--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள், 60 கல்வெட்டுகள் கொண்ட நூல், ஆசிரியர் வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன், பக் 141- 144, கல்வெட்டு கீழே விளக்கத்துடன்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்க் கோயிர் திருஉண்ணாழி வடக்குச் சுவர் கல்வெட்டு விஜயராஜேந்திரனான முதல் ராஜாதிராஜனின் 35 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி. 1043) இக்கோயிலில் ஆரியக்கூத்து நிகழ்வை பற்றி இக்கல்வெட்டு 43 வரிகளில் பதிவு செய்துள்ளது.
1. ஸ்வஸ்திஸ்ரீ கலியாணபுரமும் வெளி
2. க் கிராமமுங் கொண்ட கோவிராஜ
3. கேசரி பந்மராந உடையார் ஸ்ரீ வி
4. ஜைய ராஜேந்திர தேவர்க்கு யாண்டு 30 5 (35)
5. ஆவது ஜயங் கொண்டசோழவள
6. நாட்டு முழையூர் நாட்டு பிரமதேயந் திரு
7. நள்ளாற்று திருநள்ளாறுடையார்
8. ஸ்ரீ கோயிலில் முன்பு ஆரியக்கூத்துக்
9. காணியுடைய ஸ்ரீ கண்டன் கம்பநான
10. அபிமான மேரு நாடகப் பேரரையனு
11. ம் ஸ்ரீ கண்டன் அரங்கன் மக்களும்
12. இ _ _ _ _ தாதம் பச்சை பதிய
13. நிறு _ _ _ நில் இவர்களுக்கு மாசிமக
14. த்திருநாளில் ஐஞ்சங்கமும் வை
15. காசி விசாகத் திருநாள் ஐஞ்ச
16. ங்கமும் ஆடக் கடவார்களாக விட்ட நி
17. லம் மூவேலி இன்நிலமாவுது
18. புரவுவரி வாய்க்காலுக்குத் தெற்கு
19. ம் தலைகணி வாய்க்காலுக்குக்
20. கிழக்கும் இத்தேவர் நிலத்து
21. க்கு மேற்கும் தரும்புரத் தெல்
22. லைக்கும் உடையார் நிலத்துக்கு
23. வடக்கும் இப்பெரு நான்கெல்லை
24. உட்படு நிலம் இருவேலியும் சு
25. ப்ரமண்ய வதிக்குக் கிழக்கு மூன்
26. றாஞ் சதுரத்துக் கிழக்கும் ஊர் ந
27. த்தத் திடலுக்குத் தெற்கு பாச்சிவா
28. ய்க்கு மேற்கும் உடையர் நிலத்
29. துக்கு வடக்கும் உட்படு நிலம் வே
30. லியும் ஆக நிலம் மூவேலியும்
31. இறையிலி அனுபவித்து நிவ
32. ந்தஞ் செலுத்தக் கடவர்களாகவும்
33. இத்தேவர் ஸ்ரீ பண்டாரத்தேய் இர
34. ண்டு திருநாளுக்கும் இவர்களுக்கும் இவ
35. ர்கள் கூட்டத்தார்க்கும் திருவிழாக் கொற்று இரு
36. பதின் கல நெல்லும் முகமெழுத எண்
37. ணை அங்கத்தால் நாழியும் மாவுக்கு அ
38. ரிசி அங்கத்தால் நாழியு பெறக் கடவர்க
39. ளாகவும் இப்படி இவர்களுக்கும் இவர்கள்
40. வற்க்கத் தார்க்கும் சந்திராதித்தவற் செய்
41. து இவ்விரண்டு திறத்தாற்க் குங்கா
42. ணப்ப பாதியாகக் கல்லில் வெட்டி
43. ஸ்ரீ பந்மாகேஸ்வர ரக்ஷை.
திருநள்ளாற்றில் இறைமூலவர் முன்பு ஆரியக் கூத்தாட கூத்தாடிஸ்ரீ கண்டன் கம்பன் என்பானும் அவனுடன் ஸ்ரீ கண்டன் அரங்கன் பிள்ளைகளும் காணி பெற்று இருந்தனர். மாசிமகத் திருளால் ஐந்து அங்கமும் வைகாசி விசாகத் திருநாள் ஐந்துஅங்கமும் ஆரியக்கூத்து ஆடுவதற்கு விட்ட நிலம் மூன்று வேலி ஆகும். இப்படி ஆரியக்கூத்து ஆட விட்ட நிலங்கள் ஆரியக்கூத்து காணி எனப்பட்டன. அவை இருக்கும் இடம் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. விழா நாட்களில் ஆரியக் கூத்து நிகழ்த்தும் இவர்களுக்கும் இவர் வர்க்கத்தவர்க்கும் ‘விழாக் கொற்று’ என்னும் 20 கலம் நெல்லும், ஒப்பனைக்கு ஒவ்வொரு அங்கத்திற்கு ஒருநாழி எண்ணெயும், அரிசியும் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒரு நாழியும் பெறக்கடவார்களாக என்று கூறப்பட்டுள்ளது. இது சந்திராதித்தவர் உள்ளவரை செல்லக்கடவதாக சொல்லப்பட்டு உள்ளதுதிருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம்
கல்வெட்டு செய்தி மற்றும் மூலபாடம் அருமை பாராட்டுக்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பல்லவர், சோழர்களில் எவருடைய கல்வெட்டுகளில் தமிழ் மொழி சிறப்பாக இருக்கு? குலோத்துங்கங்காலத்துக்குப்பின்னரே கல்வெட்டுகள் தமிழில் மட்டும் அமைந்ததாக உணர்கிறேன். தெளிவுறுத்துக