இச்சமயப் போராட்டத்தில், பிற மூன்று சமயங்களின் தாக்குதலைச் தாங்காது தமிழ்நாடு வந்த சிறிது காலத்திலேயே "ஆசீவக சமயம்" மறைந்தது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கிய பெளத்தம், சமணம், வைதிகம் பிற்காலத்தில் சைவம், வைணவம் என்று பிளவுபட்ட தமிழர் சமயம் ஆகிய அனைத்துச் சமயங்களும் தொடுத்த தாக்குதல்களால் மறைந்தது.
தவிர ஏனைய பெளத்த நூல்கள் அழிந்தன; அழிக்கப்பட்டன. குண்டலகேசி என்ற பெளத்த இலக்கியத்தில் தற்போது எஞ்சி இருப்பவை, குண்டலகேசியே பாடியதாகக் கருதப்படும் 5 பாடல்களைச் சேர்த்து 19 பாடல்கள் மட்டும்தான்.
என்று வழங்கப்பட்டன. பத்தா சமண சமயம் சார்ந்தபொழுது தனது தலைமுடியைப் பனங்கருக்கு மட்டையால் களைந்தாள். ஆனால் பின்னர் வளர்ந்த தலைமுடி "சுருண்டு சுருண்டு" குண்டலம் போன்று இருந்தது. எனவே பத்தாவின் பெயர் "குண்டலகேசி" என்று வழங்கலாயிற்று.
போன்ற நூல்களிலிருந்து பெறுகிறோம். மேலும் திவாகரவாமன முனிவர் நீலகேசிக்கு எழுதிய உரையில், குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்பு மட்டும் காணப்படுகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் குண்டலகேசியின் 19 பாடல்களும் புறத்திரட்டிலிருந்து கிடைத்தவை. குண்டலகேசியே பாடியதாகக் கூறப்படும் பாடல்கள் பிற நூல்களிலிருந்து கிடைத்தவை.
குண்டலகேசி முழுக்க முழுக்க ஒரு தருக்க இலக்கியம். அக்கால கட்டத்தில் தருக்க வாயிலாக சமணம், வைதிகம் ஆகிய சமயங்களைப் புறங்கண்ட இலக்கியம்.
போன்ற சமயவாதத் தருக்க இலக்கியங்களைக் காணும்போது சமய வாதம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் "கேசி" என்று அழைக்கப்பட்டனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.
குண்டலகேசியை மறுக்கப் பிறந்த காப்பியமான நீலகேசியில், "மொக்கலன்" என்பவனிடம் நீலகேசி, "யான் இரண்டு பெளத்த சமயக் கணக்கர்களை வென்று வாகை சூடினேன். அவருள் ஒருத்தி குண்டலகேசி. மற்றொருவர் அருக்கச்சந்திரன் காண்," என்றாள். உடனே, மொக்கலன், "குண்டலகேசி பேராசிரியை, அவளை நீ வெல்லுதல் எங்ஙனம்," எனக் கேட்க, நீலகேசி குண்டலகேசியை வென்ற வகையை விளக்கினாள், என்று நீலகேசி கூறும் குண்டலகேசியின் வரலாற்றில் இக்கூற்றுக்கு எந்த விதமான சான்றுகள் ஆதாரமாக இல்லையாதலால், இக்கூற்றை சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுந்தது எனக்கொண்டு நீலகேசியின் கூற்றை ஒதுக்கிவிடலாம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றே குண்டலகேசியின் காப்பியத் தலைவியின் தந்தையாரும் வணிகரே! வளையாபதி காப்பியத் தலைவனும் வணிகரே!.
ஒருநாள், புரோகிதன் ஒருவனுடைய மகனான சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளையடித்ததால், அரசன் ஆணையின்படி அவனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். சாளரத்தின் வழியே அக்கள்வனை அழைத்துச் செல்வதைக் கண்ணுற்ற பத்தாதீசா அவன்மேல் காதல் கொண்டாள். அவனையே தன் நாயகனாக அடைய வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தந்தையிடம் வற்புறுத்திக் கூறினாள். அதனைக் கேட்ட பத்தாவின் தந்தை, அரசனுக்கு தண்டனைத் தொகையாக ஆயிரம் பொன் செலுத்தி, அக்கள்வனை மீட்டு வந்து, தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். சத்துவானுக்கு "காளன்" என்ற பெயரும் உண்டு.
இருவரும் இல்லற இன்பம் துய்த்து வந்த காலத்தில் ஒருநாள், பத்தா ஊடல் கொண்டு, "நீ கள்வன் அன்றோ?" என்று சினந்து பேசினாள். விளையாட்டாகக் குண்டலகேசி கூறியதைக் கேட்ட காளன், மிகவும் சினம் கொண்டு அவளைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினான்.
தன்னைக் கள்வனென்று கூறியவளைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் காளன், அண்மையில் உள்ள மலை உச்சிக்கு அவளை அழைத்துச் செல்கிறான். வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் காண்பித்து, கடைசியில் அவளுடைய நகைகளைப் பறித்துக் கொண்டதுடன், அவளை கீழே தள்ளி உயிரை மாய்க்கப் போவதாகக் கூறுகிறான். "தற்கொல்லியை முற்கொல்லல் தகும்" என்று முடிவுசெய்த, குண்டலகேசி, "எனக்கு உம்மைத் தவிர வேறு இறைவன் கிடையாது; நான் உயிர் துறக்குமுன் மும்முறை உம்மை வலம் வர வேண்டுமென," அனுமதி கோருகிறாள். காளனும் அதற்கு இசைய, குண்டலகேசி, அவனை வலம் வருவது போல் நடித்து, தனது கணவனை மலை முகட்டிலிருந்து கீழே தள்ளிக் கொன்றாள்.
அதன் பின்னர், வாழ்வில் வெறுப்பு கொண்டு சமண சமயம் சார்ந்து சமய வாதம் புரிந்து, பிற சமயத்தவரை வாதில் வென்று வாகை சூடுகிறாள். முடிவில் புத்தபிரானின் சீடரான சாரி புத்தரிடம் வாதிட்டுத் தோற்றதால், புத்த சமயம் சேர்ந்து, தன் வாழ்நாளின் கடைசிவரைப் புத்த சமயக் கருத்துக்களை பரப்பி, இறுதியில் புத்தர் பிரானின் திருவடிகளை அடைகிறாள் என்ற குண்டலகேசியின் வரலாற்றை நீலகேசி உரையினால் அறிகிறோம்.
குண்டலகேசி நூலில் கிடைத்திருப்பது 19 பாடல்கள்தான். இந்த 19 பாடல்களும், ஆழ்ந்த கருத்தோடு மனதைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளன. யாக்கை நிலையாமை குறித்து குண்டலகேசி தரும் கருத்துக்கள், தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னான எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியவை.
பௌத்தமும், சமணமும் வடக்கிலிருந்து வந்தன என்பது வரலாற்று பூர்வமாகத்தெரிகிறது.
ஆனால் வேதம் சார்ந்த சமய ஒழுங்கு (வைதீகம்) இத்தகையதா? என்பதில் பல்வேறு
கருத்துக்கள் உள்ளன. வேத ரிஷிகள் இந்தியாவெங்கும் இருந்திருக்கின்றனர்.
இதற்கான சான்றுகள் இன்றளவும் உள்ளன. வேத, உபநிடதங்கள் பேசும் உண்மை
ஆச்சர்யமான வகையில் நவீன அறிவியலுடன் ஒத்துப்போவதையும் காண முடிகிறது.
பிரபஞ்சதத்தைப் பற்றிய உண்மைகள், கோள்களின் இருப்பு, சுழற்சி பற்றிய
கணிதம் (ஜோதிஷம்), உலகம் எத்தனை கண்டங்களைக் கொண்டுள்ளது, கடலுக்கடியில்
ஒளிந்திருக்கும் மலைகள் பற்றிய பேச்சு என்று ஓர் உயர் அறிவியல் ஞானம்
அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கிறது. அத்தனை தொழில்நுட்பம்
கொண்ட ஓர் நாகரீக மக்களுக்கு இந்தியப்பரப்பு என்பது இன்றைய விமானப்பயணம்
போல் மிக எளிதானதே. எனவே வடக்கு, தெற்கு என்று இன்று பிரம்மிப்போடு நாம்
பார்த்து, பிரிவினை பேசுவது ஒரு எளிய பாமரத்தனமாகப்படுகிறது.
பேருண்மைகள் எல்லாம் ஓர் அறிவின் செயற்பாடே. அப்பேரறிவுடன் நேரடிக்
கலந்துரையாடல் செய்யும் போது அருளிச்செயல் நடைபெறுகிறது.
அருளிச்செயல்களாவன: வேதம், நாலாயிர திய்வப்பிரபந்தம், அருட்பா போன்றன.
16-17ம் நூற்றாண்டு ஐரோப்பிய வருகைக்குப்பின்பும், முஸ்லிம்களின்
தாக்குதல்களுக்குப் பின்பும் (இப்போதுள்ள தாக்குதலைச் சொல்லவில்லை. 14ம்
நூற்றாண்டிலிருந்து அது நடந்து கொண்டு இருக்கிறது) இந்தியாவில்
நடைமுறையாக இருந்த ஓர் கல்விமுறை காணாமல் போய்விட்டது. அதுவிட்ட
எச்சங்களே இன்று நம்மை இப்படி சிந்திக்கத்தோன்றுகின்றன.
உதாரணமாக, சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கும் நாடி ஜோதிடம், இன்றளவும்
நம்மிடையே வாழும் சித்தர்கள் செய்யும் அற்புதச் செயல்கள் (இது பற்றிய
அழகான குறிப்பொன்று சிட்டி, தி.ஜா எழுதிய "நடந்தாய் வாழி காவிரியில்'
வரும். ஒரு சித்தர் மதுரை சித்திரத்திருவிழா காண வேண்டுமென்று ஆசைப்படும்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு 'ககன மார்க்கமாக' (teleportation) மதுரை
சென்று மீண்ட நிகழ்வு பதிவாக்கப்படும்). இதைப்பற்றிப் பேசுவதுகூட
எள்ளலாகப்படும் இன்றைய உலகில் இவைகளை என்று நாம் ஆராயப்போகிறோம்?
வடக்கு-தெற்கு என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி நம்முள் பகைமையை வளர்த்து,
பேதம் பேசி, பிரிந்து வாழவே இத்தகைய எழுத்து துணை போகும்.
பாண்டித்துரைத்தேவர், விவேகாநந்தரிடம் அப்படி என்ன கண்டார்? ஏன் அவரை
அமெரிக்கா அனுப்பினார். சும்மா, வடநாட்டுக்காரன் ஒருவ்னுக்குச் செய்யும்
'விருந்தோம்பல்'' என்பது மட்டுமே காரணமா? இல்லை, வடக்கு-தெற்கு தாண்டிய
மெய்ஞான உட்புரிதலா? அவர் செய்த செய்கை இந்திய முழுமைக்கும் எவ்வளவு
பெரிய நன்மையைச் செய்தது? இந்திய விடுதலையின் முதல் குரல் விவேகாநந்தரின்
அமெரிக்க முழக்கம். அது ஓர் மாபெரும் இந்திய முழக்கம். அங்கு
வடக்கு-தெற்கு இல்லை. இதை நம் தமிழ் அறிஞர்கள் என்று புரிந்துகொண்டு
விவேகமாக எழுதுவார்கள்?
கண்ணன்
> எழுதிவுள்ளனர். ஒரு சிலர் தவறியிருக்கலாமே தவிர, அனைவரையும் ஒரே(விவேகமில்லா)
> அணீயில் சேர்த்துவிடுவது பொருத்தமல்ல.
>
மன்னிக்கவும். அறிஞர், பெரியோரைப் போற்றாதவன் தமிழனே அல்லன். சில நேரம்
தார்மீக கோபத்தில் அப்படி வார்த்தைகள் விழுந்துவிடுகின்றன. அப்பெரியவரின்
மற்ற அனைத்துக் கருத்துக்களும் எனக்கு உடன்பாடே!
சில நேரங்களில் அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிடுகிறது ;-))
க.>
சமூக-பொருளாதார-அரசியல் பிரிவினைகள் பல காலமாக உலகம் முழுக்க,
அந்தெந்த நாடுகளில் உள்ள வடக்கு-தெற்கு குறுகீடுகளால் இருந்த
வண்ணமாகவுள்ளது.
இந்தியாவிலும், ஒரு காலத்தில் விஞ்சியிருந்து, ....//
பிற நாடுகளின் உண்மை நிலை தாங்கள்
கூறுவதுபோல் இருந்து வருகிறது.
ஆன்மிக நூல்கள் ‘ஜம்பூ த்வீபம்’ என்று
இந்நாட்டைஒரே நிலப்பரப்பாகவே கண்டன.
’நாவலந்தீவு’ என்றே ஆழ்வாரும் கூறுவார்.
அகத்தியனாரும்,பரசுராமரும் ,இராம பிரானும், பலராமரும்
தென் திசை நோக்கியே யாத்திரை கிளம்பினர்.
முனிவர்கள் பலர் தென்பகுதியின் மலைகளில் வாழ்கின்றனர்.
சமூகம், அரசியல், மொழி இவை பிரிவுகளுக்குக் காரணமாக
இருந்திருக்கலாம். ஆனால் இலக்கியவாதிகளுக்காவது
ஒரு விரிந்த கண்ணோட்டம் தேவையாகிறது.
தேவ்
ஆன்மீகப்பரப்பில் இந்தியா ஒன்றுதான், ஒன்றுதான், ஒன்றுதான்!
இந்திய சாகித்ய அகாதமி தலைவர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியுடன்
கேம்பிரிட்ஜிலும், பின் லண்டனிலும் உரையாட முடிந்தது. லண்டன்
தமிழ்ச்சங்கத்தில் பேசியபோது அனந்தமூர்த்தி இதை ஆணித்தரமாக
வலியுறுத்தினார் (சாட்சி: பத்மநாபஐயர், இதழியர், லண்டன்)
ஆசீவகம் எதைப்பற்றியது? அதனுடைய கொள்கைகள் என்ன?
எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு தனிக்கொள்கை என எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?
ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான் வந்தனவா என்ன?
> இந்தியா முழுமைக்குமான ஓர் பரவலான புரிதல் எக்காலத்திலும் இருந்தது என்றும் காணலாம்.இந்தியா ஒன்றாக உருவானதே, அதன் விடுதலைப் பிறகு தானே. அதற்கு முன் மாநிலங்களும், சில மாவட்டங்களும் தனித்தனி அரசுகளாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பிடியில் தானே இருந்தது. எப்படி ஓர் பரவலான புரிதல், அக்காலத்தில் இருந்திருக்கும்? அண்டை நாடுகளுக்கு போரிடுவதும், போட்டிகளில் வெல்வதுமாகத் தானே நம் வரலாறுகளும், வீர காவியங்களும், இதிகாசங்களும் நமக்கு தெரிவிக்கின்றன.
> கலாச்சாரப் பரிமாற்றல் ஏன் ஒரு திசையில் மட்டும் நடந்தது என்று நாம் முடிவு கட்ட வேண்டும்?
> கலாச்சாரப் பரிமாற்றல் ஏன் ஒரு திசையில் மட்டும் நடந்தது என்று நாம் முடிவு கட்ட வேண்டும்?
எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு
தனிக்கொள்கை என
எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?
ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான்
வந்தனவா என்ன?
ராஜசங்கர் //
****************
தொன்மையான மொழிகளின் வேர்ச்சொற்கள் பிறமொழிகளை நாடாமல்
தாமே கிளைத்தெழுவதுபோல் ஆன்மிகமும் , சமயமும் உள்ளிருந்தே எழுபவை.
யோக பூமியான பாரதத்தின் தனித்தன்மையே அதுதான்.
தமிழகத்தில் தோன்றிய எல்லா நூல்களும் நமக்குக் கிடைத்து விடவில்லை.
கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு ஆராய்கிறோம். ஆகமங்களின் மிகுதி இங்கு ஆலய
வழிபாடு
ஆழ வேரூன்றி இருந்ததை உறுதி செய்கிறது.
தென்னகமே ஆகமங்களின் பிறப்பிடம். ஆக்கம் அறிவாளிகளிடமிருந்தே !
ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரவில்லை.
புகார் நகரில் நடந்த இந்திர விழாவைப்போல் வடபுலத்தின் பேரரசுகளிலும்
நடைபெறவில்லை.
ஐவகை நிலம் சார்ந்த வழிபாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட விதிகள் இருந்ததாகத்
தெரியவில்லை.
அவ்வப்பகுதி சார்ந்த மக்களின் ஈடுபாட்டை ஒட்டி இலக்கண நூலார் வரையறை
செய்தனர் என்பதே சரியான முடிவு.
நெய்தல் நிலம் சார்ந்த புகாரில்தானே இந்திர விழாவும், பலராமன் வழிபாடும்.
இந்தியாவில் க்ரிகெட் என்றால் அங்கு பிற விளையாட்டுகளுக்கு இடமில்லை
என்பது பொருளன்று.
பெருவாரியான இந்தியர் அதில் மட்டுமே ஆர்வம் காட்டுவர் என்று கொள்ள
வேண்டும்.
நாடு - நகரங்களுக்குள் நுழைந்த ஆரியக் கடவுளர் நாட்டார் தெய்வங்களைச்
சிறு தெய்வங்களாக்கி,
ஊருக்கு வெளிப்புறத்தில் தள்ளிவிட்டனர் என்பது மற்றோர் ஆராய்ச்சி.
இந்த முடிவு சிறு தெய்வ வழிபாடு தென்னகத்தில் மட்டுமே உண்டு எனும்
ப்ரமையைத் தோற்றுவிக்கிறது.
வடமொழிப் பரிசயமற்றோரும் இதைப் பேருண்மையாகக் கருதுகின்றனர்.
உண்மை அதுவன்று. வடபுலத்திலும் சிறுதெய்வ வழிபாடு உள்ளது.
ம்ருச்சகடிகத்தின் உரையாடல்கள் இதை உணர்த்துவன.
ஸ்யமந்தக மணியைத் தேடிச்சென்ற கண்ணபிரான் வெகுநாட்களாகியும் திரும்பாதது
கண்டு,
துவாரகை துயரத்தில் முழ்கியது.அவன் நலமாகத் திரும்ப வேண்டும் என்று
மக்கள்
தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர்.
காடு, கழனிகளில் உறையும் சிறு தெய்வங்களுக்கும் படையல் இடப்படுகிறது.
உழவர்கள் தாம் பணிபுரியும் வயல்வெளிகளுக்கு அருகில்தானே வழிபாடு நிகழ்த்த
முடியும் ?
பலராமரின் தென்னக யாத்திரையில் கிழக்குக் கடற்கரையில் அமைந்த
திருச்செந்தூரையும்,
தென்குமரியையும் குறிப்பாகச் சுட்டுகிறது பாகவதம்.
விதுரர் தென்னகத்தில் தாம் வழிபட்ட தெய்வப் படிமங்களில் கண்ணனின்
முகமண்டலத்தைக் கண்டதாக மனம் நெகிழக் கூறுவார்.
தெய்வங்கள் தென்னகம் நோக்கி வரவில்லை; விதுரர், சைதன்யர், விவேகாநந்தர்
போன்ற
மஹாபுருஷர்களே இங்கு வருகின்றனர்.
தேவ்
// Dec 1, 2:40 pm, "Raja sankar" <errajasankarc...@gmail.com>
எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு
தனிக்கொள்கை என
எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?
ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான்
வந்தனவா என்ன?
ராஜசங்கர் //
********தமிழனின் பெருங்குறை அசிரத்தை. தமிழ்த்தாத்தாவுக்கு குண்டலகேசியின் சுவடி இருப்பதாக தகவல் கிடைத்ததாம். அவர் ஓடோடி செல்வதற்குள், மறைக்கப்பட்டதாம்.
இன்னம்பூரான் ********
> சிலப்பதிகாரதில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்தது உண்மை.
ரெ.கா.
On Dec 3, 11:21 am, "Raja sankar" <errajasankarc...@gmail.com> wrote:
> நண்பரே
>
> இதே கேள்விகள் எல்லா ஆராய்ச்சி கட்டுரைகளுக்கும் கேட்கப்படுமா?
>
> மேலும், தமிழர்தான் தமிழ்நாட்டு பழங்குடி மக்கள் என கூறப்படுவதற்கும் இதே
> கேள்விகள் கேட்கப்படுமா?
>
> ஒரு சில ஆராய்ச்சிகளுக்கும் மட்டும் கேள்விகள் மற்றயவை கேள்வி கேட்காமல்
> ஒப்புக்கொள்ளப்படும் என்பது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை.
>
> ராஜசங்கர்
>
> 2008/12/2 Kannan Natarajan <thara...@gmail.com>
எனக்கென்னவோ இது முக்கியமென்று படுகிறது, சமீபத்திய இடுகையை வாசித்த பின்! ;-)
க.>
1. திராவிட மொழிக்குடும்பம் வடமேற்கு, வடகிழக்கு, மத்தி, தெற்கு என்று இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது?அது ஏன்? எவ்வாறு?
2. தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, வந்தது என்று சொல்கிறோம். அது எங்கு? எப்போது? பிரிவுற்றது?எல்லாமே தெற்கில் நடந்ததுதானா? அஜந்தா, எல்லோரா கலையை ஏன் திராவிட (தமிழ்) கலை என்று
விளங்கிக்கொள்கிறார்கள்?
3. சமிஸ்கிருதம் வடமொழி எனில் அதில் தமிழ் சொற்கள் இவ்வளவு விரவிக்கிடப்பதேன்? வட நாட்டோர் தமிழ்
கற்றாரோ?
4. வடநாட்டிலுள்ள சில விஷ்ணு ஆலயங்களில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடப்படுவதேன்?
5. வைணவ ஆச்சார்யர்களில் கன்னட, தெலுங்கு மொழியைத்தாய் மொழியாகக் கொண்ட ஆச்சார்யர்கள் வந்தது
எப்படி?இந்தியா முழுவதும் நாவலந்தீவு என்ற பெயரில் இருந்தது என்றும், நாவலந்தீவு என்ற பெயரே இலக்கியங்களில் இருந்தது என்றும் ஒரு கருத்து உண்டு. அதனால் தான், பஞ்சாப் சிந்துவெளி மாநிலத்தில் அமைந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வுகளை, திராவிட நாகரிகம் என்று ஐரோப்பிய (Scandinavian) அறிஞர்கள் குறிப்பிட்டார்கள். அதனை, ஆரிய நாகரீகம் என்று சொல்பவர்களும் உண்டு.
திராவிடம் என்பதற்கு தென்பகுதி என்று பொருள். அதனால், தென்பகுதிக்காரர்கள் என்ற பொருளில் தீராவிட ஆச்சாரியர் என்றார்கள். நாம் அனைவரும் அறிந்த திராவிட மரப்பந்தாட்ட (Cricket) வீரர் பெயர்,கர்நாடகத்தின் இராகுல் திராவிட் ஆவார்.
திராவிட மொழிக் குடும்பம் என்ற வலைக்குள் பெரும்பான்மையான திடாவிட மொழிகள், தென்னிந்தியாவிலும், இலங்கையின் சில பிரிவுகளிலும் பேசப்படுவது நாம் அறிந்ததே. ஒரு விதிவிலக்காய் "ப்ரஹூய்" என்ற பண்டைய ஈரானிய மொழி - பலூச்சி மொழியின் தூண்டதலால், தென்மேற்கு பாகிஸ்தானில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியையும், திராவிட மொழியின் வடமேற்கு கிளை என்று கருதுவதுண்டு. பொதுவாக மொழியின் அமைப்புகள் ஒன்றாவிருப்பதால், உறவு காண்பதில் அர்த்தமில்லை!
அஸ்திரங்களின் ஆலயம் என்பது ஆஸ்திரேலியா ஆனது போன்ற நகைச்சுவையாகும். இந்தியாவில் பூர்வீகக் குடிகள் அல்லது தொன்முதற்குடியினர்களை திராவிடர்கள் என்றும், அக்காலத்தில் ஏற்பட்ட பேரிடர்கள், கடுந்துயரங்கள் விளைவித்த கொள்ளை நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அல்லது மற்ற நாடோடி மரபினரிடம் இருந்த பகைமையால் ஏற்பட்ட போர்களில் அகப்படாமல் இருக்க அவர்கள் மெல்ல மெல்ல தென்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது ஒரு பரவலானக் கருத்து. இந்தியாவில், ஐரோப்பிய சார்பிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களின் பண்பாட்டுப் பரவலால், தற்போதைய இந்திய நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்கள் - தனித்தனி அரசுகளாகச் செயல்பட்ட சமயத்தில் - வடமொழிக்கு ஆதரவு நல்கின. அதனால், அவர்களின் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வர்ணாஸ்ர முறைகள் எங்கும் பரவின. இன்றைய ஆங்கில மொழியைப் போன்று, வடமொழியைத் தெரிந்தவர்கள் தான் அந்நாளில் மதிக்கப்பட்டார்கள். கோயில்கள், கடவுள்கள் அவ்வளவும் வேத, ஆகமம் முறையிலேயே அமைந்தன்.
எனவே, ஐ.நாவிற்கு (ஐக்கிய நாடுகளின் சபை) போய் நம் பெரியோர்கள் ஆ.இல.முதலியார் மற்றும் கிருஷ்ண மேனன் போன்றோர் பேசியதுப் போல், தென்னாட்டிலும் சங்கரர், இராமானுசர், மாத்வர் ஆகிய மூவரும் வேதாந்தத்திற்கு விரிவுரை செய்தார்கள். இதில், இராமானுஞர் மட்டும் ஸ்ரீபெரும்புதூரில் வளர்ந்து, உணர்ந்த திவ்யப்ரபந்தங்களை, தன் எழுத்தில் ஒரு இடத்திலும் எழுதாமல் போனாலும் அவற்றை மதித்ததனால் சம்பிரதாய முறையில் இந்திய வைணவக் கோயில்கள் எல்லாவற்றிலும் தத்தம் மொழிகளில், பிரபந்தத்தை ஓதுகிறார்கள். பொருள் தெரி(ளி)வதில் தான் சிக்கல்!
தாய்லாந்தில், இராமர், கிருஷ்ணர் கோயில்களில் "லோரிப்பா" என்று திருப்பாவையை ஓதுகிறார்கள். வடமொழியில் இருந்து வந்த சமயக் கருத்துகள் ஆழமாக ஊறிவிட்டன. எடுத்துக்காட்டாக, கண்ணன் என்ற பெயர்க் கூட கிருஷ்ணன் என்பதன் ப்ராகிருதச் (Prakrit) சிதைவு என்று எழுதியிருக்கிறார்கள். இந்த நிலையில், சைவ சமயம் மட்டும் தான், வேதத்தைச் சான்று காட்டாமல், தமிழ் நூல்களையே ஆதாரமாகக் கொண்டது. வடமொழி ஆட்சிக்கு அதிகம் உட்பட்டதால், இப்போது தான், உணர்வு வந்திருக்கிறது. ஒரு பத்து நூற்றாண்டுக்குள், வடமொழியும், தமிழும் கலந்ததால், தெலுங்கு,கன்னடம்,துளு பிறகு மலையாளம் மொழிகள் எனச் சிதைந்து உருவாயிற்று.
1. திராவிட மொழிக்குடும்பம் வடமேற்கு, வடகிழக்கு, மத்தி, தெற்கு என்று இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது?
அது ஏன்? எவ்வாறு?
அநேகமாக இராஜசேகர் சொல்லும் கருத்து இதுவாக இருக்கலாம்.
சமிஸ்கிருதம் என்பது இந்திய முழுமைக்கும் செந்தரமாக்கப்பட்ட ஒரு செயற்கை
மொழியாக இருக்கலாம். எனவே இதில் முழுக்க இந்தியாவும் பங்கேற்று
இருக்கிறது.
செந்தரமாக்கப்பட்ட மொழியை "தேவபாஷை" என்று சொல்லியிருக்கலாம், அதன் உயர்வு கருதி.
"நீச்ச பாஷை" என்பதை "கொடுந்தமிழ்" என்று நாம் புழங்குவது போல் புழங்கியிருக்கலாம்.
எனவே, தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இருந்தது போல், வடமொழியில்..
செந்தமிழ் = சமிஸ்கிருதம்
கொடுந்தமிழ் = அனைத்து தேசிய மொழிகளும் (அதாவது புழங்கு மொழிகள்)
இது என் யூகம்தான். அறிந்தோர் புகல்க.
க.>
பிகு: ஆரியம் என்பது இன அடையாளமல்ல. ஆரியம் = உயர்வு
இந்திய மொழியாக்கத்தில் ஒரு தேசிய மொழி உருவான போது அதைத் தேவபாஷை
(அதாவது இந்திய முழுமைக்கும்) செந்தரமாக்கப்பட மொழி என்றும், மற்றபடி
புழக்கத்திலுள்ள மொழிகளை நீச்ச பாஷையென்றும் (இதில் அனைத்து பேசும்
மொழிகளும் அடங்கும் -வங்காளம், மராத்தி, குஜராத்தி etc.) என்றும்
அழைத்திருக்கலாம். தேவபாஷை என்றால் சாஸ்திரங்களைப் பாதுகாக்க என்று
உருவான மொழி என்று பொருள்படலாம்.
இதற்கு உதவுவது போல் கூடல் புராணம் "ஆரியத்தமிழ்" என்றொரு சொல்லைப்
போடுகிறது. இப்போதுள்ள துருவநோக்கில் இது ஒரு oximoran. ஆனால் அவர்கள்
சொல்வது உயர் தமிழ் என்று.
இதுபோல், தேவபாஷை என்பது சாஸ்திர ஞானத்திற்கான மொழி என்று பொருள்படலாம்.
க.>
பிகு: பேசும்தமிழை நாம் கொடுந்தமிழ் என்று சொல்கிறோம். "நீச்ச பாஷை"
என்று சொன்னால் வருத்தப்படுகிறோம். கவனிக்க!
ஆரியன்/ஆரியம் என்கிறச் சொல்லுக்கு "சிறந்த"(Super) என்று பொருள்படும்.
மேலும், இச்சொல்லாடல் பல தமிழ்ச் செய்யுள்களில் காணப்படுகிறது. எ.கா:
சிவபுராணத்தில்; " பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!"
கம்பராமாயணத்தில் - கிட்கிந்தா காண்டத்தில்; "அத்தா! இது கேள் என ஆரியன்
கூறுவான்,"
மாகவி பாரதியார் பல பாடல்களில் ஆரியம் என்றச் சொல்லை
பயன்படுத்திவுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் - "உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்."
வாழிய செந்தமிழ் பாடலின் ஈற்றயலான வரிகளில்; "ஆரிய நாட்டினர்
ஆண்மையோடியற்றும், சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!"
சித்தர்களைப் பற்றி அதிகம் மின்தமிழில் வந்தவண்ணமாகவுள்ளது. அவர்கள்
பாடல் ஒன்று, திரையிலும் நன்கு அறிமுகமான பாடல்;
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே! - இடைக்காடுச் சித்தர்.
> தேவபாஷை என்பது சாஸ்திர ஞானத்திற்கான மொழி என்று பொருள்படலாம்.
தேவ பாஷை/வைதீக மொழி/எல்லாம் வல்ல மொழி என்று ஒரு மொழியை
தள்ளிவைக்கவேண்டுமா? மற்றைய மொழிகளைப் போல், வடமொழியையும் ஒரு இலக்கியம்
தோய்ந்த அல்லது வழிபாடு முறைகளில் உவகையை வெளிப்படுத்தும் மொழி என்ற
கண்ணோட்டம் இருப்பின், அம்மொழியை படிக்கவும், அறியவும் விருப்பம் கூடும்.
இறைவன் இருப்பிடத்தில் வாழும் தேவர்கள் பேசிய மொழியா? என்ற கேள்வியும்
தோன்றாது அல்லவா!
> இப்போதுள்ள துருவநோக்கில் இது ஒரு oximoran
துருவநோக்கம் என்று வந்துவிட்டாலே, நேர்மாறான கருத்துக்கள் தோன்றுவது
தானே இயல்பு!
> பேசும்தமிழை நாம் கொடுந்தமிழ் என்று சொல்கிறோம்.
கொடுந்தமிழ் - கொடுமையான தமிழ் அல்ல. கொடுங்கை என்ற சொல்லைப் போல்
"வளைந்த" என்று பொருளும் கொள்ளலாம். ஆகையால், காலத்திற்கும்,
ஞானத்திற்கும் ஏற்றார்ப் போல் தமிழ்ச்சொற்கள்
வளைந்தும்,விரிந்தும்,ஒடிந்தும் இணங்கும் ஆழம் கொண்டது - கொடுந்தமிழ்!
செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் அண்மைக்காலத்தில் தான்
தோன்றியது. செம்மொழி என்று பண்டைய மொழிகளை நாம் கூறிவந்தாலும், செம்மொழி
என்று அறிவிக்க இயற்றப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிகளில் சில கோட்பாடுகள்
மாறுபடுந்தன்மையுள்ளனவாக இருக்கிறது!
நெறி வழுவாமலும், தெளிவாகவும் வழிகாட்டும் நெறிகள் மாற்றியமைத்தல்,
தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கும். எ,கா: ஒரு மொழியின் கால அளவு/
தோற்றம் எல்லாம் உய்த்துணர்வாகத் தான் உள்ளன. அறிவியல் பூர்வமான
சான்றுகள் குறைவாகத்தான் உள்ளது. செம்மொழியின் முக்கிய தகுதி காலங்கள் பல
கடந்தும் அகன்ற செல்வாக்கைப் பெற்ற மொழி, அதன் உருவாக்கத்தில் இருந்து
மொழி பிறழ்ந்திருந்தாலும், அம்மொழியை செம்மொழியாகும் தகுதிக்கு கருத
வாய்ப்புள்ளது.
>இவ்வளவு பல்கலைகழகங்கள்/கல்லூரிகள் இருந்தும் ஏன் சமஸ்கிருதம் பேச்சுவழக்கிற்கு திரும்ப வரவில்லை?
நல்ல வேள்வி.
உங்களுக்கு வடமொழி பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் இருப்பதைப் பற்றி கூறிய
பிறகு, காசியில் இருக்கும் என் நண்பனிடம் பேசியபோது தான் தெளிந்தேன்.
பெரும்பாலும் வடமொழியில் உள்ள மறை நூல்களில் ஆராய்ச்சிகளும், ஆயுர்
வேதம், தத்துவஞானம், மொழியியல் மற்றும் நவீன மொழிகள் துறைகள்
பெரும்பான்மையாக ஆராய்ச்சிகளில் தான் ஈடுபடுகின்றன. வடமொழியை,
பேசும்மொழியாக எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களாவது செய்கிறதா என்று
தெரிவித்தால் நலம்.
அப்படி இல்லையென்றால், அந்த நல்ல விடயமும் தமிழர்களே தொடங்கினால்
நம்மவரின் மொழிகள் இறையான்மை பன்மடங்கு வளர்ச்சி பெறும்.
>புத்தர் தம்முடைய கொள்கைகளை பரப்பும் போது பாலியில்தான் பரப்பினார். அப்போது இலக்கிய மொழியாக கருதப்பட்ட >சமஸ்கிருதத்தில் அல்ல.
புத்தரின் தாய்மொழி பாலி. அதுவும் வடமொழியின் ஒரு பேச்சுவழக்கு வகையைச்
சேர்ந்தது. அவர் வாழ்ந்த பகுதியில் அப்பேச்சு வழுக்கு அதிகமாக
பயன்படுத்தியதால், புத்தரும் இயல்பாக அம்மொழியிலேயே தனது கொள்கைகளைப்
பரப்பினார். நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் "இலக்கிய மொழி" வடமொழி என்று,
எளிய மக்களிடம் பேசும் மொழியில் கூறினால் தானே புரியும், அதைவிட்டு
இலக்கிய மொழியில் பேசினால், அவர் பேச்சை யார் கேட்க?
> இதற்கு உதவுவது போல் கூடல் புராணம் "ஆரியத்தமிழ்" என்றொரு சொல்லைப்ஆரியன்/ஆரியம் என்கிறச் சொல்லுக்கு "சிறந்த"(Super) என்று பொருள்படும்.
> போடுகிறது.
இதில் அறிஞர்களிடமும் கூட பெரிய மயக்கம் இருப்பது புரிகிறது. தமிழ்
அறிஞர் என்போர் வடமொழி அறியாது இருக்கின்றனர். வடமொழி அறிந்தோர் சொல்வதை
வைதீகம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். பின் எப்படித்தான் உண்மையை அறிவது!
என்னை மாதிரி தெனாவெட்டுகள் புகுந்து குழப்படி செய்தால் உண்டு :-)
பிரபலமான இந்திய சரிதங்களெல்லாம் வெளிநாட்டார் எழுதியவையாகவே உள்ளன.
மெக்காலே கல்விக்குப்பிறகு நமது பாரம்பரியத்தொடர்பு அறுந்துவிட்டது!
பெரியோர் சொல்வதை உதாசீனப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிப்போய்விட்டது. எனவெ
உள்ளது உள்ளபடி இந்திய சரிதத்தை எழுதுவார் யாரும் இன்னும் வரவில்லை! என்ன
ஆச்சர்யம்?
திராவிட நாடு எனும் கருத்தாக்கம் நிச்சயமாக ஆங்கிலேயர் காலத்தில்தான்
இங்கு உருக்கொள்கிறது. அதன் பிறகுதான் இந்த ஆரிய-திராவிடவாதம்
வலுப்பெறுகிறது! அதற்குத்துணை போகுவது போல் பல கருத்தோட்டங்கள் தமிழ்
மனத்தில் விதைக்கப்பட்டுவிட்டன.
சமயம் என்பதில் கூட இது எவ்வளவு ஆழமாகப் பாய்ந்திருக்கிறது என்பது சைவம்
திராவிடம், வைஷ்ணவம் ஆரியம் என்று சொல்லும் அளவிற்குப் போய்விட்டது! என்ன
செய்வது, இது கலி!!
தமிழ் மரபை அறிந்து கொள்ள வடமொழி அறிவு அவசியம் தேவை. ஏனெனில் நம்மவரே
நம் கலைகளை, சரித்திரத்தை வடமொழியில் எழுதி வைத்துள்ளனர். கம்பன்,
நம்மாழ்வார்,வள்ளலார், பாரதி என்பதுவரை வடமொழி அந்நியமாகப்படவில்லை.
இப்போது படுகிறது. இது இருமொழிகளுக்கும் பின்னடைவுதான்.
சமகால அரசியலை வைத்து நாம் சரித்திரத்தைப் புரிந்து கொள்ளமுடியாது, கூடாது.
க.>
இதில் அறிஞர்களிடமும் கூட பெரிய மயக்கம் இருப்பது புரிகிறது. தமிழ்
அறிஞர் என்போர் வடமொழி அறியாது இருக்கின்றனர். வடமொழி அறிந்தோர் சொல்வதை
வைதீகம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். பின் எப்படித்தான் உண்மையை
அறிவது!
க.>//
பிணக்குகளுக்கான மூலத்தைப் பிடித்து விட்டீர்கள்.
அதுவே உண்மை.
மடலாடல்களிலும் ஒவ்வொரு சுருதியில் ஒவ்வொருவர் பேசி
வருவதாகவே தெரிகிறது. இசை விழா நெருங்கும் இவ்வேளையிலாவது
சுருதி சேர்ந்து பேசினால் கேட்போர் புரிந்து கொள்ளலாம்.
வடமொழி நிகண்டு ஒரு ஜைனரால் எழுதப்பட்டது. பெயர் ‘அமர கோசம்’.
வைதிகர் செய்த வேறு பல கோசங்கள் இருப்பினும் அமர கோசமே முதலிடம்
பிடிக்கிறது.
சிவானந்த லஹரி 100 ச்லோகங்களிலும் கண்ணப்ப நாயனாரின் பக்தி மட்டுமே
போற்றப்படுகிறது. இத்தனைக்கும் ஆதி சங்கரர் உயிர் வதையைத் தடுத்து
ஸாத்விக
வழிபாடுகளுக்கு வித்திட்டவர்.
‘வடமொழி’ என்றாலே ஓர் இனம் சார்ந்த மொழி என்னும் தீண்டாமை வேரூன்றி
விட்டது.
உளவியல் சார்ந்த இக்குறைபாட்டைக் களைவது கடினம் என்றே தோன்றுகிறது.
தேவ்
இது எவ்வளவு அபத்தம் என்பதை வியாசர், காளிதாசன், கம்பன், சட்கோபன்,
அருணகிரி, வள்ளலார் என்று விளக்கிக்கொண்டே போகலாம். ஆனால் யார்
செவியிலும் ஏறாது. வெள்ளையன் போட்ட விதை நன்றாகவே நம்முள் வேலை
செய்கிறது. இந்த பிராமண அசடுகளும் தாங்கள் ஓர் பாரிய சமூக விளையாட்டில்
பகடைக்காய்கள் என்பதை உணராமல் அவ்வப்போது உளறிக்கொட்டி தங்கள் தலையில்
தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறதுகள்! என்ன செய்ய!
ஏண்டா இந்தியாவில் மட்டும் யாமார்க்கும் குடியல்லோம் என்று கோடிக்கணக்கான
சாதுக்களும், சந்நியாசிகளும் உள்ளார்கள் என்பது இப்போதுதான்
விளங்குகிறது!
க.>
இந்த வரிகள் சரியாக ஆங்கிலேயர் வருகைக்கு முன்னிருந்த இந்திய
மனப்பான்மையைச் சுட்டுவதாக நான் காண்கிறேன்.
ஏன் உயர் ஆரியம் என்று சமிஸ்கிருதத்தைச் சொல்ல வேண்டும்?
இந்தியர்கள் உயர்த்திப்போற்றும் வேதங்கள் அம்மொழியில் உள்ளன.
உபநிடதங்கள் தொடக்கம் அனைத்து வேதாந்தமும் அம்மொழியில் இருக்கிறது.
இறைவனை அறிதலை விட உயர் கல்வி வேறேதும் கிடையாது.
அக்கல்வியைக் கொண்டதாய் உள்ள இம்மொழி உயர் ஆரியம்.
அவ்வளவுதான்.
ஆனால், ஞானமார்க்கத்திலிருந்து பக்தி மார்க்கத்திற்கு மடைமாற்றம்
நிகழும்போது தாய்மொழி உயர்வு பெறுகிறது. காரணம் பக்தி என்றால் காதல்.
காதல் வெளிப்பாடுகள் தாய்மொழியிலேயே சிறப்பாக இருக்கும் என்பதற்கு நாம்
ஒவ்வொருவரும் சாட்சி.
இதற்கு மேலும் இதை இழுத்துக்கொண்டே போகலாம்தான்..
காலம் ஓட வேண்டுமே!
க.>