பெருமையை மீட்போம்
அமுதம் ஊறும் அன்பு கொண்டு
அரசு செய்த நாட்டிலே
அடிமை என்று பிறர் நகைக்க
முடிவணங்கி நிற்பதோ
இமயம் தொட்டு குமரிம ட்டும்
இசைபரந்த மக்கள் நாம்
இனியும் அந்தப் பெருமை கொள்ள
ஏற்ற யாவும் செய்குவோம்.