வண்புகழ் நாரணன் திண்கழல் சேரீர்! - புரட்டாசிச் சனிக்கிழமை - கொங்கரத்தி.

193 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 20, 2014, 7:10:10 AM9/20/14
to mintamil, vallamai, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, தமிழ் மன்றம்
வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரீர்!
சிவகங்கை மாவட்டம் எங்களூர் கண்டரமாணிக்கத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் கொங்கரத்தி என்ற அழகான சிற்றூரில் பேரழகராக அருள்மிகு வண்புகழ் நாராயணப் பெருமாள் சீதேவி பூதேவி சமேதராகக் காட்சியளிக்கிறார். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அருளடியார்கள் கூட்டம் அலைமோதும். 
நகரத்தார்களில் கார்த்திகை மாதக்காரர்கள், புரட்டாசி மாதக்காரர்கள் என்று குடும்ப வழ்க்கத்திற்கேற்ப இரண்டு வகையுண்டு. குன்றக்குடி முருகன் வழிபாட்டில் ஈடுபாடுள்ள கார்த்திகை மாதக்காரர்கள் திங்கள் கிழ்மைகளிலும் கார்த்திகை மாதம் முழுமையிலும் அசைவம் உண்ணமாட்டார்கள். எங்களைப் போல புரட்டாசிமாதக்காரர்கள் புரட்டாசித் திங்களிலும் சனிக்கிழமைகளிலும் சைவர்கள்!
கொங்கரத்தி என்பதற்கு கொம்+ கரம்+ ஏத்தி என்று பிரித்துத் திருமால் அடியார்கள் தம் சிறந்த கரங்களால் ஏத்தி வழிபாடு செய்யும் ஊர் எனப் பொருள் சொல்வதுண்டு.
ஆங்கில ஆட்சியாளர் காலத்தில் வரி வசூலிக்கும் அதிகாரி கோவில் பட்டரை வெயிலில் நிறுத்தித் தண்டித்ததாகவும் ஊருக்கு வந்த பட்டர் பெருமாளுக்கு மிளகாய் அரைத்துச் சாத்தியதாகவும் உடன் அதிகாரி மேனியெல்லாம் கொப்புளித்து எரிந்து அவர் வந்து வணங்கி மன்னிப்புக் கேட்டதாகவும் கர்ண பரம்பரைச் சொல்வழக்கு உண்டு. வீட்டில் பூரான், தேள், பாம்பு தட்டுப்பட்டால் காசு முடிந்து வைப்பதுண்டு.
எங்கள் பகுதியில் கண்கண்ட தெய்வமாகத் திகழும் ஸ்ரீ வண்புகழ் நாரணனுக்கு இன்று (20.09.2014] காலை மாவிளக்கிட்டு அர்ச்சனைசெய்து வழிபட்டு வந்தோம். ஆலயப் படங்களை நண்பர்கள் அருள்பெறப் பகிர்ந்துள்ளேன்.
1.தும்பிக்கை ஆழ்வான் தனிக் கோவில்
2.கொங்கரத்திப் பெருமாள் கோவில் முகப்பு
3.மூலைக் கருடன்
4.மாவிளக்கு வழிப்பாடு.
5.உற்சவர்
6.வழிபாடு முடிந்த பிறகு கோவில் முன்பாக என் துணைவியார்.திருமிகு அன்னபூரணி

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
IMG_9694.JPG
IMG_9687.JPG
IMG_9691.JPG
IMG_9683.JPG
IMG_9685.JPG
IMG_9692.JPG
IMG_9689.JPG

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 20, 2014, 7:56:53 AM9/20/14
to mintamil, vallamai, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, தமிழ் மன்றம்
நண்பர்கள் தங்கள் பகுதிகளின் பெருமாள் கோவில் - புரட்டாசித் திங்கள் வழிபாடுகளை இவ்விழையில் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

கொங்கரத்திப் பெருமாள் பெயர் குறித்து ஒரு சுவையான செய்தி. கொங்கரத்திப் பெருமாளை எங்கள் வீடுகளிலும் பிறரும் ‘வம்ப நாராயணன்’ என்று கூறுவார்கள். "வம்ப நாராயனன்” கோவிலுக்குப் போகணுமென்பார்கள். என் பள்ளி நாட்களில் அதுவென்ன வம்பு என்று நினைத்துள்ளேன். பூரான், தேள், பாம்பு கண்ணில்பட்டால் வேறு பெருமாளுக்குக் காசு முடிந்து வைப்பதால் மேலும் பயம் உண்டாகும். புரட்டாசி மாதப் பிறப்பிற்கு பல நாட்கள் முன்னால் வீடெல்லாம் கழுவி மெழுகிச் சுத்தம் செய்வார்கள். சுத்தபதமாக, பயபக்தியாக இருக்க வேண்டுமென்பார்கள். பக்தியை விடப் பயம் அதிகம் இருக்கும்.
பிற்பாடு விவரம் தெரிந்த பிறகு தான் பெருமாள் பெரும் புகழ் படைத்த “வண்புகழ் நாராயணன்” என்பதும் ‘வம்பன்’ இல்லையென்பதும் அழகன், நண்பன் என்பதும் புரிந்தது!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 20, 2014, 1:26:15 PM9/20/14
to maza...@googlegroups.com, தமிழ் மன்றம், mintamil, housto...@googlegroups.com, vallamai


2014-09-20 18:43 GMT+05:30 SPR <sepa...@gmail.com>:
புரட்டாசி மாதத்துச் சிறப்பான பகிர்விது. நன்றி பல 

இந்த கோயிலில் ஆகாசக் கருப்பர் சன்னதியும் விசேஷம் என்கிறார்கள்  மேற்கூரை இல்லாமல் ஆகாயத்தைப் பார்த்தபடி வெட்டவெளியில் காட்சிதரும் ஆகாசக் கருப்பரை வணங்கினால், பில்லி-சூனியம் முதலான ஏவல்கள் , எதிரிகள் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். மேலும், பெருமாள் கோவிலில் சக்தியின் வடிவமாகத் திகழும் வேப்ப மரம், சிவ வடிவமாக விளங்கும் வில்வ மரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருவது சிறப்புக்கு உரிய ஒன்று எனப் போற்றுகின்றனர். - நன்றி தினமலர் 

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவாய்மொழி,முதற்பத்து,வீடுமின் 

'உடல் நிலையானது அன்று என்றறிந்து, மனம், வாக்கு, செயல்களை பகவானுக்கே இட்டு, அகங்காரம் பற்று முதலியவற்றை நீக்கி, உயர்வற உயர் நலமுடைய ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளை ஆச்ரயிங்கள்' ¢என்று ஆழ்வார் ஈண்டு உபதேசிக்கிறார். இதனில் "வண்புகழ் நாரணன், - திண்கழல் சேரே" என்ற வரிகள் வருகிறது இப்பத்தும் நாரணன் அருளைத் தரும்; வஞ்சித்துறையில் அமைந்தது 

பகவானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்று சொல்கிறது 

2686. வீடுமின் முற்றவும், - வீடுசெய்து, உம்முயிர்

வீடுடை யானிடை, - வீடு செய்ம்மினே.

ஆக்கைகள் நிலையில் பகவானை நினை

2694. ஒடுங்க அவன்கண், - ஒடுங்கலு மெல்லாம்,

விடும்பின்னு மாக்கை, - விடும்பொழு தெண்ணே

நாரணன் கழல் சேர்

2695. எண்பெருக் கந்நலத்து, - ஒண்பொரு ளீறில,

வண்புகழ் நாரணன், - திண்கழல் சேரே

இப்பத்துப் பாடல்களும் நன்மை தரும்

2696. சேர்த்தடத், தென்குரு - கூர்ச்சட. கோபன்சொல்,

சீர்த்தொடை யாயிரத்து, - ஒர்த்தவிப் பத்தே.

- நன்றி ஸ்ரீ காஞ்சி காமகோடி மட வெளியீடு 

 
தங்கள் கருத்துக்கும் திவ்யப் பிரபந்தம் பாடல் பகிர்வுக்கும் மிக நன்றி ஐயா. பதினெட்டாம் படி கருப்பர் பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. தலவிருட்சமாகப் பவழமல்லி கருப்பர் பீடம் அருகே உள்ளது.
1.கொங்கரத்தி பெருமாள் கோவில் பதினெட்டாம்படி கருப்பர் பீடம் படம் பகிர்ந்துள்ளேன்.
2.அதன் முன்பாகச் சமர்ப்பிக்கப்படும் உருக்கள் படம் இணைத்துள்ளேன்.
3.உற்சவர் கருட சேவையில் அருள்பாலிக்கிறார். 
நன்றி
சொ.வினைதீர்த்தான்.
New Microsoft Office Word Document (2).docx
New Microsoft Office Word Document.docx
New Microsoft Office Word Document (3).docx

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 21, 2014, 12:38:47 AM9/21/14
to shylaja, mintamil, vallamai, maza...@googlegroups.com, housto...@googlegroups.com, தமிழ் மன்றம்


2014-09-20 18:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே

என்ற ஆழ்வார் திருமொழியுடன் அழகான பதிவு!பெருமாள்  அப்படியே மனசில் நிற்கிறார் எத்தனை அழகுஎத்தனை அழகு!


 'தூவாய புள் ஊர்ந்து வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலைதுணித்தானை
தேவாதிதேவனை செங்கமலக்கண்ணானை..

என்று ஆழ்வார்  அருளீய பாசுரத்தால் அண்ணலை  சேவிக்கிறேன்.. புரட்டாசி சனிகிழமை பதிவு  தெரிந்தவரை எழுதுகிறேன் நன்றி திருவினைதீர்த்தான் ஐயா.

மகிழ்ச்சி திருமிகு ஷைலஜா.
தங்கள் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு குறித்துப் பகிர்ந்துகொள்வதை எதிர்நோக்குகிறேன்.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 21, 2014, 2:27:32 PM9/21/14
to maza...@googlegroups.com, தமிழ் மன்றம், mintamil, vallamai, housto...@googlegroups.com
அருமையான கருத்துக்கு மிக்க நன்றி திரு செபரா. தங்கள் கருத்தைப் பிற குழுமங்களிலும் அறிதலுக்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.


2014-09-21 23:43 GMT+05:30 SPR <sepa...@gmail.com>:
​திருவாசகம் 42.9 

வம்ப னாய்த்திரி வேனைவாஎன்று
வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளிமெய்யடி
யார்கட் கின்பம் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பதப்பொருள் : வம்பனாய்த் திரிவேனை - வீணனாய்த் திரிகின்ற என்னை, வா என்று - வா என்று அழைத்து, வல்வினைப் பகை - வலிமையான வினையாகிய பகையினை, மாய்த்திடும் - அழிக்கின்ற, உம்பரான் - மேலிடத்தில் உள்ளவனும், உலகு - உலகங்களையெல்லாம், ஊடு அறுத்து - ஊடுருவிச் சென்று, அப்புறத்தனாய் நின்ற - அப்பாற்பட்டவனாய் நின்ற, எம்பிரான் - எமது தலைவனும், அன்பர் ஆனவர்க்கு அருளி - அன்பர்களுக்கு இரங்கி அருள் செய்பவனுமாகிய இறைவனது, 

வம்பன்  என்ற சொல்லுக்குத் திருவாசகம் தரும் பொருள் "பயனற்றவன் - பிறரிடம் வம்பு செய்து சண்டை செய்பவன் " என்பதாம் வம்பு என்பதற்குப் பொருள் வலியச் சென்று சண்டையிடுதல் என்பதே வம்ப மத வேழம் எனச் சொல்வதில் வரும் "வம்ப " என்பதற்கு வலிமையுடைய என்றொரு பொருளும் கொள்ளலாம் 

தொல்காப்பியம் சொல்வது " நிலையாக ஓரிடத்து இல்லாதோர் "நாடோடிகள்" புதியதாக வந்தவர்கள் , அயலவர் என்ற வகையில் குறிப்பிடப்பட்டதே அன்றி  புதியது (Fresh )என்ற வகையில் அல்ல. சிலப்பதிகாரம் மணிமேகலை குறும் தொகை முதலான பல தமிழ் காப்பியங்களும் இதே கருத்தையே உறுதிப்படுத்துகிறது  

சைவத்தில் வம்ப என்பதற்கு அயலவர், பிறரிடம் வலிந்து  சண்டையிடுபவன் என்றெல்லாம் சொல்லப்பட்ட போதும் ஆழ்வார்கள்  "வம்பு" என்பதற்கு மணம் என்றொரு சொல் விளக்கம் தருகிறார்கள் 

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்,
வம்புலாம் சோலை மாமதிள் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். 953.
                                              -   திருமங்கை ஆழ்வார் - திருப்பாசுரம்.

மணம் என்பது இங்கு பொருந்தவில்லை எனவே இவ்விறைவனை வலிமையுடையவன் எனும் பொருள் தரும் வம்ப நாராயணன் (வலிமையுடைய நாராயணன் )என்று கொள்வது பொருந்தும் வலிமை இருந்தால் புகழ் தானே வருமில்லையா ? அப்பொழுது "வம்ப நாராயணன் எல்லோரும் போற்றும்  வண்புகழ் நாராயணன் ஆகிவிடுவார் 

அன்புடன் செபரா 


2014-09-21 3:38 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
 :
விவரங்களுக்கும் தகவலுக்கும் அண்ணன் காப்பியக் கவிஞர் மீனவனார் அவர்களுக்கு நன்றி.



2014-09-21 11:38 GMT+05:30 meenavan2 <meen...@gmail.com>:

அன்புள்ள தம்பி வினைதீர்த்தான்.கொங்கரத்திப் பெருமாள் பற்றிய உன்னுடைய
பதிவையும் நிழற்படங்களையும் கண்டேன்.மிக்க மகிழ்ச்சி.

வண்புகழ் நாராயணன்,வம்ப நாராயணன் பற்றிய செய்தி கண்டேன்.
கண்டரமாணிக்கம் ஆண்கள் உயர் நிலைப்பள்ள்ளியில் தமிழாசிரிய
ராகப் பணியாற்றிய அமரர் திரு.நா,வேங்கடராமன் தான் வம்ப நாராயணன்
என்ற நாமத்தை வண்புகழ் நாராயணன் என்று மாற்றி எழுதினார்.

அந்தப் பெருமாள் அங்கு வாழ்ந்து வந்த ஆயர்களால் பூமியில் இருந்து
கண்டு எடுக்கப் பெற்றவர்.புதிதாகக் கண்டெடுக்கப் பெற்றவர்.வம்பு என்ற
சொல்லுக்கு மணம்,புதிது என்ற பொருள்கள் உள்ளன.புதிதாகத் தோன்றியவர்
ஆதலால் அவரை வம்ப நாராயணன் என்றே அழைத்தனர். ஆதலால் பெருமாள்
வம்பன்  என்று எண்ணுவது பொருத்தமன்று. இதனை நான் அன்றே நா.வேங்கட
ராமன் அவர்கள் இருக்கும் பொழுதே சொன்னேன். அவரும் நீ சொல்வது சரிதான்
ஆனால் அவ்வாறு பெயர்ப்பலகை எழுதிய பிறகு என் செய்வது?அப்படியே
இருக்கட்டும் விட்டுவிடு என்றமையால் அவ்வாதம் அத்துடன் நின்று விட்டது.
சரி அவர் புகழுடையவராய் இருப்பதில் பிழை ஒன்றுமில்லை என்று வாதத்தைத்
தொடரவில்லை.

N. Ganesan

unread,
Sep 25, 2014, 10:51:53 AM9/25/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tamil...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Saturday, September 20, 2014 4:10:18 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
> கொங்கரத்தி என்பதற்கு கொம்+ கரம்+ ஏத்தி என்று பிரித்துத் திருமால் அடியார்கள் தம் சிறந்த 
> கரங்களால் ஏத்தி வழிபாடு செய்யும் ஊர் எனப் பொருள் சொல்வதுண்டு.

திருநிறை. வினைதீர்த்தான் ஐயா,

இப்படி எல்லாம் கொங்கரத்திக்கு பெயர் வரவில்லை என்பது அடியேன் கருத்து. கொம் என்றால் என்ன? 
ஏத்தி என்ற சொல்லே பேரில் காணோமே. கரம் = வடசொல். கை என்ற தமிழ்ச் சொல் இருக்கிறதே - என்ற 
வினாக்கள் எழுதல் இயற்கை அன்றோ.

தாமரைப் பொகுள்/பொகுட்டு இதழ்களைக் கணுக்கும் இடம் ஆதலால் கண்ணகம்/கர்ணகம் என்று
அழைக்கப்படுகிறது. Plan View-வில் (பருந்துப் நோக்கில்) பார்க்கிறபோது புத்த ஸ்தூபி தாமரையாகவும்,
அதன் நடுவே உள்ள அரை (அச்சு) கண்ணிகா/கர்ணிகா என்று அழைக்கப்படுதலும் ஆனந்த
குமாரஸ்வாமி விளக்கிவிட்டார் (100 வருஷம் முன்பே). Adrian Snodgrass, The Symbolism of the Stupa,
Motilal Banarsidass, Delhi, 1992. 10. The Stupa Plan and The Lotus, (பக். 97-ல் உள்ள வரைபடம் பார்க்கவும்).
வடமொழிகள் நன்கறிந்த இளங்கோ அடிகள் (கொங்கு நாட்டுக் கரூரில்) கண்ணகம் என்ற சொல்லில்
இருந்து கண்ணகி/கர்ணகி என்ற காப்பியத் தலைவியைப் படைக்கிறார். ஏற்றாற்போல் முல்லைக்கு
நிகரான குருக்கத்தியின் வடமொழிப் பெயரை மாதவி என்னும் கணிகைக்கு தன் தமிழ் தேசிய
நாவலில் பெயர்தந்துள்ளார். கண்ணகி/கர்ணகி இன்றும் வழிபாட்டில் உள்ள பெயர். இவளையே
கர்ணகை/கண்ணகை என்றும் வணக்குகிறோம். 

நீ இரங்காயெனில் புகலேது? - அம்ப
   நீ இரங்காயெனில் புகலேது? 
                                              - பாபநாசம் சிவன் பாடல்.

பாடுவது: எம் எஸ்: http://www.youtube.com/watch?v=Qhvh1-l3kZw

பாபநாசம் சிவனின் பாடலில் கேளுங்கள்.
கடலில் பூக்கும் தாமரை. அதில் தோன்றும் திருமகளைக்
திருமணி என்கிறார். மணி என்பது கமலப் பொகுட்டின்
பரியாயப் பெயர்களில் ஒன்று. இதனை தமிழ்த்தியாகையர்
ஒருமுறைதான் சொன்னார். ஆனால், இளங்கோ அடிகளோ
வலியுறுத்த இருமுறை சொல்லியிருப்பதும் தாங்கள் அறிந்ததே.
கண்ணகி/கண்ணகை, துற்கை/துற்கி, ... எனல் போல
அரத்தை/அரத்தி. கொங்கு - தேன்.

நரை/நரி, புலை/புலி (புலை/புலவு உண்ணும் புலி. புலவு/புலா இன்று
இந்தியாவின் த்ராவிடச் சமையற்சொல் இன்று சிந்துவெளியில் இருந்து
இந்திய மொழிகள் யாவிலும், அங்கிருந்து ஈரான், ஐரோப்பா, அமெரிக்கா
வரை இன்றும் போய் இருக்கிறது. சங்கத் தமிழின் புலாச் சோறு அமெரிக்கா
ஓட்டல்களில் pilaf என்கின்றனர். புலாவு, புலாச்சோறு polo, pulav, pilaf, ...என்றாகிறது.

புதிதாய்க் கிடைத்த நாராயணன் வம்பநாரணன் என்றோ, வம்பத் துழாய் மாலை
நாரணன் என்றோ பெருமாள் கொங்கரத்தியில்.

கொங்கரத்தி: ஊர்ப் பெயர்,
அரத்தை (=அரத்தி) மலர்களில் பலவகை உண்டு.
சிற்றரத்தை, கொங்கரத்தை, விந்தரத்தை, தம்பரத்தை, செம்பரத்தை, தேனரத்தை.
இவற்றில் தேனரத்தையும், கொங்கரத்தையும் ஒன்றாகலாம்.
அதேபோல் செம்பரத்தையும் (செம்பருத்தி) தம்பரத்தையும் ஒன்றாகலாம்.
செம்பு என்பதன் திரிபு தம்ப (தம்பபன்னி > தாம்ரபர்ணி).
செம்பு > தம்ப > தாம்ர என்னும் வடசொல் ஆகியுள்ளது.

கொங்கரத்தி = கொங்கு அரத்தைப் பூக்கள் மலரும் காடு
என்பது நேராக அவ்வூர்ப் பெயர்.

கொங்கரத்தை வம்பநாரணப் பெருமாள் வண்புகழ்க் கழல்கள் வாழ்க!
வம்பு - வன்பு மற்றும் வண்பு(வள்பு) என்னும் இரு சொற்களாலும் பிறக்கும்.
அது பற்றி எழுதிய மடல் இங்கே:

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages