தமிழுக்கு ஞானபீட விருது

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 14, 2026, 1:15:48 PMMar 14
to Santhavasantham
 https://thehindu.com/news/national/tamil-nadu/the-elusive-jnanpith-award-for-tamil-litterateurs/article69104191.ece
Tamil littérateurs and why they miss out on the prestigious Jnanpith Award
By T. Ramakrishnan | Jan. 16th, 2025, The Hindu, Madras. Full essay here,
https://x.com/naa_ganesan/status/2032852520129699892

தமிழுக்கு ஞானபீட விருது!
-------------------------------

தமிழிலே, முன்னர் எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் பெற்ற ஞானபீட விருதை இப்போது கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். பாராட்டுகள்!

ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகக் கருதப்படுகிறது.

கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.

ஒரு கேள்வி:
Was there any other poet/writer professing atheism who won the Gnanapitham award? Or, Vairamuthu the first?  

Like Bharatidasan, Vairamuthu has openly said he is an atheist. A poet/writer of the Dravidian movement ruling Tamil Nadu from 1967 onwards. Though Kannadasan changed to Hinduism in his later life, Vairamuthu and Bharatidasan are avowed atheists.

~NG

N. Ganesan

unread,
Mar 15, 2026, 8:37:16 AMMar 15
to santhav...@googlegroups.com
On Sat, Mar 14, 2026 at 8:59 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> / தமிழுக்கு ஞானபீட விருது /
>
> I recall some phrase from the 70s - "India is Indira & Indira is India".

Yes.

>
> / தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. /
>
> Interesting statement.

VM imitates the famous line of Bharaiyar's ChiiTTukkavi (Epistolary Poem).
https://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

மகாகவி பாரதியார் 2 மே 1919 அன்று எட்டையபுரத்தில் எழுதிய சீட்டுக்கவி:

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
       மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
     புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
       சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
       தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
       தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
       வசையென்னாற் கழிந்த தன்றே!

சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
       சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
       மாகவிதை என்று நன்கு!

தமிழிலே 1950 வரை சீட்டுக்கவிகளைத் தொகுத்தால் 1000+ தேரும். செய்யக் கல்லூரிகளோ, பள்ளிகளோ காணோம்.

நா. கணேசன்


>
>
> V. Subramanian

>
> On Sat, Mar 14, 2026 at 1:15 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>>
>>  https://thehindu.com/news/national/tamil-nadu/the-elusive-jnanpith-award-for-tamil-litterateurs/article69104191.ece
>> Tamil littérateurs and why they miss out on the prestigious Jnanpith Award
>> By T. Ramakrishnan | Jan. 16th, 2025, The Hindu, Madras. Full essay here,
>> https://x.com/naa_ganesan/status/2032852520129699892
>>
>> தமிழுக்கு ஞானபீட விருது!
>> -------------------------------
>>
>> தமிழிலே, முன்னர் எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் பெற்ற ஞானபீட விருதை இப்போது கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். பாராட்டுகள்!
>>
>> ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPepBPz7xn71d%3DtvoY6_62CxJoonN4eFutPbarCm-8tcg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 15, 2026, 8:50:11 AMMar 15
to Govindaraju Arunachalam, Santhavasantham, Kanaka Ajithadoss, Banukumar Rajendran, Pandiyaraja Paramasivam, Sirpi Balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, A.R. Venkatachalapathy, TV Venkateswaran
On Sat, Mar 14, 2026 at 8:48 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
பொருள் பொதிந்த வினா. 
வைரமுத்துவின் எந்த நூலுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது?

அறிகிலேன். ஜெயகாந்தனுக்கும் ஒரு நூல் பெயரைக் குறிப்பிட்டதாகக் காணோம். அவ்வாறு ஜெ.கா. நூல் ஏதாவது குறிப்பிடப்பட்டதா?

இலங்கைத் தமிழர் கிருஷ்ண அம்பலவாணர் ஐரோப்பாவில் வசிப்பவர். வைரமுத்தைப் வானொலி நிகழ்ச்சிகளில் பேட்டிகண்டவர். என் கேள்விக்கு அவர் சொன்னார்,

அம்பலவாணருக்கு என் மறுமொழி:
பலமுறை கடவுள் மறுப்பு பற்றிக் கூறி வைரமுத்து தன் கொள்கை என்று கூறியுள்ளார். "கடவுள் என்பதுதான் உடன்பாடு இல்லை. கடவுள் வேறு; தெய்வம் வேறு.  கடவுள் என்பது கற்பிக்கப்பட்டது. தெய்வம் என்பது வாழ்ந்த மனிதனின் குணாம்சங்கள் தான்." திருக்குறளை நுணுகி ஆய்ந்தவர்கள், மணக்குடவர் தொடங்கி, அவர் சமண சமயப் பின்புலம் கொண்டவர் என்றும், முதல் நான்கு அதிகாரங்கள் சான்று என்றும் விளக்கியுள்ளனர். வள்ளுவரது முதல் அதிகாரம், தீர்த்தங்கரர் வாழ்த்து ஆகிய கடவுள் வாழ்த்து. இப்போதைய உரைகாரர்கள், வைரமுத்து போன்றோர், இவ்வுண்மையை மறைத்து விடுவது வழமை. அவரது உரையில் "அறிவு" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வள்ளுவர் கடவுள் வாழ்த்து குறள்களை வெறும் "அறிவு" எனப் பொருத்த முடியாது. வியாபார நோக்கிற்காக, வெளிப்படையாகச் சொல்லவில்லையோ? நடிகர்கள் எவ்வேடம் எனினும் தாங்குவது உண்டே. எம். ஆர். ராதா, சத்யராஜ், ...

-----------------------
வைரவமுத்து > வைரமுத்து எனக் குறுகும். ஒருகாலத்தில் வைரவர்/வடுகநாதர் வழிபாடு பாண்டிநாட்டில் மிகுதி. வைரமுத்து (< வைரவமுத்து) பெண்ணுக்கும் வைக்கும் பெயர்.

அன்புடன்,
நா. கணேசன்

 

rgds,
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

N. Ganesan

unread,
Mar 15, 2026, 11:23:48 AMMar 15
to santhav...@googlegroups.com, Niranjan Bharathi
On Sun, Mar 15, 2026 at 8:06 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
> வைரம் / வயிரம் + முத்து = வைரமுத்து என்று இதுகாறும் நினைத்திருந்தேன். அப்படி பொருள் கொள்ளலாகாதா?

சினிமா உலகில் அவ்வாறே துதி செய்கின்றனர். ஆனால், பெயர் அமைந்த சரிதம் வேறு.
சிறுகூடல்பட்டி கண்ணதாசன் ஊர். அவ்வூர்ப் பெண் வைரமுத்து. தன் பெயர்க் காரணத்தை நீயா நானா நிகழ்ச்சியில்
விளக்கினார். 2011-ல் (15 ஆண்டு முன்!) குறிப்பிட்டு எழுதினேன். வைரமுத்தின் காணொளி கண்டு தெளியலாம்.
https://cruelkingstvshows.blogspot.com/2014/06/neeya-naana-vairamuthu-girl-from.html
(காணொளி தரவிறக்கி அனுப்பவும். பாதுகாக்க வேண்டியது.)

Later on, Sirukoodalpatti Vairamuthu gave an interview during the Jallikattu battle.
https://cinema.vikatan.com/television/78263-village-girl-vairamuthu-speaks-her-love-for-cattle
https://www.youtube.com/watch?v=wfQa2UxEqx8

இடைக்குறை (Syncope) எடுத்துக்காட்டு:
(1) வைரவமுத்து > வைரமுத்து
(2) யாவர் > யார்
(3) வானவன் > வானன்
     வல்லை யேஎனக்கு இன்னும் உன்கழல்
     காட்டி மீட்கவும் மறுவில் வானனே. (திருவாசகம்)
(4) வீரராகவமங்கலம் > வீரராகமங்கலம் (கல்வெட்டு, முதுமுனைவர் குடவாயில் பாலு கட்டுரை).
(5) சொல்லிவிடு > சொல்லிடு
(6) விற்றுவிடு > விற்றிடு
(7) மலையமான் > மலைமான்
(8) பாண்டியநாடு > பாண்டிநாடு
(9) அமுதகலையநாதர் > அமுதகலைநாதர். கலையநல்லூர் (சாக்கோட்டை). சுந்தரர் தேவாரம் அழகானது. கலியாணங்களில் ஓதப்படுவது.
(10) சேரலன் > சேரன்
(11) யக்ஷி/யட்சி/யக்கி குடி > (இ)சக்கிகுடி > சக்குடி (மதுரை அருகே உள்ள ஊர்). Cf. லக்ஷ்மி > லக்குமி/லட்சுமி/லச்சுமி.
(12) பேரரையன் > பேரையன்
(13) சாவ + ஊர் > சாவவூர் > சாவூர். Cf. சாவூர் பரஞ்சோதி. பாரதச் செம்மொழிகள் இரண்டிலும் வல்லவன் ஆன, சைவ சமய ஆச்சாரியன். சுமார் 80 ஆண்டுகள், 3 சோழ சக்கிரவர்த்திகளின் கல்வெட்டுகளில் வருகிறான். சைவ சித்தாந்த சாத்திரங்களையும், திருமுறைகளையும், பரத நாட்டிய சாத்திரத்தையும், இசையையும் சாவம் (ஜாவகம்) நாட்டில் பரப்பியவன். எனவே, "சாவூர்" பரஞ்சோதி எனப் புகழ்பெற்றவன். கொல்லி (கொற்றவை) + ஊர் > கொல்லியூர் > கொல்லூர் ... போல.
(14) கிரகணம் > கிரணம் (சந்திரகிரணம், சூரியகிரணம்)
(15) கிராகக > கிராக்கி (grAhaka > girAki in Telugu, Kannada. kirAkki in Tamil.)
(16) உதாகரணம் > உதாரணம்
(17) வேட்டுவப்பட்டி >
 ...
இன்னும் syncope காட்டுகள் இருக்கும். தெரிந்தோர் தரலாம்.

--------------

கொங்குநாட்டில் ஒரு வேட்டுப்பட்டி உண்டு.
https://ta.wikipedia.org/wiki/காளிக்கவுண்டம்பாளையம்_வேட்டுப்பட்டி_மாரியம்மன்_கோயில்
“ இடைப்பாடி அருகே, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இடைப்பாடி தாலுகா வெள்ளரிவெள்ளி பகுதியில், செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில், நான்கு நாட்களுக்கு முன், இரவில் நாடகம் நடந்த போது, கல்லபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், வேட்டுவப்பட்டியை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ” http://www.dinamalar.com/news_detail.asp?id=618253&Print=1 (தமிழக முதலமைச்சர் தொகுதி இது.)
’பூலாம்பட்டி அருகே உள்ள, வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. ’ http://www.dinamalar.com/district_detail.asp?id=1383134&dtnew=11/9/2015&Print=1

வேட்டுவப்பட்டி > வேட்டுப்பட்டி எனக் குறுகுதற்கு நல்ல காட்டு ஒன்றுண்டு.
பாண்டிநாட்டில் பைரவர் வழிபாடு மிகுதியாய் இருந்துள்ளது.
வைரவன் அருள் என்னும் பொருளில் வைரவமுத்து என ஆணுக்கும், பெண்ணுக்கும்
பெயர் ஏற்பட்டிருக்கிறது. வைரவமுத்து > வைரமுத்து. கவிஞர் வைரமுத்து.

சிறுகூடல்பட்டி வைரமுத்து (< வைரவமுத்து)
http://cruelkingstvshows.blogspot.com/2014/06/neeya-naana-vairamuthu-girl-from.html
https://cinema.vikatan.com/tamil-cinema/television/78263-village-girl-vairamuthu-speaks-her-love-for-cattle.html

இப்பெண் பேச்சைக் கேட்டு வைரவமுத்து > வைரமுத்து என 2011-ல் எழுதிய இழை:
-முத்து என முடியும் பெயர்கள். ஆயிமுத்து என்பது கோவை அய்யாமுத்துவின் பெயர்.
https://groups.google.com/forum/#!msg/mintamil/zBimydXnQgo/R07c-N5ZdccJ

--------------

கிராம தெய்வங்களின் அருளால் பெற்ற குழந்தையர்க்கு  தெய்வப்பெயர் + முத்து எனப் பேர் இடுதல் மரபு.

நாச்சிமுத்து, காளிமுத்து, மாரிமுத்து, பேச்சிமுத்துஆயிமுத்து (கோவை அய்யாமுத்து அவர்களின் பெயர்), காத்தமுத்து, சுடலைமுத்து, செல்லமுத்து (செல்லாண்டி அம்மன்), நல்லமுத்து (நல்லபுள்ளி அம்மன்),  சவரிமுத்து, மரியமுத்து, ...

வைரவருக்கு வடுகநாதன் எனப்பேர். வடுகமுத்து. வைரவமுத்து > வைரமுத்து.
சிறுகூடல்பட்டி வைரமுத்து:

இதுபோல் -முத்து என்னும் இன்னும் பேர்கள் உண்டா? நாஞ்சில்நாட்டில்
சொரிமுத்து (ஜீவாவின் பெயர்), ஒதிமுத்து.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 16, 2026, 10:22:50 AMMar 16
to santhav...@googlegroups.com
On Mon, Mar 16, 2026 at 6:48 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
என் மனமார்ந்த நன்றி கணேசன் Uncle 😊🙏

 
 வைரமுத்து < வைரவமுத்து : பெயர்க் காரணம்
https://x.com/naa_ganesan/status/2033261347144630465

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 19, 2026, 8:11:48 AM (14 days ago) Mar 19
to Santhavasantham
On Sat, Mar 14, 2026 at 8:48 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
> பொருள் பொதிந்த வினா.
> வைரமுத்துவின் எந்த நூலுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது?

இந்தக் கேள்விக்கு விடை கண்டேன். டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தால் பல பதிற்றாண்டுகளாக இந்திய அரசின் ஆதரவுடன் அளிக்கப்படும் ஞானபீட விருது 1982-க்குப் பின்னர் தனி நூலுக்கெனத் தரப்படுவதில்லை. 1982-க்கு முன்புதான் தனி நூலுக்காக என்பர். உ-ம்: அகிலனின் சித்திரப்பாவை எனக் குறிப்பிட்டனர். வாழ்நாள் பங்களிப்புக்காக அளிக்கப்படுவதாக அறிவிக்கிறார்கள். வைரமுத்து வாங்கும் பட்டையத்தில் என்ன எழுதுகிறார்கள் எனப் பார்க்கவேண்டும். எனக்கென்னவோ, 25 ஆண்டுக்கு ஒருமுறை தமிழுக்கு எனக் கோட்டா (quota) வைத்துளதோ ஞானபீடத் தேர்வுக்குழு என்ற ஐயம். இனி அடுத்த ஞானபீடம் தமிழுக்கு 2050-ம் ஆண்டு வாக்கில் வந்தால், இத் தியரியை உறுதிப்படுத்தலாம்.

அவர் கருத்தில், கவிதைக்காகத் தான் பெறுவதாகச் சொல்லியுள்ளார். பாரதி எட்டையபுரம் ராசாவுக்கு எழுதின சீட்டுக்கவியின் வரிகளைப் பயன்படுத்தியுள்ளார் எனத் தெரிகிறது [1]. குழுக்கள், ட்விற்றர் தளங்களில் பல இளைஞர்கள் இத்தொடர்பைத் தெரிந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்தனர் - Likes வாயிலாக.

அன்றாட நிகழ்ச்சிகளை உரைவீச்சாக எழுதுகிறார். பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் அன்றாடத் தமிழர் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றித் தம் கருத்துகளைப் பதிவு செய்தனர். பத்திரிகைகள் வளர்ந்தன. இப்போது இணைய யுகம், நகர்பேசி வாசிப்பு. ஒரு மாதம் முன்னர், தேநீர்க் கோப்பையில் ஒரு புயல். அது வடிந்துவிடும் என எழுதியதில், திருக்குறள் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.
https://x.com/Vairamuthu/status/2022135907219124272
 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
 கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு


https://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
மகாகவி பாரதியார் 2 மே 1919 அன்று எட்டையபுரத்தில் எழுதிய சீட்டுக்கவி:

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
       மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
     புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
       சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
       தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
       தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
       வசையென்னாற் கழிந்த தன்றே!

சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
       சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
       மாகவிதை என்று நன்கு!


>

N. Ganesan

unread,
Mar 20, 2026, 9:58:01 AM (13 days ago) Mar 20
to vallamai, Dr.A. Govindaraju, Eskki Paramasivan
வைரமுத்து < வைரவமுத்து : பெயர்க் காரணம்
https://x.com/naa_ganesan/status/2033261347144630465

https://cinema.vikatan.com/amp/story/kollywood/vairamuthu-interview-about-jnanpith-award
”விருதுகளுக்காக நான் ஆசைப்படுவதில்லை... விருது வந்தால் தவிர்ப்பதும் இல்லை!”
செவ்வி எடுப்பவர்: நா. கதிர்வேலன், 19-மார்ச்-2026

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இந்திய இலக்கியத்தின் உயரிய ‘ஞானபீட விருது'
கிடைத்திருக்கிறது. அவருடைய நண்பர்களும், வாசகர்களும் பெசன்ட் நகர்
வீட்டில் சந்தோஷமாகக் கூடி நிற்கிறார்கள். பூங்கொத்துகள், மாலைகள்,
புத்தகங்கள் எனக் கைகளில் ஏந்திக் களிப்பில் காத்திருக்கிறார்கள்.
இலக்கியத்தின் பெரும்பாலான வடிவங்களிலும் எழுதிச் செல்கிறவர். கம்பீரக்
குரலில், தாளகதியான உடல் மொழியில், கேள்விக்கும் பதிலுக்கும் இடையே நொடி
தாமதமற்று வந்து விழும் உணர்ச்சி நிரம்பிய உரைநடைத் தமிழில் நம்மிடம்
மனம்விட்டுப் பேசினார்.

‘‘23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஞானபீட விருது பெறுகிற மகிழ்ச்சியை
எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘என் மனநிலை மகிழ்ச்சியில் இருக்கிறது. இது நான் எதிர்பாராத விருது
அல்ல. இந்தியாவில் பிறந்த ஒவ்வோர் எழுத்தாளரும் `ஞானபீட விருது’ பெற
வேண்டும் என்பதை வாழ்க்கைக் கனவாக வைத்திருக்கிறார். அது இந்திய
இலக்கியத்தின் உச்சம். சொல்லப் போனால், `இந்தியாவின் இலக்கியத்துக்கான
நோபல் பரிசு’ என்றால் அது ஞானபீட விருதுதான். இந்த விருதுக்குள் நுழைவது
அவ்வளவு எளிதல்ல. அறிவுஜீவிகளின் அரண் அது. அங்கே சிறிதும் சமரசம்
கிடையாது. நாடாளுமன்ற அரசியலோ, ஆட்சி அதிகாரமோ உள்ளே நுழைய முடியாத
இடங்களில் ஒன்று ஞானபீடம். அது தகுதியால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
இன்னும் ஞானபீட விருது பெறாத இந்திய மொழிகளும் உண்டு. 23 ஆண்டுகளுக்குப்
பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதோ நான் வாங்கியதையும் சேர்த்து
மூன்றாவது முறை. `வைரமுத்து ஞானபீட விருது பெற்றான்’ என்று மகிழ்வதைவிட,
‘தாமதங்களோடு தமிழுக்கு ஞானபீட விருது வந்துவிட்டதே’ என்ற பெருமைதான் என்
நெஞ்சில் நிறைந்து வழிகிறது. இன்னொன்று... முன்பு இரு விருதுகளும்
எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த மூன்றாவது விருது கவிஞனுக்கு
வழங்கப் பட்டிருக்கிறது. ஞானபீட விருது வழங்கும்போது நீண்ட அனுபவத்தைப்
பார்க்கிறார்கள். தொடர்ச்சியாக, தொய்வில்லாமல் எழுதுகிறார்களா என்று
கவனிக்கிறார்கள். எத்தனை தடைகளைக் கடந்தான், எந்த அரசியலிலும் இயங்காதவனா
என்றும் பார்க்கிறார்கள். பெருந்தகையாளர்கள் எம்.டி.வாசுதேவன் நாயர்,
வி.ஸ.காண்டேகர், மகாதேவி வர்மா, குல்சார், ஓ.என்.வி.குரூப், நாராயண
ரெட்டி என்ற ஞானபீடப் பட்டியலில் நானும் வருகிறேன். அது எனக்கான பெருமை.
இந்த ஞானபீட விருது பெற்ற பிறகு எனக்கு நான்கு சிறகுகளில் பறக்க ஆசையாக
இருக்கிறது. பறந்து காட்டுவேன்.’’

‘‘வைரமுத்து என்ற பெயர் இத்தனை வருடங்களாக, தமிழின் கவிதை அடையாளங்களில்
ஒன்றாகவும், தொடர்ச்சியாகவும் கருதப்படுவது எப்படி?’’

‘‘ `எமக்குத் தொழில் கவிதை’ என்று பாட்டன் சொன்னானே, அதை வார்த்தையாக
இல்லாமல் வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தமிழைத் தவிர வேறு
ஒன்றும் தெரியாத மாதிரி என்னைப் பார்த்துக்கொள்கிறேன். வேறு ஏதாவது
எனக்குத் தெரிந்திருந்தால், தமிழை விட்டுத் தடம் மாறியிருப்பேன்.
என்னுடைய வலது கைக்குப் பிடித்தமான துணைக்கரம் தமிழ் மட்டும்தான்.
தமிழைவிட்டு வெளியே போனால் எனக்குப் பிழைக்கத் தெரியாது. தமிழைத் தவிர
எதிலும் செயல்படவும், உருவாக்கவும் தெரியாது. களிமண்ணோடும் சக்கரத்தோடும்
எப்படி ஒரு மண்பாண்டத் தொழிலாளி தன் வாழ்க்கையைக் கரைத்துக் கொள்கிறாரோ,
அது மாதிரி தமிழோடும், சொல்லோடும் என் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்ட
தமிழ் மண்பாண்டக்காரன் நான்.’’

‘‘வாழ்வு அனுபவம், வாசிப்பு அனுபவம் இவை இரண்டும் ஒரு படைப்பாளியை
உருவாக்குவதில் முக்கிய இடம்பெறுகின்றன. உங்களின் ஆரம்பகால வாசிப்பனுபவம்
எப்படியானது?’’

‘‘எனது ஆரம்பகால வாசிப்பு அனுபவம் சொற்களின் சுகத்தின் பின்னால் ஓடியது.
பள்ளி நாள்களில் ஆழமான இலக்கியம் பரிச்சயமாகவில்லை. கல்லூரி வாழ்க்கைக்கு
வந்த பிறகுதான் அழுத்தமான இலக்கியத்தை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகுதான் ஆழமான இலக்கியத்தைக் கற்க ஆரம்பித்தேன். பிற மொழிகளின்
இலக்கியங்கள், கவிதைகள் எனத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். பழைய
பாதிப்புகளைத் தூக்கி எறிந்தேன். கொஞ்சம் கண்ணதாசன், சுரதா, பாரதிதாசன்
போல் எழுதிக்கொண்டு திரிந்த காலம் போய் ‘எப்போதடா வைரமுத்துவைப்போல்
எழுதுவாய்' என்று கேள்வி கேட்டு, ஒரு தனித்துவத்துக்கு வந்தேன். நிறைய
நகல் எடுத்த பிறகுதான் ஒருவன் அசலுக்கு வருகிறான், நானும் அப்படித்தான்.
உள்ளிருக்கும் தீயைத் தூண்டிவிடுவதுதான், உள்ளிருக்கும் தீயை தீப்பந்தம்
செய்வதுதான் அனுபவம், வாசிப்பு இரண்டும். அந்தத் திரியைத் தூண்டித்
தூண்டி எரிமலை செய்வதும் அப்படித்தான். ஆழமான இலக்கியங்கள் எனக்கு
வாசிப்பின் மீது தனி ருசியை ஏற்படுத்த, பக்குவமாகி வெளியே வந்தேன்.’’

‘‘திடீரெனக் கவிதையிலிருந்து உரைநடைக்கு நாவல் வடிவத்தில் வந்து
சேர்ந்தீர்களே, ஏன்?’’

‘‘கவிதை என்பது ஒரு சுவைக்கூறுக்காக இருக்கட்டும், உரைநடை
வாழ்வனுபவத்தைத் தரட்டும் என முடிவுசெய்தேன். நல்ல கவிதை, உணர்ச்சிகளை
விரிவாக்கத்தக்கது. நல்ல நாவல் என்பது வாழ்க்கையை விவரிக்கத்தக்கது.
அதனால் உரைநடையின் பக்கம் திரும்பினேன். அப்போது என் மக்களின் மொழியை,
வலியை, வட்டார வழக்கைக் கொண்டுவர முடிந்தது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்'கூட
உரைநடை அல்ல. அதுவும் கவிதைதான். நான் கவிதையில் பெற்ற பயிற்சியை,
தொட்டுக்கொண்ட வண்ணங்களை, உரைநடைக்குப் பூசியபோது கவிதைக்கும்
உரைநடைக்கும் மத்தியில் கல்யாணம் போன்ற ஒரு புதிய உறவைக்
கண்டுபிடித்தேன். ‘தண்ணீர் தேச'த்தைப் படித்துவிட்டு கலைஞர், ‘கவிதையைப்
படிப்பதுபோல் இருக்கிறதே' என்றார். `இது கவிதையே அதிகம் கலந்துகொண்ட
உரைநடை’ என்றேன். ‘இவ்வளவு கவிதை உரைநடையில் கூடாது' என்றார். அதற்குப்
பிறகுதான் ‘கள்ளிக்காட்டு இதிகாச'த்தையும், ‘கருவாச்சி காவிய'த்தையும்
கவிதையைத் தொட்டுக்கொண்டு பயணப்பட்டு உரைநடையாக மாற்றினேன். கவிதை
முழுக்க இருந்துவிடாமலும், கவிதையே இல்லாமல் போய்விடாமலும் இருக்கிறது
என்றால் அது வாசகனைச் சலிக்கவிடாமல் செய்வதற்கு! லா.ச.ரா-வின் நடை
அப்படித்தான். புதுமைப்பித்தன் நடையும் அவ்விதமே. தி.ஜா-வின் சில
குறிப்பிட்ட பகுதிகள் அப்படித்தான். எனவே, கவிதையைப் பூசிக்கொண்டு
உரைநடையைக் கண்டுபிடித்தேன். `இவன் கவிஞனா, எழுத்தாளனா, ஆராய்ச்சிக்
கட்டுரையாளனா?’ என விவாதித்து, கடைசியில் இவன் யாரென்று
கண்டுபிடித்தார்கள். `அது எல்லாம் கலந்தவன்தான் வைரமுத்து’ என்று.

என் இலக்கியப் பயணத்தில் விகடனை மறக்க இயலாது. ஐயா எஸ்.பாலசுப்ரமணியன்
அவர்கள் என்மீது மகன் போன்ற அன்பு வைத்திருந்தார். ‘தண்ணீர் தேசம்',
‘கள்ளிக்காட்டு இதிகாசம்', ‘கருவாச்சி காவியம்', ‘மூன்றாம் உலகப்போர்' என
நான்கு நாவல்களும் வெளியானது விகடனில்தான். விகடன் இல்லையென்றால் இந்த
நான்கு நாவல்களையும் எழுதியிருக்கவேண்டிய கட்டாயம் எனக்கு
நேர்ந்திருக்காது. எனக்குக் கிடைத்த ஞானபீட விருதுடன் விகடனுக்கும்
தொடர்பு இருக்கிறது.’’

‘‘தமிழில் தகுதியான படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா?’’

‘‘எல்லாப் படைப்புகளுக்கும் அங்கீகாரம் என்பது சாத்தியம் இல்லை. எல்லா
பூக்களும் பிஞ்சுகளாகவோ, காய்கனியாகவோ ஆவது இல்லை. ஒவ்வொரு பருவத்திலும்
சில விஷயங்கள் உதிர்ந்துபோகும். சில `பூ’ என்ற பருவத்திலேயே
உதிர்ந்துவிடும். சில `பிஞ்சு’ என்பதிலேயே உதிரும். ஆனால், எந்தப்
பருவத்தில் அது தன் ஆயுளை உதிர்த்துக் கொண்டாலும் அந்தப் பருவத்துக்குள்ள
பலன், பயன்பாடு இந்தச் சமூகத்துக்கு இருக்கிறது. விருது பெற்ற படைப்புகள்
மட்டும்தான் அங்கீகாரத்துக்கு உரியவையா, அங்கீகாரம் பெற்றதுதான்
சிந்தனையா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இந்தக் கேள்விக்கு இடமே
இல்லை. ஏழு பாடல்களுக்குத்தான் எனக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
எனது 8,000 பாடல்களில் அந்த ஏழு பாடல்கள் மட்டுமே தேசிய விருது
பெறத்தக்கது என நீங்கள் கருதினால் நான் உங்களைச் சும்மா விட மாட்டேன்.
அப்போது மற்ற பாடல்களெல்லாம்? ‘காதல் ஓவியம்', ‘சிந்து பைரவி', ‘திருடா
திருடா', ‘பம்பாய்', ‘முத்து' என ஏன் விருது கொடுக்கவில்லை என்று
சொல்லிக்கொண்டே போவேன். விருதுகளுக்காக நான் ஆசைப்படுவதில்லை. விருது
வந்தால் தவிர்ப்பதும் இல்லை. விருது வந்தால் மகிழ்ச்சியை மறைப்பதும்
இல்லை.’’

‘‘ஒரு நேர்காணலில் ஞானபீட விருதுக்குத் தகுதியானவர்களாக கி.ரா.,
அசோகமித்திரன் என இருவரைக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள்
படைப்புக்கும், அவர்களின் படைப்புக்கும் இடைவெளி என்னவாக இருக்கிறது எனக்
கருதுகிறீர்கள்?’’

‘‘காலம்தான் இடைவெளி. என்னைவிட அரை நூற்றாண்டுக்கு முன்னால் அவர்கள்
எழுதினார்கள். அவர்களின் காலம், விழுமியங்கள், மொழி நடை என்பது அவர்கள்
காலத்தோடு சம்பந்தப்பட்டது. நான் என் சமகால இளைஞர்களுக்குப் புதிய மொழி
நடையைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன். நான், யதார்த்தம் எவ்வளவு
முக்கியமோ, அதில் கலைத்தன்மையும் முக்கியம் என்று நினைக்கிறேன். அவரவர்
காலத்துக்கு அது நியாயம். என் காலத்துக்கு இது நியாயம். இந்த நியாயங்களை
ஒப்பிடக் கூடாது. இரண்டுக்கும் தனித்தனி அளவுகோல் எனக் கருத வேண்டும்.
காலத்தின் நியாயங்களை அழிப்பதற்கு நாம் யார்... என்னுடைய காலத்தன்மை,
இலையில் பசுமைபோல், மலரில் மகரந்தம்போல் இளைஞர்கள் உடம்பில் உதிரம்போல்
உள்ளே இருக்க வேண்டும். இதுதான் என் எழுத்துக் கொள்கை.’’

‘‘தமிழாற்றுப்படை மீண்டும் வருமா!’’

‘‘தமிழாற்றுப்படை 24 ஆளுமைகள் கொண்ட படைப்பாக இருக்கிறது. தமிழ் 24
பேரோடு முடிந்துபோவதில்லை. இன்னும் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள்.
அவர்களையும் தீவிரமாக வாசிக்க வேண்டும். இன்னும் தமிழுக்காகக் கொடுக்க
வேண்டும் என நினைக்கிறேன். ‘இதுவரை நான்', ‘தமிழாற்றுப்படை' என
இரண்டையும் தொடர்வேன் என்று நம்புகிறேன். இன்னும் காலம் கைகூடி வரும்போது
கண்டிப்பாக எழுதுவேன். இப்போது எனது 1,000 திரையிசைப் பாடல்களைத்
தொகுத்தேன். அடுத்த தொகுப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நான் எழுதி
இடம் பெறாத பாடல்களும் இதில் அடக்கம். ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு
எழுதிய வெளிவராத பாடல்களும் இதில் இருக்கின்றன. இந்தத் தொகுப்புக்கு
பெரிய வரவேற்பு இருக்கும்.’’

‘‘நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் வந்திருக்கிறதா, இனிமேல் வருமா?’’

‘‘அரசியலில் நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் ஆகவில்லையே தவிர
அரசியலோடு எனக்குத் தொடர்பில்லை எனச் சொல்ல முடியாது.
அரசியல்வாதிகளுடனும் தொடர்பு இருக்கிறது. ஆனால், எதுவொன்றிலும் 100%
ஈடுபடும் கருத்துடையவன் நான். இரண்டாவது... என் சுதந்திரத்தை யாரும்
தடுக்கக் கூடாது. எனக்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது‌. அப்படிப்
பார்த்தால் எந்த அரசியல் கட்சியிலும் என்னால் முழுமையாக
ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. இன்னொன்று, என் சுதந்திரம் என்பது என்
நேரத்தை நானே தீர்மானிப்பதில் இருக்கிறது. அதனால் அரசியல் நுழைவு
சாத்தியம் இல்லை.’’

‘‘சாதித்துவிட்ட அலுப்பு தெரிகிறதா?’’

‘‘சாதித்ததாக நினைத்தால்தானே அலுப்பு வரும்... எதுவுமே இல்லை. நான்
தொடர்ந்து உழைத்துக்கொண்டிருப்பது, எதிர்கால எழுத்தாளர்களையும்,
கவிஞர்களையும் கருத்தில் கொண்டுதான். ஏனென்றால், எதிர்காலத் தலைமுறைக்கு
ஓர் அளவுகோலை விட்டுச் செல்கிறேன். இந்த அளவுகோல்களைத் தாண்டி நீங்கள்
தமிழை வளர்க்க வேண்டும் என விரும்புகிறேன். ஏழு தேசிய விருதுகள், ஆறு
மாநில விருதுகள், சாகித்ய அகாடமி, பத்ம, பத்மபூஷண் விருது, சாதனா
சம்மான் விருது, மூன்று பல்கலைக்கழக டாக்டர் பட்டங்கள், 8,000 பாடல்கள்,
41 புத்தகங்கள், ஞானபீடம் என இவ்வளவு அளவுகோல்களை நான் எதிர்காலத்
தலைமுறைக்கு விட்டுப் போகிறேன். எதிர்காலத்தில் வருகிற இளைய தலைமுறை
இதைத் தாண்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.’’

N. Ganesan

unread,
Mar 20, 2026, 10:47:01 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
On Tue, Mar 17, 2026 at 10:19 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
> I fully endorse Jeyamohan’s views.
> அன்பன்
> ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
>

இருவருமே சினிமா உலக எழுத்தாளர்கள். பாரத ஞானபீட விருதாளரில் நாத்திகர்
வகுப்பில் வைரமுத்து தான் முதல். சாகித்திய அகாதமி விருதாளரில்
பாரதிதாசன்.

இணையத்தில் யூனிகோட் குறியீட்டு எழுதுருவை நிலைபெறச் செய்ய இண்பிட்
வழியாக உழைத்துக்கொண்டிருந்தோம். முத்து நெடுமாறன் தலைவர். நான் யூனிகோட்
குழுவுக்கு. அப்போது மின்மஞ்சரி என்னும் இதழ் உருவாகியது. ஜெமோவைக்
கட்டுரை தரக் கேட்டிருந்தேன். "இணையமும் நானும்" என்ற தலைப்பில் உடனே
அனுப்பினார். 2009-ம் ஆண்டில். இங்கே வாசிக்கலாம்.
https://groups.google.com/g/vallamai/c/pEiVtgecOfM/m/nro0hdqeAAAJ

இலக்கியம், வெகுஜன எழுத்து - வேறுபாடு. ஜெமோ விளக்கம்.
popular writing vs. authentic literature
https://www.youtube.com/watch?v=R5_QH5TqRtY

இணையமும் நானும் என ஆரம்பத்தில் எழுதிய ஜெமோ, செய்யறிவு பற்றியெல்லாம் சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=XoZORc3EaMs

தான் வாங்கிய ஞானபீட விருதைப் பற்றி வைரமுத்தின் செவ்வி விகடனில் வெளியாகியுளது.
https://cinema.vikatan.com/amp/story/kollywood/vairamuthu-interview-about-jnanpith-award

~NG

> On 18 Mar 2026, at 7:13 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> https://frontline.thehindu.com/news/vairamuthu-jnanpith-award-tamil-writers-protest-controversy/article70749313.ece
> Jnanpith to Vairamuthu is a mockery of Tamil literature
> The award to the lyricist—a #MeToo accused with questionable literary merit—is the latest in a long history of institutional neglect of Tamil.
> Published : Mar 16, 2026 15:24 IST - 5 MINS READ
>
> B Jeyamohan
>
> On Mon, Mar 16, 2026 at 8:00 PM Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:
>>
>> ज्ञानपीठ விருதை ज्ञानपीडा விருது என்று தமிழில் எழுதினால் ஒரே மாதிரிதான் இருக்கும்.
>>
>> On Monday, 16 March 2026 at 14:56:10 UTC-4 Ashok Subramaniam wrote:
>>
>> ஞானபீட விருது பத்திரத்தின் நடுநாயகமாக இருப்பது வாக்தேவியின் (சரஸ்வதி) திருவுரு. ஹொய்சாள சிற்பவடிவத்தில் அமைந்தது.. நான்கு கரங்களிலும் ருத்திராக்கம், கமண்டலம்,ஏடு, கமலப் பூவை ஏந்திய உருவம். ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறு பக்கம் ஹிந்தியிலும் விருது பத்திர வாக்கியங்கள்
>> அன்னை வாக்தேவி அறிவின், கலைகளின் இறைவி. கையில் வேத நூலும், தூய்மையைக் குறிக்கும் தாமரையும், வேதங்களை அவளே ஓதிக் கொண்டிருப்பதால் ஜப மாலையும், முனிவர்கள் கையில் ஏந்தும் கமண்டலமும் ஏந்திய உருவினள். முதலாவது இந்த விருதை நிறுவியவர்களுக்கும், இப்போது நிர்வகிப்பவர்களுக்கும், நாடறிந்த நாத்திகருக்கு, இக்குறியீடுகள் உள்ள விருதை வழங்கவேண்டும் என்று தோன்றியதே விநோதம்..அதுவாவது சரி... கடவுளுக்கு பேதமில்லை.. ஆனாள் அந்த குறியீடுகளெல்லாம் விருதை "வாங்கியே விட்ட" நாத்திகருக்குச் சம்மதமா? ஐயோ! ஆங்கிலத்துக்காவது திராவிடச் செம்மல்கள் விலைபோனவர்கள்.. ஆனால் இந்தியில் பொறிக்கப்பட விருது வார்த்தைகள்...?
>>

N. Ganesan

unread,
Mar 20, 2026, 11:13:35 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com, Niranjan Bharathi
On Mon, Mar 16, 2026 at 9:22 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> On Mon, Mar 16, 2026 at 6:48 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
>>
>> என் மனமார்ந்த நன்றி கணேசன் Uncle 😊🙏
>>
>  
>  வைரமுத்து < வைரவமுத்து : பெயர்க் காரணம்
> https://x.com/naa_ganesan/status/2033261347144630465
>

சமூக ஊடகங்களில் ஜெமோ, வைமு வாதங்கள் மீதான விமர்சனங்களை வாசிக்கிறேன். தமிழ் இடைக்கால இலக்கியம் அறிந்தோர் அங்கே குறைவு. தெரிந்த ஒருவர் எழுதினார்: கலிங்கத்துப் பரணி போல. பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்றார். :-)

N. Ganesan

unread,
Mar 26, 2026, 11:43:53 AM (7 days ago) Mar 26
to santhav...@googlegroups.com
Good article giving an overview of the contemporary Tamil literature. It appears a quota system exists at the Jnanapitha awards committee level. Give JP award to a populist writer of Tamil once in a Quarter-century: All 3 awards so far satisfy this criterion. Three awardees were read by lakhs of readers in pop magazines.

I explained the history of VM's name. In the Pāndyanādu region, Bhairava/Vaḍukanāthan worship was popular. The name Vairamuthu is a contraction from Vairavamuthu. Vairava < Bhairava.
https://x.com/naa_ganesan/status/2033261347144630465

Louis Dumont, French social anthropologist, studied Pramalai Kaḷḷar caste in depth.
https://en.wikipedia.org/wiki/Louis_Dumont

https://x.com/naa_ganesan/status/2037186158761812069

On Thu, Mar 26, 2026 at 7:23 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Fri, Mar 20, 2026 at 10:38 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
>
> Jeyamohan is wrong in saying 'Popular writing is not literature.' Charles Dickens was very popular. So was Victor Hugo, so also Tolstoy, thi. Janakiraman, Jayakanthan, Rabindranath Tagore, Bankim Chatterji, Shard Chandtra Chatterji, Mythili Sharan Gupta,
> and the list goes on and on. Only an ignorant fool and/or highly biased and prejudiced critic would claim that popular writing is not literature. It could be true of some - like Karunanidhi's for example.
>
> My 2 paise's worth.
> Sankaran

It is true that both VaiMu and JeMo often claim their extraordinary contribution to Tamil. Highly cinematic, I'd say.

சுசித்திரா என்பவர் எழுதிய "தமிழ் இலக்கியக் கிளர்ச்சி" ஞானபீட விருது, இலக்கியம் வளர்த்தோர் பற்றிப் பேசுகிறது.
Tamil’s literary revolt
https://frontline.thehindu.com/arts-and-culture/literature/vairamuthu-jnanpith-award-controversy-tamil-literature-crossroads/article70779337.ece

~NG

N. Ganesan

unread,
Mar 30, 2026, 12:22:00 AM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
https://www.youtube.com/watch?v=5Yajjvu_9fk
யார் பெறுவார் இந்த அரியாசனம்?

> யார் பெறுவார்? ட்ரம்ப்பா? வைமுவா?
> தினமலரில் ஒரு பேட்டி:
> https://x.com/naa_ganesan/status/2038467780119314695
Reply all
Reply to author
Forward
0 new messages