சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani, 21st February 2021

84 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 22, 2021, 6:08:03 PM2/22/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani, 21st February 2021

உலகத் தாய்மொழி நாள் ஆகிய பிப்ரவரி 21, 2021 அன்று அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தலைவர், செயலர் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் பேரில், பேரா. செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் நா. கணேசன் (ஹூஸ்டன், அமெரிக்கா) எழுதி அனுப்பிய கட்டுரையைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஃபெட்னா பேரவைக் கடிதமும், நாங்கள் அனுப்பிய கட்டுரையும் வாசிக்கலாம். திருவள்ளுவர் திருநாள் எனத் தைத் திங்கள் பிறப்பு (பொங்கல்) அமைந்துவிட்டது. அதற்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாள் (தமிழ் வருடப் பிறப்பு) அமைதற்கான வேண்டுகோள்.
அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை வேண்டுகோள்:



 




























உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani

By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html
 

நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:

தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக

செ. வை. சண்முகம், நா. கணேசன்

தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.  திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.

உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.

தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில்  (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது  ’திங்கள்முன்னே  இக்கே சாரியை’  என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும்,  சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல,  27 நட்சத்திரப்  பெயர்களின்  கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருஷப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர்  திருநாள் என்றும் நின்று உதவும்.

செ. வை. சண்முகம்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

நா. கணேசன்                                                                                               

ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்கா      

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Feb 28, 2021, 5:39:29 AM2/28/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாளை அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (55 பெருநகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள்) விழா எடுப்பதும், அம்முயற்சியை முன்னெடுக்கும் என் பணிகளையும், பெட்னா (http://fetna.org ) தலைவர் கால்டுவெல் வேள்நம்பி மற்றும் ஆட்சிக்குழுவை வாழ்த்தி, சாகித்திய அகாதமிக் கவிஞர், ஈரோடு தமிழன்பன் நீண்ட, அழகிய கவிதை இயற்றியுள்ளார். வரும் தமிழ் ஆண்டுப் பிறப்பு தொல்காப்பியர் திருநாள் என, தைப் பிறப்பு (தை முதல்நாள், பொங்கல்) திருவள்ளுவர் திருநாள் என்றானது போல, பேரவை முயற்சியால் தமிழக அரசாங்கத்தைக் கேட்டுள்ளது. நம் இளைஞர்களுக்கு தமிழகத்திலும், வெளியே உலகம் எங்கும் தொல்காப்பியரைக் கொண்டாட, நினைவூட்டித் தொல்காப்பியம், திருக்குறள், தமிழ், மொழியியல், இலக்கியம், இந்திய வரலாறு, வருங்காலங்களில் தமிழ், திராவிட மொழிகளின் இருப்பு, வளர்ச்சி எனப் பல்வேறு செயல்களுக்குத் திருவள்ளுவர் திருநாள் (தை 1) + தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1, “ஆடு தலை ஆக” எனு சங்க இலக்கியம் கூறும் ஆண்டுப் பிறப்பு) மிக உதவும். அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம், முதன்முதலில் பேரா. தமிழண்ணல் தினமணியில் 2011-ம் ஆண்டில் தொல்காப்பியர் திருநாள் கொண்டாடவேண்டும் என்றும், அது சித்திரை முதல்நாளாக அமையலாம் என்றும் எழுதியிருந்தார்கள். 2021-ல், உலகத் தாய்மொழி நாளில், தினமணியில் தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை 1-ம் நாள் கொண்டாட வேண்டும் என அச்சான கட்டுரை வாசித்திருப்பீர்கள்,
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
Feb 28, 2021, 2:18:01 PM2/28/21
to kanmani tamil, vallamai, housto...@googlegroups.com

On Sun, Feb 28, 2021 at 6:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 
சக 

நனிநன்றி.
தினமணி, வாசகர் கருத்து, 28-2-2021

On Sun, 28 Feb 2021, 4:09 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாளை அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (55 பெருநகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள்) விழா எடுப்பதும், அம்முயற்சியை முன்னெடுக்கும் என் பணிகளையும், பெட்னா (http://fetna.org ) தலைவர் கால்டுவெல் வேள்நம்பி மற்றும் ஆட்சிக்குழுவை வாழ்த்தி, சாகித்திய அகாதமிக் கவிஞர், ஈரோடு தமிழன்பன் நீண்ட, அழகிய கவிதை இயற்றியுள்ளார். வரும் தமிழ் ஆண்டுப் பிறப்பு தொல்காப்பியர் திருநாள் என, தைப் பிறப்பு (தை முதல்நாள், பொங்கல்) திருவள்ளுவர் திருநாள் என்றானது போல, பேரவை முயற்சியால் தமிழக அரசாங்கத்தைக் கேட்டுள்ளது. நம் இளைஞர்களுக்கு தமிழகத்திலும், வெளியே உலகம் எங்கும் தொல்காப்பியரைக் கொண்டாட, நினைவூட்டித் தொல்காப்பியம், திருக்குறள், தமிழ், மொழியியல், இலக்கியம், இந்திய வரலாறு, வருங்காலங்களில் தமிழ், திராவிட மொழிகளின் இருப்பு, வளர்ச்சி எனப் பல்வேறு செயல்களுக்குத் திருவள்ளுவர் திருநாள் (தை 1) + தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1, “ஆடு தலை ஆக” எனு சங்க இலக்கியம் கூறும் ஆண்டுப் பிறப்பு) மிக உதவும். அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம், முதன்முதலில் பேரா. தமிழண்ணல் தினமணியில் 2011-ம் ஆண்டில் தொல்காப்பியர் திருநாள் கொண்டாடவேண்டும் என்றும், அது சித்திரை முதல்நாளாக அமையலாம் என்றும் எழுதியிருந்தார்கள். 2021-ல், உலகத் தாய்மொழி நாளில், தினமணியில் தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை 1-ம் நாள் கொண்டாட வேண்டும் என அச்சான கட்டுரை வாசித்திருப்பீர்கள்,
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

dinamani_article.png

N. Ganesan

unread,
Feb 28, 2021, 2:20:20 PM2/28/21
to Santhavasantham
On Sun, Feb 28, 2021 at 6:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 
சக 

நனிநன்றி.
 dinamani_comment.jpg

N. Ganesan

unread,
Mar 6, 2021, 10:46:25 AM3/6/21
to வல்லமை
On Sunday, February 28, 2021 at 1:20:20 PM UTC-6 N. Ganesan wrote:
On Sun, Feb 28, 2021 at 6:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 
சக 


திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம் (பெ.பு.) போன்ற வழிநூல்களுக்கு அடிப்படை சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத்தொகை. சுந்தரர் வழியில் காரைக்குடியில் கம்பன் கழகம் நிறுவிய சா. கணேசன் ‘தமிழ்த்தொண்டத்தொகை’ இயற்றினார். தமிழ்த்தாய்க்குக் கோவில் அமைத்து வடிவம் தந்தவரும் இவரே. தமிழ்த்தாய் வாழ்த்து 50+ ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கடவுள் வாழ்த்தாக அமைந்துவிட்டது: http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html  திருவள்ளுவர் தொடர் ஆண்டு, கலி அப்தம், சக அப்தம் போன்றவற்றை விட்டு அரசாணைகளில் திருவள்ளுவர் திருநாள் தை 1 (பொங்கல்) அன்று தொடங்குகிறது. திருவள்ளுவர் திருநாளுக்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் என சித்திரை 1 (தமிழ் ஆண்டுப் பிறப்பு) அமையக் கவிஞர்கள் வாழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி பல.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய இணைய வழியான உரையரங்கில் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள் இயற்றிய தமிழ்த்தொண்டத் தொகையிலிருந்து ‘காசில் இலக்கணந்தரு தொல்காப்பியனுக்கு அடியேன்’ உரை வழங்குபவர். பேராசிரியர், முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. https://youtu.be/o_z0SDWpedE

கேட்டு மகிழ்க!
டாக்டர் நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html


உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani

https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html

தொல்காப்பியம் பற்றி வாசிக்க நூற்றுக்கணக்கான நூல்கள் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. பலவற்றை,
http://tamildigitallibrary.in போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கிப் படிக்கலாம்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்:

    தொல்காப்பியர்
    ஆசிரியர்: தமிழண்ணல்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0726.html

    கவியரங்கம் போல, கவிமழை பொழியட்டும். நனிநன்றி.
    நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 6, 2021, 12:25:10 PM3/6/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com

தொல்காப்பியர் திருநாள் பதிகம்

(கட்டளைக் கலித்துறை)

 

இப்படி வாழ்கென இன்தமிழ்ப் பாட்டில் இசைத்தவரை

அப்படிச் சொல்ல அகம்புற மென்றே அறைந்தவரை

முப்பால் புகட்டும் முதல்வனைக் காட்டிலும் மூத்தவரை

எப்பால் புகினும் இவர்க்கிணை இல்லென ஏத்துவமே!  1

 

பாருயிர் தம்மைப் பகுத்து வகுத்ததைப் பட்டியலில்

ஆருயிர் ஆய்ந்தே அறிவோ டிணைத்த அறிவியலார்

ஊரும் உலகும் உவந்திடத் தந்த உயிரியலார்

பாருள மாந்தர் பணிந்து வியந்திடும் பாங்கினரே!  2 

 

மூலமாம் நூலிது மூலையில் சோர்தல் முறையிலவே

ஞாலம் முழுவதும் ஞாயிறு போல நலம்தரவே

காலம் கனியும் கணேசன் அருளால் கணப்பொழுதில்

பாலம் அமைக்கும் பணியில் இணைவோம் பரிவுடனே! 3  

 

இணையெனப் பாரில் எவரும் இலாத இலக்கணியை

அணையா விளக்கென யாவரும் போற்றிட ஆக்கிடுவோம்

இணையும் கரங்கள் எதனையும் வென்றிடும் என்றறிவோம்

கணைபோல் விரைந்து கடமைகள் செய்வோம் களிப்புறவே! 4

 

அலகிலாச் சீர்கொள் அருந்தமிழ் காத்திடும் ஆர்வமுடன்

உலகெலாம் வாழும் உணர்வுடைச் சான்றோர் உயிர்ப்புடனே

பலவகை யானும் பணிகளைச் செய்திடும் பாங்குடனே

இலக்கை அடையும் இலக்கினைக் கொண்டே இயங்குவரே! 5

 

மொழியியல் என்னும் மொழிநெறி பற்றி மொழிந்தவரை

விழியெனப் போற்றி விளங்கிடச் செய்ய விரும்புவதால்

அழியாப் புகழை அவருக் கணியாய் அளிப்பதற்கு

வழியென ஒன்றை வகுக்கும் தமிழினம் வாழியவே!   6 

 

காட்டா றெனப்படும் காலம் சமைத்த கடுஞ்சுழலில்

மாட்டா திருந்த மணிநூல் உலகினில் மற்றிலையே

கேட்டா லெவரும் கிளர்ந்தெழு வார்கள் கெழுதகையீர்

நாட்டா ரிடையே நவின்றிட வாரீர் நலம்பெறவே!  7

 

தொல்காப் பியர்திரு நாளென ஒன்றினித் தோன்றிடவே

ஒல்காப் புகழ்மிகு ஒண்டமிழ்ச் சீர்மிக ஓங்கிடவே

ஒல்லும் வகையில் உறுதுணை யாகி உதவிடவே

வெல்லும் வகையில் வெறிகொண் டெழுக வினைசெயவே!  8

 

பத்தரை மாற்றுப் பசும்பொன் எனத்தகும் பாவலரின்

முத்திரை யாக முழங்கும் திருநாள் முகிழ்த்திடவே

இத்தரை மீதினில் என்றும் அவர்பேர் இருந்திடவே

சித்திரை ஒன்று சிறப்பாய் அமைந்திடச் செய்குவமே!  9

 

செல்வழி நன்று சிறகை விரிப்போம் சிலிர்ப்புடனே

வெல்வ துறுதி விளைந்திடும் வெற்றி விரைவினிலே!

தொல்காப் பியரவர் தொன்மை அறிந்த அரசினரும்

நல்குவர் ஆணை நனிவிரை வாக நடைபெறுமே!  10

 

        -கவிஞர் இனியன், கரூர்.

         துச்சில்: அமெரிக்கா

 


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/fz5rfsgRVQY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/98bd698c-4b40-4d73-a196-a98b6b55e29an%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Mar 6, 2021, 1:45:00 PM3/6/21
to N. Ganesan, mintamil, vallamai, kanmani tamil, Santhavasantham, Caldwell Velnambi, Bala Swaminathan, Sundar K, vanna...@gmail.com, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, nandhitha kaapiyan, veeramani k



தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

Posted on April 25, 2018
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]
சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++
தமிழர் புத்தாண்டு
சித்திரை முதலா ?
தைத் திங்கள் முதலா ?
ஓயாத சொல்லடிப் போர் !
இதற்கோர் தீர்வு ?
ஒரு கல்லடியில் வீழ்ந்தன
இருமாங் கனிகள் ! 
தைத் திங்கள் தமிழாண்டு
தப்புத் தாளம் ஆனது !
சித்திரை மாதத் தமிழாண்டு
புத்துயிர் பெற்றது !
ஆண்டு தோறும் நேரும்
குருச்சேத்திர 
யுத்தம் ஓய்ந்ததா ?
 
++++++++++
தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது  தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர்,  திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் வந்து போகும்  தலைவலிக் காய்ச்சலாய் ஆகிவிட்டது.  தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது.  இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது.  அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் !  அல்லது  தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் ! 
இந்த தீராப் பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? 
இரண்டு வழிகள் உள்ளன.
 
சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு
தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். 
 
தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.
 
இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், 
நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம்.
 
தமிழக நாட்காட்டிகள்,  60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.    
 
தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு].  
 
திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம்.  [என் ஊகிப்பு].  

இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி,  தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். 
 
இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.
 
யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.  
 
60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம்.
 
எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை.
 
கனிவுடன்,
சி. ஜெயபாரதன், கனடா
 
++++++++++++++++

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

வரலாறு

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.

எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]

வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]

+++++++++++++++

தமிழர் அறுபதாண்டு அட்டவணை

 

எண்.   பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) கிரகோரி ஆண்டு   எண். பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) கிரகோரி ஆண்டு
 
                   
01.
பிரபவ சங்க முதல்

ஆண்டு

Prabhava 1987–1988   31. ஹேவிளம்பி திவாகரர்

ஆண்டு

Hevilambi 2017–2018
02.
விபவ ஔவையார்

ஆண்டு

Vibhava 1988–1989   32. விளம்பி அருணகிரி

ஆண்டு

Vilambi 2018–2019
03.
சுக்ல
திருவள்ளுவர்

ஆண்டு

Sukla 1989–1990   33. விகாரி தியாகராஜர்

ஆண்டு

Vikari 2019–2020
04.
பிரமோதூத புத்தர்

ஆண்டு

Pramodoota 1990–1991   34. சார்வரி ஜி.யூ. போப்

ஆண்டு

Sarvari 2020–2021
05.
பிரசோற்பத்தி
தொல்காப்பியர்

ஆண்டு

Prachorpaththi 1991–1992   35. பிலவ கட்டப் பொம்மன்

ஆண்டு

Plava 2021–2022
06.
ஆங்கீரச நக்கீரர்

ஆண்டு

Aangirasa 1992–1993   36. சுபகிருது வீரமாமுனி

ஆண்டு

Subakrith 2022–2023
07.
ஸ்ரீமுக இளங்கோ

ஆண்டு

Srimukha 1993–1994   37. சோபகிருது
கால்டுவெல்

ஆண்டு

Sobakrith 2023–2024
08.
பவ கண்ணகி

ஆண்டு

Bhava 1994–1995   38. குரோதி தாயுமானர்

ஆண்டு

Krodhi 2024–2025
09.
யுவ மணிமேகலை

ஆண்டு

Yuva 1995–1996   39. விசுவாசுவ நாயக்கர்

ஆண்டு

Visuvaasuva 2025–2026
10.
தாது சாத்தனார்

ஆண்டு

Dhaatu 1996–1997   40. பரபாவ குமர குருபரர்

ஆண்டு

Parabhaava 2026–2027
11.
ஈஸ்வர கம்பர்

ஆண்டு

Eesvara 1997–1998   41. பிலவங்க ஆறுமுக நாவலர் ஆண்டு Plavanga 2027–2028
12.
வெகுதானிய ஒட்டக்கூத்தர்

ஆண்டு

Bahudhanya 1998–1999   42. கீலக குமரி

ஆண்டு

Keelaka 2028–2029
13.
பிரமாதி ஆழ்வார்கள்

ஆண்டு

Pramathi 1999–2000   43. சௌமிய திருத்தணி

ஆண்டு

Saumya 2029–2030
14.
விக்கிரம சித்தர்கள்

ஆண்டு

Vikrama 2000–2001   44. சாதாரண காந்தியார்

ஆண்டு

Sadharana 2030–2031
15.
விஷு ஆண்டாள்

ஆண்டு

Vishu 2001–2002   45. விரோதகிருது காமராசர்

ஆண்டு

Virodhikrithu 2031–2032
16.
சித்திரபானு ஜெயங்கொண்டார்

ஆண்டு

Chitrabaanu 2002–2003   46. பரிதாபி இராஜாஜி

ஆண்டு

Paridhaabi 2032–2033
17.
சுபானு பெருந்தேவனார்

ஆண்டு

Subhaanu 2003–2004   47. பிரமாதீச பரிதிமால்

ஆண்டு

Pramaadhisa 2033–2034
18.
தாரண திருத்தக்கர்

ஆண்டு

Dhaarana 2004–2005   48. ஆனந்த சிதம்பரனார்

ஆண்டு

Aanandha 2034–2035
19.
பார்த்திப வளையாபதி

ஆண்டு

Paarthiba 2005–2006   49. ராட்சச பாரதியார்

ஆண்டு

Rakshasa 2035–2036
20.
விய சேக்கிழார்

ஆண்டு

Viya 2006–2007   50. நள பாரதிதாசன்

ஆண்டு

Nala 2036–2037
21.
சர்வசித்து பூங்குன்றனார்

ஆண்டு

Sarvajith 2007–2008   51. பிங்கள பெரியார்

ஆண்டு

Pingala 2037–2038
22.
சர்வதாரி நாலடியார்

ஆண்டு

Sarvadhari 2008–2009   52. காளயுக்தி அண்ணாதுரை

ஆண்டு

Kalayukthi 2038–2039
23.
விரோதி முத்தொள்ளாயிரம்

ஆண்டு

Virodhi 2009–2010   53. சித்தார்த்தி வரதராசர்

ஆண்டு

Siddharthi 2039–2040
24.
விக்ருதி அப்பர்

ஆண்டு

Vikruthi 2010–2011   54. ரௌத்திரி மறைமலையார்

ஆண்டு

Raudhri 2040–2041
25.
கர சுந்தரர்

ஆண்டு

Kara 2011–2012   55. துன்மதி கல்யாண சுந்தரர் ஆண்டு Dunmathi 2041–2042
26.
நந்தன சம்பந்தர்

ஆண்டு

Nandhana 2012–2013   56. துந்துபி விசுவநாதம்

ஆண்டு

Dhundubhi 2042–2043
27.
விஜய வாசகர்

ஆண்டு

Vijaya 2013–2014   57. ருத்ரோத்காரி கண்ணதாசன்

ஆண்டு

Rudhrodhgaari 2043–2044
28.
ஜய வில்லிபத்தூரார்

ஆண்டு

Jaya 2014–2015   58. ரக்தாட்சி அப்துல் கலாம் ஆண்டு Raktakshi 2044–2045
29.
மன்மத புகழேந்தி

ஆண்டு

Manmatha 2015–2016   59. குரோதன இளையராசர்

ஆண்டு

Krodhana 2045–2046
30.
துன்முகி பட்டினத்தார்

ஆண்டு

Dhunmuki 2016–2017   60. அட்சய ரகுமான்

ஆண்டு

Akshaya 2046–2047
                         

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

நூலுதவி : 

  1. தமிழ் இலக்கிய வரலாறு –  டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய  அக்காதெமி வெளியீடு [2003]
  2. தமிழ் இலக்கிய வரலாறு  -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]

Share this:

ழ்ச் சங்கப் பேரவை வேண்டுகோள்:


 




















உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani

By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM

நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:

தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக

செ. வை. சண்முகம், நா. கணேசன்

தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.  திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.

உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.

தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில்  (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது  ’திங்கள்முன்னே  இக்கே சாரியை’  என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும்,  சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல,  27 நட்சத்திரப்  பெயர்களின்  கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருஷப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர்  திருநாள் என்றும் நின்று உதவும்.

செ. வை. சண்முகம்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

நா. கணேசன்                                                                                               

ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்கா      

Virus-free. www.avg.com

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUf_bTGo0wu8WBed5zkVL_Onp-bpC0SbYp9GsOn5HJ70ZA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 6, 2021, 5:41:17 PM3/6/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளின் 57 பெருநகரங்களின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டுப் பேரவை தழிழ் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளது. இருக்கிற 12 மாதப்பெயர்கள், 60 வருடப் பெயர்களை மாற்றுவதில்லை ஃபெட்னா.

  தமிழ்த்தாய் வாழ்த்து 50+ ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கடவுள் வாழ்த்தாக அமைந்துவிட்டது: http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html  திருவள்ளுவர் தொடர் ஆண்டு, கலி அப்தம், சக அப்தம் போன்றவற்றை விட்டு அரசாணைகளில் திருவள்ளுவர் திருநாள் தை 1 (பொங்கல்) அன்று தொடங்குகிறது. திருவள்ளுவர் திருநாளுக்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் என சித்திரை 1 (தமிழ் ஆண்டுப் பிறப்பு) அமைய  முன்னெடுப்பைச்
செய்கிறது ஃபெட்னா பேரவை. முழு விவரங்களுக்கும் பேரவை தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணலாம்.

நா. கணேசன்


rajam

unread,
Mar 6, 2021, 11:16:38 PM3/6/21
to S. Jayabarathan, N. Ganesan, mintamil, vallamai, kanmani tamil, Santhavasantham, Caldwell Velnambi, Bala Swaminathan, Sundar K, vanna...@gmail.com, Asan Buhari, anne vaigai, C.R. Selvakumar, nandhitha kaapiyan, veeramani k
வணக்கம், ஜெயபாரதன் ஐயா. நலம்தானே. நலம் பேணுக. 

திடீரென எனக்கு ஒரு புதூஊஉ ஐடியா தோணிச்சூஊஉ … ஐயா. 

அதாவது … 

இக்கால இணையத்தமிழ்ப் போராளிகள், தமிழ் ஆர்வலர், தமிழ் ஆய்வாளர், தமிழ்***ர் பிறந்த நாளை அந்தந்த ஆண்டுத்தொடக்கமாக … ஆட்சி பூர்வமாக ஆணையிட்டுவிடலாம்; யாருக்கும் பகை கிளம்பாது, போராளிகள் தலையீடு இல்லாவிட்டால்! :-) 

ஏதோ ஒரு புத்தாண்டு வாழ்த்துடன்,
ராஜம் 
Reply all
Reply to author
Forward
0 new messages