நன்றி தெரிவிக்கும் நாள் ...

88 views
Skip to first unread message

rajam

unread,
Nov 22, 2011, 10:17:50 PM11/22/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Narayanan Kannan
இங்கே சீக்கிரம்
வருகிறது ... வருகிற
வியாழக்கிழமையில் (24th).


Thanksgiving Day என்பதைப் பலரும் பல
வகையில்
புரிந்துகொள்ளலாம். இதன்
தொடக்கம் பற்றிய விவரத்தை
இங்கே பார்க்கலாம்: http://
en.wikipedia.org/wiki/Thanksgiving_(United_States)

யாருக்கு எப்படியோ,
எனக்கு அந்த நாள்
முக்கியமான நாள். சாதி, மத,
இன வேறுபாடு இல்லாமல் பல
வகைப்பட்ட மக்களும் உறவாட
ஒரு வாய்ப்புத் தரும்
நாளாக அதை
எடுத்துக்கொள்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
வரை ... ஒவ்வோர் ஆண்டும்
இந்த நாளில் பெரிய
விருந்து சமைத்துப்
பலரையும் அழைத்துப்
பரிமாறி
மகிழ்ந்திருக்கிறேன்.
இப்போதோ ... ஒன்றும்
முடியாமல் சுணங்கிப்
போய்விட்டேன்.

ஆனாலும் ... நன்றி
தெரிவிக்கும் வாய்ப்பை
நழுவ விடலாமா?


போன ஆண்டு இந்த
நேரத்தில்தான்
"ஆபுத்திரன் கதை" சொல்லத்
தொடங்கினேன்.
அதற்குப்பின் மணிமேகலைக்
கதை எந்த அளவிற்கு
நமக்குத்
தெரியவந்திருக்கிறது
என்று
நினைத்துப்பார்த்தால் ...
அந்தச் சீத்தலைச்
சாத்தனாருக்கு நன்றி
சொல்லாமல் இருக்க முடியுமா?

இணைய நண்பர்கள்
அனவருக்கும்
அன்பிற்காகவும்,
நட்பிற்காகவும்,
அறிவிற்காகவும் ... மிக மிக
நன்றி!

அன்புடன்,
ராஜம்


Narayanan Kannan

unread,
Nov 22, 2011, 11:20:44 PM11/22/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
ஆகா!

எந்நன்றி கொன்றார்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு!

எல்லோருக்கும் நன்றி, நன்றி, நன்றி!

நா.கண்ணன்

2011/11/23 rajam <ra...@earthlink.net>:

க.இராமச்சந்திரன்

unread,
Nov 22, 2011, 11:40:21 PM11/22/11
to mint...@googlegroups.com


2011/11/23 rajam <ra...@earthlink.net>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 வணக்கம் அம்மா ,
 
நல்ல செய்தி சொல்லிஉள்ளீர்கள் .
 
"நன்றி சொல்லுகிறோம் உங்களுக்கு "
 
மேலும் ,
 
எனது பள்ளி பருவ ஹீரோ  "ஆபிரகாம் லின்கன்" அவர்களின் படத்தை பார்க்கும் சந்தர்ப்பத்திற்கும்  
ஒரு நன்றி... ..
 
என் சிந்தையை  ஆக்ரமித்த  முகம் ....அது..
 
அந்தமுகத்தை பார்த்தாலே   ....நான் பெறுகின்ற சக்தி... ஆஹா..
 
அந்த 6.4   அடி  உயரம்  ...
(அவரின் 6.4   அடிக்கு முயற்சித்தும்  5.11   அடிதான் எய்தமுடிந்தது...)
 
ஒரு குழந்தையின் வேண்டுகோளுக்குகாக அவர் வளர்த்த தாடி..
(அவரைப்போல் தாடி வைக்க முயற்சித்தும் ...முஸ்லிம் தாடிதான் வந்தது ...)
 
இன்றும் எனக்கு ஒரு உத்வேகம்தரும் ஹீரோ அவர்....
 
நன்றி அம்மா....
 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

coral shree

unread,
Nov 22, 2011, 11:52:54 PM11/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Narayanan Kannan
அன்பின் ராஜம் அம்மா,

சத்தியமான வார்த்தைகள்... நானும் என் நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சில நேரங்களில் எங்கோ படிக்கும் ஒரு சில வார்த்தைகள் கூட ஒரு சில உள் காய்ங்களுக்கு மருந்தாக அமையலாம்... அப்படி எத்தனையோ வார்த்தைகள் நம் குழுமங்களில்...... அத்துனை நல்லியதங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

2011/11/23 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

செல்வன்

unread,
Nov 23, 2011, 1:27:08 AM11/23/11
to mint...@googlegroups.com
நம் அனைவருக்கும் தமிழ்பாடம் எடுக்கும் ராஜம் அம்மாவுக்கும் இந்த நன்னாளில் நம் அனைவரின் நன்றியையும் தெரிவிப்போம்.

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





coral shree

unread,
Nov 23, 2011, 2:18:11 AM11/23/11
to mint...@googlegroups.com
ஆம் செல்வன் சரியாகச் சொன்னீர்கள்... ராஜம் அம்மா, நன்றி,நன்றி நனி நன்றி.

2011/11/23 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Nov 23, 2011, 2:19:28 AM11/23/11
to mint...@googlegroups.com
நம் அனைவருக்கும் தமிழ்பாடம் எடுக்கும் ராஜம் அம்மாவுக்கும் இந்த நன்னாளில் நம் அனைவரின் நன்றியையும் தெரிவிப்போம்.

மணிமேகலை, சங்க இலக்கியம் என பலவும் மின் தமிழில் கற்றுத்தரும் ராஜம் அம்மாவிற்கு நன்றிகள் பல.

ராஜசங்கர்



2011/11/23 செல்வன் <hol...@gmail.com>
நம் அனைவருக்கும் தமிழ்பாடம் எடுக்கும் ராஜம் அம்மாவுக்கும் இந்த நன்னாளில் நம் அனைவரின் நன்றியையும் தெரிவிப்போம்.

Innamburan Innamburan

unread,
Nov 23, 2011, 2:57:15 AM11/23/11
to mint...@googlegroups.com

முனைவர் ராஜத்தின் பாடங்களால் யான் அடைந்த பயன் பெரிது. நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க. ஸுபாஷிணி அளிக்கும் ஊக்கம் தொத்திக்கொள்ளும் தன்மை உடையது. நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க. 

கண்ணன் மின் தமிழை கண்ணின் கருமணியாக போற்றுகிறார். நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.

அவ்வப்பொழுது மிரட்டும் சீதாலக்ஷ்மி என்றுமே நல்வருகை. நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க. 

மின் தமிழர் கூட்டம் ஒரு அன்பர்கள் கூட்டம். நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க. 

விட்டுப்போன நண்பர்கள் பல. அவர்கள் யாவருக்கும் நாள்தோறும் நன்றி நவிலும் நாள் என்க.

இன்னம்பூரான்


2011/11/23 Raja sankar <errajasa...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 23, 2011, 5:06:46 AM11/23/11
to மின்தமிழ்

ஊன் பொதி உடம்புக்கும் நன்றி
உலகின் ஆருயிர்கட்கு நன்றி
உயிர்சார் உணர்வுக்கும் நன்றி
கானுக்கும் கடலுக்கும் நன்றி
கானும் கடலும் கடந்திமையோர்
இடுக்கண் தீர்த்த இராமபிரானுக்கும் நன்றி

கடைசிவரி தந்த கம்ப ராமாயணத்துக்கும் நன்றி !!
அன்பு நண்பர்கள் அனைவர்க்கும் நன்றியோ நன்றி !!!


தேவ்

Vijay Vanbakkam

unread,
Nov 23, 2011, 5:14:45 AM11/23/11
to mint...@googlegroups.com
 
நன்றி? யார் யாரிடம்?
 
 
http://groups.google.com/group/mintamil/msg/fdb537dc3fd4d59a
 
வி

 
 

Tthamizth Tthenee

unread,
Nov 23, 2011, 5:46:51 AM11/23/11
to mint...@googlegroups.com
நன்றி கூறும் பழக்கம் மிக இனிமையானது

நம் மனதை மிகவும் இளகச்செய்து பலவிதமான நற்சிந்தனைகளுக்கு தூண்டுகோலாய் இருப்பது

ஆகவே சகோதரி ராஜம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/11/23 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>:


>
> நன்றி? யார் யாரிடம்?
>
>
> http://groups.google.com/group/mintamil/msg/fdb537dc3fd4d59a
>
> வி
>
>
>
>

Nagarajan Vadivel

unread,
Nov 23, 2011, 6:30:43 AM11/23/11
to mint...@googlegroups.com
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி

http://www.youtube.com/watch?v=JGdBvKk13jo

நாகராசன்

2011/11/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 23, 2011, 6:04:53 AM11/23/11
to mint...@googlegroups.com


2011/11/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

நன்றி கூறும் பழக்கம் மிக இனிமையானது

என்னை எழுதச் செய்யும் உந்தலுக்கும்; 
உந்தலுக்கு எழுச்சியான சக்திக்கும்; 
சக்தியின் குவிமையத்தை ஆக்கத்தில் நிறுத்தும் அறிஞர்களுக்கும்;
அறிஞர்கள் போட்டுத் தரும் வழிக்கும்
வழியில் இளைப்பாற்றி, வழியே தானாகும் வாலறிவனுக்கும்; 
வாலறிவன் தந்த இல்லச் சூழல், துணைகளுக்கும்
துணையாகத் தான் நிற்கும் வெற்றிவடிவேலனுக்கும்
வேலனருளால் கிடைத்த நட்பு-உறவு வட்டத்துக்கும்
நட்பு வட்டத்தோடு ஒட்டி நிற்கும் அநட்பின் உண்மைக்கும்
உண்மையான, உளமார்ந்த, மனங்கனிந்த நன்றி.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 
--
அன்புடன்,
ஹரிகி.

Dhivakar

unread,
Nov 23, 2011, 10:28:08 AM11/23/11
to mint...@googlegroups.com
நன்றி என்பது மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன். ஆனால் அவன் இதைச் சரியாக பயன்படுத்துகிறானா என்பது நிச்சயம் கேள்விக்குரியதுதான்.

ராஜம் அம்மாவுக்கு முதற்கண் நன்றி!

மின் தமிழின் அத்தனை நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும், என்னை அன்புடன் அரவணைக்கும் தாய்க் குலத்துக்கும் பெரியவர்களுக்கும் நன்றியை நெஞ்சாரத் தெரிவித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தந்ததற்கு இன்னொரு நன்றி!!!

அன்புடன்
திவாகர்

2011/11/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Nov 23, 2011, 11:04:36 AM11/23/11
to mint...@googlegroups.com
நீங்கள் குறிப்பது எனக்குப் புரிகிறது. இதைப் போன ஆண்டு படித்த நினைவு. அதனால்தான் இப்போது தொடக்கத்திலேயே ஒரு disclaimer போட்டுச் சொன்னேன்: "யாருக்கு எப்படியோ, எனக்கு அந்த நாள் முக்கியமான நாள். சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் பல வகைப்பட்ட மக்களும் உறவாட ஒரு வாய்ப்புத் தரும் நாளாக அதை எடுத்துக்கொள்கிறேன்." 

ஒரு குறிப்பிட்ட நபருக்கு என்று இல்லாமல் இணையத்தில் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தேன். வீட்டில் அந்த நாளில் என் முன்னோர், ஆசிரியர், இறைவன் எல்லாரையும் நினைத்து மனதார நன்றி சொல்லிக்கொள்வேன். வாழ்நாள் என்பது நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நழுவிக்கொண்டே போகிறது. நல்ல நிலையில் இருக்கும் ஒவ்வொரு நொடிக்காகவும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான். :-) :-) :-)

பி. கு: ஒருவேளை கத்தோலிக்கக் கல்லூரியில் படித்துப் பணியாற்றியதன் விளைவாகவும் இருக்கலாம்! ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்தபின் எல்லாரும் சேர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி, அன்றைக்குச் செய்த தவறுகளுக்காக ... "Forgive me God for things I did that are not kind and good" என்று மன்னிப்புக் கேட்பதும் வழக்கம்!

rajam

unread,
Nov 23, 2011, 11:39:00 AM11/23/11
to mint...@googlegroups.com

நன்றி என்பது மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன்.

நான் படித்த இரண்டு கல்லூரிகளிலும் ஒரு நல்ல பழக்கம் ... காலையில் வகுப்பு தொடங்கும்போது இறைவணக்கம்; இது பொது மன்றத்தில் பாடும் இறைவணக்கப் பாட்டு தவிர. தியாகராசர் கல்லூரியில் (முதுகலை வகுப்பில்) ஒவ்வொரு நாளும் "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ... " என்ற திருவாசகம் சொல்லித்தான் வகுப்பு தொடங்கும். பாத்திமாக் கல்லூரியில் ஆங்கிலத்தில் "Almighty God, we acknowledge our dependence on Thee ..." என்ற ஒரு பாட்டை ராகம்போட்டு இழுத்தாற்போல் சொல்லுவோம் (பாடமாட்டோம்). மாலையில் கடைசி வகுப்பு முடிந்தவுடன் அன்றையத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்போம்.
இந்த நல்ல பழக்கமெல்லாம் இப்போது கல்லூரிகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் அவன் இதைச் சரியாக பயன்படுத்துகிறானா என்பது நிச்சயம் கேள்விக்குரியதுதான்.
சரியாகச் சொன்னீர்கள், திவாகர்! இங்கே யாரோ (கண்ணனா? எனக்கு நினைவில்லை) ஒருமுறை சொன்னதுபோல ... நம் நாட்டுச் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பு இருப்பதில்லை. அதிலும் இந்த "taken for granted attitude" இருக்கிறதே ... அது நம்ம ஆட்களை ரொம்பவே ஆட்டிப்படைக்கும்! நான் பட்டிருக்கிறேன்! :-)
வெளிநாடுகளில் ... இனந்தெரியாத ஒரு பிறவியாக அல்லல் படும்போதுதான் அந்தத் திருவள்ளுவர் சொன்ன "நன்றி" (== 'நல்ல செயல்') என்பது புரியத் தொடங்கும். 

விஜயராகவன்

unread,
Nov 23, 2011, 11:52:44 AM11/23/11
to மின்தமிழ்
ராஜம் அவர்களே

என் மடல் அவசரத்தில் எழுதிவிட்டேன். நீங்கள் இந்த இழையை பர்சனல் நோட்டில்
ஆரம்பித்தீர்கள் என பிறகுதான் உணர்ந்தேன். என் மடல் மறைந்து விட்டது என
கற்பனை செய்து கொள்ளுங்கள்.:)

நன்றி

விஜயராகவன்

Nagarajan Vadivel

unread,
Nov 23, 2011, 11:55:38 AM11/23/11
to mint...@googlegroups.com
அன்புடை ராஜம் அம்மா
தமிழகத்தில் தேங்க்யூ என்பதற்கும் அமெரிக்காவில் தேங்க்ஸ்கிவிங்க் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை இரு இடங்களில் வாழ்ந்தவர் என்ற முறையில் விளக்கம் கூறவேண்டும்
Thanksgiving in North America had originated from a mix of European and Native traditions.[1] Typically in Europe, festivals were held before and after the harvest cycles to give thanks for a good harvest, and to rejoice together after much hard work with the rest of the community.[1] At the time, Native Americans had also celebrated the end of a harvest season.[1] When Europeans first arrived to the Americas, they brought with them their own harvest festival traditions from Europe, celebrating their safe voyage, peace and good harvest.[1] Though the origins of the holiday in both Canada and the United States are similar, Americans do not typically celebrate the contributions made in Newfoundland, while Canadians do not celebrate the contributions made in Plymouth, Massachusetts.[2]

இதைப் படித்தால் இது நம் பொங்கல் நாள் போலத் தோன்றுகிறதே
நாகராசன்

2011/11/23 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Nov 23, 2011, 12:38:24 PM11/23/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
அன்புடைய பேராசிரியர் ஐயா,
நீங்கள் சுட்டியது உண்மை. நம் பொங்கல் நாள்போலத்தான் ... பலவகைக் காய், கனிகள் கிடைக்கும் நேரம். வான்கோழிகளுக்குத்தான் தொல்லை, பாவம். 
தமிழகத்தில் "தேங்க்யூ" என்பதற்கும் அமெரிக்காவில் "தேங்க்ஸ்கிவிங்" என்பதற்கும் "ஸ்நானப் ப்ராப்தி"யோ "பழவினை"த் தொடர்போ இல்லவே இல்லை!
தமிழில் "நன்றி" என்றால் "நல்ல செயல்" என்பது பொருள். "தேங்க்யூ" என்றால் என்ன அடிப்படைப் பொருளில் தமிழகத்தில் புழங்குகிறார்களோ தெரியவில்லை! இங்கே ஓர் அமெரிக்க நண்பர் பல பத்தாண்டுகள்முன் சொன்னார் ... தமிழ்ப் பயன்பாடுகள் பலவும் "cliche" என்று. அப்போது கோவம் வந்தது. சண்டை போட்டேன். பிறகுதான் அவர் சொன்னது உண்மை என்று புரிந்தது! 
அமெரிக்காவில் "தேங்க்ஸ்கிவிங்" ... பிற பண்டிகைகள் (கிறித்துமஸ், வேலன்ட்டைன்ஸ் நாள், ...) போலவே அவை தொடங்கப்பட்ட குறிக்கோளைவிட்டு விலகிப்போய் மாமாங்கக் கணக்கு ஆகும்! நான் பார்த்தவரை ... எல்லாமே வணிக நோக்கில் போய்க்கொண்டிருக்கு.
ஆனாலும் ... உள்ளதிலும் கிடைப்பதிலும் இருக்கும் நல்லதை எடுத்து அதைத் தழுவிக்கொள்ள எனக்குச் சம்மதமே
அன்புடன்,
ராஜம்

Innamburan Innamburan

unread,
Nov 23, 2011, 2:07:14 PM11/23/11
to mint...@googlegroups.com

நன்றி என்பது மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன். ஆனால் அவன் இதைச் சரியாக பயன்படுத்துகிறானா என்பது நிச்சயம் கேள்விக்குரியதுதான்.

~ என்ன திவாகர். ‘நாயும், நன்றியும்’ என்றும் அறிந்ததே. மனித இனம் விலங்கினம் போல் ‘அசலுக்கு’ மதிப்புக்கொடுக்காமல், ‘நகலில்’ உழல்வதால் தான், அவன் நன்றி நவிலலை கவிழ்த்து விடுகிறான். நான் புலியின் நன்றியை நேரில் பார்த்திருக்கிறேன்.

நம் நாட்டுச் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பு இருப்பதில்லை. அதிலும் இந்த "taken for granted attitude" இருக்கிறதே ... அது நம்ம ஆட்களை ரொம்பவே ஆட்டிப்படைக்கும்! நான் பட்டிருக்கிறேன்! :-)

~ நானும் இதில் அடி பட்டிருக்கிறேன். நமது இலக்கிய/கலை/புராதன வாழ்வியல் இம்மாதிரி இல்லாததால், இதற்கு எல்லாம் காரணம் ‘சமயமோ’ என்று சமயம் தெரியாமல் சொல்லி, கொளுத்திப்போட்டுட்டேன். Where are the Defenders of the Faith?

இன்னம்பூரான்

23 11 2011



rajam

unread,
Nov 23, 2011, 3:03:09 PM11/23/11
to மின்தமிழ், Nagarajan Vadivel, N. Kannan
ஒவ்வோர் ஆண்டும் (அதற்கு இடையிலும்) குறிப்பாக இந்த நாட்களில் ... அமெரிக்காவில் Thanksgiving Day நேரத்தில்  என் மனதை மிகவும் வருத்தும் ஒரு நினைவு ... செல்வி குழந்தை மீரா அனந்தகிருஷ்ணன் பற்றி.
செல்வி மீரா அனந்தகிருஷ்ணன் சென்னை ஐ. ஐ. டியில் படித்துத் தேறி, மேற்படிப்புக்காகப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்து இயற்பியல் துறையில் சேர்ந்தாள். வந்து சேர்ந்தது ஒரு செப்டெம்பர் மாதம்; அநியாயமாகக் கொலைப்பட்டது நவம்பர் மாதம்.
தமிழ்ப் பெண், பாவம். Thanksgiving நேரத்தில், விடுதியில் அறைத்தோழி ஊருக்குப் போயிருக்க, ஊருக்குப் புதிதாக வந்த இந்தப் பெண் தனியாக இருந்திருக்கிறாள். அந்த நாளில் ... Thanksgiving சாப்பாடு முடித்த திமிரில் ... கல்லூரிக்குத் தொடர்பில்லாத இரண்டு தெருத்தடியன்கள் கதவைத் தட்டித் தொலைபேசியைப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்க ... இந்தப் பெண் சரி என்று அவர்களை உள்ளே விட ... அந்தத் தடியன்கள் சும்மா அவளைக் கட்டிப்போட்டு ... ஒரு சிறு கத்தியால் அவளைக் கொன்று ... அவளுடைய bank card-ஐ மட்டும் எடுத்துக்கொண்டு ... பிறகு ஒரு bar-இல் ஒரு கொலை செய்த தற்பெருமையைச் சாற்றிக்கொண்டார்களாம்.
மீராப் பெண், பாவம். தனியாக இருந்திருக்கிறாள். உள்ளூர் விவகாரம் புரிந்திருக்க முடியாது. அவளுடைய அறைத்தோழி Thanksgiving விடுமுறை முடிந்து ஊரிலிருந்து வந்து கொலையைப் பார்த்தபோதுதான் பல்கலைக்கழகத்தில் செய்தி வெளியானது. எங்களுக்கெல்லாம் Daily Pennsylvanian மூலம் தாமதமாகத்தான் செய்தி தெரிந்தது. 
கொலை செய்தவன் தப்பித்துவிட்டான், தண்டனை இல்லாமல்.
மீரா கொலைப்பட்ட அதே நாளில் ... அடுத்த தெருவில் என் அலுவலக அறையில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். மழைக்காலம், குளிர், இருட்டு.
தடியன்களைச் சமாளிக்க நம் குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும், இது கட்டாயமாகச் செய்யப்படவேண்டும்.

Geetha Sambasivam

unread,
Nov 23, 2011, 5:07:55 PM11/23/11
to mint...@googlegroups.com
மனதை வருத்தும் செய்தி.  ஏற்கெனவே சொன்ன நினைப்பும் வருது. அல்லது செய்தித்தாளில் படித்தேனா; தெரியலை! :(((((
கொலைகாரனைப் பிடிக்கவில்லை என்பதும் வருத்தமாகவே இருக்கிறது.

 
2011/11/23 rajam <ra...@earthlink.net>
மீரா கொலைப்பட்ட அதே நாளில் ... அடுத்த தெருவில் என் அலுவலக அறையில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். மழைக்காலம், குளிர், இருட்டு.
தடியன்களைச் சமாளிக்க நம் குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும், இது கட்டாயமாகச் செய்யப்படவேண்டும்.
அன்புடன்,
ராஜம்

--

rajam

unread,
Nov 23, 2011, 8:52:27 PM11/23/11
to mint...@googlegroups.com
On Nov 23, 2011, at 2:07 PM, Geetha Sambasivam wrote:

மனதை வருத்தும் செய்தி.  ஏற்கெனவே சொன்ன நினைப்பும் வருது. அல்லது செய்தித்தாளில் படித்தேனா; தெரியலை! :(((((
கொலைகாரனைப் பிடிக்கவில்லை என்பதும் வருத்தமாகவே இருக்கிறது.


பிடித்தார்கள், கீதா. விட்டுவிட்டார்கள்.
மீராவின் நிலைக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்து விடுதிகளில் பாதுகாப்பு கூடியிருக்கிறதுபோல் தெரிகிறது. ஆனால், பாவம், போன பெண்ணை யாரால் மீண்டும் கொண்டுவர முடியும்? இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள்.
நம் குழந்தைகளுக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுவதைப் பற்றி நிறையச் சொல்லிக்கொடுக்கவேண்டும். 

ranganathan venkatachariar

unread,
Nov 23, 2011, 5:41:53 AM11/23/11
to mint...@googlegroups.com
 நன்றி நன்றி நன்றி 
அரங்கநாதன்/உத்திரமேரூர் 

2011/11/23 Vijay Vanbakkam <vcv...@hotmail.com>
 
நன்றி? யார் யாரிடம்?
 
 
http://groups.google.com/group/mintamil/msg/fdb537dc3fd4d59a
 
வி

 
 

--

rajam

unread,
Nov 23, 2011, 11:04:14 PM11/23/11
to mint...@googlegroups.com
சிக்கல் ஒன்றும் இல்லை;
புரிவுக்கு மிகவும் நன்றி!

அன்புடன்,
ராஜம்


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Dhivakar

unread,
Nov 24, 2011, 12:39:38 AM11/24/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
இ சார்!
நன்றி!!

ஆனால் நாயின் அந்த ‘உணர்ச்சிக்கு’ வேறு பெயர் உண்டே.. விசுவாசம்.. (விசுவாசத்துக்கு தமிழில் என்ன?) அந்த விசுவாசம் என்பது ஏதோ ஒரு கடன் வாங்கியதைக் கழிப்பது போன்றதாகப் படுகிறது. விசுவாசம் ஆராயாமல் அறியாமல் கொள்ளப்படும் உணர்ச்சிகளில் ஒன்று அல்லவா.. எந்த சுபாவமுள்ள இனத்துக்கும் சொந்தம்..

ஆனால் நன்றி என்பது ’பண்பும் பயனும் அன்பும்’ ஆராய்ந்து செயல்படும் திறனும் கொண்ட மனித இனத்துக்குதான் சொந்தம் என்று கருதுகிறேன்.

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்பெரிது -  இதில் விசுவாசம் இருக்கிறதல்லவா - நாய்க்கும், பிற இனங்களுக்கும் இது சொந்தம். பஞ்ச தந்திரக் கதைகளில் எறும்பு ஒன்று எப்படி வேடன் காலை கடைசி சமயத்தில் கடித்து அவன் அம்பை திசை திருப்ப உதவியதால், அவன் குறி பார்த்த பறவை தப்பியது, எனச் சொல்லும். (முன்பு இதே எறும்புக்கு அது தண்ணீரில் தத்தளிக்கும்போது அந்தப் பறவையானது ஒரு இலையை அலகால் கிள்ளிப் பறித்து தண்ணீரில் போட அதில் ஏறி எறும்பு தப்பித்ததாகக் கதை வரும்)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று - இங்கே எத்தனை ஆராய்ந்து கூறுகிறான் மனிதன்??

நாய் நாய்தான், மனிதன் மனிதன்தான்.

சிந்திக்க வைத்தமைக்கு நன்றி!!

அன்புடன்
திவாகர்

2011/11/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 25, 2011, 3:22:20 PM11/25/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
மின்னுலகிலும் அன்பினால் பிணைந்திருக்க முடியும் என தினம் தினம் இங்கே உறுதி செய்து கொண்டிருக்கும் மின்தமிழ் நண்பர்கள் உங்கள் அனைவரின் அன்பிற்கும் எனது நன்றி.
 
சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages