| மாக்கூடு படர்வேலை |
| மறி மகரத் திரை வாங்கி, |
| மேக்கூடு, கிழக்கூடு, |
| மிக்கு இரண்டு திக்கூடு |
| போக்கூடு தவிர்த்து, இருகண் |
| புகையோடு புகை உயிர்க்கும் |
| மூக்கூடு புகப்புக்கு |
| மூழ்கியது அம் முகக் குன்றம். |
வில் வட்டத்தைப்பெற்ற காளமேகமானது கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை அருளியதுபோல அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,
இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என வாய்ப்பு தருகிறான். இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.அவன் போரே குறியாக இருக்கிறான்.இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.கும்பகர்ணன் கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை தூள்தூளாக்குகிறார் இராமன்.
ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம் விதிர்ப்புற்றான்’ என்கிறார் கம்பர். இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.
கும்பகர்ணனுக்கு மனதில் நல் உணர்வு தோன்ற,’ விபீடணனை நீ காக்கவேண்டும் அவன் உமது பக்கம் சேர்ந்துள்ளான்,இராவணன் இவனை கொல்லவும் சித்தமாவான் ஆகவே ஜாக்கிரதையாக பார்த்துக்கொள், உன் அம்பினாலேயே என் கழுத்தை அறுத்துவிட்டுபின்என்னைக்கடலில் மூழ்கடிக்கச்செய். ‘இது நின்னை வேண்டுகின்ற பொருள்’என்றான். கும்பகர்ணசரணாகதியாக கடைசி சில பாடல்கள் அமைந்திருக்கின்றன. சரணம் அடைந்தவரின் வாக்கினை நிறைவேற்றுவதுஇறை கருணை அல்லவா! இராமன் அதனைச்செய்கிறான்.நாசி துவாரங்கள் மட்டும் உள்ளமுகம் செவிகளும் இழந்த இரு குழிகள் அங்குகொண்ட அவன் முகம் நீரில் மூழ்கும்போது குடு குடு என நீர்வெள்ளம் துவாரங்களில் புகுந்து வழிய முகமண்டலம் உள்ளே அமுங்குவதை கம்பரின் பாடலைப்பாருங்கள் எத்தனை ‘டு’ இட்டிருக்கிறார் என்று!
மாக்கூடு படர்வேலை
மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
மூழ்கியது அம் முகக் குன்றம்.
2014-11-24 15:42 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:வில் வட்டத்தைப்பெற்ற காளமேகமானது கண்கைகாலென்று பேர் பெற்ற தாமரைகளைக்கொண்டு பூமியில் தோன்றியதுபோல இராமன் தோன்றினானாம்!’வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து’என திருமழிசை அருளியதுபோல அண்ணலிடமே ஆர்ப்பரித்தவன்.அவனது செவிகளை நாசியை முதலில் அறுத்துப்பின் கை ஒன்றைவெட்டிவீழ்த்துகிறான் இராமன்,
இல்லம்மா. மூர்ச்சித்த சுக்ரீவனைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, ‘தலைவனை சிறைப் பிடித்துவிட்டால், படை சிதறும்; போரே முடிந்துவிடும்’ என்ற எண்ணத்தோடு கும்பகர்ணன் திரும்புகையில், சுக்ரீவனை மீட்பதன் பொருட்டு இராமன் அவனுடைய நெற்றிப் பொட்டில் இரண்டு அம்புகளைச் செலுத்தி நிறுத்துகிறான். பெருகுகிற குருதி அருவியால் மயக்கம் தெளிந்த சுக்ரீவன், அந்தச் சமயத்தில் தளர்ந்திருந்த கும்பகர்ணனுடைய தோளிலிருந்து நழுவி, அவனுடைய காதுகளையும் மூக்கையும் கடித்து எடுத்துக் கொண்டு திரும்பிவிடுகிறான்.>>. சுக்ரீவன் செய்யும் செயல் இது தவறுக்கு வருந்துகிறேன்.இது வான்மீகத்தில் உள்ள காட்சிதான். ஆனால், வான்மீகத்தில் சுக்ரீவனுக்குத் தானே நினைவு திரும்புகிறது. நாடகத் தன்மையை மாற்றியது கம்பன். இதைச் சொன்னேன் இல்லையா?>>ஆமாம்
இராம கும்பகர்ணபோர்க்காட்சியாக பல பாடல்களை கம்பர் வடித்துள்ளது அற்புதமாக இருக்கிறது. தனிப்பட்ட கும்பகர்ணனிடம் அப்போதும் இராமன்.”போதியோ பின்றை வருதியோ அன்றெனிற் போர் புரிந்திப்போதே சாதியோ உனக்குறுவது சொல்லுதி/ என வாய்ப்பு தருகிறான். இன்றுபோய் நாளை வா என தசமுகனிடம் சொல்லியதுபோல.அவன் போரே குறியாக இருக்கிறான்.இராமன் அவனது மற்றொரு கரத்தையும் வெட்டுகிறான்.கும்பகர்ணன் கை ஒன்றுஇல்லா நிலையில் வாயினால் ஒரு மாமலையைத்தூக்கி இராமன் மீது வீசுகிறான்.கும்பகர்ணனின் வீரம் கண்டுவானவர் அச்சப்படஅந்த மலையை தூள்தூளாக்குகிறார் இராமன்.முதல் கரத்தை வெட்டிய உடனேயே, அற்றுப் போய் விழுந்த கையை எடுத்துக் கொண்டு, மாபெரும் உலக்கை என்று வர்ணித்தாலும் போதாத அந்த விழுந்த வலது கரத்தை இடது கையால் எடுத்துக் கொண்டு வானர சேனையை அடித்து துவம்சம் செய்கிறான்.உள்ள கையினும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம்என்று அற்புதமாகப் பாடுகிறான் கம்பன். மலையைப் பெயர்த்து எறிந்தது, கை அறுபடுவதற்கு முன்னால்.ஆனாலும் அவன் செயல் கண்டு,’வள்ளலு மலர்க்கரம் விதிர்ப்புற்றான்’ என்கிறார் கம்பர். இராமன் கைவிதிர்ப்புற்றதாம்.இரண்டு கையும் இரண்டு காலும் போன நிலையில்,தீயினால் செய்த கண்ணுடையான், நெடும்சிகையினால் திசை தீயவேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால்விசும்புற வளைத்து ஏந்தி,பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ,பிலம் திறந்தது போலும்வாயினால் செல, வீசினன்; வள்ளலும்மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.
கழுத்தைத் திருப்பி பக்கத்திலிருக்கும் மலையைக் கடித்து எடுத்து, மேல்வரிசை கீழ்வரிசைப் பற்களுக்கிடையில் பற்றிக் கொண்டு, நாவை உண்டிவில் போல வளைத்து உந்தியும், ஊதிச் செலுத்தியும் அந்த மலையைப் பறக்கச் செய்து, வானரசேனையின் மேல் விழச் செய்து நசுக்கிக் கொன்றான். இப்படிப்பட்ட எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் தன் முயற்சியை விடாது தொடர்ந்த கும்பகர்ணனுடைய செயலைப் பார்த்து இராமனுடைய வில் பிடித்த கை நடுங்கியது என்று கம்பன் எழுதுவானானால், அது அவன் கும்பகர்ணனுக்குக் கொடுத்த மிகப் பெரிய tribute என்றல்லவா பார்த்தோம். இத்தனைக்கும் சீதையைத் திரும்பத் தரவேண்டும் என்று வற்புறுத்தியவன், ‘வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன். பொன்றுவன்’ என்று விடை பெறும்போதே இராவணனிடம் சொல்லிக் கொண்டு வந்தவன், தான் போரிடும் காரணத்தில் தனக்கே சம்மதமில்லாதவன், ஒரு வீரன் ஆற்ற வேண்டிய கடமைக்காக வந்து, ஏதோ கடமைக்குப் போரிட்டேன் என்றில்லாமல், எல்லா உறுப்புகளையும் இழந்த பின்னாலும் தன் வேகத்தைத் தொடர்ந்தான் அல்லவா. அதற்கு செலுத்தப்பட்ட பிரமிப்பு நிறைந்த பாராட்டு இது.<<<கும்பகர்ணனின் போர் வேகம் பிரமிப்பாகவே இருந்தது அவன் கடைசியில் வீழும் வரைக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மாக்கூடு படர்வேலை
மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
மூழ்கியது அம் முகக் குன்றம்.
சொற்பொருள் விளக்கம் கொடுங்க சைலஜா --வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனவே கடலில் அமுக்கக் கேட்டுக்கொள்கிறான்.அனுபவித்துப் படித்துப் பதிவேற்றியும் தருகிறீர்கள். யுட்யூப் தரவிறக்கம் தான் எனக்கு வேகமில்லை. சேர்த்துத் தேவை வரும்போது படித்துக்கொள்ளலாம் என்ற எண்னமுண்டு.
ரொம்ப அருமையா சொல்லிட்டே வந்துட்டு திடும்னு முடிச்சிட்டீங்களே!.. அக்காவும் அண்ணனும் சொல்லுவாங்க தான்... அதுக்காவ நீங்க நிப்பாட்டணுமா?!.. ஆமா ஒம்பது மணி தான ஆகுது?!..
கும்பகர்ணனை இத்தனை விரிவாக உயர்வாக சித்தரித்தும் ராவணலீலா என வடக்கே நடக்கும் நிகழ்ச்சியில் கும்பகர்ணனையும் ராவணனோடு சிதைப்பது ஏன் என தெரியவில்லை. வானரப்படைகளை அனுமனை சுக்ரீவனை ராமனையே தாக்கியதால் இருக்குமா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/BMvEd6--2p8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
பலமிருகங்கள் கூடியுள்ள பரவிய மகரவேலையின்(மகரம்=மீன் வேலை=கடல்) மடங்குகின்றதிரையை(அப்பால்) தள்ளி மேற்கிலும் கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திக்கிலும் இடையே போதல் தவிர்த்து இருகண்களின் புகையுடன் அஸ்திரப்புகையும் வெளிப்பட அந்த முகக்குன்றம் (அறுந்த) மூக்கு வழியாக(நீர்) உட்புகப்புக்கு மூழ்கியது.மலைபோன்ற முகம் விழவே சஞ்சார மறுக்கும்படி கடலின் நீர் நான்கு திசைகளிலும் முதலில் விலக, அம்முகம் அறுந்த மூக்கின் வழியே நீர் புகப்பெற்றுப்பிறகு கடலில் அமிழ்ந்துவிட்டதென்பதாகும்......சொற்பொருள் விளக்கம் இதுதான் வாசித்த புத்தகத்தில் உள்ளபடி!2014-11-24 2:57 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மாக்கூடு படர்வேலை
மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
2014-11-24 21:06 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:செவிக்குணவு இருக்கும் போது வயிறும் பசிக்குதுங்களே இதோ இன்னும் கொஞ்சம் எழுதிட்டு வரேன்
தங்கை மேல் கும்ப கருணனின் பாசத்தை இலக்குவனிடம் போரிடும் போது வெளிப்படுத்துகிறான். எங்களுக்குன்னு ஒரு குலக்கொடி .. அவ எங்க கூட பிறந்தது தான்யா அவ செய்த பாவம். நீ அவளை என்ன பண்ண? மூக்க அரிஞ்ச, அவளோட கூந்தலைப் பற்றி இழுத்த.. உரிமை அற்ற பெண்ணின் கூந்தலைப் பற்றி இழுத்தல் ஆண்மையற்ற செயல் என்பது இதன் மூலம் உணர்த்துகிறான். ( ஹரியண்ணே - இதைத்தானே இராவணனும் செய்தான் ? வால்மீகியின் படி? )‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,எம்முடன் பிறந்தாள்,செய்த குற்றம் ஒன்று இல்லவள்,நாசி வெஞ்சினத்தால்கொய்த கொற்றவ! மற்று அவள்கூந்தல் தொட்டு ஈர்த்தகை தலத்திடைக் கிடத்துவென்;காக்குதி ‘என்றான்.திவாகர் ஐயா சொன்னா மாதிரி பாசத்தில் இவர்கள் சற்றேனும் குறைந்தவர்கள் இல்லை. கும்ப கர்ணனின் போர்த்திறன் அளவுக்கு இராமனின் போர்த்திறனை கம்பன் வர்ணித்திருக்கிறானா என்று தெரியவில்லை... அவ்வளவு அவ்வளவு ஆழ்ந்து போகின்றான்.அங்கதன், அனுமன், சுக்ரீவன் என்று அனைவரும் பொருதிப் புறம் செல்கின்றனர்.அனுமன் போரிடும் போது ஒரு காட்சி ..மாருதி, ‘வல்லை ஆகின்,நில், அடா! மாட்டாய் ஆகின்,பேருதி, உயிர்கொண்டு ‘என்றுபெருங்கையால் நெருங்க விட்டகார் உதிர் வயிரக் குன்றைக்காத்திலன், தோள்மேல் ஏற்றான்;ஓர் உதிர் நூறு கூறாய்உக்கது, எவ் உலகும் உட்க.டாய்... நில்லு... எங்கிட்ட சண்டை போடு... உயிர் வேணும்னா தள்ள்ளிப் போய்டு.. அப்படின்னுட்டு ஒரு பெரிய வைரமொத்தக் குன்று ஒன்றை எடுத்து அனுமன் வீச, அதை கும்பகர்ணன் தோளில் ஏற்கும் போது நூறு துகள்களாய் உதிர்ந்து விழுந்ததாம். அதைக் கண்டு அனுமனே அவனை விட்டு வேறிடம் போரிடப் போனானாம். அதுவுன்ம் “ இராமனின் பாணம் வேண்டுமானா... இவனோட தோளைப் பிளந்தாலும் பிளக்கும் “ அப்படின்னு நினைச்சுக்கிட்டு போனானாம் அனுமன்.'விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;மண் இரண்டு உறக் கிழிந்தது' என்று இமையவர் மறுக,கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழிஎண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான்.விண் இரண்டாக ஆனது.. மலையே இரண்டாக பிளந்து போனது.. பூமியே இரண்டாக கிழிந்தது என்று தேவர்கள் மனம் உளைய, கும்ப கர்ணன் கண் இரண்டிலும் தீ வெளிவர .. அவன் அம்புகளை விடுகிறானாம். அப்போது களத்தில் காணப்படும் அழிவுகளை கம்பன் சொல்லுவதை நோக்கினால்... அது பேரழிவாக அல்லவா தோன்றுகிறது.சுக்ரீவனை தூக்கிச் சென்றது அவனை பின்பு மீட்டது போன்றவகைளை ஹரியண்ணாவும் ஷைலஜாக்காவும் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றனர்.சுக்ரீவன் மூக்கையும் காதையும் கடித்துச் சென்றதும் அவன் தன் நிலையை எண்ணி மருகும் போது எதற்கும் கலங்காத கும்பகர்ணன் கலங்கும் போது நம் உள்ளமும் கலங்குகிறது.இராமன் உன் விருப்பம் என்ன ? என்று கேட்கும் போது.. அவன் பேசும் வீரம் தான் என்ன ? உடலுறுப்புகள் இழந்து அவன் போரிடும் போது வெளிப்படுத்தும் விடாப்பிடி போர்க்குணம் என்ன... விபீடணனைக் காக்க கோரும் போது அவனின் பாசம் மீண்டு எழுவதென்ன..கம்பனின் பாத்திரப் படைப்பில் கும்பகர்ணனின் பாத்திரப் படைப்பு அத்தனை வலிமையானது. படிக்கப் படிக்க இன்னும் இன்னும் என்று தூண்டும்.. நான் உளறிக் கொட்டினது உங்களுக்குப் படிக்கத் தூண்டியிருந்தால் அது கம்பனின் கவியாற்றலின் பெருமையே அன்றி வேறொன்றும் இல்லை.இப்ப எனக்கு பசிக்குது... சாப்டப் போறேன்....
Iyappan Krishnan
*>*<*உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார்-அவர்தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஒரு கலக்கு கலக்கிவிட்ட ஐயப்பனுக்கு நன்றி.கம்பர் என்றால் அருமைத்தம்பிக்கு கலியனின்(திருமங்கை ஆழ்வார்)ஆடல்மாவேகம் வந்துவிடும் எனத்தெரியும்! நன்றி மிக அலுவலக வேலையிலும் அயராமல் எழுதியதற்கு.
கம்பர் எந்த அளவுக்கு கும்ப கருணனை உள்ளத்தில் மதித்தார் என்றால், இராமனுக்குக் கொடுத்த அந்தப் பெருமையை கும்ப கர்ணனுக்கும் கம்பர் கொடுத்திருக்கிறார்.
தோள் கண்டார் தோளே கண்டார்னு இராமனைச் சொன்னாரில்லையா ? அது மாதிரி கும்ப கர்ணனைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க
"
தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "
என்ன உவமை பாருங்க. சூர்ப்ப நகையின் கண்கள் ஏன் அவ்வளவு நீஈஈஈஈஈண்டு இருக்காம்னு கேட்டா... அவன் தோள் இந்தப்பக்கம் இவ்ளோ நீளம்.. அந்தப் பக்கம் இவ்ளோ நீளம்... இது ரெண்டையும் பார்த்து பார்த்தே என் கண்ணு நீஈண்டு போச்சுங்கறாளாம்.
இராமனைப் பார்த்து சூர்ப்பநகை சொன்னதை , இந்த தோளொடு தோள் செல வை அப்படியே கும்ப கர்ணனுக்கும் கொண்டாந்து போடறார்..
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்?
இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்து முடிக்கவே பல நாளாகுமாம். ஒரு மலைக்கு கைக் காள் முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு
கம்பர் தி கிரேட்...
ஆகா ஷைலஜா! கும்பகருணன்
வதைப்படப் பாடல்களைத் தந்து என்னை நெகிழ்த்தி விட்டீர்களே!
இராமாயணத்தில் என்னைக் கவர்ந்த பாத்திரங்களில் கும்பகருணனுக்கு முக்கிய இடமுண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
இராமனை எதிர்த்து அப்போரில் தோற்று “வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு வந்த’ இலங்கை வேந்தன் இராமனின் வீரத்தை வியக்கிறான். என்னை வெற்றிகொண்ட வீரனான ‘கார்த்தவீரியார்ச்சுனனை ஒத்த வீரன் எவருமே இருக்கமுடியாது என்றல்லவா எண்ணியிருந்தேன்! (இராவணன் தன் வாணாளில் தோல்வியைச் சந்தித்தது இருவரிடமே; ஒருவன் வானர அரசன் வாலி; மற்றொருவன் யாதவ குலத்தைச் சேர்ந்த கார்த்தவீரியன்) இந்தச் சகோதரர்களின் (இராமன் & இலக்குவன்) வீரத்தைக் கண்ணுற்றபின் இவர்கள் வீரத்தில் கால்தூசுப் பெறமாட்டான் கார்த்தவீரியன் என்றே தோன்றுகிறது என நினைத்துச் சோர்வுறுகின்றான்.
அந்தச் சோகமயமான வேளையிலும்கூட விண்ணோரும் மண்ணோரும் தன் தோல்வியைக் கண்டு நகுவரே என்று இராவணன் வருந்தவில்லை. ‘சானகி நகுவள்” என்று எண்ணி எண்ணித்தான் கலங்குகின்றான் என்கிறார் கம்பர்.
பின்பு யுத்தத்திற்கு யாரை அனுப்புவது என்பது குறித்து மாலியவான் (இராவணனின் பாட்டனார்), மகோதரன் (இராவணனின் மந்திரி) போன்றோருடன் ஆலோசனை செய்துவிட்டு ”உறக்கத்திலிருக்கும் கும்பகருணனை எழுப்புவது நல்லது” என்ற மகோதரனின் யோசனைக்கு உடன்படுகின்றான்.
உடனே கும்பகருணனை எழுப்ப
நான்கு வீரர்கள் அவனுடைய அரண்மனைக்கு ஓடினராம். ஒருவன் இறந்தபின் அவன் நான்கு பேர்
தோள்களில்தானே தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதுபோல் இங்கே கும்பகருணனுடைய
முடிவு நெருங்கிவிட்டது என்பதனை நான்கு பேர் அவனை எழுப்பச் சென்றனர் என்பதன் வாயிலாகக்
கம்பர் குறிப்பால் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம்.
கும்பனை எழுப்பும் பாடலும்
சந்தநயம் வாய்ந்த அருமையான பாடல்; அனைவரும் அறிந்தவொன்றே!
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வுஎலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)
பல்வேறு கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு துயில் நீங்கிக் கண்விழிக்கின்றான் கும்பகருணன். அண்ணனின் நிலை உணர்ந்த அந்த அருமைத் தம்பி அண்ணனுக்கு இதோபதேசம் செய்கின்றான்..பலனில்லை. பின்பு, காட்டமாகவே சில அறிவுரைகளைச் சொல்கின்றான்.
என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய்
வன்தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்
அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ் ஐயா!
புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ? (6121)
”என்று நீ இன்னொருவன் மனைவியை, ஒழுக்கத்தில் சிறந்த தவச்செல்வியைச் சிறை வைத்தனையோ அன்று அழிந்தது நம் அரக்கர் புகழ்!” என்று அண்ணனின் நடத்தையைக் கடுமையாய் விமரிசிக்கிறான்! இச்செயலால் அரக்கர் குலத்திற்குப் பெரும்பழி நேரும் என்றும் எச்சரிக்கின்றான். அண்ணனின் பிறன்மனை நயக்கும் குணத்தில் தம்பிக்கு ஆதியிலிருந்தே உடன்பாடில்லை என்பதையே இப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
மீண்டும் தொடர்கின்றான்...
ஆசுஇல் பரதாரம் அவைஅம் சிறை அடைப்பேம்
மாசுஇல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்! (6122)
இன்னொருவனுடைய குற்றமற்ற மனைவியைச் சிறையில் அடைப்போம்;
ஆனால் எல்லாரும் நம்மைப் புகழவேண்டும் என்று ஆசைப்படுவோம். பேசுவது மானமிகு வீரவுரைகள்;
ஆனால் பேணுவதோ காமம்! மானிடரைக் கண்டாலோ (நமக்கு) அச்சம். ஆகா! பிரமாதம் நம் வெற்றி!
என்று இராவணனின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகின்றான்.
அறிவிற்சிறந்த தம்பியான கும்பகருணன் என்ன சொல்லி என்ன? விதி வலியது. இராவணன் சற்றும் அவன் செவியறிவுறூஉவிற்குச் செவி சாய்க்கவில்லை. காமம் அவன் கண்ணை மறைத்தது.
பாசமிகு தம்பியையும், பார்போற்றும் மைந்தன் மேகநாதனையும் (இந்திரஜித்) போர்க்களத்தில் பலியிட்டுத் தனக்கும் தன் குலத்திற்கும், ’பொன்னகரென’ப் பொலிந்த இலங்கைக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான்.
(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)
அன்புடன்,
மேகலா
திருவிளையாடல் படத்தில் கயிலாய நாகராஜனின் திருவிளையாடல்களைவிடப் பூலோக நாகராஜனின்>>>>>இந்த வரி படிச்சதும் நான் பாசமிகு ஒருவரைத்தான் சொல்றீங்கன்னு முதல்ல நினச்சேன்:)_
(ஏபிஆர்) திருவிளையாடல்கள் அதிகம். :-)
அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஏழைப் புலவன் தருமியைக் காமெடிப் பாத்திரமாக மாற்றியது.அன்புடன்,மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆகா ஷைலஜா! கும்பகருணன் வதைப்படப் பாடல்களைத் தந்து என்னை நெகிழ்த்தி விட்டீர்களே!
இராமாயணத்தில் என்னைக் கவர்ந்த பாத்திரங்களில் கும்பகருணனுக்கு முக்கிய இடமுண்டு. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
இராமனை எதிர்த்து அப்போரில் தோற்று “வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு மீண்டு வந்த’ இலங்கை வேந்தன் இராமனின் வீரத்தை வியக்கிறான். என்னை வெற்றிகொண்ட வீரனான ‘கார்த்தவீரியார்ச்சுனனை ஒத்த வீரன் எவருமே இருக்கமுடியாது என்றல்லவா எண்ணியிருந்தேன்! (இராவணன் தன் வாணாளில் தோல்வியைச் சந்தித்தது இருவரிடமே; ஒருவன் வானர அரசன் வாலி; மற்றொருவன் யாதவ குலத்தைச் சேர்ந்த கார்த்தவீரியன்) இந்தச் சகோதரர்களின் (இராமன் & இலக்குவன்) வீரத்தைக் கண்ணுற்றபின் இவர்கள் வீரத்தில் கால்தூசுப் பெறமாட்டான் கார்த்தவீரியன் என்றே தோன்றுகிறது என நினைத்துச் சோர்வுறுகின்றான்.
அந்தச் சோகமயமான வேளையிலும்கூட விண்ணோரும் மண்ணோரும் தன் தோல்வியைக் கண்டு நகுவரே என்று இராவணன் வருந்தவில்லை. ‘சானகி நகுவள்” என்று எண்ணி எண்ணித்தான் கலங்குகின்றான் என்கிறார் கம்பர்.
பின்பு யுத்தத்திற்கு யாரை அனுப்புவது என்பது குறித்து மாலியவான் (இராவணனின் பாட்டனார்), மகோதரன் (இராவணனின் மந்திரி) போன்றோருடன் ஆலோசனை செய்துவிட்டு ”உறக்கத்திலிருக்கும் கும்பகருணனை எழுப்புவது நல்லது” என்ற மகோதரனின் யோசனைக்கு உடன்படுகின்றான்.
உடனே கும்பகருணனை எழுப்ப நான்கு வீரர்கள் அவனுடைய அரண்மனைக்கு ஓடினராம். ஒருவன் இறந்தபின் அவன் நான்கு பேர் தோள்களில்தானே தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கிறது. அதுபோல் இங்கே கும்பகருணனுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதனை நான்கு பேர் அவனை எழுப்பச் சென்றனர் என்பதன் வாயிலாகக் கம்பர் குறிப்பால் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம். >>>
ஆஹா மேகலாவின் பார்வைக்கோணம் மிகச்சரி நானும் இந்தக்கட்டத்தை வாசித்தேன் ஆனால் பொருளை இப்போதான் இந்த வகையில் உணர்கிறேன்.
கும்பனை எழுப்பும் பாடலும் சந்தநயம் வாய்ந்த அருமையான பாடல்; அனைவரும் அறிந்தவொன்றே!
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வுஎலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)
பல்வேறு கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு துயில் நீங்கிக் கண்விழிக்கின்றான் கும்பகருணன். அண்ணனின் நிலை உணர்ந்த அந்த அருமைத் தம்பி அண்ணனுக்கு இதோபதேசம் செய்கின்றான்..பலனில்லை. பின்பு, காட்டமாகவே சில அறிவுரைகளைச் சொல்கின்றான்.
என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய்
வன்தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்
அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ் ஐயா!
புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ? (6121)
”என்று நீ இன்னொருவன் மனைவியை, ஒழுக்கத்தில் சிறந்த தவச்செல்வியைச் சிறை வைத்தனையோ அன்று அழிந்தது நம் அரக்கர் புகழ்!” என்று அண்ணனின் நடத்தையைக் கடுமையாய் விமரிசிக்கிறான்! இச்செயலால் அரக்கர் குலத்திற்குப் பெரும்பழி நேரும் என்றும் எச்சரிக்கின்றான். அண்ணனின் பிறன்மனை நயக்கும் குணத்தில் தம்பிக்கு ஆதியிலிருந்தே உடன்பாடில்லை என்பதையே இப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
மீண்டும் தொடர்கின்றான்...
ஆசுஇல் பரதாரம் அவைஅம் சிறை அடைப்பேம்
மாசுஇல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்! (6122)
இன்னொருவனுடைய குற்றமற்ற மனைவியைச் சிறையில் அடைப்போம்; ஆனால் எல்லாரும் நம்மைப் புகழவேண்டும் என்று ஆசைப்படுவோம். பேசுவது மானமிகு வீரவுரைகள்; ஆனால் பேணுவதோ காமம்! மானிடரைக் கண்டாலோ (நமக்கு) அச்சம். ஆகா! பிரமாதம் நம் வெற்றி! என்று இராவணனின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகின்றான்.
அறிவிற்சிறந்த தம்பியான கும்பகருணன் என்ன சொல்லி என்ன? விதி வலியது. இராவணன் சற்றும் அவன் செவியறிவுறூஉவிற்குச் செவி சாய்க்கவில்லை. காமம் அவன் கண்ணை மறைத்தது.
பாசமிகு தம்பியையும், பார்போற்றும் மைந்தன் மேகநாதனையும் (இந்திரஜித்) போர்க்களத்தில் பலியிட்டுத் தனக்கும் தன் குலத்திற்கும், ’பொன்னகரென’ப் பொலிந்த இலங்கைக்கும் பேரழிவைத் தேடிக்கொண்டான். >>>பொன்னகரெனப்பொலிந்த இலங்கை! ஆம் மேகலா இலங்கையின் வளமை அன்று மிக உயரத்தில் இருந்திருக்கிறது!
(என்னதான் இராவணன் கெட்டவனாயினும்...அவன் அழிவு என்னவோ மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை; கற்பிற் சிறந்த மனைவியான மண்டோதரியின் துயரமும், கைம்மை நிலையும் அதற்குக் காரணங்களாக இருக்குமோ?)>>>> இராவணர்கள் அழியவேண்டும் தான்.. மண்டோதரிக்காக பரிதாபப்பட்டாலும் ..!
அன்புடன்,
மேகலா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
2014-11-25 23:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.
கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை.>.மிகச்சரியாக சொன்னீர்கள் திவாஜி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
முற்றும் விட்டகல வேண்டும்.
பாரதி
//செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?
//செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை//உண்மை திவாஜி. தம்பியாகப் பிறந்தது கும்பகருணனின் தேர்வில்லைதான். ஆனாலும் தன் தம்பி வீடணனைப் போல் அவனும் அண்ணன் இராவணனுக்கு எதிராக இராமனின் அணியில் சேர்ந்துகொள்ள வாய்ப்பிருந்ததே. ஏன்...வீடணனே அவ்வாறு கும்பகருணனை இராமன் பக்கம் வந்துவிடு என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். ஆயினும், கும்பகருணன் அண்ணன் மீது கொண்ட பாசத்தால் தன் அண்ணன் செய்வது அறமற்ற செயல் எனும்போதும் அவனை விட்டு வர மறுக்கின்றான். அண்ணனுக்காக உயிர்விடுவதே தன் கடமை என்கிறான்.கும்பகருணன் நினைத்திருந்தால் வீடணனைப் போல் தானும் இராமன் அணியில் சேர்ந்துகொண்டு வெற்றி வீரனாக வலம்வந்திருக்கலாம். ஏன் இலங்கை அரசனாகக் கூட முடிசூட்டிக்கொண்டிருக்கலாம்! ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லையே. இராவணனின் செயல்களை ஓர் நல்ல தம்பியாகக் கண்டிக்கிறான்; இராவணன் திருந்தவில்லை எனும்போதும் அவனைவிட்டு விலகாது அவனுக்காகவே உயிர்துறந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவனாகின்றான்.அதனால்தான் கும்பகருணனும் கர்ணனோடு வைத்து எண்ணப்படுகிறான். அது தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.அன்புடன்,மேகலா
2014-11-26 9:24 GMT-05:00 shylaja <shyl...@gmail.com>:
2014-11-26 6:19 GMT-08:00 திவாஜி <agni...@gmail.com>:
2014-11-25 23:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து அழிந்தது கர்ணன் மட்டுமில்லை; கும்பகருணனும் அல்லவா?ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறார்கள்?கர்ணன் போய் சேர்ந்து கொண்டான். அது அவனுடைய தேர்வு.கும்பகர்ணன் தம்பியாக பிறந்தான். அது அவன் தேர்வு இல்லை.>.மிகச்சரியாக சொன்னீர்கள் திவாஜி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜா
மதி-மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனைமுற்றும் விட்டகல வேண்டும்.பாரதி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.
On Wednesday, November 26, 2014 9:03:26 PM UTC-6, Zஈனத் Xஏவியர் wrote:எதுகை மோனை இரண்டும் ஒரே அடியில்தான் வரும்.எதுகை ஒரே அடியில் அல்ல.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
http://panbudan.com/story/krishna-prabhu
அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மக்களே உண்மையாகவே கேட்கிறேன்....தெரியாமல் கேட்கிறேன்....புரியவே புரியாமலும் குழம்பிப் போய்தான் கேட்கிறேன்.சமஸ்கிரதம் தெரியாதவர்கள் அந்த வார்த்தையையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் ...இல்லை இது இப்படி இருக்க வேண்டும். சூத்திரன் இல்லை... அது சூத புத்திரன் என்ற சொல்... அதன் பொருள் இது என்றும் விளக்கம் சொல்லிவிட்டு போகலாமே.
இது என்ன புதுக்கதை என்று இணையத்தில் தேடியதில் பலர் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது...
http://panbudan.com/story/krishna-prabhu
அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான்.
கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லைஅம்பென பாய்ந்த கர்ணனின் வீர கர்ஜனையும், அவன் வில் வித்தையும் சபையோரை மகிழ்வித்தபோதும்
க்ஷத்ரிய குளத்தில் பிறந்தும் சூத புத்திரன் என்று பாண்டவர்களாலும் சபையோராலும் இகழபட்டாலும்அவன் துரோணரிடம் தான் படித்தான்.
சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.
தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.இது போல விளக்கம் சொல்வது பலனளிக்குமே!!!! இதற்கு ஏன் இவ்வளவு கோபம்...
எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.ஆனால் ஒரு புராணக் கதை நாயகர்களைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ, புராணத்தைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ இப்படி கொதிதேழுவதும் ....அதற்கு ஒத்துப் பாடுவதும் என்ன நடைமுறை.மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.இந்த சமுதாயத்தில் என்னதான் நடக்கிறது?மதத்தில் பற்றிருப்பது தவறல்ல...மனிதர்களிடமும் அது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே.
மக்களே உண்மையாகவே கேட்கிறேன்....தெரியாமல் கேட்கிறேன்....புரியவே புரியாமலும் குழம்பிப் போய்தான் கேட்கிறேன்.
சமஸ்கிரதம் தெரியாதவர்கள் அந்த வார்த்தையையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் .>>.ஆமாம் பெயர்களே பல சம்ஸ்க்ருதம் தான் கும்ப கர்ணன் என்ன அர்த்தம்? கும்பம் போல காதுகளை உடையவன் ....சம்ஸ்க்ருதம் தெரியாவிட்டால் எனன் என்று கேட்டு அறிந்துகொள்ளவேண்டும் புராணக்கதைகளில் சம்ஸ்க்ருதப்பெயரே அதிகம்.இல்லை இது இப்படி இருக்க வேண்டும். சூத்திரன் இல்லை... அது சூத புத்திரன் என்ற சொல்... அதன் பொருள் இது என்றும் விளக்கம் சொல்லிவிட்டு போகலாமே.>>>> கேட்டால் சொல்லலாம் தேமொழி.
இது என்ன புதுக்கதை என்று இணையத்தில் தேடியதில் பலர் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது...>>.இணையமென்ன அதற்குவெளியே இருக்கும்பலரின் நினைப்பும் இதுதான்..
http://panbudan.com/story/krishna-prabhu
அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான்.
கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லைஅம்பென பாய்ந்த கர்ணனின் வீர கர்ஜனையும், அவன் வில் வித்தையும் சபையோரை மகிழ்வித்தபோதும்
க்ஷத்ரிய குளத்தில் பிறந்தும் சூத புத்திரன் என்று பாண்டவர்களாலும் சபையோராலும் இகழபட்டாலும்
அவன் துரோணரிடம் தான் படித்தான்.
சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.
தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.
இது போல விளக்கம் சொல்வது பலனளிக்குமே!!!! இதற்கு ஏன் இவ்வளவு கோபம்...>>.யாருக்கும் ம்கோபம் இல்லையே... ஒரு ஆற்றாமையில் சொல்வதுதான் இந்த இழையில் நீங்கள் என்னைக்குறிப்பிட்டால் எனக்குக்கோபம் என்றில்லை .எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.>>>>>வருந்தி வார்த்தைவிடுவதைவிட உற்ற உதவி செய்வதை விளம்பரப்படுத்தாத பலர் உண்டு.ஆனால் ஒரு புராணக் கதை நாயகர்களைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ, புராணத்தைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ இப்படி கொதிதேழுவதும் ....அதற்கு ஒத்துப் பாடுவதும் என்ன நடைமுறை.>>கொதிதெழல தாயி.. உள்ளதைச்சொல்வது தான்.. நீங்கள் அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது? இதுவும் என் இழை என்பதால் உங்களுக்கு பதில் அளிக்கும் கடமை எனக்கு இப்போது.மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.<<<<<<யாரையோ மனசில் வச்சி நீங்க இங்கே பேசுகிறீர்கள் அதற்கு இது அல்ல இடம்.
இந்த சமுதாயத்தில் என்னதான் நடக்கிறது?>
மதத்தில் பற்றிருப்பது தவறல்ல...மனிதர்களிடமும் அது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே.>>அப்படி இருப்பதால்தான் பொறுமையாக பதில் சொல்ல இயல்கிறது தேமொழி...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முற்றும் விட்டகல வேண்டும்.
பாரதி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.