புறநானூற்றில் நடுகல்லுக்குப் படையல் வழிபாடு

210 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 19, 2020, 8:34:21 AM3/19/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஓர் அரிய புறப்பாட்டைக் காண்போம். இதைப் பாடிய புலவர் பெயர்,
அவர் கலந்துகொண்ட துயர நிகழ்ச்சி, அதைக் கண்டு மனம்வருந்திப்
பாடியமை, 2000 ஆண்டுமுன்னர் ஒரு சிற்றரசனின் வாழ்க்கை,
வாழ்க்கை நிலையாமை, அவனுக்கு நடுகல் எடுப்பது, அதன் முன்
மூன்றாம் நாள் அல்லது 16-ம் நாளில் உற்றார், தோழர்கள் கலந்துகொண்டு
செய்யும் சடங்கு, அதில் உள்ள செய்திகள் ஆராயத்தக்கன.

தும்பி, வண்டன் என்ற பெயர்களைப் பார்ப்போம்.
அகல்நாட்டில் இருந்த கோட்டை அகப்பாக்கோட்டை.
அதன் தலைவன் வண்டன். சோழநாட்டிற்கு ஆதாரமான நதி
காவேரி. அதன் நீர்வரத்தில் சோழர்களுக்குப் பெரும் அக்கறை
எப்போதும் உண்டு. எனவே, அகப்பாக் கோட்டையைச்
செம்பியன் கைப்பற்றினான்.

புறப்பாட்டு 249:
------------------------------
               249


கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,

கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,

எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்

அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,

உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,

அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்

பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,

ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.

....................தும்பி சேர் கீரனார் பாடியது.

பொருள்:
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).


நா. கணேசன்








N. Ganesan

unread,
Mar 22, 2020, 10:50:15 AM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தும்பி சேரகீரனார் பாட்டில் அரிய செய்திகள் உள்ளன. வடநாட்டு சமயங்கள் மோதி,
தமிழகத்தில் சமநிலைக்கு வருதலைக் காட்டும் காலப் பட்டகம். A snapshot
in Time explaining the Tamil religions settling down. கபிலபரணர் என்பதுபோல்
நடைமுறையில் கிராமச் சமூகத்தில் உள்ள சொல்: வண்ணாரநாவிதர்.
சங்க இலக்கியத்தில் பாணர்களைப் பற்றிச் சொல்லும் பாடல்களில்
உள்ளே இரு குடியினரும் உண்டு. வெளிப்படையாக பாடல்களில்
இருப்பதால் மண்ணார் சமூகம் பற்றித் தெரிகிறது சங்க காலத்தில்.
ஆனால், கேசகர் என்னும் பாணர் பிரிவினரைப் பற்றி பாணர் என்ற
சொல்லாலே மட்டும் குறித்தனர். வைத்திய சாஸ்திரத்திற்கு இவர்கள்
ஆற்றிய பங்கு பெரிது: மருத்துவர், பண்டிதர். உ-ம்: கருடவாகன
பண்டிதர் (ஸ்ரீரங்கம்), ஆபிரகாம் பண்டிதர் (தமிழிசை ஆய்வைத் தொடங்கி
அரும்பணி செய்த பண்டிதர்களில் முதல்வர்), ஐரோப்பாவில்
ஷாம்பூ அறிமுகம் செய்த வட பண்டிதர்கள், ஆமாத்திய அந்தணர்
என அழைக்கப்பட்ட வாதாபிப் போர்செய்த பரஞ்சோதி, பாவை
பாடிய வாயால் கோவை பாடு என்று சிவன் உத்தரவிட்டுப் பாடிய
மாணிக்கவாசகர் ... என்று இந்த மங்கலப் பாணர்கள் பங்களிப்பு
மிகப் பெரிது.

முதலில் மாத்துப் பந்தல் என்பது கட்டும் மண்ணார்கள்
தும்பி சேரகீரனார் கலந்துகொண்ட துயர்விழவில் ஈடுபட்டிருக்கலாம்.
இதுபோன்ற நாட்களில் மங்கலர் பங்கு என்ன? பார்ப்போம்.

முதலில், சுளகு, முறம் பற்றிய செய்திகள்.
சுளகு குளகு போல வாய் குறுகி இருக்கும். சேம்பின் இலைபோல
இருப்பது சுளகு (கலித்தொகை). அதன் சொற்பிறப்பு
தொழில் அடிப்படையில் துள்- எனும் வினை காரணமாக எழுந்தது.
வாய் குறுகும் சுளகு பார்த்து எழும் ஓர் வினைச்சொல்:
சுளுக்கு-தல். ‘கழுத்து சுளுக்கிக்கிச்சு’ என்பதில் உள்ள சுளுக்குதல் - உள்வாங்குதல்.
சுளுக்கு- > உளுக்கு- இது, உளுக்கார்தல் என்னும் வினைச்சொல் ஆகிறது.
உளுக்கார்தல் என்னும் இலக்கிய வழக்கை இன்றும் பயன்படுத்துகிறோம்.
உட்கார்தல் என்று உளுக்கார்தல் சுருங்கிவிட்டது. “வாங்கோ, உட்காருங்கோ”.

சுளகுக்கு மாறாக விரிவான வாயை உடையது முறம்.
கூலங்கள் தூற்றப் பயன்படும் முறம். வடமொழியில் தூற்று- என்னும்
வினைச்சொல் சூர்ப்பம் எனப் பெயர்ந்தது.
முறம்: என்னும் சொல்லாய்வு. முரலுதல் என்றால்
வண்டு, தேனீ, சிதர், ஞிமிறு, சுரும்பு, ... என்னும் அளி இனங்கள்,
பறவை இனங்கள் றெக்கையை மேலுங்கீழும் அடித்தல்.
”வரிவண்டு முரன்று பாட” முரல்தல் = முரன்றுதல்.
பல சொற்கள் ர/ற மாற்றமுண்டு. கருப்பு/கறுப்பு; முரிதல்/முறிதல்.
முரலுதல் - மேலும் கீழும் விரைந்து அசைத்து தானியங்களைப்
புடைத்தல் இதற்கான வேளாண் தொழிற்கருவி: முறம். இது முரம் < முரல்-
என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயராகும்.

NG

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:25:07 AM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Mar 22, 2020 at 9:51 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

முதலில் மாத்துப் பந்தல் என்பது கட்டும் மண்ணார்கள்
தும்பி சேரகீரனார் கலந்துகொண்ட துயர்விழவில் ஈடுபட்டிருக்கலாம்.
இதுபோன்ற நாட்களில் மங்கலர் பங்கு என்ன? பார்ப்போம்.

முதலில், சுளகு, முறம் பற்றிய செய்திகள்.
சுளகு குளகு போல வாய் குறுகி இருக்கும். சேம்பின் இலைபோல
இருப்பது சுளகு (கலித்தொகை). அதன் சொற்பிறப்பு
தொழில் அடிப்படையில் துள்- எனும் வினை காரணமாக எழுந்தது.
வாய் குறுகும் சுளகு பார்த்து எழும் ஓர் வினைச்சொல்:
சுளுக்கு-தல். ‘கழுத்து சுளுக்கிக்கிச்சு’ என்பதில் உள்ள சுளுக்குதல் - உள்வாங்குதல்.
சுளுக்கு- > உளுக்கு- இது, உளுக்கார்தல் என்னும் வினைச்சொல் ஆகிறது.
உளுக்கார்தல் என்னும் இலக்கிய வழக்கை இன்றும் பயன்படுத்துகிறோம்.
உட்கார்தல் என்று உளுக்கார்தல் சுருங்கிவிட்டது. “வாங்கோ, உட்காருங்கோ”.

சுளகுக்கு மாறாக விரிவான வாயை உடையது முறம்.
கூலங்கள் தூற்றப் பயன்படும் முறம். வடமொழியில் தூற்று- என்னும்
வினைச்சொல் சூர்ப்பம் எனப் பெயர்ந்தது.
முறம்: என்னும் சொல்லாய்வு. முரலுதல் என்றால்
வண்டு, தேனீ, சிதர், ஞிமிறு, சுரும்பு, ... என்னும் அளி இனங்கள்,
பறவை இனங்கள் றெக்கையை மேலுங்கீழும் அடித்தல்.
”வரிவண்டு முரன்று பாட” முரல்தல் = முரன்றுதல்.
பல சொற்கள் ர/ற மாற்றமுண்டு. கருப்பு/கறுப்பு; முரிதல்/முறிதல்.
முரலுதல் - மேலும் கீழும் விரைந்து அசைத்து தானியங்களைப்
புடைத்தல் இதற்கான வேளாண் தொழிற்கருவி: முறம். இது முரம் < முரல்-
என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயராகும்.

பறைக் கருவிகளில் சிறந்தது முரசு. பறை முழக்குவாரில் உயர்ந்தோர் முரசு
என்பார் எட்கர் தர்ஸ்டன்.

முரசு, முரவம் என்ற சொற்களுக்கும் தாதுவேர்: முரல்-தல்.
பறவை, பறை சிறகுகளை பறபற என அடிப்பது.
அதேபோல், முறம் (< முரம்), முரசு, முரவு : இறகுகள் முரல்வதால்.

வண்டினம் முரலும்  சோலை,
          மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை,
         குயிலினம் கூவும் சோலை,
அண்டர் கோன் அமரும் சோலை
         அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை
         விலக்கி நாய்க்கு இடுமின் நீரே

 

NG

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:05:39 PM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
குறுந்தொகை

 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
அதே போன்றது, புறம் 249-ம் பாடல்:
வரிநீறு ஆடு, அழுதல் ஆனாக் கண்ணள்;
சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள்
என்றால் பொருள் புரியும்.
வரிநீறு ஆடுதல் சுளகுக்கு இல்லை,
எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.

N. Ganesan

unread,
Mar 22, 2020, 11:14:14 PM3/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sun, Mar 22, 2020 at 10:06 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
குறுந்தொகை

 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
 
சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை. திருத்தம்.

N. Ganesan

unread,
Mar 25, 2020, 9:27:50 AM3/25/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
சேரநாட்டிலே அதன் தலைமை ஸ்தானம் கொண்ட பகுதி அகல்நாடு. அகல்நாடு என்ற பரியாயப்பெயரை இளங்கோ அடிகள் இரண்டுமுறை பயன்படுத்தியுள்ளார். சேரநாட்டு வழக்கம் ஒன்றை, சேரநாட்டுக் கவிஞர் தும்பி சேரகீரனார் புறநானூறு 249-ல் பதிந்துள்ளார்.
”தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது.  ”
என்பது புறம் 249-ன் முத்தாய்ப்பான ஈற்றடிகளின் பொருள். இங்கே கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. புறம் 249-ல், இன் என்பது உவம உருபு. சுளகு இன் சீறிடம். சுளகு போன்ற சிற்றிடம்
என்கிறார். இப்பாட்டில், வரிநீறு சுளகுக்குப் பொருந்தாது. சுளகுக்குப் பாட்டில்
ஒரு முக்கியத்துவம் இல்லை. கதாநாயகி தலைவனில் நினைவஞ்சலி நாளில்
கலந்துகொள்ளும் தலைவியே. அவள் கோலம்: வரிநீறு ஆடி, அழுங் கண்ணளை
வர்ணிக்கிறார் தும்பி சேரகீரன். நீறாடி சிவனைக் குறிக்கும் (பிங்கலம்). வரிநீறு (திரிபுண்டரம்) ஆடுதல் மாவிரதியர், பாசுபதர் போன்ற சமயிகளால் தமிழகத்தில் உருவானது. வரிநீறு ஆடுதல் முறம் செய்யாது, மாந்தரே செய்வர்.

கணவனை இழந்த தலைவி நிலைக்கு, அகல்நாட்டு உதாரணமாக,
கோவை அய்யாமுத்து அவர்களின் தாய் படத்தைத் தரலாம். 
கே. பி. சுந்தராம்பாள் அவர் கணவர் இருந்த போது இருந்த வண்ணக்கோலமும்,
கணவரை இழந்தபின்னர் அவர் வாழ்நாள் எல்லாம் தரித்திருந்த கோலமும்
நினைவுக்கு வரும். லட்சக்கணக்கான பெண்டிர் அந்நிலையில்
அண்மைக்காலம் வரை இருந்தார்கள்.

கணவருடன், கேபிஎஸ் முகத்தை, அணிநலம், சீலை பார்க்கவும்:

fdghfhhgh.jpg
 
புறம் 249-ல் இக்கோலம் மாறும் நிகழ்ச்சி வர்ணிக்கப்படுகிறது.
வரிநீறு (திரிபுண்டரம்) ஆடுகிற, அழுதல் ஆனாக் கண்ணள்
என்னும் பாடலில் குறிப்பிடும் தலையின் தோற்றம்.
இந்த ‘டிரேன்ஸிஸன்’ பற்றிய அரிய பாடல் புறம் 249.
30TH_THEATRE_PIX.jpg

சிஎஸ் கொடுமுடி சுந்தராம்பாளுக்கு, எஸ் எஸ் வாசன் கூட்டிய
ஔவையார் சினிமா வெற்றிவிழாவில் பரிசு வழங்குகிறார்:
https://thehinduimages.com/details-page.php?id=1350183 
 
On Wed, Mar 25, 2020 at 2:28 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

சங்க இலக்கியத்தில் நீறு என்பது இருபொருளில் வழங்கும்: (1) வெண்ணீறு மற்றும் (2) புழுதி. வெள்ளையான நீறு (உ-ம்: வெண்களர் நிலத்தில்)
போல உள்ள புழுதி. சில சமயங்களில் புழுதி என்ற பெயருக்குப் பொதுமை ஆகிறது. நீற்றறை என்றால் சுண்ணாம்புக் காளவாய்.
நீற்றுப்போனது என்றால் தூசி படிதலைக் குறிக்கும். உ-ம்: நீற்றுப் பூசணிக்காய். சங்க இலக்கியத்தில் தலைவன் மறைந்தபிறகு
தலைவி செய்யும் சடங்கை விவரிக்கும் பாடல்களுள் முக்கியமானது புறம் 249. பெரிய அகல்நாட்டை ஆளும் தலைவன் இறந்துபடுகிறான்.
முறம் போன்ற சின்னஞ்சிறிய இடத்தை, சாணத்தால் மெழுகிப் படையல் இடுகிறாள்.  நடுகல்லை நட்டு வைத்திருப்பர். அதில்
பீடும் பெயரும் எழுதுவது வழக்கம் என பிற சங்கப் பாடல்களில் காண்கிறோம்.

அக்கால கட்டத்தில் பல்வேறு சமயங்கள் தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வந்து கூடின. ஒன்றுக்கொன்று மோதின, பின்னர்
சம நிலை அடைந்தன. அவற்றுள் மாவிரதியர் சமயத்தை, அதுகொண்ட தாக்கத்தை இப்பாடலில் காண்கிறோம்.
பக்தி இலக்கியக் காலத்திலும், பின்னரும் இச்சமயக் கூறுகள் தமிழர் வாழ்வில் பெரும்பான்மையாய் இருக்கிறது.
மாவிரதிகள், காபாலிகர், காளாமுகர், பாசுபதர், ராசிகணத்தார், சமணர், பௌத்தர், சமணரில் ஒருவகையான
ஆஜீவகர், வைணவர், வருண வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட வைதிகம் எல்லாம் வந்து அடைந்தன.
மாவிரதியர் (மஹாவிராத்ய) சமயம் சுடுகாட்டுச் சுடலையில் வெண்ணீறு, வெள்ளெலும்பு இவற்றுக்குப் பேரிடம்
அளித்த சமயம், பாசுபதமும் அவ்வாறே. இதனால் வெண்ணீறு திருநீறு எனப்பட்டது. சைவத்தின் உட்பிரிவுகளாகிய
மாவிரதியர், காபாலிகர், காளாமுகர், பாசுபதர் போற்றிய வெண்ணீறு வாழ்க்கை நிலையாமை காரணமாக,
கணவனை இழக்கும் தலைவிக்குச் செய்யும் சடங்குகளில் ஒன்றாகிவிட்டது என்பது இப்பாடலால் தெரிகிறது.
கபிலபரணர், சேரசோழபாண்டியர், ... போல உம்மைத்தொகையாக கிராமங்களில் வழங்கும் தொடர்:
வண்ணா(ர)நாவிதர். இவர்கள் இல்லாமல் எச் சடங்கும் நிகழாது. பண்டிதர், மங்கலர் என்னும் மருத்துவர்பங்கு
புறம் 249-ல் முக்கியமானது. பண்டிதரில் புகழ்பெற்றார் சிலரைப் பார்த்தோம். சங்க காலப் பாணர்வகையினரில்
மங்கல அந்தணர்கள் ஒரு மிக முக்கியமான பிரிவினர். பாணர் என்று படிக்கும் இடங்களில் இவர்கள் பங்கை
இப்போதைய ஆசிரியர்கள் கவனத்துக்குக் கொண்ர்தலைக் காணோம். ராசிகணம் - ராசிபுரம்,
பசுபதி (சேரர் தலைநகர் வஞ்சி கோயில் இறைவன் பெயர்), போன்றன மாவிரதிகளுக்கு இருந்த
முக்கியத்துவத்தைக் காட்டும். அண்மைக்காலம் வரை தும்பி என்ற பெயர் பரம்பரைப் புலவர்களுக்கு
இருந்தது. தும்பி சேரகீரன் பாடிய பாடல். தும்பி புலவர் பெயராகவும், சேர நாட்டினர் என்பதும், கீரன்
என்னும் பூசாரித் தொழிலர் என்றும் கொள்ளலாம். 

" திருநீறு

சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது)-போது. பூதி = பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்." (தே. பாவாணர், ஒப்பியன் மொழிநூல்).

நீறு என்றால் வெண்ணீறு, புழுதி எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. புழுதி/பூழ்தி > பூதி (விபூதி) என்கிறார் பாவாணர்.

தும்பி சேரகீரனார் பாட்டில், முறம் என்பது இடத்தின் சிற்றளவைக் காட்டுதற்கு வரும் உவமைச்சொல் தான். இப்பாட்டில் சுளகுக்கு முக்கியத்துவம் ஒன்றுமில்லை. முக்கியமானவள் இப்பாட்டில் அகல்நாட்டின் தலைவனை இழந்த தலைவிதான். அவள் தவக்கோலம் பூண்டு, வாழ்நாளின் எஞ்சிய பகுதியைச் செலவிடுவாள். அதை ஊராரும், உற்றாரும் அறியச் செய்யும் சடங்கு. இங்கே, தும்பி சேரகீரனார் மாவிரதியர், பாசுபதரின் திரிபுண்டரம் என்னும் கலைச்சொல்லை “வரிநீறு” என்று தமிழர் அழைத்து இருப்பதைப் பதிவுசெய்துள்ளார்.

குறுந்தொகை
 25.    
யாரு மில்லைத் தானே கள்வன் 
    
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ  
    
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால 
    
ஒழுகுநீ ராரல் பார்க்கும் 
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. 
என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.
சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
அதே போன்றது, புறம் 249-ம் பாடல்:
வரிநீறு ஆடு, அழுதல் ஆனாக் கண்ணள்;
சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள்
என்றால் பொருள் புரியும்.
வரிநீறு ஆடுதல் சுளகுக்கு இல்லை, எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.

-------------------------

தற்போது, நலம்பொலம் நிகழ்வுகளில்  ஶாமியானா எனப்படும் தற்காலிக பந்தலைத் துணியால் (ஜமுக்காளம் போன்றதுணி)
விரைவில் அமைத்து மாற்றுகிறோம். ஶாமியானா (ஷாமியானா) பாரசீகச் சொல் ஆகும்.
புறநானூற்றுக் காலத்தில் சடங்குகளில் மண்ணார்பங்கு உண்டு. ஷாமியானாவுக்கு நல்ல தமிழ்ச்
சொல்லாக, இந்த நிகழ்வுகளில் இருந்து எடுக்கமுடியும். உ-ம்: விழாவில் பங்குபற்றினோர்
அமர, உணவுண்ண மாத்து விரிப்பர் மண்ணார்கள். மாத்து = மாற்று. விரைவில் மாற்றி
இதனை ஏற்பாடு செய்யமுடியும். அதேபோல், கம்புகளை நட்டு ஏற்படுத்துவது மாற்றுப்பந்தல்.
இதற்கு வன்ணார்கள் சீலைகளைக் கொடுத்துதவுவர். ஷாமியானா = மாற்றுப்பந்தர்.
துணியால் அமைக்கப்படும் பந்தலைப்பற்றி, புறம் 249 பாடலில் உள்ளது போன்ற நிகழ்ச்சியில்,
சீலைகளை விரித்து அமைக்கப்படும் மாத்துப்பந்தல் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவதைப் பார்ப்போம்.

<<<
தற்காலத்தில், "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குப் பந்தல்களாக அமைக்கப்படுகின்றன. இடுதல் மற்றும் அகற்றுதல் என்ற செயல்களின் எளிமை மற்றும் விரைவு பற்றியே இத்தகைய துணிப்பந்தல்கள் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. "சாமியானா' என்பது தமிழ்ச்சொல் அன்று.
"சாமியானா' என்ற பெயரில் அழைக்கப்படும் துணிப்பந்தல்கள் சங்க காலத்தில் புடைவைத் துணிப்பந்தல்களாக இருந்துள்ளன. அது, இறப்பு நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவும் இருந்துள்ளன. புறநானூற்றுப் பாடலொன்றில் இக்குறிப்பு (பா.260) உள்ளது.
உவமைகளை ஆள்வதில் திறம்மிக்கவரான வடமோதங்கிழார் எனும் புலவரின் அப்பாடல், "துணிப்பந்தல்' பற்றிய குறிப்பினைத் தருகிறது. அதில், போரில் மாண்ட வீரர்களுக்கென நாட்டப்பெறும் நடுகல்லிற்கான மேற்கூரையாகப் புடைவைத் துணிப்பந்தல் அமைக்கப்படும் வழக்கம் குறித்த செய்தி பொதிந்துள்ளது. இப்பாடலுக்கான ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரை நுட்பமிக்கது.
ஒருகாலத்தில், பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றதை அறிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வீரனொருவன், பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டுக் கொணர்ந்தான். என்றாலும், நிரையை மீட்பதற்காகச் செய்த போரில், பகைவரது அம்பு தைக்க, அவன் புண்பட்டிருந்தான்; ஊரருகே வந்ததும் இறந்தும் போனான்.
பின்பு, அவனது வீரச்செயலை மெச்சிய ஊரார், அவனுக்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும் எழுதிச் சிறப்பித்தனர். அவன் வாழ்ந்த காலத்தில், நிரம்பக் கொடை வழங்கிப் புகழ்பெற்றவன். அவன் போரில் வென்று, நடுகல்லாகிவிட்ட செய்தியை அறியாத பாணன் ஒருவன், வழக்கம்போல் பொருள்பெற அவன் இருப்பிடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப் பாணனைப் பார்த்த உள்ளூர்ப் பாணன் ஒருவன் கூறுகிறான், ""பாணனே! இனி நீ, ஏற்கெனவே அத்தலைவன் உனக்குத் தந்த நிலத்தை உழுது உண்பதோ, வேறொருவரிடம் சென்று இரந்து பெற்று உண்பதோ செய்யலாமே தவிர, வேறெதுவும் செய்வதற்கில்லை. ஏனெனில், நிரை மீட்பதற்காகப் போரிட்டு, தோல் உரிக்கும் பாம்பு போல, புகழுடம்பாகிய சட்டையை விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்று விட்டான். அவனது பெயர், புடைவையால் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடப்பட்டுள்ள நடுகல்லின்மேல் எழுதப்பட்டுள்ளது. அங்குச் சென்று அதனைப் பார்த்து வழிபடுக'' என்றும் கூறி வருந்துகின்றான்.
"கையறுநிலை' என்ற துறையிலமைந்த அப்புறப்பாடலின் பின்வரும் பகுதிதான், நடுகல்லின் மேற்கூரையாக இடப்பட்ட புடைவைத் துணியாலான "சங்ககாலப் பந்தலைச்' சுட்டுகிறது.
"உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்சை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்

N. Ganesan

unread,
Mar 26, 2020, 5:07:49 AM3/26/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai


On Thu, Mar 26, 2020 at 1:44 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> கொண்டுகூட்டாமலே பொருள்கொள்ளலாம்:
>
> சிறுபசுங்கால்களையுடையதும் ஆரலைப்பார்ப்பதுமான குருகு.
>

இரண்டும் ஒன்றுதான். உம்மையை வருவித்துப் பொருள் கொள்வதோ,
கொண்டுகூட்டிப் பொருள்கொள்வதோ அவசியம் ஆகிறது.
ஆரலுக்கு சிறுபசுங்கால் இல்லை. அதே போல, புறம் 249ல் முறம் வரி நீறு ஆடுதல் இல்லை.
இவற்றுக்கு குறுந்தொகை 25, புறம் 249, .... போன்ற எண்ணற்ற
உதாரணங்கள் உள்ளன.

கபிலபரணர் வந்தனர் - உம்மை வருவித்தால் கபிலன் வந்தனன், பரணன் வந்தனன்.
மண்ணாமங்கலர் வந்தனர் - மண்ணான் வந்தனன், மங்கலன் வந்தனன். (உ-ம்: புறம் 249 நினைவஞ்சலிக்கு).

புறம் 249:
வரிநீறு உடையவளும், சாணிகொண்டு சிற்றிடத்தை மெழுகிப் படைப்பவளும் ஆகிய அழுங்கண்ணள் (புறம் 249).
அதாவது,

ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும்
திருநீறு பூசியவளாய்,  தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகியவளும் ஆகிய தலைவி
அழும் கண்ணீர் நிலத்தை நனைத்தது.

நா. கணேசன்




 

N. Ganesan

unread,
Mar 27, 2020, 4:27:12 AM3/27/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
: இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே” -புறம், வடமோதங் கிழார் பாடல்.
படம் = புடவை என்பது சங்ககால வாழ்வை அறியுமாறு செய்வது.
பாம்பு படம் பற்றிய என் கருத்து: எழுத்துபோன்ற வடிவம் படிந்துள்ளது. எழுத்துப்படம் கொண்டது.
பணம் என்பதிலும் உருவம் உள்ளது. பணமணி, பணாமணி, படமணி நாகம் (தேவாரம்).
பணத்தை/படத்தைக் கொண்ட நாகம்.

படம் = சீலை, எனவே, திராவிட மொழிகளிலும் (அங்கிருந்து வடமொழிக்கும்) சென்ற சொற்கள்
படகம்/படகு. இது படகைக் கடலோடும்போது வெகுதூரம் தள்ள, காற்றின் விசையைப் பயன்படுத்தும்
சீலையால் ஏற்பட்ட பெயர்.பாய்மரம், பாய்மரக்கப்பல் என்பவற்றின் பெயர் படகு/படகம் என
தமிழ் இந்தியாவின் கடலாடும் திறனைக் காட்டும் சொல்லில் படம் = சீலை, புடைவை என
அமைந்துள்ளதும் பார்க்கிறோம். படம் = சீலை, திருமந்திரத்தில் புகழ்பெற்ற பாடல்:
     படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
     நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
     நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
     படமாடக் கோயிற் பகவற்க தாமே.
படம் - சீலை. ``ஆடும்`` என்றதனால், அது கொடிச் சீலையைக் குறித்தது. ``கட்டடமாக மக்களால் அமைக்கப்பட்ட கோயில்`
என்பதை விளக்க. ``படம் ஆடு அக்கோயில்`` எனவும், ``உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்`` என்றபடி, ``உடம்பாகிய கோயில்`` என்பதை விளக்க.

முனைவர் சுப்புரெத்தினம் மரபுவழியில் அழகாக விளக்கியுள்ளார்கள்.
16-ம் நாளிலோ, ஒரு மாதம் சென்றோ மாத்துப்பந்தர் ( ஶாமியானா என இக்காலத்தில் சொல்கிறோம்,
அப்பெயர் முகலாயர் காலத்தில், பாரசீக நாட்டில் இருந்து வந்த சொல்லாகும்.) அமைத்து
உற்றார், ஊராரால் நிகழ்த்தும் நினைவஞ்சலிநாள். இதுபோன்றே ஊரார்கள் பலருடன்
புஅம் 249-ம் நிகழ்ந்தது. தும்பிசேரகீரனும் கலந்து கொண்டு
மேலும் ஒன்று: புறம் 249-ல் ”சுளகு இன் சீறிடம்”, இதில் இன் உவம உருபு என்று
எல்லா உரையாசிரியரும் விளக்கியது பொருத்தமாகவே உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 28, 2020, 8:53:25 AM3/28/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
2017-ல் தன் கட்டுரை தினமணியில் வெளியானதும் படித்துக் கருத்துச் சொல்ல செ. வை. சண்முகம் ஐயா,
(முதுபேராசிரியர், அண்ணாமலைப் பல்கலை) மடலில் அனுப்பினார். அருமையான கட்டுரை).
முழுக்கட்டுரையும் கடைசியில் தந்துள்ளேன்.
<<

இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும். 
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)

>> (SVS, Prof. of Tamil Linguistics, Annamalai U.)

குறள் 92-ல் உள்ளதுபோல, இனும் எனும் உவம உருபு “தாயினும் நல்லன்” என்ற தொடரில் காண்கிறோம்.

இன் என்ற உவம உருபு ஒப்புப் பொருளில் வருவது புறம் 249-ல்.

சுளகின் சீறிடம்! (புறம் 249)

[...]

ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர கீரனார் பாடியது.

(தற்குறி = தன்+குறி, சுளகு + இன் + சீறிடம் = சுளகிற்சீறிடம், ....)


தமிழில் "மீ ' உயர்வு உவமை

By -செ.வை. சண்முகம்   |   Published on : 31st October 2017 07:08 PM  

இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும். 
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)

இலக்கியங்களில் அன்ன, ஆங்க, ஆங்கு, நிகர்ப்ப முதலிய சொற்கள் உவமைப் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அன்ன, ஒப்ப, போல் நிகர்ப்ப ஆகியவை பெயரைக்கொண்டு முடியும். பால் அன்ன வெண்மை, பால்போல வெண்மை, பால் நிகர்ப்ப வெண்மை என்று சொல்லலாம். ஆனால், ஆங்கு என்பது வினைச்சொல் குறிப்பாகப் பெயரெச்சத்தை ஏற்று வினையைக்கொண்டே முடியும். சொன்னாங்கு (சொன்ன ஆங்கு) செய்தார், பேசியாங்கு பணம் கொடுத்தார் என்றுதான் வழங்கப்படும்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக இன்பம் இல்லை என்றாற்போல உயிர்களிடத்து அருள் இல்லாதவருக்கு மேல் உலக இன்பம் இல்லை என்பதில் ஆங்கு உவமைப் பொருளில் வந்துள்ளது.
இலக்கியத்தில் உறழ, நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவையும் உவம உருபாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றில் உறழ் என்பது மாறுபாடு பற்றி மட்டும் காட்டுவது. "முழவு உறழ் திணி தோள்' (முழவினைப் போன்று திண்ணிய தோள்) எனும் போது உவமையோடு ஒப்புமையை அழுத்திக் கூறுகிற நிலை அமைகிறது. 
நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவை கருத்தாடல் நோக்கில் உவமையோடு பேசுபவரின் சில உணர்வுகளைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். "நடுங்க படங்கெழு நாக நடுங்கும் அல்குல்' படம் எடுத்து ஆடும் பாம்பு ஒத்த அல்குல் என்ற உவமைப் பொருளை மட்டும் உணர்த்தாமல் அல்குலின் சிறப்பு மிகைப்படுத்தப்பட்டதன் பிரதிபலிப்பாக நடுங்கும் என்பது உவம உருபு போலக் கையாளப்பட்டதாகக் கொள்ளலாம். கடுப்ப (கடுக்கும்) "கார்மழை முழக்கு இசை கடுக்கும் முனை' (கார் மேகங்களின் இடி முழக்கம்போல ஒலிக்கும் போர் முனை (அகநா.14:20-21). 
எள்ள - எள்ளல் - இகழ்தல். "கோங்கின் அவிர்முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை' (சிறுபா.25-26) கோங்கின் முகையை இகழ்ந்து அணிகலன்களுக்கு இடையே உள்ள முலை). இங்கு இகழ்தல் பொருள் தெளிவாக உள்ளது. உவமேயத்தை நோக்க உவமை இழிந்த பொருள் என்று கருதப்படுகிறது.
வெல்ல - வெல்லுதல் - வெற்றிபெறல். "வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய்க் கூந்தல்' (ஐங்குறு. 324.45 வேங்கைப்பூவை வென்ற தேமலை உடைய தேன்சொட்டும் கூந்தல்). எனவே, உவமையை உவமானம் உயர்ந்த பொருளாகக் கருதலாம். 
இங்கும் அவற்றின் அகராதிப் பொருள், உவமேயப் பொருள் உயர்ந்தவை என்பதை உணர்த்துவதால் பொருண்மையியல் நோக்கில் ஒரு புது வகை அதாவது, மீஉயர் உவமை என்று கருதலாம். அதன் சிறப்பை அறிந்துகொள்ள ஆங்கில மொழியின் உவமை பற்றிய அறிவு பயன்படும்.
ஆங்கில மொழியில் பெயரடை (adjective) பகுதியாய் உவமை அமையும். அங்கு ஒப்பு (பாஸிட்டிவ் - comparative), உறழ்வு (கம்பேரட்டிவ் - ஸ்ரீர்ம்ல்ஹழ்ஹற்ண்ஸ்ங்) மீ உயர்வு (சூப்பர்லேட்டிவ் - superlative) என்று மூன்று நிலையில் உவமை வேறுபடுத்தப்படுகிறது. டால் (taller.... than) இர் விகுதி சேர்த்தால் டாலர்... தென் (talllest) உறழ் உவமை. டாலஸ்டு
(ற்ஹப்ப்ப்ங்ள்ற்) மீ உயர்வு உவமை ஆகும். அங்கு மீ உயர்வு என்பது உருபு மூலம் உணர்த்தப்படுகிறது. மாறாகத் தமிழில் சொல் மூலம் அந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.
தமிழில் மீ உயர்வு உவமை என்ற கருத்து வெல்ல, வியப்ப, மருள போன்றவை உவம உருபுகளாகக் கையாளும்போது வெளிப்படுவதாகக் கொள்ளலாம். அது இன்னொரு நிலையிலும் உறுதியாவது அறியத் தகுந்தது. அன்ன, ஆங்கு என்பது சங்க இலக்கியங்களில் உவமை உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது "அ' என்ற சேய்மைச் சுட்டு அடியாகப் பிறந்த சொல் ஆகும்.
தமிழில் அ, இ, உ ஆகிய மூன்று வகை சுட்டுகள் உள்ளன. அவை முறையே சேய்மை, அண்மை, மிக நெடுங்தூரம் என்ற பொருள்படும். இங்கு என்பது பேசுவோர் இடத்தில் உள்ளது என்று பொருள். அங்கு என்று சொன்னால் பேசுவோர் இடத்தைத் தாண்டிய தூரத்தில் உள்ளது என்று பொருள். உது, ஊங்கு என்று சொன்னால் வெகுதூரத்தில் இருக்கிறது என்று பொருள். உகரச் சுட்டு தற்கால வழக்கில் இல்லை. பழங்கால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி ஆங்கு என்பது சேய்மை (தூரம்) உணர்த்தும் அகரச்சுட்டு அடிப்படையாகவும், ஊங்கு வெகுதூரம் உகரச் சுட்டு அடிப்படையாகவும் உண்டான சொற்கள் ஆகும். 
திருக்குறளில் ஊங்கு என்பதும் உவமை உருபாகக் கையாளப்பட்டுள்ளது. 31, 32,122,460,644,1065 ஆகிய குறள்களில் ஊங்கு உவமையாக அமைந்துள்ளது. ஊங்கு என்பது மிக உயர்ந்த பொருளை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் உள்ளது போல் மீஉயர்வு உவமையாகக் கருதலாம். அதாவது வெல்ல, வியப்ப, ஊங்கு முதலியவை தமிழில் மீ உயர்வு உவமைச் சொற்களாகக் கருதலாம்.
பொருள் வேறுபாடு உள்ள சொற்களை உவம உருபுகளாகக் கையாளும்போது, உவமைகளுக்குள் நுண்ணிய பொருள் மாறுபாடு அமைந்திருப்பது கவனத்துக்கு உரியது. அந்த நிலையில் ஒப்பு, உறழ்வு என்று இரண்டு வகையோடு மீ உயர்வு என்ற புதிய வகையும் கொள்ள இடம்கொடுக்கிறது.

உண்மையில் மீ தாழ்வும் உண்டு. அவனைவிடக் கொடியவன் யாரும் இல்லை என்று கூறுவது எடுத்துக்காட்டாக அமையும். ஒப்பு, உறழ்வு என்பதில் உயர்வு-தாழ்வு என்ற குறிப்பு இல்லை. அதனால் மீ உயர்வு - தாழ்வு என்ற மாறுபாடு செய்ய முடிவதால் அவற்றை மீநிலை என்று பொதுவாகக் கொள்ளலாம். எனவே, தமிழில் சொல் நிலையில் உவம உருபுகள் ஒப்பு, உறழ்வு, மீ நிலை என்று வகைப்படுத்துவது நுண்ணிய நிலையில் பொருள் வேறுபாடு செய்வதாக அமையும். 

N. Ganesan

unread,
Mar 28, 2020, 11:55:26 AM3/28/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
I have attached the PDF file sent by prof. S. V. Shanmukam, Chdambaram (Tillai).

---------- Forwarded message ---------
From: Shanmugam SeVai
Date: Sat, Mar 28, 2020 at 10:22 AM

பொருளிலக்கணக் கோட்பாடு உவமவியல்  தொல்காப்பியம் என்ற  என்னுடைய நூலை நியூசெஞ்சுரி புக் வெளியிட்டுள்ளது. அதில் 11, 99 மீ உறழ்வு பற்றிய குறிப்பு  உள்ளது, அ,ண்மையில்குறள் உவமை நடை என்ற எழுதினேன், அதிலும் மீ உறழ்வு பற்றி குறிப்பு  உள்ளது அதை இத்துடன்  இணைத்துள்ளேன்
சண்முகம்

--------------------------------------------------------
uvamai natai.pdf

N. Ganesan

unread,
Mar 29, 2020, 1:06:50 AM3/29/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
வரி அணில் - புறம் போன்ற நூல்களில் காண்கிறோம்.
வரிக்குதிரை தற்போது வழங்கும் சொல்.
வரிநீறு = திரிபுண்டரம் (புறம் 249, அடி 11). மாவிரதியர், பாசுபதர் வழிபாட்டில் முக்கியமானது.

On Sat, Mar 28, 2020 at 11:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sat, Mar 28, 2020 at 10:29 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> "திலகம் 'தைஇய 'தேம்கமழ் நுதல்" என்று வரும்போது நீறாடு நுதல் என புலவர் எழுதுவாரா? திருநீற்றை கேழல்போல் கொட்டிக்கொண்டாளா, அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை?
>
> அல்லது, அடங்கிய கற்பின் நீறாடுநுதல் மடந்தை என்றல்லவா எழுதணும்? மடந்தைக்கு இரண்டு அடைமொழிகள்தான், 1. அடங்கிய கற்பு, 2. ஆய் நுதல். அவள் பின்னர் அழுதகண்ணள் ஆனது தலைவனின் பிரிவு.
>

இல்லை. ஆராய்தற்குரிய நுதலை உடைய தலைவி திலகம் தைத்தலை விடுத்து, வரிநீறு ஆடும் கோலத்தைக் கண்டு
புலவர் கவல்கிறார். முன்பு இருந்த நுதலின் செம்மைக்கும், இப்போதைய தவ நிலைக்கும் உள்ள வெறுபாட்டைக் குறிக்கிறார்.

திலகம் தைஇய தேம்கமழ் நுதல் முடிந்த நிலையை இப்பாடல் பதிகிறது.
வரிநீறாடு அழுகண்ணள், சுளகின் சீறிடம் நீக்கி ஆப்பி மெழுகும் அழுகண்ணள் எனக் கொள்ள வேண்டியுள்ளது.
வரிநீறாடுதல்  முறத்துக்கு இல்லை ஆதலால்.

நீறாடி என்றால் சிவபெருமான். திரிபுண்டரம் நெற்றிக்கு மட்டும் இல்லை. ஆய்நுதல் = சிறிய நுதல் பாட்டிலே
கூறுதல் வரிவரியாய் நீறாடலுக்கு.நீறாடி என்னும் சிவன் கேழல்போல் கொட்டிக்கொள்கிறானா?
சிவன் நீறாடுதல் போல, தலைவி (ஆய்நுதல் மடந்தை) வரிநீறு ஆடுகிறாள் என்கிரது புறநானூறு.

A transitional event in the life of the Heroine of the poem, puRam 249 -

'நல்ல நெய்ப்புடைய கூந்தல்' என்று தோழியர் புகழ்ந்துரைத்த கூந்தலில்
சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப் பூக்களை நடுவே இடு
பூக்களாக இட்டு, பசுமையான குவளை மலர்களின் இதழ்களையும்
கிள்ளி அந்தக் கூந்தலில் இட்டு, 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் தலைக்
கோலங்களை வைப்பதற்குரிய இடத்தில் வைத்து, திலகமிட்ட நறுமணம்
பொருந்திய அழகிய நெற்றியில் மகர (சுறா) மீனின் திறந்த வாயினைப்
போன்ற வடிவில் அமைந்த தலைக் கோலத்தையும் வைத்து,
முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்
பூவையும் செருகி, கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய
மருதின் ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மீது இட்டு,
கிளையிலிருந்து தோன்றி நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த
அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில்
வளைய வைத்து ..." (திருமுருகு)

இப்படி இருந்த நிலை மாறி, வரிநீறாடு ஆய்நுதல் மடந்தை
நற்பெரும் தவத்தள் ஆகும் நிலை.
வரிநீறாடுதல் (புறம் 249) - திரிபுண்டரம் தரித்தல்:

பாடல் தெளிவாக அடிகள் 11-12 இருக்கிறது.
வரிநீறு என்ற ஈற்றுச்சீர் சிதைத்தால் அடுத்த அடியில் வகையுளி.

புறப்பாட்டு 249:
------------------------------
               249


கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,

கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,

எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்

அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,

உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,

அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்

பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,

ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.

....................தும்பி சேர் கீரனார் பாடியது.

பொருள்:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.XnNlcHJOnIU
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 29, 2020, 1:24:45 AM3/29/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
(1) சுவடிகளில் புறம் 249-ல் எந்த அடியும் சிதையவில்லை.
(2) 11-ம் அடி: உயர்நிலை உலகம் அவன்புக, வரிநீ(று).
உவேசா, ச. வையாபுரிப்பிள்ளை பின்வந்த எல்லா நூல்களிலும் வரிநீறு உண்டு.

N. Ganesan

unread,
Mar 29, 2020, 9:41:15 AM3/29/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
(1) சுவடிகளில் புறம் 249-ல் எந்த அடியும் சிதையவில்லை. (எ-டு: உவேசா பதிப்பு, 1894, 1911).
(2) 11-ம் அடி: உயர்நிலை உலகம் அவன்புக, வரிநீ(று).
உவேசா, ச. வையாபுரிப்பிள்ளை பின்வந்த எல்லா நூல்களிலும் வரிநீறு உண்டு.

(1) வரிப்புலி - இது பண்புத்தொகை (குணத்தொகை எனவும் பெயர்). Pope's third Tamil grammar, 1859, pg. 111
(2) ”வரிமணல் ஞெமர” (சங்க இலக்கியம்)
(3) “வரிக்குருளை” (சங்க இலக்கியம்)
(4) ”வரி அணில்" சங்க இலக்கியம்.
அணில் < சணில்/செணில்
இது போன்றதே, (5) வரிநீறு அணியும் தவந்தாங்கு தலைவி (புறம் 249). நீறாடு சிவன் = நீறாடி.
3 வரியுள்ள அணில் “வரிஅணில்” என்ப் புறப்பாட்டில் வருவது போல,
ஆய்நுதலில் மடந்தை 3 வரி நீறு அணிதலைக் குறிக்க ஆய்நுதல் மடந்தை (புறம் 249) என்ற தொடரால்
குறிக்கிறார். This is a transitional stage in the life of the Heroine of the poem.
(6) 20-ஆம் நூற்றாண்டில், தமிழுக்கு “வரிக்குதிரை” வருகிறது.

-----------------

தும்பி சேரகீரனார் பாடலைப் படித்தால் எப்பொழுதும் கேபிஎஸ் நினைவே வரும்.
பழனியில் 18-ம் படி சேர வினாயகர் மண்டபம், கோயில் என்முன்னோர் கட்டியது.
சேரராஜா முருகனுக்கு மலைக்கோயில் எடுத்தவன். அவன் வைத்த வினாயகன்
என ஸ்ரீலஸ்ரீ சாதுசாமிகள் கட்டளையிடச் செய்தனர். எனவே, கட்டளைதாரர்
மாதாமாதம் யாராவது வீட்டிலிருந்து போவது வழக்கம். அப்போது இராக்கால
பூஜையில் சில சமயம் கொடுமுடியில் இருந்து கேபிஎஸ் வந்திருக்கிறார்.
சில குருக்கள்மார் கேட்க, சில திருப்புகழ் பாடுவது அவர் வழக்கம்.
கடைசிகாலத்தில் உறவினர் எல்லாம் பிடுங்கிக்கொள்ள மிக சிரமப்பட்டார்கள்.
நா. மகாலிங்கத்திடம் உதவித்தொகை பெறுதலும் உண்டு. இன்னும் நிறையச்
செய்திகள் அவர் வாழ்க்கையில் அறிவேன். கொடுமுடி கோகிலம், யார்
சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது ....

NG

கொங்குநாட்டின் இரு கலைப்பொலிவர்கள். பாலக்காட்டுக் கணவாய்க்கு இருபுறமும்.
தலைமை ஸ்தானம் பழனிச்சாமி பக்தர்கள். “வரிநீறு ஆடு” தலைவி (Heroine of PuRam 249).
KBS-MGR.jpg
KB Sundarambal and SG Kitappa, the celebrated couple of early Tamil drama who were inspired by Balamani. Courtesy: Roli Books

வீர சுதந்திரம் வேண்டி நின்றோம், பண்டித மோதிலால் நேரை ... கேபிஎஸ் பாடுகிறார்:
திருச்செந்தூரன் - கேபிஎஸ்

அகல்நாட்டுத் தலைவன் இருந்த போது, தலைவியின் மங்கலக்கோலம்,
324765c82b78247428cbebcb570790db-250x159.png

N. Ganesan

unread,
Apr 5, 2020, 11:07:11 PM4/5/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சில ஆண்டு முன்னர் அனுப்பிய மடல். உவேசா அவர்களின் தமிழ் அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப்
பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள் ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போது
மீண்டுவிட்டது. அதனை வைத்துத் தான் வரி நீறு ஆடு, அழுத கண்ணள் என்பதன் பொருளும்,
சங்க காலச் சமயமும் தெளிவாகிறது. ஐந்து முக்கியமான பாடல்கள் - தமிழ்த்தாய் வாழ்த்து, + நான்கு சங்கப் பாடல்கள்
பற்றியும் அவர்றின் உயிர்நாடியாக உள்ள சொற்கள் பற்றியும் எழுதியுள்ளேன்:

முறம், சுளகு, பிடகம் : வேறுபாடுகள்
-------------------------------------------------------------

புறம் 249-ல் சுளகுக்கு முக்கியத்துவம் இல்லை. சுளகு போன்ற சிறிய இடம், அவ்வளவுதான் சொல்கிறார் புலவர். இன் = போன்ற (உவம உருபு).

-----------------------------

உ. வே.  சாமிநாதையர், வ. சு. செங்கல்வராயர் பற்றிய வாழ்க்கை நிகழ்ச்சி கிடைத்தது. நெஞ்சில் நெகிழ்ச்சியூட்டும் தமிழறிஞர்கள் பற்றிய
செய்தியை முல்லை பழனியப்பன் சொல்லியுள்ளார்.

நா. கணேசன்


ஆராய்ந்த கைகளும் தேடிய கால்களும்
By முல்லை மு.பழநியப்பன்
Dinamani, First Published : 17 June 2012 12:00 AM IST

தணிகைமணி டாக்டர் செங்கல்வராயபிள்ளை அவர்கள், தேவாரங்களையும், திருப்புகழையும் ஆராய்ந்து, "ஒளி நெறிகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டுப் பெருமை பெற்றவர்கள். ஒவ்வோர் ஆண்டும் "தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யரை, தணிகைமணி சென்று காண்பது வழக்கம். அய்யர் அவர்கள் நோயுற்றுப் படுத்து இருந்தார்.

அவர் அருகில் சென்று, அவர் விழிக்கும் வரை நின்று கொண்டிருந்தார். அய்யர் கண் விழித்துப் பார்த்ததும் மகிழ்ச்சி ததும்ப,""திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைககள் ஆயிற்றே'' என்று கூறி தணிகைமணியின் இருகைகளையும் பற்றி தம் கண்களில் ஒற்றிக் கொண்டார். உடனே தணிகைமணி அய்யரின் பாதங்களைப் பற்றியவாறு, ""சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடின கால்கள் ஆயிற்றே இவை'' என்று கூறி வணங்கினார். அறிஞர்களின் பெருமையை அறிஞர்களே அறிவர்.

N. Ganesan

unread,
Apr 9, 2020, 7:18:17 AM4/9/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வேளாண்மையில் பயன்படும் கருவிகள் பல வடிவங்களில் செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அடிப்படையான வடிவம்
உண்டு, புறம் 249-ல், ஆய்நுதல் மடந்தை, வரிநீறு ஆடி, சுளகுபோன்ற இடத்தில் படையல் இடுகிறாள். இப்பாடல் விளக்கத்தில்
மண்ணாமங்கலர் பங்கு பெரிது, ஈமச் சடங்குகளில், படம் செய் பந்தர் என்று புடைவையால் பந்தர் அமைக்கும் பணி, நெய்ப்பந்தம்
பிடித்தல் போன்றவை மண்ணாருக்கு உரியவை. மங்கல பண்டிதர்கள் சடங்கின் முக்கிய அந்தணர்கள். அவர்கள் பங்கைப் பார்ப்போம்.
தமிழிசை எப்போதும் வளர்த்தோர். பாணர் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவோரில் பெரும்பகுதியினர் மருத்துவர்/மங்கலர் ஆவர்,
புறம் 249 வரிநீறு போலவே அமைந்த புறப்பாடல் 356. இதிலும், வாழ்க்கை நிலையாமை குறித்தும், வரிநீறு ஆகிய சுடலை வெண்ணீறு
பற்றியும் பாடப்பட்டுள்ளது. திரிபுரத்தை எரித்த நீறு அணிபவனாக சிவனைச் சங்க இலக்கியம் வணங்குகிறது.
களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்                                            5
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே
.

புறம் 249-ல் சுளகின் வடிவம் முக்கோணம். சேம்பின் இலை வடிவில் இருக்கும் என்கின்றன சங்க நூல்கள். பிடகம் என்றால் வட்டவடிவம், சுளகு முக்கோண வடிவம்,
முறம் சதுர வடிவம், ... எனப் பல முறவகைகள். இவற்றைச் சிறுமியர் விளையாடு பொருள்களாகவும் செய்துள்ளனர்.
முச்சி என்று சொல்வதுண்டு. முச்சி < முச்சில் < முற்றில்

அம் சிறைத் தும்பி = ஹம்மிங்/இசை செயும் இறகுகளைக் கொண்ட தும்பி (கொங்கு தேர் வாழ்க்கை).
அஞ்சிறை முரலும் வண்டு. இந்த முர- போன்ற வினையை உடையது முர- > முரம் > முறம்.
சிறுமிப்பெண்கள் விளையாடுவது முச்சில் (முச்சி).

முல்- > முல்+த்+இல் = முன்றில்/முற்றம். முல்=முன் (முலை ...)
முர்- > முர்-+த்+இல் = முற்றில் முத்தில் > முச்சில்.
(ல், ர் வேறுபடும்போது பொருளும் வேறுபடுவது காண்க.)

கொங்குச் சமணர் திருத்தக்கதேவர் முச்சி(ல்) என்பதன் செந்தமிழ் வடிவத்தைத் தந்துள்ளார்:

University of Madras Lexicon

முற்றில்

muṟṟil   n. prob. முற்று-. [K.muccal.] 1. Small winnow; சிறுமுறம். முற்றில்சிற்றிலுண்ணொந்து வைத்து (சீவக. 1099). 2. The16th nakṣatra, as resembling a winnow. Seeவிசாகம். (திவா.) 3. A kind of shell-fish;சிப்பிவகை. (தொல். பொ. 584, உரை.)

J.P.Fabricius Tamil and English Dictionary

முற்றில்

muṟṟil   s. (com. முச்சில், முச்சி) a small winnowing fan; 2. the 16th lunar mansion, விசாகநாள்.

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

முற்றில்

muṟṟil   s. [com. முச்சில், முச்சி.] A small winnowing fan, சிறுமுறம். 2. The sixteenth lunar mansion, விசாகம். (சது.)>

நா. கணேசன்



N. Ganesan

unread,
Apr 12, 2020, 9:22:02 AM4/12/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தமிழர்கள் வேளாண்மையில் பல வடிவங்களைத் தேர்ந்து பயன்படுதினர் என்பது சங்க இலக்கியத்தால் தெரிகிறோம்.
முறம் - சதுரமானது. சுளகு - திரிகோண வடிவு, பிடகம் - வட்டவடிவில் உள்ள சிறுகூடை.

வட்டி = வட்டில். வட்டவடிமானது. எதற்கும், மூடி இருந்தால் அது கடகம். கட்டப்படுவது, அதாவது மூடிப்பூட்ட முடியும்.
காப்புக்கட்டுவது. இதில் உள்ள கட்டு-தல் ===> கடகம்.

அல்லியம்/அலிப்பேடு கண்ணன் கொம்பொசித்த கூத்து. 6 பிரதிமைகளை கொண்ட பெண்கள் வட்டமாக
ஓடிக் காட்டும் நாடகம். இந்தப் பிரதிமை அல்லிப்பாவை எனப்படும். அல்லிப்பாவை என்னும்
ஓவியத்தை நிறுத்திக் காட்டும் ”சுத்த நிருத்தம்” இது. அல்லியக்கூத்தில் அவிநயமோ, வட்டணையோ (dance step)
இருக்காது என்பார் அடியார்க்குநல்லார்.

அல்லிப்பாவை பற்றிய கோவூர்கிழார் உரையிலே வட்டி என்றால் என்ன என விளக்கியுள்ளார் உவேசா அவர்கள்.
”வட்டி - கடகப்பெட்டி; அதாவது பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி; “ஊனார் வட்டியார்” (மலைபடு.152). ஆய்-இடைச்சாதி; சீவக.426, ந.”

விதைக்குறு வட்டி: "வித்தொடு சென்ற வட்டி" (நற். 210:3.) வட்டி: ஐங். 47:2, 48:2.

முறம், சுளகு, பிடகம், வட்டில், முற்றில்(முச்சி), கடகம், வட்டி - வடிவ வேறுபாடும், பயனும் வேறுபடும்.

Reply all
Reply to author
Forward
0 new messages