இந்தப் பகுதியில் உவமையணி நன்கு அமைந்திருக்கிறது.
உலகம் - கடலாடை சூட்டியிருக்கும் நிலமடந்தை
பரத கண்டம் - அந்த நிலமடந்தையின் வதனம்
தக்காணம் - அந்த வதனத்தில் இருக்கும் நெற்றி
திராவிட நாடு - அந்த நெற்றியில் சூட்டிய திலகம்
தமிழ் - அந்தத் திலகத்தின் நறுமணம்.
இங்கும் உவமை அணி நன்கு அமைகிறது. எல்லா உயிர்களையும் உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் இறை எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது - அது போல் பல மொழிகளைத் தன்னுள் இருந்து படைத்தும் தமிழ் எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது. மற்ற மொழிகளைப் போல் அழிந்தொழியவில்லை.
விழிப்பார் என்று உலக வழக்கில் இருக்கும் ஒரு சொல்லை சிலேடையாக இங்கே சொல்லியிருக்கிறார்; நெற்றிக்கண்ணை விழித்ததைக் குறிப்பால் உணர்த்தி.
வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்
திவாகர்,
இவை எல்லாம் முன்பே எனது வலைப்பதிவில் எழுதியவை என்பதால் அடுத்தடுத்து இட முடிகிறது. மின் தமிழில் இடலாம் என்று எண்ணுபவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். சட்டியில் இருப்பது தீர்ந்தவுடன் அகப்பையில் வருவதும் குறைந்துவிடும் - புதிதாக சமைத்து இடவேண்டும். :)
இலக்கியம் என்ற வகையில் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. காமக்கடவுள் (இஷ்டதெய்வம்) கண்ணன் என்றாலும் குலக்கடவுள் (குலதெய்வம்) முருகனையும் அவன் அன்னை தந்தையையும் போற்றும் இலக்கியங்கள் எல்லாவற்றையும் படிக்கிறேன். ஒவ்வொன்றாக அவற்றையும் இட்டு வருகிறேன்.
அடியேனைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர இது நல்லதொரு தருணம் என்று நினைக்கிறேன். சென்ற வாரம் தமிழ்மணத்தில் இரண்டாம் முறையாக விண்மீனாக இருந்த போது அனுப்பிய அறிமுகம் இது:
அட யாரது கூடவே ? நம்ம கீதா அக்கா! ஆச்சரியம்தான். இப்பதான் வறீங்களா,
இல்லை முன்னாலேந்தே ஒளிஞ்சுகிட்டு இருக்கீங்களா?
நல்வரவு.
தி. வா
2008/8/29 Kumaran Malli <kumara...@gmail.com>:
> எனக்கும் அப்படித் தான் கீதாம்மா. :-)
>
> On 8/29/08, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
>>
>> விளக்கம் நல்லா இருக்கு. மற்றபடி இலக்கணம் எல்லாம் ரிவிஷன் பண்ணணும்.
>>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்
பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?
இந்திய உளவியல் மிகவும் வித்தியாசமானது! சில நேரங்களில் கொடூரமானது கூட!
எங்கள் பள்ளிக்கு தமிழ் வாத்தியார் ஒருவர் வந்தார். பாவம் அவருக்கு வலது
கை ஊனம். எல்லாம் இடது கையால்தான். அவர் தினம், தினம் பள்ளியில் படும்
அவமானம் இருக்கிறதே! அது அவரை ஒரு வன்முறையாளராகிக்கிவிட்டது. அவர்
பிரம்பைக் கையில் எடுத்தால் உயிர் போகும்வரை அடிப்பார். இதுவே மேலைநாடாக
இருந்தால்?
ஒன்றை விட ஒன்று உயர்ந்தது எனப்பார்ப்பதுதான் ஜாதீயம். இதைக் கலைமகள்
கண்கள் வரை கொண்டு செல்ல வேண்டுமா? என்னே தமிழ் உளவியல்?
கண்ணன்
ஹரியண்ணா.நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (5/6 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம்) தங்கள் கம்பராமாயணக் கட்டுரைகளை விரும்பிப் படித்தவன் அடியேன். இப்போது அந்த வலைப்பக்கத்தில் தங்கள் கட்டுரைகளைக் காண முடியாமல் வருத்தப்படுபவன். அந்த உரிமையில் எல்லோரையும் போல் ஹரியண்ணா என்று அழைக்கிறேன். அடியேனைத் தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
சகுன சாத்திரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலதுவிழி துடித்தால் தீங்கு என்ற மரபைக் காட்டி இந்த வரிகளை எடுத்துக்காட்டுவது சரி தானா? கைரேகை சாத்திரத்திலும் பெண்களின் இடக்கையைத் தான் பார்ப்பார்கள். ஆனால் மற்ற இடங்களில் ஆணோ பெண்ணோ, மேலே சொன்னது போல், வலக்கையும் வலக்காலும் தானே முன்னே வருகின்றது?
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன; விரவி
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரிக் குலம் பலவால்
நிலம் துடித்தன நெடுவரை துடித்தன நிருதர்தம் குலமாதர்
பொலம் துடித்தன மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன் தோளும்
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடுவானம்
கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள்
நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?
பொலம் துடி மருங்குலாய் ! புருவம் கண் நுதல்
ஆய்வு சுலபம்தானே? எது சரியா தெரியலையோ அதை கொடுத்துடுவோம். :-)
> ஆனால், துப்பாக்கி சுடுவோர் எநத கண்ணை குறுக்கி எநத கண்ணால் இலக்கு
> நோக்குவார்கள்?
வலது கை பழக்கம்னா வலது கண். இடதுன்னா இடது. மாத்தி யோசிச்சு பாருங்க.
முடியாது. தோதா இருக்காது.
திவா
ஹரியண்ணா.
தகுந்த தரவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. வலக்கண், இடக்கண் துடிப்பது என்பது சகுண சாத்திரம் மட்டுமில்லை; தமிழ் இலக்கிய மரபிலும் அவை இருந்தது என்பதைக் காட்ட மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் இவை. பிள்ளையவர்கள் இந்த மரபினை அறிந்தவராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதனால் தங்களின் சுட்டிக்காட்டலை ஒத்துக் கொள்கிறேன்.
அன்பன்,
குமரன்.
இருந்த பெரும் தமிழ் அணங்கே.
இதென்ன விதண்டா வாதம் அவர்கள் பேசுவது வேந்தன் அரசு ஐயா? :-) 'இருந்த' என்றால் இறந்த காலம் என்றா பொருள் கொள்வது? 'மன்னியிருந்த'
அன்பின் சிலம்புக்கனியே!
உமக்குத்தெரியாத நூல நயம் இல்லை.
நம் கருத்துகோளுக்கிணங்க symbolism என்பதை வளைத்துக்கொள்ள முடியும்தான்.
நான் கூட ஆரம்ப காலங்களின் கண்ணன் பரம்பொருள் என்றால் நதிகளிலே தன்னை
கங்கை என்று சொல்வானேன்? அமேசான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் என்று
கேட்டு வந்திருக்கிறேன்.
கவிதையின் பொருள், அதிலுள்ள குறியீடுகள் பல நேரங்களில் பிரபஞ்ச நிலையில்
பேசப்பட்டாலும், சில நேரங்களில் அச்சமூகமறிந்த, பார்த்து, ரசிக்கும்
உதாரணங்களை எடுத்தாள்வதுண்டு.
தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
என்ன சொல்ல?
கண்ணன்
ஆனால் பாருங்கள் இன்னும் மக்கள் போக்கு மாறவில்லை.
அண்ண பிளவுக்கு அறுவை சிகித்சை செய்த பின் சம்ஸ்கிருதம் கற்பிப்பதன்
மூலம் பேச்சு பயிற்றுவிப்பது நல்ல பலன் தருகிறது என்று ஒருவர் ஆராய்ச்சி
செய்த விஷயம் பத்திரிகையில் வந்தது. செய்தி ஒரு சீர்திருத்த அறுவை
சிகித்சை நிபுணர் (plastic surgeon) ஒரு மாநாட்டில் சமர்ப்பித்த
அறிக்கையின் அடிப்படையிலானது.
இதை என் வலைப்பூவில் பதிவிடப்போய் ஆளுக்கு ஆள் சண்டைக்கு
வந்துவிட்டார்கள். பல பின்னூட்டங்கள் பிரசுரிக்க லாயக்கில்லாமல்
போயிற்று. கலீஜ் பின்னூட்டம் கூட வந்தது.
இவ்வளவு தூரம் பொறுமை இருக்கும் சமுதாயத்தில் இரண்டும் சமம் என்று
இன்னும் சொல்ல வேண்டிதான் இருக்கிறது.
திவா
2008/9/1 Narayanan Kannan <nka...@gmail.com>:
>
>> ஆனால், இந்த இரண்டையும் சாமிகளின் மேல் ஏற்றியோ
>> இன்னபிறவற்றின் மீது ஏற்றியோ ஒரு வழவழ சொதசொத
>> என்ற வசனங்கள் தீட்டுவாரைக் கண்டால்
>> நகைப்பு வருகிறது. இப்படியும் இல்லாமல் அப்படியும்
>> இல்லாமல் அவர்கள் படும்(+படுத்தும்) அவதி அதிகம் :-)))
>
>
>
> அன்பின் சிலம்புக்கனியே!
>
> உமக்குத்தெரியாத நூல நயம் இல்லை.
>
> நம் கருத்துகோளுக்கிணங்க symbolism என்பதை வளைத்துக்கொள்ள முடியும்தான்.
>
>..............
> தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
> அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
> என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
> என்ன சொல்ல?
>
> கண்ணன்
>
> -
இது காலவழுவமைதி என்று கருத இடமிருக்கின்றது.
அதேபோல "பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோகீ..." என்ற அப்பர் பெருமானின்வரியிலும் மாட்டேன் என்ற சொல் கவனிக்கத்தக்கது. பாடாமல் இருக்கின்றேனே என்ற நிகழ்காலத்தவிப்பை பாடமாட்டேன் என்று எதிர்காலம் குறிக்கும் சொல்லால் சொல்வதாக அமைந்திருக்கின்றது.(பிழையெனின் இலக்கணப் பெரியவர்கள் பொறுத்தருள்க)அன்புடன்நாக.இளங்கோவன்
தமிழ், சமிஸ்கிருதம் என்பது அறிஞர்கள் அறிந்து திளைக்கும் மொழிகள். சிலர்
அதில் ஒன்றே உயர்ந்தது எனச் சொல்ல முற்பட, இல்லை இரண்டும் சிறந்தது
என்பதைச் சொல்ல கண்களை உவமித்தனர். அவ்வளவுதான். அது சொதப்பல் அல்ல. மேலே
என்ன சொல்ல?
Key words: Continental drift, Geo tectonic, Gondwana, plate tectonics
உலகின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் எனும்
அறிவியல் கோடுபாடு தோன்றிய வரலாறு காண விக்கிபீடியா வாசிக்கவும்.
http://en.wikipedia.org/wiki/Continental_drift
இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்தன எனும் வரைபடம் காண:
http://earthscience.files.wordpress.com/2007/04/gondwana.gif
இந்தியா அண்டார்டிக், ஆஸ்திரேலிஅக் கண்டங்களுடன் இணைந்திருந்தன எனும் வரைபடம் காண:
http://www.cyburbia.org/gallery/data/6457/pangea-continental-drift.gif
இப்போது எல்லோருமே ஒத்துக் கொள்கின்ற கொள்கை இந்த நிலப்பயணம். இது
சுநாமியில் வருவதல்ல. (மேல் விவரம் சுட்டியில் காண்க).
இந்தக் கண்டப்பெயர்வு நடந்த காலங்களில் மனித இனம் உருப்பெறவே இல்லை. நவீன
மனித இனம் மிகச் சமீபத்தில் கிமு 25000 ஆண்டுகளில்தான்
உருவாகியிருக்கிறது. வெறும் 5000 ஆண்டுகளுக்குள்தான் எழுத்து என்பதே
பிறந்துள்ளது.
எனவே ஸ்வாகிலியும்-தமிழும் கண்டத்தொடர்பால் உருவானது என்று சொல்ல
முடியாது. ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த மனிதர்கள் கொண்டு
வந்திருக்கலாம் (விருமாண்டி இருக்கார் சாட்சியாக).
அனைத்துக் கண்டங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி எல்லாப் புராணங்களும்,
வேதமும் பேசுகிறது. சாதாரண சந்தியா வந்தன மந்திரத்திலேயே கோண்டுவான
குறிப்பு இருப்பது ஆச்சர்யமே!
கலைமகள் என்பது குறியீடு. அது மனிதப்பொது. வாசிக்கும் குழமங்களுக்கு
ஏற்றவாறு அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணன்
பிகு: இணையத்தொடர்பு வந்த பிறகு தமிழ்ப் பேராசிரியர்கள் அறிவியல் கற்று
தங்கள் கோட்பாடுகளை அறிவியல் பூர்வமாக முன்னிருந்த முன்னெப்போதும் இல்லாத
வசதி கிடைத்துள்ளது. தனிமனித முயற்சியும், சுதந்திர வேட்கையும் இருந்தால்
தமிழ் வளர்ச்சியுறும்.
இது காலவழுவமைதி என்று கருத இடமிருக்கின்றது."ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று....."
On 9/1/08, Elangovan N <nela...@gmail.com> wrote:
> கலைமகளின் இரண்டு கண்கள் வட, தென் மொழிகள் என்றால்
> கலைமகளுக்குப் பிறமொழிகள் என்னவாம்? என்று எழும் வினாவுக்கு
> விடை தெரியவில்லை.
> தமிழ், சமற்கிருதத் தகராறுகளுக்கு எதை எதையெல்லாம்
> சமாதானத்திற்கு நம்மாளுங்க பயன்படுத்தியிருக்கிறார்கள்
> என்று எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.
>
> சமற்கிருதமே உயர்ந்தது என்று சொல்பவர்கள் மேல் எனக்கு
> நிறைய மதிப்பு உண்டு. ஏனென்றால் சமற்கிருதக்காரர்களுக்கு
> புழக்கமும் நம்பிக்கையும் மட்டுமல்லாமல் உறுதியும் அது.
>
> ஆனால், இந்த இரண்டையும் சாமிகளின் மேல் ஏற்றியோ
> இன்னபிறவற்றின் மீது ஏற்றியோ ஒரு வழவழ சொதசொத
> என்ற வசனங்கள் தீட்டுவாரைக் கண்டால்
> நகைப்பு வருகிறது. இப்படியும் இல்லாமல் அப்படியும்
> இல்லாமல் அவர்கள் படும்(+படுத்தும்) அவதி அதிகம் :-)))
அன்பின் சிலம்புக்கனியே!
உமக்குத்தெரியாத நூல நயம் இல்லை.
தமிழின் ஆழம் பிரம்மிக்கத்தக்கது. நாமறிந்த நூட்களோ மிகக்குறைவு. அறியாத
பல நூட்கள் இன்னும் உண்டு. அவற்றில் எல்லாம் இன்னும் அதிசயத்தக்க சேதிகள்
இருக்கலாம். விருமாண்டி ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கலாம் ஆனால்
ஆப்பிரிக்காவில் இத்தகைய நீண்ட அரிய பண்பாடு உருவாகி நிலை பெறவில்லை. அது
இந்திய மண்ணிற்குரிய சிறப்பு. அதனால்தான் பாரதி, ம.சு.பிள்ளை போன்றோர்
இப்பூமியை, இங்குள்ள மொழி வளத்தை வானளாவப் புகழ்கின்றனர்.
எனவே தமிழறிந்த பெரியோர் எளிய இணையக்கல்வியை நுகர்ந்து, தங்கள் தமிழ்ப்
புலமையுடன் அதை ஒப்புநோக்கி பல அரிய சேதிகளைத் தர வேண்டும் என்பதே என்
ஆசை. அப்போது தமிழ் வீறுகொண்டு முன் செல்லும்.
கண்ணன்
பாகவதம் எனும் நூலின் சிறப்பைச் சொல்லும் போது அது சுகமுனி எனும் கிளி
சுவைத்த கனி என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அது போல சிலம்பைச்
சுவைக்கும் தாங்கள், சுவைத்த அமுதைப் பகிர்ந்து கொள்ளும் தங்களை அப்படி
அழைக்கத்தோன்றியது.எந்தப்பட்டமும் இல்லாத இளங்கோவன் என்பதும் அழகென்றே
உணர்கிறேன் :-)
> எந்தக்கண் என்று எண்ணுவதைவிட, கலைத்தெய்வத்தின் கண்களோடு
> மொழியை ஒப்பிடுவதையே தவிர்க்கவேண்டும் என்ற கருத்து என்னுடையது.
ஒத்துக்கொள்கிறேன். பெரியவர் தவிர்த்திருக்கலாம். தமிழ் மண்ணில்
நக்கீரர்கள் (பேரு என்ன ஹரிகி யா? ;-) உண்டு என்பதும் அவர் அறியாததோ?
:-))
ஆனால் ஏன் அவர் அப்படிச் செய்தார் என்று பார்க்கும் போது அவர் தமிழ்
மொழியின் மீது கொண்ட மரியாதையே, காதலே அப்படிப் பேச வைத்தது என்று
கொள்வோம்! "சீரிளமைத் திறம் வியந்து, "செயல் மறந்து" வாழ்த்துதுமே!"
என்று ஒப்புக்கொள்கிறார். தமிழ் அவரை செயல் மறக்கச் செய்துவிட்டது!
கண்ணன்
வைரமுத்து-ரகுமான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு என் ஆசையை
எழுத ‘தமிழ்த்தாய்’ என்று மின்தமிழ் மடல்களத்தைக் கிளறினேன்.
தமிழ்த்தாய் வாழ்த்து (மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை)
பற்றிய இழை கிடைத்தது. இப்பொழுதே அதனைப் பார்க்கிறேன்.
முக்கியமாய், ஹரியண்ணா, குமரன் சொல்லும் கருத்துக்களைக்
கண்டேன்.
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/4bb98d1c9c780909/
என் பதிலாக ஒரு கருத்தைத் தர விழைகிறேன். பின்னூட்டங்களிலும்
எனக்கு மேலும் விளக்கலாம், தவறெனில் சுட்டிக் காட்ட
விண்ணப்பிக்கிறேன்.
மனோன்மணீயம் எழுதப்பட்ட முறை:
http://groups.google.com/group/minTamil/msg/9d4c60c0644cbe7b
முப்பால்மணி (தமிழ்ப் பேரா. அ. கிருஷ்ணசாமி நாயுடு மகன், கோவை):
”1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார்.
1877-78ல்
நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்
- பிரம்ம கீதை,
- சூதசம்ஹிதை,
- பெருந்திரட்டு
காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற
வேதாந்த
ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித
வேதாந்தத்தையே
உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து
திருத்தங்கள்
செய்து கொண்டார். ”
பொதுவாக, உலக மொழிகளில் தொன்மையான, ஆனால் வழக்கில்
இல்லாத மொழிகளைத் தந்தைமொழி என்கிறார்கள்.
இலத்தீனம், கிரேக்கம், பண்டை ஸ்லாவானியம் (ருஷ்யா), ஸம்ஸ்கிருதம்
... எல்லாம் தந்தைமொழிகளே (Fathertongue).
மக்கள் பேச்சு வழக்கில் இருந்து ஒழிந்து சில ஆயிரம் ஆண்டுகள்
ஆகியிருக்கும், பெண்கள், சிறுவர் பேசுவதாக இல்லாமல்
மொழியின் வளர்ச்சி மெத்தப் படித்த ஆண்களால் ஏற்பட்டிருக்கும்
வளர்ச்சி செயற்கைத்தன்மையைக் காட்டும், எனவே இவற்றுக்கு
தந்தை மொழி எனப் பெயர். ஆனால் தாய் மொழி பெண்கள், சிறுவர்,
கல்லாதார், எளியரால் உயிருடன் இருப்பது. தமிழ் போன்ற
பெரும்பாலும் தாய்மொழிகளில் சிறுபான்மைச் செய்யுள்நடை இருந்தாலும்,
மக்களிடையே எல்லா வர்க்கம், பால் வேறுபாடின்றிப் புழங்குவன.
பொதுவாக ஆண்கள், அதிகாரிகள், பண்டிதர்கள் பேசுவதாய்
வடமொழி நாடகங்கள் இருக்க, பெண்கள், வேலையாள், ...
பேசுவது பிராகிருதம். வேதக் கிரியைகள், ஹோமம்,...
எல்லாம் வடமொழி. ஆனால் பக்தியைக் காட்டத் தமிழ்
என்பது ஆழ்வார், நாயனார் காலந்தொட்டே ஏற்பட்டுவிட்ட மரபு.
நா. கண்ணன் இதனை அழகாய்ச் சொல்கிறார்:
http://groups.google.com/group/minTamil/msg/f01261bd94de4f6e
பொதுவாக பாரத மரபில் வலிமை வலக்கை ஆணுக்கும்,
இடக்கை பெண்ணுக்கும் ஆகும். இடப்பக்கம் (வங்காளியில் Baamaa)
இடக்கைக்கு இந்தியா கீழே பார்க்கப்பட்டது (வாம மார்க்கம்.
இடாகினி என்ற சொல் - இடம் என்ற வேரில் கிளைத்த சொல்).
மாதவச் சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தில்
நடராஜாவின் டமருகத்தில் வலப்புறம் வடமொழி,
இடப்புறம் தென்மொழி என்கிறார்.
ஆண்-வலம்-வடமொழி; பெண்-இடம்-தமிழ் என்ற
உறவுகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆணியல் பார்வையில்
பெண்ணுக்கு இடம் துடிப்பதும், ஆணுக்கு வலம் துடிப்பும்
உயர்வு என்றார்கள். ஆனாலும், ஒரு பெண்ணை அவளை
தனியாய் ’வலக்கால் வைத்து வா’ என்றும், பெண்ணுக்கும்
கூட வலக்கை சோற்றாங்கை ஆகவும் இந்தியக் கலாச்சாரம்
போதிக்கிறது.
>வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
>கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.
இந்த இடத்தில் வடமொழியில் சூர்ய நமஸ்காரம் மூலமாக
ஏற்பட்ட திசைப் பெயர்களைச் சுட்டுகிறார்.
கிழக்கே உதிக்கும் சூரியனுக்கு முன்னால் நின்று
‘ஞாயிறு போற்றுதும்’ என்னும் போது,
வலக்கை தெற்கேயும், இடக்கை வடக்கேயும்
இருக்கும். தக்ஷிணம் = தென்திசை, வலக்கை.
கிழக்கு = Orient, மேற்கு = Occident
என்னும் சிலேடை நயம் காண்க.
மேலும் ஒன்று: அப்போதெல்லாம், ஆரியர்
வடக்கே திபெத்தில் இருந்து வந்தோர் என்று
சில மேல்நாட்டார் எழுதிக் கொண்டிருந்த காலம்.
அதனால் வடக்கு திசையை ஆரியருக்கு
அளிக்கிறார்.
ஹிட்லரின் ஒரு மந்திரி பின்னாளில்
திபெத்துக்குப் போய் ஆரியர்களைத் தேடினார்.
பாலகங்காதர திலகரும் திபெத் பற்றி எழுதினார்.
பெ. சுந்தரம் போலவே அவர் உறவினர்
வி. கனகசபைப்பிள்ளை, (Tamils 1800 years ago)
நூலில் திபெத்திலிருந்து வந்தனர் தமிழர்
என்று எழுதியிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
>வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
>கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்
”பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும்
என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக்
கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று
அறியாதவர்கள்.”
குணதிசை = கிழக்கு. அதைப் பார்க்கும் தமிழ்த்தாய்க்கு
வலப்புறம் தமிழ், இடப்புறம் ஆரியம் என்று சொல்கிறார்.
தமிழ்த்தாயை கலைமகள் கொற்றவை என்றும் கொள்ளலாம்.
சாரதை - பார்வதிக்கும், சரஸ்வதிக்கும் உள்ள பெயர்கள்.
கூத்தனூர் கலைமகளை விஜயதசமி அன்று இன்றும்
துர்க்கையாகவே வழிபாடு நடக்கிறது.
இந்திய மரபில் ஆணை வலத்தும், பெண்ணை இடத்தும்
வைத்து அர்த்தநாரீசுவரராய்ப் பார்ப்பது நம் பழைய மரபு.
சுந்தரர் இங்கே புரட்சிப் புதுமை செய்கிறார்.
தமிழ்த்தாயை அர்த்தேசுவரநாரியாக வழிபாடுகிறார்.
சில கோவில்களில் இவ்வாறுண்டு அபூர்வமாய்.
பெண்மைக்குப் (அதாவது தமிழ்) பிரதானம்
கொடுக்கிறார். வலப்பக்கம் தமிழ்த்தாயை
(கலைமகளை- ஐயையை) வைத்து,
இடப்பக்கம் ஐயனை வைத்துப் பார்க்கிறார்.
வடமொழி இலக்கியங்கள் எல்லாம் ஆணை நாயகனாகக்
கொள்ள இளங்கோ கர்ணகியை தமிழ்க்காப்பிய
நாயகியாக்கியதுபோலே, சுந்தரனார் தமிழை வலப்பக்கமும்,
வடமொழியை இடப்பக்கமும் வைக்கிறார்.
வடமொழி தந்தைமொழி இடக்கண் - அது தமிழ்த்தாய் கண் அன்று.
அவள் வலப்புறமாக இருப்பதால் அவளுக்கு வலக்கண்
ஒன்றே இருப்பதாகக் கொண்டார் எனலாம்.
இக் கண்ணிகளை முக்கியமாக மேலைநாட்டாருக்காகச்
சொல்கிறார். ஆரியங்கற்கப் புதிதாய் இந்தியாவில் நுழைந்து
தமிழை வெறும் பிராகிருதம் என்று சொல்லும்
மிலேச்சர்களுக்கு தமிழின் தொன்மையை விளக்குவதற்காகச்
சொன்ன வரிகள் இவை. அப்பொழுதெல்லாம்
ஒரு 200 சம்ஸ்கிருதம் படிக்க வெளிநாட்டார் வந்தால்
தமிழ் பக்கம் வருபவர் ஒருவரே இருக்கும்.
அவருக்கும் நல்ல வேலை கிடைக்காது. சுவலெபில்
போன்றோர் எழுதத் தொடங்குவதற்கு 70-80
ஆண்டுகளுக்கு முன்னம் என்பதை நாம் நினைக்க
வேண்டும். மேலை நாடுகளில் திராவிடர்
வெளியில் இருந்து வந்தோர் என்று 7-8 ஆண்டு முன்னால்
கூடச் சொல்லிக்கொண்டிருந்தனர். இன்று
டோரியன் ஃபுல்லர் போன்றோர் ஆய்வுகளால்
திராவிட இனம் இந்தியாவின் பூர்வீகமான
குடிகள் என்று உறுதியாகிவிட்டது.
அன்புடன்,
நா. கணேசன்
>கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
>வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்
-------------
இந்த கண்ணியில் வில்லியம் ஜோன்ஸ், கால்ட்வெல்
போன்றோர் தேற்றங்களை உள்வாங்கிச் சொல்கிறார்:
>*சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
>முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே
-----------
சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர
சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும்
பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
http://ta.wikipedia.org/wiki/பெ._சுந்தரம்_பிள்ளை
தேவ்