ஆலம் விழுதுகளால் ஆல் பெயர் பெற்றது.
அதன் மூல வேர்: யாலு-/ஞாலு-/நாலு- (aerial roots of the banyan tree,
the National tree of India).
http://groups.google.com/group/mintamil/msg/6bc543d2f0c55142
-------------
இறைச்சி:
இறைச்சி தானே உரிப்புறத் ததுவே (தொல்காப்பியம். 1176)
இதிலிருந்து இறைச்சி என்பது உரிப்பொருளுக்குப் புறத்தே தோன்றும்
பறவை, விலங்குகள் போன்ற உயிரினங்களின் செயல் பற்றிய செய்தி என்பது
தெரியவருகிறது. அதாவது உயிரினங்களின் செயல்கள் மூலம் ஒரு குறிப்பை
உணர்த்துவது இதன் கருத்தாகும்.
நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழிஅவர் சென்ற ஆறே (குறுந்தொகை, 37)
(நசை = விருப்பம் (காதல்); நல்கல் = தருதல் (இங்கே திரும்பி வருதலைக்
குறிக்கும்); பிடி = பெண்யானை; வேழம் = ஆண்யானை; யாஅம் = யா எனும் மரம்;
பொளி = உரி; அன்பின = அன்பை உடையவை)
தலைவன் விரைவில் திரும்பி வருவான் என்று கூறித் தலைவியை
ஆற்றுவிக்கும் தோழி கூறும் செய்தி இது. “இவன் சென்ற வழியில் ஆண்யானை
ஒன்று தன் பிடியின் பசியைப் போக்க யா என்னும் மரத்தின் பட்டையை உரித்து
அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்யும். இந்த அன்பு தலைவன் நெஞ்சைத் தொடும்.
அவன் உன்மீது பெருங்காதல் கொண்டவனாதலின் திரும்பி வருவான்.” யானையின்
செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறியதனால் இது இறைச்சி ஆயிற்று.
------------------------
உவேசா பதிப்பு, குறுந்தொகை
----------------------------------------------------------
தோழி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர்
சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும்
காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில்
மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.)
37.
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
என்பது தோழி, கடிதுவருவாரென்று ஆற்றுவித்தது.
பாலைபாடிய பெருங்கடுங்கோ.
(பி-ம்) 1. ‘நல்கினு’; 3. ‘பிளக்கும்’, ‘பிளிக்கும்’.
(ப-ரை.) தோழி ---, நசை பெரிது உடையர் - தலைவர் நின்பால் விருப்பம்
மிக உடையவர்; நல்கலும் நல்குவர் - நல்குதலையும் செய்வர்; அவர் சென்ற ஆறு
- அவர் போன வழிகள், பிடி பசி - பெண்யானையினது பசியை, களைஇய -
நீக்கும்பொருட்டு, பெருகைவேழம் - பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்
சினை யாஅம் பொளிக்கும் - மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின் பட்டையை
உரித்து அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும், அன்பின - அன்பைப்
புலப்படுத்தற்கு இடமாக உள்ளன.
(முடிபு) நசை பெரிதுடையர்; நல்குவர்; அவர் சென்ற ஆறு அன்பின.
(கருத்து) தலைவர் விரைவில் மீண்டு வருவர்.
(வி-ரை.) நல்கல் - தலையளிசெய்தல் (குறள்.1156, பரிமேல்.) நல்கலும்
நல்குவர் - நல்குதலையுஞ் செய்வரென்னும் பொருளினது; நல்குவரென்பது
காரியவாசகமாக நின்றது (தொல். வேற்றுமை மயங். 29, ந.); இங்ஙனம் வரும்
தொடர்கள் பல இடங்களிற் காணப்படுகின்றன; “அணியலு மணிந்தன்று” (புறநா. 1:5)
என்பதற்கு, ‘அழகுசெய்தலும் செய்தது’ என்றும், “இயங்கலு மியங்கு மயங்கலு
மயங்கும்” (சிலப். 22:154) என்பதற்கு, ‘இயங்குதலையுஞ் செய்யும்;
மயங்குதலையுஞ் செய்யும்’ என்றும் உரையாசிரியர்கள் எழுதியிருத்தலைக்
காண்க. யாமரத்தைப் பொளிப்பதற்கேற்ற கருவியுடைமையைப் புலப்படுத்த,
‘பெருங்கை வேழம்’ என்றாள்.
யாஅம்: இது பாலை நிலத்திலுள்ளதொரு மரம்; யாவெனவும் வழங்கும்;
அவ்வழக்கு விளா விளாம், மரா மராமெனச் சில மரப்பெயர்கள் வழங்கி வரும்
முறையைப் போன்றதென்று தோற்றுகின்றது. இம் மரத்தின் பட்டை நீர்ப்பசை
மிக்கதென்று தெரிகின்றது. பொளித்தல் - உரித்தல்; “பெரும்பொளி
வெண்ணார்” (அகநா. 83:6).
இயல்பாகவே நின்பால் விருப்பமும் தலையளி செய்தலும் உடைய ராதலாலும்,
தாம் செல்லும் வழியில் நிகழும் நிகழ்ச்சி ஆண்பாலார் தமக்குரிய
மனைவியரிடத்தில் அன்பு வைத்துப் பாதுகாக்கும் கடமையை நினைப் பூட்டும்
இயல்புடையதாயினமையாலும் அவர் விரைந்து வந்துவிடுவ ரென்பது குறிப்பு.
தலைவனது பிரிவாற்றாமல் வருந்தும் தலைவிக்குத் தோழி, கருப்
பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறுதல்
வற்புறுத்தலாகுமாதலின் (தொல். பொருளியல், 37) இங்ஙனம் கூறினாள்.
(மேற்கோளாட்சி) மு. “இதனுள் முன்பே நெஞ்சகத்து அன்புடையார் அதன்
மேலே களிறு தன்பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய 1. ஆச்சாவைப்
பிளந்து அந்நாரைப் பொளித்து ஊட்டும் அன்பினையுடைய, அவர் சென்ற ஆறு,
அதனைக் காண்பர்காணென்று அன்புறு தகுந கூறிப்பிரிவாற்றாதவளை
வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று
கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின்
வழுவாயமைந்தது” (தொல். பொருளியல், 37, ந.). வருகுவர் மீண்டெனப் பாங்கி
வலித்தல் (நம்பி.170)
ஒப்புமைப் பகுதி 1. நசை பெரிதுடையார் : “யாரினு மினியன் பேரன்பினனே”,
“நசைநன் குடையர்” (குறுந். 85:1, 213:1). தலைவர் நல்குதல்: “நல்கார் நயவா
ராயினும்”, “துறைவன், நல்கிய நாடவச் சிலவே” (குறுந். 60:5,) 328: 3-4);
“நல்குவன் போலக் கூறி, நல்கானாயினும்” (ஐங். 167:3-4): “நல்குவ ரென்னு
நசை” (குறள். 1156). நல்கலும் நல்குவர்: குறுந். 218:4, 251:3, 268:2;
நற்.106:1, 147:7, 318:1; ஐங்.36:3; கலி.23:7, 54:8, 14, 55:19; அகநா.
8:18; புறநா. 1:5, அடிக்.
3. யாமரம்: தொல். உயிர்மயங்கு. 27.3-4. யானை யாமரத்தைப் பொளித்தல்:
(குறுந். 232:4-5); “உம்ப லகைத்த வொண்முறி யாவும்” (மலைபடு.429);
“பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத், தருஞ்சுரக் கவலைய வதர்படு
மருங்கின்” (அகநா.17: 16-7).
2-4. யானை யாவைப் பொளித்துப் பிடிக்கு ஊட்டுதுல்: (குறுந். 255: 1-5,
307: 4-7); “யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ் சிறந், தின்னா
வேனி லின்றுணை யார, முளிசினை யா அத்துப் பொளிபிறந் தூட்டப், புலம்புவீற்
றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்” (அகநா. 335: 4-8). பாலை நிலத்தில் யானை
பிடியைப் பாதுகாத்தல்: நற்.137:6-7; கலி.11:9.
மு.
“புன்றலை மடப்பிடி யுணீஇய ரங்குழை
நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட்
படிஞிமிறு கடியுங் களிறே... .... .. .. ..
. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ...
பிரிந்துசே ணுறைநர் சென்ற வாறே’’ (அகநா. 59: -18)
(37)
1.
இவ்வுரையினால், யாஅமென்பதை ஆவென்று நச்சினார்க்கினியர் கொண்டனரென்று
தோற்றுகின்றது.
----------------
நா. கணேசன்
பூரித்தல்/பூலித்தல் - மயிர் சிலிர்த்து, உடல் வளைந்து நிற்கும் பூனை.
எனவே, பூனை (< பூல்-/பூர்-), அதுவே பூசை, பூச்சா (மலையாளம் (அ)
குழந்தையர்) என்போம்.
பினைதல் - பிசைதல் - இழையில் பேசினோம்.
பூனை < பூல்- ஒப்பு: யானை < யால்- .
பூனையை பூச்சா என்பதுபோல, த்ராவிட மொழிகளில் பட்டை யாத்தல் உடைய
யா மரம் ஆச்சா ஆயிற்று.
நா. கணேசன்
யா மரம் ஆச்சா எனப்படுதல் ஏன்? ஒரு சொல்லாய்வு.
பூரித்தல்/பூலித்தல் - மயிர் சிலிர்த்து, உடல் வளைந்து நிற்கும் பூனை.
எனவே, பூனை (< பூல்-/பூர்-), அதுவே பூசை, பூச்சா (மலையாளம் (அ)
குழந்தையர்) என்போம்.
பினைதல் - பிசைதல் - இழையில் பேசினோம்.
பூனை < பூல்- ஒப்பு: யானை < யால்- .
பூனையை பூச்சா என்பதுபோல, த்ராவிட மொழிகளில் பட்டை யாத்தல் உடைய
யா மரம் ஆச்சா ஆயிற்று.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பூனை அவ்வப்போது தன் முகத்தை பூசுவது போல் தடவிக் கொள்வதால் அதற்கு பூசை எனப் பெயர் ஏற்பட்டதாக பாவாணர் வேர் விளக்கம் தருகிறார்.
பனிக்கரடிக்கு ஹரிமொழி கூறினால் +1
இகருப்பாக் இருப்பதால் கரடி எனப்பட்டதாக பாவாணர் கூறுகிறார்-வெள்ளையாக இருப்பதால் அதை வெண்டி என அழைக்கலாம். தெலுங்கில் வெண்டி என்றால் வெள்ளி உலோகத்தைக் குறிக்கும். அது வெண்மையாக இருததலால்.
சிங்கத்துக்கு அடிக்கடி அரிப்பு ஏற்படுவதால் அரி;
புலி பாய்ந்து தாக்கும்போது அதன் முன்கால்கள் (கைகளுக்குச் சமமானவை) வெகு வேகமகாவும்,
தாக்கப்பட்ட விலங்குக்கு வெம்மை தந்து வாட்டுவதாலும் அது வேம்கை=வேங்கை்;
கருப்பாக இருப்பதாலும் அடி அடியாக எடுத்து வைப்பதாலும் கர் அடி=கரடி; அங்கும் இங்கும் தாவிக்குதித்தபடி குர்குர் என்று ஒலி எழுப்புவதால் அது குர்அங்கு=குரங்கு.....
குறு உருவில் சிறிய எனப் பொருள் அதலால் அங்கு ஈறு சேர்த்து குறங்கு எனப்பட்டது. குறங்கு > குரஙகு என்றானது.
அட! நாங்கூட பகவமுதலி போடலாம் போல இருக்கே! என்பெயர்கூட அருளிச் செயல் போலவே ஒலிக்கிறது. ம்ம்? யோசிக்கிறேன். : \))
இது என்ன பிரமாதம்! நீங்கள் இன்னொரு பகவத் கீதையையே அருள வல்லவராயிற்றே. பகவமுதலி எம்மாத்திரம். உங்கள் அருள் வாக்கை நூலாக வெளியிடுங்கள் . நூற்றுக்குநூறு மதிப்பளிக்க பேரா. விசயராகவர் உண்டு என்பதை மறத்தல் வேண்டாம்.
.
அன்புடன்,
ஹரிகி.
--
On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > புலி பாய்ந்து தாக்கும்போது அதன் முன்கால்கள் (கைகளுக்குச் சமமானவை) வெகு
> > வேகமகாவும்,
>
> புல்லுதல் என்றால் தழுவுதல். புலி நடக்கும் போது அதன் முன்னங் கால்கள்
> தழுவுதல் போல்இருத்தலால் அதற்கு புலி எனப் பெயர் இடப்பட்டதாக பாவாணர்
> உரைக்கிறார்.
>
புலி பாதத்தால் அறைந்து கொன்று புலவு, புலால் தின்னுவதால்
ஏற்பட்ட பேர் என எண்ணுகிறேன். புலி - புலாலுண்ணி (carnivore
as opposed to herbivore).
'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ - பழமொழி.
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ... [யானை] - நற்றிணை 202.
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் - நற்றிணை 39
புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் - பதிற்றுப்பத்து
புலி புலால் ஊனை சேமித்து வைத்து பல நாள் உண்ணும்.
சில வாரங்கள் திரும்பித் திரும்பி தான் அடித்த கடமான்,
ஆமான், ... இடத்துக்கு மீண்டு வரும். இச் செயலைச்
சங்கமும் குறிக்கிறது.
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை - குறுந்தொகை 253
”அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு” - புறம் 52
etc. etc.,
புலிகள் தமிழர் வாழ்க்கையில் பெரிய சின்னம். சோழர்களுக்கும்,
அதற்குமுன் சிந்து தீரத்திலும் காணலாம். சிந்து நதிக்கரை
கலைகளில் புலி மட்டும் இருக்கிறது, சிங்கம் இல்லை.
அண்டை நாடுகளில் சிங்கம் சின்னமாக இருந்தாலும்,
Asiatic சிங்கம் அப்போது இருந்தாலும் கலைவெளிகளில்
அதைத் தவிர்த்துவிட்டனர். கொற்றவையின் கூறாக
புலியைத் தான் காட்டியுளர். கொற்றவை இரு புலிகளுக்கிடையே
நிற்கும் சிற்பம், மெசோபடோமியாவின் கில்காமிஷ் வீரன்
இரு சிங்கங்களுக்கிடையே நிற்பதைப் பார்த்து அமைந்தது.
சிங்கத்தைப் புலியாகவும், ஆணைப் பெண்ணாகவும்
மாற்றியுள்ளனர். வடநாட்டுக் கதைகளில் ஆண் ஹீரோதான்,
தமிழில் இளங்கோ கண்ணகியை (கொற்றவையின் இலக்குமி
அமிசம்) ஹீரோ ஆக்குகிறார். அதுபோல.
நா. கணேசன்
இதனை முதலில் சொன்னவர்கள் சைவர்கள். கோவையில்.
பாவாணருக்கு முன்னர். சைவம் உச்சத்தில் இருந்த 20-ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் சைவர்கள் புலால் உணவைப்
பற்றிச் சொல்ல மாட்டார்கள்.
புல்லுதல் என்பது அடிப்படை ஆனால், புல்லி (பல்லி) என்றுதான்
பேர் இருக்கும். ஆனால், புலிக்கு அடிப்படைப் பண்பு கார்னிவோர்
என்பதே. புலி - புலா உடன் இணைப்பது சாலும்.
நா. கணேசன்
On Aug 12, 11:39 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> விளக்கம் தாங்க முடியலை ஐயா
>
> இதை யார்கிட்டயாச்சும் சொல்லி அழணும் போல் இருக்கு.
>
> :((((((
>
> அம்புடன்,
>
> தி.பொ.ச.
இந்தோ-ஐரோப்பியச் சொல்லான தெய்வம் என்பது தமிழ்
என்பதை பேரா. சி. இலக்குவனார் விளக்கியுள்ளார்.
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம்
சிலர் தெய்வம் வேறு ; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல்,
கடவுள் தென்
சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும்
ஒன்றே.
‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும்.
உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத்
தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது
தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும்
தமிழ்ச்
சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138)
அல்லது
http://literaturte.blogspot.com/2011/08/42.html
-------------
நா. கணேசன்
>
> 2011/8/13 seshadri sridharan <sseshadr...@gmail.com>
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஆர்ய சக்கிரவர்த்தி சங்கிலிய மன்னன் குடும்பம்
ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற பண்டாரங்கள்
என்று கருதுகிறார்கள். சங்கிலியன் சிலை
முதலில் செ. சிவப்பிரகாசம் அமைத்து
தற்பொழுது தமிழ்நாட்டு சிற்பி கலிகைப்பெருமாள்
புருஷோத்தமனால் புதுக்கப்பட்டுவிட்டது.
யாழில் நடந்த விழா விவரம், ஒளிப்படங்கள் காண:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/3163ea30e74d404d?scoring=d&
நா. கணேசன்
புல்லுதல் என்பது அடிப்படை ஆனால், புல்லி (பல்லி) என்றுதான்
பேர் இருக்கும். ஆனால், புலிக்கு அடிப்படைப் பண்பு கார்னிவோர்
என்பதே. புலி - புலா உடன் இணைப்பது சாலும்.
ஐயா புல்லுதல் என்பதற்கு பல பொருள் உளதாக பாவாணர் குறிக்கிறார். புல்லுதல் என்பதற்கு ஒட்டுதல் எனவும் பொருள் காட்டி மரம் சுவர் முதலாயவற்றில் ஒட்டிக் கொண்டிருப்பது ஆதலால் புல்லி > பல்லிஎன்றானதாக வேர் விளக்கம் தருகிறார் பாவாணர். National Geography இல் புலி நடந்து வருவதைப் பார்த்தால் அதன் கழுத்தின் கீழ் மார்பை ஒட்டிய கால் பகுதி தழுவினார் போல் அசைவது தெரியும். அதை வைத்துத் தான் அவர் புல்லி > புலி என்றார். புலாலை வைத்து பெயரிடப்பட்டால் நரிக்கும், கழுதைப் புலிக்கும்,கரடிக்கும் கூட அது பொருந்தும்.
நா. கணேசன்
சேசாத்திரி:
> > ஐயா
> > புல்லுதல் என்பதற்கு பல பொருள் உளதாக பாவாணர் குறிக்கிறார். புல்லுதல்
> > என்பதற்கு ஒட்டுதல் எனவும் பொருள் காட்டி மரம் சுவர் முதலாயவற்றில் ஒட்டிக்
> > கொண்டிருப்பது ஆதலால் புல்லி > பல்லி
> > என்றானதாக வேர் விளக்கம் தருகிறார் பாவாணர். National Geography இல் புலி
> > நடந்து வருவதைப் பார்த்தால் அதன் கழுத்தின் கீழ் மார்பை ஒட்டிய கால் பகுதி
> > தழுவினார் போல் அசைவது தெரியும். அதை வைத்துத் தான் அவர் புல்லி > புலி
> > என்றார். புலாலை வைத்து பெயரிடப்பட்டால் நரிக்கும், கழுதைப்
> > புலிக்கும்,கரடிக்கும் கூட அது பொருந்தும்.
>
புலாலையே உணவாகக் கொண்டது புலி தான். ‘புலி பசித்தாலும் புல்லைத்
தின்னாது’.
கரடி தேனை விரும்பி உண்ணுவது. நரி கிடத்ததை உண்பது.
புல்லுதல் என்பது வேரானால் புல்லி என்ற பெயர் வரும். புலி ஆகாது.
புலியின் சிறப்பே அதன் வேட்டையாடி ஊன் உண்பது, புலி நடக்கும், ஓடும்,
பாயும், பதுங்கும், மரமேறும். இந்த எல்லாச் செயலும் புல்லுதலில்
அடங்காது. ஆனால்
தழுவிச் செல்வது எப்பொழுதும் பல்லி. அதனால் தான் புல்லி/பல்லி
புல்லுதலை அடிவேர் ஆக்கினது.
நா. கணேசன்
> தமிழைப் பொருந்த வரை வேர் விளக்கம் என்பது 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய
> ஒரு புதுக் கல்விப் புலம். சமற்கிருதத்தில் அது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே
> தோன்றி விட்டாலும் அது ஒரு செயற்கை மொழி என்பதால் அதற்கு அவ்வாறு வேர் விளக்கம்
> தர வேண்டிய கட்டாயம் இருந்தது. அவ்வாறு வேர் விளக்கம் தந்தவர்கள் அதற்கு எந்த
> இலக்கிய மேற்கோளும் கட்டியதில்லை என்பதை தமிழ் வேர் விளக்கம் காட்டுவோர்
> குறிக்கின்றனர்.
>
உண்மை. இன்னும் திராவிட பாஷைகள், முண்டா பாஷைகள் வேரியல் ஆய்வு
தொடக்க நிலையிலே உள்ளது.
On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> வேங்கை வங்கத்துப் புலி ஆதலால வேங்கை எனப்பட்டது- Benga
>
வேங்கை மரம்? வங்கமா?
வேங்கை மரம்? வங்கமா?
On Aug 12, 9:55 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> வேங்கை வங்கத்துப் புலி ஆதலால வேங்கை எனப்பட்டது- Benga
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வேங்கை மரம்? வங்கமா?
ஐயா நான் Bengal Tiger ஐ குறிப்பிட்டேன் மரத்தை அல்ல
NG> > வேங்கை மரம்? வங்கமா?
On Aug 14, 1:12 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > ஐயா நான் Bengal Tiger ஐ குறிப்பிட்டேன் மரத்தை அல்ல
>
> > --
அதனால் தான் கேட்டேன்.
வேங்கை - அடிப்படையான தமிழ்ச் சொல். மரத்துக்கும், விலங்குக்கும் வரும்.
வேங்கை வங்கத்தினின்றும் வேறானது.
வங்கம் - வங்கு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்து.
வங்கு ரிக்வேதத்தில் உள்ள தமிழ்ச் சொல்.
வங்கம் மலி கடல் - ஆழ்வார்.
வங்கம் நிறைந்த பகுதிக்கு த்ராவிடர் வைத்த பெயர்.
தொல்திராவிட பாஷையின் பிறப்பிடம் வங்க-ஒரிசா பகுதி
என்ப.
நா. கணேசன்
வங்கம் - வங்கு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்து.
வங்கு ரிக்வேதத்தில் உள்ள தமிழ்ச் சொல். வங்கம் மலி கடல் - ஆழ்வார்.
வங்கம் நிறைந்த பகுதிக்கு த்ராவிடர் வைத்த பெயர்.
இங்கு நீங்கள் வங்கம் என குறிப்பிடுவதன் பொருள் ?
தொல்திராவிட பாஷையின் பிறப்பிடம் வங்க-ஒரிசா பகுதி என்ப.
Proto-Dravidian என்ற மொழி இருந்ததற்கான சான்றே இல்லை. இருந்தால் காட்டவும். தமிழ் என்பதே சாலவும் பொருந்தும். தமிழ் பண்டு இந்தியா முழுதும் வழங்கியது என்பதற்கு சிந்து எழுத்துகளே சான்று.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.