நன்றி தெரிவிக்கும் நாள் (Thanksgiving Day)

9 views
Skip to first unread message

rajam

unread,
Nov 18, 2010, 12:13:38 AM11/18/10
to மின்தமிழ், Mohanarangan V Srirangam
Thanksgiving Day எனப்படும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் எனக்குக் கொண்டாட்டமான நாள்!  

(ஸ்ரீரங்கனார் கவனிக்க. எனக்கும் கொண்டாட்டம் உண்டு! :-)
"ஸ்ரீரங்க விலாஸத்தில் தனக்குக் கொண்டாட்டமே எப்பொழுதும் இல்லை என்று ஒரு ஜீவன் சொல்லலாமோ?
ராஜம் அம்மாள் இன்றிலிருந்து இந்த வார்த்தையை அறவே விட்டுவிடக் கடவது !" என்று தீபாவளித் தொடர்பான ஓர் இழையில் சொல்லியிருந்தார்!)
இது அமெரிக்காவில் ஒவ்வொரு நவம்பர்த் திங்களிலும் கடைசி வியாழக்கிழமை கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவம்பர் 25-இல்.
இந்த நன்றி தெரிவிக்கும் நாள் ("பண்டிகை 'special occasion' / திருவிழா festival' / தெரு விழா 'parade day') அமெரிக்காவில்தான் எனக்குப் பழக்கமானது.  இதன் தொடக்க நோக்கம் எதுவாயினும் இன்று என் போன்றவர்களுக்கு மன நிறைவு தரும் நாள் -- பிறர்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இதை நான் பார்ப்பதால். எல்லா நாட்டவரும், எல்லாச் சமயத்தவரும், எல்லாக் குழுவினரும் கொண்டாடத்தக்க ஒரு பெருநாள்.
அமெரிக்காவில் இது ஒரு பெரிய கொண்டாட்ட நாள். பல இடங்களில் சிதறிக்கிடந்து வாழ்ந்துவரும் குடும்பத்தார் ஒன்றுகூடும் நாள். எப்பவும் போல் அமெரிக்கா சாப்பாட்டில் மூழ்கும் நாள். இந்த நாளில் ஒன்று மட்டும் எனக்கு வருத்தம் தருவது -- வான்கோழிகளுக்கு இது நல்ல நாளாக இல்லாதது.
இந்நாட்டில் என் முதல் நன்றி தெரிவிக்கும் நாள் (Thanksgiving Day 1975) என் ஆசிரியர் கார்டோனா வீட்டில். சிறப்பு விருந்தாளியான எனக்காக அவர் தம் மனைவியிடம் சொல்லிவைத்ததனால் எனக்குச் சாப்பிட அரிசிச் சோறும் மொச்சைப்பயறு போன்றதொரு பயறின் கறியும் கிடைத்தன. ஆனால்... அந்தக் குறிப்பிட்ட நாளின் அடையாளமாக என் அன்பு ஆசிரியர் சமைக்கப்பட்ட வான்கோழியைக் கத்தியால் கீறுபோட்டபோது ... கொஞ்சம் வயிற்றுக் குழப்பம்தான்! குடும்பத்தலைவன் அல்லது வீட்டில் உள்ள முதியவர் முழுதாகச் சமைக்கப்பட்ட வான்கோழியைச் சாப்பாட்டு மேசையில் விருந்தினர் முன் கீறுவது ஒரு வழக்கம்.  அதற்குப்பின் ஒவ்வொரு நண்பர் வீட்டிலும் எனக்கெனத் தனிச்சமையல் செய்தார்கள்! நன்றி.
நிற்க.
பல ஆண்டுகளுக்குப் பின் எனக்கு என்று ஒரு தனி இடம் அமைந்த பின், ஆண்டுதோறும் இந்த நாள்தான் எனக்குக் கொண்டாட்டமான நாள். பல வேறு நாட்டவர், பல வேறு சமயத்தினர், பல வேறு வயதினர் என் விருந்தினர். 10~15 பேரை அழைப்பேன். ஆசை ஆசையாகச் சமைப்பேன். எல்லாரும் மகிழ்ச்சியோடு கூடி, அன்போடு உறவாடி, மரக்கறி உணவைச் சுவைத்து உண்டுவிட்டு ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துவிட்டுப் போவார்கள். ஒரு முறை வந்திருந்த ஸ்லோவக்கிய (slovak) நாட்டு நண்பர் சொன்னது: "இப்படியும் உணவு கிடைத்தால் நான் இறைச்சியைத் தேடமாட்டேனே." அவருக்கு இந்திய உணவு மிகவும் விருப்பம்; ஆனால் இறைச்சி இல்லாமல்  ஒருபொழுதும் உண்டதேயில்லையாம்.
நிற்க.
கடந்த சில ஆண்டுகளாக Farm Sanctuary ( http://www.farmsanctuary.org/farm/ca/ ) என்ற நிறுவனத்தாரின் முயற்சிக்கு அவ்வப்போது என்னாலான தொகை கொடுத்து உதவுகிறேன். "வீகன்" (vegan) இயக்கத்தார் கண்டுகொள்க.
நிற்க.
இந்த ஆண்டு கால் கோளாறு (PTTD) காரணமாகப் பெரிய விருந்து செய்ய உடல் வலிமை இல்லை. ஆனாலும் ஏதாவது செய்வேன். செய்யும் உணவுகளை இயன்றால் படம் பிடித்தும் அனுப்புகிறேன்.
நிற்க.
சாப்பிடுவது மட்டும் இல்லை; ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒரு சில மணித்துளிகள் நின்று நம்மைச் சுற்றியுள்ள நிலையை நோக்கி, நாம் இந்த நல்ல நிலையில் இருப்பதற்கு நமக்கு உதவிய உறவினர், நண்பர், பிறர், பிற ... என்று எல்லாருக்கும் நன்றி தெரிவிக்க இந்த நாள் நல்லதொரு வாய்ப்பைத் தருவதனால் எனக்கு ஒரே கொண்டாட்டம்! :-)
 
உங்கள் ஊர்களில், நீங்கள் இருக்கும் நாடுகளில் இந்தக் கொண்டாட்டம் உண்டா? நீங்கள் எப்படிக் கொண்டாடுவீர்கள் என்று சொல்லுங்களேன்.
அன்புடன்,
ராஜம்

coral shree

unread,
Nov 18, 2010, 12:19:05 AM11/18/10
to mint...@googlegroups.com
அருமை அம்மா.......நன்றி பாராட்டுவதில் முக்கியமாக மனிதம் வாழுகிறது அல்லவா......மிக நல்ல சேதி......ஆனால் நாமெல்லாம் வருடம் முழுவதும் நன்றி பாராட்டுபவர்கள் அல்லவா? 

2010/11/18 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

செல்வன்

unread,
Nov 18, 2010, 12:24:24 AM11/18/10
to mint...@googlegroups.com
ராஜம் அம்மா,

நாங்கள் விமர்சையாக இதை கொண்டாடுவோம். சில வருடங்களாக என் அமெரிக்க நண்பர் ஒருவர் நன்றி அறிவித்தல் தினமன்று எங்களை ஹாலிடே இன்னுக்கு அழைத்து சென்று பஃபே விருந்தளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் நன்றி அறிவித்தல் தின விருந்துகளை தயார் செய்வோம்.செய்வோம் அல்ல...தங்கமணி செய்வார்:-)

அன்று பம்ப்கின் பை, ஸ்வீட் பொடேடோ பை. மேஷ்ட் பொடேடோஸ் என பலதையும் சுவைப்போம்.கிரான்பெர்ரி ஜூஸ் அருந்துவோம்.இந்த வருடம் எனக்கு பலவருடம் விருந்தளித்த நண்பரை விருந்துக்கு அழைத்துள்ளோம்.அவருக்கு பூரி மிகவும் பிடிக்கும்..நன்றி அறிவித்தல் தினமன்று அவருக்கு நன்றி தெரிவிக்க இந்திய உணவான பூரி சமைக்கபோகிறோம்:-) நன்றி தெரிவிப்பதுதானே அந்த நாளின் மரபு?அவர் பூர்வகுடி அமெரிக்கர் என்பது மேலும் சிறப்பான விஷயம். ஆனால் முழு பூர்வகுடி அல்ல.ஐரிஷ் மற்றும் பூர்வகுடி வம்சாவளி.

2010/11/17 coral shree <cor...@gmail.com>



--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



rajam

unread,
Nov 18, 2010, 12:24:46 AM11/18/10
to mint...@googlegroups.com
ஆமாம்! ஆனாலும் ... பவளஸ்ரீ ... எப்போதும் அன்பு பாராட்டும் கணவன் ஒரு நாள் கொஞ்சம் கூடுதலாக (!) எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாமல் (?!!) "கண்ணே முத்தே காதலியே கட்டிக்கரும்பே தேனே ... " என்று கொஞ்சினால் ... அதன் சிறப்புத் தனிதானே? ;-) ;-) ;-)

Tthamizth Tthenee

unread,
Nov 18, 2010, 12:29:23 AM11/18/10
to mint...@googlegroups.com
நம் நாட்டில் இது போல் நன்றி நவிலும் நாள்களைக் கொண்டாடமாட்டார்கள் என்று
தெரிந்தே நம் முன்னோர்கள் நமது இல்லங்களில் நடக்கும் திருமணவிழா,
போன்ற விழாக்களில் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு விருந்து அளிக்கும்
வகையில் உறவினர்கலை, நண்பர்களை, மற்றும் நாம் நன்றி சொல்லவேண்டியவர்களை
அழைத்து அவர்களுக்கும் அந்நாளில் அந்த விருந்தினை உபசாரம் செய்து
அளித்து மகிழும் வண்ணம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது

எனக்கு வேலை வாங்கித் தந்த ஒரு பெண்மணி (1966 ஆம் ஆண்டு)

அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறும் வகையில் நான் என்னுடைய வேலையிலிருந்து
34 ஆண்டுகள் கழித்து விருப்ப ஓய்வு பெற்ற வேளையில்
(2000 மாவது ஆண்டு) எனக்கு கிடைத்த வருமானத்தில் முதன் முதலாக ஒரு
பட்டுப் புடவையும், ரவிக்கைத் துண்டும் பழங்களும், வெற்றிலை பாக்கு
சகிதமாக, பூக்களும் வாங்கி ஒரு தட்டில் வைத்து அவர்கள் வீட்டிற்கு
சென்று நானும் என் துணைவியாரும் அவர்களையும் அவர்களது கணவரையும்
நிற்கவைத்து காலில் விழுந்து ஆசி வாங்கிகொண்டு எங்களின் இன்றைய
உயர்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று மனப்பூர்வமாக நன்றி கூறினோம்

அவர்கள் இருவரும் நெகிழ்ந்து மனப்பூர்வமாக எங்களை ஆசி கூறியது நினைவில்
நிற்கும் நிகழ்ச்சி

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/18 rajam <ra...@earthlink.net>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2010, 12:47:26 AM11/18/10
to mint...@googlegroups.com
எனக்கு அமெரிக்காவில் வணிகமும் கூட்டாளிகளும் இருப்பதும் அவர்கள் இந்நாளைப் போற்றும்வகையில் நன்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசில் வழங்கி மகிழ்வதையும் பார்த்திருக்கிறேன்
அதைவிடச் சிறப்பாக வணிக நிறுவனங்கள் நலிந்தோர் நலம்பெறக் குறைந்தவிலையிலும் இலவசமாகவும் பொருள்போக்கி நன்றி தெரிவிப்பது சிறப்பான சீரிய பணியாகும்
பொங்கலுக்கு இங்கே வந்த அமெரிக்கப் பேராசிரியர் ஒருவருக்கு நம் பொங்கலின் சிறப்பை எடுத்துச் சொன்னபொது அட இது எங்க நன்றி நவிலும் நாள் போல் இருக்கே என்றார்
அறுவடை அமோகம் அதற்குக் காரணம் இறைவன் என்ற எண்ணம் உலகெங்கும் உண்டு அது தொடர்பான விழாககளும் உண்டு
வாழ்க அமெரிக்கப் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
புத்தரிசிக்குப் பதிலாகப் புது வான்கோழி
அம்புட்டுத்தான்
நாகராசன்

2010/11/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

rajam

unread,
Nov 18, 2010, 12:54:13 AM11/18/10
to mint...@googlegroups.com
செல்வன்,

கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் நன்றி அறிவித்தல் தின விருந்துகளை தயார் செய்வோம்.செய்வோம் அல்ல...தங்கமணி செய்வார்:-)
அந்தப் புரிதலிலும் வெளிப்பாட்டிலும் இருக்கிறது உங்கள் "நன்றியுணர்வு!" உங்கள் நல்லுணர்வுக்கு என் நன்றி.
விஸ்கான்சின் பக்கம் பூர்வகுடி அமெரிக்க இனத்தவர் இருப்பது கேள்வி.
அமோகமாகச் செய்யுங்கள் பூரியை! தங்கமணிக்கும் உங்களுக்கும் உங்கள் செல்லங்களுக்கும் என் அன்பும் நட்பிக்கு நன்றியும்.
அன்புடன்,
ராஜம்

Tthamizth Tthenee

unread,
Nov 18, 2010, 12:59:38 AM11/18/10
to mint...@googlegroups.com
நாம் கொண்டாடும்  காணும் பொங்கல்,பொங்கல், மாட்டுப் பொங்கல்  ஆகியவை  நன்றி அறிவிக்கும் பண்டிகைகள்தாமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
2010/11/18 rajam <ra...@earthlink.net>
செல்வன்,



--

rajam

unread,
Nov 18, 2010, 1:00:42 AM11/18/10
to mint...@googlegroups.com
அருமையான நிகழ்ச்சியின்
நினவைப்
பகிர்ந்துகொண்டதற்கு
நன்றி!
எத்தனைப் பேருக்கு இந்த
அளவு நினைக்கத்தோன்றும் --
பழைய நாட்களில் உதவியவர்
பற்றி!

அன்புடன்,
ராஜம்


> unsub...@googlegroups.com

செல்வன்

unread,
Nov 18, 2010, 1:02:12 AM11/18/10
to mint...@googlegroups.com
நன்றி அம்மா.இங்கே பூர்வகுடி மக்கள் நிறைய உண்டு.அவர்கள் நடத்தும் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சிக்கு சென்றோம்.பூர்வகுடி பாடல் ஒன்றைபாடி எங்களுக்கு வரவேற்பளித்தனர்.அடிவயிற்றிலிருந்து எழும் ஓங்காரகுரலுடன் எழும்பும் இசை.கூட ந்ம் ஊர் பறைக்கு ஒப்பான கருவியின் இசை.அவரால் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அதை பாட இயலவில்லை.

2010/11/18 rajam <ra...@earthlink.net>

to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 

rajam

unread,
Nov 18, 2010, 1:10:58 AM11/18/10
to mint...@googlegroups.com
ஆமாம் பேராசிரியர் ஐயா. இந்த மாதிரி "விடுமுறை நாட்கள் (holy days / holidays)" வணிகப்பட்டுப்போனது ஒரு முள்.
ஆசிரியர் அ.கி.ப சொல்லுவார்: பிள்ளையார் சதுர்த்திதான் பொருளாதாரப் பகிர்வுக்கு ("distribution of economy") எடுத்துக்காட்டு என்று. ஏனென்றால் ... பிள்ளையார் சதுர்த்தி அன்று எருக்கம் பூவுக்கும் விலை உண்டு; களிமண்ணுக்கும் விலை உண்டு. 
அதுபோல.
ஆனால்... எதையுமே புரிந்துகொள்ள நேரமில்லாத ஒரு சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு "கட்டாய" அல்லது "ஒப்புக்கொள்ளப்பட்ட" ஒரு நாள் நல்லதொரு நேரத்தைத் தருகிறது என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
ராஜம்

துரை.ந.உ

unread,
Nov 18, 2010, 1:14:48 AM11/18/10
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
tk (87).gif நன்றி அம்மா :)

2010/11/18 rajam <ra...@earthlink.net>

Thanksgiving Day எனப்படும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் எனக்குக் கொண்டாட்டமான நாள்!  

என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
tk (87).gif

devoo

unread,
Nov 18, 2010, 1:28:38 AM11/18/10
to மின்தமிழ்
நண்பர்கள் தத்தம் பகுதியின் கொண்டாட்டச் செய்திகளைப் பகிர்ந்து
கொள்வதோடு அவை தொடர்பான உன் குழல் பதிவுகளையும் வெளியிடலாம்

தேவ்

> ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Nov 18, 2010, 2:45:35 AM11/18/10
to mint...@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி அம்மா. இங்கே ஒவ்வொரு நாளும் சாப்பிடும் முன்னர் சாப்பாட்டை இறைவனிடம் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்துத் தானே சாப்பிடுகிறோம்?? நமக்கு ஒவ்வொரு நாளும் நன்றி தெரிவிக்கும் நாள் தான். அவன் புகழைப் பேசாத/பாடாத  நாளெல்லாம் பிறவாத நாள் என நினைத்தவர் பலர் உண்டே??

2010/11/18 rajam <ra...@earthlink.net>
Thanksgiving Day எனப்படும் நன்றி தெரிவிக்கும் நாள்தான் எனக்குக் கொண்டாட்டமான நாள்!  
உங்கள் ஊர்களில், நீங்கள் இருக்கும் நாடுகளில் இந்தக் கொண்டாட்டம் உண்டா? நீங்கள் எப்படிக் கொண்டாடுவீர்கள் என்று சொல்லுங்களேன்.
அன்புடன்,
ராஜம்

விஜயராகவன்

unread,
Nov 18, 2010, 2:46:42 AM11/18/10
to மின்தமிழ்
How do the North American tribes view the Thanksgiving day? The day
the European settlers came to North America - for which the latter
celebrate TG Day- marks the end of Tribal possession of the land and
resources of north America. From that time, they were gradually
dispossessed, hunted down, ethnically cleansed and confined to
"reservations"


Vijayaraghavan


On Nov 18, 7:02 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நன்றி அம்மா.இங்கே பூர்வகுடி மக்கள் நிறைய உண்டு.அவர்கள் நடத்தும் கல்லூரி
> ஒன்றின் நிகழ்ச்சிக்கு சென்றோம்.பூர்வகுடி பாடல் ஒன்றைபாடி எங்களுக்கு
> வரவேற்பளித்தனர்.அடிவயிற்றிலிருந்து எழும் ஓங்காரகுரலுடன் எழும்பும் இசை.கூட
> ந்ம் ஊர் பறைக்கு ஒப்பான கருவியின் இசை.அவரால் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அதை

> பாட இயலவில்லை....
>
> read more »

> >>> உணவைச்- Hide quoted text -
>
> - Show quoted text -

rajam

unread,
Nov 18, 2010, 2:58:34 AM11/18/10
to mint...@googlegroups.com

No. I don't think that the native Americans view the tribal
possession of their land and resources thankfully. It's much like any
invasion in any culture. I, as a later stage immigrant, can't redress
what happened in the past and for which I would not have been much of
a help anyway. So, I just count my blessings and thank life for what
it has offered me.

That's why I said:
>>>>> இதன் தொடக்க நோக்கம்
>>>>> எதுவாயினும் இன்று என்
>>>>> போன்றவர்களுக்கு மன
>>>>> நிறைவு
>>>>> தரும்
>>>>> நாள் -- பிறர்க்கு நன்றி
>>>>> தெரிவிக்கும் நாளாக
>>>>> இதை நான் பார்ப்பதால்.

Warmly,
rajam
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2010, 3:15:45 AM11/18/10
to mint...@googlegroups.com
அமெரிக்க வரலாறு என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட நூலைப் பல ஆண்டுகளுக்குமுன் படித்த நினைவு இருக்கிறது
அதில் ஒரு வரி
நம் புனிதத்தந்தையர் கப்பலில் இருந்து தரையிறங்கினர்.  இறைவனுக்கு நன்றி செலுத்த தரையில் விழுந்து வணங்கினார்கள்.  உடனே எழுந்து அங்கிருந்த ப்ழங்குடிகள்மீது விழுந்து பிடுங்கினார்கள்
புத்துலகம் சென்றவர்களில் பலர் சமுதாயத்தில் விரும்பத்தகாத, விலக்கப்பட்ட வெறுக்கப்பட்ட மக்களே
அவர்கள் புதிய உலகில் உயர் வாழ்வியல் மரபுடன் வாழ்ந்த பழங்குடியினரைக் கொன்றொழித்தே அமெரிக்க சமுதாயத்தைப் படைத்தனர்
குற்றவியல் பின்னணியோடு குடிபுகுந்தவர்கள் வாழ்வில் வளம் கொழிக்க எல்லாம் வல்ல இறைவனே முழுமுதற் காரணம் என்று கருதுவதைப் போற்றும்போது பழங்குடிகளுக்கு அவர்கள் இழைத்த தீங்கை நம் மனம் மறப்பதில்லையே
ஆனால் தமிழன் செல்வ வளத்தோடு வலம் வந்தபோதும்  வறுமையின் கோரப்பிடியில் வாழ்வாதாரத்திற்கெனப் புலம் பெயர்ந்தபோதும்  அங்கு வாழ்ந்தோருடன் இணைந்தும் அதே நேரம் தங்கள் இறைவனையும் தங்கள் பண்பாட்டையும் பேணி வாழ்ந்த தன்மை போற்றுதலுக்குரியது
நாகராசன்

2010/11/18 rajam <ra...@earthlink.net>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 18, 2010, 6:57:41 AM11/18/10
to mint...@googlegroups.com
2010/11/18 rajam <ra...@earthlink.net>:

>
> No. I don't think that the native Americans view the tribal possession of
> their land and resources thankfully. It's much like any invasion in any
> culture. I, as a later stage immigrant, can't redress what happened in the
> past and for which I would not have been much of a help anyway. So, I just
> count my blessings and thank life for what it has offered me.
>

இந்த மனோநிலை பற்றி, ‘இனியொரு விதிசெய்வோம்’ இழையில் பேச வேண்டியுள்ளது. அது பின்.

அழகான இழை. இதையும் நாமொரு மின்தமிழ் மரபாக வருடா வருடம் செய்தால் என்ன?
வள்ளுவர் ஒரு ‘நன்றி’ என்று ஒரு அதிகாரம் பாடினாலும் நம்மால் ‘மிக்க
நன்றி என்று சொல்ல வராது. ப்ழக்கமில்லை. எத்தனையோ வழிகளில் மூக்கு தொட்டு
காதிற்கு வருவோம்.

இன்றாவது நாம் மனம் திறந்து ஒருவருக்கொருவர் நன்றி சொல்வோம்.

கண்ணன்

பிகு: கீதா சொல்வது ரொம்பச் சரி. பெரியவன் அவனுக்கு ‘உண்ணும் சோறு, பருகு
நீர், தீன்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என்று நினைந்து
நன்றிக் கண்ணீர் உகுத்தால் அது பெரும் பேறுதான். ஆயினும்
சிறுமானிடர்க்கும் நன்றி சொல்ல வேண்டியுள்ளதே!

Tthamizth Tthenee

unread,
Nov 18, 2010, 7:01:02 AM11/18/10
to mint...@googlegroups.com
நன்றி என்னும் சொல் வாயளவில் இல்லாமல்
மனம் நெகிழ்ந்து நமக்கு உதவி செய்தவர்களுக்கு மனமொன்றி உண்மையாகவே நன்றி
கூறும்போது நாம் யாருக்கு சொல்கிறோமோ அவர்கள் ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இறைவனால் ப்ரசாதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/18 N. Kannan <navan...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்


தமிழ்த்தேனீ

Mohanarangan V Srirangam

unread,
Nov 18, 2010, 9:08:43 AM11/18/10
to mint...@googlegroups.com
நன்றிக்கென்றே ஓரிழை ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். 

Now I understand I am writing in the wilderness of forgetting. 
:-) 

சில சமயம் விரக்தியும் இனிமைதான் :-)

2010/11/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages