தமிழ்க்கடமைகள் 8 : தமிழா நீ எழுச்சி கொள்வாய் - புலவர் புஞ்சையரசன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 24, 2011, 7:05:10 AM5/24/11
to thiru thoazhamai

தமிழ்க்கடமைகள் 8


தமிழா நீ எழுச்சி கொள்வாய்

தமிழரிங்கு தமிழ்நாட்டில் ஒன்றி உள்ளம்

        தான்குரலே கொடுத்திட்டால் என்றோ அங்கு

தமிழர்க்குத் தமிழ்ஈழம் மலர்ந்திருக்கும்

        தமிழன்தான் இனமொழி நல்உணர்வே இன்றி

தமிழன்தான் வாழுகின்றான் இலங்கை தன்னின்

        தமிழர் வரலாற்றறியாப் பேதையாக

தமிழா நீ எழுச்சி கொள்வாய் எனிலோ நன்றே

        தரணிவாழ் தமிழரெலாம் மகிழ்ச்சி கொள்வார்.

- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள் : பக்கம்  6



--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


Reply all
Reply to author
Forward
0 new messages