Re: [MinTamil] Re: [வல்லமை] மனுநூல் தமிழ் நூலா ?

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 28, 2020, 4:36:23 AM10/28/20
to housto...@googlegroups.com, vallamai, vannan vannan, vaiyavan mspm, anne vaigai, nandhitha kaapiyan, Giritharan Navaratnam, சி. ஜெயபாரதன், புகாரி


On Tue, Oct 27, 2020 at 10:59 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
மனுநூல் பெரிய புராணத்தில் இல்லை.  மனுநூலை சேக்கிழார் எழுத வில்லை.
மனுநீதி என்னும் ஒருசொல் மனுநூல் தமிழ்நூல் என்று சொல்லாது.
ஈவே ராமசாமி நாயக்கரை ராம பக்தர் என்று சொல்வீரா ???

மநுநீதி என்னும் ஸ்ம்ருதி நூல் ஸம்ஸ்கிருதம். அதில் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.
கல்வெட்டுகளில் ’மனுவாறு தழைத்திட’ என்பதுபோன்ற சொற்றொடர்களைக் காணலாம்.
ஆனால், தமிழ் மன்னர்கள் யாரும் மனுநீதியை அடிப்படையாக்கி ஆண்டார் இல்லை. சும்மா
ஒரு பேச்சுக்கு சொல்வது தான். வேதநெறி தழைத்தோங்க என்பார்கள். ஆனால், யார் வேத வழி
நின்றார். வேத வழி சொன்னது என்னவென்றே தெரியாது. சங்க காலத்தில் வேதம், சமணம்,
ப்ராஹ்மீ லிபி வருகை பற்றிய ஆய்வுரை:  https://youtu.be/WyB3h08w0Yc
மின்றமிழ் ஸோஸியல் டைம்பாஸ் குழுக்களில் எத்தனை பேருக்கு இவை தெரியும்? எத்தனை நிமிஷம்
இவற்றை ஆராயச் செலவிடுவர்? ஒத்தவறி ஆராட்சிகளை அறிவோம்.

இப்போதைய மொழிபெயர்ப்புகளைக் கொண்டு, பழைய தமிழர் வரலாற்றைக் கணிக்க முடியாது.
ஆனால், கேள்வியே படாத மனுவை நடுநாயகம் ஆக்குவது த்ராவிட கக்‌ஷிகளின் அரசியல்.
ஓட்டு வாங்குதற்காக. 

ஏன் மனு பற்று மின்றமிழ் குழுக்களில் பேச்சு எனப் பார்த்தால், வாட்ஸப் குழுக்களில் பெரியார்
வெளியியிட்ட மனுநீதி நூல்கள் பிடிஎப்களை சரமாரியாக அனுப்புகின்றனர். ஸோஸியல் மீடியாக்களில்
அதிகம் பேசப்படுவது மனுநீதி. இது வரும் எலெக்‌ஷனுக்காக என தெரிகிறது.

-----------

பஞ்சாபில் பிறந்த இசுலாமியர் என வாசித்துள்ளேன். தமிழ் வளர்க்கும் குஷ்பு கலைஞர் காலத்தில் திமுக,
பின்னர் காங்கிரஸ். இப்போது பாஜகவில் களமிறங்கி இருக்கிறார். மனுநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்.

பேரறிஞர் அண்ணா திக (பெரியார்), திமுக “இரட்டைக் குழல் துப்பாக்கி” ஆகச் செயல்படும் என்றார்.
இந்திரா காந்தி போன்றோரால் அதிமுக உருவாகித் தழைத்தது. தில்லிகை தர்பாரால் அதிமுக வைத்திருக்கப்படும்
என எண்ண இடமுண்டு. பார்ப்போம். திமுக, காங்கிரஸ் இரட்டையராக எப்பொழுதும் இருப்பர் எனத் தெரிகிறது.
ஜெமினி ஸ்டுடியோஸ் இரட்டை போல: http://8ate.blogspot.com/2009/05/famous-gemini-twins-of-gemini-studios.html
இந்தியாவில் (டில்லி, மதறாஸ்) பரம்பரை ஆட்சி எப்பொழுதும் இருக்குமா என்பது கேள்வி. தேர்தல்கள் நிர்ணயம்
செய்யும். தமிழ் நாட்டில் கால்ட்வெல் போன்றோர் ஏற்படுத்திய தியரிகளால், சுந்தரனார், ... தமிழில் பெயர்த்தனர்.
எத்தனை நாள் த்ராவிட கக்ஷிகள் அதை வைத்து ஓட்டும் என தெரியாது. அண்ணா தம்பிகளுக்குக் காட்டிய வழி:
பரம்பரை ஆட்சி மாநில அளவில், காங்கிரஸ் காடி ஏறலை என்றால், டில்லியுடன் சமரசம் ஏற்பட்டு பிழைப்பு தொடரும்
என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆள முடியுமா என்பதும் ஒரு கேள்வி. தமிழ்
தேசியர்கள் அக் கேள்வியை எழுப்புகின்றனர். நண்பர் ருத்ரா பரமசிவன் போன்றோர் புதுக்கவிதைகளில் இனிவரும்
அரசியல் பற்றிப் படிப்பேன். 

என்னைப் பொருத்தவரை, தமிழ்நாடு ஸ்டேட் பாலிடிக்ஸ் என்பதே காசுபார்ப்பது என்றாகிவிட்ட நிலையில்,
ஐந்தாண்டுக்கு ஒருமுறை புது முதல்வர் வரணும். தமிழர்களாக இருக்கணும் (அதாவது குறைந்தது நான்கைந்து தலைமுறையாவது
தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கணும்) ...
image.png

காலம் சமனப்படுத்தும். தமிழர் தம் ஆட்சி பெறுவர் என்பது நம்பிக்கை.

தேசிய கவிஞர் பாரதி:

(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய். 

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் காட்டுவள் தமிழ்த்தாய். அவளை வணங்குவோம்.
த்ராவிட கக்ஷியினர் செய்வது தமிழ்த்தாய் வணக்கம் என்கிறார்கள். நேற்றுதான்,
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்த்திடும் த்ராவிட இலக்கியத்தில்
கார்த்திகேயனின் நாள் மீன் பற்றி ஆராய்ந்து எழுதினேன்.

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
NG

ஒரு கம்யூனிஸ்ட் பார்வை - தமிழ்நாட்டு அறிஞர் பற்றியது.

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

-

September 16, 2009

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960-களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணாதமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்” பதவி சுகம் கண்டு பொறுக்கித் தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி”களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலே, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழிந்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு” என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். “ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன்” என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்க விட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.

இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963-ம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு” நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.

மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25-ம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9-ம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.

இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு” எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.

ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957-ல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்” என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.

தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957-ல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.

கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்” ராஜாஜியை “குல்லுகப் பட்டர்” எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

1967-ல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.

நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி”யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.

“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்” என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” எனும் தத்துவம்(!)தான்.

அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக் காட்டினால் ஐம்பதாயிரம் கூடும். முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.

கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.

அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.

வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்” எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.

கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்” விளக்கம் வேறு தந்தார்.

எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்” பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70-களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90-களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்”, “தளபதி” என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.

பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.

கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.

___________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2008

___________________________________

 

சி.ஜெயபாரதன்

On Tue, Oct 27, 2020 at 7:52 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
இந்தியாவிலே  இப்போது தேர்தல் காலத்திலே மொழிப்போர், மதப்போர், ஜாதிப்போர், இனப்போர், மாநிலப் போர்களைத் தமிழகத்திலே துவக்கி வருவது யார் ? யார் ? யார் ?

பெரியார் தீராவிடக் கருப்பணிக் கலகத்தார்.  

சி. ஜெயபாரதன்

On Tue, Oct 27, 2020 at 7:39 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
மனுநூல் தமிழில் எழுதப்பட்டு யார் பின்பற்றி வருகிறார் ???

சி, ஜெ,

On Tue, Oct 27, 2020 at 2:23 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
So Manu has never been a Tamil Literature at any date.
S.Jayabarathan


On Monday, October 26, 2020 at 11:00:39 PM UTC-5 rajam wrote:
வணக்கம் ஜெயபாரதன் ஐயா. மனுநூல் எனப்படும் ‘மனுஸ்ம்ருதி’ தமிழ்நூல் இல்லை. 

மனுவை வெறுக்கும் தமிழர் எவரும் மனுநூலை முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. சமஸ்க்ருத வெறுப்பாளர் எப்படி மனுநூலை முழுதாகப் படித்திருக்க முடியும்? அங்கேயும் இங்கேயுமாக ஒரு சில மொழிபெயர்ப்பில் தம்மை இழந்துவிடும் நிலைதான் [including me]. 

நீங்கள் குறிப்பிடும் ‘பகுத்தறிவுக் கருப்பணி’க்கு யார் யாரையோ மனத்துள் கொண்டு எப்படியெப்படியோ   ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சி வேரூன்றிவிட்டது! :-( 

பண்டைத் தமிழகத்தைப் பொருத்த அளவில் … 

முதன்முதலாக மனுநீதிச்சோழனைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அது … ‘யார் எவரென்று பார்க்காதே; பழிக்குப் பழி வாங்கு’ என்ற நெறியில் இயங்கிய கதை. 

அதே போல மணிமேகலையிலும் … அறவழிச் சென்ற மணிமேகலையைத் தொடர்ந்த உதயகுமரன் … காஞ்சனன் என்ற விஞ்சையனின் வாளால் வெட்டுண்டு இறந்தான். அதைக் கேள்விப்பட்ட  உதயகுமரனின் தந்தை சோழ அரசன் சொன்னது (மணிமேகலை, சிறைசெய் காதை, வரிகள் 206-214):

நான் செய்யவேண்டிதைத் தான் செய்தான் ஆகலின் … விஞ்சையன் [காயசண்டிகையின் கணவன் காஞ்சனன்] தகவிலன்.
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலனின் காவல் இல்லாவிட்டால் இல்லை. 
[தவறு செய்த] மகனுக்கு ஏற்ற முறையை வழங்கிய மன்னவன் [மனுநீதிச்சோழன்] வழியில் ஒரு தீவினையாளன் [உதயகுமரன்] தோன்றினான் என்பது என் போன்ற வேந்தர்களின் செவிக்கு எட்டுவதற்குமுன் இவனை [உதயகுமரனை] ஈமத்தில் ஏற்றுக. 

இங்கே … அறவழியில் சென்ற மணிமேகலையைத் தொடர்ந்து சென்ற உதயகுமரனுக்கு ஏற்ற தண்டனையைத் தான் வழங்க முடியவில்லையே என்ற தவிப்பு சோழ அரசனுக்கு. 
‘பழிக்குப் பழி’ என்ற கோட்பாடே இங்கே ஆட்சி செய்வதாக உணருகிறேன். 

இதே-போலத்தான் நீங்கள் குறிக்கும்  ‘பகுத்தறிவுக் கருப்பணி’யாளர்களும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது என் கருத்து. 

வணக்கத்துடன்,
ராஜம் 


N. Ganesan

unread,
Oct 28, 2020, 4:59:19 AM10/28/20
to housto...@googlegroups.com, vallamai, vannan vannan, vaiyavan mspm, anne vaigai, nandhitha kaapiyan, Giritharan Navaratnam, சி. ஜெயபாரதன், புகாரி

பஞ்சாபில் பிறந்த இசுலாமியர் என வாசித்துள்ளேன். தமிழ் வளர்க்கும் குஷ்பு கலைஞர் காலத்தில் திமுக,
பின்னர் காங்கிரஸ். இப்போது பாஜகவில் களமிறங்கி இருக்கிறார். மனுநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்.


N. Ganesan

unread,
Oct 31, 2020, 4:27:46 AM10/31/20
to vallamai, vannan.1935, vaiyavan mspm, anne vaigai, nandhitha kaapiyan, housto...@googlegroups.com
On Mon, Oct 26, 2020 at 11:12 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வணக்கம் ராஜம் அம்மா.

இருப்பதை இல்லை என்பதும், இல்லாததை இருப்பதாய்ச் சொல்வதும் பகுத்தறிவாளர் வாய்மொழி.

நன்றி அம்மா.
கனிவுடன்
சி.ஜெ.

I get mails from indology list. Some questions and answers on Manu Smriti,
and the recent politics in Tamil Nadu. Some mails from that list. ~NG
------------------------------------------------------------------------

<<
Dear List Members,

I need your help in understanding something from Manusmriti.

Is there any passage/rule in this text that states that ‘all women are prostitutes’? Or anything close to such thought?

In Tamilnadu, there is a severe extremist movement wanting to burn Manusmriti. As the next election is approaching, the political scene is getting ugly as usual. One party’s propaganda includes that Manusmriti should be removed/burned down since it looks at women as prostitutes.

I was wondering if any of you would kindly check Manusmriti and let me know if he really declared that all women are prostitutes.

I would very much appreciate your help.

Thanks and regards,
V.S.Rajam
>>

Patrick Olivelle, Austin, Texas:
There is no statement of Manu that states all women are prostitutes. There are statements which emphasizes the need for women to be under male control/protection, the need to guard them from even the slightest attachment to sensual pleasure (saṅga). See Manu 5.148ff, and 9.1ff.

Patrick
---------------
Hans Hock, Illinois
Dear Colleague and All,

Check Manu 9.14-17; that’s where you find language (pauṁścalyā(t) etc.) that could be taken to suggest that all women are “prostitutes”, but the purpose of these verses seems simply to be to cast doubts on the trustworthiness of women and thereby to justify the need to keep them under constant control.

Best wishes,
HHH
-------------
The context at the beginning of Chapter 9 is the law or duties between a man and wife. However, the misogyny of the text is unmistakeable (though hardly out of line with nearly all texts in antiquity) and 9.14-15 seem to (mis-)characterize females generally. However, I would add is that pauṃścalya here denotes lust or an innate sexual desire for men. While it may sometimes refer to a prostitute, the primary meaning of “prostitute” (at least in American English) is one who has sex in exchange for money. Granted, there are other meanings, but the money piece matters, I think, because the condemnation in Manu is about women’s temptations and attributed inclinations toward adultery, not prostitution in a strict sense. The passage is exhorting husbands to control their wives (or, more deviously, keep women hyper-occupied, 9.10-12) in order to prevent their adultery. It then justifies this control on the false grounds of women’s innate lechery, fickleness, and general inconstancy.

The question might be asked whether the English distinction of adultery and prostitution maps on precisely and consistently to Sanskrit terms, but it would seem important to keep the two distinct at the outset.

Best, Don

Don Davis
Dept. of Asian Studies
University of Texas at Austin
------------------

Thank you very much!!! You can imagine how it trickles down to Tamilnadu, especially to people who don’t know Sanskrit and who hate Hinduism, brahmins, … and so on. People who hate brahmins use Manusmriti and similar texts as their tools in their politics. I wonder how many of them could read these original texts in Sanskrit. Depending upon the translations, everyone’s understanding and interpretation may vary. It is truly a sad scene.

Thanks and Regards,
V.S. Rajam

-------------------

Thanks for having raised these points including those to current events in
Tamilnadu, useful to know even for list members who primarily want or hope
to be able to pursue their Indological studies as an enterprise of 'pure
science'.
The ways of use and abuse of a text are almost limitless, and one of these
uses, probably one of the most valid ones, is: to better understand an
ancient society.
If that is our aim, the Manusmrti as a source on the position of women in
classical India has to be supplemented, minimally, by the Mahābhārata,
Sources on the Buddha and Āmrapālī and on the Buddha and women aspiring to
become nuns, the Kāmasūtra ... a closer study from a modern politicized
perspective may or may not lead to the burning of these sources as well...
With best regards,
Jan Houben

-------------

 
On Oct 26, 2020, at 3:48 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:


மனுநூல் தமிழ் நூலா ?

சி. ஜெயபாரதன்


பாரத நாடு 
பாரில்
பழம்பெரும் நாடு.
பைந்தமிழ் நாடு
குமரி முதல்
இமயம் வரை பரவி,
கடல் கடந்து,
சோழன்
ஈழம் முதல்
இந்தோ சைனா வரை
புலம் புகுந்து,
முச்சங்கம் வைத்து,
மூவேந்தர்
முத்தமிழ் வளர்த்து
பத்தாயிரம்
ஆண்டுகளாய்
ஔவை மூதாட்டி,
ஆண்டாள்,
அன்னை தெரேசா,
இந்திரா காந்தி,
ஜெய லலிதா,
உதாரண மாதராய்
மங்கையர் குல
மாணிக் கங்களாய்
ஏணிமேல்
ஏறி நிற்கையில்,
நாறும்
கழிவின் மேல் 
பகுத்தறிவுக் கருப்பணி
கல் வீச லாமா ?
எழுத்தில்லா 
வடமொழி 
வாய்மொழியாய்
வந்த 
பண்டை மனுநூல் மேல்
சண்டை ஏன் ?
வடித்தவன் எவனோ ?
வாதம் ஏன் ?
நமக்குள்
பிளவு, பிணக்கு ஏன் ?
தமிழர்க் கென
எழுதப் பட்ட 
சட்ட நூல்
ஆட்சி நூல் அதுவா ?

==================




  

Virus-free. www.avg.com

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyDe65NNdSvsya_5xv7Q8H_1B7WzLQTKu%2B-tmYfigLHNQA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages