இறைச்சிக்கு கறி எனப் பெயர் வந்ததற்கு காரணம் மிளகா?

208 views
Skip to first unread message

Arun Mozhi Varman

unread,
May 2, 2017, 3:15:35 AM5/2/17
to மின்தமிழ்
"நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
கால மன்றியுங் கருங்கறி மூடையொடு
கூலங் குவித்த கூல வீதியும்"

என்ற சிலப்பதிகார வரிகளில் 'கருங்கறி' என்றழைக்கப்படும் மிளகை, இறைச்சி உணவுக்கு அதிகமாக பயன்படுத்தியதாலேயே பிற்காலத்தில் இறைச்சி, 'கறி' என வழங்கலாயிலிற்று என்று தொ.பரமசிவன் கூறுகிறார். இதை ஏற்கலாமா?

N. Ganesan

unread,
May 2, 2017, 10:10:40 AM5/2/17
to மின்தமிழ், vallamai
கறி என்னும் சொல் கடி என்பதுடன் தொடர்புடையதாகக் கருதுகிறேன். கறி (இறைச்சி) எலும்பு கடித்தல்.
alveolar t phenomenon என்று தேடிப் பாருங்கள்: படபட:பறபற > பறவை, பறை, .... போல கடி:கறி ...

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 2, 2017, 10:14:28 AM5/2/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
மிளை மேடான நிலம் (விளை). மிளகம்/மிளகு மேட்டுப்பாங்கான நிலத்தில் விளையும் கருங்கறி (Black pepper). உலகத்தையே வணிகத்தால் இணைத்த பழந் தமிழக விளைபொருள்
கருங்கறி மிளகு. Curry என ஆங்கிலத்தில்.


On Tuesday, May 2, 2017 at 12:15:35 AM UTC-7, Arun Mozhi Varman wrote:

வேந்தன் அரசு

unread,
May 2, 2017, 11:48:53 AM5/2/17
to vallamai, மின்தமிழ்


2 மே, 2017 ’அன்று’ முற்பகல் 7:10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
காய்கறியில் உள்ள கறி’க்கு அப்பெயர்வந்த காரணம்.

மிளகை ஏன் கறி என்றார்கள்? கடி> கறி??

வேந்தன் அரசு

unread,
May 2, 2017, 11:49:50 AM5/2/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com


2 மே, 2017 ’அன்று’ முற்பகல் 7:14 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

மிளை மேடான நிலம் (விளை). மிளகம்/மிளகு மேட்டுப்பாங்கான நிலத்தில் விளையும் கருங்கறி (Black pepper). உலகத்தையே வணிகத்தால் இணைத்த பழந் தமிழக விளைபொருள்
கருங்கறி மிளகு. Curry என ஆங்கிலத்தில்.

மிரியல் என்றது?

N. Ganesan

unread,
May 2, 2017, 10:45:13 PM5/2/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
(1) நாளம்/நார், 
(2) குளம்பு/குரம் (குளம்பி = coffee; காப்பிக்கொட்டைடை குரக்கொட்டை எனலாம். வடிவத்தால் பண்பாகுபெயர்)
(3) காளி/காரி (கருமை/கள்ள-)
(4) நள்-/நாள்- (செறிகருமை). விஷ்ணுவுக்கு நாளணன்/நாளப்பன் > நாரணன் (> நாராயணன்).
இவை போல,

மிளை > க-ப்ரத்யம் பெற்று மிளைகம்/மிளகம்/மிளகு > மிரியல் (மிர்சி ஹிந்தியில்).

நா. கணேசன்

Prakash Sugumaran

unread,
May 3, 2017, 4:53:49 AM5/3/17
to mintamil
’கருங்கறி’ என்பது கடுகையும் குறிக்கும்.

தீயில் ’க’ ரித்து உருமா ’றி’ யதால் ’கறி’

N. Ganesan

unread,
May 3, 2017, 7:36:39 AM5/3/17
to மின்தமிழ்


On Wednesday, May 3, 2017 at 1:53:49 AM UTC-7, Prakash Sugumaran wrote:
’கருங்கறி’ என்பது கடுகையும் குறிக்கும்.


”காலின் வந்த கருங்கறி மூடையும்” - black pepper
 
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.

நா. கணேசன்

Prakash Sugumaran

unread,
May 3, 2017, 8:41:54 AM5/3/17
to mintamil
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.

சித்த மருத்துவத்தில் வெண்கறி - வெண்கடுகு; கருங்கறி -சிறுகடுகு; நாய்க்குன்றி - நாய்க்கடுகு என குறிப்பிடப்படும்.

N. Ganesan

unread,
May 3, 2017, 8:48:26 AM5/3/17
to மின்தமிழ்


On Wednesday, May 3, 2017 at 5:41:54 AM UTC-7, Prakash Sugumaran wrote:
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.

சித்த மருத்துவத்தில் வெண்கறி - வெண்கடுகு; கருங்கறி -சிறுகடுகு; நாய்க்குன்றி - நாய்க்கடுகு என குறிப்பிடப்படும்.

ஏதாவது சித்த வைத்திய நூல்களில் இருந்தால் காட்டுங்கள். சித்த வைத்திய அகராதிகளில் உள்ளதா?

நா. கணேசன் 

Raju Saravanan

unread,
May 3, 2017, 8:53:38 AM5/3/17
to mint...@googlegroups.com
கறுவுதல் - பல்லால் கடித்து துருவுதல். அதாவது பல்லால் கடித்து சிறிது சிறிதாக உண்ணுதல் என்று பொருள்.

கறுவு > கறி என்றாகியிருக்கும்.

பல்லை நரநரவென கடித்து கோபத்தை வெளிப்படுத்துவதால் கறு என்ற சொல் கோபத்தையும் குறிக்கிறது.

On 3 May 2017 at 16:41, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.

சித்த மருத்துவத்தில் வெண்கறி - வெண்கடுகு; கருங்கறி -சிறுகடுகு; நாய்க்குன்றி - நாய்க்கடுகு என குறிப்பிடப்படும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
May 3, 2017, 9:03:44 AM5/3/17
to mint...@googlegroups.com
திருவள்ளுவர் புலால் என்கிறார். கறி எனும் சொல் இறைசசி எனும் பொருளில் , இலக்கியத்தில் எங்கேனும் ஆளப்பட்டுள்ளதா. 

Raju Saravanan

unread,
May 3, 2017, 9:11:29 AM5/3/17
to mint...@googlegroups.com
புல் என்றால் பயிர் வகை உணவை குறிப்பது. 

புல் + அல் >  புலால் என மருவி இருக்கும்.

புலால் என்பது பயிர்வகை அல்லாத உணவுவகைகளை குறிப்பது எனலாம் 

N. Ganesan

unread,
May 3, 2017, 9:13:48 AM5/3/17
to மின்தமிழ்


On Wednesday, May 3, 2017 at 6:03:44 AM UTC-7, singanenjan wrote:
திருவள்ளுவர் புலால் என்கிறார். கறி எனும் சொல் இறைசசி எனும் பொருளில் , இலக்கியத்தில் எங்கேனும் ஆளப்பட்டுள்ளதா. 

புலாவு (Pulao - சிந்து சமவெளி நாகரீகம் உலகம் முழுதும் தந்த உணவு. தமிழ்ப் பெயர்), புலை (மாதவிடாய்க்கும் உண்டு இப்பெயர்), புலா(ல்).

---------

கறி:
kaṟi
n. <கறி -. [K. M. kaṟi.]
1. Chewing, eating by biting ;
கடித்துத்தின்னுகை. மான்கறிகற்ற கூழைமௌவல் (சீவக. 485).

2. Vegetables, raw or boiled ;
மரக்கறி.

3. Meat, raw or boiled ;
இறைச்சி. கறிசோ றுண்டு (புறநா. 14, 14 ).

4. Pepper. See மிளகு. கறிவளர் பூஞ்சாரல் (திணை மாலை. 7).

 
மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்தும்
கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
ஒறுப்பர் சிலரை யவரு மொருபால்.


2017-05-03 18:23 GMT+05:30 Raju Saravanan <ras...@gmail.com>:
கறுவுதல் - பல்லால் கடித்து துருவுதல். அதாவது பல்லால் கடித்து சிறிது சிறிதாக உண்ணுதல் என்று பொருள்.

கறுவு > கறி என்றாகியிருக்கும்.

பல்லை நரநரவென கடித்து கோபத்தை வெளிப்படுத்துவதால் கறு என்ற சொல் கோபத்தையும் குறிக்கிறது.
On 3 May 2017 at 16:41, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:
கருங்கறி - கடுகு என்று எங்கே உள்ளது? அறிய ஆவல்.

சித்த மருத்துவத்தில் வெண்கறி - வெண்கடுகு; கருங்கறி -சிறுகடுகு; நாய்க்குன்றி - நாய்க்கடுகு என குறிப்பிடப்படும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Raju Saravanan

unread,
May 3, 2017, 9:15:53 AM5/3/17
to mint...@googlegroups.com
பயிர், மரம், செடி போன்றவற்றில் கிடைக்கும் உணவு வகைகளை கடித்து  உண்ணுவதால் அவைகளுக்கு மரக்கறி என்ற பெயர் உருவாகியிருக்கும்.

N. Ganesan

unread,
May 3, 2017, 9:22:32 AM5/3/17
to மின்தமிழ்


On Wednesday, May 3, 2017 at 6:11:29 AM UTC-7, இராசு சரவணன் wrote:
புல் என்றால் பயிர் வகை உணவை குறிப்பது. 

புல் + அல் >  புலால் என மருவி இருக்கும்.

புலால் என்பது பயிர்வகை அல்லாத உணவுவகைகளை குறிப்பது எனலாம் 


அப்படித் தெரியவில்லை. 

நா. கணேசன் 

Raju Saravanan

unread,
May 3, 2017, 9:32:44 AM5/3/17
to mint...@googlegroups.com
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். (குறள் 257)

புல்லுணவு என்பதின் எதிர்பதம் புலாலுணவு  

அதாவது சைவம் அசைவம் என்பதுபோல 

புலால் = புல் + அல் என்பதின் மருவல் என்பது மேற்காணும் குறள் மூலம் தெளிவாக தெரியவருகிறது 

--

N. Ganesan

unread,
May 3, 2017, 9:37:48 AM5/3/17
to மின்தமிழ்
2017-05-03 6:32 GMT-07:00 Raju Saravanan <ras...@gmail.com>:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். (குறள் 257)

புல்லுணவு என்பதின் எதிர்பதம் புலாலுணவு  

அதாவது சைவம் அசைவம் என்பதுபோல 

புலால் = புல் + அல் என்பதின் மருவல் என்பது மேற்காணும் குறள் மூலம் தெளிவாக தெரியவருகிறது 

இது அளபெடை. புலாஅ. 

நில் ‘stop', நிலா ‘moon ray' - இரண்டும் வெவ்வேறு.
புல் ‘grass', புலா(ல்) ‘meat, blood, pollution, stench'
புல்லும், புலாவும் வெவ்வேறு.

Raju Saravanan

unread,
May 3, 2017, 10:09:50 AM5/3/17
to mint...@googlegroups.com

புல் + ஆல் (அல். Word meaning `no'; அல்ல வென்னும் பொருளில் வருஞ் சொல். (அக. நி.) 


N. Ganesan

unread,
May 3, 2017, 10:14:25 AM5/3/17
to மின்தமிழ்
2017-05-03 7:09 GMT-07:00 Raju Saravanan <ras...@gmail.com>:

புல் + ஆல் (அல். Word meaning `no'; அல்ல வென்னும் பொருளில் வருஞ் சொல். (அக. நி.) 



nilA, pulA are not from nil 'stop', pul 'grass' respetively.

Raju Saravanan

unread,
May 3, 2017, 11:57:13 AM5/3/17
to mint...@googlegroups.com
//nilA, pulA are not from nil 'stop', pul 'grass' respetively.//

//நில் ‘stop', நிலா ‘moon ray' - இரண்டும் வெவ்வேறு.
புல் ‘grass', புலா(ல்) ‘meat, blood, pollution, stench'
புல்லும், புலாவும் வெவ்வேறு.//

ஐயா இப்படி நான் எங்கும் எழுதவில்லை. 



மேலும் புல் என்பது தாவர இனத்தை குறிப்பதாக Tamil lexicon குறிப்பிடுகிறது.
( Vegetable kingdom; தாவரவர்க்கம்.)

 தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளுக்கு புல்லுணவு என்ற பெயர் ஏற்புடையதே.

Arun Mozhi Varman

unread,
May 3, 2017, 1:06:52 PM5/3/17
to மின்தமிழ்
"பசுங்காய்ப் போழொடு கறிகலந்து" (பெரும்பாணாற்றுப்படை - 307, 308).

"கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது" (அகநானூறு - 2). 

"பைங்கறி நிவந்த பலவின் நீழல்" (சிறுபாணாற்றுப்படை - 43) 

"சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல்" (பெரும்பாணாற்றுப்படை)

"மிளகு பெய்தனைய சுவைய புன் காய்" (நற்றிணை 66)

சங்க இலக்கியங்களில் கறி, மிரியல், மிளகு என மூன்று பெயர்களிலும் மிளகு அழைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், 'அகநானூறு-புறநானூறு' தவிர்த்த தலைச் சங்க கால பாடல்களில் மிளகை கருங்கறி என குறிப்பிட்டு இருப்பதாக தெரியவில்லை. அதோடு, 'கடுகை' கறி என குறிப்பிட்டு இருப்பதற்கும் சான்று கிடையாது. 

மேலும், 'கடித்தல் - கறித்தல்' எனில் காய்கறியில் உள்ள 'கறி' என்பது யாது? 

அதேபோல், தீயில் ’க’ ரித்து உருமா ’றி’ யதால் ’கறி’ ஆனது என்பதன் இலக்கணம் வரைய முடியுமா? 

Raju Saravanan

unread,
May 3, 2017, 1:27:49 PM5/3/17
to mint...@googlegroups.com

ஊன் உணவு அல்லாத ‘‘காய்கறி’’ உணவுக்கு இப்போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுகிறது. சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே ‘‘மரக்கறி’’ உணவுக்கு ஆருகத உணவு என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. இலங்கையிலுள்ள தமிழர்கள் ‘‘காய்கறி’’ உணவை இப்போதும் ஆரத உணவு என்று வழங்கி வருகின்றனராம்26. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு.

--

N. Ganesan

unread,
May 3, 2017, 5:12:04 PM5/3/17
to மின்தமிழ்


On Wednesday, May 3, 2017 at 8:57:13 AM UTC-7, இராசு சரவணன் wrote:
NG> //nilA, pulA are not from nil 'stop', pul 'grass' respectively.//

NG> /நில் ‘stop', நிலா ‘moon ray' - இரண்டும் வெவ்வேறு.
புல் ‘grass', புலா(ல்) ‘meat, blood, pollution, stench'
புல்லும், புலாவும் வெவ்வேறு.//

ஐயா இப்படி நான் எங்கும் எழுதவில்லை. 


பல் 'teeth', பலா 'jackfruit'

நில் 'stop', நிலா 'moon ray'
...
போல
புல் 'grass', புலா 'meat, blood' - they are quite different words.

N. Ganesan
 

N. Ganesan

unread,
May 3, 2017, 8:45:56 PM5/3/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Wednesday, May 3, 2017 at 5:53:38 AM UTC-7, இராசு சரவணன் wrote:
கறுவுதல் - பல்லால் கடித்து துருவுதல். அதாவது பல்லால் கடித்து சிறிது சிறிதாக உண்ணுதல் என்று பொருள்.

கறுவு > கறி என்றாகியிருக்கும்.

பல்லை நரநரவென கடித்து கோபத்தை வெளிப்படுத்துவதால் கறு என்ற சொல் கோபத்தையும் குறிக்கிறது.


 ஆம். கறித்தல் = கடித்தல் (an alveolar t phenom).

அடி தடவ, பட அரவம் இசைக்கும் 
கடிதடம் உற்றவள்; உருமு கறிப்பாள்; - கம்பர்

உருமு கறிப்பாள் - இடியை ஒத்து பற்களைக் கடிப்பவளாயினாள்

-------

கறித்தல் - புல்லை மெல்ல கடித்தல் (மேய்தல்). பல காட்டுகள் சங்ககாலம் முதற்கொண்டு இருக்கின்றன.
தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் 1மாவினம் பூத்தண்பு றணியே. - சூளாமணி
கார்செய் காலை-கார்காலத்திலே;
கறித்தொறும்-மேயுந்தோறும்; 

கறித்து (கடித்து) தின்பதால் புலாக்கறி, இலைக்கறி, ...

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 4, 2017, 8:08:32 AM5/4/17
to வல்லமை, மின்தமிழ்

2017-05-03 8:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
 
NG> மேடான நிலம் (விளை). மிளகம்/மிளகு மேட்டுப்பாங்கான நிலத்தில் விளையும் கருங்கறி (Black pepper). உலகத்தையே வணிகத்தால் இணைத்த பழந் தமிழக விளைபொருள்
கருங்கறி மிளகு. Curry என ஆங்கிலத்தில்.
 
வேந்தன்> மிரியல் என்றது?
 
(1) நாளம்/நார், 
(2) குளம்பு/குரம் (குளம்பி = coffee; காப்பிக்கொட்டைடை குரக்கொட்டை எனலாம். வடிவத்தால் பண்பாகுபெயர்)
(3) காளி/காரி (கருமை/கள்ள-)
(4) நள்-/நாள்- (செறிகருமை). விஷ்ணுவுக்கு நாளணன்/நாளப்பன் > நாரணன் (> நாராயணன்).
இவை போல,

மிளை > க-ப்ரத்யம் பெற்று மிளைகம்/மிளகம்/மிளகு > மிரியல் (மிர்சி ஹிந்தியில்).
 
- நா. கணேசன்


On Tuesday, May 2, 2017 at 7:54:48 PM UTC-7, தவன் wrote:
 
 முள் போன்ற மேற்பரப்பால் அதற்கு முளகு என்று பெயரிட்டனர். இகர உகர திரிபில் மிளகு .> மிளகு ஆனது.

மிளகு போல் காரமுடைய காய் மிளகாய்.

கறி என்பது திரட்சித் தன்மையை குறிக்கும் கல் என்ற வேரினின்று தோன்றியது என்பர்பேரா அரசேந்திரன். 

கறிபோல் பயன்படும் காய் கறிகாய் அல்லது காய்கறி .


மிளகில் முள் எங்கும் இல்லை. எனவே, முளகு என்ற சொல்லை சங்க இலக்கியத்தில் காணோம்.
பிடி- என்பது புடி- என்றாதற்போல, மிளகு > முளகு (பேச்சிவழக்கு).  மிளை மேட்டுநிலம்.
சைய மலையில் (ஸஹ்யாத்ரி) மழைவாங்கு பிரதேசம் ஆகிய கேரளத்து மிளைகளில் விளைவது
மிளைகம் : மிளகு/மிளகம். 

கடித்தல் = கறித்தல். இதற்கும் கல் என்பதற்கும் தொடர்பில்லை.

போர்ச்சுகீஸ் கொண்டுவந்த கொக்கோ, வான்கோழி, புகையிலை, ... போலவே அமெரிக்கா கண்டத்து மிளகாய்.
17-ஆம் நூற்றாண்டில், தமிழர் மிளகு + காய் = மிளகாய் எனப் பெயர் அளித்தனர்.

புகையிலை விடுதூது - ஒரு பிரபந்தம்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன. இன்று மிளகாய் இல்லாவிட்டால் தமிழ்ச்சமையல் இல்லை என்பதுபோல் தோன்றிடினும் மிளகாய் உருவான இடம் மத்திய அமெரிக்காதான். மிளகாய்க்கு முன்னர் குறுமிளகு பயன்பட்டது. குறுமிளகைத் தேடிவந்த வெள்ளைக் காலனி மேலாண்மையர் அதனை இந்தோனேசியாவில் பயிரிடத் தொடங்கிய பின்னர் விலைசரிந்தது. 

புகையிலை நூதனமாகத் தமிழகத்தில் அறிமுகமான பின்னர், முருகனுக்கு நிவேதனமாக அளிக்கும் வழக்கம் ஒன்று ஏற்பட்டது. விராலிமலையில் சுப்பிரமணியருக்குச் சுருட்டுப் படையல் உண்டு. பழனியைச் சுற்றிலும் வேளாண்மக்களால் புகையிலைப் பயிர் சாகுபடி இன்றும் ஆகிறது. பழனி மலையில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக் கடவுள்மீது புகையிலையைத் தூதுவிடுவதாக ஒரு பிரபந்தம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனிச் சர்க்கரைப் புலவர் பாடியிருக்கிறார். அதனை மதிப்பிற்குரிய உவேசா அவர்கள் அச்சுவாகனம் ஏற்றினார்கள். சீனிச் சர்க்கரைப் புலவர் இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப்புலவரின் குமாரர்; காளையார்கோயில் மருதுபாண்டியரைக் குறிக்கும் மயூரகிரிக் கோவை இயற்றிய சாந்துப் புலவரின் தம்பியார்.


நா. கணேசன்
 
தவன் 

தேமொழி

unread,
May 4, 2017, 8:08:02 PM5/4/17
to மின்தமிழ்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.


கேள்வி:  வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?

போர்ச்சுகீசர் இந்தியாவில் நுழைந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லவா?

அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)

Malarvizhi Mangay

unread,
May 5, 2017, 3:25:36 AM5/5/17
to mint...@googlegroups.com

.மரக்கறி , தொடுகறி எனும் சொல்வழக்குககள் கறி என்பது
சோற்றுடன் கறி (Side dish)  என்பதே
பொருளாக முடியும்.இறைச்சி மட்டுமே
அன்று.

On 05-May-2017 5:38 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (jsthe...@gmail.com) Add cleanup rule | More info


அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.


கேள்வி:  வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?

போர்ச்சுகீசர் இந்தியாவில் நுழைந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லவா?

அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)

N. Ganesan

unread,
May 5, 2017, 6:29:23 AM5/5/17
to மின்தமிழ், vallamai


On Thursday, May 4, 2017 at 5:08:02 PM UTC-7, தேமொழி wrote:



அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.


கேள்வி:  வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?

ஆமாம். வான் = பெரிய என்ற பொருளில் அமைத்துள்ளனர். வான்கோழி = பெரியகோழி.
’வடிவேல் எறிந்த வான்பகை’ என்னும் சிலம்புத் தொடரில் வான்பகை = பெரிய பகை என்ற பொருள்.
இது ராக்கெட் செல்லும் வானம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளேன்.

16-ஆம் நூற்றாண்டில் இயற்றின பாடல். கால்ட்வெல் பாதிரியார் இப்பாடல் பற்றிக் கூறியுள்ளார்.
கழிகோறு என்று Calicut நகரின் பழைய பெயர் வட்டெழுத்துக் கல்வெட்டில் கிடைத்துள்ளது - கேரளாவில்.
மளூரை mallur என ஆங்கிலப் பேப்பரில் எழுதியதைப் பார்த்தோம். அதேபோல, கழிகோறு (= கழிகோடு)
Callicoot எனப் பழைய ஐரோப்பிய ஆவணங்கள். இதனைக் கள்ளிக்கோட்டை என தமிழர் எழுதலாயினர்.
கோழிக்கோடு என கழிகோறு/டு ஆகிவிடுதலும் உண்டு, வான்கோழி தொடர்பாக. போர்த்துகீசியர்
இங்கே அறிமுகப்படுத்திய வான்கோழி பின்னர் வட இந்தியா செல்ல ஆரம்பித்தது. முகலாய ஓவியங்களில்
பார்க்கிறோம்.

நா. கணேசன்
 

செல்வன்

unread,
May 5, 2017, 6:45:24 AM5/5/17
to mintamil

2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)


வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியது

அவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது

கிண்ணிகோழியாக இருக்கலாமோ?


--

N. Ganesan

unread,
May 5, 2017, 6:50:31 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:

2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)


வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியது

அவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது

கிண்ணிகோழியாக இருக்கலாமோ?

கிண்ணி கோழி என்றால் என்ன? Guinea chicken?
 

N. Ganesan

unread,
May 5, 2017, 6:51:22 AM5/5/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Friday, May 5, 2017 at 12:25:36 AM UTC-7, malarmangay64 wrote:

.மரக்கறி , தொடுகறி எனும் சொல்வழக்குககள் கறி என்பது
சோற்றுடன் கறி (Side dish)  என்பதே
பொருளாக முடியும்.இறைச்சி மட்டுமே
அன்று.


ற (alveolar t) என்பது ட (retroflex t) மாற்றாக த்ராவிட மொழிகளில் வரும்.
கழிகோடு (Calicut) கழிகோறு என்று இருப்பதை அந்தக் கல்வெட்டு
கண்டுபிடிக்கப்பட்ட நாள்களில் எழுதியுள்ள மடல்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.
(CTamil, MinTamil, ...)

கறித்தல் = கடித்தல் என்ற வினைச்சொல்லாக தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்டு
இருப்பதைக் காணலாம். தொகுத்துத் தரலாம். மானும், ஆடும் இலை கடித்து தின்பதை
கறித்தல் என்று சொல்லும் இலக்கியங்கள் பல. இலைக்கறி, மரக்கறி, எலும்புக்கறி, ...
என்பதெல்லாம் கடித்தல்/கறித்தல் வினைச்சொல்லால் ஏற்பட்டதே,

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று. - நாலடி

ஆற்றுக்கால் பகவதி - ஆட்டுக்கால் பகவதி: http://www.attukal.org/
படபட/பறபற - பறவை
தொடு/தொறு - An Alveolar ṯ phenomenon: தொடு- > தொறு/தொழு

ஹரிகி, 2010 மடல்:
“கறி என்பதற்கும் இதே பொருள்தான்.  துண்டம் துண்டமாக வெட்டுவதற்குக் கறித்தல் என்று பெயர்.  கறிக்கின்ற காரணத்தால் கறி.  ஆட்டுக் கறியும் கறிதான்.  காய்கறியும் கறிதான்”
சாப்பாட்டை ஒரு வெட்டி வெட்டினாள் என்பது இதுதான் போல.

---------------------------

மிளகு என்ற பெயர் தான் மலையாளத்தில் வழங்கியது. முளகு பேச்சுவழக்கு, பிடி > புடி போல, மிளகு > முளகு/மொளகு. மிளகில் முள் இல்லை. திரங்கம் (திரங்குதல் திரை. திரைகடல்) என்றும் மிளகுக்கு ஒருபெயர். திரங்கம் என்றசொல் தரங்கம் (அலை) என்றும் ஆகியது. மிளகு ஏற்றுமதி ஆன கழிகோடு போன்ற துறைமுகங்களின் வழியாக வான்கோழி (அமெரிக்க டர்க்கி) வந்திறங்கியது. 
வான் = பெரிய என்ற பொருளில் அமைத்துள்ளனர். வான்கோழி = பெரியகோழி.
’வடிவேல் எறிந்த வான்பகை’ என்னும் சிலம்புத் தொடரில் வான்பகை = பெரிய பகை என்ற பொருள்.
இது ராக்கெட் செல்லும் வானம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளேன்.

16-ஆம் நூற்றாண்டில் இயற்றின பாடல். கால்ட்வெல் பாதிரியார் இப்பாடல் பற்றிக் கூறியுள்ளார்.
கழிகோறு என்று Calicut நகரின் பழைய பெயர் வட்டெழுத்துக் கல்வெட்டில் கிடைத்துள்ளது - கேரளாவில்.
மளூரை mallur என ஆங்கிலப் பேப்பரில் எழுதியதைப் பார்த்தோம். அதேபோல, கழிகோறு (= கழிகோடு)
Callicoot எனப் பழைய ஐரோப்பிய ஆவணங்கள். இதனைக் கள்ளிக்கோட்டை என தமிழர் எழுதலாயினர்.
கோழிக்கோடு என கழிகோறு/டு ஆகிவிடுதலும் உண்டு, வான்கோழி தொடர்பாக. போர்த்துகீசியர்
இங்கே அறிமுகப்படுத்திய வான்கோழி பின்னர் வட இந்தியா செல்ல ஆரம்பித்தது. முகலாய ஓவியங்களில்
பார்க்கிறோம்.

நா. கணேசன்


 
On 05-May-2017 5:38 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (jsthe...@gmail.com) Add cleanup rule | More info




அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள், பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி, தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர் வழியாக இந்தியாவை அடைந்தன.


கேள்வி:  வான்கோழி போர்சுகீசியர் அறிமுகப்படுத்தி இந்தியாவில் நுழைந்ததா?

போர்ச்சுகீசர் இந்தியாவில் நுழைந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லவா?

அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 6:53:02 AM5/5/17
to mint...@googlegroups.com
கிண்ணிக் கோழிக்கு தோகையெல்லாம் இல்லீங்களே 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 5, 2017, 6:54:57 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:

2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)


வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியது

அவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது

Turkey. It shows Avvai's time.

N. Ganesan

unread,
May 5, 2017, 6:56:35 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 3:53:02 AM UTC-7, singanenjan wrote:
கிண்ணிக் கோழிக்கு தோகையெல்லாம் இல்லீங்களே 

This comes from Papua New Guinea
 

2017-05-05 16:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:

2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)


வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியது

அவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது

கிண்ணிகோழியாக இருக்கலாமோ?

கிண்ணி கோழி என்றால் என்ன? Guinea chicken?
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 7:00:54 AM5/5/17
to mint...@googlegroups.com
நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி 

தற்போது பயிரிடப்படும் நிலக்கடலை , மணிலா ஆய்வு மையத்திலிருந்து வந்தது. அதனால்தான் அது மணிலாக் கொட்டை .......மல்லாக் கொட்டை ....மல்லாட்ட (கடலூர் பகுதிகளில்)

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 7:07:15 AM5/5/17
to mint...@googlegroups.com
இதாங்க  கிண்ணிக் கோழி 
kinni.png

N. Ganesan

unread,
May 5, 2017, 7:09:02 AM5/5/17
to மின்தமிழ்
2017-05-05 4:00 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி 

தற்போது பயிரிடப்படும் நிலக்கடலை , மணிலா ஆய்வு மையத்திலிருந்து வந்தது. அதனால்தான் அது மணிலாக் கொட்டை .......மல்லாக் கொட்டை ....மல்லாட்ட (கடலூர் பகுதிகளில்)

ஆமாம். அமெரிக்கா காலனியாக வைத்திருந்த ஒரே நாடு பிலிப்பைன்ஸ். அதற்கு முன்பு ஸ்பெயின் ஆளுமையில் பிலிப்பைன்ஸ்.
அதனால் தான் அமெரிக்காவின் நிலக்கடலை மணிலா வழியாக சென்னை வந்தது.

கோவையில் வெள்ளக்கிணறு குடும்பத்தார் ஆரம்பித்த நூல் மில்லின் பெயர் கம்போடியா காட்டன் மில்ஸ் 1930களில். இன்று இந்தியா முழுதும் பயிராவது அமெரிக்கா பருத்தி. அமெரிக்கா பருத்தி கிழக்குநாடுகள் வழியாக சென்னை துறைமுகம் வந்தது.
இந்தியாவின் கொட்டைப்பருத்தி அல்ல (அது மரம்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 5, 2017, 7:15:02 AM5/5/17
to மின்தமிழ்
2017-05-05 4:07 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இதாங்க  கிண்ணிக் கோழி 

ஆங்கிலச் சொல்லை கின்னி கோழி என்கிறோம்:
ஆப்பிரிக்காவில் இருந்து உலகெங்கும் பரவிய பறவை.

நீங்கள் சொல்வதுபோல் தோகையற்றது.

ஔவை பாடல் (அ) முழு நூலும் 16-ம் நூற்றாண்டு ஆக இருக்க வாய்ப்புகள் உண்டு.
முதலில் காட்டியவர் பிஷப் கால்ட்வெல்.

நா. கணேசன்



 

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 7:20:29 AM5/5/17
to mint...@googlegroups.com
இந்தியாவின் கொட்டைப்பருத்தி அல்ல (அது மரம்).

இலவ மரம்தானே,    

N. Ganesan

unread,
May 5, 2017, 7:23:57 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 4:20:29 AM UTC-7, singanenjan wrote:
இந்தியாவின் கொட்டைப்பருத்தி அல்ல (அது மரம்).

இலவ மரம்தானே,    

இல்லை. இலவம் = சில்க் காட்டன்.

ஆனால் நான் சொல்வது சிந்து வெளியிலும், சங்க காலத்திலும்
பருத்தி விளைந்த மரம். கிரேக்க யவனாசிரியர்களும்
இந்தியாவின் பருத்தி மரத்தைக் குறிப்பிட்டுளனர்.

நா. கணேசன்

 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 7:37:07 AM5/5/17
to mint...@googlegroups.com
சில்க் காட்டன் என ஆங்கிலத்தில் சொல்லப்படுவது , இலவம் பஞ்சு தான். "இலவு காத்த கிளி" தெரியுமல்லவா 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 5, 2017, 10:43:05 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 3:54:57 AM UTC-7, N. Ganesan wrote:


On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:

2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)


வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியது

அவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது

Turkey. It shows Avvai's time.

அதாவது ஔவை பாடிய வான்கோழி ...Turkey  (Turkey. It shows Avvai's time.)  போர்துகீசியரால் அறிமுகப் படுத்தப்பட்டது ...

எனவே மூதுரையும் அதனைப் பாடிய அவ்வையும் 16 ஆம் நூற்றாண்டவர் என்றாகிறது.

இவர் இன்னொரு புது ஔவை.

கம்பர் காலத்து ஔவை கிடையாது இவர் வேறொருவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஆக நாமறியும் ஔவைகளில் இவர் ஐந்து  (அல்லது 6?)


 ..... தேமொழி 

N. Ganesan

unread,
May 5, 2017, 10:46:48 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 7:43:05 AM UTC-7, தேமொழி wrote:


On Friday, May 5, 2017 at 3:54:57 AM UTC-7, N. Ganesan wrote:


On Friday, May 5, 2017 at 3:45:24 AM UTC-7, செல்வன் wrote:

2017-05-04 19:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அதற்கும் முன்னரே வான்கோழி குறித்து  ஔவை பாடிவிட்டரே!!!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
- மூதுரை -  ஔவையார் (12-ஆம் நூற்றாண்டு)


வான்கோழி தென்னெமெரிக்காவிலிருந்து கொலம்பஸ காலத்திற்கு பின்னரே பரவியது

அவ்வை பாடிய வான்கோழி எது என்பது ஆய்வுக்குரியது

Turkey. It shows Avvai's time.

அதாவது ஔவை பாடிய வான்கோழி ...Turkey  (Turkey. It shows Avvai's time.)  போர்துகீசியரால் அறிமுகப் படுத்தப்பட்டது ...

எனவே மூதுரையும் அதனைப் பாடிய அவ்வையும் 16 ஆம் நூற்றாண்டவர் என்றாகிறது.

இவர் இன்னொரு புது ஔவை.

தெரியவில்லை. தெரிந்த ஔவையே 16-ஆம் நூற்றாண்டு எனலாமே.

N. Ganesan

unread,
May 5, 2017, 10:56:20 AM5/5/17
to மின்தமிழ்


On Friday, May 5, 2017 at 4:37:07 AM UTC-7, singanenjan wrote:
சில்க் காட்டன் என ஆங்கிலத்தில் சொல்லப்படுவது , இலவம் பஞ்சு தான். "இலவு காத்த கிளி" தெரியுமல்லவா 


ஆம். இலவு காத்த கிளி என்னும் பழமொழி இந்தியாவின் எல்லா மொழிகளிலும், சம்ஸ்கிருதம், ப்ராகிருதம், .... பழைய நூல்களில் இருக்கிறது.
கோங்கிலவு என்று ஒரு இலவு உள்ளது. அந்த இலவ மரத்தின் காய்கள் போலிருப்பதால் தமிழில் பெண் நகில்களுக்கு கொங்கை எனப் பெயர்.
உவமையாகுபெயர்.

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 12:39:39 PM5/5/17
to mint...@googlegroups.com
ஆனந்த விகடனில் , 'இலவு காத்த கிளி' எனும் தலைப்பில் வந்த தொடர்கதை பின்னர் 'சொல்லத்தான் நினைக்கிறன்' என்று திரைப்படமாக வந்தது. 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages