சமணம் அறிவோம்
இழையில் ...
முன்னர்
அம்பலப்பசாமி <= சமணத்திலும் உள்ளது.
கோவிலாங்குளம் கல்வெட்டு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, கோவிலாங்குளம்
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு, முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியாண்டு
விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, தமிழ்நாடு தொல்லியல் துறை
தொடர் எண். 142/2005. பக்கம் 23.
இடம்: அம்பலப்பசாமி (சமணர்கோவில்)
இக்கல்வெட்டில் குறிப்பிடும் அம்பலப்பசாமி கோயில் சமணக்கோயில் ஆகும்.
மேலும்....
இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்
தலைப்பு: இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்
ஆசிரியர்: எஸ். எம். கமால்
எட்டாம் நூற்ருண்டைய பள்ளி மடம் கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத் திலும், புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வி யுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிட் மாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர் களுக்கு பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினன். கோவிலாங்குளத்தில் உள்ள இன்னெரு கல்வெட்டி லிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவிரதினி ளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக வவிளங்கியது தெரிகிறது. இதனைப்போன்று இம்மாவட்டதின் வட சிமுக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்த தாகத் தெரிகிறது. இளேயான்குடி, ஆனந்துார். அனுமந்தக்குடி, திருக்களாக்குடி, பிரான் ம லை கீழப்பனேயூர், ஆகிய சிற்றுார்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது கல் திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம், சாத்தப்பள்ளி. சாத்தனுார் , சர்த்தன்குளம், சாத்தமங்கலம் , அச்சன் கு ள ம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, தாகனேந்தல்.............
மேலும்....
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது கோவிலாங்குளம். அக்காலத்தில் கோயில்களும், குளங்களும் அதிமாக இருந்ததால் கோவிலாங்குளம் என மருவியது. இதற்கேற்ப இக்கிராமத்தை சுற்றி பத்ரகாளியம்மன், பெருமாள், பிள்ளையார், கருப்பசுவாமி, கரையோர கருப்பசுவாமி, வீரலட்சுமி, அம்பலப்ப சுவாமி உட்பட பல கோயில்கள் உள்ளன. இதில் அம்பலப்ப சுவாமி கோயில் 2 ம் நுாற்றாண்டில் சமணர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு ஒரு சமண பள்ளி துவங்கப்பட்டு தமிழ் பரப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வு கூறுகிறது. இது ஒரு மேடை போன்று உள்ளது. புத்தர் போன்று தவ கோலத்தில் 2 சிலைகளும் உள்ளன. சுற்றிலும் நான்கு துாண்கள் மட்டும் உள்ளன. மேடையில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த கோயில் எப்படி வந்தது, யார் தோற்றுவித்தனர் என்பது இப்பகுதி மக்களுக்கு இன்று வரை சரிவர தெரியவில்லை. ஆனால் நுாற்றாண்டு புகழ் வாய்ந்தது என்பதால் ஊர் மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். வரலாற்று ஆய்வாளர்களும் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். ‘இப்பகுதியில் கிடந்த தவக் கோல சிலைகளை அந்த காலம் முதல் எடுத்து வைத்து வழிபட்டு வருவதாக’ வயதான பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கும் இதன் வரலாறு தெரியவில்லை. எனினும் மக்கள் இது ஜைன சிலை, மகாவீர் சிலை என தாங்கள் கேள்விபட்டதை கூறுகின்றனர். இருந்தாலும் இதை அம்பலப்ப சுவாமி கோயில் என பெயர் வைத்து வழிபாடு செய்கின்றனர். புரட்டாசியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது.