Fwd: தமிழ் இலக்கணம்

32 views
Skip to first unread message

yesu rajan

unread,
Jan 9, 2016, 2:30:59 AM1/9/16
to mintamil



தமிழ் நமது தாய்மொழிதான் ஆனால் எழுதும் போதும் பேசும் போது நாம் செய்யும் தவறுகள் எத்தனை எத்தனை

நான் என்ன சொன்னேன்

ஆகவே கண்ட இடத்திலெல்லாம் சுட்டு இங்கே போடப்போகிறேன்
சொந்த சரக்கு இல்லை (அதனால இது இந்த இடத்தில் சுட்டதுன்னு போட்டாலும் போடுவேன் இல்லைன்னாலும் கோவிச்சுக்காதீங்க)

ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க

இதை ஆரம்பிக்கிறேன்

எல்லாம் வல்ல ஏசுகிறித்து, சிவன் , அல்லா மூவரும் துணை வரவும்

பதிடெட்டாம் படி கருப்பு துணையில்

ஆரம்பிக்கிறேன்

உயிரெழுத்துகள் 12 அவை:

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ


உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.


குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ

நெடில்
நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ

yesu rajan

unread,
Jan 9, 2016, 2:32:57 AM1/9/16
to பண்புடன், mintamil
மெய்யெழுத்துகள் 18 அவை:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்


மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:

வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்

yesu rajan

unread,
Jan 9, 2016, 2:52:38 AM1/9/16
to பண்புடன், mintamil

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்

எடுத்துக்காட்டு:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.



எடுத்துக்காட்டு:
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ

ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ


2016-01-09 13:10 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//நான் எதும் சொல்லல ஐயப்பன் சார்....//

what is this why mentions that gentle man name in between he will get angry

2016-01-09 13:05 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
நான் எதும் சொல்லல ஐயப்பன் சார்....


2016-01-09 10:33 GMT+03:00 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
எழுப்பப்படுவதால் எழுத்து


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com


yesu rajan

unread,
Jan 9, 2016, 2:56:49 AM1/9/16
to பண்புடன், mintamil
என்னமோ தமிழ் இலக்கணம் எல்லாம் எடுத்து போடுகிறாரே இவரு பெரிய வித்துவானோ வென்றெல்லாம் நினைத்து கொண்டு விடாதீர்கள்

நானே தெரிஞ்சிக்கித்தான் போடுகிறேன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2016, 3:18:57 AM1/9/16
to mintamil
வணக்கம் ஐயா.
பள்ளியில் படிக்கும் காலமெல்லாம் கணிதமே என்றிருந்து விட்டேன்.  தங்களது இந்த இழையின் வழியாகத் தமிழிலக்கணம் தொடர்ந்து படித்து வருவேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

yesu rajan

unread,
Jan 9, 2016, 3:25:20 AM1/9/16
to mintamil
//அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது, பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகப் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன், பல்கலைக்கழகத்தில் 1999ம் ஆண்டு தேர்வுப் பிரிவில் பணியாற்றி வந்தபோது திசை தெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர்“, “குறலிலும் சோதிடம்என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன். அக்கட்டுரைகளை அப்போது காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முதவராகப் பணியாற்றி வந்த முருகசாமி ஐயா அவர்களிடம் காண்பித்தேன். அவர்கள் என்னைப்பெரிதும் உற்சாகப் படுத்தி அவற்றை இதழ்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் வள்ளுவரும் வாஸ்துவும்என்ற எனது கட்டுரை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், முதன் முதலாகத் தினபூமி ஞாயிறு வார இதழில் வெளியாகியது. கல்வியாளர்கள் மத்தியில் அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திருக்குறளின் அதிகார அமைப்பு முறைக்கு யாரும் மறுக்கமுடியாத அளவிற்கு விளக்கம் அளித்ததற்காக அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியவர்களுள் முனைவர் இரா. பாலசுப்பிரமணியன் ஆவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர் என்னிடம் ஒருமுறை நீங்கள் கட்டுரைகள் எழுதினால் மட்டும் சிறப்புடையது ஆகாது, கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்என்று அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்முதுகலை (M.A. தமிழ்) பயின்றேன்.//

அய்யா மன்னிக்கவும் இது உங்களது பயோடேட்டவாக இருந்தால் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று அர்த்தம்

இது எதோ என்னை போன்ற தெரியாதவர்கள் சுயமாக படித்து கொள்வதற்கு எழுதுவது

தேமொழி

unread,
Jan 9, 2016, 3:35:21 AM1/9/16
to மின்தமிழ்
அவரிடம் யாப்பிலக்கணம் கேட்டுப்பாருங்கள்.. பிய்த்து உதறுவார்.  

சும்மா... உங்களுக்கு ஊக்கமூட்டுவதற்காக எழுதியிருக்கிறார் (என்பது எனது எண்ணம்)

..... தேமொழி


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2016, 3:35:47 AM1/9/16
to mintamil
வணக்கம் ஐயா.

2016-01-09 13:55 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது, பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகப் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன், பல்கலைக்கழகத்தில் 1999ம் ஆண்டு தேர்வுப் பிரிவில் பணியாற்றி வந்தபோது திசை தெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர்“, “குறலிலும் சோதிடம்என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன். அக்கட்டுரைகளை அப்போது காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முதவராகப் பணியாற்றி வந்த முருகசாமி ஐயா அவர்களிடம் காண்பித்தேன். அவர்கள் என்னைப்பெரிதும் உற்சாகப் படுத்தி அவற்றை இதழ்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் வள்ளுவரும் வாஸ்துவும்என்ற எனது கட்டுரை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், முதன் முதலாகத் தினபூமி ஞாயிறு வார இதழில் வெளியாகியது. கல்வியாளர்கள் மத்தியில் அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திருக்குறளின் அதிகார அமைப்பு முறைக்கு யாரும் மறுக்கமுடியாத அளவிற்கு விளக்கம் அளித்ததற்காக அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியவர்களுள் முனைவர் இரா. பாலசுப்பிரமணியன் ஆவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர் என்னிடம் ஒருமுறை நீங்கள் கட்டுரைகள் எழுதினால் மட்டும் சிறப்புடையது ஆகாது, கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்என்று அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்முதுகலை (M.A. தமிழ்) பயின்றேன்.//
இது நானேதான், நானிற்றி வேறுயாரும் இல்லை. 


அய்யா மன்னிக்கவும் இது உங்களது பயோடேட்டவாக இருந்தால் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று அர்த்தம்
தாங்கள் சொல்வது கணிதத்திற்கும் வானியலுக்கும் பொருந்தும் ஐயா.
M.A., M.Phil. தமிழ்த் தேர்வுகள் அனைத்தையும் தேர்வுநோக்கில் மட்டுமே படித்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றேன்.
அதன்பின்னர் திருப்பூவணப் புராணம், திருவாப்புடையார் புராணம், திருவிளையாடற் புராணம், காளையார்கோயில் புராணம், திருவாடாணைப் புராணம், சூரைமாநகர்ப் புராணம் இவற்றைக் கற்றேன்.
ஆனால் தமிழிலக்கணத்தை முழுமையாக இனிமேல்தான் கற்கவேண்டும்.  அதற்குத் தங்களது இந்த இழை உறுதுணையாக இருக்கும்.

தேமொழி

unread,
Jan 9, 2016, 3:39:43 AM1/9/16
to மின்தமிழ்
புளிமாங்காயும், புளிமாங்கனியும்
https://groups.google.com/d/msg/mintamil/opzQldUrQ0A/uhBfiwjnfoUJ

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2016, 3:45:00 AM1/9/16
to mintamil
வணக்கம்.

2016-01-09 14:09 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
புளிமாங்காயும், புளிமாங்கனியும்
https://groups.google.com/d/msg/mintamil/opzQldUrQ0A/uhBfiwjnfoUJ
ஆகா,
இதெல்லாம் பள்ளி இறுதித்தேர்வு வகுப்பில் படித்தவை.

Oru Arizonan

unread,
Jan 9, 2016, 2:44:15 PM1/9/16
to mintamil
நல்ல முயற்சி ஏசுராஜன் அவர்களே,

தொடருங்கள்.  இப்பொழுது பலருக்கும் நல்ல, எளிய தமிழில் பிழையின்றி எழுதவியலாமல் இருக்கிறது.  இதில் தமிழில் முதுநிலைக்கல்வி பயின்றவர்களும் அடங்குவார்கள். 

எனவே, தங்களது இம்முயற்சியைப் படித்தாவது, பிழையின்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக

அன்புடன்,
ஒரு அரிசோனன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

yesu rajan

unread,
Jan 11, 2016, 12:35:44 AM1/11/16
to mintamil, பண்புடன்
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

yesu rajan

unread,
Jan 11, 2016, 12:38:28 AM1/11/16
to mintamil, பண்புடன்
இந்த மாதிரி அளபெடை உபயோகித்து தற்போது கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஏனோ எழுதுவதில்லை


உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை

மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

"இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ"-நன்னூல்

எ.கா:
1 ஓஒதல் வேண்டும் - முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை
3 நல்ல படாஅ பறை - கடை


மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம்.


ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.


இதில் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன


குறில் , நெடில் இரண்டுதான் இருக்குன்னு நினைச்சிட்டு இருக்கிற நேரத்தில் நெடிலுக்கு பக்கத்தில் ஒரு குறில் போட்டும் உபயோகிக்கலாம் .

yesu rajan

unread,
Jan 11, 2016, 12:44:51 AM1/11/16
to mintamil, பண்புடன்
ஓசை குறையுமிடத்து ஒற்றெழுத்து சேர்த்து எழுதினால் ஒற்றளபெடை

----------------------------------------

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.

ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

"ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ" - நன்னூல்

எ.கா:
வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.

ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்


Reply all
Reply to author
Forward
0 new messages