எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.
ஆனால் கீழுள்ள தளத்திற்குப் போய் பாருங்கள்.
இறந்தோரின் எண்ணிக்கையை விட பிறப்போர் எண்ணிக்கை கூடிய வண்ணமுள்ளது.
மிகவும் பயமுறுத்தும் தளம்.
இதைப்பார்த்த பின்னும் சகட்டு மேனிக்கு பிள்ளையைப் பெற்றுத்தள்ளுவோர்
யோசிக்க வேண்டும்.
நாளைய உலகில் அவர்களுக்கு என்னென்ன சவால்கள் காத்திருக்கின்றனவோ!?
கண்ணன்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
2008/12/14 Narayanan Kannan <nka...@gmail.com>
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.கண்ணன்இப்படி ஒரு பொருள் இருக்கு என்பதை இன்றுதான் அறிய வந்தேன். நேராகவே சிந்திப்பது இல்லை என்ற திண்ணமா?
வேந்தரே! இனிமேல் தாங்காது!!
பூமிபாரம் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது :-))
நீர் இனிமேல் வள்ளுவர் என் சமயம் என்பதை எடுக்கும்வரை
உண்ணாவிரதப்போராட்டம் செய்யப் போகிறேன்.
க.>
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.
உண்மைதான். நானும் எல்லோரும் போல் "பெருமை" என்பது புகழ்ச்சி (உம்.
தற்பெருமை) என்றுதான் எண்ணியிருந்தேன். சுஜாதா அதற்கு "கூடுதல், அதிகம்"
எனும் பொருள் உண்டு என்று சொன்ன போது ஆச்சர்யப்பட்டேன். ஆனாலும் கவிஞர்
ஹரிகிருஷ்ணன் சுட்டியது போல் "வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று" என்ற
வள்ளுவனின் வாக்கினால் அவன் இப்பொருள்தான் கொள்கிறான் என்று
கொள்ளமுடியும். இராம.கி போன்ற பெரியோர் "பெருமை" என்ற சொல்லின் பொருள்
வளம், வேர் மூலம் காட்டி அருள வேண்டும்.
உங்கள் கேள்விக்கு வருவோம். இறப்பு என்பது தன்னிலையானது. ஒருவன்தான்
இறக்கமுடியும். கூட்டாக இறந்து போனாலும் (உம்.போர்) மரித்தல் எனும் செயல்
தனிமனிதர் சார்ந்ததே. எனவேதான் வள்ளுவன் அதைப் பன்மையில் சுட்டவில்லை.
(சுட்டவும் முடியாது).
மேலும் நேரடிப்பொருள் கொள்வதானால், "நேற்று இருந்தவன் இன்று இல்லை"
என்பதால் உலகிற்கு "என்ன பெருமை" வந்துவிடுகிறது? அங்கு பெருமை கொள்ள
என்ன இருக்கிறது?
ஆனால் உலகு என்னும் இயக்கம் பலகோடி நூற்றாண்டுகளாக நடந்துவரும் போது,
இறந்தோரின் எண்ணிக்கை இருப்போரின் எண்ணிக்கையை விடக்கூடுதலாக இருக்கும்.
இதுவொரு எளிய கணக்கு. வழக்கம் போல் வள்ளுவணின் சூத்திரம் எளிமையான ஆனால்
நிரந்தர உண்மைகளைச் சொல்வதாக அமைகிறது.
எனவே பெருமை என்பது "கூடுதல்" எனும் பொருளிலேயே இங்கு வழங்கப்படுகிறது.
நான் இவ்விழையில் சுட்ட முற்படும் பொருள் அறிவியல் சார்ந்தது.
அத்திசையில் போகுமென எதிர்பார்த்தேன். தமிழர் நிலை ஆழமாக மொழியிலே
நிற்பதை இதுவரை வந்த பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
அக்காலத்தில் விஞ்ஞானம், மெஞ்ஞானம் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.
அறவாழி அந்தணன் தாள் சேரச் சொல்லும் அதே வள்ளுவர் திடீரென்று இப்படி
உயிரியல் பேசுவார். திடீரென்று கெமிஸ்டிரி பேசுவார் (நீரின்றி அமையாது
உலகு). அப்படி அமைகிறது இக்குறள் என்பது எங்கள் எண்ணம் (சுஜாதாவையும்
சேர்த்து).
கண்ணன்
கொஞ்சம் விளக்கப்படுத்தி விரிவுரை தருக.
க.>
இது பரிமேலழகர் உரை:
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
336
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)
இது தேவநேயப் பாவாணர் உரை:
நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்!
உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும்,
வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள்
நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள்
என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.
நன்றி குமரன்.
வழக்கம் போல் புலவர் "அணி" சேர்ந்துவிட்டனர்.
காலம் பூரா சண்டை போடலாம் ;-))
க.>
மதராசபட்டினம் வெளியிட்டபோது, நான் இக்குறளை எனது பேச்சில் குறிப்பிட்டேன். இதை, elegy lines
"The boast of heraldry, the pomp of power,
All the beauty all the wealth ever gave,
Await alike the inevitable hour,
The paths of glory lead but to the grave"
உடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். பின்னர் தமிழ் வளர்ச்சிக் கழ்கம் இயக்குனர் ராஜேந்திரனோடு பேசிக்கொண்டிருக்கையில் (அவர் தான் நூலை வெளியிட்டார்) இக்குறளின் மீதான பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது! உளன் என்பது, நிகழ் காலம்" என்றவகையில் தொடர்ந்தது!
|
இவ்விழையின் தலைப்பிலேயும் ஓர் "அணி" இருப்பதால் அப்படி ஆகிவிட்டது போலும் ;-)
"ஆமா! நேத்து இருந்தான், இன்னக்கி செத்தான். இதிலே உனக்கு ரொம்பப்
பெருமைதான் போலும்" என்ற சாதாரண வழக்காடல் போல் வள்ளுவன் பூமியைப்
பார்த்து கேட்பதாகப் பொருள் கொள்ளலாம்தான். வள்ளுவனுக்கு நகை உணர்வு
இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
வள்ளுவன் பொடி வைத்துப் பேசுகிற ஆசாமி? இக்குறளில் அப்படி ஏதாவது "பொடி"
இருக்கிறதோ? என்று பரிமேலழகரும், சுஜாதாவும், நானும் பார்க்கிறோம்.
அதிலும் தவறில்லை.
நான் இதை முன்னிட்டதன் முக்கிய காரணம் முதல் முறையாக நவீன மருத்து
வசதிகளால் பிறப்பின் எண்ணிக்கை, இறப்பின் எண்ணிக்கையை விட கூடுகிறது என்ற
பயமுறுத்துகிற உண்மையைச் சொல்லத்தான். நான் கொடுத்த தொடுப்பு இது போல்
இன்னும் பல சூழல் உண்மைகளை 'திடுக்கிடும் வகையில்' தருகிறது.
அது பற்றி பேச்சு வளரும் என்ற எண்ணத்தில் எழுதினேன். ஆனால், சத்தியமாக
இக்குறளுக்குள் இத்தனை "அணிகள்' இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை!!
;-) க.>
2008/12/18 kra narasiah <nara...@yahoo.com>:
--
யாக்கை நிலையாமை என்பது பெருமை.
அதுவே வைராக்கியத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்தப் பேருண்மையை உணராமல் இருப்பதாலேயே உலகில் வன்முறையும், போர்களும்.
எல்லோரும் ஓர் நாள் சாகத்தான் போகிறோம். எனவே இருக்கும்வரை அமைதியாய்
இருப்போம் என்பதே விவேகம்.
அதைச் சொல்ல வருகிறது இக்குறள் என்றும் சொல்லலாம்.
வஞ்சகப்புகழ்ச்சி நான் முன்பு சொன்ன பொருளில் வரும். (கிராமத்துப் பேச்சில்)
க.>
"நெருநல் உளன் என்றால் நேற்று இருக்கிறவன் என்ற்ல்லவா ஆகும்? இறந்த காலத்தில் நிகழ்காலத்தை எப்படிக் கூறலாம்" என்று ராஜேந்திரன் கேட்டார். விள்க்கம் கிடைக்குமா?
|
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
ஐயா,
இதனை காலவழுவமைதி என்று இலக்கணத்தார் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
//நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.//
//நெருநல் உளன் என்றால் நேற்று இருக்கிறவன் என்ற்ல்லவா ஆகும்? இறந்த காலத்தில் நிகழ்காலத்தை எப்படிக் கூறலாம்"//
இன்றில் வாழும் மனிதன் ( உளன்) , மனத்தளவிலும் எண்ணத்திலும்
எப்போதும் நேற்றிலும் (நெருநல் ), நாளையிலும் தான் வாழ்கிறான் .
இன்றில்லை,
நிகழ காலத்திலேயே , இறந்த காலத்தில் வாழ்கிறான் .
இதையேத்தான் , பதஞ்சலியில் இருந்து ஒஷோவரை "இன்றில் "வாழும்
முறையையே யோகம் , வழிபாடு , எனக்கூறுகிறார்கள்
இதையே தான் இவ்வுலகின் பெருமை என வள்ளுவர் கிண்டல் செய்திருப்பாரோ ?
இது ஒரு எண்ணம் தான் .
மேலும் சிந்திக்கத்தக்கது .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
ஐயா,
இதனை காலவழுவமைதி என்று இலக்கணத்தார் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
2008/12/18 kra narasiah <nara...@yahoo.com>
--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com
அன்பின் நரசய்யா
இதற்கு விளக்கம் இலக்கண ரீதியைவிட ஆன்மீக ரீதியில் சொல்லமுடியும். ஆனால்
நம்மவர்கள் வள்ளுவருக்கு கருப்பு சட்டை போட அல்லவோ முயற்சிக்கிறார்கள்
;-)
நேற்று இருந்தவனை எப்படி உளன் என்று நிகழ்காலத்தில் சொல்லலாம்? இதுதானே கேள்வி?
இதற்குத்தான் விடை ஆதிகாலம் தொட்டே இருக்கிறதே!
என் பெயர் கண்ணன் என்னும் போது இந்த "என்" என்பது எதைச் சுட்டுகிறது?
காதையா? மூக்கையா? காலையா?
அழகான பெயர் கொண்ட ஒருவர் இறந்த பின் "அதோ பாடையில் போகிறதே பிணம்" என்று
சொல்கிறார்களே தவிர பாடையில் போகிறார் பெரியசாமி என்று யாரும்
சொல்வதில்லை!
அப்ப இது நாள் வரை பெரியசாமியாக நடமாடிக்கொண்டிருந்த ஒன்று பெரியசாமியை
விட்டுப் போய்விட்டது.
"உசுரு போச்சு" என்கிறார்கள். அதாவது, ஏதோவொன்று உள்ளே இருந்தது. அது இப்ப போச்சு!
எது இருந்தது? எது போச்சு?
அது எப்போ இருந்தது? எப்போ போச்சு? அது எப்போ வந்தது? உடலுக்குள்
வருவதற்கு முன் அது எங்கே இருந்தது?
நெருநலில் அது இருந்ததா? இன்று இருக்கிறதா? நாளையும் இருக்குமா?
இதற்கு விடை காணப்புகும் போது மிக இயற்கையாக நம் எல்லோருக்கும்
புரிகிறது, உயிர் என்பது நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கு, நாளையும்
இருக்கும் என்று. ஆனால் அது ஒரு கூடு விட்டு இன்னொரு கூட்டிற்கு பாய்ந்த
வண்ணமே உள்ளது!
உண்மை இது என்னும் போது நெருநல் உளன் என்று சொல்வதில் என்ன பிழை!!?
கண்ணன்
அருமையான விளக்கம்,இப்படியும் சிந்திக்கலாம் என்பதே புதிய பார்வை. நன்றி.
.
அது சரி, பாடை என்றால் என்ன?
கமலம்
நன்றி.
கேரளாவில் பாடை இல்லையா?
இறந்த பின் உடலை மசானத்திற்கு இட்டுச் செல்லும் பல்லக்கு?. நான்கு பேர் தூக்குவர்.
பாடை என்றால் திட்டு என்று யார் சொன்னது?
சாவு என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்ளாதவரை வாழ்வு என்பது சிறக்காது.
நம்மில் பலர் இச்சிந்தனைகளை தள்ளிப் போடுகிறோம். சிலர் சிந்திப்பதே
இல்லை. மரணம் என்பது அமங்கலமாகப் போயிற்று. ஆயின் ஆன்ம விழிப்பிற்கு
அதுவே துணை.
பகவான் ரமணர் சிறுவனாக மதுரையில் வாழ்ந்த போது தான் இறந்துவிட்டதாக
உணர்ந்தார். சிறுவன். இறப்பு என்றால் என்னவென்று தெரியாது.
பார்த்தவரையில் கண்ணை மூடிக்கொண்டு கட்டை போல் கிடக்க வேண்டும் என்று
தெரிந்திருக்கிறது. அப்படியே செய்திருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு பின்
இறந்தது உடல் அல்ல என்று புரிந்தது. இதுவரை தன்னைப் பற்றிய அடையாளம்
இறந்தது என்று புரிந்து கொண்டார். நேரே திருவண்ணாமலைக்கு நடையைக்
கட்டினார். குளத்தில் குளிக்கும் போது பூணூலைத் தூக்கி எறிந்தார்.
'அது' செத்த பின் வாழ்ந்த 'உயிர்'.
கண்ணன்
2008/12/19 kamaladevi aravind <gokul...@yahoo.com>:
கமலம்:
இதில் தவறே இல்லை!
இறந்த பின் உட்கார்ந்து ஒப்பாரி வைப்பதுதான் தவறு.
நாம் அழுவது நமது நினைவுகளுக்கே! அதனால் இறந்தவருக்கு துளிப் பிரயோசனமில்லை.
வைணவ மரபில் 'சரணாகதி' வைகுந்த காப்பு என்று தெரிந்த பின் இறப்பதற்கு
தயங்குவதே இல்லை.
பழுத்த வைணவர்கள் விடிந்த பின் இன்னும் உடலுடன் உயிர் வாழ்வதைக் கண்டு
"இந்தப் பாம்புடனாக இரவு படுத்திருந்தேன்?" என்பார்களாம்.
மிக, மிக முக்கியம் உயிர் வாழும் போது நம் உடல் இறைவனின் ஆலயம் எனும்
நினைவுதான். அது தெரிந்தால் நாமும் நம்மை ஒழுங்காகக் கவனிப்போம்,
மற்றோரையும் மதிப்போம்.
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்
பராபரமே! என்பதே வேதவாக்கு.
க.>
நன்றி திவாகர்
அந்த உடம்பினுள் உள்ள உறுபொருள் என்ன? என்பதை வள்ளுவன் சொல்லுகிறான்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
இறைவன் இதயத்தில் வாழ்வதாக இந்து ஐதீகம். யோகம்.
க.>
மிக்க நல்லதொரு விளக்கம் - எனக்கு அப்போது தோன்றவில்லையே!
நரசய்யா |
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
திருமூலர் சொல்லவில்லையா - "பேரினை நீக்கிப் பிணமெனும் பெயரிட்டு"
விளக்கினும் விள்ங்கக்கூடாதென இருப்பின் என் செய்க!
|
From: kamaladevi aravind <gokul...@yahoo.com> |
இந்தப் பொருள் விளக்கம் சரியானதாக எனக்குத் தோன்றவில்லை.திருக்குறளில் பெரும்பகுதி சாகாக்கலையை உள்ளிறுத்தி எழுதப்பட்டுள்ளது அதன் பொருளை நாம் தான் சாகக்கலையின் தத்துவங்களின் பிண்ணனியில் படித்துணர வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.ஆனால் கீழுள்ள தளத்திற்குப் போய் பாருங்கள்.
இறந்தோரின் எண்ணிக்கையை விட பிறப்போர் எண்ணிக்கை கூடிய வண்ணமுள்ளது.
மிகவும் பயமுறுத்தும் தளம்.
இதைப்பார்த்த பின்னும் சகட்டு மேனிக்கு பிள்ளையைப் பெற்றுத்தள்ளுவோர்
யோசிக்க வேண்டும்.நாளைய உலகில் அவர்களுக்கு என்னென்ன சவால்கள் காத்திருக்கின்றனவோ!?
கண்ணன்
வள்ளுவன் ஏமாந்தான்? எனக்கேள்வி எழுகிறது.தலைப்பு வேறு விதமாய் இருந்து இருக்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நெருநல் என்பது இரண்டு வித மனிதரைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.
உளதொருவன் என்பது உள்ள ஒருவன் எனக் கொள்ளலாம்.
நெரு
நல்
நெரு உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
![]()
This message is eligible for Automatic Cleanup! (p...@giasmd01.vsnl.net.in) Add cleanup rule | More info
இடத்தையும் காலத்தையும் முதற்பொருளாகச் சுட்டிய தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியல் 199 ஆம் நூற்பாவில்ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்கரும நிகழ்ச்சி இடமென மொழிபஎன்று இடத்தை வரையறுப்பார். அடுத்த நூற்பாவில்இறப்பே நிகழ்வே எதிரது என்னும்திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளப்பொருள் நிகழ்வு உரைப்பது கால மாகும்என்று காலத்தை வரையறுப்பார். அதாவது கருமம் நிகழும் வெளி, இடம் எனப்படும். கருமநிகழ்வின் செறிவை உரைப்பது காலமாகும். (Projection of space-time in 3 dimension is space. Projection on to the remaining dimension is time. What is importance is motion in spacetime. கருமநிகழ்வு, பொருள்நிகழ்வு என்பது motion தான்.) இக்கால நடைமுறைப்புரிதலில் சொன்னால், ஒரு குறிப்பிட்ட கருமத்தின் பின்புலத்தை இடமெனலாம். கருமத்தை அடுத்தடுத்துப் உறைபடங்களாய் எடுத்தால் அந்த உறைபடத் தொகுப்பே காலமென்று உணரப்படும். திரைப்படங்களில் அப்படித்தான் காலத்தை உணர்கிறோம். இப்படிப் பொருள்நிகழ்வு உரைப்பது காலமெனில் செறிவான தொகுப்பு இன்னும் அதிகமாகவே காலத்தை உணரச்செய்யும்.நுல் என்பது செறிவுப்பொருள் குறிக்கும் வேராகும்.. நுல்>நல்>நள் என்பதும் செறிவையே குறிக்கும். அதாவது நுல், நல், நள் என்ற மூன்று சொற்களும் செறிவையுக் குறிக்கும். நள்ளிருள் என்பது இருளின் செறிவு. நள்+ந்+பகல் = நண்பகல் என்பது பகலின் செறிவு. நள் என்பது இன்னொரு வகையில் இருளையுங் குறிக்கும். நள்ளின் நீட்சியான நாள் முதலில் இன்றுநாம் உணரும் 12 மணி நேரத்தையே குறித்தது. பின்னால் 24 மணி நேரத்தைக் குறித்தது. நேரம் என்று சொல்லும் கூடப் பொருள்நிகழ்வைக் குறித்தது. நேர்ந்தது, நேர்கிறது, நேரும் என்று மூன்றையும் நேரம் குறித்தது. நுல்>நெல்>நேல்>நேர் என்பது அச்சொல்லின் வளர்ச்சி. காலத்தாலும், வெளியாலும் அண்மையில் வருவது நெல்>நெர்>நெரு>நெருங்கு என்றே சொல்லப்படும். நெருநல் என்பது நெருங்கிவந்த நாள், இது நெருநாள், நெருநல்+து= நெருநற்று, நெருநலை நாள், நெல்>நேல்>நேல்+து>நேற்று, நெருநல்>நென்னல், நென்னேற்று எனப் பல்வேறு விதமாய்ச் சொல்லாட்சி கொள்ளும். இதன்தொடர்பாய்ப்ப் பல சொற்கள் மற்ற திராவிட மொழிகளிலும் உள்ளனநெருநல் = நெருங்கிய செறிவு, நெருங்கிய நாள்.அன்புடன்,இராம.கி.,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.