மதிசூடி துதிபாடி - 15

637 views
Skip to first unread message

Siva Siva

unread,
Nov 27, 2020, 4:33:13 PM11/27/20
to santhavasantham
மதிசூடி துதிபாடி - 15
Starting a new thread with higher sequence number.
(The message count in the earlier thread has reached several hundred).

2015-12-26

"வினை மாய்த்தருள் ஈசன்" - (பொது)

--------------------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு - "லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)

("தானன தானன தானன தானா" என்ற சந்தம். முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.)

( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்)


1)

பொற்பதம் ஏத்துசு ரர்க்கருள் ஈசன்

வெற்பினை வில்லென ஏந்திய ஈசன்

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
Nov 30, 2020, 9:22:18 AM11/30/20
to santhavasantham

2)

தக்கனை முண்டம ரிந்தருள் ஈசன்

அக்கணி ஆரமெ னப்புனை ஈசன்

சக்கரம் அச்சுத னுக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்


On Fri, Nov 27, 2020 at 4:33 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
மதிசூடி துதிபாடி - 15
Starting a new thread with higher sequence number.
(The message count in the earlier thread has reached several hundred).

2015-12-26

"வினை மாய்த்தருள் ஈசன்" - (பொது)

--------------------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு - "லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)

("தானன தானன தானன தானா" என்ற சந்தம். முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.)

( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்)


1)

--

Siva Siva

unread,
Dec 1, 2020, 10:00:49 AM12/1/20
to santhavasantham

3)

பொங்கெரி மேனியில் நீறணி ஈசன்

ஐங்கணை வேள்பட நோக்கிய ஈசன்

மங்கல மேவிர திக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்


On Mon, Nov 30, 2020 at 9:22 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Dec 3, 2020, 8:43:58 AM12/3/20
to santhavasantham

அடுத்த இரு பாடகள்:

4)

போர்புரி வேழமு ரித்தருள் ஈசன்

நீர்புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன்

பேர்பல சொல்லடி யார்க்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


5)

வலியச லந்தர னைத்தடி ஈசன்

எலியையும் மாவலி ஆக்கிய ஈசன்

நலிவிலன் ஓர்விடை ஏறிய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்


On Tue, Dec 1, 2020 at 10:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Dec 4, 2020, 9:23:56 AM12/4/20
to santhavasantham

6)

அந்தக னைச்செறு வேலுடை ஈசன்

மந்திர மாமறை ஓதிய ஈசன்

சந்திர னைத்தரி தாழ்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்


On Thu, Dec 3, 2020 at 8:43 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

5)

Siva Siva

unread,
Dec 5, 2020, 12:03:40 PM12/5/20
to santhavasantham

7)

நான்முக னோர்தலை கொய்தருள் ஈசன்

மான்மறி மாமழு ஏந்திய ஈசன்

தேன்மலி மாமலர் ஆர்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்



On Fri, Dec 4, 2020 at 9:23 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Dec 7, 2020, 9:10:41 AM12/7/20
to santhavasantham

8)

பத்துமு கன்தனை ஊன்றிய ஈசன்

மத்திடு மாகடல் நஞ்சணி ஈசன்

சத்தியை வாமமி ருத்திய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


9)

ஏனமும் அன்னமும் நேடிய ஈசன்

கானக மாநட மாடிடும் ஈசன்

போனக மாவிடம் உண்டருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்


On Sat, Dec 5, 2020 at 12:03 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Dec 8, 2020, 9:13:25 AM12/8/20
to santhavasantham

10)

புன்னெறி யார்க்கிலன் ஆகிய ஈசன்

தன்னடி யார்க்கொரு நற்றுணை ஈசன்

வன்னம னைக்கழ லாலுதை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்


On Mon, Dec 7, 2020 at 9:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

9)

Siva Siva

unread,
Dec 9, 2020, 9:58:47 AM12/9/20
to santhavasantham

இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:

11)

வெண்பொடி மார்பிலி லங்கிடும் ஈசன்

தண்புன லைச்சடை வைத்தருள் ஈசன்

பெண்புடை யில்திகழ் அன்புடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வி. சுப்பிரமணியன்

குறிப்பு: இப்பதிகத்தில் சிவபெருமானின் அட்டவீரட்டச் செயல்களும் சுட்டப்பெறுகின்றன -

திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் யாகம் அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), எமனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலை கொய்தது (திருக்கண்டியூர்).



On Tue, Dec 8, 2020 at 9:13 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

10)

Siva Siva

unread,
Dec 10, 2020, 8:30:43 AM12/10/20
to santhavasantham

2015-12-29

கொள்ளிக்காடு (இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது)

(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)

---------------------------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;

முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்);

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்");

(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண்");


1)

செஞ்சொ லார்தமிழ் மாலை யாலுன செம்பொ னார்கழல் ஏத்தினேன்

அஞ்சி னோடொரு நான்கு கோள்களும் ஆசி லாநலம் நல்குமே

பஞ்சின் மெல்லடி மாது பங்கமர் பண்ப னேஎரி போல்திகழ்

குஞ்சி மேல்நதி கூவி ளம்புனை கொள்ளிக் காடுறை கூத்தனே.


வி. சுப்பிரமணியன்

Vis Gop

unread,
Dec 10, 2020, 10:27:44 AM12/10/20
to santhav...@googlegroups.com

கொள்ளிக் காடுறை கூத்தனே.

தான தானன தானனா


கொள்ளிக் என்பது அடியிடைச் சீரில் தானா என்று கொள்ளப் பட வேண்டாவா? இந்த விதி விலக்கு உங்கள் பாடத்தில் சொல்லப் பட்டிருக்கிறதா? இடையின ஒற்று பெரும்பாலும், மெல்லின ஒற்று சில இடங்களிலும் அலகிடப் படுவதில்லை என்று அறிந்தேன். வல்லின ஒற்றுக்கும் இச்சலுகை சில இடங்களில் வருமா? இவ்வாறு சந்தப் பாடலில் சாதாரணமாகவே எழுதலாமா அல்லது ஒரோவழிச் சலுகை எனக் கருதப்படுமா?

நல்வாழ்த்துகள் 
கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Dec 10, 2020, 10:33:14 AM12/10/20
to santhavasantham
சந்தம் குறித்த இழையில்  முன்னர் இட்டவற்றுள் 6.5 பத்தியைக் காண்க.
----

6.5) சீரின் ஈற்றில் வரும் மெய்யெழுத்தைச் சில இடங்களில் அலகிடுவதில்லை. (ஒரோவழி சீரின் இடையே உள்ள மெய்யெழுத்து அலகு பெறாமையையும் காணலாம். சில தலப்பெயர்கள் பதிகத்தில் வருமிடத்தில் இப்படிச் சீரினிடையே உள்ள ஒற்றுகள் அலகு பெறாது வரக்காணலாம்).

----

Vis Gop

unread,
Dec 10, 2020, 11:03:17 AM12/10/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
மேலும் வாசித்துப் பயில்கிறேன். 
நல்வாழ்த்துகள். 
கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Dec 12, 2020, 11:03:29 AM12/12/20
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:

2)

நீல மாமணி கண்ட னேஉனை நித்த லுந்தொழு தேத்தினேன்

சூல னேமலை போன்ற வல்வினை தூள தாகிட நல்கிடாய்

ஏல வார்குழ லாளை ஓர்புடை ஏற்ற ஏறமர் ஏந்தலே

கோல வெண்பிறை சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


3)

வம்பு நாண்மலர் தூவி நின்னடி வாழ்த்தி னேன்இடர் மாய்த்திடாய்

அம்பை ஏவிய மன்ம தன்றனை ஆகம் அற்றவன் ஆக்கினாய்

செம்பொ னேர்சடை மீது வெண்மதி சீற ராவொடு சேர்த்தினாய்

கொம்ப னாளொரு கூற னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Dec 10, 2020 at 8:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2015-12-29

கொள்ளிக்காடு (இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது)

(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)

---------------------------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;

முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்);

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்");

(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண்");


1)

--

Vis Gop

unread,
Dec 12, 2020, 12:11:40 PM12/12/20
to santhav...@googlegroups.com
கொம்பனாள் = கொம்பு அன்னாள் =   மெலிந்தவள்?

Sent from my iPhone

On 12-Dec-2020, at 9:33 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

அடுத்த இரு பாடல்கள்:

.........

Siva Siva

unread,
Dec 12, 2020, 12:18:02 PM12/12/20
to santhavasantham
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40660&padhi=066&startLimit=4&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
4.66.1
கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலும்
செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரா னெம்மை யாளு மிறைவனே யென்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் நாகவீச் சரவ னாரே  

கொம்பு - பூங்கொம்பு. அன்னாள் - நிகர்த்தவள்.   
Civaṉ has on one half a lady as slender and supple as the twig of a plant. 
Translation: V.M.Subramanya Aiyar 


On Sat, Dec 12, 2020 at 12:11 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
கொம்பனாள் = கொம்பு அன்னாள் =   மெலிந்தவள்?

On 12-Dec-2020, at 9:33 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Vis Gop

unread,
Dec 12, 2020, 12:19:57 PM12/12/20
to santhav...@googlegroups.com
Thank you. 

Sent from my iPhone

Siva Siva

unread,
Dec 14, 2020, 9:02:12 AM12/14/20
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:

4)

பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

கொடிய கூற்றுதை கால னேஉமை கூற னேஒரு கையினில்

வடியி லங்கிய சூல னேமழு வாள னேவலம் ஆர்தரு

கொடியின் மேல்விடை காட்டி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


5)

விமல னேஅடி வாழ்த்தி னேன்வினை வீட்டி இன்பம ளித்திடாய்

கமல மென்றொரு கண்ணை இட்டரி கைதொ ழப்படை நல்கினாய்

உமைய வட்கொரு கூறு கந்தளி உம்ப னேஉல குய்ந்திடக்

குமைவி டந்தரி கண்ட னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வி. சுப்பிரமணியன்

On Sat, Dec 12, 2020 at 11:03 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

அடுத்த இரு பாடல்கள்:

2)

3)

Vis Gop

unread,
Dec 14, 2020, 10:04:31 AM12/14/20
to santhav...@googlegroups.com
மிக அருமை. 
கோபால். 

Sent from my iPhone

On 14-Dec-2020, at 7:31 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

அடுத்த இரு பாடல்கள்:

4)

பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

5)

Siva Siva

unread,
Dec 16, 2020, 9:15:15 AM12/16/20
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:

6)

பொங்கும் அன்பொடு போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

வெங்க ணேறமர் வேந்த னேபுரம் வேவ மேருவி லேந்தினாய்

அங்கி வாழ்த்திய அண்ண லேநதி ஆர்ந்த வேணிய தன்மிசைக்

கொங்கி லங்கிய கொன்றை யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


அங்கி - அக்னி;

(அக்கினிதேவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க);


7)

வல்ல வாறுனை வாழ்த்தி னேன்எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய்

நல்ல நீறணி மார்பில் ஓர்விட நாக மும்புனை நாதனே

வெல்லு மாபடை பார்த்த னுக்கருள் வேட னேகரி காடனே

கொல்லை ஏறமர் கொற்ற வாஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வி. சுப்பிரமணியன்


On Mon, Dec 14, 2020 at 9:01 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

5)

Siva Siva

unread,
Dec 18, 2020, 8:21:58 PM12/18/20
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:

8)

பாவி னாலடி வாழ்த்தி னேன்வினை பாற வேஅருள் நல்கிடாய்

மாவி லங்கலை ஆட்டி னானவன் வாய்கள் பத்தழ ஊன்றினாய்

தேவி பங்கமர் செல்வ னேஒரு சேவ தேறிய சேவகா

கூவி ளந்திகழ் குஞ்சி யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


9)

மாண டிப்புகழ் பாடி னேன்நலம் மல்க வேஅருள் நல்கிடாய்

ஆண வத்தொடு நேடு மாலயன் அஞ்சி ஏத்திட மாவொளித்

தூண தாகிய மூர்த்தி யேதிரி சூல னேபரி சுத்தனே

கோண லார்மதி சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Dec 16, 2020 at 9:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

7)

Siva Siva

unread,
Dec 20, 2020, 10:48:00 PM12/20/20
to santhavasantham

இவ்விரு பாடல்களோடு இப்பதிகம் நிறைவுறுகின்றது:

10)

நன்று தானறி யாத தெண்ணர்சொல் நம்பி டேல்நலம் வேண்டினீர்

நின்று மாமலர் தூவி வாழ்த்திடும் நேய ருக்கிடர் நீக்குவான்

மன்றில் மாநடம் ஆடு மன்னவன் வன்னி கூவிள மாசுணம்

கொன்றை சூடிய சென்னி யான்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


11)

பரவி உன்னடி போற்றி னேன்வினை பாற்றி டாய்உமை பங்கனே

சிரம துண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து ழன்றிடு செல்வனே

அரவை மார்பினில் ஆர மாஅணி ஐய னேவட வாலமர்

குரவ னேமறை நாவ னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Dec 18, 2020 at 8:21 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

9)

--

Siva Siva

unread,
Dec 22, 2020, 9:55:37 PM12/22/20
to santhavasantham

2016-01-02

கொள்ளிக்காடு

(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)

---------------------------------

(கலிவிருத்தம் - "விளம் விளம் மா விளம்" என்ற வாய்பாடு);

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்");

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்");


1)

இளவிடை அதன்மிசை ஏறி உண்பலி

கொளவரு செல்வனைக் கொன்றைத் தாரனைக்

குளமணி வயல்திகழ் கொள்ளிக் காடுறை

வளர்மதி சூடியை வாழ்த்தி வாழ்மினே.


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Dec 23, 2020, 10:51:56 PM12/23/20
to santhavasantham

2)

இராவினில் ஆடியை எய்த்து வந்தடி

பராவிய சுரர்உயப் பரிந்த கண்டனைக்

குராவணி சடையனைக் கொள்ளிக் காடுறை

அராவணி ஐயனை அடைந்து வாழ்மினே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Dec 22, 2020 at 9:55 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2016-01-02

கொள்ளிக்காடு

(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)

---------------------------------

(கலிவிருத்தம் - "விளம் விளம் மா விளம்" என்ற வாய்பாடு);

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்");

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்");


1)

--

Vis Gop

unread,
Dec 24, 2020, 1:25:27 AM12/24/20
to santhav...@googlegroups.com
(பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்)
பஞ்சு அக்கினியோடு ஒன்றிய தலமோ!

கோபால்.

Siva Siva

unread,
Dec 24, 2020, 9:47:57 AM12/24/20
to santhavasantham
அது மட்டுமா! தலமும் "கொள்ளி"க்காடு! :)

Siva Siva

unread,
Dec 24, 2020, 7:45:30 PM12/24/20
to santhavasantham

3)

பஞ்சினும் மெல்லடிப் பாவை பங்கனைச்

செஞ்சுடர் வண்ணனைத் தேவ தேவனைக்

குஞ்சியிற் பிறையனைக் கொள்ளிக் காடுறை

மஞ்சனை நாள்தொறும் வாழ்த்தி வாழ்மினே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Dec 23, 2020 at 10:51 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

sankara dass nagoji

unread,
Dec 24, 2020, 11:14:15 PM12/24/20
to சந்தவசந்தம்
திருக்கொள்ளிக்காடு - சென்ற சனிப்பெயர்ச்சிக்கு முதல் நாள் இத்தலத்தில் இருந்தோம்.
- சங்கர தாஸ்

Siva Siva

unread,
Dec 24, 2020, 11:31:58 PM12/24/20
to santhavasantham
Yes, almost 6 years ago.

திருக்கொள்ளிக்காடு தினமலர் தளத்தில்http://temple.dinamalar.com/New.php?id=336 

Siva Siva

unread,
Dec 26, 2020, 10:11:03 AM12/26/20
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:

4)

முடிமிசை ஆற்றனை முக்கண் மூர்த்தியைப்

பொடியணி மார்பினில் புற்ற ராவனைக்

கொடிமிசை ஏற்றனைக் கொள்ளிக் காடுறை

அடிகளை அடிதொழ அல்லல் இல்லையே.


5)

மான்றிகழ் கையனை மாக டல்விடம்

தோன்றிடு கண்டனைச் சுடலை நீறணி

கோன்றனை வயலணி கொள்ளிக் காடுறை

தோன்றலைத் துதித்திடத் துயரம் தீருமே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Dec 24, 2020 at 7:45 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Nagoji

unread,
Dec 27, 2020, 10:12:18 AM12/27/20
to santhav...@googlegroups.com
புலியூர் (நாகைக்கு அருகில் உள்ள கிராமம்)
அறுசீர் விருத்தம் - அரையடி - மா விளம் விளங்காய்

முன்னை யாகிய முழுமுதலாம்
....பின்னை வருகிற நித்தியனாம்
என்னை யும்தமிழ்க் கவிபுனைய
....ஏற்றி வைத்தநல் இறையவனாம்
தன்னை நிகர்த்தவர் இல்லவனாம்
....தழுவும் உமையமர் பாதியனாம்
பொன்னை நிகர்த்தசீர் மேனியனாம்
....புலியூர் மேவிய புண்ணியனே....(1) -- 27-Dec-2020

- sankara dass

Siva Siva

unread,
Dec 27, 2020, 11:33:17 AM12/27/20
to santhavasantham
Nice. 
Where exactly is this Puliyur? What is the name of the lord and ambal in this temple?

Siva Siva

unread,
Dec 27, 2020, 11:54:46 AM12/27/20
to santhavasantham

6)

முனிவருக் கருமறை முன்வி ரித்தருள்

புனிதனைக் கோள்களும் போற்றும் பாதனைக்

குனிமதி சூடியைக் கொள்ளிக் காடுறை

இனியனை ஏத்திட என்றும் இன்பமே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Dec 26, 2020 at 10:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

5)

Siva Siva

unread,
Dec 28, 2020, 10:34:10 AM12/28/20
to santhavasantham
For easy retrieval later on - cross-posting this padhigam here as well. (It was posted in the kaviyarangam 52 thread).
--------------

2020-12-03

சந்தக்கலவை அந்தாதி - (பொது)

--------------------------

(மண்டலித்து வரும் அந்தாதி - 11 பாடல்கள் - "காக்கும்என்று முதற்பாடல் தொடங்கிக் "காக்குமேஎன்று கடைசிப்பாடல் முடிகின்றது);

(சந்தக் கலிவிருத்தம் பல்வகைச் சந்தங்கள்)


1) --- (சந்த வஞ்சித்துறை தான தானனா) ---

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")


காக்கும் அண்ணலே

ஆர்க்கும் வல்வினை

நீக்கும் நாமமென்

நாக்கில் மன்னவே.


2) --- (சந்த வஞ்சிவிருத்தம் தானா தனனா தனதானா) ---

(சம்பந்தர் தேவாரம் - 1.37.2 - "எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்")


மன்னே விடமார் மணிகண்டா

பொன்னே மணியே புரிநூலாய்

முன்னோர் கணையால் அரணெய்தாய்

அன்னே அடியேற் கருளாயே.


3) --- (சந்தக் கலிவிருத்தம் தனதன தனதன தனன தானனா) ---

(சம்பந்தர் தேவாரம் - 3.18.1 - "துளமதி யுடைமறி தோன்று கையினர்")


அருளென அடியவர் அடியை வாழ்த்துவர்

தெருளருள் இறையவ தெரிவை பங்கின

இருளது மிடறிடை இலகும் ஏந்தலே

இருவினை அறுவரம் இனிது நல்கிடே.


4) --- (சந்தக் கட்டளைக் கலித்துறை தானன தானன தானன தானன தானதனா) ---

(சம்பந்தர் தேவாரம் - 1.116 & 1.117 - இவை கட்டளைக் கலித்துறையில் அமைந்த பதிகங்கள்)


நல்குர வற்றிட நன்மைகள் உற்றிட நம்பியவர்

செல்கதி பெற்றிட எண்ணுரு வில்தரு செம்பெருமான்

பல்கணம் ஆர்த்திட நள்ளிருள் ஆடுப ரம்பரனே

வெல்கொடி மேலொரு வெள்விடை காட்டிய வித்தகனே.


5) --- (சந்த அறுசீர் விருத்தம் தானன தான தான தானன தான தான) ---

(திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருநேரிசைப் பதிகங்கள் - "விளம் மா தேமாஅமைப்பு)


வித்தக நீல கண்ட .. வெண்பொடி ஆரு மேனி

நித்திய நெற்றி மீது .. நேத்திர நம்பி னார்க்கு

முத்தியை நல்கு கின்ற .. மூத்தவ வாம பாகம்

சத்தியை வைத்து கந்த .. சங்கர போற்றி போற்றி.


6) --- (சந்த எழுசீர் விருத்தம் தான தானன தான தானன தான தானன தானனா) ---

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்")

(சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "பாறு தாங்கிய காட ரோபடு தலைய ரோமலைப் பாவையோர்")


போற்றி செய்தடி வாழ்த்தி னாருயிர் பொன்று நாளென வந்தடை

கூற்று வன்றனை மாளு மாறடி கொண்டு தைத்தருள் கூத்தனே

ஆற்று நீரிள நாகம் ஒண்பிறை ஆரும் அஞ்சடை அண்ணலே

தோற்றம் ஈறிவை அற்ற முக்கண தொண்ட னேற்கருள் ஐயனே.


பதம் பிரித்து:

போற்றிசெய்து அடி வாழ்த்தினார் உயிர் பொன்றும் நாள் என வந்து அடை

கூற்றுவன்தனை மாளுமாறு அடி கொண்டு உதைத்தருள் கூத்தனே;

ஆற்று-நீர் இள-நாகம் ஒண்-பிறை ஆரும் அம் சடை அண்ணலே

தோற்றம் ஈறு இவை அற்ற முக்கண தொண்டனேற்கு அருள் ஐயனே.


7) --- (சந்த அறுசீர் விருத்தம் தான தான தானனா தான தான தானனா) ---

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்)


ஐய னேஅ ராவினை .. ஆர்க்கும் நாண தாக்கினாய்

செய்ய னேஇ டப்புறம் .. தேவி பாகம் ஆயினாய்

மெய்ய னேவி ருத்தனே .. வேத னேமி டற்றினில்

மைய னேவெ னத்தினம் .. வாழ்த்தில் ஆரும் இன்பமே.


8) --- (சந்தக் கலித்துறை தான தானன தானன தானன தானா) ---

இன்பன் எம்மிறை வெற்பையி டந்தவ ரக்கற்

றுன்பம் உற்றிட ஊன்றிவ ரந்தரு தோன்றல்

முன்பு முப்புரம் நக்கெரி முக்கணன் நெஞ்சே

தென்ப ராய்த்துறை மேவிய செல்வனை நண்ணே.


பதம் பிரித்து:

இன்பன் எம் இறை வெற்பை இடந்த அரக்கன்

துன்பம் உற்றிட ஊன்றி வரம் தரு தோன்றல்;

முன்பு முப்புரம் நக்கு எரி முக்கணன்நெஞ்சே,

தென் பராய்த்துறை மேவிய செல்வனை நண்ணே.


9) --- (சந்தக் கலிவிருத்தம் தானா தனனா தனனா தனனா) ---

(சம்பந்தர் தேவாரம் - 2.18.2 - "சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்")


நண்ணற் கரியான் அரிநான் முகனார்க்

கெண்ணித் தொழுவார்க் கெளியான் மதியக்

கண்ணிச் சடையான் கரியீ ருரியான்

கண்ணெற் றியினான் கழல்சேர் மனமே.


10) --- (சந்த வஞ்சிவிருத்தம் தனாதன தனாதன தானதனா) ---

(இப்பாடலைச் "சம்பந்தர் தேவாரம் - 1.111.1 - அருத்தனை யறவனை யமுதனைநீர்போலப் பாட இயலும் என்று கருதுகின்றேன்)


மனத்தினில் இருட்டினர் வார்த்தைவிடும்

அனைத்திலும் இருப்பவன் அம்பலவன்

தனத்தொடு சுகந்தரு சங்கரனை

நினைத்திடும் மகிழ்ச்சியும் நிச்சயமே.


11) --- (சந்த வஞ்சித்துறை தனதனா தானனா) ---

சயமெலாம் தந்திடும்

கயமுலாம் வேணியன்

இயலுமா றேத்துதல்

செயநமைக் காக்குமே.


பிற்குறிப்புகள்:

1. சந்தக்கலவை சந்தங்களின் கலவை - "பல சந்தங்கள் திகழும் பதிகம்என்ற பொருளில்; (சந்தம் செய்யுளின் வண்ணம்);

2. பாடல்களில் சீர்களின் எண்ணிக்கை முறையே 2, 3, 4, 5, 6, 7, 6, 5, 4, 3, 2 என்றவாறு அமைந்த பதிகம்;

3. இருஞ்சீர் அடிகளைப் போற்றும் பதிகம் இருசீர் அடிகளில் தொடங்கி இருசீர் அடிகளில் நிறைவுறுகின்றது. (இரும் சீர் அடிகள் பெரும் புகழை உடைய சுவாமி); (திருவாசகம் திருவெம்பாவை - 8.7.7 - "உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்");


விசுப்பிரமணியன்

--------------

Nagoji

unread,
Dec 28, 2020, 10:50:34 AM12/28/20
to santhav...@googlegroups.com
மாதி லங்கிடும் மேனியுடை
....மணியன் மதிபொதி வார்சடையன்
காதில் குழையமர் கண்ணுதலன்
....கல்லெ றிந்தவர்க் கருள்முனிவன்
ஓத வண்ணனுக் கோர்திகிரி
....உவந்த ளித்திடும் உயர்பரமன்
போத முத்திரை காட்டுமிறை
....புலியூர் மேவிய புண்ணியனே....(2) -- 28-Dec-2020

- sankara dass

Nagoji

unread,
Dec 29, 2020, 9:21:02 AM12/29/20
to santhav...@googlegroups.com
நாதம் எழுந்திடு குழலுடைய
....நந்தன் குலவொளி  துதிபெருமான்
வாத வூரரின் சொல்லணியும்
....மணியார் மிடறுடை வண்பெருமான்
ஓதும் நான்மறை  உச்சியிலே
....உண்மைப் பொருளென அமர்பெருமான்
பூத கணங்களை ஆள்பெருமான்
....புலியூர் மேவிய புண்ணியனே....(3) -- 29-Dec-2020

சிவ ஸகஸ்ர நாமத்தை எடுத்துக் கூறியவர் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.

- sankara dass

Siva Siva

unread,
Dec 30, 2020, 10:32:27 AM12/30/20
to santhavasantham

7)

நீர்மலி சடையனை நெற்றிக் கண்ணனைக்

கார்மலி கண்டனைக் கால காலனைக்

கூர்மழு வாளனைக் கொள்ளிக் காடுறை

ஓர்விடைப் பாகனை உன்னி உய்ம்மினே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Dec 27, 2020 at 11:54 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Nagoji

unread,
Dec 30, 2020, 10:40:20 AM12/30/20
to santhav...@googlegroups.com
கரத்தில் எரிவளர் சிவபெருமான்
....காலால் கூற்றினை உதைபெருமான்
வரத்தை அளிப்பதில் முதற்பெருமான்
....வட்டை மாற்கருள் வான்பெருமான்
சிரத்தை தருகிற குருப்பெருமான்
....சீறிப் பாய்நதிச் சடைப்பெருமான்
புரத்தை நகைப்பினால் எரிபெருமான்
....புலியூர் மேவிய புண்ணியனே....(4) -- 30-Dec-2020

வட்டு - சக்கரம்

- sankara dass

Nagoji

unread,
Dec 31, 2020, 9:22:37 AM12/31/20
to santhav...@googlegroups.com
கலியில் துயரறு பழமுனிவன்
....கற்றோர் பரவிடு கழலுடையான்
அலிபெண் ஆணெனும் பாலுடையான்
....அப்பைச் சூடிய அழலுருவன்
எலியை மாவலி ஆக்கியவன்
....எளியோர்க் கிரங்கிடும் இன்மனத்தன்
புலியின் அதளணி பொன்னிறத்தன்
....புலியூர் மேவிய புண்ணியனே....(5) -- 31-Dec-2020

- sankara dass

Siva Siva

unread,
Dec 31, 2020, 9:30:28 AM12/31/20
to santhavasantham
/ அலிபெண் ஆணெனும் பாலுடையான் /

இறைவன் ஆணா பெண்ணா அலியா எனலாம். இறைவன் ஆண்பாலா பெண்பாலா அலிப்பாலா என்னோமே.
பாலுடையான் என்னாமல் வடிவுடையான் . பண்புடையான் போன்ற சொல் அங்கே இருக்கலாம் என்று தோன்றுகின்றது.

Siva Siva

unread,
Dec 31, 2020, 9:38:45 AM12/31/20
to santhavasantham

8)

வரையசை அரக்கனை வாட ஊன்றிய

அரையனை அறஞ்சொல ஆலின் கீழமர்

குரவனை வயலணி கொள்ளிக் காடுறை

அரவனை அடைந்தவர்க் கல்லல் இல்லையே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Dec 30, 2020 at 10:32 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Nagoji

unread,
Jan 1, 2021, 5:57:24 AM1/1/21
to santhav...@googlegroups.com
நல்ல கேள்வி. பொதுவாக இலக்கண வினாக்கள் தவிர, ஆண்பால், பெண்பால் என்று "பால்" என்பதைக் கூற எங்குமே கண்டதில்லை. ஆண், பெண் என்பதோடு நிறுத்தி விடுகிறோம். ஆண், பெண் என்னும் போதே பால் அதனுள் வந்துவிடுகிறதே! பால் என்பதே சினை, குணம்/பண்பு அடிப்படையில் எழுந்த பெரும்பிரிவு என்றே எண்ணத் தோன்றுகிறது.

- சங்கர தாஸ்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNJpL8ROOtQ1r97f%2B5YvWYYvGYw9TXBqAuAoapYc0HqRA%40mail.gmail.com.

Nagoji

unread,
Jan 1, 2021, 6:15:30 AM1/1/21
to santhav...@googlegroups.com
சங்க நிறம்வளர் உருவுடையான்
....சாம மறைவளர்  நாவுடையான்
பங்கில் உமைவளர் பரிசுடையான்
....பாந்தள் மிகவளர் மார்புடையான்
அங்கை யில்வளர் மழுவுடையான்
....ஆல விடம்வளர் மிடறுடையான் 
பொங்கு நதிவளர் புரிசடையான்
....புலியூர் மேவிய புண்ணியனே....(6) -- 1-Jan-2021

- sankara dass

Siva Siva

unread,
Jan 1, 2021, 8:29:34 AM1/1/21
to santhavasantham

9)

கழல்முடி நேடிய கண்ணன் நான்முகன்

தொழவுயர் சோதியைத் தோற்றம் இல்லியைக்

குழகனைச் செய்யணி கொள்ளிக் காடுறை

மழவிடைப் பாகனை வாழ்த்தி வாழ்மினே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Dec 31, 2020 at 9:38 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Jan 2, 2021, 8:59:18 PM1/2/21
to santhavasantham

இவ்விரு பாடல்களாடு இப்பதிகம் நிறைவுறுகின்றது.


10)

நித்தலும் பொய்யுரை நீசர் சொல்விடும்

அத்தியின் உரியனை அந்த கன்றனைக்

குத்திய சூலனைக் கொள்ளிக் காடுறை

மத்தனை வாழ்த்துமின் மல்கும் இன்பமே.


11)

மன்றினில் ஆடியை மதியஞ் சூடியை

அன்றினர் முப்புரம் அழலில் மூழ்கிடக்

குன்றவில் ஏந்தியைக் கொள்ளிக் காடுறை

கொன்றையந் தாரனைக் கும்பிட் டுய்ம்மினே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Jan 1, 2021 at 8:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Nagoji

unread,
Jan 3, 2021, 9:48:56 AM1/3/21
to santhav...@googlegroups.com
மறியை ஏந்திய மாப்பரமன்
....மழுவார் கரமுடை வன்பரமன்
அறிவை அடுத்துநில்  அரப்பரமன்
....அறத்தை உரைத்திடும் குருப்பரமன்
வறியர்க் கருள்பொழி வண்பரமன்
....மதிசே கரனெனத் திகழ்பரமன்
பொறிகள் ஐந்தினில்  மறைபரமன்
....புலியூர் மேவிய புண்ணியனே....(7) -- 3-Jan-2021

- sankara dass

Siva Siva

unread,
Jan 3, 2021, 10:17:17 AM1/3/21
to santhavasantham
/ மாப்பரமன் /
Should it be மாபரமன் ?

/ வன்பரமன் / = ?

/ குருப்பரமன் /
  குருபரமன்  ?

Nagoji

unread,
Jan 4, 2021, 2:44:32 AM1/4/21
to santhav...@googlegroups.com
Thanks. Corrected. Not sure why my brain did not think on those oRRu - completely in my blid spot.

மறியை ஏந்திய மாபரமன்
....மழுவார் கரமுடை வன்பரமன்
அறிவை அடுத்துநில்  அரப்பரமன்
....அறத்தை உரைத்திடும் குருபரமன்

வன்மை - வலிமை என்ற பொருளில்.

- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Jan 4, 2021, 3:58:11 AM1/4/21
to santhav...@googlegroups.com
வலக் காலை ஓங்கியவன்
இள மதியம் சூடியவன்
பணி மாலை தாங்கியவன்
பிணி அல்லும் போக்குபவன்
பற்றிய பதிகம் அருமை!

கோபால். 

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFTipV8-MwjZuJ_1uDg6vkL64AhxhnatVAcOkFH3QMz3NQ%40mail.gmail.com.

Nagoji

unread,
Jan 4, 2021, 10:58:27 AM1/4/21
to santhav...@googlegroups.com
வெற்பை அசைத்தவன் வலியடர்த்த
....விரலார் கழலினன் விடையமர்வான்
அற்பன் எனைத்தமிழ்க் கவிதைபல
....அவன்மேல் ஆக்கிடச் செய்தபரன்
கற்பம் எண்ணில கண்டசிவன்
....கரியின் உரியணி கண்ணுதலன்
பொற்பு மிகவுடைப் பொன்னழகன்
....புலியூர் மேவிய புண்ணியனே....(8) -- 4-Jan-2021

கற்பம் - 10,00,00,00,00,000 - இலக்ஷம் கோடி வருடங்கள்

- sankara dass

Siva Siva

unread,
Jan 4, 2021, 10:20:05 PM1/4/21
to santhavasantham

அடுத்த பதிகத்தின் முதல் இரு பாடல்கள்:

2016-01-11

கள்ளில் (இக்காலத்தில் "திருக்கண்டலம்");

----------------

(வஞ்சித்துறை - "தானா தானனா" என்ற சந்தம்;

தானா என்பது தனனா என்றும் வரும்)


(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")

(சம்பந்தர் தேவாரம் - 1.95.2 - "கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்")


1)

புவியோர் போற்றிடத்

தவியா வாழ்வருள்

சிவனார் மேயது

கவினார் கள்ளிலே.


2)

இருதாள் ஏத்துவார்க்

கருள்வார் அண்ணலார்

எருதூர் ஈசனார்

கருதூர் கள்ளிலே.


வி. சுப்பிரமணியன்

Nagoji

unread,
Jan 5, 2021, 10:40:23 AM1/5/21
to santhav...@googlegroups.com
மழுவை ஏந்திய மதியழகன்
....மாற்றார் வலியழி தோளுடையான்
உழுமால் எழுவயன் காண்பறியா
....ஒருமாக் கனலென வளரிறைவன்
தழுவும் உமையினைப் பிரியகிலான்
....தாவும் மரையமர் கரமுடையான்
புழுவும் வாழ்ந்திட உணவளிப்பான்
....புலியூர் மேவிய புண்ணியனே....(9) -- 5-Jan-2021

- sankara dass

Siva Siva

unread,
Jan 5, 2021, 4:21:52 PM1/5/21
to santhavasantham
/ மதியழகன் /
மதியழகன் = சோமசுந்தரன் ? 

/ ஒருமாக் கனலென /
க் ? 

/ உழுமால் எழுவயன் /
உழுமால் உயரயன்  ?
உழுமால் எழுமயன்  ?

Nagoji

unread,
Jan 6, 2021, 2:24:32 AM1/6/21
to santhav...@googlegroups.com
/ மதியழகன் /
மதியழகன் = சோமசுந்தரன் ? 
>> ஆம்.  

/ ஒருமாக் கனலென /
க் ? 
>> ....ஒருமா கனலென வளரிறைவன்

/ உழுமால் எழுவயன் /
உழுமால் உயரயன்  காண்பறியா என்பது அருமையாக உள்ளது. நன்றி.

- சங்கர தாஸ் 

Nagoji

unread,
Jan 6, 2021, 7:54:27 AM1/6/21
to santhav...@googlegroups.com
கத்தும் நாத்திகர்க் கரியசிவன்
....நத்தும் ஆத்திகர்க் கெளியசிவன்
அத்தி உரியணி ஆதிசிவன்
....ஆல நிழலமர் அந்தசிவன்
முத்தி தரவல மூலசிவன்
....மோகம் அறுத்தருள் முண்டசிவன் 
புத்தி யுள்ளொளிர்  போதசிவன்
....புலியூர் மேவிய புண்ணியனே....(10)

முண்டம் - தலை மழித்த நிலை - வ்யுப்த கேசன்.
அந்தம் - முடிவு, அழகு, அருகில்

- sankara dass

Siva Siva

unread,
Jan 6, 2021, 9:50:33 AM1/6/21
to santhavasantham
/ நத்தும்   /
நச்சுதல் என்ற வடிவில் திருமுறைகளில் பார்த்துள்ளேன்.

Kaviyogi Vedham

unread,
Jan 6, 2021, 9:53:18 AM1/6/21
to santhavasantham
நத்தும் என்றால் கிட்டவரும்,அடையும் என்ற பொருளில் அல்லவோ இதுவரை
 கண்டறிந்துள்ளேன். குழப்பம்..!!
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Saranya Gurumurthy

unread,
Jan 6, 2021, 11:22:58 AM1/6/21
to சந்தவசந்தம்
வணக்கம்.

http://www.kaumaram.com/thiru/nnt1295_u.htm


நத்தியு தமதவத்தி ...... னெறியாலே
         லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே


நித்தமுற்றுனை நினைத்து மிகநாடி என்ற

திருப்புகழில் நத்தி - நத்துதல் - நாடுதல் என்ற பொருளில் வருகிறது.


சரண்யா 

Nagoji

unread,
Jan 6, 2021, 11:35:01 AM1/6/21
to santhav...@googlegroups.com
image.png

நத்துதல் - விரும்புதல் என்னும் பொருளில்.

- sdn
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbwDQPo%3DiQudhNXCy1jfmOOVSS4L2cyJQ7t1js0AprvcRg%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jan 6, 2021, 11:39:19 AM1/6/21
to santhavasantham
Thanks.
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி  

Nagoji

unread,
Jan 7, 2021, 12:26:16 AM1/7/21
to santhav...@googlegroups.com
கலைய மர்ந்திடும் வேணியனாம்
....கண்ண மர்ந்திடும் நெற்றியனாம் 
மலைய மர்ந்திடும் கையினனாம்
....மாத மர்ந்திடும் மேனியனாம்
இலைய மர்ந்திடும் தாரினனாம்
....ஏற மர்ந்திடும் இறையவனாம்
புலைய னாய்வரும் போதகனாம்
....புலியூர் மேவிய புண்ணியனே....(11) -- 7-Jan-2021

இலை - இங்கு வில்வம்

புலியூர்ப் பதிகம் நிறைவுற்றது.
சிவசிவ.

- sankara dass

Vis Gop

unread,
Jan 7, 2021, 3:10:47 AM1/7/21
to santhav...@googlegroups.com
மிக அருமை. 
கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Jan 7, 2021, 10:39:02 AM1/7/21
to santhavasantham
/ கலைய மர்ந்திடும் வேணியனாம்  /
கலை என்ற சொல் சந்திரன் / பிறை என்ற பொருளிலும் வருவது உண்டா?

Siva Siva

unread,
Jan 7, 2021, 10:42:25 AM1/7/21
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:

3)

கூரார் சூலனார்

காரார் கண்டனார்

நீரார் வேணியார்

ஊராம் கள்ளிலே.


4)

படநா கத்தினை

வடமாப் பூண்டவர்

இடமோர் மங்கையார்

இடமாம் கள்ளிலே.


வி. சுப்பிரமணியன்


On Mon, Jan 4, 2021 at 10:19 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2016-01-11

கள்ளில் (இக்காலத்தில் "திருக்கண்டலம்");

----------------

(வஞ்சித்துறை - "தானா தானனா" என்ற சந்தம்;

தானா என்பது தனனா என்றும் வரும்)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")

(சம்பந்தர் தேவாரம் - 1.95.2 - "கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்")


1)

2)

Nagoji

unread,
Jan 7, 2021, 11:05:10 AM1/7/21
to santhav...@googlegroups.com
கலை 2kalai
n. <kalā.
1. Portion;
அமிசம். தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26).

2. Moon's phase corresponding to a titi;
சந்திரனது பதினாறமிசத்து ஒன்று. வெண்மதியி னொற்றைக் கலைத்தலையாய் (திருவாச. 6, 40).


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jan 7, 2021, 11:27:14 AM1/7/21
to santhavasantham
My question was more about the standalone usage of the word கலை.
In that quoted example,  கலை  is qualified by the use of the word  வெண்மதி. 

Nagoji

unread,
Jan 7, 2021, 12:22:07 PM1/7/21
to santhav...@googlegroups.com
kala derived from sanskrit kalaa. literal meaning is the one that grows. hence arts got this name. kalaa in sanskrit also means chandran's 1/16th part. Just now referred sanskrit dictionary as well. There is no need for  additional qualification.
kalai here means (kuRippu) chandra kalai based on the context.

- sdn.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Jan 7, 2021, 1:48:10 PM1/7/21
to santhav...@googlegroups.com
For a reason related to the moon’s phases, kalA is used to indicate the number 16. 
kalA sankhyA = 16 
कलासंख्यानि नामानि य:पठेत् शृणुयादपि ......
ChandrakalAstuti is a stotram with 16 verses. 
Regards. 
Gopal. 

Sent from my iPhone

Siva Siva

unread,
Jan 8, 2021, 9:51:52 AM1/8/21
to santhavasantham

5)

பிறையார் சென்னியாய்

இறைவா என்பவர்

குறைதீர் அங்கணன்

உறைவாம் கள்ளிலே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Jan 7, 2021 at 10:42 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

4)

Siva Siva

unread,
Jan 9, 2021, 9:09:15 AM1/9/21
to santhavasantham

6)

நரரோ டும்பரும்

பரவும் தாளினன்

அரவம் சூடிய

அரனூர் கள்ளிலே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Jan 8, 2021 at 9:51 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Jan 11, 2021, 10:29:09 PM1/11/21
to santhavasantham

அடுத்த இரு பாடல்கள்:


7)

சுரும்பார் கொன்றையாய்

கரும்பே காவெனத்

தரும்பே ரன்பினன்

விரும்பூர் கள்ளிலே.


8)

முடிகள் பத்தினன்

படிய ஊன்றினார்

துடியார் கையினர்

குடியாம் கள்ளிலே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Jan 9, 2021 at 9:09 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Vis Gop

unread,
Jan 12, 2021, 12:49:54 AM1/12/21
to santhav...@googlegroups.com

முடிகள் பத்தினன்

படிய ஊன்றினார்

பொருளென்ன?

கோபால்.

Siva Siva

unread,
Jan 12, 2021, 8:43:49 AM1/12/21
to santhavasantham

8)

முடிகள் பத்தினன்

படிய ஊன்றினார்

துடியார் கையினர்

குடியாம் கள்ளிலே.


முடிகள் பத்தினன் படிய ஊன்றினார் - பத்துத்தலைகளை உடைய இராவணன் படியும்படி மலைமேல் ஒரு விரலை ஊன்றியவர்;


குறிப்பு: "முடிகள் பத்தினன்" என்ற பிரயோகத்தை ஒட்டிய ஒரு பழம் பிரயோகம்: (தேடியதில் கண்டது).

கல்லாடம் - செய்யுள் 95 - "பெருநிலத் தேவர்கண் மறைநீ ருகுப்ப....." - அடி-25 - "வுழறேர் பத்தினன் மகவென நாறி" =

"உழல் தேர் பத்தினன் மகவு என நாறி" = ஓடுகின்ற தேர் பத்தையுடையோன் என்னும் பொருள்படும் பெயரையுடைய தயரதனுக்கு மகனாகத் தோன்றி;

(http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=70&pno=664 )


Vis Gop

unread,
Jan 12, 2021, 10:16:56 AM1/12/21
to santhav...@googlegroups.com

முடிகள் பத்தினன் படிய ஊன்றினார் பத்துத்தலைகளை உடைய இராவணன் படியும்படி மலைமேல் ஒரு விரலை ஊன்றியவர்;


இராவணன் இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த நிகழ்வு பலமுறை உங்கள் பாடல்களிலேயே கண்டிருந்தும் இந்த அடிகளை ஊகித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை. விளக்கத்திற்கு மிக்க நன்றி. 
கோபால். 

Sent from my iPhone

On 12-Jan-2021, at 7:13 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

முடிகள் பத்தினன்

படிய ஊன்றினார்

ஐதுடியார் கையினர்

Siva Siva

unread,
Jan 12, 2021, 10:20:10 AM1/12/21
to santhavasantham
பஞ்சகிருத்தியத்தில் மறைத்தலும் ஒன்று! 

Siva Siva

unread,
Jan 12, 2021, 10:02:06 PM1/12/21
to santhavasantham

9)

அயன்மால் நேடிட

உயர்ந்தான் கந்தனைப்

பயந்தான் சார்வென

நயந்தான் கள்ளிலே.


வி. சுப்பிரமணியன்


On Mon, Jan 11, 2021 at 10:28 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

8)

Siva Siva

unread,
Jan 13, 2021, 10:34:54 PM1/13/21
to santhavasantham

இவ்விரு பாடல்களோடு இப்பதிகம் நிறைவுறுகின்றது.

10)

நீற்றைப் பூசிடார்

கூற்றைத் தள்ளுவீர்

ஏற்றன் கள்ளிலைப்

போற்றி வாழ்மினே.


11)

வெள்ளம் சேர்சடை

வள்ளல் மேவிய

கள்ளில் கைதொழ

விள்ளும் பாவமே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Jan 12, 2021 at 10:01 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Nagoji

unread,
Jan 14, 2021, 5:59:18 AM1/14/21
to santhav...@googlegroups.com
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
ஊக்கம் அளித்து வழி நடத்தும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

திருவாமாத்தூர் சதகப் பதிகம் கண்டபின், கோவை கௌமார மடத்துடன் தொடர்பு கொண்டு, ஸ்ரீ வண்ணச்சரபம் சுவாமிகளின் அச்சிடப்பட்ட நூல்களின் 1 படி வாங்கினோம். நேற்றுதான் புத்தகங்கள் வந்தன. 
கணபதி ஆயிரம், சூரியன் ஆயிரம் பாடல்களை இன்று முதல் பாராயணம் செய்யத் தொடங்கினோம்.

பிரமிக்க வைக்கும் பக்திப் பாடல்கள்.

Siva Siva

unread,
Jan 14, 2021, 9:16:57 AM1/14/21
to santhavasantham
Pongal greetings!
வண்ணச்சரபம் சுவாமிகளின்  நூல்கள் கொண்டது நன்று! 

Siva Siva

unread,
Jan 15, 2021, 8:49:23 AM1/15/21
to santhavasantham

2016-01-17

சிக்கல்

----------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்);

(சம்பந்தர் தேவாரம் - 2.33.1 - "ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி")


1)

கானிலலை ஆனையுரி போர்த்தவிறை கையில்

மானிலகு சூலமழு வாளுடைய மைந்தன்

தேனிலவு சோலையணி சிக்கலுறை செல்வன்

வானிலவு சூடிகழல் வாழ்த்தவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jan 16, 2021, 9:33:29 AM1/16/21
to santhavasantham

2)

அங்கியினை ஏந்திநடம் ஆடுமரன் நாகம்

அங்கமணி ஆரழகன் அஞ்சடையில் நீரன்

தெங்குமலி சோலையணி சிக்கலுறை செல்வன்

மங்கையொரு பங்கனடி வாழ்த்தவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Jan 15, 2021 at 8:49 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2016-01-17

சிக்கல்

----------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்);

(சம்பந்தர் தேவாரம் - 2.33.1 - "ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி")


1)

--

Siva Siva

unread,
Jan 20, 2021, 8:56:34 AM1/20/21
to santhavasantham

3)

வென்றிவிடை ஊர்தியுடை வேந்தனடி யாரைக்

கொன்றுவிட எண்ணிவரு கூற்றையுதை கோமான்

தென்றலினில் வாசமலி சிக்கலுறை செல்வன்

கொன்றையணி கூத்தனடி கூறவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்



On Sat, Jan 16, 2021 at 9:33 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Jan 21, 2021, 10:56:02 AM1/21/21
to santhavasantham

4)

வந்தடியில் வீழ்மதியை வாழமுடி வைத்தான்

கந்தமலர் அம்புதொடு காமனையெ ரித்தான்

செந்தமிழின் ஆரமொலி சிக்கலுறை செல்வன்

நந்தியவன் நாமமணி நாவர்மகிழ் வாரே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Jan 20, 2021 at 8:56 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Jan 22, 2021, 8:30:33 AM1/22/21
to santhavasantham

5)

துன்றியிமை யோர்தொழுது தூமலர்கள் தூவ

அன்றினவர் மூவரணம் அட்டபரன் அன்பர்

தென்றமிழி னால்பரவு சிக்கலுறை செல்வன்

என்றுமுள ஈசனடி ஏத்தவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Jan 21, 2021 at 10:55 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Jan 23, 2021, 8:28:48 AM1/23/21
to santhavasantham

6)

மங்கலமெ லாமருளும் மன்னனரு நஞ்சை

நுங்கிமணி ஆக்கியவன் நூல்திகழு மார்பன்

திங்களணி சென்னியிறை சிக்கலுறை செல்வன்

எங்களரன் அங்கழலை ஏத்தவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்



On Fri, Jan 22, 2021 at 8:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Jan 24, 2021, 11:30:59 AM1/24/21
to santhavasantham

7)

கூறரிவை ஆகியவன் நீறணிகு ணத்தன்

ஆறரவம் ஆர்சடையன் ஆரமென மார்பில்

சீறரவம் ஆருமிறை சிக்கலுறை செல்வன்

ஏறமரும் எந்தையடி ஏத்தவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Jan 23, 2021 at 8:28 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Jan 25, 2021, 9:46:50 AM1/25/21
to santhavasantham

8)

தண்மதியி லாதுமலை தன்னையசை மூடன்

புண்மிகவும் ஆகவிரல் ஊன்றியபு ராணன்

திண்மதில்கள் அட்டவிறை சிக்கலுறை செல்வன்

வெண்மதியன் நற்கழலை வேண்டவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Jan 24, 2021 at 11:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Jan 26, 2021, 10:27:58 AM1/26/21
to santhavasantham

9)

போதனரி காண்பரிய பொங்கழல தானான்

ஓதமுமிழ் நஞ்சுதனை உண்டமணி கண்டன்

சீதமலி சோலையணி சிக்கலுறை செல்வன்

போதமுரை ஆலனடி போற்றவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்


On Mon, Jan 25, 2021 at 9:46 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Jan 27, 2021, 8:56:44 AM1/27/21
to santhavasantham

10)

வீணருரை வெற்றுமொழி விட்டொழிமின் வில்லின்

நாணரவ மாகநகர் மூன்றவிய எய்தான்

சேணணவு சோலையணி சிக்கலுறை செல்வன்

பூணரவன் நம்பனடி போற்றவரும் இன்பே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Jan 26, 2021 at 10:27 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Nagoji

unread,
Jan 27, 2021, 11:48:48 AM1/27/21
to santhav...@googlegroups.com
விஷ்ணுபுரம் (தேதியூருக்கு அடுத்த கிராமம்)
வஞ்சி விருத்தம் - காய் காய் காய்

நாலுடையான் நாவினிலே பாகமதில்
மாலுடையான் மாணிக்காக் கூற்றுதைத்த
காலுடையான் கரமதிலே  மூவிலையார்
வேலுடையான் விஷ்ணுபுரப் பெருமானே....(1)  -- 27-Jan-2021

- sankara dass

Siva Siva

unread,
Jan 27, 2021, 12:39:01 PM1/27/21
to santhavasantham
அழகிய எதுகை.

Nagoji

unread,
Jan 28, 2021, 2:00:42 AM1/28/21
to santhav...@googlegroups.com
நீறுடையான் நெற்றியிலே மங்கையமர்
கூறுடையான் ஒளிவீசும்  கொடியமர்ந்த
ஏறுடையான் எதிர்கொள்வார் நடுநடுங்கும்
வீறுடையான் விஷ்ணுபுரப் பெருமானே....(2) -- 28-Jan-2021

- sankara dass

Siva Siva

unread,
Jan 28, 2021, 9:32:42 AM1/28/21
to santhavasantham
/எதிர்கொள்வார் நடுநடுங்கும் வீறுடையான் /
"எதிர்ப்பவர்கள்" என்றிருக்கவேண்டுமோ?

Siva Siva

unread,
Jan 28, 2021, 9:36:22 AM1/28/21
to santhavasantham

இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:

11)

பூவரவம் ஆறுபிறை பொற்சடையில் ஏற்றான்

மூவரணம் ஆரழலில் மூழ்கநகை செய்து

தேவரிடர் தீர்த்தவிறை சிக்கலுறை செல்வன்

சேவடியை வாழ்த்துமவர் செல்வமுடை யோரே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Jan 27, 2021 at 8:56 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

10)

adipureeswaran

unread,
Jan 28, 2021, 9:43:23 AM1/28/21
to santhav...@googlegroups.com
நீங்கள் மாற்றாகச் சொல்லும் சொற்கள்,  பெரும்பான்மையாக, அழகாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNG0UbQMBAxuGjzBC%2B5hxuac%2B5KrqVsnY74FxktjaDTyg%40mail.gmail.com.

Nagoji

unread,
Jan 28, 2021, 10:15:33 PM1/28/21
to santhav...@googlegroups.com
Yes. Thanks for pointing that out.

எதிர்ப்பவர்கள் நடுநடுங்கும் வீறுடையான் 

- sdn

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8jD1kRHaDVk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACu9XFXmMeWtDww%2BOrgfCNP%2B-akPQz7%3D_-GL_xxdaY5KHUwFZA%40mail.gmail.com.

Nagoji

unread,
Jan 28, 2021, 10:16:22 PM1/28/21
to santhav...@googlegroups.com
தண்ணுடையான் சடையடைந்த அழகாரும்
கண்ணுடையான் நுதலடைந்த கருத்தாரும்
பண்ணுடையான் தமிழடைந்த பாலாரும்
பெண்ணுடையான் விஷ்ணுபுரப் பெருமானே...(3) -- 29-Jan-2021

பால் - பகுதி, பாதி

- sankara dass

Nagoji

unread,
Jan 29, 2021, 11:29:14 AM1/29/21
to santhav...@googlegroups.com
Posting tomorrow's song as I need to leave to Bangalore early morning.

கறைமலிந்த களமுடையான் அழிவில்லா
மறைமலிந்த நாவுடையான் வான்முட்டும்
பறைமலிந்த படையுடையான் வேணிமிசைப்
பிறைமலிந்த விஷ்ணுபுரப் பெருமானே...(4) -- 30-Jan-2021

பறை - இங்கு சத்தம்/ஒலி குறிப்பு

- sdn

Siva Siva

unread,
Jan 30, 2021, 9:27:48 AM1/30/21
to santhavasantham

2016-01-19

வேட்களம்

----------------

(வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்;

தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதான என்றும் வரலாம்);

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

இசைமலி தாளிணை ஏத்துமதி

அசைவறச் சடைமிசை அணியரனூர்

விசைமலி கணைதொடு வேட்டுவனாய்

விசயனுக் கருளிய வேட்களமே.


வி. சுப்பிரமணியன்

Nagoji

unread,
Jan 31, 2021, 11:47:47 AM1/31/21
to santhav...@googlegroups.com
ஆதியனே அந்தமிலா ஆரியனே
பூதியனே பொன்வண்ணா மாதமரும்
பாதியனே பனிமலையில் தவமியற்றும்
வேதியனே விஷ்ணுபுரப் பெருமானே...(5) -- 31-Jan-2021

- sankara dass
It is loading more messages.
0 new messages