கண்ணகி கோட்டம் - 20-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு

69 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 18, 2021, 6:27:44 AM7/18/21
to வல்லமை

சேரமன்னர் தம் நாட்டிலே செய்த இரண்டு கண்ணகி கோட்டங்கள்
-------------------------------------------------------------

பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால், இரண்டு கண்ணகி கோட்டங்களைச் சேர மன்னர்கள் கட்டினர் என்று தெரிகிறது:

(1) கண்ணகி தெய்வம் ஆகிய அயிரைமலை என்றழைக்கும் பழனி மலைத்தொடரில் கம்பங்கூடலூரில் உள்ள மங்கலாதேவி கோட்டம். இப்போது தமிழக, கேரள எல்லையில், கேரளாவிலே இருக்கிறது. சித்திரா பௌர்ணமி (பூரணை) நாளில் வானுலகு கண்ணகி அங்கிருந்து ஏகியதால் “ஸ்ரீ பூரணிகிரி ஆளுடைய நாச்சியார்” என்கிறது பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு. பூரணி என்ற பெயரை ராஜராஜசோழன் காலத்தைய தேய்ந்துபோன வட்டெழுத்துக் கல்வெட்டிலும் காண்கிறோம். சேரநாடு சங்க காலத்தில் குடமலைநாடு, குணமலை நாடு என இரு பகுதிகள். கொங்குநாடு குணமலை நாடு. அப்பகுதியைச் சேர்ந்தது என்கிறார் மு. ராகவையங்கார். பழனிமலைப் பகுதி பழைய கொங்குநாடு. வஞ்சி மூதூர் ஆகிய கரூரின் புறத்தே இப் பழனி மலையின் வேள் ஆவிக்கோ மாளிகை கட்டியிருக்கிறான் எனச் சிலம்பு கூறுகிறது. இப்போது, தில்லியில் ‘தமிழ்நாடு ஹவுஸ்’ இருக்கிறமாதிரி. அருணகிரிநாதரும் ‘சேரர் கொங்கு வைகாவொ நாடதில்’ என்றார். கம்பம் கூடலூரில் உள்ள கண்ணகி தனியாக நிற்கிறாள். மங்கலாதேவி. பூரணை நாளில் தெய்வம் ஆனாள். எனவே, பூரணி. கர்நாடகாவில் ‘சந்திரா’ என்றே கண்ணகி கதை இருக்கிறது. மங்களூர் கண்ணகியின் பெயரால் அமைந்தது என்பார் உவேசா.

கண்ணகியின் இக் கோயிலைப் பற்றி முதன்முதலில் எழுதியவர் (Annals of Oriental Research, Volume 1, University of Madras) பாரதியார் போற்றிய மு. ராகவையங்கார் தான். இச் செய்தியைக் கண்ணகி கோட்டம் பற்றி வரும் எந்தக் கட்டுரை, நூல்களிலும் காணோம். 1904-லே ஆங்கில அரசுக்கு இக்கோயில் தெரியவந்தது. 1920களில் ஒரு கல்வெட்டை வெளியிட்டனர். இப்போது பிரபலமாக உள்ள பெயர் சி. கோவிந்தராசனார் தான். ஆனால், அவருக்குச் சொன்னவர் கண்ணகி கோட்டத்தருகே, ஏல விவசாயிகள் சங்கப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார் ஆவார். அவர் ராகவையங்கார் நூல்களைப் படித்திருக்கலாம். புலவர் சோமசுந்தரத்தின் மாணவர்கள் தேனியில் இருந்து சென்று, சி. கோவிந்தராசனாரை அழைத்துவந்தனர். பின்னர் புலவெ செ. இராசுவும் வந்தார். அப்போது (1976) புலவர் செ. இராசு எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பிவைத்தார், கொற்றவையின் வடிவமாக, மதுரையை எரித்து, 14 நாள் நடந்து சென்ற மலை இது. கொற்றவை வாகனம் வேங்கை. எனவே தான், குறிப்புப்பொருளை வைத்து, வேங்கை மர நீழலில் நின்றாள் எனப் பலமுறை பாடினார் இளங்கோ அடிகள். http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

கண்ணகி கோயில் பிரபலமான வரலாற்றை துளசி ராமசாமி நூலில் எழுதியுள்ளார். சி. கோவிந்தராசனார் எப்படி கண்ணகிகோயிலுக்கு வந்தார் என தேனி மக்கள் விளக்கிய செய்திகள் இருக்கின்றன. கல்வெட்டியலர் கே. ஜி. கிருஷ்ணன் ’ஹிந்து’ பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பிடிக்கணும்.

(2) சேரர் தலைநகர் வஞ்சி மூதூரில் (இன்றைய கரூர்) சேரன் செங்குட்டுவன் ஒரு கண்ணகி கோயில் கட்டியிருக்கிறான். இங்கே, கண்ணகியும், கோவலனும் தம்பதியராகச் சிற்பங்கள் கருவறையில் இருந்துள்ளன. விதவையான நிலையில் வைக்கச் சேரமன்னர்கள் விரும்பவில்லை போலும். மணிமேகலை மணிபல்லவத் தீவில் இருந்து விமானத்தில் பறந்துவந்து, இந்தக் கண்ணகி-கோவலனை வழிபட்டதை மணிமேகலைக் காப்பியம் விரிவாகப் பாடியுள்ளது. வஞ்சியம்மன் தலதேவதை. வஞ்சிக்கொடி (வஞ்சுலவல்லி) அவள் - துர்க்கை. வஞ்சுலேசுவரர் என ஆநிலையப்பருக்கு ஒரு பெயர். கண்ணகியின் இரு கோட்டங்கள் பற்றியும், கண்ணகி கோட்டம் 20-ம் நூற்றாண்டில் பிரபலமான வரலாற்றையும் பற்றிக் கட்டுரை தர ஆவல். புலவர் சோமசுந்தரனாரின் பழைய கட்டுரையும், போட்டோவும் தேடவேண்டும். அவரது மாணவர் தமிழாதன் (பி. 1939, கணபதிராஜன்) போன்றோரிடம் இருக்கலாம்.

வஞ்சி மூதூரின் பெயர் வஞ்சிக் கொடியால் அமைந்தது என முதலில் விளக்கியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். கடிகைமுத்துப் புலவர் ஒரு வெண்பாவில் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பதிகளைப் பாடுகிறார். அதில் வஞ்சி என்னும் கொடிபோன்ற இடை என்று குறிக்க, சீத்தலைச் சாத்தனார் போலவே, வஞ்சிக்கொடியால் பெற்ற பெயர் எனப் பாடியுள்ளார். அவரை ஆதரித்த எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேசு ரெட்டமேந்திரனைப் புகழ்ந்தது இச் செய்யுள்.

  கொங்கைகும்ப கோணமா, கூந்தலுமோ கூடலா,
  தங்கும்விழி அம்பா சமுத்திரமா – பைங்கனக
  மேருவெங்க டேசுரட்ட மேந்த்ரா! இவள்சசி,புல்
  தாருடைய ஊரிடைய தாம்

கோணம் - வட்டம்; கூடல் = கூடு + அல், மிகுந்த இரவு;
அம்பாசமுத்திரம் - அம்புக் கடல். சசி - இந்திரன் மனைவி.
புல் = பனை. புல்தார் = பனம்பூ மாலை.
இங்கே, பனம்பூ மாலை அணியும் சேரன் [1]
சேரன் ஊர் வஞ்சி. வஞ்சிக் கொடி போன்ற இடை.

~NG
[1] புல்தார் சேரனுக்கு ஆகிவருவது  முதலாகுபெயர்.’கோடு’ என்று எருமைப்பெடைக் கொம்பை வைத்து, கொல்லி (கொற்றவை) வழிபாட்டை முதலாகுபெயராய்க் குறிப்பிடும் சங்க இலக்கியத்திலும் இந்த முதலாகுபெயர் உத்தியைக் காணலாகும். தமிழ் மக்கள் எருமைப் பெடையின் கொம்பை அலங்கரித்து, மணவறையில் வைத்துப் பூசித்து, கலியாணச் சீர்கள் செய்துள்ளனர் என்பது 4000 ஆண்டுக்கால தொல்லியலால் தெரிவதை அழகாய்வுகள் காட்டுகின்றன. http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html . அனைவருக்கும் தெரிந்த ஒன்றாதலால் கலித்தொகை விளக்கமாகப் பாடவில்லை. எனவே, அதனை விளக்கினார் நச்சினார்க்கினியர்.  கோடு என்றால் கொம்பு. கோடு > கவடி> கவரி என்றெல்லாம் மாறிவருகிறது. இது எருமைக்கான சிறப்புப்பெயர்:வேதத்தில் கௌரி (< கோடு) என்றால் எருமை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கவரி உண்டு. எனவே தான், எருமைக் கோடு வைத்துக் கலியாணச் சீர் நடப்பதில் முதலாகுபெயர் பயன்படுத்தி உள்ளனர் கலித்தொகையில்.

ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html


kanmani tamil

unread,
Jul 18, 2021, 8:19:58 AM7/18/21
to vallamai
வடஇந்தியாவில் மாளவத்திலிருந்து தெற்கில் இலங்கை வரை பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுந்தன. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0174437f-e42d-474e-aa05-63c51b886f9an%40googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 18, 2021, 8:25:21 AM7/18/21
to vallamai
On Sun, Jul 18, 2021 at 7:19 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வடஇந்தியாவில் மாளவத்திலிருந்து தெற்கில் இலங்கை வரை பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுந்தன. 
சக 

ஆமாம். முதலில் சேர மன்னர்கள் கட்டினார்கள்: (1) தலைநகர் வஞ்சி மூதூரிலும் (2) ஸ்ரீ பூரணிகிரி எனப்படும் மங்கலாதேவி கோட்டத்திலும்.

 

On Sun, 18 Jul 2021, 3:57 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
சேரமன்னர் தம் நாட்டிலே செய்த இரண்டு கண்ணகி கோட்டங்கள்
-------------------------------------------------------------

பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால், இரண்டு கண்ணகி கோட்டங்களைச் சேர மன்னர்கள் கட்டினர் என்று தெரிகிறது:

(1) கண்ணகி தெய்வம் ஆகிய அயிரைமலை என்றழைக்கும் பழனி மலைத்தொடரில் கம்பங்கூடலூரில் உள்ள மங்கலாதேவி கோட்டம். இப்போது தமிழக, கேரள எல்லையில், கேரளாவிலே இருக்கிறது. சித்திரா பௌர்ணமி (பூரணை) நாளில் வானுலகு கண்ணகி அங்கிருந்து ஏகியதால் “ஸ்ரீ பூரணிகிரி ஆளுடைய நாச்சியார்” என்கிறது பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு. பூரணி என்ற பெயரை ராஜராஜசோழன் காலத்தைய தேய்ந்துபோன வட்டெழுத்துக் கல்வெட்டிலும் காண்கிறோம். சேரநாடு சங்க காலத்தில் குடமலைநாடு, குணமலை நாடு என இரு பகுதிகள். கொங்குநாடு குணமலை நாடு. அப்பகுதியைச் சேர்ந்தது என்கிறார் மு. ராகவையங்கார். பழனிமலைப் பகுதி பழைய கொங்குநாடு. வஞ்சி மூதூர் ஆகிய கரூரின் புறத்தே இப் பழனி மலையின் வேள் ஆவிக்கோ மாளிகை கட்டியிருக்கிறான் எனச் சிலம்பு கூறுகிறது. இப்போது, தில்லியில் ‘தமிழ்நாடு ஹவுஸ்’ இருக்கிறமாதிரி. அருணகிரிநாதரும் ‘சேரர் கொங்கு வைகாவூர் நாடதில்’ என்றார். கம்பம் கூடலூரில் உள்ள கண்ணகி தனியாக நிற்கிறாள். மங்கலாதேவி. பூரணை நாளில் தெய்வம் ஆனாள். எனவே, பூரணி. கர்நாடகாவில் ‘சந்திரா’ என்றே கண்ணகி கதை இருக்கிறது. மங்களூர் கண்ணகியின் பெயரால் அமைந்தது என்பார் உவேசா.


கண்ணகியின் இக் கோயிலைப் பற்றி முதன்முதலில் எழுதியவர் (Annals of Oriental Research, Volume 1, University of Madras) பாரதியார் போற்றிய மு. ராகவையங்கார் தான். இச் செய்தியைக் கண்ணகி கோட்டம் பற்றி வரும் எந்தக் கட்டுரை, நூல்களிலும் காணோம். 1904-லே ஆங்கில அரசுக்கு இக்கோயில் தெரியவந்தது. 1920களில் ஒரு கல்வெட்டை வெளியிட்டனர். இப்போது பிரபலமாக உள்ள பெயர் சி. கோவிந்தராசனார் தான். ஆனால், அவருக்குச் சொன்னவர் கண்ணகி கோட்டத்தருகே, ஏல விவசாயிகள் சங்கப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார் ஆவார். அவர் ராகவையங்கார் நூல்களைப் படித்திருக்கலாம். புலவர் சோமசுந்தரத்தின் மாணவர்கள் தேனியில் இருந்து சென்று, சி. கோவிந்தராசனாரை அழைத்துவந்தனர். பின்னர் புலவெ செ. இராசுவும் வந்தார். அப்போது (1976) புலவர் செ. இராசு எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பிவைத்தார், கொற்றவையின் வடிவமாக, மதுரையை எரித்து, 14 நாள் நடந்து சென்ற மலை இது. கொற்றவை வாகனம் வேங்கை. எனவே தான், குறிப்புப்பொருளை வைத்து, வேங்கை மர நீழலில் நின்றாள் எனப் பலமுறை பாடினார் இளங்கோ அடிகள். http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

கண்ணகி கோயில் பிரபலமான வரலாற்றை துளசி ராமசாமி நூலில் எழுதியுள்ளார். சி. கோவிந்தராசனார் எப்படி கண்ணகிகோயிலுக்கு வந்தார் என தேனி மக்கள் விளக்கிய செய்திகள் இருக்கின்றன. கல்வெட்டியலர் கே. ஜி. கிருஷ்ணன் ’ஹிந்து’ பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பிடிக்கணும்.

(2) சேரர் தலைநகர் வஞ்சி மூதூரில் (இன்றைய கரூர்) சேரன் செங்குட்டுவன் ஒரு கண்ணகி கோயில் கட்டியிருக்கிறான். இங்கே, கண்ணகியும், கோவலனும் தம்பதியராகச் சிற்பங்கள் கருவறையில் இருந்துள்ளன. விதவையான நிலையில் வைக்கச் சேரமன்னர்கள் விரும்பவில்லை போலும். மணிமேகலை மணிபல்லவத் தீவில் இருந்து விமானத்தில் பறந்துவந்து, இந்தக் கண்ணகி-கோவலனை வழிபட்டதை மணிமேகலைக் காப்பியம் விரிவாகப் பாடியுள்ளது. வஞ்சியம்மன் தலதேவதை. வஞ்சிக்கொடி (வஞ்சுலவல்லி) அவள் - துர்க்கை. வஞ்சுலேசுவரர் என ஆநிலையப்பருக்கு ஒரு பெயர். கண்ணகியின் இரு கோட்டங்கள் பற்றியும், கண்ணகி கோட்டம் 20-ம் நூற்றாண்டில் பிரபலமான வரலாற்றையும் பற்றிக் கட்டுரை தர ஆவல். புலவர் சோமசுந்தரனாரின் பழைய கட்டுரையும், போட்டோவும் தேடவேண்டும். அவரது மாணவர் தமிழாதன் (பி. 1939, கணபதிராஜன்) போன்றோரிடம் இருக்கலாம்.

வஞ்சி மூதூரின் பெயர் வஞ்சிக் கொடியால் அமைந்தது என முதலில் விளக்கியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். கடிகைமுத்துப் புலவர் ஒரு வெண்பாவில் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பதிகளைப் பாடுகிறார். அதில் வஞ்சி என்னும் கொடிபோன்ற இடை என்று குறிக்க, சீத்தலைச் சாத்தனார் போலவே, வஞ்சிக்கொடியால் பெற்ற பெயர் எனப் பாடியுள்ளார். அவரை ஆதரித்த எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேசு ரெட்டமேந்திரனைப் புகழ்ந்தது இச் செய்யுள்.

  கொங்கைகும்ப கோணமா, கூந்தலுமோ கூடலா,
  தங்கும்விழி அம்பா சமுத்திரமா – பைங்கனக
  மேருவெங்க டேசுரட்ட மேந்த்ரா! இவள்சசி,புல்
  தாருடைய ஊரிடைய தாம்

கோணம் - வட்டம்; கூடல் = கூடு + அல், மிகுந்த இரவு;
அம்பாசமுத்திரம் - அம்புக் கடல். சசி - இந்திரன் மனைவி.
புல் = பனை. புல்தார் = பனம்பூ மாலை.
இங்கே, பனம்பூ மாலை அணியும் சேரன் [1]
சேரன் ஊர் வஞ்சி. வஞ்சிக் கொடி போன்ற இடை.

~NG
[1] புல்தார் சேரனுக்கு ஆகிவருவது  முதலாகுபெயர்.’கோடு’ என்று எருமைப்பெடைக் கொம்பை வைத்து, கொல்லி (கொற்றவை) வழிபாட்டை முதலாகுபெயராய்க் குறிப்பிடும் சங்க இலக்கியத்திலும் இந்த முதலாகுபெயர் உத்தியைக் காணலாகும். தமிழ் மக்கள் எருமைப் பெடையின் கொம்பை அலங்கரித்து, மணவறையில் வைத்துப் பூசித்து, கலியாணச் சீர்கள் செய்துள்ளனர் என்பது 4000 ஆண்டுக்கால தொல்லியலால் தெரிவதை அழகாய்வுகள் காட்டுகின்றன. http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html . அனைவருக்கும் தெரிந்த ஒன்றாதலால் கலித்தொகை விளக்கமாகப் பாடவில்லை. எனவே, அதனை விளக்கினார் நச்சினார்க்கினியர்.  கோடு என்றால் கொம்பு. கோடு > கவடி> கவரி என்றெல்லாம் மாறிவருகிறது. இது எருமைக்கான சிறப்புப்பெயர்:வேதத்தில் கௌரி (< கோடு) என்றால் எருமை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கவரி உண்டு. எனவே தான், எருமைக் கோடு வைத்துக் கலியாணச் சீர் நடப்பதில் முதலாகுபெயர் பயன்படுத்தி உள்ளனர் கலித்தொகையில்.

ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html


வஞ்சி மாநகரம் - வஞ்சிக் கொடியான் அமைந்த பெயர் - சங்க காலச் சேரர் தலைநகர்
----------------------------------------------------------------------------------------------------
பாரதியார் தீர்க்கதரிசி என்பது அறிவோம்.  அவர் வாழ்ந்த காலத்தில், சங்க நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சாகத் தொடங்கின. முழுதுமாக வெளிவராத காலம். அப்போதே, பொ. பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்க மகாவித்துவான்கள், ரா. ராகவையங்கார் சுவாமியும் (வஞ்சி மாநகர்), அவரது ’கஸின்’ மு. இராகவையங்கார் சுவாமியும் (சேரன் செங்குட்டுவன்) தெள்ளிதின் ஆய்ந்து சங்க காலத்தில் ஒரே ஒரு வஞ்சி மாநகரந்தான். அது இன்றைய கரூர் என்ற செய்தியை நூல்களில் அறிவித்தனர். பாரதியார் மு. ராகவையங்காரின் நூலைப் படித்திருக்கிறார். மு.ரா. மேதமையை வியந்தவர் பாரதியார் என அவரது கடிதத்தால் அறிகிறோம் [1]. பின்னாளில் வஞ்சி மாநகரைச் சோழர்கள் கைப்பற்றிய பின்னர், வஞ்சி நகர் தாராபுரத்திற்குச் சேரர்களால் மாறிற்று. அக் கால கட்டத்தில் அது “பெருவஞ்சி” ஆகும். இந்தப் பெருவஞ்சி தலைநகரில் வாழ்ந்தவர் பெரும்புலவர் திருத்தக்க தேவர் ஆவார். விருத்த யாப்பில் முதல்முறையாக ஒரு காப்பியம், சீவக சிந்தாமணி. பின்னர் பெரியபுராணம், கம்பன் இவற்றின் யாப்பின் அடிப்படை. பார்க்க: புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம். (மதுரைப் பல்கலை பிஎச்டி ஆய்வேடு. முதல்பதிப்பு, யான் அச்சிட்டுக்கொடுத்தது.)

மதுரைக்கு மதுராபதி போலவும், புகாருக்குச் சம்பாபதி போலவும், சங்க காலத்தில் வஞ்சிக்கு (கரூர்) வஞ்சியம்மன். வஞ்சிக்கொடி என்று இவள் பேரால் பெண்கள் பெயர் கொங்குநாட்டில் மிகுதி. இங்கே மண் எடுத்து ஆனவை, வஞ்சி (சங்ககாலச் சேரர் மாநகர்), தாராபுரம், மூலனூர், விளங்கில் ( (அ) சேலம்) என மொத்தம் நான்கு ஊர்களுக்கு வஞ்சி என்ற பெயர் கி.பி. 10 நூற்றாண்டின் பின்னர் அழைத்தலும் உண்டு. வஞ்சி அரசர் என்று திருவனந்தபுரம் மஹாராஜாவுக்கும், கொச்சி ராஜாவுக்கும் பட்டங்கள் உண்டு. கொடுங்கோளூரின் தேவார காலப் பெயர்: அஞ்சைக்களம். அஞ்சை < அஞ்ஞை/மஞ்ஞை (Cf. அலர்/மலர் ... word-initial m- loss). பின்னாளில், சோழர்கள் சேரர்களை இன்றைய கேரளாவுக்கு அனுப்பினர். இதனைக் கேரளாவில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள், பெரியபுராணத்தில் காண்க. கொச்சி ராஜா வஞ்சி நகர ராஜா ஆனார்!

"ஐந்து மஹாகாவியங்களிலே சிறந்ததாகிய ‘சிலப்பதிகாரம்’ செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சினாப்பள்ளிக்கருகே யுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரின் ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை.” (காலவரிசை, தொகுதி 8, பக். 457-459), பாரதி நூல்கள் - கட்டுரைகள், பக். 355, 356. (சுதேசமித்திரன், 19-11-1916, பெ. தூரன், பாரதியார் கட்டுரைகள்).
 மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், ய மணிகண்டன், Bharathi Puthakalayam, 2011 etc.,

பாரதியார் தீர்க்கதரிசனத்தை, மு.ரா., ரா.ரா. இலக்கிய ஆதார நூல்களை, அறிவியல் வழியாக நிலைநிறுத்தியது தொல்லியல் (Archaeology) துறை ஆகும். தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை நிறுவன இயக்குநர் முனைவர் ரா. நாகசாமி “கருவூர் வஞ்சி” என்னும் நூலை (தமிழ்நாட்டு அரசாங்க வெளியீடு) இங்கே இணைத்துள்ளேன்.

தமிழ்நாட்டு அரசியல் போங்குகளை 20-ஆம் நூற்றாண்டில் விரிவாக ஆராய வேண்டுமானால், சங்க காலத்தில் சேரர் தலைநகர் வஞ்சி (இன்றைய கரூர்) என்னும் இலக்கிய, ஆர்க்கியாலஜி முடிவுகளை மறுத்து வெளியான கட்டுரைகளைப் படித்தால் ஒருவாறு அறிய முடிகிறது. இவையெல்லாம் அனேகமாக, Rhetoric வகையின்பாற் படுவன. ஓர் உதாரணம் நினைவுக்கு வருகிறது. இணையத்தில் யாப்பிலக்கணத்தைக் கற்பிப்பவர்கள், ஆயிரக்கணக்கான செய்யுள்களைத் தருவோர் சந்தவசந்தம் குழுவினர். பச்சையப்பன் கல்லூரிப் பேரா. இராம. சுப்பிரமணியன் வெண்பா நூல்கள் அனைத்தும் ஆராய்ந்து, ஒரு சில விதிவிலக்குகள் தவிர (உ-ம்: நமச்சிவாய என்னும் மகாமந்திரம் - சிவபுராணம், திருவாசகம்) எங்குமே ஓசை குன்றுவதால் விளாங்காய்ச் சீர் வெண்பா யாப்பில் பயிலாது என முடிபு கண்டார். அது சரியே என்றனர் செய்யுட்குழுவில். இதற்கு எதிர்ப்பாய் வந்த மறுமொழிகளைப் போன்றதாகவே, வஞ்சி என்ற சேரர் தலைநகர் மேற்குக் கடற்கரை என வந்த கட்டுரைகளும் இருப்பதை உணர்கிறேன். 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு அரசியல் முக்கியக் காரணம். சேரநாட்டு மன்னர்கள் வாழ்ந்த கொங்குநாட்டின் வஞ்சி மாநகர் பற்றிய உண்மையை மறைக்கும்படியாக இவ்வரசியல் செயல்பட்டது.  தொல்லியல் அறிஞர்கள் இரா. நாகசாமி, தினமலர் ரா. கிருஷ்ணமூர்த்தி, ஐராவதம் மகாதேவன், பேரா. கா. ராஜன், ... போன்றோர் சங்கச் சேரரின் வஞ்சி என்பது கரூர் என ஆய்ந்து நிறுவிவிட்டனர்.

அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்

(தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சான கட்டுரை.)

https://www.vallamai.com/?p=87447&

கடல் பிறக்கோட்டிய குட்டுவன் சிலப்பதிகாரத்தின் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பார் பேரா. கா. சு. பிள்ளை. இந்தச் சேரமன்னனைப் பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தாகப் பாடினார். அதில் குடவனாறும், ஆன்பொருனையும், காவிரியும் கலக்கும் முக்கூடல் போன்றவன் என்று போற்றியுள்ளார்.

செங்குணக்கு ஒழுகும்-நேர் கிழக்காக ஓடும்; கலுழி மலிர் நிறைக் காவிரி யன்றியும்-கலங்கலாகிய நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியை ஒப்பதே யன்றி; பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை-பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய்.

செங்குட்டுவனும் செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத் தண்ணளி சுரந்து இனிது புரத்தல் பற்றி,  “காவிரி அனையை” என்றார். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவதுபோல், கடல்பிறக் கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடுடைமையால் மலைபடு பொருளும் பழையன் முதலியோரை வென்று, காவிரி செங்குணக்கு ஒழுகும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப் பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை என்பார். “பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை” என்றார். மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர், “அக் காவிரி தானும் ஆன் பொருநையும் குடவனாறும் என இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம்” என்பர்.

எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் வரு புனல், வாயில் வஞ்சியும்” என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதன் பிரதிபேதமாக “. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே’” என்றும் இருக்கிறது (உவேசா பதிப்பித்த பத்துப்பாட்டு). வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது – பெருகுகின்ற நீரையும், கோபுர வாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் பரிசில் சிறியதாயிருக்கும் என்பது நச்சினார்க்கினியர் உரை. சேரர்களின் ராஜதானி நகரமாக வஞ்சிக் கருவூர் விளங்கியுள்ளது. அமராவதி ஆற்றின் நீர்வளத்தைக் கொண்டதாக உள்ளது.

வஞ்சி ஈந்த வியத்தகு பொன் அணி [தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
http://tamilartsacademy.com/books/tavam/chapter25.xml

(1)
14-ஆம் நூற்றாண்டுத் திருப்புகழ் பாடல்களிலும், வஞ்சி = கரூர் என்று உறுதிப்படுத்துகிறார். மலைநாடு முழுதும் அலைந்து திரிந்து முருகவேளின் திருத்தலங்களை ஆவணப்படுத்திய புலவர்பிரான் அருணகிரியார்.

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
     யுந்தினன் மருக வயலூர்க்குக
          வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே. ... தேவர்கள்
சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில்* உறையும் பெருமாளே.

(2)
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்
     சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே
அரிவையர் தோளின் துவயலி நின் தன வ்யாத்தமும் வயல்
இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு(ம்) நெஞ்சில் இராப்
பகல் மறவேனே
... பெண்கள் தோள்களில் துவையல் போல்
அரைக்கப் பட்ட நான் உன்னுடைய எங்கும் நிறைந்திருக்கும்
தன்மையையும், வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில்*
பொருந்தி விளங்கும் உனது வடிவழகையும் என் மனத்தில் இரவும்
பகலும் மறக்க மாட்டேன்.

வஞ்சி என்பது வஞ்சிக்கொடியான் அமைந்த பெயர். ஸ்தல ஸ்தாவரமாக, இன்றைக்கும் வஞ்சி இலங்குகிறது.

வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) தலத் தாவரம் ஆகும்:
தலமர சிறப்புகள்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.
(வில்லியர் காவலர் - சேர மன்னர்கள் என்ற குறிப்பும் இதில் உள்ளது.)

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.. உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

இதனால்தான் சீந்தில் கொடியை சாகா மூலிகை என்றும் சித்தர்கள் அழைத்தார்கள். மரணத்தை வெல்லக்கூடிய மூலிகைகளில் சீந்தில் கொடியும் ஒன்று. சீந்தில் கொடி என்கிற வஞ்சிக் கொடியை,  திருக்கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் தல விருட்சமாகத் திகழ்கிறது. இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் வஞ்சிக் கொடி தலவிருட்சமாக இருப்பதாக அறிய முடிகிறது. கோயில் பிராகாரத்தில் வன்னி மரத்தில் வஞ்சிக்கொடி படர்ந்திருப்பதை காணலாம். வஞ்சிக்கொடி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.


On Thu, Jul 15, 2021 at 10:49 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

வஞ்சிக் கொடி:
(1) "பூங்கொடிப் பெயர்ப் படூஉம் திருந்திய நன்னகர்” மணிமேகலை 28: 101, 102.

(2) வஞ்சிமா நகர் புக்க காதை:  (மணிமேகலை - தமிழில் உள்ள ஒரே பௌத்த நூல்!)

கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்

விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள்
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.

இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. ''செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க'' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1 ''''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'''' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும்.

 92-4. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.

கொடி, வஞ்சிக்கொடி; 2 ''''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'''' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ''திருந்து நல் ஏது'' என்றார். வாய்மை நான்கும் 3 மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ''பொருந்து நால் வாய்மை'' எனப்பட்டது. ''நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்'' என்பது.

அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ''அருளல் வேண்டும்'' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ''இன்னது இவ் வியல்பு'' என எடுத்துரைத்தலும், மணிமேகலை  மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.

---------
11-15. ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன - ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சிபோன்ற, என் வளநகர் விளங்க-எனது வளம் பொருந்திய மனை சிறப்புற்று விளங்க, துனியின்று - வெறுப்பின்றி, திரு நுதல் பொலிந்த என் பேதை வருமுலை முற்றத்து - அழகிய நெற்றியாற் பொலிவுற்ற என்

ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி யன்னவென் வளநகர் விளங்க
இனிதினிற் புணர்க்குவென் மன்னோ
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=577&y=578&bk=263&z=l1270635.htm

கோதைபாடி - கோதவாடி, கண்ணர்பாடி - கன்னிவாடி, வள்ளுவபாடி நாடு :: பாடி வீடுகளான் அமைந்த பெயர்கள்.
----------------

எனவே, சேரர் தலைநகர் வஞ்சி - இன்றைய கரூர் - பூங்கொடியால் பெயர் பெற்றது என அறியலாம்.
கொங்கு வேளாளரில் பலருக்கும் குலதெய்வம் வஞ்சிக்கொடி அம்மன். பெண்கள் பெயரும்
இன்றளவும் உண்டு.

“வட்கார் மேற்செல்வது வஞ்சி” - வஞ்சித் திணை https://ta.wikipedia.org/wiki/வஞ்சித்_திணை

வஞ்சிக்கொடியைப் பொற்கொடி என்றார் சீத்தலைச் சாத்தனார். காரணம், அதன் பூக்கள் பொன்னிறமாகச் சார்ந்த மரத்தையே மூடுவதால் ஆகும். அமிர்தவல்லி என்றும் இதனால் வழங்கும். https://twitter.com/rameshpandeyifs/status/1334018046894120960
சூடு உற்ற சுடர்ப்பூ என்று இந்த பொற்பூக்கள் ஆகிய வஞ்சிப்பூவினை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. “சுடர்ப் பூங் கொன்றை” - பொன்னிற மலர் தான்.
பொன்னிறமான பூக்கள், செக்கச் சிவப்பான காய்களாய் மாறும். https://krishijagran.com/health-lifestyle/the-fresh-leaves-of-the-wonder-plant/
https://www.youtube.com/watch?v=OXwrf1BwAos
https://www.flickr.com/photos/78556809@N06/7207273500
https://ayurvedicmagazine.com/giloy-health-benefits/
https://en.wikipedia.org/wiki/Tinospora_cordifolia  வஞ்சிக்கொடி = நாகினி. (தவறாகப் பிரம்புக்கொடியைக் கூறுகிறது மதறாஸ் லெக்ஸிகான்).

https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-vanji-creeper
வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்.

'கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’ - சினிமாவில்
https://www.youtube.com/watch?v=NHS7XgUAuJ8
பெண்ணின் இடையை வஞ்சிக்கொடிக்கு ஒப்பிடுவர் (தேவாரம், திருக்கோவையார், ...)

----------------

 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0174437f-e42d-474e-aa05-63c51b886f9an%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jul 18, 2021, 8:37:22 AM7/18/21
to vallamai
இலக்கியத் தரவின்படி முதலில் அவளுக்குக் கல் நாட்டி வழிபட்டோர் மலைக்குறவர்.

அதற்குப் பிறகு சேரன் செங்குட்டுவன். 

ஆனால் இது இலக்கியம்; கற்பனை. 
சக 

N. Ganesan

unread,
Jul 18, 2021, 8:47:52 AM7/18/21
to vallamai
On Sun, Jul 18, 2021 at 7:37 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இலக்கியத் தரவின்படி முதலில் அவளுக்குக் கல் நாட்டி வழிபட்டோர் மலைக்குறவர்.

அதற்குப் பிறகு சேரன் செங்குட்டுவன். 

ஆனால் இது இலக்கியம்; கற்பனை. 
சக 

நன்றி. மலைவேட்டுவர் ஸ்ரீபூரணிகிரியில் வழிபாடு தொடங்கியிருக்கலாம். ஆனால், கற்றளி அமைத்தவர் சோழர்கள் எனக் கூறலாம்.
ராஜராஜனின் (அரிய) வட்டெழுத்து சிதைந்த நிலையில் கிடைக்கிறது. அவனுக்குப் பின்னர் பிற்காலப் பாண்டிய கல்வெட்டு முழுதும் கிடைக்கிறது.
கி.பி. 1667-ல் மலையாள தேச அரசர் மங்கலதேவிக்கு நிலக்கொடை வழங்கிய கல்வெட்டும் உள்ளது.

வஞ்சியின் பெயர்க்காரணமும், அங்கே கர்ணகி-கோவலன் தம்பதிக்கு கோவில் இருந்ததும், மணிமேகலை வழிபட்டதும்,
பின்னர் சமயக் கணக்கரை அத் தலைநகரில் கண்டதும் பௌத்தக் காப்பியத்தில் உள்ள செய்திகள்.

நா. கணேசன்
 

kanmani tamil

unread,
Jul 18, 2021, 11:06:31 AM7/18/21
to vallamai
புதுச்செய்திகளுக்கு நன்றி 
சக 

N. Ganesan

unread,
Jul 18, 2021, 11:46:46 AM7/18/21
to vallamai
On Sun, Jul 18, 2021 at 10:06 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
புதுச்செய்திகளுக்கு நன்றி 
சக 


On Sunday, July 18, 2021 at 7:19:58 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
வடஇந்தியாவில் மாளவத்திலிருந்து தெற்கில் இலங்கை வரை பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுந்தன. 
சக

தமிழ்நாட்டுக்குப் பலர் நூற்றாண்டு தோறும் வந்துள்ளனர். சேதிநாடு திருக்கோவலூர் அருகெ.
மகதமண்டலம் - வாணர்கள், சேலம் ஆத்தூர் அருகே. மாளவ நாடு - கானப்பேர், ராமேசுவரம் பகுதி
 
இந்த மள்ளுவ நாட்டுத் தலைவன் (முரம்பு = முரண்பு, முரணை நகர். தாம்ரபரணிக் கரை முரப்பநாடு)
ஆளுகையில் புகழேந்தி நளவெண்பா பாட புரந்திருக்கவேண்டும்:

எனவே, மாளவ வேந்தன் வந்தான் என்பது இலக்கியக் கற்பனை. வட நாட்டுப் போர், கனகவிஜயர்
பெயர் எல்லாம் கற்பனைப் பாத்திரங்கள். எப்படி இளங்கோ அடிகள் தன் ‘நாவலின்’ பாத்திரப்பெயர்கள்
அமைத்தார் என எழுதியுள்ளேன். வடக்கே, மாளவ மன்னன் வந்தான் என்பது இலக்கியக் கற்பனை.
இமயமலையை வென்றான் என்பதுபோல.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 18, 2021, 12:29:47 PM7/18/21
to vallamai
/சேதிநாடு திருக்கோவலூர் அருகெ.
மகதமண்டலம் - வாணர்கள், சேலம் ஆத்தூர் அருகே. மாளவ நாடு - கானப்பேர், ராமேசுவரம் பகுதி/

தெளிவில்லை; புரியவில்லை. 
சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jul 20, 2021, 12:11:22 AM7/20/21
to vallamai


ஞாயி., 18 ஜூலை, 2021, பிற்பகல் 9:59 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jul 20, 2021, 12:13:17 AM7/20/21
to vallamai

கர்ணகி--------------->கன்னகி.
Reply all
Reply to author
Forward
0 new messages