உலகத் தாய்மொழி நாள் ஆகிய
பிப்ரவரி 21, 2021 அன்று அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)
தலைவர், செயலர் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளின்
பேரில், பேரா. செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் நா.
கணேசன் (ஹூஸ்டன், அமெரிக்கா) எழுதி அனுப்பிய கட்டுரையைத் தினமணி நாளிதழ்
வெளியிட்டுள்ளது. ஃபெட்னா பேரவைக் கடிதமும், நாங்கள் அனுப்பிய கட்டுரையும்
வாசிக்கலாம். திருவள்ளுவர் திருநாள் எனத் தைத் திங்கள் பிறப்பு (பொங்கல்)
அமைந்துவிட்டது. அதற்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை
முதல்நாள் (தமிழ் வருடப் பிறப்பு) அமைதற்கான வேண்டுகோள்.
அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை வேண்டுகோள்:
உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani
By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html
நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:
தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக
செ. வை. சண்முகம், நா. கணேசன்
தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.
தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.
உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்‘ ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே‘ என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.
தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில் (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது ’திங்கள்முன்னே இக்கே சாரியை’ என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும், சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல, 27 நட்சத்திரப் பெயர்களின் கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருஷப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர் திருநாள் என்றும் நின்று உதவும்.
செ. வை. சண்முகம்
பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நா. கணேசன்
ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்காOn Sun, Feb 28, 2021 at 6:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்சகநனிநன்றி.
On Sun, 28 Feb 2021, 4:09 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாளை அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (55 பெருநகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள்) விழா எடுப்பதும், அம்முயற்சியை முன்னெடுக்கும் என் பணிகளையும், பெட்னா (http://fetna.org ) தலைவர் கால்டுவெல் வேள்நம்பி மற்றும் ஆட்சிக்குழுவை வாழ்த்தி, சாகித்திய அகாதமிக் கவிஞர், ஈரோடு தமிழன்பன் நீண்ட, அழகிய கவிதை இயற்றியுள்ளார். வரும் தமிழ் ஆண்டுப் பிறப்பு தொல்காப்பியர் திருநாள் என, தைப் பிறப்பு (தை முதல்நாள், பொங்கல்) திருவள்ளுவர் திருநாள் என்றானது போல, பேரவை முயற்சியால் தமிழக அரசாங்கத்தைக் கேட்டுள்ளது. நம் இளைஞர்களுக்கு தமிழகத்திலும், வெளியே உலகம் எங்கும் தொல்காப்பியரைக் கொண்டாட, நினைவூட்டித் தொல்காப்பியம், திருக்குறள், தமிழ், மொழியியல், இலக்கியம், இந்திய வரலாறு, வருங்காலங்களில் தமிழ், திராவிட மொழிகளின் இருப்பு, வளர்ச்சி எனப் பல்வேறு செயல்களுக்குத் திருவள்ளுவர் திருநாள் (தை 1) + தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1, “ஆடு தலை ஆக” எனு சங்க இலக்கியம் கூறும் ஆண்டுப் பிறப்பு) மிக உதவும். அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம், முதன்முதலில் பேரா. தமிழண்ணல் தினமணியில் 2011-ம் ஆண்டில் தொல்காப்பியர் திருநாள் கொண்டாடவேண்டும் என்றும், அது சித்திரை முதல்நாளாக அமையலாம் என்றும் எழுதியிருந்தார்கள். 2021-ல், உலகத் தாய்மொழி நாளில், தினமணியில் தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை 1-ம் நாள் கொண்டாட வேண்டும் என அச்சான கட்டுரை வாசித்திருப்பீர்கள்,
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்சகநனிநன்றி.
On Sun, Feb 28, 2021 at 6:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்சக
தொல்காப்பியர் திருநாள் பதிகம்
(கட்டளைக் கலித்துறை)
இப்படி வாழ்கென இன்தமிழ்ப் பாட்டில் இசைத்தவரை
அப்படிச் சொல்ல அகம்புற மென்றே அறைந்தவரை
முப்பால் புகட்டும் முதல்வனைக் காட்டிலும் மூத்தவரை
எப்பால் புகினும் இவர்க்கிணை இல்லென ஏத்துவமே! 1
பாருயிர் தம்மைப் பகுத்து வகுத்ததைப் பட்டியலில்
ஆருயிர் ஆய்ந்தே அறிவோ டிணைத்த அறிவியலார்
ஊரும் உலகும் உவந்திடத் தந்த உயிரியலார்
பாருள மாந்தர் பணிந்து வியந்திடும் பாங்கினரே! 2
மூலமாம் நூலிது மூலையில் சோர்தல் முறையிலவே
ஞாலம் முழுவதும் ஞாயிறு போல நலம்தரவே
காலம் கனியும் கணேசன் அருளால் கணப்பொழுதில்
பாலம் அமைக்கும் பணியில் இணைவோம் பரிவுடனே! 3
இணையெனப் பாரில் எவரும் இலாத இலக்கணியை
அணையா விளக்கென யாவரும் போற்றிட ஆக்கிடுவோம்
இணையும் கரங்கள் எதனையும் வென்றிடும் என்றறிவோம்
கணைபோல் விரைந்து கடமைகள் செய்வோம் களிப்புறவே! 4
அலகிலாச் சீர்கொள் அருந்தமிழ் காத்திடும் ஆர்வமுடன்
உலகெலாம் வாழும் உணர்வுடைச் சான்றோர் உயிர்ப்புடனே
பலவகை யானும் பணிகளைச் செய்திடும் பாங்குடனே
இலக்கை அடையும் இலக்கினைக் கொண்டே இயங்குவரே! 5
மொழியியல் என்னும் மொழிநெறி பற்றி மொழிந்தவரை
விழியெனப் போற்றி விளங்கிடச் செய்ய விரும்புவதால்
அழியாப் புகழை அவருக் கணியாய் அளிப்பதற்கு
வழியென ஒன்றை வகுக்கும் தமிழினம் வாழியவே! 6
காட்டா றெனப்படும் காலம் சமைத்த கடுஞ்சுழலில்
மாட்டா திருந்த மணிநூல் உலகினில் மற்றிலையே
கேட்டா லெவரும் கிளர்ந்தெழு வார்கள் கெழுதகையீர்
நாட்டா ரிடையே நவின்றிட வாரீர் நலம்பெறவே! 7
தொல்காப் பியர்திரு நாளென ஒன்றினித் தோன்றிடவே
ஒல்காப் புகழ்மிகு ஒண்டமிழ்ச் சீர்மிக ஓங்கிடவே
ஒல்லும் வகையில் உறுதுணை யாகி உதவிடவே
வெல்லும் வகையில் வெறிகொண் டெழுக வினைசெயவே! 8
பத்தரை மாற்றுப் பசும்பொன் எனத்தகும் பாவலரின்
முத்திரை யாக முழங்கும் திருநாள் முகிழ்த்திடவே
இத்தரை மீதினில் என்றும் அவர்பேர் இருந்திடவே
சித்திரை ஒன்று சிறப்பாய் அமைந்திடச் செய்குவமே! 9
செல்வழி நன்று சிறகை விரிப்போம் சிலிர்ப்புடனே
வெல்வ துறுதி விளைந்திடும் வெற்றி விரைவினிலே!
தொல்காப் பியரவர் தொன்மை அறிந்த அரசினரும்
நல்குவர் ஆணை நனிவிரை வாக நடைபெறுமே! 10
-கவிஞர் இனியன், கரூர்.
துச்சில்: அமெரிக்கா
தகவல் :
1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U
3. https://en.wikipedia.org/wiki/Tropical_year
4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy
5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html
6. https://en.wikipedia.org/wiki/Puthandu
+++++++++++++++
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.
எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]
+++++++++++++++
தமிழர் அறுபதாண்டு அட்டவணை
எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | எண். | பெயர் | பெயர் (தமிழில்) | பெயர் (ஆங்கிலத்தில்) | கிரகோரி ஆண்டு | |||
01. | பிரபவ | சங்க முதல்
ஆண்டு |
Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | திவாகரர்
ஆண்டு |
Hevilambi | 2017–2018 | |||
02. | விபவ | ஔவையார்
ஆண்டு |
Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | அருணகிரி
ஆண்டு |
Vilambi | 2018–2019 | |||
03. | சுக்ல |
திருவள்ளுவர் |
ஆண்டு |
Sukla | 1989–1990 | 33. | விகாரி | தியாகராஜர்
ஆண்டு |
Vikari | 2019–2020 | |||||
04. | பிரமோதூத | புத்தர்
ஆண்டு |
Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | ஜி.யூ. போப்
ஆண்டு |
Sarvari | 2020–2021 | |||
05. | பிரசோற்பத்தி |
தொல்காப்பியர் |
ஆண்டு |
Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | கட்டப் பொம்மன்
ஆண்டு |
Plava | 2021–2022 | |||||
06. | ஆங்கீரச | நக்கீரர்
ஆண்டு |
Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | வீரமாமுனி
ஆண்டு |
Subakrith | 2022–2023 | |||
07. | ஸ்ரீமுக | இளங்கோ
ஆண்டு |
Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது |
கால்டுவெல் |
ஆண்டு |
Sobakrith | 2023–2024 | ||||||||||
08. | பவ | கண்ணகி
ஆண்டு |
Bhava | 1994–1995 | 38. | குரோதி | தாயுமானர்
ஆண்டு |
Krodhi | 2024–2025 | |||
09. | யுவ | மணிமேகலை
ஆண்டு |
Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | நாயக்கர்
ஆண்டு |
Visuvaasuva | 2025–2026 | |||
10. | தாது | சாத்தனார்
ஆண்டு |
Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | குமர குருபரர்
ஆண்டு |
Parabhaava | 2026–2027 | |||
11. | ஈஸ்வர | கம்பர்
ஆண்டு |
Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | ஆறுமுக நாவலர் ஆண்டு | Plavanga | 2027–2028 | |||
12. | வெகுதானிய | ஒட்டக்கூத்தர்
ஆண்டு |
Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | குமரி
ஆண்டு |
Keelaka | 2028–2029 | |||
13. | பிரமாதி | ஆழ்வார்கள்
ஆண்டு |
Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | திருத்தணி
ஆண்டு |
Saumya | 2029–2030 | |||
14. | விக்கிரம | சித்தர்கள்
ஆண்டு |
Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | காந்தியார்
ஆண்டு |
Sadharana | 2030–2031 | |||
15. | விஷு | ஆண்டாள்
ஆண்டு |
Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | காமராசர்
ஆண்டு |
Virodhikrithu | 2031–2032 | |||
16. | சித்திரபானு | ஜெயங்கொண்டார்
ஆண்டு |
Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | இராஜாஜி
ஆண்டு |
Paridhaabi | 2032–2033 | |||
17. | சுபானு | பெருந்தேவனார்
ஆண்டு |
Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | பரிதிமால்
ஆண்டு |
Pramaadhisa | 2033–2034 | |||
18. | தாரண | திருத்தக்கர்
ஆண்டு |
Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | சிதம்பரனார்
ஆண்டு |
Aanandha | 2034–2035 | |||
19. | பார்த்திப | வளையாபதி
ஆண்டு |
Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | பாரதியார்
ஆண்டு |
Rakshasa | 2035–2036 | |||
20. | விய | சேக்கிழார்
ஆண்டு |
Viya | 2006–2007 | 50. | நள | பாரதிதாசன்
ஆண்டு |
Nala | 2036–2037 | |||
21. | சர்வசித்து | பூங்குன்றனார்
ஆண்டு |
Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | பெரியார்
ஆண்டு |
Pingala | 2037–2038 | |||
22. | சர்வதாரி | நாலடியார்
ஆண்டு |
Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | அண்ணாதுரை
ஆண்டு |
Kalayukthi | 2038–2039 | |||
23. | விரோதி | முத்தொள்ளாயிரம்
ஆண்டு |
Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | வரதராசர்
ஆண்டு |
Siddharthi | 2039–2040 | |||
24. | விக்ருதி | அப்பர்
ஆண்டு |
Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | மறைமலையார்
ஆண்டு |
Raudhri | 2040–2041 | |||
25. | கர | சுந்தரர்
ஆண்டு |
Kara | 2011–2012 | 55. | துன்மதி | கல்யாண சுந்தரர் ஆண்டு | Dunmathi | 2041–2042 | |||
26. | நந்தன | சம்பந்தர்
ஆண்டு |
Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | விசுவநாதம்
ஆண்டு |
Dhundubhi | 2042–2043 | |||
27. | விஜய | வாசகர்
ஆண்டு |
Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | கண்ணதாசன்
ஆண்டு |
Rudhrodhgaari | 2043–2044 | |||
28. | ஜய | வில்லிபத்தூரார்
ஆண்டு |
Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | அப்துல் கலாம் ஆண்டு | Raktakshi | 2044–2045 | |||
29. | மன்மத | புகழேந்தி
ஆண்டு |
Manmatha | 2015–2016 | 59. | குரோதன | இளையராசர்
ஆண்டு |
Krodhana | 2045–2046 | |||
30. | துன்முகி | பட்டினத்தார்
ஆண்டு |
Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | ரகுமான்
ஆண்டு |
Akshaya | 2046–2047 | |||
தகவல் :
1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U
3. https://en.wikipedia.org/wiki/Tropical_year
4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy
5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html
6. https://en.wikipedia.org/wiki/Puthandu
+++++++++++++++
நூலுதவி :
உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani
By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM
நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:
தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக
செ. வை. சண்முகம், நா. கணேசன்
தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.
தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.
உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்‘ ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே‘ என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.
தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில் (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது ’திங்கள்முன்னே இக்கே சாரியை’ என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும், சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல, 27 நட்சத்திரப் பெயர்களின் கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருஷப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர் திருநாள் என்றும் நின்று உதவும்.
செ. வை. சண்முகம்
பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நா. கணேசன்
ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்கா
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUf_bTGo0wu8WBed5zkVL_Onp-bpC0SbYp9GsOn5HJ70ZA%40mail.gmail.com.