ஒட்டக்கூத்தர், கம்பர், புகழேந்தி: காலம்? [Re: cilEdaic celvam

721 visualizações
Pular para a primeira mensagem não lida

Pas Pasupathy

não lida,
28 de set. de 2009, 10:56:5528/09/2009
para santhav...@googlegroups.com
இவற்றைப் பற்றித் தற்போது அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
என்னிடம் இருக்கும் குறிப்புகளை வைத்துச் சொல்கிறேன்:
 
1) "கூத்தர் காலத்தே புகழேந்திப் புலவரும் பெரும்புலவராய் விளங்கினார் என்பது தெளிவாகின்றதாயினும், அவ்விருவர்க்கும் பெரிய மாற்சரியம் உண்டானதென்று கொண்டு பற்பல கதைகள் கற்பிக்கப் பட்டு வழங்கி வருவதை நூலாராய்ச்சியுடையார் நம்பக் கூடவில்லை"
மு.இராகவய்யங்கார், 'செங்குந்த பிரபந்தத் திரட்டு ஆராய்ச்சியுரை'
 
2) கூத்தர் இராமாயணத்தைப் பாடினாரா? மு.இரா ஆய்வுப்படி: " கூத்தர் வயது முதிர்ந்த காலத்தில் கம்பர் இளைஞராக இருந்தார். கம்பர் இராமாயணம் பாடியதோ அவரது வாழ்க்கைப் பிற்பகுதியில். இப்படி இருக்க, கம்பரையும்  கூத்தரையும் சோழன் போட்டியாக இராமாயணம் பாடும்படி நியமித்தனன் என்பது பொருத்தமற்றது"
 
3) பின்பு இராமாயணம் பாடியது யார்?
கம்பருக்கு விரோதியான அக்காலத்திய பிரபல புலவன் வாணியன் தாதனே இராமாயணத்தைப் பாடியிருக்கக் கூடும் என்கிறார் மு.இரா.
இதற்கு ஆதாரங்கள்: முதலில், கூத்தர் இராமாயணம் பாடியதாகச் சொல்லத்தக்க ஆதாரங்கள் எதுவுமில்லை.
மேலும், தமிழ் நாவலர் சரிதையிலாவது, மண்டலச் சதகங்களிலாவது இப்புலவர் இருவர்க்கும் ஏதேனும் சிறு சம்பந்தம் இருந்து வந்ததாகச் சிறு குறிப்புக் கூடக் காணப்படவில்லை.  மேலும், சில சோழமண்டலச் சதகச்செய்யுட்களையும் , தமிழ் நாவலர் சரிதை ' இன்றன்றோ கம்பர் இறந்த நாள்' என்ற வெண்பா வாணியன் தாதன் பாடியதாகச் சொல்வதையும், ..இப்படிப் பல தகவல்களிலிருந்து மு.இரா மேற்கண்ட முடிவிற்கு வருகிறார்.
 
ஆதாரம்; "நான் கண்ட ஒட்டக்கூத்தர்" ஸ்ரீநிவாச ரங்கஸ்வாமி.
 
2009/9/27 Hari Krishnan <hari.har...@gmail.com>:
>
>
> 2009/9/27 Pas Pasupathy pas.pa...@gmail.com
>  
>>
>> பொதுவாக, இம்மாதிரிக் கதைகளில் உண்மை இருந்தால் தான் அதிசயம்!
>>
>> பொதுவாக அறியப்பட்ட 'கதை':  புகழேந்தியின் இந்த வெண்பாவில் ஒட்டக்கூத்தர்
>> குற்றம் கண்டுபிடிக்க, சபையில் இருந்த கம்பர் சரியான பதில் சொல்லப்
>> புகழேந்திக்குக் கண்சாடை காட்ட, அதையறிந்த புகழேந்தி சமாதானம் சொன்னார்
>> என்பதே.
>
> ஒட்டக்கூத்தருடைய மூவருலாவில் ஜயங்கொண்டாரைப் பற்றிய குறிப்பு வருகிறது. 
> ஜயங்கொண்டாரும் கம்பனும் சமகாலம் என்று கொள்ளலாம் என்று மூவருலா படிக்கும்போது
> எங்கோ வாசித்த நினைவு.  எப்போதும்போல் குறித்து வைத்துக்கொள்ளத் தவறிவிட்டேன். 
> இப்போது மஹாபாரத பத்தியில் சற்றே முனைந்திருப்பதால் இந்த விவரங்களைச் சில நாள்
> கழித்துத் தருகிறேன்.
>  
> ஆனால் ஒன்று.  ஒட்டக்கூத்தர் எழுதிய உத்தரகாண்டத்தில், கம்பன் வால்மீகியில்
> செய்திருக்கும் மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன.  ஆகவே, ஒட்டக்கூத்தர், கம்பனுடைய
> ராமாயணத்தை முதலில் படித்து, இந்த மாற்றங்களை மனத்தில் வாங்கிக்கொண்ட பிறகே
> உத்தரகாண்டத்தை இயற்றியிருக்கிறார் என்பது தெளிவு.  எனவே, ஒருவேளை
> ஒட்டக்கூத்தர் கம்பனுக்கு ஒரு தலைமுறை பிந்தையவராக இருந்திருக்கும் வாய்ப்பே
> அதிகம்.  சமகாலத்தவராய் இருந்திருந்தால், தாத்தாவும் பேரனும்போல வயது
> வித்தியாசம் கொண்டவர்களாக இருந்திருக்கலாம். 
>  
> நல்ல விவாதம்தான்.  நான்தான் இப்போது சற்று அவசரத்தில் இருக்கிறேன்.  பிறகு
> வருகிறேன்.  (மஹாபாரத ஆங்கிலப் பத்தி தொடங்கிவிட்டது.  நானே கவனிக்கவில்லை. 
> இங்கே பார்க்கலாம்:
>  
> இதன் தமிழ் வடிவம் தயாராகிக் கொண்டிருக்கிறது.  ஆகவேதான் அவகாசம்
> கேட்கிறேனாக்கும். :D
>  
>  
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
>
>
>
 
 
 
--
 
பசுபதி
 
 

Hari Krishnan

não lida,
28 de set. de 2009, 12:37:3528/09/2009
para santhav...@googlegroups.com


2009/9/28 Pas Pasupathy pas.pa...@gmail.com

 
3) பின்பு இராமாயணம் பாடியது யார்?
கம்பருக்கு விரோதியான அக்காலத்திய பிரபல புலவன் வாணியன் தாதனே இராமாயணத்தைப் பாடியிருக்கக் கூடும் என்கிறார் மு.இரா.
இதற்கு ஆதாரங்கள்: முதலில், கூத்தர் இராமாயணம் பாடியதாகச் சொல்லத்தக்க ஆதாரங்கள் எதுவுமில்லை.
 
அடடடோவ்!  நான் வரல சார் இந்த ஆட்டத்துக்கு... அங்க நாசாவில் ஒரு மீசை அடக்கு அடக்கு என்று துடித்துக் கொண்டிருப்பதாக ஸ்பேஸ் ஷட்டில் செய்திகள் தெரிவிக்கின்றன. :-))0
 
திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் இல்லை; உத்தர காண்டம் பாடியவர் ஒட்டக் கூத்தர் இல்லை; கம்ப ராமாயணம் பாடியவர் கம்பர் இல்லை.  மணிமேகலையைப் பாடியவர் மணி இல்லை; சிலப்பதிகாரத்தைப் பாடியவர் செல்லப்பன் இல்லை......  என் பேராவது ஹரி கிருஷ்ணன்தான் என்பதை மட்டுமாவது புலவர் பெருமக்கள் ஒப்புக்கொள்வார்கள்தானே? :-)))
 
ஒட்டக்கூத்தர் பற்றி அபிதான சிந்தாமணி சொல்வதையும் படிக்கலாம்.  உத்தர காண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்தான் என்று அபிதான சிந்தாமணி சொல்கிறது.  சிங்காரவேலு முதலியாரும் தமிழ்ப் புலவர்தானே? 
 
அட விடுங்க சார்!  கால ஆராய்ச்சினாலே எனக்கு எப்பவுமே காலரா வந்துடும்.  மூவருலாவில் ஜயங்கொண்டார் பெயரைப் பார்த்த நினைவு ஏனோ இன்று வந்தது.  மூவருலா படித்தும் சுமார் பத்து வருஷத்துக்கு மேலாகிறது.  குறிப்புகளைத் தேடித்தான் எடுக்கணும்.  கால ஆராய்ச்சியில் நேரத்தை விரயம் பண்ணுவதைக் காட்டிலும் அந்தந்தப் புலவர் இயற்றிய காவியங்களைக் கற்பது இன்பமாகப் படுகிறது. 
 
ஓவர் டு நாசா வாசா! ஸ்டார்ட் ம்யூசிக்....யுர் டைம் ஸ்டாஆஆர்ட்ஸ்........நௌஓள......

OAGAI NATARAJAN

não lida,
29 de set. de 2009, 14:11:1529/09/2009
para santhav...@googlegroups.com
 
”நாராயணனை நராயணன் என்று ஓராமல் சொன்னான் கம்பன் அதனால் நான் நாரை நர் என்பேன் வாளை வள் என்பேன்” என்ற பொருளுடையதான காளமேகப் புலவர் பாடலை படித்த நினைவிருக்கிறது. இந்தப் பாடலில் ஏதாவது துப்பு கிடைக்கலாம்.
 
ஓகை நடராஜன்.

2009/9/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hariki

não lida,
14 de out. de 2009, 00:35:2814/10/2009
para சந்தவசந்தம்

On 28 Sep, 19:56, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> இவற்றைப் பற்றித் தற்போது அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்குத்
> தெரியாது.
> என்னிடம் இருக்கும் குறிப்புகளை வைத்துச் சொல்கிறேன்:
>
> 1) "கூத்தர் காலத்தே புகழேந்திப் புலவரும் பெரும்புலவராய் விளங்கினார் என்பது
> தெளிவாகின்றதாயினும், அவ்விருவர்க்கும் பெரிய மாற்சரியம் உண்டானதென்று கொண்டு
> பற்பல கதைகள் கற்பிக்கப் பட்டு வழங்கி வருவதை நூலாராய்ச்சியுடையார் நம்பக்
> கூடவில்லை"
> மு.இராகவய்யங்கார், 'செங்குந்த பிரபந்தத் திரட்டு ஆராய்ச்சியுரை'


இந்தத் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஒருநூலை தமிழ்மரபு அறக்கட்டளை
தற்போது மின்பதிப்பாக வழங்கியிருக்கிறது. ஆசிரியர்: வவேசு ஐயர். தமிழ்
மரபு அறக்கட்டளை இது குறித்து அறிவிப்பாக அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி
இது:

=========================
! தமிழ் மரபு அறக்கட்டளை மின் நூல்கள் வரிசையில் மேலும் ஒரு நூல் இன்று
சேர்க்கப்படுகின்றது. !!

நூலின் பெயர்: வ.வே.ஸூ.ஐயர் எழுதிய கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை

(நூல் எண்: 150)

மின்பதிப்பாக்கம்:திரு.இன்னம்புரான் (உதவி திரு.கௌதம்)
மின்னூலாக்கம்: திருமதி.சுபாஷினி ட்ரெம்மல்
==========================

கம்பனுடைய காலத்தைப் பற்றி ரா ராகவையங்கார் செய்துள்ள ஆய்வைத் தாம்
ஏற்றுக்கொள்ளவில்லை என்று வவேசு ஐயர் சொல்கிறார். ஒட்டக்கூத்தர்
உத்தரகாண்டத்தைப் பாடியதைப் பற்றிய தன்னுடைய கருத்தையும்
சொல்லியிருக்கிறார்.

இந்த இடத்தில் http://ebooks.tamilheritage.org/ 150வது பதிப்பாக
இடம்பெற்றுளது இந்நூல்.

Pas Pasupathy

não lida,
14 de out. de 2009, 11:24:3714/10/2009
para santhav...@googlegroups.com
சுவையான, செறிவுள்ள கட்டுரை. மீண்டும் மெல்லப்
படிக்க வேண்டும்.
 
சில குறிப்புகள்;
 
1. வ.வே.சு ஐயர் மு.ராகவய்யங்கார் ( 1878-1960) எழுதிய 
'செங்குந்தர் பிரபந்தத் திரட்டைப் பற்றி இக்கட்டுரையில் ஒன்றும் சொல்லவில்லை. ( பார்த்திருப்பாரா என்றும் 
தெரியவில்லை.) 
 
2. மு.ரா வின் நூல் கிடைத்தால் கம்பன் காலம், கூத்தர்
காலம் பற்றிய அவருடைய கருத்துகளை மேலும்  விளக்கமாக அறியலாம்.  ( மு.ரா அவர் உறவினரான ரா.ராகவய்யங்கார் ( 1870-1948) -இன் காலக் கருத்தை ஆமோதிக்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது.) 
 
3. மேலும், மொழி ஆய்வு அறிஞர்கள் கூத்தரின் மற்ற நூல்களையும் உத்தர காண்டத்தையும் சொற்கள், மற்றும் கவிதை உத்திகள் போன்ற பல ஆய்வு முறைகளைக் கையாண்டு ஒப்பிடலாம். இப்படி யாரும் செய்ததாகத் தெரியவில்லை.  
 


 
2009/10/14 Hariki <hari.har...@gmail.com>
Responder a todos
Responder ao autor
Encaminhar
0 nova mensagem