--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0174437f-e42d-474e-aa05-63c51b886f9an%40googlegroups.com.
வடஇந்தியாவில் மாளவத்திலிருந்து தெற்கில் இலங்கை வரை பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுந்தன.சக
On Sun, 18 Jul 2021, 3:57 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
சேரமன்னர் தம் நாட்டிலே செய்த இரண்டு கண்ணகி கோட்டங்கள்
-------------------------------------------------------------
பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால், இரண்டு கண்ணகி கோட்டங்களைச் சேர மன்னர்கள் கட்டினர் என்று தெரிகிறது:
(1) கண்ணகி தெய்வம் ஆகிய அயிரைமலை என்றழைக்கும் பழனி மலைத்தொடரில் கம்பங்கூடலூரில் உள்ள மங்கலாதேவி கோட்டம். இப்போது தமிழக, கேரள எல்லையில், கேரளாவிலே இருக்கிறது. சித்திரா பௌர்ணமி (பூரணை) நாளில் வானுலகு கண்ணகி அங்கிருந்து ஏகியதால் “ஸ்ரீ பூரணிகிரி ஆளுடைய நாச்சியார்” என்கிறது பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு. பூரணி என்ற பெயரை ராஜராஜசோழன் காலத்தைய தேய்ந்துபோன வட்டெழுத்துக் கல்வெட்டிலும் காண்கிறோம். சேரநாடு சங்க காலத்தில் குடமலைநாடு, குணமலை நாடு என இரு பகுதிகள். கொங்குநாடு குணமலை நாடு. அப்பகுதியைச் சேர்ந்தது என்கிறார் மு. ராகவையங்கார். பழனிமலைப் பகுதி பழைய கொங்குநாடு. வஞ்சி மூதூர் ஆகிய கரூரின் புறத்தே இப் பழனி மலையின் வேள் ஆவிக்கோ மாளிகை கட்டியிருக்கிறான் எனச் சிலம்பு கூறுகிறது. இப்போது, தில்லியில் ‘தமிழ்நாடு ஹவுஸ்’ இருக்கிறமாதிரி. அருணகிரிநாதரும் ‘சேரர் கொங்கு வைகாவூர் நாடதில்’ என்றார். கம்பம் கூடலூரில் உள்ள கண்ணகி தனியாக நிற்கிறாள். மங்கலாதேவி. பூரணை நாளில் தெய்வம் ஆனாள். எனவே, பூரணி. கர்நாடகாவில் ‘சந்திரா’ என்றே கண்ணகி கதை இருக்கிறது. மங்களூர் கண்ணகியின் பெயரால் அமைந்தது என்பார் உவேசா.
கண்ணகியின் இக் கோயிலைப் பற்றி முதன்முதலில் எழுதியவர் (Annals of Oriental Research, Volume 1, University of Madras) பாரதியார் போற்றிய மு. ராகவையங்கார் தான். இச் செய்தியைக் கண்ணகி கோட்டம் பற்றி வரும் எந்தக் கட்டுரை, நூல்களிலும் காணோம். 1904-லே ஆங்கில அரசுக்கு இக்கோயில் தெரியவந்தது. 1920களில் ஒரு கல்வெட்டை வெளியிட்டனர். இப்போது பிரபலமாக உள்ள பெயர் சி. கோவிந்தராசனார் தான். ஆனால், அவருக்குச் சொன்னவர் கண்ணகி கோட்டத்தருகே, ஏல விவசாயிகள் சங்கப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார் ஆவார். அவர் ராகவையங்கார் நூல்களைப் படித்திருக்கலாம். புலவர் சோமசுந்தரத்தின் மாணவர்கள் தேனியில் இருந்து சென்று, சி. கோவிந்தராசனாரை அழைத்துவந்தனர். பின்னர் புலவெ செ. இராசுவும் வந்தார். அப்போது (1976) புலவர் செ. இராசு எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பிவைத்தார், கொற்றவையின் வடிவமாக, மதுரையை எரித்து, 14 நாள் நடந்து சென்ற மலை இது. கொற்றவை வாகனம் வேங்கை. எனவே தான், குறிப்புப்பொருளை வைத்து, வேங்கை மர நீழலில் நின்றாள் எனப் பலமுறை பாடினார் இளங்கோ அடிகள். http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html
கண்ணகி கோயில் பிரபலமான வரலாற்றை துளசி ராமசாமி நூலில் எழுதியுள்ளார். சி. கோவிந்தராசனார் எப்படி கண்ணகிகோயிலுக்கு வந்தார் என தேனி மக்கள் விளக்கிய செய்திகள் இருக்கின்றன. கல்வெட்டியலர் கே. ஜி. கிருஷ்ணன் ’ஹிந்து’ பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பிடிக்கணும்.
(2) சேரர் தலைநகர் வஞ்சி மூதூரில் (இன்றைய கரூர்) சேரன் செங்குட்டுவன் ஒரு கண்ணகி கோயில் கட்டியிருக்கிறான். இங்கே, கண்ணகியும், கோவலனும் தம்பதியராகச் சிற்பங்கள் கருவறையில் இருந்துள்ளன. விதவையான நிலையில் வைக்கச் சேரமன்னர்கள் விரும்பவில்லை போலும். மணிமேகலை மணிபல்லவத் தீவில் இருந்து விமானத்தில் பறந்துவந்து, இந்தக் கண்ணகி-கோவலனை வழிபட்டதை மணிமேகலைக் காப்பியம் விரிவாகப் பாடியுள்ளது. வஞ்சியம்மன் தலதேவதை. வஞ்சிக்கொடி (வஞ்சுலவல்லி) அவள் - துர்க்கை. வஞ்சுலேசுவரர் என ஆநிலையப்பருக்கு ஒரு பெயர். கண்ணகியின் இரு கோட்டங்கள் பற்றியும், கண்ணகி கோட்டம் 20-ம் நூற்றாண்டில் பிரபலமான வரலாற்றையும் பற்றிக் கட்டுரை தர ஆவல். புலவர் சோமசுந்தரனாரின் பழைய கட்டுரையும், போட்டோவும் தேடவேண்டும். அவரது மாணவர் தமிழாதன் (பி. 1939, கணபதிராஜன்) போன்றோரிடம் இருக்கலாம்.
வஞ்சி மூதூரின் பெயர் வஞ்சிக் கொடியால் அமைந்தது என முதலில் விளக்கியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். கடிகைமுத்துப் புலவர் ஒரு வெண்பாவில் சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பதிகளைப் பாடுகிறார். அதில் வஞ்சி என்னும் கொடிபோன்ற இடை என்று குறிக்க, சீத்தலைச் சாத்தனார் போலவே, வஞ்சிக்கொடியால் பெற்ற பெயர் எனப் பாடியுள்ளார். அவரை ஆதரித்த எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேசு ரெட்டமேந்திரனைப் புகழ்ந்தது இச் செய்யுள்.
கொங்கைகும்ப கோணமா, கூந்தலுமோ கூடலா,
தங்கும்விழி அம்பா சமுத்திரமா – பைங்கனக
மேருவெங்க டேசுரட்ட மேந்த்ரா! இவள்சசி,புல்
தாருடைய ஊரிடைய தாம்
கோணம் - வட்டம்; கூடல் = கூடு + அல், மிகுந்த இரவு;
அம்பாசமுத்திரம் - அம்புக் கடல். சசி - இந்திரன் மனைவி.
புல் = பனை. புல்தார் = பனம்பூ மாலை.
இங்கே, பனம்பூ மாலை அணியும் சேரன் [1]
சேரன் ஊர் வஞ்சி. வஞ்சிக் கொடி போன்ற இடை.
~NG
[1] புல்தார் சேரனுக்கு ஆகிவருவது முதலாகுபெயர்.’கோடு’ என்று எருமைப்பெடைக் கொம்பை வைத்து, கொல்லி (கொற்றவை) வழிபாட்டை முதலாகுபெயராய்க் குறிப்பிடும் சங்க இலக்கியத்திலும் இந்த முதலாகுபெயர் உத்தியைக் காணலாகும். தமிழ் மக்கள் எருமைப் பெடையின் கொம்பை அலங்கரித்து, மணவறையில் வைத்துப் பூசித்து, கலியாணச் சீர்கள் செய்துள்ளனர் என்பது 4000 ஆண்டுக்கால தொல்லியலால் தெரிவதை அழகாய்வுகள் காட்டுகின்றன. http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html . அனைவருக்கும் தெரிந்த ஒன்றாதலால் கலித்தொகை விளக்கமாகப் பாடவில்லை. எனவே, அதனை விளக்கினார் நச்சினார்க்கினியர். கோடு என்றால் கொம்பு. கோடு > கவடி> கவரி என்றெல்லாம் மாறிவருகிறது. இது எருமைக்கான சிறப்புப்பெயர்:வேதத்தில் கௌரி (< கோடு) என்றால் எருமை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கவரி உண்டு. எனவே தான், எருமைக் கோடு வைத்துக் கலியாணச் சீர் நடப்பதில் முதலாகுபெயர் பயன்படுத்தி உள்ளனர் கலித்தொகையில்.
ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html
அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்
(தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சான கட்டுரை.)
https://www.vallamai.com/?p=87447&
கடல் பிறக்கோட்டிய குட்டுவன் சிலப்பதிகாரத்தின் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பார் பேரா. கா. சு. பிள்ளை. இந்தச் சேரமன்னனைப் பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தாகப் பாடினார். அதில் குடவனாறும், ஆன்பொருனையும், காவிரியும் கலக்கும் முக்கூடல் போன்றவன் என்று போற்றியுள்ளார்.
செங்குணக்கு ஒழுகும்-நேர் கிழக்காக ஓடும்; கலுழி மலிர் நிறைக் காவிரி யன்றியும்-கலங்கலாகிய நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியை ஒப்பதே யன்றி; பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை-பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய்.
செங்குட்டுவனும் செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத் தண்ணளி சுரந்து இனிது புரத்தல் பற்றி, “காவிரி அனையை” என்றார். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவதுபோல், கடல்பிறக் கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடுடைமையால் மலைபடு பொருளும் பழையன் முதலியோரை வென்று, காவிரி செங்குணக்கு ஒழுகும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப் பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை என்பார். “பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை” என்றார். மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர், “அக் காவிரி தானும் ஆன் பொருநையும் குடவனாறும் என இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம்” என்பர்.
“எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் வரு புனல், வாயில் வஞ்சியும்” என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதன் பிரதிபேதமாக “. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே’” என்றும் இருக்கிறது (உவேசா பதிப்பித்த பத்துப்பாட்டு). வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது – பெருகுகின்ற நீரையும், கோபுர வாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் பரிசில் சிறியதாயிருக்கும் என்பது நச்சினார்க்கினியர் உரை. சேரர்களின் ராஜதானி நகரமாக வஞ்சிக் கருவூர் விளங்கியுள்ளது. அமராவதி ஆற்றின் நீர்வளத்தைக் கொண்டதாக உள்ளது.
வஞ்சி ஈந்த வியத்தகு பொன் அணி [தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]வஞ்சிக் கொடி:
(1) "பூங்கொடிப் பெயர்ப் படூஉம் திருந்திய நன்னகர்” மணிமேகலை 28: 101, 102.
(2) வஞ்சிமா நகர் புக்க காதை: (மணிமேகலை - தமிழில் உள்ள ஒரே பௌத்த நூல்!)
கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்
விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்
திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் [தனள்
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென்.
இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. ''செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க'' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1 ''''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'''' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும்.
92-4. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.
கொடி, வஞ்சிக்கொடி; 2 ''''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'''' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ''திருந்து நல் ஏது'' என்றார். வாய்மை நான்கும் 3 மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ''பொருந்து நால் வாய்மை'' எனப்பட்டது. ''நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்'' என்பது.
அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ''அருளல் வேண்டும்'' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ''இன்னது இவ் வியல்பு'' என எடுத்துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.
---------
11-15. ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன - ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சிபோன்ற, என் வளநகர் விளங்க-எனது வளம் பொருந்திய மனை சிறப்புற்று விளங்க, துனியின்று - வெறுப்பின்றி, திரு நுதல் பொலிந்த என் பேதை வருமுலை முற்றத்து - அழகிய நெற்றியாற் பொலிவுற்ற என்
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி யன்னவென் வளநகர் விளங்க
இனிதினிற் புணர்க்குவென் மன்னோ
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=577&y=578&bk=263&z=l1270635.htm
கோதைபாடி - கோதவாடி, கண்ணர்பாடி - கன்னிவாடி, வள்ளுவபாடி நாடு :: பாடி வீடுகளான் அமைந்த பெயர்கள்.
----------------
எனவே, சேரர் தலைநகர் வஞ்சி - இன்றைய கரூர் - பூங்கொடியால் பெயர் பெற்றது என அறியலாம்.
கொங்கு வேளாளரில் பலருக்கும் குலதெய்வம் வஞ்சிக்கொடி அம்மன். பெண்கள் பெயரும்
இன்றளவும் உண்டு.
“வட்கார் மேற்செல்வது வஞ்சி” - வஞ்சித் திணை https://ta.wikipedia.org/wiki/வஞ்சித்_திணை
வஞ்சிக்கொடியைப் பொற்கொடி என்றார் சீத்தலைச் சாத்தனார். காரணம், அதன் பூக்கள் பொன்னிறமாகச் சார்ந்த மரத்தையே மூடுவதால் ஆகும். அமிர்தவல்லி என்றும் இதனால் வழங்கும். https://twitter.com/rameshpandeyifs/status/1334018046894120960
சூடு உற்ற சுடர்ப்பூ என்று இந்த பொற்பூக்கள் ஆகிய வஞ்சிப்பூவினை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. “சுடர்ப் பூங் கொன்றை” - பொன்னிற மலர் தான்.
பொன்னிறமான பூக்கள், செக்கச் சிவப்பான காய்களாய் மாறும். https://krishijagran.com/health-lifestyle/the-fresh-leaves-of-the-wonder-plant/
https://www.youtube.com/watch?v=OXwrf1BwAos
https://www.flickr.com/photos/78556809@N06/7207273500
https://ayurvedicmagazine.com/giloy-health-benefits/
https://en.wikipedia.org/wiki/Tinospora_cordifolia வஞ்சிக்கொடி = நாகினி. (தவறாகப் பிரம்புக்கொடியைக் கூறுகிறது மதறாஸ் லெக்ஸிகான்).
https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-vanji-creeper
வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்.
'கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’ - சினிமாவில்
https://www.youtube.com/watch?v=NHS7XgUAuJ8
பெண்ணின் இடையை வஞ்சிக்கொடிக்கு ஒப்பிடுவர் (தேவாரம், திருக்கோவையார், ...)
----------------
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0174437f-e42d-474e-aa05-63c51b886f9an%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctD1dm27FhdufPgJLoZgEKVqAO113wZxPtFZjui75mvWA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUffrtR1U4cAPoYf%3DpQXz%2BCOh6EQcp9cGRHyWt8wUQ9BQQ%40mail.gmail.com.
இலக்கியத் தரவின்படி முதலில் அவளுக்குக் கல் நாட்டி வழிபட்டோர் மலைக்குறவர்.அதற்குப் பிறகு சேரன் செங்குட்டுவன்.ஆனால் இது இலக்கியம்; கற்பனை.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvRPg%2BBqkLKjLAO7zGUH-_0cMhVR75bc%2BeJ%3DToaagMvHQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdpQcE3%3DFBhhOZU4ubPEDzgK-zJ93pBPDCxab%2BwJkzP4A%40mail.gmail.com.
புதுச்செய்திகளுக்கு நன்றிசக
வடஇந்தியாவில் மாளவத்திலிருந்து தெற்கில் இலங்கை வரை பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுந்தன.சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcUqCaVO5umEVdu0iG7aGFeVc8vw8D7Aga-brjVZS1SrA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct20eBGMhT-aXGWqtNcGPHMsmwuHxVcVZdCnqBQhPBriA%40mail.gmail.com.