எல்லாம் இரண்டு நாஞ்சில் நாடுகளுக்கும் பொதுவானவை.  

செவ்வரை, கரும்பு வேளாண்மை இவை இரண்டும் மலைமண்டிலத்து நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட வல்லப ராஷ்ட்ரம் ஒன்றுக்கே பொருந்தும்.

குமரி மாவட்ட அகஸ்தீசுவரம், தோவாளை வட்டங்களில் செவ்வரை எங்கே இருக்கிறது?

NG
கரும்பு வேளாண்மை, செவ்வரை எனக் குறிப்புள்ள புறம் 137, புறம் 138,139, 140 இவற்றுடன் சேர்ந்து பாலக்காட்டுக் கணவாய்
வள்ளுவ நாட்டைச் சார்ந்த பாடல்கள். எனவே ஒன்றாக, ஒரே தொகுதியாக, புறப்பாட்டில் தொகுக்கப்பட்டுள.

செவ்வரை. இந்த வ்ள்ளுவநாடு எங்கே என்று குறித்துள்ளது புறம் 137.
இங்கே ஆனைமலை செவ்வரை என்று சுட்டப்படுகிறது.
  
” செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந! 
 சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!  ”
பெருங்கல் = பெரிய மலைகள் கொண்ட நாட்டை உடைய நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் பாலக்காட்டுக்கணவாய் மலை. நாஞ்சில் ஆறு தோன்றுமிடம்.
சிறப்புடைய குடி மரபில் தோன்றியவன் ஆதலின், இவ் வள்ளுவன்/வல்லபனின் முன்னோர்கள் வாழ்த்தப்பெறுகின்றனர்.

செவ்வரை: ஆனைமலை
-----------------------------------------
Dense monsoon forests including rosewood, sandalwood, teak, and sago palms cover most of the region. The soils are mottled red and brown containing oxides of aluminum and iron and are used as building material mixed with mortar and in road construction. The Kadar, Maravar, and Pooliyar peoples inhabit the sparsely populated hills; their economy is based on hunting and gathering and on shifting cultivation.” 

Their geological formation is metamorphic gneiss, veined with feldspar and quartzand interspersed with reddish porphyrite.[6]


On Wed, Dec 4, 2019 at 12:20 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முதன்முதலில் நாஞ்சில் நாடு இடம்பெறுவது புறநானூற்றுப் பாடல்களில் தான்.(நாஞ்சிற் பொருநன் என்ற பெயரில் நாஞ்சில் இடப்பெயர்;
 பொருநன் குலப்பெயர். அப்பாடல்களில் 138 & 139 மட்டும் தான் பொன்னானி வட்டத்து நாஞ்சில் நாடு பற்றிக் குறிக்கின்றன(பாடலுக்குள்ளே 
இடம் பெறும் அகச்சான்றுகள் உணர்த்துபவை- "மலை பின்னொழிய" & "நெடிதேறி" ) . பிற அனைத்தும் தென்பாண்டி நாட்டு நாஞ்சிலைத்தான் 
பாடுகின்றன. கயத்திட்ட வித்து, பலாப்பழம், செவ்வரை, எல்லாம் இரண்டு நாஞ்சில் நாடுகளுக்கும் பொதுவானவை.  


புறம் 138-139 மலைமண்டிலத்துப் பாலக்காடு மாவட்டம், வள்ளுவநாட்டைக் குறிக்கும் என்று ஏற்றமைக்கு நன்றி. புறம் 140-ம் 138, 139 இயற்றிய 
மருதன் இளநாகனார் பாடலே. 139-ஆம் பாடல் பாணனைக் கதாபாத்திரம் ஆக்கியும், 140-ல் விறலியைக் கதாபாத்திரம் ஆக்கியும்
மருதன் இளநாகனார் பாடியுள்ளார். மருதன் - தந்தை பெயர். இளநாகன் புலவர் பெயர். 140-ல், 137 போலவே வேளிர் அடையாளமான
நெல் வேளாண்மையும் (விளக்கம் புலவர்கள் தந்துள்ளனர்), மலைமண்டிலத்தின் சிறப்பான ‘யானையை யானையால் யாத்தல்’ பற்றி
யானைக்கொடையும் பாடியுள்ளார் புறம் 138, 139-ன் ஆசிரியர் 140-ல். செவ்வரை, கரும்பு வேளாண்மை போன்றவை இன்மையும்
புறம் 137 மலைமண்டில வள்ளுவநாட்டுக்கு உரித்து என வெல்ளிடைமலையாகக் காட்டுகிறது.

புறப்பாடல்களைத் தொகுத்தோர் புறம் 137-140 ஒரே தொகுதியாக, மலைமண்டில வள்ளுவநாட்டைக் குறித்த பாடல்களைத்
தொகுத்துள்ளனர் என்பது தெளிவு. 

நா. கணேசன் 
Auto Generated Inline Image 1

N. Ganesan

unread,
Dec 4, 2019, 6:38:06 AM12/4/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, mozhitrust, vallamai, dinamalarrk, S. V. Shanmukam, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu
கவிமணி, எஸ். வையாபுரிப்பிள்ளை போன்றோர் நாஞ்சில் நாடு என்ற பெயர் 1920-களில்
மீட்டுருவாக்கம் பெற உதவினர். அப்போது குமரி மாவட்டம், திருவிதாங்கோடு சம்ஸ்தானத்தில்
இருந்து விலகி, தமிழ்நாட்டோடு இணைய பெரும் போராட்டங்கள் நிகழ்த்தின. தினமலர் 
பத்திரிகை இதில் முக்கியப்பங்கு வகித்தது. அதன் நிறுவனர் இராமசுப்பையர் மகன்
முனைவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சங்க கால வேந்தர்கள் வெளியிட்ட காசுகளை
வெளிப்படுத்தி, சங்க இலக்கியங்களின் கால நிர்ணயத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.
அவருக்குக் கிடைத்த சங்க கால நாணயங்களில் பெருமளவு சங்க காலச் சேரர் தலைநகரான
கரூரில் கிடைத்தவை ஆகும். தமிழர்களில் Fellow of the Royal Numismatics Society இவர் ஒருவரே.
கவிமணியின் அழிய இருந்த மருமக்கள்தாயம் பற்றிய நூலை வையாபுரியார் அச்சேற்றினார்.
கவிம்ணி அவர்களின் தலைமையுரை (1950) பார்த்தோம்.

வையாபுரிப்பிள்ளை, இராகவையங்கார் போன்றோர் தொகுத்த சென்னைப் பல்கலைப் பேரகராதியில்,
மலைமண்டலத்து வள்ளுவநாடு பற்றிய குறிப்பே இல்லை. குமரி மாவட்ட வள்ளுவநாடு பற்றி 
மாத்திரம் தான் உள்ளது. இது முக்கியமான வரலாற்றுப் பிழை ஆகும்:
 1) வள்ளுவநாடு (p. 3552) vaḷḷuva-nāṭu வள்ளுவநாடு vaḷḷuva-nāṭu , n. A region in the Travancore State; திருவிதாங்கூர்ச்சீமையைச் சார்ந்த ஒருநாடு. (T. A. S. iii, 53, 54.)  

மலைமண்டிலத்து வள்ளுவநாடு பற்றிய கல்வெட்டுகளும், வரலாறும் ஆராயும்
பேரா. ஏ. பி. கிரீஷ்மலதா போன்றோர்களின் ஆய்வேடுகளை (சுட்டி இவ்விழையில் தந்துள்ளேன்)
முழுக்க ஆராய்ந்தால், ஒரே தொகுதியாக உள்ள புறம் 137-140 சிறப்பும், அவை இந்த
வள்ளுவநாட்டு வேளிரின் மீது பாடப்பெற்றவை என்ற தெளிவும் கிடைக்கும்.

கோவை பாரதியார் பல்கலையில் இதுபற்றி உரை நிகழ்த்தலாம். இந்த நான்கு பாடல்கள்
பற்றிய உரைவிளக்கம் ஆய்வுக்கட்டுரையாகச் செய்ய வேண்டும்.

புறம் 137 மலைமண்டில வள்ளுவநாட்டுக்கு உரித்து என வெள்ளிடைமலையாகக் காட்டுகிறது.

N. Ganesan

unread,
Dec 4, 2019, 8:22:31 AM12/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Wed, Dec 4, 2019 at 6:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கல்வெட்டுக்கள் குறிப்பிடும் கோனாத்திரிகள் வேளிர் என்பதை நான் மறுக்கவில்லை;
அதற்காக புறநானூறு சுட்டும் பொருநன் வேளிர் என்பது அறியாமையின் உச்சம்.

வள்ளுவன் என்பது வல்லப வேளிர் என நிறுவ அரிய சான்றுகள் இவை.
குமரி மாவட்டத்தில், நாஞ்சில் வள்ளுவனும் வேளிர் தான். காரணம்: இவன் வேள் நாட்டு மன்னன் (வேணாடு).
விளாங்கோடு திருவிளாங்கோடு > திருவிடாங்கோடு > திருவிதாங்கோடு. இது வேணாட்டு அரசர்.
வள்ளுவநாடு என்று இரண்டு நாடுகளில் உள்ள கல்வெட்டுகக்ளை முழுமையாக ஆராய்ந்தால்
நல்ல பிஎச்டி வருங்கால மாணவர்கள் தமிழ் (அ) வரலாற்றில் எழுத முடியும்.
வள்ளுவ நாடு = வல்லப ராஷ்ட்ரம் என்பதைத் தெள்ளிதின் காட்டி நிற்கிறது கல்வெட்டுகள்.
இந்த வள்ளுவ வேளிர்களைப் பாடிய பாடல்கள் பாண்டி நாட்டுக்கு புறம் 380,
மலைநாட்டுக்கு புறம் 137-140.  சென்னைப் பேரகராதி போன்றவற்றில்
இரண்டு வள்ளுவநாடுகளும் சேர்த்த மறுபதிப்பு சங்க இலக்கியத்தை உணர உதவும்.

இந்த ஜாதி பிற்காலம். ஆனால், சங்க இலக்கியத்தில் உள்ள நாஞ்சில் வள்ளுவன் < வல்லப-
என்பதற்கு வல்லபராஷ்ட்ரம் பற்றிய கல்வெட்டுக்கள் உதவுபவை. உ. வே. சாமிநாதையர்
புறப்பாட்டு பதிப்பித்த பிறகு நாஞ்சில் நாடு என்றபெயர் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
1920-களில், இதை முன்னெடுத்தவர் கவிமணி போன்றோர் ஆவார்கள். சங்க காலத்தின்
பின்னர் நாஞ்சில் என்ற பெயர் மறைந்துவிட்டது. மீண்டும் வருவது 20-ம் நூற்றாண்டிலே தான்.
நாஞ்சில் என்று எந்த ஆறும் குமரி மாவட்டத்தில் இல்லை. “உழாஅ நாஞ்சில்’ எனப்படும்
செவ்வரை கொண்ட பாலக்காட்டுக் கணவாய் மலைகளில் நாஞ்சில் நதி உண்டு.

புறம் 138, 139 “உழாஅ நாஞ்சில்” வ்ள்ளுவன் என்னும் பாலக்காட்டு மன்னன் என்கிறீர்கள்.
அது சரியே.

எழுத்தெண்ணிப் பிறரும் என் மடல்கள் யாவும் படித்து வருவது அறிந்து மிக மகிழ்ச்சி. 
வல்லப ராஷ்ட்ரம் பற்றி மக்கள் எழுதுவார்கள். 

நா. கணேசன்
 

naa.g...@gmail.com

unread,
Dec 4, 2019, 9:57:34 AM12/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

நாஞ்சில் என்ற நாட்டுப்பெயர் சங்க காலத்தின் பின் மறைந்துவிட்டது. சுமார் 100 ஆண்டு முன் மீட்டுரு ஆகியுளது,

சங்க காலத்தில் இங்கே இருந்தவன்
நாஞ்சில் வள்ளுவன். இவனுக்கு பிற்கால பிரிவுகள் அறியாதவை, இதே குடியினரான நாஞ்சில் வள்ளுவன் வள்ளுவ நாட்டை  - பாலக்காடு ஏரியா - ஆண்டுள்ளான். புறம் 137-140.

Sent from my iPhone

N. Ganesan

unread,
Dec 9, 2019, 8:34:44 PM12/9/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
மயிலாப்பூர் வள்ளுவர் கோவிலில், வள்ளுவர் என்று வணங்கிவந்த திருப்பாதங்கள் வரலாற்றை
ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால் எழுதினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார் வள்ளுவர் ஒரு வேளிர்
என்று நூல் எழுதினர். சி. கு. நாராயணசாமி நாஞ்சில் வேள் அல்லது வள்ளுவன் என்ற கட்டுரையில்
புறநானூற்றில் நாஞ்சில் வள்ளுவன் ஒரு வேள் எனச் சான்றுகளுடன் நிறுவினார் (செந்தமிழ் 1950).

திராவிட மொழியியல் கோட்பாட்டின் தந்தை என்னும் எல்லீஸ் தமிழ்ச் சமணர்கள் ஏலாச்சாரியர்
என்று திருவள்ளுவரை வழிவழியாக வணங்கி வருகின்றனர். ஏடும், எழுத்தாணியும் கொண்டு,
ஒரு குடைக்கீழ் உள்ள திருவுருவம். எல்லீஸ் வெளியிட்ட தங்க நாணயங்களில் உள்ள
திருவள்ளுவர் திருவுரு திருத்தமாக வரையப்பட்டுள்ளது. இதை நல்ல முறையில்
முப்பால் தந்த செந்நாப்போதார் உருவமான 3 இஞ்ச் நாணயமாகவும், பின்னர் 3 அடி விட்டத்தில்
புடைச்சிற்பமாக பல்கலைக்கழகங்கள், ஜினாலயங்கள், ... போன்றவற்றில் நிறுவலாம்.
valluvar-ellis.jpg

கவிஞர் மகுடேசுவரன் வள்ளுவர் சமயத்தைச் சரியாகச் சொல்லியுள்ளார். இதே கருத்தைப் பல தமிழறிஞர்கள் முன்பும்
தெளிவாகக் கூறியுள்ளனர். வள்ளுவர் சமண சமயத்தவர் என்பது முதல் நான்கு அதிகாரங்களாலும், உள்ளே உள்ள
பௌத்த எதிர்ப்புக் குறள்கள் போன்றவற்றாலும் உறுதியாகிறது. கொல்லாமை, “உப்புக்கும் காடிக்கும் கூற்று”
என பௌத்த சங்கம் பிக்‌ஷுக்கள் வைத்தல் (இலங்கையில் என்ன செய்தனர் என்பது அறிவோம். முதலிலே
இதுபோல் நடக்கும் என அறிவித்தவர் வள்ளுவர். ‘உப்புக்கும் காடிக்கும் கூற்று’ குறளுக்கு வினைதீர்த்தான் அவர்கள்
கேட்க என் மடல்கள்). வள்ளுவர் சமணர் என்றாலும், அனைவர்க்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய தமிழ்மறையை
எழுதினார். சமண சமயத்தவருக்கு என்று பல நூல்கள் உள்ளன. திருக்குறள் பொதுமறை. உலகுக்கே ஏற்புடையது.
பகவத் கீதைக்கும், திருக்குறளுக்கும் வேறுபாடு இதில் உண்டு.

லிண்டன் நூலகம், ஜெர்மனியில் வைக்கப்படும் சிலை பற்றிய செய்தியை விகடனில் பார்த்தேன்.
திரு. கோபாலன் பாலச்சந்திரன் எழுதியுள்ளார். அழகாக இருக்கிறது. ஒருகுடை ஏன் அதில் அமைக்கப்பட்டுள்ளது
என்று பாலா கூறவில்லை. பாலாவுக்கும் ஒரு பிரதி இம்மடலை அனுப்புகிறேன். அது பற்றிச் சில கருத்துகள்.
பாலா ஒன்றரை லட்சம் ரூபாய் சிலைக்கு தந்ததைக் குறிப்பிட்டார்.
எல்லீஸ் ஒரு மொழியியல் மேதை. அப்போது இருந்த காலனிய அரசிலும், அதற்கு முன்பு
2 நூற்றாண்டுகளாகவும், எல்லா இந்திய மொழிகளும் சம்ஸ்கிருதத்தில் பிறந்தன
என்று ஐரோப்பிய பாதிரிகளும், இந்தியவியல் நிபுணர்களும் கொண்டிருந்த கோட்பாட்டை
உடைத்தவர் எல்லீஸ். உணவு விஷத்தால் முகவையில் இருந்து மதுரையில் மிக
இளம்வயதில் இறந்தார். விபத்தா? கொலையா? அறியோம். திராவிட மொழிக்குடும்பம்
என்ற கோட்பாட்டை நிறுவியவர் அவரே. இந்திய வரலாற்றில் மூன்று நிகழ்வுகள்
முக்கியமானவை: (1) கிபி 1796 - ஸர் வில்லியம் ஜோன்ஸ், கல்கத்தா நீதிபதி, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
(2) கிபி 1818 - பிரான்சிஸ் வைட் எல்லீஸ் - சென்னை கலெக்டர், திராவிட மொழிக்குடும்பம்
(3) 1922 - சர் மார்ட்டைமர் வீலர் - லண்டன் டைம்ஸில் சிந்துவெளி நாகரீகம் பற்றிய அறிவிப்பு.
இவை மூன்றும் இந்தியாவின் தொன்மையான நாகரிகத்தை ஆராய அடிப்படை அஸ்திவாரங்கள். 
எல்லீசன் வள்ளுவர் சமணர் என்று எழுதினார். மேலும் சமணர்களிடையே அவர்கள் ஏலாச்சாரியர்
என வழங்கி வழிபடும் திருவள்ளுவர் திருவுருவை தங்க நாணயத்தால் அப்போதிருந்த அரசாங்க
சார்பில் வெளியிட்டுக் கௌரவப்படுத்தினார் எல்லீஸ். இதனை எல்லாம் அரிதின் முயன்று தேடி
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆவார். முக்குடை
தீர்த்தங்கரர்களுக்கு ஆனது. ஒருகுடை சமண முனிவர்களுக்கு என்பதால் வள்ளுவரை ஒருகுடையின்
கீழ் வைத்து, மழித்தலும், நீட்டலும் இல்லாது நீக்கிய சிரசுடன் ஏடும், எழுத்தாணியும் கொண்டு,
மயிற்பீலி, குண்டிகை வைத்து உள்ள சிற்பம் ஆகும். இவை பற்றி எதுவும் பொதுமக்களுக்கு
விகடன் வாயிலாகக் கூறாமல் விட்டது எல்லீசன், ஐராவதம் நினைவைப் போற்றுமாறு இல்லை.

வள்ளுவனை ஏலாச்சாரியர் எனச் சமணர் போற்றுவது ஏன்?
இப்பொழுது புறநானூறு வாசித்துக்கொண்டுள்ளேன். பழனியிலே ஆய்க்குடி உண்டு.
ஆவிநன்குடி, சங்க இலக்கியம் முருகாற்றுப்ப்டையிலும், ஏராளமான திருக்குறளும்
கொண்டது. வேள் ஆய் அண்டிரன் பொதிகை மலைப் பகுதியை ஆண்ட ஆய்நாட்டு வேள்.
அது போலே, வேளிர் குடிகளில் ஒன்று: வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவன் என்ற குடியினர்
இரண்டு பகுதிகளை ஆண்டனர். (1) புறம் 380-ல் வள்ளுவன் குமரி மாவட்ட நாஞ்சில் வள்ளுவநாடு.
(2) பாலக்காட்டுக் கணவாய் வள்ளுவ நாடு (ஒத்தப்பாலம் போன்ற ஊர்கள்.) கவிஞர் சிற்பியின்
நண்பர் எம் டி. வாசுதேவன் நாயர் வள்ளுவ நாட்டார் தான். புறம் 137-140 இரண்டு
புலவர்கள் (ஒருசிறைப் பெரியன், மருதன் இளநாகன்) பாடியன இந்த நாஞ்சில் வள்ளுவனைப்
பாடிய பாடல்கள். கரும்பு வேளாண்மை, சிவந்த ஆனைமலைகள் (செவ்வரை), வேளிர் குலச்சின்னமான
நெல் பயிரிடல் (புறம் 137 & 140), ஆக்கள் வளம் மிக்க கொங்கைக் கடந்து பாணன் பரிசில் பெற வருகை,
நாஞ்சில் நதி பாய்ந்து பெரியாறு உருவாகும், மிக உயர்ந்த “உழாஅ நாஞ்சில்”, யானையை யானையால்
யாத்தல் என்று வள்ளுவப் பெருமானும், பயம்பில் வீழ் யானை என இளங்கோ அடிகளும் கூறுமாறு
யானைகளை ஆனைமலையில் பிடித்து சேர அரசர்க்கு வழங்கும் பழைய நெறிமுறை காட்டும்
புறம் 140 ... போன்ற செய்திகளால், இரண்டு வள்ளுவநாடுகளின் அரசர்களின் பெற்றியும்
புறநானூற்றில் தொகுக்கப்பெற்றமை வெள்ளிடை மலை.

வகரத்தில் தொடங்கும் சொற்கள் பல, சொன்முதல் வ் இழக்கும். ரிக்வேதத்திலே,
விந்து என்ற தமிழ்ச்சொல், இந்து என்றாகிறது (drop, soma, moon, semen, ..).
விடங்கர் என்னும் முதலை (பிற்காலத்தில் இலிங்கத்துக்குப் பெயர்) இடங்கர் என்று
சங்க இலக்கியத்திலே வருகிறது. இவை போல, வேளூர் என்ற சொல் ஏளுர், ஏலூர் (Elura)
என்றாகி, இப்போது எல்லோரா (Ellora) என வழங்குகிறது. வள்ளுவர் வேளிர் மரபினர்
என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், ராகவையங்கார், ... போன்றோர் காட்டி
நூல் எழுதினர். வேளூர் ஏலூர் ஆதற்போல, வேள் ஆசார்யர் என்ற பெயர்
ஏலாச்சாரியர் என தமிழ்ச் சமணர்கள் வழங்கிவருதலுங் காண்க.

ஜைந இளைஞர் மன்றம் நூறாண்டாக இயங்கிவருவது. ஜீவபந்து ஸ்ரீபால் போன்றோர்
நூல்களை வெளியீடுகள் வந்த ஆய்வு மன்றம். அவர்களின் பழம்பெரும் ஏடு ஆகிய
முக்குடை இதழில் ஆத்திசூடி என்பது பார்சுவநாதரை கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும்
பள்ளிச் சிறார் தமிழ் கற்கத் துவங்கும் நூல் எனக் கட்டுரை எழுதியுள்ளேன். 
தமிழ்ச் சமணர்கள் நிதிதிரட்டி மிக அழகாக ஒன்றே முக்கால் அடி உயரத்தில்
தற்காலத்தில் சிறந்த சிற்பியின் கைவண்ணத்தால் எல்லீஸ் வெளியிட்ட 
சமண முனி திருவள்ளுவர் உருவைச் சிலையாக வடிக்கவேண்டும்
அதேபோல, நல்ல சிற்பியால், நாணயங்கள் திருத்தமாக மூன்று இஞ்ச்
விட்டம், ஆரம் இருக்கலாம் எல்லீஸ் நாணயம் வெளிவர வேண்டும்.
இந்த திட்டத்தை தமிழ்ச் சமணர் சமுதாயம் செய்யவேண்டும் என வேண்டுகோள்
விடுக்கிறேன். இதற்கு *நிதி* ஆதரவை தமிழ்நாட்டு அரசாங்கமும், மக்களும்
நல்கவேண்டும். என்பங்கை அளிக்கிறேன். பாலா அவர்களிடமும் வேண்டுவோம்.

ஜெர்மனி திருவள்ளுவர் விழாவின்போது, ஐராவதம் மகாதேவன் எல்லீசர்
நாணயத்தை வெளியிட்ட கட்டுரை தமிழில் இருந்து ஜெர்மன் மொழியில்
மொழிபெயர்த்தும், ஐராவதத்தின் ஆங்கிலக் கட்டுரையையும் சேர்த்து
100 படிகளாவது அச்சிட்டு வழங்கவும். பாலா நிதியளித்த சிலை அருகே
ஐராவதத்தின் கட்டுரை, ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் இடம்பெறச் செய்தலும்
அவசியம். வரும் ஆண்டுகளில் அச்சிலையைப் பார்ப்போர்
எல்லீசன் தொண்டையும், அதனை ஐராவதம் வெளிப்படுத்திய முறையையும்
அறிந்துகொள்ள இக்கட்டுரைகள் மிக உதவும்.

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலைவிழாவுக்கு வாழ்த்தும், பாராட்டும்
சுபாவுக்கும் பாலாவுக்கும்.

அன்புடன்
நா. கணேசன்


3 ஆண்டு முன்னர் எழுதிய மடல்:

ஸ்ரீவல்லபன் என்ற பெயர் க்ஷத்திரியக் குடிகளிலே மிகுதி. முக்கியமாக, மதுரைப் பாண்டியர்களிலே. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பழைய கல்வெட்டுக்களிலே உள்ளது. தமிழில்
ஸ்ரீவல்லபன் சிரீவல்லுவன் என்று கல்வெட்டுகளிலே எழுதியுள்ளனர். அதிவீரராம பாண்டியர் 16-ஆம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர். புலவர்களுக்கு ஔஷதம் ஆகிய நைஷதத்தை
காப்பியமாக எழுதியவர் அவர். நைடதம் புலவர்களுக்கு ஔடதம். அவரது கடவுள் வாழ்த்து கணபதி வாழ்த்துகளில் அழகானது. அதற்கு சித்திரம் எழுதி கோவை மாநகரின்
ஓம்சக்தி தீபாவளி மலரில் அச்சிட்டுள்ளனர். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு நூற்றாண்டு முன்பு தமிழின் பழைய பாண்டிய ராஜாக்கள் வமிசத்தில் பிறந்த கவிஞர்
பாடல் முதன்முறையாக ஓவியம் ஆகியுள்ளது - விக்னேசுரரின் வணக்கப்பாடலுக்கு என்பது இதன் சிறப்பு. அதிவீரராம பாண்டியர் செப்பேட்டிலே ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய
மன்னன் பெயர் உள்ளது. சிரீவல்லுவன் திருவள்ளுவர் என்றாதல் தமிழாக்கம் ஆகும். அநுஜன் என்ற வடசொல் அநுசன் > அனியன் என்று ஆகும். அதுபோல, தூய தமிழாக்கம்
ஸ்ரீவல்லபன் > சிரீவல்லுவன் >  திருவள்ளுவன்.

எல்லோரா என்று கைலாசநாதர் கோயில் உள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரம். அதன் பழைய பெயர்: ஏலூர் (கல்வெட்டுக்களில்). ஏலூர வேளூர் என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
அதுபோல, வேளாச்சாரியர் என்பது தமிழ் வேளிர் குலத்தோன்றலைக் குறிப்பிடும். வேள்- ஏலாச்சார்யர் என்று சமணர்கள் திருவள்ளுவரை அழைக்கின்றனர்.
ஏலாச்சார்யர் < வேளாச்சாரியர். வடநாட்டுச் சமணர்கள் வேள்- என்ன என்று தெரியாமல், ஏல- என ஆக்கியுள்ளனர். விந்து > இந்து ‘drop, seed, semen, soma'; விடங்கர் > இடங்கர் ‘corcodile, Linga (of Shiva)',
... போல, ஏலாச்சார்யர் < வேள் ஆச்சார்யர்.

மதுரை திருவள்ளுவரின் ஊர் என்பதற்குச் சான்று உண்டு:

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் 
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்

மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்(கு) அச்சு

 

யாதவ குலத்து அரசன் கண்ணபிரான். அவன் பிறந்த ஊர் வடமதுரை (யாமை என்னும் சொல்லடியிற் பிறந்த யமுநா நதிக்கரை).
அவன் சொன்னது கீதை. அதுபோல, மதுரையில் க்ஷத்ரிய குலத்தானாகிய திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்/சிரீவல்லுவர்)
சொன்னது குறள். வடமொழிக்கு கீதை. தென்மொழிக்கு குறள்; வடதிசைக்கு வடமதுரை, தென் திசைக்கு தென்மதுரை.
மதுரை மன்னர்களில் ஸ்ரீவல்லபதேவன் அடிக்கடி பயில்வது.

NG


N. Ganesan

unread,
Dec 10, 2019, 6:49:02 AM12/10/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
மயிலாப்பூர் வள்ளுவர் கோவிலில், வள்ளுவர் என்று வணங்கிவந்த திருப்பாதங்கள் வரலாற்றை
ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால் எழுதினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார் வள்ளுவர் ஒரு வேளிர்
என்று நூல் எழுதினர். சி. கு. நாராயணசாமி நாஞ்சில் வேள் அல்லது வள்ளுவன் என்ற கட்டுரையில்
புறநானூற்றில் நாஞ்சில் வள்ளுவன் ஒரு வேள் எனச் சான்றுகளுடன் நிறுவினார் (செந்தமிழ் 1950).

சி. கு. நாராயணசாமி முதலியார், நாஞ்சில் வேள் அல்லது வள்ளுவன், செந்தமிழ் (மதுரை தமிழ்ச் சங்கம்), தொகுதி 47, பக்கம் 1-8, 1950.
(C. K. Narayanacami MutaliyaravarkaL, Naanjil VEL allatu VaLLuvan, Centamil (Maturai Tamil Cankam), Vol. 47, pp. 1-8, 1950 )

குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாடு என்று 20-ஆம் நூற்றாண்டில் வந்த 
வரலாறு சுவையானது. அதற்கு முன் நஞ்சை நாடு/நாஞ்சி நாடு என அழைக்கப்பட்டது.
(சான்று: சோழர் காலக் கல்வெட்டுக்களில் இருந்து 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை).
முழுக்க நெல் வயல்கள் கொண்ட சமவெளி நாஞ்சிநாடு. நாஞ்சி என்பது கலப்பை.
அங்கே எந்த மலையும் நாஞ்சில் மலை என்பதில்லை. நாஞ்சில் ஆறும் இல்லை.
கவிமணி, ச. வையாபுரி போன்றோர் மீட்டுருவாக்கம் செய்த பெயர்: நாஞ்சில் நாடு.
பின்னர் நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன், ... 19-ஆம் நூற்றாண்டில்
நாஞ்சில் நாடு என்றே ஒரு பெயரைக் காணோம். உ. வே. சாமிநாதையரவர்கள் புறநானூறு
பதிப்பித்த பின்னர் உருவான மாற்றம்: நாஞ்சில் நாடு என்ற பெயர். இது மீட்டுருவாக்கம்.

வியா., 5 டிச., 2019, பிற்பகல் 6:32 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
 [ "...... செயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயின்னாட்டுக்கு சமைந்த
நாஞ்சில் ஊற்கு சமைந்த ஊரோமும் பெருஞ்செவூர் ஊற்கு சமைந்த ஊரோமும் விரைக்
குடிக்கு சமைந்த ஊரோமும் கணையக்குடி ஊற்கு சமைந்த ஊரோமும் இவ்வனைவோம்
எங்களில் இசைந்து...."]

Interesting. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பது “நாஞ்சி நாடு” எனக் கல்வெட்டுக்களில்
குறிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாய், நாஞ்சி = கலப்பை என்ற பொருளை
இந்த இடப்பெயருக்கு விளக்கிவந்துள்ளனர். சுற்றிலும் சிறு மலைகள், ஒருபக்கம் கடல்
கொண்ட சமவெளி. some 100s of square miles in Travancore state Naanji Naad. 
முழுக்க முழுக்க நெல் வயல்களால் பெயர் பெற்றது நாஞ்சி நாடு.
இங்கே நாஞ்சில் மலையும் இல்லை, நாஞ்சில் ஆறும் இல்லை. வள்ளுவன் என்ற
வேள் ஆண்டுள்ளான். வள்ளுவநாடு என்ற கல்வெட்டுகளும் உள்ளதால் இதைக் கொள்ளலாம்.
எனவே, இப்பகுதிக்கு  நாஞ்சில் வள்ளுவன் என்ற வேள் ஆண்டான் என்று
கவிமணி, ச. வையாபுரியார் போன்றோர் மீட்டுருச் செய்தனர், தொல்லியலால்
விளங்கும் வேளிர் வருகை, நெல் வேளாண்மை. வேளாண்மை என்னும் சொல்லே
வேளிர்க்காக உருவானது தான். புறம் 380 இந்த வேளுக்கான பாடல்.
பாண்டிய சேனாபதி இவன். தென்கடல் முத்தும், இவனது வள்ளுவ நாட்டின் வடக்கே
உள்ள பொதியச் சந்தனமும் அணிபவன் என்கிறது புறம் 380, கந்தன் என்னும்
ஸ்கந்தஸ்வாமியின் பெயர் தரித்த நாஞ்சில் வேள். இவ்வேளிர் இருந்ததால்
வேள்நாடு (வேணாடு) எனப் பெயர் பெறுவது. நாஇ, தாஇ, பேஇ, வாஇ (வாய்) ....
என்பதெல்லாம் மிகப் பழைய தமிழ், சங்க காலத்துக்கும் முன்னிருந்தே வருவது.
அதுபோல், வேள்இ மலை இந்த வள்ளுவன்மாரின் குலப்பெயரால் ஏற்பட்டுள்ளது.
வேளிமலை என்று வேள்இ மலையை அழைக்கின்றனர். நாஞ்சில் வேள் பற்றிய
நல்ல ஆய்வுக் கட்டுரையை கோவை வித்துவான் சி. கு. நாராயணசாமி
எழுதியுள்ளார். (தாமஸ் வீதியில் பெரிய வீடு இருந்தது. (திருமணம் செல்வக்கேசவராய
முதலியார்  பஞ்சலட்சணம் வெள்ளுரை ஆகத் தந்தனர் அண்மையில். அதே குலமரபு
இன் புலவர் பெருமானும். அண்மைக் காலத்தே, மு. பக்தவச்சலம் முதல்வர் ....)
நாஞ்சி நாட்டில் நாஞ்சில் மலை என்று ஒன்றுமில்லை. இந்த வள்ளுவ வேளிரும்
பொதிகை ஆய் வேளிரும் ஒரே குடும்பம் என்பார் வி. கனகசபைப்பிள்ளையவர்கள்.
பங்காளிகள்? மாமன்மைத்துனர்? - அறியோம்.

------------------

புறம் 137-140 வேளிர் குடியினரான வல்லபர்/வள்ளுவர்கள் மீதான பாடல்கள்.
இரண்டு புலவர்கள் (ஒருசிறைப் பெரியன், மருதன் இளநாகன்) பாடியவை.
பெரியன் :: பெயரன் என்று மெட்டாதீஸிஸ் ஆதலும் உண்டு. கொங்கு நாட்டில்
பெரியன் என்ற குலத்தார் அதிகமாய் வாழ்கின்றனர். பெரியசாமி = சிவன்,
சின்னசாமி = முருகன் என்றும் பெயர் வைப்பர். சின்னசாமி இளையபிள்ளையார்
என கல்வெட்டுகளில் வரும்.  இந்த வல்லப ராஷ்ட்ரம் (வள்ளுவ நாடு) பாலக்காடு 
மாவட்டம். இங்கே நாஞ்சில் என்ற மிக உயர்ந்த மலையும் இருப்பதை
மருதன் இளநாகன் பாடுகிறார். இந்த நாஞ்சில் மலையில் நாஞ்சில் நதி உற்பத்தி.
யானையை யானையால் யாத்தல் வடநாட்டில் இருந்து இந்த வள்ளுவ வேளிர்
தமிழ்நாட்டுக்கு இந்த நாஞ்சில் மலைகளில் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும்.
பயம்பில் (>> வசம்பில்) வீழும் யானைகளை படிமானஞ்செய்யும் பாகர்கள்
மொழி வட நாட்டு பாஷை என்று சங்க இலக்கியம் பதிவு செய்கிறது.
அதியன் என்னும் வேளிர் (ஸதியபுதோ என்பது கி.பி. 2-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு)
கன்னட நாட்டு அரசர்கள் இவர்கள். அசோக சக்கரவர்த்தி கல்வெட்டில் பதிவு.
சளுக்க வேளிர் என்பது பிங்கலம். சள- > சளிய/சடிய > சதிய. சதிய புத்ரர் >> அதியமான்.
(யாடவர் > யாதவர், விளாங்கோடு/விடாங்கோடு > விதாங்கோடு, ... போல, சடிய > சதிய )
வல்லபராஷ்ட்ரம்/வள்ளுவநாடு என்று கல்வெட்டுகள் கூறும் , மிக நீண்ட வரலாறு கொண்ட
வள்ளுவ வேளிர்களைப் பற்றியும், அவர்களது ஆதிப்பாடல்கள் புறம் 137-140 
ஆராய வேண்டும். சங்கச் சேரர் தலைநகர் வஞ்சியில் இருந்து, அங்கே இருந்த
வித்துவக்கோட்டு பெருமாளையும், அக்கிரகாரத்தையும் கேரளா நகர்த்தவும்,
பின்னர் மேற்கே சேர மன்னர்களை 9-ம் நூற்றாண்டின் பின்னர் நகர்த்தவும்
இவ் வள்ளுவ வேளிர் மகட்கொடை முதலியன கொண்டு நிகழ்த்தியிருக்க வேண்டும்.

திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1

திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2

N. Ganesan

unread,
Dec 10, 2019, 8:06:57 AM12/10/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட நாடு வல்லப ராஷ்ட்ரம் என்று சோழர் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுதலை
பார்த்தோம். இதனால் தான், வள்ளுவன் < வல்லபன் என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லின் தற்பவம் என்று
அறிந்துகொள்ள இயல்கிறது. குமரி மாவட்ட வள்ளுவ வேளிரில் கந்தன் என்ற போர்வீரன் (பொருநன்)
மிகுந்த புகழுடன் வாழ்ந்துள்ளான். முருகனுக்கு ஆன ஸ்கந்தன் என்ற பெய்ரைத் தாங்கிய
வள்ளுவ வேண்மான் இவன். கந்தசாமி என்ற தமிழர்க்குப் பொதுவான பெயர் முதல்முதலில்
வரும் பாடல் இந்த வள்ளுவ/வல்லப வேளிர் குலத்தோன்றல் தரித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

பாலக்காட்டுக் கணவாய் வள்ளுவநாடு/வல்லபராஷ்ட்ர வேளிர் பற்றிய பாடல்கள் புறம் 137-140.
இவற்றில் புறப்பாட்டு 137-க்கான உரையை சற்று விரிவாக எழுதினேன். புறம் 138-140
இன்னும் விரிவாகப் பார்ப்போம். இவை மருதன் இளநாகன் என்னும் புலவர்பெருமான்
வல்லபராஷ்ட்ர வேள் மீது பாடினவை. உ-ம்: வேளிர்க்கான நெல் வேளாண்மையை
அரிசி கேட்டுப் புறம் 140-ல் குறிக்கிறார் புலவர். ஏன் அரிசி என்பதைப் புலவர்கள்
விளக்கியுள்ளனர். பின்னர் பார்ப்போம். இப்பாட்டை ஔவை என்ற பிர்திபேட்தம் உண்டு.
இதற்கான காரணம் விறலி பாடுவதாக இப்பாட்டு அமைந்திருப்பது தான்.
க. கைலாசபதி, ஹெர்மன் டீக்கன் போன்றோர் விறலி, பாணன் போன்ற கதாபாத்ரங்களை
சங்கப் புலவர்கள் எவ்வாறு உருவாக்கிக் கையாண்டுள்ளனர் என அவர்கள் நூல்களில்
விரிவாக ஆய்ந்துள்ளனர். இப்பாட்டை ஔவை எனல் அக்காரணங்களுக்கு மிகப் பொருத்தம்.

வள்ளுவன் என்ற சொல் தமிழ் மூலம், சம்ஸ்கிருத மூலம் இரண்டும் கொண்டது.
இதில் வள்ளுவன் என்ற ஜாதி சங்க காலத்திற்கு மிகப் பிற்காலம். எனவே
வள்ளுவர் என்னும் வல்லப வேளிருக்குப் பொருந்தாத விளக்கங்கள்.
புறச்சமயத்தார் பரப்பிய அவற்றை மறுத்து நாவலர் சோமசுந்தர பாரதியார்
போன்றோர் நூல் எழுதியுள்ளனர்.
சி. கு. நாராயணசாமி முதலியார், நாஞ்சில் வேள் அல்லது வள்ளுவன், செந்தமிழ் (மதுரை தமிழ்ச் சங்கம்), தொகுதி 47, பக்கம் 1-8, 1950.
(C. K. Narayanacami MutaliyaravarkaL, Naanjil VEL allatu VaLLuvan, Centamil (Maturai Tamil Cankam), Vol. 47, pp. 1-8, 1950 )

~NG
Reply all
Reply to author
Forward
0 new messages