பறையரை அவமதித்த அரையர்
பண்டைய தமிழக அரசியலில் நான்கு அதிகார அடுக்குகள் இருந்தது கல்வெட்டுகள் மூலம் தெள்ளப் புலனாகின்றது. அவை முறையே வேந்தன்(emperor). அவன் கீழ் மன்னன்(king). மன்னன் கீழ் அரையன்(duke). அரையன் என்ற அரசன் கீழ் கிழான்(knight) அல்லது கிழார் கோன் என்பவாம். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேந்தர் 4-5 பேர் இருந்தால் மன்னவர்அதைவிட கூடுதலாக 15-20 பேர் வரை இருந்தனர். அரையர்கள் 40-50 பேருக்கு மேல் இருந்தனர். கிழார்கள் 150-200 பேருக்கு மேல் இருந்தனர். கல்வெட்டுப் பதிவுகளில் நிலம் விற்று ஆவணமாகும் போது அதை வேளாண் எனும் அரையர்களும் கிழார்களும் ஒப்பமிட்டு ஏற்பிசைவு தந்ததை வைத்து மேற்சொன்ன கூற்றை சரி என்று உணரலாம்.
வேளாண் என்னும் அரையர்களான அரசர்கள் இக்கால் ஆண்ட பரம்பரை, ஆளப்பிறத்தவர், அடக்கி ஆண்டவர், மண்ஆண்டவர், பாராண்டவர் என்று மார்தட்டிக் கொள்ளும் சாதிகளில் கலந்துவிட்டது தெரிகின்றது. குறிப்பாக, வெள்ளாளர், துளுவ வேளாளர், படையாச்சி, கொங்கு வேளாளர், கள்ளர் முதலாய சாதிகளே அவை. பறையர்கள் சில இடங்களில் கிழார்களாக அல்லது கிழார்களிடத்திலும் அரையர்களிடத்திலும் பாடிகாவலர்களாக (பந்தோபஸ்து), ஊராளிகளாக, படைத் தலைவர்களாக இருந்த போர்க்குடிகளாவர். இதனால் இந்த அரையர், கிழார்களிடத்தில் பறையருக்கு பல நேரங்களில் அவமதிப்பு நேர்ந்துள்ளது. இந்த அவமதிப்பு பிற்காலத்தே 16-17 ஆம் நூற்றாண்டில் தீண்டாமையாக உருப்பெற்றது. மேற்கண்டதை விளங்கிக் கொள்ள சில கல்வெட்டுகள் சான்றாக உள்ளன.
இக்கால் பறையர்கள் பலர் தமது தீண்டாமைக் கொடுமைக்கு பிராமணரே பொறுப்பு, காரணம் என்று தப்பும் தவறுமாக எண்ணமிட்டு வருகின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தாக, எண்ணிக்கையில் குறைவான பிராமணரால் அவ்வாறு தம்மை தீண்டாமையில் ஆட்படச் செய்திட முடியாது என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடிகளாகக் கருதப்படும் அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் போன்றோர் பிராமணரை முன்னிலைப்படுத்தியே, பிராமணரை வெறுக்கும்படியாக எழுதியும் பேசியும் பரப்புரை செய்து வந்தது தான். இதைப் பறையர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லா பிற சாதிமாரும், அரையர் குடியில் வந்த சாதிகளும் கூட முழுமையாக நம்புகின்றர். இதனால் தமிழ்ப் பிராமணர் தமிழ்ச் சாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளனர். எப்படி என்றால் அடுத்த வரும் 500 ஆவது ஆண்டில் ஒரு குழந்தை பிராமண சாதியில் பிறக்கப் போகின்றது என்றால் அதையும் இதே வெறுப்பில்தான் தமிழ்ச் சாதிகளில் பலர் அணுகுகின்றனர். குழந்தை பிறக்கும் என்ற செய்தி மட்டும் தான் உறுதியே தவிர அதற்கு பெயர் இல்லை, அதன் வினை என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. அப்படிப் பட்ட நிலையிலும் அதன்மீதும் வெறுப்புக் கருத்து சுமத்தப் படுகின்றது. இது எந்த வகையிலும் பகுத்தறிவின்பாற்படாது என்பதை யாவரும் அறிவர். இதைப் பற்றி தமிழ்ச் சாதிகள் கருத்துத் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஈண்டு சில கல்வெட்டுகள் ஆராயப்படுகின்றன. இதைப் படித்தாவது தமிழ் மக்கள் இந்த அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கரின் கற்பனைக் கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் பறையர்கள் அரையர் குலத்தவரான பண்ணையார்களிடம் தான் வேலை செய்கின்றனர். அவருடைய சுரண்டலுக்கும் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாகி அவமானப்பட்டனர் என்ற வகையில் இந்த நிலக்கிழார் சாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும் என்பதை உணர்த்தாமல் பிராமணரை நோக்கி தப்பாக இம்மக்களை வழிநடத்தியதால் 130 ஆண்டுகாலப் போராட்டம், உழைப்பாற்றல், காலம் எல்லாம் வீணாகிப்போனது. இன்றுவரை பறையர் இழிவு, குறை தீரவில்லை என்பதே உண்மை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உடையவர் சன்னதி எதிரே 4 –ம் பிரகாரத்தில் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகள்.
கைக்கோளர் – செங்குந்தப் படைவீரர்; முதலி – தலைவர்; நாயநான – தலைவர்க்கு தலைவனான; மிணாட்டி – மனைவி; அம்மை – தாய்; மிணாளன் – கணவன்; உடன்வேளையாக - in no time, சட்டென்று.
விளக்கம்: அழகிய மணவாள மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவர்களுக் கெல்லாம் தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அந்தவகையில் இவர் உயிர் துறக்கும் முன்பே நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன்’’.
விளக்கம்: அரியானான கிடாரத்தரையன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன்’’.
விளக்கம்: உலகனான அழகானைச் சோழன் மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தப் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’ இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன்’’.
மேற்கண்ட மூன்று திருவரங்கக் கல்வெட்டில் மூன்று செங்குந்தர்களான கைக்கோளர்கள் படைத் தலைவர்களாக தனித் தனியே சூளுரை ஏற்றது பொறிக்கப்பட்டுள்ளது. கைக்கோளர் என்போர் பல்லவரது பட்டடைக்குடி / படைக்குடியாக பல்லவர்களால் உருவாக்கப்பட்ட தனி சாதியார் ஆவர். அரையரான அகளங்க நாடாழ்வான் இவர்களை கட்டாயப்படுத்தி எவ்வாறு இழிவாக சூளூரை ஏற்கசெய்துள்ளார் என்பது தெரிந்தாகிவட்டது. பார்வை நூலில் இவர்கள் சாகும் வரை வேலைக்காரனாக சாவதாக சூளுரை ஏற்பதாக பொருத்தமற்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. வேந்தர் பெயரும் காலமும் குறிக்காததால் கல்வெட்டின் காலம் என்ன என்று அறிய முடியவில்லை.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 24, பக்கம் 162, தொடர்ச்சியாக மூன்று கல்வெட்டுகள் (A.R.No 267 to 269 of 1930)
விழுப்புரம் மாவட்டம், ஜம்பை, ஜம்பநாதர் கோயில் கல்வெட்டு
செண்பை – ஜம்பை; காசாயம் - காசாக வந்த வரி; ஆளமஞ்சி – நீர்நிலைகள் பேண வரி; அன்தராயம் – நிலவரி அல்லாத அகநாட்டு வரி ; மாறுவான் – இந்த ஏற்பாட்டை மாற்றுபவன்; குடுப்பான் – கொடுத்தவன் ஆவான்.
விளக்கம்: காடவப் பல்லவன் கோப்பெருஞ்சிங்கனின் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1253) பொன்பரப்பின வாணகோவரையர் வழிவந்த வாணகோ இராசராச தேவன் வன்நெஞ்சராயன் தென்பெண்ணையின் வடகரையில் அமைந்த வாணகோப்பாடி நாட்டு செண்பை கிராமத்தில் அமைந்த திருத்தொன்தோன்றி ஆவுடையார் கோவிலின் தேவதானம் ஆன தென்பெண்ணை தென்கரையில் உள்ள குணமங்கலம் என்ற ஊரில் பயிர் செய்வதற்கு காசாயம், பொன்வரி, அன்தராயம் உள்ளிட்ட வரிகள் தண்டவேண்டாம் என்று வரிவிலக்கு அளித்தேன் என்கிறான். இந்த ஏற்பாட்டை மாற்றுபவன் தன் மனைவியை பரைமாயன் புணர விட்டுக் கொடுத்தவன் ஆவான். இந்த தர்மத்தை சிவபக்தர்கள் காக்க வேண்டும். பறையர் குறித்து வாணகோ வன்நெஞ்சன் கொண்டிருந்த இழி கருத்து இக்கல்வெட்டில் வெளிப்படுகின்றது.
பார்வை நூல்: தொல்குடி வேட்டுவர் சமூக ஆவணங்கள், ஆசிரியர் ப. ஆனந்தகுமார், பக்.106
கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில்
ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சொழதேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு 11 வதுக் கெதிராவது புரட்டாதி மாதம் 18 தியதி ஞாயிற்றுக் கிழமை முதல் வாயறைக்கா நாட்டுப் பல்லவிடத்தில் வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலனேன். நாயனார் திருமுருகன்பூண்டி ஆளுடையார்க்கு கோயில் நாயகர்க்கு நாளொன்றுக்கு நாழியரிசி அமுதுபடி செல்வதாக இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காஸ்ய கோத்திரத்து அவிநாசி முருகனான சீகாழியானும் அவிநாசிமுருகன் உள்ளிட்டாரும் சாந்தாரைக் காப்பான் திருவேங்கடமுடையானும் இவ்வனைவோங்கள். இவ்வச்சு பத்துக் கொண்டு எங்கள் மக்கமக்கள் குடங்கொண்டு கோயில் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செல்வதாக. இது பன்மாகேஸ்வர ரட்சை.
நல்லியாண்டு – முடிசூட்டிய ஆண்டு, வெள்ளாளன் – கிழான் அல்லது அரையன், மாப்புள்ளி – தலைமை மதிப்பீடு செய்வோன், chief assessor, சாந்தாரை – சந்தனக் கல், மக்க மக்கள் – பேரர் வழிப் பேரர்.
விளக்கம்: கொங்கு சோழன் விக்கிரமசோழன் முடிசூட்டி 11 ஆம் ஆண்டிற்கு எதிர்ஆண்டான 12 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1285) புரட்டாசி மாதம் 18 –ம் நாள் ஞாயிறு தொட்டு வாயறைக்கா நாட்டு பல்லடத்தின் கிழானான வெள்ளாளனிடத்தில் மாப்புள்ளியாக பொறுப்பில் இருக்கும் சோழன் பறையனான தனபாலன் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஒவ்வொரு நாளும் அமுதுபடிக்காக நாழியரிசிக்கு பத்து அச்சு வழங்கினான். இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காசியப கோத்திரத்து அவிநாசி முருகன் சீகாழியான், அவிநாசி முருகன், திருவேங்கடமுடையான் ஆகியோர் பத்து அச்சு பெற்றுக்கொண்டு மக்களுக்கு மக்கள் என வழிவழிப் பேரர் காலம் வரை இதைநடத்தி வருவோம் என்று உறுதி கூறுகின்றனர்.
இதனால் சோழப்பறையன் தனபாலன் கோவிலில் நுழைந்து இறை வழிபாடு செய்துள்ளான் என்று உறுதி ஆவது தீண்டாமை அக்கால் இருந்த்தில்லை என்பது மட்டுமல்ல அவன் தலைமை மதிப்பீட்டாளனாக இருந்துள்ளான் என்பது பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதையும் தெரிவிக்கின்றது. இதாவது, நிலம், பயிருக்கு வரி மதிப்பீடு செய்தான் என்பதற்கு சான்று. இக்கல்வெட்டு பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதற்கு சான்று.
பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.
மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம் பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.
விளக்கம்: வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர் ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.
ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி சூளுரை செய்துள்ளனர். அரசியல் அறியாத வெகுளி மக்கள் அவர்கள் என்று தெரிகின்றது. இவர்கள் பறையரை இழிவாக மதிப்பிட்டது படைத்துறையில் அப்படியாக இருந்த ஒரு சொல்வழக்கைப் நமக்குப் புலப்படுத்துகின்றது. இக்கல்வெட்டில் சாதி குறிப்பிடப்படுவது சாதிமுறை 13 ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றுவிட்டதைக் காட்டுகின்றது.மொத்தத்தில் கல்வெட்டுச் செய்தி அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறது.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 49-50, (A.R.No 105 of 1990)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPS_eqm5wyw%3DuhNTOA817e-0D720w64MPn5Bcx72P0CAEQ%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQbu3M2y8jmSxk948s8K7FxVCiW-J_SK4jzafbTgTcodw%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செங்குந்தமுதலியார் சாதியினரை பறையர் என்கிறீர்களா? அதற்குச் சான்று உள்ளதா?
On Sun, Jun 16, 2019 at 9:08 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
கொ ங்கில் பறையர் இருந்துள்ளனர். அது பற்றிய பதிவுகள் 15 மேல் இட்டுள்ளேன். நீங்கள் சொல்லும் மாதிக தெலுங்கரா? தமிழரா?
இன்னும் இரு கல்வெட்டு
திருக்கோவிலூர் வட்டம், கீழூர் வீரட்டேசுவரர் கோயில் தென் கருவறைச் சுவர் 13 வரிக் கல்வெட்டு.
திருமேற்பூச்சு – காப்பு; திருப்பரிசட்டம் – ஐம்பொன் மேனிக்கு சாற்றும் ஆடை; குற்ற தண்டம் – fine for guilt; கடையிறை – கடைக்கு இடும் வரி; கந்நார் இறை – கல்நார் வரி; ஆசுவி காசு – ஊர்க் காவலர்க்கான வரி ; பட்டி தெண்டம் – இடையர் செலுத்தும் தண்டம், fine; வாரா ஆட்த் தண்டம் – வேலைக்கு வராத ஆள் செலுத்தும் தண்டம், fine; விளக்காள் தண்டம் – விளக்கிற்கு எண்ணெய் ஊற்றாததற்கு தண்டம்; இறக்குவான் – நிறுத்துபவன் மணாட்டி – மனைவி
விளக்கம்: குலோத்துங்க சோழனுக்கு 33 ஆம் ஆட்சிஆண்டில் (பொ. ஊ 1211) ஆறகளூரை ஆளும் இராசராச தேவன் பொன்பரப்பினான் வாணகோவரையன் திருக்கோவிலூர் வட்டம் அமைந்த கீழையூரில் வீரட்டேசுவரர் கோவில் இறைவர் திருமேனிப் பூச்சிற்கான காப்பிற்கும் ஐம்பொன் மேனிக்கு ஆடை சாற்றவும் கொவிலிலும், கோவிலைச் சுற்றிய இடங்களிலும் தண்டனைத் தொகையாக வரும் குற்ற தண்டம், தறி வரி, கடை வரி, கல்நார் வரி, ஊர்க்காவலர்க்கான வரி, இடைய்ர செலுத்தும் பட்டி தண்டம், திருநாளில் சாமி தூக்குதற்கு வாராதார் கட்டும் தண்டம், விளக்கில் எண்ணெய் விடுவார் கட்டும் தண்டம் ஆகியனவற்றை இறைரவக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிறான் அரையன் வாணன். இதை தடுப்பார் குறால் பசுவை தின்பார் அடையும் பாவம் அடைவர். நான் ஏறிச் செல்லும் குதிரைக்கு புல் போடுகின்ற பறையனுக்குத் தன் மனைவியைப் புணர விட்டவன் ஆவன். இதை சிவனடியார் காக்க வேண்டும்.
பிற கல்வெட்டில் இல்லாதபடி இக்கல்வெட்டில் கோவிலிலும் அதன் குடியிருப்பு பிரகாரத்திலும் தண்டம் விதிக்கப்பட்ட அரிய செய்தி வியப்பைத் தருகின்றது. இதன்படி எல்லா தண்டமும் (fine) அரையனாகிய அரசனுக்குச் செல்கின்றது என்பது புரிகின்றது.
இதில் அரையன் தன் குதிரைக்கு புல்போடும் பறையனை அவமதிக்கின்றான். இந்த பண்பு ஏனென்றால் பறையர் பெரும்பாலார் படைத் துறையில் கடைநிலைப் பணியாளராகவே இருந்துள்ளனர். இதாவது, படையெடுப்பின் போது வழியில் மரஞ்செடி கொடிகளை வெட்டி வழி ஏற்படுத்துதல், குடிக்க நீர் கொண்டு வருதல், சமைத்தல், போர்க்களத்தில் வீழ்ந்த விலங்கு, மனிதர் பிணங்களை அகற்றுதல, காயமுற்ற மனிதர் விலங்குகளுக்கு மருந்திடுதல், விலங்குகளுக்கு புல் தழை ஓலை இடுதல் போன்றன. இவை தவிர்க்க முடியாத மிக முக்கியமான தொண்டு என்றாலும் இவற்றை அரையரான படைத்தலைவர்கள் தாழ்வாக கருதியதே இதற்கு காரணம் என்று புரிந்து கொள்ளமுடிகின்றது.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 451, (A.R.No 283 of 1902)
திருக்கோவிலூர் வட்டம், கீழூர் வீரட்டேசுவரர் கோயில் தென் கருவறைச் சுவர் 18 வரிக் கல்வெட்டு
விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனுக்கு 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1218)குறுக்கை கூற்றத்தில் அமைந்த திருக்கோவிலூர் வீரட்டானமுடைய இறைவர்க்கு கிளியூர் மலையமான் இரையூரான பெரிய உடையான் இராசராசச் சேதிராயன் தை மாதம் உத்தராயணத்தில் இவ் இறைவரை வணங்கி தன் தகப்பனுக்கும் தனக்கும் உடல் நன்றாக வேண்டி எட்டு திருநந்தாவிளக்கு எரிக்க ஏற்பாடு செய்கிறான். இதற்காக 4,000 குழி நிலத்தை கொடையாகக் கொடுக்கின்றான். இதை இக்கோவில் கருவறைப் பிராமணர்கள் பெற்றுக் கொண்டு தாங்களே உழுது பயிர்செய்து கொள்வதாக சொல்லி இவ்விளக்குகளை நிலவும் ஞாயிறும் நின்று நிலவும் வரை எரிப்பதாக உறுதிகூறினர். இந்நிலத்திற்கு நீர் வரி, பிற உள்ளூர் வரி, ஊர்க்காவல் வரி ஆகியனவற்றை நீக்கி இறையிலி செய்கின்றான் சேதிராயன். இதை தடுப்பவன் கங்கை குமரி இடையே வாழ்பவர் செய்யும் பாவம் ஏற்பான் அதோடு என் குதிரைக்கு புல் அளிக்கும் பறையனுக்கு தன் மனைவியை புணர விட்டவன் ஆகுவான். இந்த கொடையை சிவனடியார் காக்க வேண்டும்.
மலையமான் சேதிராயனும் இதில் தன் குதிரையைப் பேணும் பறையனை அவமதிக்கின்றான்.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 453, (A.R.No 288 of 1902)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPT%3D9TuR_5akEr1_6EE4ZQ0jq2dbdmi%3D2A4Sy13zbX6XAw%40mail.gmail.com.
///மலையமான் சேதிராயனும் இதில் தன் குதிரையைப் பேணும் பறையனை அவமதிக்கின்றான் ///' மலையமான் ' ஒரு வேந்தன் .' -மான் ' என்னும் பின்னொட்டு பெயரில் இருந்தாலே அவர்கள் முடியணிந்த வேந்தர் ஆவர்.சேரமான்அதியமான்தொண்டைமான்ஓய்மான்வெளிமான் எல்லோரும் வேந்தரே.மலையமான் திருமுடிக்காரி என்றுதான் சங்கநூல் கூறுகிறது......முடியணிந்தவன் வேந்தனாவான்.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsu4VCEgC5gsd_%3DcxgL8Fa6fEyh67rRgZDUGGh8Fpmq6w%40mail.gmail.com.
///மலையமான் சேதிராயனும் இதில் தன் குதிரையைப் பேணும் பறையனை அவமதிக்கின்றான் ///' மலையமான் ' ஒரு வேந்தன் .' -மான் ' என்னும் பின்னொட்டு பெயரில் இருந்தாலே அவர்கள் முடியணிந்த வேந்தர் ஆவர்.சேரமான்அதியமான்தொண்டைமான்ஓய்மான்வெளிமான் எல்லோரும் வேந்தரே.மலையமான் திருமுடிக்காரி என்றுதான் சங்கநூல் கூறுகிறது......முடியணிந்தவன் வேந்தனாவான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jv_Pj6gA897o4wAd-1v84zE3t1Ha2bhZNS%3D3tYq8tm9w%40mail.gmail.com.
இல்லை ஐயா ."தமிழ் கெழு மூவர்" சேர சோழ பாண்டியர் என்ற மூவர்.இந்த மூவரும் இப்புகழ் மொழியைப் பெற்றுக் காலூன்றும் முன்னர் பல வேந்தர்களை நசுக்கி இருக்கிறார்கள். இதற்குப் புறநானூற்றுப் பாடல்களே சான்று பகர்கின்றன.