அழியும் அபாயத்தில் இருக்கும் இன்னொரு இனம் நான்கு கொம்புகள் உள்ள மான்
(டெட்ராசெரஸ் குவாட்ரிகார்னிஸ்). இதை சௌசிங்கா என்றும் அழைப்பார்கள்.
இந்த மான் அதிகம் தண்ணீர் குடிக்கும் தன்மை உடையது. அதனால் பெரும்பாலும்
வற்றாத தண்ணீர் ஆதாரம் உள்ள இடங்களில் தான் வசிக்கும்.
தமிழக வனத்துறையுடன் சேர்ந்து கேஏஎன்எஸ் மற்றும் ஏஎன்சிஎப் ஆகியவை ஓசூர்
வனப் பகுதிகளில் நடத்திய வன விலங்குகள் கணக்கெடுப்பில் இந்த இரண்டு அரிய
வகை உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் காவேரிக் கரையோரங்களில் வசிக்கும் நான்கு கொம்புகள் உள்ள
மான் இனம் அநேகமாக அழிந்துவிட்டது என்று டாக்டர் ஏஜேடி ஜான்சிங்
அன்மையில் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓசூர் வனப்
பகுதிக்குட்பட்ட ராயக்கோட்டா மலைத்தொடரில் உள்ள உடதுர்கம் பகுதியில்
இறந்த மான் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது அதே காவேரிக் கரையோரம் உள்ள பல இடங்களில் இந்த மான்கள்
காணப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். இந்த மான்கள் ஓசூர் வனத்தில்
3 மான்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாகத் திரிகின்றன. 1970களில் ஓசூர்
வனப்பகுதி அலுவலராக இருந்த மறைந்த டாக்டர் ராஜா சிங்கின் மகன் டாக்டர்
ரவி ராஜா சிங் அண்மையில் இந்த மான்களைப் பார்த்துள்ளார்.
------------
தஞ்சை, வேதாரண்யம் பகுதியில் நாட்டுப்புறங்களில்
இந்த 4 கொம்பு மானுக்கு தமிழ்ப்பெயர் இருக்கும்.
யாருக்காவது தெரியுமா? பி. எல். சாமி, பிலோ இருதயநாத்
போன்றோர் எழுதியிருக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Four-horned_Antelope
நன்றி,
நா. கணேசன்
சரியில்லை.
மரை என்பதை மறை
என்று மாற்றி மறைக்காடு = வேதாரணியம்
என்ற சைவைக் கதைகள் கட்டப்பட்டுவிட்டன.
தமிழில் Anteopes-க்கு பெயர் “மரை”.
மரையினத்தில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன.
Anteopes - கிரேக்கத்தில் பேர் வந்ததே அதன்
அகண்ட இமைகளால்தான். அச்செய்திகள்
தமிழ் இலக்கியங்களில் சங்கந்தொட்டுப் பல உள.
மரையா (மரை ஆ), மரை ஆன் - Nilgai.
19-நூற்றாண்டு வரை நம் ஊர் காடுகளில் இருந்தது.
கோடையைத் தாங்கும் வலிமை பெற்றது.
ஏராளமான சங்கப் பாட்டுகளில் இருக்கும்.
பெருங்கதையில் கொங்குவேளிர் மரைஆ
பால் பிலிற்றுவதை அழகாகச் சொல்லி உள்ளார்.
எகிப்தியர் சில ஏண்ட்டிலோப் வகைகளை
வளர்ப்பினமாக்க முயன்றுள்ளனர். தமிழரும்
பைசனையும் (ஆமா எனத் தமிழில் பெயர்.
சிந்து சமவெளியிலும் நடந்துள்ளது),
மரைஆவினையும் (Nilgai) வனவாசிகள்
பால் கறந்து உணவுடன் காய்ச்சிய அழகான
பாடல் சங்கத்தில் உண்டு.
மரை என்றால் சௌஸ்ருங்கா (4-horned antelope). தமிழ்நாட்டுக்
கரைக்கடற்புற ஊர்களில் நிறைய.
அதனால், மரைக்காடு வேதாரணியத்தின்
பழந்தமிழ்ப் பெயர். கன்னடத்தில் நீல்காய் - மரவி, மராவு.
Note the connection: Neel gao/gai "cow" in Hindi,
and marai aa(vu) "cow" in Sangam Tamil.
கலை (கலைமான் = black buck) துர்க்கை, சரசுவதியின்
ஊர்தி. க்ருஷ்ணமிருகம் என்று பெயர்.
இதன் தோலை பிரமனுக்கு ஆசனம்.
ஆரியர் வாழ்ந்த ஆரியவர்த்தம் கிருஷ்ண
மிருகம் உலவும் பூமி. தென்னாட்டில் அழிந்து
விட்டிருக்கிறது அப்போதே.
இரலை - கலைமானுக்கும் சொல்லலாம்,
கரிய கொம்புடைய சிங்காரா என்னும்
Indian gazelle-க்கும் வரும்.
More later,
N. Ganesan
கடமானின்/கடமாவின் ஒளிப்படங்கள்:
http://images.google.com/search?tbm=isch&hl=en&source=hp&biw=1024&bih=527&q=Rusa+unicolor&gbv=2&oq=Rusa+unicolor&aq=f&aqi=&aql=undefined&gs_sm=e&gs_upl=1952l1952l0l1l1l0l0l0l0l101l101l0.1l1
http://images.google.com/search?tbm=isch&hl=en&source=hp&biw=1024&bih=527&q=Rusa+unicolor&gbv=2&oq=Rusa+unicolor&aq=f&aqi=&aql=undefined&gs_sm=e&gs_upl=1952l1952l0l1l1l0l0l0l0l101l101l0.1l1#hl=en&gbv=2&tbm=isch&sa=1&q=sambur+deer&oq=sambur+deer&aq=f&aqi=&aql=undefined&gs_sm=e&gs_upl=71506l75423l0l23l14l0l3l0l1l233l1778l0.7.3l11&bav=on.2,or.r_gc.r_pw.&fp=dbc87a761764214b&biw=1024&bih=527
http://images.google.com/search?tbm=isch&hl=en&source=hp&biw=1024&bih=527&q=Rusa+unicolor&gbv=2&oq=Rusa+unicolor&aq=f&aqi=&aql=undefined&gs_sm=e&gs_upl=1952l1952l0l1l1l0l0l0l0l101l101l0.1l1#hl=en&gbv=2&tbm=isch&sa=1&q=sambar++deer&oq=sambar++deer&aq=f&aqi=g-s1g-sx9&aql=undefined&gs_sm=s&gs_upl=19874l23135l0l5l5l1l1l2l0l239l490l0.2.1l3&bav=on.2,or.r_gc.r_pw.&fp=dbc87a761764214b&biw=1024&bih=527
மதராஸ் தமிழ் அகராதி:
-------------------------------------------------------------------
(1) கடமா¹ kaṭam-ā
, n. < கடம்² + ஆ. Bison, wild cow. See காட்டா. கடமா தொலைச்சிய
கானுறை வேங் கை (நாலடி, 300).
(2) கடமான் kaṭam-āṉ
, n. < கடன்² + ஆன். See கடமா¹. தேனொடு கடமான் பாலும் (கந்தபு.
வள்ளிய. 76).
இவை இரண்டும் Bison, wild cow அல்ல என்பது முழுப்பாடல்களைப்
படித்தால் தெரியும். அதை அடுத்துப் பார்ப்போம்.
----------------------------------------------------------------------
இப்படி பொருள் மதராஸ் அகராதி கொடுப்பதால்,
கடமா = bison என்று எமனோ எழுதியுள்ளார்.
எல்லா திராவிட மொழிகளிலும் கடமா/கடமான்/கடமை
என்றால் Rusa unicolor மான் தான்.
கடமான் என்றால் bison அல்ல என்பதைத் சங்க
இலக்கியங்களில் இருந்து தமிழிலக்கியங்களில்
பார்த்தால் தெளிவாக விளங்கிவிடும்.
எல்லா திராவிட மொழிகளிலும் இதன் பெயர்
கடமான் என்பதை திராவிட வேர்ச்சொல் அகராதி
(DEDR 1114) காட்டுகிறது.
(1) நாலடியார் 300:
300. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின்.
இளவழகனார் உரை (சை. சி. நூ. கழகம், சென்னை):
”கடம் மா தொலைச்சிய கான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது
உண்ணாது இறக்கும் - மதம் பொருந்திய யானையை அதன் வலி
தொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த
அவ்வியானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந்
தறுவாயிலிருப்பினும், உண்ணாமல் உயிர்விடும்; ”
கடமா என்றால் யானை என்கிறார் இளவழகனார்,
மதறாஸ் அகராதியோ ‘பைசன்’ என்கிறது!
கடகரி (பரிபாடல் திரட்டு), கடமா = மதயானை (தேவாரம்)
இலக்கிய ஆட்சிகள் உண்டு என்பதால் இளவழகனார்
உரையை ஒரு பொருளாகக் கொள்ளலாம். ஆனால்,
புலி தன் இரைக்காக மிகுதியும் மான்களை அடிக்கும்,
மதயானை ஒருத்தலைப் புலி கொல்வது மிக, மிக அரிதானது.
மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு,
தமிழ் எல்லாவற்றிலும் கடமா என்றால் Rusa unicolor
தான். எனவே, நாலடியார் வெண்பாவில் மானையோ,
(அல்லது, யானையையோ) பொருள் கொள்வது பொருத்தமாகும்.
(2) கந்தபுராணம், தக்ஷகாண்டம், வள்ளியம்மை திருமணப்படலம்.
கானவர் தலைவன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
மானினி தன்னைக் கண்டு வள்ளியங் கிழங்கு மாவுந்
தேனொடு கடமான் பாலுந் திற்றிகள் பிறவு நல்கி
ஏனலம் புனத்தில் நின்ற யாணர்வேங் கையினைக் கண்டான். 76
சைவ சித்தாந்தக் கழகப் பதிப்பு உரை:
கடமான் = ஒருவகை மான். வள்ளியே (மானினி)
மான்வயிற்றில் பிறந்தவள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மான், வள்ளி, வேங்கை - புராணம் பழையது.
வேங்கை - மரம், புலி இருபொருள் உண்டு,
கடமான் பாலுண்டு வளர்ந்த மானினி (மான் போன்ற
வள்ளி) வேங்கை (புலி/முருகன் மாறிநிற்கும் மரம்)
அருகே. மானும் (Indian elk called Sambur), வேங்கையும் - நயம் காண்க.
ஆக, இரண்டு மேற்கோளிலுமே, பாடற் பொருளும்,
உரைகளும் கடமான் = ’பைசன்’ என்று குறிப்பிடவில்லை.
கடமா = கடம் + மா என்று பிரிக்க வேண்டும். கடம் + ஆ
என்று பிரித்தால் பிழை.
----------
கடமா ஏறுகள் மத்தம் பிடிக்கும் மாதங்களில் (rut season)
தங்கள் கொம்புகளை மிடைந்து மோதும் காட்சி:
http://www.thehindu.com/news/international/article540272.ece
http://www.stockphotopro.com/photo_of/Sparring/233391LGP/Sparri
ng_Sambar_Deer_Cervus
(அ) கொலை முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ் சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடு மரத்து இளங்கா நிலைத்தலானும் (கல்லாடம் 81)
(சினை - கிளைகளுடன் கூடி, சூலம் (குளிர்) போலுள்ள
கடமானின் கொம்பு).
(ஆ) மான் வகைகள்:
கலைமா (black buck), மரைமா (antelope), கடமா (sambur)
தாளறுவன இடைதுணிவன
தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர
மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட
நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ
விழுவனபல உழையே. (சேக்கிழார்)
(இ) கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினை - குறுந் 392
கடமை = கடமான் (Sambur).
(ஈ) நாகமும் நறையும் ஊகமும் உழுவையும்
கடமான் ஏறும் கவரியும் கரடியும் - (பெருங்கதை).
(உ) கவரி கடமா கதூஉம் படர்சாரல்
(ஐந்திணைஐம்பது - 288)
(ஊ) எற்படு பொழுதின் இனந்தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின் விட முழை (புறம் -157)
'in a cave as the sun descends, a massive tawny
male tiger male tiger attends
to a fine stage trumpeting for his young and bewildered doe
because he is lost in the forest, separated from his family,
unable to find his way home" (George L. Hart)
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
சுடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிர (புறம் -202)
இரண்டு பாட்டாலும், கடமா = கடமான்
என்பது தெளிவு. உவேசா, புறநானூறு, 6-ம் பதிப்பு,
1963. “கடமானேறு - 157, 202” என்பதால் அறிக.
வேட்டுவர் இறைச்சி உண்ணக் கடமான் ஏற்றை
வேட்டையாடுவது (புறம் 202). அடுத்த குறுந்தொகை
உதாரணமும் கடமானை வேட்டையாடல் குறித்தது.
(எ) ”கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன” (குறுந்- 179)
வேட்டுவர் நாய்கள் கடமானை அலைக்கழித்து
இளைப்பை அடைந்தன. கடமானை நாய்கள்
அலைக்கும். காட்டுச் செந்நாய்கள் குட்டியுடன்
உள்ள தாய்க் கடமானை அலைப்பது காண்க:
http://www.youtube.com/watch?v=B79dxXqYw-M
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
(மலைபடுகடாம் 175) - குறிஞ்சி நிலத்தவர்
பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சி,
கடமானின் இறைச்சி, முள்ளம்பன்றியின் இறைச்சியை
உண்டனர்.
கடமான் (rusa unicolor) தமிழ்ப் பத்திரிகைகளில்
நிறையக் காணலாம்.
நா. கணேசன்
திசைச்சொல் மிழா/மிளா: நாஞ்சில்நாட்டில்
மிழா (மிளா) என்னும் திசைச்சொல் வழங்குகிறது.
இதை இணையத்தில் பிரபலம் ஆக்குபவர் ஜெயமோகன்
ஆவார். மிழா/மிளா ஆண் கடமானுக்கு மாத்திரம்
பொருத்தமான சொல். இதனை ஆண் ஆட்டின் பெயரான
மேஷம் (< மிஷ்- ) உடன் ஒப்பிடலாம். நாஞ்சில் நாடு
சேரர்களுக்கு உட்பட்ட நாடு. அங்கே மருமக்கட் தாயம்
உண்டு. எனவே வடசொல்லான மேஷம் (மேழம்) மிழா
எனத் திரிந்து பேச்சுவழக்கில் மிளா என்றாகியுள்ளது
போலும். மிழா அல்லது மிளா இரண்டும் தமிழ் நூல்களில்
எங்கும் காணமுடியாது என்பதும் கருதத்தக்கது.
”முழா - மிழா = திரண்ட மான் (stag) . மிழா - மேழம் = திரண்ட
செம்மறியாட்டுக்கடா. மேழம் - மேஷ(வ.) மேழம்” (பாவாணர்,
பண்டைத் தமிழ்)
“Chamois = மலைமிழா; பருத்த மலையாடு. மிழா என்பது மொத்தமான ஆட்டைக்
குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.”
[எழுதியவர் அருளி ஆக இருக்கலாம். ஆனால்
மிழா பழந்தமிழ்ச் சொல் அன்று - நா. கணேசன்]
http://www.geetham.net/forums/archive/index.php/t-24063.html
வடசொல் ஆன மிழா(மிளா) (< மிஷ்-, மேஷம்) நாஞ்சில்நாட்டு
வழக்கு. அத் திசைசொல்லை விட, எல்லாருக்கும் பொதுவான
தமிழ்க் கட்டுரைகளில் பழைய, இலக்கிய ஆட்சி மிக்க,
எல்லா திராவிட மொழிகளிலும் நிலைத்துள்ள (DEDR 1114)
பயன்படுத்துவது சாலச் சிறந்தது. ”செந்தமிழ்ப்பாண்டிநாட்டுக்குத்
தென்திசையிலுள்ள தென்பாண்டிநாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும் சோற்றைச்
சொன்றி என்றும் , குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும் , குட நாட்டார்
தந்தையை அச்சன் என்றும் , கற்காநாட்டார் வஞ்சரைக் கையர் என்றும் ,
வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும் , பூழிநாட்டார் சிறுகுளத்தைப்
பாழி என்றும் , அருவா நாட்டார் . செய்யைச் செறு என்றும் , சிறுகுளத்தைக்
கேணி என்றும் , அருவா வடதலையார் புளியை எகின் என்றும் , சீதநாட்டார்
தோழனை எலுவன் என்றும் , தோழியை இருளை என்றும் வழங்குவர் . பிறவும் வந்த
இடத்துக் காண்க . [...] சிங்களம் என்றது ஈழநாட்டை. அந்தோ என்பது சிங்களச்
சொல் . எருத்தைப் பாண்டில் என்பது தெலுங்குச் சொல் மாமரத்தைக் கொக்கு
என்பது துளுவச்சொல். ஒழிந்தன வந்த இடங்களில் காண்க.“ (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக
நாவலர், நன்னூல், காண்டிகையுரை).
நா. கணேசன்