பாராட்டுக்கள் ஐயா. தங்கள் உரையின் முழுப்பகுதி கிடைக்காவிடினும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக ஆழமான பார்வையைக் கொண்டவை. மூலத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவை. 1958-இல் SSLC-யில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களைப் படித்திருக்கிறேன். ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி -- ராகத்தோடு சொல்லிக்கொடுத்தார் தமிழாசிரியர் வீ.ப.நடராசன். இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இளமைக்கால நினைவுகளைத் தோண்டியெடுத்து அனுபவிக்க வைத்த தங்கள் செய்திக்கு மிக்க நன்றி.ப.பாண்டியராஜா
ஈழத்தின் பள்ளு இலக்கியங்கள் நான்கை நான் படித்திருக்கிறேன். இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் 1790களில் தென்காசியை சுற்றியுள்ள பகுதிகள் வடுக அரசர்களிடம் சென்றுவிட்டது.
ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய இந்த சுருக்கத்தைப் படித்ததும், முழு உரையையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பின், அதனை இங்கு இடுமாறு என் நண்பரை பணிவுடன் வேண்டுகிறேன்.
[இல்லேன்னா, முழு உரையையும் இங்கு தட்டச்சு செய்து இடணும்னு எங்க தேனு பாணில மிரட்டுகிறேன்!:))]
.1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை 2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம்
மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே
என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது
என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின்
கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி. 5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக்
காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப்
பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி
கட்டளைகளுக்கும்,
பிறவற்றிற்கும் சென்ற நிலை.7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால்
குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.8.அந்த மனைவியரிடையே எழும் பூசல்அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரையவெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். அங்கு இனக்கவர்ச்சியால் எழும்
சிக்கல்கள்.
"தமிழிலக்கிய நயம் பாராட்டல்" என்று அரைத்த மாவையே அரைக்காது சிற்றிலக்கியங்கள் வகைகளில் ஒன்றைப் பற்றி உரை அளித்த சொ.வி. ஐயாவிற்கு வாழ்த்துகள்.
புதியதகவல்கள் அறிந்தேன்..நன்றி. தொடர்க உங்கள் பணி.
..
கூட்ட முடிவில் பார்வையாயளர்கள் கருத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்படும். நான் காரைகுடியில் இருக்கும்போது மாதக் கூட்டங்களுக்கு செல்லும்போது அந்த மாதத்திற்கான் இலக்கியம் பற்றி இணையத்தில் பார்த்துவிட்டே செல்வேன்.
த.மு.எ.கலைஞர் சங்கத்தினர் பல ஊர்களில் ஆரவாரமின்றிச் சிறப்பான பணி செய்கிறார்கள். இலக்கியக் கூட்டங்களில் எந்தவிதமான இயக்கச் சார்பும் இராது.நன்றி.சொ.வினைதீர்த்தான்.
செட்டிநாட்டின் செம்மொழி கேட்கும் வாய்ப்பு எப்போது வரும்?
தங்கள் தமிழகப்பயணம் பற்றியும் நற்பணி குறித்த விவரங்களையும் மடலில் கண்டேன். பயணம் சிறக்க வேண்டுகிறேன். தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன். நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்கிறேன்.
2014-07-17 21:31 GMT+05:30 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:ஈழத்தின் பள்ளு இலக்கியங்கள் நான்கை நான் படித்திருக்கிறேன். இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் 1790களில் தென்காசியை சுற்றியுள்ள பகுதிகள் வடுக அரசர்களிடம் சென்றுவிட்டது.கருத்துக்கு நனறி திரு சுப்பிரமணியன். கதிரா மலைப் பள்ளு தரவிறக்கம் செய்து சில பகுதிகள் படித்தேன்.முக்கூடற் பள்ளுவில் காவை அம்பலவாணர் என்பாரின் பெயர் குRiப்பிடப்படுகிறது. அவர் கிளையில் வந்த வடமலைபக் கொழுந்து பிள்ளை பெயரும், சாத்தூர் பெரிய நம்பி அய்யங்கார் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாட பேதங்களை - திருமலை நராதிபதி - திருமலை நாயக்கரையும், சொக்கலிங்கேந்திர முகில் - சொக்கநாத நாயக்கரையும் சுட்டுகின்றனவென்றும் பாடபேதங்கல் ஆராயப்பட வேண்டுமென்றும் உரையில் படித்தேன்.1.காவை அம்பலவாணர் என்ற பெயரில் காவை என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
காவை என்னும் ஊரில் வாழ்ந்த அம்பலவாணத் தம்பிரான் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப்பெரியார். கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர். காவை என்பது திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள 'காவனூர்' என்னும் ஊர். பழுதை கட்டி-சம்பந்த முனிவரின் மாணாக்கருள் ஒருவர். சீர்காழியில் வாழ்ந்த இந்தச் சம்பந்தரிடம் ஞானம் பெற்று அவர் சமாதி அடைந்த பின் தம் ஊருக்கு வந்து பல மாணாக்கர்களை உருவாக்கி அவர்களுடன் வாழ்ந்தார். அம்பலவாணத் தம்பிரானை 'அம்பலவாணர்' எனவும் அழைக்கப்பட்டார். இவரைக் காவை அம்பலநாதத் தம்பிரான் எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர் பாடிய சைவ நூல்கள் பல.
பிராசாத அகவல், சிவப்பிரகாசக் கொளு. சத்தி நிபாத அகவல், உருப சொரூப அகவல், முதலானவை குறிப்பிடத் தக்கவை.
காவை அம்பலநாதத் தம்பிரான் 14ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு முற்பகுதி வரை வாழ்ந்தவர். தமிழ்நாடு திருப்பரங்குன்றத்தைஅடுத்த காவனூர் (அல்லது காவை) இவரது சொந்த ஊர். இவர் சிவப்பிரகாசத்திற்குக் குறள் வெண்பாவில் 100 கொளுவும், பகுத்துணர்த்தும்கலிவெண்பாவும் பாடியவர். பிரசாத அகவல், உரூபசொரூப அகவல், திருவருட்பயன் உதாரணக் கலித்துறை ஆகியவற்றை இயற்றினார்[1]
அம்பலநாதத் தம்பிரான் சீர்காழி பழுதை கட்டிச் சம்பந்த முனிவரின் மாணாக்கர். மதுரை சிவப்பிரகாசரால் போற்றப்பட்டவர். சிவப்பிரகாசரின் இருபாவிருபது உரை மூலம் இவரது சீடர் மதுரை ஞானப்பிரகாசத் தம்பிரான் என அறியப்படுகிறது[1].
2.வடுகர் வைணவரா?
3.1780ல் நாயக்கர் ஆட்சியா? மன்னர் யாரென்றும் அறிய ஆவல்.
On Thursday, July 17, 2014 10:42:15 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
2014-07-17 21:31 GMT+05:30 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
ஈழத்தின் பள்ளு இலக்கியங்கள் நான்கை நான் படித்திருக்கிறேன். இங்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் 1690களில் தென்காசியை சுற்றியுள்ள பகுதிகள் வடுக அரசர்களிடம் சென்றுவிட்டது.
செய்திகளுக்கும் விவரங்களுக்கும் நன்றி திரு கணேசன். நன்றி திரு தென்காசி சுபிரமணியன்.1680 ஆட்சி பற்றி அறிந்துகொண்டேன்.காவை அம்பலவாணர் என்பவர் திரு கணேசன் தந்துள்ள அம்பலநாதத்தம்பிரான் என்பவரில்லை எனக் கருதுகிறேன். ஏனெனில் நூல் குறிப்பிடுபவர் குடும்பம் உடையவர். இவர் வள்ளல். இவருடைய கிளையில் வந்தவர் வடமலையப்ப பிள்ளை.“பாவலர்க்கு உபகாரி காவையும் பலவாணான்பலகிளையும் தழைக்கவேகூவாய் குயிலே” என்பது பாடல்.