தமிழ்நாட்டு பிராமி கல்வெட்டுகள்

955 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 20, 2011, 2:30:38 PM6/20/11
to sseshadri69
தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் என இம் முப்பது இடங்களில் காணப்படுகின்றன.

ஆனைமலை கல்வெட்டில் 'அரட்ட' என்ற சொல்லில் ' ட்' என்ற மெய எழுத்துக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரச்சலூர்க் கல்வெட்டில் எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் எகரக் குறிலுக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

                                                                                             அழகர்மலை

மதுரைக்கு வடக்கே வைணவர் திருத்தலமான அழகர்கோவில் உள்ளது. அழகர் கோவலின் கோட்டையை வெளியே கிழக்காக மேலூர் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தரராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத்தொடர் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் அதனில் ஒரு சுனையும் உள்ளன. இக்குகைத் தளத்தில் செதுக்கப்பட்டுள்ள கற்படுகை ஒன்றிலும் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ் பிராமி கலவெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு 12:1

குகைத்தள முகப்புப் பாறையின் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் கீழாக இக் கல்வெட்டு உள்ளது.
மதிரை பொன் கொல்வன் அதன் அதன்

மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன் அதன் என்பானுடைய பெயர் குறிப்பிடப்படுகிறது.
இதில் உள்ள அதன் அதன் என்பது ஆதன் ஆதன் என வரவேண்டும் என்பது பேரா. இரா.  மதிவாணன் கருத்து.

கலவெட்டு 12:2

முதற் கல்வெட்டின் அருகே உள்ளது. முன்னும் பின்னும் எழுத்துகள் சிதைவுற்றுள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டினது.
 
- - - அனாகன் த - - -
சிந்து முத்திரைகளில் அனகன் என்ற பெயருள்ளது. எனவே இதைப் பொறித்தவர் எழுத்துப் பிழை செய்துள்ளார்.

கல்வெட்டு 12:3

இரண்டாம் கல்வெட்டை அடுத்து நெற்றிப் பாறையில் இக்கல்வெட்டு நீண்ட வரியாக வெட்டப்பட்டு உள்ளது.

மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்

உபு  என்பதில் ப் என்ற ஒற்றெழுத்து விடுபட்டுள்ளது. சிந்து முத்திரையிலும் இவ்வாறு மெய் எழுத்து ஒற்று எழுதப்படுவதில்லை. மத்திரை என்பது மதுரையைக் குறித்தது, இதாவது மதுரையைச் சேர்ந்த வியக்கன் கணதிகன் என ஆள் பெயர்கள் குறிக்கப்படுகின்றது.

கல்வெட்டு 12:4

மேல் உள்ள கல்வெட்டினைத் தொடர்ந்து அதே போல் நீண்ட வரியில் இக்கல்வெட்டு உள்ளது.

கணக அதன் மகன் அதன் அதன்

இங்கு ஆதன் என்பது பிழையாக அதன் என எழுதப்பட்டு உள்ளது. மேற் சொன்ன பெயருக்கு உரியோர் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திட பஙகளித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 கல்வெட்டு 12:5

முன் கல்வெட்டு உள்ள  நீண்ட வரியில் நான்காம் பகுதியாக இக் கல்வெட்டு உள்ளது. பெண் துறவியர் பெயர்கள் இடம் பெறுகின்றன.

சபமிதா  இன பமித்தி


சப்மிதா வில் தகர மெய் சேர்த்து சபமித்தா என படிக்க வேண்டும் என்பது அறிஞர் கருத்து.

கல்வெட்டு 12:6

முன்உள்ள கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இக்கல்வெட்டு 5 ஆம் வரிசையில் உள்ளது.

பாணித வாணிகன் நெடுமலன்

பாணிதம் என்பது கற்பூரத்தையோ அல்லது சக்கரைப் பாகினையோ குறித்ததாகலாம் என்பது அறிஞர் கருத்து. நெடுமலன் என்பதில் மகர மெய் சேர்த்து நெடுமல்லன் எனவும் படிக்கலாம்.

கல்வெட்டு 12:7


இக்கல்வெட்டு 6 ஆவதாக  உள்ளது.


கொழு வணிகன் எள சந்தன்


ஏர்கலப்பையின்  கூர் பகுதியான கொழுவை விற்பவன் எள சந்தன் என பொருள் படும். எள என்பது இள எனபதன் திரிபு.

கல்வெட்டு 12:8

முகப்புப் புருவ நீர்வடி விளிம்பின் கீழ் ஏழாவதாக உள்ளது. கல்வட்டின் தொடக்கப் பகுதி சிதைந்துள்ளது.

(ஞ்)சி கழுமாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்

கழுமாற என்பது கடுமாறன் என ஒரு பாண்டிய இளவரசனை சுட்டுவதாகலாம். நதன் தகர மெய் சேர்த்து நத்தன் என படிக்கலாம். தாரணி நீர்வடி விளிம்பை சுனையைக் குறிப்பதாகும்.

கலவெட்டு 12:9

இக்கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இறுதியது.


தன்ம(ன்) கஸபன் அவ்(விரு) அ அர்உம் குடுபிதோ

தன்மண், கஸபன் என மேலும் இருவர் கொடை அளித்தனர் என பொருள்படும். இருவரும் என்பது எவ்வளவு தவாறாக பொறிக்கப்பட்டுள்ளது.


கல்வெட்டு 12:10


12:3 கல்வெட்டின் கீழ் இக் கல்வெட்டு ப் பொறிப்பு உள்ளது.


வெண்ப(ளி) இ அறுவை வணிகன் எளஅ அடன்


வெண்பள்ளி என்ற ஊரச் சேர்ந்த துணி (அறுவை) வணிகன்  என்பது இதன் பொருள். இளய > இளைய என்பது எளஅ என தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அடன் டகர மெய் சேர்த்து அட்டன் என்று படிக்க வேண்டும். இப் பெயர் சிந்து முத்திரைகளிலும் இடம் பெறுகிறது.

கல்வெட்டு 12:11

12:10 கல்வெட்டிற்கு அடுத்ததாக உள்ளது

தியன் சந்தன்

யகர மெய் இட்டு திய்யன் என படிக்கவேண்டும். திய்யன் சந்தன் என்பதே சரி. இந்த ஒற்று எழுத்துகளை எழுதாமல் விட்டதனாலேயே தமிழ் பிராமி எழுத்துகளில் புள்ளியிட்டு எழுதுவதற்கான வாய்ப்பு அருகிப் போனது.

கல்வெட்டு 12:12


குகைத் தளத்தின் உள்ளே ஒரு கற்படுகையின் தலைமாட்டில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.


கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்

நதன் நத்தன் என ஒற்றெழுத்து சேர்த்து படிக்கவேண்டும்.  ' அம ' என்பதை அமை என்று கொள்ளலாம் என அறிஞர் சொல்கின்றனர். அமைகல்.

தொடரும்

 

 
 



seshadri sridharan

unread,
Jun 21, 2011, 4:18:04 AM6/21/11
to mintamil
   சிந்துவெளிக் காலம் முதல் சங்க காலம் வரையில் மக்கள் புள்ளி இடும் ஒற்றெழுத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்ததனாலேயே பிராமி கல்வெட்டுகளிலும், பானைஓடுகளிலும் புள்ளி இட்ட எழுத்துகளை காண முடிவதில்லை. இதை எண்ணிப்பாராமல் ஐ.மகாதேவன் போன்றோர் தமிழில் மெய் எழுத்துகள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவிலேயே எழுதப்படத் தொடங்கியதாக முடிபு கட்டிவிட்டனர். இதனால் புள்ளி பற்றி குறிப்பிடும் தொல் காப்பியம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினது அல்லது 7 ஆம் நூற்றாண்டினது என மனம்போன போக்கில் கருத்துரைக்கின்றனர். வேடிக்கை என்ன என்றால் தொல் காப்பியத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள சில குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் 2,000 ஆண்டுகள் பழமையது என்பதை இவர்கள் ஏற்பது தான். மக்கள் ஓலைகளில் துளைப்படுத்தி மெய் எழுத்துகளை எழுதினால் ஓலை கிழிந்துவிடும் என்பதற்காக ஈற்றாகவும் இடையிலும் வரும் மெய் எழுத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்துள்ளனர் அதையே கல்வெட்டுகளிலும் காசுளிலும் கைக்கொண்டனர் என்பதே ஏற்கதக்கது.

மாங்குளம்

மதுரைக்கு வடக்கில் மேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கு நோக்கிச் சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டி மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக  'ஓவாமலை'  என்றும் 'கழுகுமலை' என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு 1:1

மாங்குளம் மலை மீதினில் சென்றதும் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழ் உள்ளன. முதற்கல்வெட்டு ஒரே வரியில் உள்ளது.


கணிய் நந்த அஸிரிய்ஈ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்த
அ பளிஇய்

கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவனுக்கு தருமமாய் நெடுஞ்செழியன் அலுவலனான கடலன் வழுதி என்பான் இப்பள்ளியை உருவாக்கித் தந்தனன் என்பது இதன் பொருள். பணஅன் என்பதற்கு அரசனின் அலுவலன் எனபது பொருள்.
இக்கல்வெட்டுப் பொறிப்பில் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அத்துடன் அன் ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்து காட்டப்பட்டுள்ளது.
சிந்து முத்திரைகளிலும் அன் ஈறு தனிப்பட காட்டப்பட்டு உள்ளது.

கல்வெட்டு 1:2

முதற் கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கலவெட்டு உள்ளது.

கணிய் நத்திய் கொடிய்அவன்
டகர மெய் சேர்த்து கொட்டியவன் என படிக்க வேண்டும். மேற் சொன்ன கல்வெட்டை  கணி நந்தி கொட்டினான் என்பது பொருள்.

கலவெட்டு 1:3

முன் இரண்டு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள  குகையின் வெளிப்பாறைச் சுவரில் வரே வரியில்பொறிக்கப்பட்டுள்ளது.

கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

கணி நந்தஸிரியனுக்கு தர்ம்மாக் பள்ளி  அமைத்துக் கொடுத்தவன் நெடுஞ்சழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன் என்பது இதன் பொருள். சடிகன் சேய் என்பது போல் சேய் சிந்து முத்திரைகளிலும்  காணப்படுகின்றது..

கல்வெட்டு 1:4

மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் நீண்ட ஒரு வரிக் கல்வெடடு இது.

கணிஇ நதஸிரிய் குவ(ன்) -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய்
காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்
வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிகன் அந்தையின் மகன்அஸிதன் என்பவன் கணி நந்தஸிரிக்குவனுக்கு அமைத்துக் கொடுத்த உறைவிடம் என பொருள்.தகர மெய் ர்த்து கழிதிக்க என படிக்கவேண்டும்



K R A Narasiah

unread,
Jun 21, 2011, 11:53:56 AM6/21/11
to mint...@googlegroups.com
நானும் ஐராவதமும் மாமண்டூர் கல்வெட்டைக் காண்பதன் படம் சேர்த்துள்ளேன்
நரசய்யா

2011/6/21 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

from camera 218.jpg

seshadri sridharan

unread,
Jun 21, 2011, 8:08:46 AM6/21/11
to mintamil
ககர மெய் என்பதை தகர மெய் என தவறாக் குறித்து விட்டேன். ககர மெய் சேர்த்தால் கழிதிக்க என்றாகும். தெலுங்கில் திக்கண்ணா என்றொரு புலவர் உண்டு.

கல்வெட்டு 1:5

நான்காவது கல்வெட்டு உள்ள குகைத்தளத்திற்கு தெற்கே இரு சிறிய கல்வெட்டுகள் உள்ளன. அதில் முதலாவது

சந்தரிதன் கொடுபிதோன்
சந்தரிதன் இவ் வதிவிடம் அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். டகர மெய் சேர்த்து கொட்டுபிதோன் என படிக்க வேண்டும். இதற்கு செதுக்கி அமைத்தவன் என பொருள் கொள்ளவேண்டும்

கல்வெட்டு 1:6

 1:5 அமைந்த குகைத் தளத்திலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது.

வெள்அறை திகமதோர் கொடிஓர்

வெள்ளறை என்ற ஊரின் வணிகக் குழுவினர் (நிகமத்தோர்) இக்குகைத் தளத்தை அமைத்துக் கொடுத்தனர் என்பது பொருள். நிகமதோரில் தகர மெய் சேர்க்க வேண்டும், டகர மெய் சேர்த்து கொட்டியோர் என்று படிக்க வேணடும்.

மேற்சொன்ன கலவெட்டுகளில் உள்ள எழுத்துப் பிழைகளை நோக்க சங்கம் வளர்த்த மதுரையில் இவ்வாறான பிழைகள் தோன்றுவது வழக்கத்திற்கு மாறானது. எனவே இக் கல்வெட்டுகளை தமிழ் இலக்கண அறிவு அற்ற கருநாடக சமண முனிவர்களே பொறித்துள்ளனர் எனக் கொள்வதே தக்கது. அக்கால் கருநாடகத்தில் வழங்கிய பேச்சுத் தமிழ் அல்லது வட்டாரத் தமிழ் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு சான்றாக  தமிழின் நான்காம் வேற்றுமையான "கு"  வருவதற்கு மாறாக "கே"  பயன்படுத்தப்பட்டு உள்ளது. காட்டாக , குவ்வனுக்கு என்பதை குவ்வன்கே என 1:1 ல் பொறித்துள்ளனர். இன்றும் கன்னடத்தில் நாலாம் வேற்றுமை "கே"  என்றே வழங்குகிறது.


அரிட்டாபட்டி
மதுரையில் இருந்து 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை  விட்டு சற்று விலகி அரிட்டாபட்டி உள்ளது. அவ் ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் சமண முனிவர்களுக்கான கற்படுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகை நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது. அதன் கீழ் ஒன்றும் மேல் ஒன்றும் என இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

கல்வெட்டு 2:1

நீர்வடி விளிம்பின் கீழ் முதல் கல்வெட்டு உள்ளது. 1971 ல் இது கண்டு அறியப்பட்டது.

நெல்வெளிஈய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன்

நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் (அத்தி + இன்னன்) வெளியன் என்பான் இக்குகைத் தளத்தை அமைத்துக் கொடுத்தான் எனப் பொருள் பகர மெய் ஒற்று சேர்த்து கொட்டுபிதோன் எனப்  படிக்க வேண்டும்.
இக்கல்வெட்டிலும் ஒற்றேழுத்துகள் தவிர்க்கப்பட்டு உள்ளன.

கல்வெட்டு 2:2


நீர்வடி விளிம்பின் மேல் இக்கல்வெட்டு ஒரே வரியில் காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்தும் உள்ளது.


இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் ஈவ்முழ உகைய் கொடுபிதோன்

இலஞ்சி என்னும் ஊரன் எளம் பேரா அதன் மகன் எமயவன் > இளம் பேர் ஆதன் மகன் இமயவன் இக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்தான் என்பது பொருள். ப் ஒற்று இட்டு கொட்டுபிதோன் என படிக்க வேண்டும். முதற் கல்வெட்டினும் இது முற்பட்டதாகலாம். நெல்வேலி இலஞ்சி ஆகிய ஊர்கள் தென் பாண்டி நாட்டில் உள்ளபடியால்  அப்பகுதியின்  பாண்டிய மரபினர் இம்முழாகையை அமைத்துக் கொடுத்தனர் என கொள்கின்றனர் அறிஞர்.

தொடரும்



 




K R A Narasiah

unread,
Jun 22, 2011, 12:12:46 PM6/22/11
to mint...@googlegroups.com
இருக்கிறது
3வது நூற்றாண்டைச் சேர்ந்த்து.
எழுதியிருப்பது:
1. கணிமான்
2. தேனூர் தந்த கோன் குன்று  ஆசி
3. செயிதான் தசன் சிறு
4. . . . .வன்
நான்கு வரிகள் தாம் உள்ளன. பொருள்: கணிமான் குன்றில் தேனூரைக் கொண்டவன் சிறுவன் (தச்சன் ) செய்த. .
(பெரியவர் ஐராவதத்தின் உபயம்)
நரசய்யா

2011/6/22 seshadri sridharan <ssesh...@gmail.com>
ஐயா மாமண்டூரில் ஏதேனும் பிராமி கல்வெட்டு இருந்தால் செய்தி தர வேண்டுகிறேன்.
 
சேசாத்திரி

2011/6/21 K R A Narasiah <naras...@gmail.com>

seshadri sridharan

unread,
Jun 22, 2011, 3:49:35 AM6/22/11
to mint...@googlegroups.com
ஐயா மாமண்டூரில் ஏதேனும் பிராமி கல்வெட்டு இருந்தால் செய்தி தர வேண்டுகிறேன்.
 
சேசாத்திரி

2011/6/21 K R A Narasiah <naras...@gmail.com>
நானும் ஐராவதமும் மாமண்டூர் கல்வெட்டைக் காண்பதன் படம் சேர்த்துள்ளேன்

seshadri sridharan

unread,
Jun 22, 2011, 12:17:45 PM6/22/11
to mint...@googlegroups.com
ஐயா,
இக் கல்வெட்டு உள்ள ஊர் எங்கு அமைந்துள்ளது போன்ற விவரங்களையும் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சேசாத்திரி

2011/6/22 K R A Narasiah <naras...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 23, 2011, 3:47:04 AM6/23/11
to mint...@googlegroups.com, sseshadri69
நல்ல பயனுள்ள இழை. நிறைய தகவல்களைத் தொடந்து தொகுத்து வாருங்கள்.
வாழ்த்துக்கள்.

-சுபா

2011/6/20 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

s.bala subramani B+ve

unread,
Jun 23, 2011, 3:51:54 AM6/23/11
to mint...@googlegroups.com
இது வரை

2011/6/21 seshadri sridharan <ssesh...@gmail.com>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

seshadri sridharan

unread,
Jun 23, 2011, 4:24:29 AM6/23/11
to mint...@googlegroups.com
தனியே நான் இட்ட சிந்து எழுத்து வாசிப்பு இழையை நன்றாக, தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டே இந்த இழையைத் தொடங்கினேன் இதில் பச்சை வண்ணத்தில் உள்ள வரிகள் என்னுடைய கருத்துகள். இதற்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் தூறையின் தமிழ்-பிராமி கலவெட்டுகள் என்ற நூலைப் பார்வை ஏடாகக் கொண்டு நானே தட்டச்சு செய்கிறேன்
 
திருவாதவூர்
 
மதுரை மாவட்ட மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட இவ் ஊர் மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ் ஊரின் புறத்தில் உவா மலை என்றொரு குன்றில் உள்ள குகைத் தளப் புருவப் பகுதியில் இரு கல்வெட்டுகள் காணப்படு கின்றன..
 
கல்வெட்டு 3:1
 
 
பாங்காட அர்ஈதன் கொட்டுபிதோன்
 
 
பாங்காடு எனும் ஊரைச் சேர்ந்த அரிதன் என்பான் இக் குகைத் தளத்தைச் செய்து கொடுத்தான் என்பது இதன் பொருள்
இக்கல்வெட்டு ஓரளவிற்கு பிழை நீங்கியதாக உள்ளது. பகரத்திற்கும் ஙகரத்திற்கும் நடுவில் இடைவெளி உண்மையால் அங்கு னகரம் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக அறிஞர் உரைக்கின்றனர். எனவே அது பனங்காடு என்று அமையலாம் என்கின்றனர்.
 
 
கல்வெட்டு 3:2
 
 
உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்
 
 
உவச்சர் என வாத்தியம் வாசிப்போரை குறிக்கும் சொல் உபசன் என இங்கு குறிப்பிடப்பட்டு பரசு என்பவனால் இக் குகைத்தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பது இதன் பொருள். இக்கல்வெடடு பிழையின்றி செப்பமாக உள்ளது.
 
 
 
கீழவளுவு            
 
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மேலூர் - திருப்பத்தூர் சாலையில் மதூரையில் இருந்து 38 கி.மீ தொலைவில் கீழவளவு அமைந்திருக்கிறது. இவ் ஊரின் சற்று முன்பாக இயற்கையான குகைத்தளம் அமைந்த குன்று உள்ளது. பள்ளி எனவும் பஞ்ச பாச்டவர் மலை எனவும் அழைக்கப்படும் குன்றின் நடுவில் உள்ள குகைத்தளம் ஒன்றன் முகப்பு பகுதியில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு அவ விளிம்பின் கீழாக வலம் இடமாக பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது.
 
கல்வெட்டு 4 :1
 
 
உபசஅன் தொண்டில வோன் கொடு பளிஈ
 
 
உபசன் தொண்டி (இல்)ல வோன் கொடுத்த பள்ளி என பொருள் தருகிறது. தொண்டி எனும் ஊரின் உபசன் இளவோன் என்பதே சரி.
 
 
தொடரும்

K R A Narasiah

unread,
Jun 23, 2011, 12:45:21 PM6/23/11
to mint...@googlegroups.com
I have seen these myself. In fact much against the wishes of my family members in spite of tha age I climbed the entire height of Aaanamalai and read the inscription. At Ova malai (thiruvadavur) in spite of the pollution of granite dust(thanks to TN Govt in afew years from now that inscription will disappear) I took 2 hours to reach the location and read the inscription.
Narasiah

2011/6/23 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Jun 23, 2011, 12:15:51 PM6/23/11
to mint...@googlegroups.com
  கொங்கர்புளியங்குளம்
 
    மதுரை மாவட்ட திருமங்கலம்  வட்டத்தில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் அமைந்து உள்ளது. இவ் ஊர் அருகில்  பெருமாள் கோவில்  மலையில் இயற்கையான் குகைத்தளத்தில் 50 க்கும் மேலான்  கற்படுகைகளும் மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.
 
 
கல்வெட்டு 5:1
 
 
குகையின்முகப்பு நெற்றிப் பாறைக்குச் சற்று தள்ளி வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டுகளில் இது முதலாவது.
 
 
குற கொடுபிதவன்  உபசஅன் உபறுவ(ன்)
 
 
உபறுவன் என்னும் பெயருடைய   உபசனால் இக் குகைத்தளம் அமைத்துத் தரப்பட்டது என்பதே இதன் பொருள்.
டகர மெய் சேர்த்து கொட்டுபிதவன் என படிக்கவேண்டும்.
 
 
கல்வெட்டு 5:2
 
 
இக்கல்வெட்டு மூன்று கல்வெட்டுகளுள் நடுவே உள்ளது.
 
 
குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன் ஓன்
 
 
குகைத்தளத்தை குடைவிப்பதற்கு பொன் ஈந்தவன் செற்அதன் என்பது இதன் பொருள். சேர்ஆதன் என்பது செற்அதன் என குறில் எழுத்துகளில் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது. இப்பெயர் எதியோபிய ம்ன்னன் ஒருவனின் பெயராகவும் உள்ளது.
 
 
கல்வெட்டு 5:3
 
 
இது இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு
 
 
பாகன் ஊர் பே(ரா)தன் பிடன் ஈத்த வெபொன்
 
 
பாகனூரைச் சேர்ந்த பேராதன் பிட்டன் என்பவனால் குகைத் தளம் அமைக்க பொன் வழங்கப்பட்ட சேதியைக் குறிக்கிறது.
பேராதனில் உள்ள ரகர நெடில் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது. டகர மெய் சேர்த்து பிட்டன் என படிக்க வேண்டும்.
 
 
மறுகால்தலை
 
 
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்ஏரி என்ற ஊரின் அருகில் மறுகால்தலை உள்ளது. இவ் ஊரின் பூவிலுடையார் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் இயற்கையான குகைத்தளம் ஒன்று சமணத் துறவியர் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டு  உள்ளது.
 
 
கல்வெட்டு 6:1
 
 
குகைத்தளப் பாறையின் நெற்றிப் பகுதியில் ஒருவரியில் பெரிய எழுத்துகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
 
 
வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்
 
 
வெணகாசிபன் என்பவன் கட்டடம் ஒன்றை குகைத்தளத்தில் அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். டகர மெய் சேர்த்து கொட்டுபித என படிக்கவேண்டும். பிழை இல்லாத கல்வெட்டு.
 
 
வரிச்சியூர்
 
 
மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர்  உள்ளது. இங்குள்ள உதயகிரி எனப்படும் சுப்பிரமணிய மலையில்  மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும்,  கிழக்கு நோக்கி உள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்ட நீர்வடி  விளிம்பின் மேலும் கீழும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன.
 
 
கல்வெட்டு 7:1
 
 
இது வடக்கு நோக்கிய சிறுகுகையின் நெற்றிப் பாறை முகப்பில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
ப(ளி)ய் கொடுபி - - - --
 
 
இப் பள்ளியை ஈந்தவர் பெயர் குறிக்கப்பட்டாலும்  அது சிதைந்து போனதால் கொடையாளியின் பெயர் தெரிந்திலது.
 
 
கல்வெட்டு 7:2
 
 
இது கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறை நீர்வடி விளிம்பின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.
 
 
அடா- - - றை ஈதா வைக - - - ஒன்  நூறு கலநெல் -- - -
 
 
இக் குகைத்தளம் அமைக்க ஒரு நூறு  கலம் நெல் வழங்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. கொடை வழங்கினவர் பெயர் சிதைந்து உள்ளது. 
 
 
கல்வெட்டு 7 : 3
 
 
 
இக் கல்வெட்டு கிழக்கு நோக்கிய குகையின் நெற்றிப் பாறை நீர்வடி விளிம்பின் கீழ்ப் பகுதியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
இளநதன் கருஈய நல் முழஉகை
 
 
சிறந்த இக்  குகையைக் குடைந்து ஈந்தவன் இளநதன் என்பான் என்பது இதன் பொருள். தகர மெய் சேர்த்து இளநத்தன் எனப் படிக்க வேண்டும். 

கி.காளைராசன்

unread,
Jun 24, 2011, 6:27:42 AM6/24/11
to mint...@googlegroups.com
ஐயா ​சேசாத்திரி ஸ்ரீதரன் அவர்களுக்கு வணக்கம் பல.

தங்களது இப்பணி, பணியில் சிறந்த பணி.
கல்​வெட்டுகள் ​ ​சொல்லும் க​தை​யைத் ​தொகுத்து வழங்கி வருகின்றீர்கள்,
வாழ்த்துகள்.


Inscript temple6.JPG

திருப்பூவணம் திருக்​கோயிலில் உழவாரப் பணியின் ​போது கண்டுபிடிக்கப்பட்ட பழ​மையான கல்​வெட்டு.

இ​தைப் படித்துக் கூறுமாறு அன்புடன் ​​வேண்டுகி​றேன்.

அன்பன்
கி.கா​ளைராசன்
Inscript temple6.JPG

கி.காளைராசன்

unread,
Jun 24, 2011, 6:30:35 AM6/24/11
to mint...@googlegroups.com
ஐயா, வணக்கம்.

இ​ணைப்பில் உள்ள ​கோப்பில்  மற்​றொரு கல்​வெட்டின் படத்​தை இணைத்துள்​ளேன்.
அ​தையும் பார்த்து படித்துக் கூறி உதவிடுமாறு அன்புடன்​ ​வேண்டுகி​றேன்.
TVN inscriptions.doc

seshadri sridharan

unread,
Jul 6, 2011, 4:27:04 AM7/6/11
to mint...@googlegroups.com


2011/6/23 seshadri sridharan <ssesh...@gmail.com>
 
 
 
தொடரும்
 
 
விக்கிரமங்கலம்
  
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. செக்கானூரணி வழியாக விக்கிரமங்கலம் செல்லும் மதுரை நகர் பேருந்துகள் இக் குன்றின் வழியே செல்கின்றன. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
 
கல்வெட்டு 8:1
 
ஒரு சிறு தனிப்பாறையின் கீழ் அமைந்த சின்னஞ்சிறு குகைத் தளத்தின் விதானத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
 
எஈய்ல் அர்ஈய்தன் சேவித்ஒன்
 
எய்யில் என்ற ஊரைச் சேர்நத அரிய்தன் என்பவனால் செய்விக்கப்  பட்டது   என்பதே இதன் பொருள்.  எய்யிலில் இகர குறிலுக்கு நெடில் பொறிக்கப்பட்டு உள்ளது.  அரிதன் இப் பெயர்  எதியோபியா, ஈலம் நாகரிக மன்னர் பெயர்களில் இடம் பெற்று உள்ளது. செய்வித்தோன் என்பதில் குறில் - நெடில்கள் பிழையாகப்  பொறிக்கப்பட்டு உள்ளன.
 
கல்வெட்டு 8:2
 
இரண்டாம் கல்வெட்டு இங்குள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றியில் வெட்டப்பட்டு உள்ளது.
 
எம்ஊர் சிழிவன் அதன்தியன்
 
எம்மூரினது சிழிவன் ஆதன் திய்யனால் இக்கொடை நல்கப்பட்டது என்பதே இதன் பொருள். நெடிலுக்குக் குறிலைத் தவறாப் பொறித்து ஆதன் அதன் எனப்பட்டுள்ளது. தியன்- யகர ஒற்று சேர்த்து திய்யன் என படிக்க வேண்டும்..
 
கல்வெட்டு 8:3 
 
இக்கல்வெட்டு பெரிய குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.
 
அந்தைய் பிகன் மகன் வெந்அதன்
 
அந்தைப் பிக்கன் மகன் வெண்  ஆதன் என்பானால் கொடையாக நல்கப் பட்டது என்பதைக் குறிக்கிறது. அந்தை - ஆந்தையாகவும் படிக்கலாம், பிக்கன் - க் என்ற ஒற்றெழுத்து சேர்க்க வேண்டும். வெண் -  தந்நகர ந பொறிக்கப்பட்டு உள்ளது. ஆதன் - அதன் என பொறிக்கப்பட்டுள்ளது.   
 
கல்வெட்டு 8:4
 
வேறு ஒரு கற்படுக்கையின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.
 
பேதலை குவிரன்
 
பேத்தலை எனும் ஊரைச் சேர்ந்த குவிரன் இப்படுக்கை அமைத்தார் என்பது இதன் பொருள். பேரா. க.. இராசனின் கொடுமணல் ஆய்வில் கூவிர் ஆதன் என மட்கலனில் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.. எனவே குறில் நெடில் பிழை இருக்கலாம்.  பேத்தலைதில் பகர ஒற்று  சேர்க்க வேண்டும்.
 
கல்வெட்டு 8:5
 
மற்றொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
 
செங்குவிரன்
 
செங்குவிரன் என்பான் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.
 
கல்வெட்டு 8:6
 
மற்றொரு கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
கு (வி)ரதன்
 
குவிரன் என்பவரால் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது 

karuannam annam

unread,
Jul 6, 2011, 1:38:17 PM7/6/11
to mint...@googlegroups.com
ஆதன் என்ற பெயர் அதிகமாகக் காணப்படுகிறதே. ஆதன் என்பது பெயரா அல்லது எதாவது பட்டம் அல்லது இனம் போன்றதா?

சொ.வினைதீர்த்தான்.

2011/7/6 kalpanasekkizhar92 <kalpanas...@gmail.com>
பயனுள்ள இழை  ஐயா கல்வெட்டுகளில் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஊர்ப்பெயர்கள் இருந்தால் தொகுத்து கூறுங்களேன் .

6 ஜூலை, 2011 1:57 pm அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:



--
அன்புடன்
முனைவர் கல்பனாசேக்கிழார்
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
http://kalpanase.blogspot.com
mail -kalpanas...@gmail.com
அமிழ்தென்று தமிழுண்ணும்
அன்பர் வாழ்கவே!

kalpanasekkizhar92

unread,
Jul 6, 2011, 10:51:37 AM7/6/11
to mint...@googlegroups.com
பயனுள்ள இழை  ஐயா கல்வெட்டுகளில் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஊர்ப்பெயர்கள் இருந்தால் தொகுத்து கூறுங்களேன் .

6 ஜூலை, 2011 1:57 pm அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:



--

seshadri sridharan

unread,
Jul 7, 2011, 5:43:05 AM7/7/11
to mint...@googlegroups.com
ஆதன் சேரர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களும் கொண்ட பெயர்.
சேரர் குடிப் பெயரும் கூட. எனினும் அதன் என்றே தவறாக பொறித்து உள்ளனர்.
இதை பல அறிஞர்கள் குறிக்கத் தவறி உள்ளனர்.

சேசாத்திரி

seshadri sridharan

unread,
Jul 9, 2011, 8:20:49 AM7/9/11
to mint...@googlegroups.com
மேட்டுப்பட்டி
 
மதுரைக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப் பட்டி அமைந்திருக்கின்றது. இவ்வூரின் வைகையாற்றுத் தென் கரையில்   சித்தர் மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படும் மலை உள்ளது. மலை உச்சயில் மகாலிங்க சுவாமி கோவிலுக்குப் போகும்  வழியில் பஞ்சபாண்டவர் குகை எனப்படும் இயற்கையான நீண்ட பெருங் குகைத் தளம் ஒன்று உள்ளது. இதன் நெற்றிப் பாறையில் வெட்டப்பட்ட விளிம்பின் அடியிலும் கற்படுக்கையின் தலைப் பகுதியிலும் என பத்து தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து உசிலம்பட்டிப் பேருந்தில் சென்றால் இக்குன்றின் அடிவாரத்திற்குச் செல்லலாம்.
 
கல்வெட்டு 9:1
 
குகைத்தள முகப்புப்  பாறையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. ஒரு மீட்டர் நீளத்தில் ஐந்து சொற்களைக் கொண்டுள்ளது...
 
அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ
 
மதுரைச்  சமண முனிவன்(அமணன்) அத்திரன் என்பானின் உறைவிடம், இது உதயனுடைய  கொடை என பொருள் கொள்ளலாம்.  ஈற்றில் வரும் வேற்றமை உருபு ஸ உடைய என்று பொருள்படும். மதுரை மதிரை என குறிக்கப்பட்டு உள்ளது. உதயன் உதயணன் ஆகியன் பழந் தமிழ்ப் பெயர்கள். சிந்து முத்திரையில் உத், உதஅன் பொறிப்புகள் உண்டு. உதியன் சேரன் பெயர்.
 
கல்வெட்டு 9:2
 
குகைத்தள கற்படுக்கைகளில் இடப்புறம் அமைந்த முதற் கற்படுக்கையில் வெட்டப்பட்டு உள்ளது.
 
அந்தை அரிய்தி
 
அந்தை அரிதி என்பான் அமைத்தான் எனப் பொருள். ஆந்தை அரிதி என படிப்பதே சரி.
 
கல்வெட்டு 9:3
 
மேல்வரிசையில் அமைந்த மற்றொரு  கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
அந்தை இராவதன்
 
ஆந்தை இராவதன் கொடுத்த படுக்கை எனப் பொருள். குறில் நெடில் பிழையாகப் பொறிக்கப்பட்டுள்ளன இரா+ஆதன் என பிரிக்கலாம்
 
கல்வெட்டு 9:4
 
மேல் வரிசைக் கற்படுக்கை ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது.
 
(ம)திர அந்தை (வி)ஸுவன்
 
மதுரை விசுவன் அமைத்த கற்படுக்கை எனப் பொருள்.  இன்றும் பேச்சு வழககில் மதிர என்பர் அங்கத்து மக்கள்.
 
கல்வெட்டு 9:5
 
மேல்வரிசையில் நான்காம்  கற்படுக்கையில் வெட்டப்பட்டு உள்ளது.
 
அந்தை சேந்தன் அதன்
 
ஆந்தை சேந்தன் ஆதன் என்பான்  அமைத்துக் கொடுத்த படுக்கை எனப் பொருள். நெடில் குறிலாகப் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
கல்வெட்டு 9:6
 
மேல்வரிசை ஐந்தாம் படுக்கையில் வெட்டப்பட்டு உள்ளது.
 
சந்தந்தை சந்தன்
 
சந்தந்தை சந்தன் என தந்தை மகனுமாக இக் கொடை வழங்கினர் என்பர் அறிஞர்.
 
கல்வெட்டு 9:7
 
கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றினை ஒட்டி இக்கல்வெட்டு உள்ளது.
 
பதின் ( ஊர்) அதை
 
பதின் ஊரைச் சேர்ந்த அதை என்பான் அமைத்தது எனப் பொருள்.
அதை - ஆதை என்றோ ஆந்தை என்றோ படிக்கலாம்.
 
கல்வெட்டு 9:8
 
கீழ்வரிசைப் படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
குவர அ(ந்தை) சேய் அதன்
 
கூவர ஆந்தை சேய் ஆதன் என திருத்தமாக படிக்கவேண்டும். சேய் சிந்து முத்திரைகளில் வழங்குகிறது. இவனால் அமைக்கப்பட்ட படுக்கை எனப் பொருள்.
 
கல்வெட்டு 9:9
 
ஒரு கீழ்வரிசைக் கற்படுக்கையின் தலைப் பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.
 
குவரந்தை வேள் அதன்
 
குவரந்தை வேள் ஆதன் செய்த படுக்கை எனப் பொருள். கூவர ஆந்தை என திருத்தமாக படிக்கவேண்டும்.
 
கல்வெட்டு 9:10
 
கீழ்வரிசைப் படுக்கை ஒன்றில் உள்ளது.
 
திடிஇல் அதன்
 
திடியில் ஆதன் என்பானால் அமைக்கப்பட்ட படுக்கை என்பது இதன் பொருள். இப்போது திடியன் என்ற பெயரில் இவ் ஊர் மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கே உசிலம்பட்டி வட்டத்தில் உள்ளது என்பர்.
 
கருங்காலக்குடி
 
மதுரை மேலூர் வட்டத்தில் மேலூரிலிருந்து  திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் இது. இந்த கிராமத்தில் பஞ்சபாண்டவர் குட்டு எனும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் இயற்கையான குகைத் தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. குகையின் முகப்புப் நெற்றிப்பாறை நீர்வடி  விளிம்பில். இதில் ஒரு கல்வெட்டு உளளது.
 
கல்வெட்டு 10:1
 
எழைய் ஊர் அரிதின்  பளி
 
இழை > இடை ஊர் என்பது மக்கள் வழக்கில் எழைஊர் என மருவி இருக்கலாம். எழையூரைச் சேர்ந்த அரிதி என்பான் செய்து அளித்த பள்ளி எனப்  பொருள். ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
 
 
முதலைக்குளம்
 
மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்காக விக்கிரமங்கலம் அருகில் அமைந்து உள்ளது முதலைக்குளம். விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலை அருகே சின்ன உண்டாங்கல்லு மலையில் இராக்கிப்புடவு  என்ற குகையின் புருவத்தில்    164 செ.மீ. நீளத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது.
 
கல்வெட்டு 11:1
 
வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்
 
அயம் குளத்தைக் குறிக்கும். இந்த பெருங்குளம் வேம்பிற்றூர் ஊரவையாரால் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள். அவ்வூரில் 2 கி. மீ. சுற்றளவில் ஒரு பெருங்குளம் உள்ளது. சேதவர் என்பதை செய்தவர் எனக் கொள்ளலாம்.

K R A Narasiah

unread,
Jul 9, 2011, 11:25:13 AM7/9/11
to mint...@googlegroups.com
நீங்கள் அனுப்பும் எல்லா கல்வெட்டு விஷயங்களையும் தொகுத்து வைக்கவேண்டும். மிக்கப் பயனுள்ள இடுகை
நரசய்யா

2011/7/9 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 9, 2011, 12:05:19 PM7/9/11
to mint...@googlegroups.com
இறுதியில் வரிசைப்படுத்தி ஒரே இடுகையாக தமிழ் மரபு விக்கியில் சேமித்துவிடலாம்.
 
சேசாத்திரி

2011/7/9 K R A Narasiah <naras...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 10, 2011, 3:53:01 AM7/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ஆமாம். தொடர்ந்து அனுப்பி வாருங்கள். இதனைத் தொகுத்து வைப்போம்.

-சுபா


2011/7/9 seshadri sridharan <ssesh...@gmail.com>



--

seshadri sridharan

unread,
Jul 12, 2011, 2:45:37 AM7/12/11
to mint...@googlegroups.com
சித்தன்னவாசல்
 
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்  வட்டத்தில் புகழ்மிக்க பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. இவ்வூர் மலையின் கிழக்குப்புறத்தில் மக்களால் ஏழடிபாட்டம் எனப்படும் குகைத்தளம் உள்ளது. அஙகு வழவழப்பாகச் செதுக்கிய அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும், தலைப் பகுதியிலும் ஆழமாகவும் செம்மை ஆகவும்  வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.
 
கல்வெட்டு 13:1
 
எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவடிஈ தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்
 
எருமிநாட்டு குமிழுரில் பிறந்த காவுடிக்கு தெற்கு சிறுபோசிலைச் சேர்ந்த  இளயர் செய்து கொடுத்த இருப்பிடம் என்பது இதன் பொருள். எருமிநாடு என்பது இப்போதுள்ள கருநாடகத்து மைசூர் வட்டம். குமிழூர் அஙகிருந்த ஓர் ஊர் . காவுடி என்பது காவுண்டன் என்பதன் பெண்பாலாக கொள்ளப்படுகிறது. கௌடி என்ற பெண் பெயர் காவுடி என தமிழ்ப் படுத்தப்பட்டு உள்ளது. தென்கு சிறுபோசில் என்பது தெற்கு சிறுவாயில். வாயில் > .வோயில்> வோசில் > போசில் என திரிந்து உள்ள மூல கன்னட வழக்கு. இளையர் என்ற சொல் துளு நாட்டு வீர மரபினரைக் குறிக்கும். அதிட்அனம் என்பது இருக்கையைக் குறிக்கும்  சமற்கிருதச் சொல்.  மூல கன்னட மொழித் தாக்கம் உள்ளதால் இக்கல்வெட்டு கிறித்துவிற்கு 400  ஆணடுகள் பிற்பட்டது  எனக் கொள்ளலாம். ஆனால் அறிஞர்கள் கி.மு முதல் நூற்றாண்டு எனக் கொண்டுள்ளனர். இக்கல்வெட்டு முழுக்கமுழுக்க  கருநாடகத் தொடர்பு உடையது. இதிலும் குறில் நெடில் பிழை காணப்படுகினறது.
 
 
ஐயர் மலை
 
 
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தில் ஐயர் மலை எனும் ஊர் உள்ளது. இங்கத்து இரத்தினகிரிஷ்வரர் மலையில்  இயற்கையான குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழி கல்வெட்டு உள்ளது.
 
கல்வெட்டு 14:1
 
பனைதுறை வெஸன் அதட் அனம்
 
பனைத்துறை என்னும் ஊரினன் வெசன் ஏற்படுத்தித் தந்த இருக்கை என்பது இதன் பொருள். இதில் றை என்ற எழுத்து  முதலில் வெட்டாது விடுபட்டு பின்பு இடைச் செருகலாக சிறிய அளவில் எழுதப்ப்ட்டு  உள்ளது.
 
 
திருமலை
 
 
சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
 
கல்வெட்டு 15:1
 
மலை மீது வடபுறத்தில் மேலே அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் பொறிக்கப்படடு உள்ளது. முன் பகுதி எழுத்துகள் சிதைந்து உள்ளன.
 
- - - - வ கரண்டை
 
தமிழ் நிகண்டுகளும், அகராதிகளும் கரண்டை என்பது குகை, குகைத் தளத்தைக் குறிக்கும் என்பர் அறிஞர். குறிலுக்கு நெடில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
 
கல்வெட்டு 15:2
 
மலையின் மீது வடதிசை நோக்கிய பகுதியில் கீழப்புறம் அமைந்த சிறு குகைததளத்தின் நெற்றிப் பகுதியில் மிக மெல்லிதாக பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
எருகாடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்
 
 
எருகாடு ஊரைச் சேர்ந்த காவிதி கோன் என்பார் கொற்றிய பள்ளி என்பது இதன் பொருள். கொறிய  என்பதில் ஒற்றெழுத்து சேர்க்க வேண்டும். எருக்காட்டூர் தாயங் கண்ணனார் ஒரு சங்கப் புலவர். இவர் அகம். 149, 319 பாடல்களை பாடியவர் புறம். 397ஆம் பாடல் இவருடையது. காவிதி என்பது ஒரு பட்டம். கோன்  என்பது அரசன்,  தலைவன் என பொருள்படும். எருகாடு ஊரைச்  சேர்ந்த  காவிதி பட்டம் பெற்றிருந்த தலைவன் இப்பள்ளியை  அமைத்தான் என்பதே இதன் பொருள்.
 
 
திருப்பரங்குன்றம்
 
 
மதுரை மாநகருக்குத் தெற்கே ஐந்து கிலோ மீட்டரில் உள்ளது இத் திருத்தலம். இக்குன்றின் மேற்கில் உயரமான இடத்தில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதில் உள்ள கற்படுக்கைகளில் தலைப் பகுதியிலும, பக்கவாட்டிலும் மூன்று கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
 
கல்வெட்டு 16:1
 
வலம் இருந்து இடமாகவும் எழுத்துகள் தலைகீழாகவும் கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
 
அந்துவன் கொடுபிதவன்
 
இக் கற்படுக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவன் அந்துவன் என்பான் என்பது இதன் பொருள். தகர மெய் சேர்த்து கொடுபித்தவன் என படிக்க வேண்டும்.  அந்துவன் என்பது சேரர்க்கு உள்ள பெயர்.
 
 
கல்வெட்டு 16:2
 
இரு கற்படுக்கைகளின்  பக்கவாட்டுப் பகுதியில் இரு துண்டங்களாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
 
மாராயது கய(ம்)
 
மாராயம் அரசனால் வழங்கப்படும் பட்டம். கயம் - குளம். மாராயப் பட்டம் பெற்ற ஒருவர் குளம் ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது.
 
 
கல்வெட்டு 16:3
 
வரிசையாய் அமைந்த கற்படுக்கைகளின் தலைப் பகுதிகளுக்குப் பின் புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டு உள்ளது.
 
எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்
 
ஆய் சாயன் நெடுசாத்தனைக் கொண்டு எருகாட்டூர் இழ குடும்பிகன் போலாலயன் செய்து தந்த கற்படுக்கை என்பது இதன் பொருள். சாயனில்  குறில் எழுத்து  எழுதப்பட்டு உள்ளது. செய்த என்பதற்கு   செய்தா என நெடில் எழுத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. எனினும் இக் கல்வெட்டில்  குறில் நெடில் பிழை குறைவாக உள்ளது. ஒற்றெழுத்துகள் சிந்து எழுத்துகளில் போல் எழுதப்படுவதில்லை என்பது இதன் பழமைக்குச் சான்று.  இழ என்பது இள என்பதாக இருக்கலாம். இன்றும் ளகரம் ழகரமாக ஈழத்தில் வழங்குகின்றது.
 
  

2011/7/9 seshadri sridharan <ssesh...@gmail.com>

K R A Narasiah

unread,
Jul 13, 2011, 12:40:14 AM7/13/11
to mint...@googlegroups.com
சிறந்த வேலை. உம்மை ஒரு தடவை சந்திக்க விரும்புகிறேன்.
நரசய்யா

2011/7/12 seshadri sridharan <ssesh...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Jul 13, 2011, 4:16:24 AM7/13/11
to mint...@googlegroups.com
நானே அழைத்து வருகிறேன் உங்கள் அனுமதியுடன்



2011/7/12 K R A Narasiah <naras...@gmail.com>



--

seshadri sridharan

unread,
Jul 14, 2011, 2:49:42 AM7/14/11
to mint...@googlegroups.com
முத்துப்பட்டி
மதுரை தெற்கு வட்டத்தில் வடபழஞ்சி என்னும் ஊருக்கு அருகில் முத்துப்பட்டி  அமைந்து உள்ளது.  முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும்  220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன.  குகைத்தள மழைவடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.
 
கல்வெட்டு 17:1
 
சிறுகுகைத்தளத்தின் சிறு பாறை ஒன்று வழவழப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாமல் மேடும்  பள்ளமுமாக  உள்ள பகுதியில் வலம் இடமாக தலைகீழாக இக்  கல்வெட்டு  வெட்டப்பட்டு உள்ளது.
 
நாகபேரூரதைய் முசிறி கோடன் எளமகன்
 
சேரர் துறைமுக நகரம் முயிற் கோடு   எனப்படடிருப்பதால் முசிறி கோடன் இவ்வூரன் எனக் கொள்கின்றனர் அறிஞர். இளமகன் என்பது போர் மறவனைக் குறிக்கும். நகரமெய் சேர்தது  நாகபேரூர் அந்தை என படிக்கவேண்டும். நாகப்பேரூரின் அந்தை முசிறிக்கோட்டு இளமகன் தந்த கொடை என்பது இதன் பொருள்.
 
கல்வெட்டு 17:2
 
இடையன் தரும்ம எனப்படும் பெரிய குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப் பகுதியில் மூன்று பகுதிகளாக பொறிக்கப்பட்டு உள்ளது.
 
சைய்அளன் விந்தைஊர் கவிய்
 
கவி என்றால் குகையைக் குறிக்கும். ளகர மெய் சேர்த்து அள்ளன் என படிக்க வேண்டும்  விந்தையூர் சையள்ளன் என்பான் அமைத்த குகைத் தளம் என்பது கல்வெட்டின பொருள்.
 
கல்வெட்டு 17:3
 
பெரிய குகைத்தளக் கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. கல்வெட்டின் நடுவே சிதைந்து உள்ளது.
 
திடிக் காத்தான் (ம) - - - னம்எய்
 
டகர மெய்  சேர்த்து திட்டி என படிக்க வேண்டும். திட்டி எனும் ஊரைச் சேர்ந்த  காத்தான் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை  என்பது இதன் பொருள். திட்டக்குடி என்ற பெயரில் ஊர் உள்ளதை  நோக்குக.
 
ஜம்பை
 
விழுப்பரம் மாவட்ட திருக்கோவிலூருக்கு  அருகில் தென் பெண்ணை
ஆற்றின் வடகரையில் இவ்வூர அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஆளுருட்டி மலையில் மக்களால் தாசிமடம் எனப்பெறும் இரு இயற்கைக் குகைத் தளங்கள் ஒன்றன் உட்புறத்தில் பின்புறமாக நிற்கும் பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு 18:1
 
 
ஸதியபுதோ அதியந் நெடுமாந்   அஞ்சி ஈத்தபளி
 
சத்திய புத்திரன் என்பதன் பிராகிருத வடிவ சொல் பயன்படுத்தப்பட்டு  உள்ளது. அசோகன் கல்வெட்டில் சதியபுதோ என்ற சொல் அதியமான்  களைக் குறிக்கிறது. அதிய என்பது சகர முன்னொட்டு பெற்று சதிய என்றாகி உள்ளது மகன் > மான் என்பது புத்தோ என பிராகிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. பளி யில் ளகர மெய் சேர்த்து பள்ளி என படிக்க வேண்டும். அதியன் நெடுமான் அஞ்சி செய்து அளித்த பள்ளி என்பது இதன் பொருள். அசோகன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சதியபுதோ என்பதன் பொருள் புதிரை  இக் கல்வெட்டு தீர்த்து உள்ளது.
 
ஆனைமலை
 
மதுரை வடக்கு வ்ட்டத்தில் மதுரை மேலூர் சாலையில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தைக் கடை என்னும் ஊரில் இருந்து கிழக்காகச் சென்றால் நரசிங்கம் என்னும் ஊரை அடையலாம். அங்கு யானை போல் தோற்றமுடைய மலை ஒன்று உள்ளது. அதனால் அது  ஆனைமலை எனப்படுகிறது. யானைத் தலையை ஒத்த மலைப் பகுதியின் மேற்பரப்பிர் ஓர் இயற்கையான குகைத்தளம் உள்ளது. குகையின் நெற்றப்புறத்தில் மழைநீர் விளிம்பின் கீழ்  தமிழி கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது..
 
கல்வெட்டு 19:1
 
இரு வரிகளில் அமைந்த கல்வெட்டு இது.
 
இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்
 
தகர மெய் சேர்த்து குன்றத்து என படிக்க வேண்டும். இக்குன்றில் அமைந்த  கற்படுக்கைகள் பா தந்த ஏரி ஆரிதன்,  அரட்டகாயிபன் ஆகிய இரு துறவியர்க்குச் சொந்தம் எனப் பொருள்.  த்துவாயி என்பதிற்கு சொற்பொழிவாளன் எனப் பொருள் கொள்கின்றனர் அறிஞர்.  


2011/7/12 seshadri sridharan <ssesh...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Jul 14, 2011, 3:11:05 AM7/14/11
to mint...@googlegroups.com
அன்பு மின் தமிழ் நண்பர்களுக்கு 

இந்த இழையில் வரும் கல்வெட்டுகள் பற்றிய செய்திகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் நிறுவனம் வெளியிட்ட பிராமி கல்வெட்டுகள் என்ற நூலை அடிப்படியாக கொண்டு  எழுத பட்டது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
அந்த நூல்  ஐராவதம் அவர்களின் ஆங்கிலேய நூலை அடிப்படையாகவும் ,தொல்லியல் நிறுவனத்தின் 
கள பணியாளர்கள அவர்களின் பரிந்துரையின் பேரின் வெளி இடப்பட்டது 

காப்புரிமை பெற்ற நூல் 

இன்று நான் தொல்லியல் நிறுவனத்திற்கு சென்ற போது மின்தமிழ் மற்றும் தமிழ் மரபு அறகட்டளை நிறுவனம் இதற்கு பொறுப்பு என்று சில பேச ஆரம்பிக்க ,உடனே மறுப்பு கொடுத்து நண்பர் சேஷாத்ரி அவர்களிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டேன் 

பலரும் மின் தமிழை படிக்கிறார்கள் என்று மீண்டும் புரிந்து கொண்டேன் 

சிவ .பாலசுப்ரமணி 




2011/7/13 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 14, 2011, 8:04:37 AM7/14/11
to mint...@googlegroups.com
தொல்லியல் துறையின் பிராமி கல்வெட்டு குறிப்புகளை மட்டுமே மேற்கோளாக கொண்டு என் சொந்த கருத்துகளைத் தான் வெளியிட்டு  வருகிறேன்.அதனை முற்றாகத் தழுவியது அன்று. இவ் இழை அவர்கள் வெளியிடாத  செய்திகளையும் உள்ளடக்குவது.
 
செப். 15, 2003 ல் இந்து நாளேடு வெளியிட்ட அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு.  மெல்லிய கோடுகளால் தெளிவின்றி காணப்படும் இக்கல்வெட்டு 33 எழுத்துகளுடன் 3.10 மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன்   
தகர மெய் சேர்த்து கொடுபித்தவன் என படிக்க வேண்டும். இலஞ்சி எனும்  ஊரின் வேள் மாப்பரவன் என்பான் மகன் இமயவன் குடைந்து அளிந்த குகைத் தளம் என்பது இதன் பொருள்.

புலிமான்கோம்பை நடுகற்கள்

புலிமான்கோம்பையில்  மூன்று தமிழி கல்வெட்டுள்ள நடுகற்கள்  மூன்று கிட்டியதாக தொல்லியல் பேராசிரியர் க.ராசன் நாளேடுகளுக்கு செய்தி  வெளியிட்டிருந்தார். இவ்வூர் தேனி மாவட்டத்தில் வத்தலகுண்டில் இருந்து  15 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்து உள்ளது .  இம்மூன்று கல்வெட்டுகளையும் நான் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த தஞ்சைப் பல்கலையில் பார்வையிட்டேன். ஏறத்தாழ மூன்றடி நீளத்திற்கு இருந்தது.  
 
1. வேள் ஊர் அவ்வன்  பதவன்
 
வேளூரைச் சேர்ந்த அவ்வன் எனும் இயற்பெயர் கொண்ட பதவன் நினைவாக நட்ட நடுகல் இது. அவ்வன் சிந்து முத்திரைளில் காணப்படும் பெயர்.
 
2. - - அன் ஊர் அதன் - - -- ன் அன் கல் (படம் இணைப்பு)
puliyamkombai brami inscription.jpg
  
இரு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு. நடுகல்லின் இடப் பகுதி உடைந்து உள்ளது. அதன்  என்பதை ஆதன் எனக் கொள்ள வேண்டும்.
 
3. கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.
ஆகோள் என்பதற்கு ஆநிரைகளைக் கவர்தலின் போது நிகழும் மோதல் எனப் பொருள். பேடு தீயன் அந்தவனுக்கு கூடல் ஊரில் நிகழ்ந்த ஆநிரை கவர்வு மோதலின் போது  இறந்ததன் நினைவாக நட்ட கல் என்பது இதன் பொருள்.   
puliyamkombai brami inscription.jpg

seshadri sridharan

unread,
Jul 14, 2011, 8:19:43 AM7/14/11
to mint...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Jul 14, 2011, 9:43:38 AM7/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தகவலுக்கும் தொல்லியல் துறை ஆய்வாளர்களுக்கு த.ம.அறக்கட்டளை சார்பாக விளக்கியமைக்கும் னன்றி பாலு.
ஆய்வு கட்டுரைகள் எப்போதும் ரெபரன்ஸ் சேர்த்து வழங்கப்படுவது தான் முறை. சேசாத்ரி தனது விளக்கத்துடன் குறிப்பை எங்கிருந்து எடுக்கின்றாரோ அதற்கு ரெபரன்ஸ் நூல், பக்கம் கொடுத்து செய்வது  ஏனையோர் வாசித்து பயன்பெறவும் உதவும்.
 
-சுபா

2011/7/14 s.bala subramani B+ve <sunke...@gmail.com>



--

Subashini Tremmel

unread,
Jul 14, 2011, 9:47:35 AM7/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்புள்ள சேசாத்ரி,
 
நீங்கள் மேற்கோள்களுக்குக் கீழ் அது எந்த நூலிலிருந்து/சஞ்சிகையிலிருந்து/ நாளிதளிலிருந்து அக்குறிப்பு எடுக்கப்படுகின்றது என்று சிறு குறிப்பை சேர்த்து எழுதி அதற்குக் கீழ் உங்கள் விளக்கத்தை எழுதுவது  இப்பிரச்சனையைத் தீர்க்கும்; அதுவே முறையும் கூட. இதே முறையில் இந்தப் பயனுள்ள தொடரை இனி தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
அன்புடன்
சுபா

2011/7/14 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
puliyamkombai brami inscription.jpg

s.bala subramani B+ve

unread,
Jul 14, 2011, 10:33:40 AM7/14/11
to mint...@googlegroups.com
உங்களின் முயற்சியும் உழைப்பும் தொடரட்டும் .
 
மின் தமிழ் அனைவரின் பார்வையில் இருப்பதால் உங்கள் விளக்கம் வர வேண்டும் என்பதற்காக தான் அவையில் கொண்டு வந்தேன்
 
தமிழகத்தில் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது
 
இந்த முயற்சியை வரைபடம் மூலம் கல்வெட்டு இருக்கும் இடங்கள் அதற்கு போகும் வழி அங்கு இருக்கும் ஆர்வலர்களின் தொடர்பு எண் 
, ,கல்வெட்டுகளின் காலம் என்று ஒருங்கிணைந்து செய்யுங்கள்
 
நம் உழைப்பிற்கு தடையாக இருக்கும் நிகழ்வுகளை வரும் முன் காத்தால்
 
அடுத்து நடப்பவைகள் நன்றாக நடக்கும்
 
துணை இருப்போம் தொடருங்கள்
 

seshadri sridharan

unread,
Jul 14, 2011, 10:46:55 AM7/14/11
to mint...@googlegroups.com


2011/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள சேசாத்ரி,
 
நீங்கள் மேற்கோள்களுக்குக் கீழ் அது எந்த நூலிலிருந்து/சஞ்சிகையிலிருந்து/ நாளிதளிலிருந்து அக்குறிப்பு எடுக்கப்படுகின்றது என்று சிறு குறிப்பை சேர்த்து எழுதி அதற்குக் கீழ் உங்கள் விளக்கத்தை எழுதுவது  இப்பிரச்சனையைத் தீர்க்கும்; அதுவே முறையும் கூட. இதே முறையில் இந்தப் பயனுள்ள தொடரை இனி தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அம்மணி நான்  தொடக்கத்திலேயே குறிப்பிட்டு உள்ளேன் அது போக பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்படும் செய்திகள் என் சொந்த கருத்து என்றும் சொலி உள்ளேன்  
puliyamkombai brami inscription.jpg

seshadri sridharan

unread,
Jul 21, 2011, 11:16:50 PM7/21/11
to mint...@googlegroups.com
புகளூர்
 
சேலத்தில் இருந்து கரூர் போகும் வழியில் 15 ஆவது கிலோ மீட்டரில் காவிரிக்கரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. வேலாயுதபாளையம் என இக்கால் அறியப்படுகின்ற பகுதியே இவ்வூர். இங்கு  புகழியூர்  முருகன்  கோவில் அமைந்த  ஆறுநாட்டார் மலை உச்சிக்கு  சற்றே  இறக்கமாக வடக்கிலும் தெற்கிலும் இயற்கையான குகைத் தளங்கள் உள்ளன. வடதிசை குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கையிலும், தென்திசை குகைத்தள நெற்றி முகப்பிலும், சுவர்களிலும், அதன் கற்படுக்கைகளிலும் என  12 தமிழி கல்வெட்டுகள் காணப்பட்டு உள்ளன. பதிற்றுப்பத்தில் 7,8,9 ஆம் பத்துகளில் சிறப்பிக்கப்படும் சேர அரசர்கள் குறித்த பொறிப்புகள் இங்கு இடம் பெற்று உள்ளன.
 
 
கல்வெட்டு 20:1
 
 
தென்திசையில் அமைந்த குகைத்தள நெற்றி முகப்பில் வெட்டப்பட்ட இரு கல்வெட்டுகளில் இரண்டாவதாக உள்ளது.  கீழிலிருந்து மேலாக முதல் கல்வெட்டு. எழுத்துகள் தேய்ந்து காணப்படுகின்றன. ஒரே வரிசையாய் அல்லாமல் இடச் சுருக்கம் கருதி நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. 
 
வ 1. முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
                  வ 2. கோ ஆதன்  செல்லிரும் பொறை மகன்
                  வ 3. பெருங்கடுங்கோன் மகன்   ளங் கடு                                               வ 4. ளங்கோ ஆக அறுத்த கல்
 
யாற்றுரைச் சேர்ந்த  முது சமணத் துறவி செங்காயபனுக்கு அமைத்த உறைவிடம். மன்னன் ஆதன் செல்லிரும் பொறையின் மகன் பெருங்கடுக்கோவினுடைய மகன், இதாவது, மன்னனின் பேரன், இளங் கடுக்கோ இளவரசனாகப் பட்டம் ஏற்றபோது  அதற்காக அவன் தந்தையான பெருங்கடுக்கோ  அமைத்துக் கொடுத்த  குகைத்தளம்  எனப் பொருள்படும்.   இக்கல்வெட்டில் நெடில் குறிலாக, குறில் நெடிலாக பொறிக்கப்படாமல் மிகத் துலக்கமான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.  
 இம் மன்னர்கள் கி.மு.  முதல் நாற்றாண்டில் வாழ்ந்தோர் என அறிஞர் உரைக்கின்றனர் எனினும் இக்கல்வெட்டு கி.பி. 2  ஆம் நூற்றாடினது என வரையறை  செய்து உள்ளனர்.  இள என்பதில்  உயிரெழுத்தான இகரம் எழுதப்படாமல்  விடப்பட்டு உள்ளது என்பது அக்கால எழுதும் மரபை ஒட்டியே எனலாம். ஈலம் நாகரிகத்தில் இதே போல் chedor laomer > சித்தர் இள ஓமர் என்பது ஒரு மன்னன் பெயர்
 
 
கல்வெட்டு 20:2
 
 
முதற் கல்வெட்டிற்கு மேலாக பொறிக்கப்பட்டு உள்ளது. எழுத்துகள் தேய்ந்தும் இரண்டாம் வரியில் பாறை சிதைத்ததால் எழுத்துகள் பெயர்ந்து போயும் உள்ளன. நான்கு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
 வ 1. மூதாமண்ணன் யாற்று செங்காயபன் உறைய்
                       வ  2. கோ ஆ- - - ல்லிரும்புறை மகன் பெருங்
                       வ 3. கடுங்கோன் மகன்  கடுங்கோன் ளங்கடுங்
                       வ 4. கோ ளங்கோ ஆக அறுபித கல்   
  
முதற் கல்வெட்டுச் செய்தியே எழுதப்பட்டு உள்ளது. முதற் கல்வெட்டில் முதா என்பது இக்கல்வெட்டில் மூதா என உள்ளதால் மூத்த என பொருள் கொள்ள வேண்டும். யாற்றூரில் ஊர் என்ற சொல் இக் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. அமண்ணன் ஆமண்ணன் என புணர்ந்து எழுதப்பட்டு உள்ளது. முதற் கல்வெட்டில் போல் இகரம் எழுதப்படவில்லை எனினும் இக்கல்வெட்டில் கடுங்கோன் இளங்கடுங்கோ என கடுங்கோன் என்ற சொல் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இது முதற் கல்வெட்டில் இல்லை. அறுபித என்பதில் தகர  மெய்யை  ஒற்றாகச் சேர்த்து   அறுப்பித்த என்று படிக்க வேண்டும். பொறை இக்கல்வெட்டில் புறை எனப் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
கல்வெட்டு 20:3
 
 
குகைத்தள கற்படுக்கை ஒன்றின் மேல் பொறிக்கப்பட்டு உள்ளது.  மூன்று வரிகளில் மிகத் தேய்ந்த நிலையில் உள்ளது.
 
வ 1. யாற்றூர் செங்காயபன்
                                           வ 2. தாவன் ஊர்ப் பின் அன் குற்றன்
                                           வ 3. ன் அறுபித்த அதிட்டானம்.
 
சமணத்துறவி யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூரைச் சேர்ந்த பின்னன் குற்றன் செதுக்கி அளித்த இருக்கை என்பது கல்வெட்டின் பொருள். ஆண் பால் ஒருமை ஈறு அன் சிந்து முத்திரைகளில் புணராமல் தனித்து எழுதப்படுவது போல் இங்கும் பின்அன் என பிரித்து எழுதப்படுவது அம்மரபு தொட்ர்ந்து தமிழி எழுத்திலும் பின்பற்றப்பட்டு வந்ததைக் காட்டுகின்றது. பின்னன் என்பதற்கு தம்பி எனப் பொருள் உண்டு. 
கூற்றன் என்பதை நெடிலுக்குக் குறிலாக பொறித்து குற்றன் என பிழையாக எழுதி  உள்ளனர். இதற்கு சான்று கூற்றுவ நாயனார், ஈலம் நாகரிகத்தில் கூற்றன் திண்டி என்ற பெயருடைய மன்னன் இருந்தான்.  அதிட்டானம் என்ற பிராகிருத்ச் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எழுத்துப் பிழை மற்றும் பிராகிருத பயன்பாட்டைக் கருதி  தமிழ் அறியாத சமணர்களே இதை  பொறித்து உள்ளனர் எனக் கொண்டால் தகும்.
 
 
கல்வெட்டு 20:4
 
 
வலப்புறமாக குகைத்தளத்தில் அமைந்து உள்ள கற்படுக்கையில்  சிதைந்த நிலையில் இறுதிச் சொல் மட்டும் காண்பதற்குத் தெளிவாக உள்ளது.
 
- - - - - அதி ட்டான்னம்
 
இருக்கையைக் குறிக்கும் அதிட்டானம் என்ற சொல்  கூடுதலாக ஒரு னகர மெய்யை ஒற்றாகப் பெற்று உள்ளது. 
 
 
கல்வெட்டு 20:5
 
 
தென்திசையை நோக்கி உள்ள குகைத்தளத்தின் கிழக்கே சிறு குகை ஒன்று அமைந்து உள்ளது. அதன் செதுக்கிச் சீர்படுத்தாத  தரையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு  வெட்டப்பட்டு உள்ளது.
 
 
                        வ 1. நலி (ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள்
                        வ 2. கீரன் கொறி செயிபித பளி
 
 
நல்லியூர் வாழ் ஆ பிட்டன் உடைய இளைய மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்து  அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். நலி யில் லகர மெய்யும், பிடனில் டகர மெய்யும், கொறியில் றகர மெய்யும், செய்பித என்பதில் தகர மெய்யும்,  பளி இல் ளகர மெய்யும் சேர்க்க வேண்டும்.  பண்டு சில போது ஆடவர் பெயரை  பெண்டிர்க்கும் சூட்டுவது வழக்கில்  இருந்தது என்பதிற்கு கீரன் கொற்றி ஒரு சான்று.
 
 
கல்வெட்டு 20:6
 
 
மேற்சொன்ன குகையில் உள்ள கற்படுக்கையின் மேல்  இக்கல்வெட்டுஒரு வரியில்  பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
        நல்லி(ய்) ஊர் ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி அதிடானம் 
 
ஐந்தாம் கல்வெட்டுச் செய்தியே சில  மாற்றுச் சொல்லால் பொறிக்கப்பட்டு உள்ளது. ஆ பிட்டன் என்பதற்கு ஆ பிட்டந்தை என்றும், பள்ளி என்பதற்கு அதிட்டானம் என்ற சொல்லுமே அவ்வாறு பயன்படுத்தப்பட்டு  உள்ளன. பிடந்தை என்பதிலும்  அதிடானம் என்பதிலும் டகர மெய் சேர்க்க வேண்டும்.
 
 
கல்வெட்டு 20:7
 
 
தென்திசையை நோக்கியபடி உள்ள பகுதயின் மேற்புறம் உள்ள குகையின் முதல் படுக்கையில் இரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
                                      வ 1. கொற்றந்தை ளஎன்
                                      வ  2. முன்று
 
 
கொற்றந்தை இளையன் என்பான் ஏற்படுத்திய  முற்றம் என்பது இதன் பொருள். றகர மெய்யும்,  னகர மெய்யும் புள்ளி பெற்றிருப்பது இக் கல்வெட்டின் சிறப்பு.  இளையனில் யகரத்திற்கு பகராக எகரம் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
கல்வெட்டு 20:8
 
 
மேற்சொன்ன குகையின் மற்றொரு கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சொல் தவிர ஏனைய சிதைந்து  உள்ளன.
 
                                              _  _  _ அதிட்டானம்
 
 
கல்வெட்டு 20:9
 
 
மேற்சொன்ன குகையின்  மூன்றாம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
 
 
                                 வ 1. கருஊர் பொன் வாணிகன் 
                                 வ 2. நத்தி அதிட்டானம்
 
 
கரூர் வாழ் பொன் வணிகன் நத்தி என்பான் ஏற்படுத்திய கற்படுக்கை என்பது இதன் பொருள். நத்தியில் தகர மெய்யும், அதிட்டானத்தில் டகர மெய்யும் புள்ளி பெற்று உள்ளன. நத்தன் என்ற பெயர் அன் ஈறு பெறாமல்
இகர ஈறு பெற்று உள்ளது.
 
 
கல்வெட்டு 20:10
 
 
மேற்சொன்ன குகையின் நான்காம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
 
 
                               வ 1. எண்ணை வாண்ணிக
                               வ 2.  ன் வெநி ஆதன் அதிட்டானம்
 
 
எண்ணை வணிகன் வெந்நி/வென்னி அதன் என்பான் ஏற்படுத்திய படுக்கை என்பது இதன் பொருள். வாணிகனில் ணகர மெய் தேவை இன்றி பொறிக்கப்பட்டு உள்ளது. வெநியில்  னகர மெய் சேர்த்து வென்னி என படிக்க வேண்டும்.
 
 
கல்வெட்டு 20:11
 
 
மேற்சொன்ன குகையின் ஐந்தாம் படுக்கையில் ஐந்து வரிகளில் பொறிக்கப்பட்டு வலப்பக்க எழுத்துகள் சிதைந்து போய் உள்ள கல்வெட்டு இது.
 
                             வ 1. - -- - -
                             வ 2.  பெ - - -
                             வ 3. கன் - -- -
                             வ 4. மக - - - -
                             வ 5.  ளவா -  -  -
 
 
கல்வெட்டு 20:12
 
 
ஆறுநாட்டார் மலையின் வடதிசையில் சூளாமணி எனப்படும் குகையில் இக்கல்வெட்டு உள்ளது.   
 
 
                                     ணாகன் மகன் பெருங்கீரன்
 
 
நாகன் என்பான் மகன் பெருங்கீரன் ஏற்படுத்தியது என்பது இதன் பொருள்.
 


2011/7/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
puliyamkombai brami inscription.jpg

Subashini Tremmel

unread,
Jul 22, 2011, 11:40:26 AM7/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/7/14 seshadri sridharan <ssesh...@gmail.com>



2011/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள சேசாத்ரி,
 
நீங்கள் மேற்கோள்களுக்குக் கீழ் அது எந்த நூலிலிருந்து/சஞ்சிகையிலிருந்து/ நாளிதளிலிருந்து அக்குறிப்பு எடுக்கப்படுகின்றது என்று சிறு குறிப்பை சேர்த்து எழுதி அதற்குக் கீழ் உங்கள் விளக்கத்தை எழுதுவது  இப்பிரச்சனையைத் தீர்க்கும்; அதுவே முறையும் கூட. இதே முறையில் இந்தப் பயனுள்ள தொடரை இனி தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அம்மணி நான்  தொடக்கத்திலேயே குறிப்பிட்டு உள்ளேன் அது போக பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்படும் செய்திகள் என் சொந்த கருத்து என்றும் சொலி உள்ளேன்  
அன்புடன்
சுபா
 
 
புதிதாக இணைபவர்களோ அல்லது ஒரு மடலை மட்டும் பார்ப்பவர்களுக்கோ இந்த விளக்கம் தெரிய வாய்ப்பில்லை. ஆக  ரெபரன்ஸ் பகுதிக்குக் கீழே அது எந்த நூல் எந்த பக்கம் எனக் குறிப்பிடப்படுவது வாசிப்பவர்களுக்கும் உதவும் என்பதால் இந்த முறையை கையாளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
puliyamkombai brami inscription.jpg

seshadri sridharan

unread,
Jul 25, 2011, 10:44:29 PM7/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

மாமண்டூர்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இப்பெயரில் பல ஊர்கள்
இருப்பினும். தமிழி கல்வெட்டு உள்ள இவ்வூர் காஞ்சிபுரத்தில் இருந்து 12
கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு வட்டத்தில் தூசி என்ற ஊர் அருகே உள்ளதால் தூசி மாமண்டூர் எனப் பொதுவாக அழைக்கின்றனர்.
 
 
கல்வெட்டு 21:1
 

இங்குள்ள மலையில் அமைந்துள்ள பல்லவர் குடவரைக் கோயில்களுக்கு வடதிசையில் உள்ள சிறிய குன்றின் இயற்கையான குகைத்தளத்தின் முகப்பில் பந்தல் அமைக்க கொம்புகளைச் செருகுவதற்காக அகழப்பட்ட இரு துளைகளுக்குக் கீழே இக்கல்வெட்டு நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

                                            வ 1. கணிமான்
                                            வ 2.
தேனூர் தந்த கோன் குன்று ஆசி
                                            வ 3. செயிதான் தசன் சிறு
                                           
வ 4.  - - - - வன்
 
தேனூரை வென்றுக் கைப்பற்றிய மன்னன் கணிமானுடைய குன்றில் பந்தலைத் தாங்கும் ஆசியை (வசதியை)  செய்தவன் தச்சன் சிறு - - - - வன் என்பவன் என்பது இதன் பொருள். பெயர் தெளிவாக அறிமுடியாதபடி சில எழுத்துகள் சிதைந்து உள்ளன. சகர மெய் சேர்த்து தச்சன் என படிக்க வேண்டும்.
 
 
குன்னகுடி
 
புகழ்மிக்க முருகன் கோவில் அமைந்துள்ள இவ் ஊர் காரைக்குடி  திருப்பத்தூர் சாலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இக்குன்றின் மேல் அமைந்துள்ள ஞானியார் மடம் என்ற குகையின் நீர்வடி விளிம்பில் இரு தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
 
 
கல்வெட்டு 22:1
 

தலைமாறாகவும் ஏற்றி இறக்கியும் எழுத்துகள் எழுதப்பட்டு உள்ளன.

                 காபிஊர் ஆதன் சாத்தன்

ரகர மெய்யும், தகர மெய்யும் புள்ளி பெற்று உள்ளன. பகர மெய் சேர்த்து
காப்பி எனப் படிக்க வேண்டும். காப்பியூர் வாழ் ஆதன் சாத்தன் என்பது
கல்வெட்டின் பொருள்
.  காப்பன் என்ற பெயர் இகர ஈறு பெற்று காப்பி ஆகியது.
 
 
கல்வெட்டு 22:
 

இக்கல்வெட்டும் தலைமாறாகவும், ஏற்றி இறக்கியும் நீர்வடி விளிம்பின்
மறுபுறம் பொறிக்கப்பட்டு உள்ளது. முதல் மூன்று எழுத்துகள் தெரிகின்றன
ஏனைய கட்டடக் கட்டுமானத்தில் மறைந்து உள்ளன. முன் கல்வெட்டுச்
செய்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.

                                            ஊறு து

றகர மெய் சேர்த்து ஊற்று என்று படிக்கவேண்டும்.  நீர் ஊற்றை காப்பி ஊர் ஆதன் சாத்தன்  ஏற்படுத்திய செய்தியைக் குறிப்பதாகலாம் என அறிஞர் கருதுகின்றனர். ஏனெனில் குகைக்குப் போகும் வழியில் சதுரவடிவில் ஒரு சுனை வெட்டப்பட்டு அதில் இன்றளவும் நீர்த் தேங்கி பயன்பட்டுக் கொண்டு உள்ளது.
 
 
தொண்டூர்
 

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு 22 கிலோ மீட்டர் வடகிழக்கே இவ்வூர்
அமைந்துள்ளது. இந்த ஊருக்குத் தெற்கே உள்ள குன்றில் பஞ்சனார்படி என்ற இயற்கையான குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.


கல்வெட்டு 23:1


குகையின் வெளியே உள்ள தரையில் இரு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது இக்கல்வெட்டு.
 
 
வ 1. (இ)ளங்காயிபன் ஏவ அகழ்ஊரறம்
வ 2. மோசி செயித அதிடானம்
 

இளங்காயிபன் என்ற சமணத்  துறவியின் சொற்படி அகழுர் மக்கள் இந்த
கற்படுக்கைகளை அமைக்கும் அறத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியுடன் அவற்றை மோசி என்பான் செய்தான் என்பது கல்வெட்டின் செய்தி.
இங்கு ஙகர மெய் புள்ளி பெற்றுள்ளது.


குடுமியான்மலை


புகழ்மிக்க இசைக் கல்வெட்டும், குடைவரைக் கோவிலும் கொண்ட இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலையின் தென்மேற்குப் பகுதியில் பாறைச் சரிவில் உள்ள குகைத்தளத்தில் இக் கல்வெட்டு காணப்படுகின்றது.


கல்வெட்டு 24:1
 
 
குகையில் அமைந்த கற்படுக்கையில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு எழுத்துகள் தெளிவின்றி உள்ளன.
 
 
நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்
 
 
ளகர மெய்யும், நகர மெய்யும் புள்ளி பெற்று உள்ளன அதோடு ஒகரக் குறில் கொண்ட 'கொ' விற்கு புள்ளி இடப்பட்டு உள்ளது. நாழள் எனும் ஊர் வாழ் கொற்றந்தை என்பான் இவ்விருக்கையை செய்வித்துக்

கொடுத்தான் என்பது இதன் பொருள்.
 
 
திருச்சிராப்பள்ளி
 
 
திருச்சி மலைக்கோட்டை மலையின் மேற்கு திசையில் உள்ள குகையில் ஒரு  தமிழி கல்வெட்டு அறியப்பட்டது.
 
 -  - -  பன் கே
 
இம் மூன்று எழுத்துகள் மட்டும் படிக்கக் கிடைக்கின்றன.
 
 
எடக்கல்
 
 
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கணபதி வட்டம் என்ற ஊருக்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் எடக்கல் மலை உள்ளது. இம்மலையின் உச்சியில் மேற்கு திசைச்சரிவில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. அங்கு நான்கு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. சமண சமய தொடர்பு அற்றது.
 
 
கல்வெட்டு 26:1
 
 
வடக்கு திசையாக உள்ள குகையின் சுவர் மேல் பொறிக்கப்பட்டு உள்ளது.
 
 
ஒபனபவிரஅ
 
 
ஒப்பனப்ப வீரன் என்ற ஆள் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. கர மெய் சேர்த்து ஒப்பனப்ப என்றும் விர என்பதை நெடிலாக்கி வீர என்றும் படிக்கவேண்டும்.
 
 
கல்வெட்டு 26:2
 
 
அதே வடதிசைச் சுவரில்  பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு.
 
 
கடும்மிபுத சேர கோ
 
 
கடு உம்மி  பூத  சேர கோ என்பது ஒரு சேர மன்னனது பெயர். உம்மன் என்ற பெயர் இகர ஈறு  பெற்று உம்மி என்றாகி கடு என்ற  சொல்லொடு புணர்ந்து உள்ளது. புத என்பதை மகன் என்னும் பிராகிருத சொல்லொடு பொறுத்துவர் அறிஞர். எனினும் அதை நெடிலாக்கி பூத எனப்படிப்பதே சரி. கோ என்ற சொல் பிந்து  கால சிந்து  எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதை பேரா. இரா. மதிவாணன் கோ  என படித்து உள்ளார்.
 
 
கல்வெட்டு 26:3
 
 
அதே வடதிசைச் சுவரில் மூன்றாவதாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. பழைய மைப்படி கொண்டு படிக்கப்பட்டு உள்ளது.
 
 
கோ பூதிவிர
 
 
அரசனான பூதி வீரன் என்று பொருள். பூதன் என்ற பெயர் இகர ஈறு பெற்று பூதி ஆகி உள்ளது. எனினும் இதை பிராகிருதச் சொல்லாகக் கொள்கின்றனர். இக்குகைக்கும் சமணருக்கும் எந்த தொடர்பும் இல்லாத போது அதை பிராகிருதமாகக் கொள்வது தவறு.  அப்பூதி அடிகள் ஒரு நாயன்மார், pudi Ilu 1320BC என்பது  அசீரிய நாகரிக வரலாற்றில் இடம் பெறும்   மன்னன்  பெயர். விர என்பதை நெடிலாக்கி வீர எனப் படிக்க வேண்டும்.
 
 
கல்வெட்டு 26:4
 
 
கோ(வா)தான்
 
ஆதன் எனும் பெயர் கொண்ட அரசன் என்பது இதன் பொருள்.
 
 
 
 
 
 
 
 
 


2011/7/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
puliyamkombai brami inscription.jpg

Subashini Tremmel

unread,
Jul 26, 2011, 12:12:36 PM7/26/11
to seshadri sridharan, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்புள்ள திரு.சேசாத்ரி.
 
இது மிக நல்ல முயற்சி. ஆயினும் குறிப்புக்களை நீங்கள் தரும் போது ஒவ்வொரு குறிப்பின் கீழும் அதனை நீங்கள் ரெபரன்ஸ் மேற்கொள்ளும் நூலின் பெயரையும் பக்கத்தின் எண்ணையும் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே இரண்டு முறை தெரிவித்து விட்டேன். பாலு அவர்களும் தொல்லியல் துறையினர் நீங்கள் கையாளும் முறையை விரும்பவில்லை என்பதை தெளிவு படுத்தியிருந்தார். இதனை சற்று கவனத்தில் கொண்டு செயல்பட்டால் இந்தப் பயனுள்ள முயற்சி சிறப்பானதாக அமையும். இல்லையென்றால் ஆய்வுக்குத் தகுந்த ஒரு கட்டுரை என்ற பயனை அடையாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா
2011/7/26 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Jul 27, 2011, 2:01:30 AM7/27/11
to Subashini Tremmel, mintamil
நெகனூர்ப்பட்டி

வடதமிழ்நாட்டில் செஞ்சி  வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது.  இங்கு அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தள உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பகுதியில் தமிழி கல்வெட்டு உள்ளது.
 
கல்வெட்டு 27:1

 
சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு  நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன.
 
                                  வ 1. பெரும் பொகழ்
                                  வ 2. சேக்கந்தி தாயியரு
                                  வ 3. சேக்கந்தண்ணி செ
                                  வ 4. யி வித்த பள்ளி 
   
பெரும் பொகழ் என்னும் ஊர் வாழ் சேக்கந்தி என்பானுடைய தாயார் சேக்கந்த அண்ணி என்பாள் சமண துறவிக்கு செய்வித்த கற்படுக்கை  என்பது இதன் பொருள்.  தாயியரு என்ற சொல் வழக்கு கருநாடக தமிழ் பலுக்கலுக்கு ஒப்பாக உள்ளது. கந்தன் என்ற அன் ஈறு பெற்ற  பெயர் சில போது இகர ஈறு பெற்று கந்தி எனவும் வழங்கும். 

 
 
அம்மன்கோவில்பட்டி

  
சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் போகும் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன்கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின்  தேப்பாலி என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.

 
கல்வெட்டு 28:1

 
நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
 

 
 பரம்பன்  கோகூர் கிழார் மகன் வியக்கன்
     கோபன் கணதேவன் தொட சுனை
 
          
பரம்பன் எனும் பெயருடைய கோகூர் கிழாரின் மகன் வியக்கன், ஆநிரை மேய்க்கும் கோபனான கண்ணதேவன் ஆகியோர் தோண்டிய  சுனை இது என்பது இதன் பொருள்.  இதில் மதத்  தொடர்பான செய்தி ஏதும் இல்லை.
ணகர மெய் சேர்தது கண்ணதேவன் என்றும், டகர மெய் சேர்த்து தொட்ட எனவும் படிக்க வேண்டும். விய்யன் ஒரு பெயர், அக்கன் மற்றொரு பெயர்.  இங்கு வியக்கன் என ஒரு பெயராய் புணர்நதுள்ளது. கோவலன் > கோபலன் என்பது ஆநிரை மேய்ப்போனைக்  குறிக்கும். பண்டு பன்மைக்கு ஒருமையே பயன்படுத்தப்பட்டதன் அடையாளமாக மகன்கள் என்பது  மகன் என்றே குறிக்கப்பட்டு உள்ளது

 
 
அரச்சலூர்

 
ஈரோடு மாவட்டம், காங்கேயம் ஈரோடு   வழித்தடத்தில்  அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.
 
கல்வெட்டு 29:1
 
கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது. 

 
எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்
    
  
தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.
 
 
 
கல்வெடடு 29:2
   
 
முன்  உள்ள  கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து  வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.
 
                                             வ 1.  த தை தா தை த
                                              வ 2. தை தா தே தா  தை
                                              வ 3. தா தே தை தே தா
                                              வ 4. தை  தா தே தா  தை
                                               வ 5. த தை தா தை த
 
மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது. 

 
கல்வெட்டு 29:3 

 
முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
 
                                               வ 1. கை த தை த கை
                                               வ  2. த (கை)  (த)  (கை) (த)
                                               வ 3. தை த கை த (தை)
                                               வ  4. த  கை (த) (கை) (த)
                                               வ 5. (கை) (த) (கை) த  (கை)
 
இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.

 
 
மன்னார் கோவில் 

          
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக இவ்வூர் அமைந்து  உள்ளது. பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல பாறைகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி  கல்வெட்டுகள் உள்ளன.
 

கல்வெட்டு 30:1
இராசப் பாறைக் குகையின் உட்கூரைப்  பகுதியில் மூன்று வரிகளில்  பொறிக்கப்பட்டு உள்ளது.
 
வ 1. பள்ளி செய்வித்தான்
                                            வ 2. கடிகை (கோ) வின் மகன்
                                            வ 3.  பெருங்கூற்றன்

கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்து. கடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மெய் எழுத்துகள் புள்ளி இன்றி எழுதப்பட்டு உள்ளன. ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்த ஈலம் நாகரிகத்தில் கூற்றன் என்ற பெயர் கொண்ட அரசர்கள் உண்டு

கல்வெட்டு.30:2

நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில்  வெட்டப்பட்ட கற்படுக்கை மீது இரு வரிகளில்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

வ 1. குணாவின் ளங்கோ

 வ 2.  செய்பித பளிஇ

குணா என்னும் ஊரின் இளங்கோ செய்வித்த படுக்கை என்பது இதன் பொருள்.  உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம இட்டு இளங்கொ என படிக்க வேண்டும். தகர மெய் சேர்த்து செய்பித்தென படிக்க வேணடும்.

மேற்சொன்ன தமிழி  கல்வெடகள் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலிலை மேற்கோளாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. பார்கக் பக்கம் 85 முதல் 90வரை

 

 



2011/7/27 seshadri sridharan <ssesh...@gmail.com>
நெகனூர்ப்பட்டி
வடதமிழ்நாட்டில் செஞ்சி  வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது.  இங்குள்ள அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தள உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பகுதியில் தமிழி கல்வெட்டு உள்ளது.
 
கல்வெட்டு 27:1
 
சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு  நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன.
 
 வ 1. பெரும் பொகழ்
                                                  வ 2. சேக்கந்தி தாயியரு
                                                  வ 3. சேக்கந்தண்ணி செ
                                                  வ 4. யி வித்த பள்ளி 
 
பெரும் பொகழ் என்னும் ஊர் வாழ் சேக்கந்தி என்பானுடைய தாயார் சேக்கந்த அண்ணி என்பாள் சமண துறவிக்கு செய்வித்த இருக்கை என்உ இதன் பொருள்.  தாயியரு என்ற சொல் வழக்கு கருநாடக தமிழ் பலுக்கலுக்கு ஒப்பாக உள்ளது. கந்தன் என்ற அன் ஈறு பெற்ற  பெயர் சில போது இகர ஈறு பெற்று கந்தி எனவும் வழங்கும்.
 
 
அம்மன்கோவில்பட்டி
 
சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் போகும் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன்கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின்  தேப்பாலி என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.
 
கல்வெட்டு 28:1
 
நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
 
 
 பரம்பன்  கோகூர் கிழார் மகன் வியக்கன்
                                 கோபன் கணதேவன் தொட சுனை
 
பரம்பன் எனும் பெயருடைய கோகூர் கிழாரின் மகன் வியக்கன், ஆநிரை மேய்க்கும் கோபனான கண்ணதேவன் ஆகியோர் தோண்டிய  சுனை இது என்பது இதன் பொருள்.  இதில் மதத்  தொடர்பான செய்தி ஏதும் இல்லை.
ணகர மெய் சேர்தது கண்ணதேவன் என்றும், டகர மெய் சேர்த்து தொட்ட எனவும் படிக்க வேண்டும். விய்யன் ஒரு பெயர், அக்கன் மற்றொரு பெயர்.  இங்கு வியக்கன் என ஒரு பெயராய் புணர்நதுள்ளது. கோவலன் > கோபலன் என்பது ஆநிரை மேய்ப்போனைக்  குறிக்கும். பண்டு பன்மைக்கு ஒருமையே பயன்படுத்தப்பட்டதன் அடையாளமாக மகன்கள் என்பது  மகன் என்றே குறிக்கப்பட்டு உள்ளது.
 
 
அரச்சலுர்
 
 
ஈரோடு மாவட்டம், காங்கேயம் ஈரோடு   ழித்தடத்தில்  அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.
 
கல்வெட்டு 29:1
 
கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது.
 
எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்
 
தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.
 
 
கல்வெடடு 29:2
 
முன்  உள்ள  கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து  வரிகளில் வெட்டப்பட்டு உள்ளன.
 
வ 1.  த தை தா தை த
                                              வ 2. தை தா தே தா  தை
                                              வ 3. தா தே தை தே தா
                                              வ 4. தை  தா தே தா  தை
                                               வ 5. த தை தா தை த
 
மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒரே இசை ஒலிகளை உண்ர்த்துகின்றது.
 
கல்வெட்டு 29:3
 
முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
 
 வ 1. கை த தை த கை
                                               வ  2. த (கை)  (த)  (கை) (த)
                                               வ 3. தை த கை த (தை)
                                               வ  4. த  கை (த) (கை) (த)
                                               வ 5. (கை) (த) (கை) த  (கை)
 
இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.
 
 
மன்னார் கோவில் 
 
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக 
இவ்வூர் அமைந்து  உள்ளது. பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல பாறைகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி  கல்வெட்டுகள் உள்ளன. 
 
கல்வெட்டு 30:1
 
 
 
 


2011/7/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

prakash sugumaran

unread,
Jul 27, 2011, 5:31:19 AM7/27/11
to mint...@googlegroups.com
வ 1. பெரும் பொகழ்
                                  வ 2. சேக்கந்தி தாயியரு
                                  வ 3. சேக்கந்தண்ணி செ
                                  வ 4. யி வித்த பள்ளி //

இதற்க்கு பொருள் ( பிற் காலத்தில் ) பெரும் புகழ் பெற போகும் பிள்ளையை (களை) பெற்ற  தாய்மார்கள் தம் பிள்ளைக்காக (களுக்காக) செய்த படுக்கைகள்

என்பதே சரியான அர்த்தமாக இருக்கும் என தோன்றுகிறது. சேக்கந்தி என்பது ஒரு   பெயராக இருக்க வாய்ப்பு இல்லை என்பது  சேக்கந்தண்ணி  என்ற வார்த்தையால் தெரிகிறது.

எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்
 
தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.//

இதன் பொருள் ஒருவனை பெருமை படுத்தி பாடப்பட்டதாக இருந்தால்..

எழுத்தையும் உணர்ந்தான் கருமை நிற ( மலை வண்ண ) கண் ( கன் ) உடைய முதன்மை சாத்தன்..

அல்லது எழுத்தை ( மொழியறிவை ) பயன்படுத்துவதில் தன்னை விட அதிக வல்லமை பெற்று புகழ் அடைந்த  மற்றொருவனை ஒரு தன் எதிரியாக கருதி கோபத்தில் அவனை பற்றி எழுதி இருப்பதாக கொண்டால்..

எழுத்தையும் புணர்ந்தான் ( இப்போது வேறு மாதிரி கேட்ட வார்த்தையாக மாறி விட்டது)  தன்னை தேவன் என்று சொல்லிக்கொள்ளும் கருப்பு நிறமுடைய சாத்தன்.. 

( வார்த்தைகளின் வீச்சை பார்த்தால் இரண்டாவதே சரியாக இருந்திருக்கும் என்பது என் கருத்து )






2011/7/27 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

seshadri sridharan

unread,
Jul 27, 2011, 8:19:14 AM7/27/11
to mint...@googlegroups.com
On 7/27/11, prakash sugumaran <praka...@gmail.com> wrote:
> வ 1. பெரும் பொகழ்
> வ 2. சேக்கந்தி தாயியரு
> வ 3. சேக்கந்தண்ணி செ
> வ 4. யி வித்த பள்ளி //
>
> இதற்க்கு பொருள் ( பிற் காலத்தில் ) பெரும் புகழ் பெற போகும் பிள்ளையை (களை)
> பெற்ற தாய்மார்கள் தம் பிள்ளைக்காக (களுக்காக) செய்த படுக்கைகள்

சமண துறவியருக்காக செய்யப்பட்ட படுக்கைகள் தம் மக்களுக்காக செய்தது அல்ல

சேசாத்திரி
>
>
>
>
>
>

prakash sugumaran

unread,
Jul 27, 2011, 10:05:10 AM7/27/11
to mint...@googlegroups.com
கல் படுக்கைகள், பாதங்கள் என்றாலே சமணர்கள் உருவாகியவைதான் என பொது கருத்து வந்து விட்டதோ என தோன்றுகிறது. ஜவ்வாது மலையின் ஒரு பகுதியில் (சுமார் 2500 அடி உயரத்தில் ) வாலியம் பாறை என்ற இடத்தில் குள்ளர் குகை என அழைக்கப்படும் சுமார் 4 அடி உயர குகைகள் உள்ளன. அவை இயற்கையான பாறை பொந்துக்களோ, இடைவெளிகளோ இல்லை. 3 அடி உயரமுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் அவை மிக பெரிய அளவிலான ஒரு பாறையின் உச்சியில் கற்பலகைகளை அடுக்கி வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு செல்லும் வழியில் காட்டு பகுதியில் சமண கற்படுக்கைகளை போன்றே உள்ள ஏராளமான நீள் சதுர கற் படுக்கைகள் உள்ளன.
கற் காலத்தில் உருவாகி இருக்கக் கூடிய அந்த குள்ளர் குகைகளின் அருகே ஏராளமான கல் ஆயுதங்கள் குவியல் குவியலாக இன்றும் உள்ளது. அந்த ஆயுதங்களில் மிக சிறிதான ஒரு கல்லை கொண்டு ஒரு உயிரை பறித்து விடலாம் என்ற அளவுக்கு கூர்மையாக அவை செதுக்கப்பட்டுள்ளன. சிறு கத்தி, கட்டாரி, கல் தடி, கூழான் கல்லை போல வழு வழுப்பான கவண் கல்கள் என ஒரு கல் ஆயுத விற்பனை கூடமே உள்ளது. குள்ளர் குகை போல வேறு 3 இடங்களில் இதே போல ஆயுத குவியல்கள் உள்ளன.
எனவே இந்த சந்தேகம். ஒரு வேளை பிற் காலத்தில் சமண முனிவர்கள் இவற்றை அதிகம் ஏற்படுத்தி பயன் படுத்தி இருக்கலாம். இருந்தாலும் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பு உள்ளது என்பதே என் கருத்து.
( படங்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அனுப்பி வைக்கிறேன் )

2011/7/27 seshadri sridharan <ssesh...@gmail.com>
On 7/27/11, prakash sugumaran <praka...@gmail.com> wrote:



--
prakash sugumaran

seshadri sridharan

unread,
Jul 27, 2011, 9:49:19 PM7/27/11
to mint...@googlegroups.com
இந்த குள்ளர் குகை குறித்து தொல்லியல் துறை அறிவப்பு பலகை ஏதேனும் உள்ளதா? இது நீங்கள் தான் முதன் முதலாக அறிந்த இடம் என்றால் எழும்பூர் ஆல்ஸ் சாலையில் (அருங்காட்சியகம் பின்புறம்) உள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு  தெரியப்படுத்தினால் அவர்கள் முழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவார்கள். இப்படித்தான் பூண்டி அணைப் பக்கம் இருந்த ஆதிமாந்தன் குகைத் தளம் குறித்து அவர்கள் ஆய்வு செய்து நூலே வெளியிட்டு உள்ளார்கள். இந்த குள்ளர் குகையும் அது போன்றதோ?
 
சேசாத்திரி

2011/7/27 prakash sugumaran <praka...@gmail.com>

prakash sugumaran

unread,
Jul 28, 2011, 12:46:45 AM7/28/11
to mint...@googlegroups.com
இந்த தகவல்கள் ஏற்கனவே பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அறிவிப்பு பலகை எதுவும் இல்லை.

2011/7/28 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
prakash sugumaran

seshadri sridharan

unread,
Aug 8, 2011, 9:06:30 AM8/8/11
to mint...@googlegroups.com
தாதப்பட்டி
 
தஞ்சைத் தமிழிப் பல்கலைக்கழக தொல்எழுத்தியல்  மற்றும் தொல்லியல் துறையால் 2006 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் வத்தலகுண்டிற்கு 16 கீலோ மீட்டர் தெற்கே வைகை  ஆற்றின் தென்கரையில்  அமைந்த  தாதப்பட்டி  என்னும் ஊரில் தமிழி எழுத்து  பொறிக்கப்பட்ட  கற்பதுகை ஒன்று அறியப்பட்டதாக இந்து  நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது, ஈமப்புதைப்பு நடுகல்லில் தமிழி எழுதது அறியப்பட்டது அதுவே முதல் முறை.. இவ்வூர் இதே போல் மூன்று நடுகற்கள் அறியப்பட்ட புலிமான் கோம்பைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.. தாதன் என்பது ஆடவருக்கான பண்டையத் தமிழ்ப் பெயர்.   தாதன்குளம்(திருச்செந்தூர்), தாதன்குப்பம் (சென்னைப் பாடி), தாதன் பாக்கம் (கிழக்கு  கடற்கரைச் சாலை), தாதனூர்,  தாதமங்கலம் (திருச்சி), தாதப்பட்டி  ஆகிய ஊர்ப்பெயர்கள்  பண்டு  அங்கு  அப்பெயரில் வாழந்திருந்தவரை அடையாளப்படுத்தி  இடப்பட்டவை.
 
                       adi oon pakal paliy kal.jpg
 
இதன் உயரம்  200 செ.மீ. இருந்திருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. இதில் சில முன் எழுத்துகள் சிதைந்தது  போக ஒரே வரியில் எஞ்சிய  13 எழுத்துகள் தெளிவாகக் காணப்படுகின்றன. கல்வெட்டு வாசகம்
 
ன் அடிஓன் பாகல் பாளிய் கல்
 

சிலர் த என்ற எழுந்து முதலில் உள்ளதாக கூறுகின்றனர். எனவே அது தன் என்று முடியும் ஒரு ஆடவன் பெயர் என குறித்துள்ளனர். அது அவ்வாறு ஆயின் என்னுடைய கருத்து அடியோன் என்பது அவருடைய ஏவலன் என்பதைக் குறிக்கின்றது. பாகல் என்பது அந்த அடியோனுடைய இயற்பெயர். பாளி என்பது பாழி  என்பதன் மருஉ என கொண்டால் அதன் பொருள் பெருமை.     பெயர் சிதைந்துள்ள தலைவனுடைய ஏவலனான  பாகல் என்பானுடைய பெருமைக்குச் சான்றாய்  எழுப்பப்பட்ட  கற்பதுகை என்பது இதன் பொருள். பாகன் என்பது பண்டு ஆடவருக்கான பெயராக வழங்கியது. அது அல் ஈறு பெற்றால் பாகல் என ஆகும். பண்டு பாகனூர் என்ற ஊர்  இருந்துள்ளது  என்பதற்கு  கொங்கர்புளியங்குளம்  தமிழி   கல்வெட்டு 5:3 ஒரு சான்று.. இன்று ஒசூருககு அருகே உள்ள ஊருக்குப் பெயர் பாகலூர்..இந்த பாகனூரும் பாகலூரும்  பண்டு அப்பெயர் கொண்டு வாழ்ந்தவரை அடையாளப்படுத்தி  இடப்பட்டவை என்பது மேற்சொன்ன கல்வெட்டு வாசிப்புடன் ஒப்பிட்டு  நோக்கத்தக்கது.  

சேசாத்திரி

 

2011/7/28 prakash sugumaran <praka...@gmail.com>
adi oon pakal paliy kal.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages