அன்பர்களே,
கவியரங்கத்தை அடுத்து வருவது கவிதைப் பட்டிமண்டபம்.
தலைப்பு: தமிழின் இன்றைய நிலை
வளர்ச்சியா தளர்ச்சியா
நடுவர்: பேராசிரியர் பசுபதி அவர்கள்.
அவரது ஆய்வுத் திறனும், சிந்தனைத் தெளிவும், தொகுத்தளிக்கும் ஆற்றலும் கவிதை ஆக்கமும் கவிதைப் பட்டிமண்டபத்தைச் சிந்தைக்கு ஒரு விருந்தாக அமைக்கும் என்பதில் ஐயமில்லை.
திரு.நாராயணன் சுவாமிநாதன் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருக்கிறார். கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்.?
நாம் ஏற்கனவே இரண்டு கவிதைப்பட்டிமண்டபங்களை நடத்தியிருக்கிறோம்.
மேடையிலே நேரடியாகக் கவிதைப்பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ள உடனடியாகக் கவிதையில் பதிலிறுக்கும் திறமை தேவை. அப்படிக் கலந்துகொண்டு கலக்கியவர்கள் சந்தவசந்தத்தில் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் இணையக் கவிதைப் பட்டிமண்டபம் என்பது கவியரங்கத்தில் கலந்து கொள்வது போல்தான். கொஞ்சம் வாதத் திறமை தேவை . அவ்வளவுதான். இதிலும் நம் கவிஞர்கள் கலந்துகொள்ளவேண்டாமா? எனவேகலந்து கொள்ள விரும்புபவர்கள் உடனே பெயர் கொடுங்கள்.
குறைந்த பட்சம் ஏழுபேர் தேவை.
ஒவ்வொரு கட்சிக்கும் குறைந்த பட்சம் 3 பேர்.
இரண்டு அணிகள் – 6 பேர்
நடுவரோடு சேர்த்து 7.
முதலில் நடுவர் தலைப்பை விளக்கம் செய்து கவிதை இடுவார். அதில் அவர் எதைச் சார்ந்திருக்கிறார் என்பது தெரியாது.
பிறகு அவர் ஒரு அணித்தலைவரை தனது வாதத்தைக் கவிதையில் இடுமாறு அழைப்பார். அவர் கவிதையிட்டதும் எதிரணித் தலைவரை அழைப்பார். அவரைத் தொடர்ந்து முதல் அணியின் அடுத்த கவிஞர் அழைக்கப்படுவார். இப்படியாக எல்லோரும் கவிதை இட்டபின் இரண்டாவது அணியின் தலைவர் மீண்டும் அழைக்கப்படுவார். முதல் அணியின் தலைவருக்கு இப்பொழுது மறுப்பளிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்குமல்லமா? இரண்டாவது சுற்றில் தலைவர்கள் தங்கள் அணியின் வாதங்களைத் தொகுத்துரைப்பார்கள்.
அதன் பின் நடுவர் தன் தீர்ப்பைச் சொல்லுவார்.
நிறையப்பேர் பெயர் கொடுத்தால் அணியில் கலந்துகொள்ளுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம். ஒருவரையோ பலரையோ நோக்கர்களாக நியமித்துக் கொள்ளலாம். நடுவரின் தீர்ப்புக்கு முன் நோக்கர்கள் தமது கருத்தைக் கூறுவார்கள். நோக்கர்களின் தீர்ப்பு நடுவருக்கு ஒரு வழிகாட்டியே தவிர அதைத்தான் நடுவர் ஏற்கவேண்டுமென்ற அவசியமில்லை.
பட்டிமண்டபத்தில் கலந்து கொள்வது கவியரங்கில் கலந்து கொள்வதைவிட எளிது.
எனவே இந்தக் கவிதைப் பட்டிமண்டபத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் உடனடியாகப் பெயர் கொடுக்கவும்.
அதன் பிறகு அணிகள் நிர்ணயம் செய்யப்படும்.
. மரபுக்கவிதையாக இருந்தால் நல்லது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
அரங்கம் நவம்பர் மத்தியில் தொடங்கும்.
அன்புடன்,
இலந்தை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
இன்னும் குறைந்த பட்சத் தேவை ஒருவர்தான். அதிகம் பேர் பெயர்கொடுத்தால் அணியில் வாதிடுபவர்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 23ந்தேதிக்குள் பெயர் பதிவு செய்யுங்கள்.இலந்தை
இன்னும் பெயர் கொடுக்க விரும்புபவர்கள் உடனடியாகப் பெயர் கொடுக்க வேண்டுகிறேன்.இன்னும் குறைந்த பட்சத் தேவை ஒருவர்தான். அதிகம் பேர் பெயர்கொடுத்தால் அணியில் வாதிடுபவர்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 23ந்தேதிக்குள் பெயர் பதிவு செய்யுங்கள்.இலந்தை
2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
இதுவரை பெயர் கொடுத்தவர்கள்1- பசுபதி2 எல்லே சுவாமிநாதன்3 கவியோகி வேதம்4 சந்தர் சுப்ரமனியம்5 சுகந்தி6 அகிலா ராமசாமி
குறிப்பு: எந்த அணியில் சேர்த்தாலும் வாதிடத் தயாராக இருங்கள்.2011/10/18 akila ramasami <akilac...@gmail.com>
என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா..அன்புடன்akilaramasami
--
கவிதைப்பட்டி மண்டபம் -3
இதுவரை எட்டுப்பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னொருவர் பெயர் கொடுத்திருந்தால் ஒவ்வோர் அணிக்கும் நாலு பேர் கலந்துகொள்ளுமாறு செய்திருக்கலாம்.
எனவே இப்பொழுதுள்ள நிலையில் கவிதைப்பட்டிமண்டபம் இப்படி அமைகிறது
நடுவர்: பேராசிரியர் பசுபதி
தலைப்பு: தமிழின் இன்றைய நிலை
வளர்ச்சியே தளர்ச்சியே
வளார்ச்சியே அணியில் பங்கேற்பவர்கள்
கவிஞர் நாராயணன் சுவாமிநாதன் – அணித்தலைவர்
கவிஞர் இராஜ தியாகராஜன்
கவிஞர் சுகந்தி
தளர்ச்சியே!அணியில் பங்கேற்பவர்கள்
கவிஞர் சந்தர் சுப்பிரமணியம் –அணித்தலைவர்
கவிஞர் கார்த்திக்
கவிஞர் அகிலா ராமசாமி
நோக்கர்கள்- 1- கவியோகி வேதம்
2- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
தொடக்கநாள். 15-11- 2011
நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல் மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ளாதவர்கள் இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள் தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.
இலந்தை
கவிதைப்பட்டி மண்டபம் -3
இதுவரை எட்டுப்பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னொருவர் பெயர் கொடுத்திருந்தால் ஒவ்வோர் அணிக்கும் நாலு பேர் கலந்துகொள்ளுமாறு செய்திருக்கலாம்.
எனவே இப்பொழுதுள்ள நிலையில் கவிதைப்பட்டிமண்டபம் இப்படி அமைகிறது
நடுவர்: பேராசிரியர் பசுபதி
தலைப்பு: தமிழின் இன்றைய நிலை
வளர்ச்சியே தளர்ச்சியே
வளார்ச்சியே அணியில் பங்கேற்பவர்கள்
கவிஞர் நாராயணன் சுவாமிநாதன் – அணித்தலைவர்
கவிஞர் இராஜ தியாகராஜன்
கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்
தளர்ச்சியே!அணியில் பங்கேற்பவர்கள்
கவிஞர் சந்தர் சுப்பிரமணியம் –அணித்தலைவர்
கவிஞர் கார்த்திக்
கவிஞர் அகிலா ராமசாமி
நோக்கர்கள்- 1- கவியோகி வேதம்
2- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
தொடக்கநாள். 15-11- 2011
நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல் மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ளாதவர்கள் இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள் தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.
இலந்தை
நான்கு நாள்களில் நமக்கொரு விருந்து
பான்மை சிறக்கும் பட்டி மண்டபம்
சந்த வசந்தத் தளத்தில் தொடங்கும்
எந்தச் செயலும் எற்புடன் செய்யும்
பேரா சிரியர் பெருமனம் கொண்டவர்
ஆராய்ச் சிகளில் ஆழம் கண்டவர்
துலாக்கோல் முனையைத் தொட்டு நிற்பவர்
பலாச்சுளை போலப் பாடல் நெய்பவர்
நடுவராய் இருந்து நடத்திக் கொடுப்பார்.
எடுப்பும் தொடுப்பும் ஏற்பாய் இருக்கும்
அவரின் கணிப்புக் கவைதலை ஆட்டும்
உவகையாய் இங்கே ஒப்புதல் தந்த
அனைவ ருக்கும் அளிக்கிறேன் நன்றி.
குழப்பத்தில் தான் கூடும் தெளிவு
வழக்குத் தொடுத்தால் வருவது நியாயம்
என்ன நிலையில் இந்நா ளினிலே
அன்னைத் தமிழும் அமைந்திருக் கின்றது
வளர்ச்சியா தளர்ச்சியா என்பது வழக்கு
வார்த்தைச் சண்டையும் வாதமு மிங்கே
நேர்த்தி யாக நிகழ வேண்டும்
நாங்கள்
காதுகள் திறந்து காத்திருக் கின்றோம்
மோதுக தீர்ப்பு முகிழ்த்திடு மாறே!
இலந்தை
’வளர்ச்சியே!’ அணித் தலைவர் : எல்லே சுவாமிநாதன்
அதே அணியில் இராஜ. தியாகராஜன், சுகந்தி வெங்கடேஷ்
’தளர்ச்சியே!’ அணித்தலைவர் : சந்தர் சுப்பிரமணியம்
அதே அணியில் கார்த்திகேயன், அகிலா ராமசாமி
நோக்கர்கள்- 1- கவியோகி வேதம்
2- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பசுபதி கவிதை பனங்கற் கண்டு
திசுக்களுக் கெல்லாம் தெம்பு கொடுக்கும்
சர்க்கரை வியாதி தரவே தராது
அர்ச்சனை போல அரங்கம் இதற்குத்
தொடக்கத்திலேயே தோத்திரம் செய்வது
எடுக்க எடுக்க இன்பம் கொடுப்பது
அடுத்ததைக் கேட்கும் ஆவல் எமக்கே!
இலந்தை
14-11-2010
படுகுஷி யோடு பசுபதி சொல்லில்
சடுகுடு ஆடும் தரத்தினைக் கண்டோம்
நடுவர் பதவிக்கு நல்லதோர் மதிப்பை
நடுவர் இவரென நாமறிந் தோமே
அனந்த்
பி.கு. வரும் 23-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 12 வரை இந்தியப் பயணம். நல்லதொரு வாத மன்றத்தை முழுமையாக இரசிக்க முடியாமல் போகுமே என்று வருந்துகிறேன். கணினித் தொடர்பும் நேரமும் கிட்டும் போது பின்னூட்டம் தர முயல்வேன்.
(என் இடுகைகளில் சிலசமயம் எழுத்துக்கள் சிறியனவாய்த் தென்படுகின்றன என்று அறிந்தேன். எல்லோருக்கும் அவ்வாறே காண்கிறதென்றால் கூறவும், திருத்தி அமைக்கப் பார்க்கிறேன்)--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அடிக்கும் புயலெனவே அருந்தமிழோ பெருவேகம்
எடுத்துப் பெருங்கடலாய் இன்பஅலை பொங்கியொரு
வெடிக்கும் எரிமலையின் வீச்செழவே சொற்றமிழம்
பொடித்துப் பரந்துசுவை பொங்கிடவே வாழ்த்துகின்றேன்
படிக்குங் கவிதைகளோ பாரில்தமிழ் இற்றை நிலை
இடித்துச் சொல்லின்பம் இனியமது வின்றியொரு
வடித்துக் கொள்ளின்ப வானமுதத் தேவர்மது
அடுத்துப் பெருஞ்சுவையை அளிக்கவென வாழ்த்துகிறேன்
-கிரிகாசன்
On Nov 14, 3:53 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> கழக அகராதியில், பட்டி என்பதற்கான பல பொருள்களில் எதுவும் ’பட்டி
> மன்ற’த்திற்குப் பொருத்தமானதாக இல்லை. எனினும், பட்டிமண்டபம் என்ற சொல்லுக்கு
> வித்தியா மண்டபம், திருவோலக்கம் என்ற பொருள் காண்கிறது, அது இங்குப்
> பொருந்தும் என நினைக்கிறேன்.
>
> அனந்த்
>
> 2011/11/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > நான் படித்தது:
>
> > மண்டபத் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட
> > மண்டபம் பட்டி மண்டபம் ஆகும்.
>
> > பட்டியக் கல் = வெள்ளை அல்லது கறுப்புப் பாறாங்கல்.
>
> >http://honeylaksh.blogspot.com/2011/02/blog-post_25.html
>
> > 2011/11/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> >> வெட்டிப் பேசும்
> >> பட்டி மன்றின்
> >> கெட்டி மேளக்
> >> கொட்டு நன்றே!
>
> >> அன்புடன்,
> >> வி. சுப்பிரமணியன்
>
> >> பிற்குறிப்பு: பட்டி மன்றம் / பட்டி மண்டபம் -- இதில் 'பட்டி' என்பதன்
> >> பொருள் என்ன?
>
> >> 2011/11/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>> கவிதைப் பட்டி மண்டபம் - 4
>
> >>> அன்பர்களே,
>
> >>> தீபத் திருநாள் சிறப்பாய் நடந்ததா?
> >>> மீதமுள் ளனவா வெடிகள் ? பட்டாசு?
> >>> வெளியே கொணர்வீர்! வெடித்து மகிழலாம்!
> >>> பட்சண வகைகள் பாக்கி உண்டா?
> >>> வெளியே எடுங்கள் ! ‘வெட்டி’ மகிழலாம்!
>
> >>> கனடாவில் இப்போது கண்விழி நேரம்;
> >>> தூக்கம் சொக்கும் சோம்பல் ஞாயிறு.
> >>> நடுக்கத் தொடங்கும் நவம்பர் மாதம்.
> >>> பார்க்கிறேன் நாள்காட்டி; பதிமூன்(று) என்கிறது.
> >>> சுடச்சுடக் காப்பி குடித்துக் கொண்டே
> >>> கணினி விசையில் கைகளைப் பொருத்திக்
> >>> களிப்புடன் சொல்வேன் காலைச் செய்தி!
>
> >>> வாதப் போர்களை வலையில் அளித்த
> >>> சாதனைக் குழுமம் சந்த வசந்தம்
> >>> நாளை மறுநாள் நான்காம் கவிதைப்
> >>> பட்டி மண்டபம் படைக்கத் தொடங்கும்.
>
> >>> நடுவர் பொறுப்பை நம்பிக் கொடுத்த
> >>> இலந்தை யாருக்(கு) என்னுடை நன்றி.
> >>> என்பணி தொடங்குவேன் இறையை நம்பி.
>
> >>> “*நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >>> *நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >>> *நாயகனை திருமயிலையின் இறைவனை* “
> >>> *”நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல்
> >>> மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து
> >>> கொள்ளாதவர்கள் இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை
> >>> ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள்
> >>> தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.”* ---இலந்தை
> ...
>
> read more »
அடிக்கும் புயலெனவே ஆற்றல்கொளத் தமிழ்வேகம்
எடுத்துப் பெருங்கடலென் றிங்குகவி பொங்கியொரு
வெடிக்கும் எரிமலையின் வீச்செழவே சொற்சமரும்
பிடித்த பெருமின்பப் பேறுகொள வாழ்த்துகிறேன்
படிக்குங் கவிதைகளோ பாரில்தமிழ் இற்றை நிலை
இடித்துச் சொல்லின்பம் இனியமது வொத்ததின்றி
வடித்துக் கடைந்துண்ணும் வானமுதத் தேவர்மது
அடுத்துப் பெருஞ்சுவையாய் ஆகுமென வாழ்த்துகிறேன்
> > >>> இன்று வழக்கின்...
>
> read more »
2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
--
உலகோர் உயர்வாய்க் கருதும்மொழி - தமிழ்
.. உன்னத இலக்கியம் படைத்த மொழி -எனப்
பலவாய் உரைத்தார் அதன்புகழை - மேலும்
.. பசுபதி சொல்லக் காத்திருப்போம்
அனந்த்
குறிப்பு:
>> கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் -- மொழி
காலக் குரலைச் செவிமடுக்கும்
கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் = உருக்கொடுக்கும்
>> முன்னோர் சொன்ன மிகைதவிர்த்து -- நாம்
மொழிவோம் அருமை பெருமைகளை. (1)
முன்னோர் என்று அனைத்து முன்னோரையும் பொதுவாகச் சுட்டுவதற்குப் பதிலாக அவரில் சிலர் எனும்படி அமைக்கலாம்.
>> சகமே போற்றும் தத்வங்கள் -- செந்
தமிழை வளர்த்த சமயங்கள் . (6)
தத்துவங்கள் என்று விரித்தாலும் ஓசை சரியாக இருக்கும்.
>> அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே - இங்கு சிறப்பு தமிழ்மொழிக்கே என்று ஒற்று மிகாமல் வருமென நினைக்கிறேன்.
அந்தம்=அழகு.
அன்புடன்,
தங்கமணி.
On Nov 15, 5:15 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> சந்த வசந்தம்https://groups.google.com/group/santhavasantham?hl=en
> கவிதைப் பட்டி மண்டபம் - 4
> 15, நவம்பர் 2011...
>
> read more »
>
> *நடுவரின் தொடக்கக் கவிதை*
>
> *அன்பர்களே!*
> > 2011/11/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >> கவிதைப் பட்டி மண்டபம் - 4
>
> >> அன்பர்களே,
>
> >> தீபத் திருநாள் சிறப்பாய் நடந்ததா?
> >> மீதமுள் ளனவா வெடிகள் ? பட்டாசு?
> >> வெளியே கொணர்வீர்! வெடித்து மகிழலாம்!
> >> பட்சண வகைகள் பாக்கி உண்டா?
> >> வெளியே எடுங்கள் ! ‘வெட்டி’ மகிழலாம்!
>
> >> கனடாவில் இப்போது கண்விழி நேரம்;
> >> தூக்கம் சொக்கும் சோம்பல் ஞாயிறு.
> >> நடுக்கத் தொடங்கும் நவம்பர் மாதம்.
> >> பார்க்கிறேன் நாள்காட்டி; பதிமூன்(று) என்கிறது.
> >> சுடச்சுடக் காப்பி குடித்துக் கொண்டே
> >> கணினி விசையில் கைகளைப் பொருத்திக்
> >> களிப்புடன் சொல்வேன் காலைச் செய்தி!
>
> >> வாதப் போர்களை வலையில் அளித்த
> >> சாதனைக் குழுமம் சந்த வசந்தம்
> >> நாளை மறுநாள் நான்காம் கவிதைப்
> >> பட்டி மண்டபம் படைக்கத் தொடங்கும்.
>
> >> நடுவர் பொறுப்பை நம்பிக் கொடுத்த
> >> இலந்தை யாருக்(கு) என்னுடை நன்றி.
> >> என்பணி தொடங்குவேன் இறையை நம்பி.
>
> >> “*நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >> *நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >> *நாயகனை திருமயிலையின் இறைவனை* “
>
> >> <><><><>
>
> >> சந்த வசந்தம்
> >>https://groups.google.com/group/santhavasantham?hl=en
> >> கவிதைப் பட்டிமண்டபம் - 4
> >> தொடங்கும் நாள்: 15, நவம்பர் 2011
>
> >> நடுவர்: பசுபதி
> >> தலைப்பு: தமிழின் இன்றைய நிலை
> >> வளர்ச்சியே ! தளர்ச்சியே !
>
> >> ’வளர்ச்சியே!’ அணித் தலைவர் : எல்லே சுவாமிநாதன்
>
> >> அதே அணியில் இராஜ. தியாகராஜன், சுகந்தி வெங்கடேஷ்
>
> >> ’தளர்ச்சியே!’ அணித்தலைவர் : சந்தர் சுப்பிரமணியம்
>
> >> அதே அணியில் கார்த்திகேயன், அகிலா ராமசாமி- Hide quoted text -
>
> - Show quoted text -
அந்தம்=அழகு.
//அந்தமிகு முடுகு வெண்பா.
> பசுபதியார்க்கு - பசுபதியை?//
> அனந்த்
சுட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்கமகிழ்வுடன் நன்றி!
மரியாதை கருதி இட யோசித்த்து தயக்கத்துடன் இட்டேன்.பிழை
சரிசெய்தேன்.பார்க்கவும்.
அன்புடன்,
தங்கமணி.
அந்தம்=அழகு.
//அந்தமிகு முடுகு வெண்பா.
> பசுபதியார்க்கு - பசுபதியை?//
> அனந்த்
சுட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்கமகிழ்வுடன் நன்றி!
மரியாதை கருதி இட யோசித்த்து தயக்கத்துடன் இட்டேன்.பிழை
சரிசெய்தேன்.பார்க்கவும்.
அன்புடன்,
தங்கமணி.
On Nov 16, 12:21 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> > அந்தம்=அழகு.
>
> அந்தமிகு முடுகு வெண்பா.
> பசுபதியார்க்கு - பசுபதியை?
> அனந்த்
>
> 2011/11/15 thangamani <tvthangam...@gmail.com>
>
>
>
> > சிந்துகவி கொஞ்சுமொழி செந்தமிழ்த்தேன் சிந்துசுவை
> > சிந்தையினில் நின்றிசைக்கும் தீம்பலவாய்!-- விந்தைமிகு
> > அந்தமுறு செம்மொழிதேர் ஆசான் பசுபதியார்க்
> > கெந்தைகுகன் காக்கும் இனிது.
>
> > அந்தம்=அழகு.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > On Nov 15, 5:15 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> > > சந்த வசந்தம்https://groups.google.com/group/santhavasantham?hl=en
> > > கவிதைப் பட்டி மண்டபம் - 4
> > > 15, நவம்பர் 2011...
>
> > > read more »
>
> > > *நடுவரின் தொடக்கக் கவிதை*
>
> > > *அன்பர்களே!*
>
> > > வண்டமிழ் மொழிக்கின்று வந்திருக்கும் நிலைமையொரு
> > > வளர்ச்சியா? தளர்ச்சியா? ’வசந்த’சபை தொடங்கியுள்ள
> > > மண்டபத்துச் சொற்போரின் மாண்பதனைச் சுவைத்திடவே
> > > வாரீர் கணினிகள் முன்பு!- Hide quoted text -
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>> கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் -- மொழி
காலக் குரலைச் செவிமடுக்கும்
கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் = உருக்கொடுக்கும் >>>
>> அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே - இங்கு சிறப்பு தமிழ்மொழிக்கே என்று ஒற்று மிகாமல் வருமென நினைக்கிறேன் >>>
ஒற்று மிகும். ( காரணம்: சிறப்பு = வன்றொடர்க் குற்றியலுகரம் )
வளர்ச்சியுடன் வளர்ந்துயரும் வண்டமிழை ஆய்ந்துணர்ந்து
விளக்கமுற எல்லேயார் விருந்துதந்தார் வாழ்த்துசொல்வோம்!
அன்புடன்,
தங்கமணி.
On Nov 18, 5:28 am, Narayan Swaminathan
<swaminathan.nara...@gmail.com> wrote:
> *கடவுள் வாழ்த்து*...
>
> வாழும் தமிழை வழங்கிய வல்லோய் !
> வளர்ச்சி தளர்ச்சி வழக்கினில் வாதிடப்
> பட்டிமன்றம் வந்த தருமிநான்; வாதத்தில்
> கட்டிடத் தாரும் கரம்.
>
> *அவைக்கு வணக்கம்*
>
> எவருக்கும் விளங்கும் வண்ணம் யாப்பை
> எடுத்துரைத்து, கவிதை எழுதிக் கலக்கவைத்த
> அவைத்தலைவர் கவிஞர் பசுபதி அவர்களே
>
> கவியரங்கம் பலகண்ட நோக்கர் கவியோகியாரே
> கால்வலியைப் பொருட்படுத்தாது கலந்து கொள்ளும்
> கவிமாமணிப் பட்டம்பெற்ற நோக்கர் இலந்தையாரே
>
> தமிழின்நிலை தாழ்வா உயர்வா என்ற இப்பட்டிமன்றத்தில்
> தமிழின்நிலை வளர்ச்சியென நிறுவ என்னுடன்
> வீறு கொண்டு நிற்கும் வீரக்கவிஞர் தியாகராஜரே
> வீராங்கனை கவிஞர் சுகந்தி வெங்கடேசரே
> வாதுக்காக தமிழின்நிலை தளர்ச்சியென வாதிடவிருக்கும்
> கவிஞர் நண்பர்கள் சந்தர், கார்த்திக், அகிலா ராமசாமி குழுவினரே
>
> அமைதிப் பார்வையாளர்களே
>
> என்வணக்கம் உங்கள் அனைவருக்கும்.
>
> தமிழின் இன்றைய நிலை வளர்ச்சியே என்ற வாதத்தை
> எங்கள் அணிசார்பாக உங்கள் முன்பாக வைக்கிறேன்.
>
> *தமிழின் பெருமை*
> *உலகெங்கும் தமிழ் ஒலிக்கிறது இன்று*
>
> தமிழும் அமர்ந்தது இன்று அரசில்
> தமிழகத்தும் சிங்கையிலும் மட்டுமோ தமிழொலி
>
> ஆப்ரிக்கா அமெரிக்கா அயர்லாந்து அங்கோலா
> ஆஸ்திரேலியா ஐரொப்பா ஜப்பான் சீனா
> ஆயிரக் கணக்கான நாட்டில் தமிழோசை
> அனைத்து நாட்டிலும் அதைப்பேசும் மக்களுண்டு
> அன்னிய நாட்டுக்கு போன தமிழரோடு
> அன்னாட்டில் பிறந்த குடிகளும் அதிலடக்கம் !
> (சான்றுகள் கேட்கும் சான்றோர்க்கு வலைச்சுட்டிகள் கீழே)*
>
> *ஆதவனையும் விஞ்சியதன்றோ அருமைத் தமிழ்*
>
> ஆறுமாதம் ஆதவன் மறையும் நாட்டிலும்
> ஆளுமை செய்கிறது தமிழென அறிவோம்
> ஆதவனையும் விஞ்சியது அல்லவா தமிழுமே
> ஆகா வளர்ச்சிக்கு அதுவேயோர் சாட்சியமே
>
> http://www.youtube.com/watch?v=N4w_vWKv3rA
>
> *தமிழும் செம்மொழி மதிப்பு பெற்றதின்று*
>
> செம்மொழி என்று சிற்சில மொழிகளுண்டு
> அம்மொழி எல்லாமே வழக்கில் இல்லை
> வாழும் செம்மொழி வழக்கிலுள்ள மொழியாம்
> வந்த விருதும் வளர்ச்சிக்கு சான்றே
>
> *தமிழ் கற்போர் தொகை தற்போது அதிகமே*
>
> வளர்ச்சிக்கு எண்ணிக்கை சான்றும் காட்டலாமா
> வடித்ததைப் பதம்காண பருக்கை போதுமே
> வளரும் தமிழுக்கு கற்போர் தொகையதிகம்
> பத்தாண்டுப் படிப்பில் தமிழில் படித்தோர்தொகை
> பத்திரிக்கையில் வருவது பலரும் அறிவர்
>
> ஆறுலட்சம் மாணவர் தமிழ்வழி கற்றார்
> .......ஆண்டு இரண்டா யிரத்து எட்டில்
> எட்டுலட்சம் மாணவர் தமிழ்வழி கற்றார்
> .......ஆண்டு இரண்டா யிரத்துப் பத்தில்
> அரசின் அறிக்கை தந்த செய்தியே
> ......முரசு அறைந்து சொல்லுது வளர்ச்சியை
>
> *தமிழ்க்கவிதை எழுதல் குடிசைத் தொழிலானது*
>
> பழங்காலப் புலவர் வறுமையில் வாடினர்
> பரிசல் வாங்கிப் பலசரக்கு வாங்கினர்
> போட்டி தவிர்க்க புகுத்தினர்
>
> read more »
சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en
கவிதைப் பட்டி மண்டபம் - 4
2011/11/18 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
தமிழின் இன்றைய நிலை வளர்ச்சியே என்ற வாதத்தை
எங்கள் அணிசார்பாக உங்கள் முன்பாக வைக்கிறேன்.
--
சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=enகவிதைப் பட்டி மண்டபம் - 4
18, நவம்பர் 2011
கவிஞர் சந்தர் சுப்ரமணியன் : ‘தளர்ச்சியே’ அணித்தலைவருக்கு அழைப்புகடமை கணினி மென்பொருளில்;. . கவனம் ‘உள்ள வெள்ள’த்தில் .”நடக்கும் நிலவு” இணையதளம்(1);. . நடப்பு களெல்லாம் எழுதுகளம்.பிடித்த இயலில் இன்னிசையில். . பெரிதும் உண்டு நல்தேர்ச்சி ;தடத்தைப் பதிப்பார் கவிதையிலே. . தளர்ச்சி அணியின் தலைமையிலே!செந்தமிழில் இன்றுள்ள சீரழிவை மெய்ப்பிக்கச்சந்தருக் குண்டோ தளர்வு ?
இருதரப்புத் தலைவர்களின் வாதங்களும் மிகவும் திறமையுடன் அவையைச் சூடேற வைத்துள்ளன. பார்வையாளர்கள் இருக்கைகளின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு வரவிருக்கும் கவிஞர்களின் சாமர்த்தியத்தைப் பார்க்க (படிக்க) ஆவலாயிருப்பது தெரிகிறது.
.. அனந்த்
பி.கு. எல்லேயார் சொன்னபடி நான் ‘தளர்ச்சி’க் கட்சியினரின் வாதத்தைக் கேட்க விரும்பாமல் ஊருக்குக் கிளம்பாமல் இருப்பது அவருக்கு வருத்தத்தைத் தராது என நம்புகிறேன்! :-))
வணங்கிடும் முறையில் இல்லை! வாழ்த்திடும் வழக்கில் இல்லை!
நுணங்கிடும் படிப்பி லில்லை! நோய்மனை அங்கும் இல்லை!
பணம்பெறும் பணியில் இல்லை! பாமரன் நாவி லில்லை!
கணந்தொறும் தொலைந்து போகும் கானலாய்த் தமிழைக் கண்டோம்!
2011/11/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
தமிழது வளரும் என்றார்!சரியதே! தவறே இல்லை!
அமைந்துள போக்கின் ஊடே அத்தமிழ் வளர்ச்சி உண்டா?
இமைகளைத் திறந்து பார்த்தேன்! இலையென எழுதி விட்டேன்!
அமைகிறேன் சற்று நேரம்! அவைதனில் மற்றோர் பேச!
கவிதைப் பட்டி மண்டபம் - 419, நவம்பர் 2011’நடைபயிலும் நிலவு’ச் சந்தர். . ஞாயிற்றுக் கதிராய் மாறிவிடைபகர்ந்தார் எல்லே யார்க்கு. . விவாதத்தில் சூட்டை ஏற்றி.
=
ஆயதாய் வலையில் விற்கும் அம்முறை சொல்லித் தந்தால்
பாயிரம் அவர்க்கு மாகப் பத்தென? நூறாய்ச் சேர்ப்பேன்!”
ஆயதல வலையில் தமிழ்நூல் விற்கும்
வழி சொல்வேன் சீக்கிரம்
பாயிரம் எழுதுவீர் தமிழுக்கு ஆயிரம்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தளர்ச்சியுறு தமிழ்நிலையை தகவாக எடுத்துரைத்தார்
தளர்ச்சியை சொன்னவிதம் சந்தரவர் கவிவண்ணம்.
அன்புடன்,
தங்கமணி.
On Nov 19, 8:54 am, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> செம்மொழித் தமிழே வாழ்க! தேனினும் இனியாள் வாழ்க!
> இம்மதி வானும் மண்ணும் நிலைத்திடும் காலம் மட்டும்
> நம்மொழி என்றாய் நம்முள் நடந்திடும் நினைவால் வாழ்க!
> அம்மையே! அமுதே! என்னை அணைத்திடும் மொழியே வாழ்க!...
>
> தமிழதன் தரத்தில் இன்று தளர்ச்சியா வளமா என்றே
> அமைந்தநல் வாத மன்றில் அடுத்ததாய் வாதம் செய்ய
> எமைஅவை அழைத்த தாலே எழுதிடத் துணிந்தோம் இங்கே!
> சமையெனப் பணித்த நல்லார் பசுபதி அவர்கெம் நன்றி!
>
> தமிழதன் பெருமை என்று தன்னுரை தொடங்கும் 'எல்லே'
> அமையுமிந் நாளில் இல்லா அத்தனைப் புகழும் சொன்னார்!
> நமையெதிர் கொள்ளும் கேள்வி நடக்குமிந் நாளில் அன்றோ?
> எமதுரை கேட்ட பின்னர் எழுதுவார் தளர்ச்சி என்றே!
>
> இருளென ஒன்று பின்னர் இருப்பதால் தானே முன்னர்
> பரவிடும் ஒளியின் வீச்சால் பரவசம் அடைந்து நின்றோம்?
> இருநிலைக் கூறாய் உள்ள இயற்கையை அறியும் போக்கில்
> வருகிற தளர்ச்சி யோடு வளர்ச்சியைக் காண வேண்டும்!
>
> மறத்தமிழ் மன்னன் அன்று வடக்குள இமயம் கண்டான்!
> முறத்தினால் அடித்தாள்! மூழ்கா முறைபல ஓலை கண்டான்!
> அறத்தினை அளந்தான்! ஆற்றில் அணைதனை அமைத்தான்! என்னும்
> திறமெலாம் அன்றே! இன்றோ சிறுமையே கண்டு நின்றான்!
>
> பொய்த்திடும் துறைகள் என்ன? போலியாய் ஆன தென்ன?
> கைத்திடும் குறைகள் என்ன? களர்நிலை கொண்ட தென்ன?
> ஏய்த்திடும் வழிகள் என்ன? இயல்பினில் தொலைத்த தென்ன?
> மெய்க்கமை சிறைகள் என்ன? மேல்சொலும் எனது பாடல்!
>
> *1. தளர்ச்சி அன்றோ?*
>
> *1.1. பொய்க்கும் துறைகள்:*
>
> உடையணி வழக்கம் போன்றே உள்ளவை குறைந்து போய்த்தன்
> மடையுடை வெள்ளம் போன்ற மாண்பினை இழந்து போலி
> நடைமுறை வழக்கில் மெல்ல நலிந்திடும் மொழியைப் பேணத்
> தடைபல எழுமிந் நாளில் தமிழ்த்தரம் தளர்ந்த தன்றோ?
>
> கல்வியே தமிழாய் நின்ற காலமோ மறைந்த தின்று!
> பல்கலைப் படிப்பி லெல்லாம் பண்டமிழ் உதவா தென்னும்
> சொல்லினை உலவ விட்டுத் தொல்தமிழ் தொலைத்து நிற்க,
> நல்விருந் தளிக்கும் மன்றில் நற்றமிழ் இலையாய்ப் போச்சே!
>
> சுருங்கிடும் உலகம் காணும் சூத்திரம் கண்ட தாலே
> பெருக்கிநம் வணிகம் தன்னைப் பெருநிலம் முழுக்க ஆளும்
> தரத்தினைப் பெற்று விட்டோம்! சாதனை சேர்த்த செல்வம்
> வரவெனில் செலவாய் இங்கே ஒழித்ததத் தமிழை அன்றோ?
>
> ஊடக மொழியின் பேச்சால் உடைந்தது மொழியும் இன்றே!
> ஏடிடும் நிறுவ னத்தார் இலக்கணப் பிழைகள் காணார்!
> தேடியும் பெறுதற் கின்றிச் செம்மொழி திரிந்து போகின்
> நாடிடும் மனிதர் பேச்சில் நற்றமிழ் வளர்ச்சி எங்கே?
>
> பல்வித மொழிகள் சேர்ந்துப் பழகிடும் அவியல் ஒத்தக்
> கல்வியால் களங்க மாச்சு! களர்வழி 'மம்மி டாடி'
> சொல்லிடும் சிறுவர் நெஞ்சில் சொல்மொழி மறந்து போக
> இல்லமும் தமிழைப் பேசா(து) இருந்திடும் வழக்கென் றாச்சே!
>
> *1.2 கைக்கும் குறைகள்:*
>
> மூச்சது தமிழே என்று முழங்கிடும் கட்சி நூறு!
> பேச்சினில் 'மொழியே செல்வம், பேணுதல் வேண்டும்' என்னும்!
> கூச்சலைக் கூட்டும்! வெற்றுக் குவியலாய்க் குப்பைக் கூட்டம்!
> ஆட்சியில் அமர்ந்த பின்னே அச்சொலை மறந்து போகும்!
>
> வணங்கிடும் முறையில் இல்லை! வாழ்த்திடும் வழக்கில் இல்லை!
> நுணங்கிடும் படிப்பி லில்லை! நோய்மனை அங்கும் இல்லை!
> பணம்பெறும் பணியில் இல்லை! பாமரன் நாவி லில்லை!
> கணந்தொறும் தொலைந்து போகும் கானலாய்த் தமிழைக் கண்டோம்!
>
> மரபதன் மாண்பை எல்லாம் மானுடம் மறந்து போச்சு!
> கரத்துள தெங்கைத் தள்ளிக் கானலின் நீரை எண்ணும்
> தரத்தினைக் கொண்ட தாலே தமிழெனும் மொழியீன் செம்மை
> வரத்தினை தொலைக்கும் நாளின் வருகையை நோக்கு கின்றோம்!
>
> எண்ணிடத் தமிழன் யாரும் இல்லையென் றான தாலே
> மண்ணெலாம் தனதாய்ப் போயும் மதிப்பிலை! தமிழ தின்று
> கண்ணியம் இழந்த கைம்பெண்! கால்களைக் கரையான் கொத்தப்
> புண்களால் நொண்டும் பேதை! பொய்யனாய்த் தமிழன் இன்று!
>
> கடந்திடும் ஒருநூற் றாண்டில் காவியம் ஏதும் உண்டா?
> தொடர்ந்திடும் தரத்தைக் கொண்ட தொகுப்புதான் ஏதும் உண்டா?
> சுடர்விடும் பக்தி மார்க்கச் சிந்தனை நூல்கள் உண்டா?
> படர்ந்தது களைகள் சேர்த்த பாதகம் மட்டு மன்றோ?
>
> *2. வளர்ச்சி என்றோ?*
>
> *2.1 ஏய்க்கும் முறைகள்:*
>
> அரசியல் பிழைப்பைத் தேடி அவரவர் பெயரை மாற்றிப்
> பரிதியாய் வழுதி யாகிப் படையுடை தொண்டை மான்கள்
> விரவிடும் ஏய்ப்பில் ஏதும் விளைவுகள் கண்ட துண்டா?
> தரமிலாச் செயல்கள் தானா தமிழினை வளர்த்து நிற்கும்?
>
> திரைவரு படங்கள் தன்னில் செந்தமிழ் பேசாக் கன்னி!
> அரைகுறை ஆடை காட்டி அழகிய தமிழைக் கொல்வர்!
> வரிவிலக் கென்றும் ஏய்த்து வாணிகம் நடத்தும் போது
> வரவிலை தமிழங் கென்றும்! வளர்ச்சியென் றிதையார் ஏற்பர்?
>
> கதைசொலும் இதழ்கள் நாவல் காட்டிடும் நிலைமை என்ன?
> நிதர்சனம் என்னும்
>
> read more »
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
என்னுடைய வாதம்:=====================கவிதைப் பட்டிமண்டபம்:4=======================
விண்ணில் எழுந்தவில் ஏழு நிறங்களாய் மாந்தரவர்
கண்ணில் தெரிவதும் கானல் அதுநிசம் இல்லையன்றோ?
வெண்மை யெனுமொரு உண்மை நிறமது மெய்மையன்றோ?
எண்ணி யிதையுளம் பொங்கத் தமிழினை ஏத்திடுவீர்!
ஓண்ட மிழதுவே மக்கள் நடுவினில் ஓரழகாய்,
வெண்மை நிறமது தன்னில் உறைபல வண்ணமதாய்,
தன்னைப் பலமுறை மாற்றும் நிலையதால் தாரணியில்
மென்மை நிறமென பூஞ்சைத் தமிழென விள்ளுவதோ?
மாற்ற மிலாதவை என்றும் மடிவதே மாண்பதனால்
மாற்ற மெனுமுயர் பண்ப துவேநிலை யானதன்றோ?
வேற்று மொழிகளின் தாக்கம் பலமுறை மேவியதால்
ஏற்றத் தமிழ்மொழி தாழ்ந்து கடைநிலைப் ஏகிடுமோ?
காவியச் சிறப்பும் கனித்தமிழ் வார்த்தைகள்
மேவிய சிறப்பும், விதவித மாக
நயாகராவின் நடனம் போலே
தியாக ராஜன் தீட்டினார் இங்கே!
இனிவரும் நாளில் இப்படி இப்படி
நனிசிறந்திடவே நம்மவர் பேசுவர்
என்று மொழிந்தார் இவர்நம்பிக்கை
வென்றால் மகிழ்ச்சி விருப்பமும் அதுவே!
இலந்தை
இன்றைய நிலையில் இப்படி என்றே
ஒன்றொன் றாக உரைத்தனர் சந்தர்
அறுசீர் விருத்தம் அலையலை யாக
விறுவிறுப் போடு வியயபுத் தந்தது
பட்டி மண்டபப் பாங்கொடு வாதம்
அட்ட காசமாய் ஆர்த்தது இங்கே!
இலந்தை
--
சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en
கவிதைப் பட்டி மண்டபம் - 4
பழையது விலைமதிப்பற்றதுஎனவேபழையன கழிந்தோம்புதியதில் அழிந்தோம் ...!
தமிழின் தற்காலத் தளர்ச்சி பற்றிய கார்த்திக்கின் வாதம் அங்கதமும் ஆதங்கமும் தெறிக்கும் கனலைக் கொட்டும் கவிதைப் படைப்பு. பாராட்டுகள்.
அனந்த்
பி.கு. நாளை இந்தியா பயணம். வரும் ஒன்றரை மாத காலத்தில் இங்குப் பங்கு கொள்வது குறையும் எனத் தோன்றுகிறது. இன்னும் வாதமிட இருக்கும் அனைத்துக் கவிஞர்களும் என் வாழ்த்துகள்!
முற்றுப் புள்ளியாய் வந்துவிட்டேன்
மூச்சு விடாமல் சொல்ல வேண்டும்
மூன்று நான்கு மடலிடுகிறேன்
முழுவதும் படிக்க வேண்டுகிறேன்
தாழ்மையாய்த் தலை பணிகிறேன்
தமிழ் வணக்கம்
உதிப்போன் குரலாம் யாழிசை ஒலியே
உதிரம் சிந்தாமல் பிறந்த தலைமகளே
உதிர்ந்த பதருக்குள் உள்ளேறிய உயிரே
உதித்தாய் தவழ்ந்தாய் கணனித் தமிழே
தவம்செய் முக்கண்ணன் அனலின் வடிவே
தவலம் குடித்த இறையன் மொழியே
தவளநீ றணிந்த வேலின் ஒளியே
தவழ்வாய் வளர்வாய்க் கன்னித் தமிழே
வளர்மதி நுதலாள் விழியின் துணையே
வளம்தரு அரிப்பிரியை ஆதுர மருமானே
வளர்முகமே தெரிந்த ஆன்ற கல்வியே
வளர்வாய் வெல்வாய் வாழும் தமிழே
வெல்லவே பிறந்த அம்மையின் வேலே
வெல்லவே இயலாத அனங்கன் கருணையே
வெல்லம் தரும் திகட்டாச் சுவையே
வெல்வாய் அருள்வாய் இறையின் ஒலியே
அவை வணக்கம்
தமிழ் அறிஞர் நிறைந்த அவையினிலே
தமிழ் மறந்த அறிவிலியாய் நல்
தமிழ் வளர சீர்கவி பாடுகிறேன்
தமிழ் காக்கும் நம்பிக்கையில்
தமிழ் என்பவள்
மாய மகள்
விழுங்கிய ஆழியின் வாயின் ஏற்றெழுந்தாள்
முச்சங்க வீதியில் கோமகள் கோலோச்சினாள்
மெய்ஞானம் நீடுதலில் ஆதியின் வழியாகினாள்
உயிருண் மாய மகள்
பாவலன் பாரதியின் கருங்காக்கைச் சிறகனாள்
வீறுகொண்ட விடுதலை வேட்கையின் குரலானாள்
அரசியல் சகதியில் நீண்டெழுந்த கமலமானாள்
நாகாக்கும் மாய மகள்
கற்பனைத் தரு கண்ணதாசனின் கவிதையானாள்
அமரர் கல்கிக்கே பொன்னியின் செல்வனானாள்
அகிலனின் எழுத்தில் வேங்கையின் மைந்தனானாள்
அகமாளும் மாய மகள்
விரிந்த இணையத்தின் வித்தில் தேர்ந்தழுந்தாள்
கணனியில் மின்னலாய் கவிதரும் செல்வியானாள்
இயல்பால் எவரையும் இணைக்கும் தாயானாள்
மனமாடும் மாய மகள்
சகல செம்மொழிகளுள் துள்ளும் கங்கையானாள்
என்றுமே எம்மை மயக்கும் கன்னியானாள்
நித்தம் புதுச்சொல் தரும் மந்திரமானாள்
கவின்மிகு மாய மகள்
தடைகளுக்குள் கசிந்து புகும் வெம்புனலானாள்
மருளார்ந்த இருண்மதிக்குள் ஒளிந்த வெண்ணிலவானாள்
செய்யும் தொழிலாய் பண்பூட்டும் வாழ்க்கையானாள்
மாண்புபெறு மாய மகள்.
தமிழென்னும் மொழி
மழலைப் பாட்டு
தேன் போல் இனிக்க இனிக்க
மனம் மகிழ வைக்கும் மொழி
மழைத்துளி போல் வெடித்து வெடித்து
கால்கள் தாளமிட வைக்கும் மொழி
சக்கரவாணம் போல் சுற்றி சுற்றி
நம்மையும் சுற்ற வைக்கும் மொழி
யாழிசை போல் சுண்டி சுண்டி
அகம் சிரிக்க வைக்கும் மொழி
ஞாயிறு போல் வந்து வந்து
செயல் சிறக்க வைக்கும் மொழி
அருவி போல் குதித்துக் குதித்து
கற்பனைக் கும்மாளமிட வைக்கும் மொழி
அலை போல் அடித்து அடித்து
முயற்சியில் வெல்ல வைக்கும் மொழி
தீச்சுடர் போல் சுட்டு சுட்டு
உள்ளம் உணர வைக்கும் மொழி
தாய் போல் உணர்த்தி உணர்த்தி
கைகளை எழுத வைக்கும் மொழி
பாமரனின் பதில்- தமிள் தெரியாத தற்குறியின் பாட்டு
இங்கிலீஷ தங்லீஷா மாத்திப்புட்டா
ஆல் த பெஸ்ட்டும் ஹெள ஆர் யூவும்
தனக்காய் தத்து எடுத்துகிட்டா
எஸ் சார் தாங்க் யூ சார் சொல்லி
இலக்கணம் மாத்த கட்டளையிட்டா
பட்டுச்சேலே மாத்திப்புட்டு
குழாய் பேண்டு மாட்டிக்கிட்டா
குண்டுமல்லி எடுத்துப்புட்டு
கூந்தலை வெட்டிப்புட்டா
கழுவுற தண்ணியிலே
நழுவுற மீனாட்டம்
காலத்தின் கண்ணிலே
கைவிட்டு ஆட்டிப்புட்டா
கணனியையே மயக்கிப்பிட்டா
கடல் உதைச்சக் காலால
கற்பனைக் குதிரை தட்டிவிட்டா
கலை வளக்கும் சினிமாவாகிப்புட்டா
விட்டுப் போனாலும் விடாமல்
தொட்டுப் போகும் விதியாகிப்புட்டா
தப்பிப் பிறந்தாலும்
தமிழனாய் பிறக்க ஆணையிட்டா--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
எதிர் வாதம்: இல்லவே இல்லை தளர்ச்சி(சந்திர சுப்பிரமணியன் அவர்களின் கவிதைக்கு)
கண்ணுக்குக் காட்சித் தெரியவில்லை என்று
கதிரவனே இல்லை என்றே தளர்வோரே
வேதனை வேண்டாம் இங்கே உமக்கு
தாய்க்கே தாய்மையாய் தமிழென்றும் உண்டு
இருள்மதி கண்டு வெண்மதி மறுப்போரே
தளர்ச்சி என்பதன் மறுபக்கம் வளர்ச்சி
ஞாலம் பரந்து இருக்கும் என்தமிழ்
ஞாயிறு என்றே அறீவீர் தேவரே
இருள் நிழல் படிவது உண்டு
அம்மாவாசை என்றுமேயில்லை நம் தமிழுக்கு
அன்னை பாடும் தாலாட்டு அது போதும்
அன்றாடம் அழகாய்த் தமிழ் படிக்க
எழுத்துப் பிழை இலக்கணப் பிழை
கற்பித்தோனும் கற்பவனும் காரணகர்தா அதற்கு
திருத்த வேண்டியத் தவறு தான்
திரும்பிப் பார்க்காத மரணமில்லை தமிழுக்கு
வணிகனாய் வந்து வாழ்க்கை சுரண்டிய
வெள்ளையனை விரட்டிய தமிழை மறந்தீரே
வாங்கிக் கொண்டாள் அவன் மொழியை
வளரும் வழியில் அதுவும் ஒன்று
ஆங்கிலமோ பிரெஞ்சோ அந்நியம் அத்தனையும்
ஆலமரமாய் அணைத்து இணைத்துக் கொண்டவளை
அழிந்து விட்டாள் இவளென்று அழகாய்
அநியாயப் பொய்யுரை ஏனோ அறிஞரே
மம்மியும் டாடியும் வாய்ச் சொல்லாம்
சேருமே செவிச் செல்வமாய் தமிழுமே
தொலைக் காட்சி வழியாய் நாளுமே
டோராவும் , ஸ்கூபிடூவும் பேசுகிறார் தமிழிலே
வணங்கிடும் முறையில் இல்லை மற்றும்
வாழும் வழியில் இல்லை என்றீரே
மதங்கள் அத்தனையும் வளர்ந்தது தமிழாலே
மறந்து விட்டதோ தமிழ்ச் சிங்கமே
திருவாசகம் திருப்புகழ திருப்பாவை மறந்தீரோ
அன்றே எழுதியது இன்றும் பாடுவோமே
புனிதமான பையிளும், குரானும் கீதையும்
தமிழிலும் உண்டு தெரியாதா தேவரே
யூதமத நீதிமொழிகள் தமிழிலே உண்டு
படிக்கவில்லை நீர் என்றால்
தப்பில்லை தமிழ் மேலே தலைவரே
எம்மதமும் சம்மதமாய் சமாதானம் தளர்ச்சியா?
மதம் மாற்றும் நோக்கோடு வானோலி நிலையம்
தமிழிலே சமயச் செய்திகள் பரப்புமே
லிங்காஷ்டகமும் சகஸ்ரநாமமும் மகிஷாசுர
மர்த்தினியும் தமிழில் மாறியதும் தெரியாதோ
வாழும் நிலை குறை சொன்னீர்
தமிழ் பேசவில்லை என்று தானே
சமையல் அறையில் ஆண் இருந்தால்
பெண்ணே இல்லை என்றுதான் சொல்வீரோ?
உயிர்களின் ஒலிகளுக் கெல்லாம் உருவமவள்
கா,கா காக்கைக்கும் கூ கூ குருவிக்கும்
டீ, காபி, டிவிக்கும் உருவமானால் தங்குமா
தளர்ச்சி- தலைதூக்குமா தமிழுக்கே தடையாக?
கண்ணியம் இழந்த கைம்பெண் என்றாரே
என் தாயை, கண்ணீர் விடுகிறேன்
இருநூறு மடங்கு உழைப்பவள் அல்லவா
மானம் காக்க மாது அவள்
மகளாய் சீறி நீதி கேட்கிறேன்
ஒளவையும் கண்ணகியும் பாஞ்சாலியும்
மாதவியின் மணிமேகலையும் சொல்லித்
தந்த செந்தமிழ் கற்பனையோ சொல்வீரே
இலக்கணம் தவறிய தமிழைத் தாக்க
தமிழ் பிறழிய வாக்கும் தவறாம்
வரமொன்று கேட்பேன் என் தாய்க்காய்
தருவீர் பாயிரம் தமிழுக்காய் ஆயிரம்
கால் இழந்த நொண்டி என்றீர்
மாற்றுத் திறனாளிகளின் மனம் தெரியாதோ
மாற்றுவேன் உலகம் என்ற பிடிவாதமே
என்தமிழுக்கும் உண்டென்றீர் நன்றி உமக்கே
நூற்றாண்டு காவியம் கேட்டீர் கவிஞரே
கலைஞர் கருணாநிதியின் கைவண்ணம் கண்டில்லையோ
அவரது காவியமும் சீன மொழியில் மாறுகிறெதே
கண்ணதாசனும் வாலியும் காவியம் படைக்கலையோ
கருவாச்சிக் காவியம் படித்ததில்லையா?
சிறுகச் சொல்லி பெருகி இருக்கும் சிறுகதைகளும்
சின்னச் சின்னக் காவியங்கள் தான் தெரியாதோ
மனம் சோர வேண்டாம் சொல்லுவேன் மேலும்
“மதிசூடி துதிபாடி” “அண்ணாமலையானை” “உள்ளவெள்ளத்தில்”
மூழ்கி முத்தெடுத்து “கருங்குயிலாள் கவிதை “
சொல்ல நான் படித்தேன் சந்த வசந்த்த்தில்
எழுந்து வந்து எட்டிப் பாருங்களேன் நீங்களுமே
யாப்புக் காவியத்தை அலங்கார மாக்கியது
ஆன்றார்கள் செய்த தவறே அன்றோ
அரசவையில் அதிகாரமாய்ப் பூட்டி வைத்தார்
பாமரரைப் போய் சேரவில்லையே அறிவு
செம்மோழி எம்மொழி நல்மொழி என்றீர்
இலக்கணம் இல்லை அறவழி இல்லை
ஐயகோ தமிழே இல்லை என்றீர்
அன்பின் ஐயா அமைதியாய்க் கேட்கிறேன்
குறத்திப் பாட்டும், கும்மிப் பாட்டும்
குலவைப் பாட்டும் வில்லுப் பாட்டும்
புதுமை மாறா புதுக் கவிதையும்
புக்ககம் வந்த புது மணமகளோ
ஐநூறு ஆண்டுகள் அதிவேகமாய் மாறிய காலம்
மாறினான் தமிழனும் தமிழைக் காக்க
மாற்றமுமில்லை, திருத்தமுமில்லை தொல்காப்பிய இலக்கணத்தில்
தன்னிலக்கணம் தானேவகுத்தாள் தமிழ்தான் அறீவீரே
அரசபை விட்டாள் அலங்காரம் விட்டாள்
பாமரரோடு பாதை சேர்ந்தாள் செந்தமிழ்
சென்னைத் தமிழாய், சீனத் தமிழாய்
நெல்லைத் தமிழாய், தஞ்சைத் தமிழாய்
சிங்கைத் தமிழாய், இலங்கைத் தமிழாய்
இணையத் தமிழாய் இணையில்லாத் தமிழாய்
கொங்குத் தமிழாய், சிங்கத் தமிழாய்
சீராய் வளர்ந்தாள் சிறை வைக்க யாருமில்லை
மொழியின் பரிணாம வளர்ச்சியின் முதல்
வரிசைப் பந்தியில் பசியாறக் காத்திருக்கிறோம்
அவியலை அடுத்து அறுஞ்சுவை தெரியாதோ
அழகாய் படைத்தும் பறிமாறுவோம் நாமே
மருத்துவத்தில் தமிழில்லை மனமுடைந்த பெரியோரே
மருத்துவம் மனிதத்திற்கு அன்றோ சொந்தம்
புதையலை மொழிச் சிறையில் அடைப்பது
தமிழ் சொன்ன வாழும் வழியல்லவே
நுண்ணியல் கல்வி தமிழிலில்லை என்றீரே
ஏட்டுச் சுரக்காய் இல்லை எங்கள் தமிழ்
வாழியல் நூல்களும் நூறு உண்டு
விவசாயம் கணனி எல்லாமுண்டு தமிழிலே
வருமானம் இல்லை தமிழால் அதனால்
இனி யில்லைத் தமிழுமே என்றீர்
உள்ளங்கை நீரில் வேண்டுமே வானம்
வாத்திற்காய் வரம் கேட்கும் வித்தகரே
வருமானம் இல்லையோ தமிழ் ஆசிர்யர்களுக்கு
பத்திரிக்கைத் துறை பின்பக்கம் பணமா காய்க்கிறது?
ஆஸ்கர் தமிழன், அன்புள்ள ரஜினிகாந்த்
இவர்போல ஆயிரம் இன்னும் உண்டு
கோள்வழித் தமிழ் முதலீட்டில் முதன்மையே
கணனி வழித் தமிழின்னும் சிறந்ததே
விண்டோசில் தமிழ் ஐஃபோனில் தமிழ்
வியாபார உக்தி விரைவாய் அறிவீரே
யாஹீவில் தமிழ் குகுளில் தமிழ்
முகநூலில் தமிழ் ட்விட்டரில் தமிழ்
ஹாட்மெயிலில் தமிழ் ஜிமெயிலிலும் தமிழ்
தமிழுக்காய் வணிகம் வளைகிறது தெரிவீரே
கரை தெரியாக் காட்டு வெள்ளமாம்
காலத்தின் வரலாறு காட்டும்முள் நம்மொழி
தளர்ச்சி தமிழுக்கே என்றே சொல்லி
கண்ணைக் குத்திக் கொள்ள வேண்டாமே
சங்கத்தில் தமிழைத் தொழிலாய் செய்தான்
தமிழைக் கலையாய் வளர்த்தான் தமிழன்
இன்றோ தமிழைத் தமிழுக்காய் செய்கிறான்
தமிழுக்க்குத் தளர்ச்சி இல்லவே இல்லை
ஆக்க சக்தியிது நம்மொழி அழியாதே
உந்தும் சக்தியிது மனிதத்தை உடைக்காதே
படைக்கும் சக்தியிது விதிக்குப் பணியாதே
முருக சக்தியிது தடையில் தளராதே
--
இன்னும் பத்து நிமிடங்களில் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு முன் என்னைப் பட்டி மன்றத்தில் நிறுத்திய எல்லேயாருக்கு நன்றி! :-)))
அனந்த்
--
மொழியே மழலையாய்
காதணி எறிந்து
அம்புலி காட்டியவள்
பாதம் பணிவோம் வாலைப் பெண்ணே
செம்மொழி கொடுத்து
சீராய் வாழ்த்தினாள்
ஆடிப் பாடுவொம் வாலைப் பெண்ணே
அன்னை மொழியே
மீண்டும் பிறந்தாள்
குலவைக் கூவடி வாலைப் பெண்ணே
கணனித் தமிழர்
மதியில் உதித்தாள்
மனமும் மகிழ்ந்தோம் வாலைப் பெண்ணே
மின்மதுரை என்றே
புன்னகைப் பூத்தாள்
கூவிச் சொல்லடி வாலைப் பெண்ணே
கணனியில் எழுத்துருவாய்க்
கண் மலர்ந்தாள்
கவிதைப் பாடடி வாலைப் பெண்ணே
கணனி வழியாய்
கையில் தவழ்ந்தாள்
கொஞ்சிக் குலாவடி வாலைப் பெண்ணே
இலக்கியப் புதையலை
கைமுட்டியில் இறுக்கினாளே
காட்டிச் சிரியடி வாலைப் பெண்ணே
இறையின் மொழியாள்
இறங்கி வந்தாள்
மார்பில் அணைப்போம் வாலைப் பெண்ணே
நாளிதழ்கள் மின்னுருவாக
தளிர் கைநீட்டினாள்
முத்தம் பதிப்போம் வாலைப் பெண்ணே
திரைப்பட வளர்வில்
காலை உதைத்தாள்
மார்பில் தாங்கடி வாலைப் பெண்ணே
கணனிக்குள்ளே தொலைக்காட்சியாய்
தலையை ஆட்டினாள்
தரையில் விடுவாய் வாலைப் பெண்ணே
இணையக் குழுக்களாய்
குப்புற விழுந்தாள்
கும்மாளம் போடடி வாலைப் பெண்ணே
வளரும் இணையத்தில்
நெஞ்சால் நீந்தினாள்
தூக்கிக் கொள்ளடி வாலைப் பெண்ணே
நம்மொழி நாம் தேட
நிமிர்ந்து அமர்ந்தாள்
குதித்து மகிழடி வாலைப் பெண்ணே
கணனியில் விரலாட
கைகொட்டிச் சிரித்தாள்
கும்மி ஆடடடி வாலைப் பெண்ணே
தமிழ் பல்கலைக்கழகமாய்
இணையத்தில் தவழ்ந்தாள்
கர்வம் கொள்ளடி வாலைப் பெண்ணே
அறிஞர்கள் கற்பனையில்
குலுங்கிச் சிரிக்கிறாள்
கூடிச் சிரியடி வாலைப் பெண்ணே
செல்லினம் என்றே
கைப்பிடித் தெழுந்தாள்
துணையாய் நில்லடி வாலைப் பெண்ணே
எட்டி வைப்பாள்
ஒவ்வொரு அடியாய்
சலங்கைக் கட்டடி வாலைப் பெண்ணே
வாழும் வழியை
கைநீட்டி காட்டுவாள்
வளையல் மாட்டடி வாலைப் பெண்ணே
மின்னலையாய் இவள்
ஓடியாடும் நாள்வரை
கண் விழிப்போமோ வாலைப் பெண்ணே
பிஞ்சு மகள்
தளர்வாளே என்றவர்
வாயைக் கழுவடி வாலைப் பெண்ணே
வாழும் மொழியிவள்
வளர்வாள் என்றும்
கண்ணூறு கழிப்பாய் வாலைப் பெண்ணே
வேண்டும் வேண்டும்
சங்கத்தமிழ் பாட்டி என்றாக வேண்டும்
கணனித் தமிழ் தாயாக வேண்டும்
கைக்கணனியில் அவள் தோழியாக வேண்டும்
பால்வீதியிலே நடமாடும் பேத்தியாக வேண்டும்
குழந்தை இலக்கியங்கள் வித்விதமாய் வேண்டும்
வாய்மொழி எழுத்துருவாய் மாறும்வழி வேண்டும்
வணிக மொழியாய் என்மொழி வளர வேண்டும்
மின்னிதழ்கள் பலவும் மலர்ந்திட வேண்டும்
ஒலியிதழ்கள் காற்றில் தவழவே வேண்டும்
இன்னும் பலமொழியில் அகராதிகள் வேண்டும்
சிறுவர் குரல் வானோலியில் மீண்டும் வேண்டும்
திருக்குறளே திரைப்படமாய் திரிந்திட வேண்டும்
கணனியின் கட்டளைகள் தமிழில் வேண்டும்
சொல்திருத்தி கணனிக்கு செவ்வனே வேண்டும்
இலக்கணப்பிழைத் திருத்தவும் கருவி வேண்டும்
நிகண்டுகள் கணனிக்காய் உருவாக்க வேண்டும்
காணோளி விளையாட்டுக்கள் தமிழில் வேண்டும்
தமிழ் விளையாட்டுக்களும் இணையத்தில் வேண்டும்
அலங்கார எழுத்துருக்கள் கணனிக்காய் வேண்டும்
ஐம்பெரும் காப்பியங்கள் தொலைக்காட்சியில் வேண்டும்
அகநானூறும் புறநானூறும் சிறுகதைகளாய் வேண்டும்
புதுக்கவிதைக்கும் இலக்கணம் எழுத வேண்டும்
தமிழ் பிரெய்லில் வளரவே வேண்டும்
குறி மொழியும் தமிழுக்காய் வரவே வேண்டும்
சீமைச்சொல் திசைச்சொல்லாய் சேர்க்க வேண்டும்
நுண்ணியல் கட்டுரைகள் தமிழில் வேண்டும்
யாப்பு எழுதவே பாடப்பயிற்சி வேண்டும்
மின்தமிழ் வார்த்தைகள் வளரவே வேண்டும்
அறிவியல்க் கதைகள் தாய்மொழியில் வேண்டும்
ஹாரிப்பாட்டர் தமிழில் மொழிமாறி வேண்டும்
தமிழ்ப் பள்ளிகள் இணையத்தில் வரவே வேண்டும்
வாய்ப்புக்கள் இத்தனையும் விதைகளாகிட வேண்டும்
விதைகளாகிட்ட கருத்துக்கள் விருட்சமாகிட வேண்டும்
விருட்சங்களின் விழுதுகள் விண்ணெட்டிட வேண்டும்
விண்ணெட்டும் விரல்கள் விதிமாற்ற வேண்டும்
விதிமாற்றும் வித்தை தமிழனுக்கு வேண்டும்
விதிமாற்றும் மதியே தமிழென வேண்டும்
தமிழெனும் மொழிக்கு தலைவணங்க வேண்டும்
தலைவணங்கி நாளும் செயலாற்ற வேண்டும்
செயலாற்றல் எல்லாம் தமிழுக்காய் வேண்டும்
வளர்ச்சி என்று சொல்ல வந்தேன்
வளர்ப்போர் பாதம் பணிந்து நின்றேன்
சந்தவசந்தக் குழுவினருக்கு முதல் வணக்கம்
கணனிதமிழ் தந்த தமிழாவிற்கு வணக்கம்
யாப்புத் தமிழை எளிமையாக்கி வளர்த்த
பசுபதியாருக்கு என்றும் எந்தன் வந்தனம்
யாப்பைக் கணனியில் ஏற்றி சோதிக்க
ஏறுபோல் வந்த அவலோகிதம் ஏத்துமே
இணையத்தில் இலவசப் பாடம் தெரியுமே
யாப்பு எழுதலும் எளிதாகும் விரைவிலே
ஆராய்ச்சிகள் ஆயிரம் நடக்குது தமிழுக்காய்
மரபுதமிழ் காக்கும் முயற்சியும் நடக்குதே
ஆங்கிலம் தமிழாக்கம் ஆகிறது இங்கே
அடுத்தது பிரஞ்சும் ஜெர்மனும், ஜப்பானியமும்
சீனமும் சேருமே தமிழோடு கலக்கவே
மொழிகள் தாங்கியே தமிழும் வளருமே
பேச்சும் எழுத்தும் மட்டுமே மொழியல்ல
கற்பனை எல்லாம் தமிழாக்க முயற்சியே
எழுதிப் பழகவே ஆயிரமாயிரம் வலைப்பதிவுகள்
வாய்மொழி பழகவும் வழிகள் வருமே
வாழவொரு நாடென்று எதுவும் இல்லை
வாழ்த்திச் சொல்ல சுதந்திரம் இல்லை
பிணத்தோடு சேரும் சாவே வாழ்வாய்
வாழும் இலங்கைத் தமிழும் வளருதே
தளர்ச்சியின் தலைமகன் கேட்டநல்
ஆயதல வலையில் தமிழ்நூல் விற்கும்
வழி சொன்னேன் நானுமே வளருமே
வளர்தமிழ் மேன்மையை வண்ணமுற எடுத்துரைத்தார்
தளர்வென்று ஒன்றில்லா தண்டமிழ்த்தேன் அமுதென்றார்.
அன்புடன்,
தங்கமணி.
On Nov 20, 10:18 pm, "Raja.Tyagarajan" <thiaga...@dataone.in> wrote:
> அனைவர்க்கும் என் வணக்கம். தமிழறியா ஊரில் ஒருங்குறி தமிழ் கொண்டுத் தட்டினேன் இக்கவிதை; இதுவே தமிழ் வளர்ச்சிக்கொரு எடுத்துக் காட்டு. துயில் கலக்கத்தால் ஒற்றுப் பிழைகள் இருக்கலாம்....
> read more »
நகைச்சுவை சேர்ந்திட நல்லகவி தந்தார்
தகவான சிறப்போடு வளம்பெறவே வாழ்த்திடுவேன்
கவிஞர் கார்த்திக்கின் அங்கதப்பாடலில் வலி,ஏளனம்,வருத்தம்
தெரிகின்றன!பாடலில் என்னைமறந்து இரசித்தேன்.பாராட்டுகள்!
வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
> *தமிழ்த்தாயே புரிகிறதா என்மொழி,*
> *
> *
> *கார்த்திகேயன்.இ *
> *(9618950500)*www.kkn667.blogspot.com> --
அன்புடன்,
தங்கமணி.
On Nov 23, 4:04 pm, Suganthi Venkatesh <vkn...@gmail.com> wrote:
> *எதிர் வாதம்**: இல்லவே இல்லை தளர்ச்சி(சந்திர சுப்பிரமணியன் அவர்களின்
> கவிதைக்கு)*...
> read more »
எங்கே உனது கவிதை????
தேடுகிறேன்.தெரியவில்லை.
அன்புடன்,
தங்கமணி.
On Nov 22, 9:34 am, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:
> நெத்தியடி கவிதை..
> அசத்தல் .. அசத்தல்..
> அகிலா ராமசாமி...
>
> read more »
> > *தமிழ்த்தாயே புரிகிறதா என்மொழி,*
> > *
> > *
> > வள்ளுவருக்கு உருவம்- Hide quoted text -
>
> - Show quoted text -
தளர்ச்சியை சுட்டிக் காட்டி
தாழ்வு கூற வரவில்லை..
தப்பு எங்கே நடக்குதென்றே..
தவிப்பைச் சொல்லி ...
வளர்ச்சி என்றே வீராப்பு பேசியே..
வாளா விருக்காமல்..
வழி தவறும் அன்னைத் தமிழை
வழிக்கு கொண்டு வாருமென்றே..
விசனத்துடன் வேண்டுகிறேன்..
எங்குந் தமிழ் எதிலுந் தமிழ்..
ஏவல் செய்த காலம் போய்
எங்கே தமிழ் எதிலே தமிழ்
எண்ணத் தோணுதடா..
எதிர்காலம் இருளாய் போனதடா..
தளர்ச்சிக்கு தலைமை யார்..
தடையொன்று வந்ததையா தமிழின் வளர்ச்சிக்கு
சோடை போனதடா..சொக்க வைத்த செந்தமிழும்..
மடை திறந்த வெள்ளமாய் மகிழ வைத்த தமிழிங்கே.
விடை கொடுத்ததையா.. விரட்டி அடித்ததினால்..
வளர்ச்சிக்கு வழிகாட்டும் வள்ளல்கள் உள்ளபோது
தளர்ச்சி ஏனென்றே தலையை பிய்த்தேன்
கிளறிப் பார்த்தேன் கிறுக்காய் போனேன்..
கிறுகிறுத்துப் போனேன் ... உண்மையுணர்ந்த வேளை..
மலையாய் துயரம் மனமெல்லாம் சிந்தனை
நிலை குலைந்தேன் ..என்தமிழ் போனதால்..
வலைப் போட்டு தேடினேன்..வஞ்சகன் யாரென்றே..
சிலையாய்ப் போனேன் ... சிந்தனை தெளிந்தவேளை...
பிறனை கைகாட்டும் மானுட மனமிதுவே
திறனாய் ஆய்ந்த வேளை தெளிவானது ஓர் உண்மை..
நானுமொரு காரணந்தான் தமிழது தாழத்தான்
நாணம் கொண்டேனே .. நான் அதை சொல்லத்தான்.
எங்கே தவறு...
தமிழ் தாயே போற்றி.
தாயும் ஊட்டி வளர்த்தாள்..
தமிழென்னும் அமுது.
தாலாட்டில் என்றும்..
வலைப் போட்டு வலையில் தேடி
வாயில் நுழையா பேர் வைத்தே..
விடை கொடுத்தோம் அப்போதே..
விலை பெறாது தமிழென்றே ....
குழவியாய் அம்மா என்றே
கூப்பிட்டு மகிழ்ந்த வேளை..
குழப்பிநாளே அம்மாவும் ஓர் நாள்..
குறுகலாய் கூப்பிடு என்னை
மம்மி என்றே தான்..
தமிழை தளர்ச்செய்தாலோ தாயுந்தான்...?
சாமியை வேண்டி நின்றேன்..
சமஸ்க்ரித மொழிப் பாடல்களால்..
சுத்தமாய் புரியவில்லையோ
செவி சாய்க்க மறந்தாரே..
கூவி நான் கும்பிட்டும்...!!!!
.
விருந்தாளி வந்த வேளை..
வணக்கம் என்றே செந்தமிழில்
வாய்நிறைய சொன்னேன்..
வசவு தான் கிட்டியதே..
வடிக்கட்டின முட்டாளென்றே..
தமிழின் தளர்ச்சி தொடர்ந்தது இங்குமே..!!!
எதிர்பார்த்த நாளும் வந்ததிங்கே..
எதிர்காலந் தரும் பள்ளி செல்ல..
வரிசையா பாடங்கள் -ஏனோ
ஒரு வரி கூட புரியலையே..
தமிழில் சொன்னால் தரக்குறைவாம்
அழ வைத்தாரே ஆசிரியருந்தான்..!!!!
விரல்வலிக்க வீட்டுப் பாடம்..மிரள வைக்கும் அன்றாடம்..
தளர்ச்சி போக்க எண்ணியே..தமிழ்ப் பாடநூல் பிரித்தேன்..
பள்ளி முடித்த தமையன் சொன்னான்
தள்ளிவை நீயுந்தான் தமிழ்மொழிப் பாடத்தை..
தாய்மொழி யன்றோ..தடையேது முண்டோ..
தாராளமாய் வந்திடுமே.. மதிப்பெண் தானென்றான்..
தமிழின் தளர்ச்சி தங்கு தடையின்றி....
துவண்ட மனத்துடன் தொலைகாட்சி திருகினேன்..
மண்டிக் கிடந்தது பலமொழி படைப்புக்கள்..
விடாக் கண்டனாய் விடாது தேடினேன்..
கண்டே பிடித்தேன் என்மொழி அலைவரிசை..
ஆடலோடு பாடலும் அழகாய் இருப்பினும்
ஆற்றாமை எழுந்ததே அந்நிய வாசங்கண்டு...!!
ஆரவார இசையும் அரைகுறைத் தமிழும்
ஆயாசம் தந்ததே அமைதியுங் குலைத்ததே..
தமிழின் தளர்ச்சி தடையில்லாமல் எங்குமே..
..
குமுறு நெஞ்சோடு கோயில் சென்றேன் ..
குறை யுந்தான் கொள்ளையாய் கொட்டி தீர்க்க..
ஆராதனைகள் என்னமோ அழகாய் நடந்த தங்கே..
யாருக்கும் புரியா மொழியிலே..அவசர அவசரமாய்...!!!
கல்லூரி வாசம் அதைவிட மோசம்..
கட்டிளம் காளையரும் கண்கவர் கன்னியரும்
தட்டுத் தடுமாறி தமிங்கிலத்தில் உரையாடல்..
இளவட்டக் கூட்டத்தில் இடமும் மாறியே..
"ள"கரமும் "ழ "கரமும் இடர்படும் கொடுமையே...!!!
துவளச் செய்தே நம் தாய்மொழியை
வளர்ந்தோம் நாமே பேர் சொல்லும் பிள்ளையாய்...
வண்ணக் கனவாய் மணமாலை வரும் வேளை ....
வடநாட்டுப் பையன்தான் வருவானே வரனாய்தான்...
வக்கணையாய் கேள்வி யெழும் ....வாயடைத்து போகவைக்கும்
வரப்போகும் பெண்ணுக்கு வருமா..இந்தியும் ஆங்கிலமும் ..!!!
தலை குனியும் தமிழிங்கே..நிலை கண்டே தமிழ்ப் பெண்ணின்..!!!
தமிழனென்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா..
எழுச்சி செய்த தமிழிங்கு ..எழ முடியாது தவிக்குதடா....
தமிங் கிலமிங்கே தமிழன் மொழியாச்சே..
ஆங்கிலங் கலக்கா பேச்சு.. பாங்கில்லாமல் போச்சே..
மங்கிப் போச்சே தங்கத் தமிழுந்தான்..
தமிழ்ப் பேச்சும் எழுத்தும் நடையும்
மூச்சாய் நினைத்த காலம் போய்..
முகவரி தேடி அலையுதே இங்கு..
முத்தமிழாய் தேனாய் தித்தித்த நம்மொழி..
ஆணையும் போட்டதே ஆளும் அரசுமிங்கே..
ஆவணம் யாவுமே ஆக்கணும் தமிழிளென்றே..
இடணுங் கையொப்பம் இன்பத் தமிழிளென்றே..
கெட்டதுபோ என்றே..கொந்தளிப்பு..கொடிதூக்கல்..
ஒரு பக்கம்..
சிலைத் திறப்பு நடக்குமிங்கே..தமிழ்ச் சிற்பிகள் புகழ் பாடி..
மறு பக்கம்..
சிதையில் தள்ளுவோமே...சீந்தாமல் செந்தமிழை..!!!
இயலும் இசையும் நாடகமும் சேர்ந்து
இன்பமாய் சொன்ன இன்னமுத மொழி..
ஆயிரங் கலைகள் அறிவியல் நுட்பங்கள்
ஆயிரம் இருந்தும் ஆல்போல வளர்ந்தும்
அவையெல்லாம் இல்லையே....அன்னைத் தமிழினிலே..
வாய்க்கு வாய் தமிழென்றே வீர முழக்கமிங்கே..
வீதியில் இறங்கினாலோ - வேற்றுமொழிக் காரன் போல
வேஷம் போடும் வாழ்க்கையுடன் தமிழ்க்கூட்டம்..
கூடிக் களிப்படைவோம்....தமிழை மூடி மறைத்தே.. ..
வெட்கங் கொண்டோ மையா....திகட்டா தமிழில் பேச..
காக்கைகுந் தன்குஞ்சு பொன் குஞ்சென்றோம்.. ஏனோ..
காக்க மறந்தே தமிழை காலால் மிதித்தோம்..
கலப்பு கண்டிப்பாய் வேண்டுமென்றே ...கலந்தோம்
கல் நெஞ்சராய்..துளி நஞ்சை தமிழமுதிலே..
வளர்ச்சியே என்று வாதாடிய அணியே..
வாழ்வும் தாழ்வும் வாழ்வின் இயல்பாம்..
வளரும் போது களைகள் வளரும்..
வகையாய் பிடுங்கி எறிய மறந்தோம்..
தளர்ந்து ஒடுங்கி தஞ்சம் புகுந்தது..
தமிழும் பிறமொழி நிழற்குடையில்..
கவலை கொண்டே தமிழிங்கு..
சவலைக் குழந்தையாய் தவிக்குதடா..
அடித்தே விரட்டினோம்...ஆங்கிலேய ஆதிக்கத்தை
அடைக்கலம் கொடுத்தோமே ..ஆங்கி லத்திற்கின்கே..
அண்ட வந்தது .. ..ஆட்டங் காண வைத்தது
ரெண்டகம் செய்தே ... ஆட்டி படைக்குதிங்கே...
பன்னீர் தெளித்து பாதம் தொழாவிடினும் ..அவள்
கண்ணீர் துடைக்க நம்கரம் நீளவில்லையே..
கடைசியாய் ஒன்று ...
தட்டிக் கேட்டால் தவறோ என்று
தட்டிக் கொடுத்தோம் தமிழர் பண்பாய்..
குட்டக் குட்ட குனிந்ததனால்.. -அடி
மட்ட நிலை அடைந்த தமிழ்
எட்டா உயரம் எட்டும் வேளை..
எட்டி உதைத்தோம்
எக்கேடு கெட்டுப்போ என்றே..
..
வளர்ச்சிப் பாடிய அணிக்கு சொல்வேன்..
அரிபுத்தராச்சு இந்தியில் இங்கே ஹாரிப்பாட்டருமே..
அறியாமல் கூட நம்மொழிக் கலப்பில்லை வேறெங்குமே..
அறிந்தே செய்தோம் பெரும் பிழைகளுமே..
ஆயுள் தண்டனை யளித்தோம் தமிழுக்குமே
தரணியெங்கும் பரணி பாடிய தமிழிங்கே
திராணி இன்றி தவிப்பது ஏன்?..
வாசம் வீசும் மாற்றான் தோட்டத்து மல்லியிதை
வீசி எறியாமல் விட்டதனால்....
மாண்டு போனது செந்தமிழிங்கே..
மருகி குறுகி மறையுந் தமிழுக்கு..
மறுவாழ்வு மலருமா..மறுபடியும்..!!!
அன்புடன்
அகிலா ராமசாமி
2011/11/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
- Show quoted text -
சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en
கவிதைப் பட்டி மண்டபம் - 4
24, நவம்பர் 2011
அநிதம் என்ற வலைத்தளத்தால் --நம்
. . அன்னை மொழியை ஏத்துகவி
அநித உணர்ச்சிக் காளாகி -- இவ்
. . வரங்கில் எய்தார் மடற்கணைகள்!
“ அந்நிய மொழிகள் பலவற்றை -- தமிழ்
. . அரவ ணைத்து நடந்ததனால்
அழிந்தது நமது மொழியென்று -- நாம்
. . அலற லாமா? தளரலாமா?
காலத்திற் கேற்ற மாறுதல்கள் -- நம்
. . கன்னித் தமிழைக் காத்திடவே!
பாலமாய் அதுவும் நீள்கிறது -- தமிழ்
. . பாம ரருக்கும் பாதையென !
அன்றோ தமிழைக் கலையாக - சங்க
. . ஆன்றோர் பலரும் வளர்த்தனரே!
இன்றோ வளர்ச்சி மொழிக்காக -- அதனால்
. . இல்லை தளர்ச்சி நம் மொழியில் “
என்ற சுகந்தி வாதத்தை - வலுவாய்
. . எதிர்க்க வருவார் கவிஅகிலா
7) அழைப்பு: கவிஞர் அகிலா ராமசாமி : ‘தளர்ச்சி அணி’
தகிக்கும் சென்னை நகரன்று;
. . தட்ப டெராடூன் மலையின்று;
தகுதிப் பட்டம் வணிகத்தில் ;
. . தணியா இட்டம் வண்டமிழில்;
அகிலா! பட்டி மன்றிலெதிர்
. . அணியைத் தாக்கும் இடிமின்னல்
முகிலாய் மாறிக் கவிமாரி
. . முனைந்து மடலில் பெய்திடுக!
2011/11/23 Suganthi Venkatesh <vkn...@gmail.com>
வளர்ச்சி என்று சொல்ல வந்தேன்
வளர்ப்போர் பாதம் பணிந்து நின்றேன்
சந்தவசந்தக் குழுவினருக்கு முதல் வணக்கம்
கணனிதமிழ் தந்த தமிழாவிற்கு வணக்கம்
துளித் தமிழ்போதும் அவள் வளர
நம் விரல் தட்டும் ஒவ்வோரு தமிழ் தாளங்களும்
தமிழுக்காக என்று சொல்லி
உங்கள் பொறுமைக்கு நன்றி கூறுகிறேன்.
===
களையெடுத்து தளர்வில்லாக் கனித்தமிழை வாழவைக்கும்
இளைஞர்தான் எதிர்காலம் ஏற்றிவைப்பர் தமிழொளியை
தளர்ச்சிநிலை பலவிதமாய்த் தமிழுக்கு உள்ளதென்று
விளக்குகின்ற அகிலாவின் மேன்மைகவி வாழ்த்திடுவேன்!
அன்புடன்,
தங்கமணி.
On Nov 26, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அகிலாவின் கவிதையை மீண்டும் இங்கு இடுகிறேன்.
> பசுபதி...
>
> 2011/11/24 akila ramasami <akilacsr2...@gmail.com>
> read more »
அன்புடன்,
தங்கமணி.
On Nov 26, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அகிலாவின் கவிதையை மீண்டும் இங்கு இடுகிறேன்.
> பசுபதி...
>
> 2011/11/24 akila ramasami <akilacsr2...@gmail.com>
>
> read more »
2011/11/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
7) அழைப்பு: கவிஞர் அகிலா ராமசாமி : ‘தளர்ச்சி அணி’
தகிக்கும் சென்னை நகரன்று;
. . தட்ப டெராடூன் மலையின்று;
தகுதிப் பட்டம் வணிகத்தில் ;
. . தணியா இட்டம் வண்டமிழில்;
அகிலா! பட்டி மன்றிலெதிர்
. . அணியைத் தாக்கும் இடிமின்னல்
முகிலாய் மாறிக் கவிமாரி
. . முனைந்து மடலில் பெய்திடுக!
===
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
தங்கு தடையிலாச் சந்த நயத்துடன் தன்கருத்தைப்
பொங்கு தமிழினைப் போற்றும் புதுவையின் பாவலர்தன்
பங்கு பரிசெனப் பாட்டை அரங்கினில் பாடிநின்றார்!
எங்கும் வளர்ச்சியாம்! ஏதும் தளர்ச்சியாய் இல்லையென்றே!
பாரதி என்றொரு பாவலன் வந்தது பாக்கியமே!
ஆரிய தாய்க்கவி ஆயிரம் ஆக்கிடும் ஆற்றலினால்
பாரதம் முற்றிலும் பாரதி பாடிடப் பார்த்திருப்போம்!
தேரிய வன்அவன் சேர்த்த வறுமை செயித்ததுவே!
கண்ணியம் இல்லை மொழியின் கலப்படக் காதலினால்!
புண்கள் பெருகிப் புரையாய்ப் புகழது பொய்த்துவிடும்!
எண்ணிட வேண்டும் இதைநாம்! இயம்பிடின் ஏதுமிலை!
திண்ணிய நெஞ்சம் தெளிவின் வழியினைத் தேடிடுமே!
ஆப்பிள் கதையை அரங்கில் இராசனும் ஆதரித்தார்!
கோப்பில் நுழையாத் தமிழின் நிலைநகர் கோட்டையிலே!
சோப்பின் நுரையிலும் சேராத் தமிழினும் தூய்மையிலை!
பார்ப்போம் அவர்சொலும் பாதை! இனிதான் பலிக்கட்டுமே!
தமிழதன் மரணம் பற்றி
.. சாற்றினார் அவையில் யாரோ?
அமையுமிந் நாள்கள் நன்றா?
.. அதன்வழி குறைகள் உண்டா?
சுமைகளைக் குறைக்க வேண்டி
.. சொல்லிய வழிகள் அன்றோ?
இமையினை திறந்தும் பாரா(து)
.. எழுதினார் என்றே கொள்வம்!
வணிகராய் இங்கு வந்து
.. வறுத்திய வெள்ளை யர்தம்
துணிகரத் திருட்டு, செய்த
.. தொல்லைகள், பழிகள் யாவும்
அணிதமிழ் ஒன்றைக் கொண்டே
.. அழித்ததாய்ச் சுகந்தி சொன்னார்!
கணினியைக் கவரும் பூச்சி
.. கட்டளை குலைத்தல் போன்றா?
ஸ்கூபிடூ தமிழின் பேச்சே
.. தொல்தமிழ் வளர்ச்சி யாமோ?
யாவிலும் தமிழே வேண்டும்
.. யானதே வளர்ச்சி என்பேன்!
சாவியை கையில் வைத்துச்
.. சாளரம் பார்த்து நின்றால்
ஆவியா கதவின் தாழ்ப்பாள்
.. அடைப்பினைத் திறந்து நிற்கும்?
தமிழதே மதங்கள் எல்லாம்
.. தழைத்திடும் வழியாய்ச் சொன்னார்!
தமிழது முறையாய்ப் போகின்
.. தழைக்குநம் மதங்கள் என்னும்
எமதுரை அவரே சொன்னார்!
.. ஏதினி கூறு தற்காய்?
அமைந்துள போக்கில் காணும்
.. அனைத்தையும் நோக்கின் நன்றே!
என் கருத்துகள்:
1)
தமிழிங்கே வாணிகத்தில் தழைத்தல் வேண்டும்!
.. தாரிணியெலாம் அதையணியாய்த் தரித்தல் வேண்டும்!
அமைகின்ற நாளினிமேல் அகிலம் யாவும்
.. அறிகின்ற மொழியாக ஆக்கல் வேண்டும்!
2)
பேச்சதிலே தமிழிங்குப் பிழைத்தல் வேண்டும்!
.. பிழையிலாத தமிழ்பேசும் பிள்ளை வேண்டும்!
பூச்சிலாத தமிழ்நாவில் புலர்தல் வேண்டும்!
.. பூக்கின்ற எண்ணங்கள் தமிழில் வேண்டும்!
3)
அரசியலில் வீழாத அறிஞர் சேர்ந்தே
.. அணிதமிழைக் காக்குநிலை அமைதல் வேண்டும்!
விரவிவரும் வேற்றுமையின் வேரை எல்லாம்
.. வெட்டுகின்ற வாளேந்தும் வீரர் வேண்டும்!
4)
மேற்படிப்பாம் விஞ்ஞான மேன்மை நூல்கள்
.. மென்மேலும் தமிழ்மொழியில் பெருக வேண்டும்!
நூற்படிப்பில் தேவையான ஞானம் எல்லாம்
.. நூதனமாய்த் தமிழாக்கித் தருதல் வேண்டும்!
5)
கவிதைதினம் கால்பதிக்கும் காலம் வேண்டும்!
.. கால்பதிக்கும் இடமெல்லாம் தமிழே வேண்டும்!
புவியதனில் கவிச்சுவையின் புதுமை தேடி
.. புறப்படுவோர் தமிழ்மண்ணில் புழங்க வேண்டும்!
இவையாவும் உண்மையென ஆகும் நாளே
.. இவ்வுலகில் தமிழ்வாழும் இன்ப நாளாம்!
சுவையாவும் சுகிக்கின்ற சூழல் மண்ணில்
.. தோன்றுமந்த நாள்வரையில் தளர்ச்சி என்பேன்!
தந்தனர் மூவர் இதுவரையில். தளர்ச்சிப் பாடல் மூவடிகள் !சந்திரர் தருவார் ஈற்றடியை !. . சரியாய் முடிப்பார் வாதத்தை!8) அழைப்பு: கவிஞர் சந்தர்: வாதத் தொகுப்புபார்த்தோம் தளர்ச்சி அணிவாதம்;சேர்த்து, கழித்துத் தொகுத்துப்பின்கூர்த்த அறிவுக் கவிசந்தர்
வார்த்தை மாலை வழங்கிடுவார்!