On Dec 22, 8:54 pm, Ravishankar <
ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
>
> என்ன காரணத்துக்காக ஆங்கில அடிப்படைச் சொற்களைக் கொண்டே தமிழ்ச் சொற்களை எல்லா
> இடத்திலும் உருவாக்கக்கூடாது என்று இராம.கி அவர்களுடன் முரண்பட்டோமோ அதே காரணம்
> தான் இங்கும்.
>
இங்கே சில இடங்களில் விதிவிலக்குகள் உள்ளன..
மனிதன் Man
அம்மா Ma
ஒன்று One
இன்னும் சில யோசித்ததுண்டு.. ஒத்த சொற்கள் இப்படி கலந்துதான்
கிடக்கின்றன. அப்பப்போ இப்படி செய்யறதுல சிக்கல் இல்லை.. அப்படியே
ஆக்கறது கொஞ்சம் சிக்கல்தான்..
> video என்ற ஆங்கிலச் சொல்லுடன் visual என்பதைப் பொருத்தலாம். audio என்ற
> சொல்லுடன் audible என்ற ஆங்கிலச் சொல்லைப் பொருத்தலாம். இந்தச் சொற்களைப்
> பொருத்திப் பார்த்துப் புரியாத சொல்லைப்புரிந்து கொள்ள முடியும் வசதி
> ஆங்கிலேயருக்கு இருக்கிறது.
> ஆனால், இந்தச் சொற் தொடர்பைக் கணக்கில் எடுக்காமல் தனிச்சொற்களை மட்டும் கடன்
> வாங்கினால் ஒன்று அந்தச் சொல் புரியாமல் தனித்து நிற்கும். அல்லது, அதைத்
> தொடர்ந்த சொற்களும் ஆங்கில மூலமாகவே மாறும்.
>
சில சொற்கள் இப்படி ஆவதில் குறையொன்றுமில்லை. (வீடியோவைக் குறிப்பிட்டு
சொல்லல) அதான் ஒன்ன விட்டாச்சே எல்லாத்தையும் விடலாம்னாலும் சிக்கல்..
ஆங்கிலம் இறக்குமதியை அனுமதிக்கறதுங்கறத நாம கவனத்தில் கொள்ளனும்..
ஜப்பான் முதலிய மொழிகளும் கூட.. எந்த அளவுக்கு நாம அனுமதிக்கணுமுன்னு
சொல்றது சிக்கலானதுதான்...
> video என்ற ஒற்றைச் சொல்லைப் புகுத்துவது மூலம் வீடியோக்காரர், வீடியோக்கலை,
> வீடியோ கடை என்று எத்தனை இடங்களில் ஒரு சொல்லைப் புகுத்துகிறோம் பாருங்கள்..
> இதையும் தாண்டி தமிழ் இலக்கணப்படி ஒவ்வொரு சொல்லும் தன்னாலேயே பொருளுடையது.
> ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பும் சில இலக்கணங்களுக்கு உட்பட்டது. இப்படி காரணமே
> இல்லாமல் கடன்வாங்கப்படும் சொற்கள் தமிழின் ஒலிப்பையும் பொருட்செறிவையும்
> குறைப்பதைக் காணலாமே?
புதிய சொற்கள் காலத்துக்கு காலம் உருவாகிதான் வருகிறது. எப்படி? யாரால்?
தமிழ் சொல், தமிழாகக்கப்பட்ட சொல் இப்படிதான் அணுக வேண்டியிருக்கு..
தமிழானால் மகிழ்ச்சி.. தமிழாக்கப்பட்டதானால் பரவாயில்லை..
சலாம், மகசூல், பஸ், மோட்டார், காபி, கமலம், ஜனங்கள் ...
தமிழாசிரியர்கள் தளராமல் இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.. வேறு
காரணங்களுக்காக பிறர் (எம்மையும் சேர்த்து) வளைவதும் ஏற்புடையதே..
இருக்கற சொல்லைத் தான் பயன்படுத்துவோம்னாலும் அத்தனையும் தெரியாத ஒரு
துர்பாக்கிய நிலை..
எல்லா தமிழ் சொல்லையும் தெரிஞ்சிக்கிட்டு வந்து தமிழாக்கும் போது நிலைமை
எப்படி இருக்குமுன்னு தெரியல.. தமிழறிவையும் வளர்த்துக்கிட்டு இணையா அதை
பயன்படுத்தி பழகி வருவது நடைமுறைக்கு ஒத்த அணுகுமுறையாகப் படுது..
காலமும் அனுபவமும் மெருகேற்றும்.. இப்போதைக்கு உடையாமல் வளைந்து
நிமிரலாம்..
அன்புடன்
ஆமாச்சு