சிமிழ்த்தல் - closing or shutting down the bird trap

72 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 17, 2015, 1:26:40 AM3/17/15
to Santhavasantham, housto...@googlegroups.com
சிமிழ்த்தல் - closing or shutting down the bird trap

குறிஞ்சிப்பாட்டிலும், மலைபடுகடாத்திலும் சங்கினால் ஆன
வளையல்களுக்குப் புள் என்று இருப்பதை நச்சினார்க்கினியர்
விளக்கியிருக்கிறார். குருகு (அ) புள் என்று Egrets இனங்களால்
சங்கு வளைகள் தமிழ் இலக்கியங்களில் ஒரு 1500 வருஷமாய்
அழைக்கப்படுகின்றன. 

புள் எனப்படும் வளையல்கள் என்ற பழைய பொருளை விட்டுவிட்டு
மேலுள்ள இலக்கியங்களின் வேறு பொருள் உள்ளதா? - எனப் பார்க்க முயற்சி. 
புள் என்றால் பறவை ஒலி போல தலைவன் தலைவி எழுப்பும் ஒலிகள் என்று 
விளக்க முற்படும்போது, சிமிழ்த்தல் என்ற குறளின் சொல்லுக்கு 
ஒரு புதிய பொருளை திரு. சரவணன் முன்வைக்கிறார். அதாவது, 
சிமிழ்த்தல் = (வேடர்) ஒலி எழுப்புதல்.
இதனைத் தொடர்ந்து சிமிழ்த்தல் = மிமிக்ரி செய்தல் என்று சங்கப் பாடல்
போல புதுப்பாடல் செய்யும் கவிஞர் ருத்ரா பயன்படுத்தத்
தொடங்கியுள்ளார்.
"...புதல் மறைத்து வேட்டுவன் 
புள் சிமிழ்த்தற்று"

வாழ்க்கையின் தேடலே இங்கு வேட்டை.
நம் மனங்களுக்குள் மறைந்து கொண்டு
நம்மையே (மன சாட்சி) "நடித்துக்காட்டி"
(புள்ளின் குரல் போல் மிமிக்ரி செய்து)

புள் சிமிழ்த்த வேட்டுவன் அம்பு ஆகினளே
புண் உமிழ் நெஞ்சின் குருதி குமிழ‌
[...]
 மறைந்திருந்து பலப்பல புள்ளின் பல்குரல் ஒலித்து ஒரு வேடனைப்போல் 
பறவைஒலி காட்டி (புள் சிமிழ்த்து..மிகிக்ரி செய்து) மாயம் செய்கிறாள்.
அந்த வேடனின் கள்ள அம்பு போல் (அக்குரல்கள் போல்) ஆகினாள் தலைவி.

வேந்தன் சரவணன்:
”இந்த புள் ஒலி பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு பறவையின் ஒலியாகவே இருக்க வேண்டும். இப்படி பறவையின் ஒலியை எழுப்பி வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதுமுண்டாம். இதனை வள்ளுவர் கூடா ஒழுக்கத்தில் கூறுகிறார்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274


2015-03-11 9:40 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
அம்மா

புள் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஒரு சங்கேத ஒலிக்குறிப்பாக இருக்கலாம். அதாவது, தலைவன் தான் வந்துவிட்டதை தலைவிக்குத் தெரிவிக்க ஒருவகையான ஒலியை எழுப்புவான். அதைக்கேட்டதும் தலைவி அவனைச் சந்திக்கத் தயாராவாள். 

இந்த புள் ஓசையினை தலைவியின் குடும்பத்தார் அறிந்துவிட்டதனால் தலைவியை வெளியே விடாமல் இற்செறித்தனர். இதனால் தலைவியை தனிமைத் துன்பம் அலைக்கக் கழிக்கத் துவங்கியது. ”

---------------------------

ஆனால், வள்ளுவர் சிமிழ்த்து என்று பயன்படுத்தும் போது வேடன் “மிமிக்ரி”
செய்தான் என்று சொல்லவில்லை.

சிமிழ் என்றால் மூடி உள்ள செப்பு. கண் இமை மூடுதலைச் சிமிட்டுதல் என்கிறோம். 
பறவைக் கண்ணியை மூடிப் புள்ளைப் பிடித்தலைச் சிமிழ்த்தல் என்கிறார் 
வள்ளுவர். இங்கே, சிமிழ்த்தல் = மூடுதல், மூடிப் பிடித்தல் என்பது பொருள். 
ஒலி எழுப்புதல், மிமிக்ரி செய்தல் என்றெல்லாம்
சிமிழ்த்தல் என்ற வினைக்கு அர்த்தமில்லை.

இமிழ்- < சிமிழ்-

சிமிழ்த்தல் - closing like a shutter (of a bird trap).
Think of a camera lens shutter while photographing.
(It looks imai 'eye lid' has to do with this verb, cimizttal. And, cimizttal obviously has nothing to
do with mimicry or making simulation of bird sounds).

காழ் - காழ்த்தல், காழ்த்து, காழ்ப்ப, காழ்த்த 
சிமிழ் - சிமிழ்த்தல், சிமிழ்த்து, சிமிழ்ப்ப, சிமிழ்த்த
குழிழ் - குமிழ்த்தல், குமிழ்த்து, குமிழ்ப்ப, குமிழ்த்த
ஊழ் - ஊழ்த்தல், ஊழ்த்து, ஊழ்ப்ப, ஊழ்த்த

முற்றிலே காழ்த்தவன, காழ்க்கும், சிமிழ்த்தன, சிமிழ்க்கும் முதியனவாய் வரும். காழ்த்தல் - முதிர்தல், உறைத்தல். “ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு’’ (வள்ளு.). “காழ்க்கும் வெள்ளிலை’’ (சிந்தா.). சிமிழ்த்தல் - கட்டுதல், அகப்படுத்தல். “சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட’’ (சிந்தா.). குமிழ்;தல் - திரண்டெழல். ஊழ்த்தல் - உதிர்தல், பதனழிதல், மலர்தல். “மரங்களிலைய+ழ்த்து’’, “மதுக்கலந்தூழ்த்து’’ (சிந்தா). “இணரூழ்த்து நாறாமலர்’’ (வள்ளு.). “அலரூழ்க்கும்’’ (தணிகை.). இயைபின்படி விகுதிகள் சேர்தலாற் பலவிதமாகிய பெயர்களும் இங்கே தோன்றும்.

 1246: துவல்-உதிரிப் பூ, அருச்சிக்கும் பூ; 'துவலைச் சிமிழ்த்து நிற்பவள்'-(திருப்.280)- தினைப் புனக்காவலில் வள்ளியம்மை பூ கட்டிக் கொண்டிருந்தது). சிமிழ்த்தல்- கட்டுதல். 'அடியார் இடு துவல்' சம்பந்தர் 377-2.

“முன்னை நான் செய்த வல்வினைச் சிமிழ்ப்பால் மோகவாரியில் மூழ்கினேன்” என உரைக்கின்றார். சிமிழ்த்தல் - பிணித்தல். பறவை வேட்டுவர் புள்ளினங்களை வலைவீசிப் பிணித்தலைச் சிமிழ்த்தல் என்பர். “புதல் மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று” (குறள். 274) என வருதல் காண்க. 

தேடிய கால தூதர் சி்மிழ்த்தல் விட்டொழிவரே
 தேடிய காலதூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே - (உயிரை) 
தேடிப்பற்றிய எமதூதர் கட்டிச் செல்லுதலை விடுத்து நீங்குவரோ? (நீங்கார்)

குறளில் சிமிழ்த்தல் என்றால் விரைந்து மூடுதல் - பறவைக் கண்ணியை
காமிரா ஷட்டர் போல் மூடுதல், கண்ணிமை இமைப்பது போல் விரைந்து
மூடுதல், கட்டுதல்/பிணித்தல் எனப் பொருள். குறளில் சிமிழ்த்தல் என்றால் மிமிக்ரி என்னும்
ஒலிகளை எழுப்புதல் என்ற பொருள் இல்லை என்பது தெளிவு.

குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் வரிகளில் புள் = வளை. இங்கே பறவை ஒலி என்ற பொருள் இல்லை.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274
இக் குறளிலும் வள்ளுவர் எங்கும் பறவை ஒலி என்றோ, அதை மிமிக்ரி செய்கிறான் வேடன் என்றோ
குறிப்பிடவேயில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 18, 2015, 11:19:50 PM8/18/15
to சந்தவசந்தம், housto...@googlegroups.com


On Tuesday, August 18, 2015 at 7:45:34 PM UTC-7, ஊமைக்கனவுகள் wrote:
பெருந்தகையீர் வணக்கங்கள்.

என்னுடைய கருத்து பிறழ உணரப்பட்டது எனக் கருதுகிறேன்.
சிமிழ்த்தல் என்றால் சீட்டி அடித்தல் என்று பொருளென்று நான் குறிப்பிட வரவில்லை.
சிமிழ்த்தல் என்ற சொல் பறவைகளைப்போல இதழ்பயிற்றி ஒலியெழுப்புதல் என்ற காளிங்கர் உரை நோக்க, அவ்வாறு இதழ்குவித்து ஒலியெழுப்பும் சீழ்க்கை என்று இன்று நாம் வழங்கும் சொல்லை  ஓராற்றான் ஒப்பு நோக்கக் கருதிக்கூறினேனே
அன்றி வேர்சொால் ஆய்வுவரம்பினகத்து நான் சென்றேன் இல்லை.
இது வெறும் அனுமானமே!

தங்களின் கருத்துகள் என்னை நெறிப்படுத்தும்.

தொடர்கிறேன். நன்றி.


இதுவரை சிமிழ்த்தல் என்றால் பிணித்தல்/கட்டுதல் என்ற பொருளில் தான் பாடல்கள் கண்டிருக்கிறேன்.
ஒலியெழுப்புதல் என்ற பொருள் சிமிழ்த்தல் என்பதற்கு வரும் இலக்கியம் எதுவும் காணோம்.
இன்னிலைச் செய்யுள் (திருக்குறள் போல 18 கீழ்க்கணக்கு) ஒலியெழுப்பலைச் சொல்லி,
பின் புறாப் பறவையைப் பிணித்தலை (= சிமிழ்த்தலை) சொல்வதும் ஆழ நோக்கலாம்.

சிமிழ்த்தல் = ஒலிஎழுப்பல் என்பதற்கு பழைய பாடல்கள் கொடுத்தால் நன்றியுடையேன்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 20, 2015, 9:54:22 AM8/20/15
to சந்தவசந்தம், housto...@googlegroups.com


On Thursday, August 20, 2015 at 4:46:34 AM UTC-7, ஊமைக்கனவுகள் wrote:


தங்களது சிமிழ்த்தல் பற்றிய விவாதத்தில் இருந்து விலகிச் சென்றதை மன்னிக்க.
தமிழ் என் துறையன்றென்றாலும் ஓரளவிற்கான தமிழ் நூல்கள் என்னிடத்திருக்கின்றன.
நீங்கள் சொன்ன  பழனியப்பப் பிள்ளை உரை உட்பட. 

பழனியப்பபிள்ளையவர்கள் குறிப்பிட்டிராத பாடல் கந்தபுராணத்தில்
கச்சியப்ப சிவாச்சாரியர் பாடியுள்ளார்கள். பழனியப்பர் கூறும் ”மட்பகை என்பது தனிமொழியாயோ தொடர்மொழியாயோ குயவர் கையாளும், சுழலுருளி, கொட்டுக்கோல், அச்சுச் சட்டம், உலை, முதலான எதன் பெயராயும் யாண்டும் வழங்கப்பெற்றமைக்குச் சான்றில்லை.” என்பதற்கு கந்தபுராணப் பாடல் போன்ற சான்றுகளோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

கந்தபுராணச் செய்யுள்:

மட்பகை வினைஞ ரானோர் வனைதரு கலங்கள் முற்றுந்
திட்பமொ டமர்ந்த கற்றுண் சேர்ந்துழிச் சிதறு மாபோல்
கொட்புறு புழைக்கை வெய்யோன் குறித்தெறி பிறங்கல் யாவும்
ஒட்பம தடைந்த வீரன் மிசைபட உடைந்த அன்றே.


மண்ணைப் பகுக்கும் கருவி ஆகிய குயம் (paring knife), ஊசி போன்றன

குறளில் ஆள்கிறார் என்பது கந்தபுராணம் போன்றவை தரும் சான்றுகளால்

தெளிவாகிறது.


குயம் என்றால் கூர்மையான கத்தி. கூர்மையான பிளேடு போல் உள்ள புல்லுக்கு (தர்ப்பை) குசை என்பதும்
இதனால் தான் போலும். குயவரி = புலி, paring knife போலுள்ள வரிகளைக் கொண்டதால்.
குயவன் என்னும் பெயர் இந்த மட்பகைக் குயம் கொண்டு அமைந்திருக்கலாம்.

மட்பகை - இலக்கியச் சான்றுகளால் Potter's tech vocabulary எனத் தெரிகிறது. வள்ளுவர் பல
தொழில்களின் கலைச்சொற்களை ஆள்கின்றார். உ-ம்: யானை சாஸ்திரம். குயவன் மட்பகை, ...
மண்ணைப் பகுக்கும் கருவி = மட்பகை. தேவையற்ற மண் இருந்தால் பானை அழகு கெடும்,
உட்பகை இருந்தால் இருக்குமிடம் கெடும் என்கிறது குறள்.




மால் ஏனமாகி மண்ணைப் பகுத்தல்:
விண்பயில மண்பகிரி வண்பிரமன் (தேவாரம், 3-ம் திருமுறை).


விண்பயில மண்பகிரி வண்பிரம
     னெண்பெரிய பண்படை கொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
     தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
     புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
     பண்புகளை சண்பைநகரே

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 20, 2015, 10:18:12 AM8/20/15
to சந்தவசந்தம், housto...@googlegroups.com
மட்பகை என்பதற்கு வள்ளுவரின் பொருள் கந்தபுராணச் செய்யுள் போன்றவற்றால் துலங்குகிறது.
வள்ளுவரின் சிமிழ்ப்பு என்பதன் பொருள் (=பிணித்தல்/பிடித்தல்/கவர்தல்) சீவகசிந்தாமணி, மேருமந்திரபுராணம், ... என்று
பற்பல நூல்களால் தெள்ளிதின் விளங்குகிறது. இங்கே சில சான்றுகள்:

காளிங்கர் சிமிழ்த்தல் என்றால் புட்குரலையெழுப்புதல் என்ற பொருள் பொருந்துமா என்பதனை
இன்னொரு விதமாகவும் பார்க்கலாம்.  

ஆண்டெனா நீண்ட, பின்கால்கள் நீண்ட கிரிக்கெட்.
4 த்ராவிட மொழிகளிலும் இது சிமிலி எனப் பெயர்.
கறுப்பு வண்ணத்திலும், பச்சை வண்ணத்திலும் சிமிலி உண்டு.
சிமிலி = சிள்வண்டு, சிள்வீடு, சுவர்க்கோழி, ....
முன் ஏண்டெனாக்கள், பின்கால்கள் உறியின் கயிறாகவும்,
சிமிலியின் உடலை உறிப்பாண்டமாகவும் பார்த்திருக்கிறார்கள்.
எனவே, மதுரைக்காஞ்சி, மணிமேகலை இரண்டிலும் சிமிலி = உறி
என்ற பொருளில் பார்க்கலாம்.

சிமிலி:இமிர்தல் - வண்டினம் முரல்வது. சிப்பி:இப்பி, சமணர்:அமணர், ... போல
மிக, மிக பழைய சொல்லாகிய சிமில்தல்:இமில்/ர்தல் பல ஆகுபெயர்களைக்
கொடுத்துள்ளது. உறிக்கு உவமையாகுபெயர். எள்ளுண்டைக்கு சிள்வண்டின்
வண்ணத்தால் பண்பாகுபெயர். இமிர்-:சிமில்- என்பதை சிமிழ்த்தல் என்று ஆக்கினாலும்
அது வண்டுகளின், சுவர்க்கோழியின் ரீங்காரம் தான் ஆகும்.
பறவைகளில் குரல் ஆகாது. 

எனவே, (1) சிமிழ்ப்பு, சிமிழ்த்தல் என்ற சொற்கள் பயிலும் ஏராளமான இலக்கியச் செய்யுள்களை
ஆழ்ந்து நோக்கினாலும் (சிந்தாமணிச் செய்யுளில் புட்குரல் நிமித்தல் பார்த்தோம்)
(2) சிமிலி என்பதன் அடிப்படையான ரீங்காரம் (சிமில்- > இமிர்- ) ஒலி புட்குரல் ஆகாது
என்பதாலும் வள்ளுவர் சிமிழ்த்தல் என்றுரைப்பது bird trapping என்னும் பிணித்தலை.

காளிங்கர் தரும் குறள் உரையில் மட்பகை, சிமிழ்த்தல் படிக்கச் சுவையாக உள்ளன.
ஆனால், இருக்கிற இலக்கியச் சான்றுகள் அவர் தரும் உரைக்கு எதிராய் உள்ளன.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 20, 2015, 10:31:13 AM8/20/15
to சந்தவசந்தம், housto...@googlegroups.com

இன்னொன்றும் பார்க்கலாம். மட்பகை என்று குயவன் கருவியைச் சொல்கிறார் வள்ளுவர்.
மட்பகைஞன் (திவாகர நிகண்டு), மட்பகைவன் (சூடாமணி நிகண்டு) = குயவன்.
Reply all
Reply to author
Forward
0 new messages