தமிழ்ப் புத்தாண்டே வருக - ஒரு சிந்துக் கவிதை

31 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Apr 14, 2024, 8:45:54 AM4/14/24
to santhavasantham
தமிழ்ப் புத்தாண்டே வருக

(பல்லவி)
தமிழ்ப்புத் தாண்டே வருக! - என்றும்
… தளரா உளமும் வளமும் தருக!

(சரணங்கள்)
மகிழ்வே நினைவில் மருவ - அணி
… மலர்போல் பரிவின் மணமே பரவ
நிகரில் ஒருவன் அருளால் - இரு
… நிலமேல் நிறைமா நலமே பெருக (தமிழ்ப்புத் தாண்டே) 1.

உலகம் முழுதும் உறவே - எனும்
… ஒருபே ருரைதான் உணர்வி லுறவே
நலிவும் பழியும் அறவே - நிதம்
… நவமாய் ஒளிரும் அறிவும் பெறவே (தமிழ்ப்புத் தாண்டே) 2.

குறளின் மொழியே நெறியாய் - ஒரு
… குறைவறும் அன்போ டறமே குறியாய்
திறனும் திருவும் மலிய - இன்பம்
… செழித்திடும் வாழ்வில் புகழே பொலிய  (தமிழ்ப்புத் தாண்டே) 3.

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Apr 14, 2024, 10:12:33 AM4/14/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 14, 2024, at 18:15, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9529BB65-6D13-4A79-84A6-E17D9D8236B4%40gmail.com.

Anand Ramanujam

unread,
Apr 14, 2024, 11:03:57 AM4/14/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

..

N. Ganesan

unread,
Apr 14, 2024, 11:10:23 AM4/14/24
to சந்தவசந்தம்
அருமை. 🙏

N. Ganesan

unread,
Apr 14, 2024, 11:30:20 AM4/14/24
to santhav...@googlegroups.com

Anand Ramanujam

unread,
Apr 14, 2024, 11:31:05 AM4/14/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கணேசன்! 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Apr 14, 2024, 11:32:16 AM4/14/24
to santhav...@googlegroups.com
அழகு கவிதை. உமக்கும் எங்க  புத்தாண்டு  வாழ்த்து,
 யோகியார்

Anand Ramanujam

unread,
Apr 14, 2024, 11:42:32 AM4/14/24
to santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி!


Siva Siva

unread,
Apr 14, 2024, 12:07:44 PM4/14/24
to santhav...@googlegroups.com
Nice.
Tamil New Year greeting - common to all 60 years!

V. Subramanian

Anand Ramanujam

unread,
Apr 14, 2024, 12:44:12 PM4/14/24
to santhav...@googlegroups.com
Thank you 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

lns2...@gmail.com

unread,
Apr 15, 2024, 6:53:25 AM4/15/24
to சந்தவசந்தம்
அருமை

Srini

Anand Ramanujam

unread,
Apr 15, 2024, 6:54:24 AM4/15/24
to santhav...@googlegroups.com
Thank you, Thiru. Sirini!

...

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 15, 2024, 7:15:44 AM4/15/24
to santhav...@googlegroups.com
வியாழ வட்டம் ( https://en.wikipedia.org/wiki/Samvatsara) என்னும் 60 தமிழ் ஆண்டுகளுக்கு மட்டுமல்லாமல், திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பாகிய தை 1 உழவர் திருநாளுக்கும் பொருந்துகிறது சிறப்பு.

மலையாளிகளுக்கு விஷுக்கனி என்னும் சித்திரை 1 வருஷப் பிறப்பாகும். ‘லீனியர்’ ஆண்டாக கொல்லம் ஆண்டை வரித்துக்கொண்டனர். அது வேறுமாதத்தில் தொடங்குகிறது.  அதே போல, தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டு எனத் தெரிவு செய்துகொண்டனர். தமிழின் மிகச் சிறந்த புலவர் வள்ளுவனார் பெயரில்.

அதற்கு இணையாகப் பார்த்தால், சித்திரை 1-க்குத் தொல்காப்பியர் திருநாள்.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 16, 2024, 9:49:07 AM4/16/24
to santhav...@googlegroups.com
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை"
     - மலைபடுகடாம், பாடல் வரி 305

 "தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்"
-சிறுபாணாற்றுப்படை
பாடல் வரிகள் (145-149)

இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலை நாளாக, அதாவது முதல் நாளாக மற்றும் இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்

 இளவேனில் காலமான சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக கொண்டுள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

N. Ganesan

unread,
Apr 19, 2024, 4:36:22 AM4/19/24
to vall...@googlegroups.com
நிரஞ்சன் பாரதி அனுப்பினார்:

கேள்வி : ஒரு வருடத்தின் தலைநாள் எது?

பதில் : சித்திரை-1

கேள்வி : எதன் அடிப்படையில் சித்திரை1? இதற்கு ஆதாரம் என்ன?

பதில் : பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூலில் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல்" என்ற பாடல் வரிகள் உள்ளது அதன் அடிப்படையில் ஒரு வருடத்தின் தலைமாதம் சித்திரையாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே தலைநாள் என்பது சித்திரையைத் தான் குறிக்கும்.

கேள்வி : வேங்கை தலைநாள் பூக்குமா? அப்படீனா? வேங்கை பூக்கும் தலைநாளை சித்திரை என்று எப்படி கூறுகிறீர்கள்?

பதில் : அதாவது வேங்கை மரம் பூப்பது ஒரு வருடத்தின் தலை மாதத்தில் என்பது பொருள். இன்னும் புரியும்படி செல்லணும்னா வேங்கை பூப்பது இளவேனிற் காலம். தொல்காப்பியத்தின் அடிப்படையில் இளவேனிற் காலம் என்பது சித்திரை, வைகாசியை குறிக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேக்கை பூ பூக்கும் காலம் எதுவென இணயத்தில் தேடுங்கள். அல்லது உங்கள் ஊரில் வேங்கை மரம் இருந்தால் போய் பாருங்கள் பூத்துக் குலுங்குகிறதா இல்லையா என்பதை…

கேள்வி : எனில் வேங்கை பூ பூப்பது ஆண்டின் தலைமாதமான சித்திரையே என்று எடுத்துக்கணுமா?

பதில் : ஆம்.

கேள்வி : இதை புத்தாண்டோடு எப்படி தொடர்புபடுத்துவது???

பதில் : வேங்கை பூ பூக்கும் அந்நாள் நமக்கு நன்னாளாகும். ஏனெனில் வேங்கை நன்னாளை தேடி மலரும்  என்ற தகவலை பழமையான இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கேள்வி : இப்படி எந்த இலக்கியம் சொல்லுது??

பதில் :  (பழமொழி நானூறு) : "வேங்கைப் பூவும் செல்வமும்  கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்ற வரிகளால் வேங்கை பூக்கும் நாள் நமக்கு நன்னாள். அதாவது சித்திரை மாதத்தை இவ்விரு இலக்கிய வரிகளும் தலைநாள் என்று ஆண்டின் முதல் மாதத்தையும், வேங்கை  நன்னாளை தேடி மலரும் என்ற வரிகளின் அடிப்படையில் தலைமாதம் நமக்கு நன்னாள் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டின் தலைநாளான இன்றைய தினம் அனைவருக்கும் நன்னாள் ஆகுக. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்களே!

 -பா இந்துவன்.

 
On Tue, Apr 16, 2024 at 11:51 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கொஞ்சம் விரித்து ஆராய்வோம். 

ஆம். நன்றி.

ஆர்தல் = தங்குதல் என்ற பொருள் உண்டு. மயில் + ஆர்ப்பு = மயிலாப்பு என மயிலாப்பூர் குறிப்பிடப்படுகிறது அப்பர் தேவாரத்தில். ம.பொ.சி. அவர்களின் ஊர்.

ஓய்மா/ஓய்மான். (cf. கவரிமா/கவரிமான்) - புரவி வளர்ப்பால் பெயர்பெற்ற தலைவர்கள்.

ஓய்மா + ஆர்ந்த + ஊர் = ஓமாந்தூர்.
உ-ம்: ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி - மதறாஸ் ராஜதானி முதல்வர்.

ஓமாந்தூரை ஓமந்தூர் என டிவி, பத்திரிகைகள் சிதைக்கின்றன.
 

NG



செவ்., 16 ஏப்., 2024, AM 6:49 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது 
"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை"
     - மலைபடுகடாம், பாடல் வரி 305
மலைபடுகடாம் எழுதியவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்- இவரது பெயரால் இவரைப் பார்ப்பனர் எனலாமா?
 "தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்"
-சிறுபாணாற்றுப்படை
பாடல் வரிகள் (145-149)
சிறுபாணாற்றுப்படை எழுதியவர் நல்லூர் நத்தத்தனார். இவர் கிழார்; அதாவது திணைமாந்தர். ஏனெனில் இவர் போற்றும் நல்லியக் கோடன் ஓய்மான் மரபைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். உழுவித்த அம் மன்னனுக்காக உழுதோர் வாழ்ந்த நல்லூரின் தலைவரே நத்தத்தனார் என்பது பொருந்தும். 
இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலை நாளாக, அதாவது முதல் நாளாக மற்றும் இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்
ஆக; தொகையிலக்கியம் தோன்றிய காலத்துத் திணைமாந்தரும் பார்ப்பாரும் ஒருங்கு சித்திரை முதல் நாளையே தலைநாள் என்று அழைப்பதால் தமிழர் புத்தாண்டு சித்திரையிலேயே தொடங்கியது என உறுதியாகக் கூற வழி உள்ளது.
சக 
Reply all
Reply to author
Forward
0 new messages