Re: சிற்றருவி ! பேரருவி !

18 views
Skip to first unread message

Oru Arizonan

unread,
Dec 12, 2014, 6:15:15 PM12/12/14
to சி. ஜெயபாரதன், mint...@googlegroups.com
நண்பர் ஜெயபாரதன்.

தங்கள் கவிதை "சிற்றருவி, பேரருவி"  தாரகையில் வெளிவந்திருக்கிறது.  கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

2014-12-12 15:46 GMT-07:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

kutralam-niagara1

சி. ஜெயபாரதன், கனடா


இறை வணக்கம்


அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! - பண்டைமுதல்
குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
வற்றாத் தமிழூட்ட வா !

***********

கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! - முற்றிலும்
தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
ஓரளவு தேறிடவே ஓது !

***********

குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.

ஒரு கல்லில் அடிப்பேன்
இரு மாங்காய் !
இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
ஒரு மூச்சில் !

******************

குற்றால அருவி !

குற்றாலச் சிற்றருவி !
குதித்தோடும் தேனருவி !
வற்றி விடும் நீரருவி !
வான்தொடும் கானருவி !

குற்றாலம் வெண்ணருவி !
கொட்டுகின்ற தண்ணருவி!
சிற்றாறுக் குன்றருவி !
சிரித்தோடும் பொன்னருவி !

நயாகரா அருவி !

புவியிலே பேரருவி !
பூத உடல் நீரருவி !
கவிழ்ந்து விழும் கீழருவி !
கழுத்தொடிக்கும் பேயருவி !

முற்றிலும் மண்ணருவி !
முதலிரவுப் பெண்ணருவி !
குற்றாலம் விண்ணருவி !
குறைவாகும் சின்னருவி !

தோற்றம் கீழே உனக்கு ! வானத்
தோரணம் ஏது உனக்கு ?
போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
நாற்றச் சாக்கடைதான் !

குற்றால அருவி !

குற்றாலம் குளியருவி !
குடிமக்கள் தேனருவி !
நெற்றி நிமிர் மேலருவி !
நெளிதோடும் கானருவி !

குரங்காடும் நீரருவி !
கூடுகட்டும் ஊர்க்குருவி !
மரமாடும் சீரருவி !
மானோடும் ஓரருவி !

குற்றாலம் சிற்றருவி ! மழைக்
குன்றின் வெற்றருவி !
நயாகரா பேரருவி !
நல்வணிகர் பேருதவி !

குற்றால அருவி !

எளியவர் கண்டு களிக்கலாம் !
எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
துர்நாற்றம் இல்லா நீரது !
தூய்மை யான மழையது !

குற்றாலச் சூழ் வெளியே
சூழ்ந்து வரும் பூவாடை !
நயாகரா நதி வெளியே
நாகரீகச் சாக்கடையே !

நயாகரா அருவி !

ஆறாக ஓடி வரும் !
ஆத்திரமாய்ப் பாய்ந்து வரும் !
மாறாகத் தவ்வுது !
மண்ணைப் போய்க் கவ்வுது !

குரங்கில்லை ! குன்றில்லை !
மரமில்லை ! மானில்லை !
இயற்கை வனப்பழியும் ! எங்கும்
செயற்கை மினுக்குயரும் !

ஒருநதி இடையில் பிரியுது !
இருநீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
பிரமிப் பான காட்சிதான் !
பேரிடி கேட்கும் மூச்சிதான் !

குற்றால அருவி !

வெள்ளிக் கதிர் எழுமருவி !
வேகமாய் விழுமருவி !
துள்ளி வரும் நீரருவி !
தூங்கி விடும் ஓரருவி !

ஆன்மீக நாட்டருவி !
ஆடிவரும் காட்டருவி !
நான் விழையும் நீரருவி
நாத எழும் சீரருவி !
நயாகரா அருவி !

வாணிபச் சந்தை அது !
வஞ்சிப்போர் மந்தை அது !
தோணியிலே சென்றாலும்
துட்டுத்தான் கரையுதடா !

காசிருந்தால் நீர்வீழ்ச்சி !
காசுரிக்க ஓர்சூழ்ச்சி !
காசிருந்தால் சூதாட்டம் !
காசிழந்தால் போராட்டம் !

பகலிரவாய் நீர் பாயும் !
பார்த்தாலே குடல் சாயும் !
மகத்தான நீர்வீழ்ச்சி !
மாறான கண்காட்சி !

மின்சக்தி உருவாக்கும் !
மின்வெளிச்சம் நிற மூட்டும் !
வானூர்தி வட்டமிட்டு
வானிருந்து நதி காட்டும் !

குற்றால அருவி !

பசுமை மரமுண்டு !
பாடும் குயிலுண்டு !
அசையும் இலையுண்டு !
அத்தனைக்கும் உயிருண்டு !

பட்டப் பகலில் பரிதி ஒளி !
பறவை பாடும் பண்ணின் ஒலி !
எட்டும் இரவில் நிலவின் வெளி !
என்றும் மாறா வண்ண ஒளி !

நயாகரா அருவி !

நயாகரா நீர்வீழ்ச்சி
நாணயப் படக்காட்சி !
உயிரில்லை !
உணர்வில்லை !
ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

வான வில்லாய்
நீர்வீழ்ச்சி இரவில்
மாறிவிடும்
நிறக் காட்சி !
வீணாகும் மின்சக்தி  !
வேடிக்கை ஒளியுக்தி !

நயாகரா காதலர்க்கு !
நாடிவரும் வாணிபர்க்கு !
வயாகரா மானிடர்க்கு !
வாடிக்கை மாதருக்கு !

சிற்றருவியா ? பேரருவியா ?

டாலர் வாழும் நயாகாரா !
டாலர் ஆளும் நயாகரா !
டாலர் கூடும் நயாகரா !
டாலர் நாடும் நயாகரா !

குபேரச் சாக்கடையில் முங்கிக்
குளிப்பது யார் தற்காலம் ?
குசேலக் குற்றாலம் பொங்கிக்
குளிப்பது நம் பொற்காலம் !


***********



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Dec 16, 2014, 7:47:00 PM12/16/14
to mint...@googlegroups.com, jayaba...@gmail.com, vallamai


On Friday, December 12, 2014 3:15:15 PM UTC-8, oruarizonan wrote:
நண்பர் ஜெயபாரதன்.

தங்கள் கவிதை "சிற்றருவி, பேரருவி"  தாரகையில் வெளிவந்திருக்கிறது.  கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

குற்றால அருவியின் பெருமையை திரு. ஜெயபாரதன் நயாகராவுடன் ஒப்பிட்டு அருமையாக எழுதியுள்ளார்கள்.

தமிழ்க்கடல் இராய. சொ. கட்டுரை மூலம் குற்றால அருவியை வர்ணித்துள்ளார். அவரது கட்டுரைத்
தொகுப்பு நூலொன்றுக்கே இக்கட்டுரையால் பெயர் அமைந்தது.

இராய. சொ., திருத்தலப் பயணம்,

அவரது சில நூல்கள்,

இன்னும் ஒரு 30 நூல்கள், 100 கட்டுரைகளாவது எழுதியிருப்பார் தமிழ்க்கடல்.
தேடுவோரும், இணையமேற்றுவாரும் யார்?? அரசாங்கம் நினைத்தால் நடக்கும்.
தூண்டுங்கள். 

இராய. சொ. பதிப்பித்த நூல்களில் ஒன்று ‘வருணகுலாதித்தன் மடல்”
முருகதாஸ் வருணகுலசிங்கம் என்ற ஈழநாட்டு இளைஞன் தீப்பாய்ந்தபோது எழுதிய மடல்,

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages