|
கிருஷ்ணன் தேவகி நந்தனன். வேண்டுமானால் ஹரிகிருஷ்ணனிடம் கேட்கவும் ;-)
க.
தேனீயாரே! வருந்த வேண்டாம். அப்படிப் போட்டால் ஒரு விருந்து கிடைக்கும்
என்ற ஆசையில்...
இப்போ பாருங்கோ....
க.
க.
யார் என்ன சொன்னாலும் எங்கள் ஆழ்வார் சொல் எதுவோ அதுவே உண்மையான
இந்தியத்துடிப்பாக இருக்கும்! இங்க பாருங்க...
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே!! (பெரியாழ்வார்)
இப்படித்தான் நாம் கிருஷ்ண ஜெயந்திக்கு அழைப்பு விடனும். இதுதான் முறை.
அவன் "முகிழ் நகை"..சொல்லும் போதே நெஞ்சை அள்ளுகிறது! அவன்
"முத்தம்"..ஐயோ! நினைத்தாலே சித்தம் மயங்குகிறது! கன்னத்தில்
முத்தமிட்டால் கள் வெறி கொள்ளாதோ பின்ன?
கண்ணன் யார்?
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ
அவன் தேவகி சிங்கமன்றோ!
தேவகி அல்லவோ மிகச்சிறந்த தாய். அவள் என்ன செய்தாள்? பச்சை வயிறு விம்மி
ஆறுமுன், பொங்கிப்பூரிக்கும் முலைப் பால் வழியும் போது பிள்ளையை வழி
அனுப்புகிறாள்
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே! (பெரியாழ்வார்)
தேவகி உள்ளம் எப்படிப் பட்டது? சீதக்கடல் போல் குளிர்ச்சியானது. கண்ணன்
பாரதிக்கு மட்டுமா அமுதன்? இல்லையே அவன் தேவகியின் இன்னமுது அல்லவா?
இப்படிப்பட்ட தாய் பெற்ற குழந்தையை சீராட்டிப் பாராட்டி வளர்க்க
முடியாமல் பறிகொடுத்துக் கதறிய கதறல் யார் காதில் விழுந்தது? எம்
குலசேகரன் காதில் விழுந்தது.
மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை
வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
நண்ணு வாரொல்லை நாரண னுலகே
கண்ணன் 13 வருடம் கழித்து, தாயைக் காண்கிறான். அப்படியே நெக்குருகிப் போன
தேவகிக்கு, 13 வருட லீலைகளை நொடிப்பொழுதில் காட்டுகிறான். அவள்
ஒன்றுவிடாமல் எல்லா பாலலீலைகளையும் கண்டு ரசிக்கும் படி செய்கிறான்.
தேவகி அப்படியொரு தாயென்றால் எங்கள் கண்ணன் அப்படியொரு மகனல்லவா?
இத்தனை குளறுபடி நடக்கும் போதும் ரகசியமாய் எங்கள் கோதை நாச்சியார்
பார்க்கிறாள். உள்ளம் பதறுகிறது. எப்படி அருளிச் செய்கிறாள் பாருங்கள்!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
அது சரி, அது என்ன ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்து? ஏன்
தேவகி, யசோதை என்று பேர் சொல்லக்கூடாதோ? அட நீங்க ஒண்ணு! சுவருக்குக் கூட
காது உண்டு ஐயா! கண்ணன் எங்கிருக்கிறான் என்று கம்சன் ஆட்கள் தேடி அலைவது
உங்கள் கண்களில் படவில்லையா?
இதுதான் ஆழ்வார்கள் இதயம்!
கண்ணன்
2008/8/25 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தாயை "பின்"னாலே குத்துவதாலேயா?
திவா
2008/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> ராமாயணத்தில் ராம லக்ஷ்மணனைப் பற்றியும்
>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
வாங்கள் தேவகி மைந்தரே!
யார் என்ன சொன்னாலும் எங்கள் ஆழ்வார் சொல் எதுவோ அதுவே உண்மையான
இந்தியத்துடிப்பாக இருக்கும்! இங்க பாருங்க...
> மழைக்குக் குடைபசி நேரத்து உணவுஎன்றன்
> வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்.
>
> (பாரதியேதான்)
ஐயோ! ஐயோ! நெஞ்சை அள்ளும் வரிகள்.
"வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்!"
பாரதியால்தான் முடியும்.
வாழ்வு நிலையே! கண்ணம்மா! என்பானே!
ஆடி வருந்தேனே என்பானே!
என் உயிர்ச்சோதி என்பானே!
குகையில் வளர் கனலே என்பானே!
என்ன ஹரி..மழை முடிவதாவது?
கொட்டுங்கள். இது தேன் மழையன்றோ!
கண்ணம்மா - எனது குலதெய்வம்
நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
கண்ணன்
பிகு: ஆழ்வார்கள் பாடிய யசோதா புராணம் வேண்டுமா ;-) ??
ஆனாலும் ஒரு யோசனை!
சினிமாதான் வாழ்வு என்றாகிவிட்டது தமிழர்களுக்கு. உண்மையாக வீடுகளில்
கோகுலாஷ்டமியை எப்படிக் கொண்டாடுவார்கள் என்று பதிவு செய்து வெளியிட்டால்
இன்னும் authentic-ஆக இருக்கும்.
நமது போக்கை மெல்ல, மெல்ல மாற்றியமைப்போம்.
வாழ்க.
கண்ணன்
--
"Be the change you wish to see in the world." -Gandhi
கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்..
http://www.musicindiaonline.com/p/x/w4m2IW5gG9.As1NMvHdW/
கண்ணன் பிறந்த இரவு-1
http://kannansongs.blogspot.com/2008/08/blog-post_23.html
நன்றி: ரவிசங்கர்
கண்ணன்
On 8/26/08, நினா.கண்ணன் <kann...@gmail.com> wrote:
>
>
>
கோகுலாஷ்டி இழையின் மூலம் அருமையான பிரவேசம்.
தேவகி புலம்பலை மேலும் காட்டி குலசேகரன் புகழ் பாடியமைக்கு எப்படி நன்றி
சொல்வது. அவர் அருமையிலும், அருமையான ஆழ்வாராயிற்றே! எல்லோரும்
கிருஷ்ணனைக் கொண்டாடும் போது இராமனுக்கு யாரும் தாலாட்டுப்பாடவில்லையே
என்று "மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே' என்று இராமனுக்கு
தாலேலோ பாடிய பெருந்தகையன்றோ எம் குலசேகரன்! இந்த ஒரு ஆழ்வார்தான் தமிழ்
- சமிஸ்கிருதம் இரண்டிலும் அருளிச்செய்தவர். இவரது 'முகுந்தமாலா' என்றால்
நம் பிரபுபாதாவிற்கு மிகவும் இஷ்டம்!
நீங்கள் தேவகி - யசோதை இரண்டுபேர் காரியத்தையும் வலையில் செய்பவர்.
உங்கள் சிறப்புப்பதிவுகளை இங்கு தொடர்ந்து இடுங்கள்!
கண்ணன்