ஆதியாய் நின்றது மன்னவன் கோல்!

283 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
Jun 23, 2011, 4:36:14 AM6/23/11
to மின்தமிழ், DEV RAJ, Vinodh Rajan
ஆதியாய் நின்றது யார் என்றுத் தெரிந்துக் கொள்ள,


http://banukumar_r.blogspot.com/2011/06/blog-post_23.html


இரா.பானுகுமார்,
சென்னை

கி.காளைராசன்

unread,
Jun 23, 2011, 7:10:41 AM6/23/11
to mint...@googlegroups.com, DEV RAJ, Vinodh Rajan
ஐயா பானுகுமார் அவர்களுக்கு வணக்கம்.

"ஆதி" என்றால் என்ன?
அன்புடன் விளக்குமாறு  ​கேட்டுக் ​கொள்கி​றேன்.

"ஆதி" என்ற குறள்​சொல்லுக்கு "Authority" என்று ​பொருள் என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்த​தை இங்​கே நி​னைவு கூர்கி​றேன்.

அன்பன்
கி.கா​ளைராசன்

Rajasankar

unread,
Jun 23, 2011, 12:13:55 PM6/23/11
to மின்தமிழ், errajasa...@gmail.com
மன்னவனின் கோல் ஆல் தான் அறமும் நூலும் நிற்கிறது. இந்த இரண்டையும்
தாங்கி பிடிப்பது மன்னவன் கோல்.

தர்மத்தை காக்க மன்னவன் இருக்க மன்னவனை தருமம் காக்கிறது. இங்கு தருமம்
என்பது தான் அறமும் நூலும். இரண்டும் ஒன்றை ஒன்று காப்பது தான் பண்டைய
நீதி முறைமை. எவ்வாறு தேவரும் மனிதரும் ஒருவரை ஒருவர் காக்கிறார்கள் என
கீதையில் சொல்லப்பட்டுள்ளது போல் இதுவும். நூலறிந்தோர் தவறும் போது
தடுத்தாள மன்னனும் மன்னன் தவறும் போது தடுத்தாள நூலறிந்தோர் என இருப்பதை
சொல்லுகிறார் வள்ளுவர்.

செல்வன்

unread,
Jun 23, 2011, 1:00:39 PM6/23/11
to mint...@googlegroups.com
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

மன்னவன் செங்கோல் வளையாது நின்றால் தான் வேள்விகள் அந்த நாட்டில் நடைபெறும், தருமம் செழித்தோங்கும். வேள்விகள் நடைபெற்றால் தான் தேவர்கள் மனம் மகிழ்ந்து மழையை வரவழைப்பர்.ஆக அனைத்துக்கும் அடிப்படை வேள்விகளும், வேள்விகளை காக்கும் மன்னனின் கோலுமே ஆகும்.

இதே கருத்தை அடியொட்டி வரும் மேலும் சில குறள்கள்

ஆபயன் குன்றும் அறுதொழொலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

இயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்
பெயலும் விளையுளும் தொக்கு.

(இங்கே வள்ளுவர் மழை வர காரணமே மன்னனின் செங்கோன்மை தவறா ஆட்சிதான் என்கிறார்.அது மேலே சொன்ன லாஜிக் படிதான்)

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 27, 2011, 12:44:09 AM6/27/11
to mint...@googlegroups.com
இங்கே அந்தணர் நூல் என்பது வேளாண் மக்களின் ஏரினைக் குறிக்கும். அறம் என்பது பிறர்க்கு கொடுத்து உதவுவதைக் குறிக்கும்.

'ஐயா, தர்மம் (அறம்) பண்ணுங்கய்யா' 

வேளாண்மக்களின் ஏருக்கும் (உழவுத் தொழிலுக்கும்) பிறருக்கு உதவி செய்யும் நல்ல் பண்பிற்கும் அடிப்படை ஆதாரமாய் இருப்பது மன்னனின் வளையாத ஆட்சி முறையாகும்.

கொடுங்கோலாட்சியில் வேளாண்மக்கள் உழவுத்தொழிலை மறப்பர். 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்

- இக் குறளுக்கு ஏற்கெனவே 'நூல் என்றால் என்ன?' என்ற எனது கட்டுரையில் விளக்க்ம் கூறியுள்ளேன்.

உழவு இல்லையேல் உணவில்லை. உணவில்லையேல் அறம் இல்லை.

எனவே தான் மன்னனின் நல்ல ஆட்சி முறையினை இரண்டிற்கும் ஆதாரம் என்கிறார். அந்தணர் நூல், அறம் - இவ் இரண்டில் வள்ளுவர் அந்தணர் நூலாகிய ஏருக்கே முதன்மைத்துவம் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.


அன்புடன்,

தி.பொ.ச.



2011/6/23 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

இரா.ச.இமலாதித்தன்

unread,
Jun 27, 2011, 6:45:23 AM6/27/11
to mint...@googlegroups.com
//சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார். ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.//

இந்த செய்திகளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா...? ஒரு மன்னனால், ஒரு குலத்தை எப்படி உருவாக்க முடியும்...? நம்பும் படியான செய்திகளை மட்டுமே பதிவேற்றுங்கள்.மனதில் நினைப்பதையெல்லாம் கவிதையாய்  மட்டுமே எழுதாலாம்.ஆனால், உங்கள் கருத்துகளை வரலாற்றுக்குள் புகுத்தி, புதிதாக திருத்த வேண்டாம் என்பது என் கருத்து.




- இரா.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com


ranganathan venkatachariar

unread,
Jun 27, 2011, 6:51:53 AM6/27/11
to mint...@googlegroups.com
exactly correct
rangan

2011/6/27 இரா.ச.இமலாதித்தன் <emalat...@gmail.com>:

செல்வன்

unread,
Jun 27, 2011, 9:16:48 AM6/27/11
to mint...@googlegroups.com


2011/6/26 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

இங்கே அந்தணர் நூல் என்பது வேளாண் மக்களின் ஏரினைக் குறிக்கும். அறம் என்பது பிறர்க்கு கொடுத்து உதவுவதைக் குறிக்கும்.


சரவணன் ஐயா

"அந்தணர் நூல்" என்பதுக்கு "உழவர்களின் ஏர்" என பொருள் காணும் அறிஞர் எனக்கு தெரிந்து தாங்கள் மட்டுமே. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக குறளுக்கு உரை எழுதிய ஒரு அறிஞர் கூட இப்படி குறளுக்கு பொருள் கண்டதில்லை.

Geetha Sambasivam

unread,
Jun 27, 2011, 9:26:48 AM6/27/11
to mint...@googlegroups.com
எல்லாத்தையும் படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். ஒண்ணும் புரியலை!

2011/6/27 செல்வன் <hol...@gmail.com>
361.gif

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 27, 2011, 9:33:46 AM6/27/11
to mint...@googlegroups.com
செல்வன் ஐயா

மனிதன் தோன்றி கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும் இன்னும் மெய்ப்பொருளைக் காண முயன்று கொண்டுதானே இருக்கிறான். அதைப் போலத்தான் இதுவும்.

எனக்கு வள்ளுவத்தில் பிடித்தது: 'இறைவன் அறிவு வடிவானவன்.' என்பதே.

இக் கருத்தில் எனக்கு எவ்வித மாற்றமுமில்லை.

மதம், சமயம், மொழி போன்ற எல்லா அடையாளங்களையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு சாதாரண மனிதனாய் வள்ளுவத்தை அணுகிப் பாருங்கள். அங்கே உங்களை ஆச்சர்யப்படுத்தும் சங்கதிகள் நீங்கள் இதுவரை அறிந்திராத சங்கதிகள் உங்கள் முன் உதயமாகி உங்களை வரவேற்று உற்சாகப்படுத்தும். அந்த உண்மைகளின் தர்சனம்  தரும் ஆனந்தத்தில் நீங்கள் உங்க்ளையே மறப்பீர்கள். 

நான் திருக்குறளில் கண்ட பேரானந்தம் இதுவே.

சில்வற்றை என்னால் வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை.

நான் ஏதோ பிதற்றுகிறேன் என்று எண்ணவேண்டாம். இது உண்மை.

அந்தணர் நூல் என்பத்ற்கு உழவரின் ஏர் என்று கூறியுள்ளேன். அதற்கு ஆதாரங்களும் கொடுத்துள்ளேன். 

அன்புடன்,

தி.பொ.ச.
2011/6/27 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

selva kumaran

unread,
Jun 27, 2011, 9:41:57 AM6/27/11
to mint...@googlegroups.com
திரு. சரவணன்

எனக்கும் அந்தணர் நூல் என்பதை உழவர்களின் ஏர் என்று பொருள் கொண்டதில் உடன்பாடில்லை.

எனக்கு இப்போதெல்லாம் ஒரு பெரும் ஏக்கம் எழுகிறது: 'இநத நூல் எழுதியவர்களே பேசாமல் தாங்கள் என்ன எழுத நினைத்தோம் என்று சொல்லி விட்டுப் போயிருக்கலாமே' என்று.


இப்போதெல்லாம் எதை எதையோ எழுதி விட்டு மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி எழுதுபவர் எல்லாம் எழுதவதை கவிதையாக எழுதி விட்டால், அநத வரிகளை வைத்து இதைத்தான் இவர் சொன்னார் என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியாமல் போயிருக்கும்.

போகிற போக்கில் சிலப்பதிகாரம்  டஸ்கனி பீட்ஸா பற்றியது என்று யாராவது சொல்லாமல் இருந்தால் சரி.

2011/6/27 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 27, 2011, 9:44:05 AM6/27/11
to mint...@googlegroups.com
போகிற போக்கில் சிலப்பதிகாரம்  டஸ்கனி பீட்ஸா பற்றியது என்று யாராவது சொல்லாமல் இருந்தால் சரி.//

இது நல்லா இருக்கே?? டஸ்கனி பீட்ஸா கேட்டதில்லையே?? அதையும் தனி இழையில் சொல்லிடுங்க.

2011/6/27 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
திரு. சரவணன்

எனக்கும் அந்தணர் நூல் என்பதை உழவர்களின் ஏர் என்று பொருள் கொண்டதில் உடன்பாடில்லை.

எனக்கு இப்போதெல்லாம் ஒரு பெரும் ஏக்கம் எழுகிறது: 'இநத நூல் எழுதியவர்களே பேசாமல் தாங்கள் என்ன எழுத நினைத்தோம் என்று சொல்லி விட்டுப் போயிருக்கலாமே' என்று.


இப்போதெல்லாம் எதை எதையோ எழுதி விட்டு மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி எழுதுபவர் எல்லாம் எழுதவதை கவிதையாக எழுதி விட்டால், அநத வரிகளை வைத்து இதைத்தான் இவர் சொன்னார் என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியாமல் போயிருக்கும்.

போகிற போக்கில் சிலப்பதிகாரம்  டஸ்கனி பீட்ஸா பற்றியது என்று யாராவது சொல்லாமல் இருந்தால் சரி.


--
360.gif

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 27, 2011, 9:52:21 AM6/27/11
to mint...@googlegroups.com
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழு கலான்

இங்கும் அந்தணர் என்பது உழவர்களையே குறிக்கிறது. 

இவர்களே உணவைப் படைத்து மற்ற உயிர்களுக்குக் கொடுத்து செந்தண்மையுடன் வாழ்கின்றனர்.

அன்புடன்,

தி.பொ.ச.

2011/6/27 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

செல்வன்

unread,
Jun 27, 2011, 11:51:07 AM6/27/11
to mint...@googlegroups.com
சரவணன் ஐயா

உங்கள் கட்டுரைகள், அதற்கு நீங்கள் அளித்த ஆதாரங்கள் எல்லாவ்ற்றையும் நான் படித்துள்ளேன். எனக்கு அவை எதுவும் திருப்தி அளிக்கவில்லை. தங்கள் குறள் விளக்க உரைக்கு பிற தமிழறிஞர்கள் ஆதரவு அளித்தாலே தங்கள் விளக்க உரையை உலகம் ஏற்கும். அதுவரை அவை உங்கள் கருத்துக்களே அன்றி உண்மையல்ல.

சமயம், மொழி இதை எல்லாம் அணிந்து கொண்டு நான் எந்த படைப்பையும் அணுகுவதில்லை. ஆனால் நான் தமிழ் அறிஞன் அல்ல என்பதால் என் விமர்சனத்தை கூட நீங்கள் ஏற்க வேண்டியதில்லை.மின் தமிழில் தமிழுக்கு மிகபெரும் சேவைகளை செய்த அறிஞர்கள், தமிழை கரைத்து குடித்த பல அறிஞர்கள், தமிழ் பேராசிரியர்கள் உள்ளனர்.அவர்களிடம் உங்கள் படைப்பை அளித்து விமர்சனத்தை கோருங்கள்.அவர்கள் அதை ஏற்றுகொண்டார்கள் எனில் நானும் மறுபேச்சின்றி ஏற்றுகொள்கிறேன்.

selva kumaran

unread,
Jun 27, 2011, 12:38:01 PM6/27/11
to mint...@googlegroups.com
தமிழ் அற்புதமான மொழி. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் பொருள் வரலாம்.

ஆனால் இடம், பொருள், ஏவலைக் கொண்டு பொருளறிதலே சரியாகும்.

உதாரணமாக,


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

என்ற குறளை இஷ்டத்திற்கு எப்படி மாற்றலாம் என்று பாருங்கள்.



அந்து அணர் நூற்கும் அறு அத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்


அப்படியாக மேனோக்கி சுழற்றும் ஆறு பறவைக்கும் ஆதியாய்
நிற்பது மன்னவனின் தெப்பம்.


சரி இதற்கு பொருள் கூற முடியாதா?

மீண்டும் எடுத்துக்காட்டாக, இந்து தத்துவ ரீதியாய் பார்ப்போம்.

மேனோக்கி சுழற்றும் ஆறு பறவைகளான சாங்கியம், யோகம், வேதாந்தம்,நியாயம், வைசேஷிகம், மீமாம்ஸம்  என்னும் ஆறு பறவைகள்  (ஆமாம் ஷட் தரிசனமாகிய இவைகளை பறவைகள் எனும் metaphorஐக் கொண்டு குறிப்பிடுவதும் வழக்கம்) ஆதியாகிய இறைவனின் தெப்பத்தால்தான் மூழ்காமல் இருக்கின்றன.

இதைச் சரியான பொழிப்புரை என்று ஒப்புக் கொள்வீர்களா?

நிச்சயமாக வள்ளுவர் இந்தப் பொருளில் சொல்லவில்லை என்று நம் மனதிற்கே தெரியும்.




2011/6/23 செல்வன் <hol...@gmail.com>
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

N. Ganesan

unread,
Jun 27, 2011, 6:48:13 PM6/27/11
to மின்தமிழ்
On Jun 27, 5:45 am, இரா.ச.இமலாதித்தன் <emalathit...@gmail.com> wrote:
> //சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
> அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
> க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
> ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே பிராமணர்க்4
> குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.//
> *

> இந்த செய்திகளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா...? ஒரு மன்னனால், ஒரு குலத்தை
> எப்படி உருவாக்க முடியும்...? நம்பும் படியான செய்திகளை மட்டுமே
> பதிவேற்றுங்கள்.மனதில் நினைப்பதையெல்லாம் கவிதையாய்  மட்டுமே எழுதாலாம்.ஆனால்,
> உங்கள் கருத்துகளை வரலாற்றுக்குள் புகுத்தி, புதிதாக திருத்த வேண்டாம் என்பது
> என் கருத்து.
> **
>

அன்பின் இமலாதித்தன்,

சமண சமயத்தில் பெருவாரியான சைவ/வைணவ கருத்துக்களை
அப்படியே திருப்பிப் போட்டு தங்கள் சமயக் கருத்தாகச் சொல்லியிருப்பர்.
சமண ராமாயணம், பாரதம் எல்லாவற்றிலும் வால்மீகி, வியாசர்
கருத்துக்கள் மாறியிருக்கும். அதில் ஒரு கருத்தாகவே நண்பர்
பானுகுமார் (தமிழ்ச் சமணர் சமூகம்) எழுதியுள்ளார் என்று படுகிறது.

(உச்சிமேல் புலவர்கொள்) நச்சினார்க்கினியரே தம் புலமையால் சீவக
சிந்தாமணிக்கு உரையெழுதி, அதை விட்டுவிட்டு, சமணர்களிடம் கற்று
இரண்டாவதாக உரை எழுதினார் என்பது வரலாறு.
திருக்குறள் சமண உரைகளுக்கும், பரிமேலழகர் உரைக்கும் வேறுபாடுகள் உள்ளன
என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

நாம் அறிந்த ஹிந்து சமயமும், ஜைந சமயமும் மாறுபடுகின்றன.
பேரா. பத்மநாப ஜைனி எழுதியிருப்பதைப் பார்க்கலாம்:
http://groups.google.com/group/mintamil/msg/a336207c6a719179

அன்புடன்,
நா. கணேசன்


> *
>
> *
> **- இரா.**ச.இமலாதித்தன்*
> ***www.tamilvaasal.blogspot.com*

N. Ganesan

unread,
Jun 27, 2011, 8:11:54 PM6/27/11
to மின்தமிழ்

559.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

பரிமேலழகர்:
”மன்னவன் தான் செய்யும் பொருளை முறைதப்பச் செய்யுமாயின்
அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச்
செய்யாது.”

இது சரிதான். ஆனால், பரிமேலழகர் அடுத்த குறளில்
சொல்லும் அவிஸ் இன்மை, வேதம், வேதாங்கம் ஆறில் ஒன்றாகிய
கல்ப சூத்திரம் ஓதாமையாலா? என்பது சிந்தித்தற்குரியது.
அதனைக் காண்போம்.

560.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

பரிமேலழகர்:

”காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின் அறன் இல்லாத
அவன் நாட்டுப் பசுக்களும் பால்குன்றும், அந்தணரும் நூல்களை
மறந்துவிடுவர்.

ஆ பயன் - ஆவால் கொள்ளும் பயன். அறுதொழிலாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,
வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.
பசுக்கள் பால் குன்றிய வழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு
உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்;
ஆகவே வானம் பெயல் ஒவ்வாது என்பதாயிற்று.

இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின் கண் நிகழும் குற்றம்
கூறப்பட்டது.”

இரண்டு குறளையும் படித்தால் வேள்வி நடந்தால் தான் மழை பெய்யும்
என்றா வள்ளுவர் உரைத்துள்ளார்? பரிமேலழகர் வலிந்து தன்போக்கிற்கு
சொல்கிறார்.

செங்கோல் கோடினால் வானம் பொய்க்கும். பசும்புல் தலை காண்பதரிதாகிவிடும்.
அதனால் வேளாண்மை பொய்த்துவிடும்,
மாடுகளுக்குத் தீவனம் இல்லாது போக, ஆவின் பயன்கள் மிகக்
குன்றும். அறுதொழிலோரில் நிபுணர்கள் தங்கள் தொழிலுக்கான
சாத்திரங்களை மறந்துவிடுவர்.

அறுதொழில் என்பது என்ன?
------------------------------

பரிமேலழகர் பார்ப்பனருக்கான அறுதொழிலை மாத்திரம்
சுட்டி, ஹவிஸ் இலாததால் மழை பெயாது என்கிறார்:
பசுக்களால் கிடைக்கும் பொருட்களை (நெய், தயிர், பால், பஞ்சகவ்யம், ...)
ஹோம குண்டத்தில் பெய்தால்தான் மழை நாட்டிர்குப்
பெய்யும் என்கிறார்.
இது வள்ளுவப் பெருமானின் கூற்றை அப்படியே மாற்றுவதாகும்.
வள்ளுவரோ வானம் பொய்க்கும் முதலில். அதனால் மாடுகளின்
பயன்கள் குன்றும் என்கிறார். அதுவே உலக இயற்கை.
படு வறட்சியால் மாடுகள் பால் கறப்பதும், கன்றுகள் ஈனுவதும்
நின்றுவிடும் என்கிறது குறள்.

அறுதொழிலோர் என்பது நான்கு வருணத்தாருக்கும் உண்டு.
அத் தொழில் நிபுணர்கள் கற்பிக்கும் கலை (டெக்னிக்கல்) நூல்கள்
கொடிய வரட்சியால் மறக்கப்பட்டு விடும் என்கிறார் வள்ளுவர்.
எத்தியோப்பிய வறட்சியில் எப்படி நூல்களை ஒரு மக்கட்டொகை
பேணி வளர்க்க முடியும்? இது வள்ளுவர் உள்ளம் எனக் கொள்ளலாம்.

நான்கு வருணத்தாரின் அறுதொழில்கள்:


அந்தணரறுதொழில் antaṇar-aṟu-toḻil
, n. < id. +. The six occupations of the Brāhman, viz., ஓதல்,
ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (திவா.)


அரசரறுதொழில் aracar-aṟu-toḻil
, n. < id. +. Six occupations of the Kṣatriya, viz., ஓதல், வேட்டல்,
ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயி ரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள்,
384, உரை.)

வணிகர்தொழில் vaṇikar-toḻil
, n. < id. +. Occupations of the Vaišyas, six in number, viz., ōtal,
vēṭṭal, ītal, uḻavu, nirai-y-ōmpal, vāṇikam; ஓதல் வெட்டல் ஈதல் உழவு
நிரையோம்பல் வாணிகம் என்னும் வைசியரது அறுவகைத் தொழில். (தொல். பொ. 75,
உரை.)

சூத்திரரறுதொழில் cūttirar-aṟu-toḻil
, n. < šūdrapacu-k-kāttal, poruḷ-īṭṭal, payir-iṭal, purā- ṇātikaḷ-
ōtal, ītal, antaṇar-mutaliyōrkku-aṉukū- lattoḻil-ceytal; பசுக்காத்தல்,
பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளோதல், ஈதல், அந்தணர் முதலியோர்க்கு
அனுகூலத்தொழில்செய்தல் என்ற சூத்திரர்க்குரிய அறுவகைத்தொழில். (சூடா.).

ஆக, ”அறுதொழிலோர் நூல்மறப்பர்” என்பதற்கு வெறும் ஒரு வருணத்தை மாத்திரம்
கொண்டு, ஹவிஸ் இடாமையால் வேள்வி
குன்றியதால் மழை பெய்யவில்லை என்னும் பரிமேலழகர் உரையைக்
காட்டிலும், நால்வருணத்தாருக்குரிய அறுதொழில்களையும், அவற்றை
விசேடிக்கும் தொழிநுட்ப நூல்களையும் வள்ளுவர் உரைத்தார் எனலாம்.

பத்மநாப ஜைனி சமணர்கள் க்ஷத்திரியர்களை சமூகத்தில்
உயர்ந்தோராகக் கொள்வதைக் காட்டியுள்ளார். அதனை
வள்ளுவரும் செங்கோல் சாய்ந்தால் மழை பெய்யாது என்று
தெளிவாகச் சொல்கிறார்:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
(இதில் க்ஷத்திரிய வருணத்திற்கு முதன்மை ஸ்தானம் அளிக்கிறார்
வள்ளுவனார்.)

வள்ளுவர் கூறும் sequence-ஐ அப்படியே திருப்பிப்போட்டு
பரிமேலழகர் பொருள் உரைத்துப் போனார்: ஹவிஸ் (பால், ..)
ஹோமத்தில் இடாததால் மழை பெய்யாது போனது என்கிறார்.

ஆனால், வள்ளுவர் அவ்வாறு கொள்கை உடையாரல்லர்
என்பது இந்த இரண்டு குறளையும் படித்தால் தெளிவு.
அறுதொழில் எல்லா வருணத்தாருக்கும் உண்டு.

நா. கணேசன்


செல்வன்

unread,
Jun 27, 2011, 9:07:06 PM6/27/11
to mint...@googlegroups.com
அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்) என தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிலும் அழைக்கபடுபவர்கள் பிராமணர்களே.

மேலும் வள்ளுவர் அறுதொழிலோர் நூல்மறப்பர் என தெளிவாக எடுத்துரைக்கிறார். பிராமணர்கள் வேதத்தை மறந்தால் நாடு அழியும் என்பது அன்றைய நம்பிக்கை. அத்தகைய அனர்த்தம் வேறு எந்த வருணம் எந்த நூலை மறந்தாலும் ஏற்படாது.

வள்ளுவர் பலகுறள்களில் முதல்வருணத்தை மட்டும் குறிப்பிட்டு (மறப்பினும் ஒத்துகொள்ளல் ஆகும்) மற்ற வருணங்களை குறிப்பிடாமல் செல்கிறார். (முதல் வருனத்துக்கு சொல்லபடும் விதி மற்ற அனைத்துக்கும் பொருந்தும் என்பதால்)

N. Ganesan

unread,
Jun 27, 2011, 10:01:02 PM6/27/11
to மின்தமிழ்

On Jun 27, 8:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்) என தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிலும்
> அழைக்கபடுபவர்கள் பிராமணர்களே.
>
> மேலும் வள்ளுவர் அறுதொழிலோர் நூல்மறப்பர் என தெளிவாக எடுத்துரைக்கிறார்.
> பிராமணர்கள் வேதத்தை மறந்தால் நாடு அழியும் என்பது அன்றைய நம்பிக்கை. அத்தகைய
> அனர்த்தம் வேறு எந்த வருணம் எந்த நூலை மறந்தாலும் ஏற்படாது.
>
> வள்ளுவர் பலகுறள்களில் முதல்வருணத்தை மட்டும் குறிப்பிட்டு (மறப்பினும்
> ஒத்துகொள்ளல் ஆகும்) மற்ற வருணங்களை குறிப்பிடாமல் செல்கிறார். (முதல்
> வருனத்துக்கு சொல்லபடும் விதி மற்ற அனைத்துக்கும் பொருந்தும் என்பதால்)
>

ஹவிஸ் ஹோமகுண்டத்தில் அளிக்காததால் வானம்
பொழியவில்லை என்றா இக்குறளில் உள்ளது?

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

--------

திவாகர நிகண்டு சொல்லும் அறுதொழில்கள்:
“உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்து அறு
தொழில் கற்ப நடையது கரும பூமி”

வரைவு - எழுதும் தொழில், கல்வி.
விச்சை - ஆடல், பாடல் போன்ற 64 கலைகள்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

அன்புடன்,
நா. கணேசன்

> --


> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 27, 2011, 10:10:12 PM6/27/11
to மின்தமிழ்

பாவாணர் திருக்குறள் தமிழ் மரபுரையில் சொல்கிறார்:

> 559.
>
> முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
> ஒல்லாது வானம் பெயல்.

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (குறள் 545)

> 560.
>
> ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
> காவலன் காவான் எனின்.

பௌத்தக் காப்பியத்தில்:

கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை - மணிமேகலை 7:8-10

------------

பரிமேலழகர் சொல்லும் பொருள் சரியென்று
வள்ளுவர் கொண்டிருந்தால் என்ன குறள்
தந்திருப்பார் என்று பாவாணர் உரைக்கிறார், பாருங்கள்:

” இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு

என்றோ

மறைகோடி வேள்வி மறப்பின் உறைகோடி


ஒல்லாது வானம் பெயல்

என்றோ பாடியிருப்பர்.” (பாவாணர், தமிழ் மரபுரை).

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 27, 2011, 11:48:02 PM6/27/11
to mint...@googlegroups.com


2011/6/27 N. Ganesan <naa.g...@gmail.com>

ஹவிஸ் ஹோமகுண்டத்தில் அளிக்காததால் வானம்
பொழியவில்லை என்றா இக்குறளில் உள்ளது?

  முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
  ஒல்லாது வானம் பெயல்


மன்னன் ஆட்சிக்கும் மழை வருவதற்கும் என்ன சம்பந்தம்? மோசமான அரசன் ஆண்டால் மழை ஏன் வராது? முறைதவறுதலுக்கும் மழை வராது இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

முறைதவறிய அரசாட்சியில் யாகம், வேள்வி எதுவும் நடக்காது. தருமம் பாழ்படும். அதனால் அங்கே மழை பெய்யாது.


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.

ராஜா எதை காக்காவிட்டால் மழை பெய்யாது?

யாகத்தை காக்காவிடில் இந்திரன் முதலான தேவர்கள் ப்ரீதி அடைய மாட்டார்கள். அதனால் மழை வராது.

இதைதவிர ராஜா காப்பதுக்கும் மழை வருவதுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

"அறுதொழிலோர் நூல்மறப்பர்"..நூலை மறப்பர் என்ற வரி உழவுதொழிலுக்கு எப்படி பொருந்தும்? அது பொருந்தகூடியது பிராமணர் வேதம் ஓதுதலை மறப்பதையே...வேறு எந்த தொழிலுக்கும் நூலை மறத்தல் பொருந்தகூடியதல்ல.

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 27, 2011, 11:50:00 PM6/27/11
to mint...@googlegroups.com


2011/6/27 N. Ganesan <naa.g...@gmail.com>

பாவாணர் திருக்குறள் தமிழ் மரபுரையில் சொல்கிறார்:


பாவாணர் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்.So his explanations are biased.

Banukumar Rajendran

unread,
Jun 27, 2011, 11:58:56 PM6/27/11
to mint...@googlegroups.com
http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post_31.html


ஆபயன் குன்றும் அறிய...




இரா.பா,
சென்னை

2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 27, 2011, 11:59:26 PM6/27/11
to mint...@googlegroups.com
செல்வனின் ஒரு வரி விளக்கம், பளிங்கு நீர் போல் தெளிவு
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
28 06 2011




N. Ganesan

unread,
Jun 28, 2011, 6:12:54 AM6/28/11
to மின்தமிழ்

On Jun 27, 10:48 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/27 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > ஹவிஸ் ஹோமகுண்டத்தில் அளிக்காததால் வானம்
> > பொழியவில்லை என்றா இக்குறளில் உள்ளது?
>
> >   முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
> >   ஒல்லாது வானம் பெயல்
>
> மன்னன் ஆட்சிக்கும் மழை வருவதற்கும் என்ன சம்பந்தம்? மோசமான அரசன் ஆண்டால் மழை
> ஏன் வராது? முறைதவறுதலுக்கும் மழை வராது இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?
>

பல குறள்களில் அரசாட்சி தவறினால் மழை பெய்யாது


என்கிறார் வள்ளுவர்.

இன்னொரு சிரமண சமயமான பௌத்த நூலிலும் இக்கருத்துண்டு.

பௌத்தக் காப்பியத்தில்:
கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை - மணிமேகலை 7:8-10

> முறைதவறிய அரசாட்சியில் யாகம், வேள்வி எதுவும் நடக்காது. தருமம் பாழ்படும்.


> அதனால் அங்கே மழை பெய்யாது.
>

இப்பொருள் குறள்கள் இவ்வாறிருந்தால் கொள்ளலாம்.

” இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு

என்றோ

மறைகோடி வேள்வி மறப்பின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்”

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 28, 2011, 6:16:11 AM6/28/11
to மின்தமிழ்

On Jun 27, 10:50 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/27 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > பாவாணர் திருக்குறள் தமிழ் மரபுரையில் சொல்கிறார்:
>
> பாவாணர் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்.So his explanations are biased.
>

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அன்புடன்,
நா. கணேசன்

> --


> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 6:19:02 AM6/28/11
to மின்தமிழ்
On Jun 27, 10:59 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

”பாவாணர் திராவிட இயக்கத்தை சார்ந்தவர். So his explanations
are biased.” - இந்த வரியா பளிங்கு நீர், இ ஸார்?

யாரையும் ஹிந்துத்துவா, கம்யூனிஸ்ட், திராவிட இயக்கம், ....
எனலாம்.

N. Ganesan

unread,
Jun 28, 2011, 6:38:31 AM6/28/11
to மின்தமிழ்

On Jun 27, 10:58 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:


> http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post_31.html
>
> ஆபயன் குன்றும் அறிய...
>
> இரா.பா,
> சென்னை

”ஆதியாய் *நின்றது* மன்னவன் கோல்!” என்னும் தொடரில்
நின்றது என்று ஏன் கடந்தகாலத்தைச் சுட்டும் வினையைப்
பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர் என்று விளக்கியுள்ளீர்கள்.

கோல் - அரசாட்சி. எழுத்து வகைகளில் பிராமி, கோலெழுத்து,
வட்டெழுத்து, கிரந்த எழுத்து, ... என்றெல்லாம் உண்டு.
கோலெழுத்து என்றால் என்ன? Rod script, straight script
என்றெல்லாம் விளக்கியிருப்பர். என்றுமே எனக்கு அது திருப்தியாக
இருந்ததில்லை.

கோலெழுத்து என்பதென்னை? ப்ரான்சிஸ் வைட் எல்லிஸ்
என்னும் சென்னை கலெக்டர் கட்டுரையைப் படித்தபோது
விளக்கம் கிடைத்தது. சுமார் 200 வருடம் முன்பு வாழ்ந்த அவர்
திராவிட மொழியியலை விஞ்ஞானபூர்வமாக ஆரம்பித்துவைத்தவர். எல்லிஸ்
கோலெழுத்து என்றால்
அரச ஆணைகள் எழுதப்படும் எழுத்து என்கிறார்.
அதாவது, கோல் = செங்கோல், எனவே அரசனைக் குறிக்கும்
என்கிறார். பொருள் விளக்கமானது. 20-ஆம் நூற்றாண்டில்
இதை யாரும் எழுதியதாய் தெரியவில்லை.

-------

ஆபயன் - ஆகின்ற பயன் என்ற பொருள் எடுப்பதற்குத்
துணை செய்யச் சிலப்பதிகாரத்தில் வரும் ‘ஆப்பயன்’
உதாரணமும் அருமை.

சமணத் தமிழ் இலக்கியத்தைப் பல நூல்களைக்
கற்று என்றும் விளக்கி வர வாழ்த்துக்கள்.

செல்வன்

unread,
Jun 28, 2011, 10:22:02 AM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

இப்பொருள் குறள்கள் இவ்வாறிருந்தால் கொள்ளலாம்.

” இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு

என்றோ

மறைகோடி வேள்வி மறப்பின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்”


அப்படியே எழுதியிருந்தாலும் "இயல்புளி" என்பதை "இயற்கையாக கிடைக்கும் புளி" என பொருள் கண்டுபிடித்து திருத்துவார்கள்.அந்தணர், பார்ப்பனர் என அந்த ஜாதியை குறிக்க தமிழில் இருக்கும் எல்லா சொல்லையும் பயன்படுத்தி பார்த்துவிட்டர வள்ளுவர்.ஆனால் அது அவர்களை தான் குறிக்குது என பகுத்தறிவு இயக்கத்தினரை அவரால் ஒத்துக்க வைக்க முடியலையே?அவர் தான் இனி எந்த சொல்லை பயன்படுத்தி பார்ப்பானை பார்ப்பான் என்பார்?:-)

செல்வன்

unread,
Jun 28, 2011, 10:23:38 AM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


அப்படி கண்ட மெய்பொருளை தான் உரைத்தேன்.

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 28, 2011, 10:52:20 AM6/28/11
to mint...@googlegroups.com
செல்வன்,

உங்களின் ஆதங்கம் புரிகிறது. வள்ளுவர் இதோ பார்ப்பாரைப் பற்றி என்ன கூறி இருக்கிறார் என்று பாருங்கள்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதி
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இது ஒன்று போதாதா உங்களுக்கு? :))))

அன்புடன்,

தி.பொ.ச.


2011/6/28 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

துரை.ந.உ

unread,
Jun 28, 2011, 11:29:05 AM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

செல்வன்,

உங்களின் ஆதங்கம் புரிகிறது. வள்ளுவர் இதோ பார்ப்பாரைப் பற்றி என்ன கூறி இருக்கிறார் என்று பாருங்கள்.

இதில் யாரைப்பற்றி / என்ன சொல்லி இருக்கிறார் ??????

( நல்ல வேளை..அந்தப் புண்ணியவான் செத்துபோய் ரொம்ப நாளாச்சு:((((..ஆனால் இதையெல்லாம் அவர் மேலிருந்து பார்ப்பார் .  ( இங்கே இந்த பார்ப்பாருக்கு பின்னால ஏதாவது மறைபொருள் இருக்கான்னு தெரியல )

அந்த நான்கு எழுத்து எங்கே வந்தாலும் ....அதை எதோடோ தொடர்பு படுத்தி ...மொட்டைக்கும் முட்டுக்கும் முடிச்சுப்போட்டு ...அதை கண்டுபிடிப்புண்ணு வேற சொல்லிக் கிட்டு இருக்கோம் !!!!!!!!!!!!!!!!

வாழ்க ...



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Geetha Sambasivam

unread,
Jun 28, 2011, 11:40:39 AM6/28/11
to mint...@googlegroups.com
நல்லா இருக்கு.

2011/6/28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
360.gif

karuannam annam

unread,
Jun 28, 2011, 11:58:57 AM6/28/11
to mint...@googlegroups.com
வாழ்க! வாழ்க!!
வேறென்ன சொல்வது?
 
அன்புடன்
சொ.வி.

2011/6/28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 28, 2011, 12:37:54 PM6/28/11
to மின்தமிழ்
On Jun 28, 9:23 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>

>
> > எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
> > மெய்ப்பொருள் காண்ப தறிவு.
>
> > எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
> > மெய்ப்பொருள் காண்பது அறிவு.
>
> அப்படி கண்ட மெய்பொருளை தான் உரைத்தேன்.

மெய்பொருள், மெய்ப்பொருள் - ஆபயன் (வள்ளுவர்), ஆப்பயன் (இளங்கோவடிகள்)
போலா? என்று பார்க்கணும்.

”மெய்ப்பொருள் காண்பது அறிவு” - கண்டது அறிவு என்று சொல்லலை.
“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” - நிற்பது மன்னவன் கோல்
என்றும் சொல்லலை. ”நின்றது” என்றால் என்ன? என பானுகுமார்
ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அந்தணர் உங்கள் பொருளைத் தான்
அவரும் சொல்லியுள்ளார்.

செல்வன்

unread,
Jun 28, 2011, 1:03:25 PM6/28/11
to mint...@googlegroups.com
2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

மெய்பொருள், மெய்ப்பொருள் - ஆபயன் (வள்ளுவர்), ஆப்பயன் (இளங்கோவடிகள்)
போலா? என்று பார்க்கணும்.

”மெய்ப்பொருள் காண்பது அறிவு” - கண்டது அறிவு என்று சொல்லலை.
“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” - நிற்பது மன்னவன் கோல்
என்றும் சொல்லலை. ”நின்றது” என்றால் என்ன? என பானுகுமார்
ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அந்தணர் உங்கள் பொருளைத் தான்
அவரும் சொல்லியுள்ளார்.


அவர் விளக்கத்தை நேற்றே படித்தேன்.ஆபயன் என ஸ்பெசிபிக்கா வள்ளுவர் சொல்லி இருப்பதை "ஆகின்ற பயன்"  என்பதுபோல பொத்தாம்பொதுவாக எதனால் ஆகின்ற பயன் என்றே சொல்லாமல் எல்லாவற்றாலும் ஆகின்ற பயன் என மாற்றுகிறார். அறுதொழிலோர் நூல்மறப்பர் என்றிருப்பதில் "நூல் மறத்தல்" என்பதுக்கு "தொழில் செய்யாமல் விடுதல்" என பொருள் கூறுகிறார்.இதுவும் ஸ்பெசிபிக்கா குறிப்பிட்டிருப்பதை பொத்தாம்பொதுவாக மாற்ற  முயன்ற இன்னொரு முயற்சியே.

மொத்தத்தில் நண்பரின் கற்பனைதிறன் பாராட்டுக்கு உரியது.

seshadri sridharan

unread,
Jun 28, 2011, 10:02:54 AM6/28/11
to mint...@googlegroups.com
அறுதொழிளுள் ஒன்றாக ஈதல் சொல்லபடுகிறது. பிராமணர்க்கு ஒருபோதும் ஈதல் பண்பு கிடையாது வாங்கித் தான் பழக்கம் எனவே இது பிராமணரைக் குறித்தது அல்ல என்பார் பேரா. இரா. மதிவாணர்.

சேசாத்திரி

2011/6/28 செல்வன் <hol...@gmail.com>
அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்) என தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிலும் அழைக்கபடுபவர்கள் பிராமணர்களே.

N. Ganesan

unread,
Jun 28, 2011, 2:14:56 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 9:02 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> அறுதொழிளுள் ஒன்றாக ஈதல் சொல்லபடுகிறது. பிராமணர்க்கு ஒருபோதும் ஈதல் பண்பு
> கிடையாது வாங்கித் தான் பழக்கம் எனவே இது பிராமணரைக் குறித்தது அல்ல என்பார்
> பேரா. இரா. மதிவாணர்.
>
> சேசாத்திரி
>

கொடுக்கிறது, வாங்கறது - இது எப்படி ஒரு தொழிலாக முடியும்?

சமணர்கள் இயற்றிய நிகண்டுகளில் - திவாகரம்,
சூடாமணி - அறுதொழில்களை விளக்கியுள்ளனர்.

இந்தியாவில் எத்தனையோ முறைகளில் அரசு பாழாகி இருக்கிறது. அதனால், வேத
நூல்கள் மறக்கப்படவில்லை,
ஆனால், பல தொழில்கள் நசிந்துள்ளன என்பது சரித்திரம்.

நா. கணேசன்


> 2011/6/28 செல்வன் <holy...@gmail.com>


>
>
>
> > அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்) என தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிலும்
> > அழைக்கபடுபவர்கள் பிராமணர்களே.
>
> > மேலும் வள்ளுவர் அறுதொழிலோர் நூல்மறப்பர் என தெளிவாக எடுத்துரைக்கிறார்.
> > பிராமணர்கள் வேதத்தை மறந்தால் நாடு அழியும் என்பது அன்றைய நம்பிக்கை. அத்தகைய
> > அனர்த்தம் வேறு எந்த வருணம் எந்த நூலை மறந்தாலும் ஏற்படாது.
>
> > வள்ளுவர் பலகுறள்களில் முதல்வருணத்தை மட்டும் குறிப்பிட்டு (மறப்பினும்
> > ஒத்துகொள்ளல் ஆகும்) மற்ற வருணங்களை குறிப்பிடாமல் செல்கிறார். (முதல்
> > வருனத்துக்கு சொல்லபடும் விதி மற்ற அனைத்துக்கும் பொருந்தும் என்பதால்)
>
> > --
> > செல்வன்
>
> > "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> > முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> > இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> > தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> > நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> > என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> > செல்வன்
>

> >www.holyox.blogspot.com
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Jun 28, 2011, 2:21:43 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 12:03 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > மெய்பொருள், மெய்ப்பொருள் - ஆபயன் (வள்ளுவர்), ஆப்பயன் (இளங்கோவடிகள்)
> > போலா? என்று பார்க்கணும்.
>
> > ”மெய்ப்பொருள் காண்பது அறிவு” - கண்டது அறிவு என்று சொல்லலை.
> > “ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” - நிற்பது மன்னவன் கோல்
> > என்றும் சொல்லலை. ”நின்றது” என்றால் என்ன? என பானுகுமார்
> > ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அந்தணர் உங்கள் பொருளைத் தான்
> > அவரும் சொல்லியுள்ளார்.
>
> அவர் விளக்கத்தை நேற்றே படித்தேன்.ஆபயன் என ஸ்பெசிபிக்கா வள்ளுவர் சொல்லி
> இருப்பதை "ஆகின்ற பயன்"  என்பதுபோல பொத்தாம்பொதுவாக எதனால் ஆகின்ற பயன் என்றே
> சொல்லாமல் எல்லாவற்றாலும் ஆகின்ற பயன் என மாற்றுகிறார்.

இதற்கு முந்தைய குறளைப் படித்தால் ஸ்பெசிக்கா
என்ன சொல்றார்னு விளங்கும்.

கோல்நிலை தவறுதலால் வானம் பொழியாது என்றார்.
வானம் பொழியலைன்னா பயிர்கள் விளையா.
அந்தக் காலத்தில் உழவே தலை. ’உழந்தும் உழவே தலை’,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’, ... குறள்.

ஆபயன் - ஆகின்ற பயன் - (மாரியால்) ஆகின்ற விளைச்சல்.
கலம் = கலன் (பாத்திரம்), அதுபோல் பயம் = பயன்.

பய¹-த்தல் paya- , 12 v. cf. பயம்¹. intr. 1. To yield, produce, put
forth fruit; விளைதல். பயவாக் களரனையர் (குறள், 406).

ஆபயன் - மழையால் ஆகும் பயன் - உணவு விளைபொருட்கள்.

ஆப்பயன் - ஆனைந்து - பஞ்சகவ்யம் - கொங்குவேளின் பெருங்கதை உரை, மற்றும்
சிலம்பு.

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 28, 2011, 2:22:47 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

கொடுக்கிறது, வாங்கறது - இது எப்படி ஒரு தொழிலாக முடியும்?


எல்லா நான்பிராப்ட்டும் இதைதான் செய்யுது.

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 2:32:11 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 9:22 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > இப்பொருள் குறள்கள் இவ்வாறிருந்தால் கொள்ளலாம்.
>
> > ” இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட
> > பெயலும் விளையுளுந் தொக்கு
>
> > என்றோ
>
> > மறைகோடி வேள்வி மறப்பின் உறைகோடி
> > ஒல்லாது வானம் பெயல்”
>
> அப்படியே எழுதியிருந்தாலும் "இயல்புளி" என்பதை "இயற்கையாக கிடைக்கும் புளி" என
> பொருள் கண்டுபிடித்து திருத்துவார்கள்.

:-)

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (குறள் 545)

இதற்கு யாரும் ‘இயற்கைப் புளி’ என்று உரைப்பாரில்லை.

வள்ளுவர் பரிமேலழகர் உரையைக் கொண்டவர் ஆனால்
எப்படி எழுதியிருப்பார் என்று சொல்லியுள்ளார்கள்.
அப்போது குறள் எப்படி இருக்கும்?
”இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.”

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 28, 2011, 2:32:56 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆபயன் - ஆகின்ற பயன் - (மாரியால்) ஆகின்ற விளைச்சல்.
கலம் = கலன் (பாத்திரம்), அதுபோல் பயம் = பயன்.


ஆபயன் என்பதுக்கு மாரியால் வருகின்ற விளைச்சல் என விளக்கம் அளிக்கும் ஒரே தமிழ் அறிஞர் எனக்கு தெரிந்து நீங்கள் தான்.இது போன்ற விளக்கத்தை அளிக்கும் உரையாசிரியர்கள் யாவர்?

N. Ganesan

unread,
Jun 28, 2011, 2:42:10 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 1:32 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > ஆபயன் - ஆகின்ற பயன் - (மாரியால்) ஆகின்ற விளைச்சல்.
> > கலம் = கலன் (பாத்திரம்), அதுபோல் பயம் = பயன்.
>
> ஆபயன் என்பதுக்கு மாரியால் வருகின்ற விளைச்சல் என விளக்கம் அளிக்கும் ஒரே தமிழ்
> அறிஞர் எனக்கு தெரிந்து நீங்கள் தான்.இது போன்ற விளக்கத்தை அளிக்கும்
> உரையாசிரியர்கள் யாவர்?
>

நான் குறளின் எல்லா உரைகளும் பார்க்கவில்லை.

ஆனைந்து என்பதற்கு ஆப்பயன் என இருக்க வேண்டும்.
ஆதாரம் : சிலப்பதிகாரம், பானுகுமார் பதிவு.

எனவே, ஆபயன் - வினைத்தொகையாய்க் கொண்டு
உரைக்கிறேன். இதுவும் இதற்கு முந்தைய குறளும்
ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
உ-ம்: பரிமேலழகர்.

பயன் - பயம் விளைச்சல், ஆபயன் ஆகும் சாகுபடி குன்றுதல்
மழையிலாவிடில் நிகழ்வது இயற்கை. முந்தைய குறளைத் தொடர்பு
படுத்த பயத்தல் - விளைதல் என்ற பொருள் எடுக்கிறேன்.

இதனை எனக்கு முன்னர் யாராகிலும் சொல்லி இருக்கலாம்.
தெரிந்தால் சொல்வேன்.

நா. கணேசன்

> --


> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 2:44:05 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (குறள் 545)

இதற்கு யாரும் ‘இயற்கைப் புளி’ என்று உரைப்பாரில்லை.


அந்த குறளில் வேள்வி, யாகம் என எதுவும் இல்லாமல் போனதால் அது மாற்றபடவில்லை.அதுவரை அந்த குறள் தப்பியது:-)

இலக்குமி, மூதேவி, பசு, பார்ப்பனர், யாகம், அவியுணவு, வைகுந்தம், இந்திரன் என இத்தனையையும் மாற்றி படிப்பது பொருந்தவில்லை. தமிழில் பார்ப்பனரை குறிக்க இருக்கும் எல்லா வார்த்தையையும் பயன்படுத்தி அந்தணன், பார்ப்பான் என்கிறார். அதையும் விட்டேனா பார் என சொல்லி பொருளை மாற்றுகிறார்கள். அவர் தான் இனி என்ன செய்வார்?பிராமின் என இங்கிலீஸில் தான் எழுதியிருக்கணும் போல:-)

செல்வன்

unread,
Jun 28, 2011, 2:46:39 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

இதனை எனக்கு முன்னர் யாராகிலும் சொல்லி இருக்கலாம்.
தெரிந்தால் சொல்வேன்.


அப்படி யாராவது சொல்லி இருந்தால் தான் அதை ஏற்க இயலும்,.

புதிதாக 2000 ஆண்டுகளாக யாரும் குறளில் கண்டுபிடிக்காததை நாம் யாரும் கண்டுபிடிக்க போவதில்லை.

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 3:27:19 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 1:46 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > இதனை எனக்கு முன்னர் யாராகிலும் சொல்லி இருக்கலாம்.
> > தெரிந்தால் சொல்வேன்.
>
> அப்படி யாராவது சொல்லி இருந்தால் தான் அதை ஏற்க இயலும்,.
>
> புதிதாக 2000 ஆண்டுகளாக யாரும் குறளில் கண்டுபிடிக்காததை நாம் யாரும்
> கண்டுபிடிக்க போவதில்லை.
>

:) KuRaL itself is utmost 1500 years old, and commentaires are much
later.
How can i or you find something written about this 2000 years ago?
Ilango aDikaL has given us a way to understand aapayan vs. aa-p-payan.
Obviously ParimElazakar is wrong when he claims that because of lack
of
havis in homa kuNDams, it does not rain in the country. Buddhist and
Jaina
texts do not say that, but announce in many places about the just rule
of kings
yielding copiious rains.

Before Ellis, Caldwell, nobody said about Dravdian family of
languages,
Emeneau/Burrow put together a dictionary connecting words from all
Dravidian
languages. Now, same effort is done for Munda family of languages
(Northeast India).

NG


> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 4:07:52 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

:) KuRaL itself is utmost 1500 years old, and commentaires are much
later.
How can i or you find something written about this 2000 years ago?


திருவள்ளுவர் கிமு 31ம் ஆண்டில் ஜனவரி 15ம் தேதி பிறந்தார் என மறைமலை அடிகள், திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் அடங்கிய சபை  முடிவெடுத்து அதை தமிழக அரசும் ஏற்று அறிவித்து கொண்டாடி வருகிறது. நாம் தற்போது வள்ளுவராண்டு 2042ல் இருக்கிறோம்.அப்புறம் எப்படி திருக்குறள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதபட்டு இருக்கும்?


Ilango aDikaL has given us a way to understand aapayan vs. aa-p-payan.

பலநூறு வருடங்கள் காலத்தால் பிரிந்த இரண்டுநூல்களில் இரண்டு விதங்களில் ஒரு சொற்றொடர் கையாளபடுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மானமிகு கீ வீர்மணியார் என விடுதலை எழுதுகிறது.காரைக்கால் அம்மையார் புராணத்தில் "மானம் மிகு தருமத்தின் வழி நின்று" என எழுதப்பட்டுள்ளது. உடனே காரைக்கால் அம்மையார் புராணத்தை ஆதாரம் காட்டி விடுதலை எழுதியது தவறு என சொல்லமுடியுமா?


Obviously ParimElazakar is wrong when he claims that because of lack
of
havis in homa kuNDams, it does not rain in the country.

அப்புறம் ஏன் தமிழ்நாட்டு அரசர்கள் அத்தனை யாகங்களை செய்தார்கள்? பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என பெயர் வைத்து கொண்டார்கள்?கோழிகூவி சோழநாட்டில் பொழுதுபுலரும்..ஆனால் எங்கள் பாண்டியநாட்டில் யாகத்தின் அகிற்புகையாலும் வேத கோஷங்களாலும் பொழுதுபுலரும் என பாட்டெழுதி வைத்தார்கள்?

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. - திருமந்திரம்


அறுதொழில் அந்தணர் என கலிதொகை வெகு தெளிவாக அறுதொழிலோர் யார் என கூறுகிறது

அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச்செவ்வழல்
தொடங்க வந்ததை அறுதொழில் அந்தணர் அறம் புரிந்து
எடுத்த தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள் வலம்படு
தீவின்பொலம் பூண்வளவன் - கலிதொகை

பரிமேலகர் எல்லாம் சரியாக சொல்லி இருக்கிறார்.ஜைனர்களும், பவுத்தர்களும் ராமாயணமே ஜைனநூல் என்பவர்கள்.குறளையா விட்டு வைப்பார்கள்?.அவர்கள் எழுதும் குறள் உரைகள் எல்லாம் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்பதை யாரும் வேலை செய்ய மாட்டரகள் என்பதுபோல பொத்தாம்பொதுவாக பொருள் மாற்றி படித்தால் தான் அவர்கள் விரும்பும் பொருளை தரும்.

திராவிட இயக்கத்தினரை பற்றி சொல்லவே வேண்டாம். தமிழ் பெயரை வைத்து அரசியல் செய்ய தமிழ் நூல் ஒன்று தேவைபடுகிறது.கம்பராமயணம், பிரபந்தம், திருமுருகாற்றுபடை எல்லாவற்ரையும் இந்துமத நூல்கள் என்பதால் தொலைத்துகட்டவேண்டிய நிலை அவர்களுக்கு. குறளும் இந்துநூல் என்றானால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? 20ம் நூற்ராண்டிலா தமிழக வரலாற்றை துவக்க முடியும்? இந்த பாழாபோன சங்ககால தமிழர்களும் எங்கே பார்த்தாலும் யாகம், வேள்வி,சிவன்,முருகன் என இந்துகடவுள்களை பற்றியே பாடி வைத்துள்ளனர். கழகத்தவருக்கும் அரசியல் செய்ய ஒரு நூல் வேண்டாமா?

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 4:18:50 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 3:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > :) KuRaL itself is utmost 1500 years old, and commentaires are much
> > later.
> > How can i or you find something written about this 2000 years ago?
>
> திருவள்ளுவர் கிமு 31ம் ஆண்டில் ஜனவரி 15ம் தேதி பிறந்தார் என மறைமலை அடிகள்,
> திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்
> பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர்
> சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர்
> அடங்கிய சபை  முடிவெடுத்து அதை தமிழக அரசும் ஏற்று அறிவித்து கொண்டாடி
> வருகிறது. நாம் தற்போது வள்ளுவராண்டு 2042ல் இருக்கிறோம்.அப்புறம் எப்படி
> திருக்குறள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதபட்டு இருக்கும்?
>

sabhai can give some date. But KuRaL is post-sangam, probably around
5th century or later.

Otherwise, Sangam lit. has to be pre-CE, this is like late Kanchi
Mahaperiyaval's
claims that Sankara belonged to 550 BCE :)

> Ilango aDikaL has given us a way to understand aapayan vs. aa-p-payan.
>
> பலநூறு வருடங்கள் காலத்தால் பிரிந்த இரண்டுநூல்களில் இரண்டு விதங்களில் ஒரு
> சொற்றொடர் கையாளபடுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மானமிகு கீ வீர்மணியார் என
> விடுதலை எழுதுகிறது.காரைக்கால் அம்மையார் புராணத்தில் "மானம் மிகு தருமத்தின்
> வழி நின்று" என எழுதப்பட்டுள்ளது. உடனே காரைக்கால் அம்மையார் புராணத்தை ஆதாரம்
> காட்டி விடுதலை எழுதியது தவறு என சொல்லமுடியுமா?
>

I don't see the connection. what does it has to do with aa-payan?

> Obviously ParimElazakar is wrong when he claims that because of lack
> of
> havis in homa kuNDams, it does not rain in the country.
>
> அப்புறம் ஏன் தமிழ்நாட்டு அரசர்கள் அத்தனை யாகங்களை செய்தார்கள்? பல்யாகசாலை
> முதுகுடுமி பெருவழுதி என பெயர் வைத்து கொண்டார்கள்?கோழிகூவி சோழநாட்டில்
> பொழுதுபுலரும்..ஆனால் எங்கள் பாண்டியநாட்டில் யாகத்தின் அகிற்புகையாலும் வேத
> கோஷங்களாலும் பொழுதுபுலரும் என பாட்டெழுதி வைத்தார்கள்?
>

Valluvar does not say that yajnas are the cause of Rains, pl. read
kuRaL
that we quote. It is only Pari. saying that, may be he's talking of
Tirumantiram
but NOT KuRaL.

> வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
> திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
> விசையம் பெருகிய வேதம் முதலாம்
> அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. - திருமந்திரம்
>
> அறுதொழில் அந்தணர் என கலிதொகை வெகு தெளிவாக அறுதொழிலோர் யார் என கூறுகிறது
>
> அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச்செவ்வழல்
> தொடங்க வந்ததை அறுதொழில் அந்தணர் அறம் புரிந்து
> எடுத்த தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள் வலம்படு
> தீவின்பொலம் பூண்வளவன் - கலிதொகை
>

aRutozil is diffently defined for each of 4 varNa-s. I've given the
reference
statements.

Also, aRutozil in Tamil NighaNTu-s by Jainas need to be referred to
understand waht Valluvar is talking about.

NG

N. Ganesan

unread,
Jun 28, 2011, 4:21:53 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 3:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> திராவிட இயக்கத்தினரை பற்றி சொல்லவே வேண்டாம். தமிழ் பெயரை வைத்து அரசியல்
> செய்ய தமிழ் நூல் ஒன்று தேவைபடுகிறது.கம்பராமயணம், பிரபந்தம்,
> திருமுருகாற்றுபடை எல்லாவற்ரையும் இந்துமத நூல்கள் என்பதால்
> தொலைத்துகட்டவேண்டிய நிலை அவர்களுக்கு. குறளும் இந்துநூல் என்றானால் அவர்கள்
> தான் என்ன செய்வார்கள்? 20ம் நூற்ராண்டிலா தமிழக வரலாற்றை துவக்க முடியும்?
> இந்த பாழாபோன சங்ககால தமிழர்களும் எங்கே பார்த்தாலும் யாகம்,
> வேள்வி,சிவன்,முருகன் என இந்துகடவுள்களை பற்றியே பாடி வைத்துள்ளனர்.
> கழகத்தவருக்கும் அரசியல் செய்ய ஒரு நூல் வேண்டாமா?
>

Hindu was there during sangam times?

For differences in the value systems between Tamil sangam and
Sanskrit texts,
I suggest you read books by Zvelebil, Hart, ...

NG

N. Ganesan

unread,
Jun 28, 2011, 5:48:53 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 3:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> பலநூறு வருடங்கள் காலத்தால் பிரிந்த இரண்டுநூல்களில் இரண்டு
> விதங்களில் ஒரு சொற்றொடர் கையாளபடுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மானமிகு கீ வீர்மணியார் என
> விடுதலை எழுதுகிறது.காரைக்கால் அம்மையார் புராணத்தில் "மானம் மிகு தருமத்தின்
> வழி நின்று" என எழுதப்பட்டுள்ளது. உடனே காரைக்கால் அம்மையார் புராணத்தை ஆதாரம்
> காட்டி விடுதலை எழுதியது தவறு என சொல்லமுடியுமா?
>

சிலம்பு, குறள் - ஏறத்தாழ ஒரே காலத்தன.
உங்கள் உதாரணம் பொருந்துமா? என்று தெரியவில்லை.

”மானம் மிகு தருமத்தின்” என்று சொற்களுக்கு இடைவெளி
விட்டு எழுதும்போது எழுதுவோம்:
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru12_05_04.htm

மானமிகு என்றாலும், மானம் மிகு என்றாலும் பொருள் ஒன்றே.
அதாவது, மானமிகு என்றால் வினைத்தொகை ஆகுமா?
என்று பார்த்து சொல்லுங்கள்.

ஆப்பயன் - ஆ = பசு என்று உறுதிப்பொருள் காட்டுகிறது.
ஆபயன் - வினைத்தொகை ஆகிவிடும்.

பயன் = பயம் ( < பயத்தல்) = உணவு என்ற பொருள்
சங்க இலக்கியத்தில் காணலாம். வளம்/வளன், கலம்/கலன், ..
போல் பயம்/பயன். பயவாக் களர் - குறள் (விளையாத களர் நிலம்
எனப் பொருள்). ஆபயன் = ஆகின்ற உணவு, விளையுள்.

ஆனைந்து - ஆப்பயன் - பஞ்சகவ்யம்.
ஆனால், ஆபயன் அவ்வாறு உறுதிபடச் சொல்ல இயலாது.

சிலம்பு, அடைக்கலக் காதை

ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை.

ஆ காத்து ஓம்பி ஆப் பயன் அளிக்கும் - பசுக்களைப் பிணி
முதலியவற்றினின்றும் காப்பாற்றிப் புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப்
பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற, கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு
இல்லை - இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிதும் தீமை இல்லை,

கொங்குவேள், பெருங்கதை: உஞ்சைக் காண்டம்

நானந் தோய்த்த நறுமென் கூந்தலுள்
ஆனைந்து தெளித்து நீரிடை மூழ்கி
ஆவிரை யலரு மறுகையுஞ் செரீஇக்

நறுமண நெய் தடவிய நறிய மெல்லிய கூந்தலையுடையளாய்ப் பால் முதலிய ஆப்பயன்
ஐந்தனையும் கூட்டித் தலையிற் றெளித்துக்கொண்டு நீரின்கண் முழுகிப்
பின்னர் ஆவிரை மலரையும், அறுகம்புல்லையும் கூந்தலிலே செருகிக் கொண்டு,

நா. கணேசன்


செல்வன்

unread,
Jun 28, 2011, 6:22:58 PM6/28/11
to mint...@googlegroups.com
2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

sabhai can give some date. But KuRaL is post-sangam, probably around
5th century or later.

Otherwise, Sangam lit. has to be pre-CE, this is like late Kanchi
Mahaperiyaval's
claims that Sankara belonged to 550 BCE :)


Your word against theirs. Both of you give no evidence to your claims, so I quoted the official version.

- Valluvar does not say that yajnas are the cause of Rains, pl. read

kuRaL
that we quote. It is only Pari. saying that, may be he's talking of
Tirumantiram
but NOT KuRaL.


Valluvar need not say that yagnas cause rains because it was common knowledge during those times. This belief could be found in Tamilnadu and all over India for thousands of years. Even today we do yagnas to bring rain like sangam days. The story of demons destroying yagnas and causing droughts and kings slaying them has been oft repeated in Indian epics (e.g.: Rama slaying thadagai) So Parimelazakar was right in connecting king, rain and yagnas. Without this interpretation there is no mechanism to describe how king's rule could cause skies to stop rainfall.


aRutozil is diffently defined for each of 4 varNa-s. I've given the
reference
statements.

What is meany by நூல் மறப்பர்?

which Varna would forget which நூல்?


Hindu was there during sangam times?

If it wasn't why would Dravidian movements shun thirumurugarupadai?It is also an ancient tamil text.So why don't we see any statues erected for nakkerar or books about thirumurugarupadai?

N. Ganesan

unread,
Jun 28, 2011, 6:39:10 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 5:22 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > sabhai can give some date. But KuRaL is post-sangam, probably around
> > 5th century or later.
>
> > Otherwise, Sangam lit. has to be pre-CE, this is like late Kanchi
> > Mahaperiyaval's
> > claims that Sankara belonged to 550 BCE :)
>
> Your word against theirs. Both of you give no evidence to your claims, so I
> quoted the official version.
>

குறளின் காலம் கணித்தற்கு பல அடிப்படைகள் உள்ளன.
அந்தப் புத்தகங்களைப் படிக்கவும். சங்கரர் காலம் 9-ஆம் நூற்றாண்டு,
கி.மு. ஆறாம் நூற்றாண்டு அல்ல.

> - Valluvar does not say that yajnas are the cause of Rains, pl. read
> kuRaL
> that we quote. It is only Pari. saying that, may be he's talking of
> Tirumantiram
> but NOT KuRaL.
>
> Valluvar need not say that yagnas cause rains because it was common
> knowledge during those times. This belief could be found in Tamilnadu and
> all over India for thousands of years. Even today we do yagnas to bring rain
> like sangam days.

சங்க இலக்கியத்தில் வேள்வி செய்து மழை பெய்ததா?

> The story of demons destroying yagnas and causing droughts
> and kings slaying them has been oft repeated in Indian epics (e.g.: Rama
> slaying thadagai) So Parimelazakar was right in connecting king, rain and

> yagnas. Without this interpretation *there is no mechanism to describe how
> king's rule could cause skies to stop rainfall.*
>

மெக்கானிஸம் என்ன என்று தெரிய மணிமேகலை அடிகள்
கொடுத்தேனே.


> aRutozil is diffently defined for each of 4 varNa-s. I've given the
> reference
> statements.
>
> What is meany by நூல் மறப்பர்?
>
> which Varna would forget which நூல்?
>

நிகண்டுகள் சூத்திரத்தில் வரும் அறுதொழிலுக்கான நூல்கள்.

> Hindu was there during sangam times?
>
> If it wasn't why would Dravidian movements shun thirumurugarupadai?It is
> also an ancient tamil text.So why don't we see any statues erected for
> nakkerar or books about thirumurugarupadai?
>

நக்கீரருக்கு சிலை வைக்கலாம். பெட்டிஷனை ஜெயாவுக்கு அனுப்புவோம்.
நக்கீரர் எப்படி இருப்பார் என்பதற்கு
திருவிளையாடல் சினிமாவைப் பார்த்து செய்யலாம்.

நா. கணேசன்


> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 6:49:02 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

சங்க இலக்கியத்தில் வேள்வி செய்து மழை பெய்ததா?


பரிபாடல்2:76-87
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 6:51:28 PM6/28/11
to mint...@googlegroups.com
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

வஞ்சிவாழ் மக்களும், உறையூர் சோழ மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். மதுரை மக்களாகிய நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம்

செல்வன்

unread,
Jun 28, 2011, 6:58:33 PM6/28/11
to mint...@googlegroups.com
நக்கீரருக்கு சிலை வைக்கலாம். பெட்டிஷனை ஜெயாவுக்கு அனுப்புவோம்.
நக்கீரர் எப்படி இருப்பார் என்பதற்கு
திருவிளையாடல் சினிமாவைப் பார்த்து செய்யலாம்.

வள்ளுவரே வந்து போஸ் கொடுத்து வள்ளூவர் சிலை அமைந்தது போல:-)

செல்வன்

unread,
Jun 28, 2011, 6:58:48 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

நிகண்டுகள் சூத்திரத்தில் வரும் அறுதொழிலுக்கான நூல்கள்.

நிகண்டுகளை படித்துதான் விவசாயிகள் பயிர் செய்தார்களா?

நூல்மறத்தல் படித்தவர்களுக்கு தான் சாத்தியம்...உலகெங்கும் அனைத்து கலாசாரங்களிலும் முக்கியநூல் மதநூலே. பைபிளுக்கு கிறிஸ்தவர்களிடையே என்ன முக்கியத்துவமோ அந்த முக்கியத்துவம் தமிழர்களால் வேதத்துக்கு கொடுக்கபட்டது. குறளின் பெயரே தமிழ்மறை (தமிழ் வேதம்).மறை என்ற பெயரும் சமஸ்கிருத வேதத்துக்கு மட்டுமே பொருந்தகூடியது. வடமொழிவேதத்தின் பெயரே பின்னாளில் அனைத்துமொழி வேதங்களுக்கும் பொதுபெயராகி இன்று குரான,பைபிளை கூட மறை என்கிறோம்.


--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:05:17 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 5:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > நிகண்டுகள் சூத்திரத்தில் வரும் அறுதொழிலுக்கான நூல்கள்.
>
> நிகண்டுகளை படித்துதான் விவசாயிகள் பயிர் செய்தார்களா?
>
> நூல்மறத்தல் படித்தவர்களுக்கு தான் சாத்தியம்...உலகெங்கும் அனைத்து
> கலாசாரங்களிலும் முக்கியநூல் மதநூலே. பைபிளுக்கு கிறிஸ்தவர்களிடையே என்ன
> முக்கியத்துவமோ அந்த முக்கியத்துவம் தமிழர்களால் வேதத்துக்கு கொடுக்கபட்டது.

சங்க இலக்கியம் படிச்சீங்கன்னா தெரியும்
பைபிளுக்கு கிறித்துவர் கொடுக்கும் முக்கியத்துவமா
வேதத்துக்கு கொடுத்தாங்கன்னு தெரியும்.

> குறளின் பெயரே தமிழ்மறை (தமிழ் வேதம்).மறை என்ற பெயரும் சமஸ்கிருத வேதத்துக்கு
> மட்டுமே பொருந்தகூடியது. வடமொழிவேதத்தின் பெயரே பின்னாளில் அனைத்துமொழி
> வேதங்களுக்கும் பொதுபெயராகி இன்று குரான,பைபிளை கூட மறை என்கிறோம்.
>
> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:18:19 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 5:51 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
> நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
> ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
> வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
> கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12
>
> வஞ்சிவாழ் மக்களும், உறையூர் சோழ மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில்
> எழுகின்றனர். மதுரை மக்களாகிய நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம
> அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம்
>

திருமுருகும், பரிபாடலும் சங்க இலக்கியத்தின் கடைசி, செல்வன்.
பக்தி இலக்கியங்கள் தொடர்ந்தன. சங்க இலக்கியப் பரப்பைப்
பாருங்கள் - வேள்வி பெய்தால் மழை பெய்யும் என்று நம்பினார்களா?
எனத் தெரியும்.

திருக்குறள், மணிமேகலை - சிரமண சமயக்காரர்கள் எழுத்து.
அதில் மழை பெய்ய வேள்வி செய்யனும் என்று குறிப்பிடவில்லை.

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:19:43 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

சங்க இலக்கியம் படிச்சீங்கன்னா தெரியும்
பைபிளுக்கு கிறித்துவர் கொடுக்கும் முக்கியத்துவமா
வேதத்துக்கு கொடுத்தாங்கன்னு தெரியும்.


நான்குமறையும் கேட்டுதான் தினமும் எழுகிறோம் ,நீங்க அப்படியா என மதுரைகாரர் கொங்குநாட்டவரை சங்க இலக்கியத்தில் கேலி செய்கிறார்.

அந்தணர் வேதம் ஓதி யாகம் செய்தால் தான் மழைவந்து வைகைநதியே பெருகும்னு சங்கபாட்டு இருக்கு.

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன் என சிவனை அகநானூறு போற்றுகிறது

வேதத்துக்கு முக்கியத்துவம் இல்லாமலா இப்படி எல்லாம் எழுதினார்கள்?


--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:22:01 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:19 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > சங்க இலக்கியம் படிச்சீங்கன்னா தெரியும்
> > பைபிளுக்கு கிறித்துவர் கொடுக்கும் முக்கியத்துவமா
> > வேதத்துக்கு கொடுத்தாங்கன்னு தெரியும்.
>
> நான்குமறையும் கேட்டுதான் தினமும் எழுகிறோம் ,நீங்க அப்படியா என மதுரைகாரர்
> கொங்குநாட்டவரை சங்க இலக்கியத்தில் கேலி செய்கிறார்.
>
> அந்தணர் வேதம் ஓதி யாகம் செய்தால் தான் மழைவந்து வைகைநதியே பெருகும்னு
> சங்கபாட்டு இருக்கு.
>

பிற்கால சங்க பக்தி நூலில் இருக்கு என்பது சரி.


> நான்மறை முதுநூல் முக்கட்செல்வன் என சிவனை அகநானூறு போற்றுகிறது
>
> வேதத்துக்கு முக்கியத்துவம் இல்லாமலா இப்படி எல்லாம் எழுதினார்கள்?
>
> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:23:30 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

திருமுருகும், பரிபாடலும் சங்க இலக்கியத்தின் கடைசி, செல்வன்.
பக்தி இலக்கியங்கள் தொடர்ந்தன. சங்க இலக்கியப் பரப்பைப்
பாருங்கள் - வேள்வி பெய்தால் மழை பெய்யும் என்று நம்பினார்களா?
எனத் தெரியும்.


சங்க இலக்கியத்தில் இருக்கான்னு கேட்டீங்க...இருக்குன்னதும் அது சங்க இலக்கியத்தில் கடைசி என்கிறீர்கள்.கோல்போஸ்டை நகர்த்தி கொண்டே போகிறீர்கள்:-)

சரி குறள் சங்க இலக்கியத்துக்கு குறிப்பா பரிபாடலுக்கு  முற்பட்டதா, பிற்பட்டதா?

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:26:55 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:23 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> சரி குறள் சங்க இலக்கியத்துக்கு குறிப்பா பரிபாடலுக்கு  முற்பட்டதா,
> பிற்பட்டதா?
>

சரி, ஆபயன், ஆப்பயன் - மானமிகு, மானம் மிகு போன்றதா?

நீங்க கொடுத்திருக்கிற குறள் தேதி கிமு 31 சரின்னா
பரிபாடல் பல நூற்றாண்டுகள் பின்னாடி.

/க/

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:37:09 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

சரி, ஆபயன், ஆப்பயன் - மானமிகு, மானம் மிகு போன்றதா?


ஒரு சொல்லாடல் இரு காலகட்டங்களில் இரு நூல்களில் இரு விதமாக பயன்படுவதுக்கு உதாரனமாகவே அதை கொடுத்தேன்.ஆபயன் என்பதுக்கு ஒப்பா ஆநிரை,ஆநெய் என பல தமிழ்சொற்கள் வழக்கில் உண்டு.ஆநெய் கூட ஆபயன் தான்


நீங்க கொடுத்திருக்கிற குறள் தேதி கிமு 31 சரின்னா
பரிபாடல் பல நூற்றாண்டுகள் பின்னாடி.

அது நான் கொடுக்கலை.நான் அதை கோட் மட்டுமே செய்து "அதற்கு ஆதாரமில்லை" எனவும் கூறினேன்

மத்தபடி குறளீலேயே வேள்வியால் ப்ரீதி அடைந்து மழையை வரவ்ழைக்கும் இந்திரனை பற்றி குறிப்பு இருக்கு.அவியுணவு உண்ணும் தேவரோடொப்பர் என அழுத்தம் திருத்தமாக வள்ளுவரே கூறுகிறார்..

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:41:55 PM6/28/11
to mint...@googlegroups.com
தொல்காப்பியத்தில் வேள்வியில் தானமாக கொடுக்கபட்ட பசுவை பற்றிய குறிப்பு இருக்கு (கபிலை கண்ணிய வேள்வி நிலை).தொல்காப்பியத்தை விட தொன்மையான தமிழ்நூலுக்கு எங்கே போவது?

வேள்வி, யாகம், பசு, பார்ப்பனர் எல்லாம் தமிழ்வரலாற்றில் மிகதொன்மையானவை.

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:42:28 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 5:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > நிகண்டுகள் சூத்திரத்தில் வரும் அறுதொழிலுக்கான நூல்கள்.
>
> நிகண்டுகளை படித்துதான் விவசாயிகள் பயிர் செய்தார்களா?
>

க்ருஷி சாஸ்திர நூல்கள் இருந்தன. தேவையான விவசாயிகள்
படித்தனர். விஸ்வகர்மாக்கள், ஆடல், பாடல் கலைஞர்களுக்கும்
படிப்பு அவசியம். எல்லா பிராமணர்களுமா வேதவித்துக்களாக
இருந்தனர்? அதுபோலத் தான். ஆறு தொழில் நிபுணர்கள்
தத்தம் டெக்னிக்கல் புக்ஸ் படித்தனர் எனலாம்


> நூல்மறத்தல் படித்தவர்களுக்கு தான் சாத்தியம்...

உண்மை. வள்ளுவரே சொல்லிவிட்டார்:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

ஆக, வேதம் மறந்தாலும் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்
என்கிறார். உலக வழக்கமும் அஃதே. டாக்டர், எஞ்சினீர், ...
பலர் தம் வாழ்க்கையின் பின்னாளில் வேதம் கற்று
உலகம் முழுதும் பரப்பிவருகின்றனர்.

’அறுதொழிலோர் நூல்மறப்பர்’ - கொடுக்கல், வாங்கல்,
இதெல்லாம் தொழில்கள், இதற்கு நூல்கள் இருந்தனவா?
மேலும், எவ்வளவு மோசமாக ஆட்சி போனாலும்
வேதம் மறக்கப்பட்டதே இல்லை என்பது வரலாறு.

/க/

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:44:07 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 செல்வன் <hol...@gmail.com>
வேள்வி, வேதம், பசு, பார்ப்பனர் எல்லாம் தமிழ்வரலாற்றில் மிகதொன்மையானவை. என படிக்கவும்



தமிழகத்தின் தொன்மையான பொங்கல் பண்டிகையே பசுவை மையமாக வைத்து அமைந்ததே.ஆபயன் என சொல்லுவது பசுவுக்கு தமிழகத்தில் இருந்த முக்கியத்துவத்தை காட்டுகிறது.

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:44:14 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:41 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தொல்காப்பியத்தில் வேள்வியில் தானமாக கொடுக்கபட்ட பசுவை பற்றிய குறிப்பு
> இருக்கு (கபிலை கண்ணிய வேள்வி நிலை).தொல்காப்பியத்தை விட தொன்மையான
> தமிழ்நூலுக்கு எங்கே போவது?
>
> வேள்வி, யாகம், பசு, பார்ப்பனர் எல்லாம் தமிழ்வரலாற்றில் மிகதொன்மையானவை.
>

ஆம்.

தொல்காப்பியம் பல நூற்றாண்டுகள் உருவான அடுக்கு நூல்.

நா. கணேசன்

> --


> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:45:03 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:44 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 செல்வன் <holy...@gmail.com>


>
> > வேள்வி, வேதம், பசு, பார்ப்பனர் எல்லாம் தமிழ்வரலாற்றில் மிகதொன்மையானவை. என
> > படிக்கவும்
>
> தமிழகத்தின் தொன்மையான பொங்கல் பண்டிகையே பசுவை மையமாக வைத்து அமைந்ததே.ஆபயன்
> என சொல்லுவது பசுவுக்கு தமிழகத்தில் இருந்த முக்கியத்துவத்தை காட்டுகிறது.
>

ஆப்பயன்.


> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:46:34 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:37 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > சரி, ஆபயன், ஆப்பயன் - மானமிகு, மானம் மிகு போன்றதா?
>
> ஒரு சொல்லாடல் இரு காலகட்டங்களில் இரு நூல்களில் இரு விதமாக பயன்படுவதுக்கு
> உதாரனமாகவே அதை கொடுத்தேன்.ஆபயன் என்பதுக்கு ஒப்பா ஆநிரை,ஆநெய் என பல
> தமிழ்சொற்கள் வழக்கில் உண்டு.ஆநெய் கூட ஆபயன் தான்
>

ஆபயன் - வினைத்தொகையாய் எடுத்தால் அப்பொருள் கிட்டாது.

ஆநெய் ஓர் ஆப்பயன் ஆம்.


> நீங்க கொடுத்திருக்கிற குறள் தேதி கிமு 31 சரின்னா
> பரிபாடல் பல நூற்றாண்டுகள் பின்னாடி.
>
> அது நான் கொடுக்கலை.நான் அதை கோட் மட்டுமே செய்து "அதற்கு ஆதாரமில்லை" எனவும்
> கூறினேன்
>
> மத்தபடி குறளீலேயே வேள்வியால் ப்ரீதி அடைந்து மழையை வரவ்ழைக்கும் இந்திரனை
> பற்றி குறிப்பு இருக்கு.அவியுணவு உண்ணும் தேவரோடொப்பர் என அழுத்தம் திருத்தமாக
> வள்ளுவரே கூறுகிறார்..
> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:50:26 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

உண்மை. வள்ளுவரே சொல்லிவிட்டார்:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

ஆக, வேதம் மறந்தாலும் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்
என்கிறார். உலக வழக்கமும் அஃதே. டாக்டர், எஞ்சினீர், ...
பலர் தம் வாழ்க்கையின் பின்னாளில் வேதம் கற்று
உலகம் முழுதும் பரப்பிவருகின்றனர்.

உனக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட பரவாயில்லை, எய்ட்ஸ் மட்டும் வரகூடாது என்றால் ஹார்ட் அட்டாக் வரட்டும் என்றா அர்த்தம்?

ஹார்ட் அட்டாகை விட மோசமான வியாதி எய்ட்ஸ் என தான் அர்த்தம்.

வேதத்தை பிராமணன் மறக்கவே கூடாது.ஆனால் அத்தகைய அனர்த்தம் நேர்ந்தால் கூட சகித்து கொள்ளலாம்.அவன் தனது குலதருமத்தை கைவிட்டால் அடியோடு எல்லாம் நாசமாகிவிடும் (குன்றகெடும்) என்கிறார் வள்ளுவர்

முதல்வருனத்துக்கு இந்த விதி சொல்லபட்டதால் அது எல்லா வருனத்துக்கும் பொருந்தும் என்கிறார் பரிமேலழகர்

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:52:02 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆம்.

தொல்காப்பியம் பல நூற்றாண்டுகள் உருவான அடுக்கு நூல்.

ஆனால் அதுதான் நம்மிடம் இருப்பதிலேயே தொன்மையான நூல்


--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:54:26 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:52 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > ஆம்.
>
> > தொல்காப்பியம் பல நூற்றாண்டுகள் உருவான அடுக்கு நூல்.
>
> ஆனால் அதுதான் நம்மிடம் இருப்பதிலேயே தொன்மையான நூல்
>

தெரியவில்லை.

செல்வன்

unread,
Jun 28, 2011, 7:55:16 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆபயன் - வினைத்தொகையாய் எடுத்தால் அப்பொருள் கிட்டாது.


அறுதொழிலோர் நூல்மறப்பர் (முக்காலத்துக்கும் பொருந்தும்), ஆபயன் குன்றும் (முக்காலத்துக்கும் பொருந்தும்) காவலன் காவான் எனின் (முக்காலத்துக்கும் பொருந்தும்)

If the Guaddian of the country neglects to guard it, the Produce of the Cows will fail, and the Men of Six Duties Viz BRAHMINS will forget the Vedas. - G U pope

--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 7:56:53 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:50 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > உண்மை. வள்ளுவரே சொல்லிவிட்டார்:
> > மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
> > பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
>
> > ஆக, வேதம் மறந்தாலும் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்
> > என்கிறார். உலக வழக்கமும் அஃதே. டாக்டர், எஞ்சினீர், ...
> > பலர் தம் வாழ்க்கையின் பின்னாளில் வேதம் கற்று
> > உலகம் முழுதும் பரப்பிவருகின்றனர்.
>
> உனக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட பரவாயில்லை, எய்ட்ஸ் மட்டும் வரகூடாது
> என்றால் ஹார்ட் அட்டாக் வரட்டும் என்றா அர்த்தம்?
>
> ஹார்ட் அட்டாகை விட மோசமான வியாதி எய்ட்ஸ் என தான் அர்த்தம்.
>
> வேதத்தை பிராமணன் மறக்கவே கூடாது.ஆனால் அத்தகைய அனர்த்தம் நேர்ந்தால் கூட
> சகித்து கொள்ளலாம்.அவன் தனது குலதருமத்தை கைவிட்டால் அடியோடு எல்லாம்
> நாசமாகிவிடும் (குன்றகெடும்) என்கிறார் வள்ளுவர்
>
> முதல்வருனத்துக்கு இந்த விதி சொல்லபட்டதால் அது எல்லா வருனத்துக்கும்
> பொருந்தும் என்கிறார் பரிமேலழகர்
>
> --
> செல்வன்
>

ஒன்றாக நல்லது கொல்லாமை.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்.

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

ஏன் இப்படி வள்ளுவர் சொல்கிறார்?
வேள்வி செய்தால் மழை வரும் என்று நம்பினாரா?
எங்காவது அப்படிக் குறளில் இருக்கா?

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 28, 2011, 8:00:33 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

க்ருஷி சாஸ்திர நூல்கள் இருந்தன. தேவையான விவசாயிகள்
படித்தனர். விஸ்வகர்மாக்கள், ஆடல், பாடல் கலைஞர்களுக்கும்
படிப்பு அவசியம். எல்லா பிராமணர்களுமா வேதவித்துக்களாக
இருந்தனர்? அதுபோலத் தான். ஆறு தொழில் நிபுணர்கள்
தத்தம் டெக்னிக்கல் புக்ஸ் படித்தனர் எனலாம்


டெக்னிகல் நூலை நிபுனர்கள் படிக்காமல் இருத்தல் ஒரு டிசாஸ்டரே இல்லை.

பைபிளை போப் மறப்பதுதான் டிசாஸ்டர்.

டெக்னிகல் நூலை நிபுணர் மறப்பார்கள் என சொல்லும் பொருளை விட வேதத்தை பிராமணர் மறப்பர் என்பதுதான் மிக விபரீதமானது.ஆ பயன் குன்றும் என்பதுக்கு ஒப்பானது.

இப்படிப்பட்ட டிசாஸ்டர் நடந்தாலும் கூட எப்படியாவது தப்பித்துகொள்ளலாம்.வேறு காவலன் வருவான்,காப்பான்..சுனாமி,பூகம்பம் வந்தால் கூட அதன்பின்னும் வாழ்க்கை இருக்கும். ஆனால் பிறப்பொழுக்கத்தை கைவிட்டால் எல்லாமே போய்விடும்(குன்றகெடும்)

N. Ganesan

unread,
Jun 28, 2011, 8:05:45 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 6:55 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > ஆபயன் - வினைத்தொகையாய் எடுத்தால் அப்பொருள் கிட்டாது.
>
> அறுதொழிலோர் நூல்மறப்பர் (முக்காலத்துக்கும் பொருந்தும்), ஆபயன் குன்றும்
> (முக்காலத்துக்கும் பொருந்தும்) காவலன் காவான் எனின் (முக்காலத்துக்கும்
> பொருந்தும்)
>

ஆமாம். ஆபயன் - மாரியால் ஆகும் விளையுள் குன்றும்.

செல்வன்

unread,
Jun 28, 2011, 8:07:33 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

ஒன்றாக நல்லது கொல்லாமை.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்.

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.


இன் நறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

இந்த பாட்டுக்கு என்ன பொருள்?

பாரதி அன்னசத்திரம் நாட்டுவதை, ஆலயம் பதினாயிரம் நாட்டலை இழிவாக கருதினான் என்பதா?

இதை எல்லாம் உயர்வாக கருதியதாலேயே இதை எல்லாம் சொல்லி "இதை எல்லாம் விட புண்ணீயம் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்கிறான்

வள்ளூவரும் அதே அடிப்படையில் தான் இருப்பதிலேயே உயர்ந்த புண்ணியத்தை தரும் வேள்விகளை கூறி, இதை விட புண்ணீயம் சைவ உணவு பழக்கம் என்கிறார்
 

ஏன் இப்படி வள்ளுவர் சொல்கிறார்?
வேள்வி செய்தால் மழை வரும் என்று நம்பினாரா?
எங்காவது அப்படிக் குறளில் இருக்கா?


இத்தனைநேரம் அதைதானே விளக்கினேன்?:-)

N. Ganesan

unread,
Jun 28, 2011, 8:12:07 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 7:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > ஒன்றாக நல்லது கொல்லாமை.
>
> > அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
> > செந்தண்மை பூண்டொழுகலான்.
>
> > அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
> > உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
>
> இன் நறுங்கனிச் சோலைகள் செய்தல்
> இனிய நீர்த்தண்சுனைகள் இயற்றல்
> அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
> ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்
> பின்னருள்ள தருமங்கள் யாவும்
> பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
> அன்ன யாவினும் புண்ணியங் கோடி
> ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
>
> இந்த பாட்டுக்கு என்ன பொருள்?
>
> பாரதி அன்னசத்திரம் நாட்டுவதை, ஆலயம் பதினாயிரம் நாட்டலை இழிவாக கருதினான்
> என்பதா?
>
> இதை எல்லாம் உயர்வாக கருதியதாலேயே இதை எல்லாம் சொல்லி "இதை எல்லாம் விட
> புண்ணீயம் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்கிறான்
>
> வள்ளூவரும் அதே அடிப்படையில் தான் இருப்பதிலேயே உயர்ந்த புண்ணியத்தை தரும்
> வேள்விகளை கூறி, இதை விட புண்ணீயம் சைவ உணவு பழக்கம் என்கிறார்
>

சைவ உணவு ஹோட்டல்களின் புண்ணியம் பேசவில்லை.

வேள்வியில் மிருகபலியைக் குறிப்பிடுகிறார்.
1000 வேள்விகளில் உயிர்ப்பலியை விட,
’ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்கிறார்.

நா. கணேசன்

>
>
> > ஏன் இப்படி வள்ளுவர் சொல்கிறார்?
> > வேள்வி செய்தால் மழை வரும் என்று நம்பினாரா?
> > எங்காவது அப்படிக் குறளில் இருக்கா?
>
> இத்தனைநேரம் அதைதானே விளக்கினேன்?:-)

குறள் படித்தா நீங்க சொல்றதுக்கும் குறளுக்கும்
உள்ள வித்தியாசம் தெரியுது, அதனால் கேட்டேன்.

> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 28, 2011, 8:22:07 PM6/28/11
to மின்தமிழ்

திரு. செல்வன்,

கோவையில் இருக்கும் இந்த நபரைச் சந்தியுங்கள்:
http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html

வடக்கு-தெற்கு தொடர்புகள் பல:
http://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html

ஆனால், அடிப்படையில் சங்க சமூகம் வடக்கத்தைய
வர்ண சமுதாய்த்தினின்றும் வேறுபடுகிறது.
சுவலெபில், ஹார்ட், ...

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 28, 2011, 8:26:52 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

சைவ உணவு ஹோட்டல்களின் புண்ணியம் பேசவில்லை.

வேள்வியில் மிருகபலியைக் குறிப்பிடுகிறார்.
1000 வேள்விகளில் உயிர்ப்பலியை விட,
’ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்கிறார்.


அவி என்பது மிருகபலி அல்ல

யாகத்தில் விடும் நெய் கூட அவிதான். யாகங்களில் பசு முதலிய மிருகங்கள் மாதிரி வெண்ணை, மாவில் செய்து நெருப்பில் இடுவார்களே ஒழிய நிஜமாக மிருகங்களை தீயில் இட்டது வள்ளுவர் காலத்துக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது என கருதுகிறேன்.


--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Jun 28, 2011, 8:29:17 PM6/28/11
to mint...@googlegroups.com

திரு மு.வரதராசனார் உரை

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.


  • திரு மு.கருணாநிதி உரை

    நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

  • திரு சாலமன் பாப்பையா உரை

    (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.


No direct quote on animal sacrifice. Here avi was mentioned as "uyarvu navirchi" and not as "animal sacrifice"

N. Ganesan

unread,
Jun 28, 2011, 8:29:25 PM6/28/11
to மின்தமிழ்

On Jun 28, 7:26 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > சைவ உணவு ஹோட்டல்களின் புண்ணியம் பேசவில்லை.
>
> > வேள்வியில் மிருகபலியைக் குறிப்பிடுகிறார்.
> > 1000 வேள்விகளில் உயிர்ப்பலியை விட,
> > ’ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்கிறார்.
>
> அவி என்பது மிருகபலி அல்ல
>
> யாகத்தில் விடும் நெய் கூட அவிதான். யாகங்களில் பசு முதலிய மிருகங்கள் மாதிரி
> வெண்ணை, மாவில் செய்து நெருப்பில் இடுவார்களே ஒழிய நிஜமாக மிருகங்களை தீயில்
> இட்டது வள்ளுவர் காலத்துக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது என கருதுகிறேன்.
>
> --


தேவாரம் பாருங்கள்.

சிதம்பரத்தில் வேள்வி உயிர்பலியை எதிர்த்து
ஆறுமுக நாவலர் போராட்டமே நடத்தினார்.


நிறைய எழுதலாம்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 28, 2011, 8:35:48 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

தேவாரம் பாருங்கள்.

சிதம்பரத்தில் வேள்வி உயிர்பலியை எதிர்த்து
ஆறுமுக நாவலர் போராட்டமே நடத்தினார்.


நிறைய எழுதலாம்.


அப்ப அம்மா கொண்டுவந்த பலிகொடுக்கும் தடை சட்டம் சரியா?

வேள்விகளில் உயிர்பலி கொடுக்கும் பழக்கம் எப்ப நின்றது என ஆராயவேண்டும்.எனக்கு அதுபற்றி சரியாக காலதெளிவு இல்லை என குறிப்பிட்டிருக்கிறேன்.ஆனால் வள்ளுவர் வேள்விகளில் உயிர்பலி கொடுப்பதை கண்டிக்கவே இல்லை.அவிஸ் என்பதை அவர் உயர்வாக தான் கருதி உள்ளார் என்பதுக்கு அவியுனவு உண்ணும் தேவரோடொப்பர் குறளே சன்று

அவி இங்கே உயர்வு நவிற்சியாக தான் பயன்பட்டுள்ளது

N. Ganesan

unread,
Jun 28, 2011, 8:48:17 PM6/28/11
to மின்தமிழ்

செல்வன்,

வள்ளுவத்தில் கோல்நிலைக்கும் மழைக்கும்
உள்ள தொடர்பை அறியப் பிற சிரமண மதங்களின்
நூல்களைப் பார்த்தால் விளங்கும். ஓர் உதாரணம் காட்டி
அமைகிறேன்.

சீவக சிந்தாமணி:

கோள்நிலை திரிந்து நாழி
குறைபடப் பகல்கள் மிஞ்சி
நீள்நீல மாரி இன்றி
விளைவு அஃகி, பசியும் நீடி,
பூண்முலை மகளி்ர் பொற்பின்
கற்பழிந்து அறங்கள் மாறி
ஆணைஇவ் வுலகு கேடாம்
அரசுகோல் கோடின் என்றான். (253)


நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 28, 2011, 9:23:28 PM6/28/11
to mint...@googlegroups.com


2011/6/29 செல்வன் <hol...@gmail.com>

அவி என்பது மிருகபலி அல்ல

யாகத்தில் விடும் நெய் கூட அவிதான். யாகங்களில் பசு முதலிய மிருகங்கள் மாதிரி வெண்ணை, மாவில் செய்து நெருப்பில் இடுவார்களே ஒழிய நிஜமாக மிருகங்களை தீயில் இட்டது வள்ளுவர் காலத்துக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது என கருதுகிறேன்.

ஆமாம் செல்வன்.  பசு என்பது கூட மிருகத்தை மட்டுமே குறிக்கும் பெயரன்று.  இப்போதுதான் இந்த இழையைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அறுதொழிலை வினைத் தொகையாக்கி, அறுக்கின்ற தொழிலான விவசாயத்துக்கு திசைமாற்றியதைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது.  அப்படின்னா, கசாப்புக் கடை நடத்தறது என்ன தொழிலாம்?  அதுவும் அறுக்கிற தொழில்தானே?  ஆள் ஆளா பிடிச்சிட்டு வந்து தொலைக்காட்சியில் எல்லாரும் பாக்கறமாதிரி கழுத்தப் பிடிச்சுக் கொஞ்ச கொஞ்சமா ‘........அக்பர்’ சொல்லி அறுக்கறாங்களே, அதுவும் அறுதொழில்தானே?  

திருக்குறளை ட்விஸ்ட் பண்றது ரொம்ப சுலபம்.  ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்:

மகன்தந்தைக் காற்றும் உதவி யிவன்தந்தை
என்நோற்றான் கொல்லென்னும் சொல்.

‘இவன் அப்பன் என்ன தவம் செய்தானோ’ என்று மற்றவர்கள் சொல்லும்படியான பெயரைச் சம்பாதித்துக் கொடுப்பதே ஒவ்வொரு பிள்ளையும் தன் தந்தைக்குச் செய்யக்கூடிய உதவி.

இப்ப இந்தக் குறளை அப்படிறே வச்சுக்கறேன்.  பங்க்ச்சுவேஷனை கொஞ்சம்போற மாத்திப் போடறேன்.  

மகன்தந்தைக் காற்றும் உதவி யிவன்தந்தை
என்நோற்றான்? கொல்! என்னும் சொல்.

‘இப்படி ஒரு பிள்ளயப் பெற இவனோடய அப்பன் என்ன தவம் செய்தான்? (ஒண்ணுமே செய்யல...அதான் இப்படி ஒரு தத்தாரி வந்து பொறந்திருக்கு...அதனால அவனப் பிடிச்சு) கொல்’ என்ற சொல்லைத் தன் தந்தைக்குப் பெற்றுத் தருவதே ஒவ்வொரு மகனும் தன் தந்தைக்கு ஆற்றும் உதவி.

போதுங்களா?  திருக்குறளை எவ்வளவு எச்சரிக்கையா கையாளுணும்னு தெரிதா?  படிச்சவங்க திரிச்சு சொல்றது ரொம்ப பாவம் ஐயாக்களே... படிச்சவன் என்னவோவும் என்னவோவும் பண்ணினா, போவான் போவான் என்னவோன்னு போவான்னு பாரதி பயமுறுத்தறான் சாமிங்களா....  அதுக்கு இருக்கும் தொன்மையான உரைகளுக்குள் நம்ம சாமர்த்தியத்தைக் காட்றது ரொம்ப தப்பு.  

ஏதோ எனக்குத் தோணினத சொல்லிட்டேன்.  பொறவு அவங்க அவங்க இஷ்டம்.  அதான் இருக்கவே இருக்கே, கருத்து சுதந்திரக் கேடயம்..... நான் ஏன் அதை உடைக்கப் போறேன்....

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Jun 29, 2011, 12:10:00 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 28, 8:23 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> அறுதொழிலை வினைத் தொகையாக்கி, அறுக்கின்ற தொழிலான
> விவசாயத்துக்கு திசைமாற்றியதைப் படித்ததும்
> சிரிப்புதான் வந்தது.  அப்படின்னா, கசாப்புக் கடை நடத்தறது என்ன தொழிலாம்?
>  அதுவும் அறுக்கிற தொழில்தானே?  ஆள் ஆளா பிடிச்சிட்டு வந்து தொலைக்காட்சியில்
> எல்லாரும் பாக்கறமாதிரி கழுத்தப் பிடிச்சுக் கொஞ்ச கொஞ்சமா ‘........அக்பர்’
> சொல்லி அறுக்கறாங்களே, அதுவும் அறுதொழில்தானே?
>

அறுதொழில் வினைத்தொகை என்று யாரும் சொன்னதா தெரியலையே.

அன்புடன்,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 29, 2011, 12:21:28 AM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/29 N. Ganesan <naa.g...@gmail.com>

அறுதொழில் வினைத்தொகை என்று யாரும் சொன்னதா தெரியலையே.
2011/6/29 செல்வன் <hol...@gmail.com>
2011/6/28 N. Ganesan <naa.g...@gmail.com>

நிகண்டுகள் சூத்திரத்தில் வரும் அறுதொழிலுக்கான நூல்கள்.

நிகண்டுகளை படித்துதான் விவசாயிகள் பயிர் செய்தார்களா?

இந்த இடத்தைப் படித்ததும், செல்வன் எழுப்பும் கேள்வி ‘அறுதொழில்’ என்பதை, அறுவடை செய்யும் தொழில் என்ற விளக்கத்தின் மேல் எழுந்ததாகத்தான் தோன்றுகிறது.

கதிர்களை அறுப்பதால் அறுக்கும் தொழில் விவசாயத்தைக் குறிக்கிறது என்ற விளக்கமும் உண்டு.  அறுத்த தொழில் அறுக்கின்ற தொழில், அறுக்கப் போகின்ற தொழில் என்ற பொருள் தருவதாக அறுதொழில் என்ற சொல்லை விளக்கினால், விளக்குபவர் அதை வினைத்தொகையாகக் கொள்கிறார் என்பதுதானே பொருள்?

இல்ல, வேற எதானும் இலக்கணம் இருந்தா விளக்கணம். :)

N. Ganesan

unread,
Jun 29, 2011, 12:32:52 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 28, 11:21 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:


> கதிர்களை அறுப்பதால் அறுக்கும் தொழில் விவசாயத்தைக் குறிக்கிறது என்ற
> விளக்கமும் உண்டு.  அறுத்த தொழில் அறுக்கின்ற தொழில், அறுக்கப் போகின்ற தொழில்
> என்ற பொருள் தருவதாக அறுதொழில் என்ற சொல்லை விளக்கினால், விளக்குபவர் அதை
> வினைத்தொகையாகக் கொள்கிறார் என்பதுதானே பொருள்?
>
> இல்ல, வேற எதானும் இலக்கணம் இருந்தா விளக்கணம். :)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

அறுதொழில் என்ன என்று திவாகரம், சூடாமணி நிகண்டுகள்:

திவாகர நிகண்டு சொல்லும் அறுதொழில்கள்:
“உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்து அறு
தொழில் கற்ப நடையது கரும பூமி”

"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும் பேர்கண்ட தொன்றுண்டு நூலில்"
- சூடாமணி நிகண்டு

ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றிலழி யேலே!
- ஆதிநாதர்ப் பிள்ளைத்தமிழ்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 29, 2011, 12:43:46 AM6/29/11
to மின்தமிழ்

இன்னொன்று.

”அறுதொழிலோர் நூல்மறப்பர்”

இதில் நூல் என்றால் வேதம் என்கிறார் செல்வன்.
ஆனால், வேதம் என்பது எழுதப்படாதது. எழுதாமறை.
ஓதப்படுவதால் அதற்குப் பெயர் ஓத்து, நூல் என்ற
பெயர் வேதத்துக்குப் பொருந்தாது.

நூல் - Systematic treatise, science; சாஸ்திரம். ஒற்று முரைசான்ற நூலும்
(குறள், 581).

அறுதொழில்கள் என்ன? என்று சமணர்கள் செய்த நிகண்டுகள்
கொடுக்கின்றன. அத் தொழில்களுக்கான சாஸ்திரங்கள் நூல்
எனல் பொருந்தும்.
http://groups.google.com/group/mintamil/msg/aedf4d39f5aa849b

நூல் = வேதம் அன்று.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 29, 2011, 1:03:46 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 28, 5:58 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/28 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > நிகண்டுகள் சூத்திரத்தில் வரும் அறுதொழிலுக்கான நூல்கள்.
>
> நிகண்டுகளை படித்துதான் விவசாயிகள் பயிர் செய்தார்களா?
>

> நூல்மறத்தல் படித்தவர்களுக்கு தான் சாத்தியம்...உலகெங்கும் அனைத்து


> கலாசாரங்களிலும் முக்கியநூல் மதநூலே. பைபிளுக்கு கிறிஸ்தவர்களிடையே என்ன
> முக்கியத்துவமோ அந்த முக்கியத்துவம் தமிழர்களால் வேதத்துக்கு கொடுக்கபட்டது.
> குறளின் பெயரே தமிழ்மறை (தமிழ் வேதம்).மறை என்ற பெயரும் சமஸ்கிருத வேதத்துக்கு
> மட்டுமே பொருந்தகூடியது. வடமொழிவேதத்தின் பெயரே பின்னாளில் அனைத்துமொழி
> வேதங்களுக்கும் பொதுபெயராகி இன்று குரான,பைபிளை கூட மறை என்கிறோம்.
>
> --

> செல்வன்
>

பைபிள், குரான் நூல்கள். அச்சடித்து எல்லோருக்கும் கொடுத்து
படிக்கப் படுவது. ஹிந்து சாஸ்திரங்கள் போன்றவை அந்த நூல்கள்.
அனைவருக்கும் பொது. அச்சாக்கி இலவசமாக வழங்கப்படுபவை.

வேதங்களை நூல்கள் என்பது தமிழ் இலக்கிய வழக்கமில்லை.
அவை மறை (மறைக்கப்பட்டவை), ஓத்து என்ற பெயர்பெறும்.
சென்னைப் பேரகராதியில் நூல் என்று பார்த்தால் வேதம் என்ற
உதாரணமே காட்டாது.

பேரா. கி. நாச்சிமுத்து "திருவள்ளுவர் அடிப்படையில் சமணர். திருக்குறள்
சமண நூலாகவே கருதப்பட்டு வந்தது. அவரும் அவருடைய குறளும் சமணரல்லாதாரால்
தம் சார்பினதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சமணருக்கு அன்னியமாக்கப்பட்ட
வரலாற்றையே வள்ளுவமாலை காட்டுகிறது" என்பார்.

11-ஆம் நூற்றாண்டு வள்ளுவமாலைப் பாடல், செய்யாமொழி என்று அபௌருஷேயத்வம்
என்னும் வைதீக தத்துவத்தை மொழிபெயர்க்கிறது.

செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே; ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல் (வள்ளுவமாலை 28)

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்
போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று
(வள்ளுவமாலை 15)

எனவே தான் வேதத்தை நூல் என்பது பழந்தமிழ் மரபில் இல்லை.

ஆனால், நூல் = ஒரு துறைக்கான சாஸ்திரம். அது ஏட்டில்
எழுதப்படுவது. நீதி சாஸ்திரம், கோயில் வழிபாட்டிற்கான (சிலை செய்தல்,
பூஜாக்ரமங்கள், ...) நடைமுறை கற்பிக்கும்
ஆகம சாஸ்திரம், க்ருஷி சாஸ்திரம், தநுர் சாஸ்திரம், சித்ர சாஸ்திரம், பரத
சாஸ்திரம், ... எல்லாம் நூல்கள்.

“அறுதொழிலோர் நூல்மறப்பர்”

http://groups.google.com/group/mintamil/msg/937dd9e3dff19373

நா. கணேசன்


செல்வன்

unread,
Jun 29, 2011, 1:07:17 AM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/29 N. Ganesan <naa.g...@gmail.com>

எனவே தான் வேதத்தை நூல் என்பது பழந்தமிழ் மரபில் இல்லை.


அகநானூறு நான்மறையை நூல் என தான் அழைக்கிறது

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை
நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்

செல்வன்

unread,
Jun 29, 2011, 1:11:20 AM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

போதுங்களா?  திருக்குறளை எவ்வளவு எச்சரிக்கையா கையாளுணும்னு தெரிதா?  படிச்சவங்க திரிச்சு சொல்றது ரொம்ப பாவம் ஐயாக்களே... படிச்சவன் என்னவோவும் என்னவோவும் பண்ணினா, போவான் போவான் என்னவோன்னு போவான்னு பாரதி பயமுறுத்தறான் சாமிங்களா....  அதுக்கு இருக்கும் தொன்மையான உரைகளுக்குள் நம்ம சாமர்த்தியத்தைக் காட்றது ரொம்ப தப்பு.  

ஏதோ எனக்குத் தோணினத சொல்லிட்டேன்.  பொறவு அவங்க அவங்க இஷ்டம்.  அதான் இருக்கவே இருக்கே, கருத்து சுதந்திரக் கேடயம்..... நான் ஏன் அதை உடைக்கப் போறேன்....


ஹரிகி ஐயா

வாங்க..நீங்க சொன்னமாதிரி குறளை திரிப்பது எளிது.இப்பவே பாருங்க, இந்த இழையிலேயே என்னென்னெ புதுபொருள், புதுவிளக்கம் எல்லாம் வருதுன்னு...:-)

Hari Krishnan

unread,
Jun 29, 2011, 1:12:31 AM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/29 N. Ganesan <naa.g...@gmail.com>

அறுதொழில் என்ன என்று திவாகரம், சூடாமணி நிகண்டுகள்:

 திவாகர நிகண்டு சொல்லும் அறுதொழில்கள்:

நிகண்டு எதுக்குத் தலைவா இங்க?  பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர் எல்லாரும் என்ன சொல்றாங்க?  எல்லாருமே தப்பா?

உரையை மாற்றி, திருத்தி எழுதணும்னா, நாம இந்தப் பத்துப் பேரைக் காட்டிலும் அதிகம் தெரிஞ்சவங்கன்னு அர்த்தம்.  திருக்குறளை அணுகும் முறைக்கு எங்கள் ஆசிரியர் ஒன்று சொல்வார்: நீங்கள் பரிமேலழகரையோ, அல்லது மற்ற உரையாசிரியர்களையே அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதில்லை.  ஆனால் ரைட் டர்ன், லெஃப்ட் டர்ன், இல்லை ரைட் அபௌட் டர்ன் என்று எந்தப் பக்கம் திரும்புவதாக இருந்தாலும் முதலில் குதிகாலை நிலத்தில் பதிய ஊன்றிய பிறகுதான் திரும்ப முடியும்.  அப்படி, உரையிலிருந்து மாறுபடுவதானால், முதலில் உங்கள் குதிகாலைப் பரிமேலழகரில் ஊன்றவேண்டும்; அவர் விளக்கத்தை முதலில் பார்த்த பிறகே, அவரிடமிருந்து மாறுபடக்கூட முடியும்.  திருக்குறள், இனிமேல் ஒருசீரில்லை, ஒரேயொரு மாத்திரையைக்கூட மாற்றி எழுதப்பட முடியாத நூல்.  திருக்குறளைக் கையில் எடுத்தால் நாம கோவிலுக்குள்ள இருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும்’.  

குதிகாலை யார் மீது ஊன்றிய பிறகு இந்த திசைக்குத் திரும்பினீர்கள் என்பதைச் சொல்வீர்களா?  (உங்களிடம் உரிமையாகக் கேட்கலாம் என்பதால் உங்களை மட்டும் கேட்கிறேன். 

உரையாசிரியர்களை விட்டுட்டு நிகண்டு எதுக்குங்கண்ணா?  எனக்கு முடிவெட்டிக்கணும்னா, சலூனுக்குப் போவேன்.  கசாப்புக் கடைக்கு இல்லை. :)

செல்வன்

unread,
Jun 29, 2011, 1:16:49 AM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/29 N. Ganesan <naa.g...@gmail.com>

எனவே தான் வேதத்தை நூல் என்பது பழந்தமிழ் மரபில் இல்லை.

வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து
கான வாரணம் கதிர் வரவு இயம்ப
வரி நவில் கொள்கை மறை நூல் வழுக்கத்து
புரிநூல் மார்பர் உறைபதி சேர்ந்து…
(சிலப்பதிகாரம், மதுரைகாண்டம்)

என்ன மறை என்பதில் சந்தேகமே வர இயலாதபடிக்கு புரிநூல் மார்பர் உறைபதி என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகிறார் இளங்கோவடிகள்.

உத்தம வானோர் தம்முள் உத்தமன் ஆகும் ஈசன் 
உத்தம சத்தி மருள் உத்தமி உருத்திராணி 
உத்தம விரதம் தம்முள் உத்தமம் திங்கள் நோன்பு என்று 
உத்தம மறை நூல் ஆதி உரைக்கும் இச் சோம வாரம்

(திருவிளையாடல் புராணம்)

N. Ganesan

unread,
Jun 29, 2011, 1:21:25 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 29, 12:07 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/29 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > எனவே தான் வேதத்தை நூல் என்பது பழந்தமிழ் மரபில் இல்லை.
>
> அகநானூறு நான்மறையை நூல் என தான் அழைக்கிறது
>
> ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை
> நான்மறை முதுநூல் முக்கண் செல்வன்

நான்கு மறைகளும், பழைய சாத்திரங்களும் போற்றும்
சிவபிரான்.


> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

N. Ganesan

unread,
Jun 29, 2011, 1:23:20 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 29, 12:12 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:


> உரையாசிரியர்களை விட்டுட்டு நிகண்டு எதுக்குங்கண்ணா?  எனக்கு
> முடிவெட்டிக்கணும்னா, சலூனுக்குப் போவேன்.  கசாப்புக் கடைக்கு இல்லை. :)
>

அறுதொழில் என்றால் என்ன என்று நிகண்டில் பார்க்கப்படாதா? :)

அன்புடன்,
நா. கணேசன்

> --

N. Ganesan

unread,
Jun 29, 2011, 1:31:53 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 29, 12:16 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/29 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > எனவே தான் வேதத்தை நூல் என்பது பழந்தமிழ் மரபில் இல்லை.
>

> *வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து


> கான வாரணம் கதிர் வரவு இயம்ப
> வரி நவில் கொள்கை மறை நூல் வழுக்கத்து

> புரிநூல் மார்பர் உறைபதி சேர்ந்து…*(சிலப்பதிகாரம், மதுரைகாண்டம்)
>
> என்ன மறை என்பதில் சந்தேகமே வர இயலாதபடிக்கு *புரிநூல் மார்பர் உறைபதி* என


> அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகிறார் இளங்கோவடிகள்.
>

மறை நூல் வழுக்கத்து - வேதத்தையும், அதன் சாஸ்திரத்தையும் வழுக்கிய
(வழுவுதல் - கைவிடுதல்).

நா. கணேசன்

செல்வன்

unread,
Jun 29, 2011, 1:36:07 AM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/29 N. Ganesan <naa.g...@gmail.com>

மறை நூல் வழுக்கத்து - வேதத்தையும், அதன் சாஸ்திரத்தையும் வழுக்கிய
(வழுவுதல் - கைவிடுதல்).


இங்கே குறிப்பிடப்படும் மறைநூல் என்ன?

கண்ணகியும், கோவலனும் எந்த மறையை பின்பற்றினர்?

N. Ganesan

unread,
Jun 29, 2011, 1:45:15 AM6/29/11
to மின்தமிழ்

Unlike semitic religions from the Middle East,
Hinduism is NOT a religion of the Book.
Contrast Bible or Koran among the followers of
Middle Eastern religions and the multitude of books
in Indian religions. Due to impact of Islam,
Sikh religion became one religion of the Book, Qurbani.

In Tamil, "nuul" (book) by itself does not refer to the Veda as Vedas
are never a written book & usually hidden
from the people. "Nuul" (book) refers to sastras which are
written, a science, craft, ritual (aagama sastras) - commentaries or
manuals. Valluvar uses Nuul for
sastras - "urai caanRa nuul" (Niiti sastras), but calls
the Veda as Othu. If we take what are 6 professions from
Tamil NighaNTus, "arUtozilOr nuul" are their crafts' books.
Nuul in old Tamil literature does not refer to Veda.
Marai or Othu does refer to Veda.

N. Ganesan

unread,
Jun 29, 2011, 2:01:49 AM6/29/11
to மின்தமிழ்

On Jun 29, 12:36 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/6/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > மறை நூல் வழுக்கத்து - வேதத்தையும், அதன் சாஸ்திரத்தையும் வழுக்கிய
> > (வழுவுதல் - கைவிடுதல்).
>
> இங்கே குறிப்பிடப்படும் மறைநூல் என்ன?
>
> கண்ணகியும், கோவலனும் எந்த மறையை பின்பற்றினர்?

கண்ணகி கோவலன் அந்தணர் அல்லர். அதனால் அவர்களுக்கு
எந்த மறை(வேதமும்) தெரியாது. கோவலனைச் சாவகன் (ஸ்ராவகன்) என்கிறது
சிலம்பு. சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்.

வேதங்களோ, சாஸ்திரங்களோ வழுக்கிய புரிநூல் மார்பர்
பதியைச் சேர்கின்றனர். இவர்கள் யார்? என்பது நல்ல கேள்வி.
ஆந்திராவில் இருந்து வந்த மஹாயான பௌத்தர்களா?
என நினைக்க இடமுண்டு. மஹாயான போதிசத்துவர்களுக்கு
புரிநூல் உண்டு. மஹாயான மந்திரங்கள், தாரணிகள்,
சூத்திரங்கள் பல பிராகிருதங்களில் இருந்து சமஸ்கிருதம்
ஆக்கப்பட்டவை என்று தெரிகிறது.

கணேசன்

> --
> செல்வன்
>
> "தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே
> முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை
> இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த
> தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை
> நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக"
> என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"-
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

It is loading more messages.
0 new messages