--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.
கிருஷ்ணகுமார் அவர்களேஆக என்னை டியூப்லைட் என சொன்னதை பாராட்டாக எடுத்துக்கொள்வதா இல்லை சண்டைக்கு வருவதா என யோசித்துகொண்டிருக்கிறேன் :-)சும்மா ஜோக் தான் அடித்தேன் :-) நலமா?2018-01-11 7:53 GMT-06:00 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:அன்பின் செல்வன், இழையை ஆரம்பித்தது நீங்கள். ஆனால் நான் அண்ணா கண்ணன் அவர்களை மட்டிலும் பாராட்டி விட்டு உங்களை விட்டு விட்டேனானால் தவறு. உங்களது கருத்துக்களில் தர்க்கம் பொதிந்திருக்கிறது அண்ணா கண்ணன் அவர்களது கருத்தில் உணர்வுகள் தெளிவாக ப்ரதிபலிக்கப்பட்டிருக்கின்றன. அது சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஸ்டார்ட்டர் வீக்கான ட்யூப்லைட் மாதிரி மெதுவாக லைட் எரிஞ்சாலும் சரி வெளிச்சம் வருகிறதே. சந்தோஷம் :-)--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
10 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27 அன்று, AnnaKannan K <annak...@gmail.com> எழுதியது:காட்ட முடியாது என்பதே நிதர்சனம். காட்டிவிட்டால், என்ன நடக்கும் எனக் கேரளாவில் காட்டியிருக்கிறார்கள்.மேரி மெக்டலினா'வை யேசுவின் மனைவி என்றுகூட ஆராய்சியாளர் சொல்லியுள்ளார்கள்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஆண்டாளின் படைப்பு போல், பின் தள்ளப்படும் பெண்ணின் உன்னத சாதனைகள் எல்லா மதத்தினரிடமும் உள்ளன என்று காட்டுகிறேன்.இந்து மதம் ஒன்றுதான் பெண் கடவுளை நம்புகிறது. வழிபடுகிறது. வேறு எம்மதமும் இல்லை.சி. ஜெயபாரதன்
On Fri, Jan 12, 2018 at 1:51 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
இந்த இழையில் இப்போது இது எதற்கு?ப.பாண்டியராஜா
On Friday, January 12, 2018 at 10:27:30 AM UTC+5:30, jayabarathans wrote:Mary Magdalene, a woman, who believed and was close to Jesus Christ over many years, was considered as the 13th disciple. But she was ignored and labelled as a prostitute by men around Jesus. She was not afraid like the men disciples at the end and stayed near him with his mother at the time of his crucifying.S. Jayabarathan2018-01-11 22:55 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:10 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27 அன்று, AnnaKannan K <annak...@gmail.com> எழுதியது:காட்ட முடியாது என்பதே நிதர்சனம். காட்டிவிட்டால், என்ன நடக்கும் எனக் கேரளாவில் காட்டியிருக்கிறார்கள்.மேரி மெக்டலினா'வை யேசுவின் மனைவி என்றுகூட ஆராய்சியாளர் சொல்லியுள்ளார்கள்.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சுபாஷ் சந்திரமாலிகுக்கு தமிழ் தெரியுமா?பாசுரங்களின் பொருளை நேரடியாக படித்து தெரிந்துகொண்டாரா இல்லை ஆங்கிலேய மொழிபெயர்ப்பை படித்து எழுதியதா?
Indian Movements: Some Aspects of Dissent Protest and ReformrSubhash Chandra MalikIndian Institute of Advanced Study, 1978ஆண்டாள் குறித்து வரும் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எனது புரிதல், ஒரு குத்து மதிப்பாக, கடவுளுக்கு மனைவியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண், அதாவது துவக்கக் காலத்து தேவதாசி என்று குறிப்பிடப்பட்ட நிலையில் பொருள் கொள்ளப்பட்டு, திருமாலை மணந்த பெண் என்று குறிப்பிட்டு இருக்கலாம் என்ற எண்ணம்.
அன்று மாலை ஆயனரிடம் சிவகாமி தனியாக வந்து, "அப்பா நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா? அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றாள். ஆயனருக்கு அகம் நிறைந்த மகிழ்ச்சியினால் மூச்சு நின்று விடும் போலிருந்தது. சிவகாமியை உற்று நோக்கி அவளுடைய முக மலர்ச்சியையும் பார்த்து விட்டு, "அதற்கென்ன, குழந்தாய்! கூடிய விரைவில் உனக்குத் தக்க நாயகனைத் தீர்மானித்து, மணம் செய்து வைக்கிறேன்!" என்றார். அப்பா! எனக்கு நாயகனைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தைத் தங்களுக்கு நான் வைக்கவில்லை. ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!" என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்.
அச்சமயம் திருநாவுக்கரசர் பெருமான் அருகில் உள்ள ஒரு சிவஸ்தலத்திலேதான் இருக்கிறார் என்று அறிந்து அவரிடம் சென்று ஆயனர் யோசனை கேட்டார். வாகீசர் எல்லாவற்றையும் கேட்ட பின்னர், "ஆயனரே! உமது குமாரியின் விஷயத்தில் என் மனத்தில் தோன்றியது உண்மையாய்ப் போய் விட்டது. மானிடப் பெண் யாரும் அடைந்திருக்க முடியாத துன்பங்களை அவள் அடைந்து விட்டாள். இனி அவளுக்கு அத்தனை துன்பங்களுக்கும் இணையான பேரின்பம் காத்திருக்கிறது. உம்முடைய குமாரிக்குச் சிவகாமி என்று பெயர் இட்டீர் அல்லவா? அதற்கேற்ப அவள் சிவபெருமானிடமே காதல் கொண்டு விட்டாள். அவளுடைய விருப்பத்துக்கு இடையூறு செய்யாமல் நிறைவேற்றி வையுங்கள். அதுதான் சிவகாமிக்கு நீர் செய்யக்கூடிய பேருதவி!" என்று அருளினார்.
திங்கள் மூன்று சென்ற பிறகு, வாதாபி வெற்றியின் கோலாகலக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு முடிந்த பிறகு, ஒரு நல்ல நாளில் ஏகாம்பரநாதரின் சந்நிதிக்கு ஆயனரும், சிவகாமியும் இன்னும் சிலரும் வந்து சேர்ந்தார்கள். கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள்.
சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்" என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள். சிவகாமி ஆடத் தொடங்கியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சந்நிதியில் ஜனங்கள் சேரத் தொடங்கினார்கள். நடனத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் மெய்மறந்து பரவசமடைந்து பக்தி வெள்ளத்தில் மிதந்தார்கள். அச்சமயம் யாரும் எதிர்பாரா வண்ணமாக, மாமல்ல சக்கரவர்த்தியும் அவ்விடம் வந்து சேர்ந்தார். முன்னொரு தடவை இதே பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த போது சிவகாமி மாமல்லரின் வரவை அறிந்து அவருடைய நினைவாகவே அபிநயம் செய்ததுண்டு.
இப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை. அவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும் ஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும் அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை; வேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை. மாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம் தாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன அபிநயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி போலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும் அவருக்கு நினைவு வந்தன. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.
கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று
இந்தியாவை பற்றிய ஆய்வை இந்தியர் செய்யவேண்டும் எனத்தான் சொன்னேன்.கலோனிய மனோபாவத்துடன் செய்யக்கூடாது என்பதும் கூறியுள்ளேன்.சுபாஷ் சந்திரமாலிக் இந்தியராக இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியுமா என்பது கேள்விக்குறி. தெரியாது என வைத்துக்கொண்டால் அவர் தன் ஆய்வுக்கு ஆங்கிலத்தில் ஆண்டாள் குறித்து எழுதபட்ட ஆய்வுகட்டுரைகளை தான் படித்திருக்க முடியும். 1970களில் இந்தியர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் குறைவே. இருந்தவை பெரும்பாலும் ஆண்டாளின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் படித்து அல்லது அதைப்பற்றிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் படித்து எழுதிய மேல்நாட்டு பேராசிரியர்களின் ஆய்வுதான்.ஆக நான் கூறியதில் எதுவும் தவறில்லை. சோர்ஸ் பிழையானதாக இருந்தால் அதை மேற்கோள் காட்டி வரும் ஆய்வுகளும் பிழையாக தான் இருக்கும். சுபாஷ் சந்திரமாலிக்குக்கு தமிழ் தெரியுமா, பாசுரங்களை படித்தாரா என எல்லாம் வைரமுத்து யோசித்திருந்திருக்கலாம். ஒருவரை மேற்கோள் காட்டுமுன் தாம் நம்பகமனதாக அந்த சோர்ஸை கருதுகிறோமா என யோசிப்பது மேற்கோள் காட்டுபவரின் கடமைதானே?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சரியாகத்தானே சொல்லியுள்ளேன்?இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள்தான் செய்யவேண்டும் என்பதில் எதாவது மாற்றுகருத்து உள்லதா உங்களிடம்?
On Friday, January 12, 2018 at 6:32:19 PM UTC-8, செல்வன் wrote:சரியாகத்தானே சொல்லியுள்ளேன்?இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள்தான் செய்யவேண்டும் என்பதில் எதாவது மாற்றுகருத்து உள்லதா உங்களிடம்?ஆமாம், உண்டு.ஆர்வம் கொண்டால் பின்புலம் இல்லாதவர்கள் மிகத் தீவிரமாக எதையும் ஆராய்வார்கள்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி எழுதியவரும் அப்படித்தான், gone native
சார்புநிலை இல்லாதவர்கள் யாருமே இல்லை.மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவை பற்றிய முன்முடிவுகளுடன் தான் இந்திய ஆய்வுகளை செய்வார்கள். அந்த முன்முடிவுகள் கலோனியகாலத்தில் உருவானவை. அந்த சார்புநிலையுடன் நடக்கும் ஆய்வுகள் அதனால் தான் பிழையாக போகும்.
அது மக்களை பற்றியது அல்லவே? மொழியை பற்றியதுதானே? அதனால் பிழையில்லை
தமிழ் கருவறையில் ஒலிப்பதற்கு முழுக் காரணம் ஆண்டாளின் 30 பாக்கள். கோவிலில் செட்டியார், முதலியார், இடையர், பிராமணர், நாயுடு, ரெட்டியார் என அனைத்து மக்களும் ஒருங்கே அமர்ந்து வழிபாடு நடத்தும் ஒரு நோன்பு ஆண்டாளின் மார்கழி நோன்பு.பக்திக்கு அன்பே அடிப்படை தொழிலோ, பிறப்போ அடிப்படை அல்ல. . வைரமுத்து தனது மனக் கோணலை இப்படி ஒரு பெண் மீது ஏவி இருக்கக் கூடாது.எத்தனையோ கணிகையர் குலமக்கள் கோவிகளுக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் அளப்பறிய கொடைகளை வழங்கியுள்ளனர்.ஸ்வாதி ஸ்ரீ விஜயாதித்ய சத்யஸ்ரைய ஸ்ரீ பிரித்வி வல்லப மகாராஜாதிராஜ படாரர உயிர்தலைவி (பிராணவல்லபே) வினாபோடிகள் எனும் சுள்ளையர். இவரது முது தாய் (அம்மைக்கு அம்மை) விரேவமஞ்சல் கலாவரா மகள் குசிபோடி களாவர மகள் வினாபோடிகல் இங்கே (இல்லியே) ஹிரண்யகர்ப்பம் இழுத்து எல்லா தானமும் கொடுத்து தெய்வத்திற்கு பீடம் அங்கிசுவினை கட்டி வெள்ளி மாலை கட்டி மங்கல் உள்ளே 800 சேத்திரம் கொடுத்தோள். இதனை அழிவோனுக்கு மாபாவம் மிகும்.
மங்கன் காப்பன்
2018-01-10 19:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இதில் உண்மையில் வெளியே வரும் விசயம் என்னவெனில் பல்கலைகழகங்களின் ஆய்வுகள் நடக்கும் லட்சணம்தான்.ஆண்டாள் என ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, வரலாற்றுகதாபாத்திரமா என்பதற்கே கர்ணபரம்பரை கதைகளும் அவர் பெயரில் உள்ள பாடல்களும் தான் ஆதாரம் எனும் நிலையில் அவரது பாடல்களை தன் மேற்கத்திய மனோநிலையில் கேட்டு, மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுபோல ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்திருக்கவேண்டும் எனும் தன் யூகத்தையே ஆராய்ச்சி ஆக்கி, அதை பதிப்பித்தும் வைத்த ஆய்வாளர்களை நாம் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் ஆராய்ச்சிகளின் லட்சணம் அந்த அழகில் தான் இருக்கிறது. பி.எச்.டி படித்துவிட்டால் அவர் ஒரு அறிஞர், மேதாவி எனும் நம் நினைப்பும் கூட அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.
இந்தியாவை பற்றி எதுவுமே தெரியாத இவர்களின் ஆய்வுகளை இந்தியர்கள் தலைமேல் ஏற்றிக்கொன்டு சுமக்கும் கலோனிய மனோபாவம் தான் இதில் கவனத்துக்கு உரியது. இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள் செய்வதே பொருந்தும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/cenrTJoKzU0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Regards,
G.Santhanam
" वागर्थाविव सम्पृक्तौ वागर्थप्रतिपत्तयॆ / जगत: पितरौ वन्दे पार्वतीपरमॆश्वरौ "
" சொற்பொருள் போலே ஒட்டி நின்றார் சூழுலகனைத்தின் அம்மையப்பர்
சொல்பொருள் எனக்கும் ஸித்தியுறப் பார்வதிபரமேசுவரர் காப்பு " (நன்றி :திரு.பாலு சார்)
மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவை பற்றிய முன்முடிவுகளுடன் தான் இந்திய ஆய்வுகளை செய்வார்கள். அந்த முன்முடிவுகள் கலோனியகாலத்தில் உருவானவை. அந்த சார்புநிலையுடன் நடக்கும் ஆய்வுகள் அதனால் தான் பிழையாக போகும்.
சார்புநிலை இல்லாதவர்கள் யாருமே இல்லை.மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவை பற்றிய முன்முடிவுகளுடன் தான் இந்திய ஆய்வுகளை செய்வார்கள். அந்த முன்முடிவுகள் கலோனியகாலத்தில் உருவானவை. அந்த சார்புநிலையுடன் நடக்கும் ஆய்வுகள் அதனால் தான் பிழையாக போகும்.
2018-01-12 20:42 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, January 12, 2018 at 6:32:19 PM UTC-8, செல்வன் wrote:சரியாகத்தானே சொல்லியுள்ளேன்?இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள்தான் செய்யவேண்டும் என்பதில் எதாவது மாற்றுகருத்து உள்லதா உங்களிடம்?ஆமாம், உண்டு.ஆர்வம் கொண்டால் பின்புலம் இல்லாதவர்கள் மிகத் தீவிரமாக எதையும் ஆராய்வார்கள்.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி எழுதியவரும் அப்படித்தான், gone nativeஅவர்களிடம் சார்பு நிலை இருக்காது என்பதால் ஆய்வு முடிவு அதனால் பாதிக்கப்படாது.
அப்படி சொன்னதால் உடனே இந்தியாவை பற்றிய ஆய்வை இந்தியர்கள் செய்தால் அதை கண்ணைமூடிக்கொண்டு ஒப்புக்கொள்ளவேண்டும் என பொருள் அல்ல என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்
2018-01-12 20:21 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
--
On Friday, January 12, 2018 at 6:16:36 PM UTC-8, செல்வன் wrote:இந்தியாவை பற்றிய ஆய்வை இந்தியர் செய்யவேண்டும் எனத்தான் சொன்னேன்.கலோனிய மனோபாவத்துடன் செய்யக்கூடாது என்பதும் கூறியுள்ளேன்.சுபாஷ் சந்திரமாலிக் இந்தியராக இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியுமா என்பது கேள்விக்குறி. தெரியாது என வைத்துக்கொண்டால் அவர் தன் ஆய்வுக்கு ஆங்கிலத்தில் ஆண்டாள் குறித்து எழுதபட்ட ஆய்வுகட்டுரைகளை தான் படித்திருக்க முடியும். 1970களில் இந்தியர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் குறைவே. இருந்தவை பெரும்பாலும் ஆண்டாளின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் படித்து அல்லது அதைப்பற்றிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் படித்து எழுதிய மேல்நாட்டு பேராசிரியர்களின் ஆய்வுதான்.ஆக நான் கூறியதில் எதுவும் தவறில்லை. சோர்ஸ் பிழையானதாக இருந்தால் அதை மேற்கோள் காட்டி வரும் ஆய்வுகளும் பிழையாக தான் இருக்கும். சுபாஷ் சந்திரமாலிக்குக்கு தமிழ் தெரியுமா, பாசுரங்களை படித்தாரா என எல்லாம் வைரமுத்து யோசித்திருந்திருக்கலாம். ஒருவரை மேற்கோள் காட்டுமுன் தாம் நம்பகமனதாக அந்த சோர்ஸை கருதுகிறோமா என யோசிப்பது மேற்கோள் காட்டுபவரின் கடமைதானே?இதை நீங்களும் " இந்தியாவைப் பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள் செய்வதே பொருந்தும்" என உங்கள் கருத்தை எழுதும்பொழுது யோசித்திருக்கலாமே செல்வன்,மற்றபடி நானும் இராமர் அசைவம் உண்டார். வேதத்தில் மாட்டுக்கறி இருக்கு என கண்ட்ராவர்சியாக பேசுபவன், எழுதுபவன் தான். ஆனால் இதை ராம்ர் கோயில் கும்பாபிசேகத்தில் மேடைபோட்டு கூறினால் என்னை அங்கே பொதுமாத்து மாத்துவார்கள். அதன்பின் நான் என்ன கதறினாலும், அழுதாலும் எடுபடாது. இடம்,பொருள், ஏவல் என இருக்கு அல்லவா? ஆண்டாள் பக்தர்கள் கூடியிருக்கும் அரங்கில் காண்ட்ராவர்ஸி வராமல் பேசிவிட்டுவருவதுதான் அழகு. வைரமுத்து இதற்குமுன்னும் கண்ணதாசன் பறிய மேடையில் அவரது பல தாரம், பெண் விசயங்களில் செய்த பிழைகளை பேசி ஜெயகாந்தனால் பொதுமேடையில் கண்டிக்கபட்டவர்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவை பற்றிய முன்முடிவுகளுடன் தான் இந்திய ஆய்வுகளை செய்வார்கள். அந்த முன்முடிவுகள் கலோனியகாலத்தில் உருவானவை. அந்த சார்புநிலையுடன் நடக்கும் ஆய்வுகள் அதனால் தான் பிழையாக போகும்.ஐயா,ஆக,இந்தியாவை ஆராய்ச்சி செய்ய, எந்த வகையான (இந்திய அல்லது அயல் நாட்டு ) மக்கள், எந்த வகையான துறைகளில் ஈடுபடலாம் என்று தாங்கள் கருதுகிறீர்?மேலும், இந்தியர்களின், ஒப்பற்ற வகைகள் மிகுந்த மொழி + மரபணு + பழக்க வழக்கங்கள் + நாகரிகங்கள் -ஐ பார்க்கையில், தங்களால் சாட்டப்பட்ட சார்பு நிலையை நீக்கிட, எவ்வாறு பாகம் பிரித்து, பங்கு போட்டு, ஆராயலாம் என்று பரிந்துரைப்பீர்?
நன்றி .
மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவை பற்றிய முன்முடிவுகளுடன் தான் இந்திய ஆய்வுகளை செய்வார்கள்
மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவை பற்றிய முன்முடிவுகளுடன் தான் இந்திய ஆய்வுகளை செய்வார்கள்
ஐயாசார்பு நிலை (bias) மனித இயல்பு - அதைதகுந்த முறைப்படி தவிர்த்துக் கொள்ளும் வரையில் ஆராய்ச்சியாளரின் பெயரும், புகழும், நம்பகத் தன்மையும் உலகளவில் பெருகுகிறது.நான் (மஞ்சள் நிறத்தில்) மேற்கோளிட்ட தங்களின் (deterministic not probabilistic) கருத்து உண்மையெனில், இந்தியா உட்பட பல உலக நாடுகளை ஈடுபடுத்தி நடக்கும் ஆய்வுகள், உயிரியல் ஆராய்ச்சி போன்றவை, இவ்வளவு மேன்மை அடைந்திருக்காது, என்பது என் உறுதியான கருத்து.
--
On Friday, January 19, 2018 at 5:31:22 PM UTC-8, செல்வன் wrote:ரைட்டு 😆எனக்கு வைரமுத்து மேல எந்த வருத்தமும் கிடையாது. பெரியார் இதை விட ஆயிரம் மடங்கு பேசியிருக்கார். சொல்லப்ப்பொனா கவிஞர் என்ற முறையில் வைரமுத்துவுக்கு ஆண்டாள் மேல ஒரு பாசம் இருப்பதாக தான் நம்புகிறேன்ஆனால் இந்த பல்கலைக்ஃழக ஆய்வு முட்டாள்தனமானது. இவற்றை நம்பி பலரும் ஏமாந்து போகிறார்கள் , வைரமுத்துவுனெ ஏமாந்துபோய்விfடார் தான் என் வருத்தம்.வைரமுத்து தான் படித்த நூலில் இருந்து மேற்கோள் காட்டினார்.
ஆய்வுக் கட்டுரை எழுதினால் எடுத்துக்கொண்ட கருத்தாக்கம் குறித்து இதுவரை வெளிவந்த ஆய்வுக் கருத்துகளைத் தொகுத்து லிடேரச்சர் ரிவியூ என்று கொடுப்பதையொட்டி கொடுத்துள்ளார். கருத்துகளை நம்புகிறார்களா இல்லையோ என்பதைப் பொருத்து இப்பகுதியில் கருத்துகள் இடம் பெரும் வழக்கமில்லை. முழுமையாகத் தனது பொருண்மையை அறிந்துள்ளார்களா என்பதைக் காட்டுவதே நோக்கம். (பொதுவாக அந்தத் துறையில் இருக்கும் ஆய்வாளர்கள் தனது ஆய்வு குறித்து அங்குள்ளதா, ஆய்வாளர் அறிந்து வைத்துள்ளாரா என்று கூர்ந்து படிப்பார்கள்,அதன் வழி ஆய்வாளர் பற்றி எடையும் போடுவார்கள்)
ஆய்வுச்சுருக்கம், முன்னுரை, ஆய்வுகளின் தொகுப்பு, தனது எடுகோள், ஆய்வுமுறை, தனது கருத்து, முடிவுரை என்றுதான் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் வழக்கம் உள்ளது. அதை நூல் வடிவிலோ அல்லது வெகுமக்கள் படிக்கும் இதழ்களிலோ, கருத்தரங்கங்களிலோ கொண்டு சென்றால் பார்வையாளர் அல்லது படிப்பவருக்கு ஏற்ப கட்டுரையின் அமைப்பை மாற்றி இடத்திற்கு ஏற்றவாறு வழங்குவது வழக்கம்.
2018-01-19 20:01 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, January 19, 2018 at 5:31:22 PM UTC-8, செல்வன் wrote:ரைட்டு 😆எனக்கு வைரமுத்து மேல எந்த வருத்தமும் கிடையாது. பெரியார் இதை விட ஆயிரம் மடங்கு பேசியிருக்கார். சொல்லப்ப்பொனா கவிஞர் என்ற முறையில் வைரமுத்துவுக்கு ஆண்டாள் மேல ஒரு பாசம் இருப்பதாக தான் நம்புகிறேன்ஆனால் இந்த பல்கலைக்ஃழக ஆய்வு முட்டாள்தனமானது. இவற்றை நம்பி பலரும் ஏமாந்து போகிறார்கள் , வைரமுத்துவுனெ ஏமாந்துபோய்விfடார் தான் என் வருத்தம்.வைரமுத்து தான் படித்த நூலில் இருந்து மேற்கோள் காட்டினார்.ஆய்வுக் கட்டுரை எழுதினால் எடுத்துக்கொண்ட கருத்தாக்கம் குறித்து இதுவரை வெளிவந்த ஆய்வுக் கருத்துகளைத் தொகுத்து லிடேரச்சர் ரிவியூ என்று கொடுப்பதையொட்டி கொடுத்துள்ளார். கருத்துகளை நம்புகிறார்களா இல்லையோ என்பதைப் பொருத்து இப்பகுதியில் கருத்துகள் இடம் பெரும் வழக்கமில்லை. முழுமையாகத் தனது பொருண்மையை அறிந்துள்ளார்களா என்பதைக் காட்டுவதே நோக்கம். (பொதுவாக அந்தத் துறையில் இருக்கும் ஆய்வாளர்கள் தனது ஆய்வு குறித்து அங்குள்ளதா, ஆய்வாளர் அறிந்து வைத்துள்ளாரா என்று கூர்ந்து படிப்பார்கள்,அதன் வழி ஆய்வாளர் பற்றி எடையும் போடுவார்கள்)ஆய்வுச்சுருக்கம், முன்னுரை, ஆய்வுகளின் தொகுப்பு, தனது எடுகோள், ஆய்வுமுறை, தனது கருத்து, முடிவுரை என்றுதான் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் வழக்கம் உள்ளது. அதை நூல் வடிவிலோ அல்லது வெகுமக்கள் படிக்கும் இதழ்களிலோ, கருத்தரங்கங்களிலோ கொண்டு சென்றால் பார்வையாளர் அல்லது படிப்பவருக்கு ஏற்ப கட்டுரையின் அமைப்பை மாற்றி இடத்திற்கு ஏற்றவாறு வழங்குவது வழக்கம்.இதெல்லாம் தப்பிக்க சொல்லும் நொண்டிச்சாக்கு
The format of a review of literature may vary from discipline to discipline and from assignment to assignment.
A review may be a self-contained unit -- an end in itself -- or a preface to and rationale for engaging in primary research. A review is a required part of grant and research proposals and often a chapter in theses and dissertations.
Generally, the purpose of a review is to analyze critically a segment of a published body of knowledge through summary, classification, and comparison of prior research studies, reviews of literature, and theoretical articles.
In the introduction, you should:
In the body, you should:
In the conclusion, you should:
*வைரமுத்து மனைவி கவிஞர் பொன்மணி வைரமுத்து* எழுதியது(கவிப்பேரரசு-வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.
இது இசைக்கவி ரமணன் எழுதிய திறந்த கடிதம் செல்வன். தலைப்பை 'கவிஞர் பொன்மணி வைரமுத்து' என்று மாற்றி வாட்ஸாப்பில் யாரோ சிலர் உலவ விட்டிருக்கிறார்கள். பொன்மணி வைரமுத்து, வைரமுத்துவுக்கு எழுதியதன்று.வைரமுத்துவைக் கல்லூரி நாட்களிலிருந்து நானும் ரமணனும் அறிவோம். அவர் ரமணனுடன் பழகுவது இப்போதும் தொடர்கிறது.
2018-01-20 12:12 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:இது இசைக்கவி ரமணன் எழுதிய திறந்த கடிதம் செல்வன். தலைப்பை 'கவிஞர் பொன்மணி வைரமுத்து' என்று மாற்றி வாட்ஸாப்பில் யாரோ சிலர் உலவ விட்டிருக்கிறார்கள். பொன்மணி வைரமுத்து, வைரமுத்துவுக்கு எழுதியதன்று.வைரமுத்துவைக் கல்லூரி நாட்களிலிருந்து நானும் ரமணனும் அறிவோம். அவர் ரமணனுடன் பழகுவது இப்போதும் தொடர்கிறது.இதற்கு ரமணனே பதில் எழுதியிருப்பதைப் பிறகுதான் கவனித்தேன். தேவையில்லாமல் என் விளக்கத்தைக் கொடுக்க நேர்ந்துவிட்டது.
இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?
இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.
ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல
ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.
கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.
அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.
பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே
கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்
ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.
கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை
ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி
ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்.. காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட .
வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.
ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.
ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.
ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.
மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.
இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.
இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே
மேற்கண்ட செல்வனின் மடல்களை பார்க்கும்போது இசைகவி ரமணனின் கட்டுரையை பொன்மணி வைரமுத்து எழுதியதாக சொல்லும் இவர் பிறகு அது தவறு என ஏற்று கொண்டாலும் . மனிதர்கள் பிழை செய்வது இயல்புதான் என்பதை உணரனும் மேலும் வைரமுத்து மேல் ஒரு விதமான அரசியல் காழ்புணர்ச்சி கட்டவிழ்க்க பட்டுள்ளதாக கருதுகிறேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சற்றுமுன்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டார்
ராஜபாளையத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வைரமுத்து பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வைரமுத்துவுக்கு எதிராக கண்டனப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், எச்.ராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை தரிசித்து மன்னிப்பு கோரினார். தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அவரது இச்செயலை வரவேற்று அவரைப் பொறுத்தவரை இப்பிரச்சினை முடிவுற்றதாக கருதுவோம். இந்து ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு தொடர்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்.ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
--------------------
சற்றுமுன்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டார்

இன்று (ஜனவரி 23) காலை 6 மணியளவில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மதுரையில் இருந்து புறப்பட்டு திருவில்லிப்புத்தூருக்குப் புறப்பட்டார். அங்கே ஜீயரைச் சந்தித்துவிட்டு ஆண்டாள் சந்நிதிக்கும் சென்று , ‘ஆண்டாள் திருவடிகளே சரணம்’ என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கருத்தைப் பெரிதாக பற்ற வைத்தது பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் மிகக் கடுமையான பேச்சு. அதேநேரம் பாஜக பற்ற வைத்த சர்ச்சையை பாஜகவே மெல்ல அணைத்திருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது.
ஆம். தினமணி ஆசிரியரோடு ராமகிருஷ்ணா மடத்துப் பிரமுகர்களும், பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்தும் சென்றிருந்தனர். பிரசாத் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசையின் தீவிர ஆதரவாளராக அறியப்படுவர். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்.
இந்நிலையில் பிரசாத்தின் தொடர் முயற்சியால்தான் வைத்தியநாதன் திருவில்லிப்புத்தூருக்கு இன்று சென்றார் என்று தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அலையடித்த நிலையில் நாம் இதுபற்றி பிரசாத்திடமே பேசினோம்.
பாஜக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், “நான் தினமணி ஆசிரியரின் மாணவன். பலர் சித்திரிக்கிற மாதிரியான நபர் அல்லர் அவர். அவரைப் பற்றி மிக நன்றாக அறிவேன். வைரமுத்துவின் அந்த வார்த்தைகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று சில வைணவர்கள் அவரிடம் சொன்னதாகவும், அதை அவர் மறுதலித்ததாகவும் அவர் மீது புகார்கள் வளைய வந்தன. ஆனால் இன்று காலை தினமணி ஆசிரியர் திருவில்லிப்புத்தூர் ஜீயரை சந்தித்து இரண்டு மணி நேரம் உரையாடியதில் பல பிரச்னைகள் தீர்ந்துவிட்டன’’ என்றார்.
இருவரும் என்ன பேசினார்கள் என்று கேட்டோம்.
”ஜீயர் மிகவும் தன்மையாகவும், கனிவாகவும் பேசினார். ‘நீங்கள் பாரதத்தின் கலைகளையும், ஆலயங்களையும் பற்றியெல்லாம் தினமணியில் எவ்வாறு எழுதுகிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களை ஆண்டாள் சந்நிதியில் இப்படி நிறுத்தும் அளவுக்கு சூழல் ஆகிவிட்டது’ என்ற ஜீயர்,
’இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டாம், அந்த வார்த்தைகளையாவது பிரசுரிக்க வேண்டாம்னு உங்களிடம் கேட்டும், நீங்கள் அதை மறுத்து அப்படியே பிரசுரத்துக்கு அனுப்பினதா சொல்லுகிறார்களே?’ என்று தினமணி ஆசிரியரிடம் கேட்டார்.
அதற்கு தினமணி ஆசிரியர், ‘அப்படி யாரும் என்னிடம் சுட்டிக்காட்டவும் இல்லை, நான் அவர்களை மறுத்துப் பேசவும் இல்லை. இந்த கட்டுரை ஆற்றிய நாளில் என் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதால் நான் அவரைப் பார்க்க சென்றுவிட்டேன். அதன் பின் ஐந்து நாட்கள் என்னால் பணியில் முழு கவனம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றபடி நான் வேண்டுமென்றே அந்த வார்த்தையைப் பிரசுரிக்கவில்லை’ என்று விளக்கம் அளித்தார் தினமணி ஆசிரியர்.
அதையடுத்து ஜீயர், ஆசிரியர் வைத்தியநாதனிடம், ‘வைரமுத்துவையும் இங்கே தாங்கள் வரச் சொல்லி வற்புறுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த தினமணி ஆசிரியர், ‘வைரமுத்துவை நான் சந்தித்து உங்களுடன் பேசியது பற்றி அவரிடம் சொல்கிறேன். உங்களைப் போன்றவர்கள் மனதளவில் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துகிறேன். ஆனால் அவரை இங்கே வரச் சொல்லி என்னால் வலியுறுத்த முடியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. நான் அவரை கட்டாயப்படுத்த முடியாது’ என்று சொன்னார்.
அப்போது ஜீயர், ‘இது தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்டது. நாங்கள் அவரை மனிதர்களிடத்தில் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. ஆண்டாள் தாயாரிடம் வந்துதான் கேட்கச் சொல்கிறேன். அவர் இங்கே வரட்டும், ஆண்டாளைப் பார்க்கட்டும். ‘அம்மா... நான் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தை உங்களை வணங்கும் கோடானுகோடி பேரைப் புண்படுத்தியிருக்கிறது. அவர்கள் அதை தவறு என்று கருதுகிறபோது நான் என் தாயிடம் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று அவர் இங்கே வந்து சொல்லட்டுமே. அதில் அவருக்கு ஒரு கௌரவக் குறைவும் வரப் போவதில்லை’ என்று ஜீயர் குறிப்பிட்டார்.
சில நேரங்களில் ஜீயர், தினமணி ஆசிரியர் இருவருமே கண் கலங்கிவிட்டனர். ஜீயரை சந்தித்து முடித்த கையோடு ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, ஆண்டாள் திருவடிகள் சரணம், ஜீயர் திருவடிகள் சரணம் என்று வணங்கினார் தினமணி ஆசிரியர். உருக்கமான சந்திப்பு இந்த சர்ச்சையில் பாதியை முடித்துவிட்டது. மீதியையும் விரைவில் முடித்துவிடும்’’ என்றார் பிரசாத்.
பாஜகவின் இந்த காய்நகர்த்தலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
தினமணி என்ற பாரம்பரிய நாளிதழை பாஜகவினர் சமூக தளங்களில் சகட்டுமேனிக்குத் தாக்கினர். இந்நிலையில் இப்போது நாம் நடத்தும் தாக்குதல் பிற்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பாதகம் ஆகிவிடக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கருதினர். இந்நிலையில்தான் அவர்கள் தினமணி ஆசிரியருக்கு நெருக்கமான பிரசாத்தின் மூலம் இந்த சந்திப்பை நடத்தச் செய்து சுமுக சூழலை உண்டாக்கியிருக்கின்றனர். பின்னாட்களில் தினமணி தன்னை ஒரேயடியாக எதிர்த்துவிடக் கூடாது என்ற பாஜகவின் பார்வையும் இதில் இருக்கிறது என்றனர் கட்சி வட்டாரத்தில்.
மேலும் ஜீயரின் உண்ணாநோன்பை முடித்துவைத்தது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா என்று ஜெகத்ரட்சகன் கூறியதை பாஜக வட்டாரங்கள் ரசிக்கவில்லை. ஜீயரிடம் பேசிப் பிரச்னையை தீர்க்கும் அளவுக்குக்கூட பாஜக இல்லையா? நமது ஏரியாவில்கூட திமுகதான் விளையாடுகிறதா? இதில்கூட திமுகதான் செல்வாக்கு செலுத்துகிறதா என்ற கேள்வி பாஜகவினர் மத்தியிலேயே எழுந்தது. அதையெல்லாம் முடிவுகட்டும் விதமாகத்தான், தான் பற்ற வைத்த இந்த சர்ச்சையை தானே முன் வந்து அணைக்க ஆரம்பித்திருக்கிறது பாஜக.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இந்தச் சந்திப்பைப் பற்றி இன்றே வைரமுத்துவிடம் அலைபேசியில் பேசிவிட்டார். அப்புறம் என்ன என்பது ஆண்டாளுக்கே வெளிச்சம்!
-ஆரா
கடவுள் ஒருவரே!ப.பாண்டியராஜா
On Friday, January 12, 2018 at 8:48:48 PM UTC+5:30, jayabarathans wrote:ஆண்டாளின் படைப்பு போல், பின் தள்ளப்படும் பெண்ணின் உன்னத சாதனைகள் எல்லா மதத்தினரிடமும் உள்ளன என்று காட்டுகிறேன்.இந்து மதம் ஒன்றுதான் பெண் கடவுளை நம்புகிறது. வழிபடுகிறது. வேறு எம்மதமும் இல்லை.சி. ஜெயபாரதன்On Fri, Jan 12, 2018 at 1:51 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:இந்த இழையில் இப்போது இது எதற்கு?ப.பாண்டியராஜா
On Friday, January 12, 2018 at 10:27:30 AM UTC+5:30, jayabarathans wrote:Mary Magdalene, a woman, who believed and was close to Jesus Christ over many years, was considered as the 13th disciple. But she was ignored and labelled as a prostitute by men around Jesus. She was not afraid like the men disciples at the end and stayed near him with his mother at the time of his crucifying.S. Jayabarathan2018-01-11 22:55 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:10 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27 அன்று, AnnaKannan K <annak...@gmail.com> எழுதியது:காட்ட முடியாது என்பதே நிதர்சனம். காட்டிவிட்டால், என்ன நடக்கும் எனக் கேரளாவில் காட்டியிருக்கிறார்கள்.மேரி மெக்டலினா'வை யேசுவின் மனைவி என்றுகூட ஆராய்சியாளர் சொல்லியுள்ளார்கள்.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஆண்டாளை தேவதாசியாக சித்தரிப்பதில் தவறேதும் தேவ+தாசி என;பதன் அர்த்தம் தெவனுக்கு அடியாள் என்பதுதான்.இறைபக்தி ஆன்மீகம் என்பதெல்லாம் கருணையின் அடித்தளத்திலிருந்து எழுவது. தேவ+அடியாள் என்பதும் தேவனுக்கு அடியானவள் என்பது.தேவடியாள் என்றால் தவறானவள் என்று அர்த்தப்படுத்தியது சமூகந்தான்..புனிதமாக இருத்தல் என்பது வேறு புனிதப்படுத்தல் என்பது வேறு.வரலாறுகளில் பொதுவெளித்தன்மையுடன் உண்மைகள் சொல்லப்படுவதில்லை. காலத்திற்கு காலம் சம்பவங்கள் பற்றிய அறிதல் வேறுபடுகின்றன.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அன்புடன் திரு.கணேசன்நீங்கள் பதிவு செய்த இணையத்தளத்தில் கூறியிருப்பவையே உண்மை. வைரமுத்துவின் சாதிதான் பிரச்சினை.வைரமுத்து பகிரங்க மன்னிப்புக் கெட்க வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு ஆய்வு அதை அவர் வாசித்தார்.அறிவுயீவிகள் இதை ஒரு ஆய்வாகத்தான் பார்ப்பார்கள். மத வெறியர்கள் இதை வெறித்தனமாக நோக்குவார்கள்.உண்மையில் மதம் என்ற சொல்லை பயன்படுத்தவே கூடாது. மதம் பிடித்த யானைக்கு ஒப்பானதே இந்த வெறியர்களின் செயல்பாடு.வைசமயம் என்பதே மிகச் சிறந்த சொல். அந்தச் சமயம் வாழ்க்கைக்கான வழிகளைச் சொல்லியிருக்கிறது.எங்களுக்குச் சோடாபோத்தல் வீசத் தெரியும் கல் வீசத் தெரியும் என்று சொன்ன யீயார் என்ற சாமியாரதான் பொதுவௌியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.இவர் ஒரு துறவி என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது.இவர் ஒரு பயங்கரவாதி காவி உடுத்து நாமம் போட்ட பயங்கரவாதி.பல பெரியார்கள் இப்பொழுது தமிழகத்திற்கு தேவையாக இருக்கின்றது.
On Thursday, February 1, 2018 at 2:14:56 AM UTC-8, tamilstorywriters wrote:பல பெரியார்கள் இப்பொழுது தமிழகத்திற்கு தேவையாக இருக்கின்றது.கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது போல
(1946 ஜூன் மாதத்திய திருவேணி பத்திரிகையில் வெளிவந்த பார்த்த சாரதியின் ஆண்டாளின் காதல் என்னும் கட்டுரையை படித்த பிறகு திரு.ராஜ கோபாலச்சாரியார் கீழ்க்கண்டவற்றை ஒரு கடிதமாக எங்களுக்கு எழுதி அனுப் பினார். திரு.ராஜாஜி அவர்கள் அளித்த விளக்கம் பரவலாக அறியப்படாமல் இருந்ததால் அவர்களுடைய அன்பான அனுமதியின் பேரில் அதனை நாங்கள் வெளியிடுகிறோம் - இணை ஆசிரியர்)
ஆண்டாள் உண்மையிலேயே பெரி யாழ்வாரால் வளர்க்கப்பட்ட மகள் அல்ல. அது அவரது கவிதை மனதினால் உரு வாக்கப்பட்ட ஒரு பாத்திரமாகும். தனது கற்பனையில் ஆன இந்தக் குழந்தை பேசுவது போன்ற பாடல்களை அவர் எழுதினார் - பக்திப் பாடல்களின் வழக்க மான பாணியை மாற்றிக்கொண்ட பெரியாழ்வார், காதல் நோய்ப்பட்ட ஒரு பெண்ணின் தாபத்தினை மத அனுபவங் களாக வெளிப்படுத்தினார்.
காதலால் துன்பப்படும் ஒரு பெண்ணின் மொழியிலேயே பெரி யாழ்வார் பேசுவது என்பது நாம் அனை வரும் நன்றாக அறிந்த ஒரு தந்திரம் தான். தனது மனதுக்கு உகந்த மணாளன் ஆன எம்பெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மகளையே அவர் கற்பனையில் உருவாக்கிவிட்டார். ஞானம் பெற்ற இம்மனிதர் மீது வீழ்ந்த தெய்வத்தின் கருணையையே தான் கண்டெடுத்து பாசத்துடனும் அன்புடனும் வளர்த்த மகளாக பாவித்தார்.
தங்களின் முதல் அனுபவத்தில் பொதுவாக மக்கள் இருப்பது போலவே அவளும் முதலில் வெட்கம் கொண் டவளாகவும் ரகசியம் பெறுபவளாகவும் இருந்தாள். பெருமாளுக்கான மாலையை ரகசியமாகத் தான் போட்டுக்கொண்டு அழகு பார்த்த கதை இதுதான். சமூகப்பணியில் ரகசி யம் காப்பதை உலகம் ஒப்புக்கொள்வ தில்லை.
எம்பெருமானையே மணந்து கொள்வது என்பது ஆண்டாளின் விருப் பம். ஞானம் பெற்று ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப் படுவதைவிட ஆண் டவன் மேல் பக்தி உணர்வில் மூழ்கி கிடப்பதையே அனைத்து பக்தர்களும் விரும்புவார்கள் .
ஆண்டாள் இறைவனை அடைந்த போது ஏற்பட்ட துன்பம் இதுதான். ஒருவர் சமாதிநிலையை அடையும் போது தன்னுடைய தனித்தன்மை யையும் ஆழ்ந்த மகிழ்ச்சியையும் இழந்து விடுகிறார். இறைவனிடம் ஒருவரை எடுத்துச்செல்லும் உள்ளுறை கருணைக்கு எதிராக நுணுக்கமான கல்வியாளர்கள் போராடுகின்றனர். ஆண்டாளையே பிந்தையவராக செய்து கொண்ட பெரியாழ்வார் ஆண்டாளின் சந்தேகங்களையும் துயரங்களையும் தந்தையான தனக்கு அடையாளமாக ஆக்கிக் கொள்கிறார்.
இவ்வாறு ஆண்டாள் இயற்றியது என்று கருதப்படும் இலக்கியம் பெரி யாழ்வாரின் ஓர் அத்தியாயமாக இருக்கக்கூடும். மற்ற துறவிகளின் பக்திப் பாடல்களில் வரும் காதல் கதைகளைப் போன்றதே இந்த அத்தியாயமும்.
ஆனால் பாரம்பரியமான ஒருதனி நபராகவும் ஒரு துறவியாகவும் கருதப் படும் அளவுக்கு ஆண்டாளின் கதை மிகுந்த பாதிப்பும் புகழ் பெற்றதாகவும் ஆகிவிட்டது - ஒரு கவிதையின் கதாபாத்திரம் ஒரு தனிக் கதையாகவே ஆகிவிட்டது.
இக்காலமாக இருந்து இருந்தால் அது கட்டுக்கதை என்று ஒதுக்கப்பட்டு இருக்கும். ஒரு கூடுதல் துறவியாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மிகுந்த பக்தி கொண்டவராக தன்னையும் தன் மகளையும் பெரியாழ்வார் ஆக்கிக் கொண்டார்.
முகநூலிலிருந்து:
கிருஷ்ணன் டி.கே.பாலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.
புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?
4 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:59 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?
புனைவுப்பெயர் சரியா?
4 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:47 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது: