கறிச்சோறு எனும் ஊன்சோற்று வகைகள்

270 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Oct 4, 2023, 7:54:58 AM10/4/23
to vallamai
பண்டைத் தமிழகத்தில் நெல்லரிசியை முதன்மைப் பண்டமாகக் கொண்டு சமைத்த உணவு வகைகளின் தொகுப்பில் அடுத்ததாக நான் காண்பது ஊன் சோற்றின் வகைகள். எந்தெந்த ஊனைச் சேர்த்துச் சோறு சமைத்தார்கள் என்பதை அடியொட்டி ஊன்சோறு பல வகைப்படுகிறது.  

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய குமட்டூர் கண்ணனார் அவனிடத்துத் தான் விரும்பி உண்டு மகிழ்ந்த கறிச்சோறு பற்றிப் பாடுகிறார். 
"மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு" (பதிற்றுப்பத்து-12) செம்மறிக் கறிச்சோறு தான். 

ஏனென்றால் 'மை ஊன்' என்பது செம்மறி ஆட்டுக் கறியைக் குறிப்பது. வெண்ணெல் அக்காலத்து நெல்வகை. 

நெல்லரிசியும் ஆட்டுக்கறியும் சேர்த்துச் சமைத்த விருந்து.

சக 

N. Ganesan

unread,
Oct 4, 2023, 8:03:03 AM10/4/23
to வல்லமை
ஊன் ‘meat', ஊண் ‘food' (< உள்- , also from the Drav. root, உண்டி, உணவு, உணா ...) Note ள்  retroflex in  உள்-  exists in uuTTu- verb, also in uNDi, uNaa, uNavu.

மையூன் = sheep meat = செம்மறி ஆட்டுக் கறி.
வாலூன் = goat meat  = வெள்ளாட்டுக் கறி. வேள்வி செய்யப் பயன்பட்ட ஆடு இது. எனவே, அஜ- = ஆடு, பிரமன்.
விடங்கர் = முதலை, பின் (சிவ) லிங்கம் ஆதற்போல.

NG

kanmani tamil

unread,
Oct 4, 2023, 9:01:47 AM10/4/23
to vallamai
ஓ! புதிய செய்தி. 
(தொடரும்)
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/7a1e6981-2fd4-4ad0-81e5-707815ded2b2n%40googlegroups.com.

சக்திவேலு கந்தசாமி

unread,
Oct 4, 2023, 9:52:47 AM10/4/23
to vall...@googlegroups.com
ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளை பகிர்ந்தளித்தமைக்கு நன்றி

kanmani tamil

unread,
Oct 4, 2023, 11:06:48 PM10/4/23
to vallamai
சிறு சோறாக்கும் கொண்டாட்டத்தில் செம்மறிக் கறிச்சோறு 

கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியைப் பாடுகிறார்.

 "ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்

குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்

முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்

தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,

ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;

பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;

பாடுநர் வஞ்சி பாடப், படையோர்

தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,

புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த

மலரா மாலைப் பந்துகண் டன்ன

ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்

செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;

வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற

அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்

காம இருவர் அல்லது, யாமத்துத்

தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,

ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி

வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப

நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே" புறம்.33


அவன் பாண்டியனின் ஆணைச் சக்கரம் செலுத்தும் நிலப்பரப்பில் நுழைந்து; நாடு பிடித்தான்.

குறுநில மன்னன் மாளிகையின் கதவைத் தகர்த்தவுடன் மேற்கொண்டு அழிவைத் தாங்க முடியாத சூழலில் பகை தவிர்த்து; அதற்கு அடையாளமாக உடனே மாளிகையின் முன் ஒரு செம்மறியை வெட்டிச் சோறு சமைத்துக் கொண்டாடி  அடிபணிவர். 

நெல் வேளாண்மை செய்யும் வேளாளர் எல்லாம் குறுநில மன்னர் என்றே அழைக்கப் பட்டனர். எந்தெந்த மன்னரை எல்லாம் அடிபணிய வைத்தானோ அந்தந்த மன்னனது மாடமாளிகையின் வாயிலில் செம்மறிக் கிடாய் வெட்டப்பட்டது. புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது. ஊன்சோறு சமைக்கப்பட்டது. ஏழு குறுநில மன்னரின் ஓரெயில் மாளிகைகளை அடிப்படுத்தினான். நெல் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டவர் குறுநில மன்னர் ஆதலால்; அக்கறிச்சோறு நெல்லரிசியினால் ஆக்கப்பட்டது என உறுதியாகக் கூற முடிகிறது. 

ஆட்டுக்கறிச் சோற்று உருண்டை 'புலராப் பச்சிலை இடையிட்டுக் கட்டிய' பூப்பந்து போன்றது என்ற உவமையைப் பெறுகிறது.

முல்லை என்ற குறிப்பு பாடலில் நேரடியாக இடம் பெறவில்லை. பழைய உரையாசிரியர் அப்பூப் பந்தை முல்லைப் பூப் பந்து என்கிறார். சாலப் பொருந்துகிறது. இன்றும் உறையூர் எனும் திருச்சியில் இருந்து தெற்கே திண்டுக்கல்லைச் தாண்டினால் சிலுக்குவார்பட்டியை (இப்போதைய toll gate) அடைந்தவுடன் மல்லிச்சரமும் முல்லைச்சரமும் வழிச்செல்லும் அத்தனை உந்துகளையும் மறித்து விலைபேசப்படும் காட்சியைக் காண்கிறோம். 

முல்லைப் பூவைக் கட்டும் போது; இன்னும் பசுமை அடையாத துளிர்களைச் சேர்த்துக் கட்டினால்... இடையிடையே அந்தத் துளிர்கள் எட்டிப் பார்க்க... அது மாந்தளிராகவும் இருக்கலாம்; பிற தளிர்களாகவும் இருக்கலாம். அது மாதிரி; வெண்மையான சோற்றுருண்டையில் இடையிடையே ஊன் எட்டிப் பார்க்க; உருட்டிப் பாணர்க்கு வழங்கினான்.

அந் நாடுகளை ஒட்டிய காடுகளில் இருந்த பாசறைகளில் பாணர் வந்து வஞ்சி பாடினர்.

தன் வெற்றிகளைச் சிறுசோற்று விழாக்களாகக் கொண்டாடினான் சோழன்.

பாட்டில் 'சிறு' என்ற சொல்லே இல்லை. பழையவுரைகாரர் 'சிறுசோறு, பெருஞ்சோறு என விழா வகை உண்மையின்...' என்று விளக்கி இருப்பதால் நாமும் இதைச் சிறுசோற்று விழா என்று சொல்லலாம். சிறிய அளவிலே விழா எடுத்துச் சமைத்தது சிறுசோறு எனக் கொள்ளலாம். 

செம்மறிக்கறிச் சோறு இன்னும் தொடரும்...

சக 

N. Ganesan

unread,
Oct 5, 2023, 2:23:47 AM10/5/23
to vall...@googlegroups.com
On Wed, Oct 4, 2023 at 10:06 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சிறு சோறாக்கும் கொண்டாட்டத்தில் செம்மறிக் கறிச்சோறு 

செம்மற்று - இச் சொல்லை வைத்து செம்மறிக் கறி எனச் சொல்லவியலாது.

செம்மற்று = செம்மை உடையது, தலைமையானது என்ற பொருள்
சங்க நூல்களிலும், பின்னரும் வருகிறது.

சோழன் நல்ல வெள்ளாட்டுக் கறி புலாவுச் சோறு அளித்தான்.
வடக்கே புலா(ல்) இருந்துள்ளது. புலாவு > Pulao, Pilaf என்றெல்லாம் ஆதல் காண்க.

------

வடமொழியில் அஜம் என்றால் வாலூன் தரும் வெள்யாடு. அஜ- > அசன் > அயன் (பிரமன்).
 அயன் 1000க் கணக்கான பாடல்களில் உண்டு

sheep vs. goat meats:
மைவிடை (செம்பிலிக் கிடாய்) தருவது மையூன். 
வால்விடை (வெள்ளாட்டுக் கிடாய்) தருவது வாலூன்.

kanmani tamil

unread,
Oct 5, 2023, 3:10:03 AM10/5/23
to vallamai
///ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளை பகிர்ந்தளித்தமைக்கு நன்றி/// சக்திவேலு ஐயா எழுதியது...

🙂🙂🙏🙏

சக 

kanmani tamil

unread,
Oct 5, 2023, 3:11:56 AM10/5/23
to vallamai
வருந்துகிறேன். 
"வாயின் மாடம் தொறும் மைவிடை வீழ்ப்ப" புறம்.33
(இது பாடலில் இறுதி அடிக்கு முந்தைய அடி. என் விரலில் எதிர்பாராத விதமாகச் சிறு நோவு காரணமாகத் துழாவி எடுத்து ஒட்டிய போது நேர்ந்த தவறு. ) என்ற அடி நான் ஒட்டிய பாடலில் விடுபட்டுள்ளது. அது செம்மறிக் கறிச்சோறு தான்.

சக 

N. Ganesan

unread,
Oct 5, 2023, 7:22:07 AM10/5/23
to vall...@googlegroups.com
On Thu, Oct 5, 2023 at 2:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வருந்துகிறேன். 
"வாயின் மாடம் தொறும் மைவிடை வீழ்ப்ப" புறம்.33
(இது பாடலில் இறுதி அடிக்கு முந்தைய அடி. என் விரலில் எதிர்பாராத விதமாகச் சிறு நோவு காரணமாகத் துழாவி எடுத்து ஒட்டிய போது நேர்ந்த தவறு. ) என்ற அடி நான் ஒட்டிய பாடலில் விடுபட்டுள்ளது. அது செம்மறிக் கறிச்சோறு தான்.

நன்றி. 🙏

kanmani tamil

unread,
Oct 6, 2023, 2:17:05 AM10/6/23
to vallamai
கபிலர் பாரியிடம் உண்ட செம்மறிக் கறிச் சோறு 
"... மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்" (புறம்.113)
எனப் பாரி இறந்த பின்னர் அவனது மகளிரை அழைத்துச் செல்லும் கபிலர் அவன் நாட்டில் உண்டு மகிழ்ந்ததை நினைவு கூர்கிறார். 

செம்மறிக் கிடாய்க் கறியோடு சமைத்த கொழுப்பு மிகுந்த ஊன்சோற்றைப் புகழ்கிறார். 

பழையவுரையாசிரியர்
"அட்டான்று ஆனா" எனும் தொடர்க்கு 'இடையறவின்றி' மீண்டும் மீண்டும் சமைக்க எனப் பொருள் கொள்கிறார். ஔவை சு.துரைசாமிப் பிள்ளை "ஆனாக் கொழுந்துவை ஊன்சோறு" எனச் சேர்த்து 'விருப்பம் அமையாத கொழுந்துவை' ஊன்சோறு எனப் பொருள் கொள்கிறார். 

பாரி கொடுத்த ஊன்சோற்றை உண்ண உண்ண விருப்பம் தீராதாம். இப்படி ரசித்து உண்ட கொழுந்துவை ஊன்சோறை... 'கொழுவிய துவையையும் ஊனையும் உடைய சோற்றை' எனப் பொருள் கூறித் துவை வேறு; ஊன் வேறு என இருவேறு பண்டங்களாகக் கொண்டு மயங்க வேண்டிய தேவை இல்லை. "கொழுந்துவை ஊன்" உம்மைத் தொகை இல்லை. 

"கொழுந்துவை ஊன்சோறு" = மிகுதியாக ஊன்கலந்த சோறு எனப் பொருள் கொள்ளும் போது அது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் கறிச்சோற்று நடைமுறையோடு ஒத்துச் செல்கிறது.
சக 
(தொடரும்)

N. Ganesan

unread,
Oct 6, 2023, 9:29:49 PM10/6/23
to vall...@googlegroups.com


On Wed, Oct 4, 2023 at 10:06 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>பாட்டில் 'சிறு' என்ற சொல்லே இல்லை. பழையவுரைகாரர் 
'சிறுசோறு, பெருஞ்சோறு என விழா வகை உண்மையின்...' 
என்று விளக்கி இருப்பதால் நாமும் இதைச் சிறுசோற்று விழா 
என்று சொல்லலாம். சிறிய அளவிலே விழா எடுத்துச் சமைத்தது 
சிறுசோறு எனக் கொள்ளலாம். 
>

ஆம். இது சிறுசோறு தான். வாலூன், மையூன், வாடூன் - எனக் குடும்பத்தார் சமைத்து உண்ணும் சோற்றையே, வருவிருந்துக்கும் வழங்கி இன்புற்று மகிழ்வது வழக்கமாக இருந்துள்ளது. சிறுசோறு, சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு ஆக்கி விளையாடுதலுக்கும, மேலும் இதுபோல் விருந்தினருக்கு அளிப்பதற்கும் வருகிறது.

மங்கலமான உணவு எல்லாமே சிறுசோறு தான்.

---------------

பெரும்பயணம்: மகாப்பிரஸ்தானம் makā-p-pirastāṉam , n. < mahā-prasthāna. 1. The great journey northward, made with the intention of ending one's days; வடதிசை நோக்கிச் செல்லும் மீளாப் பெரும்பயணம். மகாப்பிரஸ்தான பருவம். 2. (Jaina.) The great renunciation of Arhat, one of pañca-kalyāṇam, q.v.; அருகக்கடவுளின் பஞ்சகல்யாணத் தொன்றாகிய பெருந்துறவு. (திருநூற். 4, உரை.)

https://ta.wikisource.org/wiki/பக்கம்:வாழும்_கவிஞர்கள்.pdf/212 வேழவேந்தன் பாட்டில் ‘பெரும்பயணம்’ என ஆள்கிறார். மங்கல நிகழ்ச்சி அன்று.

பெருஞ்சோறு - பிண்டம் மேய பெருஞ்சோறு என்பது தொல்காப்பியம். எனவே, போருக்குச் செல்பவருக்கு மன்னன் பெருஞ்சோறு அளிப்பான். போரில் இருந்து திரும்பலாம், இறக்கலாம். அல்லது உடல் அங்கங்கள் சிதையலாம். அப்போது ஏண்ட்டி-பயாட்டிக்ஸ் எல்லாம் இல்லை. எனவே, Gangrene, sceptic, ... வலி, சாவு வரும். அந்நிலையில் தலையை அரிந்து போர்த் தெய்வம் கொற்றவைக்கு அளிப்பர். “மழுவாள் நெடியோன்” சாவுக்கு இறையான வருணனுக்கு தெற்கு நோக்கித் தலையில்லாச் சிலைகள் அமைத்தனர். தருப்பண நாளன்று மரத்தில் விடங்கர் சிறப்ம் வைத்து அலங்கரித்திருக்கலாம். அவன் முன்னர் இடு காடு, பதுக்கைகள் மெகாலித்திக் காலத்தில். ஆக, முன்னோர் வழிபாடு: பெருஞ்சோறு அளித்து நடந்துள்ளது. பாண்டவர், பாண்டியர் ஒரே மூலம் என்றும் பாணிநியின் மஹாபாஷ்ய வியாக்கியானத்தில் பதஞ்சலி குறிப்பிடுகிறார். பாண்டியனைப் பஞ்சவன் என்பது மரபு. அவன் மகாபாரதப் போரில் இறந்தோருக்கு பெருஞ்சோறு படையல் ஆண்டுதோறும் நடத்தியிருக்கவேண்டும். “பெருஞ்சோற்று உதியன்” என்றே பெயர் பெற்றான். மணிமேகலையும் துறவிப் பாத்திரத்தில் பெருஞ்சோற்று அமலை என்கிறது. 

சங்க இலக்கியத்தில் கலியாணத்திற்கு முதல் தொடக்கமாக, முன்னோருக்குப் “பெருஞ்சோறு”
படைத்து வழிபட்டபின்னர் தான் மற்ற சீர்கள் தொடங்கியுள்ளன. கொற்றவை வழிபாடு போர்த்தெய்வம். இரண்டு பாட்டைக் கூர்ந்து படித்தால் “பெருஞ்சோறு” முன்னோரான புரையோர்ப் பேணல் என்பது விளங்கும்.
துறவிகள் (பிக்குணி மணிமேகலை), முன்னோர் (புரையோர்) அளிப்பது பெருஞ்சோறு. 

பிற்காலத்தில், பெருஞ்சோறு ப்ர-ஸாதம் என மொழிபெயர்க்கப்பட்டதாய்த் தோன்றுகிறது. சுண்டல், பொங்கல் என எது கொடுத்தாலும் பிரசாதம் என ஆகிவிட்டது.

நா. கணேசன்


>
>
> On Wed, 4 Oct 2023, 6:31 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
>>
>> ஓ! புதிய செய்தி.
>> (தொடரும்)
>> சக
>>
>> On Wed, 4 Oct 2023, 5:33 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
>>>
>>> ஊன் ‘meat', ஊண் ‘food' (< உள்- , also from the Drav. root, உண்டி, உணவு, உணா ...) Note ள்  retroflex in  உள்-  exists in uuTTu- verb, also in uNDi, uNaa, uNavu.
>>>
>>> மையூன் = sheep meat = செம்மறி ஆட்டுக் கறி.
>>> வாலூன் = goat meat  = வெள்ளாட்டுக் கறி. வேள்வி செய்யப் பயன்பட்ட ஆடு இது. எனவே, அஜ- = ஆடு, பிரமன்.
>>> விடங்கர் = முதலை, பின் (சிவ) லிங்கம் ஆதற்போல.
>>>
>>> NG
>>>
>>> On Wednesday, October 4, 2023 at 6:54:58 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
>>>
>>> பண்டைத் தமிழகத்தில் நெல்லரிசியை முதன்மைப் பண்டமாகக் கொண்டு சமைத்த உணவு வகைகளின் தொகுப்பில் அடுத்ததாக நான் காண்பது ஊன் சோற்றின் வகைகள். எந்தெந்த ஊனைச் சேர்த்துச் சோறு சமைத்தார்கள் என்பதை அடியொட்டி ஊன்சோறு பல வகைப்படுகிறது.  
>>>
>>> இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய குமட்டூர் கண்ணனார் அவனிடத்துத் தான் விரும்பி உண்டு மகிழ்ந்த கறிச்சோறு பற்றிப் பாடுகிறார்.
>>> "மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு" (பதிற்றுப்பத்து-12) செம்மறிக் கறிச்சோறு தான்.
>>>
>>> ஏனென்றால் 'மை ஊன்' என்பது செம்மறி ஆட்டுக் கறியைக் குறிப்பது. வெண்ணெல் அக்காலத்து நெல்வகை.
>>>
>>> நெல்லரிசியும் ஆட்டுக்கறியும் சேர்த்துச் சமைத்த விருந்து.
>>>
>>> சக
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/7a1e6981-2fd4-4ad0-81e5-707815ded2b2n%40googlegroups.com.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 6, 2023, 9:55:51 PM10/6/23
to vall...@googlegroups.com
பறம்பு மலையில் பாரி வள்ளல் வாழ்ந்த காலத்தில் இட்ட சோறும் சிறுசோறு தான்.
இப்பாட்டிலும் “சிறு” சோறு என வரவில்லை.

மட்டு வாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே;

வேந்தன் அரசு

unread,
Oct 7, 2023, 1:42:11 AM10/7/23
to vall...@googlegroups.com
<காம இருவர் அல்லது, யாமத்துத்

தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,

>

Lovers only park

N. Ganesan

unread,
Oct 7, 2023, 6:55:26 AM10/7/23
to vall...@googlegroups.com
On Sat, Oct 7, 2023 at 12:42 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<காம இருவர் அல்லது, யாமத்துத்

தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,

>

இங்கே, ’பிண்டம் மேய பெருஞ்சோறு’ - போருக்குச் செல்லல், பிண்டம் கொடுத்தல், முன்னோர் (தென்புலத்தார்)ப் பேணல் ... எல்லாம் இல்லை. “பெருஞ்சோற்று” விழவு (அ) வேள்வி அன்று. எனவே, இது சிறுசோற்று விழவு என்கிறார் பழைய உரைகாரர். https://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=33&file=l128100l
”பாண்கடும் பருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ  கொண்ட  விழவினும்  பல  செம்மற்றெனக்  கூட்டுக.  விழ  வென்பது  சிறுசோற்று  விழவினை; வேள்வி யென்றுரைப்பினுமமையும்.”
----------------


சிறுசோறு, பெருஞ்சோறு இரணடும் அளித்தவன் அதியமான். ஔவை சொல்கிறார்:
     சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
     பெரிய கள் பெறினே,
    யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
    சிறுசோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
    பெருஞ்சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!               5

---------------

நான் நன்கறிந்த வித்துவான் மு. சண்முகம்பிள்ளையவர்கள் நூலிலும் காண்கிறோம்:

வாயில்‌ மாடந்தொறும்‌ மை விடை வீழ்ப்ப,, ம்‌ 
நீ ஆங்குக்‌ கொண்ட விழவினும்‌ பலவே' (புறம்‌. 33:10-22) 

இப்பாடலில்‌ குறிக்கும்‌ விழவைச்‌ 'சிறுசோற்று விழவு' எனக்‌ 
குறிக்கின்றார்‌. பழைய உரைகாரர்‌. சிறுசோறு போல மன்னனது 
கோநகரில்‌ அவனது பெருங்கோயிலில்‌ நிகழ்ந்த பெருஞ்சோற்று 
விழா நிகழ்ச்சியைப்‌ பின்வரும்‌ புறப்பாட்டுப்‌ பகுதியில்‌ 
காணலாம்‌. 

"அந்தோ எந்தை அடையாப்‌ பேர்‌ இல்‌; 
'வண்டுபடு நறவின்‌ தண்டா மண்டையொடு 
வரையாப்‌ பெருஞ்சோற்று முரிவாய்‌ முற்றம்‌, 
வெற்று யாற்று அம்பின்‌ எற்று? அற்று ஆகக்‌ 
கண்டெனென்‌ மன்ற; சோர்க, என்‌ கண்ணே! (புறம்‌. 261:1-5) 

ஒரு மன்னன்‌ இறந்துபட அவனது பெருஞ்சோறு வழங்கிய 
கோயில்‌ முற்றம்‌ பாழ்பட்டுவிட்டதை நினைந்து வருந்திப்‌ 
பேசுகிறார்‌ ஆவூர்‌ மூலங்கிழார்‌. ஔவையார்‌ அதியமான்‌ 
இறந்தபோது பாடிய கையறுநிலைப்‌ பாடலில்‌ சிறுசோறு,
பெருஞ்சோறு இரண்டையும்‌ குறித்ததோடு அவன்‌ வீரர்‌ 
முதலியோருக்குக்‌ கள்‌ வழங்கிமையும்‌ பேசுகிறார்‌. 

பதிற்றுப்பத்து 30 = பெருஞ்சோற்று வருணனை:
https://archive.org/details/sanga-thamizhar-vazhipaadum-sadangugalum-shanmugam-pillai/page/126/mode/2up?q=பெருஞ்சோறு
NG

 

Lovers only park
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 7, 2023, 9:26:39 AM10/7/23
to vallamai
///காம இருவர் அல்லது, யாமத்துத்

தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,/// வேந்தர் ஐயா சுட்டிக் காட்டியது  ...

இங்கு குறுநில மன்னரின் அடர்ந்த தோட்டத்தைச் சுட்டியதாகத் தான் கொள்கிறேன் ஐயா. 

அவர்கள் குளத்துப் பாசனத்தின் மூலம் தான் நெற்பயிரை விளைவிக்கின்றனர். ஆனால்...

அவரது மாளிகையைச் சூழ்ந்த தோட்டம் இங்கே பேசப்படுகிறது. யாமத்தில் தனியாக யாரும் செல்ல அஞ்சக் கூடிய செறிவான தோட்டம். பூக்கள் உதிரப் பூம்பள்ளி சூழ்ந்த மாளிகை. அல்லிக்கூத்து ஆடப் புனைந்த பாவை இணை தவிர யாரும் அச்சம் கொள்ளக் கூடிய சூழல். அத்தகைய மாளிகையின் கதவை யானையால் சிதைத்துப்; புலிச்சின்னம் பொறித்து; கிடாவெட்டும் நடக்கிறது. 

சக

>

kanmani tamil

unread,
Oct 8, 2023, 5:27:00 AM10/8/23
to vallamai
2.வெள்ளாட்டங்கறிச் சோறு 

மலையில் நெல் விளைவித்த கொண்கானத்து மக்கள் சமைத்தது வெள்ளாட்டு ஊனைப் 'பொடி'அரிசியோடு சேர்த்து நெய்பெய்து அட்ட வெள்ளாட்டங் கறிச்சோறு. 

"பொன் அறைந்தன்ன நுண்ணேர் அரிசி
வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை
தண்ணென் நுண்ணிழுது உள்ளீடாக" (மலைபடுகடாம் 440-443)

நன்னனை நாடிச் செல்லும் கூத்தர்க்கு மலைநாட்டு ஊர்களில் வேளாண் தொழிலில் ஈடுபடுவோர் சமைத்துக் கொடுத்த நெல்லரிசி பொன்னைப் பொடியாக்கியது போலச் சிறிதாக  இருந்ததாம். 

கெடும்பு என அழைக்கப்படும் 'கறுப்பு'ம் (வாணிபத் தமிழ்வழக்கு) குறுணையும் இல்லாத அரிசி. மேன்மையான அரிசியை நேர்த்தியான அரிசி என்கிறார் புலவர்.

'வெண்ணெறிந்து-' = வெள்ளாட்டை வெட்டி-

'தண்ணென் நுண்ணிழுது' = நெய் 
குளிர்ந்தவுடன் தொட மென்மையாகவும்; காண்பதற்குக் குறுமணல் போலவும் இருக்கும் நெய். அது நல்ல நெய்க்கு உரிய இலக்கணம். 

கறிச்சோறுக்கு உரிய மூன்று அடிப்படைப் பொருட்களின் தரத்தையும் ஒருசேரப் பாடி விட்டார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். 

இந்தக் கறிச்சோறு பார்க்க எப்படி இருந்தது என்றும் எடுத்துச் சொல்கிறார். 
'மாக்கண் அமலை' = சோற்றின் இடையிடையே வெள்ளாட்டின் ஊன் கருமையான கண் போன்று தோன்றியதாம். 

செம்மறிக்கறி சோற்றில் எந்த நிறத்தில் கிடக்கும் என உவமை மூலம் கோவூர் கிழார் விளக்கியதை முந்தைய பதிவில் கண்டோம். அது புதிதாகத் துளிர் விட்ட தளிரின் நிறம். 

வெள்ளாட்டுக்கறியோ சமைத்த பின்னர் இன்னும் கொஞ்சம் அடர்த்தியான கருமை சேர்ந்து இருக்கும். அதை 'மாக்கண் அமலை' என்ற சொற்றொடர் உணர்த்துகிறது. கட்புல உருக்காட்சிகளுள் ஒரு வகையான வண்ணப்புல உருக்காட்சி. 

சக 

N. Ganesan

unread,
Oct 8, 2023, 7:55:28 AM10/8/23
to vall...@googlegroups.com
வெண் (அ) வெண்ணு = வெண்ணெய் என்று உரைகாரர் கூறுவர்.
வெள்யாட்டுக்கு வெண்/வெண்ணு என எங்காவது தமிழ் இலக்கியம், அல்லது மக்கள் வழக்கில் உண்டா எனப் பார்க்கணும்.


Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 8, 2023, 8:49:11 AM10/8/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Sun, Oct 8, 2023 at 6:54 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
வெண் (அ) வெண்ணு = வெண்ணெய் என்று உரைகாரர் கூறுவர்.
வெள்யாட்டுக்கு வெண்/வெண்ணு என எங்காவது தமிழ் இலக்கியம், அல்லது மக்கள் வழக்கில் உண்டா எனப் பார்க்கணும்.

மை என்றால் செம்மறி (செம்பிலிக் கிடாய் என்போம்). அதுபோல், வெண்/வெண்ணு = வெள்ளாட்டின் ஒரு பெயர் என்பது பொருத்தமே.
நச்சர் என்ன சொல்லுகிறார் எனவும் பார்க்கணும். 

எறிதல் - நீங்கள் வெண் ‘வெண்யாடு’ எனக் கோடலுக்குப் பொருந்துகிறது:
எறிதல்  2. To hack, cut into pieces; வெட்டுதல். எறிந்து களம்படுத்த வேந்துவேள் (புறநா. 19, 12). 3. To chop, as mutton; அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2). 4. To shiver into pieces, smash; முறித்தல். கதவெறியாச் சிவந்துராஅய் (புறநா. 4, 10).

mutton biryani-யின் தூய தமிழ்ப்பெயர்: “மாக்கண் அமலை” எனலாம்.
மாக்கண் - தமிழர் உலகுக்குத் தந்த இரும்பு மெட்டலர்ஜியின் கலைச்சொல். தமிழிசைக் கருவிகளில் - முரசு, தண்ணுமை எனும் மிருதங்கம், தவில் போன்றவற்றில் பயன்படுவதை ஏராளமான சங்கப் பாடல்களில் காண்கிறோம். நறுமணம், ஸ்பைஸஸ், ... சேர்த்துச் செய்யும் மட்டன் பிரியாணி “மாக்கண் அமலை”. தண்ணுமைக்கும் மாக்கண் ஆற்றோரத்து கருமண்ணைச் சோறு, பிசின் கலந்து இன்றும் அப்புவது நடைமுறை. “மாக்கண்” இரும்புத் தொழிற்சொல் எவ்வாறு தமிழிசையை வர்ணிக்கும்போது சங்கச் சான்றோர் ஆள்கின்றனர் என விரிவாக எழுதித் தருவேன்.

இன்னொன்று: அம்- அம்மு- > அம்மி என்ற சொற்பிறப்பை விளக்கினேன். https://groups.google.com/g/vallamai/c/wJWaZD9Ay0E/m/uzkTqBGKAwAJ
கிடாய் வெட்டில், அம்மனுக்குப் பொலிசை (> பலி எனும் வடசொல்) போடும்போது
“கிடாய் துளுக்கிவிட்டது” என்ற பின்னரே பண்டாரம் வெட்டுவான். துளுக்கு- துலுக்கு என எழுதுகின்றனர். கடாத்துளுக்கு ஆயிரக்கணக்கில் கிராமதேவதைகளுக்கும், கல்கத்தா காளிக்கும் தினந்தோறும் நடக்கிறது, ராமகிருஷ்ண பரமஹம்சர் பிராமணர். காளிகோயில் உபாசகர்.
துள்- துளுக்குதல். இது துண்ணு-தல். இதன் தொழிற்பெயர் துண்ணி. இச்சொல் சில மாறுபாடுகளுடன், ஆண் உடல் அங்கங்களில் ஒன்றுக்கு தமிழிலும், பிற த்ராவிட பாஷைகளிலும் இருக்கிறது. துள்- > துண்- இதுபோல், வெள்- > வெண்- ‘வெள்ளாடு’. அம்மனுக்கு வெண்ணுத் துளுக்கு பூசாரி செய்வது கிராமதேவதை வழிபாடு. கடம்பன் என்னும் கடப்பமாலை அணிந்த வேலன் பூசாரி, திருமுருகில் முருகனுக்குப் பொலி (> பலி) போடுகிறான்,

மை - செம்மறி, வெண் - வெள்யாடு. நன்றி.

N. Ganesan

unread,
Oct 8, 2023, 2:39:55 PM10/8/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Sun, Oct 8, 2023 at 7:48 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sun, Oct 8, 2023 at 6:54 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
வெண் (அ) வெண்ணு = வெண்ணெய் என்று உரைகாரர் கூறுவர்.
வெள்யாட்டுக்கு வெண்/வெண்ணு என எங்காவது தமிழ் இலக்கியம், அல்லது மக்கள் வழக்கில் உண்டா எனப் பார்க்கணும்.

மை என்றால் செம்மறி (செம்பிலிக் கிடாய் என்போம்). அதுபோல், வெண்/வெண்ணு = வெள்ளாட்டின் ஒரு பெயர் என்பது பொருத்தமே.
நச்சர் என்ன சொல்லுகிறார் எனவும் பார்க்கணும். 

நச்சினார்க்கினியர் வெண் = வெள்ளை = வெள்ளாடு என்கிறார்:
அசையினிர் சேப்பின் - இளைப்பாறி அவ்விடத்தே சிலநாள் தங்கு வீராயின்,

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி வெண்ணெறிந்து இயற்றிய மா கண் அமலை - பொன்னை நறுக்கினாலொத்த நுண்ணிய ஒத்த அரிசியை வெள்ளையெறிந்தாக்கின கரிய இடத்தையுடைய சோற்றுத்தடியை,

தண்ணென் நுண் இழுது உள்ளீடாக அல்கலும் பெறுகுவிர் -தண்ணென்ற நுண்ணிய நெய்விழுதை உள்ளே இட்டுண்ணும்படி நாடோறும் பெறுகுவிர் ;

வெள்ளை  = வெள்ளாடு. துருவை வெள்ளையொடு விரைஇ (மலைபடு. 414).


எறிதல் - நீங்கள் வெண் ‘வெண்யாடு’ எனக் கோடலுக்குப் பொருந்துகிறது:
எறிதல்  2. To hack, cut into pieces; வெட்டுதல். எறிந்து களம்படுத்த வேந்துவேள் (புறநா. 19, 12). 3. To chop, as mutton; அறுத்தல். எறிக திற்றி (பதிற்றுப். 18, 2). 4. To shiver into pieces, smash; முறித்தல். கதவெறியாச் சிவந்துராஅய் (புறநா. 4, 10).

mutton biryani-யின் தூய தமிழ்ப்பெயர்: “மாக்கண் அமலை” எனலாம்.
மாக்கண் - தமிழர் உலகுக்குத் தந்த இரும்பு மெட்டலர்ஜியின் கலைச்சொல். தமிழிசைக் கருவிகளில் - முரசு, தண்ணுமை எனும் மிருதங்கம், தவில் போன்றவற்றில் பயன்படுவதை ஏராளமான சங்கப் பாடல்களில் காண்கிறோம். நறுமணம், ஸ்பைஸஸ், ... சேர்த்துச் செய்யும் மட்டன் பிரியாணி “மாக்கண் அமலை”. தண்ணுமைக்கும் மாக்கண் ஆற்றோரத்து கருமண்ணைச் சோறு, பிசின் கலந்து இன்றும் அப்புவது நடைமுறை. “மாக்கண்” இரும்புத் தொழிற்சொல் எவ்வாறு தமிழிசையை வர்ணிக்கும்போது சங்கச் சான்றோர் ஆள்கின்றனர் என விரிவாக எழுதித் தருவேன்.

இன்னொன்று: அம்- அம்மு- > அம்மி என்ற சொற்பிறப்பை விளக்கினேன். https://groups.google.com/g/vallamai/c/wJWaZD9Ay0E/m/uzkTqBGKAwAJ
கிடாய் வெட்டில், அம்மனுக்குப் பொலிசை (> பலி எனும் வடசொல்) போடும்போது
“கிடாய் துளுக்கிவிட்டது” என்ற பின்னரே பண்டாரம் வெட்டுவான். துளுக்கு- துலுக்கு என எழுதுகின்றனர். கடாத்துளுக்கு ஆயிரக்கணக்கில் கிராமதேவதைகளுக்கும், கல்கத்தா காளிக்கும் தினந்தோறும் நடக்கிறது, ராமகிருஷ்ண பரமஹம்சர் பிராமணர். காளிகோயில் உபாசகர்.
துள்- துளுக்குதல். இது துண்ணு-தல். இதன் தொழிற்பெயர் துண்ணி. இச்சொல் சில மாறுபாடுகளுடன், ஆண் உடல் அங்கங்களில் ஒன்றுக்கு தமிழிலும், பிற த்ராவிட பாஷைகளிலும், பிராகிருதத்திலும் இருக்கிறது. துள்- > துண்- இதுபோல், வெள்- > வெண்- ‘வெள்ளாடு’. அம்மனுக்கு வெண்ணுத் துளுக்கு பூசாரி செய்வது கிராமதேவதை வழிபாடு. கடம்பன் என்னும் கடப்பமாலை அணிந்த வேலன் பூசாரி, திருமுருகில் முருகனுக்குப் பொலி (> பலி) போடுகிறான்,

kanmani tamil

unread,
Oct 8, 2023, 2:50:27 PM10/8/23
to vallamai

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அசைவ விருந்தாக வெள்ளாட்டங் கறிச்சோறு அளித்தது பற்றி ஏற்கெனவே வேறொரு இழையில் பேசினோம். பார்க்க:

3. முயல்கறிச் சோறு 

வாட்டாற்று எழினியாதன் என்ற குறுநில மன்னன் விருந்திற்கு முயல்கறிச் சோறு அளித்தான்.

"குறுமுயலின் நிணம் பெய்தந்த 
நறுநெய்ய சோறு என்கோ" (புறம்-396) 
என அவனிடம் பெற்ற பரிசில்களின் பட்டியலில் இடம்பெற்ற பண்டங்களோடு சேர்த்துப் பாடி வியக்கிறார் மாங்குடி கிழார். 

ஊன்பொரியல் (கொழுந்தடிய சூடு), மட்டு (நறவு/ தேறல்/ கள்), திறந்த நெற்கூட்டில் விரும்பிய அளவு முகந்து கொள்ளும் உணவு என்ற வரிசையில் இடையில் சொல்லப்படுவது முயல்கறிச் சோறு. 
மணம் பொருந்திய நெய்யுடன் ஆக்கப்பட்டது என்ற குறிப்பு உள்ளமை கறிச்சோறைச் சமைக்க நெய்யின் தேவையை உணர்த்துகிறது. 'குறுமுயலின் நிணம்' என்று குறிப்பிட்டுச் சொல்வது அந்த ஊனின் மென்மையைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

சக 

kanmani tamil

unread,
Oct 9, 2023, 5:53:26 AM10/9/23
to vallamai
4. யானைக் கறிச்சோறு 

காட்டு யானையைப் புலி கொன்று தின்றது. பசியாறியதும் எஞ்சியதை விட்டுச் சென்றது. 

காட்டை வாழ்வாதாரமாகக்  கொண்ட மறவர்  நீண்ட இரும்புக் காழ்களைக் கொண்டு வந்து அவற்றில் முடிந்த மட்டும் அவ் யானைக் கறியை அறுத்துக் கோத்துத் தம் குடியிருப்பிற்கு எடுத்துச் சென்றனர். 

எஞ்சி இருந்த கறியை உப்பு விற்க அவ்வழியாகக் காட்டைக் கடந்த உமணர் கண்டனர்.

தாம் ஏற்றிய உலையில் சோற்றோடு  அக்கறியைச் சேர்த்துப் புழுக்கி (வேகவைத்து) உண்டனர்.


புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்    5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம்
அகம்.169
(தொடரும்)
சக 

வேந்தன் அரசு

unread,
Oct 10, 2023, 5:31:07 AM10/10/23
to vall...@googlegroups.com
தமிழன் சுவைக்காத ஊன் எதுவுமில்லைபோலும்.

திங்., 9 அக்., 2023, பிற்பகல் 3:23 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Oct 10, 2023, 6:51:10 AM10/10/23
to vallamai
ஆம் ஐயா. இன்னும் வருகிறது.. பன்றி, முள்ளம்பன்றி, மான், மீன் என...

அல்லிப்பாவை பற்றிய இன்னொரு சிந்தனை...

///Lovers only park/// வேந்தர் ஐயா 07.10.2023ல் எழுதியது...

///இங்கு குறுநில மன்னரின் அடர்ந்த தோட்டத்தைச் சுட்டியதாகத் தான் கொள்கிறேன் ஐயா. 

அவர்கள் குளத்துப் பாசனத்தின் மூலம் தான் நெற்பயிரை விளைவிக்கின்றனர். அவரது மாளிகையைச் சூழ்ந்த தோட்டம் இங்கே பேசப்படுகிறது. யாமத்தில் தனியாக யாரும் செல்ல அஞ்சக் கூடிய செறிவான தோட்டம். பூக்கள் உதிரப் பூம்பள்ளி சூழ்ந்த மாளிகை. அல்லிக்கூத்து ஆடப் புனைந்த பாவை இணை தவிர யாரும் அச்சம் கொள்ளக் கூடிய சூழல். அத்தகைய மாளிகையின் கதவை யானையால் சிதைத்துப்; புலிச்சின்னம் பொறித்து; கிடாவெட்டும் நடக்கிறது./// சக 07.10.'23 எழுதியது...

அல்லியம் என்று சிலப்பதிகாரம் பேசும் கூத்து வகை. மிகப் பழைய பொம்மைக் கூத்தாக இருக்க வேண்டும். 

எனக்கு விபரம் தெரிய கோயில் திருவிழா தொடர்பாக நடைபெறும் ஊர்வலங்களில் 'ஆலி' எனும் இரு பொம்மைகளுக்குள் (ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்- மனிதரின் இயல்பான உயரம்& பருமனை விடப் பெரிதாக...) மனிதர் நுழைந்து ஆடிக் கொண்டு வருவதைக் கண்டு இருக்கிறேன்.

உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்ற போது வாசலில் அது  போல் இரண்டு பொம்மைகள்; ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்; மிகுந்த அலங்காரத்துடன் கண்டேன்.

நான் இரண்டாவது முறை உடுப்பி சென்ற போதும் அப்பொம்மைகள் அங்கேயே இருந்தன. 

குறிப்பிட்ட பாடலில் இடம் பெறும் குறுநில மன்னர் தம் நாட்டுத் திருவிழாவில் அல்லியம் என்று அழைக்கப்பட்ட கூத்து வகையினை நடத்தியவராய் இருக்க; விழா முடிந்த பிறகு அவை மன்னனின் தோட்டத்தில் ஜோடியாக நிறுத்தி வைக்கப் பட்டு இருக்க; கோவூர் கிழார் அதை நேரில் பார்த்ததால்; யாமத்தில் யாரும் செல்ல அஞ்சும் அடர்ந்த தோட்டத்தில் அல்லிப் பாவைப் பொம்மைகள் தான் செல்லும் என்று எழுதி இருக்கிறார். 

அடுத்த ஆண்டின் திருவிழாவில் அவை மீண்டும் நேர்த்தியாகப் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் நடைபெறும். 

இதில் குறிப்பிடத் தக்க வரலாற்றுக் கூறும் உள்ளது. கடவுள் உருவ வழிபாடும் தொன்மக் கதைகளும் தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்திலேயே வழக்கத்தில் இருந்தன. வைணவம் தொடர்பாக நடைபெறும் அல்லிக் கூத்தை; பலராமனைக் குலதெய்வமாகக் கொண்ட வேளாளர் ஆகிய குறுநில மன்னர் போற்றிப் பின்பற்றியமைக்கு இப்பாடல் சான்று ஆகிறது.

இப்படிப்பட்ட வழக்கங்களைக் கிண்டலடிக்கும் தொகைப் பாடல்களும் உள்ளன. 

சக 


வேந்தன் அரசு

unread,
Oct 10, 2023, 9:55:57 AM10/10/23
to vall...@googlegroups.com
நன்றி அம்மை

செவ்., 10 அக்., 2023, பிற்பகல் 4:21 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Oct 11, 2023, 12:22:18 AM10/11/23
to vallamai
ஓய்மான் வில்லிஆதன் எனும் வேளிர்குலத் தோன்றல் அளித்த விருந்தில் பன்றியின் ஊனைப் பெய்து அட்ட சோறு பற்றி;
"குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் நல்விளர் 
நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா..." எனப் (புறம்.379) புறத்திணை நன்னாகனார் பாடுகிறார். 

குறுகிய கால்களை உடைய ஆண்பன்றியின் கொழுப்பு படர்ந்து வெள்ளையாகத் தோற்றம் தரும் கறியினைப் பெய்து அன்றைப் போதில் சூடாகச் சமைத்த சோறு ஆதலால் நாட்சோறு என அழைக்கப்பட்டது. 

கறிச்சோறு எல்லாமே அன்றாடம் சூடாகச் சமைக்கப்படுமே அன்றிப் பழஞ்சோறாக இருக்க வாய்ப்பே இல்லை. 

ஓய்மான் விருந்தாக அளித்தது அன்றாடம் சமைத்த கறிச்சோறு எனப் பாடி இருப்பது அவன் அளித்த விருந்தின் மேன்மையை மட்டும் இன்றி அவனது வளமான வாழ்க்கையைப் புகழ்வதாகவும் உளது.

சக 

kanmani tamil

unread,
Oct 12, 2023, 2:01:24 AM10/12/23
to vallamai
5. பன்றிக்கறிச் சோறு பற்றிய 11.10.'23 தேதியிட்ட பதிவு 

6. மீனூன் சோறு 
மீனூன் சோறு முள்நீக்கிய மீனின் வெண்தசையை நெல்லரிசியோடு சேர்த்துச் சமைத்தது ஆகும். நன்னன் சேய் நன்னனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஏற்ற உணவும் ஆகும். இதைக் கொண்கானத்துக் களமர் கூத்தருக்கு விருந்து ஆக்குவர். 

முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு… 

திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“

(மலை.465-467)

'அரி' என வெண்மையான அரிசி 

(=வெள்ளரி) பாடலில் குறிக்கப்படுகிறது. 

மீனிறைச்சியுடன் கலந்து சோறு சமைக்கும் வழக்கம் கம்போடியா தேசத்தில் இன்றும் உள்ளது. பிலிப்பைன் தீவுகளில் மீனிறைச்சி கலந்த lugaw எனும் தானிய உணவு உண்டு. சீன தேசத்தில் முள் நீக்கப்பட்ட மீனுடன் சேர்த்துச் சமைக்கும் நெல்லரிசி கஞ்சியாகக் குழந்தைகட்கு உரிய உணவாகிறது.

சக

kanmani tamil

unread,
Oct 13, 2023, 5:45:25 AM10/13/23
to vallamai
7. மல்லிகிழான் காரிஆதி அளித்த 
முள்ளம்பன்றிக் கறிச்சோறு

காரிஆதி முல்லைத் திணைமாந்தருள் தலைமை சான்றவன். அவனது வாழ்விடத்து நிலத்தில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன். தான் சார்ந்து இருந்த; தன்னை உழுவித்த தலைவனுக்காகக் கரத்தைப் போர் செய்தான் (புறம்.261); நெல் வேளாண்மையும் செய்தான். தனது குறும்பில் கிளைகள் சூழ வாழ்ந்தான். அவரது குடியிருப்பில் வீடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாகக்; கள்ளைக் கொடுத்து வாங்கும் அளவு அடுத்தடுத்து இருந்தன.

காரிஆதி தான் வாழுமட்டும் வரையாது விருந்தயர்ந்தான். அவனை உள்ளி வந்தோருள் ஆவூர் மூலங்கிழாரும் ஒருவர். 


"பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
15
இரும்பனங் குடையின் மிசையும்"
(புறம்.177)

மல்லிவளநாடு எனக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மல்லி;  சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியிலிருந்து பத்து மணித்துளிகளில் சென்று சேரக்கூடிய ஊர் ஆகும். அங்கிருந்து கால்மணி நேரத்தில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றிலும் பனங்காடுகள். 

பாடலில் காரிஆதி இரவலர்க்குப் பனங்குடையில் தான் விருந்து அளிக்கிறான். 

பாடல் செய்தி: மூங்கில் புதர்கள் நிறைந்த குடநாட்டு எயினர் வேட்டையாடிக் கொண்டு வந்த முள்ளம்பன்றியின் கொழுப்பு மிகுந்த புத்திறைச்சியை வைத்துக் கறிச்சோறு  இரவலர்க்குத் தயார் ஆகிறது. வெண்மையான அவ்வுணவு அன்றாடம் தயாரானதால் 'பசுவெள்ளமலை' என அடைமொழியோடு சிறப்பிக்கப் படுகிறது.

வேந்தரிடம் கண்கள் பூக்கக் காத்திருந்து பெறும் யானைப் பரிசிலைக் காட்டிலும்; காரியாதியின் முள்ளம்பன்றிக் கறிச்சோறு மேலானது என்று பாடிப் புகழ்கிறார் ஆவூர் மூலங்கிழார்.

சக 

kanmani tamil

unread,
Oct 14, 2023, 4:04:28 AM10/14/23
to vallamai
'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை. 

முன்னதாக இந்த இழையில் பேசிய ஏழுவகைக் கறிச்சோறு தான் நெல்லரிசியோடு சேர்த்துச் சமைக்கப் பட்டுள்ளன. 

உடும்பு, மான், (உப்புக்கண்டம்) ஆகிய ஊன் வகைகள் மூங்கிலரிசியோடும் புல்லரிசியோடும் சேர்த்துச் சமைக்கப்படுவதைக் காண்கிறோம். 

குறிஞ்சியிலும் முல்லையிலும் வேட்டையாடிப் பெற்ற ஊன் மூங்கிலரிசியோடு இணை சேர்ந்த வழிவகையைப் புரிந்து கொள்ள இயல்கிறது. 

(முற்றும்)
சக 


N. Ganesan

unread,
Oct 14, 2023, 5:41:43 PM10/14/23
to வல்லமை
On Saturday, October 14, 2023 at 3:04:28 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை. 

இடையில் /ச்/ ஒற்று மிகவில்லை.

இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை மலசர்கள் பிடித்து, வெள்ளைத் துண்டில் கட்டிக் கொணர்வர். அதை வறுத்து உண்பர். ஈசல் - ஈயல் என வழங்கி இருக்கிறது. அந்த ஊன் உண்டதும் சங்க நூல்களில் உள்ளது.

இன்னொரு ஊன் உணவும் உண்டு. அதைப் படையல் ஆக்கியும் தந்தனர். முன்பு பேசினோம். 

N. Ganesan

unread,
Oct 14, 2023, 5:46:12 PM10/14/23
to vall...@googlegroups.com
On Sat, Oct 14, 2023 at 4:41 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Saturday, October 14, 2023 at 3:04:28 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை. 

இடையில் /ச்/ ஒற்று மிகவில்லை.

இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை மலசர்கள் பிடித்து, வெள்ளைத் துண்டில் கட்டிக் கொணர்வர். அதை வறுத்து உண்பர். ஈசல் - ஈயல் என வழங்கி இருக்கிறது. அந்த ஊன் உண்டதும் சங்க நூல்களில் உள்ளது.

நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி - நற் 59/2
நெடும் செம் புற்றம் ஈயல் பகர - ஐங் 497/2
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த - அகம் 8/1
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் - அகம் 139/13
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு - அகம் 394/5
செம் புற்று ஈயல் போல - புறம் 51/10

இன்னொரு ஊன் உணவும் உண்டு. அதைப் படையல் ஆக்கியும் தந்தனர். முன்பு பேசினோம். 
 

முன்னதாக இந்த இழையில் பேசிய ஏழுவகைக் கறிச்சோறு தான் நெல்லரிசியோடு சேர்த்துச் சமைக்கப் பட்டுள்ளன. 

உடும்பு, மான், (உப்புக்கண்டம்) ஆகிய ஊன் வகைகள் மூங்கிலரிசியோடும் புல்லரிசியோடும் சேர்த்துச் சமைக்கப்படுவதைக் காண்கிறோம். 

குறிஞ்சியிலும் முல்லையிலும் வேட்டையாடிப் பெற்ற ஊன் மூங்கிலரிசியோடு இணை சேர்ந்த வழிவகையைப் புரிந்து கொள்ள இயல்கிறது. 

(முற்றும்)
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 14, 2023, 5:47:35 PM10/14/23
to vall...@googlegroups.com


On Saturday, October 14, 2023 at 3:04:28 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
'கறிசோறு' என்ற தொடரைக் கபிலர் தான் முதலில் கையாள்கிறார் (புறம்.14). அவரது பயன்பாட்டில் கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை. 

இடையில் /ச்/ ஒற்று மிகவில்லை.

இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை மலசர்கள் பிடித்து, வெள்ளைத் துண்டில் கட்டிக் கொணர்வர். அதை வறுத்து உண்பர். ஈசல் - ஈயல் என வழங்கி இருக்கிறது. அந்த ஊன் உண்டதும் சங்க நூல்களில் உள்ளது.

நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி - நற் 59/2
நெடும் செம் புற்றம் ஈயல் பகர - ஐங் 497/2
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த - அகம் 8
/1
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு - அகம் 394/5
செம் புற்று ஈயல் போல - புறம் 51/10


மூதாய் - உண்பதில்லை.

kanmani tamil

unread,
Oct 14, 2023, 8:34:33 PM10/14/23
to vallamai
கறியும் சோறும் எனப் பொருள் கொள்ளத்தக்க வகையில் உம்மைத் தொகையாகத் தான் வழங்குகிறது. இடையில் /ப்/ ஒற்று மிகவில்லை. 

///இடையில் /ச்/ ஒற்று மிகவில்லை.

இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை.../// Dr.Ganesan wrote at 3.11am

தவறைத் திருத்தியமைக்கு நன்றி முனைவர் கணேசன்... 

விடுபட்ட கருத்தைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகுந்த நன்றி. 

சக 


kanmani tamil

unread,
Nov 5, 2023, 1:26:18 AM11/5/23
to vallamai
ஆனால் ஈயல் பெய்து அட்ட இன்புளி வெம்சோற்றுக்கு இன்றைய நடைமுறையில் வலைத்தளக் காணொலி ஏதும் கிட்டவில்லை. 
எல்லோரும் ஈசலைச் சேகரித்து சுத்தப்படுத்தி வறுக்கிறார்கள்; அரிசி பருப்பும் வறுத்து நுணுக்கிச் சேர்த்து; சேமித்து உண்கிறார்கள். 

ஒரே ஒரு ஈசல் gravy தான் கிடைத்தது. 
அது நம் நூற்செய்தியோடு ஒத்தது அல்லவே.

யாருக்கேனும் ஈசலோடு சேர்த்துச் சமைத்த சுடுசோறு... புளிப்புச் சுவைக்காகத் தயிரோ அல்லது புளியோ சேர்த்தது... தெரிந்தால் பகிருங்கள். 

நன்றி 
சக 

kanmani tamil

unread,
Dec 25, 2023, 8:22:44 PM12/25/23
to vallamai
///இன்னொரு ஊன்சோறு. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், கரையான் புற்றுகளில் இருந்து ஈசலை மலசர்கள் பிடித்து, வெள்ளைத் துண்டில் கட்டிக் கொணர்வர். அதை வறுத்து உண்பர். ஈசல் - ஈயல் என வழங்கி இருக்கிறது./// Dr.Ganesan wrote on Oct 14th 

இக்கருத்து இந்த இழைக்கு உரியது அன்று.  இவ்இழை நெல்லரிசி ஊன்சோறுகளைத்  தொகுக்கும் நோக்கத்துடன் உருவானது. அதனால் மூங்கிலரிசி புல்லரிசி ஊன்சோறுகளைத் தவிர்த்தமை பற்றி ஏற்கெனவே கூறி உள்ளேன். 

குறிப்பிட்ட ஈயல் ஊன்சோறு வரகரிசி அவலைத் தலைப்பெய்து (main ingredient) ஆக்கும் உணவுப் பண்டம் ஆகும் என்பது பாடலை முழுமையாக நோக்கும் போது தெரிகிறது. இது குறித்து எதிர்வரும் காலங்களில் தனியிழை தொடங்கி எழுதலாம். 

ஈயலைத் தயிரில் பெய்து வரகரிசி அவலோடு சமைத்த சோற்றை நன்பலூர்ச் சிறுமேதாவியார் 'இன்புளி வெம்சோறு' என்று குறிப்பிடுகிறார். 
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு 5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த,

இங்கே இடம்பெறும் தயிர் ஆட்டுத் தயிர் ஆகும். 'சிறுதலைத் துரு' ஆட்டைக் குறிக்கிறது. அதன் பாலினின்று பெற்ற தயிர் பழுப்பு நிறம் உடையதாக இருந்தது. அதில் புன்செயில் விளைந்த வரகரிசியின் அவலை ஈசலோடு சேர்த்து அட்ட 'இன்புளி வெம்சோறு' என்கிறார் புலவர். ஆட்டுத்தயிரைப் பயன்படுத்திச் சமைத்த
ஈயல்வரகுச் சோற்றைச் சூடாகவே உண்பர் என்றும்; உண்ணும் போது சேதாவின் வெண்ணெய் சேர்த்தனர் என்றும் அறிகிறோம். 

இன்றைய வழக்கில் இவ்உணவுமுறை இருக்கிறதா என்பதும் கேள்விக்கு உரியதாக உள்ளது. 
புலனக் காணொலி ஏதும் இதுவரை கிட்டவில்லை. 
அறிந்தோர்/ தெரிந்தோர் யாரேனும் இருப்பின் குழுமத்தில் பகிரலாம்.

சக 

N. Ganesan

unread,
Dec 26, 2023, 10:05:17 PM12/26/23
to vall...@googlegroups.com
SK>இன்றைய வழக்கில் இவ்உணவுமுறை இருக்கிறதா
> என்பதும் கேள்விக்கு உரியதாக உள்ளது. 
> புலனக் காணொலி ஏதும் இதுவரை கிட்டவில்லை. 
> அறிந்தோர்/ தெரிந்தோர் யாரேனும் இருப்பின் குழுமத்தில் பகிரலாம்.

மலைவாசிகளிடம் புளித்த மோருடன் ஈசல் சமைக்கும் பழக்கம் இருக்கிறது.
அதற்கு ஒரு காரணமும் சொல்கின்றனர்.

NG


Reply all
Reply to author
Forward
0 new messages