கவிஞர் வித்யாவின் கவிதை சற்று தாமதமாவதால்அடுத்த கவிஞரை அழைக்கிறேன்கவியரங்கம் - 28ஒன்பதாம் அழைப்பு: கவிஞர் ஹரி கிருஷ்ணன்.
HP: 91852063
Email: girijavar...@gmail.com
மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே. இந்தக் கவியரங்கில் என்னுடைய நெடுநாள் கனவொன்று நிறைவேறுகிறது. எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத் தரவேண்டும் என்று 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இந்தக் கவிதையை இடும் தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு வந்ததால், குரல்வழியிலும் கவிதையைப் பதிந்திருக்கிறேன். கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம். வாசித்தபடியும் கேட்கலாம்.
பசுபதி
27-5-08
பன்னிருகை தோள்களுடன் பன்னிருகண் இறைவனுக்குப்
.. பன்னிருசீர் விருத்தங்களில்
.... பழமோடு தேன்பாகுப் பஞ்சாமி ருதமன்ன
..... பாக்களை நைவேத்தியம்
மின்னலெனத் துலங்கிடும் வாக்கென்னும் கற்பூர
... வீச்சுடன் ஹரிபடைத்தார்
.... "வேலனே! என்னுளே மேவுமென் தெய்வமே!
..... மேதினி தனிலெனக்கு
மன்னிடுநல் லெண்ணங்கள் மலர்கின்ற மனத்தோடு
... மதிநிதியும் மனையுந்தந்து
.... மணியான கவிதைகள் வழங்கிடும் திறனையும்
.... வரமாக அருளுவாயே"
இன்னபடி தன்னுளே இருந்திடும் வேட்கையை
... இறைவனின் முன்னம்வைத்தார்
... இவர்வேண்டும் யாவையும் தவறாது சண்முகன்
.... ஈவன்;இதில் ஐயமேது?
அனந்த்
27-5-2008
On 5/27/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
மிக அருமையாக உள்ளது!"வாரானை" பாட்டில் மடக்கு அழகு!
சில ஐயங்கள்:1) "கருணையல்லோ" என்பது "கருணையன்றோ" என்று இருக்கலாமோ?
2) உங்கள் பாடலில் அரையடியின் கடைசியில் வருவது கனிச்சீரா அல்லது இரு மாச்சீர்களா? (சில இடங்கள் இவ்விரு விதமும் ஆகாதது போலவும் தோன்றுகின்றன).
3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும் பாடல்கள் வேறு உளவா?
த.பி: "என்னாளும்" - "எந்நாளும்"
ஹரிகிருஷ்ணன் தன்வாழ்வில் மங்கலங்கள் சேர்ந்திடவே
. அரன்மகனை வேண்டு கின்றார்;
பன்னிருகை தோள்களுடன் பன்னிருகண் இறைவனுக்குப்
.. பன்னிருசீர் விருத்தங்களில்
ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்
அன்புள்ள ஸ்ரீ. ஹரிகிருஷ்ணன்,அனுமனின் வார்ப்பும் வனப்பும் படித்து உங்கள் ரசிகனானேன். என் நண்பர் அ.கி.வரதராஜனுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்(இத்தகைய அருமையான புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக)
3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும் பாடல்கள் வேறு உளவா?
திருவண்ணாமலை என்பதும் ஊர்ப்பெயர். திருவண்ணாமலையில் உள்ள குன்றத்தில்.இப்படி வேறுயாரும் செய்திருக்கிறார்களா என்பது நினைவில்லை. கொஞ்சம் யோசித்தால் கிட்டலாம். தேடிப் பார்க்கிறேன்.
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,ஆம். அடியேனுக்குதான் மே 6ம் தேதி திருக்கடவூரில் மணிவிழா பெரியவர்கள் ஆசிகளால் இனிது நடந்தேறியது.
கூடுதல் சந்தோஷம் என்னவெனில், அனந்த் அழகான வாழ்த்துக் கவிதையை சிங்கப்பூரிலேயே கொடுத்துவிட்டார். இலந்தை எங்களுடனேயே திருக்கடவூர் வந்து சரியான நேரத்தில் வாழ்த்துக் கவிதையை வாசித்து அளித்தார். நண்பர் வரதராஜன் தபால் மூலம் சரியாக 6ம் தேதி என் கைக்கு வந்து சேருமாறு அவரது வாழ்த்துக் கவிதையை அனுப்பி வைத்தார்.திருக்கடவூர் பதிகங்களையும் (சம்பந்தர், நாவுக்க்கரசர், சுந்தரர் அளித்தவை) நண்பர் சிவா சிவா யாத்த 4 பதிகங்களையும் ஒரு சிறு கையேடாக அச்சிட்டு ஒரு ஓதுவாரக் கொண்டு பாடச்சொல்லி நாங்கள் அனைவருமே பாடினோம். மனதுக்கு மிக நிறைவாக இருந்தது.
நீங்கள் வசிப்பது சென்னையிலா அல்லது புறச் சென்னையிலா ? இறையருள் கூட்டினால் வாய்ப்பு கிடைக்கும் போது உங்களைச் சந்தித்து அளவளாவ விரும்புகிறேன்.
உங்களுக்கு அலுவல் காரணமகவோ அல்லது தனிப்பட்ட விடுமுறை காரணமாகவோ சிங்கை வரும் வாய்ப்பு உண்டா? இங்கு பல நெஞ்சங்கள் உங்களைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,சிங்கை சுமார் 704 சதுர கிலோ மீட்டர்கள் கொண்ட "ஈகுவேடார்" கோட்டில் உள்ள மிகச் சிறு நாடு. சிங்கப்பூரை இழிந்து சொல்பவர்கள் "அது ஒரு சிறிய சிவப்பு புள்ளி" என்று சொல்வார்கள். இது ஒரு தீவு. இன்னும் சில இரண்டாம் தர (secondary forest) காட்டுப் பகுதிகள் உள்ளன. தண்ணீர் மலைக்குப் பதிலாக இங்கு "பூமலை" (Bukit Timah Hills) இருக்கிறது. சிறிது மேடான குன்று. பிறகு Mount Faber என்று ஒரு மேடான குன்று இருக்கிறது. சிங்கப்பூரின் கம்பி வட வண்டி(cable car) இங்கிருந்துதான் தொடங்குகிறது.வாருங்கள். தமிழோடு சிங்கப்பூரையும் சுவைக்கலாம். நண்பர் வரதராஜனும் தற்போது சிங்கை வந்து விட்டார்(முன்பு ஜாகர்த்தாவில் இருந்தார்).அனந்த் 2009 ஜனவரியில் மீண்டும் சிங்கைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். (உங்கள் கவனத்திற்கு.) நீங்கள் குடும்பத்தோடு எப்பொழுது வந்தாலும் தங்குவதற்கும் கதைப்பதற்கும் நாங்கள் உள்ளோம்.அன்புடன்,குமார்(சிங்கை))2008/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:
2008/5/28 K.R. Kumar <krish...@gmail.com>:
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,ஆம். அடியேனுக்குதான் மே 6ம் தேதி திருக்கடவூரில் மணிவிழா பெரியவர்கள் ஆசிகளால் இனிது நடந்தேறியது.நமஸ்கரிக்கிறேன்.கூடுதல் சந்தோஷம் என்னவெனில், அனந்த் அழகான வாழ்த்துக் கவிதையை சிங்கப்பூரிலேயே கொடுத்துவிட்டார். இலந்தை எங்களுடனேயே திருக்கடவூர் வந்து சரியான நேரத்தில் வாழ்த்துக் கவிதையை வாசித்து அளித்தார். நண்பர் வரதராஜன் தபால் மூலம் சரியாக 6ம் தேதி என் கைக்கு வந்து சேருமாறு அவரது வாழ்த்துக் கவிதையை அனுப்பி வைத்தார்.திருக்கடவூர் பதிகங்களையும் (சம்பந்தர், நாவுக்க்கரசர், சுந்தரர் அளித்தவை) நண்பர் சிவா சிவா யாத்த 4 பதிகங்களையும் ஒரு சிறு கையேடாக அச்சிட்டு ஒரு ஓதுவாரக் கொண்டு பாடச்சொல்லி நாங்கள் அனைவருமே பாடினோம். மனதுக்கு மிக நிறைவாக இருந்தது.கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக இணையத்தை விட்டு ஒதுங்கி இருந்தேன். நான் சந்தவசந்த்துக்கு மீண்ட நேரத்தில்தான் உங்களுடைய மணிவிழா பற்றிய செய்திகளைக் காண நேர்ந்தது. ஸத்ஜன ஸங்கம் பெருகுவது மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் வசிப்பது சென்னையிலா அல்லது புறச் சென்னையிலா ? இறையருள் கூட்டினால் வாய்ப்பு கிடைக்கும் போது உங்களைச் சந்தித்து அளவளாவ விரும்புகிறேன்.நான் எப்போதும் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வது, 'நான் சென்னை நகரத்தில் பிறந்தவன். அதன் புழுதியை இன்னமும் என் குருதியில் சுமந்துகொண்டிருப்பவன்.' சென்னைத் தமிழ் என் எழுத்தில் சரளமாகக் கலப்பதற்குக் காரணம் அதுதான் என் இளம்பருவ மொழி. நான் நேசிக்கும் மொழி. நான் பிறந்து வளர்ந்தது சென்னையின் இதயப் பகுதியான எல்லிஸ் தெருவி்ல். பிறகு 13 வயது முதல் நங்கநல்லூர். தில்லை கங்கா நகர். 52 வயது வரையில் சென்னைவாசி. கடந்த மூன்றாண்டுகளாக பெங்களூரான்.இறைவன் திருவுள்ளம் எப்போதும் உண்டு. இனிதான தருணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.உங்களுக்கு அலுவல் காரணமகவோ அல்லது தனிப்பட்ட விடுமுறை காரணமாகவோ சிங்கை வரும் வாய்ப்பு உண்டா? இங்கு பல நெஞ்சங்கள் உங்களைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.எனக்கு அலுவலே இல்லை.:-) 52 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றாகிவிட்டது. வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்பு இதுவரையில் ஏற்பட்டதில்லை. எல்லோரையும் சந்திக்கும் விருப்பம் உண்டு. மலேசியாவில் தண்ணீர்மலை. சிங்கையில் என்னமலை? அந்த மலையான் அருளட்டும்.
--
அன்புடன்,
ஹரிகி.
ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்உயர்விருத்தக் கவிதைவழியே
மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே. இந்தக் கவியரங்கில் என்னுடைய நெடுநாள் கனவொன்று நிறைவேறுகிறது. எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத் தரவேண்டும் என்று 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இந்தக் கவிதையை இடும் தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு வந்ததால், குரல்வழியிலும் கவிதையைப் பதிந்திருக்கிறேன். கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம். வாசித்தபடியும் கேட்கலாம்.