என்றோ ஒருவர் வெட்டிய கேணி வழிச்செல்வோர் தாகம் தணித்துக் கொண்டே இருக்கும். யாரோ ஒரு மகராசன் என்று பொது நன்றியாக மாறி தனிப் பெயர் மறைந்தாலும் அந்த நன்மை மறைவதில்லை. ஆனால் தீமை புரிபவரை அந்தப் படுபாவி என்று கால காலத்திற்கும் தனிப் பெயராகவே இகழ்தல் நிலைபெறுகிறது. ஊருண் கேணியாக வாழ்ந்தவர்களையும் தனித்தனியாக நினைவு கொண்டு வாழ்த்தினால் என்ன? வாழ்த்துவதில் என்ன சோம்பேறித்தனம்?
விசிஷ்டாத்வைத தரிசனம் ஸ்ரீராமானுஜர் காலம் தொடங்கி எம்பெருமானார் தரிசனம் என்று கொண்டாடப்பட்டது. பின் வந்த பெரியோர்கள் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை 74 துறைகள் கொண்ட தொண்டனூர் ஏரி என்று உருவகமாகச் சொன்னார்கள். ஸ்ரீராமானுஜர் தொண்டனூரில் வெட்டிய ஏரிக்கு 74 படித்துறைகளாம். அதேபோல் 74 சிம்ஹாஸனாதிபதிகள் என்னும் ஆசாரியர்கள் மூலம் பரப்பப்பட்ட ஸ்ரீவைஷ்ணவமும் ஊருக்குப் பொதுவில் வைத்த ஏரியாக உருவகித்தார்கள்.
திருவாய்மொழிக்கு வ்யாக்கியானமாக அமைந்த பகவத் விஷயத் தொகுதியும் பின் வரும் சந்ததிக்காக வைத்த ஊருண் கேணிதான். அதை அச்சில் ஏற்றிய ஆரம்பகாலத்து அரையர் பதிப்பு முதலியவையும் ஊர்ப்பொது நீர்நிலைகளே. 1870ல் வந்த தெலுங்குலிபி பதிப்பு பகவத் விஷயம், 15நூல்கள் அடங்கியது மிகப் பெரிய ஊர்ப் பொதுக் குளம். 1925ல் ஸ்ரீ சே.கிருஷ்ணமாச்சாரியாராலும், ஸ்ரீ வை மு சடகோபராமானுஜாசாரியாராலும் பதிப்பிக்கப்பட்ட பகவத் விஷயம் பிரஸித்தியானது. ஊருண் கேணியான பதிப்பு. இதைப் பெற நான் முயன்ற காலத்தில், எனது நண்பர் டி. ரமேஷ் தமது அத்தைவீட்டில் அந்த ஸெட் இருப்பதாகவும், அத்தையிடம் கேட்டு பெற்றுத் தருவதாகவும் சொல்லி அதன்படியே பெற்றுத் தந்தார். அந்த ஸெட் ஸ்ரீ வி. ஆர். எதிராஜுலு செட்டியார் அவர்களுடையது. ஸ்ரீ செட்டியார் அவர்கள் பேப்பர் கம்பெனியில் பெரிய பதவியில் இருந்தவர். உலகப் போர் காலங்களில் ஸ்ரீ அண்ணங்கராச்சாரியாருக்கு பேப்பர் தட்டுப்பாடு இல்லாமல் கவனித்துக் கொண்டவர். ஸ்ரீ பகவத் விஷயம் காலக்ஷேப கோஷ்டிகளை 1940, 1950 களில் சைதாப்பேட்டை வட்டாரங்களில் நன்கு நடத்தி வைணவ உணர்வை வளர்த்தவர். என்றோ இவர் வாங்கிப் பயன் படுத்திய பகவத் விஷயம் நூல் தொகுதி இன்றும் என் பயன் பாட்டில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான ரமேஷின் அத்தையை நினைக்கவேண்டும். ஸ்ரீ செட்டியார் அவர்களது மருமகள் ரமேஷின் அத்தை. நன்மை என்னும் ஜீவநதி என்றும் வற்றுவதில்லை. ரமேஷுக்குத்தான் பெரும் நன்றி உரித்தானது. ஆனாலும் அவருக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்திக்கொள்ள என் சுயநலம் விடவில்லை.
இங்கு புத்தக சேகரம் உள்ளோர் அனைவரும் இவ்விழையில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.
புத்தக ஆக்கம் அதிகமில்லாத பண்டைய நாளிலும் கல்வியின் சிறப்பை சிலாகித்து
சங்கப்பாடல்களுண்டு.
கல்விதான் மனிதனை மேம்படுத்துகிறது. புத்தகங்கள்தான் சிந்தனைப் பூங்காக்கள்.
நல்ல புத்தகம், நல்ல நண்பன்.
புத்தகங்களோடே வாழ்வைக்கழிக்கும் அரங்கனாரைவிட இது பற்றிப் பேச தகுதி
உடையவர் யார்? வாழி!
க.>
2009/7/21 V, Dhivakar <venkdh...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
*ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை 74 துறைகள் கொண்ட தொண்டனூர் ஏரி என்று
உருவகமாகச் சொன்னார்கள்.*
74 மதகுகள் கொண்ட வீர நாராயண ஏரியாகத்தான் சொன்னதாகப் படித்த நினைவு.
*ஸ்ரீ பகவத் விஷயம் *
இது வித்தாக இருந்து விடாமல் ஸ்ரீய:பதிப்படி என்னும் செடியாக அங்குரித்து
மேலும் படிப்படியாக
தேவரீர் மூலம் இங்கு வளரும் என்று எதிர்பார்த்தேன்; எதிர்பார்க்கிறேன் .
தேவ்
ஈடும் எடுப்புமில் ஈசனைப் பாடியவர்; அதை
ஏடு படுத்தியவர்; இசையமத்தவர்; ஈடருளியவர்;
கோட்டுருவில் பதிக்க அரும்பாடு பட்டவர்; பேணிக்காத்து
அதை இங்கு வழங்குபவர் – அத்தனை அடியவர்க்கும்
அநந்த தண்டவத் ப்ரணாமங்கள்.
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தம் ஆச்ரயே !
தேவ்
nA.ka
இப்போதுதான் நாம் வாழ்த்தி வணங்க வேண்டும்.
நமது சென்னைக்குழு இச்சமயத்தைப் பயன்படுத்தி அவரைப் பேட்டி காணலாமே!
அரங்கனார் நேர்காணல் செய்ய, சந்திரா கேமிரா பிடிக்க அற்புதமாக இருக்காது?
க.>
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
இந்த ஆர்வம்தான்.....
தேனீயார் ஒரு அபூர்வப்பிறவிதான்!
க.>
அதானே! ஒட்டகத்தைக்கட்டிக்கோன்னு! வேகாத வெய்யில் காலத்தில் அங்கு போய்
என்ன செய்கிறார்? சாதாரண காலத்திலேயே, மாலை ஆறு மணிக்கு அனலடிக்கும்!
குளிக்கும் போது தண்ணீர் வென்னீராகி ஆவிபறக்கும். எண்ணெய் சக்தி
இல்லையெனில் பூஞ்சோலை மீண்டும் பாலையாகும்! சரி..சரி..ஏ.சி ரூம்ல கணினி
முன் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருப்பார்
;-)
க.>
அமீரக தமிழ் வட்டம் என்னை நன்கு அறிந்ததே! எனது பாசுரமடல் சிடி அங்கு
வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
நம் நண்பர்கள் ஆசீப் மீரான், சடையன் சாபு, அரசு போன்றோர் அங்குதான்
உள்ளார்கள். த.ம.அ பற்றி நான் முன்பு தொடர்ந்து அன்புடன் மடலாடற்குழுவில்
எழுதி வந்தேன்.
தமிழின் முதல் முஸ்லிம் நாவலாசிரியை சித்தி ஜுனேதா பேகம் அவர்களின்
எழுத்தை நான் முதலில் கண்டுபிடித்தது துபாயில்தான். அதுவே என்னை நாகூர்
அனுப்பியது. நாகூர் ஆண்டவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் சிறுவயதிலேயே
உண்டு. சாபுவின் வடிவில் ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார் என்பது அங்கு
போன பின்தான் தெரிந்தது. அங்கு நடந்த சில சித்து விளையாடல்களை நான் ஒரு
முஸ்லிம் இதழில் கட்டுரையாக வடித்தேன்.
இ-சுவடி பழைய கடிதங்களை வாசித்தால் ஒன்று புரியும். ‘அன்புடன்’ புகாரி
த.ம.அ தமிழின் முதல் கூகுள் மடலாடற்குழுவை உருவாக்கவேண்டுமென்று
தொடர்ந்து பரிந்துரைத்திருப்பது புரியும். யாகூவில் இருக்கும் சில
மட்டறுத்தர் அனுகூலங்கள் இன்றும் கூட கூகுளில் இல்லை. எனவே அதீத தயக்கம்.
யாகூ எப்படியும் ஒருங்குறிக்கு மாறிவிடும் என்று எதிர்பார்த்தோம். அவர்
‘அன்புடன்’ ஆரம்பித்து நன்றாக நடத்திவருகிறார்.
இப்படி அமீரகத்தில் பல சகாக்களுண்டு.
உங்கள் முயற்சி வெல்க! இக்குழுவில் அமீரக நண்பர்கள் இருந்தால் உதவுக!
நா.கண்ணன்
2009/7/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
என்ன இது மின்தமிழ் திடீரென்று விழாக்கோலம் கொண்டுவிட்டது!
பெருமாள் உற்சவம் போல் உள்ளம் குஷியாக உள்ளது.
ஜமாயுங்கள்1
க.>
2009/7/31 srirangammohanarangan v <ranga...@gmail.com>:>
> போதாது. படிக்கட்டில் இறங்கியா இருப்பேன்? வடிவேலு மாதிரி 23ஆம்
> புலிகேசி ஸ்டைல்லன்னா கீழவந்து லாண்ட் ஆயிருப்பேன், அவ்ர்கள் இருவரும்
> போனபின்பு. அது ஒரு விழாக்காலம் <*
மிக அரிய இழை. `கற்றோரை கற்றோரே காமுருவர்` என்பது போல, நல்ல ஆசிரியர்
ஒருவரை இனம் கண்டு அவர் வாழும் காலத்திலேயே அவரது நூல்களை இனம்
காட்டியமைக்கு நன்றி.
திரு AVSவுடன் ஒரு சந்திப்பு செய்து நாம் வெளியிடலாம். மின்தமிழ்
விழாவில் (ஆகஸ்ட் 27) அவரை கௌரவிக்கலாம்.
க.>
2009/8/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
||சில நினைவுகள்.. -- ஸ்ரீரங்கம்||-----------------------------------------------------'Srirangam is like any other town of heritage and tradition'--if you are able to say this I can only envy you, for, it is an impossibility with me. The whole town is so palpable and seems to speak from every stone and sing from every twig. 'I will rather be a stone inlaid on the steps towards your portals and enjoy the blissful sight of your sweet lips'---so sings the Kulasekara, the Alwar from the hilly regions of the South India. He was right given his involvement, drowned in the love of the Divine, reclining in between the two rivers, the Cauvery and the Kollidam.See the original fervour of the Alwars and the Teachers like Alavandar, Ramanuja running thru the participants in the foray in the picture capturing a scene that happens every year in November-December on the 7th day of the Nights of ten - Iraap pattu. The occasion is about a theft that happened, involving one of the 12 Alwar saints of SriVaishnavism, viz., Thirumangai Alwar or Kaliyan or Parakaalan. This Kaliyan seems to have been a chieftain of the place Thirumangai before being chosen by the Divine Recliner in Srirangam, that is before becoming an Alwar and he was a terror to his enemies and also at times to the wealthy, plundering them to feed Vishnu's devotees, so it is told in the chronicles of old. Why he chose to become a militant communist for the cause of SriVaishnavism at those times is elusive and awaits careful analysis. But this anamoly between precepts and practice was perhaps brought home to him and he was put in proper tracks, it seems , as hinted by this story handed down thru tradition and the old chronicles.The story is : Kaliyan, in his usual plundering spree, seems to have one day laid upon an unusual couple, newely wed and returning back with their retinue of relatives and matrimonially ceded wealth. The unique couple were unresenting in parting with their riches, much to the surprise of the waylayer. Ofcourse he had a lingering doubt that behind all these docility there may be afterall a play of magical charms or binding by mantras. But everything went ok and it could have been left at that. But it was not to be. While tying the final knot of flyoff, a ring at the finger, somehow seems to have escaped the scrutiny, was glinting as if mocking the expertise of decades. It was too much and the bridegroom at least could have volunteered. So smug He stands thinking he can make off with this jewel. But He seems to hesitate to part with even after threatening and smilingly suggests that he can take the ring if he can remove it from the finger. All this audocity and keeping cool, something is wrong from the start! But Kaliyan bent on his perfection even tried with his teeth to get a purchase on the slippery ring.But in a moment,.... what happened to him?, something is wrong from the start, is it so ? , after all he may be wrong; only now everything is becoming ok, what am I doing all these days? why ? for what ? What is this change of mind that is happening? Is this person real ? or is he adept in some black magic or is it black magic or revealing magic of wisdom that I have been in search in vain all these days. Is he the one blessing me by the chance contact I ventured. So childlike he seems but this calmness and the sure air about him is something odd but I have to give it to him that he is bewitching.Hey.. you..what mantra have you been chanting? come on... what is the magic? You can't move away without telling me. Suddenly I am loosing all the interests in my old ways and a change is coming over my mind. Comeon, tell me that mantra! That mantra,.. hey you!The bridegroom beckoned him to come near, for, he can spell the mantra only in his ears, which should not be audible to others if at all it has to be effective. Reluctantly the plunderer went near his prey and lent his ears and the chronicle says that he never came away from that delicate vicinity and not only his ears but his all soul, mind, words and actions he dedicated to the mantra he heard at the decisive moment.The chronicle says that it was the plunderer who became the plundered at last, plundered in more than one ways and pledged to new realisations, which he was postponing by himself all these days.The overture just before the said moment is the kinesthetic foray that is captured by this picture[shot by Surendar]
anyhow it is not 'Kallan' but 'Kaliyan'.//
இருந்துட்டுப் போகட்டும்;
வாள்வலியால் மந்திரம் கொண்டவர், அதைக் கொடுத்தவர் இருவருமே
கள்வர்கள்தானே !
தேவ்
||சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி -- கண்ணன்||---------------------------------------------------------------------[முன்னமே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். கண்ணனை நான் பார்த்தது திரு சச்சிதாநந்தம் அவர்கள் வீட்டில். அதுவும் சச்சி மிகவும் அக்கறை எடுத்து போன் பேசும் போது என்னை வலுக்கட்டாயமாக அழைத்திருக்கவில்லையேல் சந்தித்திருக்க மாட்டேன். சரி ஏதோ வந்தார் 'ஜெர்மனி கண்ணன்' என்றார்கள். அப்படிச் சொன்னால்தான் தெரியுமாம். முகமெல்லாம் சிரிப்பாகப் பேசுகிறார். நல்ல மனிதன் என்று விட்டுவிட்டேன். சில வருடங்களுக்குப் பின்னர்தான் என்னுடைய இணைய உலகினுள் நுழைவானது நடந்தது. எதேச்சையாக. அதற்குள் சிபிச்செல்வன் ஒருநாள் 'உங்களைப் பற்றிக் கண்ணன் இணையத்தில் எழுதியிருக்கிறாரே!' என்றார். அவர் சொல்லும் பொழுது இணையம் எனக்கு ஏதோ சம்பந்தமே இல்லாத ஒன்று என்றுதான் என் மன நிலை. இணையத்துள் வந்தபின் தேடிப்பார்த்தேன். என்னைப் பற்றி என்னன்னமோ எழுதியிருந்தார் மனிதன். அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஏதோ ஒரு முறை அறிமுகம் ஆனவர்களைப் பற்றி இத்துணை மனம் கலந்த பாராட்டா? பிறகு அவருக்கு நான் ஓர் இணையத் தொந்தரவு ஆனபின் பலமுறை அவர் கோபத்தைக் கிண்டியிருக்கிறேன். ஆனால் பதிலுக்குப் பாராட்டு மேலும் பாராட்டு. இவர்களைக் கண்டால் எனக்குப் புரிவதில்லை. அதேபோல் தமிழ்த்தேனீ. முதல் முறை வீட்டிற்கு போன் செய்து அடம் பிடித்து வந்தே தீருவேன் என்று வந்தார். வருவதில் இருக்கும் சிரமம் குறித்தும், வந்தபின் என் வீட்டில் அவர்பட வேண்டிய சிரமம் குறித்தும், கிட்டத்தட்ட வராதே என்று சொல்லவில்லை அப்படி எச்சரித்தும் மனிதர் வந்து மகிழ்ச்சியாக சார் என் சொந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியுடனும் ஸ்வாதீனத்துடனும் இருக்கிறேன் என்றார். இத்தனைக்கும் சொந்தக்காரர்கள் பலர் வீட்டை எவ்வளவு கூப்பிட்டும் எட்டிப்பார்க்காத மனிதர். போன மாதம் கூட எங்கோ உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு வாசல் வரை வந்து எட்டிப்பார்த்து விட்டுத்தான் போனார். முதலில் இவர் வந்த போது காபியைக் கொடுத்து விட்டு இந்த க்ஷணம் முதலில் குடித்து விட்டுத்தான் அடுத்த வார்த்தை பேச வேண்டும் என்று சொல்லி விட்டேன். பாவம் சகித்துக் கொண்டார். என் வாழ்வில் என்னிடம் அன்பு காட்டுபவர்கள் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நான்தான் ஒரு மாதிரி கரடு முரடானவன்.தவம் என்பதைப் பற்றி பல நாட்களுக்கு முன் த ம அ பக்கத்தில் போட்டிருந்தேன். பிறகு நடை படிப்பவர்களை மிகவும் சிரமப் படுத்துமோ என்று எடுத்து விட்டேன். பல தடவை அதைப் போடச் சொல்லிக் கண்ணன் வலியுறுத்தியிருப்பார். இன்று எதேச்சையாக அதைப் படித்த பொழுது இந்த நினைவுகள். எனவேதான் நினைவுகளோடு தவம் இணைந்து வருகிறது.]தவம்********'தபித்தல்' ' வேகுதல்' என்ற சொல்லடியாகப் பிறந்தது தவம். மிகுந்த முயற்சியையும், சிரமத்தையும், பொறுமையையும், அதற்கெல்லாம் வேராகத் தொடர்ந்த ஆர்வத்தையும் சுட்டி நிற்பது தவம் என்ற சொல். நோக்கமும், திசையும், நசையும் முன்னிடு பொருளாய்க் கொண்டு முனையும் மானத வியாபாரம் தவம். இலக்கை நோக்கி வளைத்த வில் விடுத்த கணையாய்த் தைப்பது தவம். இனிவருங்காலம், இயலுமிக்காலம், கரந்துசெல் காலம் எனப்படு மூன்றையும் கணத்தினில் நிறுத்தி, காரண காரிய உருளையின் அச்சில், கற்பனை ஆணி கொண்டடித்திடும் கொல்லன்மை தவம்.
கணம் ஒன்றில் கட்டுண்ட முப்புரிக் காலம், கணக்கெடுத்தால் காட்சி கடந்த கற்பனையே என்ற கொள்கை புரிவது தவத்தின் விளைவு. தன்மயமாய் நிற்கும் ஒன்று தானடையத் தகுந்தது எது என்று தேடித் தள்ளும் கோலங்கள் குவியும் களத்துமேடாகித் தோற்றுகிறது உலகம். தேடித்திரிந்த சிற்றுயிர், நாடி நயந்த நோக்கமும், அதற்கு ஆடிச் சுமந்த கோலமும், ஆதிப் புள்ளியில் தான் நின்றவாறே இயற்றும் கற்பனை என்று புரிந்து கொள்ளும் கணத்தின் அகநிலை ஞானமென்றால், புறநிலை சொல்கதுவிச்சூழா சுகமென்னும் இலக்கியத்தின் விதைப்பற்று.
அந்த சொல்லொணா மர்மம் அவிழ்ந்ததில் விளைந்த ஆதி நகையில் முகிழ்த்த ஹாஸ்யத்தின் விரிவாய்ப் பெருகுவன இலக்கியங்கள். ஞானம் செயல் மடிந்து சையோகித்த மௌனம் விளைநிலமாய் முப்போகம் காண்பது கலை. ' பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' என்று கவி கூறுவதும் அப்பொழுதே.
படைப்பின் தத்துவத்தில் பட்டு, புறநிலையில் கொண்ட தாக்கம் மறைய, மனத்தடத்தில் மடங்கா கற்பனையில் ஒரு படைப்பே நிகழ, முத்தியும் வேண்டா முனைப்பில் ஒரு கணமே காலமாய்க் கோலம் கொள்ள, கலை விரித்த சொல்லரங்கில் வட்டாடிப் பொழுதயரும் கடைவாயின் அடைக்காயில் ஏறிய செம்மை விளக்கும் சிருஷ்டியின் மர்மம் தவத்தின் ஆணிவேர். போ போ போ வாயாட நேரமில்லை. வந்தவரை பற்றில் வை. அது போதும்.
I have:
Literary genres in Tamil : a supplement to a descriptive catalogue of
palm-leaf manuscripts in Tamil /
Cuppiramaniyan, A. Ve.,
Madras, India : Institute of Asian Studies, 1993
(2) The bangle and the javelin /
Madras : Sekar Pathippakam, 1984
(Muttolayiram translation)
------
(3) Narrinai : an anthology of Amour /
Dept. of Tamil Development-Culture, Govt. of Tamil Nadu, 1989
(4) Srngarapadyavali : verse translation in Sanskrit and English of
the Sangam Classic Kuruntokai /
New Delhi : Sahitya Akadami, 2003
(5) Navamuktasatakam : Pandya-Cola-Cera-rajanam prasastih = Pearls
thrice three hundred :
Euologies of the Pandeya, Cola, and Cera princes = Muttollayiram :
Pantiya-Cola-Cera mannar pukalppa /
Madras : Kuppuswami Sastri Research Institute, 1993
(6) Love lyrics of long ago
Dept. of Tamil Development-Culture, Govt. of Tamil Nadu, India, 1994
(7) Squirrel in the courtyard : transcompositions from Tamil Sangam
lyrics /
Madras : Tamilnadu Textbook Society, 1980
More later,
N. Ganesan
On Aug 1, 11:55 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ||சில நினைவுகள் -- திரு AVS இன் நூல்கள் (தொடர்கிறது)||
> -----------------------------------*----------------------------------------
Thank u sir anyhow it is not 'Kallan' but 'Kaliyan'.
2009/8/4 V, Dhivakar <venkdh...@gmail.com>
சிறு குழந்தை ஒன்று எதிரில் வந்து நின்றது
இரு விரலை நீட்டி மழலை பேசி நின்றது
இரு விரலில் ஒன்றைத் தொடுகிறாயா என்றது
இரு விரலில் எந்த விரல் தொடுவது
எந்த விரல் விடுவது யோசித்து
முடிவு செய்து ஒரு விரலைப் பற்றினேன்
ஒரு பார்வையொன்று எனைத்துளைத்து சென்றது
ஒரு பாதையொன்று எனக்கமைந்து வந்தது
மொத்த உயிர்களுமே விரல் பற்ற துடிக்குது
அந்த விரலில் உள்ள மர்மத்தை படிக்குது
விதிப்படியே விரல் தொட்டு நடிக்குது
விரல் காட்டும் வழிப்படியே நடக்குது
அது குழந்தையல்ல தெய்வமென்று புரிந்தது
அது விரல்களல்ல வாழ்க்கையென்று தெரிந்தது
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்புள்ள
தமிழ்த்தேனீ
இந்த வியாக்கியானங்களும், ஆச்சார்யர்களும் (நல்லவேளை! ஆச்சர்யர்கள் இல்லை
;-) இல்லையெனில் எவ்வளவு வறுமைப்பட்டுப் போயிருக்கும் தமிழ் உலகம் ?
வேதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதே தமிழ் பனுவல்களுக்கு ஏற்றம் கொடுக்க
என்பது போல் அல்லவோ இருக்கிறது?
எம் முதல் தாய் சடகோபனை நினைக்க, நினைக்க கண்ணீர் பெருகிறது. என்ன
காருண்யமிருந்தால் திருவாய்மொழி அப்படி அருளியிருப்பார்!
இவ்விடுகை எப்படியோ என் கண்ணில் தப்பிப்போனது.
நம்மாழ்வார் பற்றிச் சொல்லுங்கள் ரங்கன்.
ஒரு யுகப்புரட்சியின் வித்து, சின்னப் புளிய மரப்பொந்தில் இருந்து என்று
எண்ண, எண்ண ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்த அரிய தமிழ்ச் சம்பிரதாயம் பற்றி நாம் இன்னும் அறிந்து கொள்ள நிரம்ப
உள்ளது என்பதைச் சுட்டுகிறது உங்கள் இடுகை!
வாழ்க.
கண்ணன்
2009/7/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
>
>
> அது என்ன ஆன்ற? வடமறைகள் சந்தேகத்திற்கு இடம் தரலாம், எது
> பரம்பொருள் என்று நிச்சயிப்பதற்கு பெருமுயற்சி தேவை. ஆனால்
> தமிழ்மறை முடிந்தமுடிபில்தானே துவங்குகிறது. படித்தால் நேரே
> பக்திதான். மதிள் ஏறினால் நேரே விண் போலே.
>
மீண்டும், மீண்டும் உயிரியல் ஆவணப்படங்கள் பார்க்கப்பார்க்க, அறிவு
எவ்வளவு விசாலமாக உயிர்களிடம் பரவி செயல்படுகிறது என்பது புரிகிறது. மூளை
கொள்ளளவிற்கும் அறிவுத்திறனுக்கும் சம்மந்தம் இருப்பதாகத்தெரியவில்லை.
இத்துணூண்டு குருவி கட்டிய கூட்டை சூப்பர் கம்யூட்டர் உருவாக்கும்
மனிதனால் முறையாக பிரிக்க முடிவதில்லை. நேற்று பார்த்த காட்சியில் காக்கா
நூதனமாக கொக்கி தயாரித்து புழுவை மரப்பொந்திலிருந்து எடுக்கிறது. அது
தூண்டில் (hook) தயாரிக்கும் அழகே அழகு. வாரக்கடைசியில் அருவிக்கரை போன
போது அந்தரத்தில் வலை பின்னியிருந்த சிலந்தியின் நூதன அறிவை 'ஆறாம்
அறிவு" பெற்ற எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது என்ன
அப்படியொரு engineering skill?
பூர்வ ஜென்ம வாசனை என்பது பிராணன் ஒவ்வொரு ஜீவனிலும் வசித்து, அறிந்து
கொண்ட அனுபவப்பதிவு என்று தெரிகிறது. அதனால்தான் மனிதனுக்கு பறக்க
வேண்டுமென்ற ஆசை வருகிறது. நீர்க்குடத்தில் நீந்திப்பழகியதால் பூமியில்
விழுந்த பின்னும் நீர் விளையாட்டு மனிதனுக்கு. கலவி என்பதே மீள்கர்ப்பவாச
ஆசை என்று எழுதினேன் ஒருமுறை.
ஆன்மீகம் என்பது தொப்புள் கொடி விஜாரிப்புதான்.
ஆமாம், பத்மநாபனுக்கும் இருக்கு தொப்புள்கொடி!!
க.>
2009/8/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ||சில நினைவுகள்...||
> 'போன காலமோர் கான் விலங்கினிற் பூத்த மானிடர் போலவே வானவர்
> குலமொன்று நம்மினும் வந்துதிப்பதோர் வாய்மையே' என்று திருலோகத்தின்
> அரவிந்தம் திருவாய் மலர்கிறது.
>
> 'இந்த உடல்?' வேண்டாம் 'இந்த உடல்?' வேண்டாம் 'இந்த உடல்?'
> வேண்டாம் என்று ஒவ்வொரு மிருக பறவை பல் உயிரின உடல் எல்லாம்
> வேண்டாம் என்ற முக்கிய பிராணன் மனித உடல் வந்ததும் 'இது
> சம்மதம்' என்று புகுந்து கொண்டதாக வேத வாக்கு.
>
உம்ம கவிதை, அப்புறம் உங்கள் ஆசான் கவிதை, அப்புறம் ஆழ்வார் கவிதை,
அதற்குமேல் வியாக்கியானகர்த்தாக்களின் ஆழமனப்புரிதல்கள் இத்தனையும் ஓரிரு
வரிகளில் கோடி காட்டிவிட்டுப் போய்விடுகிறீர்கள். குளத்தில் விழுந்த
கல்லின் தொடர் அலைபோல் மனசு ஆடிக்கொண்டே இருக்கிறது, அதன் பின்!
நா.க
2009/8/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஐயா நாவன்னா கனா உம்முடைய அலையும் மன ஸென்ஸாருக்கு ஓர் அளவே
> கிடையாதா? எங்கிருந்தோ எங்குவரை சொல் பின்னும் சிலந்தியா?
> அதற்குத்தான் உம்மை பிராணனை எடுத்து சில இடுகைகளைப் பார்க்கச்
> சொல்வது.
ஆங்கிலத்தமிழ் புரிவதே இல்லை, என்ன செய்ய!
க.>
On Aug 5, 7:12 am, Kavalkazhani Venkatakrishnan <vinchi...@yahoo.com>
wrote:
> Sir,
>
> Please see attachment. i am not able to type in tamil in office due to some firewall.
> Regards,
> Venkatakrishnan
>
Can you read Tamil in office? Then,
you can type Tamil using online editor:
http://www.higopi.com/ucedit/Tamil.html
NG
> ________________________________
> From: N. Kannan <navannak...@gmail.com>
> To: minT...@googlegroups.com
> Sent: Wednesday, August 5, 2009 5:36:04 PM
> Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....
>
> 2009/8/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
> "பல்லுயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணபரனே"
>
> முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்
>
> ஆங்கிலத்தமிழ் புரிவதே இல்லை, என்ன செய்ய!
>
> க.>
>
> Doc5.doc
> 161KViewDownload
இதுவொரு நல்ல தளம். இது பற்றி முன்பு இங்கு முன் அறிமுகம்
செய்திருக்கிறேன். ஆயினும் நான் கொரியாவில் பயணிக்கும் போது
இத்தளத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது! கோபிக்குத்தெரியுமா என்று
தெரியவில்லை.
நா.க
On Aug 5, 7:06 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
> "பல்லுயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணபரனே"
>
> முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்
>
குணபரன் - முக்கியமான சொல். மகேந்திரவர்மன் காலம்
என்று நாகசாமி திருமழிசைக் கணிக்கிறார்:
http://www.tamilartsacademy.com/journals/volume4/articles/article9.xml
முழுப் பாசுரமும் தந்துள்ளார்.
நா. கணேசன்
கொரியாவில் எனது தளத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
எனது
தள வழங்கியின் அளவில் அவ்வாறான தடை ஏதும் இல்லை. மேலதிக தகவல்
கிடைக்குமானால்
சரி செய்வது எப்படி என ஆராய முடியும்.
இது நிறுவன/அரசாங்க அளவிலான தடை எனில் http://proxify.com/ போன்ற
அனானிமஸ்
ப்ராக்ஸி மூலமாக (இந்த தளமும் தடை செய்யப்படாதிருப்பின்) (Remove all
scripts தெரிவு செய்யாமல்) எனது தளத்தைப்
பார்வையிட இயலும்.
ப்ரியமுடன்,
கோபி
தேவ்
உங்கள் வரவு எங்களை மகிழ்விக்கிறது. எப்போது வெளியூர் போனாலும் Gopi
unicode tamil என்று தட்டினால் உங்கள் தளம் வரும். தமிழில் எழுதி வெட்டி,
ஒட்டி போய்க்கொண்டே இருப்பேன். சமீப காலங்களில் கொரிய மோட்டல்களில்
இத்தளம் வருவதில்லை. காரணம் அவர்கள் proxy server பயன்படுத்துவதாய்
இருக்கலாம். இதோ சோதனைக்கு வீட்டிலிருந்து தட்டிப்பார்த்தேன்:
http://www.higopi.com/ucedit/Tamil.html
உங்கள் சேவை கிடைக்கிறது. மேலும் சோதனை செய்து சொல்கிறேன்.
வாரக்கடைசியில் ஜப்பான் போகிறேன். அங்கு வேலை செய்கிறதா? பார்ப்போம்.
உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு
ஆபத்பாந்தவனாக இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய
வேண்டுமென்று சொல்லுங்கள்.
உங்கள் தன்னலமில்லாச் சேவையை தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்கவென வாழ்த்துகிறது.
அறிமுகம் செய்த தேவ் அவர்களுக்கு நன்றி.
நா.கண்ணன்
2009/8/6 கோபி <hig...@gmail.com>:
On Aug 6, 2:35 am, கோபி(Gopi) <hig...@gmail.com> wrote:
> நா.க,
>
> கொரியாவில் எனது தளத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
> எனது
> தள வழங்கியின் அளவில் அவ்வாறான தடை ஏதும் இல்லை. மேலதிக தகவல்
> கிடைக்குமானால்
> சரி செய்வது எப்படி என ஆராய முடியும்.
>
> இது நிறுவன/அரசாங்க அளவிலான தடை எனில்http://proxify.com/போன்ற
> அனானிமஸ்
> ப்ராக்ஸி மூலமாக (இந்த தளமும் தடை செய்யப்படாதிருப்பின்) (Remove all
> scripts தெரிவு செய்யாமல்) எனது தளத்தைப்
> பார்வையிட இயலும்.
>
> ப்ரியமுடன்,
>
> கோபி
>
அன்பின் கோபி,
நானே ஐதராபாதுக்குத் தொலைபேசணும் என்றிருந்தேன்.
பங்குபெறுதலுக்கு நன்றி.
வினோத் ராஜன் என்னும் இந்திய எழுத்துமாற்றி தயாரித்துள்ளார்:
http://tamilcc.org/thoorihai/thoorihai.php
உங்கள் உமர் மாற்றியை அவரும் பார்க்கணும்.
---------------
சீர்மை எழுத்து:
http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php
இதனைப் பாவித்து எழுதிய பதிவு:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
லதா எழுத்துருவில், பிணைபட்ட உ, ஊ உயிர்மெய்யைப் பிரித்து
இந்த உ, ஊ குறிகளுடன் செய்துதரவும். தினமணி
போன்றவற்றில் ஒரு கட்டுரை எழுத ஆசை.
ஐராவதம், வாசெகு இருவருக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.
இதன் ப்ராக்டிக்காலிட்டி பற்றிச் சில வார்த்தைகள்
இண்பிட் மாநாட்டில் பேசவும் ஆவல்.
உகரக் குறியீடு சிறிதாகவும் அழகாவும் உள்ளது.
வரிநீளத்தை அதிகரிப்பதில்லை, எனவே தடிமனில் (thickness
ஒத்துவருவதாய் லதா ஃபாண்டில் இதனைச் செய்துதரணும்.
நான் உங்களுடன் பேசுகிறேன்.
நன்றி
நா. கணேசன்
> On Aug 5, 5:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
>
>
> > கணேசன்:
>
> > இதுவொரு நல்ல தளம். இது பற்றி முன்பு இங்கு முன் அறிமுகம்
> > செய்திருக்கிறேன். ஆயினும் நான் கொரியாவில் பயணிக்கும் போது
> > இத்தளத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது! கோபிக்குத்தெரியுமா என்று
> > தெரியவில்லை.
>
> > நா.க
>
> > >http://www.higopi.com/ucedit/Tamil.html
>
> > > NG- Hide quoted text -
>
> - Show quoted text -
On Aug 6, 7:41 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 6, 2:35 am, கோபி(Gopi) <hig...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > நா.க,
>
> > கொரியாவில் எனது தளத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
> > எனது
> > தள வழங்கியின் அளவில் அவ்வாறான தடை ஏதும் இல்லை. மேலதிக தகவல்
> > கிடைக்குமானால்
> > சரி செய்வது எப்படி என ஆராய முடியும்.
>
> > இது நிறுவன/அரசாங்க அளவிலான தடை எனில்http://proxify.com/போன்ற
> > அனானிமஸ்
> > ப்ராக்ஸி மூலமாக (இந்த தளமும் தடை செய்யப்படாதிருப்பின்) (Remove all
> > scripts தெரிவு செய்யாமல்) எனது தளத்தைப்
> > பார்வையிட இயலும்.
>
> > ப்ரியமுடன்,
>
> > கோபி
>
> அன்பின் கோபி,
>
> நானே ஐதராபாதுக்குத் தொலைபேசணும் என்றிருந்தேன்.
> பங்குபெறுதலுக்கு நன்றி.
>
> வினோத் ராஜன் என்னும் இந்திய எழுத்துமாற்றி தயாரித்துள்ளார்:http://tamilcc.org/thoorihai/thoorihai.php
>
> உங்கள் உமர் மாற்றியை அவரும் பார்க்கணும்.
>
வினோத்,
கோபியின் உமர் எழுத்துமாற்றி உருவாக்கத்தில்
என் கருத்துக்களும் உண்டு :) கோபி முன்னர் எழுத்யுள்ளார்,
தேடின் அம்படும்.
கணேசன்
கே. எஸ். நாகராஜன் (கிழக்கு) இங்கே இருக்கிறாரா?
> ---------------
>
> சீர்மை எழுத்து:http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php
>
> இதனைப் பாவித்து எழுதிய பதிவு:http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
>
> லதா எழுத்துருவில், பிணைபட்ட உ, ஊ உயிர்மெய்யைப் பிரித்து
> இந்த உ, ஊ குறிகளுடன் செய்துதரவும். தினமணி
> போன்றவற்றில் ஒரு கட்டுரை எழுத ஆசை.
> ஐராவதம், வாசெகு இருவருக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.
> இதன் ப்ராக்டிக்காலிட்டி பற்றிச் சில வார்த்தைகள்
> இண்பிட் மாநாட்டில் பேசவும் ஆவல்.
>
> உகரக் குறியீடு சிறிதாகவும் அழகாவும் உள்ளது.
> வரிநீளத்தை அதிகரிப்பதில்லை, எனவே தடிமனில் (thickness
> ஒத்துவருவதாய் லதா ஃபாண்டில் இதனைச் செய்துதரணும்.
> நான் உங்களுடன் பேசுகிறேன்.
>
> நன்றி
> நா. கணேசன்
>
>
>
> > On Aug 5, 5:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
> > > கணேசன்:
>
> > > இதுவொரு நல்ல தளம். இது பற்றி முன்பு இங்கு முன் அறிமுகம்
> > > செய்திருக்கிறேன். ஆயினும் நான் கொரியாவில் பயணிக்கும் போது
> > > இத்தளத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது! கோபிக்குத்தெரியுமா என்று
> > > தெரியவில்லை.
>
> > > நா.க
>
> > > >http://www.higopi.com/ucedit/Tamil.html
>
> > > > NG- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
வரவேற்புக்கு நன்றி. முன்பே மின்தமிழின் இழைகளை அவ்வப்போது
பார்வையிடுவேன் ஆயினும் இலக்கிய குழுமம் என்பதால் என் போன்ற நுட்பம்
மட்டுமே அறிந்தவர்களின் பங்கு இக்குழுமத்தில் தேவை இராது என்பதால் இதுவரை
இணையவில்லை. அழைத்து வந்து இணைத்த தேவ் அவர்களுக்கு நன்றி.
அன்பின் N.G சார்,
வினோத் ராஜனின் சீர்மை மாற்றியை தேவ் அவர்கள் சொல்லி முன்பே
பயன்படுத்திப் பார்த்தேன். அருமையான முயற்சி! பணிச்சுமையால் கடந்த சில
மாதங்களாய் தமிழிணைய கட்டற்ற மென்பொருள் பங்களிப்பு எதையும் செய்ய
இயலவில்லையே என்ற கவலையில் இருந்தேன். வினோத் ராஜன் போன்றோர் உள்ளவரை இனி
எந்தக் கவலையும் இல்லை. :-)
இந்த மென்பொருள் என்ற சொல்லை "கணித்தமிழ்" நிறுவனத்தினர் மெல்லியம் என்று
சொல்கின்றனர். இயற்றப்படுவதால் "மெல்லியம்" என்பது ஆங்கிலத்திலிருந்து
அப்படியே "மென்பொருள்" என்று மொழிமாற்றம் செய்வதை விட சரியான சொல் தானே?
கண்டிப்பாக லதா எழுத்துருவில் சீர்மை குறியீடுகளை இணைத்து தருகிறேன்.
எந்த எழுத்தின் இடத்தில் இக்குறியீடுகள் வர வேண்டும் என்பதை தனிமடல்
இடுங்கள்.
சீர்மை குறியீடுகள் அழகாய்த் தான் இருக்கின்றன. ஆனால் அனைவரும் ஏற்று
புழக்கத்தில் கொண்டு வர (பழைய ஐகார ஒற்றை ஒழித்தது போல) வெகுநாட்களாகும்.
காந்தளகம் திரு.சச்சிதானந்தம் அவர்கள் இதன் ஆதரவாளர் என்பது எனக்கு புதிய
செய்தி. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறையில் அவரை சந்தித்திருக்கிறேன்.
சிஃபியின் அண்ணாக்கண்ணன் அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்.
//கோபியின் உமர் எழுத்துமாற்றி உருவாக்கத்தில்
என் கருத்துக்களும் உண்டு :) கோபி முன்னர் எழுத்யுள்ளார்,
தேடின் அம்படும். //
"உங்கள் கருத்துக்களும்" அல்ல.. நீங்கள் தானே உமர் மாற்றியின் தேவையை
அறிவித்து ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றங்களை சொல்லி சரியான வடிவம் பெற வழி
நடத்தினீர்கள். நுட்ப ரீதியாய் சுரதா யாழ்வாணன் வழி நடத்தினார்.
இன்னிக்கு பழங்களை நாங்கள் சாப்பிட்டாலும் விதை நீங்க விதைச்சது :-)
ப்ரியமுடன்,
கோபி
On Aug 6, 7:37 am, Kavalkazhani Venkatakrishnan <vinchi...@yahoo.com>
wrote:
> விதையாக நல்தமிழைவித்தி என் உள்ளத்தை நீ விளத்தாய் - திருமழிசை ஆழ்வார்
>
> தமிழில் எனது முதல் அஞ்சல்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
கணேசன்
On Aug 5, 7:06 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
> "பல்லுயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணபரனே"
>
> முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்
>
> ஆங்கிலத்தமிழ் புரிவதே இல்லை, என்ன செய்ய!
>
பாண்டித்துரைத் தேவர் அரசவையில் நாராயணையங்கார் எழுதிய பாண்டியம்
எழுத்தும் அவ்வாறே.
பாண்டித்துரை அரசர் செய்தது நான்காம் தமிழ்ச் சங்கம் என்பதுண்டு.
உண்மையில் அது ஐந்தாம் தமிழ்ச்சங்கம். கொங்கர்கோன்
வரபதி ஆட்கொண்டான் தலைமையில் நான்காம் தமிழ்ச் சங்கம்.
வில்லிபுத்தூராழ்வார் அதன் கவிமணிகளில் ஒருவர்.
ஒருபக்கம் எழுதிப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அதனால்தான் மக்கள் பிரமி எழுத்துக்கோ, பாண்டியம் எழுத்துக்கோ
போகமட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நா. கணேசன்
http://groups.google.com/group/minTamil/msg/8b20c7abff23daf2
நடைமுறைச்சாத்தியப்பாடு என்று ஒன்றுள்ளதே! எங்க அக்காவுக்கு பழைய `லை`
இருந்து புதிய `லை`க்கு வர ரொம்ப கஷ்டப்பட்டது (அவங்க பள்ளி ஆசிரியை
வேறு!).
க.>
பிகு: நா.க பழைய `லை` எப்படி இடுவது? பழைய கூட்டெடுத்தெல்லாம்
இடமுடியுமா? (அடியைப்புடிடா, பாரத பட்டா!)
2009/8/7 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆராய்ச்சிக்காக இவை வேண்டృமல்லவா? ஃபாண்ட் மாற்ற வேண்டృம்,
அவ்வளவృதான்.
---------
ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டృம்: எந்த எழృத்தృரృவృம்
மாற்றாமலே, உ/ஊ உடைத்தృக் காட்டியృள்ளோம்.
http://groups.google.com/group/minTamil/msg/8b20c7abff23daf2
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
இதృ யூனிகோட் மகிமை. பழைய பல்லவி என்கிறீர்களா :)
நா, கணேசன்
> 2009/8/7 N. Ganesan <naa.gane...॰gmail.com>:
On Aug 6, 11:34 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> வருக நண்பர் கோபி அவர்களே மிக்க மகிழ்ச்சி
> இங்கே உங்கள் வருகை இனிதாகுக
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
தகடூர் கோபி பற்றிய அறிமுகம்,
முனைவர் மு. இளங்கோ:
http://muelangovan.blogspot.com/2009/01/blog-post_11.html
நா. கணேசன்
உண்மையைச் சொல்லப்போனால் இது டெக்கினிக்கல் விஷயங்களைப் பேசத்தான்
உருவானது. தமிழில் தொழில்நுட்ப விஷயங்களை சிலாகித்துப் பேச முடியாத
சூழலில் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கொரு பாரம்பரியம் 2000
வருஷமாயுள்ளது.
கலைச்சொல் பிரச்சனையெனில் இங்கு ஆங்கிலத்திலும் உரையாடலாம்.
வாருங்கள்! வளம் தாருங்கள்.
நா.க
On Aug 6, 6:12 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சேஜோன் அரசன் செய்தது உயிர் + உயிர்மெய் இவைகளுக்கான எளிய குறியீடுகளை
> உருவாக்கி, உயிர்மெய் எழுத்து என்று தனியாக உருவாக்காமல் (எவ்வளவு
> எழுத்துச்சுமை குறையும் என்று எண்ணிப்பாருங்கள்) அடுக்குமுறையில்
> உயிர்+உயிர்மெய் குறியீடுகளைப் போட்டுவிட்டான். அது சீன எழுத்துமுறைக்கு
> எளிது. நமக்குக் கடினம். அவன் நெடுங்கணக்கு என்பதை உண்மையாக
> எடுத்துக்கொண்டு `0` எனும் குறியீட்டையும் உள்ளே புகுத்தியிருக்கிறான்.
நமக்கு அணிமையிலே உள்ள
மாலைத்தீவுகளில் (மாலைத்தீவு - ராஜராஜ சோழன்
கொடுத்த பெயர். சில கிரந்தக் கல்வெட்டுக்களும்
கிடைத்துள்ளன) எழுத்தைப் பார்க்கவும்:
http://www.unicode.org/charts/PDF/U0780.pdf
தமிழ் அடிப்படை, வெறும் அரபிச் சட்டை
போர்த்துள்ளது. தனி-மெய்களும்,
உயிர் மாத்திரைகளும் உள்ள எழுத்து.
0 உண்டு, அதன் மேல் உயிர்மாத்திரை
ஏற்ற உயிரெழுத்து உண்டாகும்.
திராவிடமக்களின் ஸப்ஸ்றேற்றம்
இலங்கை, மாலைத்தீவு எல்லாமும்
உண்டு. டிஎன்ஏ ஆராய்ச்சி செய்தாலும்
தெரியவரும்.
Where Did the Maldives People Come From?
http://www.iias.nl/iiasn/iiasn5/insouasi/maloney.html
மாலைத்தீவு எழுத்துப்போலும்
தமிழில் ஏற்றியிருக்கலாம்.
இப்போதுள்ளது ஓவெர்ஹெட்
சர்றுக் கூட. யாரோ டெல்லி
தமிழ் தெரியா ஐஏஎஸ் அதிகாரி
செய்துவிட்டார். தமிழ்நாட்டரசில்
தூங்கிக் கொண்டிருந்துவிட்டார்கள்.
அப்போது இண்பிட் போன்றன இல்லை
அல்லவா?
மேலும் அறிய என் பழைய மடல்:
http://nganesan.blogspot.com/2008/01/blog-post.html
நா. கணேசன்
> ~எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்~ என்பது அங்கு நிரூபனமாகியுள்ளது.
>
> நடைமுறைச்சாத்தியப்பாடு என்று ஒன்றுள்ளதே! எங்க அக்காவுக்கு பழைய `லை`
> இருந்து புதிய `லை`க்கு வர ரொம்ப கஷ்டப்பட்டது (அவங்க பள்ளி ஆசிரியை
> வேறு!).
>
> க.>
>
> பிகு: நா.க பழைய `லை` எப்படி இடுவது? பழைய கூட்டெடுத்தெல்லாம்
> இடமுடியுமா? (அடியைப்புடிடா, பாரத பட்டா!)
>
> 2009/8/7 N. Ganesan <naa.gane...@gmail.com>:
On Aug 6, 6:12 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சேஜோன் அரசன் செய்தது உயிர் + உயிர்மெய் இவைகளுக்கான எளிய குறியீடுகளை
> உருவாக்கி, உயிர்மெய் எழுத்து என்று தனியாக உருவாக்காமல் (எவ்வளவு
> எழுத்துச்சுமை குறையும் என்று எண்ணிப்பாருங்கள்) அடுக்குமுறையில்
> உயிர்+உயிர்மெய் குறியீடுகளைப் போட்டுவிட்டான். அது சீன எழுத்துமுறைக்கு
> எளிது. நமக்குக் கடினம். அவன் நெடுங்கணக்கு என்பதை உண்மையாக
> எடுத்துக்கொண்டு `0` எனும் குறியீட்டையும் உள்ளே புகுத்தியிருக்கிறான்.
> ~எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்~ என்பது அங்கு நிரூபனமாகியுள்ளது.
>
> நடைமுறைச்சாத்தியப்பாடு என்று ஒன்றுள்ளதே! எங்க அக்காவுக்கு பழைய `லை`
> இருந்து புதிய `லை`க்கு வர ரொம்ப கஷ்டப்பட்டது (அவங்க பள்ளி ஆசிரியை
> வேறு!).
>
ஆம். அதனாற்றான், பாரிய மாற்றம் எதுவும் இல்லாத தேவையான
சீர்மையைத் தமிழ் எழுத்தில் செய்யவேண்டும். உயிர் எழுத்துக்கள்
ஒரு வலை (அ) அச்சுப் பக்கத்தில் அத்திகம் இருக்காது,
இருபுறமும் உயிர்மெய் மாத்திரைக்குறிகள் இருக்கும் கொ, கோ, கௌ,
- இவற்றை ஒரு புதுக்குறி கண்டுபிடித்து மாற்றலாம் (வரிநீளம் குறையும்).
ஆனால் அவை தேவையா என்று கருதியுணர்ந்து, வாசெகு, ஐராவதம்
போன்றோர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
சிறுவர்களுக்கு கல்வி புகட்டும்போது தெரிகிற ஒன்று:
உ/ஊ குறியீட்டின் பிணைப்புதான். இது நாராசத்தை (எழுத்தாணியில்)
தமிழைப் பழங்காலத்தில் ஓலையில் எழுதும்போது தேவையிருந்தது.
ஆணியை ஓலையில் இருந்து அகற்றாமல் கூட்டெழுத்தாய்
எழுதச் சூழ்நிலை. இன்று எல்லாம் தட்டச்சுதான்.
அதை மாற்றி சீர்மை முறையிலும் எழுதலாம்,
கற்பிக்கலாம் என்று வாசெகு போன்றோர் பெற்றுத் தந்தாலே
பெரிய சாதனை.
அவ்வகையில் மாற்றினால் எவ்வாறு தமிழ் நெடுங்கணக்கு
தர்க்க முறையில் அமையும் எனப் பார்ப்போம்.
அப்பொழுது எல்லா உயிர்மெய் எழுத்தையும்
துணைக்கால் (கா ..), கொக்கி (கி ...), சுழிக் கொக்கி (கீ ...),
துதிக்கை (கృ ...), கொண்டை (கூ ...),
ஒருசுழிக் கொம்பு (கெ ...), இரட்டைச்சுழிக் கொம்பு (கே ...)
மாத்திரம் கொண்டு எளிதாக எழுதிவிட முடிகிறது.
(அ) வரிநீளம் அதிகம் ஆவதில்லை
(ஆ) அண்டை மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு
போலவே உகரக் குறி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தும்பிக்கையில் நம்பிக்கை உண்டே நமக்கு!
(இ) யூனிகோட் பக்கங்கள் இப்பொழுதே தெரிகின்றன.
(ஈ) தமிழ் எழுத்துத் தெரியாதோருக்குக் கற்பிக்க,
அவர்கள் நினைவில் இருத்த மிக எளிமையான வடிவு.
தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:
ஃ அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க் க கா கி கீ கృ கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙృ ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சృ சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞృ ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டృ டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணృ ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ தృ தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நృ நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பృ பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மృ மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யృ யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரృ ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ லృ லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வృ வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழృ ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளృ ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ றృ றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னృ னூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹ ஹா ஹி ஹி ஹృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ
நன்றி,
நா. கணேசன்
> 2009/8/7 N. Ganesan <naa.gane...@gmail.com>:
அன்பின் ரங்கன்:
மிக அரிய இழை. `கற்றோரை கற்றோரே காமுருவர்` என்பது போல, நல்ல ஆசிரியர்
ஒருவரை இனம் கண்டு அவர் வாழும் காலத்திலேயே அவரது நூல்களை இனம்
காட்டியமைக்கு நன்றி.
திரு AVSவுடன் ஒரு சந்திப்பு செய்து நாம் வெளியிடலாம். மின்தமிழ்
விழாவில் (ஆகஸ்ட் 27) அவரை கௌரவிக்கலாம்.
க.>
2009/8/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஆனால் முதலில் இத்தகைய சுய ஆர்வ எழுத்தாளர்களை இனம்
> காட்டுவதே பெரும் வேலையாக அன்றோ போய்விட்டது! இனி அவராச்சு
> மின்தமிழாச்சு.
கேட்க மிகவும் மகிழ்வாக உள்ளது. இருக்கின்ற `ஆலாய்பறக்கிற`
வேலைக்களுக்கிடையே, `கடன்வாங்கிய` நேரத்தில் இப்படியொரு தரமான மின்குழுவை
நம்மால் நடத்தமுடிவது 21ம் நூற்றாண்டின் அதிசயம்தான். தமிழனின் மரபு
மிகவும் நளினமான மரபாக உள்ளது. அதன் தத்துவங்கள், இலக்கியம், சிற்பம்,
இசை என்று பார்த்தோமெனில் அப்படியொரு நளினம், அப்படியொரு நாகரீகம்.
அனிச்சம் பூவை விட மென்மையான இதயம் கொண்டோர் நிரம்ப இருந்திருக்கின்றனர்.
வாடிய பயிர் உள்ளத்தை வாட்டியிருக்கிறது. மனித மேம்பாட்டின்
உச்சவெளிப்பாடு போல் சிலநேரம் தோன்றுகிறது. இல்லையெனில், இன்றில்லை 2000
வருஷத்திற்கு முன்பே, `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்று எப்படிச்
சொல்லமுடிந்தது?
அந்த மரபின் வாரிசுகள் நாம் என்று உளப்பூர்வமாக உணர்வோமெனில் நாம் நடந்து
கொள்ளும்விதம், பண்பாடு மிகவும் நளினமாகவே இருக்கும்!
மடலாடற்குழுக்களை குப்பைத்தொட்டியாக மாற்ற ஒரு சில மடல்கள் போதும். பின்
அதுவொரு விஷச்சுழற்சியில் மாட்டிக்கொள்ளும். அப்படித்தான் பல குழுக்கள்
மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. பதிவு உலகமும் கூட. தனிமனித வெறுப்பு,
தமிழ் இனக்குழுச் சண்டைகள், மொழிவெறிக் கூச்சல்கள் இவையே தமிழ் மனத்தை
ஆட்டிக்கொண்டிருக்கும் பிசாசுகள் என்பது போல் காட்டும் மின்னரங்கங்கள்
உண்டு.
எனவேதான் நான் மீண்டும், மீண்டும் சொல்வது, மின்தமிழ் எனும்
உளக்கண்ணாடியில் அடிக்கடி நம் முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்து
கொள்வோமென்று. முகம் என்பது எதற்கு இருக்கிறது? நமக்காக இல்லை.
அடுத்தவருக்காகவே முகம் உள்ளது. என்வே நம் முகத்தை நமக்காக அல்ல,
அடுத்தவருக்காக அழகாக வைத்துக்கொள்ள வேண்டியது நாகரீகம். வெளியே போகும்
போது தலைவாரி, பவுடர் ஏன் போட்டுக்கொள்கிறோம். நாலு பேர் பார்க்கும் போது
நாகரீகமாகத்தெரியத்தானே? அதே உளவியல்தான் இங்கும் செயல்படுகிறது.
இப்போது பார்க்கும் இம்மின்னெழுத்து நம் உளத்தைக் காட்டும் கண்ணாடி
எனப்பார்த்துப்பழகிவிட்டோமெனில் பின் நம் எழுத்து எப்போதும்
மிருதுவாகவும், மதுரமாகவும், நளினமாகவும், நாகரீகமாகவும் அமைந்துவிடும்
இல்லையா?
எம் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!
என்கிறான் பாரதி. அதுதான் catch! எம் தந்தையர் நாடு, எம் தந்தையர் மொழி,
எம் தந்தையர் சமயம், எம் தந்தையர் இலக்கியம். எம் தந்தையர் மரபு! அது
நம்மை நடத்திச் செல்லட்டும்!
திரு. வெங்கட் அவர்களை வரவேற்போம்.
வாழ்க வளமுடன்.
நா.கண்ணன்
தனியான தலைப்பில் எழுதத்தக்க பதிவு. பொன்னாச்சியாரும், கொங்குப்
பிராட்டியும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். கல்வெட்டில் தேட
வேண்டாம்.ஒதுங்கி வர்த்தித்த அவர்கள்பால் உடையவர் சீடர்களைப் பாடம்
பெறுவதற்கு அனுப்பிய
நிகழ்ச்சியும் உண்மையில் நடந்திருக்கும்.
சேஷத்வ - பாரதந்த்ர்ய போக்யதைகளாகிய அகண்ட காவேரியிருந்து ஒரு சிறு
கால்வாய் மின்னரங்கிலும் சலசலத்துச் செல்லலாம்.
அந்த அம்மையின் அருஞ்சாதனை அகத்தில் கல்வெட்டாய்ப் பதிந்து
பண்படுத்தியது.
தேவ்
பத்தி யதிராஜம்மாள்
-------------------------------------இவர் கவர்னர் அன்று. அல்லது முதல் முதலில் பாராசூட்டிலிருந்து கீழே குதித்த பெண்மணியுமன்று. இல்லையென்றால் ஆரம்ப கால தமிழ் எழுத்துக்களில் நேரடியாக தன் பெயரில் போடாமல் எழுதிப் பின்னர் பிரசித்தமான எழுத்தாளருமன்று. பின்னர் இவர் யார்? சில வருஷங்களுக்கு முன் நீங்கள் ஸ்ரீபெரும்பூதூர் போயிருந்தால் நிச்சயம் தெருவில் இவரை அடையாளம் கண்டிருக்க முடியாது. கையில் தடியூன்றி உடல் செங்குத்துக் கோணத்தில் குனிந்து, குரல் ஆற்றின் அலைவரிசையை அடைந்தது போல் வருகின்ற வயதான மூதாட்டியை எப்படி பார்ப்போம்? ஐயோ பாவம்! பாட்டி ஓரமாகப் போங்கோ! ஆம் பெண்சமூகத்தையே வெகுகாலம் ஓரமாகப் போங்கோன்னுதான் சொல்லி ஏதோ ஆங்கிலம் வந்த முகூர்த்தம் அஷ்ட லக்ஷ்மிகளும் திக்விஜயம் வருகிறார்கள். வயதான மூதாட்டி ஓரமாகத்தானே போகவேண்டும். சரிதான். ஏதாவது வண்டி கிண்டி வந்து மோதிடுத்துன்னா! வண்டி ஓரமா போனா என்னன்னு யோசிக்க இன்னும் பலகாலம் ஆகும். அதுவரையில், பெருசோ, பாட்டியோ ஓரமாகப் போகட்டும். இல்லை சமுதாயத்தில் சில விஷயங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன் என்கிறது. சமுதாயம் கிடக்கட்டும். நாமே மடத்தனத்தில் ஊறி ஒருகாலத்தில் கொள்கலனாய் இருந்த தவறுகளை நினைத்தால் 'என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது நம்ம பவுசுக்கு? என்றுதான் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. நல்ல வேளை சித்தர் ஒருவர் பாடிவைத்தார். 'வெட்கம் கெட்டு விதி கெட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஏதுக்கடி குதம்பாய் முக்காடு ஏதுக்கடி' அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்கிறீர்களா? அதெல்லாம் பெரியவா சொல்றதுக்கு பலவகையில் அர்த்தம் கொள்ளலாம். ஒரே அர்த்தம்னு சோனிப்பிச்சான் மாதிரி வாக்கு சொல்வாளான்ன? சித்தர் இல்லையா? சித்தம் போக்கு என்பதுபோல் நம் சித்தத்துக்கு ஏற்றாற் போல் பொருள் கொள்ள முடியாமல் போனால் அப்புறம் அவர்கள் என்ன சித்தர்கள்?சரி நமது மூதாட்டி விஷயத்துக்கு வருவோம். ஓங்கோலோ நெல்லூரோ அங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே கதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான் டெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.அப்பொழுது போயிருக்கும் பொழுது தம்பியின் நண்பருக்குச் சொந்தம் என்ற வகையில் விவரங்கள் கிடைத்தன. எனக்கு ஒரு கிளரும் எண்ணம். அவர் இவ்வளவு நாள் என்ன கண்டிருப்பார்? போய்ப் பார்த்தால் பழங்கதைகள் வண்டி வண்டியாய்ச் சொல்லுவார் என்று தயாராகத்தான் போயிருந்தேன். ஆனால் முற்றிலும் என்னை அசத்திவிட்டார் மூதாட்டி. அங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி திருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில் பல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம் கேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத அர்த்தங்கள், நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக் கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார். இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான். தெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாடிக்கு ஜீவாது. அவருடைய அறை எது தெரியுமோ? வாசலில் நின்று பெல்லை அழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி கொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர் வருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி வந்து போய்க்கொண்டிருக்கப் போகிறது? ஓரமாகத்தான் மூத்த தலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை. முதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், சேஷத்வ போக்யதைகள் அதற்கும் மேற்பட்டு பாரதந்த்ர்ய போக்யதைகள் என்று அகண்ட காவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. நான்தான் ஒரு வாயாடி என்று உங்களுக்குத் தெரியுமே? திரும்பிப் பார்த்தால் அரைநாள் ஆகிவிட்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள், அவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எல்லாம் படிக்காத அந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத நினைவோடு கூறுவது எப்படி முடிந்தது? முதலில் மாதர்கல்வி என்பது என்ன ? இது என்ன? என்றோ ஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி. காலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக் கொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப் பிரபாவங்களுக்கு ஏது கல்வெட்டு? கல்வெட்டா? உயிர்க்கட்டாக காலம் தோறும் தொடர்கிறதே இந்த மாதிரி செட்டி குலத்துத் திருவிளக்குகளான பாகவத அம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த சுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15 புத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள் அடக்கம் அதில் ப்ரூப் திருத்தம் 7 பாகவத மூதாட்டிகள். திருத்தத்தை மீறி எஞ்சிய தவறுகளும் மொத்தம் 7தான்.பல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால் போனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை. இன்று போனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால் அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார், ஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு ஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன் யதிராஜன் உவப்புக்கு இலக்காகி. எனக்கு ஒரு நப்பாசை! எப்பொழுதாவது என்னைப்பற்றி 'அதோ அந்த வாயாடிப் பையன் வந்திருக்கிறான்' என்று சொல்லமாட்டாரா யதிகட்கிறைவன் திருச்செவி கேட்க என்று.
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
சந்திரா சார்!>இன்று போனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால் அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார், <
திருவடியிலிருந்து வருமோ அமுதமழை? மூதாட்டியாரை நினைத்து அழுவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த ஞான பூமியிலே, அத்தனை பேருக்கும் வணக்கங்கள்...
சந்திரா
ஆசார்யன் திருவடி அடைதல் என்றால் வைஷ்ணவ பரிபாஷையில்
மரணமடைந்து வைகுந்தம் சேர்தல். அந்த அம்மையார் இப்போது
மண்ணுலகில் இல்லை.யதிராஜரின் மலரடிகளில் மாறுதல் இன்றி மகிழ்ந்தெழும்
போகத்தில் மன்னியவாறு வாழ்கிறார்.
இவர் போன்ற பாகவதைகளை மனத்தால் நினைப்பதும் நம்மைத் தூய்மை செய்யும்.
தேவ்
நல்ல உற்சாகம். நல்ல சிந்தனை.
அரங்கானாருக்கு இது போன்ற பாகவதர்களை நிறையத்தெரியும். அடுத்தமுறை கூடவே
போய்விடுங்கள். யார் கண்டார்? ஏதாவது `முதுசொம்` அங்கு உட்கார்ந்து
இருக்கும்! ;-)
க.>
2009/9/15 Chandra sekaran <plastic...@gmail.com>:
சந்திரா
அது ஒரு கூட்டமாய்க் கிளர்ந்து குடைந்து தேடிய பருவம்!
On 9/15/09, N. Kannan <navan...@gmail.com> wrote:சந்திரா:
நல்ல உற்சாகம். நல்ல சிந்தனை.
அரங்கானாருக்கு இது போன்ற பாகவதர்களை நிறையத்தெரியும். அடுத்தமுறை கூடவே
போய்விடுங்கள். யார் கண்டார்? ஏதாவது `முதுசொம்` அங்கு உட்கார்ந்து
இருக்கும்! ;-)
க.>
பத்தி யதிராஜம்மாள்
-------------------------------------இவர் கவர்னர் அன்று. அல்லது முதல் முதலில் பாராசூட்டிலிருந்து கீழே குதித்த பெண்மணியுமன்று. இல்லையென்றால் ஆரம்ப கால தமிழ் எழுத்துக்களில் நேரடியாக தன் பெயரில் போடாமல் எழுதிப் பின்னர் பிரசித்தமான எழுத்தாளருமன்று. பின்னர் இவர் யார்?
மூதாட்டியை எப்படி பார்ப்போம்? ஐயோ பாவம்! பாட்டி ஓரமாகப் போங்கோ! ஆம் பெண்சமூகத்தையே வெகுகாலம் ஓரமாகப் போங்கோன்னுதான் சொல்லி ஏதோ ஆங்கிலம் வந்த முகூர்த்தம் அஷ்ட லக்ஷ்மிகளும் திக்விஜயம் வருகிறார்கள்.
இல்லை சமுதாயத்தில் சில விஷயங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன் என்கிறது. சமுதாயம் கிடக்கட்டும். நாமே மடத்தனத்தில் ஊறி ஒருகாலத்தில் கொள்கலனாய் இருந்த தவறுகளை நினைத்தால் 'என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது நம்ம பவுசுக்கு? என்றுதான் வெட்கம் பிடுங்கித் தின்கிறது.
நல்ல வேளை சித்தர் ஒருவர் பாடிவைத்தார். 'வெட்கம் கெட்டு விதி கெட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஏதுக்கடி குதம்பாய் முக்காடு ஏதுக்கடி' அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்கிறீர்களா? அதெல்லாம் பெரியவா சொல்றதுக்கு பலவகையில் அர்த்தம் கொள்ளலாம். ஒரே அர்த்தம்னு சோனிப்பிச்சான் மாதிரி வாக்கு சொல்வாளான்ன? சித்தர் இல்லையா? சித்தம் போக்கு என்பதுபோல் நம் சித்தத்துக்கு ஏற்றாற் போல் பொருள் கொள்ள முடியாமல் போனால் அப்புறம் அவர்கள் என்ன சித்தர்கள்?
அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத அர்த்தங்கள், நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக் கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.
நானும் நெகிழ்ந்து போனது....எந்த இடத்தில் என்றால்,
நாங்கள் கூறினோம், 'ஐயா! உங்கள் குடும்பங்களில் நன்கு படித்து சொன்ன பேச்சைக் கேட்டு, ஒழுங்காக கோவிலுக்குப் போய், நல்ல பிள்ளையாய் பேரெடுக்கும் இளஞர் யுவதிகளை வேண்டாம். துடுக்குத் தனமாக கேள்வி கேட்டு, அராத்து, உருப்படாதது, திமிரு என்று பேர் வாங்கித் திரியும் இளைய சமுதாயம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள், எங்களுக்கு அவர்கள் தாம் வேண்டும். அவர்களிடம் தான் எங்களுக்கு வேலை.' அவர்களோ மற்றவர்களோ அனுஷ்டானம் என்று எதையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் தீராத கேள்வி, விசாரம் அவர்களிடம் இருக்க வேண்டும். இல்லையென்றாலும் ஊக்கம் இருந்தால் போதும், விசாரத்தை நாங்கள் கொளுத்திவிடமுடியும். இது எப்படிப் பலன் அளித்தது என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்.மேலும் ....
பேரன் மாறவில்லை நடை உடை பாவனையில், பாட்டி கண்டிஷன் ஏதும் போடவில்லை, அப்படியே தன் பேரனை ஏற்று ரசிக்கிறாள். புற அடையாளங்கள் அங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றம் எங்கு நிகழ்ந்தது? பண்பாட்டின் விளைநிலம் எங்கோ அங்கு நிகழ்ந்த மாற்றம் தலைமுறைகளை இணைத்து பண்பாட்டு மின்சாரம் பாய்ந்ததை பலமுறை கண்டிருக்கிறேன். (தொடரும்)
விழுப்புரம் அருகில் மாளிகைமேடு என்னும் ஒரு சிற்றூர்.
அங்கு பரனூர்ப் பெரியவரின் பாகவத ஸப்தாஹம்; அவர்தம்
திரு முன்னிலையில் சாதுக்கள் கூட்டம் உரையில் ஆழ்ந்திருந்தது.
பின்னால் ஒரு விடலைக் கும்பல்; கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றம்.ஒரே
சத்தம்,ஊளை. பெரியவர் ஹரி நாமத்துக்கு மாறினார்; கொஞ்ச நேரத்தில் உரையின்
தலைப்பே உடையவருக்கு மாறியது.உடையவரின் காரேய் கருணை அவர் வாய்மொழி வழியே
அந்த இளைஞர்கள் மேல் விழுந்தது.
பெரியவரின் குரல் பாவத்தில் மேலோங்கியது; சற்று நேரத்தில் கும்பல் தலை
கவிழ்ந்தது. உரை நிறைவெய்தும்வரை குனிந்த தலை நிமிரவே இல்லை.மறுநாள் அதே
கும்பல் திருமண்
அணிந்துகொண்ட திருக்கூட்டமானது.அவர்கள் பரம்பரையாக ராமாநுஜ தாஸர்களான
பாகவத குடும்பத்தினர் என்று தம்மைப் பரனூர்ப் பெரியவரிடம் அறிமுகம்
செய்துகொண்டனர்.
பரனூர்ப் பெரியவர் ஒருமுறை தனிமையில் தெரிவித்த நிகழ்ச்சி இது; ஊர்
ஊராகச் சென்று ஸ்ரீ ராமாநுஜ வைபவம் சொல்வார் இல்லையே என்றுதான் அவர்
வருந்தினாரேயன்றித் தம் பெருமையாக இதைச் சொல்லிக் கொள்ளவில்லை.
தேவ்
அடியேன் ராமானுஜ தாசன்
-------------------------------------------------அது ஒரு கூட்டமாய்க் கிளர்ந்து குடைந்து தேடிய பருவம் என்று சொன்னேனா, இந்தக் கூட்ட யத்தனம் எல்லாவற்றிற்கும் தூண்டுகோல் ராயர்கள் சிலபேர் அமைவது நியதி. இருந்தாற்போல் இருக்கும். திடீரென்று ஒருவர் சந்நதம் வந்ததுபோல் ஓர் உற்சாகத்தை வெளியிடுவார். ஒரு பெரும் பாட்டையே திறந்து நெடுக போய்க்கொண்டே இருக்கும். இப்படி அமைந்த சந்தர்ப்பம் ஒன்றுதான் யாங்கள் கிளர்ந்த கூட்டத் தேட்டம். முன் பந்தம் கொளுத்தி பாட்டையில்லா காடுகளில் பதிவுத்தடம் போட்டு வழி காட்ட வேண்டியது என்பணி. யான் காட்டும் அவற்றை காணும் முனைப்பும், உள்ளத்தின் ஒத்திசைவும் கொண்ட நண்பர் குழாம் கும்மாளம் அடிக்க வேண்டியது அவர்தம் பணி. இப்படியொரு இயற்கையான பணிப்பங்கீட்டு முறை எங்களது.நண்பர் திரு மகேந்திரனும், திரு ரமேஷும் என் தம்பி திரு ரகுராமன் மூலம் எனக்கு அறிமுகம் ஆகியது 1987, 1988 என்று நினைக்கிறேன். மேலைநாட்டு தத்துவ விசாரம் மும்முரமாக போய்க்கொண்டிருந்த நேரம். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த விவாதம் விசாரம் பல டீ கடைகளுக்குப் போய்வரும், காலாற நடக்கும், முக்கில் நின்று முக்கியமான கட்டத்தை முடிக்கும். அப்படி 12, 1 என்று நள்ளிரவுப் பொழுது நின்று வேடிக்கை பார்த்துச் செல்ல ஸ்கூட்டர்கள் ஒவ்வொன்றாய்க் கிளம்பும். கீழ் வீட்டுக்காரர் வீட்டின் சொந்தக்காரர். நாங்கள் இருந்தவரை கவலையே இல்லாமல் உறங்கினார். ஒரு சின்ன சத்தம் என்றாலும் அதான் இவ்வளவு பூத பிசாசங்கள் இருக்கின்றனவே!அப்பொழுது அரிஸ்டாட்டிலின் தத்துவ மரபைப் பற்றி இயக்கவியலா மூலமுதலியக்கி என்ற கொள்கையை விவரித்துக் கொண்டிருந்தேன், நண்பர் மகேந்திரன் திடீரென்று இவ்வாறு ஆணித்தரமாக இயற்கையின் சத்யத்துவத்தின் மீது எழுப்பப்பட்ட தத்துவ முறைகள் நம்மிடம் உண்டா? என்ற கேள்வியைப் போட்டார். ஏனில்லை என்று ஆரம்பித்து யதார்த்த க்யாதியின் அடிப்படையில் எழுந்த ஸ்ரீராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அவரது வாழ்க்கை, ஆழ்வார்களின் வாழ்வு கருத்து, அதற்கு முந்தைய நிலை, அதற்குப் பிந்திய நிலை என்று எங்கள் கூடியிருந்து குளிர்தல் (உண்மையிலேயே குளிர்தல் ஏனெனில் அதுகால் மார்கழி நெருக்கம்) போய்க்கொண்டிருந்தது. 'சரி மோகன். இந்தக் கருத்துக்களை நாம் ஸ்ரீரங்கத்திலேயே அமர்ந்து நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க ஏற்பாடு பண்ணினால் என்ன? ' என்று கேட்டுவிட்டார். அங்கு ஆரம்பித்தது பாறையில் ஒரு சின்ன சில்லின் பெயர்ப்பு. கசிந்தது, பெருகியது, வழிந்தது, ஓடியது, இப்பொழுது ஆற்றின் இடைகுறையைச் சூழ்ந்து நதி அகண்ட ஓட்டமாய் நிச்சலனம் போன்று கீழோட்டம் மேலோட்டம் என்று ஜீவநதியாகி சப்தித்த வண்ணம் சதா ப்ரஸன்னம்.ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த மாதிரி மனிதர்கள் சமுதாயத்தில் முக்கிய திருப்பணியாளர்கள். என்னைப்போல சொல்ல ஆளிருந்தும், கேட்க ஆள் வந்தும், இரண்டு வித ஆள் சூழல்களை லிங்க் போடுவது அது தனி உற்சாகம் கைவந்த மனிதர்களுக்குத்தான் ஸ்வாபாவிகம். பிறகு மனிதன் எங்கிருந்தோ போனார் சொல்லி வைத்தாற்போல் சுமார் ஏழெட்டு நண்பர்களைக் கொண்டுவந்தார், எல்லோரும் அதே உற்சாகம், கருத்துகளில் அவ்வளவு ஆர்வம். பணக்காரர்கள் அன்று. மத்தியதர வகுப்பில் தொடக்க நிலைகள் என்று சொல்லலாம். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் பெரும் பண்பாட்டு மீட்பு இயக்கமாக வந்திருக்கக்கூடிய எங்கள் ஒருங்கிணைந்த ஊக்கத்தை நாங்களே அடக்கி ஒரு மாடல் ஸ்டடி என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. யார் பெரும்பணம் போடுவது? அப்பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம், அடடா நாம் வெளிநாட்டில் பிறவாமல் போனோமே என்று. இங்கோ ஊரை உண்ணும் கேணிகள்தான் அதிகமே ஒழிய ஊருண்கேணிகள் இல்லை.இல்லையெனில் ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சி, மைசூர், மேல்கோட்டை என்று நாங்கள் ஆரம்பித்த வேகத்தைப் பார்த்தால் பண்பாட்டை மீட்டே எடுத்து விடுவோம் என்ற திட நம்பிக்கை இருந்தது. ஸ்ரீரங்கம் போனபோது வேதவியாஸ பட்டர் வயதானவர் இரண்டு மூன்று ஆட்டோக்களில் வந்து இறங்குகின்றனர் என்பதைப் பார்த்து என்னவோ எதோ என்று வந்தார். பிறகு வந்த நோக்கம், பேச்சு இவற்றில் தம்மை இழந்து இரைந்து கூவினார், 'நீங்கள்தான் இனி எங்கள் தலைவர். சொல்லுங்கள் என்ன செய்யவேண்டும்? அதனை ஏற்க நாங்கள் தயார்' எத்தனை வயது எந்த வயதிடம் பேசுகிறது? அவர் நெகிழ்ந்து போனது எந்த இடத்தில் என்றால், நாங்கள் கூறினோம், 'ஐயா! உங்கள் குடும்பங்களில் நன்கு படித்து சொன்ன பேச்சைக் கேட்டு, ஒழுங்காக கோவிலுக்குப் போய், நல்ல பிள்ளையாய் பேரெடுக்கும் இளஞர் யுவதிகளை வேண்டாம். துடுக்குத் தனமாக கேள்வி கேட்டு, அராத்து, உருப்படாதது, திமிரு என்று பேர் வாங்கித் திரியும் இளைய சமுதாயம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள், எங்களுக்கு அவர்கள் தாம் வேண்டும். அவர்களிடம் தான் எங்களுக்கு வேலை.' அவர்களோ மற்றவர்களோ அனுஷ்டானம் என்று எதையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் தீராத கேள்வி, விசாரம் அவர்களிடம் இருக்க வேண்டும். இல்லையென்றாலும் ஊக்கம் இருந்தால் போதும், விசாரத்தை நாங்கள் கொளுத்திவிடமுடியும். இது எப்படிப் பலன் அளித்தது என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்.நண்பர் ஒருவர் வீட்டில் அவருடைய தந்தையைப் பெற்ற பாட்டி பாகவத அம்மாளாம். அதாவது பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக்கொண்டு வீட்டு மனிதர்கள் சமைத்துக்கூட உண்ணாமல் தானே முடியுமட்டும் சமைத்து, படைத்து உன்ணும் ஒருவரை அந்தணர் அல்லாத சமுதாயத்தினர் வீட்டில் பாகவதம்மா, பாகவதர் என்று அழைப்பது வழக்கம். சென்னையிலேயே அப்படி பல பாகவத வாழ்நெறியினர் இருந்த அடையாளம்தான் இன்றும் 100 150 வருஷ பழமை வாய்ந்ததுவாய் இருக்கும் பல பஜனைக் கூடங்கள். சரி கதைக்கு வருவோம். நண்பரின் பாட்டி இவரோடு முதலில் எல்லாம் பேசுவதேயில்லையாம். எல்லாம் கெட்டுப்போய்ட்டதுங்க என்ற அலுப்பு சர்வ சாதாரணம். எங்களுடைய கூட்ட அரட்டையில் நண்பர் பல சிகரெட்டுகள், டீ எல்லாம் முடிந்தும் பேசாமலேயே ஓர வானைப் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன மதி? பேச்சே காணும். என்றதும். ஒரு கெட்ட வசவு பின்னர், 'எல்லாத்தையும் நாசம் பண்ணி வச்சிருக்காங்களே சார்! எங்க பாட்டி பழகவே பழகாது, நான் இங்க தெரிஞ்சுகிட்டத மெள்ள போய் அவங்ககிட்ட உட்கார்ந்து சொல்லி நம்ம பாரம்பரியம் என்ன தாத்தா காலத்துல நமது பண்பாடு எப்படி நம் குடும்பத்துலேயே பேணப்பட்டது? எல்லாத்தையும் சொல்ல ஆரம்பிச்சு விசாரிச்சேன். கிழவி அழுதுடுச்சு. அப்ப எங்க அப்பா அந்தப் பக்கமா க்ராஸ் பண்ணாரு. அவருக்கு வைச்சுது பாருங்க ஒரு திட்டு. 'மூதேவி கெட்டுக் குட்டிச் சுவரா போனீயேடா! பார்ரா! என் பேரன் வட்டியும் முதலுமா எங்கிட்ட கிடைச்சிட்டான்டா! அந்த உடையவர் கடாட்சம் எங்கடா போகும்? போயி அவனா யாருகிட்டயோ தெரிஞ்சுக்கிட்டு வந்திருக்கான் பாரு. உங்க அப்பன் பேரை கெடுத்தியேடா பாவி ஒன்னைக் கரையேத்துவான்டா என் பேரன்!' எங்கள் கண்கள் குளமாகி விக்கித்துப் போய் நின்றோம். எந்தத் தலைமுறை எந்தத் தலைமுறையோடு சஹ்ருதயம் கொண்டாடுகிறது? இந்தத் தலைமுறைகளின் தொடர்ச்சியைத் துண்டித்தது யார்? வெள்ளைக்காரன் என்பதை விட அபத்தமான பதில் வேறு இல்லை. நாம்தான் நமக்கு ஒரு முன் தலைமுறைதான் அறியாமையை அறிவுபோல் சாயம் பூசி வைத்துக்கொண்டு துண்டித்தது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று புலனில் மக்கிபோகும் வாழ்க்கையை புரட்சி மனப்பான்மை போல் சித்திரித்து ஏன்று கொண்ட மடமைகளாய்ப் பஞ்ச பூதங்களும் நகும்படி அலைய வைத்தது நம் அறைகுறை தலைமுறை ஒன்றுதான். அதில் ஒன்றுதான் அந்தப் பக்கமாக க்ராஸ் ஆகி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கார்பன் ஆர்க் என்பார்களே அது தோற்றது போங்கள். பாட்டியும் பேரனுமாய் எம்பெருமானாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது, தந்தை கட்சி கலரில் மேல்துண்டு போட்டு கூட்டத்திற்கு நைஸாக நழுவுவது. பிள்ளைக்கு முன்னால் தகப்பன் தப்பு செய்தவன் போல் தயங்கியபடியே உள்ளே நுழைவது. வீட்டின் பண்பாடு முதல் தலைமுறையிடமிருந்து மூன்றாம் தலைமுறையிடம் அன்றோ பாய்கிறது. தள்ளி நிற்கும் நடுத் தலைமுறை எரியா பல்புதானே! யார் தொட்டாலும் சாப்பிடாத கிழவி பேரன் கொடுத்தா விசேஷமாம்! எதற்கும் ஓர் உடைபடு ரேகை உண்டல்லவா? 'அடியேன் ராமானுஜ தாசன்' என்று சொல்ல இந்த ஜன்மத்துல இந்த மூதேவிக்குக் கொடுத்துவச்சுருக்கா? போவுது பாரு பங்களாப் பொணம் மாதிரி. அவ்வளவுதான் ஒருகணம் நின்ற தகப்பன் முகத்தில் கோபம் வந்து மறைந்து சோகம் அப்பி, போட்ட மேக்கப் எல்லாம் வேஸ்ட் என்னும்படி, கண்ணில் கடைக்கோடி ஈரம் பூத்துக் கவிழ்ந்த தலை நிமிராமல் வெளியில் சென்றதைப் பார்த்த நண்பர் தம் தந்தைக்கு ஹிதம் எண்ணுபவராய்ப் பல சிகரெட்டுகள், டீக்கள் என்று முடிந்து மௌனம் கனத்து நடந்ததைக் கூறினார்.
மரபு பற்றிய விழிப்புணர்வு வர வேண்டுமெனில் காந்தி கொண்ட வழிதான் சரி.
நாமே கிளம்பி நம் மரபைத் தேட வேண்டும் (discovery of India). உள்ளத்தில்
ஆர்வமிருந்தால் எல்லா சக்திகளும் கூடும். பல நேரங்களில் மரபு, மூலிகை
போல் தன்னை சட்டென இனம் காட்டாமல் மூடி மறைத்துக்கொள்ளும். ஆர்வமுடன்
போனால் தானே உவந்து காட்டும்.
முன்பு இருந்ததை விட இப்போது இது இன்னும் சுலபமாக இருக்க வேண்டும்.
முன்பிருந்த சாதீயக்கட்டுப்பாடு இப்போது இல்லை. எல்லோரும் ஒரே
கோயிலுக்குத்தான் போகிறார்கள். எல்லோரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை
பார்க்கின்றனர். எல்லோரும் ஒரே ஓட்டலில்தான் சாப்பிடுகின்றனர். மொழி
என்பதும் பிரச்சனை தரக்கூடாது. பண்டிதர்கள் எப்போதும் ஏதாவது `தடா, புடா`
என்று பரிபாஷை போடுவார்கள். அதெற்கெல்லாம் மாற்று நம் ஆழ்வார்களும்,
ஆச்சார்யர்களுமே கண்டு வைத்துள்ளனர். எனவே அந்த ஃபார்முலா போதும்.
அறிவொளி இயக்கம் போல், `வேர்கள்` என்ற ஒரு இயக்கம் உருவாக வேண்டும். எந்த
பந்தாவுமில்லாமல், ஜாலியாக ஊர், ஊராகப் போய் வந்தாலே போதும். மண் நம்
வசமாகும். வேர்கள் பிடிபடும், வலுப்படும்.
ஓம் சுப்பிரமணியன் ஆத்மார்த்தமாக அந்தப் பரந்தாமனை அழைத்துவிட்டார். அவன்
மேல் பாரத்தைப் போட்டு, அப்பாவைக் காணப்போகும் பிள்ளையின் பாவத்தில்
போனால் ‘வானம் வசப்படும்’. ஓம்!
க.>
>அரிஸ்டாட்டிலின் தத்துவ மரபைப் பற்றி இயக்கவியலா
மூலமுதலியக்கி என்ற கொள்கையை விவரித்துக் கொண்டிருந்தேன்<
அரங்கனாரே,
இதன் ஆங்கில வடிவம் கொடுங்கள். வலையில் தேடிப்பார்த்து இது என்ன
என்று முதலில் தெரிந்து கொள்கிறேன்.
ரெ.கா.
On Sep 20, 2:10 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> அடியேன் ராமானுஜ தாசன்
> -------------------------------------------------
>
>
> அப்பொழுது அரிஸ்டாட்டிலின் தத்துவ மரபைப் பற்றி இயக்கவியலா
> மூலமுதலியக்கி என்ற கொள்கையை விவரித்துக் கொண்டிருந்தேன், நண்பர்
> மகேந்திரன் திடீரென்று இவ்வாறு ஆணித்தரமாக இயற்கையின்
> சத்யத்துவத்தின் மீது எழுப்பப்பட்ட தத்துவ முறைகள் நம்மிடம்
> உண்டா? என்ற கேள்வியைப் போட்டார். ஏனில்லை என்று ஆரம்பித்து
யார் அந்த மோஹினி?=====================அப்பொழுது எதுதான் புரிந்தது? மூடத்திலிருந்து தத்தித் தடவி நிர்மூடத்துக்குப் போகும் உற்சாக மனநிலை. விருப்பத்துக்கு எதிராக உபதேசம் பண்ணினால் கொடுங்கோலன். கிழட்டுத் தனத்தின் வாசலை நான் தட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நினைத்தால் இதயம் பெனாத்துகிறது
அதெல்லாம் மனுஷன் மகா புத்திசாலி. என் ஒருவனாலேயே அவர் பிரம்ம ஞானம் அடைந்து ஸம்ஸாரச் சுழலிலிருந்து விடுபட்டுப் போயிருப்பார். இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே என்பதற்கு நான்தான் அவருக்கு நடமாடும் வியாக்கியானம்.
இந்த மாதிரி மகனீயர்களுக்கு மகனாகப் பிறப்பதைவிட அவர் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பையனாகப் பிறப்பது எவ்வளவோ மேல். இந்த உறவு என்ற சவ்வு கண்ணை மறைக்காது இல்லையா ?
'கழிந்ததை நோக்கி கழிவிரக்கம், கடந்ததின் மிச்சம் மனவழுத்தம்'.
"அது சார். பிரகலாதனை அவன் அப்பாதானே சொல்றார். அவர் என்ன சொன்னா என்ன? கீழ்ப்படிய வேண்டியதுதானே மகனுக்கு கடமை. அப்படிக் கீழ்படிந்தா பெருமாளே குட் பாய் அப்படின்னு சந்தோஷப் படுவரோல்லியோ! நீங்க தானே சார் ஒரு க்லாஸ்ல சொன்னீங்க 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' அப்படீன்னு. அப்ப அவனும் அப்பாக்கு கீழ்ப் படிய வேண்டியதுதானே?"
தாயுமானவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இவர் தந்தையுமானவராக அல்லவோ மாறிக்கொண்டு வருகிறார்.
எதுத்த வீட்டில் பிறந்திருக்கலாம் என்று சொல்லும் போது பாவமாய்
இருக்கிறது. ஆனால் யார் கண்டது. அப்படி இருந்தால் இந்த ரங்கன்
திருவரங்கத்து மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கலாம். இந்த
Butterfly Effect இவருக்குத்தெரியாது போல ;-)
க.>
2009/10/4 meena muthu <ranga...@gmail.com>:
>>ஆனால் யார் கண்டது. அப்படி இருந்தால் இந்த ரங்கன்
திருவரங்கத்து மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கலாம்.<<
அடப்பாவி! இந்தக் குசும்பெல்லாம் உமக்குத்தான்யா வரும். மீனாக்கா எவ்வளவு அழகா உணர்ச்சிகளைப் புரிஞ்சுண்டு சொல்றாங்க. ஆசுவாசமா...ஆனால் நீர் சொல்றா மாதிரி ஆனாக்கூட பரவாயில்லைந்னு தோன்றது. ரங்கன் கிட்ட மடப்பள்ளி உத்யோகம்நா லேசு இல்லையா. அதுக்கே அந்தக் காலத்துல நாலாயிரம் தெரிஞ்சிருந்தாத்தான், இன்னொருத்தரோட உரிமை கைமாறும் போது கஷ்டப்பட்டு சொல்லி வாங்கணும். வெளி உலகத்துல எவன் எவன்கிட்டயோ கைகட்டி நிக்கறதுக்கு ரங்கன் கிட்ட அடுப்படி உத்யோகம் ராஜரீகம்!!
அன்புள்ள
தமிழ்த்தேனீ
>>ஆனால் யார் கண்டது. அப்படி இருந்தால் இந்த ரங்கன்
திருவரங்கத்து மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கலாம்.<<
அடப்பாவி! இந்தக் குசும்பெல்லாம் உமக்குத்தான்யா வரும். மீனாக்கா எவ்வளவு அழகா உணர்ச்சிகளைப் புரிஞ்சுண்டு சொல்றாங்க. ஆசுவாசமா...ஆனால் நீர் சொல்றா மாதிரி ஆனாக்கூட பரவாயில்லைந்னு தோன்றது. ரங்கன் கிட்ட மடப்பள்ளி உத்யோகம்நா லேசு இல்லையா. அதுக்கே அந்தக் காலத்துல நாலாயிரம் தெரிஞ்சிருந்தாத்தான், இன்னொருத்தரோட உரிமை கைமாறும் போது கஷ்டப்பட்டு சொல்லி வாங்கணும். வெளி உலகத்துல எவன் எவன்கிட்டயோ கைகட்டி நிக்கறதுக்கு ரங்கன் கிட்ட அடுப்படி உத்யோகம் ராஜரீகம்!!
On 10/4/09, N. Kannan <navan...@gmail.com> wrote:
யார் அந்த மோஹினி? 2---------------------------------------------கதாஸரித் ஸாகரத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். பயம் வந்துவிட்டது. அதில் ஏதோ ஒரு பூதம் கதையைப் பாதியில் நிறுத்தியதால் பட்ட கஷ்டங்களைப் பற்றிப் படித்தவுடன், ‘அட தேவுடா! நாம வேறு இந்த ’யார் அந்த மோஹினியை’ முடிக்கவே இல்லையே? அதற்குள்ள ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகித்தொலைச்சா நமக்கும் இந்த பூதத்தின் கதிதானேன்னு பயந்து போய் சமத்தா கதைக்கு வந்து சேர்ந்தேன். போதாதற்கு தந்தைக்கு மிகுந்த கஷ்டம் கொடுத்த புத்ர சிகாமணி என்று சொன்னேனா? அது வேறு எனக்கு உள்ளூற உறுத்திக்கொண்டே இருக்கிறது. எப்படி இருந்த மனுஷனை எப்படி நினைக்க வைத்துவிட்டேன்? நண்பர் ஒருவரிடம் கூறுகிறார்: ‘பையன் யாராவது பெண்ணை இழுத்துண்டு ஓடினான். அங்க வம்பு இங்க தும்புன்னு இருந்தாலாவது நிம்மதியா இருப்பேன் சார். ஏன்னா திருந்தும்! இதெல்லாம் பிஞ்சுல பழுத்த வேலை. சுத்திவர இருக்கறவாளும் ஆஹா ஓஹோன்னு பாராட்டி ,... திருந்தாது.’ என்று அழுதுகொண்டே அவர் கூறிக்கொண்டிருந்தது இப்பவும் நினைவில் இடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அடடா உங்களுக்கு என்ன விஷய்ம்னே சொல்லலை இல்லையா!வேறு ஒண்ணுமில்லை. சின்ன வயசிலிருந்தே ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர்னா அபரிமிதமான ஈடுபாடு. பள்ளிக்கூடம் படிக்கும் போதே ஸ்ரீரங்கத்துல ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த சங்கம் வைத்து நடத்தியிருக்கிறேன். அந்த ஈடுபாட்டிற்கும் விதை தந்தையிட்டதுதான். எங்க வீட்டு பூஜையறையில் ஒரே படம்தான் இருக்கும். வேற பெருமாள், ஸ்வாமி படம் ஏதும் கிடையாது. அது ஸ்ரீராமகிருஷ்ணர் படம் ஒண்ணுதான். சொந்தக் காராள், நண்பர்கள் என்று எத்தனையோ பேர் கேட்டுப்பார்த்திருக்கா அவர்கிட்ட. ‘ஏன் வேணு? ஏதாவது பெருமாள் படம், அம்பாள் படம்னு வைக்கக்கூடாதோ? இப்படி மனுஷாள் படத்தை வைப்பாளோ?’ அவருடைய ஒரே பதில், ‘ஐயா! நான் கடவுளைப் பார்த்தது கிடையாது. அவர் கடவுளைப் பார்த்திருக்கிறார். எனவே எனக்கு அவர்தான் கடவுள்’. பின்ன எனக்கு ஈடுபாடு வரக் கேட்பானேன்?கல்லூரி படிப்பு வந்ததும் பைத்தியம் முற்றத் தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்கு தோன்றியது. நாமோ ஸ்ரீராமகிருஷ்ண மடத்துலதான் சேரப்போகிறோம். எதற்கு தந்தையோட பணத்தை விரயம் பண்ணுவானேன்? இந்தப் படிப்பை முடித்து இவருக்கு உதவியாகவா இருக்கப் போகிறோம்? இல்லையே.ஒரு தீபாவளி முடிந்து மறுநாள் பாட்டியம்மை. அதையெல்லாம் கூட கவனிக்காமல் கல்லூரி போவதுபோல் கிளம்பி திருவானைக்காவலில் சென்னைப் பேருந்தில் ஏறிவிட்டேன். ஒரு நண்பனிடம் கடிதம் எழுதி மாலை வீட்டில் கொடுத்துவிடும்படி ஏற்பாடு. எல்லாம் ஒரே ட்ரமாடிக்காக. சின்ன பிள்ளைத் தனம் என்று இப்பொழுது புரிந்து யாருக்கு லாபம்? சரி போனதுதான் போனோம் என்று அங்கேயே ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே? அதுவும் இல்லை. அங்கு போய் இறங்கினதும்தான் பாசம், உலக வாழ்க்கையில் பிடிப்பு என்பது உள்ளிருந்து பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அப்பா என்ன கவலைப்படுவார்? அம்மா அப்படிப் பார்த்து பார்த்து வளர்த்தாளே அவள் என்ன நிலையாவாள்? ஐயோ என்ன காரியம் செய்தோம்? சரி இப்படிப் பாச மெழுகாய் உருகுகிற உள்ளம் அப்பொழுதே சொல்லித் தொலைத்திருந்தால் கிளம்பாமலாவது இருந்திருக்கலாம். இப்படி அங்கு இருக்கும் போது வைராக்கியம் இங்கு வந்தவுடன் பாசப் பிரவாகம் என்று இருதலைக் கொள்ளி எறும்பானேனே! என்று வெட்கம், தோல்வி மனப்பான்மை. அந்த அழுகை இரவிலும் மடத்தின் மாடியறை ஒன்றில் இருட்டில் இந்த மோஹினிதான் நினைவுக்கு வந்தாள். உலக வாழ்க்கையின் எல்லா பக்கமுமே இந்த மோஹினியின் ஆட்சியில்தான் இருக்கி்றது என்பது புரிந்தது.சிறுவயது நினைவு. தந்தை ஏதோ நாடகம் போடுகிறார். நாடகத்தில் ஒரு மாமி நடிக்கிறாள். கொள்ளை அழகு. ஆடியன்ஸில் ஒரே பேச்சு. சினிமாவிலிருந்து ஏதோ நடிகையை வரவழைத்திருக்கிறார்கள். பாருங்க என்னமா உடம்பைக் கட்டுக்கொப்பா பேணியிருக்கிறாள்? இண்டர்வலில் தந்தையைப் பார்க்க அடம் பண்ணியிருப்பேன் போல. தந்தையின் நண்பர் ஒருவர் வந்து என்னை க்ரீன் ரூம் பக்கம் அழைத்துப் போகிறார். அப்பொழுது பெரும் மீசை, கிரீடம் வைத்து ஒரு ராட்சசன் பெரிதாக சிரித்தபடி யாரையோ கழுத்தில் கதையைப் போட்டு வளைத்து வெளியே துரத்திக்கொண்டிருக்கிறான். நானோ கால் பின்னிழுக்க, தயங்குவதைப் பார்த்த அழைத்துச் செல்லும் நபர், ‘பயப்படாதப்பா! நம்ம எஸ் வி வேணுகோபால் நாயுடுதான்.’ என்று கூறுகிறார். ஐயோ அவரா இப்படி? நல்ல மாமா ஆயிற்றே!கடைசியில் பார்த்தால் அது பெரிய கதையாம்! வீட்டுக்கு வந்து அப்பா கதைகதையாகச் சொன்ன பிற்பாடுதான் புரிந்தது. யாரோ ஆபீஸ் அதிகாரி கொஞ்சம் பச்சை போல் இருக்கிறது. பார்த்தார். இந்த அழகு அமெச்சூர் மேடையில் ஆடலாமோ? எத்தனை பணம் செலவானால் என்ன? அழகும் தெய்வமும் இருக்க வேண்டிய இடத்தில் அன்றோ இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். மெதுவாக க்ரீன் ரூம் பக்கம் எட்டிப்பார்க்கப் போயிருக்கிறார். அப்பொழுதுதான் தன்னுடைய வசனத்தைப் பேசி நடித்துப் பார்த்துக்கொண்டிருந்த எஸ்விவி நாயுடு கண்ணில் பட்டுவிட்டார். இவர் மெதுவாக பூனை போல் உள்ளே நுழைய முனைவதைப் பார்த்த நாயுடு ஒரு அதட்டு போட்டிருக்கிறார். வெலவெலத்துப் போன ஆபீசர் ’அந்த மோஹினி அந்த மோஹினி தட் மோஹினி ’ என்று உளறிக்கொட்டி, திடீரென்று தன் அதிகாரம் நினைவுக்கு வரவே ‘நான் யார் தெரியுமா? டிஏஓ எப் ஏ அன் சிஏஓ என்று ஏதேதோ ஆல்பபட்ஸ் எல்லாம் சொல்லியிருக்கிறார். நாயுடு இயல்பிலேயே கொஞ்சம் தடாலடி. இவர் மாறி மாறி வழிவதும் எகிறுவதையும் பார்த்துக் கடுப்பாகிப் போய் கழுத்தில் கதையைப் போட்டபடி இழுத்து வெளியே தள்ளியிருக்கிறார். அப்பொழுதுதான் நாங்கள் அந்தப்பக்கம் போயிருக்கிறோம்.எனது தந்தையின் நண்பர்கள் இன்று சந்தித்துக் கொண்டாலும் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை. காரணம் அந்த அழகு சுந்தரி சொரூப ராணி மயக்கும் மோஹினி வேறு யாரும் இல்லை. மீனாட்சிசுந்தரம் என்றும் நண்பர்கள் மத்தியில் தரம் என்றும் அழைக்கப்படும் தந்தையின் நண்பர்தான். பெண்வேடத்தில் அவ்வளவு கச்சிதம். நடை பார்வை , தளுக்கு ஒடிப்பு என்று எல்லாவிதத்திலும். சிரிக்கும் போது அழகுப் பெண்களுக்கு என்று ஒரு நாணம் அப்பிக்கொள்ளும். அந்த அப்பலையும் எப்படித்தான் மனுஷன் அனுகாரம் பண்ணினானோ? இன்றும் சென்னையில் இருக்கிறார். இப்பொழுது அவரைப் பார்த்தாலும் அந்த அபீஸர் மயங்கியது நியாயமே என்று தோன்றும். இந்த மோஹினிதான் என்னுடைய பாசம் அழுகை உடைந்த முயற்சிகள் என்று குமுறிக்கொண்டிருந்த அன்று நினைவுக்கு வந்தது. அந்த ஆபீஸர் அவரைவிட என்னிலை என்ன வேறாகப் போய்விட்டது? அவருக்காவது உருவு தெரியும் மோஹினி கண்ணை மறைத்தாள். உருவுக்குள் இருந்த சத்யம் புலப்படாமல் போனாலும். எனக்கு சத்யம் என்ன என்று தெரிந்தும் உருவில்லாத ஏதேதோ மோஹினி மயக்கம் தானே. அந்த மோஹினி மட்டும் கண்ணில் பட்டுவிட்டால் பின்பு அனைத்திற்கும் ஒரு முடிவு வந்துவிடுமல்லவா? பிரச்சனையும் தீருமல்லவா? அந்த மோஹினி யார் என்று தெரிந்து கொள்ளும் நிலைக்குக் கிட்டத்தட்ட வந்துவிடுகிறேன். அப்பொழுதுபார்த்து ஏதோ கதாயுதம் கழுத்தில் வளைத்து வெளியே தள்ளிவிடுகிறது. யார் யாரோ சிரிக்கிறார்கள். முகமற்ற சிரிப்பு காதுக்கு மட்டும் புலனாகும். என்றாவது ஒரு நாள் கண்டுபிடித்து விடுவேன் யார் அந்த மோஹினி?
எனது தந்தையின் நண்பர்கள் இன்று சந்தித்துக் கொண்டாலும் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை. காரணம் அந்த அழகு சுந்தரி சொரூப ராணி மயக்கும் மோஹினி வேறு யாரும் இல்லை. மீனாட்சிசுந்தரம் என்றும் நண்பர்கள் மத்தியில் தரம் என்றும் அழைக்கப்படும் தந்தையின் நண்பர்தான். பெண்வேடத்தில் அவ்வளவு கச்சிதம். நடை பார்வை , தளுக்கு ஒடிப்பு என்று எல்லாவிதத்திலும். சிரிக்கும் போது அழகுப் பெண்களுக்கு என்று ஒரு நாணம் அப்பிக்கொள்ளும். அந்த அப்பலையும் எப்படித்தான் மனுஷன் அனுகாரம் பண்ணினானோ? இன்றும் சென்னையில் இருக்கிறார். இப்பொழுது அவரைப் பார்த்தாலும் அந்த அபீஸர் மயங்கியது நியாயமே என்று தோன்றும். இந்த மோஹினிதான் என்னுடைய பாசம் அழுகை உடைந்த முயற்சிகள் என்று குமுறிக்கொண்டிருந்த அன்று நினைவுக்கு வந்தது. அந்த ஆபீஸர் அவரைவிட என்னிலை என்ன வேறாகப் போய்விட்டது? அவருக்காவது உருவு தெரியும் மோஹினி கண்ணை மறைத்தாள். உருவுக்குள் இருந்த சத்யம் புலப்படாமல் போனாலும். எனக்கு சத்யம் என்ன என்று தெரிந்தும் உருவில்லாத ஏதேதோ மோஹினி மயக்கம் தானே. அந்த மோஹினி மட்டும் கண்ணில் பட்டுவிட்டால் பின்பு அனைத்திற்கும் ஒரு முடிவு வந்துவிடுமல்லவா? பிரச்சனையும் தீருமல்லவா? அந்த மோஹினி யார் என்று தெரிந்து கொள்ளும் நிலைக்குக் கிட்டத்தட்ட வந்துவிடுகிறேன். அப்பொழுதுபார்த்து ஏதோ கதாயுதம் கழுத்தில் வளைத்து வெளியே தள்ளிவிடுகிறது. யார் யாரோ சிரிக்கிறார்கள். முகமற்ற சிரிப்பு காதுக்கு மட்டும் புலனாகும். என்றாவது ஒரு நாள் கண்டுபிடித்து விடுவேன் யார் அந்த மோஹினி?
எனது தந்தையின் நண்பர்கள் இன்று சந்தித்துக் கொண்டாலும் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை. காரணம் அந்த அழகு சுந்தரி சொரூப ராணி மயக்கும் மோஹினி வேறு யாரும் இல்லை. மீனாட்சிசுந்தரம் என்றும் நண்பர்கள் மத்தியில் தரம் என்றும் அழைக்கப்படும் தந்தையின் நண்பர்தான். பெண்வேடத்தில் அவ்வளவு கச்சிதம். நடை பார்வை , தளுக்கு ஒடிப்பு என்று எல்லாவிதத்திலும். சிரிக்கும் போது அழகுப் பெண்களுக்கு என்று ஒரு நாணம் அப்பிக்கொள்ளும். அந்த அப்பலையும் எப்படித்தான் மனுஷன் அனுகாரம் பண்ணினானோ? இன்றும் சென்னையில் இருக்கிறார். இப்பொழுது அவரைப் பார்த்தாலும் அந்த அபீஸர் மயங்கியது நியாயமே என்று தோன்றும். இந்த மோஹினிதான் என்னுடைய பாசம் அழுகை உடைந்த முயற்சிகள் என்று குமுறிக்கொண்டிருந்த அன்று நினைவுக்கு வந்தது. அந்த ஆபீஸர் அவரைவிட என்னிலை என்ன வேறாகப் போய்விட்டது? அவருக்காவது உருவு தெரியும் மோஹினி கண்ணை மறைத்தாள். உருவுக்குள் இருந்த சத்யம் புலப்படாமல் போனாலும். எனக்கு சத்யம் என்ன என்று தெரிந்தும் உருவில்லாத ஏதேதோ மோஹினி மயக்கம் தானே. அந்த மோஹினி மட்டும் கண்ணில் பட்டுவிட்டால் பின்பு அனைத்திற்கும் ஒரு முடிவு வந்துவிடுமல்லவா? பிரச்சனையும் தீருமல்லவா? அந்த மோஹினி யார் என்று தெரிந்து கொள்ளும் நிலைக்குக் கிட்டத்தட்ட வந்துவிடுகிறேன். அப்பொழுதுபார்த்து ஏதோ கதாயுதம் கழுத்தில் வளைத்து வெளியே தள்ளிவிடுகிறது. யார் யாரோ சிரிக்கிறார்கள். முகமற்ற சிரிப்பு காதுக்கு மட்டும் புலனாகும். என்றாவது ஒரு நாள் கண்டுபிடித்து விடுவேன் யார் அந்த மோஹினி?
ஐயோ! என்ன இது!
உறவில்தானே இறைவனே உள்ளான்!
இப்படி இவரே சொல்லிட்டார்ன்னா இப்ப என்ன செய்யறது?
கேட்பார் யாரும் இல்லையா? ;-)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இல்லை சார்!பச்சை உண்மையைத்தான் சொல்றேன்.உறவுகள் பொய் என்றுசாயம் வெளுத்த பின்னர்ஒழிக்க ஒழியாத உயிர் உறவாகஉணர்ந்ததைப் பற்றிநம்மாழ்வார் எதுனாச்சும் சொல்லிண்டு போட்டும்.நமக்குப் புரிஞ்சதைத்தான்நாம் சொல்ல முடியும். ........*|*
பக்குவம் வருவதற்குள்பொட்டி படுக்கைக் கட்டுகிறோம்பக்கத்தில் நமனிருக்கப்பார்சுமக்க நாமிருக்கஅக்கப்போர் அத்தனையும்ஆலவட்டம் இட்டிருக்கவெக்கங் கெட்ட பிழைப்பினிலேவிளங்காத விரசம்தான்.விளங்காத விரசத்தில்வீறாப்பால் என்ன பயன்?ஆண்டியாய்ப் போனாலும்அரசமரப் பிள்ளைக்குப்பேச்சுத்துணை யானாலும்பூசிவைத்த ஜிகினாபொடியாகிப் போகையிலேஏசிவரும் விரசத்தில்எக்குரலும் எடுக்கலையே.
வேடிக்கை பார்த்திருப்போம்
பாழ்வெளியாம் கிணற்றினிலேபக்கெட்டுக் கயிறுவிட்டுபக்குவமாய் அமைதியினைப்பெற்றுவப்போம் நன்று சொன்னீர்பவப்பகலின் கடுவெப்பில்கிணறுகாய்ந்து நாளாச்சுபக்கெட்டும் ஓட்டைபல்லிளிக்கும் கயிறோடுபோராடும் வேளையிலேபேச்சுத் துணைக்குவந்தீர்!பெரியவரே வாழிய நீர்.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
2.வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ,
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே
என்னும் குலசேகர ஆழ்வார் பாடல். இது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை எளிய உவமையில் ஆழமாக உணர்த்துவதோடு பக்திப் பிரவாகமான கவிதை இது.
3. பாரதியின் காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்னும் பாடல். இதை விளக்க முடியாது. அதனுள் அவனாகிக் கரையும்போது அனுபவிக்கத்தான் முடியும்.
அன்புடன்
ஆராதி
வார்த்தைகள் இல்லை.வடியும் கண்ணீர் பேசுவதில்லை.*|*