Re: [MinTamil] வஞ்சி

266 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 31, 2017, 11:36:00 AM10/31/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, Ramachandran Nagaswamy, Karthikeya Sivasenapathty, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, mozhitrust
வஞ்சி மாநகர் என்று சங்க காலத்திலே சேர மகாராசர்களின் தலைநகராக ஆன்பொருனைக் கரையிலே (அமராவதி ஆறு) இருந்தது வஞ்சிக் கருவூர் என்பது தெளிவு.
அங்கே அரண்மனையில் வளர்ந்தவர் இளங்கோ அடிகள். அவர் கர்நாடகத்தில் இன்றுள்ள, அவர்காலத்தில் வடகொங்காக இருந்த காவேரி பிறக்கும்
சையமலையிலே தம் சமண சமயத்தை குரவர்களிடம் கற்றிருக்கவேண்டும். தமிழில் கர்நாடகாவில் வழங்கி வந்த காவதம்/காதம் என்ற சொற்களை
காவேரி பிறக்கும் நாட்டைப் பாடும்போது அறிமுகம் செய்கிறார். இது பற்றி நான் எழுதிய கட்டுரை ஓம்சக்தி தீபாவளி மலர் 2017-ல் அச்சாகியுள்ளது.
உங்கள் சிவகாசியில் தான் அச்சானது.

முழுக் கட்டுரையும் கரந்தை ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்:


வாழ்த்துக்காதையில் தம்குலத்தை தொல்குலம் என்கிறார் இளங்கோ அடிகள்:
6. வாழ்த்துக் காதை



14.

  

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;



14
உரை
14

''மலையரையன் . . . தொல்குலமே''

        மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;

        
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும்.






2017-10-31 8:23 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:




NG < சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்
- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்கநாட்டு ஊர>
 
2017-10-31 0:59 GMT-07:00 kanmani tamil <kanmanitamilskc@gmail.com>:
 
பதிற்றுப்பத்து நூலை ஊன்றிப் பயிலும்போது சேரர் ஆட்சிமுறை தெளிவாகிறது .
நமக்குக் கிடைத்துள்ள 8பத்துகள் வாயிலாக நாம் 9சேர மன்னர்களின் பெயர்களை அறிகிறோம் (இரண்டாம் பத்தின் பதிகம் வாயிலாக நமக்குக்கிடைக்காத முதல் பத்தின் மன்னனைத் தெரிந்து கொள்கிறோம் ) 
.இவர்கள் 9பேரும் ஒருவர் பின் ஒருவராக  பட்டம் கட்டியவர்கள் அல்லர் .ஒரே காலகட்டத்தில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் .(சோழ நாட்டில் பங்காளிச் சண்டை நடந்தமையை புறநானூற்றில் காண்கிறோம்(பா.44,45,47).ஆனால் சேர நாட்டில் பங்காளிச்சண்டை நடந்ததாகத் தகவல் ஏதும் இல்லை .)
இந்த மன்னர்களைப் பாடிய 8புலவர்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் .
2ம் பத்தின் தலைவனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.(பா.63)
பரணர் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனை பதிற்றுப்பத்தில்  பாடுகிறார் .
பரணரும் 7ம்பத்திற்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலரும் ,8ம்.பத்திற்குரிய பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடிய அரிசில் கிழாரும் ,9ம்.பத்திற்குரிய இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன் றூர்கிழாரும் ,ஒருசேர பேகனைப் பாடியுள்ளனர் .(புறம்.-141-147)
விடுபட்ட பல்யானைச்செல் கெழு குட்டுவன் இம்யவரம்பனின் தம்பி என்பது பதிகம் வாயிலாகப் புலப்படுகிறது .
3ம்.பத்திற்குரிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ,6ம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனின்  ஒரு மனைவிக்குப்  (வேளாவிக்கோ பதுமன் மகள் )பிறந்தவர்கள் .கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் இம்யவரம்பனின் இன்னொரு மனைவிக்குப் (சோழன் மகள் )பிறந்தவன்செல்வக்கடுங்கோவாழியாதனுக்கும்  வேளாவிக்கோமான் பெண் கொடுத்திருக்கிறான் .அவர்களுக்குப் பிறந்தவனே பெருஞ்சேரல் இரும்பொறை .அவர்களின் பேரனே இளஞ்சேரலிரும்பொறை .
 இவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 3தலைமுறையினர் ஆவர்என்பது வெளிப்படை .சேரர் குடியில் உதியன்மரபு ,இரும்பொறை மரபு என்ற இரண்டு மரபும் ஒத்த பெருமையுடன் இருந்தன.வேளாவிக்கோ இரண்டு மரபிற்கும் பெண் கொடுத்திருக்கிறான் .
இவர்களது காலத்தில் நிகழ்ந்த போர்களும் இவர்கள இருவரேனும் இணைந்து செய்தனவாகவே காணப்படுகின்றன.
இமயத்தில் விற்பொறித்த செய்தி இம்யவரம்பனுக்கும் ,கடல் பிறக்கோட்டியவேல்கெழு குட்டுவனுக்கும் ஒருசேர உரியதாகும்.(பதிற்று.-11,43)
கடற்கடம்பரை அடக்கிய செயலும் அப்படியே (11,17,20,41,45,46,48&அகம்.127,21)இரண்டுமே தந்தையும் மகனும் சேர்ந்து பெற்ற வெற்றிகள் .
கொங்கு வெற்றியும் உதியன் சேரலாதனுக்கும் ,பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியன.(3ம்பத்தின் பதிகம் ,பா.22,அகம்.169,233)  .    
உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்கு
பகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்.

நன்றி. அடுத்த மடலுக்குக் காத்திருக்கிறேன். சங்ககாலச் சேர மன்னர்கள் கல்வெட்டுகள் எங்கே கிடைத்துள்ளன?
ஆன்பொருனை காவேரியோடு சேரும் ஊரின் அருகிலே.

 
 NG<ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் பறநானூறு சுட்டவில்லை. 
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?>

புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து  பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இப்பாடல்களில் வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது தெளிவாகிறது .இந்த ஆன்பொருநை சுள்ளியம்பேரியாறு என்று ஆய்வாளர் பின்வருமாறு நிறுவுகின்றனர் 
பாலக்காட்டுக்கணவாய்க்குத்  தெற்கே இருந்த மேற்கு மலைத்தொடர்பொருப்பு என்று பெயர் பெற்றது .(எஸ் .கணபதிராமன் -பொருநை நாடு -ப.34)
பொருப்பிலிருந்து தோன்றி ஓடிய நதிகள் பொருநை என்னும் பொதுப்பெயரைப் பெற்றன .(அவ்வை .சு.துரைசாமிப்பிள்ளை -பண்டைநாளை ச் சேர மன்னர் வரலாறு -ப.20)
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.

இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?

கா/கான்,  கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.
வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),
அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.

ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.
ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.

உலகிலே யூனிகார்ன் தொன்மக்கதை சிந்து சமவெளியில் பிறந்தது.
இதற்கு ஆதாரம் மரை+ஆ/ஆன் = மரையான் (மரை = antelope, ஆ/ஆன் = cow (gau in Sanskrit) )
மரையான்/மரையா = Nilgai (https://en.wikipedia.org/wiki/Nilgai )
மரையான் என்னும் நீலகாய் பற்றியும், அதன் சிந்து தொடர்பு பற்றியும் நிறைய எழுதியுள்ளேன்.
பலருக்கும் சங்க இலக்கியம் பேசும் மரையா/மரையான் என்றால் என்ன என்றே தெரியாது. 1920களில் கூட
நீலகிரி மலைப்பகுதிகளில் இருந்தது. இப்போது தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது.
மைசூர்க்காடுகளில் சில தவிர. மரவி/மராவு - கன்னடத்தில் பெயர். கோண்டுகள் (Gonds) என்னும்
வட இந்தியா, ஆந்திராவில் வாழும் திராவிடமொழி பேசும் மக்களின் ஒரு குலம் மரையானால் தான்.
மராவி என்ற அக் கூட்டத்தின் பெயர். கொங்கர்களில் பல குலங்கள் ஒவ்வொன்றும் விலங்கு, பறவை,
தாவரப் பெயர்களால் அமைந்தவை. இதே போல, அமெரிக்காவில் செவ்விந்தியர் கூட்டப் பெயர்களும்
உண்டு. அந்தந்த குலத்தார் தங்க: Totemic symbol பொருளை உண்ணார்.

---------

Kanmani> புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து  பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .

இல்லை. இப்பாடல்களில் உள்ள ஆன்பொருனை நதியும், அதன் கரையில் இருந்த வஞ்சியும் கொங்குநாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கின்றன

தாமான்தோன்றி மலை:

தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up

    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே. புறநானூறு 399

  2. Jump up ஔவை சு. துரைசாமிப்பிள்ளை புறநானூறு 399 உரை
 
----------------

புறநானூறு 387-ஆம் பாட்டில் செல்வக் கடுங்கோ வழியாதனைப் பாடியது.
அதனில், வஞ்சி, ஆன்பொருனை வருகிறது.

கடுங்கோ வாழியாதன் பற்றிய தமிழ் பிராமி கல்வெட்டுகள்
ஆன்பொருனை கரூரின் ஆறு, கொங்குநாடு என உறுதி
செய்துவிட்டன. ஆனால், அக்கல்வெட்டுகள் (தமிழ் பிராமி)
படிக்கப்படுவதன் முன்னமே ஆன்பொருனை நதி
கொங்குநாட்டில் உள்ள் நதி என தெரிந்துவிட்டது.

387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்
கடுங்கோவாழியாதன்


30செல்வக் கடுங்கோ வாழி யாதன்
 என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35பல்லுார் சுற்றிய கழனி
 எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

     திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய 
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

புல்லிலை  வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத 
வஞ்சியாகிய  வஞ்கிமாநகரின்  மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை 
மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; 


இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை
வஞ்சிநகர்க்கண்மையிலோடும்   பொருநை  ஆன்பொருநை    யெனப்படும். 
கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், 
அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே 
நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6) 
என அடிகளும் உரைப்பது காண்க.

எனவே, வஞ்சி மாநகர் என்பதும் ஆன்பொருநைக் கரை என்பதும்
கொங்குநாட்டிலே தான் உண்டு. ஸம்மர் பேலஸ் என்பது போல,
நான்கு வஞ்சியில் மூன்று சிறு வஞ்சிகளாக இருக்கலாம்.
உ-ம்: ஆன்பொருனைக் கரையிலே உள்ள தாராபுரத்துக்கும்
வஞ்சி என்ற பெயர். சீவக சிந்தாமணி உடையார் திருத்தக்கதேவர் ஊர்
(பார்க்க: புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம். இந்த முக்கியமான
முனைவர் ஆய்வேட்டை நான் அச்சிட உதவினேன். இப்பொழுது
இரண்டாம் பதிப்பு NCBH வெளியிட்டுவிட்டது.)

நான்கு வஞ்சிகளில் மாநகர் என்று சேரர்கள் தலைநகரம் 
எனக் கல்வட்டுகள் குறிப்பது ஒன்றுதான்.
சங்க காலச் சேரர்களின் ப்ராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்துவிட்டன.
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் 
இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற 
பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநை யென்ற பெயரும், அதற்கு 
வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற 
பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர். எழுதிய “பண்டைநாளைச் 
சேரமன்னர்கள்” என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி 
யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்து. இடைக்காலத்தும்
கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை “வீரசோழ மண்டலத்து வெங்கால 
நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்” (A. R. No. 335 of 1927-28) 
என்பதனாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A. R. No. 146 of 1920) 
எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு 
காலத்தில் உண்டாகியது. 

வீரசோழிய உரையில் ஆன்பொருனை நதி எங்கே ஓடுகிறது என விளக்கியுள்ளனர்
ஆன் - பசு5
ஆன்பயம்386
ஆன்பொருநை - ஆன்பொருந்தமென்னும் நதி , இது கருவூர்க்கருகில் ஓடுவது1136387


புறனானூறு 36,
36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன் 
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் 
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய 
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய 
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி 
வெட்டுதலான்


உரை: ஆன்பொருந்தம்  இப்போது அமராவதி யென வழங்குகிறது. 


2017-10-29 7:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
Kanmani wrote:
>> இதையே  சுள்ளியம்பே ரியாறு   என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறது

ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் புறநானூறு சுட்டவில்லை.
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?

பேரியாறு மகோதை, அஞ்சைக்களம் என்னும் ஊர். இது வஞ்சைக்களம் என்று,
வஞ்சி என்றும் சிலர் எழுத முயன்றுள்ளனர். ஆனால், அஞ்சைக்களத்தருகே
எந்த ஆன்பொருநை நதியும் இல்லை. ஆன்பொருனை - பிற்காலத்தில் ஆன்பொருந்தம்
- இன்றைய அமராவதி ஆறு. அதன் கரையில் இருப்பது வஞ்சி மாநகர்.
சேரர்களின் தலைநகர் என்பதை வஞ்சி (கருவூரில்) கிடைத்த சேர மன்னர்கள்
கல்வெட்டுகளும், நாணயங்களும் நிரூபித்துவிட்டன. பார்க்க: ஐராவதம்
மகாதேவன், Early Tamil Epigraphy, 2003.

கோவையிலே செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழறிஞர்கள்,
தொல்லியல் அறிஞர்கள் எது சேரர்களின் மாநகர் வஞ்சி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அஞ்சைக்களத்தை வஞ்சி என்பது சரியாகாது. அங்கு உள்ள ஊர் முசிறிப் பட்டினம்.
இப்போதைய அகழ்வாய்வுகளைப் பாருங்கள். 1977 கே. வி. ராமன் புஸ்தகம்,
அதற்குப் பின்னர் பல செய்திகள் கிட்டிவிட்டன.

மதுரை வேறு, மணலூர் (பெருமணலூர், கீழடி) வேறு என்பது தெளிவு.
அதேபோல, சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்
- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்குநாட்டு ஊர்.

மதுரையை மணலூர் எனக் குழப்புவது போல, வஞ்சிக் கருவூரை
அஞ்சைக்களம் எனல் வேண்டா.

தொல்லியல் வரலாறு, சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் ஆன்பொருனை (ஆம்பிராவதி)
நதிக் கரை ஊராம் வஞ்சி என்னும் சங்கச் சேரர் தலைநகர் ஆகும்.

நா. கணேசன்

* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ”

* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.
*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.
* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.
· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.
* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது.
* புறநானூற்றில்(168 – 172) போற்றப்படும் பிட்டங்கொற்றனின் குதிரைமலை கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது.
* விளங்கு புகழ்க் கபிலனையும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய (புறம் 53) சங்கப்புலவர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊரான பொருந்தில் கொங்குப் பகுதியில் உள்ளது. இப்பொருந்திலின் சிறப்பு அண்மையில் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட- தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்ற-தொல்லியல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. இந்த அகழாய்வில் ஒருபானையில் 2 கிலோ நெல்மணிகள் கிடைத்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் சங்ககாலத்தைச் சார்ந்த செங்கற் கட்டுமானங்களும், கண்ணாடித் தொழிற்கூடங்களும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன.
* சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் (ஏழாம் பத்து) ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ எனக் குறிப்பிடப்படும் தொழிற்கூட ஊர் தற்போது சென்னிமலைக்கருகில் கொடுமணல் என்னும் பெயரில் உள்ளது. இப்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய அகழாய்வில் ஈமச்சின்னங்களில் ஏராளமான கல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட்கள், பானைக்குறியீடுகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடப்பகுதியில் அகழாய்வு செய்தபோது இரும்பு உருக்குலைகள், கல்மணித் தொழிற்கூடங்கள் ஆகியன இருந்தமைக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
* நன்னூலை இயற்றிய சமணப்புலவர் பவணந்தி அடிகள் வாழ்ந்த தற்போதைய சீனாபுரம் (ஜீனர் புரம் > சமணர் புரம்) என்னும் ஊரும் அதற்கருகில் உள்ள சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் வாழ்ந்த நிரம்பையும், சமணக்காப்பியமான பெருங்கதையை உருவாக்கிய கொங்குவேள் வாழ்ந்த விசயமங்கலமும் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளன.
* இரும்புக்கால ஈமச்சின்னங்கள் கல்வட்டங்களாகவும் கற்குவியல்களாகவும் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் கொங்குப்பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேலைக்கடற்கரைப் பகுதிகளோடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளலூர், சாவடிப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிடைத்த உரோமானியக் காசுகள் இவற்றை உறுதிசெய்கின்றன.
* தமிழகம் உரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத்திற்கான உறுதியான சான்றுகள் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ளன. அதாவது, இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் கொங்குப் பகுதியில்தாம் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
* சங்க இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் சேரமன்னர்களின் மரபை இலக்கியத்தில் சுட்டியவாறு அறுதியிட்டு உரைக்கும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள புகளூரும் இந்தியாவிலேயே இசைக்குறிப்பைத் தரும் காலத்தால் முற்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள அறச்சலூர் என்னும் ஊரும் கொங்குப் பகுதியில் உள்ளன.
* கோவைக்கு அருகிலுள்ள பேரூர், போளுவாம்பட்டி என்னுமிடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வுகள் சங்ககாலத்தைச் சார்ந்த பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலான பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், இரும்புக்காலப் பானைக்குறியீடுகள் போன்ற தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
* கொங்குப் பகுதியான சூலூர் என்னுமிடத்தில் கிடைத்துள்ள முத்திரை நாணயங்கள் சங்ககாலத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்கின்றன. மேலும் இவ்வூரில் கிடைத்த சங்ககால மண் அகலில் காணப்பெறும் குறியீடு ஒன்று சிந்துவெளி நாகரிகக் குறியீட்டினை ஒத்துள்ளதாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.
* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சங்க இலக்கியம் குறிப்பிடும் தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளுக்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. 

2017-10-28 5:56 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
ல் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்
சான்றுகள் தாருங்கள். >.
இன்று மதுரையை ஒட்டி ஓடும் வைகையில் கணுக்கால் அளவேனும் நீர் ஓடக் காரணமான பெரியாறே பேரியாறு ஆகும் .இதையே  சுள்ளியம்பே ரியாறு   என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறது.இளங்கோவடிகள் பேரியாறு  என்றே சுட்டுகிறார் இந்த ஆறு கடலோடு கலந்த இடத்தை நாம் கண்டுபிடித்தால் மேலைக் கடற்கரை வஞ்சியை அடையாளம் காட்டி விடலாம் .  
பண்டைய மேலைக் கடற்கரை இன்றைய மேலைக் கடற்கரையினின்றும் 6அல்லது 7கல் கிழக்கே முற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பதை 
 வி.கனகசபைப்பிள்ளை தனது ஆய்வேட்டில் நிறுவியுள்ளார் .(the tamils1800 years ago)
மேனாட்டு நிலவியலார் கூறும் கடற்கரைப்பட்டினங்கள்  துணையோடு தன கருத்தை வலுப்படுத்துகிறார் .
அதே கருத்தை ஜார்ஜ்வூட் காக் நிலத்தின் தன்மையும் வேறுபாடும் கொண்டு நிலைநாட்டுகிறார் .(kerala-a portrait of the malabar coast)
இன்றுள்ள கொல்லம் 8ம் நூற்றா ண்டிலும் ,கோழிக்கோடு 13ம்.நூற்றா ண்டிலும் ,கொச்சி 14ம் நூற்றா ண்டிலும் புதிதாகத் தோன்றிய துறைமுகங்கள் என்று செ.கோவிந்தன் எடுத்துக் காட்டியுள்ளார் .(சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களும் கடல் வாணிபமும் -இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் -4வது கருத்தரங்கு மலர் -ப.589)
வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளங்களால் மேலைக் கடற்கரை மேலும்  மாற்றம் பெற்றது.14ம்.நூற்றா ண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால்கொடுங்கோளூர் துறைமுகம் அழிந்தது .அப்பொழுது தான் வைப்புத்தீவும் தோன்றியது.அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் அழிக்கும் பெரியாற்றுக்கும் இடையே கழி இருந்ததெனினும் அதற்கு பெரியாற்றின்  ஒரு  பாகமாகக் கருதத்தக்க பரப்பே இருந்ததென periplus of the erythrean seaகூறும் குறிப்புகளை வைத்து இளங்குளம்.குஞ்ஞன்பிள்ளை நிறுவுகிறார் .
இத்தனை மாற்றங்களும் நிகழ்ந்த மேலைக்கடற்கரையில் வஞ்சியைத் தேடிக் காண்பது தான் நமக்கிருக்கும் சவால்.         
அடியார்க்கு நல்லார் மேலைக் கடற்கரையில் உள்ள கொடுங்கல்லூரை வஞ்சி   என்று கூறுவதை உ.வே.சாமிநாதையர்,எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (சேரன் வஞ்சி),சி.எஸ்.செலுவ ஐயர் (vanjimanagar or thegreat city called vanji-annals of oriental research),துடிசைக்கிழார் .அ .சிதம்பரனார் (திருவஞ்சைக்களம்-செந்தமிழ்ச் செல்வி -சிலம்பு-14),தா.பொன்னம்பலம் பிள்ளை (செந்தமிழ்-தொகுதி-2-பகுதி-5,6),தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஆகிய அனைவரும் ஆமோதிக்கின்றனர் .ஆனால் அங்கு அகழ்வாய்வு நிகழ்த்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கி.பி.8ம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்ட எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர் . 
இங்கு தான் நமக்கு இலக்கியம் கைகொடுக்கிறது .ஏனெனில் மேனாட்டு நிலவியலார் கடலிலிருந்து மிளகு ப் பொதிகளை படகுகளில் ஏற்றி கழியைக் கடந்து முசிறியை  அடைந்துள்ளனர் .அதன் அருகில் சேரபோத் ராசின் தலைநகர் இருந்தது என்கின்றனர் .ஆனால் கடற்கரையோ மிகுந்த மாற்றம் பெற்று விட்டது .நிலப்பகுதியிலும் பெரிய்ய்ய கழி உருவாகி விட்டது .காரணகாரியத் தொடர்போடு சிந்தித்தால் சங்ககால வஞ்சி கழிக்குள்ளே இருக்க வேண்டும் என்றும் புரிகிறது .இடைக்கழி நாட்டு நல்லூர்  நத்தத்தனார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் .
"வருபுனல் வாயில் வஞ்சி "என்கிறார் .
வாயில் என்னும் பொருளை உடைய "புழை" என்னும் பின்னொட்டோடு இன்றும் கேரளத்தின் இடப்பெயர்கள் வழங்குகின்றன.ஆறு கடலோடு கலக்கும் இடத்தை பண்டு வாயில் என்று வழங்கியவர்கள் இன்று அதே பொருளை உடைய புழை என்னும் சொல்லால் அழைக்கின்றனர் .
இன்று பெரியாறு கடலோடு கலந்த இடத்தை நினைவூட்டுவதாக அகலப்புழை என்ற பெயரில் ஓரிடம் வழங்குகிறது .மேற்கரை வஞ்சியை அகழ்வாய்வு மூலம் காண இயலாது என்றும் அதன் காரணத்தையும் தொல்லியல் ஆய்வாளரும்  கூறுகின்றனர் .(கே.வி.இராமன் -தொல்லியல் ஆய்வுகள் )
கண்மணி      

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


N. Ganesan

unread,
Nov 3, 2017, 12:15:56 AM11/3/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

வஞ்சி - தாவரங்கள்
--------------

(1) வஞ்சி மரம் : Salix tetrasperma. (Gamble (1928), Lushington (1915) )
Also, known as Indian Willow tree.
பூக்கள் முதிரும்போது வாகை மலர்கள் போல வெண்மையும்
துய் பஞ்சு ஆகவும் இருக்கும். இதனை வீரர்கள் சூடினர். வஞ்சித்துறை.
வஞ்சி மாநகரை ‘வாடாவஞ்சி’ என்கிறார் இளங்கோ அடிகள்.

(2)  ஆத்து வஞ்சி, நீர்வஞ்சி Ochreinauclea Missionis

#GSCC Fieldwork Fund. JNTBGRI collecting seed of Ochreinauclea missionis. Endemic to the Western Ghats and Vulnerable on the IUCN Red List

(2) வஞ்சி - புதர் (பிரம்பு) = வானீரம்
புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும் - பிங்கலந்தை.

(3) வஞ்சிக் கொடி, வஞ்சுளம். 
வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,
வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறை
வரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.
‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’

வஞ்சி Tinospora Cardifolia, Miers.; Menispermaceae. 

வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்:
தலமர சிறப்புகள்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.. உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

வஞ்சிக்கொடி:
கொழுநனைத் தழுவும் கொடி போல,

வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora_cordifolia தான்,
பிரப்பங்கொடி (Calamus_rotang, ரத்தன்) என்னும் முள்புதர் அல்ல என்று காட்டுவது
வஞ்சி மாநகர் ஆன்நிலை அப்பர் கோவிலின் தலத் தாவரம் ஆகும்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா:
வஞ்சி என்னும் பாவினம் வஞ்சிக்கொடிபோல வளைந்து வளைந்து செல்லுமோ?

MTL:
"நாகினி nākiṉi, n. < nāginī. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Common rattan of South India. See வஞ்சிக்கொடி. (மலை.)"
நாகம் போல வளைந்து, வளைந்து செல்வது வெற்றிலையும், அமிர்தவல்லி (வஞ்சிக்கொடி = Tinospora_cordifolia) ஆகும்.
Madras Tamil Lexicon giving nAgini as Common rattan of South India is wrong.
வெற்றிலையும், அமிர்தவல்லிக் கொடியிலையும் ஒப்புமை காண்க.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Nov 4, 2017, 2:18:34 PM11/4/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, Nov 3, 2017 at 8:06 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
வஞ்சிமாநகரம் 
(சரித்திர நாவல்)
ஆசிரியர்: நா. பார்த்தசாரதி

 

On Friday, November 3, 2017 at 8:06:55 PM UTC-7, தேமொழி wrote:
வஞ்சிமாநகரம் 
(சரித்திர நாவல்)
ஆசிரியர்: நா. பார்த்தசாரதி

    வஞ்சிமாநகரம் (சரித்திர நாவல்)

    1. மகோதைக் கரையிலே ...

    பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பெளர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக் கூட அந்தச் சங்கமத்துறையே படைத்துக் கொடுத்தது.

அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானியாற்றின் கரையோரமாகவே சென்றால் சேரநாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளுரை அடைந்து விடலாம். கரையோரமாகத் தென்மேற்கே பத்து நாழிகைப் பயணத்தில் வஞ்சிமாநகரம் இருந்தது. ”

 
பொன்வானி ஆறு கடலில் கலக்கும் கழிமுகம் பொன்னானி. இது ஓர் கடற்கரைத்தாலூக்கா. பொன்வானி/பொன்னானி ஆற்றுக்கு வடமொழி நூல்களில்
பூர்ணவாஹினீ என்று பெயர். இந்தப் பூர்ணா நதிக்கரையிலே தான் ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். 
இப்போது பாரதப்புழா ஆறு என்று இந்தப் பெரிய ஆறு அழைக்கப்படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை அருகே ஆனைமலைத் தொடர்களில் தோன்றி, பாலக்காட்டுக்
கணவாய்க்கு நட்டநடுவே ஓடி பொள்ளாச்சி (பொழில்வாய்ச்சி), பாலைகாடு, ஷொரனூர், ... பாய்ந்து வளம்பெருக்கி பொன்னானியை அடைந்து
கடலில் கலக்கிறது. https://en.wikipedia.org/wiki/Bharathappuzha
பூர்ணா (பொன்வானி/பொன்னானி = பூர்ணவாஹிநீ) கரையிலே
கரிஞ்சம் எனப்படும் க்ரௌஞ்சம் (அன்றில்) பறவைகள்: http://markazhi.com/?p=3656
Inline image 1


ஆனால்,
மகோதை, அஞ்சைக்களம், முசிறி என்னும் பழங்கால ஊர்களுக்கு
அருகே ஓடுவது சுள்ளியம்பேரியாறு. வடமொழி நூல்களிலே 
சூர்ணீ என்று அழைக்கப்படும் ஆறு. 
பரம்பிக்குளம் ஆறு இந்த சாலக்குடி ஆற்றின் உபநதி தான்.

சுள்ளியம்பேரியாறு = https://en.wikipedia.org/wiki/Periyar_(river) இன்று பெரியாறு. 
சுள்ளி என்பது ஒருவகைச் சூரல் புதை. நொய்யல் ஓடும் கரையிலே
சூரல் கொடி இருப்பதால் சூரலூர் (=சூலூர்) ஆனது. 
சுள்ளியாற்றை சூர்ணீ என்பது அதனால் தான்.
கொங்குவேளிர், பெருங்கதை:

வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும் - உஞ்ஞை 46/276
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை 50/27

இதே சுள்ளிச் செடிகள் இருப்பதால், வடக்கே வங்காளத்திலும்
சூர்ணி ஆறு உண்டு: https://en.wikipedia.org/wiki/Churni_River


முசிரிப் பட்டினம்: (மகோதை, அஞ்ஞைக்களம்/அஞ்சைக்களம்):




மகோதை, முசிறி, அஞ்சைக்களம் என்னும் பழைய ஊர்கள், சூர்ணீ (சுள்ளியம்பேரியாறு) கரையிலே இருப்பவை.

------------------------------------------

சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் கரையிலே.
கருவூர் = (அகநகர், downtown). 

முசிறி, மகோதை, அஞ்சைக்களம் பகுதியில்
வஞ்சி மாநகரம் இருந்ததாக எந்த சங்க இலக்கியமோ,
தமிழ் (அல்லது, வடமொழி) கல்வெட்டுக்களோ இல்லை.

சில சான்றுகள்:

கொங்கர்கோன் ... கொல்லி காவலன் - குலசேகர ஆழ்வார்

சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு - அருணகிரிநாதர்

பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன்
சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்:

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப்
தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன்.

----

வீரசோழ மண்டலத்து வெங்காலநாட்டு
வஞ்சி மாநகரமான கருவூர்
    - கொங்குச்சேரன் குலோத்துங்கசோழதேவன், 13-ஆம் ஆண்டு.
    (M.E.R. 335 of 19278)

"வீரகேரள மண்டலத்துத் திருவஞ்சிமாநகரமான
 முடிவழங்கு சோழபுரத்து” (Mackenzie's Misc. கருவூர்ச் சாஸனங்கள்)
“வஞ்சி ஸ்ரீவைஷ்ணவரோம்” (கருவூர் பெருமாள் கோயில் கல்வெட்டு)
“கொங்கு வஞ்சி”  (Epigraphica India,Vol. xvii, p. 298)
“கருவூர் வஞ்சி மாநகரமான முடிவழங்கு சோழபுரத்து” (பிரான்மலைச் சாஸனம், SII, Vol. viii, No. 441)

சங்க காலத்தின் பின்னரும், முசிரி, முயிரிக்கோடு என்று தான் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
முயிரிக்கோட்டு அஞ்சுவண்ணம், 
‘கோசிரீ பாற்கர இரவிவர்மன் திருவடி ... முயிரிக்கோட்டு இருந்தருளிய நாள்’ (Ep. Ind. iii, p. 68)
வஞ்சி, கருவூர் என்றெல்லாம் ஒரு கல்வெட்டும் அங்கே இல்லை. ஆவணங்களும் இல்லை.
மகோதைப் பட்டினத்தின் கோயில் அஞ்சைக்களம் (தேவாரம்).

சேரர் வஞ்சி (கரூர்), மகோதையும் வெவ்வேறு ஊர்கள் எனப் பிற்கால இலக்கியங்களும்
தெளிவுறுத்துகின்றன:
“வஞ்சியை விட்டகல் அஞ்சிய கோதை மகோதை” (தக்கயாகப் பரணி)

“வஞ்சியும் உறந்தையும் மரந்தையும் மகோதையும்” (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்)

“வஞ்சிக்கும் ஓதை மகோதைக்கும் மாமதுரை இஞ்சிக்கும்” (சங்கர சோழன் உலா).


ஆன்பொருநைக் கரையில் வஞ்சி மாநகரம்:
பார்க்க: சங்க இலக்கியங்கள்.
Inline image 2

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 8, 2017, 8:31:31 AM11/8/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2017-11-05 6:43 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
உறையூரிலிருந்த ஒரு பட்டத்துயானை மதம்பிடித்து வஞ்சிநகருள் புகுந்துவிட்டதாக ஒரு சங்கப்பாடல் வாசித்த நினைவு.

அகநானூற்றுப் பாடல். ஏட்டில் இருந்த போதே - பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை (இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ்) போன்றோரிடம்
ஏடுகள் பெற்று அகநானூற்றைப் பதிப்பித்த - ரா. ராகவையங்கார் இது ஆன்பொருனைக் கரையில் உள்ள
வஞ்சி என எழுதிவிட்டார்கள். மு. ராகவையங்காருக்கும் இப்பாடலைத் தந்தவர் அவரே. சேரர்களின் தலைமை
ஸ்தானம் இந்த ஆதி வஞ்சி தான் என்பதைத் தொல்லியல் சான்றுகள் ஐயந்திரிபற நிறுவிவிட்டன.
இன்னும் தமிழ்க் கட்டுரைகளில் அச் செய்திகள் வருவதில்லை. 

அருகருகே இருக்கும் உறந்தையையும், வஞ்சி மாநகரையும் சேர்த்தே பாடுதல் சங்க இலக்கிய மரபு.
மதுரை பாண்டியன் அரண்மனை (இப்போதைய மீனாட்சி கோயில்) வைகைக்குத் தென்கரையில்.
அதன் அமைப்பு தாமரைப் பூ என்று சொல்லும் பரிபாடல் பாட்டில்:  ’வாழிய வஞ்சியும் கோழியும் போல’

வஞ்சி, உறந்தை - இரு ஊர்களின் திருவிழாக்கள்.
சேரர்களின் தலைநகர் வஞ்சி மாநகரில் ஆற்றங்கரை பெரிது. அங்கே ஹோளி திருவிழா. உள்ளி/ஊளி
திருவிழாவுக்கு சங்க காலத்தில் தமிழர்கள் எல்லாரும் அறிந்த திருவிழா 
Like the famous Carnival in New Orleans, Louisiana. https://en.wikipedia.org/wiki/Carnival

  சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது 
    
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் 
    
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் 
    
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே 
5
அஃதான்று, 
    
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 
    
கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் 
    
பங்குனி விழவின் உறந்தையொடு 
    
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. 
 


NG

 
5 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:34 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


2017-11-04 15:36 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, November 4, 2017 at 3:03:32 PM UTC-7, N. Ganesan wrote:


2017-11-04 14:54 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, November 4, 2017 at 2:43:38 PM UTC-7, N. Ganesan wrote:


2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.
வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.

உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.
உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.
அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.

வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.


வஞ்சி என்பது வளநாடு போன்றவையா என்பது ஒரு லாங் ஷாட் அவ்வளவுதான்.

"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" காவிரி  வடகரை வஞ்சி என்பதுதான் எனக்கு கேள்வியாக இருப்பது.


Look at the next line in the saasanam grant.

 பாண்டியராசா காவேரி வடகரையில் பாடிவீடு அமைத்துத் தங்கியுள்ளான். அவனது வீரர்கள் அங்கே தங்கியுள்ளனர்.

வஞ்சி மாநகரில் சேரனைப் பணியச் சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான். அத்தோடு, சேரர் படையை
பொன்னி வடகரையிலே தங்கியுள்ள பாண்டியனை எதிர்க்க அங்கே செல்கிறான். போர் நடக்கிறது.


பாடலில் காற்புள்ளியை  எங்கு போட்டு பொருள் கொள்ளுவது என்பதில் இருக்கிறது.

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற், பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

என்பது கரூர் தென்கரையில் இருப்பதால், பாட்டின் பொருளுக்கு ஏற்றவாறு 'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்' என்று பிரசஸ்தியாசிரியர் "கருதுவதாக" எம். ராகவாயங்கார் குறிப்பிடுகிறார். 

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி,
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

நான் பாடி தங்கிய பாண்டியன் வடகரையில் இருந்தான் என்பதைத் ஊகம் செய்யாமல் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ்  இருந்த மதில்வஞ்சி என்று காவிரியின் வடகரையில் வஞ்சி இருந்திருக்கலாம் என்கிறேன். 


எப்பொழுதும் பழைய பாடல்களைப் படித்து வாழ்நாள் முழுதும் ஆராய்ந்த மு. ராகவையங்கார் போன்ற தமிழின் பேராசிரியர்கள் பொருளுணர முக்கியமானவர்கள்.
ஆன்பொருனை வடகரையிலே உள்ளது வஞ்சி (கருவூர்). காவிரி வடகரையிலே இருந்து அடிபணிய வஞ்சி மாநகரத்து சேரர் அரண்மனைக்குச் செய்தி அனுப்புகிறான்
பாண்டியமன்னன். அதனை மதியாது, தன் கொங்கப்படையை அனுப்புகிறான் பாண்டிப் படைகளை எதிர்கொள்ள என்பது சின்னமனூர்ப் தாம்ர சாசனம் தரும் சேதி.

சங்க இலக்கியத்தில் , சிலப்பதிகாரத்தில் (இளங்கோ அடிகளின் ஊர்!) ஆன்பொருனைக் கரையில் வஞ்சி மாநகர் இருந்தது என்றுதான் உள்ளது.
காவேரி வடகரையில் வஞ்சி (கருவூர்) இல்லை. எனவே, எந்த சாசனமும் அவ்வாறு சொல்வதும் இல்லை.

ஆன்பொருந்தக் கரையினில் வஞ்சி மாநகரம்:
Inline image 1


நா.கணேசன்
 
'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்'  என்பதற்கு இந்தக் கருதுகோளைத் தவிர வேறேதுவும் குறிப்புகள் உள்ளனவா?


..... தேமொழி


 

NG
 
..... தேமொழி  


 

நா. கணேசன்


 
.... தேமொழி

--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 15, 2017, 12:46:04 AM11/15/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2017-11-14 2:17 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<இளங்கோ அடிகள் .................................................................................................................. பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.>

பதிற்றுப்பத்து கூறும் அடிப்படைக் கருத்துகள் பத்தினை தொகுத்துக் கொடுத்திருந்தேன் .அவற்றின் வன்மை மென்மை பற்றிப் பேசி முடித்த பிறகு தான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா ?இரண்டு வஞ்சிகளா ?என்று முடிவு செய்ய இயலும் என்றும் கூறியிருந்தேன்.ஆனாலும் உங்களது முந்தைய மடற்கருத்தில் எனக்கு ஒரு ஐயம் .தீர்த்து வையுங்கள்.
பராசரன் அனந்தை சென்றது பற்றி மூலநூற் குறிப்பு எதுவும் கிடையாது.
 அவன் சேரனிடம் பரிசில் பெற்ற பிறகு சோணாடு திரும்பியதாகத் தான் குறிப்பு உள்ளது.  
திரும்பும் வழியில் நடை வருத்தம் தீர தங்காலின்  போதித்தானத்தில் அமர்ந்து இளைப்பாறினான் .-இது கதை .

பொதியில் மலையைத் தாண்டிச் செல்கிறான் என்கிறது சிலம்பு.
பொதியில் அடிவாரத்தில் என்றும் பார்ப்பனர்கள் வேத வேள்வி செய்துகொண்டே இருக்கிறார்கள்
என்பது புறநானூற்றுக்காலத்தில் இருந்து இன்றுவரை உண்டு.

திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்

காடும் நாடும் ஊரும் போகி 65

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு


மலயம் = பொதியில். பாரதத்தின் குலபர்வதங்கள் ஏழு.
அதனுள் ஒன்று பொதிகை என்னும் மலயம்.
பொதிகைப் பொருப்பை துவஜமாகக் கொண்டவன் பாண்டியன்.
அதனால் பாண்டியராசாவுக்கு மலயத்வஜர் என்ற பட்டம் உண்டு.
மீனாட்சி மலயத்வஜ பாண்டியராஜ தனயை.


திருவனந்தபுரம் என்று நான் குறிப்பிடக் காரணமானது காந்தளூர்சாலை போன்ற படைவீரர் கல்லூரிகள்.
விழிஞம், அனந்தை, காந்தளூர்ச் சாலை போன்ற இடங்களில் சுங்கம் வசூலிக்க சேர இளவரசர் இருந்திருக்கலாம்.
சேர அரசனும் வஞ்சி மாநகர் (இன்றைய கரூர்) நீங்கி படைவளம் காண அங்கே முகாம் இருந்திருக்கலாம்/
சூர்ணி (சுள்ளிப்பேரியாறு) கரையில் இருப்பது பூர்ணத்ரயீசாலை - முவ்வேதங்களும் முழங்கும் சாலை.
கொடுங்கோளூர், அஞ்சைக்களத்தில். 

அனந்தை போன்ற ஊரில் புறப்பட்டு தங்கால் என்னும் ஊர் வழியாகத் தன் ஊர் திரும்புகிறான் நான்மறைப் பார்ப்பனன்.
அனந்தை அரசர் 15-ஆம் நூற்றாண்டின் பின்னர் வஞ்சி பூபாலர் என அழைக்கப்படுகின்றனர்.

10-15 பக்கக் கட்டுரை ’வஞ்சி மாநகர்’ பற்றி எழுதித் தருகிறேன். சேரர் ஆட்சி மேற்கே இருந்து கிழக்கே
பரவியது என்பதற்கு சங்க இலக்கியத்திலோ, தொல்லியல் சான்றுகளிலோ (நாணயங்கள்),
தமிழ் ப்ராமி கல்வெட்டுகளிலோ சான்றுகள் இல்லை. ஆனால், கிழக்கே இருந்து மேற்கே நகர்ந்தது
காலப்போக்கில் என்பதற்கு மறுக்கவியலாச் சான்றுகள் சங்க காலத்தில் நிரம்ப உள.

உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன்

பாண்டியனைப் பற்றிய அழகான வெண்பா - முத்தொள்ளாயிரம்.

வினைபற்றிய சிலேடை அவநுதி

எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'

இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.


இந்த வெண்பாவின் அழகை இதுபோன்ற உரைகள் காட்டுவதில்லை.
சங்கச் சேரர்கள் வஞ்சி மாநகரம் உறந்தை அருகே இருக்கிறது.
அவர்களுக்கு நறவு, முசிறி, தொண்டி துறைமுகங்கள் மேலைக்கடற்கரையில் உள்ளது.
இதனைச் சுருக்கி நறவு என்ற துறைமுகம் மாத்திரம் குறிக்கிறார் புலவர்.
வஞ்சி (கரூர்) - நறவு தொலைவு அதிகமில்லாத சிறிய நாட்டான் சேரன்.
தமிழகத்தின் ஐந்துமண்டலங்களும் ஆளும் பேரரசன் பாண்டியன்
என்பது உள்ளுறையும் குறிப்பு. இரண்டு ஊருக்கும், 5 மண்டிலங்களுக்கும்
வேறுபாடு வெளிப்படை. பாலும் தெளிதேனும் ... ஔவை வெண்பா
பற்றி கிவாஜ: நான் நாலுபொருள் தருகிறேன், நீ மூன்று தமிழ் தா என்கிறாளாம்
ஔவை. குழந்தையர் விளையாட்டில் காணுவதைக் கவிதை ஆக்கியுள்ளாள்.
அதுபோல் இது.

சேரர் பாண்டியர்க்கு அடங்கினோர் என்பது வான்மீகம். பின்னாளில்
சோழர்க்கு (உ-ம்: ராஜராஜன்) அடங்கினார். ஆனால் ஆதி வஞ்சி
கரூர். அகம் 93. கருவூர் வஞ்சி முற்றம் (கிள்ளிவளவன் காலம்)
உறையூர்ப் போர் - இரண்டு புறப்பாடல் ஒரே போரைப் பாடியுள்ளன.
பெரும்போராக இருந்திருக்கும். கிள்ளி ஜெயித்தான்.


சோழ நாட்டைத் தாயகமாகக் கொண்ட பராசரன்; தன் பாண்டித்தியத்தைக் காட்டி, பார்ப்பனவாகை சூட சேரன் தலைநகரை  (நீங்கள் சொல்லும் கொங்கு வஞ்சி ) விட்டுவிட்டு சேர புத்திரர் சுங்கம் வசூலிக்கத் தங்கியிருக்கும் மேலைக் கடற்கரைக்குச் (நீங்கள் சொன்ன விளக்கம்)சென்றான் என்பது எந்த வகையில் நோக்கினாலும் வலிந்து சொல்லும் விளக்கமாகிறது.
மேலைக் கடற்கரை தான் சேர நாடு .கொங்கு நாடு ஒரு buffer territory.(தமிழில் ----???)
சோழப் பேரரசுக் காலத்தில் அது சோழ நாடு .
2ம்.பாண்டியப் பேரரசுக் காலத்தில் அது பாண்டிநாடு .
சங்க காலத்தில் சேரரின் கை ஓங்கியிருந்தமைக்கு பதிற்றுப்பத்தே சான்று .
கொங்கு நாடு என்பது நிலவியல்அடிப்படையில்அமைந்த   பெயர்.
கொங்கு என்பதற்கு கிழக்கு என்பது பொருள் என நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் .

கொங்கு என்பது மலைவளம் சார்ந்த நாடு. எனவே, தேன், பூந்தாது எனப் பொருள்.
என் வலைச்சுவடியிலே கூட பல ஆண்டு முன்னரே கொங்கு என்பது பற்றித்
தலைப்பில் சொல்லியுள்ளேன். http://nganesan.blogspot.com
கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.

 
நான் கிழக்கு என்று குறிப்பிட்டது குணக்கு, கொண்டல் என்பதால்  North East Monsoon பெயரான கொண்கமழை, கொங்கமழை.
சென்னை போன்ற வடவயின் தோன்றும் கொண்கமழை கொங்குநாட்டிற்கு வருகிறது. ஆனால், கோடைமழை போல அடைமழை
அல்ல. இதனை அவ்விழையில் விரிவாக சொல்லியுள்ளேன்.

தொண்டி யாவக தீவில் இருந்து வெள்ளீயம், யாமரம் (சாலம்), அதன் விளைபொருள்கள் வந்ததை சிலம்பு 
உரைக்கிறார். இளங்கோ அடிகள் காலம் தென்கிழக்கு ஆசியாவுக்கு இந்தியர்கள் அகஸ்தியர் கதைகளைக் கொண்டுசென்ற
காலம். அகத்தியர் புராணங்கள் பலவும் சிலம்பில்தான் முதன்முதலாகக் காண்கிறோம். சங்க இலக்கியத்தில்
மலயமுனி வெறும் Canopus நக்ஷத்ரமே. கிழக்கே உள்ள தொண்டி துறைமுகம் - யாவக தீவு தொடர்புகள்:

பிற பின், (for example, what are the 4 Vanji-s, referred to by Tiruchengode Ashtavadhanam Muthusamy Konar in Tamizppozil jl. as mentioned in Themozhi's mail.)
நா. கணேசன்

எந்த நாட்டிற்குக் கிழக்கே கொங்கு இருக்கிறது ?
 சேர நாட்டிற்கு --கொங்கு நாடு அப்பெயர் பெறக் காரணமே சேரநாடு தான்.(பருவ மழை கொங்க் மாய் என்று பெயர் பெற்ற காரணமும் இதனால் முரண்படவில்லை .) 
பராசரன் கதையில் சிலப்பதிகாரத்தின் காலத்திற்கே வெளிச்சம் கிடைப்பதை இங்கே பேசவேண்டாம்.
கண்மணி 

2017-11-11 15:14 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, November 11, 2017 at 1:40:20 AM UTC-8, தேமொழி wrote:


On Monday, October 23, 2017 at 3:34:48 AM UTC-7, kanmanitamilskc wrote:
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",

"நாலுவஞ்சி  சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )

///தி.வை.சதாசிவ பண்டாரத்தார் 
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும் 
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", //// 

கண்மணியின் பார்வைக்கு ஒரு கட்டுரை:

ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார், 
தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932

 கடைசி பக்கம்...பார்க்கவும். 



"கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"

என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்] 

..... தேமொழி 


ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
 1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில்  தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர்  என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம்  நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி  பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 16, 2017, 11:07:36 AM11/16/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-11-16 3:02 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

NG> பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.

இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?

கா/கான்,  கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.
வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),
அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.

ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.
ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>

பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.

 சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர் 
.
பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .
அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)


கண்மணி > 
கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப்  பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)

மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை  நினைவாகவே அதையும்  ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.    
சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )
கண்மணி   


பொருனை என்ற நதியோ, ஆன்பொருனை என்ற நதியோ கேரளாவில் எப்பொழுதும் எங்கும் ஓடியதில்லை.
எந்த இலக்கியத்தில், கல்வெட்டில் பொருனை (அ) ஆன்பொருனை கேரள மாநிலத்தில் ஓடியது என்பதற்கான சான்று
காட்டுகிறது என அறிய விழைகிறேன். இருந்தால் தாருங்கள்.

ஆன்பொருனை ஆன்பொருந்தக் கரையில் உள்ள வஞ்சி மாநகரம் இன்றைய கரூர்.
மேற்குக் கடற்கரைக்கு ஆன்பொருனை சென்று கலந்ததாகவோ, அக் கழிமுகத்தில்
வஞ்சி மாநகரம் இருந்ததாகவோ இலக்கிய (உ-ம்: சங்கம்), கல்வெட்டு, தொல்லியல்
சான்றுகள் ஏதுமில்லை. ஆன்பொருனைக் கரையில் வஞ்சி மாநகர், பின்னர் சிந்தாமணி இயற்றிய
காலத்தில் பெருவஞ்சி (தாராபுரம்) இருந்தன. சேலம், மூலனூர் - வஞ்சி என்ற பெயர் உண்டு.
சேலம் தவிர மற்ற ஊர்களில் வஞ்சியம்மன் திருக்கோயில்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன.
கொங்கு நிலவியலை அறிய கோவை வந்தால், நாம் அங்கே போய்ப் பார்க்கலாம்.
தொல்லியல் அறிஞர்கள் புலவர் செ. ராசு. ர. பூங்குன்றன், கா. ராஜன், துரை. சுந்தரம்,
பிஎஸ்ஜி கல்லூரி ரவி (துரை சுந்தரத்தின் கல்வெட்டாசான்), ... அழைப்போம்.
கிறிஸ்துமஸ் - பொங்கல் முடிய கோவையில் இருப்பேன்.

மு. ராகவையங்கார் வஞ்சி மேலைக் கடற்கரையில் என எழுதினார் என்றீர்கள்.
அவ்வாறு அவர் செய்யவில்லை. வஞ்சி - சங்க காலச் சேரர் மாநகர் ஆன்பொருனைக்
கரையில் உள்ள ஆன்நிலை அப்பன் வாழும் கருவூர் என்றெழுதினார் என தகவல்
குறிப்பிட்டேன்.

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.
வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை என
எழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா? அதுபோல தான் ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள். சான்றுகள்
இல்லாத கூற்றுகள் அவை.

வஞ்சிக் கருவூர் பற்றி இரா. கிருஷ்ணமூர்த்தி, நாகசாமி, ஐராவதம் நூல்களையும்
நீங்கள் வாசித்தால் தொல்லியலாளர் வஞ்சி என்பது கருவூர் எனக் காட்டுவது 
அறியலாகும்.

It is 20th century Tamil Nadu politics that sustained Vanji as on the west coast in Sangam times.
What was on the west coast was only Musiri (Musiris in Yavana texts) pattinam, we don't
hear of any Vanji city on the west seashore in Sangam texts at all. No inscriptions in Brahmi
to say Cheras' capital was Musiri, it was just a toll gate in the port. The capital was in Vanji Karur,
inland according to Greeks.

N. Ganesan

N. Ganesan

unread,
Nov 20, 2017, 9:28:09 AM11/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2017-11-19 21:44 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, November 19, 2017 at 9:02:31 PM UTC-8, N. Ganesan wrote:


                                                                                      < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>

On Thursday, November 16, 2017 at 10:01:01 AM UTC-8, kanmanitamilskc wrote: 
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?
கண்மணி 


கழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.
நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்
எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது என
ஆவணம், நூல் உள்ளதா என்று.  

ஆண்பொருனை என்று ஆவணமும் காணவில்லை.


The late 
M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings,has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. His work titled “Poornayude Puravrutham” explores the origin, the course and the flow of the Periyar’s tributary till the great flood of 1341. The flood changed the course of many rivulets.


M. Raman Namboothiri of the Archaeological Survey of India
என தொல்லியல் துறை சார்ந்தவர் கொடுத்த தகவலை முன்னரே நான் இங்கு கொடுத்துள்ளேன்.

ஆம். நினைவிருக்கிறது. ராம் காமேசுவரன் காட்டிய காலடி என்ற ஊர் மாறிய வரலாறும்,
ராமன் நம்பூதிரி பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருப்பது பற்றி விரிவாகச் சொல்ல
எண்ணியுள்ளேன். நேரம் கிடைக்கியில் “காலடி” சங்கரர் பிறந்த ஊர் பொன்னானி தாலூக்கா.
அதை ஏன் சுள்ளிப் பேரியாற்றுக்கு மாற்றினார் சிருங்கேரி மடாதிபதி என எழுதவேண்டும்.
முஸ்லீம்கள் 85% வாழும் மலப்புரம் ஜில்லா சிக்கலாகும் என நினைத்தார். மாணிக்கவாசகர்
ஞானாசிரியனைச் சந்தித்தது சோழநாட்டு திருப்பெருந்துறையில். இதனை அவரே பாடியுள்ளார்.
ஆனால், பாண்டியர்கள் 12-ஆம் நூற்றாண்டில் மிமோரியல் ஆலயம் மாணிக்கவாசகருக்கு
எடுக்கிறபோது ஒரிஜினல் பெருந்துறை அவர்கள் கையிலோ, ஆட்சியிலோ இல்லை.
எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று தங்கள் நாட்டிலே ஆவுடையார்கோயில் எழுப்பினர்.
அதுபோல, காலடி மாற்றம். 

ராமன் நம்பூதிரி போன்ற மலையாள தேசத்தவர் சங்கத்தமிழ் இலக்கியம் போன்றவை படித்தால்
அவர்கள் எழுத்து மேன்மையுறும். படிஞாறுப்புழைக்கு (படிஞாயிறு = மேற்கு) மேற்குப்புழைக்கு
எப்பொழுதும் பூர்ணா என்ற பெயர் இல்லை.

 பொள்ளாச்சி, பாலக்காடு, ஷொரனூர், பொன்னானி அருகே கடலில் கலக்கும் பொன்வானி ஆறு
பூரணவாகினி என அழைக்கப்பட்டது. சங்கர விஜயம் நூலில் காணலாகும்.

ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். கண்மணி சொல்வதுபோல், கொங்கு நிலவியல் அறியாதிருந்துள்ளார்.
சேரன் வரலற்ற்றுக்கு கொங்குக் குலவியல் பற்றிக் கண்மணி அவர்கள் 1992-ல் நூலில் குறிப்பிடவில்லை
என நினைக்கிறேன். அதுபற்றி அவர்க்கு எழுதவேண்டும்.

 சுள்ளியம்பேரியாறு என்பதில் சுள்ளி < சுருளி. சுருளிமலையில்
உற்பத்டி ஆகும் முல்லைப்பெரியாறு சங்க காலத்தில் சுள்ளியம்பேரியாறு. இன்றும்
அதன் பெயர் பெரியாறு தான். சுருளி > சுர்ளி > சுள்ளி - இதன் தாவரப் பெயர்
Hardwickia Binata என்பது. தமிழில் கருமரம் என்போம். இது கருமர(ம்) -  > கர்மர > கம்மர
என்று கன்னடத்திலும், கமர என்று மராட்டியிலும் வழங்கும் காராச்சா மரம்.
அதாவது கருமையான ஆச்சா மரம் இந்தக் கருமரம். அதனால், வடமொழியில்
அஞ்சன மர எனக் கருமரத்தை (=காராச்சா) வழங்குகின்றனர். https://en.wikipedia.org/wiki/Hardwickia
சுருளிமலையில் தொடங்கும் சுள்ளியாற்றின் பேர்க்காரணம் இதுதான்.
இந்தச் சுள்ளியும், விறகெரிக்கப் பயன்படும் சுள்ளியும் வெவ்வேறான
தாதுவேர் கொண்டவை. சுள்-/சுடு-/சுண்டு- (சுள்- > உஷ்ணம்) இந்தத் தாது பிறப்பிக்கும்
சொல் விறகெரிக்கும் சுள்ளி. 

ஆனால். கொங்குவேளிர் பாடும் பெருங்கதையில் சுருளி மரத்தை சுள்ளி
என்கிறார்: by consonant assimilation.

1. உஞ்சைக்காண்டம்
 
50. குறிஞ்சிநிலங் கடந்தது
 
           நறையு நாகமு முறையிரு வேரியும்
          வருக்கையு மாவும் வழையும் வாழையும்
          அருப்பிடை நிவந்த வாசினி மரமும்
     25   பெருஞ்செண் பகமும் பிண்டியும் பிரம்பும்
          கருங்கோற் குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்
          சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு மரலும்
          வால்வெள் வசம்பும் வள்ளிதழ்க் காந்தளும்
          பால்வெண் கோட்டமும் பனிச்சையுந் திலகமும்
     30   வேயும் வெதிரமும் வெட்சியுங் குளவியும்
          ஆய்பூந் தில்லையு மணிமா ரோடமும்
          ஆரமுஞ் சந்து மகிலுந் தமாலமும்
          ஏரில வங்கமு மேலமு மிருப்பையும்

பெருங்கதையில், கொங்குவேள் குறிப்பிடும்
சுள்ளி = சுருளி = காராச்சா என வழங்கும்.
கருமரம்/கம்மரம்/கமர எனப்படுவது இது.
இதனிலும் பால் வடியும். அதில் இருந்து சாம்பிராணி தயாரிப்பதுண்டு.

காராச்சா என்னும் = கரிய-ஆச்சா. இது தென்னிந்தியாவில் மிக
அழிந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இல்லாது போய்விடும்.
யா மரம் எனப்பட்ட ஆ/ஆச்சா மரம் சங்க காலத்தில் தென்னிந்தியாவில்
இருந்தது. இன்றில்லை. ஆனால், யா/ஆ ஆச்சா (shorea robusta) குடும்ப
மரங்கள் சில இன்றும் தென்னாட்டில் உள்ளன. அவற்றை இங்லிஷ்காரர்கள்
Bastard Sal trees எனப் பெயரிட்டு எழுதினர்.

ஆனால், ஆச்சா எனப்படுவது சால மரம் ஆகும்.
இதனை தெளிவாகக் காட்டுவது நமக்கு தமிழின்
ஆதிநிகண்டு ஆகிய பிங்கலந்தை ஆகும்.
ஆ = ஆச்சா = சாலம் என்கிறது பிங்கலம்.
இது தெரியாமல், யா மரம் என்றால் ஏதோ மரத்தை எல்லாம்
சொல்லுதல் பிழை. அதற்கெல்லாம் வேறு பெயர் இருக்கிறது.
கேரளாவின் மிகப் பெரிய ஆற்றின் பெயராக
பல ஆயிரம் ஆண்டுகளாக.

விவசாயமும், ஜனநெருக்கடியும் அதிகரித்ததால்
யா என்னும் ஷொரியா ரோபஸ்டா தென்னக்த்தில் அழிபட்டது.
இப்போது ஒரிஸ்ஸா, வங்காளத்தில் வெகுவாக அழிந்துவருகிறது.
இந்த நூற்றாண்டில் சங்க கால யா மரம் (ஆ/ஆச்சா = ஷொரியா ரோபஸ்டா)
தென்னாட்டில் மட்டுமல்ல, வடக்கேயும் அழிந்துவிடலாம்.
தென்னாட்டில் காராச்சா எனப்படும் சுருளிமரம் இல்லாமல் போகும்.
ஆனால், சுள்ளி (< சுருளி) மரத்தின் பெயர் கொண்ட சுள்ளியம்பேரியாறு
இனி இலக்கியத்தில் மட்டுந்தானா? இல்லை, அந்நதியை அழிக்காமல்
சுத்தமாக வைத்துப் பாதுகாப்போம் என மலையாளிகள் முடிவு செய்யணும்,
தமிழ்நாடு அளவுக்குக் கொள்ளைபோகாது என நினைக்கிறேன்.

பிற பின்!
நா. கணேசன்
 
NG                                                                                      < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>

On Thursday, November 16, 2017 at 10:01:01 AM UTC-8, kanmanitamilskc wrote: 
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?
கண்மணி 


கழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.
நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்
எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது என
ஆவணம், நூல் உள்ளதா என்று.  

ஆண்பொருனை என்று ஆவணமும் காணவில்லை.

நா. கணேசன்

மு. ராகவையங்கார் அவர்கள் வஞ்சி - சங்க காலச் சேரர் மாநகர் ஆன்பொருனைக்
கரையில் உள்ள ஆன்நிலை அப்பன் வாழும் கருவூர் என்றெழுதினார் என தகவல்
குறிப்பிட்டேன்.

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.
வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை என
எழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா? அதுபோல தான் ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள். சான்றுகள்
இல்லாத கூற்றுகள் அவை.

வஞ்சிக் கருவூர் பற்றி இரா. கிருஷ்ணமூர்த்தி, நாகசாமி, ஐராவதம் நூல்களையும்
நீங்கள் வாசித்தால் தொல்லியலாளர் வஞ்சி என்பது கருவூர் எனக் காட்டுவது 
அறியலாகும்.

It is 20th century Tamil Nadu politics that sustained Vanji as on the west coast in Sangam times.
What was on the west coast was only Musiri (Musiris in Yavana texts) pattinam, we don't
hear of any Vanji city on the west seashore in Sangam texts at all. No inscriptions in Brahmi
to say Cheras' capital was Musiri, it was just a toll gate in the port. The capital was in Vanji Karur,
inland according to Greeks.

NG

N. Ganesan

unread,
Nov 20, 2017, 9:37:55 AM11/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சுள்ளியாற்றுக்கு வடமொழிப்பெயர் சூர்ணி என்பது. சூர்ணி : சுருளி/சுள்ளி 
என்னும் தமிழ்ப் பெயரின் வடமொழிப்படுத்தல். 

சுள்ளிப்பெரியாற்றுக்கு பூர்ணா என்ற பெயர் இல்லை. பழைய ஆவணங்களில்.
அது சிருங்கேரி மடம் காலடி என சுள்ளி/சூர்ணி ஆற்றங்கரையில் உருவாக்கிய
அண்மைக்காலத்தில் எழுந்தது. 

N. Ganesan

unread,
Nov 21, 2017, 9:09:58 AM11/21/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, George Hart


2017-11-20 16:07 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

மற்றொரு தகவல்.. (நான் கிடைத்த தகவலைப் பகிரும் நோக்கில் மட்டுமே பகிர்கிறேன்)

தெண்ணீர் உயர்கரைக் கவைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே  -  Porunai (ponnani puzha)
என்று இவர் குறிப்பிடுகிறார். 

கேரளா பகுதியினருக்கு   எவ்வளவு  பழந்தமிழகம் பற்றிய தொடர்பு விட்டுப்போனதோ, அதே அளவு தமிழருக்கு மலையாள வட்டாரப் புழக்கம் கொண்டிருந்த செய்திகள் குறித்த தொடர்பு இல்லாமல் போயிருக்கிறது. 

கண்மணி சொன்னது போல படிப்படியாக நிறுவக் காத்திருப்போம். 


CORRIDORS OF TIME
Dr Suvarna Nalapat
page: 352

[...]
Wherever the kings of vanchi had their residence due to political reasons certain important rites like crown and coronation, taking the divine sword (udavaal) and climbing the nilapaduthara was always done at Thirunaava and old Vanchi in Vannery till the kochi kings were thrown out of vannery to kochiinThrikkalkara. About the aadikaruvoor aadimahodayapuram Nakkeranar says that itwas in the sands of Porunai (ponnani puzha)

Kadambu kattiyaanai nedumtherkothai
Thirumaaviyanakar karuvur moonturai-
Thenneeruyarkaraikuvalayathannan
Porunai manalinum palawe.

Ship, measurements, elephant,big chariots, kotha (king/beautiful women) were the wealths of the divine city of karuvur and in front of that city flow the cold waters of porunai to the port through the sandbeds.

The second thruvanchikalam came intobeing only during the times of 50th king perumal.(802-818AD) In PurananuruThiruthaamanar. calls him the Vaymozhivanchan.In Akananur Maamoolanar says:
Valampadu murachir cheralathan 
Munneerottikkadamberinthimayathu 
Munnor marula vanankuvir porithu 
Nannakar maanthai muraithonnar 
Panithirai thantha paduchaannelkkalam
Ponchey paavai vayiramodaamba
[...]

>  ..... தேமொழி 

நூறாண்டுக்கு முன்னரே ராகவையங்கார்கள் இவையெல்லாம் சான்றில்லாதவை என நிறுவினார்கள். சங்க இலக்கியம் பதிப்பித்தவர்களில் முக்கியமானவர் ரா. ராகவையங்கார். அவரால் தான் அகநானூறு அச்சில் வெளிப்போந்தது. பிங்கலந்தை பதிப்பாசிரியர் பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை போன்றோரிடம் ஏடுகள் பெற்று ராகவையங்கார் ஸ்வாமி பதிப்பித்தார். அகநானூற்றில் உள்ள பாடல்கள் புரிதற்குப் பெரும் சவாலாய் இருந்த காலம். தன் நுண்ணிய அறிவால் கண்ணகி தெய்வமான இடம் சுருளிமலைப்பகுதி என எழுதினார். பொருனை, ஆன்பொருனை கேரளாவில் இல்லாததும் காட்டி 100+ ஆண்டுகள் ஆகிவிட்டன. திருக்குறள் சமண சமயத்தவர் எழுதினது என்று அ. சக்கிரவர்த்தி நயினாரும், திரு.வி.க.வும், மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையும், சுவலபில்லும், கா. ம. வேங்கடராமையாவும், ஐராவதமும், .... என்று காட்டிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் சிலர் சைவ சித்தாந்தம் குறள் என்றும், (மேலைக் கடற்கரைக்கே வராத) செயின்ட் தாமஸ் சொல்லி எழுதியது குறள் என்றும் மதவாதிகள் எழுதுவதும் பார்க்கிறோமே. அதுபோலத் தான் பொருனை கேரளா ஆறுகள் என்பது.

தமிழர்கள் லெமூரியாக்கண்டம் (குமரிக்கண்டம்) போன்ற எழுத்துக்களை இணையத்தில் பெரிதாகி வருவதைப் பார்க்கலாம். இன்னும் சில புதுப்புராணங்கள் உருவாகிவருகின்றன. அவற்றில் சில நான்காண்டு+ முன்னர் குறிப்பிட்டேன்: http://nganesan.blogspot.com/2013/09/google-aandavar-j-fletcher.html  ஆறாம்திணையில் புராண வளர்ச்சி.  மலையாளிகளுக்கு கொடுங்கோளூர் தான் எல்லாம். 20-ஆம் நூற்றாண்டில் கண்ணகிக்கு செங்குட்டுவன் கட்டிய கோயில் கொடுங்கோளூர் பகவதி கோயில் என்றனர். ஆராய்ச்சியால் அது சரியில்லை. சுருளிமலையில் உள்ள ராஜராஜன் எடுப்பித்த இடம் எனக் காட்டினார்கள் ராகவையங்கார்கள் என்னும் தமிழின் பேராசிரியர்கள். அதனைப் பின்னர் விரிவாகப் போய்ப் பார்த்து எழுதினார் சி. கோவிந்தராசனார். புலவர் கோவை. இளஞ்சேரனார் (மரைக்காடு என்று மறைக்காட்டை விளக்கியவர்களில் ஒருவர்) மலையாளநாடடார் சொல்லும் கொடுங்கோளூர் கண்ணகி என்பதைப் பொய்யாக்கிவிட்டது சுருளிமலைக் கண்ணகி கோட்டம் என எழுதினார். அவரது எழுத்தைப் பின்னர் தருகிறேன். மூன்று பழைய கண்ணகி சிலைகள் பற்றி எழுதவேண்டும். மங்கலாதேவி கண்ணகியின் புராதன விக்கிரகங்கள் என்ற இழையில் சொல்லலாம். பலரும் கண்ணகியின் பழைய 3 வடிவங்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். அந்தக் கட்டுரைகளின் அச்சில் தெளிவில்லை. அவற்றின் இன்றைய ஒளிப்படங்களும், அச் சிறப்ங்களை வைத்து பத்மவாசன், மணியன்செல்வன், மாருதி போன்றோரைக்கொண்டு ஓவியம் எழுதலாம்.

சொர்ணா நளபாடு பொன்வானி (பொன்னானி) எனும் பாரதப்புழை பொருனை என்கிறார். ராமன் நம்பூதிரியோ சூர்ணி/சுள்ளிப் பெரியாறு பொருனை என்கிறார். இதற்கெல்லாம் சான்றுகள் எங்காவது உள்ளனவா என அறிய ஆவல். தமிழ்ச் சங்கம், மலையாளம், கல்வெட்டுகள் ... ஏதாகிலும் இருந்தால் காட்டினால் மகிழ்ச்சி. குமரிக்கண்டம், சிலப்பதிகாரம் கி.மு. நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றெல்லாம் தமிழறிஞர்கள் இன்று எழுதுவதில்லை. அதே போலத்தான் கொடுங்கோளூர் முசிறிப் பட்டினத்தைச் சங்க கால வஞ்சி, சேரர் தலைநகர் என்பதும். மலையாளிகளுக்கு பொருனை என்று தமிழ்ச் சங்க இலக்கியம் சுள்ளிப் பெரியாற்றைக் கூறுவதாகக் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டேன், சங்க கால நகரம் மேலைக்கடற்கரை முசிறி. போனால் போகுதுன்னு இரண்டாம் பட்சமாக கரூரை வஞ்சி என்று இரண்டாவதாக ஏற்கலாம் என்னும் ஆராய்ச்சிகள், அஸ்திவாரம் அற்றவை. மணலில் கட்டும் மாளிகைகள். சங்க இலக்கியத்தை ஊன்றிப்படித்தாலோ, கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்தாலோ மேலைக் கடற்கரையில் வஞ்சி காணோம். அப்பர் பெருமான், சுந்தரர் எல்லாம் அஞ்சைக்களத்தைப் பாடியுள்ளனர். அஞ்ஞைக்களம் என்பர் மலையாளிகள். ஒரு சில இன்ச் உயரமே கொண்ட அஞ்சைக்களத்தப்பர் பழமையானவர். இதனை ராஜராஜசோழன் ஓவியம் ஆக்கியுள்ளான் பெருவுடையார் கோயிலில். இப்போது மலையாளிகள் வஞ்சிக்குளம் என்கிறார்கள். அஞ்சைக்களத்து அப்பனைப் பார்க்க, வஞ்சி என்னும் சிறுபடகில் போகவேண்டும். அதனால் திருவஞ்சைக்களம் வஞ்சிக்குளம் ஆகியுள்ளது அண்மைக்காலத்தில். பூர்ணா, பூர்ணவாகினி என்பது பாரதப்புழையைத்தான் பழைய நூல்களில். அதன்படி பார்த்தால் காலடி பொன்னானி தாலூக்கா, அரசியல் காரணங்களுக்காக, சிக்கலைத் தவிர்க்க, சிருங்கேரி சுவாமிகள் அண்மைக்காலத்தில் சுள்ளி/சூர்ணி ஆற்றங்கரைக் காலடிக்கு மாற்றிப் பெரிய தீப ஸ்தம்பமும், கோயிலும் எழுப்பினார்கள்.

சுராலை எனத் தமிழ் இலக்கியத்தில் சாம்பிராணியைக் குறிப்பிடுவர். சுருளி/சுள்ளி மரம் Indian benzoin tree (= Hardwickia pinnata). குடகில் இருந்து குமரி வரை சையமலையிம் விசேஷமான மரங்களில் ஒன்று. உலகில் வேறெங்கும் இல்லாதது. சுருளி(சுள்ளி) is *endemic* to Southern Ghats. இதனைப் பழந்தமிழர் 3000, 4000 ஆண்டு முன்னர் சுள்ளிப் பெரியாறு எனப் பெயர் கொடுத்தது அருமை. சுருளி என்னும் மரப்பெயர் சுராலை என்று சாம்பிராணிக்கு பெயர் அளிப்பதுங் காண்க. சாம்பிராணி என்பது இந்தோனேசிய மலாய் மொழி. அங்கே உள்ள ஒரு பிரதேசம். ஆனால், தூய தமிழ்ப் பெயர் சுராலை என்பது. மறைமலை அடிகள் திருமகன் மறை. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை: சங்ககால வஞ்சி மாநகரின் அருகே உள்ள ஈரோட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி:
அவர்கள் வீட்டிலே, நான் போவதற்கு முன்னாலேயே, அவர்கள் குடும்பத்திலே, அவர் இறை மறுப்புக் கொள்கையுடையவராகிவிட்ட காரணத்தால், அங்குள்ள பூசை அறையைப் பூட்டி வைத்திருந்தார்கள். ஆனால் நான் போன அன்று, அந்தப் பூசை அறைக் கதவு திறக்கப் பெற்றிருந்தது. அது மட்டுமின்றி அறை முழுவதும் கழுவித் தூய்மை செய்து, சுராலைக்குச்சி (ஊதுவத்தி) கற்றையாகப் புகைய வைத்து, விளக்கும் ஏற்றி வைக்கப் பெற்றிருந்தது. அத்துடன் ஒரு தட்டில் மலர்கள், கற்பூரம், சுராலை (சாம்பிராணி) எல்லாம் வைக்கப் பெற்றிருந்தன. இது பற்றி, ‘என்ன’ என்று அங்கிருந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், நீங்கள் இங்கிருக்கும் வரை, உங்கள் வழக்கப்படியே பூசை - முதலியவற்றையெல்லாம் செய்து கொள்ளுங்கள்; இங்கு இருப்பதனால் உங்கள் பூசை பழக்க வழக்கங்களுக்குக் கெல்லாம் முட்டுப்பாடு கூடாது’ என்று சொன்னார்கள்; நான் மிகவும் வியப்புக் கொண்டேன்; மகிழ்ச்சியும் அடைந்தேன்.”
சுருளிமலை போன்றவற்றிற்குப் பெயர்தரும் சுருளிமரத்தின் விளைபொருள் ஆகிய சுராலைக்கட்டி சுருண்டு நெருப்பில் குமைவதால் ஏற்படும் பெயரா? ஆண்குமைஞ்சான் என யா மரங்களின் dammar resinக்கும், பெண்குமைஞ்சான் என்று சுருளிமரத்தின் benozoin resin-கும் பழைய பெயர்கள். குங்கிலியம் = dammar resin, சுராலை = சாம்பிராணி (benzoin resin).

இன்னொரு செய்தி:
கிழக்குக் கடற்கரையில் பாண்டியர் துறைமுகம் தொண்டி பற்றி விரிவாக ஆய்வுக்கட்டுரை சங்கப்பாடல், சிலம்பில் இருந்து எழுதியவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
அரிய கட்டுரை அது.
யாவகம் (ஜாவா) தீவுகளில் இருந்து தொண்டி (பாண்டிநாட்டுக்கு) துறைமுக வாணிகம்’

"இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக் கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில்
இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப் படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம்.
[...]
வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை."


இளங்கோ அடிகள் குறிப்பிடும் கருப்பூரம் = https://en.wikipedia.org/wiki/Camphor
இதனை தொண்டி துறைமுகத்துக்கு பாண்டியர் இறக்குமதி செய்தனர்.

இதில் குங்குமப்பூ (Saffron) யாவகம், சுமத்ராவில் இருந்து வந்ததாய் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார் அது பிழை. குங்குமப்பூ ஆப்கானிஸ்தான், ஈரான், காஷ்மீரில் விளைவது. யாவகத்தில் இல்லாதது.

இளங்கோ அடிகள் கீழைத்துறைமுகங்களுக்கு (கொற்கை, மருங்கூர் பட்டினம், தொண்டி, நாகை, பூம்புகார்,  ...)
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்” வந்தன என்று பாடியுள்ளார்.
வாசம் என்பது மணப்பொருள். கந்த தூபம். கந்தரசு எனப்படும் குங்கிலியம், சுராலை.
யா (= shorea robusta. = சாலம், ஆ. ஆச்சா) தரும் குங்கிலியம் தமிழர் தேடிச் சென்ற பொருள்.
அதனை இறக்குமதி செய்ததால்தான் யாவகத் தீவு என பெயரிட்டனர்.
அதே போல, சுராலை (சாம்பிராணி) தரும் மரங்களும் உண்டு. இந்த மரப்பால் பிசின்கள்.
பிற்காலத்தில் ரப்பர் மரங்களின் பாலும் கிடைத்தது ஆங்கே.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இளங்கோ அடிகள் குறிப்பிடும் வாசம் = கந்த தூபம் ஏற்றப்
பயன்படும் குங்கிலியம் (யா இன மரங்கள் அளிப்பது),
சுராலை (சுருளி இன மரங்கள் அளிப்பது). 

NG
இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு:

 
On Monday, November 20, 2017 at 3:40:24 PM UTC-8, N. Ganesan wrote:


2017-11-20 15:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:


2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். ///

பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும். 

ராமன் நம்பூதிரி  எழுதிய “Poornayude Puravrutham”  என்ற நூலில் தனது  (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள்  கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி  மறுப்பதுதான் முறையல்லவா?

நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு  இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக்  கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?


Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.

would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.

In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.

அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .
Historic river gasps for breath
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.


Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.

முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.
The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. 

பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.
 It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.

I mentioned few times that cuLLi-p-periyaru is called ChuurNi in Sanskrit texts.

cuurNi/cuLLi-Periyar is not mentioned as PoorNa in Sanskrit texts, and also not as Porunai in Sangam texts.

Poona-vaahini is Ponvaani river (= BharataPuzhaa, north of ChuurNi/cuLLi-Periyar) in Sanskrit texts.



N. Ganesan
 

இவை இரண்டையும் ஹைலைட் செய்து முதலில் பகிர்ந்த பொழுதும் கொடுத்திருந்தேன்.

..... தேமொழி

 


N. Ganesan



..... தேமொழி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

N. Ganesan

unread,
Dec 10, 2017, 3:49:01 PM12/10/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, Srinivasakrishnan ln


2017-11-16 15:29 GMT-08:00 LNS <lns2...@gmail.com>:
மிகவும் சுவாரசியமான இழை. 

இந்த கேள்விக்கு நூல் ஆதாரங்களை (textual sources) மட்டும் வைத்துக்கொண்டு விடை காண இயலாது என்பது என் தாழ்மையான கருத்து. கலாச்சார, பொருளாதார, மத, கலை, மக்கள் பெயர்ச்சி   இன்னும் மற்ற  ஆதாரங்களையும்  கலாச்சார கோட்பாடுகளின் வளர்ச்சியையும்  வைத்தே இதை ஆராய வேண்டும். 

 ஒரு சிறிய சான்றாக  நம்பூதிரிகளின் வரலாற்றையே எடுத்துக் கொள்வோம். அவர்களைக் கேட்டால் நாங்கள் 'அந்தர்வேதி' யிலிருந்து குடிபெயர்ந்து கேரளத்திற்கு வந்தோம் என்பார்கள். இதற்கு கேரளோல்பத்தி போன்ற ஆதாரங்களையும் சொல்வார்கள். கேரளோல்பத்தி என்பது கோயில் தல வரலாறு போல் ஒரு இன வரலாறு. இவ்வகை வரலாறுகளின் ஒரே குறிக்கோள் தம் கோயிலையோ தம் இனத்தையோ உயர்த்தி காண்பிப்பதே.

'அந்தர்வேதி' என்பது கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் உள்ள பிரதேசம். இதனை இந்தியில் 'தொஆப்' (Doab) என்று சொல்வார்கள். இதற்கு புண்ணியபூமி என்ற ஒரு பெரிய புகழும் வரலாற்றில் இருந்ததன் பேரில் வடக்கே எந்த பிராமண வர்க்கத்தைக் கேட்டாலும் எங்கள் முன்னோர்கள்  'அந்தர்வெதி' யிலிருந்து கிளம்பினார்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் மெய்யானது என்ன? கேரளத்து நம்பூதிரிகள் குணதிசையிலிருந்து குடநாட்டிற்கு  பெயர்ந்தார்கள்  என்பது  திண்ணம். இது அவர்களின் வேதசாகை, கோத்திரம், சூத்திரம், சிரௌத கோட்பாடு போன்ற இன்னும் சில அறிகுறிகளை வைத்து எளிதாக நிறுவலாம். மேலும் அவர்களிந் பழைய கிராம-அக்ரகார இருக்கைகளிலிருந்து இவர்கள் பாலக்காடு இடைவெளி  (Palghat Gap) மூலம் குடநாட்டில் குடியேறினார்கள் என்றும் கூறலாம். தமிழகத்தில் இன்றும் வாழும் பூர்வசிகை பிராமணர்களின் (பிராமண வகுப்பில் சிறுபான்மையினர்) வேதம் முதலிய கோட்பாடுகள் நம்பூதிரிகளுடன் ஒத்துப் போகிறது என்றும் காணலாம். இக் குடியினர் ஒருகாலத்தில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் என்பது பல்லவ சோழ காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களிலிருந்து (திருமுறை, நாலாயிரம்) குன்றின் மேலிட்ட விளக்கைப் போல் தெரியும். (பேரா. தெண்ணிலபுரம் மகாதேவனின் ஆய்வுக் கட்டுரை பார்க்கவும்). 

மக்கட் பெயர்ச்சிக்கு சில முக்கியமான காரணங்கள் -  3-4ம் நூற்றாண்டில் மழபுலத்திலிருந்து ஊடுருவிய களப்பிரர் ஆக்கிரமிப்பு, பின்னர் பல்லவ-பாண்டிய சண்டை, சோழ-சேர சண்டைகள் என்று பல. அதனால் தான் கேரள நாட்டு சரித்திரம் (அதாவது எழுத்து வடிவில் வந்த சரித்திரம் - செப்பேடுகள், கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் ) கி பி 825 க்கு முன் இல்லை. 


பிராமணர்கள் கிழக்கிலிருந்து மேற்குச் சென்றார்கள் என்ற பட்சத்தில் அவர்களை ஆதரிக்கும் மன்னர்கள் மேற்கிலிருந்து கிழக்கு வந்தார்கள் என்றால் எதிர்மறையாக இருக்கிறதே! இதை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல்   வெறும் ஆற்றின் பெயர்களை வைத்து எப்படி முடிவுக்கு வருவது? 

தமிழக கேரள பழைய சம்பந்தங்கள் பற்றி  ஒன்று மட்டும் நாம்  துணியலாம் - ஏறத்தாழ எல்லாவிதமான மக்கள் பெயர்ச்சியும் கோட்பாட்டு பெயர்ச்சியும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றிருக்கிறதே ஒழிய மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அல்ல. 

அன்புடன்

LNS


கொங்குக் குலவியலும், நிலவியலும் பார்த்தால் கிழக்கில் இருந்து மேற்கே செல்லும் நாகரீகம் பற்றித் தெளிவடையலாம்.

பொறையன் குலத்தாரும், உதியன் குலத்தாரும் தாயாதிகள்.
இரும்பொறை மரபினர் கொல்லிநகர் என்னும் வஞ்சி மூதூரிலும் (குணகொங்கு),
உதியன் சேரல் மரபினர் அயிரைமலை, குழுமூர், காஞ்சிநதி பிறந்துபாயும்
இடங்களிலும் ஆண்டுள்ளனர் (குடகொங்கு). சோழர் தலைநகர் உறையூர், துறைமுகம் பூம்புகார், நாகப்பட்டினம்.
பாண்டியர் தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, சாலியூர், தொண்டி (கிழக்குக்கடற்கரை, 
முகவை மாவட்டம்). அதே போல, சேரரின் சங்ககால தலைநகர் ஆன்பொருனைக்
கரையின் வஞ்சி மாநகர். சேரர் துறைமுகம்: முசிறி (சுள்ளி ஆற்றின் கழிமுகம்),
தொண்டி (பொன்வானி/பூரணவாகினி ஆற்றின் கழிமுகம்), நறவு.

சங்கச் சேரரின் வஞ்சி மாநகருக்கு கொல்லிநகர் என்றும் பெயர் உண்டு. 
Cf. குலசேகர ஆழ்வார் பிறந்த அரண்மனை இருந்த இடம் வஞ்சி மாநகர் கரூர், 
இவ்வாழ்வாரின் தனியன், வாழித் திருநாமம் முதலியன.
அவ்வூரின் வித்துவக்கோடு பெருமாள்கோவில் அரண்மனை அருகிலே இருந்தது. இதற்கு நாளும்
சென்று வழிபட்டவர் குலசேகர ஆழ்வார். அந்த அன்யோன்யம் அவரது வித்துவக்கோட்டுப்
பாசுரத்திலே வெளிப்படுகிறது. வஞ்சிமூதூரின் வித்துவக்கோட்டு பெருமாள் கோவில்
ஆடக மாடம். இங்கே வழிபாடு நடந்தபின் வடநாட்டுப் படையெடுப்பு என இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில்
அழகாகவும் விரிவாகவும் பாடியுள்ளார். வித்துவக்கோட்டு அக்கிரகாரம், கரூரின் அக்கிரகாரப் பெயர். 
பின்னாளில் குலசேகரர்பாடிய வித்துவக்கோடு வஞ்சி மூதூரில் இருந்து நேர்மேற்கே பாலக்காடு தாண்டி 
பட்டாம்பி அருகே மாற்றப்பட்டது. அதாவது, ஆன்பொருனைக் கரையில் இருந்து 
பொன்வானி ஆற்றங் கரைக்கு அரசியல் மாற்றங்களால் வித்துவக்கோடு மாறியது.
 Nice photos of Tirumittacode: (I've been there several times. In two hours 
from my farm, most recently in June.)
மலையாளம்- தமிழ் பிரிந்தபின்னே நிகழ்ந்த செயலிது. இதுபோல, சங்கரர் பிறந்த காலடி பொன்வானிக்
கரையில் இருந்து சுள்ளியாற்றின் கரைக்கும், மாணிக்கவாசகர் அருள்பெற்ற திருப்பெருந்துறை, ... எல்லாம் 
மாறியுள்ளன. திருமுருகின் ஏரகம் மலைநாட்டில் இருந்து தஞ்சைக்கு மாறியுள்ளது.

பொன்வானி (பூர்ணவாஹினி.பாரதப்புழா) ஆறு:



பதிற்றுப் பத்து-  ஐந்தாம் பத்து
காஞ்சி அம் பெருந்துறை மணலினும் பலவே!
(Kanchi river, near Coimbatore, can be seen in the above map.)

சுந்தரர் கொங்குத் தலங்களுக்கு (வஞ்சி மூதூர் (கரூர்) to முசிறிக்கோடு) பாடிய பதிகங்கள்
அழிந்துவிட்டன. துடிசை, பேரூர், திருச்சூர், ... 
ஆனால், காஞ்சி நதிக்கரையிலே “ஆன்பட்டி” என்ற மூலப்பெயருடைய பேரூரைப் பாடுகிறார்.
ஆகெழு கொங்கர், ஆன்பட்டி (பேரூர், கோவை), ஆன்பொருனை (வஞ்சிமூதூரின் ஆறு) ...
என்பன சங்க காலத்தில் கொங்கின் ஆக்கள் வளம். இதனால் தான், நானிலத்தில்
நான்கு திணையும் பாடும் பதிற்றுப்பத்து 30-ஆம் பாட்டு நெய்தலில் தொடங்கி முல்லைத்திணையில் 
கடைசியில் உச்சமாக வைக்கிறது.

ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம் - அப்பர்

பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பிறவா நெறியானே - சுந்தரர்,

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணி காஞ்சி வாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே
பெற்றாம் அன்றே - சுந்தரர்,

சில ஆயிரம் ஆண்டுகளாக கொங்கர்கள் காஞ்சியாற்றங் கரையில் தர்ப்பணம் தரும் பதிகளுள் ஒன்று.
உதியஞ்சேரலை “முதியர்ப் பேணிய உதியன்” என்கிறது சங்க இலக்கியம். காஞ்சி நதிக்கரைப்
பேரூரில் தர்ப்பணம் அளித்து, தம் அயிரை மலை, குழுமூரில் (இன்றைய கொழுமம்) பெருஞ்சோறு அளித்தவன் உதியன்.

5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை, தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
காஞ்சி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே தீம்-நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
மேலே உள்ள வரைபடத்தில் கோயம்புத்தூர் வழியாகச் செல்லும் காஞ்சி ஆறு காண்க.
அப்போதெல்லாம், காஞ்சிக் கரையில் இருந்ததே பேரூர். திருப்பேரூர். கோசர்களின் புத்தூராக
கோயம்புத்தூர் பின்னாளில் தோன்றியது. கவிஞர் சிற்பி தோட்டத்தில் நடந்தபோது
கிடைத்த காசு - பின்னர் ர. பூங்குன்றன் (உதவி இயக்குநர், தொல்லியல் துறை, தமிழ்நாட்டுஅரசு)
படிக்கப்பெற்றது. ரோமானியக் காசைப் நகலெடுத்துக் ’குட்டுவன் கோதை’ காசு அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றிச் சிற்பி எழுதிய கவிதையைத் தரவேண்டும்,

​“வரலாற்றின் சுவடுகள் நிரம்பிய பொள்ளாச்சி வட்டாரத்தில் ரோமானிய நாணயங்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன. எங்கள் கிராமத்து ஆற்றுப் படுகையில் 'குட்டுவன் கோதை’ பெயர் பொறித்த சங்க காலக் காசும் கிடைத்து இருக்கிறது. பக்கத்தில் உள்ள மலைச் சாரலில் சமணர் படுகைகள் ஏராளம். இப்படி ஆதியின் மீதிகளை அவ்வப்போது உமிழ்ந்து ஆச்சர்யம் ஊட்டும் அதிசய மண் இது.”
எனவே, சங்க இலக்கியம் கி.பி. 1- 3-ம் நூற்றாண்டு என சுவெலெபில் போன்றோர் கணிப்பை
உறுதியாக்குகிறது (பார்க்க: அகநானூறு மொழிபெயர்ப்பு, பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம், பாண்டிச்சேரி).

பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டும்
மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவிற்
பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமொ டுண்டினிது நுகரும்
தீம்புன லாய மாடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே.

இந்தக் குட்டுவன் கிழக்கே இருந்து சென்று
மேலைக் கடற்கரைத் துறைமுகங்களின் இறையாண்மை, சுங்கம் போன்றவற்றை
ஒழுங்குபடுத்தியவன். கடற்கொள்ளையர் செயல்களை நிறுத்திச் சிறைப்படுத்தியவன் (sea pirates).
இதனால் “கடல் பிறக்கு ஓட்டிய வேல்கெழு குட்டுவன்” எனப் புகழ்பெற்றவன். 

கிழக்கே இருந்து மேற்கே நகர்ந்த ராஜாக்கள் சேர மன்னர்கள். பெருமாள்கள் என்ற
Dynasty கேரளா மலையாளம் உதிக்கும் நாளில் தோன்றியபோது
கோயப்பெருமாள் என்னும் மன்னரைக் கொங்குநாட்டில் இருந்து கொண்டுவந்து
பட்டம் சூட்டினார்கள் மலையாள தேசத்தார். கோயப்பெருமாள், கோயம்புத்தூர்
பகுதியாக இருக்கலாம். கொங்கு இளங் கோசர்?? -ச- > -ய- எனச் செய்வது
மலையாளத்தில் இயல்பு. சங்க கால முசிறி > முயிரிக்கோடு என மலையாளத்தில்
ஆகியது. இன்றைய தொல்லியல் பழைய முசிறி/முயிரிக்கோட்டைக் கண்டுபிடித்துவிட்டது
அதிசயம்.

அடுத்த மடலில், தொல்லியல் பேரா. கே. வி. ராமன் 1970 (ஆராய்ச்சி) இதழில்
தன் அகழாய்வுகளை விளக்கி ஆங்கிலத்தில் எழுதினார். வஞ்சி மாநகர் (சங்க காலம்) என்பது 
மேற்குக் கடற்கரையில் இல்லை என நிறுவினார். அதன் தமிழாக்கம் பார்ப்போம்.
Many archaeologists have written books later: R. Nagaswamy, Iravatham, K. Rajan, Dinamalar R. Krishnamurthy (Fellow, Royal Numismatics Society).

நா. கணேசன்

2017-12-09 5:27 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
பதிற்றுப்பத்துப் பாடலின் 14ம்.அடியிலிருந்து 20ம்.அடிவரை மட்டும் பார்த்துள்ளீர்கள்.-3வது வளம் . 
அந்த ஊருக்கு பாலைக்கௌதமானார் உரித்தாக்கும் முதல் வளம் நெய்தல் வளம்.---ஞாழல் மரம் ,நெய்தல்பூ ,பாசடைப் பனிக்கழி ,புன்னைமரம் ,குருகு ,கானல் ,ஓங்குமணல் அடைகரை ,அடும்பு ,புணரிவளை ,முத்து ,துகிர் என்று முதலடியில் இருந்து 8ம்.அடிவரை வருணிப்பது உங்கள் கவனத்தில் படவில்லையே !என்?
2வது வளம் குறிஞ்சி வளம். -9ம்.அடியிலிருந்து 13ம்.அடி வரை.
4வது வளம் முல்லை வளம் -22ம்.அடி  முதல் 25வரை .
இது கடற்கரைத் தலைநகர் .
பாடல்தலைவனின் தாய்வழித் தாத்தா வெளியன் வேளின் ஊர் இன்றைய விழிஞம்.-குமரித்துறைக்கும் ,முசிறித்துறைக்கும் இடைப்பட்டது.
விழிஞத்திலிருந்து குமரி மிகவும் அருகில் உள்ள துறை.அதனால் இந்த மூதூர் கொங்கு வஞ்சி அன்று.மேற்கரை வஞ்சி .
கண்மணி 

இரவு உறங்கப்போகுமுன் முழுப்பாடலும் படித்தே எழுதினேன். விரிவாக, நான்கு திணைகளும் பேசும் அப் பாடல்
பாலக்காட்டுக் கணவாய் நிலவியலைக் குறிப்பிட்டுப் பாடும் பாடல். தொண்டித்துறைமுகம் மேற்கிலும்,
இடையே கோவையும், கிழக்கிலே வஞ்சிமூதூர் (கரூர், சங்கச் சேரர் தலைநகர்) உள்ளதை திணைகளைப்
பாடும் அழகிய பாடல்.

முதலில் பொன்னானி நதியின் கழிமுகம். முசிறித்துறை சூர்ணி/சுள்ளி ஆற்றின் கழிமுகத்தில் கிடைத்தாற்போல,
வருங்காலத்தில் பொன்னானி (பொன்வானி) ஆற்றின் கழிமுகத்திலே கிடைக்கும் தொல்லியலுக்கு என நம்புகிறேன்.
அத் தொண்டி, முசிறி வந்த ரோமானியக் காசுகள் கொங்குநாட்டிலே ஏராளம் கிடைக்கின்றன. இந்தியாவிலேயே
ரோமானியக் காசுகள் அதிகம் கிடைக்கும் இடம் சேரர்களின் கொங்குநாடுதான். இவை பொன்வானி - அயிரை மலையிலே
உற்பத்தி - வழியாக வந்திருக்க வேண்டும். முதல் 8 அடிகள், தொண்டித்துறை, பொன்னானி தாலூக்கா.

பின்னர் உதியன் அரசர்களின் அயிரை மலை, குழுமூர் (இப்போது குழுமம்/கொழுமம்), போன்ற குறிஞ்சித் திணை
வருணனை. உதியன் கூட்டத்தார் “பல்யானை” என்று பெயர்பெறுவது இம் மலைகளால். அயிரை, காஞ்சி போன்ற
நதிகள் பிறக்கும் சைய மலைப்பகுதிகள்.

அதன்பின் 14-20 : நீங்கள் குறிப்பிடும் வஞ்சி மூதூர். ஆன்பொருனையும், காவிரியும் வளம்பெருக்கும் மருதத் திணை.

பின்னர், நாமக்கல், செங்கோடு, சேலம் (< சேரலம்) போன்ற கொங்கின் முல்லைத் திணைநிலங்கள். கொல்லியின்
அடிவாரப் பகுதியாய முல்லைத் திணை.

அழகான பதிற். 30-ஆம் பாடலைப் படிக்கச் செய்தமைக்கு நன்றி.


NG<சங்க இலக்கியத்தில் 62 முறை மூதூர் இடம்பெறுகிறது. பல ஊர்களை மூதூர் எனக் குறிப்பிட்டுள்ளது.
உ-ம்: ஆகொள் மூதூர், பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர். வஞ்சியும் ஒரு மூதூர் (கொல்லிநகர்)>


On Friday, December 8, 2017 at 11:27:30 PM UTC-8, kanmanitamilskc wrote:
> 62 மூதூர்களும் வஞ்சி அன்று.
ஆனால் பதிற்றுப்பத்து கூறும் மூதூரும் ,தொன்னகரும் வஞ்சியே .
பதிற்று .-30ம்.பாடல் சொல்லும் மூதூர் கொங்கு வஞ்சி என்று சொல்ல முடியுமா?
முயற்சி செய்து பாருங்கள்.
கண்மணி 


2017-12-09 13:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சொல்லமுடியும். பதிற். 30-ஆம் பாடல் மருதத்திணையில் உள்ள மூதூர் என்கிறது.
கொல்லிநகர் வஞ்சி மூதூர் ஆன்பொருனை, காவிரி இரண்டும் பாய்ந்து வளம்பெருக்கின மருதத்திணைப் பேரூர்.
அப் பேரூரில் விழவுகாண சீறூர்களின் மக்கள் கூடுவர்.

நா. கணேசன் 
-- 



 
--
Reply all
Reply to author
Forward
0 new messages