வஞ்சிக் கொடி:
(1) "பூங்கொடிப் பெயர்ப் படூஉம் திருந்திய நன்னகர்” மணிமேகலை 28: 101, 102.
(2) வஞ்சிமா நகர் புக்க காதை: (மணிமேகலை - தமிழில் உள்ள ஒரே பௌத்த நூல்!)
கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்
விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள்
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.
இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. ''செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க'' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1 ''''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'''' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும்.
92-4. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.
கொடி, வஞ்சிக்கொடி; 2 ''''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'''' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ''திருந்து நல் ஏது'' என்றார். வாய்மை நான்கும் 3 மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ''பொருந்து நால் வாய்மை'' எனப்பட்டது. ''நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்'' என்பது.
அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ''அருளல் வேண்டும்'' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ''இன்னது இவ் வியல்பு'' என எடுத்துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.
---------
11-15. ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன - ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சிபோன்ற, என் வளநகர் விளங்க-எனது வளம் பொருந்திய மனை சிறப்புற்று விளங்க, துனியின்று - வெறுப்பின்றி, திரு நுதல் பொலிந்த என் பேதை வருமுலை முற்றத்து - அழகிய நெற்றியாற் பொலிவுற்ற என்
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி யன்னவென் வளநகர் விளங்க
இனிதினிற் புணர்க்குவென் மன்னோ
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=577&y=578&bk=263&z=l1270635.htmகோதைபாடி - கோதவாடி, கண்ணர்பாடி - கன்னிவாடி, வள்ளுவபாடி நாடு :: பாடி வீடுகளான் அமைந்த பெயர்கள்.
----------------
எனவே, சேரர் தலைநகர் வஞ்சி - இன்றைய கரூர் - பூங்கொடியால் பெயர் பெற்றது என அறியலாம்.
கொங்கு வேளாளரில் பலருக்கும் குலதெய்வம் வஞ்சிக்கொடி அம்மன். பெண்கள் பெயரும்
இன்றளவும் உண்டு.
“வட்கார் மேற்செல்வது வஞ்சி” - வஞ்சித் திணை
https://ta.wikipedia.org/wiki/வஞ்சித்_திணைவஞ்சிக்கொடியைப் பொற்கொடி என்றார் சீத்தலைச் சாத்தனார். காரணம், அதன் பூக்கள் பொன்னிறமாகச் சார்ந்த மரத்தையே மூடுவதால் ஆகும். அமிர்தவல்லி என்றும் இதனால் வழங்கும்.
https://twitter.com/rameshpandeyifs/status/1334018046894120960சூடு உற்ற சுடர்ப்பூ என்று இந்த பொற்பூக்கள் ஆகிய வஞ்சிப்பூவினை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. “சுடர்ப் பூங் கொன்றை” - பொன்னிற மலர் தான்.
பொன்னிறமான பூக்கள், செக்கச் சிவப்பான காய்களாய் மாறும்.
https://krishijagran.com/health-lifestyle/the-fresh-leaves-of-the-wonder-plant/https://www.youtube.com/watch?v=OXwrf1BwAoshttps://www.flickr.com/photos/78556809@N06/7207273500https://ayurvedicmagazine.com/giloy-health-benefits/https://en.wikipedia.org/wiki/Tinospora_cordifolia வஞ்சிக்கொடி = நாகினி. (தவறாகப் பிரம்புக்கொடியைக் கூறுகிறது மதறாஸ் லெக்ஸிகான்).
https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-vanji-creeperவஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்.
'கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’ - சினிமாவில்
https://www.youtube.com/watch?v=NHS7XgUAuJ8பெண்ணின் இடையை வஞ்சிக்கொடிக்கு ஒப்பிடுவர் (தேவாரம், திருக்கோவையார், ...)
----------------
ஆனால், வஞ்சி மரம் வேறு. இதுவும் கரூரில் நிறைய வளர்ந்ததாகப் புறப்பாட்டு கூறுகிறது.
மருதம், காஞ்சி, வஞ்சி - மருதத் திணையின் மும்மரங்கள்.
கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை, 1986, பக். 652
வஞ்சி மரம் = Salix tetrasperma = Indian willow.
"மரஞ்செடிகொடிகளின் தமிழ்ப் பெயர்களையும், தாவரப் பெயர்களையும் தொகுத்துப் பட்டியலிட்ட லஷிங்டன் (1915) என்பார் (பக். 140) வஞ்சி என்பது சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா என்ற சிறு மரம் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்ஙனமே சென்னை மாநிலத் தாவரங்களைப் பற்றிப் பெருநூல் எழுதிய காம்பிள் (1928) என்பாரும் வஞ்சி என்பத் இதே தாவரம் எனக் குறிப்பிடுவத்டன், இதன் மலையாளப் பெயரும் வஞ்சி எனக் கூறுவாராயினர்.”
பி. எல். சாமி, சங்க நூல்களில் மரங்கள், 1992. பக். 162
”பகன்றை பலாசம் பல்பூப் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம்” - குறிஞ்சிப்பாட்டு 88-89
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐங். 50
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்
விடியல் வந்த பெருநீர்க் காவிரி - அகம் 286
ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேற்
பட்டஞ் சிதைப்ப வரும். ஐந். 45
காஞ்சியும், வஞ்சியும் நன்கு வளைந்துகொடுக்கும் மரங்கள். எனவே தான், குளிர் நாடுகளின் Willow மரத்தை ஒத்தது என Indian Willow Tree என வஞ்சிமரம் பெயர்பெற்றது.
வஞ்சி மரத்தின் சிறுகாய்கள். வஞ்சி, காஞ்சி, மருது ஆற்றோரம், நீர்நிலை அருகே வளர் மரங்கள். மருத மரத்தோடு, வஞ்சி மரத்தையும் சாய்த்து காவிரி வெள்ளம் வந்ததாக அகநானூறு. அப்போது ஸ்டான்லி அணை போன்றவை இல்லை.
நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்த மெங்கும்
கோளிசா லந்த மாலங் குளிர்மலர்க் குரவ மெங்குந்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாக மெங்கு
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்க மெங்கும்.
http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=78நீள் இலை வஞ்சி - நீண்ட இலைகளையுடைய வஞ்சிமரம்;
பெரியபுராணம். எல்லாமே மரங்கள்.
வெண்மையாகப் பூப்பது. எனவே, சுவேதம் எனப் பெயர் உண்டு.
https://books.google.com/books?id=JgxaAAAAcAAJ&பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. - புறப்பாட்டு.
செல்வக் கடுங்கோவின் தமிழ் ப்ராமிக் கல்வெட்டுகள் கரூரில் கிடைக்கின்றன. பொருநை - ஆம்பிரவதி ஆறு (இப்போது அமராவதி).