பேரா. இரா. மதிவாணன் (2010) கட்டுரையை அறிஞர்களுக்கு
சமர்ப்பிகிறேன். ஆராயுங்கள்.
அன்பிணை,
நா. கணேசன்
ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள்
தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா!
பேராசிரியர் இரா. மதிவாணன்
--------------------------
சிந்துவெளி முத்திரைகள் முதலாக, பிரகிருதக் கல்வெட்டுக்கள்,
வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் வரை உலகறிந்த ஆராய்ச்சியாளராக விளங்குபவர்
ஐராவதம் மகாதேவன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. மாவட்ட
ஆட்சியாளராகத் தொடங்கிய அவருடைய பணி கல்வெட்டு ஆராய்ச்சியை
வாழ்விலக்காகக் கொண்டது; உலகளாவிய புகழ் கொண்டது.
சிந்துவெளி முத்திரைகளிலும் எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படும்
சொல்லடைவுகளை முறைப்படுத்தி வெளியிட்டதும் தென்னகப் பிராமிக்
கல்வெட்டுக்களை ஆராய்ந்து முந்தைய தமிழ்க் கல்வெட்டுக்களை வெளியிட்டதும்,
இவருடைய முதன்மையான வெளியீடுகள், எண்ணிறந்த ஆங்கிலக் கட்டுரைகள் உலகப்
புகழ் தந்தன. தமிழில் இவர் எதுவும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இவருடைய
ஆய்வுகள் தமிழுக்கு வெறும் ஊக்கம் தந்தன. ஆக்கம் எதுவும் தரவில்லை.
மாறாகத் தமிழ் வரலாற்றைத் தாக்குவனவாகவும் உள்ளன என்பது வெளிப்படை.
சிந்துவெளி எழுத்தாய்வுகள்
பின்லாந்து எல்சின்கி பல்கலைக்கழகத்துச் சிந்துவெளி ஆய்வாளர் அசுகோ
பர்போலாவொடு இணைந்து இவர் எடுத்த முடிவுகளின் வண்ணம் சிந்துவெளி நாகரிகம்
திராவிடர்க்குரியது1 என்பது பாராட்டத்தக்கது. ஆனால் சிந்துவெளி எழுத்து
வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கிறது என இவர்கள் எடுத்த முடிவு2
முற்றிலும் தவறானது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்துவெளி எழுத்து
படிக்கப்படாததற்கு இந்தத் தவறான முடிவே காரணமாயிற்று. உடும்புப் பிடியாக
இவர்கள் கொண்ட கோட்பாடு எத்தனை நூற்றாண்டாயினும் வெற்றிபெறப் போவதில்லை.
ஒருசில முத்திரைகளை யேனும் படித்துக் காட்டியவர்களால்தான் எழுதப்பட்ட
முறை வலமா! இடமா! என்பதை முடிவுகட்ட முடியும். ஒரு முத்திரையைக் கூட
இவர்கள் ஒழுங்காகப் படித்துக் காட்டாமல் எழுதப்பட்ட திசை
வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக உள்ளது என்பது எவ்வகையிலும் ஏற்றுக்
கொள்ளத் தக்கதன்று.
பி.பி.இலால் என்னும் ஆய்வாளர் பானை ஓட்டிலுள்ள எழுத்தின் வீழ்கோடுகளைச்
சில வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகப் படிந்துள்ளன எனக் கூறியதை
வேதவாக்காக எடுத்துக் கொண்டு இவரும் இம்முடிவுக்கு வந்துள்ளார். இடதுகைப்
பழக்கமுள்ளவன் கூட அப்படிக் கோடுகள் வரைந்திருக்க முடியும். இதனை ஒரு
ஆணித்தரமான காரணமாகக் கொள்ள முடியாது. இது முதற்காரணமாக, சிந்துவெளி
முத்திரைகளில் பெரிய எழுத்தாக எழுதத் தொடங்கி வரி இறுதியில் எழுத்து
சிறுத்துப் போகிறது. எஞ்சிய எழுத்துக்களை வலப்பக்கத்து இறுதியில் கீழே
எழுதியுள்ளனர். வலமிருந்து இடமாக எழுதியதால்தான் எஞ்சிய எழுத்தை
வலப்பக்கத்து இறுதியில் எழுதியுள்ளனர் என்பதை இரண்டாம் காரணமாகக்
காட்டியுள்ளனர். எழுத்துக்களை முத்திரைக் கல்லில் பொறிப்பவர்கள்
பெரும்பாலும் கல்வியறிவு நிரம்பாத தொழிலாளர்களாக இருப்பது இயல்பு. ஆதலால்
எஞ்சிய எழுத்தை எங்கே பொறித்துள்ளனர் என்பதைக் காரணமாகக் காட்ட முடியாது.
வட்டமாகப் பொறித்த முத்திரைகளில் சிறிய முத்திரை எழுத்துக்களில்
தொடங்கிப் பெரிய எழுத்துக்களில் முடிந்த பாங்கு வல இடமாக உள்ளது என்னும்
மூன்றாம் காரணமும் ஏற்கத் தக்கதன்று. பெரும்பாலான முத்திரைகளில்
எழுத்துக்கள் சம உயரமுடையனவாக உள்ளன. எழுத்து பெருத்தும் சிறுத்தும்
போவது எழுதுபவரின் கைப்பாங்கு. ஆதலால் இந்தக் காரணமும் ஏற்றுக்
கொள்ளத்தக்கதன்று.
ஆணித்தரமான சான்று
சிந்துவெளி முத்திரை எழுத்து இடமிருந்து வலமாக எழுதப்பட்டது என்பதை
மெய்ப்பிக்கும் வகையில் 5000 எழுத்துச் சான்றுகளைத் தமிழாகப் படித்துக்
காட்டியுள்ளேன்,3 ஒரு மொழியில் எழுத்துக்களைத் திசை மாற்றி எவராலும்
படிக்க முடியாது. சிந்துவெளி எண்களும் 115, 183, 2400 போன்று இடமிருந்து
எண்மானமாக எழுதப் பெற்றுள்ளன. பெரிய எண்ணை முதலில் சொல்லி அடுத்த எண்ணை
வரிசைப்படுத்திச் சிந்துவெளி நாகரிகக் காலத்திய இடமிருந்து வலமாக எழுதும்
எண்ணுமுறை தமிழ்க் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும்
பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு வாயிலாக
நான் நிறுவியுள்ளேன். மயிலை சீனி. வேங்கடசாமியும் இவை எண் குறித்த
குறியீடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.5
அராபிய எண்கள் எனக் கருதப்பட்ட இன்றைய எண்கள் இந்திய எண்களே என அராபிய
ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய எண்கள் எனக் குறிக்கப்
பட்டுள்ள சிந்துவெளி நாகரிகக் காலத்திய வரிவடிவங்கள் திரிபுற்ற தமிழ்
எண்களே என நான் நிறுவிக் காட்டியுள்ளேன்.
அரபி, உருது, பாரசீக மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும் வடசெமித்திக்
எழுத்து மரபைச் சார்ந்தவை. இம்மொழியில் எண்களுக்குரிய குறியீடுகளை
முறைப்படி அவர்கள் வலமிருந்து இடமாகத்தான் எழுத வேண்டும். ஆனால்
எல்லோரும் வியக்கும் வகையில் எண்களை மட்டும் இந்திய மொழிகளைப் போல்
இடமிருந்து வலமாக எழுதுகின்றனர். இதன் காரணம் என்ன?
.....தொடரும்
இந்திய எண்கள் என்னும் பழந்தமிழ் எண்கள் காலப்போக்கில் வரிவடிவத்
திரிபுகளாகக் கிடைத்த போதிலும் இன்று உலகம் முழுவதும் ஆளப்படும் 1, 2, 3
போன்ற எண்கள் குறிப்பாகத் தமிழர் உலகத்திற்கு நல்கிய நாகரிகக் கொடையாக
விளங்கி வருகின்றன.
எண்களை இடமிருந்து வலமாக எழுதிய பழந்தமிழ் மக்களும் சிந்துவெளி மக்களும்
மொழியை மட்டும் வலமிருந்து எழுதியிருக்க முடியாது. சிந்துவெளி
எழுத்துக்களின் எண்களே தமிழி (தென்பிராமி) கல்வெட்டுக்களில் எண்களாக
ஆளப்பட்டிருப்பதால் சிந்துவெளி மொழி வலமிருந்து இடமாக எழுதப்பட்டது
என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
நம்பத் தகுந்த சான்றை நம்பாதது
சிந்துவெளி முத்திரை எழுத்துக்களைப் படிப்பதற்கு இருமொழி முத்திரை
கிடைத்தால்தான் நம்பகமான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியும். எகுபது
மொழியின் ஈரோகிளிபிக் எழுத்து படிப்பதற்கு மும்மொழி எழுத்துச் சான்று
கிடைத்ததால் முத்திரை எழுத்துக்களுக்குரிய சரியான ஒலிப்பை சம்போலியன்
என்பவர் உறுதிப்படுத்தினார். எகுபது, ஈரோகிளிபிக் எழுத்துச் சான்றுகள்
முழுமையாகப் படிக்கப்பட்டன. அவ்வாறே சிந்துவெளி எழுத்துக்குத்தக்க சான்று
கிடைக்கவில்லை என்று படிக்க முடியாததற்குக் காரணம் காட்டி வந்தனர்.
யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இந்திரபாலா ஆனைக்கோட்டை
எனுமிடத்தில் கண்டெடுத்த வெண்கல முத்திரை ஈரெழுத்து முத்திரை என உறுதி
செய்யப்பட்டது. அதில் மேலே மூன்றெழுத்துக்கள் சிந்துவெளி
எழுத்துக்களாகவும் கீழேயுள்ள மூன்றெழுத்துக்கள் தென்பிராமி
எழுத்துக்களாகவும் இருந்தன. இது ஈரெழுத்துக்கள் தென்பிராமி
எழுத்துக்களாகவும் இருந்தன. இது ஈரெழுத்துச் சிந்துவெளி எழுத்துச் சான்று
என இந்திரபாலா கூறினார். இந்த இரு எழுத்து வடிவங்களில் தீவுகோ என்னும்
சொல் எழுதப்பட்டிருப்பதை நானும் படித்துக் காட்டினேன்.
ஆயின் திசை திருப்பும் முயற்சியில் ஐராவதம் மகாதேவன் முற்பட்டுள்ளார்.
மேலே இருப்பது சிந்துவெளி எழுத்து போன்ற எழுத்து. இது இன்னும்
ஆராயப்பட்டு வருகிறது எனத் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும்
குழப்புகிறார். இவர் எழுதும் ஆங்கில எழுத்துக்கள் ஆங்கிலம் போன்ற
எழுத்துக்கள் என்றும் இவர் பேசுகின்ற ஆங்கிலம், ஆங்கிலம் போன்ற ஆங்கிலம்
என்றும் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம்பத் தகுந்தவற்றை நம்ப மறுக்கிறார் என்பதற்கு மற்றொரு சான்றும்
காட்டலாம்.
பீகார் மாநிலத்துப் பாகல்பூரில் துணை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த
திரு. வர்மா என்பவர், நான் சந்தால் பழங்குடி மக்களைக் காண விரும்பியதால்
அழைத்துச் சென்றார். நான் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்பவன் என்பது
அவருக்கும் தெரியும்.
சந்தால் பழங்குடி மக்களின் தலைவர் திசோம் நாய்கி விழா நாளில் அதுவும்
முழுமதி நாளன்று வீட்டின் சுவரில் சிந்துவெளி எழுத்துக்களை
எழுதுகின்றார். அவர் சிந்துவெளி எழுத்தில் எழுதிய ஒன்பது சொற்களைப் படம்
பிடித்து அவற்றை என் நூலில் வெளியிட்டுள்ளேன். தம் முன்னோர் எழுதிய
எழுத்துக் குறியீடுகளைத் தாமும் எழுதுவதாக திசோம் நாயகி கூறினார்.
அவருக்கு அந்த எழுத்துக்களைப் படிக்கத் தெரியவில்லை. அந்த எழுத்துக்
கோர்வை கொண்ட சொல்லாட்சிகள் அசுகோ பர்போலா வெளியிட்ட எந்தச் சிந்துவெளி
எழுத்து அடங்கலிலும் இல்லை.
இவை அரப்பா மொகஞ்சதாரோவில் காணப்பெற்ற சிந்துவெளி எழுத்துக்கள் என்று
நான் சொன்னபோது திசோம் நாய்கி அதை மறுத்தார். எங்களைத் தவிர இப்படி
எழுதுபவர்கள் வேறொருவர் இருக்க முடியாது என்றார். சிந்துவெளி
நாகரிகத்தின் சிறப்பை திசோம் நாய்கிக்கு எடுத்துச் சொல்லி அங்குள்ள
எழுத்துக்களைப் படிக்கத் தெரிந்தவர் ஒருவர் சந்திக்க இருக்கிறார் எனத்
திசோம் நாய்கி அவர்களுக்கு முன்னரே திரு. சர்மா சொல்லி வைத்திருந்ததால்
என்னைச் சந்தால் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றித்தான் திரு. வர்மா அவர்களிடம்
சொல்லியிருக்கிறார். இதைத் தலைகீழாகப் புரிந்து கொண்ட ஐராவதம்
மகாதேவனார், திரு.வர்மா முன்கூட்டியே சிந்துவெளி எழுத்துக்களை திசோம்
நாய்கிக்குச் சொல்லி வரைந்து காட்டிப் பிறகு என்னை அழைத்து என்னிடம்
காட்டுவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என உண்மையைத் திரித்துக்
கூறுகிறார்.
தன்னாலும் சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தெளிவாகப் படித்துக்
காட்டுபவரையும் நம்பாத மனப்பாங்கு கொண்டவர்கள் இருப்பது இயல்பே. இதனை
வருத்தம் தருவதாகக் கருதவியலாது.
இந்தியாவில் மட்பாண்டம் செய்வோர் குறியீடுகள் சலவைத் தொழிலாளிகள் போடும்
அடையாளக் குறியீடுகள் அனைத்தும் சிந்துவெளி எழுத்தாகவே இருப்பதை என்
களப்பணி ஆய்வுகள் வாயிலாகச் சுட்டிக் காட்டினேன். சிந்துவெளி
எழுத்துக்கள் இந்தியா முழுவதும் தமிழர்கள் வழங்கும் இந்தியப் பொது
எழுத்துக்களாக இருந்தன என்று கூறினேன். இது உண்மையா என்று ஆராய்வதற்காகக்
களப்பணி முயற்சி மேற்கொள்ள ஐராவதம் மகாதேவனார் முன்வந்திருக்கலாம்.
சிந்துவெளி முத்திரையில் அவ்வன் என்னும் பெயரைப் படித்துக் காட்டினேன்.
புலிமான் கோம்பையில் உள்ள நடுகல்லில் தமிழி (தென்பிராமி)க் கல்வெட்டில்
அவ்வன்பதவன் எனும் பெயரைப் பேராசிரியர் இராசன் படித்துக்
காட்டியிருக்கிறார். நான் சிந்துவெளி முத்திரைகளில் படித்த அவ்வன்
தமிழ்ச்சொல் தமிழ் நாட்டிலும்
தமிழ்ச்சொல் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பதால் நான் சிந்துவெளி எழுத்தைப்
படித்தமுறை சரியானதுதான் எனத் தெரிந்துகொண்டேன்.
தொல்காப்பிய இலக்கணக் கட்டமைப்புகள் சிந்துவெளி முத்திரைகளிலும்
தென்படுவதோடு தமிழிக் கல்வெட்டுக்களிலும் ஒரு சீராக அமைந்திருப்பதை
எடுத்துக் காட்டியுள்ளேன். நான் கூறிய தொல்காப்பிய மேற்கோள்களை அவர்
நம்பவில்லை. ஆனால் அவருடைய முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் (Early
Tamil Epigraphy) எனும் நூலில் தொல்காப்பிய இலக்கணக் கட்டமைப்புக்களைப்
பொருத்திக் காட்டுகிறார்.
உடும்புப்பிடி
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அசோகரின் பிராமி எழுத்தை மட்டும் அறிந்திருந்த
கல்வெட்டு ஆய்வாளர்கள் கி.பி. 1906 அளவில் பாளையங்கோட்டைக்கு அருகில்
மருகால்தலை என்னுமிடத்தில் கண்ட பிராமி அல்லாத எழுத்துக்கள் கொண்ட
தமிழிக் கல்வெட்டைக் கண்டு மருண்டனர். அதனைப் பாலி பிராகிருதம் போலவே
படிக்க முயன்றனர். இவற்றை முதன்முதலில் பார்த்த எச்.கிருட்டின
சாத்திரியாரும் கே.வி.சுப்ரமணிய அய்யரும் தென்னாட்டுக் கல்வெட்டுக்களில்
தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் புலப்படுத்தினாலும் வடநாட்டுப் பிராமியின்
திரிபாகவே கருதினர். இந்தக் கல்வெட்டு மூதாதைகளின் கொள்கைகளில் சொக்கிப்
போன ஐராவதம் மகாதேவனார் தமிழிலுள்ள எழுத்துக்கள் வடக்கிலிருந்தே வந்தவை
என்னும் மயக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை.
தென்னாட்டுத் தமிழிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த நாராயணராவ் இவை பிராகிருத
மொழியைச் சார்ந்த பைசாச மொழிக் கல்வெட்டுக்கள் என்றார். பாண்டிய நாட்டுத்
தமிழையும் பைசாச பிராகிருத மொழி என்று வடமொழியாளர் குறிப்பிடுவது
வழக்கம். இவர் பிராகிருதபாலி மொழிச் சொற்களையும் சமற்கிருதமாகக்
கருதினார்.
வடநாட்டுப் பிராகிருதம் மற்றும் சமற்கிருதத்தின் வளர்ச்சியால்தான் சமண
முனிவர் காலத்தில் தமிழுக்கு எழுத்து தோன்றியது என்னும் தலைகீழ்
நம்பிக்கையும் இவரை ஆட்கொண்டது. அதனால் இவர் தமிழ்ச் சொற்களை
வடசொற்களாகக் காட்டியுள்ளார். பளித வாணிகர் நெடுமூலன் என மயிலை சீனி.
வேங்கடசாமி தெளிவாகப் படித்துக் காட்டியுங் கூட பணித வாணிகன் நெடுமலன் என
ஜராவதம் மகாதேவன் படித்துக் காட்டினார். பளிதம் என்பது வெற்றிலைப்
பாக்குடன் சேர்த்துக் கொள்ளும் ஒருவகை கருப்பூரம், ஆனால் இதனை வெல்லப்
பாகினைக் குறிக்கும் பணித எனும் சமற்கிருதச் சொல்லாகக் காட்டியுள்ளார்.
நெடுமல்லன் என்னும் சொல் நெடுமலன் எனக் குறுகியிருப்பதாகக் கூறுகிறார்.
வெல்லம் – வெலம் என்றும், கொல்லை – கொலை என்றும் திரிவது எக்காலத்திலும்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலை சீனி. வேங்கடசாமி, நடன காசிநாதன் போன்றோர் செப்பமாகப் படித்துக்
காட்டிய சொல் வடிவங்களை இவர் எடுத்துக்காட்டவும் இல்லை. தன் பிழை பாடான
சொல்லாட்சிகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் முன்வரவில்லை.
தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை எல்லாம் மூத்த தமிழறிஞர்களிடம் கேட்டுத்
தெரிந்துகொள்ள முயன்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
பிராமிக் கல்வெட்டுப் பதிப்பு
சிந்துவெளி எழுத்துச் சான்றுகளை அடைவுபடுத்தி வெளியிட்டதோடு தன்
சிந்துவெளி ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட பின்னர், ஒரே ஒரு
முத்திரையைக்கூட இவர் நல்ல தமிழ்ச் சொல்லாகப் படித்துக் காட்டவில்லை.
அடுத்ததாக இவர் மேற் கொண்ட பணி தென்னாட்டுப் பிராமியாகிய தமிழிக்
கல்வெட்டுக்களை அடைவுப்படுத்தி Early Tamil Epigraphy என்னும் பெயரில்
வெளியிட்டதாகும்.
இந்தத் தலைப்பே சிறிதும் பொருத்தமில்லாதது
1. தென்னிந்தியாவில் பல இடங்களில் சிந்துவெளி எழுத்துச் சான்றுகள்
பாறை ஓவியங்களிலும், பானை ஓடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றை Early Tamil
Epigraphy எனச் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து வடநாட்டுப் பிராமி
எழுத்திலும் தமிழி (தென்னாட்டுப் பிராமி) எழுத்திலும் காணப்படும் சமண
முனிவர்களின் கொடுங்கலப்பு கொச்சைத் தமிழ் இழி நடை வழக்குகள் மலிந்த
குகைக் கல்வெட்டுக்களைத் தமிழ்க் கல்வெட்டு என்பது ஏற்கத்தக்கதன்று.
2. ஆதலால் இந்தக் கல்வெட்டு அடைவு நூலுக்கு Jain Tamil Dialect
Epigraphy என்று பெயரிட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதல்
புகுந்த முகமதியர் தமிழ்ச் சொற்களை ஒலிக்கத் தெரியாமல் நம்பள்கி சேலம்
மேலே போறான். நிம்பள்கி திருச்சி மேலே எப்போ வர்ரான் எனப் பேசும்
மொழியறியாதவர்களின் கடுங்கொச்சை வட்டாரச் சொல்லாட்சிகளில் தொல்காப்பிய
இலக்கணத்தைப் பொருத்திப் பார்க்க முடியுமா?
3. மணிய் (மணி), பளிய் (பள்ளி), வழுத்தி (வழுதி), ஆந்தய் (ஆந்தை),
மத்திரை (மதுரை), காவிதிஇய் (காவிதி), கொட்டுபிதோன் (குகையில் படுக்கை
குடைவித்தவன்) போன்ற கொச்சைச் சொற்களைத் தமிழர்களால் பேசப்பட்ட தமிழ்ச்
சொற்களாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தத் தமிழானாலும் இந்த
அளவுக்குக் கொச்சையான கொடுஞ் சொற்களைப் பேசமுடியாது. மொழி அறியாதவர்களின்
உளறல்களைத் தமிழ்க் கல்வெட்டு என்று பெயரிட்டு அழைப்பது பொருந்தாது.
வடதமிழ்
அசோகர் கல்வெட்டுகளில் உள்ள பிராமி எழுத்துக்களை இந்தியாவிலுள்ள முதன்மை
எழுத்துக்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அசோகர் காலத்திற்கும் முற்பட்ட
தமிழி எழுத்துக் கல்வெட்டுகள் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடநாட்டுப் பிராமி எழுத்துக்கள் வணிகர்களாலும்,
அரசர்களாலும் பயன்படுத்தப்பட்டவை. ஆனால் தென்னாட்டுத் தமிழி பொது
மக்களால் ஆளப்பட்ட எழுத்து என்பது நிறுவப்பட்டுள்ளது. ஆதலால் வடநாட்டுப்
பிராமியை விடத் தென்னாட்டுத் தென்பிராமி எனும் தமிழி காலத்தால்
முற்பட்டது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்றவர் விளங்கிக் கொள்ளும் காலம்
தொலைவில் இல்லை.
(தொடரும்)
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் முதலெழுத்துக்கள் 30 என
வரையறுக்கப்பட்டன. அதில் எக்காலத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. தமிழைப்
போன்ற 30 அடிப்படை எழுத்துக்களைக் கொண்டிருந்த பிராகிருத, பழைய பாலி,
திபத்து மொழிகளில் பிறமொழித் தாக்குதல் ஏற்பட்ட பின்பு
சமற்கிருதத்துக்குரிய சிறப்பு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர்
பாலி மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 41ஆக உயர்ந்தது.
பின்னர் பாணினியின் இலக்கண நூலுக்கு மூலமாக விளங்கிய சிவசூத்திரத்தில்
சமற்கிருத எழுத்துக்கள் 42 என விரிவுபடுத்தப்பட்டன. இவற்றோடும் வேறு 9
எழுத்துக்களைப் பாணினி வகுத்துக் கொடுத்தார். காலந்தோறும் எழுத்துக்களின்
எண்ணிக்கை மாறிவந்த வடமொழியின் எழுத்துத் தோற்றம் காலத்தால் பிந்தையது என
நன்கு தெரிகிறது. அடிப்படை எழுத்து 30 என்பதில் எத்தகைய மாற்றமும்
கொள்ளாத தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் காலத்தால் மிகவும் முந்தையது
என்பதும் ஒப்பிட்டுப் பார்க்காமல் முரட்டு வலக்காரத்தோடு (பிடிவாத்தோடு)
ஆய்வு செய்பவர்களுக்கு எல்லாம் வடக்கிலிருந்து வந்தன என்னும் பொய்த்
தோற்றம்தான் தெரியும்.
அசோகர் காலப் பிராமி எழுத்துதான் இந்தியாவில் பழையது என்றால் அந்த
எழுத்து எப்படித் தோன்றியது அதில் உள்ள பழைய இலக்கியங்கள் எங்கே
என்பதற்கு ஐராவதம் மகாதேவனாரிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை.
சரியா அணுகுமுறை
எகுபதிய ஓவிய எழுத்துக்கள் சுமேரிய ஆப்பு எழுத்துக்கள், சீன ஓவிய
எழுத்துக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வெற்றி கண்டவர்கள் பின்பற்றிய
அணுகுமுறைகள் எவற்றையும் அசுகோ பர்போலாவும், ஐராவத மகாதேவனாரும்
பின்பற்றவில்லை. அதனால்தான் சிந்துவெளி முத்திரைகளில் ஒன்றைக்கூட
இவர்களால் செப்பமாகப் படிக்க முடியவில்லை.
மேற்கண்ட எழுத்துக்களை ஆய்ந்தோர் ஒரே எழுத்தொலிப்புக்குச் சமகாலத்தில்
இடவேறுபாடுகளாக வழங்கிய வரிவடிவ வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டினர்.
எகுபதிய மொழியில் க(k) என்பதற்கு 16 வகை வரிவடிவ வேறுபாட்டு எழுத்துக்கள்
உள்ளன. எகுபதிய மொழியிலுள்ள 24 அடிப்படை ஒலிப்பெழுத்துக்கு 130
வரிவடிவங்கள் உள்ளன. எந்தெந்த எழுத்துக்கு இடவேறு பாடாக எத்தனை
வரிவடிங்கள் உள்ளன என அவர்கள் மேற்கண்ட மொழிகளில் பட்டியலிட்டனர். 38
ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்துவெளி எழுத்தில் ஆய்வு செய்யும் ஐராவதம்
மகாதேவனார். அசுகோ பர்போலா போன்றோர் இம்முயற்சியில் ஈடுபடவே இல்லை. வேறு
யாரேனும் சிந்துவெளி எழுத்தில் இத்தகைய வேறுபாடுகளை (Homophonic)
வகைப்படுத்திக் காட்டினாலும் அதை எடுத்துக் காட்ட வில்லை.
மேற்கண்டவாறு சுமேரிய எகுபதிய மொழிகளை ஆய்வு செய்தோர் குறிப்பிட்ட
எழுத்தின் வடிவம் காலந்தோறும் எப்படி மாறி வந்திருக்கிறது என்று காலமுறை
வரிவடிவத் திரிபுகளைப் (Chronilogical and regional Classification of
the Script forms) பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர். இப்பணியையும்
சிந்துவெளி எழுத்தாய்வில் எவரும் மேற்கொள்ளவில்லை. உலகம் ஒரு போக்கில்
போனால் ஐராவதம் மகாதேவனார் போன்றோர் வேறொரு போக்கில்
போய்க்கொண்டிருக்கிறார்கள்.
சிறந்த ஆய்வாளர் என்றால் எந்தச் சிக்கலையம் விடுவித்துப் படிக்க முடியாத
முத்திரை எழுத்துக்களையும் படித்துக்காட்டவேண்டும். அதை விடுத்து இதுவும்
சரியில்லை அதுவும் சரியில்லை என்று கூறிவிட்டு அதற்கான அரைகுறைக்
காரணங்களைக் காட்டுவதன் வாயிலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டதாகக் கருத
முடியாது. ஒரு குற்றத்திற்கான வழக்கில் யார் குற்றவாளி என்னும்
உண்மையைக் கண்டறியாமல் முறைமன்ற நடுவர் இரு சாராரிடத்திலும் குற்றம்
உள்ளது என வழக்கைத் தள்ளுபடி செய்தால் அதைத் தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள
முடியாது.
நடுநிலை
சிந்துவெளி எழுத்தைப் படித்துக் காட்டும் முயற்சியில் ஈடுபட்ட
இந்தியர்களின் அணுகுமுறைகளை அலசி இவை ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல எனக்
கூறும் ஐராவதம் மகாதேவனார் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி
முத்திரைகளைப் படித்துக் காட்டிய அணுகு முறைகளைப் பற்றிக் குறை கூறாதது
ஏன்?
சமற்கிருதம் பற்றிய அறிவு மேனாட்டாருக்கு மிகுதி, அசுகோ பர்போலா தமிழ்
படிக்காதவர். எதையும் வடடொழி வழிவந்த தொன்மக் (புராண) கதைகளோடு
இணைத்துக் காண்பார். சிந்துவெளி முத்திரைகளை வெளியிட்டவர்கள் வணிகர்கள்.
வணிகர்களுக்கும் தொன்மக் (புராண) கதைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை
என்பது அசுகோ பார்போலாவுக்குத் தெரிவில்லை.
ஒரு மீன் சின்னத்தின் அருகில் ஆறு கோடுகள் இருந்தால் அறுமீன் –
கார்த்திகை மீன் – முருகனைக் குறிப்பது என எகுபதிய பட எழுத்தைப்
படிக்கின்ற பாங்கில் தன் ஆய்வை விரித்துரைக்கிறார். கடவுளுக்கு வணிக
முத்திரை எதற்கு என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
மீன் வடிவத்தில் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு மைமீன்
என்று அசுகோ பர்போலா படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல்
என்பார்கள். அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என
நிற்கும். அது மை எனத் திரிந்து கருநிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று
கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார்.
வேய்(தல்) – மேய் – ஆதி மேய் – மை ஆகுமா? கூரை வேய்தலுக்கும்
கருநிறத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? தமிழ் தெரிந்தவராகவும்,
தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் உள்ள ஐராவதம் மகாதேவனார் அசுகோ
பர்போலாவின் ஆராய்ச்சிக் குறைபாடுகளை முழுமையாகக் காட்டவில்லை.
ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் சிந்துவெளித் தமிழரின் உண்மை வரலாற்றைத்
தெளிவாக உறுதிப் படுத்துவனவாக இல்லை என்பதே பலர் சிந்தனையிலும் நிழலாடும்
கருத்தாக உள்ளது. சிந்துவெளி முத்திரையில் உள்ளவை மொழி எழுத்துக்கள்
அல்ல வெறும் குறியீடுகள் என்று வெளிவந்த வெளிநாட்டுக் கட்டுரைகளை அசுகோ
பர்போலாவும் ஐராவதம் மகாதேவனும் ஆணித்தரமாக மறுத்த கட்டுரைகள் பெரும்
பாராட்டையும் வரவேற்பையும் பெற்றன. ஆயினும் தமிழ் எழுத்து அசோகர்
பிராமியிலிருந்து வந்தது, தமிழர்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவர்கள்
சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டது போன்ற ஐராவதம்
மகாதேவனாரின் கருத்துக்கள் அவருக்கும் தமிழுலகிற்கும் பெருமை
சேர்ப்பனஅல்ல. தமிழுக்கு ஆக்கம் விளைப்பன அல்ல.
எனினும் சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஐராவதம் மகாதேவனாரின் உழைப்பு
தந்துள்ள பயனை எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
கடந்த ஒரு நூற்றாண்டாக வடபிராமி தென்பிராமி கல்வெட்டுக்களைப் பற்றி
ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றை அலசி ஆராய்வதற்கு
ஐராவதனார் பெரிதும் பாடாற்றி ஆய்வுப் புலங்களைப் பீடு பெறச்
செய்திருக்கிறார். காடு மலை ஏறிக் கால்கடுக்க நடந்து ஊன்றிப் பார்த்தும்,
ஒற்றியெடுத்தும் எழுத்துப் பதிவுகளைச் சரிபார்த்த பேருழைப்புக்குத்
தமிழுலகம் அவருக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. அவரை
எவ்வளவு போற்றினாலும் தகும். விரிவான தரவல்களை முறையாக ஆராய்ந்தாலும்
முன்னைத் தமிழின் தொன்மை அளவீட்டைச் சரியாகச் செய்யவில்லை என்பதே
தமிழுலகின் மனக்குறை.
கல்வெட்டு ஆய்வில் பலருக்கு ஊக்கம் பெருகப் பெரிதும் உழைத்திருக்கிறார்
என்றாலும் தமிழின் உண்மை வரலாற்றுக்கு ஆக்கம் சேர்க்கவில்லை என்னும்
மனக்குறை நீடிக்கத்தான் செய்கிறது.
மேற்கோள் குறிப்பு
1. I. Mahadevan, 2002, Presidential Address, IHC, Bhopal
2. Asko Purpola, Corpus of Indus Seals and Inscriptions
3. R. Madhivanan, 1995, Indus Script among Dravidian Speakers
4. மயிலை சீனிவேங்கடசாமி, 1981, சங்கக் காலப் பிராமி கல்வெட்டுகள்
5. R.Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers
6. Indrapala, Is is an Indus Script. The Hindu.
7. R. Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers
8. R. Madhivanan, 1995 Indus Script Among Dravidian Speakers
9. Rajan, 2004, Hero Stone, Puliman Kombai
10. நாராயணராவ் 1938, Brahmi Inscriptions of South India, The Men
Indian Antiquary Vol.I, PP. 362 – 376
11. இரா. மதிவாணன், 2007, தமிழர் வரலாற்றில் புதிய பார்வைகள் (பக். 40-
48)
12. இரா. மதிவாணன், 2007, சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி.
13. ஐ. மகாதேவன், ஆவணம் கட்டுரை
14. ஐ.மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகள் மொழியின் எழுத்தே.
•••
பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1735&ncat=21&Print=1
எப்போதாவது பயன்படலாம்.
நா. கணேசன்
அன்புவணக்கம் .கடந்த ஒருமாதத்தில் மின்தமிழ் மடலாடர்களுடன் நான் இனந்தபின் பெற்ற தரவுகளும் ,தகவல்களும் எண்ணிலடங்கா.பண்பாட்டின் பன்முக கோலங்கள் ,லமுரியாவில் இழந்த.வரலாறு ,சிந்துவெளி நாகரிகத்தின் வரிவடிவம் தொடர்பான திறனாய்வு ,பாவாணர் மற்றும் அருலியாய்யவின் மொழி ஆய்வுகள் ,மண்ணியல் ஆய்வுகள் ,மலேசியாவின் வரலாற்று பக்கங்கள் ,உலக சுற்றுலா தளங்கள் தொடர்பான சுபாவின் செயதிகளஞ்சியங்கள்மற்றும் சுபாவின் ஆன்மிக ,தத்துவதொகுப்புகள் என பல்துறை களஞ்சியங்கள் வலம்வரும் அறிவு கோயிலாக நிற்கிறது மின்தமிழ் .சமகாலத்தில் இதில் இணைந்து இருப்போர் அனைத்தையும் அறிந்திடும் வாய்ப்பினை பெறுகிறோம் .
நான் பேரா. மதிவாணனிடம் சிந்துவெளி எழுத்துகளை படிக்கக் கற்றவன். இப்போது நான் எவர் துணையும் இன்றி சிந்து எழுத்துகளை படிக்க வல்லேன். அவர் படித்த முறை மிகச் சரியானது. அதை அவர் ஏற்க வில்லை இவர் ஏற்கவில்லை என்று தட்டிக் கழிக்காமல் என்ன தான் இருக்கிறது நாமும் பார்ப்போம் என்று ஆய்வோர் முன்வந்தால் அதன் உண்மைத் தன்மையை அவர்களே கண்கூடாக அறியலாம். அதனால் தான் நான் துணிந்து மன்னர் பெயர் ஒப் ஆய்வை மேற்கொளள முடிந்தது..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கும் முன்பும்/பின்பும் மேற்கொண்ட
களப்பணியில் சிந்துசமவெளி எழுத்துக்கள் பரவலாக தமிழகமெங்கும் கிடைப்பதை
அறிந்து ஆவணப்படுத்தியுள்ளேன். கீழுள்ள சுட்டியைக் காண்க:
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
மேலும் இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் 60% மேல்
தமிழ்நாட்டிலேயே கிடைப்பது தமிழின் தொன்மையைச் சுட்டுவதாக உணர்கிறேன்.
சமகால ஜெனிடிக் ஆய்வுகள், தாய்வழி மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ, தந்தை வழி
ஒய் க்ரோமோசோம் ஆய்வுகள் பிரான்மலைக் கள்ளர் சமூகத்திற்கும் ஆப்பிரிக்க
பழங்குடிகளுக்குமுள்ள தொடர்பை ஊர்ஜிதம் செய்கின்றன.
உலகமுழுவதும் அநேகமாக ஏற்றுக்கொண்டுள்ள கருதுகோள் மனித குலம்
ஆப்பிரிக்காவில் தோன்றி, தென்னிந்தியா வந்து வடக்கே, வடகிழக்கே
(தென்கிழக்கே) பரவி இருக்கலாம் என்பது. இதிலும் தமிழின் தொன்மைக்குக்
கேடில்லை.
ஆயின், தமிழகத்தில் மானுடம் உருக்கொண்டது என்றோ, இங்கிருந்து மனித குலம்
பிற கண்டங்களுக்குப் பரவியது என்றோ நாம் நிரூபிக்க விரும்பினால் நிரம்பக்
கள ஆய்வு செய்து உலகளவில் ஆய்வு நூல்கள் வெளியிட வேண்டும். இதுவொரு
பெரும் பணி.
மொழியியல் ஆய்வு என்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது, மொழி என்பது
Pschychic fossil என்று சொல்லலாம். பொதுவாக ஒரே மொழிக்குடும்பத்தைச்
சேர்ந்த மொழிகளில் முக்கிய மனித உறவுகளைச்சுட்டும் பெயர்கள் ஒன்று போலவே
இருக்கும். உதாரணமாக, சமிஸ்கிருதம். பிதா; ஜெர்மன்: ஃபாட்டர்; ஆங்கிலம்,
ஃபாதர்: சமி:ப்ராதா, ஜெர்மன்: ப்ரூடர், ஆங்கிலம்:பிரதர்; சமி: மாதா,
ஜெர்மன்:முட்டர், ஆங்கிலம்: மதர். இதை நாம் தொல்லியல் ஆய்வில் உள்ள
fossil என்பதுடன் ஒப்பு நோக்கலாம். இப்படி முறையாக மொழியியல் ஆய்வுகள்
மெற்கொள்ளப்பட்டு, தமிழ் மொழிக்கும் ஆப்பிரிக்க மொழிகளுக்கும்
தொடர்புள்ளதா? இல்லையா என்று கணித்து, மனிதக்கூட்டம் எங்கு தோன்றி, எங்கு
கிளைத்தது என்று அறியலாம்.
முன்வரைவுகள் இன்றி இதைச் செய்தால் நலம். இல்லையெனினும் இத்தகைய
டேட்டாபேஸ் அவசியம்.
மதிவாணன் சுட்டும் குயவர் வீட்டு சிந்துவெளி, சந்தால் பழங்குடி மக்களின்
சிந்துவெளி மொழி பற்றிய ஆய்வுகள் சிந்துவெளி நாகரிகம் அழிந்துவிடாமல்
இன்றும் வாழ்வதைச் சுட்டுகிறது. நொய்யலாறு அகழ்வாராய்ச்சியை தொல்லியல்
பிரிவில் வலுவுள்ளோர் forgery என்று ஒதுக்கிவிட முனைகின்றனர். இது
உண்மையா எனக்கண்டறிய வேண்டும். தமிழின் தொன்மையக் காட்டுவதில் மொழி
வெறியோ, குழு சார்ந்த நிலைப்பாடோ இல்லாமல் உள்ளதை உள்ளபடி காட்டும்
ஆய்வாளர்களே காலத்தின் தேவை. ஆனால் அது இன்னும் நடைபெறவில்லை. ஆனால்,
முனைப்புடன் பலர் இதில் ஈடுபட்டால் நிச்சயம் ஒருநாள் உண்மை வெளிவந்தே
தீரும்!
நா.கண்ணன்
2011/4/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:
சேசாத்திரி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சிந்து எழுத்துகள் தமிழகத்தில் கிட்டி உள்ளன என்பது உண்மையே இது தொடர்பாக
பேரா. சா. குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றை தமிழில் பெயர்த்து அது
மின்தமிழில் வெளியானதென அறிகிறேன். அதுமுதல் நான் மின்தமிழில் இணைந்தேன்.
On Apr 9, 9:39 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> சிந்து எழுத்துகள் தமிழகத்தில் கிட்டி உள்ளன என்பது உண்மையே இது தொடர்பாக
> பேரா. சா. குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றை தமிழில் பெயர்த்து அது
> மின்தமிழில் வெளியானதென அறிகிறேன். அதுமுதல் நான் மின்தமிழில் இணைந்தேன்.
>
> சேசாத்திரி
>
குருமூர்த்தி கட்டுரை வெளியான சுட்டி இருக்கிறதா?
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/9c81cfecf5af48ed
க.
தமிழாக்கம்: சேசாத்திரி
http://meenakam.com/2011/03/25/22029.html
நா. கணேசன்
தொல்காப்பியர் பிறந்த நாளையும் கணித்த பெருமை
மதிவாணனுக்கு இருக்கிறது.
--------------------------
http://www.thamizhankural.org/2009/05/11/162/
தொல்காப்பியரின் 2874 ஆம் ஆண்டு பிறந்த நாள்
09.05.2009 அன்று தொல்காப்பியர் பிறந்த நாள்
” தொல்காப்பியர் காலம் ”
என்னும் நூலில் பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் தொல்காப்பியர் பிறந்த
நாள் தி.மு.865 மேழவெள்ளுவா என முழுமனதுடன் வரையடுத்ததையிட்டு
அதங்கோட்டாசான் பிறந்த குமரிமாவட்டத்து அதங்கோட்டில் கடந்த இரண்டு
ஆண்டுகளாக குமரி மாவட்டத்துத் தமிழாசிரியர் மன்றம் கொண்டாடி
வருகின்றது.உலகெங்கும் வாழும் தமிழர் இனி தமிழ் மரபைக் காத்திடும் வண்ணம்
தொல்காப்பியருக்கு எடுக்கும் விழா தமிழன்னைக்குப் புகழாரம் சூட்டுவதாக
அமையும்.
-----------------
மதிவாணன் ஆராய்ச்சியால் தொல்காப்பியர் பிறந்து
2011 மே மாதம் பிறந்தால் 2876 ஆண்டுகள் சென்றுவிட்டன.
நா. கணேசன்
நாட்டியக் கலையின் தந்தை பரதரா; அவிநயரா?
இரா.மதிவாணன்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=12578
பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு - பேராசிரியர் இரா.மதிவாணன்
http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=1128:-0-&catid=51:2009-09-24-06-51-46
கிரந்த எழுத்து - தமிழுக்கு நச்செழுத்து!
http://www.kovainews24x7.com/2011/02/blog-post.html
Pavanar : A Pioneer in Tamilology - R. Mathivanan, 1981, JTS
http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=170
நூல்கள்:
கடைக் கழக நூல்களின் காலமும் கருத்தும்
http://udumalai.com/index.php?prd=&page=products&id=7612
பாவாணரின் ஞால முதன்மொழிக் கொள்கை
http://www.viruba.com/final.aspx?id=VB0001519
எழுத்தாளர் / தொகுப்பாளர் : முனைவர் இரா.மதிவாணன்
பதிப்பு : முதற் பதிப்பு(2006)
விலை : 45 .00 In Rs
பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 160
ISBN :
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
நா. கணேசன்
[as Alice said during her adventures in Wonderland]
-- Jean-Luc Chevillard
> 2011 மே மாதம் பிறந்தல் 2876 ஆண்டுகள் சென்றுவிட்டன.
>
> நா. கணேசன்
>
On Apr 10, 1:21 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> "curiouser and curiouser"
>
> [as Alice said during her adventures in Wonderland]
>
> -- Jean-Luc Chevillard
>
Lots more "curious" material on these kind of researchers, JLC
best,
~ NG
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
http://www.yarl.com/forum3/index.php?showtopic=28704
> > - Show quoted text -- Hide quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திரு ரா. மதிவாணன் கோவையில் என் சகபயணி, (நான்கு நாட்கள்)குறிப்பிட்ட சமுதாயத்தை வெறுத்து அந்த நான்கு நாட்களும் அவர் பேசிக்கொண்டு வந்ததை மறக்க முடியாது.தமிழ்ப் பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் (அவர் பெயரால் வந்த வினை) அவரிடம் மாட்டிக் கொண்டு வாதம் செய்ததையும் மறக்க முடியாது. கடைசியில் தான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது என்பதையும், பாகவதர் குலம் என்றதும்தான் விடுதலை கிடைத்தது.
9 ஏப்ரல், 2011 10:39 pm அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
சிந்து எழுத்துகள் தமிழகத்தில் கிட்டி உள்ளன என்பது உண்மையே இது தொடர்பாக
பேரா. சா. குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றை தமிழில் பெயர்த்து அது
மின்தமிழில் வெளியானதென அறிகிறேன். அதுமுதல் நான் மின்தமிழில் இணைந்தேன்.
அதுக்கும் தமிழ்பிராமிக்கும் உறவு இருக்குதா?
--
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
Vijayaraghavan
On Apr 10, 8:21 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
On Apr 10, 7:19 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நா. கணேசர் மதிவாணரின் கட்டுரைகளை அடுக்கடுக்காய் கொடுத்து இருப்பதைப்
> பார்த்தால் அவரிடம் நேரடியாக தொடர்பு வைத்துள்ள என்னை விடவும் அவரை நன்றாக
> அறிந்து வைத்திரிப்பார் போல் தோன்றுகிறது..கணேசரே நன்று நும் செயல் !
> பாராட்டுகள் மிகப் பல உமக்கு!
>
> சேசாத்திரி
>
I will give some comments on few places in Mathivanan articles.
I do not believe Indus inscriptions can be read with alphabets,
& Mathivanan uses TaniTamil for these. His precise dating
of Tolkappiyar is impossible as well.
best.
N. Ganesan
Ethocentrism is the ruling word. Knowledge as an ideal, something
objective, free from personal and social prejudices, has been totally
absent for the last 50 to 60 years in Tamilnadu. "Knowledge" in the
Tamil Purist paradigm is a means to glorify 'Tamil race'. This is by
now well-entrenched in acdemics, politics and media and now backed by
vast amounts of money.
--
இந்த “ வாட் ஈசு வராங்க் இன் இட்” மனப்பான்மை (அதாவது இனமைய `அறிவு`)
பரவலாக இருக்கும் வரை உண்மை அறிவு வளராது.
ஒரு மரத்திலிருந்து பலத்த காற்றில் விநோதமான சத்தம் வந்தால் ஒரு
குழந்தையின் (அல்லது பழங்குடியினரின்) `அறிவு` அங்கு ஒரு பேய்
இருக்கின்ரது. விஞ்ஞான அறிவு மரங்களையும், காற்றையும் தன் பய/பீதி
உணர்விலிருந்து நீக்கிவிட்டு புறவயமாக அவதானிப்பதில் உள்ளது.
>
> நாம் செய்யலேனா எவன் செய்வான்?
ஏன் அப்படியெல்லாம் செய்யணும் , அதைவிட நல்ல வழிகள் இருக்கும் போது
. அப்படி நிறுவிவிட்டால் நீங்கள் இழப்பதுதான்
> என்ன?
”ஆய்வுகளின்” குறிக்கோள் புதிய கட்டுக்கதைகளை வளர்ப்பது என்றால், அது
உண்மையை தேடுபவர்களுக்கு அபஸ்வரமாக இருக்கும்.
> எல்லாமே வடமொழியில் இருந்துவந்தது என்று ஆய்வுசெய்வதுதான் ப்ரிஜுடீஸ் இல்லாத
> ஆய்வு?
> என்பது விஜயராகவனின் கருத்தோ?
நான் சொல்லாததை கற்பனை செய்து கொண்டு எழுதாதீர்கள். அது விவாதங்களில்
நல்விளைவு தருவதோ, அறிவை வளர்ப்பதோ அல்ல.
விவாதிப்பவர் இப்படி நினைக்கின்றனர் என நீங்களே கற்பனை செய்யாமல், நான்
எழுதியதற்க்கு பதில் எழுதுங்கள்
விஜயராகவன்
On Apr 10, 8:03 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> தமிழை தமிழாக சொல்லாமல் வேறு என்னவாக சொல்வது. அது எப்படி இனவாதமாகும்.
> தமிழுக்கு தமிழர் விள்க்கம் தராமல் வேற்றவர் வேற்றுமை எண்ணத்தோடு விளக்கம்
> தந்தால் மட்டும் ஞாயமாக தோன்றுமா ? 1920 க்கு முற்றபட்ட எழுத்துகள்
> சமற்கிருதத்தின் அடிப் பொடியாகவே தமிழை காட்டின. இதில் என்ன அறிவாண்மை
> இருக்கிறது.. அறிவியல் காலத்தில் பழைய மதவாதம் எடுபடாததால் இக்கால் தமிழ் தன்
> உண்மை மதிப்பை பெற்றுள்ளது . அது சிலருக்கு பிடிக்கவில்லை. இதுவே உண்மை.
> தமிழின் உயர்வு தமிழருக்கு உ யர்வு. இது தமிழருக்கு சம உரிமையை தருகிறது..
>
> சேசாத்திரி
>
சிந்து ”எழுத்துக்கள்” எழுத்தா? வார்த்தைகளா? சின்னங்களா?
அவை தமிழ் என்று எப்படி உங்களுக்கோ, மதி்வாணனுக்கோ
நிச்சயமாய் தெரியும்? அதுவும் கிரந்தம் இல்லாத தனிதமிழ்
என்று இருவரும் படிக்கிறீர்கள். தொல்காப்பியர் 2800+ வருஷம்
என்பது போலா? நாங்களும் ஆய்வுத் துறையில் தான் அன்றாடும்
செயல்படுகிறோம்.
க்ரெக் போசெல் புத்தகம் - எத்தனை பேர் சிந்து எழுத்தை படிக்க 100
வருஷமாய் முயன்றுள்ளனர் என்பது பற்றி - பார்த்ததுண்டா?
இது ஏதோ உங்களுக்கு இ-மெயில் எழுதணும் என்று எழுதுவதல்ல.
சிந்து பற்றி வரும் தொல்லியல் ஆய்வுகளை 30 ஆண்டுகளாக
விரும்பி படித்து வருபவன் என்ற முறையில் எழுதுகிறேன்.
மீன் சின்னம் திராவிடர்களைக் காட்டுகிறது. இன்னும் சில
குறிப்புகள் உண்டு. அவ்வளவுதான். அந்த “எழுத்துக்களை”
விடுத்துவிட்டு கலையைப் படித்தால் திராவிடர் கலைவரலாற்றால்
சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.
சிந்து நாகரிகத்தில் கொற்றவை வழிபாடு:
நண்பர் ஐராவதத்தை மறுத்து, இது ஜல்லிக்கட்டு அல்ல என்று
காட்டினேன்..
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
எனது ஆய்வுக் கட்டுரை. இதை செம்மொழி மாநாட்டில்
படித்தேன். செல்போன் டெக்னாலஜி கண்டுபிடித்தவர்களுள்
முக்கியமான விஞ்ஞானி திரு. பால்ராஜ், சந்திரயான்
அண்ணாதுரை, இயற்கையாகவே பக்மினிஸ்டர் ஃபுல்லெரீன்
இருக்கிறது என்று கண்ட பார்த்தசாரதி, ... போன்றோர்
முன்னிலையில்.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
Dr. N. Ganesan, 2007 essay
In the Mature Harappan period seals and tablets produced about 4000
years ago, gharial crocodile is portrayed as a 'horned' being. As in
the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the
central figure surrounded by a typical set of animals. A female being,
often connected with tigers, is seen coupling together with the
gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC)
creation myth. A number of seals show a man on the tree along with a
tiger below. This shaman on the tree and tiger motif is linked
archaeologically with the gharial deity in the sky, and the
Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC
tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger
motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A
comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic
art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it
is illustrated with pictures of the IVC sealings. These religious
myths of the gharial and tiger divinities are at least as important as
the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and
seven women in front of a bodhi fig tree.
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
நான் சொல்லாததை கற்பனை செய்து கொண்டு எழுதாதீர்கள். அது விவாதங்களில்
நல்விளைவு தருவதோ, அறிவை வளர்ப்பதோ அல்ல.
விவாதிப்பவர் இப்படி நினைக்கின்றனர் என நீங்களே கற்பனை செய்யாமல், நான்
எழுதியதற்க்கு பதில் எழுதுங்கள்
லெக்சிகான் பன்மொழி வல்லமை உள்ளவர்களால் செய்யப்பட்டது, அதனால் அதன்
கருத்துகளுக்கு மதிப்பு தரேன். அதை நம்புவது இல்லையோ, அதில் நடுநிலமை
பேச்சு எங்கே வந்தது.
கணேசரிடம் 3 தடவை கேட்டேன், `முத்து`வின் `தனித்தமிழ்` விளக்கம்
என்னான்னு, பதில் இல்லை, நீங்களும் பதில் சொல்லவில்லை.
இதை ஏன் அந்த இழையில் பேசாமல், வேறொரு இழையில் இழுக்கின்றீகள் ?
இனைமைய வாதத்திற்க்கு அறிவை பலி கொடுக்கலாமா?
விஜயராகவன்
On Apr 10, 4:06 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 10 ஏப்ரல், 2011 9:17 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>லெக்சிகான் பன்மொழி வல்லமை உள்ளவர்களால் செய்யப்பட்டது, அதனால் அதன்
>
>
> > நான் சொல்லாததை கற்பனை செய்து கொண்டு எழுதாதீர்கள். அது விவாதங்களில்
> > நல்விளைவு தருவதோ, அறிவை வளர்ப்பதோ அல்ல.
>
> > விவாதிப்பவர் இப்படி நினைக்கின்றனர் என நீங்களே கற்பனை செய்யாமல், நான்
> > எழுதியதற்க்கு பதில் எழுதுங்கள்
>
> உங்கள் நடு நிலை என்னும் கோட்பாட்டை நீங்கள் எல்லா இடங்களும் வலியுறுத்துவது
> இல்லை.
>
> அது சாலுமே உய்த்துணர? சாற்றவும் வேண்டுமோ?
>
> வடசொல்லில் ”முக்த” எனும் வேர் இருக்கு. எனவே முத்து என்பது முக்தம் எனற
> சொல்லின் பிறப்பு என்று நீங்கள் பறைந்த போது நடுநிலை நின்றீரா?
கருத்துகளுக்கு மதிப்பு தரேன். அதை நம்புவது இல்லையோ, அதில் நடுநிலமை
பேச்சு எங்கே வந்தது.
`முத்து` விவாததை இங்கு எடுத்தவர் நீர், அப்புரம் அதை பேசவில்லை
என்கிறீர், நான் லெக்சினானை நம்பினால் அது நடுநிலமை இல்லை என்றால் என்ன
சொல்வது?
> ஆய்வாளர்களின் நடுநிலைமை பற்றி நீங்கள் இழைதோறும் கிண்டலிப்பதை குறித்தே சொல்ல
> நிகழ்ந்தது.
இனமைய “ஆய்வாளர்களை” - அதாவது லெமூரியர்கள், தமிழ்தான் உலகின் ஆதிமொழி
வாதிகள் - நான் எப்போதாவதுதான் கிண்டல் செய்கிறேன், ஏனெனில் மௌனம்
உடன்பாடாகிவிடும்,
புவிவெய்யுறல் இழையில் தேவ் உங்களுக்கு சிறு அறிவுரை கூட
> நல்கினார். கண்ணுற்று இருப்பீர்.
என்ன அறிவுரை, மறுபடியும் சொல்லுங்கள்
விஜயராகவன்-
On Apr 10, 9:53 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 10 ஏப்ரல், 2011 10:24 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
>
>
>
>
> > On Apr 10, 4:06 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 10 ஏப்ரல், 2011 9:17 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>
> > > > நான் சொல்லாததை கற்பனை செய்து கொண்டு எழுதாதீர்கள். அது விவாதங்களில்
> > > > நல்விளைவு தருவதோ, அறிவை வளர்ப்பதோ அல்ல.
>
> > > > விவாதிப்பவர் இப்படி நினைக்கின்றனர் என நீங்களே கற்பனை செய்யாமல், நான்
> > > > எழுதியதற்க்கு பதில் எழுதுங்கள்
>
> > > உங்கள் நடு நிலை என்னும் கோட்பாட்டை நீங்கள் எல்லா இடங்களும் வலியுறுத்துவது
> > > இல்லை.
>
> > > அது சாலுமே உய்த்துணர? சாற்றவும் வேண்டுமோ?
>
> > > வடசொல்லில் ”முக்த” எனும் வேர் இருக்கு. எனவே முத்து என்பது முக்தம் எனற
> > > சொல்லின் பிறப்பு என்று நீங்கள் பறைந்த போது நடுநிலை நின்றீரா?
>
> > லெக்சிகான் பன்மொழி வல்லமை உள்ளவர்களால் செய்யப்பட்டது, அதனால் அதன்
> > கருத்துகளுக்கு மதிப்பு தரேன். அதை நம்புவது இல்லையோ, அதில் நடுநிலமை
> > பேச்சு எங்கே வந்தது.
>
> அதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொண்டீர்கள்.
> அதன் மறுதரப்பு என்ன என்று சொல்லாமல் கூற்று இட்டீர்கள்.
>
> முகத ஏன் தமிழில் இருந்து வடமொழிக்கு போய் இருக்ககூடாது என்ற ஆய்வை/ அல்லது
> மறுதரப்பினர் கருத்தை நீங்கள் குறிப்பிடவில்லை
>
> >இதை ஏன் அந்த இழையில் பேசாமல், வேறொரு இழையில் இழுக்கின்றீகள் ?
>
> இப்போதும் நான் முத்து பற்றி பேசலை. அது வடமொழி பிறப்பாகவே இருக்கட்டும்.
>
முத்து தமிழ்ச்சொல். குறிப்பிட்டிருந்தேனே.
--
விஜயராகவன்
> > ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
அய்யா, முற்றியது முத்து, முற்றியதால் முத்து. சிப்பியின் வயிற்றில் பல நாள் இருந்து முற்றி வந்தது முத்து. 'ற்ற்' ஐத் தம்முள் கொண்ட பல தமிழ் சொற்கள், தங்களது இரட்டையன் வடிவமாக 'த்த்' ஐ உடைய சொற்களைக் கொண்டுள்ளன. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. 'விதை' என்ற பொருளில் வரும்போதும் கூட, 'முத்து' என்ற சொல் 'முற்றிய ஒன்றைக்' குறிப்பிடுவதுதானே? ஆரெம் பால்ராஜ் --- On Sun, 10/4/11, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
|
On Apr 10, 10:01 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> அய்யா,
>
> முற்றியது முத்து, முற்றியதால் முத்து.
> சிப்பியின் வயிற்றில் பல நாள் இருந்து முற்றி வந்தது முத்து.
>
> 'ற்ற்' ஐத் தம்முள் கொண்ட பல தமிழ் சொற்கள், தங்களது இரட்டையன் வடிவமாக 'த்த்' ஐ உடைய சொற்களைக் கொண்டுள்ளன. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
>
> 'விதை' என்ற பொருளில் வரும்போதும் கூட, 'முத்து' என்ற சொல் 'முற்றிய ஒன்றைக்' குறிப்பிடுவதுதானே?
>
> ஆரெம் பால்ராஜ்
>
திரு. பால் ராஜ், நல்வரவு. வெகு ஆண்டுகள் பேசி
ஓடி விட்டன.
ஜான் சாமுவேலைப் பார்க்கும் போது என் நலம்
விழைதலைக் கூறவும்.
அன்புடன்,
நா. கணேசன்
ஹ்யூஸ்டன், அமெரிக்கா.
> --- On Sun, 10/4/11, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> From: விஜயராகவன் <viji...@gmail.com>
> Subject: [MinTamil] Re: ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா! பேராசிரியர் இரா. மதிவாணன்
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Date: Sunday, 10 April, 2011, 19:54
>
> On Apr 10, 4:06 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 10 ஏப்ரல், 2011 9:17 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>
> > > நான் சொல்லாததை கற்பனை செய்து கொண்டு எழுதாதீர்கள். அது விவாதங்களில்
> > > நல்விளைவு தருவதோ, அறிவை வளர்ப்பதோ அல்ல.
>
> > > விவாதிப்பவர் இப்படி நினைக்கின்றனர் என நீங்களே கற்பனை செய்யாமல், நான்
> > > எழுதியதற்க்கு பதில் எழுதுங்கள்
>
> > உங்கள் நடு நிலை என்னும் கோட்பாட்டை நீங்கள் எல்லா இடங்களும் வலியுறுத்துவது
> > இல்லை.
>
> > அது சாலுமே உய்த்துணர? சாற்றவும் வேண்டுமோ?
>
> > வடசொல்லில் ”முக்த” எனும் வேர் இருக்கு. எனவே முத்து என்பது முக்தம் எனற
> > சொல்லின் பிறப்பு என்று நீங்கள் பறைந்த போது நடுநிலை நின்றீரா?
>
> லெக்சிகான் பன்மொழி வல்லமை உள்ளவர்களால் செய்யப்பட்டது, அதனால் அதன்
> கருத்துகளுக்கு மதிப்பு தரேன். அதை நம்புவது இல்லையோ, அதில் நடுநிலமை
> பேச்சு எங்கே வந்தது.
>
> கணேசரிடம் 3 தடவை கேட்டேன், `முத்து`வின் `தனித்தமிழ்` விளக்கம்
> என்னான்னு, பதில் இல்லை, நீங்களும் பதில் சொல்லவில்லை.
>
> இதை ஏன் அந்த இழையில் பேசாமல், வேறொரு இழையில் இழுக்கின்றீகள் ?
>
> இனைமைய வாதத்திற்க்கு அறிவை பலி கொடுக்கலாமா?
>
> விஜயராகவன்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
பால்ராஜ் ஐயா
தமிழில் பேச்சில் ற்ற நீங்கி த்த வந்துவிட்டது, ஆனால் இன்னும் ற்ற என
எழுதுகிறோம்.
இதற்கு நூத்துக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன. பல நூத்தாண்டுகளுக்கு முன்பு
ற்ற என்பதை தமிழர்கள் அப்படியே பேசினார்கள், காலப்போக்கில் எழுத்தை
மாத்தாமல், பேச்சு ஒண்டி மாறிவிட்டது; இதைத்தான் டிகுளோசியா என
சொல்லுவர்.
ஆனால் இந்த `முத்து` டிக்ளோசியா வகை இல்லை. தமிழிலிலக்கியங்களில்
எப்பவும் முத்துதான், பேச்சும் அப்படித்தான்.
அதனால்தான் லெக்சிகான் விளக்கம் சரி போல இருக்கு. வடமொழி க்த, ப்த
கூட்டுகள் தமிழில் த்த என ஆகிறன. (முத்தி, சத்தம், பத்தர்,..........)
விஜயராகவன்
உங்கள் குரு மதிவாணன் எழுதியுள்ள Pavanar - Pioneer is Tamilology by
R.Mathivanan ஞா.தேவநேயனின் பாராட்டுக் கட்டுரையை படித்துப்
பாருங்கள் .
Some excerpts from the wild eulogies:
One can find his (Pavanar's) unquenchable thirst for establishing the
primacy of Tamil in the international arena
He observes that Tamil being not only the earliest but also the
Primary Classical language of the world, it had it's beginning in the
form of Universal natural Language...
Pavanar had a conviction of lost Lemuria had closely observed all the
natural and artificial movements of animate and inanimate things.....
He revealed to the world the extreme antiquity of the tamil language,
it's superiority over contemporary languages, ..... and virility to
give birth to other langauges
.....he tried his best to evolve his theory of Tamil as the
"Progenitor of human speech"
...pavanar came to the conclusion Tamil would be the mother of all
the languages of the world.
he came to the conclusion Sanskrit borrowed two thirds of it's
vocabulary from Tamil............. In the same way Greek, Latin and
Indo-european language have also borrowed from ancient tamil
He had a contempt for descriptive linguistics which he thought was
good only for Tribal languages
There is no language in the world like Tamil which can be spoken
without the admixture of foreign words
அறிவியல் அல்லது மொழியியல் அல்லது காமன் சென்ஸ் நோக்கில் அவையெல்லாம்
வெறும் உளரல்கள். Primary Classical language , Universal natural
Language, "Progenitor of human speech" போன்றவை அர்த்தமற்ற வார்த்தை
கோவைகள். இதை ஆங்கிலத்தில் என் கூறுவர்
இதெல்லாம் இனமைய வாதம் அன்றி வேறென்ன ???????
ஞா.தே. வை முன்னோடியாக கொண்ட எவரும் இனமைய வாதத்தில் இருந்துதான்
எழுதுவர். அதாவது தமிழ்தான் உலகிலேயே மிகப்பழம் மொழி, மற்ற மொழிகள்
தமிழிடமிருந்து கடன் வாங்கியவை. தூய தமிழ் என்ற திசைகளில்தான் எண்ணங்கல்
செல்லும்
Pavanar's writings are ethnic mysticism and the exact opposite of
science
விஜயராகவன்
அய்யா,
முற்றியது முத்து, முற்றியதால் முத்து.
சிப்பியின் வயிற்றில் பல நாள் இருந்து முற்றி வந்தது முத்து.
எவரும் - அதாவது தற்கால மொழியியலில் சிறிது படித்தவரும் - உலகில் ஒரு
தாய் மொழி இருக்கு என நம்புவதில்லை, அதுவும் அந்த தாய் தமிழ்தான் என்றாள்
சிரிப்பார்கள்
>
> அப்படி இருக்குமோ என ஐயுறுவது நடுனிலை
>
> இல்லவே இல்லை என்பது சார்நிலை
> இரண்டு அண்டை மொழிகளாக தமிழும், சாவதற்கு முன் வடமொழியும் ஆயிரக்கணக்கான
> ஆண்டுகள் ஒருங்கே வாழ்ந்துள்ளன. இருந்தும் வடமொழியில் தமிழ் கலக்க வாய்ப்பே
> இல்லை என்று துணிந்து சொல்வீரா?
உங்களுக்கு ஒரு நற்செய்தி - வடமொழி இன்னும் சாகவில்லை !!!
அப்படி இருக்க வடமொழியில் தமிழ் கலக்க வாய்ப்பில்லை என்பது என் வாதமும்
அல்ல, அல்ல யார் வாதமும் அல்ல. இங்கு - தேவநேயரைப் போன்ற தனித்தமிழ்
பகல்கனவாளிகளைப் பற்றி பேசரோமே தவிர, மத்த மொழிகள் பத்தி அல்ல.
விஜயராகவன்
--
--- On Sun, 10/4/11, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
From: விஜயராகவன் <vij...@gmail.com> Subject: [MinTamil] Re: ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா! பேராசிரியர் இரா. மதிவாணன் To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com> |
Date: Sunday, 10 April, 2011, 23:19 On Apr 10, 5:01 pm, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote: > அய்யா, > > முற்றியது முத்து, முற்றியதால் முத்து. > சிப்பியின் வயிற்றில் பல நாள் இருந்து முற்றி வந்தது முத்து. > > 'ற்ற்' ஐத் தம்முள் கொண்ட பல தமிழ் சொற்கள், தங்களது இரட்டையன் வடிவமாக 'த்த்' ஐ உடைய சொற்களைக் கொண்டுள்ளன. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. > > 'விதை' என்ற பொருளில் வரும்போதும் கூட, 'முத்து' என்ற சொல் 'முற்றிய ஒன்றைக்' குறிப்பிடுவதுதானே? > > ஆரெம் பால்ராஜ் |
/தமிழில் பேச்சில் ற்ற நீங்கி த்த வந்துவிட்டது/ 'ற்ற்' ஒன்றும் 'த்த்' ஆக மாற்றம் பெற்றுவிடவில்லை. இரண்டும் தனித்தனியாக வழக்கில் உள்ளனன. They have separate existence. / பல நூத்தாண்டுகளுக்கு முன்பு ற்ற என்பதை தமிழர்கள் அப்படியே பேசினார்கள்,/ இதைத் தங்களால் நிரூபிக்க இயலுமா? தமிழ் லெக்சிகன் என்று பெயர் தரப்பட்டிருந்தாலும், அது எடிமாலஜிக்கான ஒரு விளக்க நூல் அல்ல. அதில் பல தமிழ் சொற்களுக்கு எடிமாலஜிகல் விளக்கம் தரப்படவே இல்லை. அதுவும் தவிர, லெக்சிகன் தொகுக்கப்பட்ட காலம் வரையில், தமிழ் மக்களிடையே புழக்கத்தில் (எழுத்திலும், பேச்சிலும்) வழங்கிய பன்மொழி சொற்களின் தொகுப்பாகதான் அது விளங்குகின்றது. 'முத்து' போன்ற சொற்களுக்கு வடமொழி மூலத்தைக் காட்டுவதில் லெக்சிகன் தவறு செய்துள்ளது என்பது தெளிவு. இது போன்ற தமிழ் சொற்களின் மூலத்தைத் தேடி வடக்கே செல்ல வேண்டியதில்லை. அன்புடன், |
19ம் நூற்றாண்டு ஆட்கள் 21ம் நூற்றாண்டில் கத்துகின்றனரா? என்ன
ஆச்சர்யம் !! 200 வயது வாழ்வதற்க்கு நாம் லெமூரியர் அல்ல.
> 1990 களின் இறுதியில் உலக அறிஞர்கள் மொழிக் குடும்ப முதன்மை மொழிகளிடையே ஒலி
> ஒற்றுமையும் பொருள் ஒற்றமையும் இருப்பதை உணரந்து இவற்றுக்கு எல்லாம் ஒரு மூல
> மொழி உண்டென்று உறுதி செய்து அதற்கு Nostratics என பெயரிட்டுள்ளனர்.
Nostratics ஒரு தியரிதான். அதை மறுக்கும் மொழியியலாலர் ஏராளம்.
http://en.wikipedia.org/wiki/Nostratics
தமிழ்
> இந்த Nostratics க்கு நெருங்கியதாகவோ அல்லது அந்த நாஸ்ட்ராடிக்சாகவோ இருக்கலாம்
> என்பதைத் தான் பாவாணர் முன் கூட்டியே அறிவித்துள்ளார் எதையும் மேலையர் சொன்னால்
> ஏற்றுக் கொள்வது தமிழறிஞர் சொன்னால் அறிவியல் அடிப்படையற்றது என தள்ளுவது
> சமஸ்கிருத ஆதரவாளர்களின் போக்கா உள்ளது.
தேவநேயர் கருத்துகளையும், நோஸ்ட்ராடிக்கையும் ஒன்றாக பார்க்காதீர்கள்.
நோஸ்ட்ராடிச் ஆங்கிலம்தான் , நோஸ்ட்ராடிச் பேசியவர்கள் லெமூரிய
ஆங்கிலேயர்கள் என யாரும் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது இனவாதம்
ஆகும். மேலும் ஒபாமா, கேமரூன் போன்ற தலைவர்கள் நோஸ்ட்ராடிச் கருத்து
கொண்டவர்களை தலை மேல் வைத்து துதிப்பதில்லை
> பாவாணரின் கூற்றை மெய்ப்பிககும் நாள் அண்மித்து வநது ண்டிருக்கிறது பொருமை! பொருமை!
ரொம்ப நல்ல விஷயம், நான் முன்னேற்பாடாக லெமூரியாவுக்கு "திராவிட
ஏர்லைன்ஸில்" விமான டிகட் வாங்கிவிட்டேன்
விஜயராகவன்
நன்றி நா.கணேசன் ஐயா அவர்களே. முனைவர் ஜான் சாமுவேல் தங்களை ஒருபோதும் மறந்தாரில்லை. தங்களைக் குறித்துத் தினம் ஒரு செய்தி கூறக் கூடிய அளவிலே அவரது அளவளாவல்களில் நீங்கள் அடிக்கடி வந்து போகிறீர்கள். |
ஆரெம் பால்ராஜ் |
--- On Sun, 10/4/11, N. Ganesan <naa.g...@gmail.com> wrote: |
|
எப்படி தெளிவு? நீங்கள் சொல்வதனாலேயா?
http://en.wikipedia.org/wiki/Lexicon
In linguistics, the lexicon of a language is its vocabulary, including
its words and expressions.
லெக்சிகானின் முதல் வேலை ஒகாபிலரியை கொடுப்பதுதான், "வேர் ஆராய்ச்சி"
அதன் முதல் நோக்கம் அல்ல. மெட்ராஸ் லெக்சிகான் அதன் வேலையை திறனாக
செய்தது
விஜயராகவன்
On Apr 11, 5:17 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
விஜயராகவன்
They have separate existence in informal and formal Tamil. If you are
a TV news reader you will read from the sheet "தீ பற்றிக் கொண்டதால்,
மக்கள் பஸ்ஸில் தொற்றிக் கொண்டு சென்றனர்"
Once away from TV camera you will say தீ பத்திண்ட்ருத்து, எல்லாரும்
பஸ்ல தொத்திண்டு போய்டாங்க
informal Tamil has lost ற்ற் and replaced it with த்த்
> / பல நூத்தாண்டுகளுக்கு முன்பு ற்ற என்பதை தமிழர்கள் அப்படியே பேசினார்கள்,/
>
> இதைத் தங்களால் நிரூபிக்க இயலுமா?
இன்று நாம் காணும் பேச்சு/எழுத்து தமிழின் பெரும் இடைவெளி ஒரு காலத்தில்
பேச்சே அப்படி இருந்ததால் வருவது. பேச்சு காலக்கோட்டில் மாறுபடுவது
> அதுவும் தவிர, லெக்சிகன் தொகுக்கப்பட்ட காலம் வரையில், தமிழ் மக்களிடையே புழக்கத்தில் (எழுத்திலும், பேச்சிலும்) வழங்கிய பன்மொழி சொற்களின் தொகுப்பாகதான் அது விளங்குகின்றது.
பன்மொழி என்று , தமிழில் இல்லாத சொற்கலை லெக்சிகான் கொடுத்தது போல்
சொல்கின்றிர். உதாரனமாக 'மராமத்து' தமிழ்ச் சொல் இல்லையா? 'தகவல்'
தமிழ்ச் சொல் இல்லையா?
விஜயராகவன்
வெசா அவர்களே
"பாவாணர் மெதொடாலஜி" வேற. அது பெயர் மாற்றம் அல்ல. எல்லா பெயர்களும்
லெமூரியன் தமிழிலிருந்து வந்தவை என அறுதியிட்டு உறுதியாக சொல்பவை.
அவர் பெயரே, ஞான, தேவ, நேயன் ஆகியவை தூய தமிழ்தான் என திண்ணமாக, சிறு
ஐயமும் இல்லாமல் "நிரூபித்து விட்டார்".
விஜயராகவன்
அய்யா, /வேர் ஆராய்ச்சி அதன் (லெக்சிகனின்) முதல் நோக்கம் அல்ல/ அப்படியானால், 'முத்து' என்ற பழந்தமிழ்ச் சொல்லின் வேர் 'முக்த்' என்ற வடமொழிச் சொல்லுக்குள் இருக்கக்கூடும் என்பதாக லெக்சிகனில் குறிப்பிட்டிருப்பது அதைத்தயாரித்தவர்கள் 'போகிற போக்கில்' குறிப்பிட்டுவிட்ட ஒரு தகவலோ? இரு மொழிகளுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் நீண்ட காலமாகவே நடந்து வந்திருந்தாலும், வடமொழியும் தமிழும் தம் தம் சொந்த மூலங்களையும் ஆதார அடிப்படைகளையும் உடைய தனித்தனி மொழிகள். தமிழ் மொழிச் சொற்களுக்கெல்லாம் வட மொழியில் வேரைத்தேடுவது 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலும் மொழியாதிக்க வாதத்தின் ஒரு முகமாக இருந்தது. இதே விதமான ஆதிக்க வாதம் தமிழ் ஆராய்ச்சியாளர்களிடையேயும் பிரதிபலிக்கிறது என்பது உண்மை. இரண்டும் தவறுதான். ஆனால், 'முத்து' என்ற பழஞ்சொல்லைத் தனித்தமிழ்ச் சொல்லல்ல எனக்கூறத் துணியும் அளவுக்கு மொழி வாதம் தேவையில்லை. சமஸ்கிருத 'முக்த்', 'முடிவு' என்ற பொருளைத் தன்னகத்தே கொண்டது. தமிழ் 'முத்து', 'வளர்ச்சியடைந்து (அதாவது முதிர்ச்சியடைந்து) முழுமையடைதல்' என்ற பொருளைத் தனக்குள் கொண்டது. |
அன்புடன், |
ஆரெம் பால்ராஜ் |
--- On Mon, 11/4/11, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
|
/பன்மொழி என்று , தமிழில் இல்லாத சொற்கலை லெக்சிகான் கொடுத்தது போல் சொல்கின்றிர். உதாரனமாக 'மராமத்து' தமிழ்ச் சொல் இல்லையா? 'தகவல்' தமிழ்ச் சொல் இல்லையா?/ மராமத்து, தகவல் போன்ற சொற்களை தமிழ்ச் சொற்கள் என்று தாங்கள் உண்மையாகவே எண்ணிக் கொண்டிருந்தால் அது பரிதாபத்துக்குரியது. நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பஸ்தி, பஜார் போன்ற சொற்களும் கூட தமிழ்ச் சொற்களாகி விடும்; தமிழ்(?) லெக்சிகனில் இடம்பெற்றிருக்கும் ஒரே காரணத்தால்! |
அன்புடன், |
ஆரெம் பால்ராஜ் |
--- On Mon, 11/4/11, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
உங்களுக்கு ஒரு நற்செய்தி - வடமொழி இன்னும் சாகவில்லை !!!
சேசாத்திரி
பல ஹிந்து/ஜைன/புத்த மத சனங்குகளும், பூஜை புனஸ்காரங்களும்
சமஸ்கிருதத்தில் நடக்கின்றன. நூற்றுக்கனக்கான புத்தகங்கள் பயனர்களுக்கு
பிரசுரமாகின்ரன. இன்னும் சிலர் சமஸ்கிருதத்தில் பேசுகின்றார்கள். "இறந்த
மொழி"என்றால் , தமிழ்நாட்டில் ஏன் இவ்வளவு கூச்சல், கோர்ட் கேஸ்
முதலியவை. "இறந்த மொழி" என்றால் ஏன் ஒரு இயக்கமே அதன் மீது காழ்ப்பைக்
கக்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது? இதெல்லாம் தானா சைகோவின் அம்மாவின்
குணங்கள்?
சமஸ்கிருதம் சைகொவின் அம்மா என்றால், பிள்ளையை விட மற்ற கதாபாத்திரங்கள்
இன்னும் பெரிய சைகோக்கள்.
விஜயராகவன்
சமஸ்கிருத 'முக்த்', 'முடிவு' என்ற பொருளைத் தன்னகத்தே கொண்டது.
தமிழ் 'முத்து', 'வளர்ச்சியடைந்து (அதாவது முதிர்ச்சியடைந்து) முழுமையடைதல்' என்ற பொருளைத் தனக்குள் கொண்டது.
65 | muktAkAra | (%{-tA7k-}) mfn. having the look or appearance of a pearl (%{-tA} f.) Bhartr2. |
66 | muktAmAtR | f. mother of pearl , a p�pearls-oyster L. [821,2] |
67 | muktAphala | n. a p�pearls Ka1v. &c. ; a species of flower Buddh. ; the fruit of the Lavali plant L. ; camphor L. ; N. ol wk. ; m. N. of a king of the Sabaras Katha1s. ; %{-ketu} m. N. of a king of the Vidya1-dharas , Kathls. ; %{-jala} n. = %{muktA-j-} (q.v.) Kum. ; %{-tA} f. the being a pearl state of a p�pearls , Malav. ; %{-dhvaja} m. N. of a king Katha1s. ; %{-parI7kSA} f. N. of ch. of wk. ; %{-maya} mfn. formed of p�pearls Hcat. ; %{-latA} f. a string of p�pearls Ma1rkP. - 2. |
68 | muktApIDa | (%{-tA7p-}) m. `" pearl-crowned "'N. of a king Ra1jat. ; of a poet Kshem. |
69 | muktAsthUla | mfn. big as a pearl MW. |
70 | muktikA | f. a pearl L. |
71 | mutya | n. a pearl L. |
உங்கள் கணிப்பில் தூய தமிழ்ச் சொற்கள் வரும்வரை தமிழர்கள், தமிழ்
சமுதாயம், தமிழக அரசு , தமிழக ஊடகங்கள் முதலியவை பரிதாபத்திற்க்கு
உரியவை. அரசு அறிவிப்புகளே தகவல் துறை அமைச்சர் என சொல்லும்போது,
உங்களுக்கு புரியவில்லையா? இதெல்லம் 'தமிழ் இல்லை'என பரிதாபத்திற்குரியது
என்றால், நீங்கள் தமிழ் ஊடகங்கள் ஒன்றும் படிக்கக் கூடாது.
பிறகு அமைச்சரும் தமிழ் இல்லைதான், சபாநாயகரும் தமிழ் இல்லைதான்.
தூயதமிழ் பெயரால் தமிழர் பொது வாழ்விலிருந்து உங்களை துண்டித்துக்
கொண்டால், நீங்கள்தான் பரிதாபத்திற்க்கு உரியவர் ஆவீர்.
விஜயராகவன்
மதிபிற்குரிய வெ.சா
உங்களுக்கெல்லாம் இல்லாத ஒரு பொது நிலை எனக்கு வாய்த்திருக்கிறது. நான்
தமிழன், ஆயினும் தமிழ் மண்ணில் வாழாதவன், ஒரு சாதியை சேர்ந்தவன், ஆனால்
அந்த ஜாதீய நிர்பந்தகளுக்கு உட்படாதவன், தமிழ் மொழி பேசுபவன் ஆனால் அது
சமகாலத்தில் தோற்றுவிக்கும் தாழ்வுமனப்பான்மைக்கோ, உயர்வுநவிற்சிக்கோ
உள்ளாக வேண்டிய நிர்பந்தமில்லாதவன்.
மிகச்சிறிய கிராமத்தில், தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட
குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து இன்று உலகம் முழுவதும், சுற்றி
உலகக்குடிகமகனாக ஆகிவிட்டவன். எனவே எனக்கொரு பருந்துப் பார்வை
கிடைக்கிறது. நான் வளர்ந்த காலம், அதே சமயம் உலகம் வளரும் போக்கு, கடந்த
60 ஆண்டுகளில் இந்தியா (தமிழகம்) கண்டுள்ள வெற்றி, பின்னடைவுகள் போன்றவை
தெளிவாய் தெரிகின்றன.
இன்று நாம் தமிழின் மீது கொள்கின்ற பீடு, சங்ககால இலக்கியப்பதிவு
தற்செயலாக ஆங்கிலேய இந்தியாவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில்தான்
பதிவாகி இருக்கிறது எனும் உண்மையை நேரடியாக தரிசிக்கமுடிகிறது என்னால்!
ஆங்கிலேயர் வந்த பின்தான் தமிழுக்கு நாவல், உரைநடை, புதுக்கவிதை போன்ற
இலக்கியத்தடங்களே கிடைக்கின்றன எனும் போது நமது சமகால தமிழ் பற்றிய
நோக்கு அதன் வளர்ச்சி என்பவை மிகச் சமீபத்தியவை என்பது தெளிவாகத்
தெரிகிறது. இன்று ஆரியர், ஆரியர் என்று பிரிவினை பேசும் பேச்சே ஒரு
ஆங்கிலேயர், ஆரியர் நமக்குச் சொல்லித்தந்ததுதான், அதைக் கிளிப்பிள்ளை
போல் பேசுகிறோம் என்பதைப் பார்க்கமுடிகிறது. பல்லக்கு தூக்கிகளாக இருந்த
தமிழனுக்கு, அம்மொழியின் பீடைச் சொன்னவன் ஒரு ஆங்கிலேயனாக இருக்கிறான்
எனும் உண்மையை எந்தவித துவேஷமும் இல்லாமல் தரிசிக்கமுடிகிறது. ஆங்கில
ஆட்சி நல்லதும் செய்திருக்கிறது, நிறையக் கெட்டதும் செய்திருக்கிறது.
மொழியியல், ஆய்வுமுறை, திறனாய்வுமுறை போன்ற நவீன உத்திகளை அவர்கள்தான்
நமக்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். மொழி பற்றிய ஒரு புதிய
விழிப்புணர்வை அவர்கள் நமக்குத் தந்துள்ளுனர். ஆனால் அதை இனவாதமாக்கியது
(பிராமணன், பிராமணன் அல்லாதவன்) தமிழனின் ஊறிப்போன ஜாதீய மனம் என்று ஏதோ
என்னிடம் சொல்கிறது. பார்ப்பனவாகை கண்ட சங்கத்தமிழன் இன்று அவன்
மண்ணிலேயே வந்தேறியாக உணர்கிறான் எனில் அதற்குக் காரணம் ஆங்கிலேயனா?
இல்லை குறுமதிபடைத்த தமிழ் நாட்சிகளின் சதிச்செயலா? என்பது இன்னும்
என்னுள் ஆராயப்பட்டுவரும் ஒரு கேள்வி.
கிரந்த எதிர்ப்பு, வடமொழி வெறி, பார்ப்பன இனவாதம் இவையெல்லாமே ஒரு பரிணாம
வளர்ச்சியின் ஒரு நிலையாகவே நான் காண்கிறேன். சமகால அறிவியல் இந்தியாவில்
வேர் ஊன்றி ஒரு நூற்றாண்டுகூட ஆகவில்லை. இந்தியா கண்ட அறிவியல்
வளர்ச்சியில் கால்பங்கு கூட மானுடவியல் இன்னும் காணவில்லை. இங்கு
மொழியியல் ஆய்வு என்பது எவ்வகை உசாத்துணையுமின்றி வெறும் வாய்ப்பேச்சாகவே
உள்ளது. முறையான களப்பணி இல்லை. ஜாதி என்றால் என்ன? எத்தனை ஜாதிகள்
தமிழகத்தில் உண்டு, எத்தனை விழுக்காடு மக்கள் ஜாதியை விட மனமில்லாமல்
இருக்கிறார்கள் இவற்றிற்கெல்லாம் எந்த அறிவியல் பூர்வமான கணக்கெடுப்போ,
எண்ணிக்கை அறிவோ இல்லாமல்தான் நாம் ஜாதியை ஒழிப்போம் என்று கூவிக்கொண்டு
இருக்கிறோம். இந்து என்றால் யாரென்று அறியாமல் இத்தனை நூற்றாண்டுகள்
வாழ்ந்துவிட்டதால் ஒரு விவேகாநந்தர் சொன்னபின் நமக்கு அதுவொரு 20
நூற்றாண்டுச் செல்வமாக இன்று மடியில் வந்து கிடைத்திருக்கிறது (அதற்கு
இன்னும் பாலபாடம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதே நம் பரிணாம
நிலைப்படி). எனவே எல்லாமே, ஆங்கில ஆட்சி வந்த பின் ஒரு நூற்றாண்டுக்குள்
மட, மடவென நடந்திருக்கிறது (சமய, சமுதாயப் புரட்சிகளை இங்கு தொடவில்லை).
இதைக் கண்ணுறும் போது யார் மீதும் காழ்ப்போ, வருத்தமோ, அதீத மகிழ்ச்சியோ
கொள்ளமுடியவில்லை. தமிழ் இன்று இளம்பிள்ளையாக தவழ்ந்து கொண்டு
இருக்கிறது. அவள் உலகின் மூத்த கிழவி என்று சொல்ல வேண்டுமெனில் நாம்
இன்னும் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நான் மின்தமிழில்
காண்பதெல்லாம் தமிழ்க் கண்ணாடில் காணும் காட்சிகள். சில நேரங்களில்
தன்னிலை மறந்து நானும் உணர்ச்சி வசப்பட்டாலும் மின்தமிழை தோற்றுவித்து,
அத்தோடு வளரும் போது ஒரு தாய் கொள்ளும் பரிவே மேலோங்கி நிற்கிறது.
எல்லாப்பேச்சும் மழலைப் பேச்சாகவே படுகிறது.
நாம் வளர்ந்து கொண்டு இருக்கிறோ என்பதே என் எதிர்கால நம்பிக்கை.
நா.கண்ணன்
சமீபத்திய செய்தி
http://www.dinamalar.com/News_Detail.asp?id=5124
சென்னை : "தமிழகத்திற்கு கூடுதலாக ஆறு லட்சம் காஸ் இணைப்புகள்
வழங்கப்படும்' என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா
கூறினார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, முதல்வர்
கருணாநிதியை நேற்று சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின், நிருபர்களிடம்
அவர் கூறியதாவது: பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து, 45
எம்.பி.,க்கள் அடங்கிய, "பார்லிமென்ட்' குழு, பெட்ரோலிய நிறுவனங்களின்
தலைவர்களுடன் நாளை(இன்று) சென்னையில் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்,
பெட்ரோல் விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக
செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்த
ஆய்வுகள் நடைபெறுகின்றன. சென்னை பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின்
விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க, தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழக
அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாக ஆறு லட்சம்
காஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு முரளி
தியோரா கூறினார்.
-----------------
மேலுள்ள பத்தியில் 'பரிதாபத்திற்க்குரிய' சொற்களை எண்ணுங்கள்.
பத்திரிக்கையை மக்கள் தன் நலன் கருதி பனம் கொடுத்து வாங்குகின்றனர்,
வாங்குவது புரிவதனால் அதை வாங்குகின்றனர். அதெல்லாம் தமிழ் இல்லையா?
விஜயராகவன்
2. It should satisfy the ideal of Western scholarship by bringing out the philological relations of Tamil with other languages.
3. It should serve the need of the large majority of the Tamil people and those acquainted with English by giving them an accurate, complete and up-to-date dictionary, clearly explaining the words used in spoken and literary Tamil in terms of English words and idioms.
As seen above the goal of Tamil Lexicon of the Madras University id not restricted to lexicography onlyOn Apr 11, 11:52 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
விஜயராகவன்
நேரம் பார்த்து, இடம் பார்த்து தவறான கருத்துகளை விதைத்தவன்
வெள்ளைக்காரன்; மூளைச் சலவை முழுமை பெற்று அவனது நோக்கம் நிறைவேறி
விட்டதும் வரலாற்று உண்மை.
வடமொழி நூல்கள் பல காலகட்டங்களில் நிகழ்ந்த மோதலைக் கூறுவன.
முதல் யுகங்களில் மது-கைடபர், தாரகன், மஹிஷன்,ஜலந்தரன் போன்றோர் மோதலில்
மாண்டனர். அவர்கள் திராவிடர்களா?
ராம - ராவண யுத்தம் மட்டும் ஏன் ஆரிய திராவிடப் போராகப் பதிவாகியது ?
அதிலும் வடபுலத்திலிருந்த ஆரியர் படை பங்கு பெற்றதாக இல்லையே ?
ராமருக்கும் பரசுராமருக்கும் மோதல் நடந்தது; அதற்கு முன்பு தசரதருக்கும்
சம்பரனுக்கும், பரசுராமருக்கும் கார்த்த வீரியனுக்கும், ராவணனுக்கும்
வாலிக்கும்,
பின்னால் பரதன் கந்தர்வர்களோடு மோதுகிறார். சத்ருக்நர் மதுவனத்தை
அரக்கர்
பிடியிலிருந்து மீட்கிறார். பீஷ்மருக்கும் பரசுராமருக்கும், பின்னர்
கௌரவ - பாண்டவர் மோதல்.
இவற்றையும் ஆரிய திராவிடப் போராக வகைப்படுத்த வேண்டுமா ?
ராமாயணம் மட்டும் ஆய்வுக்குப் போதும் என்று வரையறை உண்டா ?
தேவ்
On Apr 11, 7:16 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/4/11 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>:
> எல்லாப்பேச்சும் மழலைப் பேச்சாகவே ...
>
> read more »
On Apr 11, 6:38 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> முற்று என்றால் திண்மை பெறுதல் உறுதி பெறுதல் என பொருள் தருகிறார்
> சொல்லாய்வு அறிஞர் அருளி, இதாவது, சிப்பிக்குள் தன்னை உருத்தலில்
> இருந்து காத்துக்கொள்ள ஒரு வகை பாய்மத்தை(Fluid) சுரக்கிறது அக்கடல்
> உயிரி. அப் பாய்மம் பின்பு திண்மையேறிப் போகிறது. முறுக்கேறுதல் இதே
> பொருளை உணர்த்துவதை உணரலாம். இநத் முறு > முற்று என நீண்டு றகர தகர
> திரிபால் ஏற்றம் ஏத்தம் ஆவது போல் முத்து ஆனது என்பார் அருளி..
> சேசாத்திரி
அருளி எழுதியதைத் தந்தமைக்கு நன்றி. அதற்கு முன்னரும்
ஒரு 20 மொழியியலாளர் குறிப்பிட்டிருப்பர்.
நா. கணேசன்
> On 4/11/11, R.M. Paulraj <rmp...@yahoo.co.uk> wrote:
> > அய்யா,
> > /வேர் ஆராய்ச்சி அதன் (லெக்சிகனின்) முதல் நோக்கம் அல்ல/
> > அப்படியானால், 'முத்து' என்ற பழந்தமிழ்ச் சொல்லின் வேர் 'முக்த்' என்ற வடமொழிச்
> > சொல்லுக்குள் இருக்கக்கூடும் என்பதாக லெக்சிகனில் குறிப்பிட்டிருப்பது
> > அதைத்தயாரித்தவர்கள் 'போகிற போக்கில்' குறிப்பிட்டுவிட்ட ஒரு தகவலோ?
> > இரு மொழிகளுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் நீண்ட காலமாகவே நடந்து
> > வந்திருந்தாலும், வடமொழியும் தமிழும் தம் தம் சொந்த மூலங்களையும்
> > ஆதார அடிப்படைகளையும் உடைய தனித்தனி மொழிகள்.
> > தமிழ் மொழிச் சொற்களுக்கெல்லாம் வட மொழியில் வேரைத்தேடுவது 19ஆம்
> > நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலும் மொழியாதிக்க வாதத்தின் ஒரு
> > முகமாக இருந்தது. இதே விதமான ஆதிக்க வாதம் தமிழ்
> > ஆராய்ச்சியாளர்களிடையேயும் பிரதிபலிக்கிறது என்பது உண்மை.
> > இரண்டும் தவறுதான்.
> > ஆனால், 'முத்து' என்ற பழஞ்சொல்லைத் தனித்தமிழ்ச் சொல்லல்ல எனக்கூறத்
> > துணியும் அளவுக்கு மொழி வாதம் தேவையில்லை.
> > சமஸ்கிருத 'முக்த்', 'முடிவு' என்ற பொருளைத் தன்னகத்தே கொண்டது.
> > தமிழ் 'முத்து', 'வளர்ச்சியடைந்து (அதாவது முதிர்ச்சியடைந்து)
> > முழுமையடைதல்' என்ற பொருளைத் தனக்குள் கொண்டது.
> > அன்புடன்,
> > ஆரெம் பால்ராஜ்
> > --- On Mon, 11/4/11, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> > From: விஜயராகவன் <viji...@gmail.com>
> > Subject: [MinTamil] Re: ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் தமிழுக்கு ஆக்கமா!
> > வெறும் ஊக்கமா! பேராசிரியர் இரா. மதிவாணன்
> > To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> > Date: Monday, 11 April, 2011, 13:59
> > On Apr 11, 8:44 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> >> 'முத்து' போன்ற சொற்களுக்கு வடமொழி மூலத்தைக் காட்டுவதில் லெக்சிகன்
> >> தவறு செய்துள்ளது என்பது தெளிவு.
> > எப்படி தெளிவு? நீங்கள் சொல்வதனாலேயா?
> >http://en.wikipedia.org/wiki/Lexicon
> > In linguistics, the lexicon of a language is its vocabulary, including
> > its words and expressions.
> > லெக்சிகானின் முதல் வேலை ஒகாபிலரியை கொடுப்பதுதான், "வேர் ஆராய்ச்சி"
> > அதன் முதல் நோக்கம் அல்ல. மெட்ராஸ் லெக்சிகான் அதன் வேலையை திறனாக
> > செய்தது
> > விஜயராகவன்
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
On Apr 10, 11:13 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> அவை எழுத்துகளே, முத்திரைகளில் தான் சின்னங்கள் அதுவும் முற்பட்ட காலத்தில்
> தான் பிற்பட்ட காலத்தில் சின்னங்கள் கைவிடப்பட்டுவிட்டன. பானைஓட்டில் எப்போதுமே
> எழுத்துகளை தவிர சின்னங்கள் கிடையா. இது அவை எழுத்தென்பதற்கு போதுமானவை.
>
> நீங்கள் சொல்லும் கிரந்தம் ஆரியர் வந்த பின் வந்தவை கிரந்தம் இருந்தால் ஆரியர்
> இருப்பர். ஆரியர் 3500 ஆண்டளவில் வந்தவர் சிந்து நாகரிகம் அதற்கும் முன்பே
> முடிவுற்றது. அது தூய தமிழ் நிலை கிரந்தம் எப்படி வரும். இன்றே தமிழில்
> கிரந்தத்திற்கு இடம் இல்லையே.
>
> சிந்து எழுத்தை ஆயந்த அயலவர்கள் தேர்ந்த் தமிழறிஞர் அல்லர் அதனால் அதை
> படிக்கமுடியவில்லை மேலும் அதை பட எழுத்து என்றே கருதுகின்றனர். பட எழுத்திற்கு
> மொழி ஒரு பொருட்டல்ல கருத்தே அதன் உந்துவிசை. ஒலி எழுத்தும் கருத்தெழுத்தும்
> எதிர் எதிர் திசையில் இருப்பவை இதில் ஒன்றைகொண்டு இன்னொன்றை படிக்கமுடியாது.
>
> இன்றுள்ள இந்து மதம் சற்றொப்ப 1700-1500 ஆண்டுகளே பழமையானது. எனவே கொற்றவை
> போன்ற இந்து மதக்கடவுள் எப்படி இடம்பெறும். மேலும் இன்று வரை ஒரு கோயில் அல்லது
> வழிபாட்டிடம் கூட அங்கு காணப்பட்டதில்லை.
கொற்றவை இந்தியாவில் 1500 வருஷத்துக்கு முன்னால்
தான் வந்தவளா??
பழங்கால இந்தியா, கொற்றவை பற்றி ஆராய்ந்த
பேராசியர்க்ளிடம் - புகழ்மிக்க உலக ஸர்வகலாசாலைகளில் -
சொல்லிப்பாருங்கள். பலரை நான் நேரடி தொடர்பில் உள்ளவன்.
இவ்வளவு புதியவள் என்றால் சங்க இலக்கியம்
கொற்றியை ஏன் “பழையோள்’ என்கிறது?
சங்கம் குறிப்பிடும் “பழையோளுக்கு” என்ன பொருள்?
”அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி! ” ~ சங்கப்பாட்டு
இதில் கொடுத்துள்ளா ஆய்வேடுகளைப் படித்தபின்
வாருங்கள், கருத்தாடுவோம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
அன்புடன்,
நா. கணேசன்
> படத்தின் காட்சிகளை வைத்து அறிஞரகள்
> சொல்லும் வழிபாட்டு கருத்துகள் யாவும் ஊகங்களே. எழுத்துகளை படித்தால் வெறும்
> பெயர்களை மட்டுமே கொண்டுள்ளன. அவற்றில் அறிக்கைகளை காணோம்.
> பின் எப்படி வழிபாட்டு கருத்துகளை அவற்றுன் மேல் ஏற்றமுடியும்.
>
> இதுவரை 100க்கு மேற்பட்டவருக்கு சிந்து எழுத்தை படிப்பித்து வைத்தவர் மதிவாணன்.
> வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் பின்பு அது சரியா? தவறா? என்று எல்லோரும் அறிய
> உங்கள் கருத்தை அரையுங்கள். என்ன? அணியம் தானா? நான் உங்கள் ஆர்வத்தை
> மெச்சுகிறேன்.
>
> சேசாத்திரி
> 2011/4/10 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > On Apr 10, 8:03 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > > தமிழை தமிழாக சொல்லாமல் வேறு என்னவாக சொல்வது. அது எப்படி இனவாதமாகும்.
> > > தமிழுக்கு தமிழர் விள்க்கம் தராமல் வேற்றவர் வேற்றுமை எண்ணத்தோடு விளக்கம்
> > > தந்தால் மட்டும் ஞாயமாக தோன்றுமா ? 1920 க்கு முற்றபட்ட எழுத்துகள்
> > > சமற்கிருதத்தின் அடிப் பொடியாகவே தமிழை காட்டின. இதில் என்ன அறிவாண்மை
> > > இருக்கிறது.. அறிவியல் காலத்தில் பழைய மதவாதம் எடுபடாததால் இக்கால் தமிழ்
> > தன்
> > > உண்மை மதிப்பை பெற்றுள்ளது . அது சிலருக்கு பிடிக்கவில்லை. இதுவே உண்மை.
> > > தமிழின் உயர்வு தமிழருக்கு உ யர்வு. இது தமிழருக்கு சம உரிமையை தருகிறது..
>
> > > சேசாத்திரி
>
> > சிந்து ”எழுத்துக்கள்” எழுத்தா? வார்த்தைகளா? சின்னங்களா?
>
> > அவை தமிழ் என்று எப்படி உங்களுக்கோ, மதி்வாணனுக்கோ
> > நிச்சயமாய் தெரியும்? அதுவும் கிரந்தம் இல்லாத தனிதமிழ்
> > என்று இருவரும் படிக்கிறீர்கள். தொல்காப்பியர் 2800+ வருஷம்
> > என்பது போலா? நாங்களும் ஆய்வுத் துறையில் தான் அன்றாடும்
> > செயல்படுகிறோம்.
>
> > க்ரெக் போசெல் புத்தகம் - எத்தனை பேர் சிந்து எழுத்தை படிக்க 100
> > வருஷமாய் முயன்றுள்ளனர் என்பது பற்றி - பார்த்ததுண்டா?
>
> > இது ஏதோ உங்களுக்கு இ-மெயில் எழுதணும் என்று எழுதுவதல்ல.
> > சிந்து பற்றி வரும் தொல்லியல் ஆய்வுகளை 30 ஆண்டுகளாக
> > விரும்பி படித்து வருபவன் என்ற முறையில் எழுதுகிறேன்.
>
> > மீன் சின்னம் திராவிடர்களைக் காட்டுகிறது. இன்னும் சில
> > குறிப்புகள் உண்டு. அவ்வளவுதான். அந்த “எழுத்துக்களை”
> > விடுத்துவிட்டு கலையைப் படித்தால் திராவிடர் கலைவரலாற்றால்
> > சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.
>
> > சிந்து நாகரிகத்தில் கொற்றவை வழிபாடு:
> > நண்பர் ஐராவதத்தை மறுத்து, இது ஜல்லிக்கட்டு அல்ல என்று
> > காட்டினேன்..
> >http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
>
> > எனது ஆய்வுக் கட்டுரை. இதை செம்மொழி மாநாட்டில்
> > படித்தேன். செல்போன் டெக்னாலஜி கண்டுபிடித்தவர்களுள்
> > முக்கியமான விஞ்ஞானி திரு. பால்ராஜ், சந்திரயான்
> > அண்ணாதுரை, இயற்கையாகவே பக்மினிஸ்டர் ஃபுல்லெரீன்
> > இருக்கிறது என்று கண்ட பார்த்தசாரதி, ... போன்றோர்
> > முன்னிலையில்.
>
> > Gharial god and Tiger goddess in the Indus valley:
> > Some aspects of Bronze Age Indian Religion
> > Dr. N. Ganesan, 2007 essay
>
> > In the Mature Harappan period seals and tablets produced about 4000
> > years ago, gharial crocodile is portrayed as a 'horned' being. As in
> > the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the
> > central figure surrounded by a typical set of animals. A female being,
> > often connected with tigers, is seen coupling together with the
> > gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC)
> > creation myth. A number of seals show a man on the tree along with a
> > tiger below. This shaman on the tree and tiger motif is linked
> > archaeologically with the gharial deity in the sky, and the
> > Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC
> > tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger
> > motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A
> > comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic
> > art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it
> > is illustrated with pictures of the IVC sealings. These religious
> > myths of the gharial and tiger divinities are at least as important as
> > the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and
> > seven women in front of a bodhi fig tree.
>
> > வாழ்க வளமுடன்,
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>
> ...
>
> read more »
>> சங்கத்தமிழன் இன்று அவன் மண்ணிலேயே வந்தேறியாக உணர்கிறான் எனில்
அதற்குக் காரணம் ஆங்கிலேயனா? இல்லை குறுமதிபடைத்த தமிழ்
நாட்சிகளின்
சதிச்செயலா? என்பது இன்னும் என்னுள் ஆராயப்பட்டுவரும் ஒரு
கேள்வி.<<
s. seshadri
>> 2011/4/11 விஜயராகவன் <vij...@gmail.com <mailto:vij...@gmail.com>>
>>
>> On Apr 11, 11:52 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk
>> <mailto:minT...@googlegroups.com>
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> <mailto:minTamil-u...@googlegroups.com>
On Apr 11, 7:46 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
விஜயராகவன்
thank you for your comment
BUT
I am NOT AT ALL interested in what Tamil "OUGHT TO BE".
Not being a Tamilian myself, how could I have an opinion on such a
HEATED topic?
;-)
The ONLY THING I CARE FOR if the following:
"What has Tamil LITERATURE been like,
over the course of the past centuries?"
The ONLY PEOPLE who can teach me that
are the people who have REALLY read those past "chef-d'oeuvres",
and if they have memorized those "chef-d'oeuvres" by heart,
and are capable of reciting them with the proper ஓசை,
it is EVEN BETTER.
And if they are capable of reciting a Tamil master-piece with the proper
ஓசை,
while reading from a Tamil PALM-LEAF MS,
I shall consider that even more impressive.
If someone was born in Tamil Nadu
but does not appreciate Tamil literature,
and has never tried to read a Tamil Palm-leaf manuscript
and simply wants to know what Tamil "OUGHT TO BE",
I shall simply ask him/her whether he/she knows some REAL lover of Tamil
literature.
ஆகுல நீர பிற !
-- Jean-Luc Chevillard
சேசாத்திரி
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
அன்பரே, இவை தமிழில் உபயோகத்தில் இருக்கும் பிறமொழிச் சொற்கள். அவ்வளவே. இச்சொற்கள் ஒவ்வொன்றும் எந்த மொழியிலிருந்து வந்தவை என்பதைத் தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. மேலும், பிறமொழிச் சொற்கள் தமிழில் உபயோகத்தில் இல்லை என்றோ, பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தக் கூடாது என்றோ யாரும் கூறவில்லையே? தொல்காப்பியர் உட்பட? தங்கள் வாதம், தங்களை அறியாமையில் உழலுபவராக அல்லவா காட்டுகின்றது. (யார் பரிதாபத்திற்கு உரியவர் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.) அன்புடன் |
ஆரெம் பால்ராஜ் |
--- On Mon, 11/4/11, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
|
On Apr 11, 11:05 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> இதுகாறும் படிக்கப்பட்ட முத்திரைகளில் குமரன், முருகன், மால்,
> மாயோன்,சிவன், கொற்றன், வேந்தன் ஆகிய பெயர்கள் எதும் படிக்கப்படவில்லை
> இக கடவுள்கள் பிற்பட்ட ஆக்கம் எனபதைத் தானே இது உணர்த்துகின்றது. கந்தன்
> எனற பெயர் உள்ளது ஆயினும் இதை முருகனோடு இணைத்துக் காட்ட சான்றுகள்
> தேவை. பெரிய கட்டடங்கள் உள்ள சி.வெ. கோயில்களே காணப்பட்டதில்லை. எப்படி
> கொற்றவைக் கருத்தை ஏற்பது. ஊழ்கம் (தியானம்) இருந்ததற்கு சான்று உள்ளது.
> இதைக் கொண்டு அவர்களை உருவ வழிபாடு ஆற்றாதவர்கள் எனவும் கொள்ளலாம்.
>
> சேசாத்திரி
>
Let me assure you. Indus "letters" have not been read by anyone,
be it Aruli or Mathivanan or Yourself.
All the best,
Dr. N. Ganesan
> >> > சிந்து பற்றி வரும் தொல்லியல்- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
>
> மேலும், பிறமொழிச் சொற்கள் தமிழில் உபயோகத்தில் இல்லை என்றோ, பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தக் கூடாது என்றோ யாரும் கூறவில்லையே? தொல்காப்பியர் உட்பட?
பால்ராஜ் அவர்களே
தமிழில் நன்றாக புழங்கும் சொற்கள் தமிழ் சொற்களே - எந்த மொழியில் இருந்து
வந்தாலும். சொல் வேர் கண்டுபிடிப்பவர் தவிர, மற்றும் எந்த தமிழ்
பயனர்களுக்கும் சொல் வேர் தமிழா இல்லையா என்பது தேவையற்றது. ஒரு
லெக்சிகான் தமிழில் புழங்கும் சொற்களை கொடுக்க வேண்டும், அதனால்
மராமத்து, தகவல், பிரமாணம் போன்றவற்றை செ.லெ. கொடுத்தது சரிதான். இதில்
போய் பரிதாபத்திற்க்கு உரிய விஷயம் ஒன்றும் இல்லை. "பரிதாபம்" உங்கள்
சொல், என்னுடையது அல்ல.
"பரிதாபம்" தமிழ் வார்த்தை என ஒத்துக் கொள்வீர் என நம்புகிறேன்.
விஜயராகவன்
On Apr 11, 5:17 pm, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
விஜயராகவன்
On Apr 11, 1:31 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 10 ஏப்ரல், 2011 6:18 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:
>பல ஹிந்து/ஜைன/புத்த மத சனங்குகளும், பூஜை புனஸ்காரங்களும்
>
>
> > உங்களுக்கு ஒரு நற்செய்தி - வடமொழி இன்னும் சாகவில்லை !!!
>
> அஃஆஃஆ
>
> சைக்கோ எனும் திரைப்படத்தில் நாயகன் அம்மாவை போலவா?
>
> வேந்தன் அரசு
சமஸ்கிருதத்தில் நடக்கின்றன. நூற்றுக்கனக்கான புத்தகங்கள் பயனர்களுக்கு
பிரசுரமாகின்ரன. இன்னும் சிலர் சமஸ்கிருதத்தில் பேசுகின்றார்கள்.
"இறந்த
மொழி"என்றால் , தமிழ்நாட்டில் ஏன் இவ்வளவு கூச்சல்,
--
மானுடவியல் சமூகவியல் ஆய்வுநெறிகள் மூலம் தமிழrர் வாழ்வியல் மரபு பற்றிய தகவல் திரட்டித் தரவுதளம் அமைக்கவேண்டும்.
மானுடவியல், சமூகவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் அடிப்படையில் தமிழர்களின் திணை மற்றும் திணை ஒழுக்கம் பற்றி ஆய்வுசெய்ய வழிசெய்தல்
கடல் கடந்து பரவ இருந்த தடைகளை முறித்து தெ கிழக்கு ஆசியாவில் இந்து பெளத்த மதங்கள் பரவ உறுதுணையாக இருந்த காரணிகளை ஆய்வுசெய்தல் வேண்டும்
கடலடி ஆய்வு கடல் பாதைகளைக் கண்டுபிடித்தல் போன்ற கடலாய்வுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்
நாகராசன்என்னுடிய தேடல் உங்களின் இந்த நான்கு கருத்துக்களின் வழிபடி அமைந்து இருக்கின்றது
காலையில் எழுந்ததும் உலகம் எல்லாம் இருக்கும் வானொலிகளுக்கு திருகினாலும் வடமொழியில் ஒரு நிகழச்சி வரலை.
--
>
> read more »
Nowadays - and for a long time - it has been democratised for anyone.
samskritam paraspara sambhashanE pyayOgitha saktha;
> குமரிக்கணடம் எனும் கனவில் இருப்பவர் போல் இதுவும் வேறு ஒரு கனவுலகம்’
> வடமொழி வழக்கு ஒழிந்து போனது என்று ஒப்புக்கொள்ளவும் உங்களுக்கு உள்ளம்
> இல்லையே.
I gave you so many examplesof daily use to show it is not out of use.
If you refuse to see them, this is a kind of 'reverse psycho'
>
> காலையில் எழுந்ததும் உலகம் எல்லாம் இருக்கும் வானொலிகளுக்கு திருகினாலும்
> வடமொழியில் ஒரு நிகழச்சி வரலை.
There are AIR sanskrit braodcasts. Be that as may , it is much rarer
than languages.
>
> வடமொழி உயிர்ப்புடன் இருக்கும் மொழி என்றால் மின் தமிழ் வடமொழி குழுமம் ஆக
> அன்றோ இயங்கும்?
No, certain not. Mintamil is for the preservation of heritage of Tamil
and tamilnadu. And sanskrit is only part of it. Part cannot gobble the
whole.
OTOH, it looks like people like you are demaning Sanskrit media (TV/
radio) and sanskrit based lists. That is a good idea. thanks for good
suggestions.
Vijayaraghavan
>>தமிழில் நன்றாக புழங்கும் சொற்கள் தமிழ் சொற்களே - எந்த மொழியில் இருந்து வந்தாலும். |
இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருக்கலாமே? லெக்சிகனில் கொடுத்திருப்பதால் தமிழ்ச் சொல்தான் என்று வாதம் செய்வதையும் தவிர்த்திருந்திருக்கலாம். 'தமிழ்ச் சொல்' என்பதற்கு ஒரு புதிய definition கொடுத்துள்ளீர்கள். அது தங்களுடைய தனிப்பட்ட புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில் உருவான ஒரு கருத்தாகத் தோன்றுகின்றது. தவறேதும் இல்லை. ஆனால், வேற்றுமொழிச் சொற்களை அவை தமிழர் மத்தியில் புழக்கத்தில் நுழைந்துவிட்டன என்ற காரணத்தால் 'தமிழ்ச் சொல்' என்று claim பண்ண நமக்கு உரிமை உண்டா என்பது கேள்விக்குரியது. தொல்காப்பியர் தொடங்கி அனைவருமே இத்தகைய சொற்களை தனியாகதான் வகைப்படுத்தியுள்ளனர். மொழி ஆராய்ச்சி என்று வரும்போது, ஒரு சொல்லின் மூல மொழி எது என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. இங்கே 'முத்து' என்ற சொல்லின் மூலம் குறித்து எழுந்த உரையாடலில்தான் நாம் இருவரும் பேச ஆரம்பித்தோம் - அதுவும் அச்சொல் வடமொழி வேரில் இருந்து வந்தது என்ற தவறான ஒரு கருத்துக்கு நான் மறுப்பு எழுதப்போய். ஒருவரின் சொந்தக் கருத்து, ஆராய்ச்சி குறித்த ஒரு உரையாடலில் திணிக்கப்படலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. (அப்படிச் செய்வது பரிதாபத்துக்குரியது தானே?) ஆயினும், இந்த 'கிளை' உரையாடலை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகின்றேன். |
அன்புடன், |
ஆரெம் பால்ராஜ் --- On Mon, 11/4/11, விஜயராகவன் <vij...@gmail.com> wrote: |
|
ஆம் ஐயா, அதில் மறுப்பில்லை.
நீங்கள் தொல்காப்பியரைச் சுட்டியதால் இதை எழுதுகிறேன். இலக்கணம் என
வரும்போது பகுத்துக்காட்ட வேண்டும். அதற்கு உட்படுத்த முடியாதனவற்றைத்
தற்சமம், தற்பவம்,திசைச்சொல் என்று வகைப்படுத்துவதில் தவறில்லை.
தொல்காப்பியர் எல்லாச் சொற்களும் தமிழிலிருந்து வந்தவை என்று உறுதிபடக்
கூறியுள்ளாரா ?
சொற்களைக் கடன் கொடுத்தல் / வாங்குதல் பற்றித் தமிழ் இலக்கண நூல்கள்
கூறியுள்ளனவா ?
தற்சம , தற்பவப் பயன்பாட்டில் வரையறை உள்ளதா ?
தற்போது நம்மிடம் உள்ள வேர்ச்சொல் தொகுப்பைத் தமிழறிஞர் அனைவரும்
மனமொன்றி ஒப்புக்கொண்டுள்ளனரா ?
>>'தமிழ்ச் சொல்' என்று claim பண்ண நமக்கு உரிமை உண்டா என்பது கேள்விக்குரியது<<
இப்போது அப்படித்தானே claim பண்ணி வருகிறோம்.
எல்லாமே தமிழிலிருந்து என முடிவுகட்டினால்
‘தனித்தமிழ்’ கொள்கை நீர்த்துப்போய்விடும். ஏனெனில்
’பிறமொழிகளும் தமிழிலிருந்து தோன்றியவை, அச்சொற்களைத் தாராளமாகப்
புழங்கலாம், தனித் தமிழ் தேவையில்லை’ என்றாகிவிடுகிறது
தேவ்
On Apr 12, 12:36 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> >>தமிழில் நன்றாக புழங்கும் சொற்கள் தமிழ் சொற்களே - எந்த மொழியில்
>
> இருந்து வந்தாலும்.
>
> இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருக்கலாமே? லெக்சிகனில் கொடுத்திருப்பதால் தமிழ்ச் சொல்தான் என்று வாதம் செய்வதையும் தவிர்த்திருந்திருக்கலாம்.
>
> 'தமிழ்ச் சொல்' என்பதற்கு ஒரு புதிய definition கொடுத்துள்ளீர்கள். அது தங்களுடைய தனிப்பட்ட புரிந்துகொள்ளுதலின் அடிப்படையில் உருவான ஒரு கருத்தாகத் தோன்றுகின்றது. தவறேதும் இல்லை.
>
> ஆனால், வேற்றுமொழிச் சொற்களை அவை தமிழர் மத்தியில் புழக்கத்தில் நுழைந்துவிட்டன என்ற காரணத்தால் 'தமிழ்ச் சொல்' என்று claim பண்ண நமக்கு உரிமை உண்டா என்பது கேள்விக்குரியது.
>
> தொல்காப்பியர் தொடங்கி அனைவருமே இத்தகைய சொற்களை தனியாகதான் வகைப்படுத்தியுள்ளனர்.
>
> மொழி ஆராய்ச்சி என்று வரும்போது, ஒரு சொல்லின் மூல மொழி எது என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி.
>
> இங்கே 'முத்து' என்ற சொல்லின் மூலம் குறித்து எழுந்த உரையாடலில்தான் நாம் இருவரும் பேச ஆரம்பித்தோம் - அதுவும் அச்சொல் வடமொழி வேரில் இருந்து வந்தது என்ற தவறான ஒரு கருத்துக்கு நான் மறுப்பு எழுதப்போய்.
>
> ஒருவரின் சொந்தக் கருத்து, ஆராய்ச்சி குறித்த ஒரு உரையாடலில் திணிக்கப்படலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. (அப்படிச் செய்வது பரிதாபத்துக்குரியது தானே?) ஆயினும், இந்த 'கிளை' உரையாடலை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
>
> அன்புடன்,
> ஆரெம் பால்ராஜ்
>
> --- On Mon, 11/4/11, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> From: விஜயராகவன் <viji...@gmail.com>
> Subject: [MinTamil] Re: ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் தமிழுக்கு ஆக்கமா! வெறும் ஊக்கமா! பேராசிரியர் இரா. மதிவாணன்
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Date: Monday, 11 April, 2011, 21:49
>
> On Apr 11, 5:17 pm, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
>
> > அன்பரே,
>
> > மேலும், பிறமொழிச் சொற்கள் தமிழில் உபயோகத்தில் இல்லை என்றோ, பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தக் கூடாது என்றோ யாரும் கூறவில்லையே? தொல்காப்பியர் உட்பட?
>
> பால்ராஜ் அவர்களே
>
> தமிழில் நன்றாக புழங்கும் சொற்கள் தமிழ் சொற்களே - எந்த மொழியில் இருந்து
> வந்தாலும். சொல் வேர் கண்டுபிடிப்பவர் தவிர, மற்றும் எந்த தமிழ்
> பயனர்களுக்கும் சொல் வேர் தமிழா இல்லையா என்பது தேவையற்றது. ஒரு
> லெக்சிகான் தமிழில் புழங்கும் சொற்களை கொடுக்க வேண்டும், அதனால்
> மராமத்து, தகவல், பிரமாணம் போன்றவற்றை செ.லெ. கொடுத்தது சரிதான். இதில்
> போய் பரிதாபத்திற்க்கு உரிய விஷயம் ஒன்றும் இல்லை. "பரிதாபம்" உங்கள்
> சொல், என்னுடையது அல்ல.
>
> "பரிதாபம்" தமிழ் வார்த்தை என ஒத்துக் கொள்வீர் என நம்புகிறேன்.
>
> விஜயராகவன்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
திருவாளர் பால்ராஜ்
எது தமிழ் வார்த்தை என இனம் காண்பதும் , வார்த்தைகளின் "மூல மொழி வேர்"
என்ன என்று பார்பதும் மிகவும் வெவ்வேறு பிரச்சினைகள். வார்த்தைகளின் "மூல
மொழி வேர்" என்ன என்பதில் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன (எ.கா.
முத்து)
உங்கள் வாதம் "மூல மொழி வேர்" தமிழ் இல்லாவிட்டால், அது தமிழ்
வார்த்தையே இல்லை என்பது, அத்துடன் நான் ஒப்புக் கொள்ளவில்லை.
விஜயராகவன்
2011/4/11 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
சமஸ்கிருத 'முக்த்', 'முடிவு' என்ற பொருளைத் தன்னகத்தே கொண்டது.
தமிழ் 'முத்து', 'வளர்ச்சியடைந்து (அதாவது முதிர்ச்சியடைந்து) முழுமையடைதல்' என்ற பொருளைத் தனக்குள் கொண்டது.