இந்திர விழா

608 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 18, 2022, 11:06:22 PM4/18/22
to Santhavasantham

இந்திர விழா

பூம்புகாரில் இந்திர விழா 28 நாட்கள் (ஒரு திங்கள் = Lunar month) நடைபெற்றதாகத் தெரிகிறது. 'நாளேழ் நாளினும் நன்கு இனிது உறைகென' (மணிமேகலை). இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது (ஐங்குறுநூறு 62).
https://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1041-html-p1041333-26426
https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=7

இந்திர விழாவின் உச்சம் சித்திரை நக்ஷத்திரம் ஆன சித்ரா பௌர்ணமி. இந்திரவிழாக் காலத்தில் தேவரும் வான் உலகை விட்டுக் கீழிறங்கிப் புகார் நகருக்கு வந்து தங்குவர்.   “தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும் நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்” (மணி. விழாவறைகாதை). எனவே, தான் வானவர்களும், கோவலனும் வானுலகில் இருந்து விமானத்தில் வந்து வேங்கை மர நிழலில், கொற்றவையாய் நின்ற கண்ணகியை அழைத்துச் சென்ற நாள் சித்ரா பௌர்ணமி எனக் கருதப்படுகிறது. சந்திரா என்றும், ஸ்ரீபூரணி நாச்சியார் என்றும் கண்ணகி தெய்வமான பின் வழிபாட்டுக்கு உரியவர் ஆனார். மேலும், கண்ணகி இலக்குமியின் அவதாரம் என்ற குறிப்புகளை அவர் பெயரிலும், விளக்கியும் இளங்கோ அடிகள் பாடியுள்ளார். பாற்கடலை அமுதம் கடைந்தபோது, சோமன் என்னும் சந்திரனும், இலக்குமியில் கடலில் தோன்றினர். சித்ரா பௌர்ணமியும், மங்கலதேவி கண்ணகியும்:
https://groups.google.com/g/vallamai/c/e3apK26n9NM

பொதுவாகப் பல 20-ம் நூற்றாண்டு நூல்களில், இந்திரவிழா சித்ரா பௌர்ணமியில் தொடங்கியது என இருக்கும். ஆனால் ஒரு வலைத்தளத்தில், முழுமதி நாளுக்கு ஒரு வாரம் முன்பு கால்கோள் நடைபெற்றதாகப் படித்தேன்,
https://ta.quora.com/intira-vila-enpatu-enna-atu-pantaik-kalattil-evvaru-kontatappattatu
 “சித்திரை சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்
(சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை, 64)
பொருள்: சித்திரை மாதத்துச் சித்திரைநாளிலே நிறைமதி சேர்ந்ததாக அந்நாளிலே (இந்திராவிழா எடுக்கப்பட்டது).

சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் கணுவெழுந்த பொன்மூங்கில் தண்டு நட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்பட்ட செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது. ”

சிலம்பில் மேற்சொன்னவாறு உள்ளதா? அல்லது, உரைகளிலா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 19, 2022, 7:32:03 AM4/19/22
to Santhavasantham
இந்திர விழா பற்றிப் பல வடமொழி நூல்களில் செய்திகள் உண்டு. நேபாளத்தில் நடக்கும் விழா இந்திர விழா. சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரியில் சிறுமி ஒருத்தியைக் கொற்றவையையாகக் கலைமானின் மீது அமர்த்தி அலங்கரிப்பது போலே, இன்றும் நேப்பாளத்தில் உண்டு. இந்திரவிழா பற்றிய கட்டுரைகளைப் பார்க்கவேண்டும். உ-ம்:
(1) The Indra Festival According to the Atharvavedins by Jan Gonda
Journal of the American Oriental Society, Vol. 87, No. 4 (Oct. - Dec., 1967), pp. 413-429.
(2) THE WORSHIP OF THE "JARJARA" ON THE STAGE
F. B. J. KUIPER
Indo-Iranian Journal, Vol. 16, No. 4 (1975), pp. 241-268.

ஜெயமோகன், 2014:
https://www.jeyamohan.in/57265/
வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37
July 7, 2014
பகுதி ஏழு : கலிங்கபுரி
[ 1 ]
”சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். அது இளையோரும் வளையோரும் கூடும் காமன்விழா என்று தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருந்தது.”

இதனை, ராமையா முத்துசாமி சிலப்பதிகாரம் என எழுதியிருக்கிறார்.

N. Ganesan

unread,
Apr 19, 2022, 8:01:40 AM4/19/22
to Santhavasantham
இந்தப் பேரா. கய்ப்பர், தனிநாயகம், வ. ஐ. சு.,  போன்றோருடன் சேர்ந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள், நிறுவனம் அமைக்க முன்னின்றவர், பேரா. விட்சல் அவர்களின் ஆசிரியர். வேத இலக்கியங்களில், எவை எவை இந்தோ-ஐரோப்பியச் சொற்கள் அல்ல என இருவரும் பட்டியல் தயாரித்து உள்ளனர். அந்தப் பட்டியலை எடுத்து நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை:  https://archive.org/details/NGanesan_IJDL_2018/mode/2up

NG

On Tue, Apr 19, 2022 at 6:31 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
இந்திர விழா பற்றிப் பல வடமொழி நூல்களில் செய்திகள் உண்டு. நேபாளத்தில் நடக்கும் விழா இந்திர விழா. சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரியில் சிறுமி ஒருத்தியைக் கொற்றவையையாகக் கலைமானின் மீது அமர்த்தி அலங்கரிப்பது போலே, இன்றும் நேப்பாளத்தில் உண்டு. இந்திரவிழா பற்றிய கட்டுரைகளைப் பார்க்கவேண்டும். உ-ம்:
(1) The Indra Festival According to the Atharvavedins by Jan Gonda
Journal of the American Oriental Society, Vol. 87, No. 4 (Oct. - Dec., 1967), pp. 413-429.
(2) THE WORSHIP OF THE "JARJARA" ON THE STAGE
F. B. J. KUIPER
Indo-Iranian Journal, Vol. 16, No. 4 (1975), pp. 241-268.

ஜெயமோகன், 2014:
https://www.jeyamohan.in/57265/
வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37
July 7, 2014
பகுதி ஏழு : கலிங்கபுரி
[ 1 ]
”சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். அது இளையோரும் வளையோரும் கூடும் காமன்விழா என்று தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருந்தது.”

இதனை, ராமையா முத்துசாமி சிலப்பதிகாரம் என எழுதியிருக்கிறார்.

Reply all
Reply to author
Forward
0 new messages