கொடும்பை மாநகர்த் திருப்புகழ் (பாலக்காடு மாவட்டம்)
--------------------------------------------
கொடும்பைத் திருப்புகழ்:
திருப்புகழ் 951 கலைஞர் எணும் கற்பு
https://kaumaram.com/thiru/nnt0951_u.htmlhttps://www.sivaya.org/thiruppugazh_song.php?sequence_no=951&lang=tamil-----------
கொடும்பைத் திருப்புகழ் பாடுவது கொடும்பாளூர் எனக் கொள்வது சிறப்பில்லை. கொடும்பாளூரில் முருகன் கோயிலே பழமையான காலங்களில் இல்லை.
இத்திருப்புகழ் பாலக்காட்டின் அருகே, கொடும்பை என்ற ஊருக்குப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். மலையாளத்தில் “கொடும்ப” (കൊടുമ്പ) என அழைக்கிறார்கள். சங்க காலத் தலைநகர் வஞ்சி மாநகர் கரூருக்கும். முசிறித் துறைமுகத்திற்கும் இடையறாமல் வணிகமும், கலைகளும் செழித்தோங்கின. ரோமானியப் பேரரசர்களின் காசுகள் இங்கே தான் இந்தியாவிலேயே அதிகம் கிடைக்கின்றன. தொல்லியலருக்குத் தெரியாமல், மழைக்காலங்களில் ஆற்றுப் படுகைகளில் உருக்கப்படும் தங்கம், வெள்ளி நாணயங்கள் அனேகம். பாலக்காட்டுக் கணவாய்ப் பிரதேசத்தின் சரித்திரம் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. நொச்சிநியமம், சங்கரரின் காலடி (சங்கர விஜயத்தில் சொல்லும் ஊர்), ... இங்கே உள்ளன.
http://niyamasabha.org/ நியமம் என்ற சொல் நாடோறும் பயன்படுவது கேரளாவில் தான்.
கொடும்பை மலையாளத்தில் கொடும்ப. நியமசபை மலையாளத்தில் நியமசப.
http://www.niyamasabha.org/codes/13kla/session_9/ans/u04284-270613-796000000000-09-13.pdf(கொடும்பை ஊர்ப்பெயர் உள்ளது.) நொச்சிநியமம் - நொச்சியூர்/நொச்சூர். அகஸ்தியர் என்ற துறவி இங்கே 20-ஆம் நூற்றாண்டில் இருந்தார். அவர் அனேகம் பாடல்கள் பாடியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=Gz3ghv8E0uI ( செஞ்சுருட்டி ராகம்)
கொடும்பை: Alphabetical List of Villages in the Taluks and Districts of the Madras Presidency
Government Press, 1924. page 392:
https://books.google.com/books?id=kXrmTBs_X8wC&pg=PA392&lpg=PA392&dq=കൊടുമ്പ&#v=onepage&q=കൊടുമ്പ&f=falsehttps://www.google.com/maps/place/Kodumba,+Palakkad,+Kerala,+India/@10.75877,76.6864348,15z/data=!3m1!4b1!4m6!3m5!1s0x3ba86c54254ef521:0x6a85d7817b8e9c2f!8m2!3d10.7560288!4d76.6768936!16s%2Fm%2F0524kth?entry=ttuhttps://en.wikipedia.org/wiki/Kodumbaകൊടുമ്പ என இட்டுத் தேடிப் பார்க்கவும். அருணகிரிநாதர் பாடிய கொடும்பை எந்த ஊர் என நன்கு விளங்கும். 1000+ ஆண்டுகளாய் வள்ளி, தேவசேனை உடனாய சுப்பிரமணியர் திருக்கோயில் இங்கே இருக்கிறது. இந்தக் கார்த்திகேய ஸ்வாமியைப் போற்றும் திருப்புகழ் இஃது.
https://www.youtube.com/watch?v=0NBTp2oEwug கொடும்பை முருகன் திருக்கோவில் 2000 வருஷம் என்று அவ்வூர்க்காரர்கள் கூறுகிறார்கள்.
தினமணியில், கொடும்பைத் திருப்புகழின் சரியான ஊரை அடையாளம் கண்டு கட்டுரை அச்சாகியுள்ளது:
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/Jan/27/பழநியில்-பாதி-கொடும்பு-2639249.htmlமூன்று காரணங்கள்:
(1) இன்றும் கொடும்பை (கொடும்ப - மலையாளம்) கூறப்படும் பழைய முருகன் திருத்தலம். பாலக்காடு மாவட்டத்தருக்குப் பழனியில் பாதி இத் தலம்.
(2) மலையாளிகளில் செட்டி என்ற ஜாதி இல்லை. தமிழ்நாட்டு வணிகர்கள் தாம் அப்பெயருடன் கேரளாவில் இயங்குகிறார்கள். வணிகத்தில் சிறந்த செட்டியார்கள், முதலியார்கள் (கைக்கோளர்) வாழ்கிற ஊர். அதனால், செட்டி என முருகனைக் குறிப்பிடுகிறார்.
"செகம் ஏழும் திருகு சிகண்டிப் பொற் குதிரை விடும் செட்டித் திறல! கொடும்பைக்குள் பெருமாளே!”
கம்ப ராமாயணத்தின் “தோல்பாவைக் கூத்து” இன்றும் நிகழும் இடம் இது.
(3)
திருப்புக்கொளியூர், அவினாசி:
https://kaumaram.com/thiru/nnt0948_u.htmlபேரூர்:
https://kaumaram.com/thiru/nnt0949_u.htmlபேரூர்:
https://kaumaram.com/thiru/nnt0950_u.htmlகொடும்பை: சுப்பிரமணியர் திருக்கோயில் - மிகப்பழமையானது.
https://kaumaram.com/thiru/nnt0951_u.htmlகீரனூர்: (தாராபுரம் அருகே):
https://kaumaram.com/thiru/nnt0949_u.htmlதலமுறையில் முருகன் தலங்கள் உள்ளது. எனவே, கொடும்பை கொங்குநாட்டுக்குரியது, அப்பெயரில் உள்ள ஊர், பழைய முருகன் கோயில் எனக் கொள்வது பொருத்தம்.
-----------------
இதே போல, மாணிக்கவாசகருக்குப் பாண்டியர்கள் கட்டிய மிமோரியல் கோயில், ஆவுடையார் கோயில். ஆனால், அவர் சிவனிடம் ஞான உபதேசம் பெற்ற திருப்பெருந்துறை சோழநாட்டுத் தலம்:
https://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.htmlஇதுவும், கொடும்பை எந்த ஊர் என நிச்சயிக்கும் தலமுறை போலவே, மாணிக்கவாசகருக்குச் சிவன் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றியும் திருப்புகழ் காட்டுகிறது.
வடக்குப்பற்று த. சுப்பிரமணியபிள்ளை, அவரது திருமகன்களும் அரிதின் முயன்று ஓலைச்சுவடிகளைட் தமிழகமெங்கும் தேடி அச்சில் கொண்டுவந்தது அருணகிரியார் பாடிய திருப்புகழ். அதில் சோழநாட்டுத் தலமாகவே மாணிக்கவாசகர் வரலாற்றுடன் திருப்பெருந்துறை வைக்கப்பெற்றுள்ளது. திருப்புகழ் பாடல் 801-850 தல வைப்புமுறையைப் பார்ப்போம். திருப்பெருந்துறையும், அங்கே மாணிக்கவாசகர் குருமூர்த்தியைச் சந்தித்ததும் சோழநாட்டுத் தலமாக இருக்கிறது. திருப்புகழ் பாடல் 801 - கந்தன்குடி, 802-804 திலதைப்பதி, 805 - அம்பர், 806 - அம்பர் மாகாளம், 807 - இஞ்சிகுடி, 808 - திருநள்ளாறு, 809-810 வழுவூர், 811 - கன்னபுரம், 812 - திருவாஞ்சியம், 813 - செங்காட்டங்குடி, 814 - திருவிற்குடி, 815 - விசயபுரம், 816-822 திருவாரூர், 823 - பெரியமடம், 824 - திருவாரூர்ச் சோமநாதன்மடம், 825 - திரியம்பகபுரம், 826-827 சிக்கல், 828-830 நாகப்பட்டினம், 831 - 834 எட்டிகுடி, 835 - எண்கண், 836-837 குடவாசல், 838 வலிவலம், 839-841 வேதாரணியம், 842 - கோடி குழகர்கோவில், 843-845 திருப்பெருந்துறை, 846 - திருத்துருத்தி, 847 - வீழிமிழலை, 848 - திருவாவடுதுறை, 849 - மருத்துவக்குடி, 850 - பந்தணைநல்லூர். 843-845 பழைய திருவிளையாடல் குறிப்பிடும் மிழலை நாட்டுத் திருப்பந்துறை என்பது திண்ணம்.
இந்த திருப்பந்துறை/திருப்பெருந்துறைத் திருப்புகழ் (843 - இரத்த முஞ்சியு மூளை..) உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே, உன் தந்தை மாணிக்கவாசகருக்கு ஞானச் சொற்பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. செகத்தி னின்குரு வாகிய தந்தைக் களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெருந்துறை மேவிய பெருமாளே! (844 - வரித்த குங்கும மணிமுலை...) குருமூர்த்தியாய் மாணிக்கவாசகருக்கு திருப்பந்துறையில் எழுந்தருளிய வரலாற்றைப் பதிவுசெய்கிறது: பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய குருமூர்த்தியாகிய சிவபெருமானுடன் திருப்பெருந்துறையில் அமர்ந்திருக்கும் பெருமாளே. சதுமுக திருட்டியெண் கணன்முத லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை பெருமாளே! (845 - முகர வண்டெழும் ...) மாணிக்கவாசர் அருள்பெற்ற குருந்தைப் போற்றுகிறது. திருப்பந்துறையின் கடல்வளம் ஆன முத்து, பவழமுடன் நெல் வயல் சூழ்ந்த நிலம்) பேசுகிறது. நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகு உற நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு பெருமாளே! திருப்பெருந்துறைக்கான திருப்புகழ் மூன்றின் ஈற்றடிகளிலும் மாணிக்கவாசகர்-குருமூர்த்தி வரலாற்றை திருப்பந்துறைத் திருப்புகழில் அருணகிரியார் குறித்துள்ளது அரிய இலக்கிய வரலாற்று ஆவணங்கள்.
நா. கணேசன்
கொடும்பைத் திருப்புகழ்
தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
தனதனனந் தத்தத் ...... தனதான
......... பாடல் .........
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக் ...... கசடாகுங்
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும்
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் ...... குறியாத
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ
கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச்
சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந்
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.