surround; mūr̤al a lid; mūkai vast horde; moy (-pp-,-tt-) to crowd, press, throng, swarm, spread as an eruption, crowd round, swarm round, cover, enclose; n. press, throng, swarm, crowd, closeness, tightness, battle, war; moyppu crowd, multitude; moci (-v-,-nt-) to swarm. Ka. musuku, musugu to cover, hide, settle upon as flies, close, swarm or crowd together, spread over or about; n. cover, veil; musuṟ to cover as flies, crows, etc., crowd together, cover, hide; n. cover, veil;
to drink, sip; mōyikka to give to sip; mōval a gulp. Kur. mōxnā to eat (anything except cooked rice); pass. or refl. mōxrnā; mōxta'ānā to cause or allow someone to eat. Malt. móqe to eat (as meat or fruit).? Ta. moci (-pp-,-tt-) to eat; māntu (mānti-) to eat, drink, experience, enjoy Cf. 4897 Ta. mukku. DED(S) 4212.
மோசி¹-த்தல் mōci-, 11 v. intr. < muṣ. To err; to be misled; பிசகிப்போதல். (J.)
மோசி²-த்தல் mōci-, 11 v. tr. < muc. To give up; விட்டொழிதல். சங்கை மோசிப்பாயே (கைவல். சந். 21).
மோசிகை mōcikai, n. Tuft of hair on top of head; உச்சிமுடி. (யாழ். அக.)
மோசிமல்லிகை mōci-mallikai
, n. perh. மோசி¹- +. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சிலப். 13, 156, உரை.)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள்.
2010/9/19 வேந்தன் அரசு raju.ra...@gmail.com
பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள்.சங்க காலத்தில், தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்கள் அப்படியில்லை. கடல் சங்கை அறுத்து வளையல்கள் செய்திருக்கிறார்கள். சங்குப் பூச்சியின் கவசம்தானே சங்கு?அது மட்டுமா? புறநானூறு 93 ஐப் பாருங்கள்:அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
மோசிகீரனார் - 1அண்மையில் ctamil மடற்குழுவில் மோசி கீரனார் பற்றிய பேச்சொன்று வந்தது. மோசி பற்றிய குறிப்பு ”
இனி ஈர்ந்தண் முழவு என்ற கலைச்சொற் பயன்பாட்டைப் பார்ப்போம். பொதுவாய் எல்லாத் தோல்களிலும் எத்தனை நாட்பட்டாலும் ஓர் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். தோல் என்பது ஈரத்தோடு நிறைந்த புரதம் போன்ற வேதிப் பொருள்களால் ஆனது. ஈரப்பதத்தைப் பொறுத்து ஒலியின் அதிர்வு மாறுபடும். நடு மண்டிலத்துச் (நடு ஸ்தாயி) ச என்னும் ஒலிக்காகச் சுருதி சேர்த்த முழவு, சற்று ஈரம் கூடினால் மெலிவு மண்டிலத்தில் உள்ள நி - க்கும், முன்னாற் சுருதி கட்டிய நடு மண்டிலச் ச- வுக்கும் இடையில் சுருதி இறங்கிப் போகலாம். பொதுவாக ஈரப்பதன் கூடக் கூடச் சுருதிகள் இறங்கும். சுருதிகளைக் கூட்டவேண்டுமானால், மேலே சொன்னதற்கு எதிராகப் பறையிசைஞர்கள் நெருப்பை மூட்டி அதன் கதிர்வீச்சில் (radiation) பறையைக் காட்டி தோலின் ஈரப்பதனைக் குறைப்பார்கள். அப்படிச் செய்வதாற் சாப்பறையைக் கொட்டும் பொழுது கடுவோசை எழும். இறங்கிய சுருதிக்கு ஈர்ந்தண் முழவும், ஏறிய சுருதிக்கு கதிர்வீச்சிற் காட்டிய சாப்பறையும் எடுத்துக் காட்டுக்களாகும்.
இது போன்ற அரத்தக் குளியாட்டு அரசனின் முரசிற்கும் நடைபெற்றிருக்கலாம். ஏனெனில் அரசமுரசம் /
நாம் இனிப் பார்க்கவேண்டிய மூன்றாவது சொல் ’சேக்கை’ என்பதாகும். புறப்பாட்டில் ’சேக்கை’ என்ற சொல்லே வருகிறது, ’கட்டில்’ என்ற சொல் வரவேயில்லை. அது பாட்டிற்குக் கீழுள்ள விளக்கக் குறிப்பில் தான் வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் வேண்டுமானால் கட்டிலின் பொருள் ’படுக்கை’ என்று ஆகலாம். அதற்கு முந்தைய காலத்தில் அதன் பொருள் வெறும் இருக்கை என்பதே. அரசு கட்டில் என்பது எப்படி அரசன் படுக்கையல்ல, அரசன் அமரும் இருக்கை என்பதேயாகும். அது போல முரசுச் சேக்கை என்பது முரசு இருத்தும் இடம். அது படுக்கையல்ல. அரசு கட்டிலில் அரசன் ஏறுவது போல முரசிருக்கும் சேக்கையில் மோசிகீரனார் ஏறுகிறார். அதில் ஏறிப் படுத்ததாக நாம் தவறாகப் புரிந்து கொள்ளுகிறோம். அதே போல முரசின் சேக்கையில் மோசிகீரனார் ஏறிய பொழுது முரசு அதன் நடுவில் இருந்ததா? மோசிகீரனார் முரசுச் சேக்கையின் ஓர் ஓரத்தில் அமர்ந்தாரா? அன்றி அவர் ஏறும் போது முரசே அங்கில்லாது சேக்கையின் முழுதுமாய் ஏறி அமர்ந்தாரா என்பது தெளிவாகப் பாடலிற் புரியவில்லை.
இனிப் புறம் 50 ஆம் பாட்டைக் கவனிப்போம்.மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்
அதொனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடைமுழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசீ யோயே வியலிடங் கமழ
இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்கிது செயலே
இங்கு சொல்லப்படுகின்ற முரசும் யா போன்ற கருத்த மரம் ஒன்றாற் செய்யப் பட்டிருக்கிறது. அதிற் போர்த்தியிருக்கும் தோல் எந்தத் தொய்வும் இன்றி, எக்குற்றமும் சொல்ல முடியாத அளவுக்குச் சரியான இறுக்கத்தோடிருக்கிறது. [மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் = குற்றஞ் சொல்ல முடியாதபடி இழுத்துக் கட்டப்பட்ட வாரோடு கரும் பத்தர் இருக்கிறது.- It is tightly lashed with a very long belt that you cannot find fault with.]அடுத்த மூன்று வரிகளில் முரசத்தின் மேற் செய்த அலங்காரம் வண்ணிக்கப் படுகிறது. மயிர்ப்பீலிச் சுருளும், ஒளிதரும் மணிக் குஞ்சலங்களும் முரசின் மேல் அணிவிக்கப் பெற்றிருக்கின்றன. பொன்போலும் ஒளிநிறைந்த உழிஞைப்பூ சூட்டப் பட்டிருக்கிறது. [ஒரு கோட்டையைப் பிடிக்கப் போகும் முன்னால் முரசின் மேல் உழிஞைப் பூ சூட்டப் பெறுதல் இயல்பான காட்சியே.]மேலே கூறிய அலங்கார விவரிப்பு எதிரியின் கோட்டையைப் பிடித்து வெற்றி பெறுவதற்கு முன்னாலா, வெற்றி பெற்ற பின்னாலா என்ற கேள்வி நமக்கு முன்னால் எழும்பும். ‘குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வருதல்’ என்ற வாசகத்தால் அலங்கார விவரிப்பு மாற்றார் கோட்டையைப் பிடித்து வெற்றி பெற்ற பின்னால் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது. ஏனென்றால் உழிஞைப்போரில் வெற்றிபெற்ற முரசத்திற்குத்தான் குருதியால் மண்ணுமங்கலம் நடைபெறும். அதாவது குருதி வேட்கை உருகெழுந்து நிற்கும் முரசத்திற்குத் தான் அரத்தத்தால் மண்ணுதல் நிகழும். .எனவே இங்கு முதல் எட்டு வரிகளில், “கொற்றவைக்குப் பூசை நடத்தி அலங்கரிக்கப் பட்டு உழிஞைப் போருக்குச் சென்று குருதிவேட்கையைத் தணித்து வரும் அரச முரசம் மண்ணி வாரா நிலையில்” என்று “கட்டியக் கிளவி” (conditional clause) சொல்லுகிறார். அப்படியானால் என்ன பொருள்? போருக்குப் போன முரசும் பொதுவாக அரத்தத்தில் மண்ணி வரும். இப்பொழுதோ, அது மண்ணி வராது நிற்கிறது. அந்த நிலையில், எண்ணெய் நுரைபோற் சிதறிக்கிடக்கும் வெண்பூக்கள் நிறைந்த முரசத்தின் சேக்கையில் ஏறி உட்கார்ந்து விடுகிறார். அவர் உட்கார்ந்த போது முரசம் அங்கு இருந்ததா, இல்லாமற் போனதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இங்கே இரண்டு விளக்கங்கள் தான் இயல்பாகச் சொல்லமுடியும். ஒன்று ஏரணத்திற்குப் பொருந்தாது; இன்னொன்று பொருந்தியது.முதல் விளக்கத்தின் படி, அலங்கரிக்கப் பட்ட முரசம் உழிஞைப் போருக்குப் போயிருக்கிறது. முரசு கட்டிலில் சிறிய வெண்பூக்கள் தூவிக் கிடக்கின்றன. முரசம் திரும்பி வாராத நிலையில் மோசிகீரனார் முரசு கட்டில் ஏறிவிடுகிறார். இந்த விளக்கம் ஏற்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. எப்பொழுது வெண்பூக்கள் சேக்கையில் சிதறிக் கிடக்கிறதோ, அப்பொழுதே மோசி கீரனார்க்கு சேர நாட்டு அரசன் உழிஞைப்போரில் ஈடுபட்டிருக்கிறான் என்ற ”சாத்தாரச் செய்தி” தெரியாமலா போயிருக்கும்? இந்தச் சிந்தனை கூட இல்லாது சேக்கையில் மோசி கீரனார் ஏறியது அவரைப் பெரும் முட்டாளாகக் காட்டுகிறது. உழிஞைப் போருக்குச் செல்லும் முரசுக்குச் செய்யவேண்டிய அத்தனை நடைமுறைகளையும் தெள்ளத் தெளிவாக விவரிக்கும் புலவருக்கு அந்த முரசு கட்டிலில் ஏறக் கூடாது என்ற கட்டளை மட்டும் தெரியாது போயிற்றா? நம்மால் நம்ப முடியவில்லை.
இனி இரண்டாம் விளக்கத்திற்கு வருவோம். முரசம் அங்குதான் இருக்கிறது. ஆனால் கட்டிலில் இல்லை. அலங்கரிக்கப் படாத நிலையிற் கீழே கிடக்கிறது. புலவருக்கு அசதி. (ஏன் அசதி? முரசத்தின் இறுக்கத்தைச் சரிசெய்ய ஒருவேளை செருமாராகிய அவர் அழைக்கப் பட்டிருக்கலாம். முரசத்தைப் பேண வந்தவர் வேலையின் கடுமையில் தன்னை மறந்து மென்பூஞ்சேக்கையில் ஏறிவிட்டார்.) பிறகு ஏன் முரசின் அலங்கார விவரிப்பைப் பாவிற் சொன்னார் என்பது அடுத்த கேள்வி. “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலம் செய்து வரும் முரசம் என்றிருந்தால் நான் சேக்கையில் ஏறியிருக்கவே மாட்டேன். இப்பொழுது முரசம் பேணவந்த நான் அசதி மிகுதியால் கட்டிலில் ஏறி அமர்ந்து விட்டேன். (படுத்ததாய்ப் பொருளில்லை.) ஆனாலும் உன் வீரர்கள் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார்கள், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது என் களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்திருக்கிறாய்? (தண்ணென வீசியோயே என்பதால் கவரியை நாம் ஊகித்து உணர்கிறோம்.) முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியும் என்று நீ பாராட்டினாய் போலும்! உன் செயல் புகழப்படவேண்டிய செயல் அல்லவோ? - என்று சொல்லுகிறார். .இரண்டாவது விளக்கம் அப்படியே இயல்பாகப் பொருந்துகிறது. முரசிற்கான நடைமுறையை விவரிக்கத் தெரிந்தவர் தன் நடவடிக்கையின் உள்ளார்ந்த ஏரணத்தை விளக்குவதாகவும் பாட்டின் அடிகளைக் கொள்ளமுடியும். ”உழிஞைப் போருக்குப் போகாத நிலையில் முரசின் சேக்கையில் நான் ஏறிவிட்டேன். இருந்தாலும் என் மேல் பழி சொன்னார்கள், நீ பொருட்படுத்தவில்லை? என்னே உன் உள்ளம்?””இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்”என்ற வரிகள் செயினம், ஆசீவகம் போன்ற நெறிமுறையினருக்கும் ஒத்த சொற்கள் தாம். இம்மையில் எல்லோருக்கும் பொருத்தமானவராய் இருந்தால் உயர் உலகத்தில் தங்கி உரையும் வாய்ப்பு உண்டு என்ற சொற்கள் வேத நெறியைச் சேர்ந்தவை அல்ல. அவை வேத மறுப்பு வரிகள். (வேத நெறியில் ஆழ்ந்த ஒரு பார்ப்பனராய் மோசிகீரனாரைக் கொள்ளமுடியாது என்பதற்கு இந்த வரிகளும் ஒரு சான்றாகும்.]ஆகப் பாட்டைப் படித்தால் செருமார் ஒருவர் போர்முரசு இருத்தும் கட்டிலில் தன்னையறியாது அமர்ந்து விடுகிறார். யாரோ சேவகர் இதை ஊறாகக் கொண்டு அரசன் பால் எடுத்துச் சொல்ல, அரசன் அதைப் பொருட்படுத்தாது அங்கு வந்த புலவர் இருந்த நிலையைப் பார்த்துக் கவரி வீசிப் புலவருக்குச் சிறப்புச் செய்கிறான். செருமாரானாலும் தீண்டத் தகாதவராய் அந்தக் காலத்திற் கருதவில்லை. தமிழறிந்தவர் இங்கு போற்றப் படுகிறார். அரிதில் காணும் காட்சியே இது.மோசி கீரனாரைப் போலவே இன்னொரு புலவரான உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரையும், தொண்டூர் கல்வெட்டில் (Early Tamil Epigraphy inscription No.76. presented in in page 427 of Iraavadham Mahadevan) குறிப்பிடப் பட்ட மோசியைப் பற்றியும், செருமார், மோசி என்ற சொற்கள் எப்படித் தோல்வினைஞரைக் குறிக்கலாம் என்ற சொற்பிறப்புப் பட்டுமையையும், அடுத்து வரும் பகுதிகளிற் பார்ப்போம்.அன்புடன்,
இராம.கி.பி.கு. இந்தக் கட்டுரையை ctamil mail list இல் வெளியிடுவதற்குத் தோதாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குச் சில நாட்களாகும். அதற்கிடையில் இங்கு த்மிழ்ப் படியை அனுப்பி வைக்கிறேன்.
--
<<8) ஜைன ஆகமங்களைதான் "வேதம்" என்று சுட்டப்படுகிறது. வேதம் என்றால்
"அறிவு" அல்லது "பழைய அறிவு சார் நூல்" என்ற அர்த்தத்தில்தான்
பயன்படுத்தப்படுகிறது. வேதம் என்பது ஒரு சொல். அவ்வளவே. அதை யார்
வேண்டுமானாலும் சரியான அர்த்தத்தில் பயன்படுத்தலாம். வைதீகத்தில் அதை
பெரும்பாலோர் கேட்டு பழக்கபட்டுவிட்டதனால், வேதம் என்றாலே "ரிக், யசுர்,
சாம, அதர்வண" வேதங்களைத்தான் என்று எண்ணுகிறார்கள். இந்துக்களின் வேதம்
அல்லது வைதீகர்களின் வேதம் என்று சொல்லுவதுதான், சரியான சொல்லாடல்.>>>
ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை பூர்வாகமம், அங்காகமம்
எனப்படும். பூர்வாகமம் என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால் எழுதப்பட்டது. ஆதி பகவானால்
அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை ஜைன வேதங்கள் அல்லது சதுர்
ஆகமங்கள் எனறழைக்கப்படும். அவை
1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்
இவை சமண வேதங்கள். அன்றும்,என்றும் அவை நான்குத் தான்.
மணிவண்ணன் ஐயா
19 செப்டெம்ப்ர், 2010 12:48 pm அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:
2010/9/19 வேந்தன் அரசு raju.ra...@gmail.com
பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள்.சங்க காலத்தில், தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்கள் அப்படியில்லை. கடல் சங்கை அறுத்து வளையல்கள் செய்திருக்கிறார்கள். சங்குப் பூச்சியின் கவசம்தானே சங்கு?அது மட்டுமா? புறநானூறு 93 ஐப் பாருங்கள்:அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎனஅவர்களே அறம்புரி கொள்கையினர். அவர்களாவது வெட்டுவதாவது?அந்தணர் பரப்பிய புல்லில் கிடத்தி என்றுதான் வாசிக்கணும். மேலும்‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன’ மந்திரம் ஓத வாளால் போழப்பட்டு அடக்கம் செய்வர்ஆனால் அந்தணரே போழ்வது இல்லை
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
அந்தணர் போழ்வது இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்? வேறு யார்
போழ்தார்கள்? என்ன சான்று?
எப்போது சமண அந்தணர்கள் ஈமச் சடங்குகளில் ஈடு பட்டனர்? வாளில் போழ்து
அடக்கம் செய்வது சமண நெறிக்கு ஏற்புடைத்ததா?
> இது எப்படியென்றால், ஆசிவகக் கொள்கை எப்படி சமணம் ஆகியதோ அவ்வாறு!! :-))
விளக்க முடியுமா?
யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் வரும் கருத்து சமணக் கொள்கையா ஆசீவகக் கொள்கையா?
ஆசீவகர்களுக்கும் சமணர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?
தீண்டாமை, சாதிகள் பற்றித் தற்காலச் சமணர்கள் நிலைப்பாடு என்ன? முற்காலச்
சமணர்கள் நிலைப்பாடு என்ன? இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளனவா இல்லையா
ஏன்?
சமணர்கள் விழாக்களில் சமைப்பவர்கள் எந்த சாதியிலிருந்தும் வரலாமா?
சமணர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் உண்டா?